Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘executive’ Category

Cut excessive pay to CEOs: Manmohan Singh – Ambika Soni defends Prime Minister’s premise

Posted by Snapjudge மேல் மே 28, 2007

தேர்தல் தோல்வியால் தொழில்துறையினருக்கு பிரதமர் அறிவுரை வழங்கவில்லை: அம்பிகா சோனி

புதுதில்லி, மே 28: தேர்தல் தோல்வியாலோ அல்லது இடதுசாரி கட்சிகளின் நிர்பந்தத்தினாலோ தொழிற்துறையினருக்கு பிரதமர் அறிவுரை வழங்கவில்லை என்று மத்திய அமைச்சர் அம்பிகா சோனி விளக்கம் அளித்துள்ளார். ஆனால் அதே நேரம், மத்திய அமைச்சரவையின் மாண்புகளை மணிசங்கர் அய்யர் உடைத்து விட்டார் என்று அவர் குற்றம்சாட்டினார்.

“தொழிற்துறையினருக்கு பிரதமர் மன்மோகன் சிங் அறிவுரை வழங்கியது என்பது தேர்தல் ஆதாயத்திற்காக என்று நான் கருதவில்லை. ஒரு பிரச்னை தொடர்பாக என்ன முடிவு எடுக்க வேண்டும், எப்போது எடுக்க வேண்டும் என்பதை தீர்மானிக்கும் சக்தியாக தேர்தல் முடிவு விளங்குகிறது. இடதுசாரி கட்சிகளின் நிர்பந்தத்தினாலும் பிரதமர் அவ்வாறு பேசவில்லை’ என்றார் அம்பிகா சோனி.

இந்திய தொழில், வர்த்தக கூட்டமைப்பின் ஆண்டு பொதுக்குழுக் கூட்டம் வியாழக்கிழமை புதுதில்லியில் நடந்தது. அதில் பேசிய பிரதமர் மன்மோகன் சிங், பொருளாதார ரீதியில் பின்தங்கியவர்களுக்கு வேலைவாய்ப்பு, கல்வி உதவி வழங்க தொழில்துறையினர் முன்வர வேண்டும், மாறாக உரிமையாளர்கள் மற்றும் உயர் அதிகாரிகளின் சொத்துகளை அதிகரித்து காட்டுவதற்காக ஊதியத்தை உயர்த்திக் கொண்டே செல்லக் கூடாது என்றார்.

இந்நிலையில் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் மத்திய அமைச்சர் மணிசங்கர் அய்யர், இந்தியப் பொருளாதாரம் 9.2 சதவீதம் வளர்ச்சி அடைந்திருப்பதாக பெருமைப்பட்டுக் கொள்கிறோம், ஆனால் அதன் பலன் 10 அல்லது 15 சதவீத மேல்தட்டு மக்களை மட்டுமே அடைந்திருக்கிறதே தவிர சராசரி ஏழையின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவில்லை, விலைவாசி உயர்வு, வேலையின்மை, வறுமை ஆகியவற்றால் அடித்தட்டு மக்களின் விழிபிதுங்குகிறது, அரசுக்கு எதிரான அபாய மணி அலறுகிறது என்றார்.

சிஎன்என்- ஐபிஎன் தொலைக்காட்சியில் ஞாயிற்றுக்கிழமை ஒளிபரப்பான கரண் தபார் நிகழ்ச்சியில் பங்கேற்று மத்திய அமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலருமான அம்பிகா சோனி மேலும் கூறியது:

பொது இடத்தில் பிரதமர் பேசியதற்கும் மணிசங்கர் அய்யர் பேசியதற்கும் வேறுபாடு உள்ளது. மத்திய அமைச்சர் பதவியும், பிரதமர் பதவியும் ஒன்று அல்ல. மத்திய அமைச்சரவையில் இடம் பெற்றுக் கொண்டே இது போன்ற பொது நிகழ்ச்சிகளில் மணிசங்கர் எவ்வாறு இப்படி பேசலாம்?.

ஒரு பிரச்னை குறித்து அமைச்சரவைக்குள் மாறுபட்ட கருத்துகள் இருக்கலாம். அது தொடர்பாக விவாதங்கள் கூட நடந்திருக்கலாம்.

அப்படி இருக்கையில் அதை வெளியிடங்களில் பேசுவது தவறு. இதன் மூலம் மத்திய அமைச்சரவையின் மாண்புகளை அய்யர் உடைத்துவிட்டார் என்றார்.

