Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Fast’ Category

Prisoners observe fast in Batticalo district jail

Posted by Snapjudge மேல் நவம்பர் 17, 2007

மட்டக்களப்பு சிறைச்சாலையில் கைதிகள் உண்ணாவிரதம்

மட்டக்களப்பு சிறைச்சாலை
மட்டக்களப்பு சிறைச்சாலை

இலங்கை மட்டக்களப்பு சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் எனக் கூறப்படும் 29 பேர் தம் மீதான விசாரணையை துரிதப்படுத்த வேண்டும் அல்லது விடுதலை செய்யப்பட வேண்டும் எனக் கோரி சனிக்கிழமை காலை முதல் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

சிறைச்சாலை கூரை மேல் அமர்ந்து இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இக் கைதிகள் 2004 – 2007 ம் ஆண்டு காலப் பகுதிகளில் கைது செய்யப்பட்டவர்கள் எனக் கூறப்படுகின்றது

கைதான நாள் முதல் விசாரணைகளின்றி தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டுள்ள இக் கைதிகள் தமது கோரிக்கைகள் தொடர்பாக ஜனாதிபதி செயலக பிரதிநிதிகள், நீதிஅமைச்சர், தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள், சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் ஐ.நா. பிரதிநிதிகள் உட்பட பல்வேறு தரப்பினரை தாம் சந்தித்து பேச வேண்டும் என்றும் மற்றுமொரு கோரிக்கையை முன் வைத்துள்ளனர்

இது தொடர்பாக சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் வஜிர
விஜயகுணவர்தனவுடன் தொடர்பு கொண்ட போது இக் கைதிகளில் 4 பேர் மட்டுமே விடுதலைப் புலி சந்தேக நபர்கள் என்றும் ஏனையோர் பிற குற்றங்களுடன் தொடர்புடையவர்கள் என்றும், இவர்களை விசாரணை செய்வதா அல்லது விடுதலை செய்வதா என்பது நீதிமன்றம் தீர்மானிக்க வேண்டிய விடயம் என்றார்.

Posted in Arrest, Batticaloa, Fast, Jail, LTTE, Mattakalappu, Mattakalapu, Prison, Srilanka | Leave a Comment »

Golden Quadrilateral still has miles to go – Fast-lane highways

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 21, 2007

தமிழகத்தில் “தங்க நாற்கர” திட்டம் : ரூ.14 ஆயிரத்து 334 கோடி ஒதுக்கீடு

மதுரை : தமிழகத்தில் தங்க நாற்கரம் திட்டப்படி நான்கு வழிச்சாலை அமைக்கும் பணி ஜரூராக நடந்து வருகிறது. இத்திட்டத்துக்காக ரூ.14 ஆயிரத்து 334 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

தங்க நாற்கர சாலை திட்டம் :

தேசிய நெடுஞ்சாலை அபிவிருத்தி திட்டமானது (என்.எச்.டி.பி.) தங்க நாற்கரம் முதல் கட்டம், வடக்கு  தெற்கு மற்றும் கிழக்கு  மேற்கு இடைவழி  இரண்டாம் கட்டம் மற்றும் பிற தேசிய நெடுஞ்சாலைகள் மூன்றாம் கட்டம் ஆகியவற்றை உள்ளடக்கியது. இந்த தங்க நாற்கரம் நான்கு மற்றும் ஆறுவழிச் சாலைகள் மூலம் டில்லி  மும்பை  சென்னை  கோல்கட்டா ஆகிய பெருநகரங்களை இணைக்கின்றது. இதன் நீளம் 5,864 கி.மீட்டர். இவை ஸ்ரீ நகர்  கன்னியாகுமரி (வடக்கு  தெற்கு), சேலம்  கொச்சி மற்றும் சில்சார்  போர்பந்தரையும் (கிழக்கு  மேற்கு) இணைக்கின்றன. வடக்கு  தெற்கு மற்றும் கிழக்கு  மேற்கு இடைவழியின் நீளம் 7,300 கி.மீட்டர்.

தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலை வளர்ச்சிப் பணியில் முதற்கட்டத்தின் கீழ் நிறைவடைந்த திட்டங்கள்:

  • அத்திப்பள்ளி  ஒசூர் (என்.எச்.7) இடையே 16 கி.மீ.,
  • ஒசூர்  கிருஷ்ணகிரி (என்.எச்.7) இடையே 45 கி.மீ.,
  • கிருஷ்ணகிரி  வாணியம்பாடி இடையே 50 கி.மீ.,
  • வாணியம்பாடி  பள்ளிகொண்டா (என்.எச்.46) இடையே 46 கி.மீ.,
  • பள்ளிகொண்டா  வாலாஜாபேட்டை (என்.எச்.46) இடையே 46 கி.மீ.,
  • வாலாஜாபேட்டை  காஞ்சிபுரம் (என்.எச்.4) இடையே 36 கி.மீ.,
  • காஞ்சிபுரம்  பூவிருந்தவல்லி (என்.எச்.4) இடையே 56 கி.மீ.,
  • தடா  சென்னை (என்.எச்.5) இடையே 42 கி.மீ.,

