Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Electric’ Category

State of public transit – Chennai Metro: Electric Trains

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 9, 2007

காற்று வாங்கும் ரயில் நிலையங்கள்; வீணாகும் ரூ. 8 கோடி

சென்னை கடற்கரையில் இருந்து அண்ணாநகர் நோக்கிச் செல்லும் மின்சார ரயில்கள் அனைத்தும் பயணிகள் இல்லாமல் காத்தாடுகின்றன. குறிப்பாக, பாடி, அண்ணாநகர் ரயில் நிலையங்களை 10 பேர் வரைதான் பயன்படுத்துகின்றனர். இதனால், அந்த ரயில் நிலையங்கள் வெறிச்சோடிக் காணப்படுகின்றன. இதன் மூலம், அவற்றுக்கு செலவிடப்பட்ட மக்களின் வரிப்பணம் ரூ. 8 கோடி வீணாகி வருகிறது.

சென்னை கடற்கரை-அண் ணாநகர்-கடற்கரை மார்க்கத்தில் தினமும் 5 ரயில்கள் இயக்கப்படு கின்றன. காலை 7 மணிக்கு அண் ணாநகரில் இருந்து முதல் ரயில் கிளம்புகிறது. இதையடுத்து, பிற் பகல் 12 மணிக்கே அடுத்த ரயில் புறப்படுகிறது.
இதே நேரங்களில் தான் கடற்கரையில் இருந்தும் அண்ணாநக ருக்கு ரயில் புறப்படுகிறது. பிற்பகல் ரயிலுக்குப் பிறகு இரண்டு மணி நேர இடைவெளியில் இரண்டு ரயில்களும், அதன் பின்பு, 4 மணி நேரத்துக்குப் பின்பு கடைசி ரயிலும் விடப்படு கிறது.
சென்னை கடற்கரையில் இருந்து புறப்படும் ரயில், ராயபுரம், வண்ணாரப்பேட்டை, வியா சர்பாடி ஜீவா, பெரம்பூர், வில்லி வாக்கம், பாடி வழியாக அண் ணாநகரை அடைகிறது.
“கடற்கரையில் இருந்து வில்லி வாக்கம் வரை ஓரளவு பயணிகள் ஏறுவார்கள். அதுவும் 100 முதல் 150 வரை தான் இருக்கும்.
வில்லிவாக்கத்துக்குப் பின்பு பாடி, அண்ணாநகரை ரயில் அடையும் போது வெறும் வண் டியாகத் தான் இருக்கும். ஆயி ரம் பேர் வரை ஏறக் கூடிய ரயி லில் வெறும் 100 பேர் பயணம் செய்தால் ரயில்வேக்கு எவ்வளவு நஷ்டம் ஏற்படும்” என்றார் ரயில்வே பணியாளர் ஒருவர்.
பொட்டல் காடாகக் காட்சி அளிக்கும் ரயில் நிலையங்கள்: பாடி, அண்ணாநகர் ரயில் நிலையங்களை மக்கள் பயன்ப டுத்தாத காரணத்தால், அவை பொட்டல் காடாகக் காட்சி அளிக்கின்றன.
“”காலை 7 மணிக்குப் புறப்படும் முதல் ரயிலுக்குப் பின்பு உடனடி யாக ரயில் இயக்கப்படுவ தில்லை. நெரிசல் மிகுந்த நேரங்க ளில் ரயில்களை இயக்கினால் பயணிகள் அதிகமாக வருவார் கள். ஆனால், அதைச் செய்வ தில்லை. பாடி, அண்ணாநகரில் ரயில்வே இருப்புப்பாதை போடப்பட்டது என்பதற்காக, ரயிலை விட்டுக் கொண்டிருக்கி றார்கள்” என்றார் ரயில் நிலைய அதிகாரி.
வீணாகும் ரூ. 8 கோடி: பாடி, அண்ணாநகர் ரயில் நிலையங்கள் கடந்த 3 ஆண்டுக ளுக்கு முன்பு அமைக்கப்பட் டன. இந்த திட்டத்துக்கு ரூ. 8 கோடி வரை செலவிடப்பட் டன. மக்கள் பயன்பாட்டில் இல் லாததால், இரண்டு ரயில் நிலை யங்களும் முடங்கியுள்ளன.
ரயில் நிலையங்களின் கழிவ றைகளுக்கு பூட்டுப் போடப்பட் டுள்ளந. குடிநீர் குழாய்கள் மரச் சக்கைகளால் அடைத்து வைக் கப்பட்டுள்ளன.
“”மாதத்தின் தொடக்கத்தில் டிக்கெட் மூலம் தினமும் ரூ. 500 வரை வருவாய் கிடைக்கும்.
மாதக் கடைசியில் ரூ. 150 கிடைத்தாலே ஆச்சர்யம் தான்.
பயணிகள் யாருமே வராத நிலை யில் நாங்கள் என்ன செய்வது.
ஓய்வெடுக்க வேண்டியது தான்” என்றார் அண்ணாநகரில் உள்ள ரயில்வே ஊழியர்.
“”சென்னை கடற்கரையில் இருந்து வில்லிவாக்கத்துக்கு ரயி லில் 20 நிமிடப் பயணம் தான்.
இதற்கு ஒரு ரயில் என்பதை ஏற் றுக் கொள்ள முடியாது. கோயம் பேடு வரை ரயில் சேவையை நீட் டித்திருந்தால் பயணிகளுக்கு பெரும் பயன் அளித்திருக்கும்” என்றார் பஸ் – ரயில் பயணிகள் நலச் சங்கத் தலைவர் வழக்கறி ஞர் ரவிக்குமார்.
அலட்சியமே அனைத்துக் கும் காரணம்: தற்போது நடைமுறையில் இருக்கும் திட் டத்தால் யாருக்கும் எந்தப் பய னும் இல்லை என பல்வேறு தரப் பினரும் கருத்து தெரிவித்துள்ள னர். சென்னை கடற்கரையில் இருந்து அண்ணா நகருக்குப் பதி லாக, கோயம்பேடுக்கு ரயில் சேவையைத் தொடங்கி இருக்க வேண்டும்.
இதைச் செய்ய ரயில்வே நிர்வா கம் தவறி விட்டது. இதைத் தொடர்ந்து, இந்தப் பகுதியில் அடுத்தகட்ட திட்டங்களை நிறைவேற்றுவதில் ரயில்வே துறை அலட்சியம் காட்டி வருகி றது. இந்த அலட்சியமே தற் போது நடைமுறையில் இருக் கும் திட்டம் வீணாகுவதற்கு முக் கிய காரணம்.

