Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Drama’ Category

KB Sundarambal – Path breaking Tamil Actress: Chitra Lakshmanan series on Thamizh Cinema History

Posted by Snapjudge மேல் மார்ச் 7, 2008

உள்ளதை சொல்கிறேன் – சித்ரா லட்சுமணன்

கே.பி.சுந்தராம்பாள் — எஸ்.ஜி. கிட்டப்பா காதல்

கே.பி.சுந்தராம்பாளின் முழுப் பெயர் : கொடுமுடி பாலாம்பாள் சுந்தராம்பாள்

பிறந்த தேதி : 26.10.1908

மறைந்த தேதி : 24.09.1980

நடித்த படங்கள் : 12

தமிழ் பேசும் படத்தின் முதல் கதாநாயகி டி.பி. ராஜலட்சுமி. அவரைத் தொடர்ந்து எம். எஸ். விஜயாள், கே.டி. ருக்மணி, எஸ்.டி. சுப்புலட்சுமி, எம்.ஆர். சந்தானலட்சுமி என்று எத்தனையோ நடிகைகள் சினிமாவில் நடித்துக் கொண்டிருந்தபோதிலும் இவர்கள் அனைவரையும் விட புகழோடு விளங்கியவராக இருந்தார் நாடக மேடைகளில் மட்டுமே பாடி நடித்துக் கொண்டிருந்த இசையரசி கே.பி. சுந்தராம்பாள்.

ஏறக்குறைய ஒரு திரைப்படக் கதையைப் போன்றதுதான் கே.பி. சுந்தராம்பாள் அவர்களுடைய வாழ்க்கையும். ஆம், அவருடைய வாழ்க்கையில் தாழ்வு, உயர்வு, வறுமை, செம்மை, காதல், பிரிவு, சோகம் என்று எல்லா அம்சங்களுமே இடம் பெற்றிருந்தன.

தமிழில் முதன் முதலாக லட்ச ரூபாய் சம்பளம் வாங்கிய நடிகை என்ற புகழினைப் பெற்ற கே.பி. சுந்தராம்பாள் இசையுலக வாழ்க்கை வயிற்றுப் பசியைப் போக்கிக் கொள்ள புகை வண்டியில் பாடி அதன் மூலம் வந்த வருமானத்தில் வாழ்க்கை நடத்துகின்ற மோசமான நிலையில்தான் துவங்கியது. ஆனால் அந்த ரயில் பயணங்கள்தான் சுந்தராம்பாள் வாழ்க்கைப் பயணத்தை ஒளிமயமான எதிர்காலத்தை நோக்கி திருப்பிய திருப்புமுனையாகவும் அமைந்தது.

கே.பி.எஸ். பாடியபடி பயணம் செய்த புகை வண்டியில் அதிகாரியாக பணியாற்றிய நடேச அய்யர் அவரது இசைஞானத்தைக் கண்டு வியந்தார். அந்த அதிகாரி ஒரு நடிகர். சிறு சிறு வேடங்களில் நடித்தவர். கலைகளில் ஈடுபாடுடைய கலாரசிகரான அவர்தான் வேலு நாயரின் நாடகக் கம்பெனியில் சுந்தராம்பாள் சேரக் காரணமாக இருந்தவர்.

அந்த காலகட்டங்களில் வேலு நாயரின் நாடகக் கம்பெனியில் சேருவது என்பது சாதாரணமான விஷயமல்ல. நடேச அய்யர் அறிமுகப்படுத்தினாலும் சுந்தராம்பாளுக்கு நாடகக் கம்பெனியில் ஒரு தனி இடத்தையும், அங்கீகாரத்தையும் பெற்றுத் தந்தது அவரது கணீர்க் குரல்தான் என்பதையும் இங்கே சொல்லியாக வேண்டும். தனித்துவம் பெற்ற கே.பி.எஸ்.ன் குரலைக் கேட்ட வேலு நாயர் மெய்சிலிர்த்தார்.

உடனே “பாலபார்ட்’ பாத்திரத்தில் நடிக்கின்ற வாய்ப்பையும் தந்தார். “நல்ல தங்காள்’ நாடகத்தில் ஏழாவது குழந்தையாக நடித்து தனது பத்தாவது வயதில் நாடக வாழ்க்கையைத் தொடங்கினார் கே.பி.எஸ்.

சங்கரதாஸ் சுவாமிகள் போன்ற மேதைகளின் பாட்டு வரிகள் திருத்தமான உச்சரிப்பு, அற்புதமான சாரீரம், அருமையான பாவம் போன்ற எல்லாவற்றையும் ஒரு சேர பெற்றிருந்த சுந்தராம்பாள் அவர்களின் மூலம் பாட்டாக வெளிப்பட்டபோது தமிழகம் முழுவதும் அதற்கு தலையாட்டத் தொடங்கியது.

சுந்தராம்பாள் அளவிற்கு உச்ச ஸ்தாயியில் பாடக் கூடிய பெண் கலைஞர் யாரும் இல்லை என்பதால் அவரது புகழ் நாளுக்கு நாள் கூடியது. நாடக வாய்ப்புகளும் தொடர்ந்து வரத் தொடங்கியது. தமிழகம் முழுவதும் தன் இசையால் ஈர்த்த கே.பி.எஸ். பாலபார்ட்டில் இருந்து ஸ்திரீ பார்ட்டுக்கு மாறினார். “வள்ளித் திருமணம்’, “பவளக்கொடி’, “சாரங்கதாரா’, “நந்தனார்’ போன்ற நாடகங்களில் தன் தனி முத்திரையைப் பதித்தார் கே.பி.எஸ்.

அப்போதெல்லாம் பேசும் படங்கள் கிடையாது என்பதால் தினமும் நாடகங்கள் நடக்கும். அதிலும் கே.பி. சுந்தராம்பாள் நடிக்கும் நாடகம் என்றால் இன்று ரஜினிகாந்த் திரைப்படங்களுக்கு கூடுவதைப் போல கட்டுக்கடங்காத கூட்டம் கூடும். முருக பக்தையான சுந்தராம்பாள் அவர்களின் பெருமை கடல் கடந்தும் பரவியது. அவரது நாடகங்களை இலங்கையில் நடத்த அழைப்பு வந்தது. அதை ஏற்று 1926 ஆம் ஆண்டு தனது பதினெட்டாவது வயதில் இலங்கைக்கு பயணமானார் கே.பி.எஸ்.

அவரது வாழ்க்கையில் ஒரு பெரும் திருப்பத்தை உண்டு பண்ணப் போகிற பயணம் அது என்று அப்போது அவருக்குத் தெரியாது.

கே.பி.எஸ். போன்று உச்ச ஸ்தாயியில் பிசிறின்றி பாடக் கூடிய ஆற்றல் படைத்த அற்புதமான கலைஞராக விளங்கியவர் எஸ்.ஜி. கிட்டப்பா. காங்கிரசில் பெரும் ஈடுபாடு கொண்டிருந்த கிட்டப்பா கதர் ஆடைகளைத்தான் அணிவார். தீரர் சத்தியமூர்த்தியுடன் கிட்டப்பாவிற்கு நெருங்கிய தொடர்பு உண்டு. சுந்தராம்பாள் ஒரு புறம் தன்து தெய்வீகக் குரலால் நாடக மேடையை கலக்கிக் கொண்டிருந்தார் என்றால் அவருக்கு இணையாக இன்னொரு புறம் மேடைகளை கலக்கிக் கொண்டிருந்தவர் எஸ்.ஜி. கிட்டப்பா.

1906 ஆம் வருடம் ஆகஸ்ட் 25 ஆம் நாள் கங்காதரஅய்யருக்கும், மீனாட்சி அம்மையாருக்கும் திருநெல்வேலி ஜில்லா அம்பாசமுத்திரம் தாலுகா ஆழ்வார்குறிச்சியில் அவதரித்த கிட்டப்பாவின் ஆரம்ப கால வாழ்க்கை வறுமைக் கோட்டிற்கு மிகவும் கீழேதான் தொடங்கியது.

தந்தை கங்காதர அய்யரின் வருமானம் குடும்பத்தை நடத்த போதுமானதாக இல்லாததால் கிட்டப்பாவின் சகோதரர்கள் எஸ்.ஜி. சுப்பையர், எஸ்.ஜி. செல்லப்பா, எஸ்.ஜி. சாமி அய்யர் ஆகிய எல்லோருமே நாடகத் துறையில் ஈடுபட்டனர். சங்கரதாஸ் சுவாமிகள் நாடகக் குழுவில் பணியாற்றிய இவர்களோடு சேர்ந்து கிட்டப்பாவும் தனது ஐந்தாவது வயதில் நடிக்கத் தொடங்கினார். தனது ஆறாவது வயதில் “நல்லதங்காள்’ நாடகத்தில் ஏழு பிள்ளைகளில் ஒருவராக நடித்தார் கிட்டப்பா.

கிட்டப்பாவின் சங்கீத ஞானமும், அயராத அவரது பயிற்சியும் கிட்டப்பாவிற்கென்று ஒரு தனி ரசிகர்கள் வளையத்தை உருவாக்கியது. ஒவ்வொருநாளும் அவரது ரசிகர்களின் எண்ணிக்கை ஆயிரக்கணக்கில் அதிகரித்தது. பின்னாளில் அவரது பாட்டைக் கேட்க பைத்தியமாக பலர் அலையத் தொடங்கினார்கள்.

தங்களது வேலைகளை எல்லாம் விட்டு விட்டு அவரது பாடலைக் கேட்பதற்காக நாடகக் கொட்டகைகளில் தவமிருப்போர் எண்ணிக்கை அதிகரித்தது. செம்மங்குடி சீனிவாச அய்யர், மகாராஜபுரம் விஸ்வநாத அய்யர், அரியக்குடி ராமானுஜ அய்யர் போன்ற இசை மேதைகள் எல்லாம் “”கிட்டப்பா நாடக மேடையை விட்டு விட்டு கச்சேரி நடத்த சபா மேடைகளுக்கு வந்தால் நம் நிலை என்னவாகும்?” என்று பேசிக் கொள்வார்களாம்.

தன்னைப் போல பாட எவருமில்லை என்பது கிட்டப்பாவிற்கு ஒரு புறம் மகிழ்ச்சியாக இருந்தாலும், தனக்கு இணையாக பாடக் கூடிய பெண் நாடகக் கலைஞர் இல்லையே என்ற வருத்தமும் இன்னொரு புறம் அவரை வாட்டியது. அவருடைய சுதியில் சேர்ந்து பாட முடியாதபடி பல பெண் பாடகிகள் திண்டாடினார்கள்.

இந்தச் சூழ்நிலையில் 1924-ஆம் ஆண்டு ஜூன் 23-ம் நாள் திருநெல்வேலி விஸ்வநாத அய்யர் மகள் கிட்டம்மாளுக்கும் கிட்டப்பாவிற்கும் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்குப் பிறகு கிட்டப்பாவும், காசி அய்யரும் ஸ்பெஷல் நாடகங்களில் நடிக்க இலங்கைக்குப் பயணமானார்கள். அப்போது கே.பி. சுந்தராம்பாள் இலங்கையில் நாடகங்கள் நடத்தி இலங்கை வாழ் மக்களை தன் பக்கம் முழுமையாக ஈர்த்திருந்தார். தமிழ் நாட்டைப் போலவே இலங்கையிலும் அவரது நாடகங்களுக்கு கூட்டம் அலை மோதியது.

எஸ்.ஜி. கிட்டப்பாவிற்கு இணையாக பாடக் கூடிய பெண் கலைஞர் இல்லாதது போல் கே.பி. சுந்தராம்பாளுக்கு இணையாக பாடக் கூடியவர் இல்லாதது அவருக்கும் வருத்தத்தை ஏற்படுத்தியிருந்தது. சுந்தராம்பாளுடன் நடிக்கும் நடிகர்கள் அவரோடு இணைந்தும், ஈடு கொடுத்தும் பாட முடியாததால் நாடகம் பார்க்க வந்த ரசிகர்கள் அவர்களை கேலி பேசத் தொடங்கினர். இதனால் பல நடிகர்கள் கே.பி.எஸ். அவர்களோடு நடிக்கவே அச்சப்படத் தொடங்கினர்.

இந்த நேரத்தில் இலங்கை வந்த கிட்டப்பா “தில்லானா மோகனாம்பாள்’ திரைப் படத்தில் பத்மினி நடனத்தைப் பார்க்க சிவாஜி போவாரே, அது போன்று சுந்தராம்பாள் நிகழ்ச்சி ஒன்றைப் பார்க்க கிளம்பினார். அவர்கள் சந்திப்பைப் பற்றி “இசை ஞானம் பேரொளி பத்மஸ்ரீ கே.பி. சுந்தராம்பாள்’ என்ற தனது புத்தகத்தில் கீழ்க்கண்டவாறு சுவைபட விவரித்துள்ளார் பாஸ்கரதாசன்.

“”சுந்தராம்பாளின் ஓங்காரமான ரீங்கார நாதத்தைக் கேட்ட கிட்டப்பா கதி கலங்கி, மதி மயங்கி கிறு கிறுத்தும் போனார். “”என்ன சங்கீத ஞானம், என்ன சுகமான சாரீரம், என்ன தெய்வீகமான குரல்” என்று துதிபாட ஆரம்பித்தார். நமக்கு இணையாக பாடக் கூடிய வல்லபி இவர்தான் என்று முடிவு செய்து கொண்டார்.

கிட்டப்பா சுந்தராம்பாளைச் சந்திக்கிறார். ஏற்கனவே கிட்டப்பாவின் மகிமையைக் கேள்விப்பட்டிருந்த சுந்தராம்பாள் அவரை நேரில் பார்த்ததும் காந்தத்தின் வடதுருவமும், தென்துருவமும் சந்திப்பதைப் போல ஈர்க்கப்படுகிறார்.

இருவருமே புகழ் பெற்ற பாடகர்கள். இருவருமே உச்ச ஸ்தாயியில் பாடக் கூடியவர்கள். இருவருமே தங்களுக்கான இசை ஜோடியை தேடிக் கொண்டிருந்தவர்கள். எனவே, இவரும் ஒரு நாடகத்தில் இணைந்து நடிப்பது என்று முடிவு செய்கின்றனர்.
சங்கீத ஜாம்பவான் என்று புகழப்படும் கிட்டப்பாவிற்கு இணையாகப் பாட வேண்டுமே என்ற பயம் சுந்தராம்பாளுக்கும், உச்ச ஸ்தாயியில் பாடும் சுந்தராம்பாளுக்கு ஈடு கொடுத்து பாட வேண்டுமே என்ற அச்சம் கிட்டப்பாவிற்கும் இருந்தது.

இருவரும் சேர்ந்து நடித்த நாடகம் இலங்கையில் அரங்கேறியது. எட்டுக்கட்டை சுதியில் பாடும் கிட்டப்பாவை யாரும் எட்டாத நிலையில் சுந்தராம்பாள் அதே சுதி லயத்தோடு தொட்டுவிட்டார். உச்ச ஸ்தாயியில் பாடலையும், உள்ளத்தையும் ஒரு சேரத் தொட்டுவிட்டார் அவர் என்பது தான் உண்மை.

சுந்தராம்பாளுக்கு இணையாக நடித்த ராஜபார்ட்டுகளை மதிக்காத கலா ரசிகர்கள் சுந்தராம்பாளோடு உச்ச ஸ்தாயியில் ஒன்றிப் போன கிட்டப்பாவின் சங்கீத ரசனையில் மூழ்கித் திளைத்தார்கள்.

ஓங்கிக் குரலெடுத்து இருவரும் பாடினால் ஒரு மைல் தூரத்திற்குக் கேட்கும் என்று பெருமையாக சொல்லிக் கொண்டார்கள். சுந்தராம்பாளும், கிட்டப்பாவும் போட்டி போட்டுக் கொண்டு நடித்தார்கள். ரசிகர்கள் “”இருவரும் நல்ல ஜோடி” என்று அவர்கள் காதுபாட வாழ்த்திப் பேசினார்கள்.

இலங்கைக்குச் சென்ற சில மாதங்களிலேயே இசை மேதைகள் இருவரும் புகழின் உச்சியில் பறந்தார்கள். வானம்பாடியாய் இசை வானில் பாடித் திரிந்தார்கள். ஈடு இணையற்ற ஜோடி என்று நிரூபித்துக் காட்டினார்கள்.

இருவரும் சேர்ந்து நடிப்பதென்றால் நாடகக் கம்பெனிகள் பெரிய தொகையை கொட்டித் தர தயாராக இருந்தனர். அதற்குக் கட்டணமாக ரசிகர்களும் அள்ளித்தர ஆவலாக இருந்தனர். இருவரும் பல இடங்கள் பயணம் செய்து நாடகங்கள் நடித்து ஏராளமாக சம்பாதித்தார்கள். கிட்டப்பா மீது சுந்தராம்பாள் அபரிமிதமான பக்தியும், விசுவாசமும் கொண்டிருந்தார்.

சுந்தராம்பாளின் இசையில் மயங்கிய கிட்டப்பா நாடகத்திற்கு மட்டுமின்றி இல்லறத்திற்கும் சுந்தராம்பாள்தான் சரியான ஜோடி என்ற முடிவில் திட்டவட்டமாக இருந்தார். கலை வாழ்க்கையில் உள்ள உறவும், பரிவும் சுந்தராம்பாளின் வாழ்க்கையிலும் இருந்தது. கிட்டப்பாவையே தனது வாழ்க்கைத் துணையாக ஏற்க சுந்தராம்பாளும் முடிவு செய்தார்.

இந்த முடிவில் சுந்தராம்பாளின் தாய் மாமனான மலைக்கொழுந்துவிற்கு (இவர் தான் கே.பி.எஸ். அவர்களுக்கு நிர்வாகியாக பணியாற்றியவர்) உடன்பாடு இல்லை என்றாலும் சுந்தராம்பாளை எதிர்த்து அவர் ஒன்றும் செய்யவில்லை.

சதிபதிகளின் கலைப் பயணமும், வாழ்க்கைப் பயணமும் ஆரம்பத்தில் இனிதாகவே போய்க் கொண்டிருந்தது.

——————————————————————————————————————————————————————————————

எஸ்.ஜி. கிட்டப்பாவுக்கு
கே.பி.சுந்தராம்பாள் எழுதிய கடிதங்கள்

கிட்டப்பாவும், சுந்தராம்பாளும் ஒருவரை ஒருவர் அளவிட முடியாத அளவுக்கு நேசித்தாலும் மேடையில் மட்டும் விட்டுக் கொடுக்கவே மாட்டார்கள். போட்டி போட்டுக் கொண்டு பாடுவார்கள். மேடையில் அவர்கள் போட்டி போட்டு நடிப்பதையும், வசனங்கள் பேசுவதையும் பார்த்த பல ரசிகர்கள் இந்தப் போட்டி அவர்கள் வாழ்க்கையில் எந்த விரிசலையும் ஏற்படுத்திவிடக் கூடாதே என்று அஞ்சினார்கள்.

சுந்தராம்பாள் குணக்குன்று. ஒரு பெண் எப்படி வாழ வேண்டும் என்பதற்கு உதாரணமாக வாழ்ந்தவர். எந்தவித கெட்ட பழக்கத்திற்கும் ஆளாகாதவர். ஆனால் கிட்டப்பா அப்படிப்பட்டவர் அல்ல. மது போன்ற சில தீய பழக்கங்கள் அவரிடம் குடி கொண்டிருந்தன. இதையெல்லாம் மீறி கிட்டப்பா மீது மாறாத நேசம் கொண்டிருந்தார் கே.பி.எஸ். என்பதுதான் உண்மை.

கிட்டப்பா சுந்தராம்பாளை மணமுடிக்க தன் விருப்பத்தைத் தெரிவித்தபோது கே.பி.எஸ். கேட்டது ஒரே கேள்விதான்.

“”என்னைக் கண்கலங்காமல் கடைசிவரை வைத்துக் கொள்வீர்களா?” என்பதுதான் அக்கேள்வி.

“”கடைசிவரை என்னை கைவிடக் கூடாது” என்று சத்தியம் வாங்கிக் கொண்ட பிறகே கிட்டப்பாவை கணவனாக ஏற்றுக்கொண்டார் கே.பி.எஸ்.

1927-ன் தொடக்கத்தில் மாயவரத்தில் உள்ள கோவிலில் இருவரது திருமணம் நடைபெற்றதாக ஒரு பத்திரிகைப் பேட்டியில் குறிப்பிட்டுள்ளார் கே.பி.எஸ்.
தமிழ் நாடாக மேடைகளில் பெரும் வரவேற்பைப் பெற்ற அந்த ஜோடிகளின் மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு அடையாளமாக வாரிசு ஒன்று கே.பி.எஸ். வயிற்றில் வளர ஆரம்பித்தது.

இந்த நேரம் செங்கோட்டை சென்ற கிட்டப்பா, கே.பி.எஸ். அவர்களைப் பார்க்க வரவேயில்லை. கடிதங்கள் மட்டுமே அவரது எண்ணங்களைச் சுமந்து வந்தது. தன் முதல் மனைவியான கிட்டம்மாவுடன் கிட்டப்பா இருந்தாலும் கே.பி.எஸ். அதற்காக பொறாமைப்படவில்லை. ஆனால் யாரோ சிலர் விதைத்த விஷ விதை கிட்டப்பா மனதில் விருட்சமாக வளர்ந்ததால் சுந்தராம்பாளை விட்டு விலகியே இருந்தார்.

நிறைமாத கர்ப்பிணியான கே.பி. சுந்தராம்பாள் தன் கணவருக்கு எழுதிய உருக்கமான கடிதம் அவர் எந்த அளவு கிட்டப்பா மேல் பாசமும் நேசமும் கொண்டிருந்தார் என்பதற்கு சாட்சியாக விளங்குகிறது.

கரூர். நவம்பர் 1927

அன்புள்ள பதி அவர்களுக்கு, அடியாள் அநேக நமஸ்காரம். என்னிடம் நேரில் சொன்னபடி நடப்பதாகத் தெரியவில்லை. நான் செய்த பாக்கியம் அவ்வளவுதான்.

உங்கள் மீது வருத்தப்படுவதில் பிரயோசனமில்லை. தாங்கள் பார்த்துச் செய்வதென்றால் செய்யலாம். “வளைகாப்பு’ இட வேண்டுமென்று தங்களிடமும் சொன்னேன். தங்கள் அண்ணாவிடமும் சொன்னேன். ஒருவரும் கவனிக்கவில்லை.

என்னைப் பற்றி கவனிக்க ஏதாவது கொடுத்து வைத்திருக்கிறேனா? உங்களுடைய சுக துக்கங்களில் பாத்யப்படும் தன்மையில்தான் இருக்கிறேனா!

நான் இங்கும் நீங்கள் அங்கும் இருக்கும் நிலையில் நீங்கள் ஏன் கவனிக்கப் போகிறீர்கள். ஏதோ என் மீது இவ்வளவு அன்பு வைத்து தவறாமல் எழுதியதைப் பற்றி அளவு கடந்த சந்தோஷமடைகிறேன். தவறாமல் கடிதமாவது அடிக்கடி எழுதிக் கொண்டிருக்க வேண்டுமென்று அன்போடு நமஸ்கரித்துக் கொள்கிறேன்.

எது எப்படியிருந்தாலும், தங்கள் உடம்பை ஜாக்கிரதையாகப் பார்த்துக் கொள்ளவும். தங்கள் உடம்பு இளைத்தால் தங்களைத் திட்டமாட்டேன். கிட்டம்மாளைத்தான் திட்டுவேன் என்று அவளிடம் சொல்லுங்கள்.

அடிக்கடி வெளியில் சுத்த வேண்டாம். தூக்கம் முழிக்க வேண்டாம். காலா காலத்தில் சாப்பிடவும். அனாவசிய விஷயங்களில் புத்தியைச் செலவிட வேண்டாம். நானும் அப்படியே நடக்கிறேன்.

மாதமும் ஆகிவிட்டது. தங்களுக்குத் தெரியாதது அல்ல. அவ்வளவுதான் நான் எழுதலாம். நேரில் வாருங்கள். உங்களை என்ன செய்கிறேன் என்று பாருங்கள்.

இப்படிக்கு,

தங்கள் அன்பையே ஆபரணமாகக் கொண்ட அடியாள்,
சுந்தரம்.

சுந்தராம்பாளை மணமுடிப்பதற்கு முன்னால் கிட்டப்பா அவருக்குக் கொடுத்த வாக்குறுதிகள் எதையுமே அவர் காப்பாற்றவில்லை என்றபோதிலும் கூட கிட்டப்பாவை தன் மனதில் ஏற்றி வைத்திருந்த இடத்திலிருந்து ஒரு அங்குலம் கூட கீழே இறக்கவில்லை சுந்தராம்பாள்.

1928 ஜனவரி மாதம் 28-ஆம் தேதி சுந்தராம்பாளுக்குப் பிறந்த குழந்தை பத்து நாள் மட்டுமே ஜீவித்திருந்தது. குழந்தையின் பிறப்பு, இறப்பு இரண்டிற்குமே கிட்டப்பா வரவில்லை.

சுந்தராம்பாளின் கடிதங்களுக்கு கிட்டப்பா எழுதிய பதில் கடிதங்களிலும் கேலியும் கிண்டலும் நிறைந்திருந்ததாகத் தெரிகிறது. இதனால் பெரிதும் பாதிக்கப்பட்ட சுந்தராம்பாள் தன் மன உணர்ச்சிகளையெல்லாம் கடிதமாக வடித்து கிட்டப்பாவிற்கு அனுப்பினார்.

தேவரீர் அவர்கள் சமூகத்திற்கு எழுதியது.

தங்கள் லெட்டர் கிடைத்துச் சங்கதி அறிந்தேன். தங்களுக்கு எந்த வகையிலும் நான் துரோகம் செய்தவளல்ல, தாங்கள் அறிந்த கிண்டல் வார்த்தைகளை எனக்கு எழுத வேண்டாம். இந்த மாதிரி எழுதி என் மனம் கொதித்தால் தாங்கள் ரொம்ப காலத்திற்கு úக்ஷமமாக இருப்பீர்கள். அம்மாதிரியெல்லாம் எழுதினால் தங்களுக்கு பலன் மீளாத நரகக் குழிதான்.

