Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘drivers’ Category

1.5 mn Commercial (lorry) vehicles keep off roads in Karnataka – Truckers strike enters second day

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 24, 2008

3-வது நாளாக லாரி ஸ்டிரைக்: பல கோடி வர்த்தகம் பாதிப்பு

நாமக்கல், பிப். 23: தமிழகம் மற்றும் கேரளத்தில் 3-வது நாளாக நடைபெறும் லாரிகள் வேலைநிறுத்தத்தால் பல கோடி மதிப்பிலான வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.

கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த வாகனங்களுக்கும், கர்நாடகத்துக்குள் நுழையும் வாகனங்களுக்கும் வேகக் கட்டுப்பாடு கருவி பொருத்த வேண்டும் என்ற உத்தரவை திரும்பப் பெற வலியுறுத்தி கர்நாடக லாரி உரிமையாளர்கள் வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இப் போராட்டத்துக்கு தமிழக லாரி உரிமையாளர்களும் ஆதரவு தெரிவித்து கர்நாடகத்துக்கு செல்லும் லாரிகளை நிறுத்தி வைத்துள்ளனர்.

வேலை நிறுத்தம் 3-வது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் நீடிக்கிறது. இதனால், வட மாநிலங்களுக்கான தரைவழிப் போக்குவரத்து முற்றிலும் தடைபட்டுள்ளது. ஈரோடு, திருப்பூர், கோவை, நாமக்கல், சேலம் மற்றும் தென் மாவட்டங்களில் இருந்து வட மாநிலங்களுக்கு செல்லும் தீப்பெட்டி, ஜவுளி, மஞ்சள், இரும்பு, உதிரிப் பாகங்கள், தொழிற்சாலை பொருள்கள் என அனைத்தும் மூன்று நாள்களாக வட மாநிலங்களுக்கு செல்லாமல் அப்படியே தேங்கி உள்ளன வட மாநிலங்களில் இருந்து வரும் கோழித் தீவன மூலப் பொருள்கள், எலக்ட்ரானிக் பொருள்கள், மார்பிள்ஸ், பர்னிச்சர்கள், காய்கறிகள், பழங்கள் வரத்தும் தடைபட்டுள்ளது. போராட்டம் காரணமாக பல கோடி மதிப்பிலான வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. போராட்டம் நீடித்தால் கோழித் தீவன தட்டுப்பாடு ஏற்பட்டு அதன் விலை மேலும் உயரும் அபாயமுள்ளது.

கர்நாடகத்தில் தமிழக லாரிகளை தடையின்றி இயக்கலாம்: போக்குவரத்துத் துறை விளக்கம்

சென்னை, பிப். 23: கர்நாடக மாநிலத்தில் தடையின்றி தங்கள் லாரிகளை இயக்கலாம் என்று தமிழக லாரி உரிமையாளர்களுக்கு, போக்குவரத்துத் துறை அறிவுறுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த வாகனங்களுக்கும், கர்நாடகத்துக்குள் நுழையும் வாகனங்களுக்கும் வேகக் கட்டுப்பாடு கருவி பொருத்த வேண்டும் என்று அந்த மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதை திரும்பப் பெற வலியுறுத்தி, கர்நாடக லாரி உரிமையாளர்கள் வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இப் போராட்டத்துக்கு தமிழக லாரி உரிமையாளர்களும் ஆதரவு தெரிவித்து கர்நாடகத்துக்கு செல்லும் லாரிகளை நிறுத்தி வைத்துள்ளனர்.

தமிழக லாரிகளை தடையின்றி கர்நாடக மாநிலத்தில் இயக்கலாம் என்று தமிழக போக்குவரத்துத் துறை விளக்கம் அளித்துள்ளது. இதுகுறித்து, இணைப் போக்குவரத்து ஆணையர் டி.நாராயணமூர்த்தி சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழகத்தைச் சேர்ந்த வாகனங்களை கர்நாடகத்தில் இயக்கும் போது, வேகக் கட்டுப்பாடு கருவி பொருத்த வேண்டும் என்ற உத்தரவு வரும் ஜூன் மாதம் வரை வற்புறுத்தப்பட மாட்டாது என கர்நாடக அரசு தெரிவித்துள்ளது.

