Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘DPI’ Category

Ravikumar MLA: Sri Lanka Navy’s underwater defence system in the North

Posted by Snapjudge மேல் ஜனவரி 31, 2008

கடலுக்குள் கண்ணி வெடி! – ரவிக்குமார் எம்.எல்.ஏ.

‘வெள்ளி நிலாவே விளக்காய் எரியும் கடல்தான் எங்கள் வீடு’ என்று வாழும் மீனவ மக்களின் பிழைப்பில் இப்போது நெருப்பை அள்ளிப்போட்டிருக்கிறது இலங்கை அரசு. இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான கடல் பகுதியில் கச்சத் தீவுக்கும் நெடுந்தீவுக்கும் இடையே கடலில் கண்ணி வெடிகளை இலங்கைக் கடற்படை இப்போது மிதக்கவிட்டிருக்கிறது. பாதுகாப்பு நோக்கத்தில் செய்யப்பட்டதாக அதை இலங்கை அரசு வர்ணித்தாலும், உண்மையில் தமிழக மீனவர்களைப் படுகொலை செய்யவும் பயமுறுத்தவும்தான் இந்தக் காரியத்தை இலங்கைக் கடற்படை மேற்கொண் டிருக்கிறது என மீனவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

சில நாட்களுக்கு முன்புதான் இலங்கை அரசு தமிழர் பிரச்னைக்கு சமாதானத் திட்டம் ஒன்றைத் தயாரித்திருப்பதாக அறிவித்தது. அனைத்துக் கட்சிப் பிரதிதிகள் குழுவால் (APRC) முன்வைக்கப்பட்ட பரிந்துரைகளை ராஜபக்ஷே அரசு ஏற்றுக் கொண்டுவிட்டதாகவும் செய்திகள் வந்தன. கடந்த பதினெட்டு மாதங்களாக அறுபத்து மூன்று முறை கூடிப்பேசி, வெறும் மூன்று பக்கங்களைக் கொண்ட அறிக்கை ஒன்றை அந்த அனைத்துக் கட்சிக்குழு சமர்ப்பித்திருந்தது! அதிலும்கூடப் புதிதாக எதுவும் இல்லை. 1987–ம் ஆண்டு போடப்பட்ட இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் வழிகாட்டு தலின்படி இலங்கை அரசியலமைப்புச் சட்டத்தில் செய்யப்பட்ட பதின்மூன்றாவது சட்டத்திருத்தத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதுதான் அனைத்துக் கட்சிக் குழுவின் ‘அரிய’ ஆலோசனையாகும்.

மாகாணக் கவுன்சில்களை அமைக்கவும் அவற்றுக்கு அதிகாரங்களைப் பகிர்ந்தளிக்க வும் நடவடிக்கை எடுக்கப்படும் என்கிற பேச்சுக்கள் பலமாக அடிபட்டன. இந்தப் பிரதிநிதிகள் குழுவில் இலங்கையின் முக்கிய எதிர்க்கட்சிகளான ஐக்கிய தேசிய கட்சியும் (யு.என்.பி.), ஜனதா விமுக்தி பெரமுனாவும் (ஜே.வி.பி.) கலந்து கொள்ளவில்லை. தமிழ்த் தேசியக் கூட்டணிக் கட்சியினரும் அதில் பங்கேற்கவில்லை. இப்படி பெரும்பான்மை மக்களின் பிரதிநிதிகளால் புறக்கணிக்கப்பட்ட அந்தக் குழுவின் பரிந்துரைகளை இலங்கையில் எவரும் மதிக்கவில்லையென்பதே உண்மை.

போர் நிறுத்த ஒப்பந்தத்தைத் தன்னிச்சையாக முறித்துக் கொண்ட ராஜபக்ஷேவின் கொடுநெறிப் போக்கை உலக நாடுகள் கண்டித்து வந்த வேளையில், அதிலிருந்து தப்பிப்பதற்காக ராஜபக்ஷே ஆடும் நாடகம்தான் இது என்று எல்லோருக்குமே தெரிந்துவிட்டது. அதனால்தான், சிங்கள அரசின் சமாதானத் திட்டத்தை எவரும் ‘சீரியஸாக’ எடுத்துக்கொள்ளவில்லை. இந்தச் சூழ்நிலையில்தான் இந்தக் கண்ணிவெடி சமாசாரம் இப்போது வெளியே தெரிய வந்திருக்கிறது.

1974–ம் ஆண்டு ஜூன் மாதம் 28-ம் தேதி அன்று இந்திய பிரதமராக இருந்த இந்திரா காந்தியும் இலங்கை பிரதமராக இருந்த சிறீமாவோ பண்டார நாயகாவும் செய்து கொண்ட ஒப்பந்தம்தான் முதன்முதலாக வங்கக்கடலில் இந்திய-இலங்கைக் கடல் எல்லையை வரையறுத்த நடவடிக்கையாகும். அந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்தியாவும் இலங்கையும் தமது எல்லைக்கு உட்பட்ட பகுதிகளின் மீது முழுமையான உரிமையைப் பெற்றன. அந்த நாடுகளின் கப்பல்கள் ஒன்று மற்றொன்றின் எல்லைக்குள் சென்று வரும் உரிமை தொடர்ந்து காக்கப்படும் எனக்கூறிய அந்த ஒப்பந்தத்தின் பிரிவு ஐந்தில், ‘இந்திய மீனவர்களும், யாத்ரீகர்களும் கச்சத்தீவுக்கு வழக்கம்போல சென்று வரலாம். அதற்கு இலங்கையிடம் அனுமதி பெறத்தேவையில்லை’ எனத் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.

