Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘fraud’ Category

LTTE & credit card fraud: Tiger links in India & stolen numbers in London

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 4, 2008

‘விடுதலைப் புலிகள் அமைப்பு வலுவிழந்து வருகிறது’

கொழும்பு, பிப். 3: இலங்கையில் தனி ஈழம் கேட்டு போராடும் விடுதலைப் புலிகள் அமைப்பு வலுவிழந்து வருகிறது.

இலங்கை பத்திரிகை ஒன்றில் இதுபற்றி செய்தி வெளியாகி யுள்ளது. விடுதலைப் புலிகள் இயக்கத்தில் உள்ள 17,000 பேர் போரில் ஈடுபட்டுள்ளனர். எனினும் அவர்களில் குறைந்த எண்ணிக்கையிலான வீரர்கள்தான், போரில் பழக்கமானவர்கள்.

அவர்களது கடற்படையில் 1500 பேர் உள்ளனர். அவர்களில் பெரும்பாலோர் புதிதாக படையில் சேர்க்கப்பட்டவர்கள்.

விடுதலைப் புலிகளுக்குத் தேவையான ஆயுதங்களின் வருகையும் குறைந்துவிட்டது.
எனவே உள்நாட்டிலேயே தயாரிக்கப்படும் வெடிகுண்டுகளையும் ஆயுதங்களையும் அவர்கள் பயன்படுத்துகின்றனர். சமீபத்தில் வன்னி பகுதிக்கு ஆயுதங்களை எடுத்துச் சென்ற விடுதலைப் புலிகளின் 7 கப்பல்களை இலங்கை கடற்படை தாக்கி மூழ்கடித்தது. இதில் 80,000 டன் வெடிகுண்டுகளும் ஆயுதங்களும் அழிந்தன.

இதனால் புலிகளுக்கு ஆயுதத் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது.

இலங்கை விமானப்படை தாக்குதலில் விடுதலைப் புலிக ளுக்குச் சொந்தமான 3 விமானங்கள் அழிந்தன. புலிகள் படையில் 25 தளபதிகள் கொல்லப்பட்டனர். தற்போது விடுத லைப் புலிகள், அரசு ராணுவத்தால் சுற்றி வளைக்கப்பட்டுள்ளனர்.

அவர்களால் எதுவும் செய்ய முடியவில்லை என்று பத்திரி கையில் செய்தி வெளியாகியுள்ளது.

இந்நிலையில் இந்த ஆண்டு விடுதலைப் புலிகள் தங் களது ராணுவ பலத்தை வெளிப்படுத்துவார்கள் என்று அந்த இயக்கத்தின் ஆதரவாளர் களில் ஒருவரான கே. பாலகுமாரன், தமிழீழ டெலிவிஷனுக்கு அளித்த பேட்டியில் கூறியுள் ளார்.
——————————————————————————————————————————————

பிரிட்டன் வாடிக்கையாளர்களின் கிரெடிட் கார்டுகள் விவரத்தை புலிகள் திருடினார்களா?

லண்டன், பிப். 3: கனடாவில் விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த இருவரையும், அவர்களது கூட்டாளிகள் இருவரையும் கடந்த மாதம் 31-ம் தேதி அந்நாட்டு போலீஸôர் கைது செய்தனர்.

கிருபாகரன் செல்வநாயகம் பிள்ளை, சேதுகாவலர் சரவணபவன், பிரதீபன் தம்பு, ஸ்ரீநாதன் ஆகியோரிடமிருந்து ஏராளான பரிசுப் பொருள்கள், கம்ப்யூட்டர் பாகங்கள், லேப்டாப் கம்ப்யூட்டர் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.

அந்த லேப்டாப் கம்ப்யூட்டரை இயக்கிப் பார்த்த போது அதில் ஏராளமான கிரெடிட் கார்டுகள் விபரமும், அவை அனைத்தும் பிரிட்டன் வாடிக்கையாளர்களை பற்றியது என்பதும் தெரியவந்தது.

இதனால் தங்களது நிதித் தேவைக்காக அந்த கிரெடிட் கார்டுகளின் விவரத்தை அவர்கள் திருடியிருக்கலாம் என்று கனடா போலீஸôர் சந்தேகித்துள்ளார். அந்த அடிப்படையில் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

Posted in Credit card, credit cards, Eelam, Eezham, Finance, fraud, India, London, LTTE, Scams, Sri lanka, Srilanka, Tigers | Leave a Comment »

Kenya’s elections: A very African coup – Twilight robbery, daylight murder; After a stolen election, ethnic cleansing

Posted by Snapjudge மேல் ஜனவரி 4, 2008

திருடிய வெற்றியும் தொலைந்துபோன அமைதியும்

எம். மணிகண்டன்

இந்தியப் பெருங்கடலையொட்டிய இயற்கை எழில் மிக்க கடற்கரைகள், வண்ண மயமான விளையாட்டு மைதானங்கள் ஆகியவைதான் கென்யாவைப் பற்றி வெளிநாட்டினருக்கு அதிகமாகத் தெரிந்தவை.

Economistரத்த ஆறுகள் ஓடும் பெரும்பாலான ஆப்பிரிக்க நாடுகளிலிருந்து சற்று மாறுபட்டது கென்யா. இந்தியாவுக்கு ஒரு நேருவைப் போல, கென்யாவுக்கு ஒரு கென்யாட்டா கிடைத்தார். சாகும் வரை அவர் அதிபராகவும் இருந்தார்.

கென்யாவின் விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டு பல ஆண்டுகள் சிறையிலேயே கழித்தவர் என்பதில் நெல்சன் மண்டேலாவுடன் ஒப்பிடத் தகுந்தவர் கென்யாட்டா. வளர்ச்சியை நோக்கிய உள்கட்டமைப்பு, கருணைமிக்க நிலச் சீர்திருத்தம், கரிசனம் கொண்ட பொருளாதாரச் சீர்திருத்தம் என ஜோமோ கென்யாட்டாவின் பணிகள் அவருக்குப் பெரும்புகழைப் பெற்றுத் தந்தன.

சூடான் மற்றும் சோமாலிய அமைதி முயற்சிகளில் ஈடுபடும் அளவுக்கு கென்யாவை உயர்த்தியது கென்யாட்டாதான் என்பது ஏற்றுக் கொள்ளத்தக்க உண்மை. இவ்வளவு பெருமைக்குரியவரான கென்யாட்டா ஒரு சாத்தானையும் விட்டுச் சென்றார். அதுதான் இனப் பாகுபாடு. உலக நாகரிகத்தின் முன்னோடிகளில் ஒன்றாகக் கருதப்படும் ஒரு நாடு, ஆப்பிரிக்க நாடுகளுக்கு வழிகாட்டியாகத் திகழ வேண்டிய ஒரு நாடு, மிக மோசமான கலவர பூமியாக மாறிக் கொண்டிருப்பது இனக் கலவரங்களால்தான்.

