Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Ganesh Kumar’ Category

Income Tax Raids on Vijayganth, Jeppiyaar, AIADMK functionaries

Posted by Snapjudge மேல் ஜனவரி 24, 2007

விஜயகாந்த், ஜேப்பியார், கனகராஜ் வீடுகளில் சோதனை: கண்டுபிடிக்கப்பட்ட கணக்கில் வராத சொத்துகள் விவரம்: வருமானவரித்துறை அதிகாரிகள் தகவல்

சென்னை, ஜன. 25:நடிகர் விஜயகாந்த், ஜேப்பியார், கனகராஜ் ஆகியோரின் வீடுகளில் நடத்தப்பட்ட சோதனைகளில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள கணக்கில் வராத சொத்துகள் கண்டுபிடிக்கப்பட்டதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இந்தச் சோதனைகள் முடியவில்லை எனவும் 4 இடங்களில் தொடர்ந்து நடைபெறுகிறது எனவும் அவர்கள் கூறினர்.

இதுகுறித்து வருமான வரித்துறை அதிகாரிகள் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பது:

இச் சோதனையின்போது நடிகருக்குச் சொந்தமாக ரூ. 2.50 கோடி சொத்தும் அவரது மனைவியின் பேரில் ரூ. 2.35 கோடி மதிப்பிலான சொத்தும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. கடந்த 5 நிதி ஆண்டுகளாக அவர்கள் சொத்து வரி கணக்கு தாக்கல் செய்யவில்லை என்பதையும் அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.

மருத்துவக் கல்லூரி கட்ட ரூ. 45 கோடி முதலீடு: இச்சோதனையின்போது நடிகரின் உறவினருக்குச் சொந்தமான கல்வி அறக்கட்டளை மூலம் அவரது உறவினர் ரூ. 45 கோடி வரை முதலீடு செய்திருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. அத்துடன் ரூ. 9 கோடி தொகை செலவிடப்பட்டதற்கான கணக்கும் இல்லாதது தெரிய வந்துள்ளது. மருத்துவக் கல்லூரி கட்டுவதற்கு நிதி உதவி அளித்துள்ள வங்கிகள் பற்றிய விவரமும் சேகரிக்கப்பட்டு வருகிறது. தவிர, அறக்கட்டளை மூலம் ரூ. 1.72 கோடி வரை தனியாருக்கு அளிக்கப்பட்டுள்ள கடன் விவரத்தையும் வருமான வரித் துறையினர் திரட்டி வருகின்றனர்.

கல்வி அறக்கட்டளையிலிருந்து காசோலை மூலம் ரூ. 11 கோடி: அறக்கட்டளையிலிருந்து கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் ஜனவரி 23 வரையிலான காலத்தில் கல்வியாளர் தனது பெயரில் காசோலை அளித்து ரூ. 11 கோடி வரை பெற்றுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சில நாள் அதிகபட்சமாக ரூ. 1 கோடி வரை வங்கியிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும் பணம் எடுக்கப்பட்டதற்கான காரணத்தை கல்வியாளரால் விளக்க முடியவில்லை. இது தவிர, இந்த அறக்கட்டளையானது வரி விலக்கு பெறுவதற்கான தகுதியை பெற்றிருக்கவில்லை.

கணக்கில் காட்டாத பணம் ரூ. 8 கோடி: மற்றொரு கல்வி அறக்கட்டளையில் சோதனை நடத்தியபோது, மாணவர்களிடமிருந்து நன்கொடையாக ரூ.8 கோடி பெற்றதையும் அது கணக்கில் காட்டப்படாததையும் அதன் அறக்கட்டளை தலைவர் ஒப்புக் கொண்டார்.

4 இடங்களில் சோதனை தொடர்கிறது: வருமான வரித்துறையினர் மேற்கொண்ட சோதனை முடிவடையவில்லை என்றும் மேலும் 4 இடங்களில் சோதனை தொடர்ந்து நடைபெறுவதாக அவர்கள் தெரிவித்தனர்.