1974-க்குப் பிறகு 1976-ம் ஆண்டு மார்ச் மாதம் இருபத்து மூன்றாம் நாள் இலங்கையும் இந்தியாவும் அடுத்து ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. மன்னார் வளைகுடாப் பகுதியில் கடல் எல்லையை வரையறுக்கும் ஒப்பந்தம்தான் அது. இந்தியா சார்பில் கேவல்சிங்கும், இலங்கைக்காக டபிள்யூ.டி. ஜெயசிங்கேவும் அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருந்தனர். இந்த இரண்டு ஒப்பந்தங்களிலோ… இவற்றுக்குப் பிறகு அதே ஆண்டு நவம்பர் 22-ம் தேதி கையெழுத்தான இலங்கை, இந்தியா, மாலத்தீவு ஆகியவற்றுக்கிடையேயான முச்சந்தியை வரையறுக்கும் ஒப்பந்தத்திலோ… கச்சத்தீவு பகுதியில் தமிழக மீனவர்கள் மீன்பிடிக்கக்கூடாது என்று சொல்லப்படவில்லை. இந்த ஒப்பந்தங்களுக்குப் பிறகு பரிமாறிக்கொள்ளப்பட்ட கடிதங்களில்தான் கச்சத்தீவை இலங்கைக்குத் தாரை வார்த்துத் தந்தார்கள் என்று கூறப்படுகிறது. ஆனால், தமிழக மீனவர்கள் கச்சத்தீவுக்குச் சென்று ஓய்வெடுக்கவும், அங்கே தமது வலைகளை உலர்த்த வும், அங்கே இருக்கும் புனித அந்தோணியார் கோயில் திருவிழாவுக்குச் செல்லவும் தொடர்ந்து உரிமை பெற்றிருந்தார்கள்.

1983-ம் ஆண்டுவரை எந்தப் பிரச்னையும் இல்லாமல் அவர்கள் மீன்பிடித் தொழிலைச் செய்து வந்தனர். 83-ல் ஏற்பட்ட இனக் கலவரத்தைத் தொடர்ந்து கச்சத்தீவு பகுதியில் மீன்பிடிப்பதற்கு இலங்கை அரசு தடை விதித்தது. அந்தத் தடை 2003 வரைதொடர்ந்தது.

தமிழக மீனவர்கள் சிறைப் பிடிக்கப்படுவதும், அவர்களது மீன்களும், வலை களும், படகுகளும் இலங்கைக் கடற்படையால் பறிமுதல் செய்யப்படுவதும் தொடர்கதையாயின. நூற்றுக்கணக்கான தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையால் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். அப்படித் தமிழக மீனவர்கள் பாதிக்கப்படும்போதெல்லாம் இந்திய அரசு இலங்கையைக் கண்டிக்கக்கூட முன்வருவதில்லை என்பது வேதனைக்குரிய செய்தியாகும். இதுவரை துப்பாக்கியால் சுட்டவர்கள் இப்போதோ கண்ணிவெடிகளை மிதக்க விட்டுவிட்டார்கள்.

கடல் கண்ணிவெடி என்பதுநிலத்தில் பயன்படுத்துவதைவிடவும் சக்தி வாய்ந்ததாகும். ‘டார்பிடோக்கள்’என அழைக்கப்பட்ட பழைய காலத்து கடல் கண்ணிவெடிகள் பதினாறாம் நூற்றாண்டி லேயே புழக்கத்துக்கு வந்துவிட்டன. கடல் கண்ணி வெடிகள் நீண்ட காலத்துக்கு நீடித்திருக்கக் கூடியவை என்கிறார்கள். முதலாம் உலகப் போரின் போது பாரசீக வளைகுடாவில் ஈரானால் மிதக்க விடப்பட்ட கடல் கண்ணிவெடி, 1988-ம் ஆண்டில் அமெரிக்கக் கப்பல் ஒன்றைத் தாக்கி பலத்த சேதத்தை ஏற்படுத்தியதே ‘நீண்ட ஆயுளுக்கான’ உதாரணம் ஆகும்.

கடல் கண்ணிவெடிகளில் இப்போது பலரகங்கள் வந்து விட்டன. இலக்கைத் துல்லியமாகத் தாக்கி அழிக்கும்படி அவை வடிவமைக்கப்பட்டுள்ளன. கடலில் வெவ்வேறு ஆழங்களில் அவற்றை மிதக்கவிட முடியும். கடல் கண்ணிவெடி போடப்பட்டிருப்பதை எளிதாகக் கண்டறிய முடியாது. எனவே, அப்பாவி மீனவர்கள் அதில் சிக்கிக் கொள்ள வாய்ப்பு அதிகம். அதனால்தான் இலங்கைக் கடற்படை கண்ணிவெடி போட்ட செய்தி தெரிந்ததற்குப் பிறகு தமிழக மீனவர்கள் தொழிலுக்கே போகவில்லை.

யுத்தகாலத்தில் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்து சர்வதேச அளவில் பல்வேறு ஒப்பந்தங்கள் இருக்கின்றன. ஆனால், கடல் கண்ணிவெடிகளை எப்படிக் கையாள வேண்டும் என்பதை 1907-ம் ஆண்டு இயற்றப்பட்ட ‘ஹாக் கன்வென்ஷன்’ மட்டும்தான் வரையறுத்துள்ளது. அது இப்போது அவ்வளவாகப் பயன்படுவதில்லை. எனவே, 1994-ம் ஆண்டு ‘சான் ரெமோ கையேடு’ என ஒன்றை நிபுணர்கள் தயாரித்தார்கள். அதில் கடல் கண்ணிவெடிகளைக் கையாளுவது பற்றிய வழிகாட்டுதல்கள் தரப்பட்டுள்ளன.

