Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Ekadasi’ Category

The path to Nirvana: Mahasivarathri to Vaikunda Ekadasi

Posted by Snapjudge மேல் மார்ச் 5, 2008

மோட்சத்துக்குப் போகும் வழி!

ராணிப்பேட்டை ரங்கன்


“தமிழன் என்றொரு இனம் உண்டு, தனியே அவர்க்கொரு குணம் உண்டு’ என்பது வெற்று வார்த்தைகள் மட்டும் அல்ல, அனுபவபூர்வமாக உணர்ந்து சொன்னவை.

தமிழ்நாட்டவர்களின் பக்தி, நாட்டின் பிற மாநிலத்தவரின் பக்தியைவிட அலாதியானது. கல்தோன்றி மண்தோன்றா காலத்திலிருந்தே இங்கே பக்தி “”ஒரு மார்க்கமாகத்தான்” வளர்ந்து வருகிறது.

வேப்பிலை ஆடை கட்டுவது, மண் சோறு சாப்பிடுவது, மார்பில் கத்தி போடுவது, தலையில் தேங்காய் உடைப்பது, பாய்ந்து சென்று கோழியை வாயால் கவ்வி ரத்தம் குடிப்பது, திருமணம் ஆகாத கன்னிப்பெண் ஆடை அணியாமல் ஊரை வலம் வருவது (பாரதி ராஜா சொல்லாவிட்டால் நமக்கு இது தெரிந்திருக்கவே வாய்ப்பு இல்லை), தனியா சேர்க்காமல் மிளகாயை மட்டும் யாகத்தில் சேர்ப்பது, பாடைக் காவடியில் படுத்துச் செல்வது, தூக்கம் என்ற நேர்ச்சையில் தொங்குவது, ஏரோப்ளேன் காவடி, லாரி-வேன் டிரெய்லர் காவடி என்று பக்தியில் இத்தனை ரகங்களா என்று வியக்கவைப்பதில் வல்லவர்கள் தமிழர்கள்.

சென்னை மாநகர பஸ்ஸில் வந்துகொண்டிருந்தபோது அந்த சுவரொட்டி சற்றே வித்தியாசமாகக் கண்ணில்பட்டது. “”ஒரே காட்சியில் 3 திரைப்படங்கள்” என்பதே அது.

ஐம்பெரும் அறிஞர் கலைஞரும், சூப்பர் ஸ்டார் ரஜினியும் உச்சத்தில் இருக்கும்போதே தமிழ் திரையுலகுக்கு இப்படிப்பட்ட சரிவா என்று துணுக்குற்றேன். “”ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம்” என்பது போய், மூன்றாகிவிட்டதே என்ற சிந்தனையோடு பஸ்ஸிலிருந்து இறங்கி, அதே சுவரொட்டியை அருகில் இருந்து படித்தேன். அப்போதுதான் தெளிவு பிறந்தது.

ஆம்… மகா சிவராத்திரிக்குத்தான் இந்த 3 திரைப்பட சிறப்புக் காட்சி. அடடா… தமிழ்நாட்டில் இன்னாருக்குத்தான் பக்தி, இன்னாருக்கு இல்லை என்று அவசரப்பட்டு நாம் ஒரு முடிவுக்கு வந்துவிடக்கூடாது. பக்த சிரோன்மணிகளின் நன்மைக்காகவே கோடம்பாக்கத்தார் சிந்தித்து இப்படி ஒரு விரதா வியூகத்தை வகுத்துத் தந்திருக்கிறார்கள்.

வைகுண்ட ஏகாதசியன்று இரவு முழுக்க கண் விழித்திருந்தால் மோட்சம் நிச்சயம் என்பதால், வெவ்வேறு வழிகளில் அதை கடைப்பிடித்தும் எதுவும் வெற்றிகரமாக இல்லாததால், பகுத்தறிவும் பக்தியும் ஒருங்கே கைவரப்பெற்ற தமிழன், ஏகாதசியன்று இரவில் ஒரே காட்சியில் 3 திரைப்படங்களைப் பார்த்து “மோட்சத்துக்குப்’ போக ஆரம்பித்தான். (அப்படி அந்த நாளில் தவறவிட்டவனுக்காகவே சென்னையில் மோட்சம் என்ற பெயரில் தியேட்டரைக் கட்டி வைத்திருக்கிறார்கள்)

வைணவத்துக்கு ஏகாதசி என்றால் சைவத்துக்கு சிவராத்திரி அல்லவா? சைவர்கள் மட்டும் தூங்கி நரகத்துக்குப் போக வேண்டுமா என்ற ஆதங்கத்தில்தான் இந்த 3 திரைப்படங்கள்.

இத் திரைப்படங்களின் பெயர்களை வெளியிட விரும்பவில்லை, ஆனால் நல்ல பேக்கேஜ். அதில் ஒன்று மலையாளப்படம். சிவராத்திரி மட்டும் அல்ல, அதை அடுத்து வரும் ராத்திரிகளுக்கும் கண்விழிப்பு நிச்சயம்.

எங்கு எதைச் செய்தாலும் அதை பக்தி பூர்வமாகச் செய்வதில் தமிழனுக்கு நிகரே கிடையாது. முன்பெல்லாம் தனியார்தான் ஒயின் கடை வைத்திருந்தார்கள். மறக்காமல் விநாயகா ஒயின்ஸ், வெங்கடேஸ்வரா ஒயின்ஸ், அருணாசலா ஒயின்ஸ் என்று எல்லாவற்றையும் அந்த பரம்பொருளுக்கு அர்ப்பணித்துவிட்டே தொழிலை நடத்திவந்தார்கள்.

