Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Fear’ Category

Red cross questions Doctor for treating HIV+ patients: Deivanayagam – President, Health India Foundation

Posted by Snapjudge மேல் ஜனவரி 9, 2008

எய்ட்ஸ் நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிப்பதா?: டாக்டருக்கு செஞ்சிலுவைச் சங்கம் நோட்டீஸ்

ஜே. ரங்கராஜன்

சென்னை, ஜன. 8: எச்ஐவி, எய்ட்ஸ் நோயாளிகளுக்குச் சிகிச்சை அளித்து வரும் டாக்டரின் கிளினிக்கை உரிய காரணம் எதுவும் இன்றி மூடுமாறு இந்திய செஞ்சிலுவைச் சங்க தமிழ்நாடு கிளை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

சென்னை மாண்டியத் சாலையில் உள்ள இந்திய செஞ்சிலுவைச் சங்க தமிழகக் கிளை வளாகத்தில் நெஞ்சக நோய் மருத்துவ நிபுணரும் இந்திய நலவாழ்வு நல்லறம் (“ஹெல்த் இந்தியா ஃபவுண்டேஷன்’) அமைப்பின் தலைவருமான டாக்டர் செ. நெ. தெய்வநாயகம் சிறிய புற நோயாளிகள் சிகிச்சைப் பிரிவை 2002-ம் ஆண்டு முதல் நடத்தி வருகிறார்.

அரசுப் பணியில் 30 ஆண்டுகள் அனுபவம் உள்ள டாக்டர் செ.நெ.தெய்வநாயகம், எச்ஐவி நோயாளிகள் உள்பட இதுவரை மொத்தம் 6,045 நோயாளிகளுக்கு இந்த புற நோயாளிகள் சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை அளித்துள்ளார். மொத்த நோயாளிகளில் 3,000 பேர் எச்ஐவி நோயாளிகள். திங்கள், புதன், வெள்ளி ஆகிய மூன்று தினங்கள் காலை 7 மணி முதல் 10 மணி வரை இந்த இடத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சிறப்பு அம்சங்கள் என்ன?

இந்த கிளினிக்கில் மருத்துவ ஆலோசனைக் கட்டணம் வசூலிக்கப்படுவதில்லை. பதிவுக் கட்டணமாக ரூ.50 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு நோயாளி அளிக்கும் ரூ.50 பதிவுக் கட்டணத்திலிருந்து, ரூ.10-ஐ செஞ்சிலுவைச் சங்கத்துக்கு வாடகையாக அளித்து வந்தனர்.

அலோபதி – சித்த மருத்துவ கூட்டு சிகிச்சை முறையில் இங்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதனால் மீதமுள்ள கட்டணத்தில் இரண்டு சித்த மருத்துவர்களுக்கு மாதம் தலா ரூ,.8,000, ரூ.5,000 சம்பளம் அளிக்கப்பட்டு வருகிறது. அலோபதி மருத்துவ நிபுணரான செ.நெ.தெய்வநாயகம், சித்த மருத்துவ நிபுணர்களான ஜி.சிவராமன், தெ. வேலாயுதம் ஆகியோர் ஊதியம் பெறாமல் நோயாளிகளுக்குச் சிகிச்சை அளித்து வந்தனர்.

திடீர் நோட்டீஸ்:

இந் நிலையில் கடந்த ஜன.2-ம் தேதியன்று இந்திய செஞ்சிலுவைச் சங்க தமிழகக் கிளையின் தலைவராக உள்ள டாக்டர் விமலா ராமலிங்கத்திடமிருந்து அவரது செயலர் மூலம் டாக்டர் தெய்வநாயகத்துக்கு நோட்டீஸ் வந்துள்ளது.