Posted in Aiyar, Ambiga, Ambika, Ambika Soni, Business, CEO, Comment, Communist, Compensation, Congress, CPI, Economy, Election, Employment, executive, executives, Finance, Government, Govt, Industry, Iyer, Jobs, Mani, Mani Shankar Aiyar, Manmohan, Marxist, Needy, Pay, PM, Poor, Prime Minister, Profit, Rich, Salary, Shares, Soni, Stocks, UPA, Wealth, Wealthy, Welfare | Leave a Comment »

J Jayalalitha’s power abuse over judiciary during her executive rule

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 7, 2007

தனது அரசை கண்டித்ததால் நீதிபதி வீட்டுக்கு தண்ணீர் வினியோகத்தை நிறுத்தியவர் ஜெயலலிதா: கருணாநிதி அறிக்கை

சென்னை, பிப்.7-

தன்னுடைய அரசை கண்டித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியின் வீட்டுக்கு தண்ணீர் வினியோகத்தை நிறுத்தியவர் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா என்று முதல்-அமைச்சர் கருணாநிதி கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளயிட்ட அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

நீதித் துறையை கேவலப்படுத்தி விட்டதாக முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஒரு நீண்ட அறிக்கையினை வெளியிட்டுள்ளார். இவர் ஆட்சி நடத்திய காலத்தில் நீதித்துறையும் அரசு நிர்வாகமும் ஒற்றுமையாக நடந்து கொண்டதைப் போலவும், நீதிபதிகளையும், நீதித்துறையையும் இவர் போற்றிப் பாராட்டி வந்ததை போலவும் தற்போது அறிக்கை விடும் ஜெயலலிதா, அப்போது நீதிமன்றங்களை எந்த அளவுக்கு இழிவாக மதித்து நடந்தார் என்பதற்கு பல உதாரணங்களை நாம் கூறிட முடியும்.

நீதிபதி ஒருவர் தனது ஆட்சியைப் பற்றி தீர்ப்பிலே கண்டனம் தெரிவித்தார் என்ற காரணத்துக்காக நீதிபதியின் இல்லத்துக்கு செல்லும் தண்ணீர் விநியோகத்தையே தடை செய்யச்சொன்னவர் தான் ஜெயலலிதா.

உச்ச நீதிமன்றத்திலே தற்போது பணியாற்றிக் கொண்டிருக்கும் ஒரு நீதிபதி அப்போது சென்னை உயர்நீதி மன்றத்திலே பணியாற்றிக் கொண்டிருந்தார். அவர் மீதுள்ள வெறுப்பினைக் காட்டுவதற்காக, அந்த நீதிபதியின் மருமகன் வீட்டிலே காவல் துறையின் மூலமாக “கஞ்சா” வைத்துப் பிடித்து வழக்கு போடச் செய்தவர் தான் இந்த ஜெயலலிதா.

இதையெல்லாம் விட இதோ மற்றொரு உச்ச கட்ட எடுத்துக்காட்டு. இதே ஜெயலலிதா, முதல்-அமைச்சராக இருந்து தமிழக சட்டப் பேரவையில் 4.2.2005 அன்று ஆற்றிய உரையின் ஒரு பகுதி வருமாறு:-

“உயர் நீதிமன்றமானாலும், எந்த நீதி மன்றமானாலும், நீதிபதிகள் மனிதர்கள்தான். அவர்களுக்கும், விருப்பு வெறுப்புகள் உள்ளன. சில சமயங்களில் பேசக் கூடாதவற்றையெல்லாம் நீதிமன்றங்களில் பேசுகிறார்கள். இதையே நாங்கள் பேசினால் எங்கள் மீது “கன்டம்ப்ட் ஆப் கோர்ட்” (நீதிமன்ற அவமதிப்பு) வழக்கு போடுவார்கள். ஆனால், நீதிபதிகள் என்ன செய்தாலும், என்ன சொன்னாலும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அல்லது அதற்கு கண்டனம் தெரிவித்து நாங்கள் ஏதாவது நடவடிக்கை எடுத்தால், எங்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு வரும்.

ஆனால் நீதிபதிகள் என்ன வேண்டுமானாலும் பேசலாம். ஆகவே, குறிப்பிட்ட இந்த நீதிபதி இதைச் சொன்னார், அதைச் சொன்னார் என்பதையெல்லாம் இந்த அவையில் தெரிவித்து, அதனால் அவர்கள் சொல்வதெல்லாம் உண்மை, நிலைமை சீரழிந்து விட்டது என்று கூறுவது அபத்தமான கூற்று” என்று அவர் பேசியிருந்தார்.