என மொத்தம் 342 கி.மீ., நீளமுள்ள இருவழிச்சாலைகள் ரூ. ஆயிரத்து 193 கோடி மதிப்பில் நான்கு வழிச்சாலையாக மாற்றப்பட்டுள்ளது.
இரண்டாம் கட்ட செயல்பாட்டில் உள்ள திட்டங்கள்:

  • கிருஷ்ணகிரி  தொப்பூர் மலைப்பகுதி (என்.எச்.7) இடையே 63 கி.மீ.,
  • தொப்பூர் மலைப்பகுதி  தும்பிபாடி (என்.எச்.7) இடையே 17 கி.மீ.,
  • தும்பிபாடி  சேலம் (என்.எச்.7) இடையே 20 கி.மீ.,
  • சேலம்  குமாரபாளையம் (என்.எச்.47) இடையே 54 கி.மீ.,
  • குமாரபாளையம்  செங்கப்பள்ளி (என்.எச்.47) இடையே 49 கி.மீ.,
  • செங்கப்பள்ளி  கோவை (என்.எச்.47) இடையே (கேரளா எல்லை வரை) 83 கி.மீ.,
  •  சேலம்  நாமக்கல் (என்.எச்.7) இடையே 42 கி.மீ.,
  • நாமக்கல்  கரூர் (என்.எச்.7), இடையே 34 கி.மீ.,
  • கரூர்  திண்டுக்கல் (என்.எச்.7) இடையே 68 கி.மீ.,
  •  திண்டுக்கல்  சமயநல்லுõர் (என்.எச்.7) இடையே 53 கி.மீ.,
  • சமயநல்லுõர்  விருதுநகர் (என்.எச்.7) இடையே 49 கி.மீ.,
  •  விருதுநகர்  கோவில்பட்டி (என்.எச்.7) இடையே 39 கி.மீ.,
  • கோவில்பட்டி  கயத்தாறு (என்.எச்.7) இடையே 40 கி.மீ.,
  • கயத்தாறு  திருநெல்வேலி (என்.எச்.7) இடையே 43 கி.மீ.,
  •  திருநெல்வேலி  பணகுடி (என்.எச்.7) இடையே 31 கி.மீ.,

ஆகிய 722 கி.மீ., நீளமுள்ள இருவழிச்சாலைகள் ரூ.4,141 கோடி மதிப்பில் நான்கு வழிச்சாலையாக மாற்றும் பணி துவக்கப்பட்டுள்ளது.
மூன்றாம் கட்ட செயல்பாட்டில் உள்ள திட்டங்கள்:

  • திண்டுக்கல்  திருச்சி (என்.எச். 45) இடையே 80 கி.மீ.,
  • திண்டுக்கல்  பெரியகுளம்  தேனி (என்.எச்.45 விரிவாக்கம்) இடையே 73 கி.மீ.,
  • தேனி  குமுளி (என்.எச்.220) இடையே 57 கி.மீ.,
  •  மதுரை  அருப்புக்கோட்டை  துõத்துக்குடி (என்.எச்.45பி) இடையே 128 கி.மீ.,
  •  மதுரை  ராமநாதபுரம்  ராமேஸ்வரம்  தனுஷ்கோடி (என்.எச்.49) இடையே 186 கி.மீ.,
  • நாகப்பட்டினம்  தஞ்சாவூர் (என்.எச்.67) இடையே 80 கி.மீ.,
  •  தஞ்சாவூர்  திருச்சி (என்.எச்.67) இடையே 56 கி.மீ.,
  •  திருச்சி  கரூர் (என்.எச்.67) இடையே 80 கி.மீ.,
  • கோவை  மேட்டுப்பாளையம் (என்.எச்.67) இடையே 45 கி.மீ.,
  •  சேலம்  உளுந்துõர்பேட்டை (என்.எச்.68) இடையே 134 கி.மீ.,
  •  கிருஷ்ணகிரி  திருவண்ணாமலை  திண்டிவனம் (என்.எச்.66) இடையே 170 கி.மீ.,
  •  புதுச்சேரி  திண்டிவனம் (என்.எச்.66) இடையே 36 கி.மீ.,
  • கேரள எல்லை  கன்னியாகுமரி (என்.எச்.47) இடையே 70 கி.மீ.,
  •  திருத்தனி  சென்னை (என்.எச்.205) இடையே 81 கி.மீ.,
  •  திருச்சி  காரைக்குடி  ராமநாதபுரம் (என்.எச்.210) இடையே 174 கி.மீ.,

என மொத்தம் 1,450 கி.மீ., நீளமுள்ள இருவழிச்சாலைகளை சுமார் ரூ. ஒன்பதாயிரம் கோடி மதிப்பில் நான்கு வழிச்சாலைகளாக மாற்றும் பணி நடக்கிறது. இதற்காக மொத்தம் ரூ.14 ஆயிரத்து 334 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இப்பணிகளை 2010ம் ஆண்டுக்குள் முடிக்க தேசிய நெடுஞ்சாலை ஆணையம் திட்டமிட்டுள்ளது.

