Archive for the ‘Dress’ Category
Posted by Snapjudge மேல் ஜனவரி 7, 2008
தொண்டறத்தின் முன்னே கடமையா? காதலா?
புத்தகப் பிரியன்: : “சர்வம் ‘ஸ்டாலின்’ மயம்”
சென்னையிலும், வெளியூர்களிலும் என்னைச் சந்திக்கும் நண்பர்கள் சிலர் பூச்செண்டு கொடுத்து அன்பு செலுத்தும் முறைக்குப் பதிலாக நல்ல புதிய அல்லது கிடைத்தற்கரிய பழைய புத்தகங்களைக் கொடுத்து மகிழ்விப்பது உண்டு.
இதைவிட அறிவுக்கு உணவு அளிக்கும் கருத்து விருந்தோம்பல் வேறு ஏது?
கடந்த 21.12.2007 கோவையில் ஓர் நிகழ்ச்சிக்குச் சென்றிருந்தபோது, முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் மானமிகு வசந்தம் கு. இராமச்சந்திரன் ஒரு பழைய நூல் – ஆங்கில நூலை தந்தார்.
அதுபோலவே, எப்போதும் புதிய புத்தகங்களைத் தரும் பெரியார் பகுத்தறிவு இலக்கிய அணியின் கோவை மாவட்டச் செயலாளரும், சீரிய பெரியார் பெருந்தொண்டருமான மானமிகு கு. கண்ணன் அவர்கள் திரு. மருதன் எழுதிய சர்வம் ஸ்டாலின் மயம் என்ற புத்தகத்தைத் தந்தார்.
திரும்பி வந்த தொடர்வண்டி வழியில், மின்சார கம்பி வடத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக சென்னை வரவேண்டிய எல்லா வண்டிகளும் தாமதமாகவே (பல மணிநேரங்கள்) வந்தன. வழியில் ஆங்காங்கு நிறுத்தப்பட்டு, தடைபட்டே பயணம் தொடர்ந்த நிலை அன்று இருந்தது. காலை 7.30 மணிக்கு வந்து சேரவேண்டிய வண்டி, காலை 10.30 மணிக்குத்தான் வந்து சேர்ந்த நிலை!
அந்தப் பயணக் களைப்பினை – அயர்வினைத் தெரியாது செய்த வழித்துணை நண்பனாக இந்நூல் பெரிதும் பயன்பட்டது.
செய்தி அறிந்து அரக்கோணம் மாவட்டக் கழகச் செயலாளர் ஜீவன்தாசு, மாவட்ட கழகத் துணைத் தலைவர் எல்லப்பன் அவர்களும் காலைச் சிற்றுண்டியைக் கொண்டு வந்து கொடுத்து அன்புடன் உபசரித்தனர்.
எனவே, பசியும் தீர்ந்தது – நூலை விடாமல் படிக்க சுவையாகவும் இருந்தது!
ஸ்டாலின்பற்றி அந்த ஆசிரியர் மருதன் (அது கிழக்குப் பதிப்பகத்தின் வெளியீடு) மிகவும் விறுவிறுப்பு நடையில் எழுதியுள்ளார்!
ஸ்டாலின் சோவியத் ரஷ்யாவை வல்லரசாக்கி, முதலாளித்துவ நாடுகளுக்கு சிம்ம சொப்பனமான பொதுவுடைமை வீரர்!
தொழிலாளி வர்க்கத்தின் சர்வாதிகாரத்தின்மூலம், மதவாதத்தினை விரட்டி மகத்தான சோவியத் சோஷியலிசக் குடியரசுகளின் கூட்டாட்சியை வெற்றிகரமாக நடத்தியவர். புரட்சியாளர் லெனினால் சரியாக அடையாளம் காட்டப்பட்டவர்!
அவர் பற்றிய அரிய தகவல்கள் மிகச் சிறப்புடன் தரப்பட்டுள்ளன ஆசிரியரால்!
அதன் கடைசி அத்தியாயத்தைப் படித்தபோது, பொது வாழ்வில் உள்ள தலைவர்களின் பிள்ளைகளது உணர்வு, அத்தலைவர்களின் கடமை உணர்வின் முன் எப்படி தோற்றுப் போகும் காதலாகி விடுகிறது என்பது என்னை வெகுவாகச் சிந்திக்க வைத்தது!
குடும்பம் என்பது அத்தகைய தன்னல மறுப்பாளர்களுக்கு ஒரு குறுகிய வட்டமல்ல – நாடே ஏன் உலகமேகூடத்தான்.
ஸ்டாலின் மகள் ஸ்வெத்லானாபற்றியச் செய்திகள் – உணர்வுகளை அந்நூல் கூறுவதை இதோ படியுங்கள்:
அமைதி திரும்பி விட்டது என்று எல்லோரையும்போல் ஸ்வெத்லானாவால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. காரணம், அவளால் அமைதியாக இருக்க முடியவில்லை.
எப்படி முடியும்? தந்தையை இப்போதெல்லாம் பார்க்கவே முடியவில்லை. எப்படிப் பார்க்க முடியும்? அவர் வீட்டுக்கு வந்தால்தானே! போர், பிரச்சினை, சிக்கல்கள். ஒன்று முடிந்தால் மற்றொன்று. அது முடிந்தால் இன்னொன்று.
எங்கோ இருக்கும் சர்ச்சிலை வீட்டுக்கு அழைத்து வந்து பேசுவதற்கு நேரம் இருக்கிறது. கட்சி, பொதுக்கூட்டங்கள் என்றால் நேரம் இருக்கிறது. ஆனால், வீட்டில் இருந்தபடி சிறிது நேரம் மனம்விட்டுப் பேசலாம் என்றால், அதற்கு மட்டும் நேரமில்லை.
சமீப காலமாக இன்னமும் மோசம். போர். போர். போர். வாயைத் திறந்தால் இதைப்பற்றித்தான் பேச்சு. ஜெர்மனி, ஹிட்லர், நேச படைகள், கூட்டு நாடுகள், உடன்படிக்கைகள், ஒப்பந்தம், லெனின்கிராட், மாஸ்கோ, சோவியத்.
ஆனாலும், ஸ்வெத்லானா தனது தந்தையைப்பற்றி நன்றாக அறிந்திருந்தாள். அதனால்தான் ஒவ்வொரு முறை அவருடன் கோபித்துக் கொள்ளும்போதும், அது பொய்ச் சண்டையாக மாறிவிடுகிறது.
அலுவலகத்தில் அவர் ஏதோ ஒரு முக்கிய மீட்டிங்கில் இருந்தபோது (அமெரிக்கப் பிரதிநிதி ஹாப்கின்ஸிம் உரையாடிக் கொண்டிருந்த சமயம் அது) ஸ்வெத்லானா தன் தந்தையை தொலைபேசியில் அழைத்தார்.
அப்பா, நான் டிப்ளமோ பட்டம் பெற்றுவிட்டேன்.
அப்படியா? சந்தோஷம். மகிழ்ச்சி. உன்னை இப்போதே பார்க்கவேண்டும்போல் இருக்கிறது.
நான் அங்கு கிளம்பி வரவா?
சரி, வாயேன்.
ஸ்வெத்லானாவிடம் நீண்ட நேரம் பேசினார் ஸ்டாலின்.
அடுத்து என்ன படிக்கப் போகிறாய்?
பல்கலைக் கழகம் போகவேண்டும். மேற்படிப்பு படிக்கவேண்டும்.
என்ன படிக்கப் போகிறாய்?
கவிதைகள், கதைகள், கட்டுரைகள். இலக்கியம் படிக்கப் போகிறேன்!
வேண்டாம் ஸ்வெத்லானா. இலக்கியம் படிப்பது வீண்.
அப்படியானால் நான் என்னதான் படிப்பது?
ஸ்வெத்லானாவின் தலையை புன்னகையுடன் கோதி விட்டார் ஸ்டாலின்.
வரலாறு படி. வரலாறு பல புதிய விஷயங்களை உனக்குக் கற்றுக் கொடுக்கும்!
தனது மூத்த மகன் யாகோப் விஷயத்தில் தந்தை காட்டிய அணுகுமுறை ஸ்வெத்லானாவை மிகுதியாகக் கவர்ந்தது.
விஷயம் இதுதான்.
1935-இல் ராணுவத்தில் சேர்ந்தான் யாகோப். 14 ஆவது படைப் பிரிவில் அவன் ஒரு லெஃப்டினெண்ட்.
பைலோரஷ்யப் போர் தொடங்கி மறுநாளே யாகோப் போர்களத்துக்குச் சென்று விட்டான். பிற கைதிகளுடன் சேர்த்து ஜெர்மனி, யாகோபையும் கைது செய்துவிட்டது. பின்னர், விசாரணையின்போது தான் பிடித்து வந்திருப்பது தங்க முட்டையை என்று அவர்களுக்குத் தெரிந்துவிட்டது.
ஸ்டாலினுடன் ஜெர்மனி பேரம் பேசியது.
உங்கள் மகன் யாகோப் இப்போது எங்கள் கையில்! வில்லன் பாணியில் சொன்னது ஜெர்மனி.
இதயமே நின்றுவிடும்போல் இருந்தது ஸ்டாலினுக்கு. ஆனால், அடுத்த விநாடியே அவர் சுதாரித்துக் கொண்டார்.
சரி, சொல்லுங்கள்.
யாகோப்பை உங்களிடம் திருப்பி அனுப்ப நாங்கள் தயாராக இருக்கிறோம். ஆனால், ஒரு நிபந்தனை. அதற்கு ஈடாக நீங்கள் சிறை வைத்திருக்கும் கைதிகளை விடுவித்துவிட வேண்டும். சம்மதமா?
மன்னிக்கவும். எனக்குப் பேரம் பேசி பழக்கமில்லை.
தொலைபேசியைத் துண்டித்துவிட்டார் ஸ்டாலின்.
தன் மகள் ஸ்வெத்லானாவிடம் பின்னர் இதுபற்றி பேசினார்.
நான் செய்தது தவறு இல்லைதானே?
இல்லை அப்பா.
**********
தன் தந்தையை ஒரு அறுபத்தைந்து வயது தாத்தாவாக ஸ்வெத்லானாவால் பார்க்க முடியவில்லை. ஆனால், உடல் தளர்ந்து படுக்கையில் அவர் சாயும்போதெல்லாம் அறுபத்தைந்து எனும் எண், அவள் நினைவுகளை அரிக்க ஆரம்பிக்கும்.
தேவைக்கும் அதிகமாகவே உழைத்துவிட்டார். இனி, அவர் நிச்சயம் ஓய்வெடுக்கவேண்டும் என்று கிரெம்ளின் மருத்துவர்கள் கறாராகச் சொல்லிவிட்டார்கள். ஆனால், அவர் கேட்பதாக இல்லை. எத்தனையோ முறை சொல்லி விட்டாள், பலன் இல்லை.
**********
தன் தந்தை ஒரு கண்டிப்பான மனிதரும்கூட என்று ஸ்வெத்லானாவுக்கு நன்றாகவே தெரியும்.
