Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘general secretary’ Category

‘I’m the owner of Bentley car but did not gift Bentley to Abhishek’: Amar Singh

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 8, 2007

அமிதாப் மகனுக்கு பரிசளிக்கப்பட்ட ரூ.1.5 கோடி கார் யாருக்கு சொந்தமானது? அமர்சிங் விளக்கம்

புதுதில்லி, பிப். 9: அமிதாப் மகன் அபிஷேக் பச்சனின் பிறந்த நாளன்று பரிசளிக்கப்பட்ட ரூ.1.5 கோடி மதிப்புள்ள பெண்ட்லே சொகுசு காரை, தானே விலை கொடுத்து வாங்கியதாக சமாஜவாதி கட்சித் தலைவர் அமர்சிங் கூறியுள்ளார்.

லண்டனில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட அந்த காருக்கு, அனைத்து சுங்கத் தீர்வைகளையும் முறையாகச் செலுத்திவிட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

காரின் பதிவுக்காக (ரெஜிஸ்ட்ரேஷன்) விண்ணப்பித்த ஆவணத்தில் அமர்சிங் “ஜல்ஸô, மும்பை’ என வீட்டு முகவரியை அளித்திருந்தார். இந்த முகவரி குறித்து ஐயம் எழுப்பிய தில்லி போக்குவரத்து துறை, அது தவறான தகவல் என்றால் அமர்சிங் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என புதன்கிழமை கூறியிருந்தது.

இதை மறுத்துள்ள அமர்சிங், அமிதாப் குடும்பத்துக்குச் சொந்தமான ஜல்ஸô இல்லத்தை, மும்பைக்கு செல்லும்போது தங்குவதற்காக, கடந்த 20 ஆண்டுகளாக பயன்படுத்தி வருவதாகவும், அமிதாப் இதை மறுக்கும் பட்சத்தில் சட்ட நடவடிக்கைக்கு தயாராக இருப்பதாகவும் கூறியுள்ளார்.

மேலும், தவறான தகவலை அளித்ததற்காக தில்லி மாநில முதல்வர் மற்றும் தில்லி போக்குவரத்துத் துறை அமைச்சர் ஹாரூண் யூசுப் ஆகியோர் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்போவதாகவும் அமர்சிங் எச்சரித்துள்ளார்.

பெண்ட்லே காரை அபிஷேக் பச்சனுக்கு பரிசளித்தது யார் என்பதைக் கூற அவர் மறுத்துவிட்டார்.

அபிஷேக் பச்சனுக்கு வெளிநாட்டு கார்: அமர்சிங் ரூ. 85 லட்சம் சுங்க வரி செலுத்தினார்

புதுடெல்லி, பிப். 12-

பிரபல ஹாலிவுட் நடிகர் அமிதாப்பச்சனின் மகனும், நடிகருமான அபிஷேக் பச்சன் கடந்த 5-ந் தேதி தனது பிறந்த நாளை கொண்டாடினார்.

இதையொட்டி அமிதாப்பின் நெருங்கிய குடும்ப நண்பரும், சமாஜ்வாடி கட்சி பொதுச் செயலாளருமான அமர்சிங் வெளிநாட்டு காரை பிறந்த நாள் பரிசாக வழங்கினார்.

விலை உயர்ந்த காரை அபிஷேக் பச்சனுக்கு பரிசாக வழங்கியது சர்ச்சையை கிளப்பியது. உடனே அது தனது கார் அபிஷேக்குக்கு பரிசாக கொடுக்கவில்லை என்று அமர்சிங் மறுத்து இருந்தார்.

இந்த நிலையில் வெளிநாட்டு காருக்கு அமர்சிங் ரூ. 85 லட்சம் சுங்க வரி கட்டியுள்ளது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக டெல்லி போக்குவரத்து மந்திரி ஹாரூன் ïசுப் கூறியதாவது:-

லண்டனில் இருந்து `பென்ட்லி’ கார் கடந்த 31-ந் தேதி விமானம் மூலம் வந்தது. இந்த காரின் மதிப்பு ரூ. 1.76 கோடி என்று கூறி அதற்கு ரூ. 85 லட்சம் சுங்க வரியை அமர்சிங் செலுத்தியுள்ளார்.