Posted in Auto, Bajpai, BJP, DMK, Employment, Express, Expressway, Fast, Finance, Four, GQ, Highways, National, NHAI, NHDP, Project, Roads, Roadways, Speed, Superfast, TN, Transport, Vajpai, Vajpayee, Work | 1 Comment »

Road Accidents & Traffic Deaths – Travel Safety issues

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 18, 2007

சவால்விடுக்கும் சாலை விபத்துகள்!

சா. ஜெயப்பிரகாஷ்

உலகில் ஒவ்வொரு வினாடியும் சாலை விபத்துகளில் 6 பேர் பலியாகின்றனர், அல்லது பலத்த காயமடைகின்றனர்.

2002-ல் உலகில் 12 லட்சம் மக்கள் சாலை விபத்துகளால் இறந்தனர். அவர்களில் 70 சதம் பேர் ஆண்கள். இந்தியாவில் சாலை விபத்தில் பலியாவோர் எண்ணிக்கை 2020-களில் தற்போதைய எண்ணிக்கையைவிட 147 சதம் உயரும் என்றும் கூறப்படுகிறது’. இவை உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை விடுக்கும் எச்சரிக்கை.

குடிபோதையில் வாகனம் ஓட்டுதல், அதிவேகப் பயணம், ஹெல்மெட் உள்ளிட்ட போதிய பாதுகாப்பு சாதனங்கள் இன்றி பயணம், மோசமான சாலைகள்- சாலைச் சூழல்கள், பாதுகாப்பில்லாத வாகன வடிவமைப்பு போன்றவையே சாலை விபத்துகளுக்குக் காரணங்கள்.

முடிந்தவரை விபத்துகளைத் தவிர்ப்பது, அடுத்த கட்டமாக, மரணத்தைத் தவிர்ப்பது என்று படிப்படியாகச் சிந்தித்தல் அவசியம்.

தமிழக அரசின் 2007-08 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில், சாலை விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகளைத் தடுக்க ஒருங்கிணைந்த சாலைப் பாதுகாப்புத் திட்டம் அறிவிக்கப்பட்டது.

குறிப்பாக, சாலை விபத்துகள் குறித்த விழிப்புணர்வுப் பிரசாரங்களை மேற்கொள்ள ரூ. 6 கோடி ஒதுக்கப்பட்டது. ஆனால், குறிப்பிடும்படியான, பயனுள்ள வகையிலான பிரசாரங்கள் நடந்ததாகத் தெரியவில்லை. நடந்ததாகக் கூறப்படும் சில பிரசாரங்களும் பெயரளவில் ஆங்காங்கே நடந்துள்ளன.

தற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சியைப் பயன்படுத்தி, கோர விபத்துகளைப் படம்பிடித்து குறும்படங்களாக்கி கல்லூரிகளில், திரையரங்குகளில் காட்டி, அதன்மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணிகளை அரசு மேற்கொள்ள வேண்டும்.

அந்தப் படங்களில், சாலை விதிகளை மதித்தல், குடிபோதையில் வாகனம் ஓட்டுவதன் தீமைகள், அதிவேகப் பயணத்தால் ஏற்படும் பாதிப்பு போன்றவை குறித்து மக்களுக்கு எடுத்துரைக்கலாம்.

தமிழ்நாட்டிலுள்ள எந்த அரசு மருத்துவமனையிலும் தலைக்காயத்துக்கு சவால்விட்டு சிகிச்சை அளிக்கும் நிலை இல்லை என்பதை வெளிப்படையாக ஒப்புக்கொண்டாக வேண்டும்.

தனியார் மருத்துவமனைகளில்கூட பெரும்பாலும் “சாதனை முயற்சி’ என்ற பெயரிலே இந்தச் சிகிச்சை அளிக்கப்படுகிறது. அரசு மருத்துவமனைகளில் மிகக் குறைவான எண்ணிக்கையில்தான் மூளை – நரம்பியல் நிபுணர்கள் உள்ளனர். பணிப்பளு காரணமாக இரவில் இவர்கள் யாரும் பணியில் இருப்பது சாத்தியமில்லை.