பல்வேறு சந்தர்ப்பங்களில் பல்வேறு காரணங்களுக்காக அவர் தன்னைக் கடிந்து கொண்டதையும் அவள் அடிக்கடி நினைத்துப் பார்த்துக் கொள்வாள்.
உடலோடு ஒட்டிக்கொள்ளும்படியாக ஏன் ஆடைகள் அணிகிறாய்? வளர்ந்த பெண்தானே! தொதொளப்பான ஆடைகளை அணிய பழகிக் கொள். ஒரு போல்ஷ்விக் பெண்ணுக்கு கண்ணியம்தான் முக்கியம்!
தன்னடக்கம் போதாது. நீ இன்னமும் நிறைய வளர வேண்டியிருக்கிறது!
பல சமயம் நீ திமிருடன் பேசுகிறாய், நடந்துகொள்கிறாய். தவறு!
தன் முதல் கணவரை இறுதிவரை அவள் தந்தை ஏற்றுக்கொள்ளாமல் இருந்தது ஒரு உறுத்தல்தான். அதேபோல், ஸ்வெத்லானாவின் இரண்டாவது திருமணத்தையும் ஸ்டாலின் ஏற்றுக்கொள்ளவில்லை.
ஆனால் என்ன? அப்பாவுக்கும், மகளுக்கும் இடையே ஆயிரத்தெட்டு மன விரோதங்கள் இருக்கும். ஆயிரத்தெட்டு சண்டைகள் மலரும். இதென்ன உலகப் போரா அடித்து வீழ்த்துவதற்கு? சண்டை போடுவார். ஆனால், விரைவில் ஓடிவந்து கட்டியணைத்துக் கொள்வாரா? மாட்டாரா? அதுதானே முக்கியம்.
– இப்படி முடிகிறது அந்நூல்!
Posted in abuse, Affection, Autocracy, Badri, Blind, Books, CCP, Churchill, Citizens, Culture, Dictators, Dictatorship, Dress, Dresscode, Faith, Germany, Kilakku, Kings, Kizakku, Kizhakku, Love, massacre, people, Power, publications, Religion, Reviews, Rulers, Russia, Stalin, USSR, Veeramani, Wars, WWII | Leave a Comment »
Posted by Snapjudge மேல் திசெம்பர் 17, 2007
துப்பட்டாவில் படபடக்கும் தமிழ்க் கலாசாரம்
லீனா மணிமேகலை
அறிவும் ஆற்றலும் கொண்ட பெண் இந்த சமூகத்தில் தனிமனிதராக மதிக்கப்படுகிறாரா என்ற கேள்விக்கு “இல்லை’ என்று சொல்லவேண்டிய இடத்தில்தான் நாம் இப்போதும் இருக்கிறோம்.
பெண்ணின் இருப்பு வெறும் உடலாகவே கணக்கிடப்படுகிறது. இந்திய – குறிப்பாக – தமிழ்ச் சமூகத்தின் கலாசார நடவடிக்கை என்பது பெண்ணுடல் மீதான கண்காணிப்பாகவும் விசாரணையாகவுமே குறுகிக் கிடக்கிறது.
சமூகம், முதலில் தனது அதிகார இயந்திரங்களான மதத்தையும் சாதியையும் கொண்டு பெண்ணின் விருப்பங்களையும் தேர்வுகளையும் கட்டுப்படுத்துகிறது. அடுத்ததாக கற்பு / தாய்மை போன்ற கற்பிதங்களால் பெண்ணின் காதல் / காமம் ஆகிய உணர்வுகளைக் கட்டமைக்கிறது.
தொடர்ச்சியாக குடும்பம், உழைக்குமிடம் தவிர்த்த பெண்ணின் வெளியையும் மறுதலிக்கிறது. இந்த வரையறையிலிருந்து விலகி தனித்த அடையாளத்துடன் ஒரு பெண் தனக்கென பாதையை வகுத்துக்கொள்ள முற்படும்போது அது குருட்டுச்சந்தாகவே முடிகிறது என்பதுதான் கசப்பான உண்மை.
சமீபத்தில் சென்னை லயோலா கல்லூரியில் காட்சி ஊடகவியல் துறையினர், “கனாக்களம் – 2007′ என்கிற கருத்தரங்கின் கலந்துரையாடலில் “சினிமாவும் சமூகமும்’ என்னும் தலைப்பில் என்னைப் பேச அழைத்திருந்தனர். காலை பத்து மணியளவில் கல்லூரி வாசலை அடைந்த என்னை நிறுத்திய கல்லூரியின் காவலர்கள், அடையாள அட்டையைக் காண்பிக்குமாறு கேட்டனர். நான் அழைப்பிதழைக் காட்டினேன்.
“உங்களை உள்ளே அனுமதிக்க முடியாது. ஏனென்றால் நீங்கள் ஜீன்ஸýம் குர்தாவும் அணிந்திருக்கிறீர்கள் – துப்பட்டா அணியவில்லை’ என்றார்கள். ஒரு நிமிடம் எனக்குத் தலைசுற்றியது; நான் தமிழ்நாட்டில்தான் இருக்கிறேனா அல்லது தாலிபான்களின் ஆப்கானிஸ்தானில் இருக்கிறேனா என்ற இடக்குழப்பம் ஏற்பட்டது.
கிணுகிணுத்த கைபேசியைத் தட்டினால் அமைப்பாளர்கள், “சிறிது நேரம் பொறுங்கள், நாங்கள் வந்துபேசி அழைத்துச் செல்கிறோம்’ என்றார்கள். நிமிடங்களில் ஒரு மாணவி ஓடிவந்து கறுப்புத் துப்பட்டாவைத் தந்து “இதை அணிந்துகொண்டு உள்ளே வாருங்கள்’ எனக் கெஞ்சும் தொனியில் கேட்டபோது எனக்குச் சிரிப்பதா அழுவதா எனத் தெரியவில்லை.
“”சுதந்திரமாக ஆடையணிந்துகூட வரமுடியாத இடத்தில், சுதந்திரமான சினிமாவை நேசித்துப் பணியாற்றிக் கொண்டிருக்கும் எனக்கு எந்தப் பணியும் இல்லை” என்று மட்டும் குறிப்பிட்டுவிட்டுத் திரும்பிவிட்டேன்.
அழைப்பிதழில் இடம்பெற்றிருந்த மற்ற பேச்சாளர்களான பாலுமகேந்திரா, பாமரன், ஞாநி, வசந்தபாலன், எஸ். ராமகிருஷ்ணன், லெனின், அஜயன்பாலா ஆகியோர் ஆண்களாக இருந்ததால், அவர்களுக்குத் துப்பட்டா பிரச்னை இருந்திருக்காது என்று சிந்தனை ஓடியது.
கல்வி நிலையங்கள் தமிழ்க் கலாசாரத்தைத் துப்பட்டாவில் கட்டிக்காக்கும் அளவுக்குத் தரம் தாழ்ந்துவிட்டனவா என்று கடுங்கோபம் வந்தது. பதினெட்டு வயதில் தங்கள் நாட்டை யார் ஆள வேண்டும் என்று முடிவு செய்யும் ஓட்டுரிமை பெற்ற கல்லூரி மாணவ, மாணவியருக்குத் தங்களுக்கான உடையைத் தேர்ந்தெடுக்கும் உரிமையை மறுப்பதையே பல தளங்களில் நான் எதிர்த்துப் பேசியும் எழுதியும் வந்திருக்கிறேன்.
எழுத்தும் சினிமாவுமாக விடுதலையைப் பற்றிய சிந்தனையையும் படைப்புகளையும் மட்டுமே சுவாசித்துக் கொண்டிருக்கும் என்னை, நிகழ்ச்சிக்கு விருந்தினராக அழைத்து, துப்பட்டாவைக் கொடுத்து, என் இருப்பையே கேள்விக்குறியாக்கிவிட்ட லயோலா கல்லூரி எனக்கு என்ன பதில் வைத்திருக்கிறது?
ஒவ்வோர் ஆண்டும் தரத்தின் அடிப்படையிலான சர்வேக்களில், இந்தியாவின் சிறந்த கல்லூரிகளின் தரவரிசையில் ஐந்து முதல் பத்தாம் இடத்திற்குள் ஸ்டார் தகுதியில் இடம்பிடிக்கும் லயோலா கல்லூரி, தனி மனித உரிமைக்குத் தரும் மரியாதையில் எந்த இடத்தில் தன்னை நிறுத்திக் கொள்கிறது?
பல கல்லூரிகளில் நடைமுறையிலிருக்கும் பெண்களுக்கான உடை பற்றிய கோட்பாடுகளின் வரலாறு மிக சுவாரஸ்யமானது. கல்லூரி மாணவர்களின் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள், மாணவிகளின் உடை விஷயத்தால் மிகவும் மனஉளைச்சலுக்கு ஆளாகிறார்கள்-படிப்பிலும் கவனம் செலுத்த முடிவதில்லை. அதனால் கல்லூரி மேலாண்மை மாணவிகளின் உடைகளில் கட்டுப்பாடுகளைக் கொண்டுவர வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்களாம். உடனே கல்லூரி நிர்வாகம் மாணவிகளுக்குத் துப்பட்டா கட்டளைகளைப் பிறப்பித்திருக்கிறது; ஜீன்ஸிற்குத் தடா போட்டிருக்கிறது என்று கேள்வி.
இதை விசாரித்துக் கொண்டிருக்கும்போது எனது தோழரும், பெண்ணிய சிந்தனையாளரும், எழுத்தாளருமான ஓவியா ஒரு வரலாற்று நிகழ்ச்சியை நினைவுபடுத்தினார். சுதந்திரத்திற்கு முன் நமது நாட்டின் முதல் பெண் மருத்துவர் முத்துலெட்சுமி, கல்லூரியில் அனுமதி கேட்டபோது மற்ற மாணவர்களின் பெற்றோர்கள் “ஒரு பெண் கல்லூரிக்கு வருவதா, எங்கள் பிள்ளைகள் கெட்டுப்போவார்கள் – நாங்கள் விண்ணப்பங்களைத் திரும்பப் பெறுவோம்’ என்று சொன்னார்களாம். அதைக் கேள்விப்பட்டு கலக்கமுற்ற தாளாளர், அன்றைய அரசுப் பிரதிநிதியான வெள்ளைக்கார கவர்னரிடம் முறையிட்டாராம்.
வெள்ளைத்துரை அதற்கு, “பரவாயில்லை, அந்தப் பெண் மட்டும் படித்தால் போதும், மாணவர்களை வீட்டுக்கு அனுப்புங்கள்’ என்றாராம். அந்த வெள்ளைத்துரைக்குப் பாவம் நமது கலாசாரம் தெரியவில்லை. தவறு செய்துவிட்டார்! சுதந்திர இந்தியாவின் கல்லூரி நிறுவனர்கள் அந்தத் தவறைச் செய்வார்களா என்ன? அப்புறம் தமிழ்க் கலாசாரம், பண்பாடெல்லாம் என்னாவது?
