Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Effigy’ Category

Vijay incites Kreedam movie clashes? – Ajith fan club vs Trisha admirers

Posted by Snapjudge மேல் ஜூலை 20, 2007

oLiyile: Review: Kireedam (MalayaLam)

பூனையாக இல்லாமல் போன சோகங்கள்: கிரீடம் பெண்ணீய விமர்சனம்

குரல்வலை: கிரீடம்

கிரீடம் (2007) « Manoranjitam

செல்வேந்திரன்: தல’ தப்புமா…?!

செப்புப்பட்டயம்: கிரீடம் திரைவ�

வெட்டிப்பயல்: கிரீடம் – முள் கிரீடமா?

ராசபார்வை…: கிரீடம்!

சற்றுமுன்…: சென்னையில் திரையிட அஜீத்தின் `கிரீடம்’ படம் ரூ.75 லட்சத்துக்கு விற்பனை

Blogeswari: KIREEDAM: ORU KIZHISAL

BlogsOfRaghs :: பல்லவி & Charanam

Welcome to Sify.com

MSN INDIA – கிரீடம் – விமர்சனம்

சிவபாலன்: இவர்களைத் திருத்தவே முடியாதா!?

சும்மா டைம் பாஸ் மச்சி…..: ‘தல’க்கு அட்டகாசமாக பொருந்துகிறது கிரீடம்!

தமிழ் பூக்கள்: அஜீத்க்கு கிரீடம் சூட்டுமா ‘கிரீடம்’?

Mottaippaiyan: கிரீடம் விமர்சனம்

‘கிரீடம்’ – பாக்ஸ் ஆபிஸ் ஹிட்! :Sutharsan

Muthu’s Rambling Blog: Kireedam – Not what it means

Ultimate Star – Ajith Kumar Fans Club: Kreedam climax – behind the scenes

Blog with a Difference: Kireedam – Ajith’s Crown

Kreedam – Ajith hurts his back: Shooting gets affected « Tamil News: முதுகுவலியால் படப்பிடிப்பு ரத்து: அஜீத்குமார் இன்று சென்னை திரும்புகிறார்- ஆஸ்பத்திரியில் மீண்டும் சிகிச்சை


அஜீத், திரிஷா ரசிகர்கள் மோதல்- தியேட்டர்களில் போலீஸ் குவிப்பு அஜீத், திரிஷா ஜோடியாக நடித்த கிரீடம் படம் இன்று ரிலீசானது. இதற்காக திரிஷா ரசிகர்கள் தியேட்டர்களில் கட்அவுட், பேனர் வைத்தனர். கொடி தோரணங்களும் கட்டினர்.அஜீத், ரசிகர்களும் போட்டி போட்டு பேனர் கட் அவுட் வைத்தார்கள். சில இடங்களில் திரிஷா, பேனர்கள் கிழிக்கப்பட்டன.திருவான்மிïரில் உள்ள ஒரு தியேட்டரில் அஜீத் ரசிகர்கள் 15 அடி உயர கட் அவுட் நிறுவினர். திரிஷா ரசிகர்களும் லாரியில் பேனர்களை கொண்டு வந்து இறக்கி தியேட்டரை சுற்றி வைத்தனர்.இதனால் இரு தரப்பு ரசிகர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். அஜீத் பேனர் வைக்க இடம் வேண்டும் என்று அவரது ரசிகர்கள் கோஷமிட்டனர். திரிஷா பேனர்கள் கிழிக்கப்பட்ட தகவல் அறிந்ததும் போலீசார் அங்கு விரைந்தனர். ரசிகர் களை சமரசம் செய்தார்கள்.இது போல் `கிரீடம்’ ரிலீசான அனைத்து தியேட்டர்களின் வாயில்களிலும் ரசிகர்கள் மோதிக் கொண்டார்கள்.

திரிஷா பேனர்களை கிழித்தவர்கள் பற்றி புகார் அளிக்குமாறு திரிஷா ரசிகர் மன்றத்தினரிடம் போலீசார் கேட்டனர். ஆனால் அவர் கள் புகார் எதுவும் அளிக்க வில்லை. இதனால் அஜீத் ரசிகர்களை கைது செய்யாமல் விரட்டினர்.

அஜீத் ரசிகர் மன்ற தலைவர் கதிர் இது பற்றி கூறும் போது திரிஷா ரசிகர்கள் தமிழ்நாடு முழுவதும் மொத்தமே 5 ஆயிரம் பேர்தான் உள்ளனர். ஆனால் அஜீத் மன்றத்தில் 15 லட்சம் பேர் இருக்கிறார்கள். தமிழகத்தில் நடிகைகளுக்கு கட் அவுட் வைக்கும் பழக்கம் இல்லை. ஆனால் திரிஷா ரசிகர்கள் இடங்களை ஆக்கிர மித்து கட்அவுட் வைத்தனர். அஜீத் பேனர் வைக்க இடம் இல்லாமல் செய்து விட்டனர் என்று குறை கூறினார்.