ஓ. பன்னீர் செல்வம், முரளி வீடுகளில் சோதனை நடத்தப்படவில்லை: எதிர்க்கட்சி துணைத் தலைவரும் முன்னாள் பொதுப்பணித் துறை அமைச்சருமான ஓ. பன்னீர் செல்வம் மற்றும் நடிகர் முரளி ஆகியோர் வீடுகளில் சோதனை நடத்தப்படவில்லை என்றும் இதுகுறித்து வெளியான தகவல் தவறு என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

விஜயகாந்த், ஜேப்பியார், கனகராஜ் வங்கிக் கணக்குகள் முடக்கம்: 4 இடங்களில் சோதனை தொடர்கிறது

சென்னை, ஜன. 25: நடிகர் விஜயகாந்த், கல்வி நிறுவனங்களின் தலைவர்களான ஜேப்பியார் மற்றும் கனகராஜ் ஆகிய மூன்று பேரின் வங்கிக் கணக்குகளை வருமான வரித் துறையினர் முடக்கியுள்ளனர். அவர்களது வங்கி லாக்கர்களுக்கும் சீல் வைக்கப்பட்டுள்ளது.

வருமான வரித்துறை அதிகாரிகள் சென்னையில் 14 இடங்களிலும் கோவை, புதுச்சேரி, கடலூர், மதுரை ஆகிய ஊர்களில் 17 இடங்களிலும் செவ்வாய்க்கிழமை ஒரே நேரத்தில் சோதனை நடத்தினர்.

நடிகர் விஜயகாந்த் மற்றும் அவரது உறவினர் வீடுகள், சத்யபாமா நிகர்நிலை பல்கலைக்கழகத்தின் வேந்தர் ஜேப்பியார் மற்றும் ஜெயா பொறியியல் கல்லூரிகளின் தலைவர் கனகராஜ் ஆகியோர் வீடு, அலுவலகம் மற்றும் அவர்களது உறவினர்களின் வீடுகளிலும் சோதனை நடத்தினர். இச் சோதனையை 400 வருமான வரித்துறையினரும் 50 அதிகாரிகளும் மேற்கொண்டனர்.

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், கல்வி நிறுவனங்களை நடத்தும் ஜேப்பியார், கனகராஜ் ஆகியோரது பெயரைக் குறிப்பிடாமல், இச் சோதனை குறித்து வருமான வரித்துறை புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

கல்வியாளர் மற்றும் அவரது உறவினர் வீட்டில் வருமான வரித்துறையினர் மேற்கொண்ட சோதனையில் கணக்கில் காட்டப்படாத ரூ. 54.22 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

அதேபோல நடிகரின் (விஜயகாந்த்) சகோதரியின் வீட்டிலிருந்து ரூ. 12 லட்சம் பணம் மற்றும் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
விஜயகாந்த் வங்கி கணக்குகள் முடக்கப்படும்: வருமான வரித்துறை அதிகாரி தகவல்

சென்னை, ஜன. 24-

விஜயகாந்த் மற்றும் அவரது உறவினர் வீடுகளில் நடந்த சோதனை குறித்து வருமான வரித்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

விஜயகாந்த் மற்றும் அவரது உறவினர்களுக்கு ரூ. 60 கோடிக்கு சொத்து இருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. மேலும் என்னென்ன சொத்துக்கள் உள்ளது என்பது பற்றி விசாரித்து வருகிறோம்.

இந்த சொத்துக்களுக்கு அவர் வரவு-செலவு கணக்கு சரிவர பராமரிக்காதது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

இந்த சொத்துக்கள் மூலம் எவ்வளவு வருமானம் வருகிறது என்ற விவரமும் இல்லை. வருமானத்தை வைத்து தானே வரி போட முடியும்.

விஜயகாந்தின் வீட்டில் உள்ள நகைகள் மதிப்பு எவ்வளவு என்று கணக்கெடுக்கும் பணியும் நடந்து வருகிறது. அவரது கட்சி அலுவலகத்தில் நடந்த சோதனையில் வரவு-செலவு கணக்கே பராமரிக்கப்படாதது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

இது போல அவரது என்ஜினீயரிங் கல்லூரியிலும் வரவு-செலவு சரிவர பராமரிக்கப்படவில்லை. ரூ. 10 கோடிக்கு மேல் வரவு-செலவு விவரங்களை அவரால் சொல்ல முடியவில்லை.

மதுரையில் உள்ள விஜயகாந்தின் அக்காள் விஜயலட்சுமி வீட்டில் இருந்து கணக்கில் காட்டப்படாத ரூ. 2 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் 12 காரட் வைரம் உள்பட 12 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகளும் கைப் பற்றப்பட்டுள்ளன.

விஜயகாந்தின் ஒன்றுவிட்ட சகோதரர் ரவிச்சந்திரன் வீட்டில் இருந்து 2 கிலோ 300 கிராம் மதிப்புள்ள நகைகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. ரவிச்சந்திரனின் சொத்துக்கள் மொத்தம் ரூ. 33 லட்சத்து 49 ஆயிரம் மதிப்புள்ளவை முடக்கி வைக்கப்பட்டுள்ளது.