பெற்றோர்களை தங்கள் பிள்ளைகளுக்குப் புலனடக்கம் கற்றுத்தரச் சொல்லியனுப்பாமல், மாணவிகளுக்கு உடைக் கோட்பாடுகளைப் பிறப்பிக்கிறார்கள். நிச்சயம் மாணவர்கள் அணியும் உடையில் நமது மாணவிகள் மனக்கிலேசம் அடைய மாட்டார்கள். அப்படியே இருந்தாலும், சிரிப்பையும் சிறுநீரையும்கூட சிறுவயதிலிருந்து அடக்கப் பழகியிருக்கும் நமது பெண்களுக்கு இதெல்லாம் எம்மாத்திரம்?
எது எப்படியோ, துப்பட்டாவை எடுத்துவந்து என்னை அணிந்துகொள்ளச் சொன்ன மாணவியின் முகம் என்னைத் தூங்கவிடாமல் துரத்திக் கொண்டிருக்கிறது. எப்படிப்பட்ட கோழைப் பூச்சிகளாக மாணவ சமுதாயத்தை நாம் உருவாக்கிக் கொண்டிருக்கிறோம்? “உனக்குச் சுதந்திரம் வழங்க மறுக்கும் சமூகத்திடம் எந்தச் சமரசமும் செய்து கொள்ளாதே’ என்று ஊக்குவிக்காத கல்வியால் பெண்ணுக்கு என்ன பயன் இருக்க முடியும்?
குடும்பம், கல்வி நிறுவனம், சமூகம் என எல்லா அமைப்புகளும் பெண்ணின் உடலை மனதைக் கண்காணிக்கும் காவல் நிலையங்களாகச் செயல்படுவதால் நட்டமடைவது பெண் மட்டுமல்ல, மொத்த சமூகமும்தான்.
அரசோ, ஆணையோ, நிறுவனமோ, ஏன் தனிமனிதனோ, உறவோ, வாழ்க்கைத் துணையோ, சினேகிதனோகூட எதன் பெயராலோ அதிகாரத்தைச் செலுத்தும்போது அதை ஏன் என்று கேள்வி கேட்க முடியாத பூஞ்சைக்காளான்களாக நம்மை உருவாக்கிக் கொள்வதற்கு கல்வி அவசியமே இல்லை. பேசாமல் மாடு மேய்க்கப் போகலாம்.
பெண் விடுதலை உடையில் இல்லை என்பது எந்த அளவுக்கு உண்மையோ, அதைவிட உண்மை ஆண் ஆதிக்கம் என்பது பெண்களின் உடை விஷயத்தில் இருக்கிறது என்பதுதான்.
பிரச்னை “துப்பட்டா’ அல்ல. பெண்களை துப்பட்டா போடச் சொல்லும் ஆண்களின் மனோபாவம். பாமரன்களும், அஜயன்பாலாக்களும், வசந்தபாலன்களும், ஞாநிகளும் இந்தச் சம்பவத்தை சட்டை செய்யாததிலிருந்தே அவர்களது சமூகத்தில் எப்படிப்பட்ட சிந்தனை நிலவுகிறது என்பது தெரிகிறது. இதுதான் பெருவாரியான ஆண்களின் மனநிலை என்பதே உண்மை.
கல்விக்கூடங்களும் சரி, தங்கள் வகுப்பறைகளை மூடிவிட்டு துப்பட்டா கடைகள் நடத்தலாம். கலாசாரத்தையும் காத்துக் கொள்ளலாம். வருமானத்தையும் பெருக்கிக் கொள்ளலாம். வேறென்ன செய்வது?
(கட்டுரையாளர்: கவிஞர், திரைப்பட இயக்குநர்)
Posted in Censor, Colleges, Culture, Dhupatta, Discrimination, Dress, Fashion, Females, Feminism, Freedom, Her, Heritage, Independence, Lady, Leena, Liberation, Loyola, Manimekalai, Police, She, Society, Thupatta, Woman, Women | 16 Comments »
Posted by Snapjudge மேல் நவம்பர் 27, 2007
முந்தைய பதிவு: புதுமை பூக்கும் புடவைகள்

சென்னை சில்க்ஸ் அறிமுகம்
ரூ.40 லட்சம் மதிப்புள்ள பட்டுச்சேலை
தங்கம், வைரம், முத்து, பவளம் உள்ளிட்ட நவரத்தினங்களால் ஆனது
சென்னை, நவ.27-தங்கம், வைரம், முத்து, பவளம், மாணிக்கம், மரகதம் உள்ளிட்ட நவரத்தினங்களால் தயாரிக்கப்பட்ட ரூ.40 லட்சம் மதிப்புள்ள பட்டுச்சேலையை செனëனை சில்க்ஸ் நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது.உலகப்புகழ் பட்டுசேலை
தமிழ்நாட்டில் முனëனணி ஜவுளி நிறுவனங்களில் ஒன்றான தி சென்னை சில்க்ஸ் நிறுவனம் உலகம் முழுவதும் பேசப்படும் வகையில் கலைநயமிக்க, விலைமதிப்பற்ற பட்டுச்சேலையை தயாரிக்க திட்டமிட்டது. இதற்காக அந்த நிறுவனம் தனித்திறன் மிக்க நெசவாளர்களைக் கொண்டு வடிவமைத்து, நவரதëதினங்களை இணைத்து சொந்த தறியில் அழகும், கலைநயமும் மிக்க பட்டுச்சேலையை உருவாக்கி உள்ளது.
தங்கம், வைரம், பிளாட்டினம், மாணிக்கம், முத்து, பவளம், புஷ்பராகம், மரகதம் உள்ளிட்ட 12 வகையான விலை உயர்ந்த ஆபரணங்களை இணைத்து உலகப் புகழ்பெற்ற ஓவியர் ரவி வர்மாவின் 12 ஓவியங்களுடன் வடிவமைத்துள்ளனர். ஆபரணங்களை சேலையுடன் சேர்த்து நெய்திருப்பது சிறப்பு அம்சம் ஆகும்.
விலை ரூ.40 லட்சம்
51/2 மீட்டர் நீளம் கொண்ட இந்த பட்டுச்சேலையில் முந்தானை பகுதியில் இந்தியாவின் 11 மாநிலங்களைச் சேர்ந்த பெண்கள் இசைக்கருவிகளுடன் அணிவகுத்து நிற்கும் ஓவியமும் மற்ற 11 ஓவியங்களும் ஒவ்வொரு பார்டரிலும் இடம்பெற்றுள்ளன.
விலை உயர்ந்த ஆபரணங்களைக் கொண்டு நுணுக்கமாக கலைநயத்துடன் உருவாக்கப்பட்ட உலகின் முதல் பட்டுச்சேலை இது என்பது குறிப்பிடத்தக்கது. இதன் விலை ரூ.40 லட்சம் ஆகும். உலகிலேயே அதிக விலை கொண்ட பட்டுச்சேலை என்ற சிறப்பையும் இந்த சேலை பெறுகிறது. இந்த சேலையை உருவாக்க மொத்தம் 18 மாதங்கள் ஆனது.
சுகாசினி அறிமுகப்படுத்தினார்
உலகின் மிக விலை உயர்ந்த பட்டுச்சேலை, 12 விதமான உலோகங்கள் மற்றும் நவரத்தின கற்களால் தயாரிக்கப்பட்ட பட்டுச்சேலை, ஒரே பட்டு சேலையில் ரவிவர்மாவின் 11 விதமான ஓவியங்கள் இடம்பெற்ற பட்டுச்சேலை என்பதற்காக கின்னஸ் சாதனைக்கு இந்த பட்டுசேலை பரிந்துரைக்கப்பட்டு உள்ளது. சென்னையில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் நடிகை சுகாசினி இந்த பட்டுசேலையை அறிமுகப்படுத்தினார்.
அப்போது பேசிய சென்னை சில்க்ஸ் நிறுவனத்தின் இயக்குனர்களில் ஒருவரான விநாயகம், “உலகம் முழுவதும் பேசப்படும் வகையில் கலைநயமிக்க பட்டுசேலையை தயாரிக்க வேண்டும் என்பதற்காகவும், நெசவு குடும்பத்தைச் சேர்ந்த நாங்கள் நெசவாளர்களுக்காக ஏதாவது செய்ய வேண்டும் என்பதற்காகவும் இந்த முயற்சியில் இறங்கினோம்.
இந்த சேலையை உருவாக்கியவர்கள் வெறும் கூலிக்காக வேலை செய்யவில்லை. 3 தலைமுறையாக நெசவு தொழில் செய்து வரும் அவர்கள் அர்ப்பண உணர்வுடன் அதிக அக்கறை எடுத்து இந்த முயற்சியில் ஈடுபட்டார்கள். அவர்களது மனோதைரியத்திற்கும், நம்பிக்கைக்கும் புதிய ஊக்கம் கிடைத்து இருக்கிறது” என்று கூறினார்.
சேலை அறிமுக விழா நிகழ்ச்சியில்
- சென்னை சில்க்ஸ் இயக்குனர்கள் மாணிக்கம்,
- ஆறுமுகம்
- நந்தகோபால்,
- சிவலிங்கம்,
- சந்திரன் மற்றும் அவர்கள் குடும்பத்தினர்,
- கவிஞர் வைரமுத்து,
- நடிகை ஷோபனா,
- நடிகர் ஜீவா,
- பின்னணி பாடகி பி.சுசீலா,
- கர்நாடக இசை பாடகி நித்யஸ்ரீ மகாதேவன்,
- டாக்டர் கமலா செல்வராஜ், மத்திய
- பட்டு வாரிய முன்னாள் இயக்குனர் டி.எச்.சோமசேகர்,
- ஓவியர் மணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கர்நாடக அரசுத் துறை நிறுவனமான மைசூர் சில்க் நிறுவனம்
வடிவமைத்துள்ள பட்டுச் சேலையை உடுத்திப் பார்க்கும்
இளம்பெண். இச்சேலையின் விலை ரூ. 1.5 லட்சமாகும்.