சென்னை போன்ற பெருநகரங்களிலும் இதே நிலை. மாநகரங்கள், நகரங்கள் தாண்டி, நாட்டின் பெரிய பரப்பை ஆக்கிரமித்திருக்கும் கிராமங்களில் தலைக்காயத்துக்கான உயர் சிகிச்சையை எதிர்ப்பார்ப்பதே தவறுதான்.

அரசு மருத்துவர்களுக்கு, மண்டை ஓட்டைப் பிளந்து அறுவைச் சிகிச்சை மேற்கொள்வதற்கான நவீன ஆராய்ச்சிகளை மேற்கொள்ளவும் அவற்றுக்கான வசதிகளைத் தாராளமாகச் செய்து தரவும் அரசு திட்டமிட வேண்டும்.

கொஞ்சம் கொஞ்சமாக இந்த ஆராய்ச்சித் தளத்தை விரிவுபடுத்தி பெருநகரங்களில் தலைக்காய நவீன அறுவைச் சிகிச்சைகளை அதிக அளவில் மேற்கொள்ளலாம்.

“பேரிடர் மேலாண்மை’ என்று பெரும் முயற்சியுடன் திட்டங்களைச் செயல்படுத்துவதைப்போல “விபத்து மேலாண்மை’த் திட்டத்தையும் வகுத்து செயல்படுத்தலாம்.

விபத்து நேர்ந்தவுடன் பாதிக்கப்பட்டவர்களை அறிவியல்பூர்வமாகப் பாதுகாத்து, முதலுதவி அளித்து, மருத்துவமனைக்குக் கொண்டு செல்லுதல் மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. இதில் விதிமுறைகள் ஒரு குறுக்கீடாக அமையக்கூடாது.

“”முன்னைவிட நோயாளி தற்போது மேம்பட்டுள்ளார். நினைவின்றிக் கிடந்தவர் தற்போது கை, கால்களை அசைக்கிறார். தேறிவிடுவார். என்றாலும், தலைக்காயம்… எதுவும் சொல்ல முடியாது” என்று நமது அரசு மருத்துவர்கள் கூறுவதைப் படிப்படியாகவாவது குறைக்க வேண்டும்.

சாலை விதிகளை மதிப்போம்; விபத்துகளைத் தவிர்ப்போம்; விதியையும் மதியால் வெல்வோம்!

Posted in Accidents, Auto, Automotive, Bus, car, Chennai, Construction, CoP, dead, deaths, deduction, Fast, Helmet, Highway, infrastructure, Injured, Injury, Insurance, Kill, Law, Limb, Madras, Metro, Obey, Order, passenger, Police, Policy, Premium, Reimbursement, Rikshaw, Road, rules, Safe, Safety, Speed, Street, Traffic, Travel | Leave a Comment »

Institutions averse to parting with information under RTI: Report

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 16, 2007

தகவல் பெறும் உரிமை சட்டத்திலிருந்து விலக்கு அளிக்க பல துறைகள் கோரிக்கை

‘அரசு நிர்வாகத்தில் வெளிப்படையான போக்கு இருக்க வேண்டும், ஊழல் குறைய வேண்டும் என்ற நோக்கத்தில் தான் தகவல் பெறும் உரிமை சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது. ஆனால், பல அரசு துறைகள் இதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளன’ என்று மத்திய தகவல் கமிஷன் குற்றம் சாட்டியுள்ளது.

மத்திய தகவல் கமிஷனின் ஆண்டு அறிக்கை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தகவல் பெறும் உரிமை சட்டத்தில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் கோரி வருகிறது.

தகவல் கொடுப்பதால், நீதித்துறையின் தனித்தன்மை, நீதித்துறையின் நிர்வாகம் பாதிக்கப்படும் என்பது உச்சநீதிமன்றத்தின் வாதமாக உள்ளது.

இதே போல சி.பி.ஐ., மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம், டில்லி மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் (டி.எம்.ஆர்.சி.,) ஆகியவையும் தகவல் பெறும் உரிமை சட்டத்தில் இருந்து விலக்கு அளிக்க கோரிக்கை விடுத்துள்ளன.

தகவல் பெறும் உரிமை சட்டத்தின் இரண்டாவது அட்டவணை: தகவல் பெறும் உரிமை சட்டத்தின் இரண்டாவது அட்டவணை உளவு மற்றும் பாதுகாப்பு ஏஜென்சிகளுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கிறது. ஊழல் மற்றும் மனித உரிமை மீறல் தொடர்பான தகவல்களை தவிர பிற தகவல்களை இரண்டாவது அட்டவணையில் இடம் பெற்றுள்ள துறைகள் அளிக்க வேண்டாம். இந்த இரண்டாவது அட்டவணையில் தங்கள் துறையையும் சேர்க்க வேண்டும் என்பது சி.பி.ஐ.,யின் கோரிக்கையாக உள்ளது.

