சிகிச்சைக்கு அழைத்து வரப்பட்ட தீவிரவாதி தப்பியோட்டம்
குவாஹாட்டி, அக். 11: அசாமில் போலீஸாரால் மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்ட ஹர்கத்-உல்-முஜாஹிதீன் அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதி திங்கள்கிழமை இரவு தப்பியோடினார்.
நூருல் அமீன் என்கிற ஸாஜித், கடந்த 1999-ல் குவாஹாட்டி காமக்யா கோயில் வெடிகுண்டு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
வழக்கமான மருத்துவப் பரிசோதனைக்காக அமீனை, போலீஸார் அங்குள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு திங்கள்கிழமை அழைத்து வந்தனர்.
மருத்துவமனையில் டாக்டருக்காக காத்திருந்தபோது, சிறுநீர் கழிக்க அனுமதி கேட்ட அமீனுக்கு போலீஸார் அனுமதி அளித்தனர். இந்நிலையில், கழிப்பறைச் சென்ற அவர் அங்கு ஜன்னலை உடைத்து தப்பிச் சென்றார்.
இதையடுத்து, பாதுகாப்புப் பணியில் இருந்த 2 போலீஸôர் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.