“”அமெரிக்க செஞ்சிலுவைச் சங்கம், இத்தாலிய செஞ்சிலுவைச் சங்கம், ஜெர்மனி செஞ்சிலுவைச் சங்கம், ஸ்வீடன் செஞ்சிலுவைச் சங்கம், இங்கிலாந்து செஞ்சிலுவைச் சங்கம், இந்திய செஞ்சிலுவைச் சங்கம் உள்ளிட்டவை நிதியுதவி செய்யும் திட்டங்களைச் செயல்படுத்த போதிய இடம் இல்லாததால் உங்களது இடத்தை புதன்கிழமை (9.1.2008) முதல் காலி செய்து விடுங்கள்” என்று அவர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

ஆளுநர், முதல்வருக்கு பேக்ஸ்:

இதையடுத்து ஆளுநரும் இந்திய செஞ்சிலுவைச் சங்க தமிழகக் கிளையின் தலைமை காப்பாளருமான பர்னாலா, முதல்வர் கருணாநிதி ஆகியோருக்கு டாக்டர் தெய்வநாயகம் பேக்ஸ் அனுப்பியுள்ளார்.

“இறக்கும் நிலையில் உள்ள எச்ஐவி நோயாளிகளுக்கு தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் செஞ்சிலுவைச் சங்கம் விடுதி நடத்துகிறது; தென்னாப்பிரிக்கா கேப்டவுனில் குழந்தை எச்ஐவி நோயாளிகளுக்கு செஞ்சிலுவைச் சங்கம் மருத்துவமனை நடத்துகிறது. இந் நிலையில் தமிழக செஞ்சிலுவைச் சங்கம் செய்ய வேண்டிய பணியைச் செய்துவரும் “ஹெல்த் இந்தியா பவுண்டேஷன்’ சிகிச்சைப் பிரிவு மூடும் நடவடிக்கையை உடனடியாக தடுத்து நிறுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன்” என்று அந்த பேக்ஸ் செய்தியில் டாக்டர் தெய்வநாயகம் கேட்டுக் கொண்டுள்ளார்.

Posted in AIDS, Allegations, Deivanayagam, Deivanayangam, Deiyvanayagam, Dheivanayagam, Dheiyvanayagam, Doctor, Fear, Health India Foundation, HIV, Hospital, Law, medical, Order, patients, Red Cross, Theivanayagam, Theivanayangam, Theiyvanayagam, Treatment | Leave a Comment »

‘The Chennai Silks’: Rs 40 lakh sari from Tamil Nadu flaunts Ravi Varma & seeks entry for Guiness record

Posted by Snapjudge மேல் நவம்பர் 27, 2007

முந்தைய பதிவு: புதுமை பூக்கும் புடவைகள்

Vivaha Chennai Silks Saris Saree Rich  Formal Wear


சென்னை சில்க்ஸ் அறிமுகம்
ரூ.40 லட்சம் மதிப்புள்ள பட்டுச்சேலை
தங்கம், வைரம், முத்து, பவளம் உள்ளிட்ட நவரத்தினங்களால் ஆனது

சென்னை, நவ.27-தங்கம், வைரம், முத்து, பவளம், மாணிக்கம், மரகதம் உள்ளிட்ட நவரத்தினங்களால் தயாரிக்கப்பட்ட ரூ.40 லட்சம் மதிப்புள்ள பட்டுச்சேலையை செனëனை சில்க்ஸ் நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது.உலகப்புகழ் பட்டுசேலை

suhasini_chennai_silks_silk_sarees_gold_diamond_pearls_gems_40_lakhs_sari.jpgதமிழ்நாட்டில் முனëனணி ஜவுளி நிறுவனங்களில் ஒன்றான தி சென்னை சில்க்ஸ் நிறுவனம் உலகம் முழுவதும் பேசப்படும் வகையில் கலைநயமிக்க, விலைமதிப்பற்ற பட்டுச்சேலையை தயாரிக்க திட்டமிட்டது. இதற்காக அந்த நிறுவனம் தனித்திறன் மிக்க நெசவாளர்களைக் கொண்டு வடிவமைத்து, நவரதëதினங்களை இணைத்து சொந்த தறியில் அழகும், கலைநயமும் மிக்க பட்டுச்சேலையை உருவாக்கி உள்ளது.