கென்யாவில் 40-க்கும் அதிகமான பழங்குடி இனத்தவர்கள் வசித்து வந்தாலும், கிக்கூயூ இனத்தவரின் எண்ணிக்கை மற்றவர்களைக் காட்டிலும் அதிகம். 1960-களில் சுதந்திரம் அடைந்த பிறகு இதுவரை மூன்றே அதிபர்களைத்தான் கென்யா கண்டிருக்கிறது. அவர்களில் இருவர் கிக்கூயூ இனத்தவர். கென்யாட்டாவும், தற்போதைய அதிபர் கிபாகியும்தான் அந்த இருவர். நீண்டகாலமாகவே பொருளாதாரத்தில் உயர்ந்த நிலையில் இருப்பதும், நாட்டின் முக்கிய விவசாய நிலங்களை வைத்திருப்பதும், பெரிய பதவிகளைக் கைப்பற்றுவதும் கிக்கூயூக்கள்தான்.

தூய்மையான நிர்வாகம் என்ற கோஷத்தோடு, கடந்த 2002 தேர்தலில் வென்றவர்தான் கிபாகி. இவரது அதிகார ஆக்கிரமிப்புதான் இப்போது பிரச்னையாகியிருக்கிறது. அண்மையில் நடந்த அதிபர் தேர்தலில் மிகக் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் கிபாகி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டதும் வன்முறை வெடித்திருக்கிறது. முன் எப்போதும் இல்லாத அளவுக்கு நாடு முழுவதும் பதற்றம் நிறைந்திருக்கிறது.

அதிபர் தேர்தலில் யார் வெற்றி பெற்றார் என்பது தமக்கு உண்மையிலேயே தெரியாது எனவும், ஆளுங் கட்சியினரின் நெருக்கடி காரணமாகவே கிபாகி வெற்றி பெற்றதாக அறிவித்ததாகவும் தலைமைத் தேர்தல் ஆணையர் கூறியதாக பத்திரிகைகள் செய்தி வெளியிட்டிருக்கின்றன. கிபாகியை எதிர்த்துப் போட்டியிட்ட லூ இனத்தைச் சேர்ந்த ஓடிங்கோ தேர்தல் முடிவுகளை ஏற்றுக் கொள்ளவில்லை.

கென்யாவில் கட்சியைப் பார்த்து யாரும் வாக்களிப்பதில்லை. இனம்தான் தேர்தலில் முக்கியப் பங்கு வகிக்கிறது. நான் உங்கள் இனத்தைச் சேர்ந்தவன்; நீங்கள் தாராளமாக என்னை நம்பலாம் என நேரடியாகவே வேட்பாளர்கள் பிரசாரத்தில் ஈடுபடுவதுதான் தேர்தல் வெற்றிக்கான சூத்திரம். இந்தப் பின்னணியில், ஏற்கெனவே கிக்கூயூ இனத்தவரால் தாங்கள் ஒடுக்கப்பட்டதாகக் கருதும் மற்ற இனத்தவர் இத் தேர்தல் முடிவுகளை எதிர்த்து வன்முறையில் இறங்கிவிட்டனர். எங்கெல்லாம் கிக்கூயூ இனத்தவர் இருக்கின்றனரோ அங்கெல்லாம் படுகொலைகள் நடந்தவண்ணம் உள்ளன.

கென்ய வன்முறைகளுக்கு அந்நாட்டுக்கு நிதியுதவி செய்யும் பிரிட்டனும் அமெரிக்காவும் கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றன. ஆனால் எந்த நாட்டில் சண்டை நடந்தாலும் ஆயுதங்கள் விற்பனையாகும் என்ற எண்ணத்தில் மேலை நாடுகளுக்கு உள்ளூர மகிழ்ச்சிதான்.

கிழக்கு ஆப்பிரிக்காவில் எஞ்சியிருக்கும் ஒரேயொரு நாட்டையும் தங்களது வாடிக்கையாளர் பட்டியலில் சேர்த்துக் கொள்வதற்குத்தான் மேலை நாடுகள் உண்மையிலேயே முயன்று வருகின்றன. அதனால் போர் ஏற்படும்வரை காத்திருந்து ஆயுதங்களை விற்பனை செய்வதுதான் அவர்களின் எண்ணம். எண்ணெய் வளங்களில் முதலீடு செய்திருக்கும் சீனாவும் இப்போதைக்கு உதவிக்கு வருவதுபோல் தெரியவில்லை. எனவே, எந்த நாடு உதவிக்கு வந்தாலும் அது லாப நோக்கத்துடன்தான் இருக்கும்.

ஆக, கென்யா இன்னொரு உகாண்டாவாக மாறாமல் தடுக்கும் பொறுப்பு கிபாகிக்கும் ஓடிங்கோவுக்கும்தான் உள்ளது. 300-க்கும் அதிகமானோர் பலியான பின்னரும் அமைதி முயற்சி எதையும் மேற்கொள்ளாத அதிபர் கிபாகி மீது ஆப்பிரிக்க மக்களின் மொத்தக் கோபமும் திரும்பியிருக்கிறது.

பதவியைத் துறந்துவிட்டு இடைக்கால அரசை நியமித்து புதிதாகத் தேர்தல் நடத்துவது ஒன்றுதான் இப்போதைக்கு கிபாகி முன்னால் இருக்கும் ஒரே வாய்ப்பு. பிரச்னை ஏற்படலாம் என்று தெரிந்தவுடன், அதிகாரத்தைத் தூக்கி எறிந்த நெல்சன் மண்டேலா போல் போற்றுதலுக்குரிய தலைவராக மாற கிபாகிக்கு இது நல்ல சந்தர்ப்பம்.

இல்லையெனில், இராக் ஆக்கிரமிப்புக்கு முன்பு டோனி பிளேர் கூறியது போல், நீதியை நிலைநாட்ட “அடித்துக் கொள்ள’ வேண்டியதுதான்; மேலை நாடுகளுக்குச் சாதகமாக!

 


 

கென்யாவில் வன்முறை காரணமாக 1.80.000 பேர் இடம்பெயர்ந்துள்ளனர்

கென்யாவில் கடந்த வாரம் நடந்த தேர்தலைத் தொடர்ந்து வெடித்த வன்முறையில் குறைந்தது ஒரு லட்சத்து எண்பதனாயிரம் பேர் இடம் பெயர்ந்திருப்பதாக ஐநாமன்றத்தின் அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள்.

இவர்களில் சிலர் இடைத்தங்கல் முகாம்களில் தங்கியிருக் கிறார்கள். சிலர் காவல்நிலையங்களிலும், சிலர் தேவாலயங் களிலும் தஞ்சமடைந்திருக்கிறார்கள்.