பெங்களூர் இன்பான்டரி சாலையில் உள்ள கர்நாடக நிர்வாக
அதிகாரிகள் சங்கத்தில் வியாழக்கிழமை துவங்கிய
மைசூர் சில்க் சேலைக் கண்காட்சியில் இது இடம் பெற்றுள்ளது
Posted in Aarani, aesthetics, Art, Banaras, Banares, Benaras, Benares, Bengal, blouse, Border, Budget, CAD, cat's eye, Chennai, clothing, coral, Cotton, Deepam, Deepavali, Deepavalli, Design, designers, Dharmavaram, Diamond, Diwali, Dress, embellishments, embroidery, emerald, Evening, Events, Expensive, Exports, Fabric, Fear, Feast, Festival, Formals, Formalwear, Garments, Gems, girls, Gold, Gowns, Guiness, Handicrafts, Heritage, Individual, Instruments, Jari, Jarigai, Jeeva, Jewels, Kala Niketan, KANCHEEPURAM, Kanchi, Kanchipuram, Kanchipuram Silk, Kanchivaram, Kanjeepuram, Kanjeevaram, Kanjipuram, Kanjivaram, Kasi, Kumaran, Ladies, Lady, Laundry, Limca, Marriages, music, musical, Musicians, Mylai, Mylapore, Mysore, Nalli, Nithashree, Nithashri, Nithyashree, Nithyashri, Nithyasree, Nithyasri, nylon, ornate, P Suseela, P Susheela, P Sushila, P Susila, Painter, Paintings, pallu, Party, Partywear, pearl, Platinum, Pochampalli, Polimer, polycot, polycotton, Polymer, Pothys, precious, Radha, Rasi, Ravi Varma, RaviVarma, RaviVerma, Receptions, Record, Records, Rich, RMKV, Roopkala, ruby, sapphire, Saree, Sarees, Sari, Saris, She, Shobana, Shobhana, Silks, silver, Skirt, stones, Sugasini, Suhasini, Sukasini, Synthetic, Tamil Nadu, TamilNadu, terrycot, terrycotton, Textiles, Thread, TNagar, topaz, Tussar, Varanasi, Vijayalakshmi, Wash, Weddings, Woman, Women, yellow sapphire, zari, Zarigai, Zhari | Leave a Comment »
Posted by Snapjudge மேல் நவம்பர் 10, 2007
விதிமுறை மீறல்கள்!
ஒரு திரையரங்கம் கட்டுவதாக இருந்தால் கூட, அதில் இத்தனை நபர்கள் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் அந்தக் கட்டடத்துக்குள் கூடுவார்கள் என்பதற்கான அதிகபட்ச நிர்ணயம் உண்டு. ஆனால், வணிக வளாகங்களுக்கு எந்தவிதக் கட்டுப்பாடும் இல்லாத அளவுக்கு நெரிசலை சந்திக்க வேண்டிய கட்டாயம். அதுவும், தொலைக்காட்சி வந்த பிறகு, பண்டிகைக் காலங்களில் இத்தனை சிறிய தெருவில் இத்தனை மக்களா என்று திகைப்பும், பயமும் ஏற்படுகிறது.
இந்த வர்த்தக நிறுவனங்கள் அள்ளி வீசும் இலவசங்களும், சலுகைகளும் பண்டிகைக் காலங்களில் புற்றீசல்போல வாடிக்கையாளர்களை மொய்க்க வைத்துவிடுகின்றன. அந்த அளவுக்குக் கூட்டத்தை சமாளிக்கும் அளவுக்கு அந்தக் கட்டடங்களில் இடமில்லை என்பது மட்டுமல்ல, தெருக்கள் அகலமும் இல்லை. உதாரணம், சென்னை ரங்கநாதன் தெருவும் அதிலுள்ள வணிக வளாகங்களும்.
சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் ஒரு கணக்கெடுப்பு நடத்தி வெளியிட்டிருக்கும் அறிக்கை, சென்னை தி.நகர் ரங்கநாதன் தெரு மற்றும் உஸ்மான் சாலையில் மட்டும் சுமார் 35 கட்டடங்கள் எப்.எஸ்.ஐ. (ஊ.ந.ஐ.) என்று அழைக்கப்படும் அதிகபட்சக் கட்டுமானப் பரப்பு விகிதத்தை மீறி எழுப்பப்பட்டவை என்று வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.
இது ஏதோ அரசுக்கும் அரசு அதிகாரிகளுக்கும் தெரியாமல் நடக்கும் விஷயமல்ல. 10 மீட்டர் அகலமுள்ள சென்னை ரங்கநாதன் தெருவில் பல அடுக்குக் கட்டடங்கள் எதுவும் அனுமதிக்கப்படவே கூடாது. ஆனால், விதிமுறைகளை மீறி சுமார் 14 கட்டடங்கள் எப்படி கட்டப்பட்டன? எந்தவொரு மாநகராட்சி மற்றும் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும அதிகாரிகளுக்கும் தெரியாமலா இந்தக் கட்டடங்கள் கட்டப்பட்டன?
உஸ்மான் சாலையில் இலக்கம் 128 மற்றும் 129 எண்களிலுள்ள சரவணா ஸ்டோர்ஸ் கட்டடம் கட்டுவதற்கு அனுமதிக்கப்பட்ட எப்.எஸ்.ஐ. 1.5 தான். ஆனால், கட்டப்பட்டிருப்பதோ 8.99. சட்டப்படி இந்தக் கட்டடத்துக்கு 266 கார்களை நிறுத்துவதற்கான இடம் இருக்க வேண்டும். ஆனால் ஒரு சைக்கிள் நிறுத்தக் கூட இடமில்லை. இது எப்படி நிகழ்ந்தது?
உஸ்மான் சாலையிலுள்ள ஸ்ரீ சங்கரபாண்டியன் ஸ்டோர்ஸ் வரம்பை மீறி ஐந்து மாடிகள் கட்டியது கண்ணில் படவில்லையா?
இல்லை, புதிய சரவணா ஸ்டோர்ஸ் நான்கு மாடிகள் கட்டியது யாருக்கும் தெரியாமல் கட்டப்பட்டதா?
- கோடம்பாக்கம் சேகர் எம்போரியமும்,
- உஸ்மான் ரோடு சரவணா கோல்டு ஹவுசும்,
- ரங்கநாதன் தெருவுக்கு நேர் எதிரில் எழுந்து நிற்கும் சரவணா செல்வரத்தினத்தின் கட்டடமும்,
- ரங்கநாதன் தெருவிலுள்ள வணிக வளாகங்களும்
ஊரறிய உலகறிய கட்டப்பட்டபோது, அதிகாரிகள் தூங்கிக் கொண்டா இருந்தார்கள்? சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு செயல்படும் நல்லி நிறுவனத்தின் கட்டடத்திலேயே விதிமுறை மீறல் இருப்பதாகச் சொல்கிறார்களே, அது எதனால்?
முறையான அனுமதி பெற்று கட்டடம் கட்டத் தொடங்குவார்கள் – இரண்டு அடுக்கு முடிந்ததும், மூன்றாவது அடுக்கு கட்டத் தொடங்கும்போது, சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பும். மாநகராட்சியைக் கேட்டால், எங்களிடம் அனுமதி வாங்கியது இரண்டு அடுக்குக்குத்தான். அதற்குமேல் கட்டப்படும் கட்டடங்களுக்கு பெருநகர் வளர்ச்சிக் குழுமம்தான் பொறுப்பு என்று தட்டிக் கழித்து விடுவார்கள். சம்பந்தப்பட்டவர் நீதிமன்றத்தை அணுகித் தடை பெற்று விடுவார். அதைக் காரணம் காட்டி பெருநகர் வளர்ச்சிக் குழுமம் கண்களை மூடிக் கொள்ளும்.
இதையெல்லாம் மீறி, பொது நல வழக்குத் தொடர்ந்து விடாப்பிடியாக உச்ச நீதிமன்றம் வரை போய் இந்தக் கட்டடங்களில் காணப்படும் விதிமுறை மீறல்களை இடித்துத் தள்ள உத்தரவு வாங்கி வந்தால், சட்டம் இயற்றி இவர்களைக் காப்பாற்ற அரசு முன்வருகிறது. அதாவது, இந்த விதிமுறை மீறல்களுக்கு உடந்தையாக சென்னை மாநகராட்சியும், சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமமும், அரசும் செயல்படுகின்றன என்றால், ஆட்சியும் அதிகாரமும் யாருக்காகப் பயன்படுத்தப்படுகிறது என்பது தெளிவாகிறது.
முதலில் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் இந்தக் கட்டடங்களைக் கட்ட உதவும் என்ஜினீயர்களும், காண்ட்ராக்டர்களும். விதிமுறை மீறல்களுக்குத் துணைபோகும் இவர்களது பட்டம் பறிக்கப்படும், உரிமம் ரத்து செய்யப்படும் என்று அறிவித்தால், இந்த விதிமுறை மீறல்கள் பெரிய அளவில் தடுக்கப்படும். படித்த பொறியியல் பட்டதாரிகள் இந்த விதிமுறை மீறல்களுக்குத் துணைபோகத் தயாராவதுதான் அடிப்படைக் குற்றம். அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்!
தவறான சிகிச்சைக்கு மருத்துவர்கள் தண்டிக்கப்பட்டு அவர்களது உரிமம் பறிக்கப்படுவதுபோல, விதிமுறை மீறல்களுக்குத் துணை போகும் என்ஜினீயர்களின் உரிமம் ரத்து செய்யப்படுமானால், இதுபோன்ற விதிமுறை மீறல்கள் நிச்சயம் குறையும்.
Posted in authority, Biz, Bribery, Bribes, Buildings, Business, Cars, Chennai, Citizen, City, Commerce, Congestion, Construction, Consumer, Corruption, Crackers, Customer, Deepavali, Deepavalli, Departments, Dept, Discount, Diwali, DMK, Dress, Economy, Finance, Fire, Fireworks, Floors, Gold, Hassle, Hazards, Illegal, Incentives, Industry, infrastructure, Jewelery, Jewels, Jewlery, kickbacks, Lanes, Law, License, Madras, Malls, Metro, MMDA, multi storey, Multi story, officers, Order, Parking, Permits, Ranganathan st, Ranganathan street, Rebates, Renganathan st, Renganathan street, retail, Safety, Saravana, Saravana Gold House, Saravana GoldHouse, Saravana Selvarathanam, Saravana Selvarathanam Stores, Saravana Stores, Sarees, Saris, Season, Sector, Sekar Emporium, Shopping, Shops, Sri sankarapandian, Sri sankarapandian Stores, Srisankarapandian, Srisankarapandian Stores, Suspend, Trade, Traffic, Usman Road | Leave a Comment »
Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 11, 2007
ஒருங்கிணைந்த ஜவுளி பூங்காக்கள்
எஸ். கோபாலகிருஷ்ணன்
ஜவுளித்துறையில் “கோட்டா’ முறை முடிவுக்கு வந்து சுமார் 3 ஆண்டுகளாகப் போகிறது. ஜவுளித்துறையில் ஏற்பட்ட மிகப்பெரிய மாற்றம் இது. இந்த மாற்றம் ஏற்படுவதற்கு முன் என்ன நிலைமை இருந்தது?
அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய யூனியன் நாடுகள் தங்களுக்குத் தேவையான ஆயத்த ஆடைகளை ஒரே நாட்டிலிருந்து வாங்குவதில்லை. இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, சீனா, இந்தோனேசியா போன்ற பல நாடுகளிலிருந்து நிர்ணயிக்கப்பட்ட ஒரு விகித அடிப்படையில் இறக்குமதி செய்து வந்தன. இதனால், இந்தியா ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் ஏற்றுமதி செய்வதற்கான வாய்ப்பு இல்லாமல் இருந்தது. இந்த கோட்டா முறை 2005 ஜனவரி முதல் ரத்து செய்யப்பட்டது.