எனவே, தமிழக லாரி உரிமையாளர்கள் மற்றும் லாரி உரிமையாளர் சங்கத்தினர் எந்தவித தடையுமின்றி கர்நாடக மாநிலம் வழியாக தங்கள் லாரிகளை இயக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.

கர்நாடகத்தில் லாரிகள் வேலைநிறுத்தம் எதிரொலி
தமிழ்நாட்டில் பலகோடி ரூபாய் பொருட்கள் தேக்கம்

சென்னை, பிப்.24-

கர்நாடகத்தில் லாரிகள் வேலைநிறுத்தம் நடைபெறுவதால், தமிழ்நாட்டில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் தேங்கி உள்ளன.

லாரிகள் வேலைநிறுத்தம்

கர்நாடகத்தில் ஓடும் லாரிகளுக்கு வேக கட்டுப்பாடு கருவி பொருத்த வேண்டும் என்று அந்த மாநில ஐகோர்ட்டு உத்தரவிட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அந்த மாநிலத்தில் லாரி உரிமையாளர்கள் நேற்று முன்தினம் இரவு முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். இதனால் அங்கு லாரிகள் ஓடவில்லை.

இந்த போராட்டத்துக்கு தமிழக லாரி உரிமையாளர்கள் சங்கமும் ஆதரவு தெரிவித்து இருப்பதால், தமிழ்நாட்டில் இருந்து கர்நாடகம் மற்றும் கர்நாடகத்தின் வழியாக செல்லும் அனைத்து லாரிகளும் நிறுத்தப்பட்டு உள்ளன. ஏற்கனவே கர்நாடகத்துக்கு புறப்பட்டு சென்ற லாரிகள் எல்லையில் நிறுத்தப்பட்டு இருக்கின்றன.

பல கோடி ரூபாய் பொருட்கள் தேக்கம்

மேலும் கோவை, ஈரோடு, கரூர், திண்டுக்கல், சேலம் உள்ளிட்ட நகரங்களில் இருந்து கர்நாடகத்துக்கு செல்ல வேண்டிய லாரிகள் புறப்படாமல் நிறுத்தப்பட்டு உள்ளன. இதனால் அங்குள்ள பார்சல் அலுவலகங்களில் பார்சல்கள் குவிந்து உள்ளன. இதனால் தமிழ்நாட்டில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் தேங்கி கிடக்கின்றன.

இந்த வேலை நிறுத்த போராட்டத்தால் தமிழகத்தில் இருந்து வடமாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படும் தீப்பெட்டி, தேங்காய், ஜவுளி, ஜவ்வரிசி, மஞ்சள் போன்ற பொருட்கள் தடைப்பட்டுள்ளன. இதனால் நாள் ஒன்றுக்கு தமிழகம் முழுவதும் ஏறத்தாழ ரூ.100 கோடி மதிப்புள்ள பொருட்கள் தேக்கம் அடைந்து வருகின்றன. லாரி உரிமையாளர்களுக்கும் நாள் ஒன்றுக்கு ரூ.5 கோடி வீதம் இழப்பு ஏற்பட்டு வருகிறது என்று தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் செங்கோடன் கூறினார்.

கோயம்பேடு மார்க்கெட்

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு காய்கறிகள் அதிக அளவில் கர்நாடக மாநிலத்தில் இருந்து தான் கொண்டு வரப்படுகின்றன. குறிப்பாக தக்காளி, கோஸ், கேரட், பீன்ஸ் போன்ற முக்கியமான காய்கறிகள் அங்கிருந்துதான் வருகின்றன. லாரிகள் வேலைநிறுத்தம் காரணமாக இன்று (ஞாயிற்றுக்கிழமை) காய்கறி வரத்து பெரிய அளவில் பாதிக்கப்படும் என்று தெரிகிறது.

