Posted by Snapjudge மேல் பிப்ரவரி 21, 2007
இராக்கில் இருந்து பிரிட்டன் படைகள் திரும்ப அழைப்பு
இராக்கில் இருந்து பெருந்தொகையான துருப்புக்களை திரும்ப அழைத்துக் கொள்வது குறித்து பிரிட்டானியப் பிரதமர் டோனி பிளேயர் முதல் முறையாக அறிவித்துள்ளார்.
இராக்கின் தென் பகுதி நகரான பாஸ்ராவில் உள்ள 7 ஆயிரத்துக்கும் அதிகமான பிரிட்டிஷ் துருப்புக்கள் அடுத்த சில மாதங்களில் 5 ஆயிரத்து ஐநூறாக குறைக்கப்படுவார்கள் என்று டோனி பிளேயர் பிரித்தானிய நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
ஆனாலும் இராக்கில் பிரிட்டிஷ் துருப்புக்கள் ஆற்ற வேண்டிய கடமைகள் இருக்கும் வரை அடுத்த ஆண்டிலும் அவர்கள் அஙக்கு தங்கியிருப்பார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
பாஸ்ராவில் உள்ள பாதுகாப்பு நிலை பாக்தாத்தை விட மிகவும் வேறுபட்டது என்றும், கட்டுக்கடங்காத பயங்கரவாத வெறியாட்டத்தில் பாக்தாத் சிக்கியுள்ளது என்றும் பிரதமர் விவரித்தார்.
பாஸ்ராவின் இன்றைய நிலைமை தனது விருப்பப்படி இல்லாவிட்டாலும், பாஸ்ராவின் வரலாற்றின் அடுத்த அத்தியாயத்தை எழுதவேண்டிய பொறுப்பு, இராக்கியர்களையே சாரும் என்றும் பிரதமர் டோனி பிளேயர் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
இராக்கில் இருந்து டென்மார்க்கும் படைகளை திரும்ப பெறுகிறது
 |
 |
இராக்கில் டென்மார்க் துருப்புகள் |
இராக்கிலிருந்து தனது தரைப்படை துருப்புக்களை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் முடிவதற்குள் திருப்பி அழைத்துக் கொள்ளப் போவதாக டென்மார்க் அறிவித்துள்ளது. செய்தி மாநாடு ஒன்றில் இந்த அறிவிப்பை டென்மார்க் பிரதமர் வெளியிட்டார்.
அடுத்த மே மாதத்திற்குள் டென்மார்க்கின் 460 இராணுவத்தினரும் திருப்பி அழைக்கப்படுவார்கள் என்று அவர் குறிப்பிட்டார்.
ஆனாலும் ஹெலிகாப்டர் படைப் பிரிவு அங்கு தொடர்ந்து தங்கியிருக்கும் என்றும் அவர் தெரிவித்தார். பிரிட்டிஷ் தலைமையில் டென்மார்க் படையினர் பணியாற்றிவரும் தெற்கு இராக்கில் உள்ள பாஸ்ராவின் நிலைமை சீரடைந்து இருப்பதாகவும் டென்மார்க் பிரதமர் குறிப்பிட்டார்.
Posted in Al-Queda, Anbar, Anders Fogh Rasmussen, Army, Australia, Baghdad, Basra, Britain, dead, Denmark, Fight, Georgia, Iran, Iraq, Islam, London, Moslem, Muqtada al-Sadr, Muslim, Navy, Nouri al-Maliki, Peace, PM, Poland, Romania, Saddam, Shia, Soldiers, South Korea, Sunni, Terrorism, Tony Blair, troops, UK, UN, US, USA, Violence, War | Leave a Comment »
Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 3, 2006
ரஷிய அதிகாரிகளை ஜார்ஜியா விடுவித்தது
ஜார்ஜியா நாட்டில் உளவு பார்த்தனர் என்கிற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட நான்கு ரஷிய ராணுவ அதிகாரிகளை ஐரோப்பிய பாதுகாப்பு நிறுவனமான OSCE இடம் ஜார்ஜிய அதிகாரிகள் ஒப்படைத்துள்ளனர். இந்த நான்கு பேரும் இன்று பின்னர் ரஷியாவிற்கு விமானம் மூலம் கொண்டு செல்லப்படுவர் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
இது ஒரு நல்லெண்ண அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை என்றும், ரஷிய அழுத்தத்திற்கு பதிலளிக்கும் விதமாக இதைத் தாங்கள் செய்யவில்லை என்றும் ஜார்ஜிய அதிபர் மிகைல் சாக்சவிலி தெரிவித்தார். தடுத்து வைக்கப்பட்ட நான்கு ரஷிய ராணுவ அதிகாரிகளும் ஒரு உளவு கட்டமைப்பினை ஏற்படுத்த முயன்றனர் என ஜார்ஜிய அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் தெரிவிக்கின்றனர்.