கடந்த 1-ந் தேதி அந்த கார் வடக்கு டெல்லியில் உள்ள போக்குவரத்து அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டது. அந்த காருக்கு நம்பர் வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Posted in Abhishek, Abhishek Bhachan, Abishek Bachan, Abishek Bhachan, abuse, Aishwarya Rai, Aiswarya, Aiswarya Rai, Amar Singh, Ambani, Amitabh, Amitabh Bachaan, Amitabh Bhachan, Auto, Automotive, Bachchans, Bentley, Birthday, Bribe, Bribery, car, Chief Minister, CM, Congress, Congress(I), Corruption, Customs, customs duties, Delhi, Extravaganza, general secretary, Gift, Harun Yusuf, Import, Income Tax, kickbacks, London, Luxury, maharashtra, Mangal, Mangalsutra, Marriage, Mulayam Singh, Mulayam Singh Yadav, New Delhi, owner, peepal tree, Power, Reception, Reliance, Samajvadi Party, Samajwadi Party, Sheila Dikshit, SJP, SP, tax evasion, Transport Department, Transport Minister | Leave a Comment »

BJP president names new team of party officials – Thirunavukkarasar in & Modi out

Posted by Snapjudge மேல் ஜனவரி 30, 2007

சு. திருநாவுக்கரசர் பாஜக செயலர்; ஆட்சிமன்றக் குழுவிலிருந்து மோடி நீக்கம்

புது தில்லி, ஜன. 30: பாரதீய ஜனதா கட்சியின் தேசியச் செயலராக தமிழ்நாட்டைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் சு. திருநாவுக்கரசர் நியமிக்கப்பட்டிருக்கிறார். குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடி கட்சியின் உயர் அதிகார அமைப்பான ஆட்சிமன்றக் குழுவில் இம் முறை இடம் பெறவில்லை. முன்னாள் பிரதமர் வாஜபேயியின் சகோதரி மகளான கருணா சுக்லா கட்சியின் துணைத்தலைவராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.

அத்வானியை வெளிப்படையாக விமர்சித்த முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா கட்சியின் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.

ஆபாச சி.டி.யில் இடம் பெற்றதாக பத்திரிகைகளிலும் மொபைல் எஸ்எம்எஸ்களிலும் பிரபலமான சஞ்சய் ஜோஷி கட்சியின் பொதுச் செயலர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுவிட்டார்.

கட்சித் தலைவராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட ராஜ்நாத் சிங் நிர்வாகிகள் குழுவில் பெருத்த மாற்றங்களைச் செய்திருக்கிறார். புதிய நிர்வாகிகள் விவரம் வருமாறு:

கட்சியின் தேசிய துணைத் தலைவர்கள்:

  • கல்யாண் சிங்,
  • பாளாசாஹேப் ஆப்தே,
  • சாந்தகுமார்,
  • சாஹிப்சிங் வர்மா,
  • யஷ்வந்த் சின்ஹா,
  • முக்தார் அப்பாஸ் நக்வி,
  • ஜுயல் ஓரம்,
  • கைலாஷ் மேக்வால்,
  • கருணா சுக்லா.

பொதுச் செயலாளர்கள்:

  • அருண் ஜேட்லி,
  • அனந்த குமார்,
  • கோபிநாத் முண்டே,
  • வினய் கட்டியார்,
  • தாவர்சந்த் கெலோட்,
  • ஓம்பிரகாஷ் மாத்துர்,
  • ராம்லால்,
  • ஜகதீஷ் ஷெட்டிகர்,
  • அனில் ஜெயின்,
  • ஹுகும்தேவ் நாராயண் யாதவ்,
  • ராஜீவ் பிரதாப் ரூடி,
  • காந்த நளவாடே.