‘பொதுவான கடல் பகுதிகளில் கண்ணிவெடிகளை போடக் கூடாது. சர்வதேச கடல் பகுதியிலோ, பொதுவான கடல் பகுதியிலோ கப்பல்கள் செல்வதை தடுக்கக்கூடாது, அதோடு கப்பல்கள் பாதுகாப்பாகச் செல்வதற்கு வழி ஏற்படுத்தித் தரவேண்டும். அப்படி, வழி ஏற்படுத்தித் தராதுபோனால் கடல் கண்ணிவெடிகளை எவரும் மிதக்கவிட அனுமதி கிடையாது’ என ‘சான் ரெமோ கையேடு’ குறிப்பிட்டுள்ளது. இப்போது இலங்கை அரசு செய்திருக்கும் காரியம், மேலே சொல்லப்பட்ட சர்வதேச விதிகளுக்குப் புறம்பானதாகும். எனவே, இலங்கை அரசு உடனடியாகக் கடல் கண்ணிவெடிகளை அகற்றுவதற்கு நடவ டிக்கை எடுக்க வேண்டும்.

கடல் கண்ணி வெடிகளைக் கண்டறிவதற்கு இப்போது நவீன கருவிகள் வந்து விட்டன. ஆனால், அவை மிகவும் செலவு பிடிக்கக் கூடியவையாகும். சோனார்(Sonar) கருவி பொருத்தப்பட்ட கப்பலை கண்ணிவெடி போடப்பட்டுள்ள இடத்தை நோக்கிச் செலுத்தி அந்த வெடிகள் எங்கு உள்ளன என்பதை ஆராய லாம். மற்றொரு நடைமுறை – ஹெலிகாப்டரில் அந்தக் கருவியைப் பொருத்தி, அதைக் கண்ணிவெடி போடப் பட்டிருக்கும் கடற்பரப்பில் இழுத்துச் செல்வதாகும். இப்போது ரோபோக்களை இப்படியான வேலையில் பயன்படுத்துகிறார்கள். எப்படியானாலும் அதற்கு ஆகும் செலவு மிகமிக அதிகம்.

கச்சத்தீவு பகுதியில் தமிழக மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளைத் தீர்ப்பதற்காக இந்திய-இலங்கை அரசுகள் சில நடவடிக்கைகளை எடுத்தன. ‘கூட்டு நடவடிக்கைக் குழு’ என ஒரு குழு அமைக்கப்பட்டு அதிகாரிகள் மட்டத்தில் பேச்சுவார்த்தைகளும் நடந்தன. 2006-ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் கொழும்புவில் நடந்த ‘கூட்டு நடவடிக்கைக் குழு’ கூட்டத்தில் சில முடிவுகளும் எடுக்கப்பட்டன. சர்வதேச எல்லையிலிருந்து ஐந்து கடல் மைல் வரையிலான தூரத்துக்குள் சென்று மீன் பிடித்த மீனவர்களைக் கைது செய்வதில்லை எனவும், இரு நாடுகளின் சிறைகளிலும் வாடிக்கொண்டிருக்கும் மீனவர்களை விடுவிப்பது எனவும் அந்த ‘கூட்டு நடவடிக்கைக் குழு’ முடிவெடுத்தது. அதற்கு மாறாக இப்போது கண்ணிவெடிகளைப் போட்டிருப்பது மேலே கண்ட கூட்டு நடவடிக்கைக் குழுவின் முடிவுகளை இலங்கை அரசு மதிக்கவில்லை என்பதையும் எடுத்துக்காட்டுகிறது.

சேது கால்வாய் திட்டம் சுற்றுச் சூழலுக்குக் கேடுவிளைவிக்கும் என்ற அச்சம் தமக்கு ஏற்பட்டிருப்பதாக இலங்கை அரசு கூறியிருப்பதையும், இப்போது கண்ணிவெடி போடப்பட்டுள்ள நடவடிக்கையையும் இணைத்துப் பார்த்தால், சேதுக்கால்வாய் திட்டத்தை ஒரேயடியாக ஒழிப்பதற்காகத்தான் இலங்கை அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது என்று நாம் புரிந்து கொள்ளலாம். இப்படி சர்வதேச நெறிமுறைகளுக்கும், தானே கையெழுத்திட்ட ஒப்பந்தங்களுக்கும் எதிராகச் செயல்பட்டுவரும் ராஜபக்ஷே அரசின் நடவடிக்கைகளை ‘போர்க்காலக் குற்றச் செயல்களாகக்’ (War Cerimes) கருதுவதில் தவறில்லை.

இந்தக் காரணங்களின் அடிப்படையில் சர்வதேச சமூகம் இலங்கை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்தியா வலியுறுத்த வேண்டும். தனது குடிமக்களின் மீது அக்கறையிருந்தால், தமது இறையாண்மையைக் காப்பாற்ற வேண்டும் என எண்ணினால் இதைச் செய்வதற்கு இந்தியா தயங்கக்கூடாது.

இலங்கை கடற்படை கண்ணிவெடிகளைப் போட்டுவிட்டு செய்தி அனுப்பியதும், இந்திய கடற்படை அதிகாரிகளோ நமது மீனவர்களைத் தடுத்து நிறுத்தி கைது செய்கிறார்கள்! இலங்கைக் கடற்படை போட்டிருப்பது என்ன வகையான கண்ணிவெடி? அது நீரின் ஓட்டத்தில் இந்தியப் பகுதிக்குள் வரக்கூடிய ஆபத்து இருப்பதாகச் சொல்கிறார்களே, அது உண்மையா? அந்தக் கண்ணிவெடிகளை மனித நடமாட்டம் இல்லாத பகுதியில்தான் போட்டிருக்கிறோம் எனச் சொல்கிறது இலங்கைக் கடற்படை. அப்படி இருக்கும்போது ஏன் தமிழக மீனவர்களை இந்திய கடற்படையினர் கைது செய்ய வேண்டும்? இது போன்ற கேள்விகளுக்கு நமது அதிகாரிகள் பதிலெதையும் இதுவரையில் கூறவில்லை.