கிருஷ்ணலீலா பார்த்ததில்லையே என்று பார்க்கப் போனேன். அதைப் பற்றி வித்தியாசம் என்றால் இருக்கட்டும் எத்தனையோ வித்தியாசங்களில் இதுவும் ஒன்று.

மனம் போலிருக்கும் வாழ்வு. என்னைப் பற்றி கவலையே தங்களுக்கு வேண்டாம். நான் இப்படியெல்லாம் எழுதினேன் என்று வருத்தம் வேண்டாம்.

தங்களுக்கு பதில் போட இஷ்டம் இருந்தால் எழுதவும். இல்லையென்றால் வேண்டாம்.

இதுதான் கடைசி லெட்டர். இதுதான் கடைசி. இதுதான் கடைசி. இது உண்மையென்றும், பொய்யென்றும் பின்னால் தெரியும்.

இப்படிக்கு
சுந்தரம்.

“”தங்கள் அன்பையே ஆபரணமாகக் கொண்ட அடியாள் சுந்தரம், தங்கள் அன்பை என்றும் மறவாத காதலி கே.பி. சுந்தராம்பாள்” என்றெல்லாம் எழுதி கடிதத்தை முடித்த சுந்தராம்பாள் மேற்கண்ட கடிதத்தை எந்த அடைமொழியுமின்றி சுந்தரம் என்று முடித்திருப்பதிலிருந்தே அவர் எந்த அளவிற்கு கோபமாக இருந்திருக்கிறார் என்பதை நம்மால் உணர முடிகிறது அல்லவா?

நம்மாலேயே உணர முடியும்போது கிட்டப்பா அதை உணரமாட்டாரா? உணர்ந்தார். அதன் விளைவாக நீண்ட காலத்திற்குப் பின்பு அன்பான கடிதமொன்றை தன் பண்பான மனைவிக்கு எழுதி அனுப்பினார்.

தனியாக இருந்த காலகட்டங்களில் சுந்தராம்பாள் நாடகத்தில் உச்சக் கட்டத்தில் இருந்தபோதிலும் நிம்மதி இல்லாமல் தவித்தார். அதே போன்று கிட்டப்பாவும் நாடகங்களில் புகழோடு இருந்தபோதிலும் சுந்தராம்பாள் இல்லாததால் தவிப்புக்கு ஆளாகியிருந்தார். அவர்களைப் பிரித்த காலமே 1931-ல் மீண்டும் அவர்களை இணைத்தது.

அவர்கள் பெயரிலேயே நாடகக் கம்பெனி அமைத்து இருவரும் நடத்தத் தொடங்கினர். ரசிகர்கள் பெருமகிழ்ச்சியோடு அவர்கள் நாடகத்திற்கு உற்சாக வரவேற்பினைத் தந்தனர். சுந்தராம்பாள் – கிட்டப்பா ஆகிய இருவரது பாடல்களும் இசைத் தட்டாகவும் வெளிவந்து விற்பனையில் சக்கைபோடு போட்டது.

1931-ல் பேசும்பட காலம் வந்த பிறகும் நாடகங்கள் தங்கள் செல்வாக்கை இழக்காது இருந்தன.

“”கே.பி. சுந்தராம்பாள் வேடன், வேலன், விருத்தன் என்று ராஜபார்ட்டாக நடிப்பார். கிட்டப்பா வள்ளியாக ஸ்திரீ பார்ட்டாக நடிப்பார். இருவரும் மேக்அப் போட்டு வெளியில் வருவதற்குள் ரசிகர்களின் ஆர்ப்பாட்டம் அதிகமாக இருக்கும். கிட்டப்பா திரைக்கு முன்னால் வந்து ஒரு ஆலாபனை செய்துவிட்டுப் போனால்தான் ரசிகர்கள் கொஞ்சம் அமைதியடைவார்கள்.

சுந்தராம்பாளும் வந்து பாடமாட்டாரா என்று ஜனங்கள் ஏங்கிக் கிடப்பார்கள். இருவருமே உச்ச ஸ்தாயியில் பாடக் கூடியவர்கள். ஒலிபெருக்கி வசதியில்லாத அந்த காலகட்டத்தில் அவர்கள் குரல் கடைசியில் உள்ளவர்களுக்கும் கேட்கும்” என்று கிட்டப்பா – சுந்தாரம்பாள் நாடகங்கள் பற்றி தன் அனுபவங்களைக் கூறுகிறார் குன்னக்குடி வைத்தியநாதன்.

கிட்டப்பா மதுவுக்கு அடிமையாகி இருந்ததால் நாடகங்களில் நடிக்கும்போது ஒரு காட்சி முடிந்து அடுத்த காட்சிக்கு வருவதற்கு முன் திரையின் ஓரமாக சாராயத்தை சுடுதண்ணீரில் கலந்து சுடச் சுட குடிப்பார். இந்த குடிப்பழக்கம் தனது நாடக முதலாளியான கன்னையா இறந்த பின் அதிகரித்தது. காலையில் எழுந்தவுடன் காப்பி குடிப்பதற்கு பதில் சுடச் சுட சாராயம் சாப்பிட ஆரம்பித்தார் அவர். அதன் விளைவாக அவரது உடல் நலம் பாதிக்கப்பட்டது. வருமானம் குறைந்தது. ஆனால் செலவு கூடியது.

உடல் நலம் சரியாக இல்லாததால் நாடக நிகழ்ச்சிகளை குறைத்துக் கொண்டாலும், நாடகத்தில் நடிக்காமலும், பாடாமலும் இருப்பது பித்து பிடித்திருப்பது போல் உள்ளதாக அவர் உணர்ந்தார்.

இந்த சமயத்தில் மீண்டும் விதி அவர்கள் வாழ்க்கையில் தன் விளையாட்டைத் தொடங்கியது. அவர்கள் இருவருக்குமிடையே இருந்த தீவிரமான அன்பையும் மீறி அவர்களுக்கிடையே கருத்து வேறுபாடுகள் முளைத்தன. மீண்டும் சுந்தாரம்பாளைப் பிரிந்து சொந்த ஊருக்குச் சென்றுவிட்டார் கிட்டப்பா. மீண்டும் தனி மரமானார் சுந்தராம்பாள்.

மதுபானம் போன்ற தீய பழக்கங்களால் கிட்டப்பாவின் உடல் நாளுக்கு நாள் மெலிந்தது. 1933 மார்ச் 29-ஆம் நாள் அவரது உடல்நிலை மிகவும் மோசமானது. தகவல் அறிந்த சுந்தாராம்பாள் அவரை சென்னைக்கு அழைத்து வந்து டாக்டர் பீமாராவ் அவர்களிடம் காட்டினார். அவரைப் பரிசோதித்த பீமாராவ் குடல் வெந்து புண்ணாகி இருப்பதாகவும், ஈரல் சுருங்கிப் போய்விட்டதாகவும், எவ்வளவு செலவு செய்தாலும் அவர் குணமாவதற்கு உத்திரவாதம் அளிக்க முடியாது என்றும் கூறினார்.

இருப்பினும் செலவுப் பற்றி கவலைப்படாமல் சிகிச்சையைத் துவங்கச் சொன்னார் சுந்தராம்பாள். தீவிர சிகிச்சை தொடங்கியது. கிட்டப்பாவின் அருகிலேயே இருந்து அவரைக் கண்ணும் கருத்துமாக கவனித்துக் கொண்டார் சுந்தராம்பாள்.

எந்நேரமும் அவரது நெற்றியில் திருநீறைப்பூசி அவர் செய்த பிரார்த்தனை வீண் போகவில்லை. கிட்டப்பா உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது. அவரை வீட்டிற்கு அழைத்துச் சென்று கவனித்துக் கொள்வதற்காக மைலாப்பூரில் பெரிய வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்தார் சுந்தாரம்பாள்.

விதி விரட்டவே பூரண குணமடைவதற்கு முன்பே யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் செங்கோட்டைச்குச் சென்றுவிட்டார் கிட்டப்பா.

உடல் பூரண குணமடையாத நிலையில் திருவாரூரில் ஒரு நாடகத்திற்கு ஒப்புக் கொண்ட அவர் அதில் நடித்துக் கொண்டிருக்கும்போதே மயங்கி விழுந்தார். அதிலிருந்து படுத்த படுக்கையிலிருக்கும் நிலைக்கு ஆளானார் அவர். கால்கள் வீக்கம் கண்டன. கண்கள் மஞ்சளாயிற்று. நாட்கள் செல்லச் செல்ல அவரது முகம் வெளிறிப் போனது. உடல் துரும்பாக இளைத்தது. மெல்ல பேசும் சக்தியும் குறைந்தது.

1933 டிசம்பர் 2-ஆம் தேதி சனிக்கிழமை காலையில் வயிற்று வலியால் தூடித்த அவரைப் பரிசோதித்த டாக்டர் ஒரு ஊசி போட்டார். கிட்டப்பா நாக்கு வறண்டது. சிறிதளவு தண்ணீரை விழுங்கி விட்டுத் திரும்பிப் படுத்தவர் அதற்குப் பிறகு திரும்பவேயில்லை.

கிட்டப்பாவின் மரணச் செய்தி நாடெங்கும் அதிர்ச்சி அலைகளை உண்டு பண்ணியது. சுந்தராம்பாளை யாராலும் தேற்ற முடியவில்லை. உயிருக்குயிராக நேசித்த தன் காதல் கணவனின் மறைவைத் தாங்க முடியாது துடித்தார் அவர்.

கிட்டப்பா இறந்தபோது அவரது வயது 28. தனது 20-வது வயதில் அவரை மணந்த சுந்தராம்பாள் ஆறு வருடங்கள் மட்டுமே அவரோடு வாழ்ந்தார். அதிலும் பல மாதங்கள் இருவரும் தனித்தனியே பிரிந்திருந்தனர்.

சாதாரணமாக பெண்கள் மணமுடிக்கும் வயதான 26 வயதில் தன் கணவரை இழந்த சுந்தராம்பாள் மிகுந்த மன உறுதியோடு பொட்டையும், பூவையும் துறந்தார். வெள்ளைச் சேலை உடுத்தத் தொடங்கினார். இல்லற வாழ்விலிருந்து துறவறத்திற்குள் புகுந்தார்.

கணவன் இறந்த பிறகு பல மாதங்கள் கொடுமுடி வீட்டிற்குள்ளேயே அடைந்து கொண்டிருந்தார்.

——————————————————————————————————————————————————————————————
லட்சம் ரூபாய் சம்பளம் பெற்ற
முதல் நடிகை சுந்தராம்பாள்

இந்தியாவிலேயே திரைப்படத்தில் நடிக்க ஒரு லட்சம் ரூபாய் சம்பளம் பெற்ற முதல் நடிகை சுந்தராம்பாள் அவர்கள்தான். எந்த கால கட்டத்தில் அவர் ஒரு லட்சம் ரூபாயை சம்பளமாகப் பெற்றிருக்கிறார் என்பதை சரியா உணர்ந்தால்தான் கே.பி.எஸ். படைத்திருப்பது எவ்வளவு பெரிய சரித்திரம் என்பதை உணர முடியும்.

கே.பி.எஸ். ஒரு லட்சம் ரூபாய் சம்பளம் பெற்ற நாட்களில் ஒரு சவரன் தங்கத்தின் மதிப்பு 14 ரூபாய். அதன்படி பார்த்தால் ஒரு லட்சம் ரூபாய்க்கு 7143 சவரன் வாங்கலாம். இன்றைய சவரன் விலை தோராயமாக ரூபாய் ஏழாயிரம் என்று வைத்துக்கொண்டு கணக்கிட்டால்கூட கே.பி.எஸ். அன்று பெற்ற தொகை 5 கோடி ரூபாய்க்கு சமம். அதன்படி பார்த்தால் முதலில் மட்டுமல்ல- இன்று வரை அதிக சம்பளம் வாங்கிய ஒரே இந்திய நடிகை கே.பி. சுந்தராம்பாள் மட்டுமே என்பதை உணர்ந்து கொள்ள முடிகிறது.

1935-ம் ஆண்டு “பக்த குசேலா’வை முந்திக்கொண்டு “நந்தனார்’ திரைக்கு வந்தது. “நந்தனார்’ வெற்றிப்படமாக அமைந்தபோதிலும் அந்த படத்திற்குப் பின் கே.பி.எஸ். வேறு படங்களில் நடிக்கவில்லை. படங்களில் நடிக்கவில்லையே தவிர காங்கிரஸ் கூட்டங்களில் தேசியப் பாடல்களையும், கோவில் கச்சேரிகளில் தெய்வீகப் பாடல்களையும் தொடர்ந்து பாடிக்கொண்டிருந்தார் அவர். காங்கிரஸ் தலைவர் சத்தியமூர்த்தியும், செயலாளரான காமராசரும் சுந்தராம்பாளை பல கூட்டங்களுக்கு அழைத்துச் சென்றனர்.

காங்கிரஸ் கூட்டங்களில் கூட்டம் சேர கே.பி.எஸ். அவர்களின் பாட்டுக்கள் பெரிதும் உதவியது என்பதை யாரும் மறுக்க முடியாது. மதுரை தமுக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் கலந்து கொண்ட ராஜாஜி, “”என்ன இவ்வளவு கூட்டம் கூடியிருக்கிறதே” என்று வியந்தார். “”இது சுந்தராம்பாள் பாட்டுக்கு கூடிய கூட்டம்” என்று சத்தியமூர்த்தி கூறியதும் ராஜாஜி ஆச்சர்யம் அடைந்தார்.

மகாத்மா 1936-ல் தமிழிகத்தில் சுற்றுப்பயணம் செய்தபோது சுந்தராம்பாள் பிறந்த ஊரான கொடுமுடி அருகே கார் பழுதடைந்தது. அப்போது காந்தி அடிகளை கே.பி.எஸ். இல்லத்திற்கு அழைத்துச் சென்றார் சத்தியமூர்த்தி. வீட்டிற்கு வந்த காந்தியடிகளுக்கு வெள்ளி டம்ளரில் பால் தரப்பட்டது. “”பாலோடு இந்த டம்ளரும் எனக்குத்தானே” என்று மகாத்மா கேட்க, முகமலர்ச்சியோடு அதைத் தந்தார் கே.பி.எஸ். அதை ஏலமாக விட்டு நிதியாக காங்கிரஸ் இயக்கத்திற்கு அளித்தார் மகாத்மா.

1935-ஆம் ஆண்டு வெளியான “நந்தனார்’ திரைப் படத்திற்குப் பிறகு 1940-ல் வெளியான “மணிமேகலை’ திரைப்படத்தில் நடித்திருந்தார் கே.பி.எஸ். அதற்குப் பின் எந்தப் படத்திலும் நடிக்க அவர் ஒப்புக் கொள்ளவில்லை. கச்சேரி, தேசியப் பாடல்கள் என்று அவரது வாழ்க்கைப் பயணம் நடைபெற்றது.

1940-க்குப் பிறகு படங்களில் நடிக்காமல் இருந்த கே.பி.எஸ். மீண்டும் 1948-ல் நடிக்க ஒப்புக் கொண்ட படம் “ஒüவையார்’. அந்த நாட்களில் “ஒüவயார்’ நாடகத்தை டி.கே.எஸ். சகோதரர்கள் நடத்தி வந்தனர். அதில் டி.கே. சண்முகம் ஒüவையாராக நடித்தார். மிகச் சிறப்பாக மேடைகளில் ஒüவையாராக நடித்த அவரைத்தான் “ஒüவையார்’ படத்தில் நடிக்க முதலில் அணுகினார் எஸ்.எஸ். வாசன்.

ஆனால் டி.கே. சண்முகம் அவர்கள் “”நான் பெண் வேடம் போட்டது நாடக மேடைக்கு மட்டுமே சரி. சினிமாவிற்கு சரிப்பட்டு வராது. ஒரு பெண் இந்தப் பாத்திரத்தில் நடிப்பதுதான் பொருத்தமாக இருக்கும்” என்றார். “”அப்படியென்றால் யாரை நடிக்க வைத்தால் பொருத்தமாக இருக்கும் என்று நீங்களே கூறுங்கள்” என்று எஸ்.எஸ். வாசன் கேட்க, டி.கே. சண்முகம் சொன்ன பெயர்தான் கே.பி. சுந்தராம்பாள்.

ஒüவையாராக நடிப்பதற்கு ஏற்ற தமிழ் உச்சரிப்பும், கணீர்க் குரலும் உள்ள ஒரே நபர் கே.பி.எஸ். அவர்கள்தான். அவர் ஒüவையாராகத் தோன்றினாலே போதும்~ நடிக்கவே தேவையில்லை” என்று டி.கே.எஸ். சொல்ல அதை ஏற்றுக் கொண்டார் எஸ்.எஸ். வாசன்.

கே.பி.எஸ். அவர்களிடம் யார் மூலம் தொடர்பு கொள்வது என்று சிந்தித்த வாசன் அவர்களுக்கு “ஹிந்து’ சீனிவாசன் நினைவு வந்தது. சீனிவாசன் வாசனுக்கு நல்ல நண்பர். கே.பி.எஸ். அவர்களுக்கோ அவர் வழிகாட்டியாக இருந்தார். சீனிவாசன் அவர்கள் துணையுடன் வந்த வாசன் கேட்க தட்டாமல் அந்த வாய்ப்பை ஏற்றுக் கொண்டார்.

கே.பி.எஸ். படத்தில் நடிக்க வருடம் ஒருலட்ச ரூபாய் சம்பளம், அது தவிர மாதம் ஒரு தொகை தர வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. இந்த லட்ச ரூபாய் சம்பளத்தின் மதிப்பு எவ்வளவு என்பதை வாசகர்கள் தெரிந்து கொள்ள வேண்டுமென்றால் இன்னொரு விவரத்தையும் அவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். அந்த நாளில் ஜெமினி ஸ்டூடியோவை வாங்க வாசன் கொடுத்த பணம் 86,496 ரூபாய்தான்.

1947-ல் தொடங்கப்பட்ட “ஒüவையார்’ படம் 15.8.1953 அன்று சுதந்திரதின வெளியீடாக வெளிவந்தது. “”படம் முடிவடைந்ததும் எஸ்.எஸ். வாசன் அவர்கள் அப்போது ஜெமினியில் பொது மேலாளராக இருந்த நம்பியாரிடம் காசோலையைக் கொடுத்தனுப்பி ஆறு வருடத்துக்குரிய தொகையை அம்மையாரையே எழுதிக் கொடுக்கும்படி சொல்லி அனுப்பியிருந்தார்.

ஆனால் சுந்தராம்பாள் அந்த காசோலையில் பெருந்தன்மையுடன் நான்கு லட்சும் ரூபாயை மட்டும் பூர்த்தி செய்து கொள்வதாக அவரிடம் சொன்னார்” என்று “”இசைஞானப் பேரொளி பத்மஸ்ரீ சுந்தராம்பாள்” என்ற புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார் பாஸ்கரதாசன். ஆனால் “”இது ராஜபாட்டை அல்ல” என்ற தனது புத்தகத்தில் நட்சத்திரத்தின் பெயரை மட்டும் குறிப்பிடாமல் இந்த சம்பவத்தைப் பற்றி மட்டும் சிவகுமார் எழுதியுள்ள தகவல் பாஸ்கரதாசன் கூற்றுக்கு மாறுபட்டதாக இருக்கிறது.

ஜெமினி உருவாக்கிய ஒரு படம் முடிய ஏழு ஆண்டுகள் ஆகிவிட்டது. படத்தின் கதாநாயகிக்கு (ஆண்டுக்கு) ஒரு லட்சம் சம்பளம் பேசி ஓராண்டுக்குள் படத்தை முடிப்பதாக ஒப்பந்தம். திட்டமிட்ட காலவரைக்குள் படம் முடியவில்லை. காலம் கடந்தாலும் மாபெரும் படைப்பாக அது உருவாகியது.

தனது அந்தரங்கச் செயலாளர் பி.பி. நம்பியாரை அழைத்தார் வாசன். “”ஹீரோயினுக்கு ஓராண்டில் படம் முடிப்பதாகப் பேசி ஒரு லட்சம் சம்பளம் முடிவு செய்தோம். இப்போ ஏழு வருஷம் ஆயிடுச்சு. அதனால நாம கொஞ்சம் கூட்டி நாலு லட்சம் தருவோம்” என்றார்.

பேராசை பிடித்த ஹீரோயின் “”ஐயறு சொன்ன சொல் தவறமாட்டாரு. ஏழு வருஷம் வேலை செஞ்சிட்டு நாலு லட்சம் சந்தா எப்படி?” என்று கேள்வி கேட்டார்.
உடனே நடிகையின் விருப்பப்படி ஏழு லட்சம் தர சம்மதித்தார். ஆனால் அவர் பேராசையைக் கண்டிக்கும் வகையில் ஓராண்டு வருமானம் 7 லட்சம் என்பது போல எழுதி வாங்கிக் கொண்டார்.

வருமானவரி இலாக்காவுக்கு விபரம் தெரிந்தால் ஏழு லட்சத்தில் சுமார் 4.5 லட்சம் ரூபாய் வரியாகப் போய்விடும்” என்பதைப் பின்னர் அறிந்த நடிகை தன் தவறுக்கு வருந்தி மன்னிப்பு கேட்க, உடனே ஏழாண்டுக்கும் வருமானத்தைப் பிரித்து எழுதிக் கொடுத்தார்.”

மேற்கண்டவாறு தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார் சிவகுமார்.

“ஒüவையார்’ படத்தைப் பார்த்த டி.கே. சண்முகம் “”நீங்கள் நடிக்கவில்லை. ஒüவையாராகவே வாழ்ந்திருக்கிறீர்கள்” என்று கே.பி.எஸ்.ûஸ புகழ்ந்தார்.

“ஒüவையார்’ திரைப்படத்திற்குப் பிறகு கே.பி.எஸ். நடித்த திரைப்படம் கலைஞரின் கை வண்ணத்தில் உருவான “பூம்புகார்’.

“”பூம்புகார்” திரைப்படத்தை எடுப்பது என்று முடிவெடுத்தவுடன் கவுந்தியடிகளாக கே.பி.எஸ், அவர்கள் நடித்தால்தான் பொருத்தமாக இருக்கும் என்று முடிவெடுத்த கலைஞர் எஸ்.எஸ். ராஜேந்திரனையும் அழைத்துக்கொண்டு கே.பி.எஸ். அவர்களின் சம்மதம் பெற கொடுமுடி புறப்பட்டார். அவர்கள் கோரிக்கையை கேட்டவுடன் முதலில் தனது மறுப்பைத் தெரிவிக்கிறார் கே.பி.எஸ்.

“”கவுந்தியடிகளாக நீங்கள் நடித்தால்தான் சிறப்பாக இருக்கும். பொருத்தமாகவும் இருக்கும்” என்று இருவரும் வற்புறுத்த “”நான் கடவுள் மீது தீவிர பக்தி கொண்டவள், நீங்களோ திராவிடர் கழக கொள்கையுடையவர்கள். எப்படிப் பொருத்தமாக இருக்கும்?” என்று தேங்காய் உடைப்பது போல் பட்டென்று உடைக்கிறார் கே.பி.எஸ்.

கலைஞரும் விடவில்லை. “”நாங்கள் எடுப்பது கடவுள் படமோ, கட்சிப் படமோ அல்ல. கற்புக்கரசி கண்ணகி பற்றிய படம். நீங்கள் நடிக்கப் போவது சமணத்துறவி வேடம்” என்கிறார்.

“”சரி, மகனே. பழனிக்குச் சென்று முருகனின் உத்தரவு பெற்ற பிறகுதான் நடிப்பது பற்றி நான் முடிவு சொல்ல முடியும்” என்று இறுதியாக கே.பி.எஸ். சொல்ல, “”முருகனிடம் கேட்கும்போது கருணாநிதி கேட்டதாகச் சொல்லுங்கள். என் கோரிக்கை என்பதால் முருகன் மறுக்கமாட்டார். உடனே ஒப்புதல் அளித்து விடுவார்” என்று விளையாட்டாகச் சொல்கிறார் கலைஞர்.

அவர் விளையாட்டாகச் சொன்னது பலிக்கிறது. சில நாட்களில் கொடுமுடியில் இருந்து கலைஞருக்குத் தகவல் வருகிறது. “”முருகன் உத்தரவு கொடுத்து விட்டான்” என்று.

தன்னுடைய லட்சியத்தில் யாருக்கும் விட்டுக் கொடுக்காத போக்கை கே.பி.எஸ். கொண்டிருந்தார்.

“”கடவுளை நிந்திக்கும் பாடலைப் பாடமாட்டேன்” என்று “பூம்புகார்’ படப்பிடிப்பில் நிர்த்தாட்சண்யமாக அவரால் சொல்ல முடிந்திருக்கிறது. மாற்றப்பட்டது பாடல் வரிகள்” எனது தனது “வியப்பளிக்கும் ஆளுமைகள்’ என்ற புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார் வெங்கட் சாமினாதன்.

“பூம்புகார்’ திரைப் படத்திற்குப் பிறகு கே.பி.எஸ். நடித்த படங்களில் குறிப்பிடத்தக்க படங்கள் என்று “திருவிளையாடல்’, “துணைவன்’ ஆகிய படங்களைச் சொல்லலாம். இவைகள் தவிர “மகாகவி காளிதாஸ்’, “கந்தன் கருணை’, “உயிர் மேல் ஆசை’, “சக்திலீலை’, “காரைக்கால் அம்மையார்’, “திருமலை தெய்வம்’ (கடைசி படம்) ஆகிய படங்களிலும் நடித்தார் அவர்.

கே.பி.எஸ். நடித்து வெளிவராத ஒரே படம் சிவாஜி, தேவிகா ஜோடியாக நடித்த “ஞாயிறும் திங்களும்’. படம் ஏழாயிரம் அடி வளர்ந்த நிலையில் படத்தின் இயக்குநரும் தயாரிப்பாளருமான சடகோபன் இறந்துவிட படமும் நின்று போனது.