தங்கம், வைரம், பிளாட்டினம், மாணிக்கம், முத்து, பவளம், புஷ்பராகம், மரகதம் உள்ளிட்ட 12 வகையான விலை உயர்ந்த ஆபரணங்களை இணைத்து உலகப் புகழ்பெற்ற ஓவியர் ரவி வர்மாவின் 12 ஓவியங்களுடன் வடிவமைத்துள்ளனர். ஆபரணங்களை சேலையுடன் சேர்த்து நெய்திருப்பது சிறப்பு அம்சம் ஆகும்.

விலை ரூ.40 லட்சம்

51/2 மீட்டர் நீளம் கொண்ட இந்த பட்டுச்சேலையில் முந்தானை பகுதியில் இந்தியாவின் 11 மாநிலங்களைச் சேர்ந்த பெண்கள் இசைக்கருவிகளுடன் அணிவகுத்து நிற்கும் ஓவியமும் மற்ற 11 ஓவியங்களும் ஒவ்வொரு பார்டரிலும் இடம்பெற்றுள்ளன.

விலை உயர்ந்த ஆபரணங்களைக் கொண்டு நுணுக்கமாக கலைநயத்துடன் உருவாக்கப்பட்ட உலகின் முதல் பட்டுச்சேலை இது என்பது குறிப்பிடத்தக்கது. இதன் விலை ரூ.40 லட்சம் ஆகும். உலகிலேயே அதிக விலை கொண்ட பட்டுச்சேலை என்ற சிறப்பையும் இந்த சேலை பெறுகிறது. இந்த சேலையை உருவாக்க மொத்தம் 18 மாதங்கள் ஆனது.

சுகாசினி அறிமுகப்படுத்தினார்

உலகின் மிக விலை உயர்ந்த பட்டுச்சேலை, 12 விதமான உலோகங்கள் மற்றும் நவரத்தின கற்களால் தயாரிக்கப்பட்ட பட்டுச்சேலை, ஒரே பட்டு சேலையில் ரவிவர்மாவின் 11 விதமான ஓவியங்கள் இடம்பெற்ற பட்டுச்சேலை என்பதற்காக கின்னஸ் சாதனைக்கு இந்த பட்டுசேலை பரிந்துரைக்கப்பட்டு உள்ளது. சென்னையில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் நடிகை சுகாசினி இந்த பட்டுசேலையை அறிமுகப்படுத்தினார்.

அப்போது பேசிய சென்னை சில்க்ஸ் நிறுவனத்தின் இயக்குனர்களில் ஒருவரான விநாயகம், “உலகம் முழுவதும் பேசப்படும் வகையில் கலைநயமிக்க பட்டுசேலையை தயாரிக்க வேண்டும் என்பதற்காகவும், நெசவு குடும்பத்தைச் சேர்ந்த நாங்கள் நெசவாளர்களுக்காக ஏதாவது செய்ய வேண்டும் என்பதற்காகவும் இந்த முயற்சியில் இறங்கினோம்.

இந்த சேலையை உருவாக்கியவர்கள் வெறும் கூலிக்காக வேலை செய்யவில்லை. 3 தலைமுறையாக நெசவு தொழில் செய்து வரும் அவர்கள் அர்ப்பண உணர்வுடன் அதிக அக்கறை எடுத்து இந்த முயற்சியில் ஈடுபட்டார்கள். அவர்களது மனோதைரியத்திற்கும், நம்பிக்கைக்கும் புதிய ஊக்கம் கிடைத்து இருக்கிறது” என்று கூறினார்.