தேர்வு மற்றும் பணி நியமன தகவல்களை வெளியிடுவதில் இருந்து விலக்கு அளிக்கும்படி மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் கோரி வருகிறது. டில்லி மெட்ரோ ரயில் திட்டத்தை குறிப்பிட்ட காலத்துக்குள் முடிக்க வேண்டும் என்ற வகையில் செயல்பட்டு வருவதால், எவ்வித தகவலும் அளிக்க டி.எம்.ஆர்.சி., முன்வர மறுக்கிறது. தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் செயல்பட்டால், கூடுதல் சுமை ஏற்படும் என்பது அந்த அமைப்பின் கருத்தாக உள்ளது.

கட்டணம் உயர்வு?

தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்கப்படும் தகவல்களுக்கான கட்டணத்தை உயர்த்த வேண்டும் என நுகர்வோர் விவகாரம், சுகாதாரம் மற்றும் குடும்ப நலன், சுரங்கம் ஆகிய அமைச்சகங்கள் ஆலோசனை வழங்கியுள்ளன. கேட்கப்படும் தகவல் நீண்ட காலத்துக்கு உரியதாக இருந்தால், முறையான அமைப்பில் இடம் பெறாத தகவல்களாக இருந்தால் கூடுதல் கட்டணம் வசூலிக்க வேண்டும் என அந்த அமைச்சகங்கள் தெரிவித்துள்ளன.

இந்த சட்டத்தை தவறாக பயன்படுத்த வாய்ப்பு உள்ளதால், அதை பாதுகாக்க முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுத்துறை நிறுவனமான பி.எச்.இ.எல்., தெரிவித்துள்ளது. குறிப்பிட்ட காலத்துக்குள் தகவலை அளிக்க போதிய கட்டமைப்பு வசதி இல்லை என சில துறைகள் தெரிவித்துள்ளன.

மத்திய நகர மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் வரும் தேசிய கட்டடங்கள் கட்டுமான கார்ப்பரேஷன், தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் தனியார் துறையையும் கொண்டு வர வேண்டும். இல்லாவிடில் பொதுத்துறை நிறுவனங்களுக்கு இந்த சட்டத்தில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளது.

அரசு துறைகளை சேர்ந்தவர்கள் தங்களிடம் உள்ள ஆவணங்கள் மீது ஏகபோக உரிமை கொண்டாடுகின்றனர். குறைந்த கட்டணத்துக்கு அதிக தகவல்களை தெரிவிப்பதா என்ற எண்ணம் அவர்களிடம் காணப்படுகிறது. இது போன்ற எண்ணம் கொண்ட அதிகாரிகளின் கருத்தில் மாற்றம் ஏற்பட வேண்டும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Posted in Affairs, Afraid, Architecture, authority, Avoid, BHEL, Buildings, CBI, Central Information Commission, CIC, Construction, Consumer, Corruption, Courts, CPSC, Customer, Delays, Delhi, Disclosure, DMRC, Economy, Exempt, Express, family, Fast, Government, Govt, HC, Health, Hide, HR, immunity, Info, Information, Intelligence, Judges, Judiciary, Jury, Justice, kickbacks, Law, Metro, mines, NBCC, Order, OSA, parliament, Protect, Protection, PSU, PSUs, Rails, Railways, Recommendation, rights, RTI, SC, Scared, Secrets, Security, Trains, Transparency, Transport, Violation, Welfare | Leave a Comment »

State of public transit – Chennai Metro: Electric Trains

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 9, 2007

காற்று வாங்கும் ரயில் நிலையங்கள்; வீணாகும் ரூ. 8 கோடி

சென்னை கடற்கரையில் இருந்து அண்ணாநகர் நோக்கிச் செல்லும் மின்சார ரயில்கள் அனைத்தும் பயணிகள் இல்லாமல் காத்தாடுகின்றன. குறிப்பாக, பாடி, அண்ணாநகர் ரயில் நிலையங்களை 10 பேர் வரைதான் பயன்படுத்துகின்றனர். இதனால், அந்த ரயில் நிலையங்கள் வெறிச்சோடிக் காணப்படுகின்றன. இதன் மூலம், அவற்றுக்கு செலவிடப்பட்ட மக்களின் வரிப்பணம் ரூ. 8 கோடி வீணாகி வருகிறது.