முதல்-அமைச்சராக இருந்த ஜெயலலிதா, நீதிபதிகளை தாக்கி இழித்துரைத்தால், அது மட்டும் அவர் வாயிலிருந்து சிந்திய முத்துக்களா?

இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.

Posted in abuse, ADMK, AIADMK, Court, ex-CM, executive, J Jayalalitha, J Jeyalalitha, Jayalalitha, Jayalalithaa, Jeyalalitha, JJ, Judge, Judiciary, Jury, Justice, Karunanidhi, Law, Order, Power | 3 Comments »

Bangladesh’s controversial election commission members resign en masse

Posted by Snapjudge மேல் ஜனவரி 31, 2007

வங்கதேச தேர்தல் ஆணையத்தின் ஐந்து உறுப்பினர்கள் ராஜினாமா

வங்கதேசம்
வங்கதேசம்

வங்காளதேசத்தில் பிரதான அரசியல் கூட்டணிகளில் ஒன்றின் பல மாத கால அழுத்தத்திற்குப் பிறகு அந்நாட்டின் தேர்தல் ஆணையத்தின் ஐந்து உறுப்பினர்களும் தங்களது பதவியினை ராஜினாமா செய்து விட்டார்கள்.

இந்த ஐந்து பேரும் தேர்தல் ஆணைய உறுப்பினர்களாக இருக்கும் வரை தாங்கள் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என பிரதான கூட்டணி ஒன்றின் தலைவியும் முன்னாள் பிரதமருமான ஷேக் ஹசீனா முன்னதாகத் தெரிவித்திருந்தார்.

இன்றைய ராஜினாமாக்கள், புதிதாக மாற்றியமைக்கப்பட்ட ஒரு தேர்தல் ஆணையத்தின் கீழ் பொதுத் தேர்தல்கள் நடைபெற வழி வகை செய்யும். வாக்குப் பதிவில் மோசடி செய்தனர் என்கின்ற குற்றச்சாட்டை இந்த ஐந்து ஆணையர்களும் எதிர்நோக்கியிருந்த நிலையில், ஜனவரி மாதம் 22ம் தேதி நடைபெறவிருந்த தேர்தல்கள் ரத்து செய்யப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.


வங்காளதேசத்துக்கு தேர்தல் ஜனநாயகம் பொருந்தாது என்கிறார் அந்த நாட்டு இராணுவத் தளபதி

வங்காளதேசத்தை தமது நேரடிக் கட்டுப்பாட்டில் கொண்டுவரும் நோக்கம் இல்லை என்கிறது இராணுவம்
வங்காளதேசத்தை தமது நேரடிக் கட்டுப்பாட்டில் கொண்டுவரும் நோக்கம் இல்லை என்கிறது இராணுவம்

வங்காளதேசத்தில் மோசமான நிர்வாகத்தைச் சமாளிப்பதற்கு புதிய பாணியிலான ஜனநாயகம் ஒன்று தேவை என்று அந்த நாட்டின் இராணுவத் தளபதி, லெப்டினண்ட் ஜெனரல் மூயின் அஹ்மட் கூறியுள்ளார்.

தேர்தல் மாதிரியிலான ஜனநாயகத்தில் ஊழல் பரவி, அதனால் ஆட்சி பாதிக்கப்படும் என்று கூறிய அவர் அப்படியான ஒன்றை தான் விரும்பவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

இராணுவ ஆதரவிலான இடைக்கால அரசாங்கத்தின் முக்கிய நோக்கம், அங்கு ஒரு நியாயமான மற்றும் சுதந்திரமான தேர்தலை நடத்துவதே என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஒரு குறித்த கால எல்லை குறித்துக் கருத்துக் கூற அவர் மறுத்துவிட்டார்.


Posted in Army, autocrat, Awami League, Bangladesh, Bangladesh Nationalist Party, CEC, Chief Election Commissioner, defence, Defense, Democracy, Democratic, election commission, executive, Fakhruddin Ahmed, Govt, Iajuddin Ahmed, interim government, Judiciary, Khaleda Zia, Legislature, M A Aziz, Mahfuzur Rahman, Military, President, Republic, Rule, Sheikh Hasina | Leave a Comment »