இன்றைய நிகழ்வுகள் குறித்து ரஷியா இதுவரையில் கருத்து எதனையும் வெளியிடவில்லை. ஜார்ஜியாவுடனான போக்குவரத்து அனைத்தையும் தாங்கள் துண்டித்து விட்டதாகவும், இரண்டு நாடுகளுக்கிடையேயான வங்கி விவகார பரிமாற்றத்தைத்தையும் தாங்கள் நிறுத்தி விட்டதாகவும், ரஷிய முன்னர் அறிவித்திருந்தது.
Posted in Ambassador, Charges, Consulate, Counsel, EU, Europe, Georgia, Military, Neighbor, OSCE, Relations, Russia, Spy, Tamil | Leave a Comment »
Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 29, 2006
ரஷ்ய- ஜார்ஜிய விவகாரம் கடுமையாகிறது
 |
 |
ரஷ்ய இராணுவ வளாகத்தை ஜார்ஜிய துருப்புக்கள் சுற்றி வளைத்துள்ளனர் |
உளவு பார்த்தாக கூறப்படும் குற்றச்சாட்டின் அடிப்படையில் நான்கு ரஷ்ய இராணுவ அதிகாரிகள் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் விவகாரம் முற்றி வருவதன் அறிகுறியாக ஜார்ஜியாவின் தலைநகர் டிபிலிசியில் இருக்கும் தனது தூதரை திரும்ப அழைத்துக் கொள்வதாக ரஷ்யா அறிவித்துள்ளது.
ஜார்ஜியாவின் குற்றச்சாட்டு அபத்தமானது என்றும் உள்நாட்டு பிரச்சனைகளில் இருந்து திசை திருப்பவே இப்படி ஒரு குற்றச்சாட்டு கூறப்பட்டுள்ளது என்றும் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் செர்ஜி இவனாவ் தெரிவித்துள்ளார்.
ஒரு பெரிய தூண்டிவிடும் சம்பவத்தை ஏற்படுத்த ரஷ்ய அதிகாரிகள் திட்டமிட்டனர் என்று ஜார்ஜியா கூறுகிறது.
தலைநகர் டிபிலிசியில் உள்ள ரஷ்ய இராணுவ வளாகத்தை ஜார்ஜிய துருப்புக்கள் சுற்றி வளைத்துள்ளனர்.
இந்த வளாகத்தினுள் தாங்கள் விசாரிக்க விரும்பும் மற்றுமொரு ரஷ்ய அதிகாரி தஞ்சம் அடைந்துள்ளதாக அவர்கள் கூறுகின்றனர்.
ஜார்ஜியாவில் உள்ள ரஷ்ய அதிகாரிகளும், அவர்களின் குடும்பத்தினரும் வெளியேற வேண்டும் என்று ரஷ்யா உத்திரவிட்டுள்ளது. டிபிலிசியில் இருக்கும் ரஷ்ய தூதரகம் விசா விண்ணப்பங்களைப் பரிசீலிப்பதை நிறுத்திவைத்துள்ளது.
Posted in Abkhazia, Ally, Ambassadors, Georgia, Moscow, Politics, Putin, Russia, Saakashvili, South Ossetia, Soviet, Tamil, Tbilisi, tensions, US | Leave a Comment »