இதுகுறித்து கோயம்பேடு மார்க்கெட் தக்காளி வியாபாரிகள் சங்க நிர்வாகி செல்வராஜிடம் கேட்டபோது, “தினமும் 50 லாரிகளில் தக்காளி கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வரும். நேற்றைய தினம் வழக்கமாக வரும் அனைத்து காய்கறிகளும் வந்து விட்டன. இன்றைய தினம் தான் வழக்கமாக வரும் லாரிகளில் காய்கறிகள் வருமா என்று எதிர்பார்த்திருக்கிறோம்” என்றார்.

விலை உயர வாய்ப்பு

சென்னை கோயம்பேடு எம்.எம்.சி. உரிமம் பெற்ற வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் சவுந்திரராஜன் கூறும்போது, “தக்காளி தவிர 60 லாரிகளில் மற்ற காய்கறிகள் கர்நாடக மாநிலத்தில் இருந்து வருகின்றன. நேற்றைய தினம் வழக்கமாக வரவேண்டிய காய்கறிகள் வந்தன. இன்றைய தினம் குறைந்த அளவில்தான் காய்கறிகள் வரும் என்று எதிர்பார்க்கிறோம். அப்படி குறைந்த அளவு காய்கறிகள் வருகின்ற பட்சத்தில் காய்கறிகளின் விலையும் சற்று அதிகரிக்க வாய்ப்புள்ளது” என்றார்.

ஈரோடு

ஈரோடு மாவட்ட லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் நாச்சிமுத்து கூறியதாவது:-

வழக்கமாக ஈரோட்டில் இருந்து ஜவுளி, மஞ்சள், எண்ணை போன்ற பொருட்கள் கர்நாடகம் மற்றும் மராட்டியம், அரியானா, டெல்லி உள்பட பல வடமாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படும். கர்நாடகத்தில் பொருட்கள் ஏற்றி இறக்கும் சுமார் 200 லாரிகள் மற்றும் கர்நாடகம் வழியாக செல்லும் லாரிகள் உள்பட சுமார் 1,500 லாரிகள் ஓடவில்லை. இதனால் ஈரோட்டில் பல கோடி போய் மதிப்புள்ள வர்த்தகம் பாதிக்கப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

கோவை லாரி உரிமையாளர்கள் சங்க செயலாளர் கே.எஸ்.கலியபெருமாள் கூறுகையில், கோவை மாவட்டத்திலிருந்து கர்நாடகத்திற்கு லாரிகள் செல்லாததால் தினமும் ரூ. 25 கோடிக்கு வர்த்தக பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்றார்.

சேலம்

சேலம் மாவட்ட லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் சென்னகேசவன் கூறியதாவது:-

லாரிகளுக்கு வேககட்டுப்பாடு கருவி பொருத்த வேண்டும் என்ற கர்நாடக ஐகோர்ட்டின் உத்தரவு தமிழக லாரி உரிமையாளர்களுக்கும் பெரும் சுமையை ஏற்படுத்தியுள்ளது. 40 கிலோ மீட்டர் வேகத்துக்கு மேல் போகக்கூடாது என்றால், காய்-கறிகள் மற்றும் பழங்கள் போன்ற அழுகும் பொருட்களை குறிப்பிட்ட நேரத்தில் லாரியில் கொண்டு செல்லமுடியாமல் பாதிப்பு ஏற்படும். கர்நாடக லாரி உரிமையாளர்கள் ஸ்டிரைக்கால், சேலம் மாவட்டத்தில் இருந்து கர்நாடகம் மற்றும் வெளிமாநிலங்களுக்கு கொண்டு செல்லப்பட வேண்டிய சரக்குகள் ஒரே நாளில் ரூ.10 கோடி மதிப்பில் தேக்கம் அடைந்து உள்ளன.