சேலை அறிமுக விழா நிகழ்ச்சியில்

  • சென்னை சில்க்ஸ் இயக்குனர்கள் மாணிக்கம்,
  • ஆறுமுகம்
  • நந்தகோபால்,
  • சிவலிங்கம்,
  • சந்திரன் மற்றும் அவர்கள் குடும்பத்தினர்,
  • கவிஞர் வைரமுத்து,
  • நடிகை ஷோபனா,
  • நடிகர் ஜீவா,
  • பின்னணி பாடகி பி.சுசீலா,
  • கர்நாடக இசை பாடகி நித்யஸ்ரீ மகாதேவன்,
  • டாக்டர் கமலா செல்வராஜ், மத்திய
  • பட்டு வாரிய முன்னாள் இயக்குனர் டி.எச்.சோமசேகர்,
  • ஓவியர் மணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கர்நாடக அரசுத் துறை நிறுவனமான மைசூர் சில்க் நிறுவனம்
வடிவமைத்துள்ள பட்டுச் சேலையை உடுத்திப் பார்க்கும்
இளம்பெண். இச்சேலையின் விலை ரூ. 1.5 லட்சமாகும்.
பெங்களூர் இன்பான்டரி சாலையில் உள்ள கர்நாடக நிர்வாக
அதிகாரிகள் சங்கத்தில் வியாழக்கிழமை துவங்கிய
மைசூர் சில்க் சேலைக் கண்காட்சியில் இது இடம் பெற்றுள்ளதுHost unlimited photos at slide.com for FREE!

Posted in Aarani, aesthetics, Art, Banaras, Banares, Benaras, Benares, Bengal, blouse, Border, Budget, CAD, cat's eye, Chennai, clothing, coral, Cotton, Deepam, Deepavali, Deepavalli, Design, designers, Dharmavaram, Diamond, Diwali, Dress, embellishments, embroidery, emerald, Evening, Events, Expensive, Exports, Fabric, Fear, Feast, Festival, Formals, Formalwear, Garments, Gems, girls, Gold, Gowns, Guiness, Handicrafts, Heritage, Individual, Instruments, Jari, Jarigai, Jeeva, Jewels, Kala Niketan, KANCHEEPURAM, Kanchi, Kanchipuram, Kanchipuram Silk, Kanchivaram, Kanjeepuram, Kanjeevaram, Kanjipuram, Kanjivaram, Kasi, Kumaran, Ladies, Lady, Laundry, Limca, Marriages, music, musical, Musicians, Mylai, Mylapore, Mysore, Nalli, Nithashree, Nithashri, Nithyashree, Nithyashri, Nithyasree, Nithyasri, nylon, ornate, P Suseela, P Susheela, P Sushila, P Susila, Painter, Paintings, pallu, Party, Partywear, pearl, Platinum, Pochampalli, Polimer, polycot, polycotton, Polymer, Pothys, precious, Radha, Rasi, Ravi Varma, RaviVarma, RaviVerma, Receptions, Record, Records, Rich, RMKV, Roopkala, ruby, sapphire, Saree, Sarees, Sari, Saris, She, Shobana, Shobhana, Silks, silver, Skirt, stones, Sugasini, Suhasini, Sukasini, Synthetic, Tamil Nadu, TamilNadu, terrycot, terrycotton, Textiles, Thread, TNagar, topaz, Tussar, Varanasi, Vijayalakshmi, Wash, Weddings, Woman, Women, yellow sapphire, zari, Zarigai, Zhari | Leave a Comment »

Passions Revive Over Spanish Civil War: Vatican Beatifying 498 & Parliament passes law condemning Franco

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 31, 2007

பிரான்சிஸ்கோ ஆட்சியைக் கண்டிக்கும் தீர்மானம்

பிரான்சிஸ்கோ பிரான்கோ
பிரான்சிஸ்கோ பிரான்கோ

ஸ்பெயினில் கடந்த 1975ஆம் ஆண்டு முடிவுக்கு வந்த ராணுவ தளபதி பிரான்சிஸ்கோ பிரான்கோவின் நாற்பது ஆண்டுகால ஆட்சியை அதிகாரபூர்வமாக கண்டிக்கும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சட்டம் ஒன்றை ஸ்பெயின் நாடாளுமன்றம் நிறைவேற்றியுள்ளது.

