Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Emerging’ Category

Foreign Instituitional Investors – Lucrative opportunities in Emerging Indian markets & sectors

Posted by Snapjudge மேல் ஜூன் 13, 2007

முதலீடுகளுக்கு காத்திருக்கும் தொழில்கள்

எஸ். கோபாலகிருஷ்ணன்

சமீபகாலத்தில், பங்குச்சந்தை ஏறினாலும் இறங்கினாலும் எஃப்.ஐ.ஐ.கள்தான் காரணம் என்று சொல்லப்படுகிறது.

இவர்கள் யார்? “ஃபாரின் இன்ஸ்டிட்யூஷனல் இன்வெஸ்ட்டார்ஸ்’ என்பதன் சுருக்கம்தான் ஊஐஐ. அதாவது அன்னிய முதலீட்டு நிறுவனங்கள்.

இந்த நிறுவன முதலீட்டாளர்கள் பல நாடுகளைச் சேர்ந்தவர்கள். அவர்கள் தங்கள் நாட்டில் உள்ளவர்களிடமிருந்து பணம் திரட்டி, அதை எந்த நாட்டில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்று தேடித் திரிபவர்கள்.

அந்தவகையில், இந்திய பங்குச் சந்தையில் கணிசமான தொகையை முதலீடு செய்திருக்கிறார்கள். இவர்கள் பங்குகளை வாங்கினால், விலை ஏறுகிறது. விற்றால் விலை குறைகிறது.

இந்த வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் முதன்முதலாக 1994-ல் தான் இந்திய பங்குச் சந்தையில் முதலீடு செய்ய அனுமதிக்கப்பட்டன. அது முதல் 2005-ம் ஆண்டு இறுதிக்குள் ஒரு லட்சத்து, எழுபது ஆயிரம் கோடி ரூபாய் பணத்தை இந்தியாவில் கொண்டு வந்து கொட்டியிருக்கின்றன. இந்த பங்குகளின் சந்தை மதிப்பு மேலும் அதிகம் என்று சொல்லத் தேவையில்லை.

மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள பெரிய 500 இந்திய நிறுவனங்களில் அன்னிய நாட்டைச் சேர்ந்த முதலீட்டு நிறுவனங்கள் வைத்திருக்கும் பங்குகளின் சந்தை மதிப்பு இரண்டு லட்சத்து எழுபதாயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகம் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.

இது மும்பை பங்குச் சந்தையின் பெரிய 500 நிறுவனப் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பில் 35 சதவீதம். அதாவது, மூன்றில் ஒரு பங்குக்கு மேல் எஃப்.ஐ.ஐ.களிடம் உள்ளது!

ஜனவரி 2007 வரையிலான கணக்குப்படி, 1059 அன்னிய முதலீட்டு நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்துள்ளன. எனினும், எச்.எஸ்.பி.சி. மார்கன் ஸ்டான்லி, மெரில் விஞ்ச், கோல்ட்மென் சாக்ஸ், சிட்டி வங்கி போன்றவை தான் முதலீடு செய்வதில் முன்னணியில் உள்ளன. உலகநாடுகள் என்று பார்த்தால், அமெரிக்கா முதலிடத்திலும், பிரிட்டன் இரண்டாவது இடத்திலும் உள்ளன.

இந்நிறுவனங்கள் ஏன் இந்தியாவைத் தேடி வருகின்றன? மேலை நாடுகளின் பொருளாதாரம் ஏற்கெனவே நன்கு வளர்ந்துவிட்டது. அதனால், அங்கு முதலீடு செய்யும் பணம், மேலும் பெரிய வளர்ச்சி காண முடியாது. அதேசமயம் இந்தியா போன்ற வளரும் நாடுகளில் அந்த வாய்ப்பு உள்ளது. எனவே இங்கு வந்து கடை விரிக்கின்றன.

