Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘GLBT’ Category

Thulir Foundation – AIDS awareness message among Transgenders

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 19, 2007

சடங்கு: சுகன்யாவாகிய நான்…

திரு

சென்னை, ஜி.எஸ்.டி. சாலையிலிருக்கும் அந்த சுமாரான திருமண மண்டபத்திற்குள், கூட்டம் கூட்டமாகச் சென்று கொண்டிருந்தனர் அரவாணிகள். அவர்கள் மட்டுமல்ல ஆண்களும், பெண்களும் கூட பெருமளவில் திரண்டிருந்தனர் அந்த மண்டபத்திற்குள். யார் வீட்டில் என்ன விசேஷம்? என்று கூட்டத்திலிருப்பவர்களிடம் கேட்டோம். “”சந்தோஷிமாதாவுக்குப் பால் ஊத்துற விழா நடக்குது” என்றனர் கோரஸôக. “”விழாவின் பெயரே வித்தியாசமாக இருக்கிறதே…” என்றோம். “”எதுக்கு இந்த விழான்னு தெரிஞ்சா இன்னமும் வித்தியாசமா இருக்கும்?” என்ற சிலர் நம்மை, அந்தப் பகுதியிலிருக்கும் அரவாணிகளின் தலைவியிடம் அழைத்துச் சென்றனர். ராஜேஸ்வரி என்னும் அவர் நம்மிடம் பேசியதிலிருந்து…

“”துளிர்’ அறக்கட்டளையின் மூலமாக எயிட்ஸ் விழிப்புணர்வு பிரசாரங்களை மிகவும் பின்தங்கிய மக்களின் இடங்களுக்கே சென்று செய்து வருகிறோம். சமூகத்தில் எங்களுக்கான உரிமைகளுக்காக போராடும் அதேவேளையில், எயிட்ஸôல் பாதிக்கப்பட்ட நோயாளிகளையும் கருணையோடு அணுகவேண்டியதின் அவசியத்தையும் மக்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

இந்த விழா எதற்காக என்பதைச் சொல்லுகிறேன். எங்கள் சமூகத்தைச் சேர்ந்த சுகன்யா, ஹேமா, சத்யா, சிவகாமி ஆகியோர் தங்களை முழுமையாகப் பெண்ணாக மாற்றிக் கொள்வதற்கான அறுவை சிகிச்சையை செய்துகொண்டனர். ஏறக்குறைய பதினைந்தாயிரம் ரூபாய் செலவாகும் இந்த அறுவைச் சிகிச்சையை தனியார் மருத்துவமனைகளில் தான் செய்துகொண்டிருக்கிறோம். அரசு பொது மருத்துவமனைகளில் இலவசமாக செய்து கொள்ளும் வசதி இனிமேல் வரும் என்கிறார்கள். இந்த அறுவைச் சிகிச்சை எங்களைப் பொறுத்தவரை ஜீவமரணப் போராட்டம். இதில் நல்லபடியாக அறுவைச் சிகிச்சை முடிந்து, 40 நாட்களுக்குப் பிறகு எங்கள் சமூகத்தில் செய்யப்படும் சடங்கு நிகழ்ச்சிதான் இந்த “பால் ஊத்துற விழா’. சந்தோஷிமாதா தெய்வத்திற்கு 21 இனிப்புகளைக் கொண்டு படையல் போடுவோம். பெண்ணாக மாறியவர்கள், மூத்த அரவாணிகளிலிருந்து தங்களின் மாமியாரைத் தேர்ந்தெடுப்பார்கள். தேர்ந்தெடுக்கப்பட்ட மாமியார்கள் தங்கள் மருமகள்களுக்கு புதுத் துணி, நகைகள், அணிந்து சீர் செய்வார்கள். காலம்காலமாக நடக்கும் இந்த பாலூத்தற விழாவை எங்கள் சமூகத்திற்குள்தான் நடத்திக் கொள்வோம். இந்த விழாவிற்கு எங்கள் சமூகத்தைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்டவர்கள் வந்திருந்தனர். நூற்றுக்கும் மேற்பட்ட ஆண்களும், பெண்களும் கூட வந்திருந்தனர். சமூகத்தோடு எங்களின் தொடர்புகளை வலுப்படுத்திக் கொள்வதற்குக் கிடைத்த வாய்ப்பாகத்தான் இந்த விழாவை நான் பார்க்கிறேன்” என்றார் ராஜேஸ்வரி.

“”இந்த விழா எங்களின் குலக் கடவுளான சந்தோஷிமாதாவுக்கு நன்றி செலுத்தும் விழா. இருபத்திரண்டு வயதில் நான் மீண்டும் பிறந்ததைப் போல் உணர்கிறேன். என்ன பாக்கறீங்க? சுகன்யாவாகிய நான் பிறந்து 40 நாள்தான் ஆகிறது!” என்றார் பெண்ணுக்கேயுரிய நாணத்துடன் சுகன்யா.