அன்று சூப்பர் ஸ்டாராக விளங்கிய எம்.கே. தியாகராஜ பாகவதரை “ஏண்டாப்பா’ என்றும், கலைஞர் கருணாநிதியை “”மகனே” என்றும் காங்கிரஸ் தலைவர் சத்யமூர்த்தியை “அண்ணா’ என்றும், அழைக்கும் உரிமை பெற்றிருந்த கே.பி. சுந்தராம்பாள் உடல்நிலை 1980-ஆண்டு நலிவடையத் தொடங்கியது.

24.9.80 அன்று இரவு 9.30 மணிக்கு அறிஞர் அண்ணாவால் “”கொடுமுடி கோகிலம்” என்று அழைக்கப்பட்ட கே.பி.எஸ். முருகனடி சேர்ந்தார். உடன் தகவல் அன்றைய முதல்வரான எம்.ஜி.ஆர். அவர்களுக்குத் தெரிவிக்கப்படுகிறது. அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கை நடத்த உத்தரவிடும் எம்.ஜி.ஆர். அப்போது நடிகர் சங்கப் பொறுப்பிலிருந்த மேஜர் சுந்தரராஜனை அழைத்து செலவுகளுக்கு தன் சொந்தப் பணத்தைத் தருகிறார்.

கலைஞர் காலையில் கே.பி.எஸ். அவர்கள் வீட்டுக்கு வந்து மலர் அஞ்சலி செலுத்திவிட்டுச் செல்ல, நடிகர் சங்கத்தில் 25.9.80 அன்று காலை முதல் மாலை வரை பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக கே.பி.எஸ். அவர்களின் உடல் வைக்கப்பட்டது. அன்றைய முதல்வர் எம்.ஜி.ஆர்., சிவாஜிகணேசன், சிவகுமார், பி.எஸ். வீரப்பா, எஸ்.வி. சஹஸ்ரநாமம், இயக்குநர்கள் முக்தா சீனிவாசன், பா. நீலகண்டன் ஆகியோர் இறுதி அஞ்சலி செலுத்தினார்கள்.

கலைஞர் வானொலியில் இரங்கற்பா பாடினார்

கலை உலகில் தமிழ் இன்பம் கொட்டக் கொட்ட
கொடிகட்டிப் பறந்த கோகிலம் மறைந்ததோ

Posted in Actress, Cinema, Drama, Films, History, Hits, KBS, Kittappa, Lakshmanan, Movies, music, Nandhanar, Singer, Stage, Sundarambaal, Sundarambal, Sundharambaal, Sundharambal, Suntharambaal, Suntharambal, Superhits, Theater, Theatre | Leave a Comment »

Ramanujam: Contemporary Performers, Modern Drama, Theater Scene in Tamil

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 4, 2008

ஆவணம்: நாடக இராமானுஜம்!

நாடகங்கள் என்றதும் சபா நாடகங்கள்தான் ஞாபகத்துக்கு வருகின்றன. நவீன நாடகங்கள் என்ற பிரயோகம் சிலருக்கு அறிமுகமாகியிருக்கலாம்.

“”நடிப்பவர் தனியாகவும் பார்வையாளர் தனியாகவும் இரண்டு பகுதிகளாகச் செயல்படுவதை நவீன நாடகங்கள் மாற்றுகின்றன. சொல்லப் போனால் பார்வையாளர்களையும் அந்த நாடகத்தின் ஓர் அங்கமாகவும் அவர்களையும் படைப்பாளியாகவும் மாற்றும் சக்தியாக நவீன நாடகங்கள் இருக்கின்றன”- என்கிறார் நவீன நாடகத்தின் முக்கிய நபரான சே. இராமானுஜம்.

இவரைப் பற்றி ஆவணப்படம் ஒன்று சமீபத்தில் வெளியாகியிருக்கிறது. எழுதி இயக்கியிருப்பவர் சி.அண்ணாமலை. இந்த ஆவணப்படத்தைக் குறித்து அவரிடம் கேட்டோம்.

“”வசிஷ்டர் வாயால் பிரம்மரிஷி பட்டம் என்பது போல இந்திய நாடக மேதையான இப்ராபீம் அல்காசியிடம் சிறந்த மாணவர் என்று பெயர் எடுத்தவர் இராமானுஜம்.<

நாடகம் என்பது இன்னொரு வாழ்க்கை. நாடகம் என்பது நாடக ஆசிரியன், நடிகன், பார்வையாளனை ஒருங்கிணைப்பது என்பது இவருடைய நாடகத் தன்மையின் முக்கியமான வித்தியாசம். கடந்த 45 ஆண்டுகளாக இவர் நவீன நாடகத்துக்காகப் பாடுபட்டுவருகிறார்.

ஷேக்ஸ்பியர், டி.எஸ். எலியட், பிரெக்ட், தாகூர், பாதல் சர்க்கார், விஜய் டெண்டுல்கர், இந்திரா பார்த்தசாரதி, ஜி. சங்கரபிள்ளை, ந.முத்துசாமி, ஜெயந்தன் உள்ளிட்டோரின் நாடகங்களை இவர் இயக்கியிருக்கிறார்.

தமிழில் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு, ஆங்கிலம், ஹிந்தி ஆகிய மொழிகளில் நாடகங்கள் இயக்கியிருக்கிறார். நாடகத்தை எழுத்தில் பார்ப்பதற்கும் நடிப்பில் கொண்டு வருவதற்கும் நிறைய வித்தியாசம் உண்டு. நடிப்பு என்பது உடல் செயல்பாடு, உச்சரிக்கும் மொழியின் ஓசை, அதற்கான காட்சியின் பின்புலத்தில் நாடகம் நிகழ்த்தப்படுகிறது” என்கிறார் இராமானுஜம்.

பல மொழி நாடகங்களை இயக்கியிருப்பது குறித்து அவரிடம் கேட்டபோது “”நான் பல மொழி நாடகங்களை இயக்கி வருகிறேன். அத்தனை மொழிகளிலும் எனக்குப் பாண்டித்யம் இருக்க வாய்ப்பில்லை என்றாலும் அந்தந்த மொழியின் ஓசையை வைத்தே சரியாக வந்திருக்கிறதா என்பதைப் புரிந்து கொள்ள முடியும் என அவர் உறுதியாகக் கூறுகிறார்.

தேசிய நாடகப் பள்ளியில் முறையாகப் பயின்ற நாடக இயக்குநர்களில் முக்கியமானவராக இன்று நம்மிடையே இருப்பவர் ராமானுஜம்.

கேரளம், மைசூர், ஆந்திரம் போன்ற மாநிலங்களில் ஏராளமான நாடகங்களை அரங்கேற்றியவர்- பல நாடக எழுத்தாளர்களுடன் சேர்ந்து பணியாற்றியவர் என்பதால் அங்கெல்லாம் சென்று ஆவணங்கள் சேகரித்தோம். ஏறத்தாழ ஓராண்டுகாலத்துக்கு மேல் இந்த ஆவணத்துக்கு அவகாசம் தேவைப்பட்டது.

அவருடைய நாடகத்துக்கான நடிகர்கள் குறித்து அவரிடம் கேட்டபோது, கிடைத்த நடிகர்களை வைத்துதான் நாடகம் செய்கிறேன். ஒரு நடிகனைப் பிறக்க வைக்க முடியாது, உருவாக்கத்தான் முடியும். அவனிடம் மறைந்து இருக்கும் திறமைகளை வெளிக்கொணர பயிற்சி தேவைப்படுகிறது என்கிறார்.

நாற்காலிக்காரர், வெறியாட்டும், மெüனபுறம், கருப்புத் தெய்வங்கள் இவருடைய நாடகங்களில் முக்கியமானவை. இப்போது 400 ஆண்டு பழைமையான கைசீக நாடகத்தை ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதம் ஏகாதசி அன்று திருக்குறுங்குடி கோவிலில் அரங்கேற்றி வருகிறார். ஆண் டுதோறும் அந்த நாடகத்துக்கான பழைய வரலாறுகள் கிடைக்கும்போதெல்லாம் அவற்றையும் அதில் சேர்த்து வருகிறார்.

72 வயதான பேராசிரியர் ராமானுஜத்துக்கு உண்மையான காணிக்கை இந்தப் படம்” என்று நெகிழ்ச்சியோடு குறிப்பிடுகிறார் சி. அண்ணாமலை

. முத்தையா வெள்ளையன்

Posted in Contemporary, Drama, IPa, IPaa, Modern, Muthusami, Performance, Performers, Ramanujam, Stage, Theaters, Theatres | Leave a Comment »

Charukesi: Ramanujar & Muthusamy Dikshithar – Dinamani Theater Reviews

Posted by Snapjudge மேல் ஜனவரி 1, 2008

ராமானுஜரும், முத்துசாமி தீட்சிதரும்

ராமானுஜர் மதப்புரட்சி செய்த மகான். சாதிப் பாகுபாடுகளைத் தாண்டி எல்லோரையும் சமமாகப் பார்த்த சன்னியாசி.

எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதி எழுதிய ராமானுஜர் தமிழ் நாடகத்தின் ஆங்கில வடிவத்தை, சென்னைப் பல்கலைக்கழக ஆங்கிலத்துறை மாணாக்கர் சிலர், பேராசிரியர் ரஜானியின் இயக்கத்தில் நடித்தார்கள். ஆனால் ராமானுஜர் வேடத்தில் நடித்தவர் அம்ருதா கரயில் என்கிற இளம்பெண். குற்றவியல்துறை மாணவி. ஓர் ஆண் கூடவா ராமானுஜர் வேடத்தை ஏற்க முன்வரவில்லை என்ற கேள்வி ஒருபுறம் இருக்கட்டும். ராமானுஜர் வேடமேற்ற பெண் திருப்திகரமாக நடித்தார் என்பது மட்டும் நமக்குப் போதும்.

நாடக வடிவின் நூலைப் பெற்றுக்கொண்ட திருக்காட்டுப்பள்ளி சட்டமன்ற உறுப்பினர் ரவிக்குமார், இந்திரா பார்த்தசாரதியின் இருபது வருட நண்பராம். அவர் பேச்சு நவீன இலக்கியவாதியின் உரைபோல இருந்ததே தவிர, அரசியல்வாதியின் “நடை’யாக இருக்கவில்லை.

தன் வீட்டுக்கு வந்த விருந்தாளியை, அவர் அந்தணர் அல்லாதவர் என்பதற்காக மனைவி அவரைத் திண்ணையில் அமரச் செய்து அமுது படைத்ததற்காக, ராமானுஜர் அவளுடன் தன் வாழ்க்கையையே முறித்துக்கொண்டு விடுகிற நிகழ்ச்சி ஒன்று நடக்கிறது.

தனக்கு எதிர்க் கருத்துக்களைக் கொண்ட பலரையும் மனம் மாறச் செய்து வெல்ல முடிந்த ராமானுஜரால், மனைவியின் மனத்தை மாற்ற முடிந்திருக்காதா? அவர் அப்படிச் செய்திருக்க வேண்டுமா என்ற கேள்வியை, நூலை வெளியிட்ட “ஹிந்து’ ஆசிரியர் ரவியும், சட்டமன்ற உறுப்பினர் ரவிக்குமாரும் எழுப்பினர். தம் உரையில் இந்திரா பார்த்தசாரதி இதற்கு பதில் ஏதும் தரவில்லை. “நாடகத்தைப் படைத்தேன்’ அத்தோடு என் பணி முடிந்தது என்றார்.

மொழிபெயர்ப்பில், குறிப்பாக பல நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்த ஒரு மகானின் வரலாறு பற்றிச் சொல்லும்போது, ஆங்கிலத்தில் எத்தகைய சொற்-சங்கடங்கள் எழுகின்றன என விவரித்தார் பேராசிரியர் ஸ்ரீமான். இவர் ஆங்கில மற்றும் அயல்நாட்டு மொழிகள் பல்கலைக்கழகத்தில் ஆங்கிலப் பேராசிரியர். (ஆனால் மொழியாக்கம் தமக்குத் திருப்தி அளித்ததாகவே இந்திரா பார்த்தசாரதி அங்கீகரித்துவிட்டார்.)

ஆக்ஸ்ஃபோர்டு யுனிவர்சிடி பிரஸ்ஸின் இந்திய படைப்புகளின் ஆங்கில மொழிபெயர்ப்பு நூல்களை வெளியிடும் பணியை மேற்கொண்டிருக்கும் மினி கிருஷ்ணன் உரை “மினி உரை’ என்றால், நூலுக்கு நீண்ட முன்னுரை வழங்கியிருக்கும் ஆங்கிலப் பேராசிரியர் சி.டி.இந்திரா, இந்த நூல் வெளிவர, தாம் தில்லி வரை சண்டை போட்டுவிட்டு வந்த சரித்திரத்தை சாங்கோபாங்கமாக “மாக்ஸி உரை’யாக நிகழ்த்தினார். (நமக்குப் பொறுமையைச் சோதித்த பேச்சுதான். ஆனால் அவருடைய ஆதங்கத்தை இந்த இடத்தில் வெளியிடாமல் வேறு எங்கே, எப்போது வெளியிடுவார், பாவம்!)

“நந்தன் கதை’ போலவே “ராமானுஜரு’ம் இந்திரா பார்த்தசாரதியின் மனித சாதியிடையே பிரிவு காணலாகாது என்ற சிந்தனையை வெளிப்படுத்தும் படைப்பு. தமிழில் இந்த நாடகத்தை விரைவில் மேடையில் பார்க்கும் வாய்ப்புக் கிடைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.

கர்நாடக இசையின் சரித்திரத்தில், மூன்று கிறிஸ்துவர்களுக்கு முக்கிய இடம் உண்டு. ஒருவர் ஆபிரகாம் பண்டிதர். இன்னொருவர் மாயூரம் வேதநாயகம் பிள்ளை. மூன்றாமவரைப் பற்றி அதிகம் அறிந்திருக்க வாய்ப்பில்லை.

அவர்தான் ஏ.எம்.சின்னசாமி முதலியார் என்கிற கத்தோலிக்க கிறிஸ்தவர். “சங்கீத சம்பிரதாய பிரதர்சினி’ என்ற தெலுங்கு நூலை வெளிச்சத்துக்கு கொண்டு வர தன் உடல், பொருள் ஆவி அனைத்தையும் கொடுத்த அந்நாளைய அரசு ஊழியர். ஆங்கிலேய ஆட்சியில், செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் பணிபுரிந்த இந்த அபூர்வ மனிதரைப் பற்றிய காலை நேரச் சொற்பொழிவு ஒன்றில், இணையற்ற ஆங்கிலப் பேச்சாளர் வி.ஸ்ரீராம் தொகுத்து அளித்த விவரங்கள் இதுவரை யாரும் அறியாதவை.

“சங்கீத சம்பிரதாய பிரதர்சினி’ நூல் இசை மாணாக்கர்களுக்கு தேவையான ராக லட்சணங்களையும், ஸ்வரங்களையும், கமகங்களையும் அறிமுகப்படுத்தும் நூல். இவருக்குத் துணை நின்றவர் முத்துசாமி தீட்சிதரின் சகோதரர் பாலுசாமி தீட்சிதரின் மகன் சுப்பராம தீட்சிதர். ஒருசமயத்தில் எட்டயபுர சமஸ்தான வித்துவானாக இருந்தவர். (இவரைக் குறித்து மகாகவி சுப்பிரமணிய பாரதியார்கூட ஒரு பாடல் புனைந்திருக்கிறார்.)

மின்சாரம் கிடையாது, கம்ப்யூட்டர் கிடையாது, நவீன அச்சுக்கோக்கும் எந்திரம் கிடையாது. இத்தனை “கிடையாது’-களுக்கும் இடையே, மனைவியின் உடல்நிலை மிகவும் மோசமாகி, சென்னையை விட்டுப் புறநகர் போய் வசிக்கும் சூழ்நிலையிலும், சின்னசாமி முதலியார் மனம் தளர்ந்துவிடவில்லை. பென்ஷன் தொகை எல்லாம்கூட நூலுக்காகச் செலவிடுகிறார். கடன் ரூ.28000-த்தைத் தாண்டி விடுகிறது. மனைவியின் நகைகளை எல்லாம் விற்றுவிடுகிறார். ஆனால் அவர் குறிக்கோள் எல்லாம் எப்படியாவது நூல் வெளியாக வேண்டும் என்பதே.

கர்நாடக இசையின் பங்களிப்பில் பங்கு கொண்ட அத்தனை வாக்யேக்காரர்களின் பாடல்களையும் திரட்டி, அவற்றை ஆங்கில இலைக்கலைஞர்களும் பாடும் அல்லது வாசிக்கும் வகையில் ஸ்டாஃப் நொட்டேஷன் செய்து பரப்ப இவர் எடுத்துக் கொண்ட முயற்சி இவ்வளவு, அவ்வளவு அல்ல. “”ஜெயதேவர், புரந்தரதாசர், நாராயண தீர்த்தர், அருணாசலக் கவி ஆகியோரின் பாடல்களைவிட, நவீன ஓரியண்டல் இசை என்று எடுத்துக் கொண்டால், தியாகராஜ சுவாமிகளின் பாடல்களுக்குத்தான் முதல் இடம்’ என்று தன் கருத்தை வெளியிட்டிருக்கிறார். ஐரோப்பிய வயலின் இசைக் கலைஞர்களைக் கொண்டு, நொட்டேஷன்-களின்படியே இசைக்கச் செய்து வெற்றி கண்டவர் இவர்.

முத்துசாமி தீட்சிதரின் கிருதிகளை வெளியே கொண்டு வர, சின்னசாமி முதலியார் பட்டபாடு இருக்கிறதே, அது “சங்கீத சம்பிரதாய பிரதர்சினி’ அச்சில் கொண்டு வர அவர் பட்ட பாட்டைப் போலவே உருக்கமானது.

இறுதியில் சுப்பராம தீட்சிதர் பணியாற்றிய எட்டயபுரம் சமஸ்தான மன்னரின் உதவியோடு, அங்கேயே அச்சகம் நிறுவச் செய்து, 1906-ல் சுப்பராம தீட்சிதரே அந்த நூலை வெளியிடும் சமயம், சின்னசாமி முதலியார் காலமாகிவிடுகிறார். ஆனால் அதற்காகப் பாடுபட்ட தன் நண்பரின் நினைவுக்கு அந்த நூலை சமர்ப்பணம் செய்திருக்கிறார் சுப்பராம தீட்சிதர்.

முத்துசாமி தீட்சிதரின் பாடல்களை, அவர் தமது பிரதம சீடர்களான தஞ்சை நால்வர்களுக்கும், தேவதாசிகளுக்கும், நாதஸ்வர வித்துவான்களுக்கும் கற்றுக்கொடுத்தார். அதனால் ராமானுஜர் போலவே, முத்துசாமி தீட்சிதரும் சாதியுணர்வு தாண்டி நின்ற மேதை எனலாம்.

சாருகேசி

Posted in Authors, Books, Carnatic, Chaarukesi, Charukesi, Classical, Dikshithar, Dinamani, Drama, Indira Parthasarathy, Indra Parthasarathy, IPa, IPaa, Literature, music, Muthusami, Muthusamy, Oxford, publications, Publishers, Ramanujam, Ramanujan, Ramanujar, Reviews, Saarukesi, Sarukesi, Shows, Stage, Tamil, Theater, Theatre, Translations, Works, Writers | Leave a Comment »

Ki Parthibharaja’s Kaayatha Kaanagathey – Book Review in Unmai

Posted by Snapjudge மேல் நவம்பர் 13, 2007

நூல்: காயாத கானகத்தே
ஆசிரியர்: கி.பார்த்திபராஜா
வெளியீடு:ராகாஸ் அகமது வணிக வளாகம்,
12/293, இராயப்பேட்டை, நெடுஞ்சாலை,
சென்னை-14.

விலை:ரூ.100/-

தமிழ் நாடகத்தின் ஒரு கூறான இசை நாடகம் பற்றி பெரிய அளவில் ஆய்வுகளோ, பகுதிகளோ இல்லாத நிலையில் பார்த்திப ராஜாவின் காயாத கானகத்தே நூல் இசை நாடகம் பற்றிய ஒரு சிறந்த பதிவாகும்.

தென்மாவட்டங்களில் 20 பகுதி மக்களின் சமூக வாழ்க்கையில் ஓர் அங்கமாக இருந்த இசை நாடகங்கள், காட்சி ஊடகங்களின் ஆக்கிரமிப்பால் அந்த நாடகங்கள் பற்றி நூல்கள் மூலமே. இளைய தலைமுறையினர் அறியக்கூடிய நிலையில், இந்நூல் மிகவும் பயனுள்ள வரவாகும்.
மற்ற நாடகங்கள் போலன்றி இசை நாடக கலைஞர்களுக்கு கற்பனைத் திறனும், நாட்டு நடப்பில் தெளிந்த கண்ணோட்டமும், சமயோசித திறனும் இருந்தால் தான் காட்சிகளில் பரிணமிக்க முடியும்.

நாடக கலைஞர்களின் பங்களிப்பு, அவர்களின் திறன் அவர்களின் வாழ்வியல் நிலைகள் ஆகியவற்றை நடிகர் சங்க அமைப்பாளர்களுடன் இணைந்து தொடர்ந்து நாடகத்தை பார்த்தும், அவர்களுடன் பழகியும் பல சுவையான தகவல்களை தொகுத்தளித்துள்ளார்.

கலைஞர்களின் திறனை வெளிப்படுத்த அவர் மேற்கொண்ட நடை சிறப்புடையது. அவற்றில் ஒரு சில துளிகள். வள்ளி நாடகத்தில் திண்டுக்கல் பகுதியைச் சேர்ந்த ஒரு புகழ்பெற்ற நடிகை தன்னை தர்க்கத்தில் வென்றால் நடிப்புத் தொழிலையே விட்டுவிடுவேன் என்று சவால் விடுவார். அவருடன் நடிப்பதற்கு ராஜபார்ட்டுகளே அஞ்சுவார்கள்.

அவரை வேறு பகுதியைச் சேர்ந்த ஒரு நடிகர் சூழ்ச்சியால் தர்க்கத்தில் வென்றுவிட அதன் பின்னர் அந்த நடிகை அரிதாரம் பூசுவதைவிட்டு நடிப்புத் தொழிலையே விட்டுவிட்டார்.

அதேபோல் சத்தியவான் சாவித்திரி நாடகத்தில் எமன் வேடத்தில் சங்கரதாஸ் சுவாமிகளின் குரலையும், ஆட்டத்தையும் பார்த்த அதிர்ச்சியில் கர்ப்பிணி பெண் ஒருவரின் கரு கலைந்து போனது. அதன்பிறகு அடுத்தடுத்த நாடகங்களில் அவர் எமன் வேடத்தில் வரும்போது கர்ப்பிணிகள் இருந்தால் சபையைவிட்டு வெளியே போய்விட்டு காட்சி முடிந்த பிறகு திரும்பிவரவும் என்ற அறிவிப்பு செய்துள்ளனர்.

அவர் நடித்த பிரகலாதன் நாடகத்தில், இரணியன் வேடம் கட்டி பிரகலாதனாக நடித்த சிறுவனை தூக்கி கீழே வீசியபடி கர்ஜனை செய்த காட்சியை பார்த்த பெண் மூர்ச்சையடைந்தார். அதிலிருந்து அவர் தொடர்ந்து நடிப்பை மேற்கொள்ள மறுத்துவிட்டார்.

அதன் பிறகு அவர் நடிக்கவேயில்லை.

இசை நாடக வரலாற்றில் பெண்களை புறந்தள்ளிவிட்டே தொடங்கியிருந்தது. அதனால் தான் மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனி, பாவலர் பாய்ஸ் கம்பெனி, தேசிகானந்தா பாய்ஸ் கம்பெனி என்ற பெயரிலேயே நாடக கம்பெனிகள் இருந்துள்ளன. பிறகு இசை நாடகங்களில் பெண்கள் பங்கேற்க ஆரம்பித்த பின், ஆண்கள் பெண் வேடமிடும் பழக்கம் குறைந்தது.

அப்படியும் நாடக நடிகைகளுக்கு சமூக அங்கீகாரம் பெரிய அளவில் கிடைத்துவிடவில்லை. சமூகம் தங்களை இழிவாக பார்க்கவில்லை என்றும் கூறும் நடிகைக்கள் கூட அதற்கு காரணம் பொருள் வசதியோடு இருப்பது தான் என்கின்றனர். இக்காலக் கட்டத்தில் தான் பழம்பெரும் நடிகை பாலாமணி அம்மாள் பெண்களைக்-கொண்டே நாடகக் குழுவை நடத்தி வந்துள்ளார்.

அவரது குழுவில் 50-க்கும் மேற்பபட்ட பெண்கள் இருந்துள்ளனர்.

கும்பகோணத்தில் அவர் நடத்திய தாரா சசாங்கம் என்ற நாடகத்தைப் பார்க்க, மாயவரத்திலிருந்து எட்டு மணிக்கு ஒரு ரயிலும், திருச்சியிலிருந்து எட்டரை மணிக்கு ஒரு ரயிலும் புறப்பட்டு கும்பகோணம் சென்று, நாடகம் முடிந்து நள்ளிரவு மூன்று மணிக்கு இருரயில்களும் திரும்பிச் செல்லும். நாடகம் பார்க்கும் ரசிகர்-களுக்காக விடப்பட்ட இந்த ரயிலுக்கு பாலாமணி ஸ்பெஷல் என்றே பெயரிட்டுள்ளனர்.

இன்றைய தமிழ் சினிமா ரசிகத் தன்மை, நடிகர், நடிகைகள் வழிபாடு, ரசிக வெறித்தனம் போன்றவை ஒன்றும் புதியதல்ல. அது ஏற்கனவே நாடக வரலாற்றில் காண முடிகிறது. முழுஇரவு நாடகங்கள் முற்றாக மறைந்துவிட்ட நிலையில், அவற்றை பற்றிய ஒரு தொகுப்பு நூல் இன்றைய தலைமுறையினருக்கு ஒரு வரலாற்றுப் பெட்டகமாகும். இந்த அளவுக்கு களப்பணி செய்து, ஆராய்ச்சி கண்ணோட்டத்தோடு; சுவைபட எழுதப்பட்ட நூல் இது.