பிரான்கோவின் பாஸிச ஆட்சி என்று குறிப்பிட்டு கண்டிப்பதோடு 1936ஆம் ஆண்டுக்கும், 1939ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தைச் சேர்ந்த கூட்டுப் புதைகுழிகள் தோண்டப்படுவதற்கான முயற்சிகளுக்கு பிராந்திய நிர்வாகங்கள் நிதி வழங்க வேண்டும் என்று உத்தரவிடும் மசோதாவை நாடாளுமன்றம் ஆதரித்து வாக்களித்துள்ளது.

ஜெனரல் பிரான்கோவின் ஆட்சியை குறிக்கும் வகையிலான சிலைகள், பதாகைகள் மற்றும் சின்னங்கள் அனைத்தும் பொது கட்டிடங்களிலுருந்து அகற்றப்படவேண்டும் என்றும் இந்த உத்தரவு கூறுகின்றது.

ஆறிய வடுக்களை மீண்டும் கிளறிவிட்டு சமுதாயத்தை பிளவுபடுத்த பார்க்கிறது சோஷலிஸ அரசு என்று பழமைவாத எதிர்கட்சி குற்றம்சாட்டியுள்ளது.

Posted in Angel Acebes, Angels, Assassin, Assassinations, Atrocities, atrocity, Autocracy, autocrat, Autocratic, Aznar, beatification, Beatify, bishop, Catholic, Catholicsm, CCP, Ceremony, Christ, Christian, Christianity, Church, Civil, clergy, Condemn, Conservative, Conservatives, Coup, Criminal, Cruz Laplana y Laguna, Dictator, Dictators, Dictatorship, executed, executions, Fascism, fascist, Fear, Francisco, Francisco Franco, Franco, Gen. Francisco Franco, General, Germans, Germany, graves, inequality, Jose Maria Aznar, Judges, Jury, Justice, Laguna, Law, Left, legislation, massacre, Military, Militia, NCCP, Oppression, Order, parliament, Passions, PM, Popular Party, Power, President, Rebellion, Regime, Religion, repression, Republicans, Right, Ruler, Russia, sainthood, Saints, Senate, Socialism, Socialist, Soviets, Spain, Spanish, USSR, Vatican, victims, War, Wealth, Zapatero | Leave a Comment »

Venkatesh’s Vaathiyar movie plot was stolen from me – Rajkumar

Posted by Snapjudge மேல் நவம்பர் 15, 2006

வாத்தியார் படகதை திருட்டு: போலீஸ் கமிஷனரிடம் டைரக்டர் புகார் 

வடபழனி அழகர்பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது33). இவர் போலீஸ் கமிஷனரிடம் புகார் மனு கொடுத்தார். அதில் கூறி இருப்பதாவது

டைரக்டர் ஏ.ஆர்முருகதாசிடம் நான் இணை இயக்குனராக பணியாற்றியுள்ளேன். வாத்தியார் படத்தின் கதையை ஏற்கனவே உருவாக்கி விஜய், விக்ரம், சூர்யாவை சந்தித்து சொல்லியுள்ளேன். தற்போது அந்த கதை படமாக வெளிவந்துள்ளது. எனவே இதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Posted in Arjun, Copyright, Fear, Imman, Mallika Kapoor, Rajkumar, Screenplay, Steal, Story, Tamil Cinema, Tamil Movie, Vaathiyaar, Vaathiyar, Vathiyar | Leave a Comment »

Cho S Ramasamy, Maalan, Ira Sezhiyan – Meeting on Civic Polls : Today

Posted by Snapjudge மேல் நவம்பர் 14, 2006

உள்ளாட்சித் தேர்தல் குறித்த அலசல்: ஒத்திவைக்கப்பட்ட கூட்டம் இன்று நடைபெறும்

சென்னை, நவ. 15: உள்ளாட்சித் தேர்தல் குறித்து அலசும் பொதுக் கூட்டம் சென்னையில் புதன்கிழமை நடைபெறுகிறது.