சென்னை அண்ணாநகர் ரயில் நிலையத்துக்கு பயணிகள் மிகக் குறைவாக வருவதால், வாகனம் நிறுத்தும் இடமாக மாறியுள்ள கழிப்பறை . மதிய உணவை முடித்து விட்டு ஆழ்ந்த தூக்கத்தில் இருக்கும் ரயில்வே ஊழியர்கள் .

Posted in Anna Nagar, Annanagar, Annangar, Beach, Chennai, City, Commute, Commuter, Electric, Express, Fast, Madras, Metro, Paadi, Padi, Public, Railways, Rapid, Station, Suburban, Trains, transit, Transport, Transportation, Work, Worker | Leave a Comment »

Dinamani op-ed: TJS George – East India Company still rocks on as World Bank

Posted by Snapjudge மேல் ஜூலை 22, 2007

கிழக்கிந்திய கம்பெனி சாகவில்லை, உயிரோடு இருக்கிறது!

டி.ஜே.எஸ். ஜார்ஜ்

எவ்வளவு சுலபமாக நாடுகள் தங்களுடைய வரலாற்றை சலவைக்குப் போட்டுவிடுகின்றன! இரண்டாவது உலகப் போரில் ஜப்பானிய ராணுவம் செய்த அக்கிரமங்கள் என்ன என்று அந்நாட்டின் புதிய தலைமுறைக்குத் தெரியவே தெரியாது. வியத்நாமில் அமெரிக்கா செய்த அக்கிரமங்கள் அந்நாட்டு பள்ளிக்கூட குழந்தைகளுக்குத் தெரியாது.