இப்படியான அகதிகள் எல்லோருமே பட்டினியாக இருப்ப தாகவும், பல குழந்தைகள் வெயிலுக்கு பலியாகி இறந்து விட்டதாகவும், இந்த வன்முறைகளில் அதிகம் பாதிக்கப்பட்ட கென்யாவின் மேற்கு பிரதேசங்களில் ஒன்றில் இருக்கும் பிபிசி செய்தியாளர் தெரிவிக்கிறார்.
கென்யா முழுவதும் சுமார் ஐந்து லட்சம் கென்யர்கள் அவசர உதவி தேவைப்படும் நிலையில் இருப்பதாக, நைரோபியில் இருக்கும் ஐநா மன்றத்தின் உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

 


புதிய தேர்தலுக்கு தயார்- ஆனால் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் என்கிறார் கென்ய அதிபர் கிபாக்கி

கென்ய அதிபர் கிபாக்கி
கென்ய அதிபர் கிபாக்கி

கென்யாவில் புதிதாக தேர்தல் நடத்தப்படுவதை கொள்கை அடிப்படையில் எதிர்க்கவில்லை, ஆனால் நீதிமன்றம் ஒன்று உத்தரவிடும் பட்சத்தில்தான் புதிய தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும் என்று அதிபர் முவாய் கிபாக்கி விரும்புகிறார் என அந்நாட்டின் அரசு சார்பாகப் பேசவல்லவர் கூறியுள்ளார்.

ரைலா ஒடிங்கா தலைமையிலான ஓ.டி.எம். எதிர்க்கட்சியானது, சர்வதேச நாடுகளின் கண்காணிப்பின் கீழ் மறுபடியும் தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும், ஆனால் இவ்விவகாரத்தை நீதிமன்றத்திடம் கொண்டுசெல்லப்போவதில்லை, ஏனெனில் நீதிமன்ற முடிவின் மீது தங்களுக்கு நம்பிக்கை இல்லையென்று கூறியிருந்தது.

இந்த நெருக்கடியை தீர்ப்பதற்கான புதிய ராஜீய முயற்சிகள் நடந்துவருகின்றன. அதிபர் கிபாகு மற்றும் ஒடிங்கா ஆகியோருடன் நொபெல் பரிசு வென்ற தென்னாப்பிரிக்க பிரமுகர் டெஸ்மண்ட் டுடு பேச்சுநடத்தியுள்ளார். அமெரிக்க அதிபர் புஷ்ஷின் தூதர் ஜெண்டயி ஃப்ரேஸார் நைரோபி சென்றுகொண்டிருக்கிறார்.

 


தற்போதைய கென்ய அரசியல் நெருக்கடியின் பின்னணி என்ன?

நைரோபியில் தொடர்ந்து பதட்டம்
நைரோபியில் தொடர்ந்து பதட்டம்

தலைநகர் நைரோபி மற்றும் பிற நகர வீதிகளில் அரங்கேறிவரும் அரசியல் நெருக்கடிக்கு, நாட்டின் சக்திவாய்ந்த இரண்டு இனப்பிரிவுகளான – அதிபர் கிபாகியின் ககிகுயு பழங்குடியினத்துக்கும் எதிர்கட்சித் தலைவர் ரைலா ஒடிங்காவின் லுஒ இனத்துக்கும் இடையில் வரலாற்று ரீதியாயக நீடித்துவரும் பகைமை ஒரு பங்கில் வேராக அமைந்துள்ளது என்று சொல்லலாம்.

அதிபர் கிபாகியின் இனப்பிரிவான கிகுயுதான் கென்யாவின் மிகப் பெரிய மற்றும் பொருளாதார ரீதியில் மிகவும் சக்திவாய்ந்த இனமாகும். இவ்வினத்தார் அதிகம் பேர் நைரோபியைச் சுற்றி வாழ்கிறார்கள். இவ்வினத்தாரின் தலைவர் ஜோமோ கென்யாட்டாதான் சுதந்திரத்திற்குப் பிறகு நாட்டின் முதல் அதிபரானவர்.

நாட்டின் மேற்குப் பகுதியில் உகாண்டாவுடனான எல்லைக்கு அருகில் பரவலாக வாழும் லுஒ இனத்தார், பலமுறை அரசுப் பிரதிநிதிகளாக இருந்துள்ளனர் என்றாலும் அவர்களில் மிகப் பிரபலமான தலைவர் காலஞ்சென்ற ஒகிங்கா ஒடிங்கா ஆவார். இவரின் மகன் தான் தற்போதைய எதிர்கட்சித் தலைவர் ரைலா ஒடிங்கா.

கிகுயுவுக்கும் லுஒவுக்கும் இடையே நெடுநாளாக அரசியல் போட்டி பகைமை இருந்துவருகிறது என்றாலும் கென்யா பல ஆண்டுகளாக ஒரு அமைதியான நாடாகவே திகழ்ந்துவருகிறது.

சர்ச்சைக்குரிய தேர்தல் முடிவுகள் தொடர்பான தற்போதைய அரசியல் நெருக்கடியின் பின்னணி குறித்து எமது உலக விவகார செய்தியாளர் மார்க் டொய்ல் விளக்கும் செய்திக்குறிப்பின் தமிழ் வடிவத்தை நேயர்கள் கேட்கலாம்.

 


 

 

Posted in africa, Ancestry, Arms, AU, Autocracy, Autocrats, Britain, Cabinet, China, Citizen, Cleansing, Congo, Constituency, Democracy, Dictators, Dictatorship, Eldoret, Election, Elections, Ethiopia, fraud, Government, Govt, Kenya, Kibaki, Kikuyu, Kingdom, Kings, Kisumu, Kivuitu, Luo, margin, Military, Mombasa, Monarchy, Monitors, Murder, Mwai, Nairobi, Nigeria, Nyanza, Odinga, Opposition, people, Polls, Protest, protesters, Race, Racial, Raila, Re-election, rigging, Robbery, Somalia, Vote, voters, War, Weapons | Leave a Comment »

Kumudam Reporter – Interview with Don ‘Vellai’ Ravi

Posted by Snapjudge மேல் ஜூன் 4, 2007

07.06.07 
குமுதம் ரிப்போர்ட்டர்

வெள்ளை ரவி என்ன சொல்கிறார்?

தலைமறைவாகி இருக்கும் வெள்ளைரவியை பலமுயற்சிகளுக்குப் பிறகு நாம் செல்போனில் தொடர்பு கொண்டு பேசினோம். ஒவ்வொரு கேள்விக்கும் தெளிவாகவும், நிதானமாகவும் அவர் பதிலளித்தார்.

‘வெள்ளை ரவி’ என்ற பிரபல தாதா உருவானது எப்படி?

‘‘வியாசர்பாடி பகுதியில் பர்மா அகதிகளாக எங்கள் குடும்பமும், சேரா குடும்பமும் குடியேறினோம். நான் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவன். சேரா தேவர் சமுதாயத்தைச் சேர்ந்தவர். சிறுவயதில் எங்களுக்குள் ஏற்பட்ட பகை உணர்வு நாளடைவில் ஜாதி வெறியாகவே உருவெடுத்தது. எனவே நான் சேராவின்ஆட்களைக் கொலை செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் உருவானது. அதைத் தொடர்ந்து இருதரப்பிலும் எத்தனையோ கொலைகள் நடந்து, சாதாரண வெள்ளை ரவியான நான் ஒரு தாதாவாக ஆக்கப்பட்டேன்.’’