தேசிய செயற்குழு உறுப்பினர்கள்:

  • அடல் பிகாரி வாஜபேயி,
  • லால் கிருஷ்ண அத்வானி,
  • ஜஸ்வந்த் சிங்,
  • முரளி மனோகர் ஜோஷி,
  • வி. வெங்கைய நாயுடு,
  • கே. ஜனா கிருஷ்ணமூர்த்தி,
  • பங்காரு லட்சுமணன்,
  • சுஷ்மா ஸ்வராஜ்,
  • விஜய்குமார் மல்ஹோத்ரா,
  • ஜே.பி. மாத்துர்,
  • சி.பி. தாக்குர்,
  • நஜ்மா ஹெப்துல்லா,
  • சுமித்ரா மகாஜன்,
  • பி.சி. கந்தூரி,
  • அருண் செüரி,
  • சத்ருகன் சின்ஹா,
  • மேனகா காந்தி,
  • கல்ராஜ் மிஸ்ரா.

Posted in AB Vajbayee, Atal Bihari Vajpayi, Bharatiya Janata Party, BJP, central parliamentary board, Committee, Elections, general secretary, Gopinath Munde, key functionaries, Lal Krishna Advani, LK Advani, Members, Modi, Narendra Modi, Nominations, Office bearers, Officebearers, organisational affair, organisational affairs, Party, Politburo, Politics, Pramod Mahajan, Rajnath Singh, Ramlal Agarwal, Rashtriya Swayamsevak Sangh, RSS, Sanjay Joshi, spokesman, tenure, Thirunavukkarasar, Thirunavukkarasu, Uttar Pradesh, Vajpayee, vice-president, Yashwant Sinha | Leave a Comment »

AIADMK presidium chairman Kalimuthu passes away – Biosketch

Posted by Snapjudge மேல் நவம்பர் 8, 2006

முன்னாள் சபாநாயகர் காளிமுத்து மரணம்

அ.தி.மு.க. மூத்த தலைவர்களில் ஒருவராக திகழ்ந்தவர் காளிமுத்து.

அண்ணா காலத்தில் திராவிட இயக்கத்தில் ஈர்க்கப்பட்ட இவர் எம்.ஜி.ஆர். அ.தி.மு.க.வை தொடங்கியதும் அந்த கட்சியில் இணைந்தார். அ.தி.மு.க.வில் பல்வேறு பொறுப்புகளில் இருந்து பணியாற்றி உள்ளார்.

கடந்த அ.தி.மு.க. ஆட்சியின் போது இவர் சபாநாயகராக இருந்தார். 2001-ம் ஆண்டு முதல் கடந்த மார்ச் மாதம் வரை அவர் இந்த பதவியில் இருந்தார். கடந்த ஆண்டு அவருக்கு திடீரென இருதய கோளாறு ஏற்பட்டது.

இதனால் அவர் இருதய ஆபரேசன் செய்து கொண்டார். இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு அவருக்கு பக்கவாத நோயும் தாக்கியது. இதனால் அவர் கடந்த மே மாதம் நடந்த சட்டசபை தேர்தலில் போட்டியிடவில்லை.

உடல்நலக்குறைவு காரணமாக அவரால் கட்சிப் பணிகளில் ஈடுபட இயலவில்லை. இதனால் தேர்தல் பிரசாரத்திலும் ஈடுபடவில்லை. சமீபத்தில் அவர் மீது தமிழக அரசு 2 வழக்குகளை தொடர்ந்தது.

இந்த நிலையில் கடந்த மாதம் 25-ந் தேதி காளிமுத்துக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அவரை சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இன்று அதிகாலை அவர் உடல் நிலை மோசமானது. சிறிது நேரத்தில் காளிமுத்து உயிர் பிரிந்தது. அவருக்கு வயது 64.

காளிமுத்துவுக்கு 2 மனைவி, 4 மகன்கள், 5 மகள்கள் உள்ளனர்.

காளிமுத்து மரணம் அடைந்த தகவல் அறிந்ததும் ஏராளமான அ.தி.மு.க.வினர் மருத்துவமனைக்குபபபவிரைந்த னர். காலை 9 மணி அளவில் காளிமுத்து உடல் தேனாம் பேட்டையில் உள்ள செனடாப் ரோட்டில் உள்ள வீட்டுக்கு எடுத்துச்செல்லப்பட்டது. அங்கு அவர் உடலுக்கு ஏராளமான அ.தி.மு.க.வினர் கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்கள்.