Posted in AIDS, Ali, Aravaani, Aravani, Awareness, Bisex, Bisexual, Community, Foundation, GLBT, Health, HIV, NGO, Thirunangai, Thulir, Transgender, Transgenders | Leave a Comment »

Pakistan ‘same-sex’ couple jailed

Posted by Snapjudge மேல் மே 22, 2007

பாகிஸ்தான் திருமணம் ஒன்றில் சர்ச்சை

பிரச்சினையை எதிர்நோக்கும் தம்பதிகள்
பிரச்சினையை எதிர்நோக்கும் தம்பதிகள்

பாகிஸ்தானில் திருமணம் செய்து கொண்ட இருவரில், கணவனாகக் கருதப்பட்டவர் உண்மையில் ஒரு பெண் என்று தீர்ப்பளித்த லாகூர் நீதிமன்றம் ஒன்று, அந்த இருவரையும் நீதிமன்றக்காவலில் வைக்குமாறு உத்தரவிட்டிருக்கிறது.

கணவர் என்று சொல்லிக் கொள்பவரது பாலின மாற்று அறுவை சிகிச்சை சரியாக, முறையாக நடக்காத நிலையில், இந்த இருவரும், அவரது பாலினத்தைப் பற்றி பொய் சொல்லிவிட்டார்கள் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

மணப்பெண்ணின் தந்தை, இரண்டு பெண்கள் திருமணம் செய்துகொள்வது என்பது இஸ்லாத்துக்கு விரோதமானது என்ற காரணத்தால், தனது மகளின் திருமணம் ரத்துச் செய்யப்பட வேண்டும் என்று கோருகிறார்.

Posted in couple, Female, Gender, GLBT, Husband, Identity, Islam, Law, legal, Lesbian, male, Marriage, Muslim, Nikkah, Operation, Order, Pakistan, Relation, Relationship, same-sex, Sex, sex-change, Spouse, surgery, Transgender, Wedding, Wife | 1 Comment »

AIDS & Diabetes – Gross custodial violence by the police and corruption by jail officials in prisons for women

Posted by Snapjudge மேல் ஜனவரி 4, 2007

எய்ட்ஸ், நீரிழிவு- கூடுதல் தண்டனை?

சிறைக்கூடங்களில் பெண் கைதிகளின் நிலைமை, அவர்களுக்கு அளிக்கப்படும் உணவுகள் யாவும் அதிகாரிகள் சொல்லிக்கொள்வதைப் போல இல்லை என்கிறது மனித உரிமை ஆர்வலர் சுதா ராமலிங்கம் அளித்துள்ள அறிக்கை.

சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஏ.பி.ஷா, கே.சந்துரு ஆகியோரது உத்தரவின்பேரில், தமிழகச் சிறைகளில் ஆய்வு செய்தபின் இந்த அறிக்கையை அவர் தாக்கல் செய்துள்ளார்.

சிறைக் கைதிகளைப் பார்க்கவும், உறவினர்கள் அவர்களுக்கு உணவுப் பொருள்கள் வழங்கவும் கையூட்டுத் தொகை அளிக்கப்படுகிறது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. சாதாரண ஏழைக் கைதிகள் படும் மனஉளைச்சலுடன் இத்தகைய ஊழலும் சேர்ந்து அவர்களது குடும்பத்தாரை மேலும் கவலையில் ஆழ்த்தும் சூழலை அந்த அறிக்கை மூலம் உணர முடிகிறது.

கைதி வசதிகள் படைத்தவராகவோ அல்லது செல்வாக்கு பெற்றவராகவோ இருந்தால் அவரால் எதையும்- விரும்புகிற உணவு, அறை வசதிகள், செல்போன், மருத்துவம், மருந்துகள், மது வகைகள்- பெற முடியும் என்பதை சிறைக்கூடங்களில் நடத்தப்பட்ட ஆய்வுகள் வெளிப்படுத்துகின்றன.

ஒருவர் சிறைக்குள் இருக்கும்போதும் வெளியுலகில் அவருக்கு ஆதரவு, செல்வாக்கு இருக்கும் என்றால்தான் சிறைக்குள் அவர் மனிதனாக மதிக்கப்படுகிறார் என்றும் ஆய்வுகள் கூறுகின்றன.

இத்தகைய முறைகேடுகளைவிட மனவருத்தம் தருகிற இரு விஷயங்கள் சிறைக்கூடங்களில் கவனிக்கப்படாமல் உள்ளன.

அவை: எய்ட்ஸ், நீரிழிவு நோய்.

சிறைக்கூடங்களில் கைதிகளிடம் எய்ட்ஸ் பாதிப்பு இருக்கிறது என்று தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் ஆய்வுகள் சொல்கின்றன. சிறையில் ஓரினச் சேர்க்கை பரவலாக இருப்பதால் அங்கு எய்ட்ஸ் வேகமாகப் பரவுகிறது என்பதைத் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் தெளிவாகச் சொல்லியும்கூட, சிறைக்கூடங்கள் எந்த நடவடிக்கையும் எடுத்ததாகத் தெரியவில்லை.