ஆரியர்கள் திருநைனார்குறிச்சியிலிருந்தும், திராவிடர்கள் குலு பள்ளத்தாக்கிலிருந்தும் வந்தார்கள் என்று நம் நாட்டின் சில பள்ளிக்கூடங்களில் மாணவர்களுக்குப் பாடம் சொல்லித் தருகின்றனர்!

உண்மை எது என்பது, (வரலாற்று) குப்பையைப் பெருக்க வந்தவர்களின் கண்களில்தான் இருக்கிறது.

பிரிட்டிஷ்காரர்கள்தான் தங்களுடைய ரயில்வே மூலமும் தடையற்ற வர்த்தக நடைமுறைகள் மூலமும் இந்தியாவுக்கு வாழ்வையும் வளத்தையும் கொண்டுவந்து சேர்த்தார்கள் என்று இந்தியாவில் படித்த பெரும்பாலானவர்கள் இன்னமும் நம்பிக் கொண்டிருக்கிறார்கள்.

உண்மை என்னவோ தலைகீழாக இருக்கிறது. இந்தியாவின் செல்வமும் இயற்கை வளங்களும்தான் பிரிட்டனுக்குப் புது வாழ்வைத் தந்தன.

இந்தியாவின் வளமான பகுதிகள் பல, பிரிட்டிஷாரின் நன்மைக்காக இங்கே அடியோடு அழிக்கப்பட்டன. பிரிட்டனின் “மான்செஸ்டர் டி-73′ ரக பருத்தியை வாழ்விப்பதற்காக டாக்கா மஸ்லின் பூண்டோடு அழிக்கப்பட்டது. அந்தத் துணியை நெய்த திறமைவாய்ந்த நெசவாளர்களின் கட்டைவிரலை வெட்டி வீசினர் பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனித் துரைமார்கள்!

ஏகாதிபத்திய காலத்தில் நிலவிவந்த உண்மை நிலவரங்களை வெளிக்கொண்டுவரும் வேலையை, ஆய்வு நூல்கள் மூலம் அவ்வப்போது மேற்கொள்கின்றனர் மேற்கத்திய நாடுகளின் அறிஞர்கள்.

இப்போதுள்ள பன்னாட்டு நிறுவனங்களின் (எம்.என்.சி.) முன்னோடியாகத் திகழ்ந்த கிழக்கிந்திய கம்பெனி எப்படி ரத்த வெறி பிடித்து அலைந்தது என்பதை நிக் ராபின்ஸ் என்பவர் தன்னுடைய ‘The Corporation that Changed the World: How the East India Company Shaped the Modern Multinational’ என்ற நூலில் அற்புதமாக விளக்கியிருக்கிறார்.

அச்சத்தில் உறைந்தே போகும் அளவுக்குச் சில உண்மைகளை அவர் அந் நூலில் தெரிவித்துள்ளார். ராபர்ட் கிளைவ், கிழக்கிந்திய கம்பெனியின் வியாபாரத்துக்குள் “ஒரு உள் வியாபாரம்’ செய்து பெரும் தொகையை அள்ளியிருக்கிறார். கம்பெனியின் தலைவரும் அவரே என்பதால் மோசடி செய்வது அவருக்குக் கடினமான வேலையாக இருக்கவில்லை.

பிரிட்டனிலோ, கிழக்கிந்திய கம்பெனியின் இயக்குநர்கள் பிரிட்டிஷ் நாடாளுமன்றத்திடமிருந்தும் அரசிடமிருந்தும் அவ்வப்போது சலுகைகளைத் தொடர்ந்து பெற, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அதிகாரிகளுக்கும் தொடர்ந்து லஞ்சம் கொடுத்துக் கொண்டே இருந்துள்ளனர்.