நூலாசிரியரின் முயற்சிக்கு பாராட்டுக்கள்.

Posted in Actors, artists, Books, Cinema, Documents, Drama, Fieldwork, Films, History, Incidents, Literature, Movies, music, Paarthibharaja, Parthibharaja, Performance, Research, review, Shows, Stage, Theater, Theatre, Unmai | Leave a Comment »

Margazhi Music Festival – December Season Kutchery: Charukesi

Posted by Snapjudge மேல் நவம்பர் 12, 2007

வருகிறது சங்கீத சீசன்!

“”இன்னும் சீசன் டிக்கட்டுகள் கூட அச்சாகி வர வில்லை. அதற்குள் பணத்தைக் கொடுத்து விட்டு தங்கள் சீட்டுகளை உறுதி செய்து கொள்ள ஆரம்பித்து விட்டார்கள் ரசிகர்கள்!” என் றார் பிரபல சபாவின் செயலர்.

“”போன வருடம் கொடுத்த அதே சீட்டுதான் வேணும். எப்படியாவது பார்த்துக் கொடுங்க!” என்று சில ரசிகமணிகள் கெஞ்சாத குறையாகக் கேட்பதை யும் பார்க்க முடிந்தது.

இந்த நிலைமை- அக்டோபர் முதல் தேதி கூட விடி யாத, செப்டம்பர் இரண்டாம், மூன்றாம் வார நிலவரம்.

“”யார் பாடப் போகிறார்கள், என்னென்ன நாடகங் கள், யாருடைய நடனங்கள் என்று எதுவுமே அவர்க ளுக்குத் தெரியாது. ஆனாலும் டிக்கெட் மட்டும் அவ சியம் அவர்களுக்கு வாங்கி வைத்துக் கொள்ள வேண் டும். டிசம்பர் சங்கீத-நடன-நாடக விழா என்றாலே தனி. மற்ற மாதங்களில் ” ஆல் ஆர் வெல்கம்’ போட் டால்தான் ஹாலுக்குள் கூட்டம் இருக்கும். டிசம்பர் மட்டும் விதிவிலக்கு” என்றார் அந்த சபாக்காரர்.

  • சஞ்சய் சுப்பிரமணியம்,
  • டி.எம். கிருஷ்ணா,
  • சுதா ரகுநாதன்,
  • அருணா சாய்ராம்,
  • நெய்வேலி சந்தான கோபாலன்,
  • டிவிஎஸ்,
  • மதுரை டி.என். சேஷகோபா லன்,
  • விஜய் சிவா, சௌம்யா,
  • அருண்,
  • ரவிகிரண்,
  • ஜெயஸ்ரீ,
  • மாண்டலின் சீனிவாஸ்,
  • கதிரி கோபால்நாத்,
  • குன்னக்குடி,
  • ரமணி

என்று ஒரு சின்ன வட்டத்துக்குள் ளேயேதான் எல்லா பிரபல சபாக்களும் சுற்றிச் சுற்றி வரவேண்டியிருக்கிறது.

  • சாகேதராமன்,
  • சிக்கில் குருசரண்,
  • மாஸ்டர் பாலமு ரளி கிருஷ்ணா(இப்போ இவர் குன்னக்குடி பாலமு ரளி கிருஷ்ணாவாமே?),
  • லஷ்மி ரங்கராஜன்,
  • நிஷா ராஜகோபால்,
  • வசுந்தரா ராஜகோபால்,
  • மாம்பலம் சகோதரிகள்

என்று அடுத்த வட்டத்துக்குள் இன் னொரு சுற்று!

  • ஜெயந்தி குமரேஷ்,
  • காயத்ரி,
  • ரேவதி கிருஷ்ணா

என்று வீணைக் கலைஞர்கள் பட் டியலோ மிகச் சுருங்கிப்போய் விட்டது.வயலின் சோலோ அல்லது டூயட்-

  • டி.என்.கிருஷ்ணன்,
  • எம்.எஸ்.ஜி,
  • கணேஷ்-கும ரேஷ்,
  • ஜிஜேஆர் கிருஷ்ணன்- விஜயலஷ்மி

என்று இந்தப் பட்டியலும் குறுகிப்போய்விட் டது.நடனம் என்று பார்த்தால் அதிலும் வறட்சி.

  • அலர்மேல்வள்ளி மூன்றே சபாக்களில் மட் டுமே ஆடுகிறார்.
  • பத்மா சுப்ரமணியம்,
  • லீலா சாம்சன் கூட அதிகம் இருக்காது.

இளைய தலைமுறை நடனக் கலைஞர்களில்,

  • ஊர் மிளா சத்யநாராயணன்,
  • ரோஜா கண்ணன்,
  • நர்த்தகி நடராஜ்,
  • லாவண்யா அனந்த் (கார்த் திக் ஃபைன் ஆர்ட்ஸின் இந்த வருட “நடன மாமணி’ விருது பெறுபவர்),

பிற்பகல் நிகழ்ச்சியும் மாலை நிகழ்ச்சியும் வழங்க இருப்பதாக ஒரு தகவல்.இந்த இசை-நடன நிகழ்ச்சிகள் ஒரு புறம் இருக்க, காலை ஏழு மணிக்கு நடைபெறும் “திருப்பாவை சொற்பொழிவுகளில், கல்யாணபுரம் ஆராவமுதாச்சா ரியார், வேளுக்குடி கிருஷ்ணன் இரண்டு பேரே ஸ்டார் அந்தஸ்து பெற்று, ஹால் நிரம்ப வைக்கிறார் கள்.
பாரம்பரியமான இந்த இசை-நடன நிகழ்ச்சிகள் எல்லாச் சபாக்களிலும் வெவ்வேறு பக்க வாத்தியக் கலைஞர்களுடன் நடக்கிறபோது, அனிதா ரத்னம் குழுவினர் மட்டும் தனியே “அதர் ஃபெஸ்டிவல்’ என்று நட்சத்திர ஓட்டலில் நடத்தி வருகிறார்கள்.

நிகழ்ச்சிகளின் தலைப்புகளே புருவத்தை உயர்த்தும் வகை என்றால், ஆடியன்சும் “ஹை ப்ரோ’தான்! போன வருடம் மியூசிக் அகடமி, ஜனவரியில் தனியே ஒருவாரத்துக்குக் காலை முதல் மாலை வரை நடன நிகழ்ச்சிகள் நடத்தி வெற்றி கண்டதால், இந்த வருடமும் ஒரு வாரத்துக்கு பிரபல நடனக் கலைஞர்க ளின் லெக்-டெம் உள்பட, பல நடன நிகழ்ச்சிகள் உண்டு என்கிறது தகவல் அறிந்த வட்டாரம். காலை நிகழ்ச்சிகளுக்கு “ஆல் ஆர் வெல்கம்’. மாலை டிக்கட் டுகள் உண்டு. பக்க பலமாக அமெரிக்க நிறுவன ஸ்பான்சர் வேறு!

சென்னை நகரம் முழுக்க மூலைக்கு மூலை இந்த இசை-நடன நிகழ்ச்சிகள் நடந்தாலும், திருவல்லிக்கே ணியின் பரபரப்பான தெரு ஒன்றில் மகாகவி பாரதி யாரின் இல்லத்திலேயே அவர் நினைவைப் போற்றும் வகையில் “வானவில் பண்பாட்டு மையம்’ நாலு நாள் களுக்கு, கச்சேரிகளும், நடனமும், சொற்பொழிவுக ளும், ஜதி பல்லக்குமாக நடத்தும் பாரதி விழாவுக்கும் கூட்டம் குறைச்சலில்லை.

திருமணங்களில் வரவேற்பு நிகழ்ச்சி என்று எல்லா மண்டபங்களிலும் இசைக் கச்சேரி நடப்பது வழக்கம்.

ஆனால் “இலக்கிய வீதி’ இனியவன் அவர்க ளின் நண்பர்கள் வட்டாரத்தில், அவர் தன் அமைப்பின் சார்பாக அறிமுகப்படுத்தியிருப்பது- நடன நிகழ்ச்சி! அவர் நண்பர் ஒருவரின் மகளின் திருமண வரவேற்புக்கு காயத்ரி பாலகுருநாதனின் “ஆண்டாள் திருமணத்து’க்குக் கிடைத்த பாராட்டைத் தொடர்ந்து, அவர் தம் நண்பர் கள் வட்டாரத்தில் திருமண வரவேற்பு நிகழ்ச் சிகளாக சைவ-வைணவ நடன நிகழ்ச்சிகளை, நாரத கான சபாவின் “நாட்டியரங்கம்’ அமைப் பின் உதவியோடு நடத்தப் போகிறார்! இது திருமண வரவேற்பு நிகழ்வுகளில், வர வேற்கத்தக்க மாற்றம்!

சாருகேசி


சென்ற வருடத்து தினமணிக் கதிர் கட்டுரைகள்:1. SRG Sambhandham & SRG Rajanna – December Carnatic Music Season Special by Dinamani Kadhir

2. Lalkudi Jayaraman – Dinamani Kathir Music Season Special

3. D Sankaran – Malaikottai Govindhasaamy Pillai : Dinamani Kathir Music Season Special

4. Sembai Vaithyanatha Bagavathar, Mani – Dinamani Kathir Music Season Special

5. Thiyagaraja Bhagavathar, Maangudi Chidhambara Bhagawathar, Brindha, TK Jayaraman, Sundha – Dinamani Kathir Music Season Special

6. Dhandapani Desikar, Ariyakkudi, TS Rajarathnam Pillai, AKC Natarajan – Dinamani Kathir Music Season Special

7. KV Ramakrishnan’s encounters with Carnatic Vidwans – Dinamani Kathir Music Season Special

8. Sabha Awards, Recongnitions & Prizes to Carnatic Sangeetha Performers : Dinamani Kathir Music Season Special

9. ‘Cauvery’ Ramaiya – Ramanujam : Dinamani Kathir Music Season Special

10. Sujatha Vijayaraghavan – Amma : Ananthalakshmi : Dinamani Kathir Music Season Special

Posted in Charukesi, Cutchery, December, Drama, Isai, Kutchery, Margali, Margazhi, Margazi, music, Performance, Season, Stage, Theater, Theatre | Leave a Comment »

Ve Saaminatha Sharma – Biosketch by Vikraman

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 22, 2007

மறக்கமுடியா அரசியல் அறிஞர்!

விக்கிரமன்

பேரறிஞர், மூதறிஞர் வெ. சாமிநாத சர்மாவின் பெயர் சொன்னால் உடனே நமக்கு நினைவுக்கு வருவது “பிளாட்டோவின் அரசியல்’ என்ற அவரது நூலாகும். பல்லாண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட அந்த நூலை இன்று படிப்பவர்களும் அவரது தெளிந்த தமிழ் நடையைப் பாராட்டாமல் இருக்க மாட்டார்கள்.

தமிழில் அரசியல் நூல்களை எழுதி வெளியிட்ட முன்னோடி சர்மா. “கார்ல் மார்க்ûஸ’ அறிமுகப்படுத்தினார். “புதிய சீனாவைப்’ புரிய வைத்தார். லெனின் வாழ்க்கை வரலாற்றை விளக்கினார். ரஷியப் புரட்சியை எடுத்துக் கூறினார். கிரீஸ் வரலாற்றைப் படம்பிடித்துக் காட்டினார்.

வெ. சாமிநாத சர்மா அப்போதைய “வட ஆர்க்காடு’ மாவட்டத்திலுள்ள வெங்களத்தூரில் 1895-ல் செப்டம்பர் 17-ல் பிறந்தார். தந்தை முனுசாமி அய்யர். தாயார் பார்வதி அம்மாள். செங்கல்பட்டிலுள்ள நேடிவ் உயர்நிலைப் பள்ளியில் கல்வி கற்ற சர்மா ஆங்கிலம், இந்தி, தெலுங்கு, கன்னடம், சம்ஸ்கிருதம் ஆகிய மொழிகளில் புலமை பெற்றார். இளம் வயதிலேயே தேசபக்தி, எழுத்தார்வம் மிகுந்த சர்மா தமது பதினேழாம் வயதில் – 1914 ஜூலையில் “கௌரிமணி’ எனும் சமூக நாவலை எழுதி வெளியிட்டார். அப்போது விலை மூன்றணா!

தேசிய இயக்கம் கொழுந்துவிடத் தொடங்கிய காலம். சர்மா “பாணபுரத்து வீரன்’ எனும் நாடகத்தை எழுதினார். டி.கே.எஸ். சகோதரர்கள் “தேசபக்தி’ எனும் பெயரில் அதை நாடகமாக நடத்தினார்கள். அந்த நாடகம் அக்கால மாணவரிடையே தேசபக்தியை எவ்வாறு வளர்த்தது என்பதை டி.கே. சண்முகம் நமது “நாடக வாழ்க்கை’ நூலில் எடுத்துக் கூறியுள்ளார்.

ம.பொ. சிவஞானம் தமது “விடுதலைப்போரில் தமிழ் வளர்ந்த வரலாறு’ எனும் நூலில் பாராட்டியுள்ளார். தமிழக அரசு முன்னாள் செயலர் க. திரவியம் தமது “தேசியம் வளர்த்த தமிழ்’ என்று நூலில் “தேசிய இலக்கியம்’ என்று அதைச் சிறப்பாகக் குறிப்பிட்டுள்ளார்.

ஆரம்பகாலத்தில் “இந்து நேசன்’ “சுல்பதரு’ போன்ற பத்திரிகைகளில் சர்மா பணியாற்றினார். ஆனால், 1917-ல் தமிழ்த் தென்றல் திரு.வி.க. தொடங்கிய “தேசபக்தனில்’ தொண்டாற்றத் தொடங்கியது அவரது வாழ்க்கையில் ஓர் திருப்புமுனையாக அமைந்தது. அப்போது பெரிய தேசபக்தர்களான சுப்ரமணிய சிவா. வ.வே.சு. அய்யர், மகாகவி பாரதியார் போன்றவர்களின் தொடர்பு கிடைத்தது. “கல்கி’ சர்மாவுடன் பணியாற்றினார். பின்னர் திரு.வி.க.வின் “நவசக்தி’யில் அவர் ஆற்றிய தொண்டு மகத்தானது. சுவைமிகுந்த இலக்கியத் தொடர்களை, கட்டுரைகளைப் படைத்தார். செய்தித் தலைப்புகளை அமைப்பதில் சர்மா திறமை மிக்கவர்.

சூழ்நிலை காரணமாக தமிழ்நாட்டினின்று பர்மா சென்றுவிட்ட சர்மா, 1937 – 42-ல் ரங்கூனில் “ஜோதி’ என்ற மாத இதழைத் தொடங்கித் திறம்பட நடத்தினார். பிற்காலத்தில் “சக்தி’ போன்ற சிறந்த மாத இதழ் தோன்றக் காரணமாயிருந்தது ஜோதியே. 1942-ல் ஜப்பானியர் பர்மாவில் குண்டு வீசத் தொடங்கியபோது சர்மாவும், அவரது துணைவியாரும் தமிழகம் திரும்பினர். பர்மாவினின்று நடந்தும், காரிலும் ஆயிரக்கணக்கான மைல்கள் பயணம் செய்த அனுபவத்தை “பர்மா நடைப்பயணம்’ எனும் நூலில் எழுதி வைத்தார்.

சர்மா சிறந்த எழுத்தாளர், பத்திரிகையாளர் மட்டுமல்ல; அவர் முற்போக்குக் கருத்தும் கொண்டவர். வரதட்சிணை எதிர்ப்பு சங்கத்தை நிறுவினார். 1914-ல் நண்பர்கள் உதவியுடன் சென்னை செந்தமிழ்ச் சங்க சங்கத்தை ஆரம்பித்தார். தமிழ்த்தாத்தா உ.வே.சா.வைத் தலைவராக இருக்குமாறு அணுகினாராம்! 1958-ல் தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவராக இருந்தார்.

1914-ஆம் ஆண்டில் மங்களம் என்ற பெண்மணியை மணம் புரிந்துகொண்டார். தம் துணைவியாரையும் இலக்கிய, தேசியத் தொண்டில் சமமாக ஈடுபாடு கொள்ளச் செய்திருக்கிறார். சர்மாவின் இலக்கியத் தொண்டுக்கு அம்மையார் 1956-ல் மறையும் வரை உறுதுணையாக இருந்திருக்கிறார். சர்மாவும் மங்களம் அம்மாளும் பெற்றெடுத்தவை அருமையான நூல்களே. மனைவியை இழந்த துக்கத்தில் அவர் எழுதிய “அவள்பிரிவு’ என்ற கடித நூல் கடிதக் கலையில் சிறந்ததாகும்.

திட்டமிட்ட வாழ்க்கையை உடையவர் சர்மா. ஆனால் கருணை உள்ளம் நிறைந்தவர். ஒழுக்கம், தமிழ்ப்பற்று இரண்டும் கலந்த உருவமே வெ. சாமிநாத சர்மா.

“உலகம் சுற்றும் தமிழர்’ என்ற புகழ்ப் பெயர் கொண்ட காந்தி திரைப்படச் சிற்பி ஏ.கே. செட்டியார் தொடங்கிய “குமரி மலர்’ எனும் மாத இதழின் ஆசிரியராக 1945-46ல் பணியாற்றினார். அப்போதுதான் அவரைச் சந்தித்தேன். தியாகராய நகரில் அவர் நடத்திய இலக்கியச் சொற்பொழிவுகளில் கலந்துகொண்டேன். உஸ்மான் சாலையிலுள்ள பர்ணசாலை போன்ற குடிலில் நான் ஆசிரியராக இருந்த இதழுக்குக் கட்டுரை கேட்டுப் பெறச் சந்தித்தேன். 1978 ஆம் ஆண்டு நண்பர் பெ.சு. மணியுடன், கலாúக்ஷத்ரா விடுதியில் சந்தித்தேன். முதுமையும் நோயும் வாட்டிய நிலையிலும் தமிழ் வளர்ச்சியைப் பற்றியே அவர் பேசினார்.

பர்மா நடைப்பயணக் கையெழுத்துப் பிரதியை பெ.சு. மணி தேடி எடுத்து என்னிடம் தந்தார். தன் நூல்களை வெளியிடும் உரிமையை, சர்மாஜி அவரிடம் அளித்திருந்தார். நான் அப்போது ஆசிரியராக இருந்த “அமுதசுரபி’ மாத இதழில் வெளியிடச் சம்மதித்தேன். கட்டுரை தொடங்கப் போகும் அறிவிப்பைப் பார்த்து அந்த மூதறிஞர் மகிழ்ச்சியடைந்தார். முதல் இதழ் வெளிவருவதை ஆவலுடன் எதிர்பார்த்தார். ஆனால் அதற்கு இரு நாள்களுக்கு முன்பே அவர் மறைந்தார்.

“பர்மா வழி நடைப்பயணத்தை’ தமிழ் மக்களுக்கு வெளியிட்டுப் படிக்கச் செய்தது என் வாழ்நாளில் நான் பெற்ற பெரும் பேறு.

பர்மா வழி நடைப்பயணத்தைப் படிக்கும்போது நாம் சர்மாவுடன் அந்தப் பகுதியில் அவருடன் சேர்ந்து பயணம் செய்த உணர்வை அடைந்திருக்கிறோம். அறிஞர் சர்மா பயணக் கட்டுரையாக எழுதியிருந்தாலும் இந்த நூல் ஒரு வரலாற்று நூலாகும்.

தமிழ்நாட்டிற்குக் கிடைத்த பேரிலக்கியம் அந்தப் பயணக் கட்டுரை. மறைந்த பேரெழுத்தாளர் கு. அழகிரிசாமி, சர்மாவைப் பற்றி 54 ஆண்டுகளுக்கு முன்பு பாராட்டி எழுதினார்.

“”தமிழகத்தில் ஆங்கிலம் தெரியாத தமிழர்களும் அரிஸ்டாட்டிûஸப் பற்றித் தெரிந்திருக்கிறார்கள். இவர்களுக்கெல்லாம் பிளேட்டோவையும் ரூúஸôவையும் அரிஸ்டாட்டிலையும் அறிமுகப்படுத்தியவர் சர்மாதான். தமிழ்ச் சமுதாயத்திற்கு எப்பேர்ப்பட்ட பேருபகாரம் இது!

வெ. சாமிநாத சர்மா சிறிது குள்ளமாக இருப்பார். ராஜகோபாலச்சாரியாரைப் போல் மொட்டைத் தலை. சிவந்த மேனி, கதர்வேட்டியும் கதர்ஜிப்பாவும் இவருடைய உடை. சிலசமயங்களில் நேருஜியைப் போல் அரை கோட் அணிந்திருப்பார். தொலைவில் பார்த்தால், திரு.வி.க.வின் தோற்றத்தில் இருப்பார். இவரது எளிய வாழ்க்கைக்கு மகாத்மாவின் எளிய வாழ்க்கையைத்தான் உவமையாகக் கூற முடியும்.

அன்பென்ற மலர், இதழ் விரித்துப் பூத்தது போன்ற தெய்வீகச் சிரிப்பு. சாந்தி பொலியும் முகம். அன்பு சுரக்கும் இனிய சொற்கள். அவர்தான் சர்மாஜி.

செப்டம்பர் 17 ஆம் நாள் அவருடைய பிறந்த நாள். ஒழுக்க சீலரான, பண்பாட்டுக் காவலரான, எழுத்துக்காக வாழ்ந்தவரான சர்மாஜி 1978 ஜனவரி 7ஆம் தேதி, கலாúக்ஷத்ராவில் தன் இறுதி மூச்சு நிற்கும்வரை, தமிழ் மொழியின் உயர்வைப் பற்றி மட்டுமே நினைத்தவரை, தமிழ் உள்ள வரை மறக்க முடியாது.

(இன்று அரசியல் அறிஞர் வெ. சாமிநாத சர்மாவின் 112ஆவது பிறந்த நாள்)

(கட்டுரையாளர்: அனைத்திந்திய தமிழ் எழுத்தாளர்கள் சங்கத் தலைவர்).

Posted in Alagirisami, Alakirisami, Amudhasurabhi, Amudhasurabi, Amuthasurabhi, Amuthasurabi, Arcot, Author, Azhagirisami, Azhakirisami, Biosketch, Books, Burma, China, Cinema, Congress, Drama, Faces, Films, Gandhi, Greece, History, Integration, journalism, journalist, Kadhar, Kalashethra, Kalashetra, Lenin, Literature, Ma Po Sivanjaanam, Mag, magazine, MaPoSi, Marx, Media, Movies, MSM, Nation, National, people, Person, Plato, Rajaji, Read, Russia, Saaminadha, Saaminatha, Saaminatha Sharma, Saminatha, Saminatha Sharma, Sharma, Sivajaanam, Sivanjaanam, Tamil, Theater, Theatre, TKS, Tour, Travel, Ve Saaminatha Sharma, Vigraman, Vikraman, VSS, Writer | Leave a Comment »

Arts club for Mentally disabled in Chennai – Rasa

Posted by Snapjudge மேல் ஜூலை 13, 2007

மனவளர்ச்சி குன்றியோரின் கலைக் குழு: “ரஸா’ அமைப்பு உருவாக்குகிறது
மனவளர்ச்சி குன்றியோரின் கலைத்திறனை வெளிப்படுத்தும் வகையிலும், அந்தத் திறமையின் மூலம் அவர்கள் வருவாய் ஈட்ட உதவும் விதத்திலும் “சிறப்பு கலைக் குழு’வை சென்னையைச் சேர்ந்த “ரஸா‘ (ரமணா சூன்ருத்யா ஆலயா) அமைப்பு உருவாக்குகிறது.

இதற்காக 14 முதல் 30 வயதுக்கு உட்பட்ட மனவளர்ச்சி குன்றிய 15 பேரை வரும் 21-ம் தேதி கலைத்திறன் தேர்வுகளை நடத்தி, தேர்ந்தெடுக்க உள்ளதாக அமைப்பின் நிறுவனர் -இயக்குநர் டாக்டர் அம்பிகா காமேஷ்வர் தெரிவித்தார். 1989 அக்டோபரில் தொடங்கப்பட்ட இந்த அமைப்பு, மன வளர்ச்சி குன்றிய குழந்தைகளின் கலைத்திறனை வளர்க்கும் பணியில் முனைப்புடன் ஈடுபட்டுள்ளது. இங்கு பயிலும் மாணவர்களிடம் எத்தகைய கட்டணமும் வசூலிக்கப்படுவது இல்லை.

ரஸா‘ நடத்தும் சிறப்புப் பள்ளியில் மன வளர்ச்சி குன்றிய 100 பேர் தற்போது பயின்று வருகின்றனர். அவர்களுக்கு இசை, நாட்டியம், நாடகம், முக பாவங்களுடன் கதை சொல்லுதல் உள்ளிட்ட கலைகளில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

அவ்வப்போது ஏதாவது நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு, கலை நிகழ்ச்சிகளை நடத்தி தங்களது திறமையை வெளிப்படுத்தி பாராட்டுகளைப் பெற்று வருகின்றனர். அதே நேரத்தில், முழுக்க முழுக்க மன வளர்ச்சி குன்றியோரை மட்டுமே கொண்ட கலைக் குழுவை உருவாக்க வேண்டும் என்பது “ரஸô’வின் நோக்கம்.

கலைக் குழுவில் இடம்பெறத் தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு இலவச பயிற்சி தரப்படும். பயிற்சிக் காலத்தில் அவர்களுக்கு உதவித் தொகை அளிக்கப்படும்.

மேலும் விவரங்களுக்கு “ரஸா, 1/1 அபிராமபுரம் முதல் தெரு, சென்னை -600 018′ என்கிற முகவரியிலோ, 2499 7607, 6528 1970 என்கிற தொலைபேசிகளிலோ தொடர்பு கொள்ளலாம்.