ராஜ்குமாரை நீங்கள் கடத்தியது உண்மையா?

‘‘உண்மைதான். நான் ராஜ்குமார் என்ற தொழிலதிபரை கடத்தவில்லை. சாதாரண வீரய்யாவாகத்தான் ராஜ்குமாரின் அப்பா, செங்குன்றத்தில் குடியேறினார். அதன்பிறகு என்னுடன் ஏற்பட்ட தொடர்பை பயன்படுத்தி வீரய்யாவின் குடும்பம் மணல் கடத்தல், அதன்பிறகு ஹெராயின் கடத்தல் பின்னர் சந்தன மரம், மற்றும் செம்மரக் கடத்தல், தொழிலில் இறங்கி, கோடிகோடியாக பணம் சம்பாதித்தனர். இன்று அந்தக் குடும்பத்திடம் சுமார் ஆயிரம்கோடி ரூபாய் சொத்து இருக்கிறது.

இந்த சொத்துக்கள் அனைத்துமே எனது பெயரைப் பயன்படுத்தி என் மூலமாகவே அவர்கள் சம்பாதித்தது. இதை செங்குன்றத்தில் உள்ள யாரைக் கேட்டாலும் சொல்வார்கள். செங்குன்றம் போலீஸாருக்கும் இது தெரியும். எனக்கு அவர்கள் தரவேண்டிய பணத்தைத்தான் பலமாதங்களாக கேட்டுவந்தேன். அவர்கள் இன்று, நாளை என இழுத்தடித்து Êஏமாற்றப் பார்த்தார்கள். எனவேதான் ராஜ்குமாரை கடத்தினேன்.’’

ராஜ்குமார் குடும்பத்திடம் அறுபது லட்ச ரூபாய் வாங்கியது உண்மையா?

‘‘உண்மைதான். எனக்கு இரண்டு கோடி ரூபாய் தருவதாக வீரய்யாவும், ராஜ்குமாரும் சொல்லியிருந்தார்கள். அதைத் தரவேயில்லை என்பதால்தான் ராஜ்குமாரைக் கடத்தி அறுபது லட்ச ரூபாய் வாங்கினேன்.’’

நீங்கள் சென்னையில் பல கொலைகள் செய்துள்ளதாகவும், ரவுடிகளுக்கு உதவி செய்ய ஆட்களை அனுப்பி வைப்பீர்கள் என்றும் சொல்கிறார்களே?

‘‘நான் தாதாவாக உருவெடுத்தபிறகு சென்னையில் வளரும் ரவுடிகள் பலரும் எனது உதவியை நாடுவார்கள். அவர்களுக்கு எனது ஆட்களை அனுப்பி அவர்களின் உயிரை பலமுறை காப்பாற்றி இருக்கிறேன். என்னால் எத்தனை ரவுடிகள் இறந்தார்கள் என்பதைவிட, எத்தனை ரவுடிகள் உயிர் பிழைத்திருக்கிறார்கள் என்பதைத்தான் பார்க்கவேண்டும்.

நான் இதுவரை எத்தனையோ கொலைகளைச் செய்திருந்தாலும், எனது தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒருவரையும் கொன்றதில்லை.’’

இந்தியாவிலேயே எந்த ரவுடிக்கும் இல்லாத சிறப்பாக பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றம் ஒன்றுக்கு உங்கள் பெயர் வைக்கப்பட்டிருக்கிறதாமே?

‘‘ஆரம்பத்தில் எனக்கும் சேராவுக்கும் ஏற்பட்ட பகையில் நடந்த தொடர் கொலைகளை விசாரிக்க அந்த நீதிமன்றம் தொடங்கப்பட்டது. எனது வழக்குகளை விசாரிக்கத் தொடங்கப்பட்டதால் அந்த நீதிமன்றத்துக்கு ‘வெள்ளை ரவி கோர்ட்’ என்று பெயர் வைத்தார்கள். இன்றுவரை அந்தப் பெயர் அப்படியே நிலைத்துவிட்டது.’’

போதைப் பொருள் கடத்தல் தொழில் செய்தீர்களா?

‘‘ஹெப்பிட்ரின் ஹைட்ரோகுளோரைட் என்ற ஒரு பவுடர்தான் ஹெராயின் தயாரிக்க மூலப்பொருள். இதன் விலை இந்திய மார்க்கெட்டில் ஒரு கிலோ இரண்டாயிரத்து ஐநூறு ரூபாய். இதே பவுடர் சர்வதேசச் சந்தையில் சிங்கப்பூரில் பதினெட்டாயிரம் ரூபாய், மலேசியா, பர்மாவில் இருபத்தைந்தாயிரம் ரூபாய்.

இந்த பவுடர் கடத்தலைத்தான் ராஜ்குமார் குடும்பம் ஆரம்பத்தில் செய்தது. அசாம் மாநிலம் எல்லையில் உள்ள மோரே பகுதியில் இருந்து பர்மாவுக்கு இந்த பவுடரை எளிதாகக் கடத்தி விற்று, இன்று சென்னையில் பலகோடீஸ்வரர்கள் உருவாகியுள்ளனர். இன்று வரை சத்தியமாக நான் அந்த பவுடரை தொட்டதும் கிடையாது. கடத்தியதும் கிடையாது.’’

நீங்கள் ரவுடியிசத்தில் பல கோடி ரூபாய்களைச் சம்பாதித்திருக்கிறீர்களாமே?

‘‘என்னால் எத்தனையோ பேர் கோடீஸ்வரர்களாக வளர்ந்திருக்கிறார்கள். இதுவரை எனக்கென்று நான் ஒரு இடத்தைக் கூட வாங்கியது இல்லை. ஆயிரம் ரூபாய் கூட சேர்த்து வைக்கவில்லை. வியாசர்பாடி ஆஞ்சநேயர் கோயில் அருகே தொடங்கப்பட்ட எனது வீடு பல வருடங்களாக இன்னும் கட்டி முடிக்கப்படாமலேயே பாழடைந்து கிடக்கிறது.’’

எப்போது போலீஸில் சரண்டர் ஆவீர்கள்?