“மேலை நாடுகளின் நாகரிகத்தின் பின்னால் இருப்பது, ஈரானிய எண்ணெய் வயல்களில் அடித்த கொள்ளையில் கிடைத்த லாபம்தான்’ என்று ஈரானிய அதிபர் அகமதி நிஜாத் சொல்வதில் உண்மை இல்லாமல் இல்லை.

இதையெல்லாம் எடுத்துச் சொன்னால் அவனை, “மரை கழன்றவன்’ என்றும் “மேலைநாடுகளுக்கு எதிரானவன்’ என்றும் முத்திரை குத்தும் அளவுக்கு எல்லோருடைய மூளையும் அற்புதமாகச் சலவை செய்யப்பட்டிருக்கிறது.

அகமதி நிஜாத் என்ன சொன்னாரோ அது உண்மைதான்! 1950-களின் ஆரம்பத்தில் ஈரானில் மக்களிடையே மிகுந்த செல்வாக்கு பெற்றிருந்த மூசாதேக் என்பவர் ஈரானின் மன்னரான ஷாவை நாட்டைவிட்டே ஓடவைத்தார். பிறகு ஈரானின் எண்ணெய் வயல்களை தேச உடைமையாக்கினார். எண்ணெய் வயல்களைச் சொந்தமாக வைத்திருந்த பெரும் பணக்காரர்களும், மேற்கத்திய நாடுகளின் அரசுகளும் சில மாதங்களுக்கெல்லாம் இணைந்து செயல்பட்டு மன்னர் ஷாவை மீண்டும் ஈரானுக்கு அழைத்துவந்து முடிசூட்டின. மூசாதேக் மீது தேசத் துரோகக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு தண்டிக்கப்பட்டார்.

இது தனிப்பட்ட ஒரு சம்பவம் அல்ல. சூயஸ் கால்வாயை கமால் அப்துல் நாசர் தேச உடைமையாக்கியபோது, எகிப்துடன் யுத்தத்துக்குச் சென்று மூக்குடைபட்டு திரும்பியது பிரிட்டன்.

பனாமா கால்வாய் யாருக்குச் சொந்தம் என்ற நீண்ட கால பிரச்னை முற்றி, 1980-களின் பிற்பகுதியில் அமெரிக்காவுக்கு எதிரான கலவரமாக உருவெடுத்தது. அப்போது அமெரிக்கா பனாமா மீது படையெடுத்து, அதன் அதிபர் மேனுவல் நோரிகாவை போதைப் பொருள் கடத்தல் சட்டப்படி கைது செய்தது.

ஏகாதிபத்தியத்திடம் காலனிகளாக இருந்த நாடுகள் விடுதலை பெற்ற பிறகும் காலனியாதிக்கம் முடியவில்லை; 19-வது நூற்றாண்டில் பிரிட்டன் செய்த வேலையை இப்போது அமெரிக்கா எடுத்துக் கொண்டுவிட்டது. வியாபாரத்தில் உள்ளடி வேலை செய்யும் “உள்-வர்த்தகம்’ என்ற அயோக்கியத்தனத்தை அது கையாள்கிறது. என்ரான், வேர்ல்ட் காம். போன்ற பன்னாட்டுத் தொழில் நிறுவனங்கள் அடையாளம் இல்லாமல் மறைந்த கதையைப் பார்த்தாலே இந்த பித்தலாட்டம் புரியும்.

அரசியல்ரீதியான ஊழல் என்பதை, வாஷிங்டனில் “ஒவ்வொரு தொழிலுக்கும் ஒரு தரகுக் கூட்டம்’ என்று நிலைநிறுத்திவிட்டது அமெரிக்கா. அத்தோடுகூட, அது தனது ராணுவ பலத்தையும் மிதமிஞ்சிப் பயன்படுத்துகிறது.