Posted in Arts, Chennai, Dance, Disabled, Drama, Free, Help, Madras, music, Narration, Performance, Rasa, service, Stage, Story, Students, Teach, Theater, Volunteer | Leave a Comment »

Kumutham Theernadhi – Black Friday: Movie Experiences by Viswamithran

Posted by Snapjudge மேல் ஜூன் 7, 2007

குமுதம் தீராநதி
இந்திய சினிமா – விஸ்வாமித்திரன்
கருப்பு வெள்ளிக்கிழமை

ஆசிய சினிமா வரலாற்றில் அரசியல்ரீதியாக நிகழ்ந்த நிஜ சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு வெளிவந்திருக்கும் திரைப்படங்கள் சில நூறுகளுக்குள் அடங்கிவிடக் கூடியதுதான். அவற்றில் குறிப்பிடத்தக்க, நமது மனதிலிருந்து என்றும் அகலாத சமகாலப் படங்களாக, தென்கொரிய இயக்குநரான ஜேங்க் சன் வூவினது ‘பூவிதழ்’ (A Petal), இந்தோனேசிய இயக்குநரான கெரின் நுகரோகோவினது ‘கவிஞன்’ (A Poet) போன்றவற்றைக் குறிப்பிடலாம். இந்திய சினிமாவைப் பொறுத்தவரை அரசியல் சினிமா என்பது பற்றாக்குறை மிக்க பரப்பாகத்தான் இருக்கிறது. இந்தியாவில் பொதுவாக சினிமா போக்கென்பது. தனிமனித சுகதுக்கங்களைப் பற்றிய வரையறைகளுடன் எஞ்சிவிடுமாறே பெரும்பாலும் நிகழ்கின்றன.

அவற்றுள் ‘நல்ல சினிமா’ என்பது அவற்றை மேம்பட்ட உண்மையுடனும் யதார்த்தத்துடனும் வழங்கினவை மாத்திரமே. அவை பல்வேறுபட்ட போக்குகளை திரைப்பரப்புள் கொண்டு வந்திருந்தாலும், அனைத்தும் கதாபாத்திரப் பார்வைச்சார்புடனேயே அணுகப்பட்டவையாகும். ஒருவிதத்தில் அந்நிலை ஏற்கத்தக்கதுதானெனினும், நம்மைக் கடந்துவிட்ட அல்லது நாம் கடந்துகொண்டிருக்கிற அரசியல் வரலாற்றுத் தடங்களைப் பற்றிய சித்திரிப்புக்களை அவை நேரடித்தன்மையுடன் சுட்ட உதவியதில்லை. உதாரணத்திற்கு, தமிழில் வெளியான ‘ஹே ராம்’ படத்தை எடுத்துக் கொண்டால், மையக் கதாபாத்திரமான சாகேத் ராமினது பார்வைச் சார்பு மதிப்பீட்டின்படியே காந்திய நிலைப்பாடுகளை அப்படம் கணக்கிட்டுப் பார்த்தது. தனிமனித பாதிப்பின் நீண்டதூரப் பழிவாங்கலாக மாத்திரமே அப்படம் தனித்துவிடுகிறது. ‘பம்பாய்’, ‘இந்தியன்’ ஆகிய திரைப்படங்களையும் இவ்வகையில் இணைக்கலாம். இதைப்போலவே தமிழில் வந்த பல படங்கள் மையக் கதாபாத்திரங்களின் மனமதிப்பீட்டிற்கு ஏற்பவே தாம் கடக்கும் வரலாற்றுத் தடங்களைப் பதிவு செய்பவையாக இருப்பதுவே நடைமுறை.

எனவே, அரசியல் சினிமாவை நேரடித் தேவையுடன் திரைப்பரப்பிற்கு எடுத்துவரும் திரைப்படங்கள் ஏறக்குறைய இல்லை என்கிற நிலைதான் நம்மைச் சூழ்ந்திருக்கிறது. எனினும், படைப்பொளி மேலோங்கிக் கொண்டிருக்கும் இந்தி சினிமாவில் அக்குறைபாட்டை தீர்க்கவென ‘கருப்பு வெள்ளிக்கிழமை’ (Black Friday்) என்கிற இந்தித் திரைப்படம் 2007 பிப்ரவரி மாதத்தில் வெளியானது. வழக்கமான ஒரு இந்தி நடுநிலைத் திரைப்படமாக இருக்கும் என்று நம்பிச் செல்பவர்கள் ஆச்சரியங்களுடனும் அதிர்வுகளுடனும் அரங்கத்திலிருந்து வெளியேறுவது உறுதி. ‘லகான்’ திரைப்படத்திற்குப் பின்பு நீண்ட இடைவெளியில் உலகத் திரைப் பார்வையாளர் சமூகமே தலைநிமிர்ந்து பார்க்கும்படியான வாய்ப்பை ‘கருப்பு வெள்ளிக்கிழமை’ அளித்திருப்பது உலகளாவிய நல்ல சினிமாவை இந்திய/தமிழ் மட்டத்தில் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நாம் முதலில் பெருமைப்பட்டுக் கொள்ளவேண்டிய விஷயம். ஏனெனில் இந்திய சினிமாவைப் பொறுத்தவரை ஆவணப் புனைவுப் படங்கள் (DocuFiction) ஆவணத்தன்மையையும் பெறாமல் புனைவுத்தன்மையையும் பெறாமல் இரண்டும் கெட்டானாகத் தேங்கிப் போய்விடுபவையாக உள்ளன. பெருந்தலைவர் காமராஜ் அவர்களைப் பற்றிய தமிழ்த் திரைப்படம் இதற்கு ஓர் உதாரணம். இப்படத்தின் முக்கியத்துவம் கருதி படத்தின் தேவையை நாம் ஏற்றுக் கொள்ளும் பட்சத்திலும், சினிமா என்கிற காட்சியூடக மொழியின் வெளிப்பாட்டினை (Expression of Film Language) இப்படம் பெற்றிருக்கவில்லை என்கிற குறைபாட்டை நாம் சமாதானப்படுத்திக் கொள்ளமுடியாது. நல்லதொரு வரலாற்று நாடகத்தன்மையையே அப்படம் கொண்டிருந்தது. இயக்குநர் திரைமொழியைவிட கதாபாத்திரத்தின் வரலாற்றைப் பதிவுபடுத்தும் மட்டற்ற ஆர்வத்தின் வெளிப்படுதலாகவோ அல்லது திரைமொழி குறித்த அவரது ஆர்வமற்ற நிலைப்பாட்டின் வெளிப்படுதலாகவோ இந்தப் பிழைகளை நாம் கணிக்கலாம். மணிரத்னம் போன்றவர்கள் இவ்விரு தளங்களையும் சமனாகக் கையாள முயன்றிருப்பினும் (இருவர், பம்பாய், மற்றும் குரு), கதாபாத்திரங்களின்மீது திணிக்கப்படும் காதல் ஈடுபாடு காரணமாக படத்தின் மூலச்செய்தி கைதவறிப் போய் விடுகிறது. கவர்ச்சிபூர்வமான அணுகல்தான் (Romanticised Approach) இத்தகைய படங்களின் வீர்யத்தை மட்டுப்படுத்திவிடும் ஒரு கூறாக அமைந்துவிடுகிறது. இந்தப் பலகீனங்களின் பின்னணியில்தான், ‘கருப்பு வெள்ளிக்கிழமை’ திரைப்படத்தின் உச்சபட்ச கலை, அரசியல் வெளிப்பாடுகளின் முக்கியத்துவத்தை நாம் மதிப்பீடு செய்ய நேர்கிறது.

1993ஆம் ஆண்டு நடந்தேறிய பம்பாய் குண்டுவெடிப்புச் சம்பவங்களை முன்வைத்து ஹ§சேன் சேய்தி எழுதின புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட படம் இது. 1993, மார்ச் 9ஆம் தேதி பம்பாய் நகரைச் சுற்றி 12 முக்கிய இடங்களில் குண்டுகள் வெடித்தன. எதிர்பாராத இந்தத் திடீர் தாக்குதலில் சிக்கி 300_க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 1600_க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்தனர். அந்தக் கொடிய சம்பவம் நடந்தது ஒரு வெள்ளிக்கிழமையன்று. மனித கூக்குரல்களும் ரத்த வீறிடல்களும் புகையின் கரிய அடர்த்தியும் படிந்த அந்த வெள்ளிக்கிழமைத் துயரின் சம்பவ விவரிப்பையும் அதன் சதித்திட்டங்களையும் பின்பு நேரும் கைதுவிசாரணைகளையும் தொகுத்து வழங்குகிறது ‘கருப்பு வெள்ளிக்கிழமை’ திரைப்படம்.

மார்ச் 9, 1993இல் பம்பாயிலுள்ள நவ் படா காவல்நிலையத்தில், காட்சிகள் தோன்றாத இருட்பின்னணியில் சிறைக்கதவு பலமாக ஓங்கியறையப்படும் சத்தத்தோடு துவங்குகிறது. அந்தச் சத்தமே படத்தின் தீவிரத்தன்மையை நோக்கிய நமது கவனத்தைக் கூர்மைப்படுத்திவிடுகிறது. தொடர்ந்து பூட்ஸ் காலோசை. காட்சி பரவ, சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்ட குல் மொஹமத் எனும் இளைஞனொருவன் காவல்துறையினரால் நீரில் மூழ்கடிக்கப்பட்டு வதைக்குள்ளாகிறான். நடைபெற்ற கலவரமொன்றில் அகப்பட்ட அவன், தனது சகோதரர்களுடன் கைதுசெய்யப்பட்டவன். ஆனால் உண்மையில் அவனது சகோதரர்களுக்கு அந்தக் கலவரத்தில் எந்தப் பங்கெடுப்பும் இல்லை. அவர்களை விடுவித்துவிடுமாறு அழுது புலம்புகிறான். பின்பு (சகோதர்களை விடுவிக்கச்செய்யும் விழைவின்பொருட்டாலும்) பயம் கலந்த அழுகையுனூடாக பம்பாயில் இன்னும் 3 நாட்களில் ஆர்.டி.எக்ஸ் குண்டுகள் வெடிக்கப்போகும் சதித்திட்டம் பற்றிக் காவல்துறையினரிடம் கூறுகிறான். ஸ்டாக் எக்சேஞ்ச், மந்த்ராலயா மற்றும் சேனா பவன் ஆகிய இடங்கள் வெடிவைத்துத் தகர்க்க குறிக்கப்பட்டிருப்பதாகக் கூறுகிறான். ஆனால் காவல்துறையினர் அதை நம்புவதாக இல்லை. ‘எளிதாக தரைமட்டமாக்க அவ்விடங்களெல்லாம் என்ன இனிப்புத் துண்டங்களா?’ என்று ஏளனத்துடன் பதிலளிக்கின்றனர். ஆனால் உண்மையில் வெடிப்பு நிகழப்போகிறது என்பதை அடுத்த காட்சி நமக்கு உறுதிப்படுத்தத் துவங்குகிறது.

சதி ஏற்பாட்டாளரான டைகர் மேமனது குழுவுரை ‘மார்ச் 12ஆம் தேதி திட்டம் நிகழ்த்தப்படவேண்டும்’ என்று நிகழ்கிறது. அடுத்து ஆங்காங்கு குண்டுகள் பொருத்தப்படும் செயல் விரிவாக காட்டப்படுகிறது. பம்பாயின் கடற்கரையோர புறாக்கள் உற்சாகமாகப் பறந்துகொண்டிருக்கின்ற வெள்ளிக்கிழமை. மதியம் 1.25 மணித்துளியில் ஸ்டாக் எக்சேஞ்ச் கட்டடம் காட்டப்படுகிறது. மக்கள் அபாயமறியாது நெரிசலாக தத்தமது பணிகளைத் தாங்கி நடமாடிக் கொண்டிருக்கிறார்கள். கட்டடத்தில் மணியோசை எழும்ப, திரைப்படத்தின் நகர்வு மெதுத்தன்மையை (Slow Motion) அடைகிறது. காலம் உறையத் துவங்குவதான மெதுத்தன்மை. மனித இரைச்சல் கரைந்து கட்டடத்தின் அடிப்பகுதிக்குள் வைக்கப்பட்டிருக்கும் குண்டின் ஒலி மேலெழுகிறது. ஏறக்குறைய இதயத்தின் ஓசை நிதானத்திலிருந்து மெதுவாக பதற்றமடைந்து செல்வதைப் பிரதிபடுத்தும் சத்தம் அது. ஓசை வேகப்பட, கட்டடத்தின் அடிமட்டம் வெடித்துச் சிதறுகிறது. செவியின் தாங்கும்ஓசை அறுபட்டு அருகிருப்பவர்கள் மயக்கத்திலாழும்போது எழும்பும் பீதியடைந்த மௌனஇரைச்சல் திரைசூழ்கிறது. உயிரோடிருப்பவர்கள் நடந்ததை இன்னும் உணராவண்ணம் திக்பிரமை பிடித்து சுற்றிப்பார்த்துக் கொள்கிறார்கள். ரத்தம் மழைநீரெனச் சூழ, உடல்கள் சிதறி அசைவற்றுக் கிடக்கின்றன. குண்டு வெடிப்புச் சம்பவத்தில் நாம் நின்றிருந்து தப்பித்துவிட்டால் நமது நினைவு சிதறின பிரமையில் எவ்விதம் அச்சூழலைக் காண்போமோ, அச்சூழல் அப்படியே திரைப்பரப்பில் ஞாபகப்படுத்தப்படுகிறது. அக்காட்சியின் தீவிரப் படமாக்கம் திரைப்படம்தான் பார்த்துக் கொண்டிருக்கிறோம் என்கிற உண்மையை அநேகமாக அழித்துவிட்டு குண்டுவெடிப்பு பிறப்பித்துவிடும் கோரத்தை நாம் கண்ணெதிரே கண்டுணர்வதுபோன்ற பிரதிபலிப்பைத் தந்துவிடுகிறது. ஐரோப்பிய சினிமாவில் மாத்திரமே யதார்த்தத்தை அப்படியே பிரதிபலிக்கும் இத்தகைய தொழில் நுட்பக் கூறுகளை நாம் காணமுடியும். இப்படத்திலும் இத்தகைய கூறுகள் பயன்படுத்தப்பட்டிருப்பது இந்திய சினிமாவிற்குப் புதியதுதான்.

2.45 மணித்துளிக்கு வோர்லி பாஸ்போர்ட் அலுவலகத்தினருகே நிறுத்தத்தில் வந்து நிற்கும் பேருந்து மீண்டும் புறப்படும்போது குண்டுவெடித்துத் தகர்க்கப்படுகிறது. தொடர்ந்து நிஜமாக படம்பிடிக்கப்பட்ட வீடியோக் காட்சிகள் தொலைக்காட்சி செய்திவடிவில் காட்டப்படுகின்றன. குறுகிய நிமிட இடைவெளிகளில் செஞ்சுரி பஜாரில் உள்ள பேருந்துநிறுத்துமிடம், ஏர் இந்தியா கட்டடம், தாதரிலுள்ள சிவசேனா பவனிற்கு அருகிலிருக்கும் லக்கி பெட்ரோல் பம்ப், ஜூகு சென்டர் ஹோட்டல் மூன்றாம் மாடியிலுள்ள அறை, சவேரி பஜாரின் வீதி, மக்கிமேர் காலனி, பிளாசா திரையரங்கில் வாகனம் நிறுத்துமிடம், பந்த்ராவிலுள்ள ஸீ ராக் ஹோட்டலின் 18வது மாடி, சாந்தா குருஸ் விமான தளத்திற்கருகிலுள்ள மற்றொரு சென்டர் ஹோட்டல் என துல்லியமான திட்டத்தின் அடிப்படையில் தகர்ப்புக்கள் நடத்தப்படுகின்றன. பம்பாய் நகரமே ஒட்டுமொத்தமாக ஸ்தம்பித்துப் போகும்படி புகை குடித்த கருப்பு நாளான அவ்வெள்ளிக்கிழமை வலிகளடர்ந்த பொழுதாக உருவடைகிறது.

5 பகுதிகளாகப் பிரிக்கப்பட்ட படத்தின் முதல் பகுதி முதல் கைதுப் படலம். மகிம் எனும் பகுதியில், அல் ஹ§சைனி கட்டட விலாசத்திலுள்ள ரூபினா சுலைமான் மேமன் வீட்டிற்கு காவல்துறையினரோடு இந்த வழக்கை விசாரிக்கும் அதிகாரியான ராகேஷ் மரியா செல்கிறார். அங்கு யாருமிருப்பதில்லை. பக்கத்து வீட்டாரிடம் விசாரிக்கையில் டைகர் பாயின் (டைகர் மேமன்) மூத்த சகோதரன்தான் சுலைமான் எனவும் அவரது துணைவியார்தான் ரூபினா என்பதும் தெரியவருகிறது. ஆனால் குண்டுவெடிப்பிற்கு முதல்நாள் டைகர் பாய் தனது உறவினருடன் துபாய்க்குத் தப்பிச்சென்றுவிட, இந்தக் குண்டுவெடிப்பில் டைகர் பாய் தொடர்புபட்டிருப்பது தெளிவுபடுகிறது. மார்ச் 14ஆம் தேதி டைகர் பாயின் அந்தரங்கக் காரியதரிசியான அஸ்கர் முகாதெம் கைது செய்யப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்படுகிறான். இந்தக் காட்சி மிகவும் நுட்பமான வகையில் எடுக்கப்பட்டிருப்பது இக்காட்சியின் தீவிரத்தை தேர்ச்சிப்படுத்துகிறது. ஒளிப்பதிவு அறையில் மேல் மூலையிலிருந்து கவனிப்பதாக அடர் சிவப்பு நிறத்தின் ஒளிப்பின்னணியில் நிகழும் இக்காட்சியில், ஒரு விசாரணைக் கைதியின் பதட்டத்தை மிகத் தேர்ச்சியாக அஸ்கர் கதாபாத்திரம் ஏற்ற நடிகர் வெளிப்படுத்தியிருக்கிறார்.

குறிப்பாக காவல் அதிகாரி குடிக்குமாறு கூறி தேநீர் தரும்போது விபரீதமான அபாயம் தன்னைச் சூழ்ந்திருப்பதை உணர்ந்து அஸ்கர் அந்தத் தேநீரைக் குடிக்கத் தயங்குவது நுட்பமான வார்ப்பில் படமாக்கப்பட்டிருக்கிறது. அப்பாவித்தனத்துடன் தோன்றும் அந்தப் பாத்திரம் இந்தச் சதியின் விபரீதத்தை முழுக்க உணராமலேயே தன்னை ஈடுபடுத்திக் கொண்டதை அவனது வாக்குமுலம் சொல்கிறது. தொடர்ச்சியாக குண்டுவெடிப்பிற்காக ஏவப்படும் இளைஞர்கள் தமக்கு கூறப்பட்ட இடங்களில் குண்டுகளை பொருத்துவது பற்றிய விவரணை மிகவும் துரிதமான காட்சிகளால் சித்திரிக்கப்படுகின்றன. இக்காட்சியில் கோர்க்கப்பட்டிருக்கும் இசை, அந்த அபாயச் செயலின் பதற்றவேகத்தை பிரதிபலிக்கும்விதமாக கையாளப்பட்டிருக்கிறது. உண்மையில் யோசித்தால் படத்தின் ஒவ்வொரு காட்சியின், கதாபாத்திரங்களின் தன்னியல்பான வெளிப்பாடுகள் மட்டுமின்றி, இதர வேலைப்பாடுகளான ஒளிப்பதிவு, இசை, படத்தொகுப்பு, சத்தப் பின்னணி, நகரச் சூழல் என யாவுமே இணையான தரமேன்மையுடன் அணுகப்பட்டிருப்பது இந்திய சினிமாவில் வியப்பிற்குரிய ஒன்றாகவே தோன்றுகிறது. ‘கருப்பு வெள்ளிக்கிழமை’ போன்ற திரைப்படங்களை எளிதாக இயக்கிவிட முடியாது. இப்படத்தின் ஒவ்வொரு கணநேரக் காட்சிகளையும் கூர்ந்து கவனிக்கும்போது மிகத் தேர்ச்சிபெற்ற பல்துறைக்கலைஞர்கள் பங்கேற்புச் செய்திருப்பது எளிதாகத் தெரியவரும்.

இரண்டாம் பகுதி மார்ச் ஏப்ரல் 1993இல் நடைபெறும் கைது மற்றும் கைதிவிசாரணைப் படலம். காவல்துறைக்குச் செய்தி தருபவன் (Informer) மூலம் பர்வேஸ், சோயிப் கன்சாரி, முஸ்தாக், இம்தியாஸ் கவேத் ஆகியோரின் கைது நடவடிக்கைகள் தொடர்கின்றன. பல அப்பாவி இளைஞர்களும் கைதுசெய்யப்பட்டு துன்புறுத்தலுக்கு உள்ளாகின்றனர். காவல்துறையின் அணுகல்கள் ‘வன்முறை’ என்பதையும் தாண்டி அன்றாட நிகழ்வுகளின் இயல்புத்தொனியுடன் காட்சிக்குள் வந்துசெல்கின்றன. இம்தியாஸ் கவேத்தை விரட்டிப் பிடிக்கும் காட்சியில், விளிம்புநிலை மக்கள் வாழும் பகுதிகளில் படம்பிடிக்கப்பட்டுள்ளது. மிகவும் சுவாரசியமாக அமைக்கப்பட்ட காட்சி இது. கவேத்தை பிடிக்கும் வினாடிகளில் திரும்பத் திரும்ப அவன், தப்பித்துவிடுகிறான். காட்சியின் வேகமும் பின்புறத்தில் ஒலிக்கும் இசையின் தாளகதியும் இந்த நீண்ட காட்சியை உயிரோட்டப்படுத்துகிறது. கடினமுயற்சிக்குப் பின் அவன் அகப்பட்டதும், விசாரணையறையில் வதைபடும் காட்சியும், சுத்தியலால் கைவிரல்கள் நசுக்கப்படும் அவன், குற்றக் கோப்பில் கையெழுத்துப் போட வலியுறுத்தப்படும் நிலையில், நசுங்கிய கையால் பேனாவைப் பிடிக்கவியலாமல் அவன் கதறும் காட்சியும், அவன் குற்றவாளி எனும் நிலையிலும், நம்மைப் பதறச் செய்துவிடுகிறது. ஏனெனில், இந்தத் திரைப்படம் சாமான்ய மனிதர்கள் சக சூழ்ச்சிகளுக்குப் பலியாகி தமது வாழ்வை அழித்துக் கொள்வதைப் பற்றியதாக இருக்கிறது. அப்பாவி மக்கள் இறந்துவிடுவார்கள் என்கிற பதட்டம் ஒருசிறிதுமின்றிதான் சதி வேலைகளை ஏதோ ஆக்கபூர்வமான வேலை செய்வதுபோல ஈடுபாட்டுடன் இவர்கள் செய்கிறார்கள். அதனுடைய பிரதிபலனை பின்பு வருத்தத்துடன் அனுபவிக்கிறார்கள். எனினும், அவர்களுக்குள்ளும் தலைமறைவாக இருக்கும் எளிய உள்ளங்களைப் பற்றிய நுண்ணிய சித்திரிப்புக்களையும் இந்தப்படம் வழங்கத் தவறவில்லை.

மூன்றாவது பகுதி ஓடும் படலம். இப்பகுதி, டெல்லியிலிருக்கும் மசூதியன்றிலிருந்து துவங்குகிறது. சதியின் வெற்றிக்குப் பிறகு, பாத்ஷா கானும் பஷீர் கானும் டைகர் பாயிடமிருக்கும் தமது பாஸ்போர்ட்டுகளைப் பெற்று இந்தியாவிலிருந்து தப்பிவிடும் நோக்கத்தில் டெல்லியில் நடமாடிக் கொண்டிருக்கிறார்கள். டைகர் பாயைத் தொடர்பு கொள்ளும்போது ‘ஏன் டெல்லியில் சுற்றிக் கொண்டிருக்கிறீர்கள்? அகப்படவா?’ என்று வினா எழுப்பி, உடனே எங்காவது சென்று தலைமறைவாக இருக்கும்படி கூற, உடனே இருவரும் பாத்ஷா கானின் சொந்த ஊரான ராம்பூருக்கு (உத்தரப்பிரதேசம்) செல்கிறார்கள். அங்கிருந்து ஜெய்ப்பூர் செல்லும்படியும், அங்கிருந்து துபாய்க்குச் செல்ல தான் ஏற்பாடு செய்வதாகவும் டைகர் பாய் மீண்டும் தொலைபேசித் தொடர்பில் உறுதியளிக்க, இருவரும் நம்பிக்கையுடன் செல்கிறார்கள். அங்கு சக சதியாளர்களோடு உரையாடும்போது அனைவரது பாஸ்போர்ட்டும் எரிக்கப்பட்டுவிட்டதை அறிந்து பாத்ஷா கொதிப்படைகிறான். தான் ஏமாற்றப்பட்டு விட்டதாக உணர்கிறான். எனினும், டைகர் பாய் அனைவரையும் காக்கும்பொருட்டுத்தான் ஜெய்ப்பூருக்கு வரச் சொல்லியிருப்பதாகவும் புதிய பாஸ்போர்ட்டுகள் பாகிஸ்தானில் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும் நிலவும் செய்தியன்றால் சமாதானமடைகிறான். எனினும் உள்மனதுள் தான் கைவிடப்பட்டதாக பாத்ஷா எண்ணுகிறான். மீண்டும் ராம்பூருக்கு வர, மறுநாள் காலையில் பஷீர், பாத்ஷாவிடம் சொல்லாமல் தேவையான பணத்தை எடுத்துக் கொண்டு அங்கிருந்து அகன்றுவிட, தனிமையின் வெம்மையோடும் பயத்தோடும் பாத்ஷா பழைய தில்லி, கல்கத்தா என அலைக்கழிக்கப்படுகிறான். டைகர் பாயிடம் தொடர்பு கொள்வதும் கடினமாகி கையிலிருந்த பணமெல்லாம் தீர்ந்துவிட்ட நிலையில், மீண்டும் ராம்பூருக்குத் திரும்புகிறான்.