சென்னை கடற்கரை-அண் ணாநகர்-கடற்கரை மார்க்கத்தில் தினமும் 5 ரயில்கள் இயக்கப்படு கின்றன. காலை 7 மணிக்கு அண் ணாநகரில் இருந்து முதல் ரயில் கிளம்புகிறது. இதையடுத்து, பிற் பகல் 12 மணிக்கே அடுத்த ரயில் புறப்படுகிறது.
இதே நேரங்களில் தான் கடற்கரையில் இருந்தும் அண்ணாநக ருக்கு ரயில் புறப்படுகிறது. பிற்பகல் ரயிலுக்குப் பிறகு இரண்டு மணி நேர இடைவெளியில் இரண்டு ரயில்களும், அதன் பின்பு, 4 மணி நேரத்துக்குப் பின்பு கடைசி ரயிலும் விடப்படு கிறது.
சென்னை கடற்கரையில் இருந்து புறப்படும் ரயில், ராயபுரம், வண்ணாரப்பேட்டை, வியா சர்பாடி ஜீவா, பெரம்பூர், வில்லி வாக்கம், பாடி வழியாக அண் ணாநகரை அடைகிறது.
“கடற்கரையில் இருந்து வில்லி வாக்கம் வரை ஓரளவு பயணிகள் ஏறுவார்கள். அதுவும் 100 முதல் 150 வரை தான் இருக்கும்.
வில்லிவாக்கத்துக்குப் பின்பு பாடி, அண்ணாநகரை ரயில் அடையும் போது வெறும் வண் டியாகத் தான் இருக்கும். ஆயி ரம் பேர் வரை ஏறக் கூடிய ரயி லில் வெறும் 100 பேர் பயணம் செய்தால் ரயில்வேக்கு எவ்வளவு நஷ்டம் ஏற்படும்” என்றார் ரயில்வே பணியாளர் ஒருவர்.
பொட்டல் காடாகக் காட்சி அளிக்கும் ரயில் நிலையங்கள்: பாடி, அண்ணாநகர் ரயில் நிலையங்களை மக்கள் பயன்ப டுத்தாத காரணத்தால், அவை பொட்டல் காடாகக் காட்சி அளிக்கின்றன.
“”காலை 7 மணிக்குப் புறப்படும் முதல் ரயிலுக்குப் பின்பு உடனடி யாக ரயில் இயக்கப்படுவ தில்லை. நெரிசல் மிகுந்த நேரங்க ளில் ரயில்களை இயக்கினால் பயணிகள் அதிகமாக வருவார் கள். ஆனால், அதைச் செய்வ தில்லை. பாடி, அண்ணாநகரில் ரயில்வே இருப்புப்பாதை போடப்பட்டது என்பதற்காக, ரயிலை விட்டுக் கொண்டிருக்கி றார்கள்” என்றார் ரயில் நிலைய அதிகாரி.
வீணாகும் ரூ. 8 கோடி: பாடி, அண்ணாநகர் ரயில் நிலையங்கள் கடந்த 3 ஆண்டுக ளுக்கு முன்பு அமைக்கப்பட் டன. இந்த திட்டத்துக்கு ரூ. 8 கோடி வரை செலவிடப்பட் டன. மக்கள் பயன்பாட்டில் இல் லாததால், இரண்டு ரயில் நிலை யங்களும் முடங்கியுள்ளன.
ரயில் நிலையங்களின் கழிவ றைகளுக்கு பூட்டுப் போடப்பட் டுள்ளந. குடிநீர் குழாய்கள் மரச் சக்கைகளால் அடைத்து வைக் கப்பட்டுள்ளன.
“”மாதத்தின் தொடக்கத்தில் டிக்கெட் மூலம் தினமும் ரூ. 500 வரை வருவாய் கிடைக்கும்.
மாதக் கடைசியில் ரூ. 150 கிடைத்தாலே ஆச்சர்யம் தான்.
பயணிகள் யாருமே வராத நிலை யில் நாங்கள் என்ன செய்வது.
ஓய்வெடுக்க வேண்டியது தான்” என்றார் அண்ணாநகரில் உள்ள ரயில்வே ஊழியர்.
“”சென்னை கடற்கரையில் இருந்து வில்லிவாக்கத்துக்கு ரயி லில் 20 நிமிடப் பயணம் தான்.
இதற்கு ஒரு ரயில் என்பதை ஏற் றுக் கொள்ள முடியாது. கோயம் பேடு வரை ரயில் சேவையை நீட் டித்திருந்தால் பயணிகளுக்கு பெரும் பயன் அளித்திருக்கும்” என்றார் பஸ் – ரயில் பயணிகள் நலச் சங்கத் தலைவர் வழக்கறி ஞர் ரவிக்குமார்.
அலட்சியமே அனைத்துக் கும் காரணம்: தற்போது நடைமுறையில் இருக்கும் திட் டத்தால் யாருக்கும் எந்தப் பய னும் இல்லை என பல்வேறு தரப் பினரும் கருத்து தெரிவித்துள்ள னர். சென்னை கடற்கரையில் இருந்து அண்ணா நகருக்குப் பதி லாக, கோயம்பேடுக்கு ரயில் சேவையைத் தொடங்கி இருக்க வேண்டும்.
இதைச் செய்ய ரயில்வே நிர்வா கம் தவறி விட்டது. இதைத் தொடர்ந்து, இந்தப் பகுதியில் அடுத்தகட்ட திட்டங்களை நிறைவேற்றுவதில் ரயில்வே துறை அலட்சியம் காட்டி வருகி றது. இந்த அலட்சியமே தற் போது நடைமுறையில் இருக் கும் திட்டம் வீணாகுவதற்கு முக் கிய காரணம்.