இதையடுத்து இந்திய ஜவுளித்துறைக்கு மிகப்பெரிய வாய்ப்பு காத்திருக்கிறது என்று பரவலாக எதிர்பார்க்கப்பட்டது. “”இனி தேவையெல்லாம், வணிகத்திறன் மட்டுமே. அதாவது, சர்வதேசச் சந்தையில் போட்டியிடுவதற்குத் தகுந்த சிறப்பான தரம், நியாயமான விலை, குறிப்பிட்ட தேதியில் ஏற்றுமதி செய்தல் ஆகியவையே. இனி எவ்வளவு வேண்டுமானாலும் ஏற்றுமதி செய்யலாம்” என்று ஜவுளித்துறையில் பேசப்பட்டது.
2005-ல் வெளியான முக்கிய ஆய்வறிக்கைகள், 2003 – 04-ல் 12 பில்லியன் டாலராக இருந்த ஜவுளி ஏற்றுமதி 2010-ல் 50 பில்லியன் டாலராக உயரும் என்று தெரிவித்தன. (ஒரு பில்லியன் என்பது நூறு கோடி). அதேபோல், 2012-ம் ஆண்டில் 55 பில்லியன் டாலராகவும் 2014-ம் ஆண்டில் 70 பில்லியன் டாலராகவும் ஜவுளி ஏற்றுமதி உயரும் என்றும் கணிக்கப்பட்டது. அதாவது, இந்தியாவில் தகவல் தொழில் நுட்பத்துறைக்கு இணையாக ஜவுளித்துறை உத்வேகம் அடையும் என்றும் பேசப்பட்டது.
ஆனால், நடப்பாண்டில் ஜவுளி ஏற்றுமதி மதிப்பு 23 பில்லியன் டாலராகவே இருக்கும் என்று தெரிகிறது. அதாவது நிர்ணயிக்கப்பட்டிருந்த 25 பில்லியன் டாலர் இலக்கைவிட குறைவாகவே இருக்கும். கடந்த ஆண்டும் இலக்கைவிட 2 பில்லியன் டாலர் குறைவாகவே ஏற்றுமதி இருந்தது.
எனினும், நான்கு ஆண்டுகளுக்கு முன் வெறும் 12 பில்லியன் டாலராக இருந்த ஜவுளி ஏற்றுமதி இந்த ஆண்டு இரண்டு மடங்காக அதிகரித்திருப்பது சற்று ஆறுதலான விஷயம்.
இந்தியாவின் ஒட்டுமொத்த ஏற்றுமதி அதிகரித்துள்ள அளவு, ஜவுளி ஏற்றுமதி அதிகரிக்கவில்லை என்பதே உண்மை.
சீனா, வங்கதேசம் போன்ற நாடுகள் இந்தியாவைவிட சிறப்பாகச் செயல்பட்டு கோட்டா முறை ரத்தான வாய்ப்பை நன்கு பயன்படுத்திக் கொண்டுள்ளன. சர்வதேச அளவில் இந்தியாவின் ஜவுளி ஏற்றுமதி 3 சதவிகிதம்தான்; ஆனால் சீனாவின் ஏற்றுமதி 20 சதவிகிதம்.
இந்தியாவைப் பொருத்தவரை, ஜவுளித்துறைக்கு ஒரு முக்கியத்துவம் உண்டு. மூன்றரை கோடி மக்களுக்கு நேர்முகமாகவும் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு வழங்கும் துறை இது. இந்தியாவின் மொத்த தொழிலாளர்களின் எண்ணிக்கையில் ஒன்பது சதவிகிதத்தினருக்கு ஏற்கெனவே வேலைவாய்ப்பு வழங்கிவரும் ஒரு துறை.
மத்திய அரசு அண்மைக்காலமாக சில புதிய திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. ஜவுளித்துறையில் புதிதாக முதலீடுகள் வரவேண்டும் என்ற நோக்கில், 1999-ம் ஆண்டு முதல் ஜவுளித்துறையில் தொழிலியல் மேம்பாடு நிதித் திட்டத்தை (பங்ஷ்ற்ண்ப்ங் மல்ஞ்ழ்ஹக்ஹற்ண்ர்ய் ஊன்ய்க் நஸ்ரீட்ங்ம்ங்) உருவாக்கி தொழிலியல் ரீதியான மேம்பாடு மற்றும் நவீனமயமாக்கலுக்காக நிதி உதவி செய்து வருகிறது. இத்திட்டம் நடப்பாண்டில் முடிவடையும் நிலையில் மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
வாட் (யஹப்ன்ங் அக்க்ங்க் பஹஷ்) உள்ளிட்ட வரிச்சலுகைகள், நவீன இயந்திரங்கள் இறக்குமதிக்கான நடைமுறைகளை எளிமைப்படுத்துதல், சிறுதொழில்துறையினருக்கு ஒதுக்கப்பட்டிருந்த பின்னலாடை போன்ற சில பிரிவுகளை பிற தொழிற்கூடங்களுக்கு அனுமதித்தல், வெளிநாட்டு முதலீட்டுக்கான உச்ச வரம்பை 100 சதவிகிதமாக உயர்த்துதல் போன்ற பல நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது.
எனினும் ஜவுளித்துறை குறிப்பிடத்தக்க அளவில் வெளிநாட்டு மூலதனத்தை ஈர்க்கவில்லை என்பதே உண்மை. தொழிலியல் மேம்பாட்டு நிதித் திட்டத்தின் பயனாக, உள்நாட்டு முதலீட்டாளர்கள் கணிசமான அளவில் புதிய முதலீடுகளை ஜவுளித் துறையில் செய்து வருகின்றனர்.
அதேநேரம், ஜவுளி ஏற்றுமதியில் அனுபவமும், ஆற்றலும் பெற்றுள்ள சில தொழில் முனைவோர் வங்கதேசம் சென்று, ஏற்றுமதி செய்ய முற்பட்டிருப்பது கவனிக்கத்தக்கது. அந்த நாட்டில் தொழிலாளர் ஊதியம் உள்ளிட்ட செலவினங்கள் குறைவு என்பதே இதற்கு காரணம்.
இது ஒருபுறமிருக்க, அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 9 சதவிகிதம் உயர்ந்துவிட்டது. மற்ற ஏற்றுமதியாளர்களைப்போலவே, ஜவுளி ஏற்றுமதியாளர்கள் இந்த டாலர் வீழ்ச்சியால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இப் பாதிப்பை ஈடுசெய்யும் வகையில் ரூ. 1,400 கோடியில் பல்வேறு சலுகைகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. எனினும், இது போதுமானது அல்ல என்பது ஏற்றுமதியாளர்களின் கருத்து.
இந்நிலையில், டாலர் மதிப்பு வீழ்ச்சியை எதிர்கொள்ளும் வகையில், ஜவுளி ஏற்றுமதியாளர்கள் சில முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள். உதாரணமாக, அமெரிக்கச் சந்தைக்கு ஏற்றுமதி செய்வதை மட்டும் நம்பியிராமல், ஐரோப்பிய நாடுகளுக்கும் ஜவுளி ஏற்றுமதியை அதிகரிப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இது வரவேற்கத்தக்கதுதான். எனினும், அமெரிக்கச் சந்தையின் தேவையைவிட ஐரோப்பிய நாடுகளின் தேவை மிகக் குறைவு என்பதால், இது ஒரு தாற்காலிக நிவாரணமாகவே அமையும்.
அதேபோல், அமெரிக்காவின் புதிய ஆர்டர்களுக்கு 3 சதவிகித அளவுக்கு விலையை உயர்த்தி வருகிறார்கள் என்று திருப்பூர் உள்ளிட்ட பல பகுதிகளில் செயல்படும் ஜவுளி வியாபாரிகள் தெரிவிக்கிறார்கள்.
ஜவுளித்துறையில் நீண்டகாலத்துக்கு உத்வேகம் ஏற்பட வேண்டுமானால், தொழிலியல் ரீதியாக நவீனமயமாக்கல், கட்டமைப்பு மேம்பாடு, காலமாற்றத்துக்கேற்ற புதிய புதிய வணிக உத்திகள் ஆகியவை உடனடித் தேவை. அத்துடன், நெசவு முதல் ஆடைகளைத் தைத்து முடிப்பதுவரை ஒரே இடத்தில் ஒருங்கிணைந்த உற்பத்திக் கூடங்கள் அமைக்கப்பட வேண்டும்.
இதைக் கருத்தில்கொண்டு, சர்வதேசத் தரத்துக்கு ஜவுளி ஆலைகளை நிறுவுவதற்காக ஒருங்கிணைந்த ஜவுளி பூங்காக்களை மத்திய அரசு அமைக்கிறது. இத்திட்டத்தில் 30 ஜவுளி பூங்காக்களை அமைக்க ஏற்கெனவே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ரூ. 2 ஆயிரத்து 897 கோடியில் அமையும் இத் திட்டத்தில் மத்திய அரசின் பங்குத்தொகை ரூ. 1,055 கோடி என்று மத்திய ஜவுளித்துறை இணை அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்திருப்பது நம்பிக்கை ஊட்டுவதாக உள்ளது.
(கட்டுரையாளர்: சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியாவின் முன்னாள் துணைப் பொது மேலாளர்).
Posted in America, Bangladesh, Budget, Capital, Cash, China, Commerce, Conversion, Dollar, Dress, Dresses, Economy, Employment, EU, Europe, Exchange, Exports, Factory, Fashion, Garments, GDP, Govt, Honduras, Imbalance, Incentives, Income, Indonesia, Industry, Inflation, Jobs, Knit, Loss, Monetary, Money, Nicaragua, Profit, revenue, Rupee, Srilanka, Tariffs, Tax, Textiles, Thirupoor, Thiruppoor, Thiruppur, Thirupur, Tirupoor, Tiruppoor, Tiruppur, Tirupur, Trade, US, USA | Leave a Comment »
Posted by Snapjudge மேல் ஜூலை 9, 2007
நகரம்: சென்னை – 133!
ரவிக்குமார்
தலைப்பைப் பார்த்துவிட்டு “133′-ஐ ஏதோ தபால்துறையில் பயன்படுத்தப்படும் பின்கோட் என்று நினைத்துக் கொள்ளாதீர்கள். உலக அளவில் வாழ்வதற்கு அதிகமான செலவு பிடிக்கும் நகரங்களில், நமது சென்னை மாநகரம் 133-வது இடத்தைப் பிடித்திருக்கிறது. “காஸ்ட் ஆஃப் லிவிங் பெங்களூர்ல ரொம்ப அதிகம்பா’ன்னு யாராவது கூறினால்… நம்பாதீர்கள். ஏனென்றால், பெங்களூர் இந்த வரிசையில் நமக்கு அடுத்துதான் வருகிறது!