அவர்கள் முதலீடு செய்வது பங்குச் சந்தையில்தான். ஆகஸ்ட் 2005-ல் பங்குச் சந்தை குறியீடு எண் (சென்செக்ஸ்) 7816 ஆக இருந்தது. டிசம்பர் 2005-ல் 9020 புள்ளிகளாக உயர்ந்தது. இது 17 சதவீத வளர்ச்சி. மே 2006-ல் 12 ஆயிரம் என்னும் மகத்தான உயரத்தை எட்டியது. இப்போது – அதாவது ஓர் ஆண்டில் – 14,500க்குப் பக்கத்தில் மேலும் கீழும் நகர்ந்து கொண்டிருக்கிறது.

இந்த வெற்றிக்கதை தொடர்ந்தால் அந்நிறுவனங்கள் இங்கு நிலைகொண்டிருக்கும். தொடராதபட்சத்தில், “”அற்ற குளத்து அருநீர் பறவை” போல் பறந்து போய்விடும். ஆக, இந்த முதலீடுகளால், நம் நாட்டு தொழில்களுக்குக் கிடைத்தது என்ன? எத்தனை ஆயிரம் பேருக்கு புதிய வேலைவாய்ப்பு கிடைத்தது?

இது ஒருபுறம் இருக்க, இன்னொருபுறம், வேறு ஒரு தளத்தில் அன்னிய நிறுவனங்கள் மற்றும் முதலீட்டாளர்கள் இந்தியாவில் ஏராளமான அன்னிய நேரடி முதலீடுகள் செய்கிறார்கள். சுருக்கமாக எஃப்.டி.ஐ. என்கிறோம். பல்வேறு தொழில் துறைகளில் நேரடியாக முதலீடு செய்கிறார்கள். இவர்கள் கதை என்ன?

அடுத்த 30 அல்லது 40 ஆண்டுகளில், ஆதஐஇ எனப்படும் பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா ஆகிய நாடுகள் உலக அளவில் மிகப்பெரிய நாடுகளாக வளர்ந்து விடும் என்று பொருளாதார நிபுணர்கள் ஆய்வு செய்துள்ளனர். அதன் அடிப்படையில், அன்னிய நேரடி முதலீடுகள் இந்தியாவின் பல்வேறு தொழில்களுக்கு வரத் தொடங்கியுள்ளன.

அன்னிய நேரடி முதலீட்டுக்கு மத்திய அரசு சில நியதிகளையும், உச்ச வரம்புகளையும் விதித்துள்ளது. உதாரணமாக வங்கிகள், இன்சூரன்ஸ் நிறுவனங்களில் அதிகபட்சம் இவ்வளவு சதவீதம்தான் முதலீடு செய்யலாம் என்று உள்ளது. சில துறைகளில் அன்னிய நேரடி முதலீடு அனுமதிக்கப்படுவதில்லை.

கடந்த 16 ஆண்டுகளாக, அதாவது பொருளாதார சீர்திருத்தம் அறிமுகமானது முதல், அன்னிய நேரடி முதலீடு வரத் தொடங்கியுள்ளது. நாம் கவனிக்க வேண்டியது என்னவெனில், எந்தத் தொழிலில் முதலீடு வந்தால் நமது தொழில் வளம் பெறுமோ, நமக்குப் புதிய வேலைவாய்ப்புகள் கிட்டுமோ அந்தத் துறைகளில் அன்னிய முதலீடுகள் கணிசமான அளவில் வருவதில்லை.

மாறாக, எந்தத் துறைகளில் முதலீடு செய்தால், உள்நாட்டில் விற்பனை அல்லது வெளிநாட்டுக்கு ஏற்றுமதி பெருகி உடனடி லாபம் காண முடியுமோ அந்தத் துறைகளில்தான் அன்னிய நேரடி முதலீடு வருகிறது.

உதாரணமாக, மோட்டார் வாகனத் தொழில், தகவல் தொழில் நுட்பம், தொலைத்தொடர்பு ஆகியவை. 1991 முதல் 2007 மார்ச் வரை இந்தியா பெற்றுள்ள அன்னிய நேரடி முதலீடு 55 பில்லியன் டாலர். (ஒரு பில்லியன் என்பது 100 கோடி). இதில் கடந்த ஓர் ஆண்டில் மட்டும் 15 பில்லியன் டாலர் இந்தியாவுக்குள் எப்.டி.ஐ. ஆக வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது மட்டுமல்ல, பெருமிதம் கொள்ளத்தக்கதும்கூட.