கரிய இருளாக இருப்பின் சுமை அடரத்துவங்கும் ஒரு நாளில் (மே 10, 1993) காவல்துறை அவனது இல்லம் வந்து கைதுசெய்துகிறது. பின்பு விசாரணையறைக்கு அழைத்துவரப்படுகிறான் பாத்ஷா. ராகேஷிற்கும் அவனுக்கும் இடையே அரசியல்ரீதியான விவாதம் நடைபெறுகிறது. ‘எத்தனைபேர் உயிரை இழந்தார்கள் என்பதையும் இந்த நகரம் எத்தனை துன்பப்பட்டது என்பதையும் அறிவாயா? உனக்கென்ன, நீ தப்பித்துச் செல்ல இந்த உலகத்தில் எத்தனையோ இடங்கள் இருக்கிறது’ எனும் ராகேஷிடம், ‘தான் குற்றமேதும் செய்யவில்லை’ என்று பதில்கூறுகிறான் பாத்ஷா. பின்பு மெதுவாக தனது வாதத்தை முன்வைக்கத் தொடங்குகிறான். ‘பாபர் மசூதி இடிக்கப்பட்டதும் எமது மக்கள் மீதான வன்முறையும் இத்தகைய செயலைச் செய்ய எங்களைத் தூண்டியது’ என்று கூறுகிறான். வசனங்கள் படத்தில் நேரடித் தன்மையுடன் பிரயோகப்பட்டிருப்பதும் ஆவணப்படத்தில் மட்டுமே காணமுடிகிற அம்சங்களை தயக்கமின்றி புகுத்தியிருப்பதும் வியப்பாகவே இருக்கிறது. இந்த மூன்றாவது பகுதியே கதைகூறலின் அடிப்படையிலும் காட்சிகளை கட்டமைத்ததன் அடிப்படையிலும் படத்தின் மிகச் சிறந்த பகுதியாக பரிணமிக்கிறது. பாத்ஷாவாக நடித்த ஆதித்யா ஸ்ரீவத்சவா நடிப்பின் உச்சம் தொடுகிறார்.

நான்காம் பகுதி, யாகூப் கான் மற்றும் ஆர்.டி.எக்ஸ் படலம். ஆர்.டி.எக்ஸ் வெடிமருந்தைக் கடத்துபவனும் சதிவேலையில் ஈடுபட்டவனுமான யாகூப்கானினது இருப்பிடத்தைக் கண்டுபிடிக்கும்பொருட்டு அவனது சகோதரரும் எம்.கே. பில்டர்ஸ் அதிபருமான மஜித்கானும் அவரது துணைவி நபிசாவும் கைதுசெய்யப்பட்டு விசாரிக்கப்படுகிறார்கள். இதனை அறியும் யாகூப் தலைமறைவான இடத்திலிருந்து காவல்துறைக்கு தொலைபேசி வழி தனக்கும் குண்டுவெடிப்புக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லையெனவும், மஜிதையும் நபிசாவையும் விட்டுவிடும்படியும் போதையேறின நிலையில் அழுதுபுலம்புகிறான். தொடர்ந்து டைகர் பாயிடம் தொலைபேசி வழி பேசுகிறான். எதிர்ப்புறமிருந்து ‘இந்தப் புனிதப்போரில் பலியாவது தவிர்க்கவியலாதது’ எனப் பதில்வருகிறது. தாவுத் பாயிடம் (தாவுத் இப்ராகிம்) பேசிப்பாருங்கள் எனக் கோரிக்கை விடுக்கிறான் யாகூப். ஆனால் எதுவும் நடக்கப்போவதில்லை என்றறிந்த நிலையில், காவல்துறையினரிடம், ‘எனது சகோதரரை விடுவித்தால் ஒரு தகவலைக் கூறுவேன்’ என்று கோரிக்கை வைக்கிறான். அதிகாரி விடுவிக்க முயலுவதாகக் கூற, அம்ருத் நகரிலுள்ள காய்ந்த மீன்கள் நிரப்பப்பட்ட உணவுக்கிடங்கில் டைகர் பாய் பதுக்கிவைத்திருக்கும் ஆர்.டி. எக்ஸ் வெடிமருந்து இருப்பதாகத் தகவல் தர, காவல்துறை சென்று மருந்தை பறிமுதல் செய்கிறது. தொடர்ந்து, அருகிலிருக்கும் நக்லா பந்தர் சிற்றோடையிலும் (மார்ச் 30, 1993) பல ஆர்.டி.எக்ஸ் பதுக்கப்பட்ட சாக்குமூட்டைகள் கண்டெடுக்கப்படுகின்றன.

யாகூப் மீண்டும் தொலைபேசி வழி காவல்துறையினருக்கு பிலு கான் அடிக்கடி வரும் உணவுவிடுதி பற்றின தகவலைத் தருகிறான். அவனது பழிவாங்கல் காட்டிக்கொடுப்பதாக உருமாறுகிறது. விசாரணையின்பேரில் அந்த உணவுவிடுதியின் அதிபரான ராஜ்குமார் குரானாவை கைதுசெய்கிறார்கள். அவருக்கு ஏதும் தெரியாது என்கிற நிலையிலும் சிறையிலடைக்கப்படுகிறார். அவரது கண்முன்னே பெண்கைதிகளின் மீதான மானபங்கம் நிகழ்த்தப்பட, மனம் ரணமுற்று அவதிப்படுகிறார். குறுகிய நாட்களில் விடுவிக்கப்பட்ட பின்பும் தனது குடும்பத்திற்கு அவமானம் நேர்ந்து விடுமோ என்கிற அச்சத்தினாலும் துக்கத்தாலும் மனைவி, பிள்ளைகளை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தானும் தற்கொலை செய்துகொள்கிறார். படத்தின் ஒரு கிளைச் சிறுகதை போல வரும் இப்பகுதியில், ராஜ்குமார் குரானாவாக வரும் நடிகர் தனது சிறப்பான நடிப்பாற்றலை வெளிப்படுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது. சில நிமிட நேரங்களிலேயே நடந்துமுடிந்துவிடும் அவரது கதாபாத்திரத்தின் திரைவாழ்வு நமது எண்ணத்துள் நீங்கவியலாமல் ஒட்டிக்கொள்கிறது. எல்லா சூழ்ச்சிகளுக்கும் பின்பாக அப்பாவிகளும் பலியாவதற்கு உதாரணமாக இந்தக் கதாபாத்திரம் வந்துசெல்கிறது.

ஐந்தாம் பகுதி சதியாலோசனைப் படலம். தான் ஏமாற்றப்பட்டுவிட்டதை நன்குணர்ந்த பாத்ஷாகான் அப்ரூவராக மாறி வாக்குமூலம் அளிக்கும் பகுதி இது. இதன் தொடர்ச்சியில், தாவுத் பான்சே என்கிற கடத்தல் வியாபாரி கைதுசெய்யப்படுகிறான். டைகர் பாயிடம் ஒருவருட காலமாகப் பணிபுரிபவன். தாவுத் பாயுடனான வியாபார நம்பகத்தை உறுதிப்படுத்திக் கொள்ள விரும்பும் பான்சேயை துபாயிலுள்ள தாவுத் இப்ராகிம் இருப்பிடத்திற்கு டைகர் அழைத்துச் செல்கிறான். நிஜமாகவே உருக்கொண்டு வந்தாற்போல அமைந்திருக்கிறது தாவுத் இப்ராகிம் வந்துசெல்லும் காட்சி. தாவுத்தாக வரும் நடிகர் தோற்றத்தில் அச்சுப்பிசகாமல் தாவுத்தை மறுபிரதி செய்யும் வண்ணமாக இருக்கிறார். படத்தின் நீளத்தால் ஏற்படும் பார்வையாளரது அயர்வை தாவுத் இப்ராகிமின் வருகை அகற்றிவிடுகிறது.

பின்பு, சதியில் ஈடுபடுமுன் அனைவரும் பாகிஸ்தானிலுள்ள பெயரறியா இடமொன்றிற்குப் பயிற்சிக்காக அனுப்பப்படுகிறார்கள். தீவிரமான ஆயுதப்பயிற்சி அளிக்கப்படுகிறது. பயிற்சியாளன் ஆர். டி. எக்ஸ் வெடிகுண்டை அறிமுகப்படுத்துகிறான். அவை இரண்டாம் உலகப்போருக்குப்பின்பு தயாரிக்கப்பட்ட குண்டுகளெனக் கூறி, தூரமாக எறிந்து வெடித்துக் காட்டுகிறான். காண்பவர்கள் கலங்கிப்போகும் அளவு அதன் சத்தமும் சிதிலமும் புழுதியெழுப்புகிறது. உணர்வுபூர்வமான மத உரைகளின்மூலமும் பழிவாங்கும் உன்மத்தம் எழுப்பப்படுகிறது. இத்தகைய இனத்துவேஷப் பழிதீர்த்தலுக்கான பின்னணி படத்தில் நிஜமான ஆவணக் காட்சியாக இப்பொழுது காண்பிக்கப்படுகிறது பாபர் மசூதி இடிக்கப்படும் சம்பவத்தின் நேரடிக் காட்சி. தொடர்ந்து பம்பாயில் ஏற்பட்ட இனக் கலவரம். இரு அணியாளர்களும் கொலைசெய்வதும் பாலியல்பலாத்காரம் மேற்கொள்வதும் எனத் தொடரும் வன்செயல்கள். 600 பேர் கொல்லப்படுகின்றனர். ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலத்த காயங்களோடும் லட்சத்திற்கும் மேற்பட்டோர் வீடிழந்தும் வேதனையி லாழ்த்தப்படுகின்றனர். உயிருக்கும் உடைமைக்கும் பாதுகாப்பற்ற நிலையில், சிறுபான்மையினரான முஸ்லிம் மக்கள் துயரமும் அச்சமும் கசிய அகதிகளாகின்றனர்.

ஒரு சிறுமி, ‘தனது தந்தையும் தாயும் தம்பியும் கொல்லப்பட்டுவிட்டதாகவும் தனது தாத்தாவும் பாட்டியும் காணாமல் போய்விட்டார்கள்’ எனவும் அனைத்தையும் இழந்துவிட்ட கையறுநிலையின் தீவிர மறியாமல் தொலைக்காட்சி செய்தித் தொகுப்பொன்றில் சொல்கிறாள். ஒரு முஸ்லிம் பெண்மணி, ‘நீங்களனைவரும் பம்பாயைவிட்டு வெளியேறிவிடுங்கள், உங்களுக்கு இங்கிருக்க இடமில்லை’ என எதிரணியினர் கூறுவதாக கவலையுறுகிறார். பொருளாதார நிலைகள் தீவைத்துக் கொளுத்தப்படுகின்றன. டைகர் பாயின் அலுவலகமும் இரவோடு இரவாக எதிரணியினரால் கொளுத்தப்படுகிறது. மறுநாள் காலையில் அலுவலகம் வந்து கொதித்துப்போகும் டைகர் பாய் பழிவாங்கும் நோக்கத்தில் சூளுரைத்துவிட்டு துபாய்க்குப் பறந்துசெல்ல, அங்கு சதியாலோசனை நடைபெறுகிறது. எங்கெங்கு வெடிப்பு நிகழ்த்துவதென இடங்கள் குறிக்கப்படுகின்றன. அடுத்த காட்சியிலேயே படத்தின் முதல்காட்சியில் நாம் கண்ட தொடர் வெடிப்புக்கள் மீண்டும் காட்டப்படுகின்றன. மனித உடல்கள் சிதறி ரத்தம் பீறிட்டு வழிய, வெள்ளைத் துணி போர்த்தப்பட்ட பலியுற்ற அப்பாவி மனித உடல்களை காண்பித்தபடியே திரைப்பரப்பில் இருள் நிறைகிறது.

இந்தத் திரைப்படம் ஒரு சாராரின் வன்செயல்களை மட்டுமே சித்திரித்திருந்தால் நிலவும் சூழலில் ஆபத்தைப் பிரயோகிக்கும் படமாகக் கருதப்பட்டிருக்கும். ஆனால் ஒவ்வொரு அரசியல் வன்முறைக்கும் மற்றொரு அரசியல் வன்முறை வேராக பின்னியங்குகிறது என்கிற அறிந்துணர்வை படம் நமது பொதுப்பார்வைக்கு ஏற்படுத்தித் தருகிறது. இருவேறு தன்னுணர்ச்சி மற்றும் துவேஷக் கணக்குகளால் நஷ்டப்படுவது சாமான்ய மக்களின் விலைமதிக்க முடியாத உயிர்களே என்பது படத்தின் மூலச் செய்தியாகிறது. இந்த வன்முறைகளை நாம் செய்வதறியாது பார்த்துக் கடந்ததுபோல திரைப்படமும் பார்த்தபடி கடந்துசெல்கிறது. இத்தகைய சாய்வற்ற அரசியல் சமன்பார்வைகளை இந்தியாவின் சிறந்த ஆவணப்பட இயக்குநரான ஆனந்த பட்வர்த்தனது ஆவணப்படங்களில் மட்டும்தான் நாம் காணவியலும். அவற்றிற்கிணையான பார்வைகளை (புனைவாக்கம் என்னும் வரையறையையும் மீறி) இந்தப்படமும் வழங்குகிறது என்பது சிறப்பாகக் குறிப்பிட்டுச் சொல்லவேண்டிய ஓர் அம்சம்.

2006 மத்தியிலேயே வெளிவந்திருக்க வேண்டிய இந்தப் படம் சமகால வழக்கிலிருக்கும் மத/அரசியல் பிரச்சினையை சித்திரிப்பதால் உடனடியாக வெளியாவது ஒத்திவைக்கப்பட்டது. இப்போது வழக்கு முடிவடைந்திருக்கும் நிலையில் படம் வெளியாகியிருக்கிறது. படத்தின் இயக்குநர் அனுராக் காஷ்யப், இந்திய சினிமாவின் வலுவான குரலை உலக அரங்கில் ஒலிக்கச் செய்திருக்கும் இளைஞர். ராம்கோபால் வர்மாவினது ‘சத்யா’ மற்றும் படங்களில் வசனகர்த்தாவாகப் பணியாற்றியவர் அனுராக். மணிரத்னத்தின் ‘யுவா’ படத்திற்கு வசனமெழுதியவர். ‘குரு’ படத்திலும் தீபா மேத்தாவின் ‘வாட்டர்’ படத்திலும் அவரது பங்களிப்பு உண்டு. அவரது உரைநடை வளம் ‘கருப்பு வெள்ளிக்கிழமை’ படத்திற்கு மிகவும் உந்துதலான வீர்யத்தை அளித்திருக்கிறது. உள்ளீடான கதையம்சமும் சாய்வற்ற அரசியல் பார்வையும் திரைமொழி குறித்த அறிவாற்றலும் ஒருசேர வாய்ப்பது அரிது. அனுராக்கிற்கு அந்த ஒன்றிணைவு வாய்த்திருக்கிறது. நல்ல திரைப்படங்களை தொடர்ந்து அளிப்பார் என நம்பிக்கை கொள்வோம்.

‘ஒளிப்பதிவு செய்திருப்பதை உணர்த்தாத படங்களே சிறந்த ஒளிப்பதிவை கொண்டிருப்பவை’ என்கிற பார்வை ஒன்றுண்டு. ‘கருப்பு வெள்ளிக்கிழமை’ படத்தில் ஒளிப்பதிவின் தேவையற்ற குறுக்கீட்டு முன்னிலையை நாம் எங்குமே காணமுடியாது. கதையம்சத்தின், கதாபாத்திர உணர்வோட்டத்தின் நிழலெனவே ஒளிப்பதிவு தொடர்கிறது. ராம்கோபால் வர்மாவின் படங்களில் இடம்பெறும் சதவீதங்களையும் தாண்டி, இதுவரை இந்தித் திரைப்படங்களில் நேர் யதார்த்தத்துடன் காணாமலிருந்த மும்பை மைய புறநகர வீதிகளை காட்சிக்குள் கொண்டுவந்திருக்கிறது இப்படத்தின் ஒளிப்பதிவியக்கம். ஒளிப்பதிவாளர் நடராஜ சுப்பிரமணியன். இவர் தமிழரும்கூட. அரிதாகவே கைவரப்பெறும் ஒளிப்பதிவின் நேரிய தன்மையை திரைப்பரப்பில் உலவவிட்ட அவரது உயர்ந்தபட்ச திரைப்பங்கேற்பிற்காக (தமிழர் என்கிற நிலையிலும்) தமிழ்ச்சமூகம் பெருமைப்பட வேண்டும். இன்னும் பல காட்சிகள் கண்களுக்குள் மறக்கவொண்ணாமல் கிளையாடுகின்றன. மும்பை குண்டுவெடிப்புச் சம்பவம் காட்டப்படும்போது பதற்றமும் வேதனையும் அழிக்கக்கூடிய நீலநிற ஒளிக்கலப்பு குண்டுவெடிப்பிற்குக் காரணமானவர்களை கைதுசெய்யும் தேடல்படலத்தில் குழப்பமும் சூன்யமும் காட்டும் மெல்லிய மஞ்சள் நிறம் கைதிகள் விசாரிக்கப்படும் காட்சியில் வன்முகம் காட்டும் சிகப்பு நிறம் என காட்சிகளின் மனவோட்டத்திற்கேற்ப பல்வேறு வண்ணங்களை பிரயோகித்திருக்கிறார்.

டைகர் பாயாக வரும் பவன் மல்ஹோத்ராவையும், காவல்துறையதிகாரியாக வரும் கே. கே மேனனையும் உள்ளிட்டு படத்தில் பங்கேற்ற அனைத்து நடிகர்களுமே தமது படைப்பாற்றலை பொறுப்புணர்வுடன் வெளிப்படுத்தியிருக்கிறார்கள். படத்தின் மற்றொரு பலமான படத்தொகுப்பைச் செய்திருப்பவர் ஆர்த்தி பஜாஜ். காட்சிகளின் தொகுப்பை சிற்ப வேலைப்பாட்டு கவனத்துடன் அணுகியிருக்கிறார். படத்தின் உணர்ச்சிகளுள் நம்மை மூழ்கடித்துவிடும்படியான இசையை இந்தியன் ஓசியன் தந்திருக்கிறது. இனிவரும் எதிர்கால அரசியல் திரைப்படங்களுக்குச் சிறந்த முன்னோடியாக ‘கருப்பு வெள்ளிக்கிழமை’ என்றுமே தன்னிருப்பு பெற்றிருக்கும் என்பதுவும் இறுதியாகச் சொல்லவேண்டியது.

Posted in 9-11, 9/11, Arms, Arts, Awards, Babri Masjid, BJP, Black Friday, Blasts, Bollywood, Bombay, Bombs, Cinema, Classic, dead, Dec6, DocuFiction, Documentary, Drama, Extremism, Extremists, Film, guns, Hindi, Hindu, Hindutva, Incident, Islam, mani Rathnam, Manirathnam, Masala, Masjid, massacre, Mosque, Movie, Mumbai, Murder, Muslim, National, Panaroma, Politics, RDX, revenge, Reviews, RSS, Shiv Sena, Terrorism, terrorist, Violence, Vishvamithiran, Vishvmithran, Vishwamithiran, Vishwamithran, Visvamithiran, Visvamithran, Viswamithiran, Viswamithran, War, WTC | Leave a Comment »

Chennai Sangamam: Tamil Maiyyam Festival – Celebration of Thamizh Heritage, Culture

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 28, 2007

சென்னை சங்கமம் – ‘நம்ம தெருவிழா’
கேடிஸ்ரீ

‘சென்னை சங்கமம்’ என்ற பெயரில் ஒருவாரகால கலை நிகழ்ச்சிகள் சென்னையில் கடந்த பிப்ரவரி 20ம் தேதி முதல் தொடர்ந்து நடைப்பெற்று வந்தது. தமிழ் மையம் மற்றும் தமிழக அரசின் சுற்றுலா – பண்பாட்டுத்துறை இணைந்து இவ்விழாவை சென்னையில் பல்வேறு இடங்களில் நடத்தியது.

மக்கள் மறந்த நம் பாரம்பரிய கலைகளை – மக்களிடம் இருந்து பிரிந்து போன கலைகளை மீண்டும் மக்களிடமே கொண்டு சேர்க்கின்ற ஒர் அரிய முயற்சியே ‘சென்னை சங்கமம்’.

முன்னதாக ‘சென்னை சங்கமம்’ நிகழ்ச்சியின் தொடக்கவிழா சென்னை ஐஐடி திறந்தவெளி அரங்கில் கடந்த 20ம் தேதி இனிதாக தொடங்கியது. தமிழக முதல்வர் மு. கருணாநிதி அவர்கள் இவ்விழாவை துவக்கி வைத்தார். அன்றைய விழாவில் கிராமிய கலை, பாடல்கள், நடனங்கள் போன்ற கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.

முதலாக சென்னை சங்கமத்தின் ஒருங்கிணைப்பாளரும், கவிஞருமான கனிமொழி விழாவிற்கு வந்தவர்களை வரவேற்று பேசினார்.

”எங்களுடைய இந்த சங்கே முழங்கு சென்னை சங்கமத்தின் துவக்கம்.. தமிழ்மொழியின் தொன்மையையும், பாரம்பரியத்தையும் வெளிப்படுத்தும் நிகழ்ச்சி. இது கிராமிய, கலை வடிவங்களை உள்ளடக்கியது. கிராமியக் கலைஞர்களின் பெயர் பாட இந்நிகழ்ச்சி ஒரு வெளிப்பாடாக அமையும். உலகத்தை மறந்து யாரும் கை தட்டுகிறார்களா என்பதைக்கூட அறியாமல் கலையையும், தங்கள் படைப்புக்களையும் உயிராக மதிப்பவர்களின் சங்கமம் இது” என்றார்.

விழாவை தொடக்கி வைத்து பேசிய முதல்வர், ” நமது வழித்தோன்றல்கள் நம்மை ஒருபோதும் ஏமாற்றமாட்டார்கள்..” என்று விழாவின் ஒருங்கிணைப்பாளரும், முதல்வரின் மகளுமான கனிமொழியை பாராட்டி பேசியது மட்டுமல்லாமல், பிரம்மாண்டமான அரங்கினை வடிவமைத்த ‘தோட்டா’தரணியையும் பாராட்டினார். மேலும் பழந்தமிழை, பண்பாட்டை, வரலாறை இவ்விழாவின் மூலம் மீண்டும் மக்கள் பார்க்கலாம். இதுமாதிரியான கலை, பண்பாட்டு நிகழ்ச்சிகள் அரங்கேறும் போது மக்கள் அதை வரவேற்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

விழாவிற்கு வந்தவர்களுக்கு இவ்விழாவின் ஒருங்கிணைப்பாளர் கஸ்பர்ராஜ் அவர்கள் நன்றியை தெரிவித்துக் கொண்டார்.

இவ்விழாவின் ஓர் அங்கமாக ‘நெய்தல் சங்கமம்’ திருவிழா திடல் திறப்புவிழாவும் அன்று நடைபெற்றது. சென்னை மெரீனா கடற்கரையில் உள்ள புகழ்பெற்ற வெலிங்டன் சீமாட்டி திடலில் ‘நெய்தல் சங்கமம்’ வளாகம் அமைக்கப்பட்டது. இவ்வாளகத்தில் கிராமதிருவிழாவில் இடம் பெற்றிருக்கும் அனைத்து அம்சங்களும் இடம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த கலைஞர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். மேலும் இவ்வாளகத்தில் கைவிணை பொருட்கள் கண்காட்சி, டூரிங் டாக்கீஸ் எனப்படும் கிராம சினிமா கொட்டகை அமைக்கப்பட்டு அதில் சிறு படங்கள் காட்டப்பட்டன. இதுதவிர பல்வேறு கலைநிகழ்ச்சிகள், வீர விளையாட்டுகள் ஆகியவை நடைப்பெற்றன.

‘நெய்தல் சங்கமம்’ வாளகத்தை தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சர் மு. க. ஸ்டாலின் திறந்து வைத்தார். விழாவில் பிரபல கர்நாடக இசைபாடகி சுதா ரகுநாதன் மற்றும் தமிழக அமைச்சர்கள் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

சென்னையின் முக்கிய இடங்களான சென்னை சென்டல் ரயில் நிலையம், சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம், சென்னை ஏக்மோர் ரயில் நிலையம், சென்னையில் உள்ள பிரபல பூங்காக்கள், ஓட்டல்கள், பள்ளிக்கூடங்கள் என்று சுமார் 60 இடங்களில் இத்தகைய கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது முற்றிலும் புதுமையாக இருந்தது.

தினமும் காலை 6 மணிக்கே நிகழ்ச்சிகள் துவங்கிவிடும். காலை 6 மணிக்கே சென்னை பூங்காக்கள் கர்நாடக இசையினால் நிரம்பி வழிந்தது என்றால் அதுமிகையல்ல. பாம்பே ஜெயஸ்ரீ, நித்யஸ்ரீ, ஓ.எஸ். அருண், தஞ்சை சுப்ரமணியம், அருணா சாய்ராம் என்று பிரபலங்களின் இசைவெள்ளத்தில் மக்கள் நீராடினார்கள்.

காலை 10 மணிக்கு மேல் சென்னை மாநகர பேருந்துகளில் நாட்டுப்புற கலைஞர்கள் பாடல்களை பாடிய வண்ணமும், வாத்தியங்களை வாசித்த வண்ணமும் ஊர்வலமாக வந்த காட்சிகள் அற்புதம். கிராமத்து கலைகள் அத்துணையும் சென்னைக்கே வந்துவிட்டது போல் இருந்தது அந்தக்காட்சிகள்.

மாலை ஆறு மணிக்கு வெலிங்டன் சீமாட்டி திடலில் உள்ள ‘நெய்தல் சங்கமத்தில்’ தப்பட்டா கலைக்குழுவினர், கனியன் கூத்து குழவினரின் கலைநிகழ்ச்சிகளும், கரகாட்டம், மயிலாட்டம் போன்ற நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

இலக்கிய ஆர்வலர்களுக்காக சென்னை அண்ணாசாலை அருகில் உள்ள பிலிம்சேம்பர் அரங்கில் ‘தமிழ் சங்கமம்’ என்ற ஓர் இலக்கிய நிகழ்ச்சி தினமும் நடைப்பெற்றது. இதில் தமிழகம் மற்றும் புதுவையைச் சேர்ந்த புகழ்பெற்ற கவிஞர்கள், கதாசிரியர்கள், விமர்சனர்கள், தமிழறிஞர்கள் ஆகியோர் பங்கு பெற்றது சிறப்பு ஆகும்.