சென்னை அண்ணாநகர் ரயில் நிலையத்துக்கு பயணிகள் மிகக் குறைவாக வருவதால், வாகனம் நிறுத்தும் இடமாக மாறியுள்ள கழிப்பறை . மதிய உணவை முடித்து விட்டு ஆழ்ந்த தூக்கத்தில் இருக்கும் ரயில்வே ஊழியர்கள் .

Posted in Anna Nagar, Annanagar, Annangar, Beach, Chennai, City, Commute, Commuter, Electric, Express, Fast, Madras, Metro, Paadi, Padi, Public, Railways, Rapid, Station, Suburban, Trains, transit, Transport, Transportation, Work, Worker | Leave a Comment »

Chennai Bandh & Oct 1 Fasting by Kalainjar Karunanidhi – Anandha Vikadan Editorial

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 5, 2007

கருமமே கண்ணாயினார்!

Ôதமிழக அரசை டிஸ்மிஸ் செய்ய மத்திய அரசு தயங்கக் கூடாதுÕ என்று கோபம் காட்டியிருக்கிறது உச்ச நீதிமன்றம். தமிழக ஆளும் கூட்டணியில் அதற்குச் சில எதிர்வினைகள்..!

Ôகோர்ட் சொன்னால் என்ன… பஸ்ஸை நிறுத்திப் பார்ப்போமே என்று என்னைப் போன்றவர்கள் எங்கள் தலைவரிடம் சொன்னோம்!Õ என்று உண்ணாவிரத மேடையில் நின்று பொங்கியிருக்கிறார் ஓர் அமைச்சர்.

Ôகர்நாடக அரசும் கேரள அரசும் தீர்ப்புகளை மதிக்காமல் போனபோது, உச்ச நீதிமன்றம் ஏன் இதுபோன்ற கடுமையைக் காட்டவில்லை?Õ என்று கேட்டிருக்கிறார் இன்னொரு தலைவர்.

உணர்வுகளில் என்னதான் வேகம் இருந்தாலும்… கடைசியில் என்ன ஆனது? நிறுத்தப்பட்டிருந்த பேருந்துகள் அவசரமாக Ôஓட்டப்பட்டனÕ; Ôமூடப்பட்டÕ கடைகள் காவல்துறை உந்துதலோடு Ôதிறக்கப்பட்டனÕ; அரசு ஊழியர்கள் உடனே ஆஜராகும்படி அழைக்கப்பட்டனர்!

Ôவேண்டாம் அரசு பந்த்Õ என்று உச்ச நீதிமன்றம் சொன்னதும், Ôஅதே நாளில் வேறு வழியில் எதிர்ப்பைக் காட்டுவோம்Õ என்று உணர்ச்சிவசப்பட்டிருக்கத் தேவையில்லை! உண்ணாவிரதப் போராட்டத்தை, ஒரே ஒருநாள் மட்டும் தள்ளிவைத்து, அந்தத் தத்துவத்தின் ஆதிகர்த்தாவான மகாத்மா காந்தியின் பிறந்த நாளன்று நடத்தியிருந்தால்… உணர்வுகள் இன்னும்கூடப் பலமாக வெளிப்பட்டு இருக்குமே! அரசு விடுமுறை என்பதால், எந்தக் கேள்விக்கும் இடமில்லாமலும் போயிருக்கும்.

தமிழகத்தின் நலனுக்காகவே சேது சமுத்திரத் திட்டத்தைக் கொண்டுவருவது அரசின் நோக்கமாக இருந்தால்… இனியாவது, உணர்ச்சிவேகத்தில் முடிவுகள் எடுக்கக் கூடாது; யார் வாய்க்கும் அவல் போடக் கூடாது; யார் பெரியவர் என்கிற கௌரவ யுத்தத்துக்கு வழிவகுக்கக் கூடாது; நோக்கமே மறந்துபோகுமளவு விவகாரம் திசை திரும்பிச் செல்ல துளியும் இடமளிக்கக் கூடாது!

கருமமே கண்ணாயினார்க்கு இவையும்தான் தகுதிகள்!

