செய்தி வெளியீடு எண்.187 நாள் 30.3.2007
செய்தி வெளியீடு
31.3.2007(சனிக்கிழமை) அன்று பொது வேலை நிறுத்த நாளாக தமிழகத்தில் அனுசரிப்பதையொட்டி, மாவட்ட ஆட்சித் தலைவர்கள், காவல்துறை அலுவலர்கள் ஆகியோருக்கு கீடிநடிநடிநடிநக்கண்ட உத்தரவுகளின் மீது நடவடிக்கை மேற்கொள்ளுமாறு தமிழக அரசு பிறப்பித்துள்ளது.
• பொது வேலை நிறுத்த நாளான 31.3.2007 (சனிக்கிழமை) அன்று, மாற்றுமுறை ஆவணச் சட்டத்தின் 31.3.2007ம் நாள் பொது விடுமுறை நாளாக அறிவிக்கப்படுகிறது.
• மாநில போக்குவரத்துக் கழகங்கள், நாட்டில் செயல்பட்டுவரும் இதர தொழில் நிறுவனங்கள் உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களுக்கும், அரசு அலுவலகங்களுக்கும், மாற்றுமுறை ஆவணச் சட்டத்தின் 31.3.2007ம் நாளன்று பொது விடுமுறை நாளாக அறிவிக்கப்படுகிறது.
• பொது வேலை நிறுத்தத்திலிருந்து,
- தொலைபேசி,
- தொலைத் தொடர்பு,
- குடிநீர் விநியோகம்,
- பால் விநியோகம்,
- மின் விநியோகம்,
- தீயணைப்பு சேவை,
- செய்தித் தாள்கள்,
- மருத்துவமனைகள்,
- கருவூலங்கள்,
- பட்டியல் இன வங்கிகள் ஆகிய அத்தியவசியப் பணிகளுக்கு விலக்களிக்கப்படுகிறது,
• 31.3.2007 அன்று காலை 6.00 முதல் மாலை 6.00 மணி வரை , பேருந்துகளும், இரயில்களும், தமிழகத்தில் ஓடாது. 30.3.2007-அன்று புறப்படும் பேருந்துகள் அனைத்தும், 31.3.2007 அன்று அதிகாலை 5.00 மணிக்கு முன்பாக பாதுகாப்பான இடத்தை சென்றடைந்து நிறுத்தப்பட வேண்டும்.
• 31.3.2007 அன்று காலை 6.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை விமானம் மற்றும் இரயில்களின் இயக்கம் இல்லாதவாறு நேரத்தை மாற்றியமைத்துக் கொள்ளும்படி சம்பந்தப்பட்ட நிர்வாகங்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளன.
• மதுபானக் கடைகளும், வெடிமருந்து கிடங்குகளும், திரையரங்கங்களும், 31..3.2007 அன்று மூடப்பட்டிருக்கும்.
• பொது வேலை நிறுத்தம் முடிவுற்றதும், 31.3.2007-அன்று மாலை 6.00 மணிக்கு மேல் பொதுமக்களின் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் கூடுதலாக இயக்கப்படும்.
+++++
வெளியீடு இயக்குநர், செய்ய்ய்ய்தி மக்கள் தொடர்புத் துறை, சென்னை – 9