மாஸ்கோ, லண்டன், சீயோல், டோக்கியோ, ஹாங்காங், கோபன்ஹெகன் வரிசையில் நம்முடைய சென்னையும். அமெரிக்காவின் புகழ்பெற்ற “மெர்சர்ஸ்’ நிறுவனம் தான் உலகளாவிய இந்தச் சர்வேயை ஆறு கண்டங்களில் எடுத்திருக்கிறது. சென்னைவாசிகள் தங்களின் காலரைத் தூக்கி விட்டுக் கொள்ளும் வகையில், அந்தச் சர்வேயில் இருக்கும் இதர விவரங்களைப் பற்றியும், அது தொடர்பாக சிலரின் கருத்துகளும் இதோ:
- கல்வி,
- பொருளாதாரம்,
- அன்னியச் செலாவணியை கவரும் வகையிலான திட்டங்கள்,
- போக்குவரத்து,
- உடை,
- உணவு வகையிலான மாற்றங்கள்,
- மக்களின் வாங்கும் திறன்,
- அன்றாட வாழ்க்கையில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்கள்,
- தனிமனித வருவாய்,
- வீட்டு உபயோகப் பொருள்கள்,
- பொழுதுபோக்கு அம்சங்கள்…
இப்படி 200 வகையான அளவுகோல்களின் மூலம், வாழ்வதற்கு அதிகம் செலவு பிடிக்கும் நகரங்களை தரப்படுத்தியுள்ளனர். இந்த அடிப்படையில் உலகிலேயே வாழ்வதற்கு அதிகம் செலவு பிடிக்கும் நகரமாக தேர்வாகியிருப்பது
- சீயோல் மூன்றாவது இடத்தைப் பிடித்திருக்கிறது. ஆசியாவின் எட்டு நகரங்கள் 50-வது இடத்தைப் பிடித்திருக்கின்றன.
- மும்பை 52-வது இடத்தைப் பிடித்திருக்கிறது.
- புதுதில்லி 62-வது ரேங்கில் இருக்கிறது.
அமெரிக்காவின் மெர்சர்ஸ் நிறுவனம் வாழ்வதற்கு அதிகம் செலவாகும் நகரங்களாக 143 நகரங்களை ஆறு கண்டங்களில் அறிவித்திருக்கிறது. இதில் 133-வது இடத்தை சென்னை பெற்றிருப்பதற்கு காரணம் என்னவாக இருக்கும்?சென்னையைப் பொறுத்தவரை நகரத்தின் எல்லை விரிவடைந்து கொண்டே போகிறது. வியாபாரம், தொழில் நிமித்தமாகவும், கல்வி, மருத்துவம் போன்ற காரணங்களுக்காகவும் ஒருநாளில், அதிகமான எண்ணிக்கையில் சென்னை நகரத்துக்கு வந்து போகும் மக்கள் தொகை (Floating Population) நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே போகின்றது.
“”சென்னை ஒரு காஸ்ட்லியான நகரமாக இருப்பதற்கு, பரவலாக அதிகரித்திருக்கும் தனிநபர் வருமானமும் ஒரு காரணம். மற்ற நகரங்களைப் போல மக்கள் இங்கிருந்து புறநகர்களுக்கு இடம்பெயர்வதற்கு விரும்புவதில்லை” என்கிறார் மத்திய வணிக வளர்ச்சிக் குழுமத்தின், தமிழ் மாநிலப் பிரிவைச் சேர்ந்த ரஃபிக் அகமத்.
“”தங்களின் குழந்தைகளுக்குத் தரமான கல்வி கிடைப்பதற்காக, பணி செய்யும் இடத்திற்கு அருகாமையில் வாடகை வீட்டிலாவது இருந்து நிலைமையைச் சமாளிப்போம்” என்ற யோசனையோடு நாளுக்கு நாள் புறநகர் பகுதிகளிலிருந்து சென்னைக்கு வருபவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே இருக்கின்றது.
“”கும்மிடிப்பூண்டியில இருந்து நான் மட்டும் வேலைக்கு வந்துட்டிருந்தேன். அப்போது அங்கேயே ஒரு சின்ன ஸ்கூல்ல குழந்தைங்களைப் படிக்க வச்சிட்டிருந்தேன். இப்போ என் மனைவியும் வேலைக்குப் போறாங்க. அதனால தைரியமா சென்னைக்கு வந்துட்டோம். குறைஞ்ச வாடகைக்கு கும்மிடிப்பூண்டியில இருக்கிற எங்க வீட்டை விட்டுட்டு இங்க குடித்தனம் இருக்கிறோம். கஷ்டப்பட்டாலும் பிள்ளைங்கள நாங்க நினைச்சா மாதிரி நல்ல ஸ்கூல்ல படிக்க வைக்கிறோம்கிற திருப்தி இருக்கு” என்கிறார் சென்னை, சாலிக்கிராமத்திலிருக்கும் கல்யாணராமன்.
சென்னை நகரத்திற்குள் இடம் கிடைப்பது அரிதாகிவிட்ட நிலையில் ஏற்கனவே இருக்கும் பழைய வீடுகளின் மதிப்பும், ஃபிளாட் வகையான வீடுகளுக்கும் கூட இன்றைக்கு மிகப் பெரிய டிமாண்ட் இருக்கின்றது.
நாளுக்கு நாள் சென்னை நகரத்தில் பெருகிவரும் ஐ.டி. தொழில்நுட்ப வளாகங்களும், தொழிற்சாலைகளும், ரியல் எஸ்டேட் வியாபாரத்தை ஏறுமுகத்தில் கொண்டு செல்வதற்குக் காரணமாக இருக்கின்றன. “”பெங்களூரோடு ஒப்பிடுகையில் நில வியாபாரம் சென்னையில் கடந்த சில மாதங்களில் விலை அதிகம் உயர்ந்திருக்கின்றது” என்கிறார்கள் ரியல் எஸ்டேட் துறையில் இருக்கும் சிலர்.
சென்னை-133 எஃபெக்டுக்கு, தொழிற்சாலைகள், தகவல் தொழில்நுட்பத் துறைகளில் தமிழ்நாடு அரசாங்கத்தின் அணுகுமுறையும் ஒரு காரணம். கடந்த 12 மாதங்களில் 6,985 கோடி ரூபாய் பெருமானமுள்ள தொழிற்சாலைகளையும், பன்னாட்டு தொழில் நிறுவனங்களையும் சென்னையில் கொண்டு வருவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை (Memorandum of Understanding) தமிழ்நாடு அரசு, சம்பந்தப்பட்ட பன்னாட்டு நிறுவனங்களுடன் செய்துகொண்டிருக்கிறது. இதுபோன்ற நடவடிக்கைகளால் இந்தியாவிலேயே ஆட்டோ-மொபைல், எலக்ட்ரானிக் போன்ற துறைகளில் புதிய முதலீடுகளைச் செய்வதற்கு ஏற்ற நகரம் என்ற அங்கீகாரத்தை சென்னை பெற்றிருக்கிறது.
உலக அளவில் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த பங்கு வர்த்தகச் செயல்பாடுகளைக் கூர்ந்து கவனிக்கும் “நாஸ்காம்’ என்னும் அமைப்பு, தகவல் தொழில்நுட்பம் சார்ந்த துறைகளில் முதலீடுகளைச் செலுத்துவதற்கு தகுதியான ஒன்பது நகரங்களில், சென்னைக்கு மூன்றாவது ரேங்க் கொடுத்திருக்கின்றது.
-என்ன இருந்தாலும் பாரீஸ் போல வருமா… என்று இழுக்கும் பேர்வழிகளும் இருக்கத்தான் செய்வார்கள். நமக்கும் கீழே பத்து நகரங்கள் லிஸ்ட்டில் இருக்கின்றன என்பதை நினைத்துப் பார்த்து நிம்மதி நாடுங்கள்!
Posted in 133, America, Analysis, Bombay, Boston, Chennai, Compensation, Consumer, Customer, Dress, Economy, Education, Exchange, Expenses, Finance, France, GDP, Homes, Household, Houses, Income, India, Inflation, Interest, job, Korea, LA, London, Madras, Moscow, Moskva, MoU, Mumbai, NYC, Paris, Price, Prices, Purchasing, Rates, Recession, Rent, Russia, Salary, Schools, Seoul, Stagflation, UK, US, USA, USSR, Work | Leave a Comment »
Posted by Snapjudge மேல் மார்ச் 28, 2007
நடப்பு ஆண்டில் இந்திய பொருளாதார வளர்ச்சி 8 சதவீதமாக குறையும்: ஆசிய வளர்ச்சி வங்கி தகவல்
டோக்கியோ, மார்ச் 28: பணவீக்கம் அதிகரிப்பு மற்றும் வேளாண்துறை வளர்ச்சியில் தேக்கம் காரணமாக, நடப்பு ஆண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 8 சதவீதமாகக் குறையும் என ஆசிய வளர்ச்சி வங்கி கூறியுள்ளது.
2008-ல் அது 8.3 சதவீதமாக இருக்கும் எனவும் ஆண்டறிக்கையில் அவ் வங்கி கூறியுள்ளது. இது தொடர்பாக அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:
2006-ல் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி வலுவாக இருந்தது. அதிக அளவு மூலதன வரத்துக்கும், பணவீக்கத்துக்கும் இட்டுச் சென்றது. உற்பத்தி மற்றும் கட்டுமானத்துறை வளர்ச்சி, (வங்கிகள், நிதி நிறுவனங்கள் வழங்கும்) கடனுக்கான தேவையையும் அதிகரித்தது. இது பணப்புழக்கத்தை கட்டுப்படுத்தும் முயற்சிகளைச் சிக்கலாக்கியது. அதிகரித்து வரும் பணவீக்கத்துக்கு உணவுப் பொருள்களின் விலை உயர்வு முக்கிய காரணமாகும். இந்நிலையில் வேளாண்துறை வளர்ச்சியில் தேக்கம் அமைப்பு ரீதியான சவாலாக உருவெடுத்துள்ளது. வேளாண்துறையில் ஏற்பட்டுள்ள தேக்கம் காரணமாக நிலங்களை தொழில்துறைக்கு விற்கும் போக்கு அதிகரிக்கிறது. இது தொழிலாளர்களின் இடப்பெயர்ச்சி மற்றும் சமூகக் கொந்தளிப்புகளுக்கு இட்டுச் செல்கிறது.
இந்தியப் பொருளாதாரத்தில் கட்டுமானத்துறை முக்கிய பங்கு வகிக்கிறது. இத்துறையில் ஏற்பட்டுள்ள கொழிப்பு, 2005-ல் மொத்த உள்நாட்டு உற்பத்தியில், மொத்த உள்நாட்டு முதலீட்டை 33.8 சதவீதமாக உயர்த்தியது. இத்துறை தொடர்ந்து வளர்ச்சியடைந்து வருகிறது. இதற்கு ஈடாக வங்கிக் கடன் வழங்கும் வீதமும் வளர்ச்சியடைந்தது. இதனால் அதிகரித்த பணப்புழக்கம்தான் தற்போது சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. இறக்குமதிப் பொருள்களுக்கு சுங்கத் தீர்வைகளைக் குறைப்பது உள்ளிட்ட நடவடிக்கைகள் பெரும் பலனைத் தரவில்லை. எனவே செலாவணியைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை ரிசர்வ் வங்கி மேற்கொள்ள வேண்டும்.