Posted in Bandh, Chennai, Editorial, Fast, Hartal, Harthal, Kalainjar, Karunanidhi, Karunanidhy, Karunanidi, Karunanithi, Madras, MK, Op-Ed, Sathyagraha, Satyagraha, Vikadan, Vikatan | Leave a Comment »

Give relief to farmers: Dharia – Manmohan invites for talks

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 26, 2006

விவசாயிகள் தற்கொலையைக் கண்டித்து மோகன் தாரியா உண்ணாவிரத திட்டம்

புணே, அக். 27: மகாராஷ்டிரத்தில் கடன் சுமை தாளாமல் விவசாயிகள் தொடர்ந்து தற்கொலை செய்துகொள்வதைத் தடுக்க அரசு தலையிடக் கோரி, காலவரம்பற்ற உண்ணாவிரதம் மேற்கொள்ள முன்னாள் மத்திய அமைச்சர் மோகன் தாரியா (82) திட்டமிட்டிருக்கிறார்.

நேரு பிறந்த நாளான நவம்பர் 14 முதல் இக்கிளர்ச்சியை அவர் தொடங்கவிருக்கிறார்.

எனவே அதற்கு முன்னதாக, இம் மாதம் 30-ம் தேதி தில்லிக்கு வருமாறு தாரியாவுக்கு அழைப்பு விடுத்திருக்கிறார் மன்மோகன்.

இது தொடர்பாக நிருபர்களிடம் மோகன் தாரியா கூறியதாவது:

“மத்திய, மாநில அரசுகள் அறிவித்த நிவாரண உதவிகளுக்குப் பிறகும்கூட மகாராஷ்டிரத்தில் விவசாயிகள் கடன் சுமையால் தற்கொலை செய்து கொள்வது நிற்கவில்லை.

இந்தப் பிரச்சினையின் ஆழத்தைப் புரிந்துகொண்டு யாரும் நடவடிக்கை எடுப்பதைப் போலத் தெரியவில்லை.

நமது பொருளாதாரத்துக்கே அச்சாணியான விவசாயிகளின் மன உறுதி குலைந்தால் நாட்டின் எதிர்காலமே கேள்விக்குறியாகிவிடும் என்பதைச் சுட்டிக்காட்டி பிரதமர் மன்மோகன் சிங்குக்கு அக்டோபர் 7-ம் தேதி கடிதம் எழுதினேன். நவம்பர் 14 முதல் காலவரம்பற்ற உண்ணாவிரதத்தை மேற்கொள்ளும் முடிவை எடுத்திருக்கிறேன்.

அவ்வாறு செய்யவேண்டாம் என்று பிரதமர் கேட்டுக்கொண்டிருக்கிறார். ஆனால் நான் என் முடிவில் உறுதியாக இருக்கிறேன்.

கூட்டுறவுச் சங்கங்கள், அரசுடைமை வங்கிகள், தனியார் லேவாதேவிக்காரர்கள் ஆகியோரிடம் கடன் வாங்கியுள்ளனர் விவசாயிகள். இதில் தனியாரிடம் வாங்கிய கடனுக்குத்தான் அதிக வட்டி செலுத்த வேண்டியிருக்கிறது.

அவர்களின் மிரட்டல் தாங்க முடியாமல்தான் மன உளைச்சலில் தற்கொலை செய்து கொள்கின்றனர்.

இந்தக் கடன்கள் சட்ட விரோதமானவை. இவற்றை அரசு உடனே ரத்து செய்ய வேண்டும். இந்த நடவடிக்கைகளை எடுக்காதவரை, உண்ணாவிரத முடிவை மாற்றிக்கொள்ள மாட்டேன். 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தன்னார்வத் தொண்டு அமைப்புகள் எனக்கு ஆதரவாக உள்ளன’ என்றார் மோகன் தாரியா.

சிறந்த நிர்வாகி: மொரார்ஜி தேசாய் பிரதமராகப் பதவி வகித்த காலத்தில், சிவில் சப்ளை துறை அமைச்சராக இருந்தவர் மோகன் தாரியா. நிர்வாகத் திறமை மிகுந்தவர், நேர்மையாளர். அவருடைய காலத்தில்தான் சர்க்கரைக்கு இரட்டை விலைக் கொள்கை ரத்து செய்யப்பட்டது. வெளிநாடுகளுக்கு மிகக் குறைந்த விலைக்கு சர்க்கரை ஏற்றுமதி செய்தது நிறுத்தப்பட்டது. இவ்விரு காரணங்களால் ரேஷன் கடைகளைவிட மளிகைக் கடைகளில் சர்க்கரை விலை குறைவாகவும், எளிதாகவும் கிடைத்தது.

அத்துடன் உருளைக்கிழங்கு, வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகளின் விலை உயர்வையும் அற்புதமாக கட்டுப்படுத்தினார் அவர். ஏறத்தாழ இரண்டரை ஆண்டுகள் விலைவாசியும் பணவீக்க விகிதமும் கட்டுக்குள் இருந்தன.

Posted in Agriculture, Farmers, Fast, maharashtra, Manmohan, Mohan Dharia, Morarji Desai, Prime Minister, Suicide, Union Minister, voluntary | Leave a Comment »