திரிஷா ரசிகர் மன்ற தலைவி ஜெசி கூறும் போது சம்திங் சம்திங் படத்துக்கே நாங்கள் திரிஷாவின் பேனர் வைத் தோம். உதிரம் கொடுப்போம், உயிர்களை காப்போம், புகையிலை தடுப்போம், புற்று நோய் ஒழிப்போம் என்ற வாசகங்கள் அடங்கிய சுவரொட்டிகளைத்தான் நாங்கள் ஒட்டியுள்ளோம். புற்று நோய் தீமைகளை பொதுமக்களுக்கு விளக்கும் ஒரு விழிப்புணர்வாகத்தான் இந்த பேனர்களை அமைத்தோம். அவற்றை கிழித்து விட்டனர். என்று வருத்தப்பட்டார்.

அஜீத், திரிஷா ரசிகர்கள் மோதலை தொடர்ந்து கிரீடம் ரிலீசாகும் தியேட்டர் களில் இன்று போலீசார் குவிக்கப்பட்டனர். அஜீத், திரஷா பேனர்கள் கிழிக்கப்ப டாமல் கண்காணித்தனர்.
—————————————————————————————————————
ரசிகர்கள் மோதலின் பின்னணி

23 ஜூலை 2007

வழக்கமாக எதிரெதிரே இருக்கும் கதாநாயகர்களின் ரசிகர்களுக்கிடையேதான் பிரச்சினை ஏற்படும். ஆனால் வழக்கத்துக்கு மாறாக நடிகை த்ரிஷாவின் ரசிகர் மன்றமும் அஜீத்தின் ரசிகர் மன்றமும் முட்டிக் கொண்டிருக்கிறது.

`கிரீடம்’ படம் ரிலீஸை தொடர்ந்து சென்னை ஜெயந்தி தியேட்டரில் த்ரிஷா ரசிகர்கள் வைத்த பேனரை அஜீத் ரசிகர்கள் அகற்றச் சொல்ல பிரச்சினை எழுந்திருக்கிறது.

த்ரிஷா ரசிகர் மன்ற தலைவி ஜெஸி, நாங்கள் நல்ல நோக்கத்திற்காக மன்றம் வைத்திருக்கிறோம். ரத்ததானம், புற்றுநோய் விழிப்புணர்ச்சி ஆகியவற்றை ஏற்படுத்தவே பேனர் வைத்தோம் என்றார்.

ஆனால் அஜீத் ரசிகர் மன்ற தலைவர் தேவா, இது நடிகர் விஜய்யின் தூண்டுதலால்தான் த்ரிஷாவின் பேனரை வைத்திருக்கிறார்கள் என்றார்.

விஜய், த்ரிஷா நடிக்கும் படம் வெளியாகும் தியேட்டரில் த்ரிஷா பேனரை வைக்கச் சொல்லுங்கள். விஜய் ரசிகர்கள் விட்டுவிடுவார்களா பார்ப்போம் என்று கொதித்து போய் பேசுகிறார்.

இருதரப்பும் இப்படி முட்டிக்கொள்ள அஜீத்தோ மஞ்சகாமாலையால் பாதிக்கப்பட்டு ரெஸ்ட் எடுத்துக் கொண்டிருக்கிறார்.

—————————————————————————————————-

குமுதம் ரிப்போர்ட்டர்

29.07.07 ஹாட் டாபிக்

அடித்துக் கொண்ட அஜீத் – த்ரிஷா ரசிகர்கள்

– கிரீடத்தால் வந்த கிறுகிறு மோதல்

இரண்டு கதாநாயகர்களின் திரைப்படங்கள் ஒரே நாளில் ரிலீஸானால், அன்றைய தினம் மேற்படி இரு ஹீரோக்களின் ரசிகர்களும், முட்டி மோதிக் கொள்வது ரொம்பவும் சகஜமான விஷயம்.

ஆனால், ஒரே படத்தினுடைய நாயகனின் ரசிகர்களும் நாயகியின் ரசிகைகளும் கட்_அவுட் வைப்பதில் முட்டல் மோதலில் ஈடுபடுவது கொஞ்சம் புதுசுதான்.

அஜித்_த்ரிஷா நடித்து வெளியாகியுள்ள ‘கிரீடம்’ பட ரிலீஸின் போதுதான் இப்படியரு களேபரம் அரங்கேறியிருக்கிறது. த்ரிஷா நற்பணி மன்றத்தின் சார்பில் ஆங்காங்கே போஸ்டர் மற்றும் கட்அவுட்கள் வைக்க முயன்றபோது, அஜித் ரசிகர்கள் அதைத் தடுத்ததோடு, கிழித்து, அடித்தும் விரட்டி இருக்கிறார்கள்.