விஜயகாந்தின் அறக்கட்டளை சொத்து மட்டும் ரூ. 45 கோடி ஆகும். அவரின் பாங்கி கணக்குகள் வங்கி லாக்கர்கள் எங்கெங்கு உள்ளன என்று விசாரித்து வருகிறோம். அவைகளையும் முடக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

நேற்று நடந்த சோதனைக்கு விஜயகாந்த் முழு ஒத்துழைப்பு கொடுத்தார். சோதனைக்கு சென்ற அதிகாரிகளின் கார் கண்ணாடியை வெளியே இருந்த சிலர் உடைத்து விட்டனர். அதுபற்றி போலீசில் புகார் கொடுத்து இருக்கிறோம்.

விஜயகாந்தின் முழு சொத்து விவரம், மற்றும் கைப்பற்றப்பட்ட பொருட்கள் முழு பட்டியல் நாளை வெளியிடப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தி.மு.க. கூட்டணிக்கு என்னை இழுக்கவே இந்த சோதனை: விஜயகாந்த் சொல்கிறார்

சென்னை, ஜன. 24-

சென்னை சாலிகிராமத்தில் உள்ள நடிகர் விஜயகாந்தின் வீடு, திருமணமண்டபம், மதுரையில் உள்ள அவருக்குச் சொந்தமான ரைஸ்மில் ஆகியவற்றில் வருமான வரித்துறையினர் நேற்று ஒரே நேரத்தில் அதிரடியாக சோதனை மேற்கொண்டனர்.

இதேபோல் அவருடைய உறவினர்களின் வீடுகள், அலு வலகங்கள், கட்சி நிர்வாகிகள் வீட்டிலும் சோதனை நடந்தது.

வருமானவரிச் சோதனை குறித்து நடிகர் விஜயகாந்த் நிருபர்களிடம் கூறியதாவது:-

இந்த வருமான வரிச் சோதனை அரசியல் உள் நோக்கம் கொண்டது. என் வீட்டில் இருந்து எந்த ஆவணங் களும் கைப்பற்றப்படவில்லை.

அரசியல் காரணங்களுக் காக இந்த சோதனை நடை பெறவில்லை என்று கூறியதற் காக ஆளும் கட்சியினரின் சிலரது வீடுகளிலும் சோதனை நடத்தி உள்ளனர். எல்லாவற்றையும் மக்கள் கவனித்துக் கொண்டு தான் இருக்கிறாகள்.

முதல்-அமைச்சர் கருணாநிதி இவ்வளவு தரம் தாழ்ந்து நடந்து கொள்வார் என்று நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை. நான் முறையாக வருமான வரி செலுத்தி வருகிறேன்.

எங்கள் கட்சியை தி.மு.க. கூட்டணிக்கு இழுப்பதற்கே இந்த வருமான வரி சோதனை நடைபெற்றுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள பெரிய கட்சிகளுடன் நாங்கள் கூட்டணி வைத்துக் கொள்ள மாட்டோம். எங்கள் கட்சி தனித்தே போட்டியிடும்.

மேற்கண்டவாறு அவர் கூறினார்.

விஜயகாந்த் வீட்டில் வருமான வரி சோதனை: 12 இடங்களில் அதிரடி வேட்டை

சென்னை, ஜன. 23-

நடிகரும், தே.மு.தி.க. தலை வருமான விஜயகாந்த் வீடு சென்னை சாலி கிராமத்தில் உள்ளது. இங்கு அவரது
அலுவலகமும் செயல்பட்டு வருகிறது.

இன்று காலை 8 மணிக்கு வருமான வரித்துறை அதிகாரி கள் விஜயகாந்த்தின் வீட் டிலும், அலுவலகத்திலும் அதிரடியாக புகுந்து சோதனை நடத்தினார்கள்.

வீட்டில் உள்ள ஒவ்வொரு அறையாக சென்று சோதனை நடத்தினார்கள். வீட்டில் இருந்தவர்களிடமும் விசா ரணை நடத்தினார்கள்.

இதே போல் சாலி கிராமத் தில் உள்ள விஜயகாந்தின் மைத்துனரும், பட அதிபரு மான சுதீஷ் வீட்டிலும்
அலுவலகத்திலும் வருமான வரித்துறை அதிகாரிகள் புகுந்து திடீர் சோதனை நடத்தினார்கள்.