தமிழக மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படை துப்பாக்கி சூடு நடத்தியபோது வெகுண்டெழுந்த முதல்வர் கலைஞர், ”மீனவர்களின் கைகள் இனி மீன்களை மட்டுமே பிடித்துக் கொண்டிருக்காது” என எச்சரித்தார். இலங்கை அரசு மட்டுமல்ல… இந்திய அரசும் அந்த உணர்வைப் புரிந்து கொள்ள வேண்டும்.

– ஜூனியர் விகடன்

—————————————————————————————————

கச்சத்தீவு காட்சிகள்

செ. மாதவன், முன்னாள் அமைச்சர்

தமிழகத்தின் தென்பகுதியில் ராமேசுவரம், நாகப்பட்டினம் பகுதிகளில் வாழ்கின்ற மீனவர்கள், அன்றாட வாழ்விற்காக மீன்பிடிக்கும் தொழிலில் சந்திக்கும் உயிர்ப்பலிகள் தொடர்கின்றன. பல நூற்றாண்டுகளாக, ஆங்கிலேயர் ஆட்சியிலும், சுதந்திர இந்தியாவிலும் அனுபவித்த உரிமைகள் காங்கிரஸ் ஆட்சியில் 1976ஆம் ஆண்டு முதல் பறிக்கப்பட்டு விட்டன. இலங்கைப் படையினரால் சிறை பிடிக்கப்படுவதும், சுட்டுக் கொல்லப்படுவதும் தொடர் கதையாகிவிட்டன. 1974ஆம் ஆண்டு அன்றைய முதல்வர் கருணாநிதி எடுத்துவைத்த ஆதாரங்கள், மாற்று யோசனைகள் புறக்கணிக்கப்பட்டுவிட்டன.

நானும் முதல்வருடன் தில்லி சென்று ராமநாதபுரம் அரசர் சேதுபதி, கச்சத்தீவில் மீன் பிடிக்கும் உரிமையைக் குத்தகைக்கு விட்டிருப்பது பற்றி ஜமீன் நிர்வாகப் பதிவேடுகளையும், பிற ஆதாரங்களையும் காட்டி வாதாடிய காட்சிகள் நினைவில் நிற்கின்றன. அதைத் தொடர்ந்து ஆதாரங்களைக் காட்டி இந்திரா காந்திக்கு கடிதம் எழுதினார் கருணாநிதி. அதற்குப் பிறகு 1976 ஜனவரி 31ஆம் நாள் தி.மு.க. அரசைக் கலைத்து விட்டு 50 நாள்களுக்குள், 1976ஆம் ஆண்டு மார்ச் மாதம் 23ஆம் தேதி இலங்கை அரசுடன் புதிய ஒப்பந்தம் போடப்பட்டது. 1974இல் தமிழ்நாட்டுக்குப் பூர்வீகப் பாத்தியமான கச்சத்தீவு இலங்கைக்குத் தாரை வார்க்கப்பட்டது. 1976இல் தமிழக மீனவர்களின் மீன் பிடிக்கும் உரிமையும், இருநாட்டுக் கடல் பகுதிகளில் படகுகள் செலுத்தும் உரிமையும் இந்திய – இலங்கை புதிய ஒப்பந்தம் மூலம் பறிக்கப்பட்டன. இதற்காக தி.மு.கழக நாடாளுமன்ற உறுப்பினர்கள், 23-7-1974ஆம் நாள் நாடாளுமன்றத்திலிருந்து வெளிநடப்புச் செய்தனர். ஓர் உறுப்பினர் ஒப்பந்த அறிக்கை நகலைச் சபையில் கிழித்தெறிந்து விட்டு வெளிநடப்புச் செய்துள்ளார். வாஜ்பாய் ஒப்பந்தத்தை எதிர்த்துள்ளார்.

1974ஆம் ஆண்டு ஒப்பந்தம் மூலம் உறுதி செய்யப்பட்ட மீன் பிடிக்கும் உரிமையும், இரு கடல் பகுதிகளில் படகுகள் செலுத்தும் உரிமையும் 1976ஆம் ஆண்டு மார்ச் 23ஆம் தேதி புதிய ஒப்பந்தம் மூலம் பறிக்கப்பட்டன. 1974ஆம் ஆண்டு ஒப்பந்தத்தில் 26-6-1974ஆம் தேதி தில்லியில் பிரதமர் இந்திரா காந்தி கையெழுத்திட்டுள்ளார். இலங்கைப் பிரதமர் சிரீமாவோ பண்டாரநாயகா 28-6-1974ஆம் நாள் கொழும்பில் கையெழுத்திட்டுள்ளார். ஆனால் 1976ஆம் ஆண்டு ஒப்பந்தத்தில் 23-3-1976ஆம் நாள் இரு நாட்டு அரசு வெளியுறவுத் துறைச் செயலாளர்கள் மட்டும்தான் கையெழுத்துப் போட்டுள்ளனர்.

இந்த ஒப்பந்தத்தைப் புதிய வெளியுறவு அமைச்சர் ஒய்.பி. சவான் 24-3-1976ஆம் தேதி நாடாளுமன்றத்தில் அறிக்கையாக வைத்துள்ளார்.