ஆனால், கவலையளிப்பது என்னவெனில், இந்தியாவின் பாரம்பரியத் தொழில்களில் ஒன்றான தோல் பதனிடுதல் மற்றும் உற்பத்தித் தொழிலுக்கு இத்தனை ஆண்டுகளில் கிடைத்த அன்னிய நேரடி முதலீடு வெறும் ஆறு கோடி டாலர்தான். இது ஒட்டுமொத்த அன்னிய நேரடி முதலீட்டில் 0.12 சதவீதம்தான். இந்த தோல் தொழிலை நம்பி 20 லட்சம் குடும்பங்கள் வாழ்கின்றன.

இந்தியாவின் இன்னொரு முக்கியமான பாரம்பரியத் தொழில் ஜவுளி. எட்டு கோடியே 50 லட்சம் தொழிலாளர்கள் இத் தொழிலை நம்பி உள்ளனர். விவசாயத்துக்கு அடுத்தபடியாக அதிகபட்ச வேலைவாய்ப்பு வழங்கும் தொழில் ஜவுளியே. இந்த மாபெரும் தொழில் ஈர்த்த அன்னிய நேரடி முதலீடு 57 கோடியே 50 லட்சம் டாலர்தான். அதாவது மொத்த அன்னிய நேரடி முதலீட்டில் 1.22 சதவீதமே.

சரி, அப்படியானால் இதுவரை வந்துள்ள அன்னிய முதலீடுகள் எங்கே போகின்றன? மின்சாரக் கருவிகள் சார்ந்த தொழிலுக்கு 800 கோடி 27 லட்சம் டாலர்கள். அதாவது மொத்த முதலீட்டில் 15 சதவீதம்.

அடுத்து, தகவல் தொழில் நுட்பம் உள்ளிட்ட சேவைத்துறைக்கு 700 கோடி, 84 லட்சம் டாலர் (14 சதவீதம்); மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது தொலைத்தொடர்பு 3 கோடி, 89 லட்சம் டாலர். (7.12 சதவீதம்).

ஆக, தொழில் நுட்பத்துறையில் முன்னணியில் உள்ள துறைகளுக்கு மட்டுமே அன்னிய நேரடி முதலீடு கணிசமாகக் கிடைத்துள்ளது. சீனாவும், தைவானும் வேலைவாய்ப்புகளை வாரி வழங்கும் துறைகளான ஜவுளி போன்றவற்றில் அதிக முதலீட்டின் மூலம் குறைந்த விலையில் உற்பத்தி செய்து, சந்தையில் போட்டியிட்டு இந்தியாவை ஓரம் கட்ட முடிகிறது.

இன்னொருபக்கம், வங்கதேசம் தங்கள் நாட்டில் ஊழியர்களுக்கான ஊதியம் மிகக் குறைவு என்று பறைசாற்றி, இதே ஜவுளி மற்றும் தோல்துறைகளில் அன்னிய நேரடி முதலீட்டைத் திரட்டியுள்ளது.

இந்நிலையில் கோட்டா முறை ஒழிந்த பின்னரும் ஜவுளி ஏற்றுமதியில் இந்தியா தனது நியாயமான பங்கைப் பெற இயலவில்லை. இந்தியாவின் இதர துறைகளின் ஏற்றுமதியுடன் ஒப்பிடும்போது ஜவுளித்துறை ஏற்றுமதி குறைவே.

தற்போது ஜவுளித்துறையில் கிடைக்கும் உள்நாட்டு முதலீடுகள் கூட “சிறப்பு தொழில்நுட்ப மேம்பாட்டு நிதி’ என்னும் மத்திய அரசின் திட்டத்தின் வாயிலாகவே என்றால் மிகை ஆகாது.