என்ன நடந்தது என்பதை நம்மிடம் விரிவாக விவரித்தார் த்ரிஷா நற்பணி மன்றத் தலைவி ஜெஸி.

‘‘ஆரம்பத்தில் நற்பணி மன்றம் அமைத்து பல நல்ல விஷயங்களைச் செய்ய முடிவெடுத்த நானும், என் சகோதரி எமியும் எங்கள் நற்பணிக்கு த்ரிஷா பெயரைப் பயன்படுத்த ஆசைப்பட்டோம். சில காலத்துக்கு முன்பு த்ரிஷா பற்றி மீடியாக்களில் வரும் செய்திகள் எல்லாம் தப்புத் தப்பாக இருந்தன. உண்மையில் அவர் குழந்தை மனம் படைத்தவர் என்பதை நாங்கள் நேரில் பழகும்போது தெரிந்து கொண்டோம். இங்குள்ள முன்னணி நாயகர்கள் பலருக்கு இல்லாத சமூக அக்கறை த்ரிஷாவுக்கு இருந்தது.

எங்களின் ஆர்வத்தைப் பாராட்டிய த்ரிஷாவிடம் புற்றுநோயின் கொடுமையைப் பற்றித் தெளிவாக எடுத்துச் சொன்னோம். எய்ட்ஸை கட்டுப்படுத்த உலக நாடுகள் பல கோடி மானியம் தருகின்றன. ஆனால் அதைவிட மோசமான நோயான புற்றுநோயை ஒழிக்கவும் அதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவவும் உலக சுகாதார மையம் மட்டுமே ஓரளவு உதவி செய்கிறது.

இந்த விவரங்களை த்ரிஷாவிடம் சொல்லி, நாம் புகையிலை மற்றும் புகைப் பழக்கத்தை எதிர்த்து பிரசாரம் செய்யலாமா என்று கேட்டதும், சந்தோஷமாக சம்மதம் தெரிவித்தார். அத்துடன் நேரம் கிடைக்கும் போதெல்லாம் அடையாறு புற்றுநோய் மருத்துவமனைக்கு வந்து, அங்குள்ள நோயாளிகளுக்கு ஆறுதல் சொல்ல விரும்பி அப்படியே செய்தார்.

எங்கள் மன்றம் ஆரம்பித்து ஒன்றரை வருடம்தான் ஆகிறது. இதுவரை 15 அனாதைக் குழந்தைகளைத் தத்தெடுத்து வளர்க்க ஆரம்பித்துள்ளோம். சுமார் பத்து மாணவர்களின் படிப்புச் செலவை நாங்கள் ஏற்றுக் கொண்டுள்ளோம். மேலும், திருவண்ணாமலை மற்றும் தூத்துக்குடியில் ஆதரவற்றோர் இல்லம் கட்ட இடம் வாங்கிப் போட்டிருக்கிறோம்.

இந்நிலையில், த்ரிஷா நடித்து வெளியாகும் படங்களின் போஸ்டர் மற்றும் பேனர்களில் புகையிலைக்கு எதிரான வாசகங்களைச் சேர்த்து வாழ்த்துத் தெரிவிக்க விரும்பினோம். த்ரிஷா நடித்து வெளியான ‘சம்திங் சம்திங்’ படம் வெளியானபோது, எங்கள் மன்றத்தின் சார்பில் முதன் முதலாக சில தியேட்டர்களில் கட் அவுட் வைக்கப் போனோம். இதற்கு ஜெயம் ரவி ரசிர்கள் எதிர்ப்புத் தெரிவித்தார்கள். நாங்கள் ஒட்டிய போஸ்டர் மீது ஜெயம் ரவி போஸ்டரை ஒட்டினார்கள். நாங்கள் உடனடியாக ஜெயம் ரவியின் அப்பாவிடம் போய் முறையிட்டோம். அவர் பேசி ரவியின் ரசிகர்களை சமாதானப்படுத்திவிட்டார்.

அதன்பிறகு இப்போது அஜித்துடன் த்ரிஷா நடித்த ‘கிரீடம்’ படம் வெளியான போதும் பெரும் சலசலப்பை ஏற்படுத்திவிட்டார்கள். கட் அவுட்டில் இருந்த எங்கள் மன்ற செல்போன் நம்பரில் பேசிய அஜித் ரசிகர்கள், த்ரிஷா பற்றி படுமட்டமாகப் பேசினார்கள். சில இடங்களில் எங்களைத் தாக்கியும் காயப்படுத்தினார்கள்.

முழுக்க முழுக்க சமுதாய விழிப்புணர்வு நோக்கில் செயல்படும் எங்களை அவமானப்படுத்திவிட்டதால் அப்செட் ஆகிவிட்டோம்!’’ என்றார் வேதனையுடன்.