பின்னர் காளிமுத்து உடல் அண்ணாநகரில் உள்ள வீட்டுக்கு எடுத்து வரப்பட்டது. அவர் மறைவுக்கு அ.தி.மு.க. பொது செயலாளர் ஜெய லலிதா இரங்கல் தெரிவித்துள் ளார்.

ஜெயலலிதா அஞ்சலி

பகல் 12.10 மணிக்கு அ.தி.மு.க.பொதுச் செயலாளர் ஜெயலலிதா சென்று காளி முத்து உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். ஜெய லலிதாவைப்பார்த்ததும் காளிமுத்துவின் மனைவி மனோகரி, மகன்,மகள்கள் கதறி அழுதனர். அவர்களுக்கு ஜெயலலிதா ஆறுதல் கூறினார்.

பின்னர் அங்கிருந்து 12.17 மணிக்கு புறப்பட்டுச் சென்றார். காளிமுத்து உடலுக்கு அஞ்சலி செலுத் தியவர்கள் விவரம் வருமாறு:-

முன்னாள் அமைச்சர் கள்

  • முத்துசாமி,
  • செங்கோட்டை யன்,
  • தம்பித்துரை,
  • ஜெயக் குமார்,
  • தளவாய் சுந்தரம்,
  • செ.ம.வேலுச்சாமி,
  • மது சூதனன்,
  • செம்மலை,
  • கே.பி.அன்பழகன்,
  • சோமசுந்தரம்,
  • முன் னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியன்,
  • டி.டி. வி.தினகரன் எம்.பி.,
  • சுலோசனாசம்பத்,
  • ஜோதி எம்.பி,
  • கோகுல இந்திரா எம்.பி.,
  • துணைசபாநாயகர், வரகூர் அருணாசலம்,
  • முன்னாள் எம்.பி.க்கள் அன்பழகன்
  • பெரம்பலூர் ராஜரத்தினம்,
  • அ.தி.மு.க. தேர்தல் பிரிவு இணை செயலாளர் பாலகங்கா,
  • எம்.எல்.ஏ.க்கள் எஸ்.வி.சேகர்,
  • திருத்தணி அரி,
  • முன்னாள் எம்.எல்.ஏ. சைதை துரைசாமி,
  • சுகுமார்பாபு,
  • வி.என். சிதம்பரம்,
  • வி.ஜி.சந்தோஷம்,
  • வேட்டவலம் மணிகண்டன்,
  • ஆதிராஜாராம்,
  • நடிகை சி.ஆர்.சரஸ்வதி,
  • நடிகர் குண்டு கல்யாணம்,
  • முன்னாள் மாநில தேர்தல் ஆணையர் வை.பழனிச்சாமி,
  • மல்லை சத்யா,
  • கலைப்புலி எஸ்.தாணு
  • வேளச்சேரி மணிமாறன்,
  • மல்லிகா தயாளன்,
  • பட அதிபர் கே.டி.குஞ்சுமோன்,
  • அவ்வை நடராஜன் மற்றும் ஏராளமான அ.தி. மு.க. பிரமுகர்களும், தொண்டர்களும் அஞ்சலி செலுத்தினார்கள்.

முன்னதாக தேனாம் பேட்டை வீட்டில் காளிமுத்து உடலுக்கு

  • எம்.எல்.ஏ.க்கள் பதர்சயீத்,
  • கலைராஜன்,
  • செந்த மிழன்,
  • முள்ளான் துணை மேயர் கராத்தே தியாகராஜன்,
  • பழ.நெடுமாறன், ஆகியோர் அஞ்சலி செலுத்தினார்கள்.

பகல் 12.45 மணிக்கு காளிமுத்து உடல் ஆம்புலன்ஸ் வேனில் மதுரைக்குகொண்டு செல்லப்பட்டது.

`சிறந்த இலக்கிய- அரசியல் பேச்சாளர்’ காளிமுத்து வாழ்க்கை குறிப்பு

1942-ம் ஆண்டுபபசிவகாசி அருகே உள்ள ராமுதேவன் பட்டியில் காளிமுத்து பிறந்தார். இவரது தந்தை பெயர் காளிமுத்து. தாயார் பெயர் வெள்ளையம்மாள். எம்.ஏ. பி.எச்.டி. வரை படித்து உள்ளார். தனது 13-வது வயதிலேயே காளிமுத்து மேடை பேச்சாளர் ஆனார். பசும் பொன்முத்துராமலிங்க தேவர் இவரது மேடை பேச்சை கேட்டு வியந்ததுடன் இவரை `மேடை மணி’ என்றும் பாராட்டி உள்ளார்.