இவ்வாறு சென்னகேசவன் தெரிவித்தார்.

வேலைநிறுத்தம் தொடரும்

இதற்கிடையே கர்நாடக லாரி உரிமையாளர் மற்றும் ஏஜெண்டுகள் சங்க நிர்வாகிகள் சங்க தலைவர் ஜி.ஆர்.சண்முகப்பா தலைமையில் கவர்னரின் ஆலோசகர் தாரகன் மற்றும் போக்குவரத்து துறை முதன்மை செயலாளர் தங்கராஜ் ஆகியோரை நேற்று சந்தித்து பேசினார்கள். அப்போது கவர்னர் தனது அதிகாரத்தை பயன்படுத்தி வேகக்கட்டுப்பாட்டு கருவி பொருத்தும் திட்டத்தை வாபஸ் பெற வேண்டும் என்று லாரி உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்தனர். பேச்சுவார்த்தையின் போது அரசு தரப்பில் எந்த ஒரு உறுதி மொழியும் கொடுக்கப்படாததால் வேலை நிறுத்தம் தொடரும் என்று ஜி.ஆர்.சண்முகப்பா கூறினார்.

கர்நாடகத்தில் லாரிகள் வேலை நிறுத்தம் காரணமாக ரூ.100 கோடி மதிப்புள்ள சரக்குகள் தேக்கம் அடைந்து இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் தனியார் பஸ், வாடகை கார், சுற்றுலா வேன் உரிமையாளர்களும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு இருப்பதால் பயணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.

Posted in Accidents, Biz, commercial, Dangerous, dead, Death, drivers, DUI, DWI, Economy, Employment, Erode, Exports, Finance, Food, Freight, Goods, Impact, Jobs, Karnataka, Law, Limits, Lorry, Loss, Operators, Order, Parcel, Perishable, Profit, Salem, Services, Speed, Strike, Transport, Transporters, Truckers, Trucks, Vegetables | Leave a Comment »

Chennai Metro – Female drivers in action around the city & airport

Posted by Snapjudge மேல் ஜூன் 19, 2007

நகர்வலம்: பறக்கலாம்… காரிலேயும்!

அருவி

அட்லாண்டிஸ் விண்வெளி ஓடம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. கமாண்டர் ரிக் ஸ்டிரக், பைலட் லீ அர்சாம்பால்ட், நிபுணர்கள் பாட்ரிக் பாரஸ்டர், ஜேம்ஸ் ரிலி, செவன் ஸ்வான்சன், ஜான் ஆலிவ்ஸ், விமானப் பொறியாளர் கிளைய்டன் ஆண்டர்சன் ஆகியோரும் பயணிக்கிறார்கள். இதில் விமானப் பொறியாளர் கிளைய்டன் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுனிதா வில்லியம்ஸýக்குப் பதில் விண்வெளியில் தங்கி ஆராய்ச்சியில் ஈடுபடுவார். சுனிதா வில்லியம்ஸ் வருகிற 19-ந்தேதி அட்லாண்டிஸ் ஓடம் மூலம் பூமிக்குத் திரும்புகிறார். கொலம்பியா விண்வெளி ஓடம்போல விபத்தில் முடிந்துவிடக்கூடாதே என்பதற்காக அட்லாண்டிஸ் ஓடத்தை கண்ணும் கருத்துமாக நாசா விஞ்ஞானிகள் கவனித்து வருகிறார்கள். சுனிதா வில்லியம்ஸ் பூமிக்குத் திரும்பியதும் ஆறுமாத காலம் விண்வெளியில் அவர் நடத்திய ஆய்வு முடிவுகளைத் தெரிவிப்பார்’

இந்தச் செய்தியைப் படிப்பவர்களுக்கு கீதா, சுமதி, அஞ்சலி தேவி, உஷாராணி ஆகியோரின் சாதனையைப் படிப்பது சாதாரணமாகத் தெரியலாம்.