இந்தப் புதிய 1976ஆம் ஆண்டு ஒப்பந்தத்தில் 1974ஆம் ஆண்டு ஒப்பந்தச் சரத்துகள் பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை. தமிழக அரசு, ஆளுநரின் பொறுப்பில் இருந்த நேரம். நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தப்படவில்லை. சுருக்கமாக ரகசியமாகப் போடப்பட்ட ஒப்பந்தம். 1974ஆம் ஆண்டு ஒப்பந்தத்தில் அங்கீகரிக்கப்பட்ட மீனவர்கள் உரிமையும், படகுகள் இருநாட்டுக் கடல் பகுதிகளில் செலுத்தும் உரிமையும் பறிக்கப்பட்டது பற்றி 1976ஆம் ஆண்டு ஒப்பந்தத்தில் எந்தச் செய்தியும் குறிப்பிடப்படவில்லை. ஆனால், இந்திய வெளியுறவுத் துறைச் செயலாளர் கேவல் சிங், 23-3-1976ஆம் தேதி இலங்கை வெளியுறவுத் துறைச் செயலாளருக்கு எழுதிய கடிதத்தில்தான் மீன் பிடிக்கும் உரிமையும், படகுகள் செலுத்தும் உரிமையும் பறிகொடுத்த செய்தி காணப்படுகின்றது. இதே கடிதத்தில் இந்திய வெளியுறவுத் துறைச் செயலாளர், “”இந்தியக் கடல் பகுதி ரஹக்ஞ்ங் ஆஹய்ந் என்ற இடத்தில் இலங்கை மீனவர்கள் மீன் பிடிக்கும் உரிமை தரப்பட்டுள்ளது” என்று எழுதியுள்ளார்.

இலங்கை நாட்டுடன் உறவு வைத்திட வேண்டும்; பண்டார நாயகாவின் நட்பு வேண்டும் என்ற சூழ்நிலையில் இந்த நாட்டு மீனவர்களின் வயிற்றுப் பிழைப்புக்குத் தேவையான மீன் பிடிக்கும் உரிமைகள், இருநாட்டுக் கடல் பகுதிகளிலும் படகு செலுத்தும் உரிமைகள் பறி கொடுக்கப்பட்டன.

மாநிலங்கள் அவையில் 1991ஆம் ஆண்டிலிருந்து இந்த இரு ஒப்பந்தங்களில் உள்ள முரண்பாடுகளையும், தமிழ்நாட்டு மக்களின் உரிமைகள் பறிக்கப்பட்ட மத்திய அரசின் செயல்பாடுகளையும் தொடர்ந்து எழுப்பி வந்தேன். 1974ஆம் ஆண்டு ஒப்பந்தத்தை நாடாளுமன்றத்தில் வைத்து உரையாற்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் ஸ்வரண் சிங் “”இந்திய மீனவர்கள் இன்றுவரை அனுபவித்து வரும் மீன் பிடிக்கும் உரிமை, இருநாட்டுக் கடல் பகுதிகளிலும் படகுகள் செலுத்தும் உரிமை, கச்சத் தீவுக்குச் சென்று வரும் உரிமை உறுதிப்படுத்தப்படுகிறது” என்று நாடாளுமன்றத்தில் பதில் அளித்து உறுதி செய்துள்ளார்.

இவற்றை எல்லாம் மறந்துவிட்டு, 1976ஆம் ஆண்டு ஒப்பந்தத்திலும் எதுவும் கூறாமல், அரசுச் செயலாளர் எழுதிய ஒரு கடிதத்தின் மூலம் ஸ்வரண் சிங்கால் நாடாளுமன்றத்திலேயே உறுதி செய்யப்பட்ட தமிழ்நாட்டு மீனவர்களின் உரிமைகள், மத்திய அரசின் மெத்தனத்தால் பறிபோயுள்ளன.

10-3-1992ஆம் நாள் மாநிலங்கள் அவையில் இந்த விவரங்களை, மத்திய அரசின் முரண்பட்ட ஒப்பந்தங்களை, இந்தச் சபையிலேயே உறுதி செய்யப்பட்ட தமிழ்நாட்டு மக்களின் உரிமைகள் ஒரு கடிதத்தின் மூலம் பறிக்கப்பட்ட நிகழ்ச்சிகளை எடுத்து உரைத்தேன். தி.மு.க., அ.தி.மு.க., காங்கிரசுக் கட்சி உறுப்பினர்கள் எனது கருத்துக்கு ஆதரவு தெரிவித்தனர். அன்று சபையில் இருந்த அன்றைய வர்த்தகத் துறை அமைச்சர் இன்றைய நிதி அமைச்சர் சிதம்பரம் எழுந்து பதில் அளித்தார்.

‘‘I had brought the 1974 agreement and the 1976 agreement to the notice of the House. The government responded by giving its interpretation of the two agreements. If there is any other document or letter which appears to contradicts with the tenor of the two agreements or the interpretation we placed on the two agreements, we will certainly look into it’’ என்று உறுதி அளித்தார்.

அதற்குப் பிறகு அன்றைய பிரதமருக்கும், வெளியுறவு அமைச்சர்களுக்கும் இந்தப் பிரச்னைகளைக் கடிதங்கள் மூலம் 1996ஆம் ஆண்டு வரை எழுதி வந்தேன். பிரதமரும், அமைச்சர்களும், பதில் கடிதங்கள் எழுதினார்கள். ஆனால் தமிழ்நாட்டு மீனவர்களுக்குத் தகுந்த பரிகாரம் காணப்படவில்லை. 5-1-1996ஆம் தேதி அன்றைய வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி எனக்கு எழுதிய கடிதத்தில், “”கச்சத் தீவுக்கு தமிழ்நாட்டு மீனவர்கள் ஓய்வு எடுக்கவும், மீன் பிடிக்கும் வலைகளைக் காயப் போடவும், புனித அந்தோணி திருவிழாவுக்கும் செல்லலாம்” என்று புதிய விளக்கம் அளித்துள்ளார்.