நடந்த விவகாரம் பற்றி அஜித் தரப்பைத் தொடர்பு கொண்டு விளக்கம் கேட்டபோது, ‘‘நான் சினிமாவுக்கு வந்து பதினைந்து ஆண்டுகள் முடிந்துவிட்டன. இதுவரை என்னாலோ என் ரசிகர்களாலோ யாருக்கும் எந்தத் தொந்தரவும் ஏற்பட்டதில்லை. அதிலும் என் ரசிகர்கள் முழு கட்டுப்பாட்டுடன் எதிலும் எல்லை மீறாதவர்களாகவே வளர்ந்தவர்கள். ‘நான் கடவுள்’ படத்திற்காக கமிட் ஆகி, பாலாவால் ஏற்பட்ட பிரச்னை பற்றி குமுதம் ரிப்போர்ட்டரில் வந்த செய்தியைப் படித்துக் கொந்தளித்த என் ரசிகர்கள், எங்கேயாவது பிரச்னையை ஏற்படுத்தினார்களா? இல்லையே! அப்படிப்பட்டவர்கள் த்ரிஷா மன்றத்தினரைப் புண்படுத்தினார்கள் என்பதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது. என் ரசிகர்கள் பெயரில் வேறு யாரோ செய்த சில்மிஷத்தை அவர்கள் தவறாகப் புரிந்து கொண்டிருக்கக்கூடும்.

இப்போது வெளிவந்து நன்றாக ஓடிக்கொண்டிருக்கும் ‘கிரீடம்’ பட தியேட்டர்கள் சிலவற்றில், விஷமிகள் சிலர் போய் கோரஸாக தொடர்ந்து குரல் எழுப்பி பார்வையாளர்களுக்குத் தொந்தரவு கொடுத்திருக்கிறார்கள். அவர்களை தியேட்டர் ஊழியர்கள் பிடித்து விசாரித்த தகவல் கிடைத்ததும், ‘யாரோ அவர்களைத் தூண்டிவிடுகிறார்கள். பாவம், விட்டு விடுங்கள்’ என்றேன். அதேபோல்தான் த்ரிஷா மன்றத்தினர் கூறுவதையும், பெரிதுபடுத்தாதீர்கள்’’ என்று அஜித் கூறியதாகச் சொன்னார்கள்.

இதையடுத்து த்ரிஷா தரப்பை அறிய அவரிடம் பேசிய போது, ‘‘இந்த ஃபீல்டில் ஹீரோவுக்கு இணையாக எந்த ஹீரோயினும் இருக்க முடியாது என்பது எனக்கு நன்றாகத் தெரியும். ஃபீல்டில் இருக்கும் குறுகிய காலத்தில் ஏதாவது நல்லது செய்யவேண்டும் என்று யோசித்துச் செயல்படும் என் ரசிகர்களை யாருமே புரிந்து கொள்ளவில்லை.

சம்பந்தப்பட்ட படத்திற்கான வாழ்த்துச் செய்தியுடன் விழிப்புணர்வு வாசகங்களைச் சேர்த்து பேனர் வைக்க ஆசைப்பட்டோம். அதற்கு அஜித் ரசிகர்கள் எதிர்ப்புத் தெரிவித்ததும் எங்கள் கட்அவுட்டை எடுத்துவிட்டோம். இனி, இது போன்ற பிரச்னை வராமல் தடுக்க சம்பந்தப்பட்ட ஹீரோக்களுடன் நேரில் பேசலாம் என்று முடிவெடுத்தி ருக்கிறேன்!’’ என்றார் த்ரிஷா.

இவர்களின் விவகாரம் இப்படிப் போய்க்கொண்டிருக்கையில், நடிகைகளை இங்குள்ள நடிகர்கள் நசுக்கப் பார்க்கிறார்கள் என்ற குற்றச்சாட்டும் எழ ஆரம்பித்துவிட்டது.

பெயர் கூற விரும்பாத ஒரு ஹீரோயினியிடம் பேசும்போது, ‘‘கோலிவுட்டைப் பொறுத்தவரை எல்லா ஹீரோயின்களையும் டம்மியாகப் பார்ப்பதே இங்குள்ள ஹீரோக்களின் போக்காக இருக்கிறது. சூப்பர் ஸ்டாரின் ‘சிவாஜி’ படத்தில்கூட ஓர் அழகான ஸ்ரேயாவும் இருப்பதால்தான் ரசிக்கிறார்கள். ஆனால், ஸ்ரேயா பற்றி யாருமே பாராட்டி கருத்துச் சொல்வதில்லை. இது ஆணாதிக்கம் மட்டுமல்லாமல் அதற்கும் மேலானது என்றுதான் சொல்ல வேண்டும்!’’ என்றார்.