சுமார் 1400க்கும் மேற்பட்ட கலைஞர்களுக்கு மேல் ‘சென்னை சங்கமம்’ விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இனி ஆண்டுதோறும் தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளில் ‘சென்னை சங்கமம்’ நிகழ்ச்சி நடத்தவிருக்கிறார்கள்.

இவ்விழா பற்றி பத்திரிக்கையாளர்களிடம் பேசிய விழா ஒருங்கிணைப்பாளர் கவிஞர் கனிமொழி, ” இனி வரும் காலங்களில் சென்னை சங்கமத்தில் பங்குபெறும் சிறந்த 30 கலைஞர்களை தேர்வு செய்து சென்னையில் நிரந்தரமாக பாரம்பரிய கலைகளை விளக்கும் ஒரு மன்றத்தை உருவாக்க திட்டமிட்டு இருக்கிறோம்.. மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு இவ்விழாவை மக்களே தங்கள் இல்ல விழாவாக மாற்றிக் கொண்டாடுகின்ற வகையில் நாங்கள் வழங்க இருக்கிறோம்..” என்றார்.

அசோக் லைலைண்ட், ரிலையன்ஸ், டிவிஎச், நல்லி, ஸ்ரீ பாலாஜி எஜூகேஷனல் அண்ட் சார்ட்டபிள் டிரஸ்ட், சரவணா ஸ்டோர், போத்தீஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் இந்நிகழ்ச்சியை இணைந்து வழங்கினார்கள்.


 

 

பாரதியின் புதுமைப் பெண்ணும் பட்டிமன்றப் பேச்சாளர்களும்

– ந. கவிதா

தமிழ்நாடு பண்பாடு மற்றும் சுற்றுலாத் துறையும் தமிழ் மையமும் இணைந்து நடத்திய ‘சென்னை சங்கமம்’ கலாச்சாரத் திருவிழா 20.02.07 முதல் 26.02.07 வரை நடைபெற்றது. எல்லாத் தரப்புப் பார்வையாளர்களுக்குமான விழாவாக இந்நிகழ்வு அமைந்திருந்தது.

கவிஞர் கனிமொழியும் அருட்தந்தை கஸ்பர் ராஜும் இத்திருவிழாவை ஒருங்கிணைத்தார்கள். தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்தும் கலைஞர்கள் பங்கேற்றார்கள். ஒயிலாட்டம், மயிலாட்டம், தப்பாட்டம், கரகாட்டம், கட்டைக்கால் கூத்து, நையாண்டி மேளம், ஜிம்ளா காவடி ஆட்டம், வில்லுப்பாட்டு, தேவராட்டம் என்று பல்வேறு கிராமியக் கலைகள், கர்நாடக இசை, பரத நாட்டியம், மேற்கத்திய இசை, நாடகங்கள், வழக்காடு மன்றங்கள், கவியரங்குகள் என்று இயல், இசை, நாடகம் ஆகிய மூன்றும் சென்னை சங்கமத்தில் அரங்கேறின.

அடையாறு ஐ.ஐ.டி. வாளகத்தில் மிகப் பிரம்மாண்டமான இந்நிகழ்வின் தொடக்க விழா நிகழ்ச்சிக்கு முதல்வர் மு. கருணாநிதி தலைமையேற்க, சங்கத் தமிழிலிருந்து நவீனத் தமிழ் வரையிலான கவிதைகளை ‘சங்கே முழங்கு’ என்ற நடன நிகழ்ச்சியாகத் தந்தார்கள்.

சென்னை சங்கம நிகழ்ச்சிகள் சென்னையின் பல்வேறு பூங்காக்களிலும் கடற்கரையிலும் அரங்குகளிலும் நடைபெற்றன. கிராமிய நிகழ்த்துகலைகளில் பெண் கலைஞர்களின் பங்கும் மிகக் கணிசமானதாக இருந்தது. தப்பாட்டத்திலும் பெண்கள் தங்கள் தனி முத்திரையைப் பதித்தார்கள். தப்பாட்டம் ஒரு காலகட்டத்தில் ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் கலையாக இருந்தது நினைவுக்கு வருகிறது. மறக்கப்பட்டுவிட்ட நமது பாரம்பரியக் கலைகள் பலவற்றை மீண்டும் நம் கவனத்திற்குக் கொண்டுவந்த ஒருங்கிணைப்பாளர்களும் கலைஞர்களும் பாராட்டுக்குரியவர்கள்.

இந்நிகழ்வுகளின் ஒரு பகுதியாக ஃபிலிம் சேம்பரில் கவியரங்கங்களும் வழக்காடு மன்றங்களும் நாடக அரங்கேற்றங்களும் நடந்தன. 21.02.07 அன்று ‘பாரதி கண்ட புதுமைப் பெண் கனவா நனவா?’ என்ற தலைப்பில் சாரதா நம்பியாரூரன் தலைமையில் பட்டிமன்றம் நடைபெற்றது. ‘கனவே’ என்ற அணியில் மூவரும் ‘நனவே’ என்ற அணியில் மூவரும் வாதித்தனர்.

‘கனவே’ அணியில் பேசிய பர்வீன் சுல்தானா, பெண் எதிர்கொள்ளும் நிகழ்காலப் பிரச்சினைகளையும் இனி வரும் சவால்களையும் மிக அழகாகச் சுட்டிக்காட்டினார்.

பிடிக்காததைச் செய்யாமலிருப்பது கூடச் சுதந்திரம்தான். தனக்குப் பிடிக்காவிட்டாலும் கணவனுக்காகக் கத்தரிக்காய்க் குழம்பு செய்வது ஒரு வகையில் சுதந்திரத்தை இழப்பதுதானே என்று ஒரு பேச்சாளர் வாதித்தது சுவையாக இருந்தது. கத்தரிக்காய்க் குழம்பிற்கும் பெண் சுதந்திரத்திற்கும் முடிச்சுப் போடப் பட்டிமன்றப் பேச்சாளர்களால்தான் முடியும்.

பாரதி கண்ட புதுமைப் பெண் கனவுதான் என்பதைச் சொல்லப் பெண் சிசுக் கொலை, வரதட்சணை, பெண் ஊழியர்களுக்கு ஊதியம் வழங்குவதில் பாரபட்சம், பெண்மீதான ஒழுக்கத் திணிப்புகள் ஆகியவை மட்டுமே போதும் என்பது இந்த அணியினரின் வாதமாக இருந்தது.

புதுமைப் பெண் பற்றிய கனவு நனவாகத்தான் இருக்கிறது என்ற அணியினர், ஏழு பெண்கள் இன்று மேடையேறிச் சுதந்திரமாகக் கருத்துக்களை முன்வைததுக்கொண்டிருக்கிறோமே, இது பாரதி சொன்ன பேச்சு சுதந்திரமன்றி வேறென்ன என்ற கேள்வியோடு தங்கள் வாதத்தைத் தொடங்கினார்கள். அந்த ஏழு பேரின் சமூக-பொருளாதாரப் பின்னணி பற்றிய அலசல் பெண் சுதந்திரத்தின் நன்மை கருதித் தவிர்க்கப்பட்டது.

சானியா மிர்சாவிலிருந்து கிரண் பேடி வரை எத்தனையோ பெண் சாதனையாளர்களைச் சுட்டிக்காட்டி பாரதி கண்ட கனவு நனவாகித்தான் இருக்கிறது என்று இந்த அணியினர் பேசினார்கள். எங்கோ நடைபெறும் சில கொடுமைகளைச் கொண்டு மொத்தமாகப் பெண்களின் நிலை இதுதான் என்று சொல்ல முடியாது என்பது ‘நனவே’ அணியினரின் கருத்து.

ஆனால் சமூகத்தில் விதிவிலக்குகளாகச் சாதனை புரியும் கல்பனா சாவ்லா போன்றவர்களை மட்டுமே கொண்டு பெண் சமூகம் முழுவதும் சாதனையாளர்கள் நிரம்பியிருப்பதாகச் சொல்ல முடியுமா என்ற கேள்வியைக் ‘கனவே’ அணியினர் முன்வைத்தார்கள்.

நடுவரின் தீர்ப்பு சமரசமாக் இருந்தது. பாரதி கண்ட கனவு நனவாகிக்கொண்டிருக்கிறது; பெண்கள் புதுமைப் பெண்களாக முன்னேற இன்றும் கடக்க வேண்டிய தூரமும் எதிர்கொள்ள வேண்டிய சவால்களும் நிறைய இருக்கின்றன; அந்த இலக்கை அடையும் முயற்சி இன்றைய பெண்களுக்குத் தேவை என்று தீர்ப்பளித்தார் சாரதா நம்பியாரூரன்.

ஒரு பட்டிமன்றத்தில் பொழுதுபோக்கிற்காகவும் பார்வையாளர்களைச் சிரிக்க வைக்கவும் என்னவெல்லாம் இருக்க வேண்டுமோ அத்தனையும் இந்தப் பட்டிமன்றத்திலும் இருந்தது. எத்தனைதான் ஆழ்ந்த சிந்தனைக்குரிய விஷயமாக இருந்தாலும் கூட அதை வெகு சுலபமாகப் பார்வையாளர்களின் பொழுதுபோக்கிற்கான விஷயமாக மாற்றிவிடும் நிலை இந்த மன்றங்களில் நிகழ்வதுண்டு. இந்த நிகழ்விலும் அது இருந்தது.

இருந்தாலும் வெகுஜனத் தளத்தில் இப்படிப்பட்ட பட்டிமன்றங்கள் வெறும் பொழுதுபோக்கிற்கான அம்சங்களாக மட்டுமே மாறிவரும் சூழலில், இந்த மன்றம் அதிலிருந்து சற்றே விலகி யதார்த்த வாழ்வில் பெண் எதிர்கொள்ளும் சிக்கலையும் சவாலையும் பகிர்ந்துகொள்ளும் விதமாக அமைந்தது சற்றே நிறைவைத் தருகிறது.
படங்கள்: சென்னை சங்கமம்

சென்னை சங்கமம் நிகழ்ச்சிகளுக்கு நிதி வழங்கப்பட்டது ஏன்?: கருணாநிதி விளக்கம்

சென்னை, மார்ச் 7: அரசின் கொள்கை அறிவிப்புப்படிதான் சென்னை சங்கமம் நிகழ்ச்சிகளுக்கு நிதிஉதவி அளிக்கப்பட்டது என்று முதல்வர் கருணாநிதி விளக்கம் அளித்துள்ளார்.

முதல்வரின் மகள் கனிமொழி ஒருங்கிணைப்பாளராக உள்ள தமிழ் மையம் சார்பில் நடைபெற்ற சென்னை சங்கமம் நிகழ்ச்சிகளுக்கு அரசு நிதி உதவி அளித்ததற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதற்காக தனி அரசாணை பிறப்பிக்கப்பட்டதாகவும் குற்றம்சாட்டப்பட்டது. இந்நிலையில் இது குறித்து முதல்வர் கருணாநிதி அளித்துள்ள விளக்கம்: சென்னை சங்கமம் நிகழ்ச்சிக்கு வழங்கியது போன்ற உதவியை மற்ற அமைப்புகளுக்கும் அரசு வழங்குமா இதற்கு முன்பு இதுபோல் வழங்கியதற்கு முன்மாதிரி உண்டா? என்று கேட்கிறார்கள். இதற்கான விளக்கத்தை சுற்றுலாதுறை செயலாளர் இறையன்பு அளித்துள்ளார்.

சென்னை சங்கமம் நிகழ்ச்சிக்கு முதல் நாளன்று ரூ. 27.17 லட்சத்துக்கு சுற்றுலா துறை விளம்பரம் செய்தது. இதுதவிர விளம்பர பலகைகள் வைக்க ரூ. 80 ஆயிரம் செலவு செய்துள்ளது. தமிழ் மையம் இந்நிகழ்ச்சியை நடத்தப்போவதாக தெரிவித்து, அதற்கு அரசின் அங்கீகாரத்தை கோரியது. அரசும் அனுமதித்தது.

ஏற்கெனவே கடந்த ஆண்டு சுற்றுலா துறையின் கொள்கை குறிப்பில் கலை நிகழ்ச்சிகள் தனியார் பங்கேற்புடன் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படிதான் இந்த நிகழ்ச்சிக்கு உதவி செய்யப்பட்டது. தமிழ் மையத்துக்கு அரசு நிதி வழங்கவில்லை. ஒருங்கிணைப்பு பணிகளுக்கு தான் உதவியது. ஏற்கெனவே தமிழகத்தில் பல்வேறு தனியார் அமைப்புகளுக்கு இதுபோன்று அரசு உதவிய நேர்வுகள் உள்ளன.

திருவையாறு இசை நிகழ்ச்சிக்கு நிதியுதவி, சேலம் ஜெயலட்சுமி கலை பண்பாட்டுக் கழகம் அமைப்பதற்கான நிதியுதவி, குன்னக்குடி வைத்தியநாதனின் அமைப்பான ராக ஆராய்ச்சி மையம் நடத்தும் நிகழ்ச்சிக்கு ஆண்டுதோறும் ரூ. 5 லட்சம், சிதம்பரம் நாட்டியாஞ்சலிக்கு ரூ. 98 ஆயிரம் என பல நிகழ்ச்சிகளுக்கு அரசு உதவி வழங்கி வருகிறது என்று கருணாநிதி கூறியுள்ளார்.

Kalki 11.03.2007

கல்கி – சென்னை சங்கமம்: கலை விழாவா? கழக விழாவா??

ஒரு புறம் பாராட்டு, மறுபடியும் முணுமுணுப்பு. ‘இது கலை
விழா, இல்லையில்லை… இதுகனிமொழி விழா’ என்ற வாதங்கள். கலந்துகொள்ள அழைக்கப்படாதவர்களின் வருத்தம் அழைக்கப்பட்டும் கலந்து கொள்ளாதவர்களின் கோபம் இப்படித்தான்
முடிந்திருக்கிறது சென்னை சங்கமம் விழா.

இதுபற்றி மக்கள் என்ன
நினைக்கிறார்கள்?

பாலாஜி பிரசாத் (திரைப்பட இயக்குநர்): நம்ம பண்பாட்டை கலாசாரத்தையட்டி நடைபெற்ற கலைவிழாக்கள் ரொம்ப அருமையா இருந்திச்சு. எல்லா ஊரிலிருந்தும், அடுத்த
மாநிலத்திலிருந்துகூட இந்த நிகழ்ச்சில கலந்துகிட்ட பார்க்கிறப்ப சந்தோஷமா இருந்திச்சு. நம்மோட அடுத்த தலைமுறைக்கு நம்முடைய பழமையின் அடையாளங்களை அறிமுகம் இது! சென்னை நகரத்துக்குள், தெருவுக்குள், பூங்காவுக்குள் கிராமம் அருமையான கான்செப்ட்.

ஸ்ரீ தங்கலட்சுமி பி.காம். (எஸ்.ஐ.ஜி. கல்லூரி): ஸ்கூல், காலேஜ்
விழாக்களில் பார்க்குற டான்ஸ் தவிர வேறெதுவும் எங்களுக்குத்
தெரியாது. ஆனா இந்த சென்னை சங்கமம் மூலமா கிராமியக் கலைஞரில் இவ்வளவு விஷயங்கள் இருக்கான்று மலைப்பா இருக்கு’’

இது தி.மு.க. விழாவா

யார் பண்ணா என்ன பாஸ்? செய்யுற விஷயம் நல்லா இருக்கிறப்ப பாராட்ட வேண்டியதுதானே! இன்னும் கொஞ்சம் நாள்
எடுத்திருக்கலாம். போதுமான விளம்பரம் இல்லை. அதனால் குறையாகத் தெரியுது.

ஜலதா … (குடும்பத் தலைவி) : சென்னைக்கு வந்து இருபத்தைந்து வருஷமாச்சு எங்க ஊர்ல சின்ன வயசில கோயில் திருவிழாக்களில் இது மாதிரி கலை நிகழ்ச்சிகள் விடிய விடிய நடக்கும். அந்த சந்தோஷம் தனி. அன்னைக்கு அசோக் நகர் பார்க்குக்கு பேரக்குழந்தைகளை அழைச்சுகிட்டுப் போய்ட்டு வந்தேன. பசங்க அதைப் பார்த்துட்டு வந்து அடிச்ச லூட்டி இருக்கே! அப்பப்பா… சென்னைக் குழந்தைகளுக்கு இந்த விழா ரொம்ப அவசியம்.

பி.ராஜ்மோகன் : வருடா வருடம் இது நடத்தப்பட வேண்டும். இதுபோன்ற விழாக்கள் கொண்டாடுவதோடு இல்லாமல் ‘கிராமியக் கலைகளை’ பள்ளி மாணவர்களிடம் நிலைநிறுத்த வேண்டும்.

கே.எஸ்.கோபி: இயந்திர மயமாகிவிட்ட சென்னை போன்ற நகரங்களில் தொலைக்காட்சி மட்டுந்தான்
பொழுதுபோக்காகிவிட்டது. ஆடி ஓடி விளையாட இடம் கிடையாது. ஒரு கிராமத்து பையன் சிட்டிக்கு உந்த எப்படி மலைச்சு போவானா அப்படித் தான் சிட்டி பையன் கிராமத்துக்குப் போனாலும் இந்த இடைவெளியைக் குறைக்க இது போன்ற விழாக்கள் நிச்சயமா உதவும்.

சி.கே.குமார் – முதன்மை பெற்ற காரணம் : யார் இதற்காக முயற்சி செய்தாலும் இந்த அரசு நிச்சயம் உதவியிருக்கும். ஏனென்றால் கலையிலும், இலக்கியத்திலும் ஆர்வமுடையவர் முதல்வர். ஜெயலலிதா ஆட்சியென்றால் கொஞ்சம் தாமதம் ஆகும் அவ்வளவுதான். அவரும் உலகத் தமிழ்மாநாட்டை நடத்தியவர்தான்.

கலையை, பண்பாட்டை, கலாசாரத்தை மக்களிடம் கொண்டு சேர்க்க தொலைக்காட்சி ஒன்று போதுமே? சன் டீ.வி. அதைச் செய்யலாமே?

சென்னை சங்கமம் குறித்து எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதி என்ன நினைக்கிறார்?

இதுபோன்ற கலை விழாக்கள் வரவேற்கப்பட வேண்டிய விஷயம். சென்னை சங்கமமும் நன்றாக இருந்ததாகதான் சொல்கிறார்கள். எனக்கு அழைப்பிதழ் அனுப்பாததால் நான் போகவில்லை. கலைஞர்களையும், எழுத்தாளர்களையும், இலக்கியவாதிகளையும் பங்குபெறச் செய்வதற்கு வாய்ப்பு இல்லாவிடாலும் அழைப்பிதழாவது அனுப்பியிருக்கலாம். அவர்கள் அதைச் சரிவர செய்யவில்லை. அங்கங்கே இதுகுறித்த முணுமுணுப்புகள் எழுந்துள்ளன. இதுதவிர குழனமப் பார்மையான அணுகுமுறைகள், அழைப்புகள் இருப்பதாகவும் குறைபடுகின்றனர். எப்படியோ விழா நடந்தேறியுள்ளது.

இப்படிப்பட்ட விழாக்களைத் தொடர்ந்து செய்யப்போகும் அழைப்புகளுக்கு ஒரு நிலையான ‘செட் அப்’ அவசியம். அது அக்கரையோடும், பொதுமையோடும், அனைத்துத் தரப்புகளையும் அரவணைத்துச் செல்லும் தன்மையோடும் அரசு ஆதரவோடும் செயல்பட்டால் இன்னும் சிறப்புறச் செய்ய முடியும்.

சில வருடங்களுக்கு முன் அரசாங்கம் அகாடமிகள் செயல்பாடுகள், செலவினங்கள் மற்றும் நடைமுறைகள் குறித்த ஆய்வறிக்கை ஒன்றைக் கேட்பார்கள். அக்சர் கமிட்டி என்ற பெயரில் எங்ளது
ஆய்வறிக்கையைச் சமர்ப்பித்தோம். நாங்கள் சமர்ப்பித்ததில் அவர்களுக்கு எது தேவையோ அதை எடுத்துக்கொண்டு மற்றதை
விட்டுவிட்டார்கள். ஏனென்றால் மக்களது வரிப்பணம் இது போன்ற அமைப்புகளின் மூலம் செலவிடப்படும்போது அதற்கான வரவு செலவுத் திட்டங்கள் மக்கள்முன் வைக்கப்பட வேண்டியது அவசியம்.

சென்னை சங்கமமும் அதைச் செய்ய வேண்டும்.

மைலாப்பூர் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. எஸ்.கே. சேகர் : வருஷத்தில் ஒரு நாள் கலைஞர்களை கூட்டி விழா எடுப்ப்தனால் கலை வளர்ந்துவிடாது. கலைஞர்களுடன் நிலைமையும் மாறிவிடாது.
கிராமியக் கலைஞர்களுக்கு வாழ்வளிக்க வேண்டுமென்றால், அந்தவாடி அந்தந்தக் கிராம விழாக்களில் கிராமியக் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட வேண்டும். அரசு விழாக்களில் இடம்பெற வேண்டும். சென்னை சங்கமத்திற்கு சுமார் 5 கோடி செலவழித்திருப்பதாகச் சொல்கிறார்கள். ஆனால், இதில் பங்குபெற்ற கலைஞர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகதானே இருக்கிறது.

கூரையேறி கோழியடிக்காதவன் வானம் ஏறி வைகுந்தம் போன கதையாகத்தான் இருக்கிறது. இன்றைய கிராமியக் கலைஞன், கலைஞர்களின் வாழ்வும், நிலையும்.

– ச.ந.கண்ணன்

————————————————————————————————————————————————-
“சென்னை சங்கமம்’ நிகழ்ச்சி நிதி: 25 தன்னார்வ நிறுவனங்களுக்கு ரூ.40 லட்சம் உதவி – முதல்வர் வழங்கினார்


சென்னை, ஆக. 7: “சென்னை சங்கமம்’ நிகழ்ச்சி நடத்தியதின் மூலம் கிடைத்த ரூ. 40 லட்சம் தொகை 25 தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டது.

திங்கள்கிழமை அறிவாலயத்தில் நடைபெற்ற விழாவில் இத்தொகைக்கான காசோலையை தொண்டு நிறுவனப் பிரதிநிதிகளிடம் முதல்வர் கருணாநிதி வழங்கினார்.

சென்னையில் உள்ள “தமிழ் மையம்’ என்ற அமைப்பு “சென்னை சங்கமம்’ என்ற கலாசார விழாவை கடந்த பிப்ரவரி 6-ம் தேதி முதல் 16-ம் தேதி வரை சென்னையின் பல்வேறு பகுதிகளில் நடத்தியது. இதில் விளம்பரம் மூலம் கிடைத்த வருவாயில் செலவு போக எஞ்சிய தொகை தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டதாக தமிழ் மையத்தின் நிர்வாக அறங்காவலர் ஜெகத் கஸ்பார் தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் கூறியது:

“சென்னை சங்கமம்’ நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் முதல்வரின் மகள் கனிமொழி. இந்நிகழ்ச்சியை “தமிழ் மையம்’ நடத்தியது. இந்நிகழ்ச்சியில் 750 கலைஞர்கள் பங்கேற்றனர். சென்னையில் 700 இடங்களில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியை 10 லட்சம் மக்கள் கண்டு களித்தனர்.

தனியார் நிறுவனங்களிடமிருந்து விளம்பரம் மூலம் பெறப்பட்ட தொகை ரூ.2 கோடியே 94 லட்சத்து 54 ஆயிரத்து 900 ஆகும். இதில் நிகழ்ச்சிக்கான செலவுத் தொகை ரூ.2 கோடியே 56 லட்சத்து 27 ஆயிரத்து 895 ஆகும். எஞ்சிய தொகை ரூ.39 லட்சத்து 27 ஆயிரமாகும். தற்போது கூடுதலாக ரூ.73 ஆயிரம் நிதி சேர்க்கப்பட்டு ரூ.40 லட்சத்தை 25 தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுக்கு முதல்வர் மூலம் அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டது.

முதல் கட்டமாக 5 நிறுவனப் பிரதிநிதிகளுக்கு முதல்வர் வழங்கினார். ஏனைய நிறுவனங்களுக்கு செவ்வாய்க்கிழமை வழங்கப்படும். இந்நிறுவனங்கள் அனைத்துமே குழந்தைகள், பெண்கள் மற்றும் உடல் ஊனமுற்றோர் நலனுக்காகச் செயல்படுபவை.

நகராட்சிப் பள்ளிகளில் கிராமியக் கலை: சென்னையில் உள்ள மாநகராட்சி பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு கிராமியக் கலை பயிற்சி அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கு ரூ.8 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்சம் 200 மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார் கஸ்பார்.

மீண்டும் “சென்னை சங்கமம்’: வரும் ஆண்டும் இதுபோன்ற “சென்னை சங்கமம்’ கலை நிகழ்ச்சி நடத்தப்படும் என்று கனிமொழி தெரிவித்தார்.

Posted in Aaraamthinai, Aaramthinai, Allegations, Arts, Ashok Leyland, Carnatic, Casper Raj, Casperraj, Chennai, Chennai Sangamam, Chidambaram, Chidhambaram, Chithambaram, Culture, Dance, DMK, Drama, Events, Expenses, Ezines, Festival, Finances, Folk, Function, Gasper Raj, Gasperraj, Government, Heritage, Iraianbu, Isai, Kanimoli, Kanimozhi, Karunanidhi, Kavitha, kickbacks, Madras, music, Nalli, Natyanjali, Pothys, Revenues, Sarvana Stores, Statement, Tamil Maiyyam, Thamizh, Thiruvaiyaar, Thiruvaiyaaru, Thiruvaiyar, Thozhi.com, Tourism, Travel, TSCII, Visitor | Leave a Comment »

Kanimozhi presents ‘Chennai Sangamam’ – Tamil Sangamam

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 20, 2007

கலை, பண்பாட்டை மக்களிடம் சேர்க்கும் முயற்சியே “சென்னை சங்கமம்’: கனிமொழி

சென்னையில் செவ்வாய்க்கிழமை தொடங்க உள்ள “சென்னை சங்கமம்’ கலை மற்றும் கலாசார நிகழ்ச்சிக்கான “ஆடியோ சிடி’யை, திங்கள்கிழமை வெளியிட்டார் எழுத்தாளர் சுஜாதா. உடன் (இடமிருந்து) சென்னை சங்கமத்தின் ஒருங்கிணைப்பாளர் கவிஞர் கனிமொழி, திரைப்பட இயக்குநர் வசந்த், தமிழ் மையம் அமைப்பின் நிறுவனர் கஸ்பர் ராஜ்.