எய்ட்ஸ் நோய் உள்ள கைதிகளைத் தனியாகப் பிரிக்க வேண்டிய அவசியம் சிறைக்கூடத்திற்கு இருக்கிறது. அவர்களுக்கு தேவையான மருத்துவ வசதிகளை அளிக்க வேண்டிய கடமையும் பொறுப்பும் உள்ளது.

இன்றைய நாளில், நீரிழிவு நோய் என்பது சமூகத்தில் பாதிக்கும் மேற்பட்டவர்களுக்கு இருக்கிறது. இதில் கைதிகள் மட்டும் விதிவிலக்கு அல்லர். அவர்களில் பாதிக்கும் மேற்பட்டோருக்கு நீரிழிவு நோய் இருக்கிறது.

நீரிழிவு நோயாளிக்கு முதன்மையான மருந்து உணவுக் கட்டுப்பாடுதான். ஆனால், சிறைக்கூடங்களில் நீரிழிவு நோயாளிக்கென தனி உணவுகள் கிடையாது. இதனால் பல நீரிழிவு நோயாளிகளின் ரத்தத்தில் சர்க்கரை அதிகமாகி ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்குக் கொண்டு வரப்படுகிறார்கள். சில நேரங்களில் இறந்தும்போகிறார்கள்.

சிறைக்கூட பிரச்சினைகளைவிட மோசமானது எய்ட்ஸ் மற்றும் நீரிழிவு நோய். தற்போது சிறையில் உள்ளவர்களில் எத்தனை பேர் எய்ட்ஸ் நோயாளிகள், எத்தனை பேர் நீரிழிவு பாதிப்பு உள்ளவர்கள் என்பதை சிறைக்கூடங்கள் வெளிப்படையாக பரிசோதனைகள் நடத்தி அறிவிப்பதன் மூலம்தான் இக்குறைகளைப் போக்க முடியுமே தவிர, இதை மூடி மறைப்பதால் எந்தப் பயனும் ஏற்படாது.

சிறைக்குச் சென்ற ஒருவர் விடுதலையாகும்போது திருந்தி வருவார் என்ற நம்பிக்கையைவிட நோய்களுடன் வருவார் என்ற பீதி அவர்களது உறவினர்களிடத்தில் எத்தகைய பாதிப்புகளையும் புறக்கணிப்புகளையும் ஏற்படுத்தும் என்று சிந்தித்துப் பார்த்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Posted in Advocate Commissioner, AIDS, AP Shah, Chennai, Chief Justice, Correctional facility, Corruption, Courts, diabetes, Disease, Doctor, Editorial, Female Correction Centres, Gay, GLBT, Healthcare, Jail, Judge, Justices, K Chandra, Lady Prisoners, Law, Lesbian, Madras High Court, Medicine, Order, Police, Prison, Registrar General, Sex, Sudha Ramalingam, Tamil Nadu, TN, Violence, Women Cells | Leave a Comment »

Gay and Lesbians Laws to be revamped

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 26, 2006

ஓரினச்சேர்க்கையை தடை செய்யும் தண்டனைச் சட்டப் பிரிவு நீக்கப்படும்

புதுதில்லி, செப். 27: ஓரினச்சேர்க்கையை தடை செய்யும், இந்திய தண்டனைச் சட்டத்தின் (ஐபிசி) 377-வது பிரிவை நீக்குவதற்கு, மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம், உள்துறை அமைச்சகத்துடன் இணைந்து செயல்பட்டு வருகிறது. இது தொடர்பாக உள்துறை அமைச்சக அதிகாரிகளுடன் இரண்டு முறை ஆலோசனை நடந்துள்ளது என தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பின் தலைவரும் சுகாதார அமைச்சக கூடுதல் செயலருமான சுஜாதா ராவ் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

இச் சட்டப் பிரிவை நீக்கக் கோரி எழுத்தாளர்கள்

  • அருந்ததி ராய்,
  • விக்ரம் சேத்,
  • திரைப்பட இயக்குநர் ஷியாம் பெனகல் உள்ளிட்ட பிரமுகர்கள் மத்திய அரசுக்கு பகிரங்கக் கடிதம் எழுதியதை அடுத்து அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. இச் சட்டப் பிரிவு மிருகத்தனமானது என்றும், அடிப்படை மனித உரிமைகளை மீறுவதாக உள்ளது என்றும் மத்திய அரசுக்கு தனியே எழுதிய கடிதத்தில், நோபல் விருது பெற்ற பொருளாதார மேதை அமார்த்தியா சென் குறிப்பிட்டிருந்தார்.

Posted in AIDS, Gay, GLBT, Indian Penal Code, IPC, Laws, Lesbian, Tamil | Leave a Comment »