இராக்கில், அமெரிக்கா தலைமையிலான பன்னாட்டுப் படைகள் காலடி எடுத்து வைத்தது அங்குள்ள எண்ணெய் வளத்துக்காகத்தான் என்பதில் யாருக்காவது சந்தேகம் இருக்கிறதா?

இப்போது “கிழக்கிந்திய கம்பெனி’ உலகம் முழுக்க பரவியிருக்கிறது. ராபர்ட் கிளைவும் வாரன் ஹேஸ்டிங்ஸýம் இன்னமும் உலா வருகின்றனர். அவர்களின் பெயர்தான் “உலக வங்கி’, “உலகமயமாக்கல்’ என்று மாற்றி வழங்கப்படுகிறது!

————————————————————————————————————–
யாருக்காக மானியங்கள்?

விவசாயத்துக்கான மானியங்கள் தொடரும் என்று பிரதமர் மன்மோகன் சிங் உறுதி அளித்திருக்கிறார். அதே சமயம், உரங்களுக்குத் தரப்படும் மானியத்தை புதிய முறையில் எப்படி வழங்குவது என்பதை முடிவு செய்து அடுத்த ஆண்டு முதல் அமலுக்குக் கொண்டுவரலாம், இந்த ஆண்டு பழைய முறையிலேயே மானிய உதவியை அளிக்கலாம் என்றும் உயர்நிலைக் குழு கூட்டத்தில் பிரதமர் முடிவெடுத்திருக்கிறார்.

விவசாயத்துக்கு மானியம் என்பது அவசியம். அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி போன்ற வளர்ந்த நாடுகளுக்கே இதில் இருவித கருத்துகள் இல்லை. அதே சமயம், உர மானியம் என்பது யாருக்குப் போகிறது, அது நீடிப்பது அவசியமா என்பதைக் கட்டாயம் தீர்மானித்தாக வேண்டும்.

கடந்த ஆண்டு உர மானிய நிலுவை ரூ.8,000 கோடி என்றும் இந்த ஆண்டு ரூ.40,000 கோடி என்றும் அரசே வெளியிட்ட புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.

மத்திய புள்ளியியல் துறை கணக்கெடுப்பின்படி, 2000-01-ம் ஆண்டில் உர மானியமாக ரூ.13,800 கோடி, மின்சார மானியமாக ரூ.6,449 கோடி, பாசன மானியமாக ரூ.13,681 கோடி, இதர மானியங்களாக ரூ.854 கோடி என்று மொத்தம் ரூ.34,784 கோடி விவசாயத்துக்காக தரப்பட்டுள்ளது.

உணவு தானிய கையிருப்பைப் பொருத்தவரை, 3 மாத கையிருப்பு, 6 மாத கையிருப்பு என்பதெல்லாம், பொது விநியோக முறைக்கு மாதந்தோறும் எடுத்துக்கொள்ளப்படும் அரிசி, கோதுமை போன்றவற்றின் அளவைப் பொருத்ததே தவிர உண்மையில் நம் நாட்டு மக்களின் தேவையைப் பொருத்தவை அல்ல.

லட்சக்கணக்கான டன்கள் கோதுமை, அரிசி கையிருப்பில் இருக்கும் அதேவேளையில் 20 கோடி மக்கள் வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழ்கிறார்கள் என்பது கசப்பான உண்மை. ஒரு வேளை சாப்பாட்டுக்கும் வழியில்லாமல் இரவில் பட்டினியோடு படுப்பவர்கள் பற்றிய புள்ளிவிவரம் ஏதும் திரட்டப்படுவதில்லை.

“வேலைக்கு உணவு திட்டம்’ என்ற முன்னோடி திட்டம்கூட, தேர்வு செய்யப்பட்ட மிகவும் பின்தங்கிய மாவட்டங்களில்தான் முனைப்பாக அமல்படுத்தப்படுகிறது. அதுவும் உள்ளாட்சி நிர்வாக அமைப்புகளின் உதவியோடு மேற்கொள்ளப்படும் சில திட்டங்களில் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.