சென்னை, பிப். 20: தமிழகத்தின் பாரம்பரிய கலை மற்றும் பண்பாட்டை மக்களிடம் சேர்க்கும் முயற்சியாக “சென்னை சங்கமம்’ திருவிழா நடத்தப்படுவதாக நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் கனிமொழி தெரிவித்தார்.

சென்னையில் பிப். 20-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை “சென்னை சங்கமம்’ திருவிழா நடைபெறவுள்ளது. இதன் அங்கமாக “தமிழ்ச் சங்கமம்’ என்ற விழா பிப். 21-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை நடைபெறவுள்ளது.

இதுதொடர்பாக திங்கள்கிழமை சென்னையில் நிருபர்களிடம் அவர் கூறியது:

“சென்னை சங்கமம்’ சென்னை நகரத்துக்கான விழா. இதன் மூலம் தமிழ்ப் பாரம்பரிய கிராமிய இசை, நடனக் கலை, நாடகம் ஆகியவை சென்னை நகரின் தெருக்களிலும், திறந்த வெளியிலும் நடத்தப்படவுள்ளன.

இதில் 700 கலைஞர்கள் கலந்துகொண்டு 37 கலை வடிவங்களை சென்னை நகரின் பல பகுதிகளில் நிகழ்த்தவுள்ளனர். இந்த அரிய கலை நிகழ்ச்சிகளை அனைவரும் கண்டுகளிக்க வேண்டும்.

புதன்கிழமை ஒன்றரை மணி நேர பாரம்பரிய இசை மற்றும் நடன நிகழ்ச்சி பிலிம் சேம்பர் திரை அரங்கில் நடைபெறும். இது முதல் ஆண்டு என்பதால் சில தவறுகள் இருக்கலாம். அடுத்த ஆண்டு அவை திருத்தப்பட்டு பொங்கல் விழாவாகக் கொண்டாடப்படும். மேலும் இது விரிவடைந்து தமிழக விழாவாக மாற்றவும் முயற்சி எடுக்கப்படும் என்றார்.

அமைச்சர் தங்கம் தென்னரசு: தமிழ் மையம், பொது நூலகத்துறை, சுற்றுலா மற்றும் பண்பாட்டுத் துறை ஆகியவை இணைந்து இந்நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளன. நாட்டுப்புற இசை, நாட்டியத்துக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் இவ்விழா கொண்டாடப்படுகிறது. நூலகத்துறை குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலே நூலகத்துறை இவ்விழாவை ஏற்பாடு செய்வதில் அங்கமாகத் திகழ்கிறது என்றார்.

அண்ணா நகர், மயிலாப்பூர், ராயபுரம் பூங்காக்களில் தப்பாட்டம்: நையாண்டி மேளம் நிகழ்ச்சிகள் இலவசமாக கண்டு களிக்கலாம்

சென்னை, பிப். 20-

தமிழ்நாட்டின் பாரம்பரிய கலைகளை பிரபலப்படுத்தும் முயற்சியாக “சென்னை சங்கமம்” என்ற கலை விழாவை தமிழ் மையம் என்ற அமைப்பு நடத்துகிறது. கிரா மிய கலைஞர்களுக்கும் மக்க ளுக்கும் இடையே நல்லுறவை ஏற்படுத்தும் இந்த கலாச்சார நிகழ்ச்சிகளில் 1300 பேர் பங் கேற்கிறார்கள்.

மக்கள் அதிகம் கூடும்

  • அண்ணா நகர் டவர் பூங்கா,
  • மயிலாப்பூர் நாகேசுவரராவ் பூங்கா,
  • தி.நகர் நடேசன் பூங்கா,
  • கே.கே.நகர் சிவன் பூங்கா,
  • ராயபுரம் ராபின்சன் பூங்கா,
  • மாட வீதி,
  • பிலிம் சேம்பர்,
  • பெசன்ட் கடற்கரை,
  • கோட்டூர்புரம் பூங்கா,
  • நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானம்,
  • கலைவாணர் அரங்கம்,
  • மிïசிக் அகாடமி,
  • ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரி அரங்கம்,
  • தியாகராய ஹால்,
  • பாரதி இல்லம் உள்பட பல இடங்களில் நிகழ்ச்சி நடக் கிறது.
  • கர்நாடக சங்கீதம்,
  • மயி லாட்டம்,
  • ஒயிலாட்டம்,
  • தப்பாட்டம்,
  • நையாண்டி மேளம்,
  • பாவைக் கூத்து,
  • காவடி ஆட்டம் உள்பட பல நிகழ்ச்சிகள் நடக்கும் இந்த பிரமாண்ட கலை-பண்பாடு, இலக்கியத் திருவிழாவை இன்று (செவ்வாய்) மாலை முதல்-அமைச்சர் கருணாநிதி தொடங்கி வைக்கிறார். இந்த கலை விழா நாளை முதல் 25-ந் தேதி வரை 5 நாட்கள் நடைபெறும்.

நாளை (புதன்) நடக்கும் கலை நிகழ்ச்சிகள், இடம் நேரம் விபரம் வருமாறு:-

மிïசிக் அகாடமி-சிம் போனி இசை (மாலை 6.30)

தியாகராய ஹால்-இறை யன் கூத்து, இஸ்லாமிய இசை. மற்றும் நாடகம் (மாலை 6.30)

தி.நகர் நடேசன் பூங்கா: காலை 6 மணி-நாதசுரம், 6.30-கே.காயத்ரி வாய்ப் பாட்டு

மாலை 5.10: கட்டை கால் ஆட்டல்

6.15: சென்னை இளைஞர் குழு இசை

இரவு 7.00: சுதா ரகுநாதன் பாட்டு

புஷ்பவனம் குப்புசாமி

கே.கே.நகர் சிவன் பூங்கா:

காலை 6.00: தேவார திருப் புகழ்

6.30: வாலிவலம் வெங்கட் ராமன் பாட்டு

மாலை 5.00: தப்பாட்டம், காவடி ஆட்டம்

6.30: புஷ்பவனம் குப்புசாமி பாடும் கிராமிய பாடல்கள்

ராயபுரம் ராபின்சன் பூங்கா:- மாலை 5.00: குதிரை ஆட்டம், கானா பாடல்கள்

6.30: கிரேஸ் குழுவின் இசை கச்சேரி

கோட்டூர்புரம் பூங்கா:

மாலை 5.00: காளியாட்டம், மாடட்டம், மயிலாட்டம்

மயிலாப்பூர் நாகேசுவரராவ் பூங்கா:-

காலை 6.00: நாதசுரம்

6.30: அக்கரை சகோதரிகள் வயலின் இசை நிகழ்ச்சி.

நையாண்டி மேளம்

மாலை 5.00:- நையாண்டி மேளம், பாவைக் கூத்து.

6.30: டி.எம்.கிருஷ்ணா வாய்ப்பாட்டு

அண்ணா நகர் டவர் பூங்கா:-

காலை: நாதசுரம்,

6.30: மகதி வாய்ப்பாட்டு

மாலை 5.00: புலியாட்டம் மண்ணின் பாடல்

6.30: சாருமதி ராமச்சந்திரன் சுபஸ்ரீ ராமச்சந்திரன், வாய்ப்பாட்டு

பிலிம் சேம்பர்:-

மாலை 5.00:- பாப்பம்பாடி ஜமா குழுவினரின் பறையாட் டம்

6.00: பட்டிமன்றம், நடுவர்: சாரதா நம்பி ஆரூரான்.

Posted in Artistes, Arts, Attraction, Books, Carnatic, Casper Raj, Chennai, Chennai Sangamam, Culture, Dance, Drama, Events, Folk, Gasper Raj, Gasperraj, Heritage, Kaavadi, Kanimozhi, Kavadi Aattam, Madras, Mayilattam, music, Naiyandi Melam, Native, Oyilattam, Paavai Koothu, Pattimanram, Sujatha, Tamil Sangamam, Thamizh, Thangam Thennarasu, Thappaattam, Theater, Tourist, Vasanth | 3 Comments »

Shilpa Shetty Wins Celebrity Big Brother With 67 Percent of Votes

Posted by Snapjudge மேல் ஜனவரி 29, 2007

பிக்பிரதர் நிகழ்ச்சி: ஷில்பா ஷெட்டி அபார வெற்றி

லண்டன், ஜன. 29-

இங்கிலாந்தில் “சானல் 4” தொலைக்காட்சி “பிக்பிரதர்” என்ற வித்தியாசமான டி.வி. நிகழ்ச்சி ஒன்றை நடத்தியது. தனி அறையில் 26 நாட்களுக்கு 14 பிரபலங்களை தங்க வைத்து, அவர்களது தினசரி நடவடிக்கைகளை ஒளிபரப்பு செய்தனர். இதில் பிரபல இந்தி நடிகை ஷில்பா ஷெட்டியும் பங்கேற்றார்.

கடந்த 3-ந் தேதி தொடங்கிய இந்த நிகழ்ச்சிக்கு இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய நாடு களின் நேயர்களிடம் அதிக வரவேற்பு கிடைத்தது. திடீரென இந்த நிகழ்ச்சி டி.வி. நடிகை ஜேக்கூடியால் சர்ச் சைக்குள்ளானது.

நடிகை ஷில்பா ஷெட்டியை ஜேக்கூடி “நாய்” என இன வெறியுடன் திட்டினார். பப்படம், ஆங்கிலம் பேச தெரியாது என்றும் ஷில்பாவை அவர் கிண்டல் செய்தார். இந்த இனவெறி பேச்சுக்கு உலகம் முழுவதும் எதிர்ப்பு கிளம்பியது.

ஜேக்கூடியை கண்டித்து சுமார் 45 ஆயிரம் பேர் புகார் செய்தனர். இந்த நிலை யில் போட்டி விதிகளின் படி நேயர்களிடம் ஓட்டெடுப்பு நடத்தப்பட்டது.

குறைந்த ஓட்டு பெறுபவர்கள் போட்டியில் இருந்து விலக்கப்பட்டனர்.

ஷில்பா ஷெட்டியை திட்டிய காரணத்தால் நேயர்களிடம் வெறுப்பை சம்பாதித்திருந்த ஜேக்கூடிக்கு எதிராக மக்கள் வாக்களித்தனர். இதனால் நடிகை ஜேக்கூடி “பிக்பிரதர்” நிகழ்ச்சியில் இருந்து வெளி யேற்றப்பட்டார்.

ஜேக் கூடியுடன் சேர்ந்து ஷில்பா ஷெட்டியை கிண்டல் செய்த ஜோ ஓமிரா, டேனிலி லாயிட் ஆகியோரும் அடுத்தடுத்து நேயர்களிடம் ஆதரவு பெற இயலாமல் வெளியேற்றினர். இதனால் நடிகை ஷில்பா ஷெட்டி மிக, மிக எளிதாக இறுதிச் சுற்றுக்கு முன்னேறினார்.

14 போட்டியாளர்களில் இறுதிச் சுற்றுக்கு 6 பேர் தகுதி பெற்றனர். நடிகை ஷில்பா ஷெட்டி, ஜெர்மையன் ஜாக்சன், டிர்க்பெனடிக், இயன் எச்.வாட்கின்ஸ், டேனிலி லாயிட், ஜேக்டுவிட் ஆகியோர் அந்த 6 பேராகும். இவர்களில் இயன் எச்.வாட்கின்ஸ், டேனிலி லாயட், ஜேக்டுவிட் ஆகிய மூவரும் சனிக்கிழமை நீக்கப்பட்டனர்.

இதைத் தொடர்ந்து நடிகை ஷில்பா ஷெட்டி, ஜெர்மைன் ஜாக்சன், டிர்க் பெனடிக் ஆகிய மூவரிடமும் பலத்த போட்டி நிலவியது. இவர்களில் இங்கிலாந்து நேயர்களிடம் அதிக ஓட்டு பெறப்போவது யார் என்பதில் சஸ்பென்ஸ் நிலவியது.

பெரும்பாலானவர்கள் டிர்க் பெனடிக் இறுதிச் சுற்றில் வெல்ல வாய்ப்பு இருப்பதாக கருதினார்கள். ஆனால் இங்கிலாந்தில் வசிக்கும் ஆசிய நாட்டுக்காரர்களும், இங்கிலாந்து நாட்டுக்காரர்களும் ஷில்பா ஷெட்டிக்கு ஆதரவாக ஓட்டுப் போட்டு அவரை வெற்றி பெறச் செய்தனர்.

`பிக்பிரதர்’ நிகழ்ச்சியின் இறுதிச் சுற்றில் ஒவ்வொரு வருக்கும் கிடைத்த ஓட்டுகள் விவரம் இந்திய நேரப்படி இன்று அதிகாலை 3 மணிக்கு அறிவிக்கப்பட்டது. ஷில்பா ஷெட்டி 63சதவீத ஓட்டுக் கள் பெற்று பிக்பிரதர் நிகழ்ச் சியில் முதல் இடத்தைப் பிடித்து அபார வெற்றி பெற்றார்.

இந்தியர் ஒருவர் வெளிநாட்டில் இந்த கவுரவத்தை பெறுவது இதுவே முதல் தடவையாகும். 2-வது இடத்தை ஜெர்மைன் ஜாக்சன் பிடித்தார். இவர் பிரபல பாப் இசை பாடகர் மைக்கேல் ஜாக்சனின் சகோதரர் ஆவார்.

3-வது இடத்தை டிர்க் பெனடிக் பெற்றார். போட்டி யில் வெல்வார் என்று எதிர் பார்க்கப்பட்ட இவரை மக் கள் 3-வது இடத்துக்கு தள்ளி விட்டனர். ஷில்பா ஷெட் டியுடன் ஒப்பிடுகையில் 2-வது, 3-வது இடத்தை பிடித்தவர்களுக்கு மிக, மிக குறைவான வாக்குகளே கிடைத்திருந்தன.

தோல்வி அடைந்த இயன் வாட்கின்ஸ் 5.3 சதவீதம், டேனிலி லாயிட் 3.3 சதவீதம், ஜேக் டூவிட் 3.2 சதவீதம் ஓட் டுக்களையே பெற முடிந்தது.

63 சதவீத ஓட்டுக்களுடன் ஷில்பா முதல் இடத்தைப் பிடித்து இருப்பதாக அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப்பட்டதும் ஷில்பா `ஓ’ என்று ஆச்சரியத்தில் குரல் எழுப்பியபடி கைக்கூப்பி வணங்கினார்.

“சிக்கன் கறி வென்று விட்டது. உங்கள் அனைவருக்கும் நன்றி” என்று உணர்ச்சிப் பொங்க கூறினார்.

அவர் கண் களில் இருந்து ஆனந்த கண்ணீர் வழிந்தது. ஜெர்மைன் ஜாக்சனும், டிர்க் பெனடிக்கும் ஷில்பாவை கட்டித் தழுவி வாழ்த்துத் தெரிவித்தனர்.

இதையடுத்து ஷில்பா ஷெட்டி 26 நாட்களுக்குப் பிறகு தன் வீட்டு அறைக்குள் இருந்து வெளியில் வந்தார். ஆயிரக்கணக்கானோர் அங்கு திரண்டு நின்று ஷில்பாவை வரவேற்றனர். இவை அனைத்தும் சானல்-4ல் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டன.

`பிக்பிரதர்’ டி.வி. நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற ஷில்பா ஷெட்டிக்கு பரிசுத் தொகையாக ரூ.3 கோடி (300,000 pounds (600,000 dollars)) வழங்கப்படுகிறது. இது தவிர அவருக்கு ஏராளமான நிறுவனங்கள் பரிசுகளை வாரி வழங்குகின்றன. புதிய ஒப்பந்தங்களும் ஷில்பாவுக்கு கிடைக்கும். குறைந்த பட்சம் ரூ.40 கோடி அளவுக்கு அவருக்கு பரிசுகள் குவியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பரிசு மழையில் நனைந்து கொண்டிருக்கும் ஷில்பாவுக்கு உலகம் முழுவதிலும் இருந்து வாழ்த்துக்களும் குவிந்தபடி உள்ளன. இது அவரை திக்குமுக்காட வைத்துள்ளது.

பிக்பிரதர் நிகழ்ச்சியில் வெற்றி பெற்றது குறித்து ஷில்பா ஷெட்டி டயரி ரூமில் அமர்ந்து பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

இங்கிலாந்து நாட்டு மக்களுக்கு நான் முதலில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். என் நாடு (இந்தியா) பெரு மைப்படும் வகையில் வெற்றிக்கு உதவிய ஒவ்வொருவருக்கும் நன்றி.

இந்த போட்டி உண்மையில் ராட்டினத்தில் பயணம் செய்வது போல இருந்தது. உயர்வும், தாழ்வும் எனக்கு பல விஷயங்களை உணர்த்தின. நான் ஏதோ பிரச்சினையை ஏற்படுத்தி விட்டதாக இங்குள்ளவர்கள் கருதக்கூடாது.

என்னை ஜேக்கூடி இன வெறியுடன் திட்டியதாக கூறியது தவறு. அவர் இன வெறி பிடித்தவர் அல்ல. இதை என்னால் உறுதியாக சொல்ல முடியும்.

ஜேக்கூடி சற்று ஆவேசமாக பேசக்கூடியவர். எளிதில் கோபப்படுபவர். அதுதான் அவருக்கு எதிராக பிரச்சினையை ஏற்படுத்தி விட்டது. இதை இனி அனைவரும் மறந்து விட விரும்புகிறேன்.

எவ்வளவு தான் பிரபல மானவராக இருந்தாலும் தவறு செய்வது சகஜம்தான். எல்லோரும் மனிதர்கள் தானே. நாம் அனைவரும் தவறு செய்பவர்கள்தான். எனவே ஜேக்கூடியை குறை சொல்லக்கூடாது.

இங்கிலாந்தில் உள்ள எந்த ஒரு நபருக்கும் பிரச்சினையை ஏற்படுத்தி கொடுத்து விட்டு நான் என் நாட்டுக்கு திரும்ப விரும்பவில்லை.

இவ்வாறு நடிகை ஷில்பா ஷெட்டி கூறினார்.

Posted in Actress, Big Brother, Britain, Celebrity, Drama, London, racism, Reality Show, Shilpa Shetty, UK | Leave a Comment »

Isai Selvam, Iyal Selvam, Natya Selvam, Thavil Selvam, Mridanga Selvam Awards

Posted by Snapjudge மேல் ஜனவரி 25, 2007

தமிழகத்தில் “வேட்டைகள்’ தொடரும்: முதல்வர் கருணாநிதி


HONOUR: Chief Minister M.Karunanidhi with the awardees — Divya Kasturi, Geetha Rajasekhar, Kumbakonam A. Premkumar, Achalpuram Chinnathambi Pillai and Needmangalam Kannappa Pillai, at the 31st annual Music Festival of Muthamizh Peravai in Chen nai on Wednesday. Industrialist N. Mahalingam and Kundrakkudi Ponnambala Adigalar are also in the picture. — Photo : M. Vedhan

சென்னை, ஜன. 25: தமிழகத்தில் இயல், இசை, நாட்டியத்தைக் காக்கும் வகையில், ஆட வேண்டிய வேட்டைகள் தொடரும் என்று முதல்வர் கருணாநிதி சூசகமாகத் தெரிவித்தார்.

முத்தமிழ்ப் பேரவையின் 31-ம் ஆண்டு இசை விழாவில் இயல், இசை, நாட்டியக் கலைஞர்களுக்கு விருதுகளை அவர் புதன்கிழமை வழங்கிப் பேசியதாவது:

கடந்த 4 நாள்களாக பாராட்டு மழை தொடர்கிறது. தமிழின் பெயரால் ஒரு பேரவை 31 ஆண்டுகளாக நடந்து வருவது வியப்பான செய்தி.

திருவாவடுதுறையார், நீடாமங்கலத்தார்…என்று ஊரின் பெயரைச் சொல்லி புகழ் பெற்றனர் அக்காலத்தில். அப்படிப்பட்ட மேதைகள் நடத்திய விழாவில் கலந்து கொண்டு கலை, இசை நிகழ்ச்சிகளைக் கண்ணாரக் கண்டவன் நான்.

அவர்கள் வழங்கிய பல்வேறு செல்வங்கள் நம்மிடையே இருக்கிறது என்றால் அவற்றுக்கு என்றைக்குமே அழிவு இல்லை.

என்னுடைய வயது, அரசியல் வாழ்வு, இலக்கிய நுழைவு எப்போது என்பது உங்களுக்குத் தெரியும். தலைமுறைகளைச் சந்திக்கிற, வாழ்த்துகிற, பாராட்டப்படுகின்ற பேறு பெற்றுள்ளேன்.

குன்றக்குடி அடிகளார் தமிழுக்குப் புதுப் பொலிவைத் தந்தவர்.

மயிலாடுதுறையில் அவரும் நானும் சந்தித்துப் பேசியபோது, திராவிட, பெரியார் கொள்கைகள், அண்ணாவின் லட்சியம் மற்றும் மக்களிடயே குன்றக்குடி அடிகள் விதைத்த கருத்துகளுக்கும் இடையே ஒற்றுமை-வேற்றுமைகளை உணர்ந்தோம். இதனால்தான் நாங்கள் ஒன்றாகவும் முடிந்தது.

மொழிக்காக நடந்த போராட்டத்தில் குன்றக்குடி அடிகளார் பங்கேற்றதால் பட்ட துன்பங்களை அனைவரும் அறிவர்.

தற்போது இளம் அடிகளார் (பொன்னம்பல தேசிகர்) தன்னுடைய வாழ்க்கை மூலம் கருத்துகளை எடுத்துச் சொல்லும் செயலின் மூலம் நானும் குன்றக்குடி அடிகளைப் போன்றவர் என்பதை நிரூபித்துள்ளார்.

தமிழ், தமிழர் பண்பாட்டை வளர்க்கவும் பாதுகாக்கவும் வேண்டும். நான் பல ஆண்டுகள் வாழ வேண்டும் என்று இங்கே பேசியவர்கள் கூறினர்.

அவர்கள் தங்களை நம்பிச் சொன்னார்கள், ஆனால் நான் உங்களை நம்பிச் சொல்கிறேன்.

தமிழகத்தின் நிதி அமைச்சராக சிறப்பாக செயல்பட்டவர் சி. சுப்பிரமணியம். அவரது காலத்தில் ரூ. 100 கோடியில் பட்ஜெட் போடப்பட்டது.

ஆனால், தற்போது உலகப் பொருளாதாரம், இந்தியப் பொருளாதாரத்தை எண்ணிப் பார்க்கையில், ரூ. 20 ஆயிரம் கோடி அளவுக்கு வரவு செலவுத் திட்டம் போட வேண்டியுள்ளது. பட்ஜெட் உயர்ந்ததா அல்லது பண மதிப்பு குறைந்ததா என்று பார்த்தால் அக்காலத்தில் ரூ. 100 கோடி போதுமானதாக இருந்தது.

கணக்கில் கொஞ்சம் “வீக்’:1957-ம் ஆண்டில் தமிழக சட்டப் பேரவையில் அண்ணா, அன்பழகன் போன்றோருடன் நாங்கள் அடியெடுத்து வைத்தோம். எத்தனை ஆண்டுகள் ஆகிறது என்று நீங்களே கணக்கிட்டுக் கொள்ளுங்கள். எனக்கு கணக்கில் கொஞ்சம் “வீக்’.

தமிழ் ஆய்ந்த தமிழன் ஆட்சி வேண்டும் என்றார் பாரதிதாசன். இன்று தமிழகத்தில் திராவிட ஆட்சி நடக்கிறது.

பகுத்தறிவு, தன்மானச் செல்வங்களை தமிழக மக்களுக்கு வழங்க இந்த ஆட்சி நீடிக்க நீங்கள் (பொதுமக்கள்) துணை நிற்க வேண்டும்.

அண்ணா காலத்தில் திமுக ஆட்சியை ஓட்டை விழுந்த ஆட்சி என்றனர்.

திருவாரூர் ரசிகத் தன்மை வாய்ந்த ஊர். அந்த ஊரில் நடந்த பொதுக்கூட்டத்தில் அண்ணா பேசும்போது ஆமாம், இது ஓட்டைகள் நிறைந்த ஆட்சிதான்.

இது ஏனோதானோ என்று விழுந்த ஓட்டைகள் அல்ல. நாதஸ்வரத்தில், புல்லாங்குழலில் உள்ளதைப் போன்ற ஓட்டைகள்.

எந்த ஓட்டையை அடைத்தால் நாதம் வரும் என்று எனக்கு நன்றாகத் தெரியும் என அண்ணா சொன்னார்.

அதே போல அண்ணாவின் தம்பிகளாகிய நாங்கள் இந்த ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறோம்.

எனவே, அடைக்க வேண்டிய ஓட்டைகளை அடைத்து, ஆட வேண்டிய வேட்டைகளையும் நடத்தி இயல், இசை, நாடகம் என்ற முத்தமிழை வளப்போம். காப்போம் என்றார் கருணாநிதி.

Posted in A. Premkumar, Achalpuram Chinnathambi Pillai, Awards, C Subramniam, C Subramniyam, Culture, Dance, Divya Kasturi, Drama, Geetha Rajasekhar, Isai, Isai Selvam, Iyal, Iyal Selvam, Karunanidhi, Kundrakkudi Ponnambala Adigalar, Kunrakkudi Adigal, Kunrakudi Adigal, Mridanga Selvam, music, Muthamizh Peravai, N. Mahalingam, Naattiyam, Natya Selvam, Needmangalam Kannappa Pillai, Ponnambala Desikar, Tamil, Tamil heritage, Thavil Selvam, Thiruvaaroor, Thiruvaroor, Thiruvarur | Leave a Comment »