ஜெகத்ரட்சகனுக்கு பிரான்ஸ் கம்பன் கழக விருது
சென்னை, செப். 27: சென்னை கம்பன் கழகத் துணைத் தலைவர் எஸ். ஜெகத்ரட்சகனுக்கு பிரான்ஸ் கம்பன் கழகம் சார்பில் ‘கம்பன் விருது வழங்கப்படுகிறது.
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் இயங்கி வரும் இக்கழகம் ஒவ்வொரு ஆண்டும் கம்பன் விழாவைச் சிறப்பாகக் கொண்டாடி வருகிறது. இம்மாதம் 30, அக்டோபர் 1 ஆகிய இரு நாள்களில் பாரிஸில் உள்ள சித்தி விநாயகர் ஆலய அரங்கில் இவ்விழா நடைபெறுகிறது.
ஆண்டுதோறும் சிறப்பாக இலக்கிய பணி ஆற்றி வருவோருக்கு இக்கழகம் அளிக்கும் கம்பன் விருது இவ்விழாவில் ஜெகத்ரட்சகனுக்கு வழங்கப்படுகிறது.
விழாவில் கருத்தரங்கம், வழக்காடு மன்றம், பட்டிமன்றம் உள்ளிட்டவை நடைபெறுகின்றன. விழா ஏற்பாடுகளை பிரான்ஸ் கம்பன் கழகத் தலைவர் கவிஞர் கி.பாரதிதாசன் செய்துள்ளார்.