இந்நிலையில், நடப்பாண்டில் அன்னிய நேரடி முதலீட்டைத் திரட்டுவதற்கான இலக்கு 30 பில்லியன் டாலராக உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால், இலக்கை கடந்த ஆண்டைப்போல் இரண்டு மடங்காக உயர்த்தினால் மட்டும் போதாது.

கணிசமான அளவில் வேலைவாய்ப்புகளை உருவாக்கக்கூடிய ஜவுளி மற்றும் தோல் தொழில்களில் கூடுதல் அன்னிய நேரடி முதலீடுகளை ஈர்க்க சம்பந்தப்பட்ட அமைச்சகங்கள் அதிகபட்ச முனைப்பு காட்டி, முதலீடுகளுக்காக காத்திருக்கும் – தற்போது புறக்கணிக்கப்பட்டுள்ள – இத் துறைகளுக்கு புத்துயிர் அளிப்பது அவசியம் மட்டுமல்ல; அவசரமும்கூட.

(கட்டுரையாளர்: சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியாவின் முன்னாள் துணைப் பொது

மேலாளர்.)

Posted in Analysis, Auto, Backgrounders, Bonds, Brazil, BRIC, BSE, Bus, Cars, China, Defaltion, Deflation, Diversify, ECE, Economy, EEE, Electrical, Electronics, Emerging, Employment, Exchanges, Exports, FDI, FEMA, FERA, FII, Finance, Funds, GDP, Globalization, Growth, Imports, Index, Industry, Inflation, InfoTech, Instrumentation, investments, job, Leather, Luxury, Manufacturing, markets, Metro, MNC, Model, Motors, NIFTY, NSE, Op-Ed, Opportunities, Options, Outsourcing, pension, Primers, Recession, Retirement, revenue, Risk, Russia, sectors, service, Shares, Stagflation, Stats, Stocks, Taiwan, Tech, Technology, Telecom, Textiles, Trucks | Leave a Comment »

Literarature for the Web Generation – Hyper Stories

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 12, 2006

இலக்கியத்தின் இன்னொரு அவதாரம்!   விஷ¨வல் கிராபிக்ஸ்!

ஆர்.வெங்கடேஷ்

எழுத்தாளர்கள் என்றாலே கன்னத்தில் கைவைத்துக் கொண்டு மற்றொரு கையில் பேனாவைப் பிடித்தபடி போஸ் கொடுப்பதைதான் தொடர்ந்து பார்த்து  வந்திருக்கிறோம். நோபல் பரிசை எப்படியும் தமிழுக்குத் தட்டிக்கொண்டு வந்துவிட வேண்டும் என்ற தாங்கொண்ணாத ஆர்வம் பலரின் கனவு விழிகளில் தென்படும். தாங்கள் ஏதோ பெரிதாக படைத்துவிட்ட திருப்தியில், எல்லாவற்றைப் பற்றியும் கருத்துச் சொல்லிக்கொண்டு ‘கருத்து கந்தசாமி’களாகப் பலர் உலா வருவதையும் பார்த்திருக்கிறோம்.

அவர்கள் என்னதான் தலைகீழாக நின்று எழுதினாலும், அதைக் கறுப்பு வெள்ளையில்தான் வடிக்க வேண்டும். பேனாவால் பேப்பரில் எழுதி, அதைப் பத்திரிகை அல்லது புத்தகம் என்ற மற்றொரு பேப்பரில் அச்சடிக்க வேண்டும். கொஞ்சம் வண்ணம், கொஞ்சம் ஓவியங்கள் மட்டும் எக்ஸ்ட்ராவாக அவர்களின் படைப்புக்கு மெருகூட்டும், அவ்வளவுதான்.