இதற்கு மறுப்புத் தெரிவித்து நம்மிடம் பேசிய பிரபலமான ஹீரோ ஒருவர், ‘‘கோலிவுட்டைப் பொறுத்தவரை ஹீரோக்கள்தான் எல்லாமே. அவர்களை வைத்துத்தான் ஒட்டுமொத்த வியாபாரமும் நடக்கிறது. ஒருபோதும் ஹீரோயின் தனித்து ஜெயிக்க முடியாது. அதைப் புரிந்து கொண்டு த்ரிஷா போன்ற நடிகைகள் அடக்கி வாசிப்பது அவர்களுக்கு நல்லது’’ என்றார் காட்டமாக.

இப்படி ஆளாளுக்குச் சொன்ன விஷயங்களைப் பற்றி குஷ்புவிடம் பேசி கருத்துக் கேட்டபோது, ‘‘நடந்த சம்பவங்களுக்கு அஜித் அல்லது த்ரிஷா காரணமாக இருக்க மாட்டார்கள். அவர்கள் பெயரை வைத்து யாரோ சிலர் செய்த கலாட்டாவால் ஒட்டுமொத்த கோலிவுட்டிற்கு எந்தக் கேடும் வந்து விடாது.

அஜித்திற்கு இணையாக அல்லது போட்டியாக த்ரிஷா ஒருபோதும் ஆகமுடியாது என்பதை த்ரிஷாவே புரிந்து வைத்திருப்பார். ஹீரோவின் லெவல் வேறுதான். என்றாலும் ஹீரோயின் இல்லாமல் எந்த ஹீரோவாவது ஒரு படமெடுத்து வெற்றியடைய வைக்க முடியுமா என்பதையும் யோசிக்க வேண்டும்!’’ என்றார் கூலாக. ஆக கிரீடம், கோலிவுட்டில் ஒரு புது சர்ச்சைக்கு முடி சூட்டியிருக்கிறது. ஸீ

– வி.குமார்

———————————————————————————————————
அஜீத் சப்-இன்ஸ்பெக்டர் ஆகிறார்- மாற்றப்பட்ட `கிரீடம்’ கிளைமாக்ஸ் கதை

அஜீத்குமார் நடித்த “கிரீடம்” படம் தற்போது வெளியாகி ஓடிக் கொண்டி ருக்கிறது.

இதில் அஜீத் ஜோடியாக திரிஷாவும் தந்தையாக ராஜ் கிரணும் நடித்துள்ளனர்.

போலீஸ் ஏட்டு கேரக்டரில் நடிக்கும் ராஜ்கிரண் மகன் அஜீத்தை போலீஸ் சப்- இன்ஸ்பெக்டராக்க கனவு காண்கிறார். உடற்பயிற்சி யெல்லாம் கற்றுக் கொடுத்து போலீஸ் வேலைக்கு தகுதி யாக்குகிறார்.

போலீஸ் வேலைக்கான `இண்டர்விï’வில் அஜீத்தும் தேர்வாகிறார். ஆனால் திடீர் திருப்பமாக அஜீத் ஒரு தாதாவுடன் மோதி ரவுடி யாகிறார். கிளைமாக்சில் தாதாவை கொன்று விட்டு ஜெயிலுக்கு போகிறார்.

இந்த கிளைமாக்ஸ் அஜீத் ரசிகர்கள் இடையே அதி ருப்தியை ஏற்படுத்தியது. விமர் சனங்களும் கிளம்பின.

இதையடுத்து கிளைமாக்ஸ் மாற்றப்பட்டுள்ளது. பத்திரிகை விமர்சனங்கள், பொது மக்களின் கோரிக்கையை ஏற்று கிளைமாக்ஸ் மாற்றப்பட்டதாக பட அதிபரும், நடிகருமான கே.பாலாஜி தெரிவித்தார். மாற்றப்பட்ட கிளைமாக்ஸ் கதை வருமாறு:-

தாதாவை அஜீத் கொன்ற தும் போலீஸ் சப்- இன்ஸ் பெக்டராகும் கனவு தவிடு பொடியாகி விட்டதை உணர்ந்து அஜீத் அழும் காட்சி கள், பிறகு அஜீத்தை ராஜ் கிரண் கைது செய்யும் காட்சி கள் நீக்கப்பட்டுள்ளன.

தாதாவை கொன்றதும் பின்னணியில் கோர்ட் சீன் குரல் சேர்க்கப்பட்டுள்ளது. அஜீத் சட்டத்துக்கு முன் குற்றவாளியாக இருந்தாலும் கொல்லப்பட்டவர் கிரிமினல் என்பதை கருத்தில் கொண் டும் பொதுமக்கள் ணீகோரிக் கைகளை ஏற்றும் அவருக்கு பொதுமன்னிப்பு வழங்கப் படுகிறது. அவரை போலீஸ் வேலையில் சேர்த்துக் கொள்ளவும் கோர்ட் பரிந் துரைக்கிறது என்று நீதிபதி குரல் எதிரொலிக்கிறது.