  • ராஜாஜி பொது விவகார மையம்,
  • மக்கள் உரிமை மன்றம்

ஆகியவை இணைந்து ஏற்பாடு செய்த இக்கூட்டம் சில வாரங்களுக்கு முன் சென்னை மியூசிக் அகாதெமியில் நடைபெறுவதாக இருந்தது.

  • பத்திரிகையாளர் சோ,
  • நாடாளுமன்றவாதி இரா.செழியன்,
  • முன்னாள் போலீஸ் அதிகாரி வி.ஆர். லட்சுமிநாராயணன்,
  • ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி பி.எஸ். ராகவன் ஆகியோர் பங்கேற்பதாக அறிவிக்கப்பட்டது.

இக்கூட்டம் திடீரென்று ரத்து செய்யப்பட்டது. போலீசார் அனுமதி தரவில்லை என்று சில தரப்பினர் கூறினர்.

ஆனால், போலீஸ் அனுமதி மறுக்கவில்லை என்றும் அமைப்பாளர்களே கூட்டத்தை ரத்து செய்துவிட்டனர் என்றும் காவல் துறை மறுத்தது. எனினும், கூட்டம் நடத்த அனுமதி கோரி, மீண்டும் விண்ணப்பித்தால் அனுமதி அளிக்கப்படும் என்றும் காவல் துறை அறிவித்தது.

தற்போது அக்கூட்டம் மயிலாப்பூர் கிழக்கு மாட வீதியில் பாரதீய வித்யா பவன் அரங்கில் புதன்கிழமை மாலை 6 மணியளவில் நடைபெறுகிறது.

இக்கூட்டத்தில் இரா.செழியன், பி.எஸ். ராகவன், சத்தியமூர்த்தி அறக்கட்டளைத் தலைமைக் காப்பாளர் லட்சுமி கிருஷ்ணமூர்த்தி, பத்திரிகையாளர் மாலன் ஆகியோர் பேசுகிறார்கள்.

Posted in Ban, Bharatiya Vidya Bhawan, Cho S Ramasamy, Civic Polls, Era Sezhiyan, Fear, Iraa Sezhiyan, Lakshmi Krishnamurthy, Malan, Meeting, Police Order, PS Raghavan | Leave a Comment »

Father – Pap Perspectives (Net Forward)

Posted by Snapjudge மேல் நவம்பர் 14, 2006

பிள்ளைகளின் பார்வையில் அப்பா!

4 வயதில் – எங்கப்பா ரொம்பப் பெரிய ஆள்.

6 வயதில் – எங்கப்பாவுக்கு எல்லாம் தெரியும்.

10 வயதில் – அப்பா நல்லவர்; ஆனால் சிடுமூஞ்சி.

14 வயதில் – எப்பவும் எதிலும் குறைகண்டுபிடிக்கும் ஆசாமி.

16 வயதில் – கால நடப்பைப் புரிந்து கொள்ளாதவர்.

18 வயதில் – சரியான எடக்கு மடக்குப் பேர்வழி.

20 வயதில் – இவரோட பெரும் தொல்லை; எங்கம்மா எப்படி இந்த ஆளோட குப்பை கொட்றாங்க?

30 வயதில் – என் பையனைக் கட்டுப்படுத்தறதே கஷ்டமா இருக்கு. அவன் வயசில எங்கப்பான்னா எனக்குப் பயம்.

40 வயதில் – எங்கப்பா எங்களைக் கட்டுப்பாடா வளர்த்தார். நானும் அப்பிடித்தான் என் பிள்ளைகளை வளர்க்கப் போறேன்.