உர மானியம் தொடர்பாக அடிக்கடி பேசப்படும், அதே வேகத்தில் மறக்கப்படும் இரு விஷயங்கள் நினைவுபடுத்தப்பட வேண்டியவை. உர உற்பத்தியில் பொதுத்துறை (அரசு) நிறுவனங்களும், தனியார் நிறுவனங்களும் ஈடுபடுகின்றன. உர உற்பத்திக்கு அரசு நிறுவனங்கள் எவ்வளவு (விரயமாக) செலவு செய்தாலும், எந்த அளவு உற்பத்தி செய்தாலும் அவற்றை அரசு வாங்கிக் கொண்டு மானியத்தையும் கையோடு வழங்கிவிடுவதால், அரசின் மானியம் விரயமாகிறது என்பது முதல் குற்றச்சாட்டு. நவீனத் தொழில்நுட்பத்தில், செலவைக் குறைத்து தயாரிப்பது அவசியம் என்ற நிர்பந்தம் இல்லாமல் பழைய முறையிலேயே தயாரிப்பில் தொடர்ந்து ஈடுபடுகிறார்கள் என்பது இக்குற்றச்சாட்டின் சாரம்.

அடுத்தது, ரசாயன உரங்களால் நிலம் தன்னுடைய இயற்கையான சத்தை இழப்பதுடன், சாகுபடியாகும் உணவு தானியங்களும் உண்பவர்களுக்குத் தீங்கை விளைவிப்பனவாக இருக்கின்றன என்பதாகும். எனவே இயற்கை உரங்களைப் பயன்படுத்த வேண்டும். மக்கிய எருவையும், மண்புழுக்களையும் நிலங்களில் இட்டு மண்ணை வளப்படுத்த வேண்டும் என்ற கூக்குரல் எங்கும் கேட்க ஆரம்பித்துவிட்டது. இயற்கை வேளாண்மை என்ற கருத்தை வலியுறுத்துகிறவர்கள் இதையும் வலியுறுத்துகின்றனர்.

விவசாய விலை நிர்ணயக் குழு என்ற உயர் அமைப்பில், சாகுபடியாளர்களின் நேரடிப் பிரதிநிதிகளை அதிக அளவில் சேர்த்து, அவர்களைக் கொண்டே பிராந்தியங்களுக்கு ஏற்ற வகையில் கொள்முதல் விலைகளையும் சிறப்பு மானியங்களையும் நிர்ணயிக்க வேண்டும். வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதன் குழு பரிந்துரைத்துள்ளபடி, சந்தையில் நிலவும் விலைக்குக் குறையாமல் கொள்முதலுக்கு விலைதரப்பட வேண்டும். குறைந்தபட்ச கொள்முதல் விலை என்பது, விவசாயிகளின் அடிவயிற்றில் அடிப்பதாக இருப்பதைக் கைவிட வேண்டும். வேளாண் பொருள்களின் விலை உயர்ந்தால் பணவீக்க விகிதம் கட்டுக்கடங்காமல் போய்விடும் என்று “”நிபுணர்கள்” மிரட்டுவதை கேட்டுக் கொண்டு விவசாயத்தைப் படுகுழியில் தள்ளக்கூடாது.

Posted in abuse, Affairs, Agriculture, America, bank, Barrier, Biz, Business, Canal, Center, CIA, Consumer, Corn, Corporation, Current, Customer, Divide, Duty, Economy, Electric, Electricity, England, ethanol, Exploit, Exploitation, External, Farming, Farms, Fertilizer, Fertilizers, Finance, Foreign, GDP, Govt, Growth, IMF, Incentive, Incentives, Income, Industry, International, Iran, Irrigation, IT, MNC, multinational, Needy, NRI, Panama, Poor, Power, Queen, Relations, Rich, State, Subsidy, Suez, Tamil, Tariffs, Taxes, Trade, UK, Unipolar, USA, War, warlord, WB, Wealthy, World, world bank | Leave a Comment »

Blessed by a U.S. Official, China Will Buy 4 Nuclear Reactors

Posted by Snapjudge மேல் ஏப்ரல் 25, 2007

ரூ. 33,600 கோடியில் 4 அணு உலைகளை அமெரிக்காவிலிருந்து வாங்குகிறது சீனா

பெய்ஜிங், ஏப். 25: அமெரிக்காவிலிருந்து ரூ. 33,600 கோடி மதிப்பிலான 4 அதிநவீன அணு உலைகளை சீனா வாங்க உள்ளது.