‘‘நான் எந்தச் சூழ்நிலையிலும் சரண்டராக மாட்டேன். சரண்டரானால் போலீஸ் என்னை என்கவுன்ட்டரில் சுட்டுக் கொன்றுவிடும். என்கவுன்ட்டர் என்றால் ‘திருப்பித்தாக்குதல்’ என்றுதான் அர்த்தம். ஆனால் தமிழக போலீஸ§க்கு அதன் அர்த்தம் தெரியவில்லை. ரவுடிகளைப் பிடித்து சுட்டுக் கொள்வது எந்த விதத்தில் நியாயம்? இரண்டரை வருடங்களாக சிறையில் இருந்த மணல்மேடு சங்கர், முட்டை ரவி, பங்க் குமார், இப்படி ரவுடியிசத்தில் இருந்து ஒதுங்கியவர்களைப் பிடித்து சுட்டு வருகின்றனர் காவல்துறையினர். இந்தப் பட்டியலில் நான் சேரத் தயாராக இல்லை. நான் சரண்டராக மாட்டேன் என்ற விவரத்தை சென்னை நகர முக்கிய போலீஸ் அதிகாரி ஒருவரிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டும் சொல்லிவிட்டேன்.’’

நீங்கள் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணைக் காதலித்துத் திருமணம் செய்திருக்கிறீர்களா?

‘‘எனது மனைவி பெயர் பாக்கியலட்சுமி.. தஞ்சாவூரைச்சேர்ந்த சுத்த தமிழ்ப்பெண். அவர்கள் இங்கிருந்துச் சென்று கர்நாடக மாநிலத்தில் செட்டிலானவர்கள்.’’

உங்களுக்கும் துணை நடிகை சானியாவுக்கும் என்ன தொடர்பு?

‘‘உண்மையிலேயே சொல்கிறேன். சபியுல்லாவின் காதலியான அந்தப் துணை நடிகையை நான் இரண்டுமுறை பார்த்திருக்கிறேனே தவிர, சரியாகக் கூடப் பேசியதில்லை. தேவையில்லாமல் என்னையும், அந்தப் பெண்ணையும் சேர்த்து அசிங்கமான செய்திகளை போலீஸார் பரப்பி வருகிறார்கள்.’’

– புஷ்கின் ராஜ்குமார்

Posted in Abscond, Arms, Blasts, Bombs, bootlegging, Capture, Cera, Chennai, Chera, Cocaine, Corruption, Courts, Crime, Criminal, Dacoit, Dada, Dalit, Death, Don, Drugs, Encounter, fraud, Gamble, gambler, Gambling, gang, Godfather, Heroin, Hitman, Illegal, informers, Interview, Judge, Justice, Kidnap, kidnapping, Kumudam, Law, law-enforcement, Leader, Loan-sharking, LSD, Madras, mafia, maphia, Marijuana, Murder, Narcotics, nexus, Order, organized-crime, Police, Politics, prostitution, Rajkumar, ransom, Ravi, Reporter, rival, rivalry, Robber, Robbery, Rowdy, Rowdyism, Sandal, Sandalwood, secrecy, Sera, smuggler, Sopranos, Substance, Surrender, Theft, Thief, traffickers, Trafficking, Veerappan, Vellai Ravi, Violence, Weapons | 3 Comments »

Offices of alleged drug trafficking kingpin Sanjay Kedia sealed

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 14, 2007

இணையத்தில் போதை மருந்து விற்றதாக ஐ.டி. நிறுவன தலைமை அதிகாரி கைது

கோல்கத்தா, பிப். 14: இணைய தளத்தின் மூலம் போதை மருந்து விற்றதாக, தகவல்தொழில்நுட்ப (ஐடி) நிறுவனத்தின் தலைமை அதிகாரி போதைப்பொருள் ஒழிப்புத் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கோல்கத்தாவைத் தலைமையகமாகக் கொண்டு செயல்படும் எக்ஸ்பான்ஸ் டெக்னாலஜிஸ், எக்ஸ்பான்ஸ் ஐடி சர்வீசஸ் நிறுவனங்களின் தலைமை அதிகாரி சஞ்சய் கெடியா. இவர் ஞாயிற்றுக்கிழமை போதைப்பொருள் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

அவரை நீதிமன்றக் காவலில் வைக்குமாறு சிறப்பு நீதிபதி திங்கள்கிழமை உத்தரவிட்டார்.

பிப்ரவரி 1-ம் தேதி, போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு, சுங்கத்துறை மற்றும் அரசுத்துறை வங்கி அதிகாரிகளைக் கொண்ட குழுவினர் கோல்கத்தா மற்றும் தில்லியில் அதிரடிச் சோதனை நடத்தினர்.

இந்தச் சோதனையின்போது, இந்தியா மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த 20 வங்கிக் கணக்குகளின் மூலம் சஞ்சய் கெடியாவும் அவரது நிறுவனமும் நிதிமோசடியில் ஈடுபட்டதற்கான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.

எக்ஸ்பான்ஸ் நிறுவனத்தில் 49 சதவீதப் பங்குகளைப் பெற்றுள்ள ஸ்டீவன் மகானா என்பவருடன் இணைந்து, இணையத்தின் மூலம் பென்டர்மைன் என்ற போதைப்பொருளை விற்றதாக சஞ்சய் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. குற்றம் நிரூபிக்கப்பட்டால் 20 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், ரூ.2 லட்சம் வரை அபாரதமும் விதிக்கப்படும் என போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் கிழக்கு மண்டல இயக்குநர் சுனில் மிட்டல் கூறியுள்ளார்.

தற்போது அமெரிக்காவில் உள்ள ஸ்டீவன் மகானாவை விசாரிக்க ஒரு குழு செல்ல உள்ளது. அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

போதைப்பொருள் மூலம் கிடைத்த பணத்தை ஹாங்காங், லக்சம்பர்க், அமெரிக்கா மற்றும் ஸ்வீடனில் உள்ள பன்னாட்டு வங்கிகளில் பதுக்குவதற்கு சஞ்சய் கருவியாகச் செயல்பட்டுள்ளார் என சுனில் மிட்டல் தெரிவித்துள்ளார்.

Posted in Alumni, Calcutta, Cocaine, Customs, DEA, Drug Enforcement Administration, drug trafficking, fraud, IIT Delhi, Kolkata, Narcotics, Narcotics Control Bureau, Pentermine, phentermine, Sanjay Kedia, WB, West Bengal, Xponse, Xponse IT Services, Xponse Technologies | Leave a Comment »

Income Tax Raids on Vijayganth, Jeppiyaar, AIADMK functionaries

Posted by Snapjudge மேல் ஜனவரி 24, 2007

விஜயகாந்த், ஜேப்பியார், கனகராஜ் வீடுகளில் சோதனை: கண்டுபிடிக்கப்பட்ட கணக்கில் வராத சொத்துகள் விவரம்: வருமானவரித்துறை அதிகாரிகள் தகவல்

சென்னை, ஜன. 25:நடிகர் விஜயகாந்த், ஜேப்பியார், கனகராஜ் ஆகியோரின் வீடுகளில் நடத்தப்பட்ட சோதனைகளில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள கணக்கில் வராத சொத்துகள் கண்டுபிடிக்கப்பட்டதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இந்தச் சோதனைகள் முடியவில்லை எனவும் 4 இடங்களில் தொடர்ந்து நடைபெறுகிறது எனவும் அவர்கள் கூறினர்.