50 வயதில் – அப்பா எங்களையெல்லாம் வளர்க்க எவ்வளவு கஷ்டப்பட்டார்? எனக்கோ என் ஒரு பிள்ளையைக் கட்டுப்படுத்த முடியலை.

55 வயதில் – எங்கப்பா எவ்வளவு திட்டமிட்டு எங்களுக்காக எல்லாத்தையும் செய்திருக்கிறார். அவரை மாதிரி ஒருத்தர் இருக்க முடியாது.

60 வயதில் – எங்கப்பா ரொம்ப பெரிய ஆள்.

-“சத்துணவு ஊழியர்’ இதழிலிருந்து.

Posted in Comedy, Email, Father, Fatherhood, Fear, Fun, Jokes, Junk, Kid, Moral, Net, Papa, Sathunavu Oozhiyar, SMS, Tamil, Thought, Translation | Leave a Comment »

Somali Parliament Leader Meets With Islamist Leaders

Posted by Snapjudge மேல் நவம்பர் 6, 2006

சோமாலிய கிளர்ச்சிக்காரர்களுடன் சமரசத்துக்கு முயற்சி

ஷரிப் ஷேக் அடன்
ஷரிப் ஷேக் அடன்

சோமாலியாவின் இடைக்கால நாடாளுமன்றத்தின் சபாநாயகரான ஷரிப் ஷேக் அடன், இஸ்லாமிய நீதிமன்றங்களின் ஒன்றியத்தின் தலைவர்களுடன் பேச்சுவார்த்தைகளை நடத்த தலைநகர் மொகடிஷுவிற்கு சென்றுள்ளார்.

இஸ்லாமிய நீதிமன்றங்களின் ஆயுதக்குழுக்கள் நகரத்தினை தங்களது கட்டுப்பாட்டிற்குள் வைத்துள்ளன.

அமைதி ஏற்படுவதற்காகவும், சோமாலியர்கள் ஒன்றிணைவதற்காகவும், தான் தலைநகர் சென்றுள்ளதாக அடன் கூறுகின்றார்.

தலைநகர் மொகடிஷு கடந்த ஜுலை மாதத்தில் இஸ்லாமிய படைகளின் கட்டுப்பாட்டிற்குள் சென்ற பின்னர், மொகடிசஷுவிற்கு செல்லும், அரசாங்கத்தின் மூத்த அதிகாரி இவர்.

இஸ்லாமிய படைகள் தலைநகரின் கட்டுப்பாட்டினை எடுத்து கொண்டதினை அடுத்து, பதினைந்து ஆண்டுகளாக தலைநகரை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்த ஆயுதக்குழுக்கள் நகரத்தினை விட்டு வெளியேறின.

ஆனால் சபாநாயகர் நடத்திவரும் பேச்சுவார்த்தைக்கு அரசாங்கத்தின் இதர உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இந்தப் பேச்சுவார்த்தையில் ஒப்பந்தம் ஏதாவது ஏற்பட்டால், நாடாளுமன்றத்தின் பல உறுப்பினர்கள் இஸ்லாமிய நீதிமன்றங்களுக்கு ஆதரவாக செயற்பட கூடும் என்றும், இதனால் சர்வதேச சமூகத்தினால் அங்கிகரிக்கப்பட்ட அரசாங்கம் கலைவதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் பிபிசி செய்தியாளர் ஒருவர் தெரிவிக்கின்றார்.

Posted in Fear, Islam, Mogadishu, Negotiation, parliament, Sharif Hassan Sheikh Adan, Somalia, Speaker, Sudan, Talks | 3 Comments »

PW Botha – Apartheid-era South African president dies

Posted by Snapjudge மேல் நவம்பர் 1, 2006

மறைந்த ஜனாதிபதிக்கு மண்டேலா அஞ்சலி

செவ்வாய்க்கிழமையன்று, இறந்த, 90 வயதான முன்னாள் தென்னாப்ரிக்க அதிபர் பி.டபிள்யூ,போத்தாவிற்கு அஞ்சலி தெரிவித்து நெல்சன் மண்டேலா அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.