பொதுவாக மரபான படைப்புகளில் ‘விஷ¨வல் எலிமென்ட்’ என்பதற்கு இடமில்லை. படைப்புகளில் ‘விஷ¨வல் எலிமென்ட்’ என்பது முழுவதும் எழுத்துக் குள்ளேயே அடங்கியிருப்பது. அதைத்தான் உத்தி, ஸ்டைல், அணி, நயம் என்று வேறுவேறு வார்த்தைகளில் சொல்கிறோம். ஒருவகையில் இது பெரிய தடை. படைப்பாளிகளின் கற்பனை என்பது முப்பரிமாண வடிவம் கொண்டது. ஆனால், ஒற்றைப் பரிமாணத்தில் அதை வடிக்கிறார்கள். எப்படி வர்ணித்தாலும் தேர்ந்த எழுத்தாளராலேயே ஒரு ரோஜாவின் மணத்தை எழுத்தில் கொண்டுவருவது கஷ்டம். பக்கம் பக்கமாக எழுதினாலும், ஒரு அறையை முழுமையாக கண்முன் கொண்டுவந்துவிட முடியுமா?

இதை உடைக்கப் பல எழுத்தாளர்கள் முயற்சித்திருக்கிறார்கள். உதாரணமாக, சுஜாதா அவரது ஆரம்பகால கதைகளில்,

&&ற

&&&&&&ங்

&&&&&&&&&கி

&&&&&&&&&&&&னா

&&&&&&&&&&&&&&&&&&ன்

என்று எழுதுவார்.

Ôஆனந்த விகடன்Õ இதழில் வெளியான ‘மடிசார் மாமி’ தொடரில், ஸ்ரீவித்யாவின் புகைப்படத்தோடு, ஓவியம் இரண்டறக் கலந்திருக்கும். இதெல்லாம் ஒருவகையில் எழுத்தின் மெத்தனத்தை உடைக்கும் முயற்சிகள். ஆனால், பெரும் பாய்ச்சல் ஏற்பட்டது, டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் வளரத் தொடங்கிய பின்தான்.

இன்று ‘டிஜிட்டல் இலக்கியம்’ (ஞிவீரீவீtணீறீ லிவீtமீக்ஷீணீtuக்ஷீமீ) என்று ஒரு தனிவகை எழுத்துப் பாணியே உருவாகியிருக்கிறது.

ஒருகாலத்தில் எழுத்தாளர்களுக்கு நல்ல கற்பனை வளமும் தேர்ந்த அனுபவமும் நல்ல நோக்கமும் இருந்தால் போதும் என்ற நிலை இருந்தது. ஆனால், இன்றைய நிலை அப்படி இல்லை. கணினி வல்லுநர்கள் எழுத்தாளர்களாக ஆகியிருக்கிறார்கள். கிராபிக்ஸ் டிஸைனர்கள், படைப்பாளிகள் ஆகியிருக்கிறார்கள். முழுநேரமும் மென்பொருள் எழுதுபவர்கள், பகுதி நேரமாகக் கதையும் எழுதுகிறார்கள். கூடுதல் திறமையும் நவீன தொழில்நுட்ப அறிவும், அவர்களின் எழுத்திலும் தெரியத்தானே வேண்டும். தொழில்நுட்ப சாத்தியங்களை எல்லாம் இவர்கள் கதை எழுதப் பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர்.

மிகவும் எளிய விஷயத்தில் இருந்து ஆரம்பிப்போம். இணையத்தில், ஒரு வலைப்பக்கத்தில் இருந்து இன்னொரு வலைப்பக்கத்துக்கு இணைப்பது என்பது, இருப்பதிலேயே மிகவும் எளிதான வேலை. இதற்கு ‘ஹைப்பர் லிங்க்’ என்று பெயர். ஒரு கதைக்குள்ளேயே ஓராயிரம் லிங்க்குகளை இதுபோல் இவர்களால் வழங்க முடியும். அந்த லிங்க் என்பது, மற்றொரு கிளைக் கதையாக வளரலாம். மற்றொரு புகைப்படமாக இருக்கலாம். அல்லது ஒரு பாடலாக இருக்கலாம். அல்லது வீடியோ காட்சியாக இருக்கலாம். அல்லது ஏதோ ஒரு பழைய ஆவணமாக இருக்கலாம்.