இதுகுறித்து வருமான வரித்துறை அதிகாரிகள் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பது:

இச் சோதனையின்போது நடிகருக்குச் சொந்தமாக ரூ. 2.50 கோடி சொத்தும் அவரது மனைவியின் பேரில் ரூ. 2.35 கோடி மதிப்பிலான சொத்தும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. கடந்த 5 நிதி ஆண்டுகளாக அவர்கள் சொத்து வரி கணக்கு தாக்கல் செய்யவில்லை என்பதையும் அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.

மருத்துவக் கல்லூரி கட்ட ரூ. 45 கோடி முதலீடு: இச்சோதனையின்போது நடிகரின் உறவினருக்குச் சொந்தமான கல்வி அறக்கட்டளை மூலம் அவரது உறவினர் ரூ. 45 கோடி வரை முதலீடு செய்திருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. அத்துடன் ரூ. 9 கோடி தொகை செலவிடப்பட்டதற்கான கணக்கும் இல்லாதது தெரிய வந்துள்ளது. மருத்துவக் கல்லூரி கட்டுவதற்கு நிதி உதவி அளித்துள்ள வங்கிகள் பற்றிய விவரமும் சேகரிக்கப்பட்டு வருகிறது. தவிர, அறக்கட்டளை மூலம் ரூ. 1.72 கோடி வரை தனியாருக்கு அளிக்கப்பட்டுள்ள கடன் விவரத்தையும் வருமான வரித் துறையினர் திரட்டி வருகின்றனர்.

கல்வி அறக்கட்டளையிலிருந்து காசோலை மூலம் ரூ. 11 கோடி: அறக்கட்டளையிலிருந்து கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் ஜனவரி 23 வரையிலான காலத்தில் கல்வியாளர் தனது பெயரில் காசோலை அளித்து ரூ. 11 கோடி வரை பெற்றுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சில நாள் அதிகபட்சமாக ரூ. 1 கோடி வரை வங்கியிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும் பணம் எடுக்கப்பட்டதற்கான காரணத்தை கல்வியாளரால் விளக்க முடியவில்லை. இது தவிர, இந்த அறக்கட்டளையானது வரி விலக்கு பெறுவதற்கான தகுதியை பெற்றிருக்கவில்லை.

கணக்கில் காட்டாத பணம் ரூ. 8 கோடி: மற்றொரு கல்வி அறக்கட்டளையில் சோதனை நடத்தியபோது, மாணவர்களிடமிருந்து நன்கொடையாக ரூ.8 கோடி பெற்றதையும் அது கணக்கில் காட்டப்படாததையும் அதன் அறக்கட்டளை தலைவர் ஒப்புக் கொண்டார்.

4 இடங்களில் சோதனை தொடர்கிறது: வருமான வரித்துறையினர் மேற்கொண்ட சோதனை முடிவடையவில்லை என்றும் மேலும் 4 இடங்களில் சோதனை தொடர்ந்து நடைபெறுவதாக அவர்கள் தெரிவித்தனர்.

ஓ. பன்னீர் செல்வம், முரளி வீடுகளில் சோதனை நடத்தப்படவில்லை: எதிர்க்கட்சி துணைத் தலைவரும் முன்னாள் பொதுப்பணித் துறை அமைச்சருமான ஓ. பன்னீர் செல்வம் மற்றும் நடிகர் முரளி ஆகியோர் வீடுகளில் சோதனை நடத்தப்படவில்லை என்றும் இதுகுறித்து வெளியான தகவல் தவறு என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

விஜயகாந்த், ஜேப்பியார், கனகராஜ் வங்கிக் கணக்குகள் முடக்கம்: 4 இடங்களில் சோதனை தொடர்கிறது

சென்னை, ஜன. 25: நடிகர் விஜயகாந்த், கல்வி நிறுவனங்களின் தலைவர்களான ஜேப்பியார் மற்றும் கனகராஜ் ஆகிய மூன்று பேரின் வங்கிக் கணக்குகளை வருமான வரித் துறையினர் முடக்கியுள்ளனர். அவர்களது வங்கி லாக்கர்களுக்கும் சீல் வைக்கப்பட்டுள்ளது.

வருமான வரித்துறை அதிகாரிகள் சென்னையில் 14 இடங்களிலும் கோவை, புதுச்சேரி, கடலூர், மதுரை ஆகிய ஊர்களில் 17 இடங்களிலும் செவ்வாய்க்கிழமை ஒரே நேரத்தில் சோதனை நடத்தினர்.

நடிகர் விஜயகாந்த் மற்றும் அவரது உறவினர் வீடுகள், சத்யபாமா நிகர்நிலை பல்கலைக்கழகத்தின் வேந்தர் ஜேப்பியார் மற்றும் ஜெயா பொறியியல் கல்லூரிகளின் தலைவர் கனகராஜ் ஆகியோர் வீடு, அலுவலகம் மற்றும் அவர்களது உறவினர்களின் வீடுகளிலும் சோதனை நடத்தினர். இச் சோதனையை 400 வருமான வரித்துறையினரும் 50 அதிகாரிகளும் மேற்கொண்டனர்.

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், கல்வி நிறுவனங்களை நடத்தும் ஜேப்பியார், கனகராஜ் ஆகியோரது பெயரைக் குறிப்பிடாமல், இச் சோதனை குறித்து வருமான வரித்துறை புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

கல்வியாளர் மற்றும் அவரது உறவினர் வீட்டில் வருமான வரித்துறையினர் மேற்கொண்ட சோதனையில் கணக்கில் காட்டப்படாத ரூ. 54.22 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

அதேபோல நடிகரின் (விஜயகாந்த்) சகோதரியின் வீட்டிலிருந்து ரூ. 12 லட்சம் பணம் மற்றும் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
விஜயகாந்த் வங்கி கணக்குகள் முடக்கப்படும்: வருமான வரித்துறை அதிகாரி தகவல்

சென்னை, ஜன. 24-

விஜயகாந்த் மற்றும் அவரது உறவினர் வீடுகளில் நடந்த சோதனை குறித்து வருமான வரித்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

விஜயகாந்த் மற்றும் அவரது உறவினர்களுக்கு ரூ. 60 கோடிக்கு சொத்து இருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. மேலும் என்னென்ன சொத்துக்கள் உள்ளது என்பது பற்றி விசாரித்து வருகிறோம்.

இந்த சொத்துக்களுக்கு அவர் வரவு-செலவு கணக்கு சரிவர பராமரிக்காதது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

இந்த சொத்துக்கள் மூலம் எவ்வளவு வருமானம் வருகிறது என்ற விவரமும் இல்லை. வருமானத்தை வைத்து தானே வரி போட முடியும்.