ஒன்று நிச்சயம் ஐயா, தமிழ்நாட்டில் பிறந்தவன் கூடாத நட்பால் பொதுவுடமைவாதியாகவோ, பகுத்தறிவாளனாகவோ மாறினால்கூட அவனை அந்த நடராஜன், சிவராத்திரி சமயத்தில் காந்தம்போல இழுத்துவிடுகிறான். எப்படி என்று கேட்காதீர்கள், அது “சிதம்பர ரகசியம்’.

Posted in Bakthi, Belief, bhakthi, Cinema, Ekadasi, Films, God, Hindu, Hinduism, Hindutva, Mahashivarathri, Mahasivarathri, Moksha, Movies, Nirvana, Religion, shivarathri, shivrathri, sivarathri, sivrathri, Superstition | Leave a Comment »

Paramapatha gates for Vaikunda Ekadasi Special – Vaishnavism, Hinduism, Religion, God, Lord Narayana

Posted by Snapjudge மேல் திசெம்பர் 19, 2007

Host unlimited photos at slide.com for FREE!

ஸ்ரீநம்பெருமாள் பிரவேசிக்கும் பரமபதவாசல்
Host unlimited photos at slide.com for FREE!

ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதர் சுவாமி திருக்கோயிலில் வியாழக்கிழமை (டிச.20) அதிகாலை ஸ்ரீநம்பெருமாள்பிரவேசிக்கவுள்ள பரமபதவாசல்.

முத்து அலங்காரத்தில் ஸ்ரீநம்பெருமாள்…
Host unlimited photos at slide.com for FREE!

ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதர் சுவாமி திருக்கோயில் வைகுண்ட ஏகாதசி பகல்பத்து திருவிழாவின் ஒன்பதாம் நாளான செவ்வாய்க்கிழமை முத்து அலங்காரத்தில் அர்ச்சுன மண்டபத்தில் பக்தர்களுக்குக் காட்சியளிக்கும் ஸ்ரீநம்பெருமாள்.

ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில் பரமபதவாசல் திறப்பு

Host unlimited photos at slide.com for FREE!

திருச்சி, டிச. 20: திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்க நாதர் சுவாமி திருக்கோயில் வைகுண்ட ஏகாதசி திருவிழா வில், வியாழக்கிழமை அதி காலை பரமபதவாசல் திறக்கப் பட்டது. பல்லாயிரக்கணக் கான பக்தர்கள் மழையிலும் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.
வைகுண்ட ஏகாதசித் திருவி ழாவில் பரமபதவாசல் திறப் புக்காக ஸ்ரீநம்பெருமாள் பச் சைப் பட்டு, ரத்தின அங்கி, பச் சைக்கிளிமாலை, பாண்டியன் கொண்டையுடன் வியாழக்கி ழமை அதிகாலை 4.15 மணிக்கு கருவறையிலிருந்து புறப்பட்டு, ஜயவிஜயா வாசல் வழியாக சந்தனு மண்டபத் தைக் கடந்தார்.
அங்கு ஸ்ரீரங்கம் ஸ்ரீரங்க நாராயண ஜீயர் சுவாமிகள், ஸ்தலத்தார், மணியக்காரர்க ளுக்கு மரியாதை செய்யப் பட்ட பின்னர் மேலப்படி வழி யாக நீலக்கண்ணாடி பகுதிக் குச் சென்று பின்னர் ராஜம கேந்திரன் திருச்சுற்றை ஸ்ரீநம் பெருமாள் அடைந்தார்.
இதனைத் தொடர்ந்து இச் சுற்று வழியாக பிரதட்சணம் வந்து நாழிகேட்டான் வாசல் வழியாக மூன்றாம் பிரகாரம் என்றழைக்கப்படும் குலசேக ரன் சுற்று வந்தார். பின்னர், தங்கக்கொடி மரம், துரைப்பி ரதட்சணம் வழியாக விரஜா நதி மண்டபத்தை நம்பெரு மாள் சென்றடைந்தார்.
விரஜாநதி மண்டபத்தில் அரைமணி நேரம் சந்தியா வந்தனம் செய்த பிறகு, காலை 5.25 மணிக்கு திறக் கப்பட்ட பரமபதவாசலில் பிரவேசித்தார். அங்கிருந்து சந்திரபுஷ்கரணி, மணல் வெளி, தவுட்ரவாசல் வழியா கத் திருக்கொட்டகையை அடைந்தார் ஸ்ரீநம்பெரு மாள்.

திருக்கொட்டகையில் மரி யாதை அளித்த பின்னர் ஆஸ்தான மண்டபம் என்ற ழைக்கப்படும் திருமாமணி மண்டபத்தில் எழுந்தருளி னார். பக்தர்களுக்கு ரத்தின அங்கியுடன் நம்பெருமாள் இரவு வரை பக்தர்களுக்குக் காட்சியளித்தார்.
ஸ்ரீநம்பெருமாள் கருவ றையிலிருந்து புறப்பட்ட பிறகு, பெரியபெருமாளுக்கு முத்தங்கி சாத்தப்பட்டு பக்தர் கள் சேவை செய்ய அனுமதிக் கப்பட்டனர்.

Posted in Ekadasi, Ekadhasi, Ekathasi, Hindu, Paramapadha, Paramapadham, Paramapatha, Paramapatham | Leave a Comment »