“பஸ், விமானம் என எல்லாம்தான் லேடீஸ் ஓட்டுறாங்க. இதில் டாக்ஸி ஓட்டுவதில் என்ன பிரமாதம் இருக்கிறது?’ என்றுகூட கேட்கலாம்.

தனியாக ஒருபெண் சாலையில் போகையிலேயே சந்திக்கக்கூடிய சச்சரவுகள் அதிகம். இதில் முகவரி தெரியாத புதியபுதிய நபர்களை புதியபுதிய இடங்களுக்குத் தனியாக டாக்ஸியில் அழைத்துச் செல்வது என்றால் எவ்வளவு சிரமம்?

“”ஒரு சிரமமும் இல்லை. அதிகம்முறை ஏர்போர்ட்டுக்குத்தான் சென்றிருக்கிறேன் என்றாலும் மாமல்லபுரம் உட்பட சென்னையின் பல்வேறு இடங்களுக்குத் தனியாக டாக்ஸி ஓட்டிச் சென்றிருக்கிறேன். இதுவரை யாராலும் எவ்விதப் பிரச்சினையும் ஏற்பட்டதில்லை. விமர்சித்துக்கூட எங்களை யாரும் பேசியதில்லை.

முதல் முறையாக எங்கள் டாக்ஸியில் ஏறுகிற எல்லோருமே ஆச்சரியத்துடனே பார்ப்பார்கள். “லேடீஸô ஓட்டுறது… லேடீஸô ஓட்டுறது’ என்று இறங்கிறவரை பாராட்டிக் கொண்டே வருவார்கள். ஒருமுறை எங்கள் டாக்ஸியில் வந்தவர்கள் அடுத்தமுறை எங்கள் டாக்ஸியைத்தான் தேடி வருவார்கள்.

ஆரம்பத்தில் இருந்த ஒரு பிரச்சினை டாக்ஸி பஞ்சராகிவிட்டால் ரிப்பேராகிவிட்டால் ஸ்டெப்னி மாற்றவோ, ரிப்பேர் செய்யவோ தெரியாமல் தத்தளிக்க வேண்டியிருந்தது. இப்போது ஸ்டெப்னி மாற்றவும் ரிப்பேர் செய்யவும் கற்றுக்கொண்டோம். டாக்ஸி ஓட்டுவதற்கு முன்பு துணிக்கடை, மசாலாப்பொடிகள் தயாரிக்கிற கடை என பல கடைகளில் வேலை பார்த்திருக்கிறேன். பத்தாவது பெயிலான என்னால் இந்த வேலைகளைத்தான் செய்யமுடிந்தது. ஆனால் டாக்ஸி ஓட்டத் தொடங்கிய பிறகு ஏதோ சாதித்துவிட்ட சந்தோஷம் எனக்கு ஏற்பட்டிருக்கிறது. ஓர் அங்கீகாரமும், புதிய தெம்பும் எனக்குக் கிடைத்திருக்கிறது. நம்மாலும் எதுவும் சாதிக்க முடியும் என்கிற நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது.” என்கிறார் சவேரா ஓட்டலுக்காக டாக்ஸி ஓட்டும் கீதா. இவரைப் போலவே சவேரா ஓட்டலுக்காக டாக்ஸி ஓட்டும் இன்னொருவர் சுமதி.

“”டாக்ஸியில் வந்தவர்கள் யாரும் என்னை விமர்சித்து பேசியது கிடையாது. ஆனால் ஆரம்பத்தில் ஆண் டாக்ஸி டிரைவர்கள் என்னை ஏளனமாகப் பார்த்தார்கள். “டாக்ஸி ஓட்டுற ஆளைப் பாரேன்’ என்று என் காதுபடவே பேசியிருக்கிறார்கள். அவர்களின் பேச்சைக் கேட்ட பிறகுத்தான் எனக்கு டாக்ஸி ஓட்டுவதை விட்டுவிடவே கூடாது என்ற எண்ணம் தீவிரமானது. டாக்ஸி ஓட்டுவதற்கு இன்னொரு முக்கியமான காரணம் என் அப்பா.