பிறகு அஜீத் சப்- இன்ஸ்பெக்டர் உடையுடன் வருகிறார். அவரை பார்த்து ராஜ்கிரண் `சல்ïட்’ அடிக் கிறார். கனவெல்லாம் நன வாதே என்ற பாடல் ஒலிக்க படம் முடிகிறது.

ஒரு படம் திரைக்கு வந்து ஓடிக் கொண்டிருக்கும் போது `கிளைமாக்ஸ்’ காட்சிகள் மாற்றப்படுவது அபூர்வ மான விஷயம் என்பது குறிப்பிடத் தக்கது. இதை ரசிகர்கள் வர வேற்றுள்ளனர்.

Posted in Actor, Actress, Admirer, Ajeeth, Ajith, Ajithkumar, Appreciation, Ardent, Asin, Banner, Burn, Chandrasekar, Chandrasekhar, Cinema, clash, Clubs, Craze, Cut-out, Cutout, Defame, Devotee, Effigy, Enthusiast, Fanatic, Fans, Films, Flag, Freak, Hoarding, Incite, Jassy, Jessie, Kireedam, Kiridam, Kreedam, Kridam, Love, Maniac, Movies, Nut, Passion, Protest, SA Chandrasekar, SA Chandrasekhar, Shoba, Shobha, Soorya, Star, support, Supporter, Surya, Tamil, Tamil Actor, Tamil Actors, Tamil Actress, Tamil Actresses, Tamil Cinema, Tamil Film, Tamil Films, Tamil Movie, Tamil movie producer, Tamil Movies, Tamil Music, Tamil Nadu, Tamil News, Tamil Padam, Tamil Pictures, Tamil Stars, Tamil Theater, Tamil Theatres, Thala, Thrisha, Torn, Trisha, Vijai, Vijay, Zealot | 1 Comment »

Battle royale in Tamil Nadu – Kodanadu estate: Jayalalitha vs Karunanidhi

Posted by Snapjudge மேல் ஜூன் 10, 2007

இன்ஸ்பெக்டர் உயிரோடு எரிப்பு: வானூர் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. மீது கொலை முயற்சி வழக்கு- கடலூர் சிறையில் அடைக்கப்பட்டார்

புதுச்சேரி, ஜுன். 8-

அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை பற்றி தமிழக முதல்- அமைச்சர் கருணாநிதி விமர்சனம் செய்ததை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் அ.தி.மு.க.வினர் நேற்று திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விழுப்புரம் மாவட்டம் வானூர் ஒன்றிய அ.தி.மு.க. வினர் திருச்சிற்றம்பலம் கூட்டுரோட்டில் வானூர் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. கணபதி தலைமையில் போராட்டம் நடத்தினர். போராட்டத்தின் போது கருணாநிதியின் உருவ பொம்மையை அ.தி.மு.க. வினர் தீவைத்து எரித்தனர்.

தீயை அணைக்க போலீசார் தண்ணீரை ஊற்றினார்கள். இதனால் ஆவேசம் அடைந்த அ.தி.மு.க.வினர் பெட்ரோல் ஊற்றினார்கள். இந்த பெட்ரோல் ஆரோவில் இன்ஸ்பெக்டர் ஜவகர்லால் மீது பட்டு உடலில் தீப்பிடித்தது. படுகாயம் அடைந்த அவர், புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இச்சம்பவத்தையொட்டி விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரியய்யா உத்தரவின் பேரில் கணபதி எம்.எல்.ஏ. உள்பட 28 பேரை ஆரோவில் போலீசார் உடனடியாக கைது செய்தனர். இதில் ஒரு பெண்ணும் அடங்குவர். பின்னர் அவர்கள் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

கணபதி எம்.எல்.ஏ. உள்பட 28 பேர் மீதும்

  • 307(கொலை முயற்சி),
  • 143 (கலவரத்தில் ஈடுபட கும்பலாக கூடுதல்),
  • 147(கையில் ஆயுதங்கள் வைத்திருத்தல்),
  • 188(அரசு பேச்சை மீறுதல்),
  • 285 (தீப்பிடிக்கும் பொருட்களை கொண்டு வருதல்),
  • 427(பொருட்களை சேதப்படுத்துதல்) மற்றும்
  • 332 (பொதுமக்களுக்கு ஆபத்து விளைவிப்பது) ஆகிய 7 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

———————————————————————————————

இன்ஸ்பெக்டரை கொல்ல முயன்ற 28 பேர் தவிர அ.தி.மு.க.வினர் அனைவரும் விடுதலை: தமிழக அரசு உத்தரவு

சென்னை, ஜுன். 9-

கொடும்பாவிகள் எரிக்கப்பட்டதை தொடர்ந்து பல இடங்களில் தி.மு.க. வினருக்கும், அ.தி.மு.க. வினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