தற்போது சீனாவில் 1970-ம் ஆண்டுகளில் உருவான அணுஉலைகள் பயன்பாட்டில் உள்ளன. அவற்றைவிட தொழில் நுட்ப ரீதியிலும் பாதுகாப்பு அம்சங்களிலும், விலை அடிப்படையிலும் அமெரிக்காவிடம் வாங்க உள்ள அணு உலைகள் மேம்பட்டதாக திகழும்.

இதற்காக வெஸ்டிங்ஹவுஸ் எலெக்ட்ரிக் கம்பெனி என்ற நிறுவனத்துடன் சீனா ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளது.

இதன்படி அணுஉலைக்கான சாதனங்கள், இதர தேவைகள், தொழில் நுட்ப உதவி உள்பட எல்லா தொழில்நுட்பங்களையும் ஒப்படைக்க உள்ளது அமெரிக்க நிறுவனம். இதற்கான நடைமுறைகள் அனத்தும் மே மாதத்தில் முடிவடையும். தற்போதைய நிலவரப்படி 2013-ம் ஆண்டுக்குள் 4 அணு உலைகளில் முதலாவது தனது மின் உற்பத்தியை தொடங்கிவிடும் என்று சீனா டெய்லி பத்திரிகை செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்தி தெரிவிக்கிறது.

இதனிடையே, தமது அணு மின் சக்தி திட்டங்களுக்கு உள்நாட்டிலேயே தயாரான சொந்த தொழில்நுட்பத்தின் மூலம் உருவாக்கப்படும் எரிபொருளை 2020 ம் ஆண்டுக்குள் பயன்படுத்த சீனா தீவிரமாக உள்ளது. தற்போது தனது அணு மின்திட்டங்களுக்கு தேவையான எரிபொருளை இறக்குமதி செய்து சமாளித்து வருகிறது சீனா.

சொந்த தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்படும் எரிபொருள் தொழில்நுட்பத்துக்கு சாதகமாக அமெரிக்காவிடம் இருந்து வாங்கப்படும் அணு உலைகள் திகழும்.

இந்த தகவலை ஷாங்காயில் திங்கள்கிழமை நடந்த கருத்தரங்கு ஒன்றில் சீன அணுசக்தி ஆணைய தலைவர் சன் கின் தெரிவித்தார்.

நிலக்கரியை பயன்படுத்தி மின்சாரம் தயாரிப்பதை வெகுவாக குறைக்கவும் சீனா திட்டமிட்டுள்ளது. நிலக்கரியைப் பயன்படுத்தும் அனல் மின்நிலையங்களால் சுற்றுச்சூழல் வெகுவாக மாசடைகிறது. எனவே, 2020க்குள் அணு மின் நிலையங்கள் மூலம் மின்சாரத்தை கணிசமாக உற்பத்தி செய்யவும் (40 மில்லியன் கிலோ வாட்) அது திட்டமிட்டுள்ளது. 2005ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது 5 மடங்காகும்.

சீனாவின் முதல் அணு மின்நிலையம் கிழக்கு கடற்கரையில் உள்ள ஷேஜியாங் மாநிலத்தில் 1991ல் நிறுவப்பட்டது.

Posted in America, Atom, Beijing, Bombs, China, China National Nuclear Corp, Electric, Electricity, National Development and Reform Commission, Nuclear, Power, reactors, Technology, Toshiba, Uranium, US, USA, Washington, Westinghouse | Leave a Comment »