இப்படிச் செய்யும்போது, உற்பத்தித் திறன்களை அதிகரிக்கத் தேவையான கடன் வசதி குறைந்துவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கு இது மிகவும் அவசியம். உற்பத்தித் திறனை விரிவுபடுத்துவது நீண்டகால அடிப்படையில் வளர்ச்சியை அதிகப்படுத்துவதற்கு இன்றியமையாதது என ஆசிய வளர்ச்சி வங்கி கூறியுள்ளது.
=================================================
ரஷியாவுக்கு 2010-ல் ரூ.46,000 கோடி ஜவுளி ஏற்றுமதி செய்ய இலக்கு
மாஸ்கோ, ஏப். 2: ரஷிய நாட்டுக்கு ரூ.46,000 கோடி ஜவுளி ஏற்றுமதி செய்ய இந்திய அரசு இலக்கு நிர்ணயித்திருக்கிறது.
இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகத்தை அதிகப்படுத்தும் முயற்சியின் ஓர் அங்கமே 2010-ம் ஆண்டில் ஜவுளி ஏற்றுமதியில் ரூ.46,000 கோடி இலக்கை எட்டுவது.
ரஷிய ஜவுளித்துறை அதிகாரிகளுடன் பேச இந்திய ஜவுளித்துறை அமைச்சர் சங்கர் சிங் வகேலா இதற்காக மாஸ்கோ வந்திருக்கிறார்.
ரஷிய ஜவுளித்துறை நிபுணர்கள், இறக்குமதியாளர்கள், ஆடைத் தொழில் முன்னோடிகள், இந்திய வர்த்தக சமூகத்தவர் ஆகிய அனைத்து தரப்பு பிரதிநிதிகளையும் அவர் சந்தித்து இது தொடர்பாக விரிவான விவாதங்களை நடத்துவார்.
சோவியத் யூனியன் என்ற நாடு இருந்தபோது இந்தியாவிலிருந்துதான் அதிக ஜவுளி கொள்முதல் நடந்தது. அந்நாடு சிதறுண்டதாலும், உலகமயம் காரணமாகவும் இந்தியாவிலிருந்து ஜவுளி கொள்முதல் செய்வது குறைந்தது. இந்தியாவின் இடத்தை இப்போது சீனா பிடித்துக் கொண்டிருக்கிறது.
இந்திய அரசின் அரவணைப்பு இல்லாவிட்டாலும் இந்திய ஜவுளி ஏற்றுமதியாளர்கள் தங்களுடைய சுய முயற்சியில் ரஷியாவுக்கு கணிசமான அளவுக்கு இப்போதும் ஏற்றுமதி செய்கின்றனர். இந்திய அரசின் கட்டுப்பாடுகளைத் தளர்த்தி, சலுகைகளை வழங்கினால் ரஷிய மக்களின் விருப்பத்துக்கேற்ற ஜவுளி வகைகளைத் தயாரித்துத் தருவது பெரிய காரியம் அல்ல என்று இந்திய வர்த்தக சமூகத்தவர் தெரிவிக்கின்றனர்.
அவர்களுடைய யோசனைகள் ஏற்கப்படுமா, இந்திய ஜவுளித்துறைக்குத் தேவைப்படும் மீட்சி, ரஷியா மூலம் கிடைக்குமா என்று பார்க்க வேண்டும்.
Posted in ADB, Agriculuture, Asian Development Bank, bank, Banking, Boom, Business, Bust, Clothes, Commerce, Commodities, Commodity, Deflation, Demand, Dress, Economy, Exports, Fabric, Finance, fiscal, Garments, GDP, Goal, Government, Growth, home buyers, Imports, Inflation, infrastructure, Interest, investors, Knits, Knitwear, Manufacturing, markets, Monetary, Offshoring, Outlook, Outsourcing, Prediction, Projection, Rates, RBI, Recession, Russia, service, Stagflation, Target, Textiles | Leave a Comment »
Posted by Snapjudge மேல் மார்ச் 23, 2007
இது புதுசு: வாழை நாரில் வண்ணச் சேலைகள்!
பி.முரளிதரன்
வாழை நார், பூக்களைத் தொடுக்கப் பயன்படும் எனத் தெரியும். ஆனால், அதைப் பயன்படுத்தி விதவிதமான துணிகளைத் தயாரிக்க முடியுமா? “முடியும்’ என நிரூபித்துள்ளார் சேகர்.
இவர், வாழை நாரைப் பயன்படுத்தி, பட்டுச் சேலைகள் முதல் திரைச் சீலைகள் வரை விதவிதமான துணிகளைத் தயாரித்து வருகிறார். சென்னையின் புறநகர் பகுதியான அனகாபுத்தூரில் வசித்து வரும் இவர், அனகாபுத்தூர் சணல் நெசவாளர் சங்கத்தின் தலைவராகவும் உள்ளார்.
புழுதி பறக்கும் புறநகர் சாலை வழியாக ஊடுருவி, ஓர் இனிய காலைப் பொழுதில், சேகரைச் சந்தித்தோம். தறியை அனிச்சையாய் தன் கால்களால் ஆட்டியபடியே நம்மிடம் வாழை நாரைப் பயன்படுத்தி ஆடைகள் தயாரிக்கும் நுட்பம் பற்றி அவர் பேசியதிலிருந்து…
“”கைத்தறி நெசவுத் தொழிலில் பரம்பரை பரம்பரையாக ஈடுபட்டு வருபவர்கள் நாங்கள். இத்தொழிலில் நான் ஈடுபட தொடங்கியதும், ஏதாவது புதுமையைச் செய்ய வேண்டும் என்ற எண்ணம் என் மனதில் தோன்றியது. ஆனால், எந்தமாதிரியான புதுமையைப் புகுத்த வேண்டும் எனத் தெரியாமல் தவித்துக் கொண்டிருந்தேன். அந்தச் சமயத்தில்தான் ஒரு புதுவித ஐடியா எனக்குக் கிடைத்தது.
15 ஆண்டுகளுக்கு முன்பு, சென்னையில், சணல் பொருட்கள் கண்காட்சி ஒன்று நடைபெற்றது. இக்கண்காட்சியைப் பார்க்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அங்கு சென்று பார்த்த போது, சணல் பொருட்களுடன் வாழை நாரைக் கொண்டு தயாரிக்கப்பட்ட பல்வேறு விதமான கைவினைப் பொருட்கள் அக்கண்காட்சியில் இடம் பெற்றிருந்தன.
வாழை நாரையும், சணலையும் பயன்படுத்தி அந்த கைவினைப் பொருட்கள் தயாரிக்கப்பட்டிருந்தன. அப்போது தான், எனக்கு “வாழை நாரைப் பயன்படுத்தி ஏன் துணிகளை நெய்யக் கூடாது?’ என்ற ஒரு கேள்வி மனதில் எழுந்தது. இதையடுத்து, இந்தத் தொழில்நுட்பங்களைத் தெரிந்து கொள்ளும் முயற்சிகளில் இறங்கினேன். இதற்காக, கன்னியாகுமரி, நாகர்கோயில் ஆகிய ஊர்களுக்குச் சென்று வாழை நார்களை, கைவினைப் பொருட்கள் தயாரிப்புக்கு எவ்வாறு பதப்படுத்தி பயன்படுத்துகின்றனர் என்ற ரகசியத்தைக் கற்றுக் கொண்டேன். அந்த இரு ஊர்களில்தான் வாழை நாரைப் பயன்படுத்தி கூடைகள், பைகள், அலங்காரப் பொருட்கள் என அதிகளவில் கைவினைப் பொருள்கள் தயாரிக்கப்படுகின்றன.
இந்தத் தொழில்நுட்பத்தைக் கற்றுக்கொண்ட பிறகு, வாழை நாரைப் பயன்படுத்தி துணிகள் நெய்யத் தொடங்குவதற்கான முயற்சிகளை மேற்கொண்டேன். இதற்காக, குன்றத்தூர் சுற்றியுள்ள பகுதிகளிலிருந்தும், கோயம்பேடு மார்க்கெட்டிலிருந்தும் வாழை நார்களை வாங்கி வந்து, சிறிய அளவிலான ரசாயனக் கலவையின் மூலம் அவற்றை “பிளீச்’ செய்து அதைப் பதப்படுத்தினேன்.
பின்னர், அதில் இருந்து மெல்லிய ரக நூலிழைகளைப் பிரித்து எடுத்தோம். அதனுடன், பருத்தி, சில்க், பாலியெஸ்டர் உள்ளிட்ட இழைகளைப் பயன்படுத்தி துணிகளை நெய்து வருகிறேன். வாழை நாரைப் பயன்படுத்தி, நெசவு செய்யும் முறை பிலிப்பைன்ஸ் நாட்டில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்தியாவில், மும்பையில் இந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நெசவு செய்யப்படுகிறது. தமிழகத்தைப் பொறுத்தவரை, எனக்குத் தெரிந்த வரை, நான் மட்டுமே இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி துணிகளை தயாரித்து வருகிறேன்.
பொதுவாக, துணிகள் நெய்வதற்கு வாழை நாரைப் பயன்படுத்துவதால் பல்வேறு நன்மைகள் ஏற்படுகின்றன. குறிப்பாக, வாழை நார்கள் சுற்றுச்சூழலுக்கு நண்பனாகத் திகழ்கிறது. வாழைச்சாறு உடலுக்கு நல்லது. அதிலும், குறிப்பாக கிட்னியில் உள்ள கல்லைக் கரைக்க இச்சாறு பயன்படுகிறது. வாழை நாரை பயன்படுத்தி நெய்யப்படும் துணியை அணியும் போது, உடலில் ஏற்படும் வியர்வைத் துளிகள் மூலம் வாழை நாரின் மருத்துவக் குணங்கள் உடலுக்குள் சென்று நன்மை விளைவிக்கின்றன.
அதோடு, இந்த இழையைப் பயன்படுத்தி தயாரிக்கப்படும் துணிகளில் சுருக்கம் ஏற்படுதல், சாயம் போகுதல் போன்ற பிரச்சினைகளும் ஏற்படுவதில்லை.
பருத்தி நூலும், வாழை நாரும் பயன்படுத்தி தயாரிக்கப்படும் ஆடைகள் கோடைக்காலத்திற்கு ஏற்றதாகும். இந்த இழைகளில் 20, 40, 60, 80, 120, 200 என்ற கவுன்ட்டுகள் உள்ளன. இந்த கவுன்டின் அளவு அதிகரிக்க, அதிகரிக்க துணியின் தரம் அதிகரிக்கும். வாட் டைஸ், நேச்சுரல் டைஸ், சுற்றுச் சூழலுக்குப் பாதகமில்லாத “ஈகோ ஃபிரண்ட்லி டைஸ்’ ஆகியவற்றைப் பயன்படுத்தி பல்வேறு வண்ணங்களில், பலவித டிசைன்களில் இத்துணிகளைத் தயாரித்து வருகிறோம்.