இந்த நிகழ்ச்சிகளை அரசியல் ரீதியாக கட்சிக் கண்ணோட்டத்தோடு பார்க்காமல் நாடாளுமன்றத்தில் ஸ்வரண் சிங்கால் அளிக்கப்பட்ட விளக்கங்களின்படி, தமிழக மீனவர்களின் உரிமைகளை மீட்டுத்தர அனைத்துக் கட்சிகளும் ஒன்றுசேர்ந்து முயற்சிப்பதுதான் தமிழ்நாட்டு மீனவர்கள் உயிர்கள் பறிபோவதைத் தடுக்கும் வழியாகத் தோன்றுகிறது.

இந்திய மீனவர்கள் அனுமதி பெற்று, விதிமுறைகளுக்குக் கட்டுப்பட்டு, இருநாட்டுக் கடற்படைகளின் பாதுகாப்புடன் அனைத்துக் கடல் பகுதிகளிலும் சென்று மீன் பிடித்திட உரிமை தர இலங்கை அரசு நிச்சயம் ஒப்புக்கொள்ளும். ஆயுதக் கடத்தலைத்தான் இலங்கை அரசு விரும்பவில்லை என்று தெரிகின்றது. 1976ஆம் ஆண்டு வரை மீன் பிடிக்கும் உரிமையை எதிர்த்து இலங்கை அரசு எந்தச் செயலிலும் ஈடுபடவில்லை. விடுதலைப் புலிகளின் நடமாட்டம்தான் இலங்கையை அச்சுறுத்தி வருகிறது என்பதுதான் உண்மை.

இலங்கை நாடு ஒன்றுபட்டு இருக்கவும் இலங்கைத் தமிழர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படவும் இலங்கை அரசியல் அமைப்புச் சட்டத்தில் 13வது திருத்தச் சட்டம் கொண்டுவர முயற்சிகள் எடுத்து வெற்றி பெற்ற மத்திய அரசு, தமிழ்நாட்டு மீனவர்களின் பரம்பரை உரிமைகளை உறுதி செய்திடவும் முயற்சி எடுத்தால் நிச்சயம் வெற்றி கிடைக்கும்.

கச்சத்தீவு இந்திய எல்லையிலிருந்து சுமார் 12 கடல் மைல்கள் தூரத்திலும் இலங்கை எல்லையிலிருந்து சுமார் 10 கடல் மைல்கள் தூரத்திலும் அமைந்துள்ளது. 2 மைல்கள் வித்தியாசத்தைக் காரணமாக வைத்து கச்சத்தீவை இலங்கை அரசு பறித்துக் கொண்டது.

1976ஆம் ஆண்டு வரை தமிழ்நாட்டு மீனவர்கள் பரம்பரையாக அனுபவித்து வந்த உரிமைகளை இலங்கை அரசு மறுக்க முடியாது. இருநாட்டுக் கடல் பகுதிகள் 1976ஆம் ஆண்டில் வரையறுக்கப்பட்ட பிறகும், இந்திய எல்லைக்குள் ஒரு பகுதியில் மீன் பிடிக்கும் உரிமையைக் கேட்டுப் பெற்ற இலங்கை அரசு, தமிழ்நாட்டு மீனவர்களின் உரிமைகளை மறுக்க முடியாது. அன்றைய முதல்வர் கருணாநிதியின் முயற்சியால், ஸ்வரண் சிங் மூலம், இந்திரா காந்தி அரசு நாடாளுமன்றத்தில் அளித்த உறுதிமொழி நிறைவேற்றப்பட வேண்டும்.

Posted in defence, Defense, DPI, Eelam, Eezham, Fish, Fisheries, Fisherman, Fishery, KACCHA THEEVU, Kachatheevu, Kachathivu, Kachativu, Kachchatheevu, Katcha Theevu, Katchatheevu, Landmines, LTTE, mines, Ravikkumar, Ravikumar, Sea, Sri lanka, Srilanka, Thiruma, underwater | Leave a Comment »

Caste-related violence in Madurai – Dalit Lawyer gets abused by PMK Secretary

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 16, 2007

தலித் வழக்கறிஞரின் வாயில் மலம் திணிப்பு – மதுரையில் கொடுமை

மதுரையில் தலித் சமூகத்தைச் சேர்ந்த வழக்கறிஞரின் வாயில் மலம் திணிக்கப்பட்ட கொடுமை நடந்துள்ளது. இந்த மகா பாதகச் செயலைச் செய்த பாமக செயலாளர் கட்சியை விட்டு நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

மதுரை சமயநல்லூரைச் சேர்ந்தவர் வழக்கறிஞர் சுரேஷ். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த பஞ்சாயத்து தலைவர் கிள்ளிவளவனுக்கும் இடையே உள்ளாட்சி தேர்தலின்போது மோதல் ஏற்பட்டுள்ளது.

இந் நிலையில் சுரேஷ் தனியே சென்றபோது அவரை வழிமறித்த கிள்ளிவளவன் மற்றும் மதுரை பாமக மாவட்ட செயலாளர் கிட்டு ஆகியோர் கொண்ட கும்பல் அவரை அடித்து உதைத்துள்ளது. அத்தோடு விடாமல் அவரது வாயில் மலத்தையும் திணித்ததாக கூறப்படுகிறது.

இது குறித்து சுரேஷ் சமயநல்லூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின்பேரில் பஞ்சாயத்து தலைவர் கிள்ளிவளன் மற்றும் அவரது அடியாட்கள் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

ஆனால் பாமக மாவட்ட செயலாளர் கிட்டுவை போலீசார் கைது செய்யவில்லை. இந் நிலையில் பாமக தலைவர் ஜிகே மணி மதுரை வந்தார். சம்பவம் குறித்து விசாரணை நடத்திய அவர் பாமக செயலாளரை கட்சியை விட்டு நீக்கி உத்தரவிட்டார்.