தமிழக அரசியல் தலைவர்களில் மிகச் சிறந்த இலக் கிய-அரசியல் பேச்சாளர் களில் இவர் தனித்துவம் பெற்றவராக திகழ்ந்தார்.

100-க்கும் மேற்பட்ட கட்டுரைகள், 10-க்கும் மேற் பட்ட புத்தகங்களையும் காளிமுத்து எழுதி உள்ளார். 1965-ம் ஆண்டு இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் அரசியல் சட்ட நகலை எரித்த தால் கைதானார். மதுரை, திருச்சி, பாளையங்கோட்டை சிறைகளில் இருந்தார்.

1971-ம் ஆண்டு நடந்த தேர்தலில் சிவகாசி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுஎம்.எல்.ஏ. ஆனார். 1972-ம் ஆண்டு எம்.ஜி.ஆர். அ.தி.மு.கவை தொடங்கியபோது காளிமுத்துவும் அதி.மு.க.வில்பபசேர்ந்தார்.

1977, 1980 ஆகிய ஆண்டு களில் நடந்த தேர்தலில் திருப் பரங்குன்றம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 1984-ம் ஆண்டு மதுரை கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. ஆனார். 1989-ம் ஆண்டு சிவகாசி தொகுதியில் வெற்றி பெற்று எம்.பி. ஆனார்.

அமைச்சர்

1977 முதல் 1980 வரை தமிழக உள்ளாட்சி துறை அமைச்சராகவும், 1980 முதல் 1984 வரை விவசாய துறை அமைச்சராகவும், 1984 முதல் 1987 வரை விவசாயம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சராகவும் இருந்தார்.

அ.தி.மு.க. துணை பொதுச் செயலாளராகவும் பதவி வகித்த காளிமுத்து கடந்த 2001-ம் ஆண்டு திருமங்கலம் தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ. ஆனார்.

இதையடுத்து அவர் சபா நயாகராக தேர்ந்தெடுக்கப் பட்டார். அப்போது அவர் வகித்து வந்த கட்சி பதவியை ராஜினாமா செய்தார்.

கடந்த சில மாதங்களாக அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. கடந்த 2006 சட்டசபை தேர்தலில் மதுரை மத்திய தொகுதி யில் அ.தி.மு.க. வேட்பாள ராக காளிமுத்து அறிவிக்கப் பட்டார். ஆனால் உடல் நலக்குறைவு காரண மாக அவர் இந்த தேர்தலில் போட்டியிடவில்லை.பின்னர் அ.தி.மு.க. அவைத் தலைவ ராக காளிமுத்து இருந்து வந்தார்.

காளிமுத்துவுக்கு பொன் பாண்டி, குமாரவேல், ரவிச்சந்திரன், நல்லதம்பி, வீரபாண்டி என்ற 5 சகோதரர்களும், வாணி என்ற சகோதரியும் உள்ளனர்.

காளிமுத்துவின் முதல் மனைவி நிர்மலா. அவர்களுக்கு டேவிட் அண்ணாத்துரை, ராஜன் என்ற மகன்களும், புனிதா, ரோஷி, வேதா என்ற மகள்களும் உள்ளனர்.

2-வது மனைவி மனோகரி. இவர்களுக்கு மணிகண்டன், அருள்மொழிதேவன் என்ற மகன்களும், அருணா, கயல் விழி என்ற மகள்களும் உள் ளனர். கயல்விழிக்கு சமீபத்தில்தான் திருமணம் நடந்தது.

Posted in ADMK, AIADMK, Apollo hospital, Assembly, Biosketch, chairman, general secretary, Jayalalitha, K Kalimuthu, Lok Sabha, Madurai Central, MGR, Sivakasi, Speaker, Tamil Literature, Tamil Nadu, Thirupparankunram | 2 Comments »