சமீபத்தில் கூட, பருத்தி, சில்க், உலன், ஹெம்ப், லினன், பைனாப்பிள் உள்ளிட்ட 25 வகையான இயற்கை நார்களைப் பயன்படுத்தி துணியைத் தயாரித்தோம். இதை, மத்திய ஜவுளித் துறை இணையமைச்சர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் அறிமுகப்படுத்தி வைத்தார்.
தற்போது, நாங்கள் வாழை நாரின் இழையைப் பயன்படுத்தி பட்டுத் துணிகள், புடவைகள், சட்டைத் துணிகள், திரைச் சீலைகள் ஆகியவற்றைத் தயாரித்து வருகிறோம். சிறிய அளவில் தொடங்கப்பட்ட என்னுடைய இத்தொழிலில், தற்போது 15 பேர் வேலை செய்து வருகின்றனர். இதுதவிர, மகளிர் சுய உதவிக் குழுக்கள் அமைப்பைச் சேர்ந்த 11 குழுக்களைச் சேர்ந்தவர்கள் என்னிடம் இருந்து இழைகளை வாங்கிச் சென்று துணிகளை நெய்து கொடுக்கின்றனர். இதன் மூலம், அவர்களுக்கு மாதம் தோறும், கணிசமான அளவுக்கு வருவாய் கிடைத்து வருகிறது.
பிலிப்பைன்ஸ் நாட்டில் இயந்திரங்களைப் பயன்படுத்தி நூறு சதவீத வாழை நாரில் இருந்து இழைகளை எடுத்து துணிகளை நெய்கின்றனர். அதற்காக, அவர்கள் பயன்படுத்தும் இயந்திரத்தின் விலை ரூ.60 லட்சம். இயந்திரத்தைப் பயன்படுத்துவதால், நீளமான நூலிழைகளை அவர்களால் பிரித்தெடுக்க முடிகிறது. ஆனால், நாங்கள் தறிகளை பயன்படுத்துவதால், நீளமான நூலிழைகளை தயாரிக்க முடியவில்லை. துண்டு, துண்டாக தயாரித்து அவற்றை பெரிய நூலாக இணைத்து நெசவு செய்து வருகிறோம். அதுபோன்ற விலை உயர்ந்த இயந்திரங்களை பயன்படுத்த, எங்களிடம் போதிய பண வசதி கிடையாது. அதேபோல், அத்தகைய தொழில்நுட்ப அறிவும் எங்களிடம் இல்லை.
மத்திய அரசு ஏஜென்சிகள் மற்றும் சில தனியார் நிறுவனங்களுக்கு தற்போது எங்களுடைய தயாரிப்புகளை சிறிய அளவில் விற்பனை செய்து வருகிறோம். உள்நாட்டில் மட்டுமன்றி வெளிநாட்டிலும் வாழை நாரைப் பயன்படுத்தி செய்யப்படும் துணிகளுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. ஆனால், வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யும் அளவுக்கு இன்னும் இத்தொழில் விரிவடையவில்லை.
போதிய முதலீடு, அரசின் ஆதரவு, தேவையான விளம்பர வசதி ஆகியவைகள் கிடைத்தால், இத்தொழிலை மிகப் பெரிய அளவில் செய்ய முடியும். இயற்கை இழைகளைப் பயன்படுத்தி துணிகளை நெய்ய நெசவாளர்கள் முன் வரும் பட்சத்தில், அவர்களுக்கு ஏராளமான வேலைவாய்ப்புகளும், கைநிறையச் சம்பளமும் கிடைப்பது உறுதி” என்றார் நம்பிக்கையுடன் சேகர்.
-தொடரட்டும் உங்களின் தொழில்…வாழையடி வாழையாக!
படங்கள்: “மீனம்’ மனோ
Posted in Banana, Blinds, Business, Cloth, Clothes, Commerce, Cotton, Dress, Fabric, fiber, fibre, Handicrafts, Hemp, Industry, Jute, Kanniakumari, Kanniyakumari, Kanyakumari, Linen, Manufacturing, Nagercoil, Nagerkovil, Phillipines, pineapple, Plaintain, Plantain, Sarees, Saris, Screens, Shirts, Silk, Small Biz, SSI, Tailor, Technology, Textile, Towels, Tropical | Leave a Comment »
Posted by Snapjudge மேல் மார்ச் 14, 2007
சென்னையில் 2007-க்குள் மேலும் 3 ஆடை வடிவமைப்பு பயிற்சி மையம்
சென்னை, மார்ச் 14: சென்னை மற்றும் அதன் சுற்று வட்டாரங்களில் இந்த ஆண்டுக்குள் மேலும் 3 ஆடை வடிவமைப்பு மற்றும் பயிற்சி மையங்கள் அமைக்கப்படும் என ஆடை ஏற்றுமதி வளர்ச்சி கவுன்சில் (ஏ.இ.பி.சி), ஆடை வடிவமைப்பு மற்றும் பயிற்சி மையம் (ஏ.டி.டீ.சி) தலைவர் விஜய் அகர்வால் தெரிவித்தார்.
ஆயத்த ஆடை தயாரிப்பு நிறுவனங்களில் பணிபுரிவோருக்கு தொழில்நுட்ப அறிவை அதிகரிக்கும் வகையில் ஏ.இ.பி.சி. நாட்டின் பல்வேறு இடங்களில் ஆடை வடிவமைப்பு மற்றும் பயிற்சி மையங்களை அமைத்துள்ளது. சென்னை கிண்டியில் 1996-ல் முதல் பயிற்சி மையம் ஆரம்பிக்கப்பட்டது.
இதுதவிர தில்லி, குர்கான், நொய்டா, லூதியானா, ஜெய்ப்பூர், கோல்கத்தா, ஐதராபாத், பெங்களூர், திருவனந்தபுரம், திருப்பூர், மும்பை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 21 மையங்கள் செயல்பட்டு வருகின்றன.
இந்நிலையில் சென்னையில் மேலும் ஒரு பயிற்சி மையத்தை ஏ.இ.பி.சி. தற்போது அமைத்துள்ளது. இதைத் திறந்துவைத்த விஜய் அகர்வால் பேசியது:
தகவல் தொழில் நுட்பத்துறை, ஆயத்த ஆடை தயாரிப்புத் துறை ஆகிய இரு துறைகளும் இந்தியாவில் சிறந்து விளங்கும் துறைகளாகும். இவை இரண்டும் அதிக வேலைவாய்ப்பையும், வருவாயையும் ஈட்டித் தரக்கூடிய துறைகளாக உள்ளன.
2006-07-ம் ஆண்டில் ரூ.42 ஆயிரம் கோடி மதிப்பிலான ஆயத்த ஆடைகள் ஏற்றுமதி இலக்கை இந்தியா எட்டியுள்ளது. இதில் 25 சதவீதம் தமிழ்நாட்டிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்டது.
2010-11 ஆம் ஆண்டில் ரூ.113 ஆயிரம் கோடி மதிப்பிலான ஆயத்த ஆடைகள் ஏற்றுமதி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த இலக்கை எட்ட 15 லட்சம் கூடுதல் பணியாளர்கள் இத்துறைக்கு தேவைப்படுவர். இதன் மூலம் வேலைவாய்ப்பும் அதிகரிக்கும்.
இதற்காக ஏ.இ.பி.சி. இந்த ஆண்டுக்குள் இந்தியா முழுவதும் கூடுதலாக 27 ஆடை வடிவமைப்பு மற்றும் பயிற்சி மையங்களை அமைக்க முடிவு செய்துள்ளது. மேலும் நடமாடும் பயிற்சி மையங்கள் மூலம் கிராமப்புற மக்களுக்கு ஆடை தயாரிப்பு குறித்த அடிப்படை பயிற்சிகளை இக்கவுன்சில் அளித்து வருகிறது என்றார் விஜய் அகர்வால்.
தொடக்க விழாவில் ஏ.இ.பி.சி. மூத்த உறுப்பினர் ரஞ்சித் ஷா, கிண்டி ஆடை வடிவமைப்பு மற்றும் பயிற்சி மைய ஒருங்கிணைப்பாளர் கே.கே.அகர்வால், முகப்பேர் ஆடை வடிவமைப்பு மற்றும் பயிற்சி மைய ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ் வாசுதேவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Posted in ADTC, AEBC, Chennai, Design, Dress, Export, Fashion, Garments, Madras, NIFT, Tailor, Tailoring, Technology, Training | Leave a Comment »
Posted by Snapjudge மேல் ஜனவரி 18, 2007
சர்ச்சைக்குரிய வங்கதேசப் பெண் எழுத்தாளர் தஸ்லிமாவை நாட்டைவிட்டு வெளியேற்ற முஸ்லிம் சட்ட வாரியம் வலியுறுத்தல்
புது தில்லி, ஜன. 19: வங்கதேசத்தைச் சேர்ந்த சர்ச்சைக்குரிய பெண் எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரீனை இந்தியாவை விட்டு வெளியேற்ற வேண்டும் என்று அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் வலியுறுத்தியுள்ளது.
“லஜ்ஜா’ என்னும் சர்ச்சைக்குரிய நாவலை முஸ்லிம் எழுத்தாளரான தஸ்லிமா எழுதினார். அதையடுத்து, வங்கதேசத்தில் அவருக்குக் கொலை மிரட்டல் வந்தது. அதனால் அங்கிருந்து 1994-ல் அவர் வெளியேறினார். தற்போது அவர் கோல்கத்தாவில் வசித்துவருகிறார்.
அவர் ஆங்கிலப் பத்திரிகையொன்றில் எழுதியிருக்கும் கட்டுரையில், “”முஸ்லிம் பெண்களே புர்க்காவைத் தூக்கி எறியுங்கள்; பெண்களுக்குப் பாரபட்சம் காட்டும் அந்த உடையை உதறுங்கள்; அதைக் கொளுத்துங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.
“”அந்தக் கட்டுரை முஸ்லிம்களின் உணர்வுகளை அவமதிக்கும் வகையிலும், ஆத்திரமூட்டும் வகையிலும் இருக்கிறது. முஸ்லிம்களின் உணர்வுகளைப் புண்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் அக் கட்டுரையை அவர் எழுதியிருக்கிறார். அது கண்டனத்துக்கு உரியது; எனவே, தஸ்லிமாவை இந்தியாவைவிட்டு வெளியேற்ற வேண்டும்” என்று முஸ்லிம் தனிநபர் சட்ட வாரிய உறுப்பினரான கமால் பாரூக்கி வியாழக்கிழமை கூறினார்.
அவரை இந்தியாவை விட்டு வெளியேற்ற வேண்டும் என்று வெளியுறவுத் துறை அமைச்சகத்தை அணுகி வற்புறுத்த உள்ளோம் என்றும் அவர் கூறினார்.
Posted in AIMPLB, All-India Muslim Personal Law Board, Bangladesh, Burqa, Dress, External Affairs, extradition, Islam, Kamal Farooqi, Lajja, Let's burn the Burqa, Majlis Ittehadul Muslimeen, Ministry, Muslim, Novel, Outlook, Tasleema Nasreen, Tasleema Nasrin, Taslima Nasreen, Taslima Nasrin, Writer | 1 Comment »