உதாரணமாக, நீங்கள் தென்திருப்பேரை ஸ்தலத்தைக் களமாக வைத்துக் கதை எழுதுகிறீர்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். ஒவ்வொரு காட்சியையும் நீங்கள் வர்ணிக்க வேண்டாம். மகரநெடுங்குழைக்காதர், தாமிரவருணி, தெந்திரிப்பேரி கூட்டு என்று எல்லாவற்றையும் விஷ¨வலாகக் காட்டிவிடலாம். இனிமேல் ஒரு கதை என்பது எழுத்தில் மட்டுமே இருக்க வேண்டிய அவசியமில்லை. அந்தக் கதை இன்னும் விரிவு பெற்றுக்கொண்டே போகலாம். அதேபோல், நீங்கள் ஒருவரே கதை எழுதவேண்டும் என்ற அவசியமும் இல்லை. மேலே சொன்ன உதாரணத்தையே எடுத்துக்கொள்வோம். மகரநெடுங்குழைக்காதர் பெருமாள் பற்றி நன்கு அறிந்த வல்லுநர் ஒருவர், அந்தச் சொல்லுக்கு ‘ஹைப்பர் லிங்க்’ செய்து தனக்குத் தெரிந்த சரித்திர, புராணத் தகவல்களையெல்லாம் எழுதலாம். ‘தெந்திரிப்பேரி கூட்டு’ செய்யத் தெரிந்த மாமியருவர், அதை ‘ஹைப்பர் லிங்க்’ செய்து சமையல் ரெசிபி வழங்கலாம். ஒரு கதைதான்… ஆனால், ஓராயிரம் பேரின் பங்களிப்போடு வளரும்!

Ôஹைப்பர்டெக்ஸ்ட் நாவல்Õ (பிஹ்ஜீமீக்ஷீtமீஜ்t ழிஷீஸ்மீறீ) என்றே இதற்குப் பெயர். ஒரே நாவலுக்குள் உள்ள பல்வேறு லிங்க்குகளை, வாசகனின் விருப்பப்படி தேர்ந்தெடுத்துப் படிப்பதின் மூலம், வாசகன் தனக்கான ஒரு கதையை உருவாக்கிக்கொள்கிறான். இந்த வரிசையில் இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற எந்த கட்டுப்பாடும் இந்த நாவலில் கிடையாது. வாசகனின் முழு சுதந்திரம்தான் முக்கியம். 1987&ல் இருந்தே இதுபோன்ற ‘ஹைப்பர் டெக்ஸ்ட் நாவல்Õ புழக்கத்தில் இருக்கிறது என்றாலும், இப்போது இதன் ஆதிக்கம் அதிகரிக்க ஆரம்பித்துள்ளது.

அடுத்து, கிராபிக் டிஸைனர்கள் நிறைய பேர் கவிதை எழுதுகிறார்கள். இவர்கள், கவிதை மட்டும் எழுதுவதில்லை. கவிதைக்குப் பின்னே, பொருத்தமாக ஓவியங்களை வரைந்து, சேகரித்து, தொகுத்து, லைவ்வாக ஓடவிடுகிறார்கள். கவிதையின் மூடுக்கு ஏற்ப காட்சிகள், வண்ணங்கள், தோற்றங்கள். இதை மின்கவிதை, அதாவது இ&பொயட்ரி (ணி-றிஷீமீtக்ஷீஹ்) என்றே அழைக்கிறார்கள். இரண்டாண்டுகளுக்கு ஒரு முறை, சர்வதேச டிஜிட்டல் கவிதைத் திருவிழா நடத்துகிறார்கள்.

அதேபோல், இன்ட்ராக்டிவ் பொயட்ரி (மிஸீtமீக்ஷீணீநீtவீஸ்மீ றிஷீமீtக்ஷீஹ்). மிகவும் சுவாரஸ்யமான பகுதி இது. படிக்கும் வாசகன், வெறுமனே படித்தால் மட்டும் போதாது. அவனும் அந்தக் கவிதை அனுபவத்தில் பங்குபெற வேண்டும். ஈடுபட வேண்டும். வாசகனையும் உள்ளே இழுத்துக்கொண்டு முன்னேறும் கவிதை வகை இது. இதிலேயே இரண்டு வகை இருக்கிறது. ஒரே கவிதையைப் பல்வேறு பகுதிகளாகப் பிரித்துப் போட்டு, வாசகனின் வசதிக்கேற்ப அதை மாற்றிமாற்றி வாசித்துக்கொள்வது ஒன்று. இன்னொன்று, எண்ணற்ற சொற்களை வழங்கிவிட்டு, வாசகனையே, அச்சொற்களின் மூலம் கவிதை புனைய வைப்பது. இதில்லாமல் ‘விஷ¨வல் பொயட்ரி’ என்றொன்றும் இருக்கிறது. நம்ம ஊர் சித்திரக்கவி மாதிரியானது அது.