100 அடி ரோட்டில் உள்ள சுதீசுக்கு சொந்தமான `லீ கிளப்’ என்ற கேளிக்கை விடுதியிலும் வருமான வரி சோதனை நடந்தது.

ஒவ்வொரு இடத்திலும் வருமான அதிகாரிகள் குழு குழுவாக சென்று ஒரே நேரத்தில் சோதனை நடத்தினார்கள். அப்போது உள்ளே இருந்தவர்கள் வெளி யில் செல்ல அனுமதிக்கப் படவில்லை. சோதனை நடந்த போது வீடு அலுவலகங்கள் முன்பு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

நடிகர் விஜயகாந்த் கடந்த ஆண்டு அரசியலில் குதித்து தே.மு.தி.க. என்ற கட்சி தொ டங்கினார். அவரது கட்சி சட்டசபை தேர்தலில் போட்டி யிட்டது. இதில் விஜயகாந்த் வெற்றி பெற்று எம்.எல்.ஏ. ஆனார். அவரது கட்சி கணிச மான ஓட்டுக்களை பிரித்தது.

அதன் பிறகு நடந்த உள் ளாட்சி தேர்தலிலும் தே.மு. தி.க. போட்டியிட்டது. முல்லைப் பெரியாறு அணை பிரச்சினைக்காக விஜயகாந்த் உண்ணாவிரதம் இருந்தார்.

விஜயகாந்துக்கு சொந்த மான திருமண மண்டபம் கோயம்பேட்டில் உள்ளது. மேம் பாலம் கட்டுவதற்காக அவரது கல்யாண மண்டபத்தின் ஒரு பகுதி இடிக்கப்பட உள்ளது. இதை எதிர்த்து அவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்த நிலையில் விஜயகாந் தின் வீடு, அலுவலகம், அவரது மைத்துனர் வீடு, அலு வலகத்தில் வருமான
வரித்துறை சோதனை நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை புறநகர்ப் பகுதிகளில் உள்ள சில தனி யார் கல்லூரிகளிலும் இன்று வருமான வரி சோதனை நடந்தது. பழைய மகாபலிபுரம் ரோட்டில் ஜேப்பியாருக்கு சொந்தமான சத்யபாமா என்ஜினீயரிங் கல்லூரி உள் ளது. அதே பகுதியில் அருகில் ஜேப்பியார் வீடு இருக்கிறது. அந்த வீடு மற்றும் கல்லூரியில் சோதனை நடந்தது.

திருநின்றவூரில் உள்ள ஜெயா என்ஜினீயரிங் கல்லூரி யிலும் வருமான வரித்துறை யினர் புகுந்து சோதனை நடத்தினார்கள்.

கோவை மாவட்டம் உடுமலைப்பேட்டையில் புரபஷனல் கொரியர் நிறு வனத்தின் கோவை ஏரியா நிர்வாகி கணேசன் என்பவரது வீடு-அலுவலகம் உள்ளது. அங்கும் வருமான வரி சோதனை நடந்தது.

இவர் தே.மு.தி.க. பிரமுகர் ஆவார். சென்னையில் இருந்து சென்ற வருமான வரித்துறை அதிகாரிகள் இங்கு சோதனை மேற்கொண்டார்கள்.

தமிழ்நாடு முழுவதும் மொத் தம் 9 இடங்களில் அதிரடி சோதனை நடந்தது. 400க்கும் மேற்பட்ட அதிகாரிகள் 10 குழுக்களாக பிரிந்து ஒரே நேரத்தில் சோதனை நடத்தினார்கள்.

தொடர்ந்து சோதனை நடந்து கொண்டு இருக்கிறது. இதன் முடிவில்தான் எதுவும் சிக்கியதாப என்பது தெரிய வரும்.

Posted in ADMK, AIADMK, Allegations, Andal Azhagar College, Andal Azhagar Kalyana Mandapam, anti-tax, assembly polls, Chennai, Cinema, Coimbatore, DMDK, fraud, Ganesh, Ganesh Kumar, Income Tax, IT, Jaya Engineering College, Jeppiar Group of Educational Institutions, Jeppiyaar, Kanakraj, Leaders, Madras, Madurai, Medical University, Murali, O Paneerselvam, panruti ramachandran, political vendetta, Politics, self-financing college, Tamil Actors, Tamil Nadu, tax evasion, Udumalpet, Vijaiganth, Vijaikanth, Vijayaganth, Vijayakanth, Vijayganth, vijaykanth | Leave a Comment »