முன்னாள் அதிபர் போத்தா
முன்னாள் அதிபர் போத்தா

முன்னாள் அதிபர் போத்தா நிறவெறிக்கொள்கையின் ஒரு குறியீடாகவே விளங்கினார் என்றும், ஆனால், அவர் நாட்டில் ஒரு அமைதியான பேச்சுவார்த்தைமூலமான, தீர்வை நோக்கிய நடவடிக்கைகளை பின்னார் எடுத்தார் என்பதையும் நெல்சன் மண்டேலா நினைவு கூர்ந்தார்.

தேசத்தின் ஒரு முன்னாள் தலைவர் என்ற வகையில், போத்தாவுக்கு அரசரீதியான இறுதிச்சடங்குகள் பெறுவதற்கு உரிமை இருந்தது என்றாலும், அவரது குடும்பத்தினர் தனிப்பட்ட இறுதிச்சடங்கை நடத்த முடிவு செய்துவிட்டதாகத் தெரிகிறது.

போத்தா, நெல்சன் மண்டேலாவை சிறையிலிருந்து விடுதலை செய்ய மறுத்தற்காகவும், நிறவெறிக்கொள்கை அமைப்புக்கு எதிராக எழுந்த எதிர்ப்பை அடக்க செய்த முயற்சியில் தோல்விகண்டதற்காகவும், அவசர நிலைப் பிரகடனத்தைச் செய்து ஆட்சி செய்தற்காகவுமே நினைவு கூறப்படுவார் என்று பிபிசியின் தென்னாப்ரிக்கச் செய்தியாளர் கூறுகிறார்.

Posted in African National Congress, Apartheid, Fear, Great Crocodile, Johannesburg, PW Botha, South Africa, Tamil | Leave a Comment »

Bank employees to observe Bandh to protest against Outsourcing & Privatization

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 23, 2006

அவுட்சோர்சிங், தனியார்மயமாக்கலை எதிர்த்து அக். 27ல் வங்கி ஊழியர்கள் நாடு தழுவிய வேலை நிறுத்தம்

புதுதில்லி, அக். 23: வெளிப் பணி ஒப்படைப்பு(அவுட் சோர்சிங்), தனியார்மயமாக்கல் ஆகியவற்றை எதிர்த்து அக்.27ல் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்கின்றனர். ஒன்பது வங்கி ஊழியர் சங்கங்களின் தலைமை அமைப்பான வங்கி ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பு இந்த வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.

இது தொடர்பாக அக்.18ல் தலைமை தொழிலாளர் ஆணையாளருடன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததை அடுத்து இந்த வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குதல், பணியாளர்களை நியமித்தல், பென்ஷன் சலுகைகள் போன்ற தங்களது கோரிக்கைகளில் அரசு அலட்சியம் காட்டியதே இந்தப் பேச்சுவார்த்தை தோல்வி அடையக் காரணம் என வங்கி ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பு குற்றம் சாட்டியுள்ளது. இது குறித்து இந்த கூட்டமைப்பின் பொதுச் செயலர் வெங்கடாச்சலம் விடுத்துள்ள அறிக்கை:

மத்திய அரசு இந்தக் கொள்கைகளைத் தொடர்ந்து கடைப்பிடித்து வந்தால், இந்த வேலை நிறுத்தம் மேலும் தீவிரமாகும். இதனைத் தவிர்க்க, அரசு அர்த்தமுள்ள பேச்சுவார்த்தை நடத்த முன்வரவேண்டும்.

அரசு வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகளில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் இந்த வேலை நிறுத்தத்தில் கலந்துகொள்வார்கள் என்றார் வெங்கடாச்சலம்

Posted in Bandh, Bank employees, Fear, Growth, Jobs, Outsourcing, Private Enterprises, Privatization, public sector, Security, Uncertainty, unemployment | 1 Comment »