விஜயகாந்தின் வீட்டில் உள்ள நகைகள் மதிப்பு எவ்வளவு என்று கணக்கெடுக்கும் பணியும் நடந்து வருகிறது. அவரது கட்சி அலுவலகத்தில் நடந்த சோதனையில் வரவு-செலவு கணக்கே பராமரிக்கப்படாதது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

இது போல அவரது என்ஜினீயரிங் கல்லூரியிலும் வரவு-செலவு சரிவர பராமரிக்கப்படவில்லை. ரூ. 10 கோடிக்கு மேல் வரவு-செலவு விவரங்களை அவரால் சொல்ல முடியவில்லை.

மதுரையில் உள்ள விஜயகாந்தின் அக்காள் விஜயலட்சுமி வீட்டில் இருந்து கணக்கில் காட்டப்படாத ரூ. 2 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் 12 காரட் வைரம் உள்பட 12 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகளும் கைப் பற்றப்பட்டுள்ளன.

விஜயகாந்தின் ஒன்றுவிட்ட சகோதரர் ரவிச்சந்திரன் வீட்டில் இருந்து 2 கிலோ 300 கிராம் மதிப்புள்ள நகைகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. ரவிச்சந்திரனின் சொத்துக்கள் மொத்தம் ரூ. 33 லட்சத்து 49 ஆயிரம் மதிப்புள்ளவை முடக்கி வைக்கப்பட்டுள்ளது.

விஜயகாந்தின் அறக்கட்டளை சொத்து மட்டும் ரூ. 45 கோடி ஆகும். அவரின் பாங்கி கணக்குகள் வங்கி லாக்கர்கள் எங்கெங்கு உள்ளன என்று விசாரித்து வருகிறோம். அவைகளையும் முடக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

நேற்று நடந்த சோதனைக்கு விஜயகாந்த் முழு ஒத்துழைப்பு கொடுத்தார். சோதனைக்கு சென்ற அதிகாரிகளின் கார் கண்ணாடியை வெளியே இருந்த சிலர் உடைத்து விட்டனர். அதுபற்றி போலீசில் புகார் கொடுத்து இருக்கிறோம்.

விஜயகாந்தின் முழு சொத்து விவரம், மற்றும் கைப்பற்றப்பட்ட பொருட்கள் முழு பட்டியல் நாளை வெளியிடப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தி.மு.க. கூட்டணிக்கு என்னை இழுக்கவே இந்த சோதனை: விஜயகாந்த் சொல்கிறார்

சென்னை, ஜன. 24-

சென்னை சாலிகிராமத்தில் உள்ள நடிகர் விஜயகாந்தின் வீடு, திருமணமண்டபம், மதுரையில் உள்ள அவருக்குச் சொந்தமான ரைஸ்மில் ஆகியவற்றில் வருமான வரித்துறையினர் நேற்று ஒரே நேரத்தில் அதிரடியாக சோதனை மேற்கொண்டனர்.

இதேபோல் அவருடைய உறவினர்களின் வீடுகள், அலு வலகங்கள், கட்சி நிர்வாகிகள் வீட்டிலும் சோதனை நடந்தது.

வருமானவரிச் சோதனை குறித்து நடிகர் விஜயகாந்த் நிருபர்களிடம் கூறியதாவது:-

இந்த வருமான வரிச் சோதனை அரசியல் உள் நோக்கம் கொண்டது. என் வீட்டில் இருந்து எந்த ஆவணங் களும் கைப்பற்றப்படவில்லை.

அரசியல் காரணங்களுக் காக இந்த சோதனை நடை பெறவில்லை என்று கூறியதற் காக ஆளும் கட்சியினரின் சிலரது வீடுகளிலும் சோதனை நடத்தி உள்ளனர். எல்லாவற்றையும் மக்கள் கவனித்துக் கொண்டு தான் இருக்கிறாகள்.

முதல்-அமைச்சர் கருணாநிதி இவ்வளவு தரம் தாழ்ந்து நடந்து கொள்வார் என்று நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை. நான் முறையாக வருமான வரி செலுத்தி வருகிறேன்.

எங்கள் கட்சியை தி.மு.க. கூட்டணிக்கு இழுப்பதற்கே இந்த வருமான வரி சோதனை நடைபெற்றுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள பெரிய கட்சிகளுடன் நாங்கள் கூட்டணி வைத்துக் கொள்ள மாட்டோம். எங்கள் கட்சி தனித்தே போட்டியிடும்.

மேற்கண்டவாறு அவர் கூறினார்.

விஜயகாந்த் வீட்டில் வருமான வரி சோதனை: 12 இடங்களில் அதிரடி வேட்டை

சென்னை, ஜன. 23-

நடிகரும், தே.மு.தி.க. தலை வருமான விஜயகாந்த் வீடு சென்னை சாலி கிராமத்தில் உள்ளது. இங்கு அவரது
அலுவலகமும் செயல்பட்டு வருகிறது.

இன்று காலை 8 மணிக்கு வருமான வரித்துறை அதிகாரி கள் விஜயகாந்த்தின் வீட் டிலும், அலுவலகத்திலும் அதிரடியாக புகுந்து சோதனை நடத்தினார்கள்.

வீட்டில் உள்ள ஒவ்வொரு அறையாக சென்று சோதனை நடத்தினார்கள். வீட்டில் இருந்தவர்களிடமும் விசா ரணை நடத்தினார்கள்.

இதே போல் சாலி கிராமத் தில் உள்ள விஜயகாந்தின் மைத்துனரும், பட அதிபரு மான சுதீஷ் வீட்டிலும்
அலுவலகத்திலும் வருமான வரித்துறை அதிகாரிகள் புகுந்து திடீர் சோதனை நடத்தினார்கள்.

100 அடி ரோட்டில் உள்ள சுதீசுக்கு சொந்தமான `லீ கிளப்’ என்ற கேளிக்கை விடுதியிலும் வருமான வரி சோதனை நடந்தது.

ஒவ்வொரு இடத்திலும் வருமான அதிகாரிகள் குழு குழுவாக சென்று ஒரே நேரத்தில் சோதனை நடத்தினார்கள். அப்போது உள்ளே இருந்தவர்கள் வெளி யில் செல்ல அனுமதிக்கப் படவில்லை. சோதனை நடந்த போது வீடு அலுவலகங்கள் முன்பு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

நடிகர் விஜயகாந்த் கடந்த ஆண்டு அரசியலில் குதித்து தே.மு.தி.க. என்ற கட்சி தொ டங்கினார். அவரது கட்சி சட்டசபை தேர்தலில் போட்டி யிட்டது. இதில் விஜயகாந்த் வெற்றி பெற்று எம்.எல்.ஏ. ஆனார். அவரது கட்சி கணிச மான ஓட்டுக்களை பிரித்தது.

அதன் பிறகு நடந்த உள் ளாட்சி தேர்தலிலும் தே.மு. தி.க. போட்டியிட்டது. முல்லைப் பெரியாறு அணை பிரச்சினைக்காக விஜயகாந்த் உண்ணாவிரதம் இருந்தார்.