Posted in Anbumani, Attorney, backward, BC, Caste, Community, Dalit, Discrimination, DPI, Elections, GK Mani, Harijan, Hindu, Hinduism, Law, Lawyer, Madurai, Mani, MBC, MLC, Mob, OBC, Oppression, Order, Panchayat, Panchayath, Panjayat, Panjayath, Party, PI, PMK, Police, Polls, Ramadas, Ramadoss, Religion, Reservations, Reserved, Samaianalloor, Samaianallur, Samayanalloor, Samayanallur, SC, scheduled castes, Supremacy, untouchable, Viduthalai Chiruthaigal, Viduthalai Chiruthaikal, Viduthalai Siruthaigal, Viduthalai Siruthaikal, Vituthalai Chiruthaigal, Vituthalai Chiruthaikal, Vituthalai Siruthaigal, Vituthalai Siruthaikal | Leave a Comment »

Cuddalore – PMK vs Dalit Panthers party squabbles

Posted by Snapjudge மேல் ஓகஸ்ட் 26, 2007

பாமக அலுவலகம் மீதான தாக்குதல் சம்பவம்: விடுதலைச் சிறுத்தைகள் மூவர் கைது

கடலூர், ஆக. 26: கடலூரில் பாமக அலுவலகம் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த 3 பேர் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனர்.

கடந்த 17-ம் தேதி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலர் திருமாவளவன் பிறந்ததின விழா, தமிழர் எழுச்சி மாநாடாக கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்தில் நடந்தது.

மாநாட்டுக்கு வந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர், கடலூர் மஞ்சக்குப்பத்தில் உள்ள பாமக அலுவலகம் மீது கல்வீசி தாக்கியதாக கூறப்படுகிறது. பேனர் கிழிக்கப்பட்டது.

இதுகுறித்து பாமக மாவட்ட அலுவலக செயலர் போஸ்ராமச்சந்திரன், கடலூர் புதுநகர் காவல்நிலையத்தில் புகார் செய்தார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த 500 பேர் மீது போலீஸôர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இந்தத் தாக்குதல் தொடர்பாக, கடலூர் செல்லங்குப்பம் விடுதலைச் சிறுத்தைகள் முகாம் பொறுப்பாளர் சேதுராமன் (27), தோட்டப்பட்டு வெங்கடேசன் (27), குண்டு உப்பளவாடி முத்து (25) ஆகியோரை போலீஸôர் கைது செய்தனர். மேலும் பலரை போலீஸôர் தேடி வருகிறார்கள்

Posted in DPI, Party, PMK, Thiruma, Vituthalai Chiruthaigal, Vituthalai Chiruthaikal, Vituthalai Siruthaigal, Vituthalai Siruthaikal | Leave a Comment »

Collector starts probe into attack on DPI MLA D Ravikumar

Posted by Snapjudge மேல் ஜனவரி 10, 2007

ரவிக்குமார் எம்.எல்.ஏ.வை போலீஸ் தாக்கியதாக புகார்: நீதி விசாரணைக்கு அரசு உத்தரவு

கடலூர், ஜன. 11: காட்டுமன்னார்கோயில் சட்டப் பேரவை உறுப்பினர் ரவிக்குமாரை, போலீஸ் தாக்கியதாக கூறப்படும் புகார் குறித்து நீதி விசாரணைக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ராஜேந்திர ரத்னு புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கடந்த 2-ம் தேதி கடலூர் வட்டம் தொண்டமாநத்தம் கிராமத்தைச் சேர்ந்த சிவாவின் சவ ஊர்வலம் சேடப்பாளையத்தில் நடந்தது. இதில், பங்கேற்ற ரவிக்குமார் எம்.எல்.ஏ.வை, காவல்துறையினர் தாக்கியதாக கூறப்படுகிறது.

இதுகுறித்த உண்மை நிலையை அறிய, மாவட்ட நிர்வாக நடுவர் மற்றும் மாவட்ட ஆட்சியத் தலைவரை விசாரணை அலுவலராக நியமித்து, அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

எனவே, மாவட்ட ஆட்சியர் 25-1-2007 அன்று, காலை 11 மணிக்கு, ஆட்சியர் அலுவலக நீதிமன்றக் கூடத்தில் இதுகுறித்து விசாரணை நடத்த உள்ளார்.

சேடப்பாளையம் கிராமத்தில் 2-1-2007 அன்று, நடைபெற்ற சவ ஊர்வலத்தில் பங்கேற்ற ரவிக்குமாரை, காவல் துறையினர் தாக்கியதாக கூறப்படுவது குறித்த விவரங்களை நேரடியாகவோ, வேறு எந்த விதத்திலோ தெரிந்தவர்கள், இந்த விசாரணையில் ஆஜராகி அவர்களுக்கு தெரிந்த விவரங்களை ஆட்சியரிடம் தெரிவிக்கலாம். வாய்மொழியாகவோ, எழுத்து மூலமாகவோ இதைத் தெரிவிக்கலாம் என்றும் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.

Posted in abuse, Attack, civil rights, Collectorate, Cuddalore, D Ravikumar, Dalit Panthers, District Collector, District Magistrate, DPI, Gaikward Babu, Human Rights, Kattumanaar Koil, Kattumanaar Kovil, Kattumanar Koil, Kattumanar Kovil, Law, Makkal Civil Rights Kazhagam, Manitha Urimai Iyakkam, MLA, municipal chairman, Municipality, Nellikuppam, Order, Peoples Watch, Police, Puratchi Thamizhagam, Rajendra Ratnoo, Ravi kumar, Ravikkumar, S N Nagar, Thamarai Selvan, vice-chairman, Viduthalai Chiruthaigal, Viduthalai Chiruthaikal, Viduthalai Siruthaigal, Vituthalai Siruthaikal | Leave a Comment »

Tamil nadu Government moves in a Clandestine manner against High Court Orders

Posted by Snapjudge மேல் நவம்பர் 7, 2006

சென்னை விமான நிலைய விரிவாக்கப் பிரச்சினை: பொழிச்சலூரில் குடியிருப்புப் பகுதிகளை கையகப்படுத்தும் திட்டம் தயார்?