போராட்டத்தில் ஈடுபட்டசுமார் 12 ஆயிரம் அ.தி. மு.க.வினர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் ஆங்காங்கே உள்ள கோர்ட்டுகளில் ஆஜர்படுத்தப்பட்டு பிறகு சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்கள் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சிறையில் உள்ள அ.தி.மு.க.வினர் தங்க ளுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை என்று ஜெயில் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் திருச்சி, சேலம் மத்திய சிறைகளில் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில் சிறையில் உள்ள அ.தி.மு.க.வினரை விடுதலை செய்ய தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. வானூர் இன்ஸ்பெக்டர் ஜவகரை உயிரோடு தீ வைத்து எரித்து கொல்ல முயன்றதாக கைதான 28 அ.தி.மு.க.வினர் தவிர மற்ற அனைவரையும் விடுவிக்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதா வது:-

அரசுக்கு எதிராக அ.தி. மு.க.வினர் முன் அறிவிப்பு எதுவும் இல்லாமல் உரிய முன் அனுமதியும் பெறாமல் மாநிலம் முழுவதும் நடத்திய திடீர் போராட்டத்தில் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு மாநிலத்தின் பல்வேறு சிறைகளில் அடைக் கப்பட்டுள்ளனர்.

இவர்களில் ஆரோவில் காவல் நிலைய குற்ற எண் 207-07-ல் இந்திய காவல் சட்டத்தின் பிரிவுகள் 143, 147, 188, 332, 426 மற்றும் 307 ஆகிய பிரிவுகளின் கீழ் கைது செய்யப்பட்டு காவலில் உள்ள 28 பேரை தவிர்த்து மீதமுள்ள அனைவரையும் இன்று மாலைக்குள் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தின் அனுமதியுடன் விடுதலை செய்ய நட வடிக்கை எடுக்குமாறு காவல் துறையினருக்கு அரசு ஆணை யிட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

விடுதலை செய்யப்படாமல் சிறையில் வைக்கப்பட்டுள்ள கணபதி எம்.எல்.ஏ. உள்ளிட்ட 28 அ.தி.மு.க.வினரும் வானூர் இன்ஸ்பெக்டரை எரித்து கொல்ல முயன்றதாக தொடரப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள்.

அவர்கள் பெயர் விவரம் வருமாறு:-

1. மனோகரன்,

2. கணபதி எம்.எல்.ஏ.,

3. ஒன்றிய செயலாளர் விசுவநாதன்,

4. முன்னாள் ஒன்றிய செயலாளர் பாஸ்கரன்,

5. கோட்டக்குப்பம் நகர செயலாளர் அம்ருதீன்,

6. இக்பால் பாஷா,

7. எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் சக்கரபாணி,

8. முன்னாள் ஒன்றிய சேர்மன் ஜானகிராமன்,

9. ஜெயலலிதா பேரவை ஒன்றிய தலைவர் முருகையன்,

10. எம்.ஜி.ஆர். மன்ற பொருளாளர் அறிவழ கன்

11. ஆகாசம்பட்டு ஊராட்சி மன்ற தலைவர் அன்பழகன்,

12. மாவட்ட துணை செயலா ளர் நாகம்மாள்,

13. சிவக் குமார்,

14. ராமச்சந்திரன்,

15. முருகையன்,

16. ராஜி,

17. கண்ணன்,

18. அப்துல் ரசித்,

19. இப்ராகிம்,

20. பிரத்திவி ராஜ்,

21. ஜெயவேல்,

22. சுப்பு ராயன்,

23. அய்யப்பன்,

24. மற் றொரு கண்ணன்,

25, சந்திரன்,

26.வெங்கடேசன்,

27. பரசு ராமன்,

28. சிவமணி.

————————————————————————————-

Sunday, June 10, 2007

சேலம் சிறையில் அதிமுக பிரமுகர் மாரடைப்பால் மரணம்

சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த அதிமுக பிரமுகர் மாரடைப்பால் சனிக்கிழமை அதிகாலையில் இறந்தார். இதையொட்டி சிறை முன்பு ஏராளமான அதிமுகவினர் கூடினர். சிறையில் உள்ள அனைத்து அதிமுகவினரையும் விடுதலை செய்ய வேண்டும் என சிறை வளாகத்துக்குள் இருந்த கட்சியினர் வலியுறுத்தினர். இதனால் சுகுமாரன் சடலத்தை, அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்வது தாமதமானது.

சேலம் மாநகர எம்ஜிஆர் மன்ற இணைச்செயலர் எம். சுகுமாரனுக்கு (52) சனிக்கிழமை இரவு 7 மணியளவில் நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. அதிகாலை 2 மணியளவில் சுகுமாரன் திடீரென்று இறந்தார்.