விஜயகாந்துக்கு சொந்த மான திருமண மண்டபம் கோயம்பேட்டில் உள்ளது. மேம் பாலம் கட்டுவதற்காக அவரது கல்யாண மண்டபத்தின் ஒரு பகுதி இடிக்கப்பட உள்ளது. இதை எதிர்த்து அவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்த நிலையில் விஜயகாந் தின் வீடு, அலுவலகம், அவரது மைத்துனர் வீடு, அலு வலகத்தில் வருமான
வரித்துறை சோதனை நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை புறநகர்ப் பகுதிகளில் உள்ள சில தனி யார் கல்லூரிகளிலும் இன்று வருமான வரி சோதனை நடந்தது. பழைய மகாபலிபுரம் ரோட்டில் ஜேப்பியாருக்கு சொந்தமான சத்யபாமா என்ஜினீயரிங் கல்லூரி உள் ளது. அதே பகுதியில் அருகில் ஜேப்பியார் வீடு இருக்கிறது. அந்த வீடு மற்றும் கல்லூரியில் சோதனை நடந்தது.

திருநின்றவூரில் உள்ள ஜெயா என்ஜினீயரிங் கல்லூரி யிலும் வருமான வரித்துறை யினர் புகுந்து சோதனை நடத்தினார்கள்.

கோவை மாவட்டம் உடுமலைப்பேட்டையில் புரபஷனல் கொரியர் நிறு வனத்தின் கோவை ஏரியா நிர்வாகி கணேசன் என்பவரது வீடு-அலுவலகம் உள்ளது. அங்கும் வருமான வரி சோதனை நடந்தது.

இவர் தே.மு.தி.க. பிரமுகர் ஆவார். சென்னையில் இருந்து சென்ற வருமான வரித்துறை அதிகாரிகள் இங்கு சோதனை மேற்கொண்டார்கள்.

தமிழ்நாடு முழுவதும் மொத் தம் 9 இடங்களில் அதிரடி சோதனை நடந்தது. 400க்கும் மேற்பட்ட அதிகாரிகள் 10 குழுக்களாக பிரிந்து ஒரே நேரத்தில் சோதனை நடத்தினார்கள்.

தொடர்ந்து சோதனை நடந்து கொண்டு இருக்கிறது. இதன் முடிவில்தான் எதுவும் சிக்கியதாப என்பது தெரிய வரும்.

Posted in ADMK, AIADMK, Allegations, Andal Azhagar College, Andal Azhagar Kalyana Mandapam, anti-tax, assembly polls, Chennai, Cinema, Coimbatore, DMDK, fraud, Ganesh, Ganesh Kumar, Income Tax, IT, Jaya Engineering College, Jeppiar Group of Educational Institutions, Jeppiyaar, Kanakraj, Leaders, Madras, Madurai, Medical University, Murali, O Paneerselvam, panruti ramachandran, political vendetta, Politics, self-financing college, Tamil Actors, Tamil Nadu, tax evasion, Udumalpet, Vijaiganth, Vijaikanth, Vijayaganth, Vijayakanth, Vijayganth, vijaykanth | Leave a Comment »

Inclusion of the Tamil Nadu Reservation Act in the IX Schedule is unconstitutional: KM VIjayan

Posted by Snapjudge மேல் நவம்பர் 1, 2006

தமிழக இடஒதுக்கீடு சட்டத்தை 9-வது அட்டவணையில் சேர்த்தது சட்டவிரோதம்: உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞர் விஜயன் வாதம்

புதுதில்லி, நவ. 1: தமிழக இட ஒதுக்கீடு சட்டத்தை, நீதிமன்ற ஆய்வுக்கு உட்படுத்தாத வகையில், அரசியல் சட்டத்தின் 9-வது அட்டவணையில் சேர்த்தது சட்டவிரோதம் என்று உச்சநீதிமன்ற 9 நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் முன்பு வாதிட்டார் மூத்த வழக்கறிஞர் கே.எம். விஜயன்.

சட்டங்களை இயற்றி அவற்றை 9-வது அட்டவணையில் சேர்க்க நாடாளுமன்றத்துக்கு உள்ள அதிகாரங்கள் குறித்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஒய்.கே. சபர்வால் தலைமையிலான 9 நீதிபதிகள் பெஞ்ச், திங்கள்கிழமை முதல் விசாரித்து வருகிறது. தமிழ்நாடு இட ஒதுக்கீடு சட்டம் உள்பட பல்வேறு மாநில சட்டங்களை இதில் சேர்த்தது குறித்தும் நீதிமன்றம் விசாரிக்க உள்ளது.

ஒரு சட்டம் இயற்றப்பட்டு, அதை 9-வது அட்டவணையில் சேர்த்து விட்டால், அது நீதிமன்ற ஆய்வுக்கு அப்பாற்பட்டது என்ற பாதுகாப்பைப் பெற்று விடுகிறது.

மூத்த வழக்கறிஞர் ஃபாலி நாரிமனை அடுத்து, “வாய்ஸ்’ என்ற நுகர்வோர் அமைப்பின் சார்பில் செவ்வாய்க்கிழமை வாதிட்ட விஜயன், கேசவானந்த் பாரதி வழக்கில் 1973-ம் ஆண்டு நீதிமன்றத்துக்குப் பிறகு தமிழ்நாடு இட ஒதுக்கீடு சட்டம் 1994-ம் ஆண்டு 9-வது அட்டவணையில் சேர்க்கப்பட்டதால், அது நீதிமன்ற ஆய்வுக்கு அப்பாற்பட்டதாக இருக்க முடியாது என்றார்.

அரசியல் சட்டத்தின் பிரிவு 31 (ஏ)-ன் கீழ் நிறைவேற்றப்பட்ட சட்டங்களைத் தவிர, மற்ற சட்டங்களை 9-வது அட்டவணையில் சேர்க்க முடியாது. ஆனால், தமிழக இட ஒதுக்கீடு சட்டம் 31 (ஏ)-வின் கீழ் நிறைவேற்றப்படவில்லை என்று அவர் குறிப்பிட்டார்.

எழுத்து மூலம் நீதிமன்றத்தில் அளித்த மனுவில், 9-வது அட்டவணை தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டிருப்பதாகக் கூறியுள்ளார். 94 சதம் மக்கள் இட ஒதுக்கீடு பிரிவைச் சேர்ந்தவர்கள் என்று அறிவித்துவிட்ட பிறகு, இட ஒதுக்கீடு அர்த்தமற்றதாகிவிட்டது. தமிழக இட ஒதுக்கீடு சட்டம், அரசியல் சட்டத்துக்கு முரணானது என்றும், அதை அமல்படுத்த அனுமதிக்கக் கூடாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Posted in Constitution, Fali Nariman, fraud, Harish Salve, judicial review, Keshavanand Bharti, KM Vijayan, Ninth Schedule, Reservation Act, Supreme Court, Tamil Nadu, Voice | 1 Comment »