அரசாங்கப் பள்ளியின் டீச்சர் அவர். என்னையும் டீச்சராக்கிப் பார்க்கவேண்டும் என்று ஆசைப்பட்டார். ஆனால் நான் ப்ளஸ் டூவில் பெயிலாகிவிட்டேன். இதன்பிறகுதான் “அநியூ’ அமைப்பில் ஹோம்நர்சிங் சேர்ந்து படிக்கலாம் என்று முடிவெடுத்தேன். அப்போதுதான் அப்பா டாக்ஸி ஓட்ட கற்றுகொள் என்றார். டீச்சராக வேண்டும் என்ற ஆசையைத்தான் நிறைவேற்றமுடியவில்லை. அப்பாவின் இந்த ஆசையையாவது நிறைவேற்றுவோமோ என்று டாக்ஸி ஓட்டக்கற்றுக்கொண்டேன். இப்போது எல்லோரும் பாராட்டுகிறபோது பெருமையாக இருக்கிறது.

பெண்கள் கார் ஓட்டினால் ரொம்ப மெதுவாகத்தான் ஓட்டுவார்கள் என்று சொல்வது தவறு. இடத்திற்குத் தகுந்தாற்போல்தான் ஓட்டவேண்டும். சில நேரங்களில் அவசரம் கருதி நூறு கிலோ மீட்டர் வேகத்தில் எல்லாம் ஓட்டியிருக்கிறேன். போலீஸில் பைனும் கட்டியிருக்கிறேன். வேகத்தோடுகூடிய விவேகமே முக்கியம். டாக்ஸியில் வருகிறவர் நம்மை நம்பித்தான் வருகிறார்கள். அவர்களின் உயிருக்கு நாமும் ஒருவகையில் பொறுப்பு என்கிற நினைப்போடுதான் நான் டாக்ஸியை எடுக்கிறேன்” என்கிறார் சுமதி.

வாகனவெள்ளம் அடித்துச் செல்லும் சாலையில் டாக்ஸி ஓட்டும் அனுபவம் பெற்ற கீதா, சுமதியிடம் இருந்து வேறுபட்ட அனுபவம் உடையவர்கள் அஞ்சலிதேவி, உஷாராணி. சிக்னலில் இவர்கள் நிற்கிறார்கள் என்றால் விமானம் இறங்குகிறது, கடக்கிறது என்று அர்த்தம். ஏர்டெக்கான் நிறுவனத்திற்காக விமானநிலையத்தில் ஆம்னிவேன் ஓட்டுகிறார்கள்.

“”விமானநிலையத்தில் டாக்ஸி ஓட்டுவதே ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. சாதாரண சாலையில் ஓட்டுவதற்கும் விமானநிலையத்தில் ஓட்டுவதற்கும் ஏகப்பட்ட வித்தியாசங்கள் விதிமுறைகள் இருக்கிறது. இங்கு ஓட்டுவதற்கு ஏர்போர்ட் டிரைவிங் லைசன்ஸ் தனியாகப் பெறவேண்டும். எங்களுடைய வேலை பைலட்களையும் விமானப்பணிப்பெண்களையும் விமானம் இறங்கு தளத்திலிருந்து விமானநிலையத்திற்கு அழைத்து வருவதுதான். வேறு மாநிலங்களுக்குச் செல்கிற விமானங்கள் இங்கு தரையிறங்கி அரைமணி நேரம் நிற்கிறது என்றால் அந்நேரத்தில் பைலட்டுகள் இறங்கி புகைப்பிடிப்பதற்கோ அல்லது வேறு ஏதாவது காரணத்திற்காகவோ நிலையத்திற்கு வருவார்கள். அவர்களை அழைத்து வந்து, திரும்பவும் கொண்டுபோய் விடுவோம். பகலில்தான் எங்களுடைய வேலை. எட்டு மணி நேர டியூட்டி டயத்தில் மூன்று தடவை நாலுதடவை இதுபோல போய் வரவேண்டி இருக்கும். எப்போதாவது உடல்நிலை சரியில்லாமல்போகிற பயணிகளையும் அவசரமாக அழைத்து வரவேண்டி இருக்கும். பைலட்கள் பெரும்பாலும் வெளிநாட்டைச் சேர்ந்தவர்களாக இருப்பார்கள். இவர்கள் நாங்கள் டாக்ஸி ஓட்டுவதைப் பார்த்து ஆச்சரியப்பட்டு, “எங்களைவிட நீதான் பெரிய ஆளு’ என்றெல்லாம் பாராட்டியிருக்கிறார்கள். விமானநிலையத்திற்கு வெளியில் டாக்ஸியை எடுத்துவர மாட்டோம். ஒருவேளை அப்படி வந்தோமானால் அது பெட்ரோல் போடுவதற்கும், ரிப்பேர் செய்வதற்குமாகத்தான் இருக்கும். சொந்தமாக கால் டாக்ஸி வைத்துகொண்டு வெளியில் ஓட்டவேண்டும் அல்லது பஸ் ஓட்ட வேண்டும் என்கிற ஆசை இருக்கிறது” என்கிறார் அஞ்சலிதேவி.