சுகுமாரின் உடலை எடுத்துச் செல்ல அனுமதிக்க மாட்டோம்; உடனடியாக அவருக்குச் சரியான சிகிச்சை அளிக்கவில்லை, சிறையில் உள்ள தங்கள் அனைவரையும் விடுதலை செய்து அனுப்ப வேண்டும் என வலியுறுத்தி அங்கு அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அங்கு கூடியிருந்த அதிமுகவினரை முன்னாள் அமைச்சர் டி.எம். செல்வகணபதி அமைதிப்படுத்தினார். பின்னர் அரசு உத்தரவுப்படி, சிறையில் உள்ள அனைத்து அதிமுகவினரும் விடுதலை செய்யப்பட்டனர்.

அதிமுக புகார்: சேலம் சிறையில் இருந்த சுகுமாரனுக்கு நெஞ்சு வலி என அங்கிருந்த அதிகாரிகளிடம் தெரிவித்தும், உடனடியாக சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யவில்லை. அதனால் அவர் மரணமடைய நேர்ந்தது. இதற்குச் சிறை நிர்வாகத்தின் அலட்சியமே காரணம் என்று மாநகர அதிமுக செயலாளர் வெங்கடாசலம் புகார் கூறியுள்ளார்.

தினமணி

————————————————————————————-

Saturday, June 9, 2007

சிறையில் இருக்கும் 38 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள்

அ.தி.மு.க. வினர் நேற்று நடத்திய மறியல், கொடும்பாவி எரிப்பு போராட்டத்தில் கைதாகி சிறையில் இருக்கும் எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் பெயர் விவரம் வருமாறு:-

1. பி.கே.சேகர்பாபு (ஆர்.கே.நகர்)
2. கு.சீனிவாசன் (பூங்கா நகர்)
3. கே.எஸ்.விஜயகுமார் (கும்மிடிப்பூண்டி)
4. பி.பல ராமன் (பொன்னேரி)
5. கோ.அரி (திருத்தணி)
6. கு.பாண்டு ரங்கன் (அணைக் கட்டு)
7. சி.வி.சண்முகம் (திண்டிவனம்)
8. இரா.குமரகுரு (திருநாவலூர்)
9. செல்வி ராமஜெயம் (புவனகிரி)
10. அருண்மொழித்தேவன் (சிதம்பரம்).

11. கணபதி (வானூர்)
12. சி.சண்முகவேலு (உடுமலைபேட்டை)
13. எஸ்.தாமோதரன் (கிணத்துகடவு)
14. ஏ.கே.சின்ன ராஜ் (மேட்டுப்பாளையம்)
15. ஆர்.பிரேமா (அவினாசி)
16. சி.பொன்னுதுரை (பெருந்துறை)
17. எல்.ரவிச் சந்திரன் (சேலம்-1)
18. பி.தங்க மணி (திருச்செங்கோடு)
19. கே.பி.அன்பழகன் (பாலக்கோடு)
20. ஆர்.டி.கணேசன் (தேனி)

21. ம.குணசேகரன் (மானாமதுரை)
22. மு.சந் திரா (ராஜபாளையம்)
23. அனிதா ஆர்.ராதா கிருஷ் ணன் (திருச்செந்தூர்)
24. எல்.ராதாகிருஷ்ணன் (கோவில் பட்டி)
25. பெ. மோகன் (ஓட்டப்பிடாரம்)
26. போ.சின்னப்பன் (விளாத்திக்குளம்)
27. மு.பரஞ்ஜோதி (ஸ்ரீரங்கம்)
28. செ.சின்னச்சாமி (மருங்காபுரி)
29. ஆர்.வைத்திலிங்கம் (ஒரத்தநாடு)
30. துரைக்கண்ணு (பாப நாசம்)

31. எஸ்.இளமதி சுப்பிர மணியன் (வலங்கைமான்)
32. ஆர்.கே.பாரதிமோகன் (திருவிடைமருதூர்)
33. வீர கபிலன் (பேராவூரணி)
34. ஆர்.நெடுஞ்செழியன் (புதுக் கோட்டை)
35. ந.சுப்பிர மணியன் (குளத்தூர்)
36. செந்தில் பாலாஜி (கரூர்)
37. மா.சந்திரகாசி (வரகூர்)
38. க.ராஜேந்திரன் (ஜெயங் கொண்டம்)

எம்.பி.க்கள்

  1. பெருமாள்,
  2. சையதுகான் தங்க தமிழ்ச் செல்வன்,
  3. காம ராஜ்,
  4. நாராயணன் கோவிந்த ராஜன்

மாலைமலர்

Posted in ADMK, AIADMK, Arrest, Attack, Burnt, dead, Effigy, Inspector, Jaya, Jaya TV, Jayalalitha, Jayalalithaa, Jeya TV, Jeyalalitha, Karunanidhi, Karunanidhy, Karunanidi, Karunanithi, Law, MLA, MP, Order, Protest, Torture, Vaanoor, Vaanur, Vanoor, Villupuram | 1 Comment »