அடுத்தது, கிராபிக்ஸ் நாவல். பல நாவலாசிரியர்கள் இதுபோல், தங்கள் கதையை ஓவியங்களாக வரைந்து, நிறைய விஷ¨வல் எஃபெக்ட்களைச் சேர்த்து, தொடராகவே இணையத்தில் வெளியிடுகிறார்கள். உதாரணமாக, Ôஅவன் தெருவோரமாக நடந்துகொண்டிருந்தான், பின்னால் வந்த கார், சேற்றை வாரி இறைத்தது, அவன் உடையெல்லாம் நாசமானதுÕ என்று ஒரு கதையில் நீங்கள் எழுதுவீர்கள். கிராபிக்ஸ் நாவலில், அதைச் செய்தே காட்டிவிட முடியும். அதாவது, செயல்கள் அத்தனையையும் விஷ¨வல் ஆக்கிவிட முடியும். கதாபாத்திரத்தின் சிந்தனை மற்றும் பேச்சை மட்டும் நீங்கள் எழுத்தால் எழுதினால் போதும்.

க்ரைம், த்ரில்லர் நாவல்கள்தான் இதுபோன்ற கிராபிக்ஸ் நாவல்களில் எடுபடுகின்றன. சரி, குரல் இல்லாமல் டிஜிட்டல் தொழில்நுட்பமா? கவிதையானாலும் சரி, கதையானாலும் சரி… பொருத்தமான குரல்கள் பின்னணியில் மிகவும் வித்தியாசமாகப் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. கதைகளை டவுன்லோடும் செய்து கொள்ளலாம். இணையத்தின் பெரிய புத்தகக் கடையான Ôஅமேசான்Õ, தன்னுடைய இணையப் பக்கத்தில் Ôஷார்ட்ஸ்Õ (ஷிலீஷீக்ஷீts) என்றொரு தனிப்பகுதியை இதற்காக வைத்திருக்கிறது. சின்னச்சின்ன கதைகளை இப்படி அவர்கள் விற்பனை செய்கிறார்கள். பணத்தைக் கட்டிவிட்டு, டவுன்லோட் செய்துகொள்ள வேண்டியதுதான். அதேபோல், சி.டி&யிலும் இவ்வகைக் கதைகள் கிடைக்கின்றன.

சரி, இவ்வளவு தூரம் சொல்கிறீர்களே, இந்தக்கதைகளை எல்லாம் படித்தால், புத்தகங்களைப் படிப்பதில் உள்ள நிறைவு கிடைக்குமா?

நியாயமான கேள்வி. படைப்பாற்றல் அப்படியேதான் இருக்கிறது. கற்பனைகள் அப்படியேதான் இருக்கின்றன. படைப்பாளியின் நோக்கமும், தரமும் அப்படியேதான் இருக்கின்றன. ஆனால், அவற்றை வெளிப்படுத்த, டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் வழிகள் பின்பற்றப்படுகின்றன. இங்கே, இலக்கியமும் தொழில்நுட்பமும் இணைந்து முற்றிலும் புதிய அனுபவத்தைக் கொடுக்கின்றன. இந்த அனுபவம், நிச்சயம் புத்தகம் படிக்கும் அனுபவத்தைவிட வேறானது!

Posted in Emerging, Generation, HTTP, Junior Vikadan.com, Literarature, New Age, R Venkatesh, Tamil, Technology, Vikatan.com | Leave a Comment »