“”சின்னவயசில் விமானத்தைப் பார்த்தால் ஓடிப்போய் டாட்டா காட்டிவிட்டுத்தான் மறுவேலை பார்ப்பேன். இப்போது விமானம் ஓட்டுகிற பைலட்டுக்கு கார் ஓட்டுறேன்.

டிராபிக் நிரம்பிய பகுதிகளில் ஓட்டுவதற்கு விருப்பம் என்றாலும் விமானநிலையத்தில் ஓட்டுவதற்கு தனிப் பொறுமை வேண்டும். முப்பது கிலோ மீட்டர் வேகத்துக்கு மேல் இங்கு போகக்கூடாது. விமானத்துக்கு அருகில் போகப்போக பதினைந்து, பத்துன்னு குறைத்துக்கொண்டே போக வேண்டும். அதுவும் நினைத்த நேரமெல்லாம் போகமுடியாது. மற்ற விமானங்கள் வருகிற நேரமா இது என்பதையெல்லாம் பார்த்துதான் போகவேண்டும். கரணம் தப்பினால் மரணம் என்கிற மாதிரி இங்கு கவனம் தப்பினாலும் பிரச்சினைதான். விதியை மீறி தவறாக ஓட்டினால் அதற்கு ஃபைன் போடுவார்கள். நான் ஒருநாளும் தவறு செய்து ஃபைன் கட்டியதில்லை.

எட்டாவது வரைக்கும்தான் படித்து இருக்கிறேன். பைலட்டுகளோடு பேசுகிறளவுக்கு எனக்குப் போதிய ஆங்கில அறிவு இல்லாவிட்டாலும், அவர்கள் பேசுவதை வைத்து புரிந்துகொள்வேன். பைலட் எல்லோரும் எனக்கு நண்பர்கள் சகோதரர்கள் மாதிரி. அவர்கள் எங்களை அதிகம் ஊக்கப்படுத்துகிறார்கள். விமான நிலையத்திற்கு வந்துபோகிறது மட்டும் மனதுக்குள் ஒரே ஒரு எண்ணம் மட்டும் வந்து மனதை வருத்திப் போகிறது. நாமும் ஒழுங்காகப் படிக்க முடிந்திருந்தால் விமானத்தையே ஓட்டிக்கொண்டு வானத்திலேயே பறக்கலாமே என்பதுதான் அது” என்கிறார் உஷாராணி.

பறக்கலாம்… காரிலேயும்! வானம் தொட்டுவிடும் தூரம்தான்!

Posted in Auto, Cabs, Cars, Chennai, City, drivers, Female, Ladies, Madras, Metro, Rental, She, taxis, Women | Leave a Comment »