![]() |
![]() |
புதிய கொடிகளின் பின்னணியில் பழைய கொடி |
இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்குத் தனித்தனியான கொடிகள்
இலங்கை உயர் நீதிமன்ற உத்தரவை அடுத்து தனித்தனியாகப் பிரிக்கப்பட்ட வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு தனித்தனிக் கொடிகள் உருவாக்கப்பட்டு இன்று திருகோணமலையில் உள்ள ஆளுனர் பணிமனையில் அவை ஏற்றிவைக்கப்பட்டன.
இலங்கையின் 35 வது குடியரசு தினமான இன்று திருகோணமலையில் கிழக்கு மாகாணத்துக்கான ஆளுனரும் வடக்கு மாகாணத்துக்கான பதில் ஆளுனருமான மொஹான் விஜேவிக்கிரம அவர்களின் அலுவலகத்தில் நடந்த சிறப்பு நிகழ்வு ஒன்றிலேயே இந்தக் கொடிகள் தனித்தனியாக ஏற்றிவைக்கப்பட்டன.
![]() |
வட மாகாணக் கொடி |
முன்னைய இணைந்த வடகிழக்கு மாகாணத்தின் கொடியில் யாழ் மற்றும் மீன் சின்னம் ஆகியன இடம்பெற்றிருந்தன.
ஆனால் தற்போது வடமாகாணத்துக்கான கொடியில் சூரியன் சின்னமும், மற்றும் கிழக்கு மாகாணத்துக்கான கொடியில் கழுகு, மீன் மற்றும் சிங்கம் ஆகியனவும் இடம்பெற்றுள்ளன.
![]() |
கிழக்கு மாகாணக் கொடி |
வடக்கு கிழக்கு இணைப்பை உடைத்து அதனை நிரந்தமாக்கும் நோக்கிலேயே இந்தக் கொடிகள் அவசரமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக கூறுகிறார் இலங்கையில் 13வது அரசியல் சட்டத்திருத்தம் நிறைவேற்றப்பட்ட பின்னர் உருவான ஒன்றிணைந்த வடகிழக்கு மாகாண சபையின் முதல்வருக்கு செயலராக பணியாற்றியவரும், அப்போது உருவாக்கப்பட்ட வடகிழக்கு மாகாண கொடியை வடிவமைத்ததாகக் கூறுபவருமான, டாக்டர் விக்னேஸ்வரன்.