சென்னை, நவ. 7: சென்னை விமான நிலைய விரிவாக்கத் திட்டத்துக்காக பொழிச்சலூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள குடியிருப்புகளை கையகப்படுத்துவதற்கான திட்டம் உருவாக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சென்னை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக விரிவாக்க வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று மத்திய அரசு இதற்கான திட்டத்தை உருவாக்கியுள்ளது.

மத்திய அமைச்சரவையும் இத்திட்டத்துக்கு ஒப்புதல் அளித்துவிட்டது.

இத்திட்டத்துக்கு தேவையான 1,457 ஏக்கர் நிலத்தை இலவசமாக அளிக்க தமிழக அரசு முன்வந்தது.

இதற்கான நிலத்தை கையகப்படுத்த முதலில் உருவாக்கிய திட்டத்தை இந்த ஆண்டு மார்ச் மாதம் தமிழக அரசு மாற்றியது.

இதன்படி பொழிச்சலூர், கவுல்பஜார், அனகாபுத்தூர் பகுதிகளில் உள்ள குடியிருப்புப் பகுதிகளை கையகப்படுத்த திட்டமிடப்பட்டது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இப்பகுதி மக்கள் கடந்த 8 மாதங்களாக பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இப்பிரச்சினையில் குடியிருப்புப் பகுதிகளை கையகப்படுத்தும் திட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் நிலங்களை கையகப்படுத்த சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடைவிதித்துள்ளது.

இந்நிலையில் தேவையான நிலத்தை தமிழக அரசு அளித்தால் தான் விமான நிலைய விரிவாக்கத்திட்டத்துக்கான பணிகள் தொடங்கப்படும் என மத்திய அரசு அறிவித்தது.

இந்நிலையில் அண்மையில் சென்னை வந்த பிரதமர் மன்மோகன் சிங்கிடம் விமான நிலைய விரிவாக்கத்திட்டம் குறித்து தமிழக முதல்வர் கருணாநிதி மீண்டும் வலியுறுத்தினார்.

இதற்கு பதில் அளித்த பிரதமர் விமான நிலைய விரிவாக்கத் திட்டத்துக்காண பணிகள் விரைவில் தொடங்கப்படும் என அறிவித்தார்.

இதையடுத்து, நீதிமன்றத்தின் இடைக்கால தடை உத்தரவை மீறி, இத்திட்டத்துக்குத் தேவையான நிலத்தை கையகப்படுத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

குடியிருப்புப் பகுதிகளை விரைந்து கையகப்படுத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. மக்களின் எதிர்ப்பு காரணமாக இது தொடர்பான விவரங்கள் மிக ரகசியமாக வைக்கப்பட்டுள்ளன.

விமான நிலைய விரிவாக்கப்பணிகளை வரும் ஜனவரி மாதம் தொடங்கும் வகையில் செயல்படுவதாக தமிழக அரசு மத்திய அரசிடம் உறுதி அளித்துள்ளதாக விமான நிலையங்கள் ஆணைக்குழு அதிகாரிகள் தெரிவித்தனர்.

தமிழக அரசின் இத்தகைய செயலால் பொழிச்சலூர் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் சுமார் 50 ஆயிரத்துக்கும் அதிகமானோர் தங்களது வீடுகளை இழக்கும் நிலை ஏற்படும் என இப்பகுதி குடியிருப்போர் சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் டாக்டர் செல்வராஜன் தெரிவித்தார். வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில் தமிழக அரசின் இத்தகைய செயல்பாடு இப்பகுதி மக்களுக்கு அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது என்றார் அவர்.

==========================================================================
பொழிச்சலூர் தாங்கல் ஏரியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்: ஆட்சியர் அதிரடி நடவடிக்கை

சென்னை, மார்ச் 19: சென்னை பொழிச்சலூரில் தாங்கல் ஏரியில் 23 ஏக்கர் நிலத்தில் இருந்த ஆக்கிரமிப்புகள் அண்மையில் அகற்றப்பட்டன.

இது தொடர்பாக இப்பகுதி குடியிருப்போர் நலச்சங்கங்கள் புகார் அளித்த 3-வது நாளிலேயே காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் இங்கு ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

சென்னை பல்லாவரத்தை அடுத்த பொழிச்சலூரில் உள்ளது தாங்கல் ஏரி. சுமார் 40 ஏக்கருக்கும் அதிகமான பரப்பளவுள்ள இந்த ஏரியில் கடந்த சில ஆண்டுகளாக ஆக்கிரமிப்புகள் அதிகரிக்க தொடங்கின.

அனகாபுத்தூர் வழியாக 200 அடி சாலை அமைக்கும் பணிகளுக்காக நிலம் அளித்தவர்களை இந்த தாங்கல் ஏரியின் ஒரு பகுதியில் மாவட்ட நிர்வாகம் குடியமர்த்தியது.

இந்நிலையில், இந்த புதிய குடியேற்றத்துக்கு அருகில் உள்ள 23 ஏக்கர் நிலத்தை இப்பகுதியை சேர்ந்த சிலர் குடிசை போட்டு ஆக்கிரமித்தனர்.

பொழிச்சலூர் ஊராட்சி தலைவராக இருந்த அரசியல் பிரமுகர் தலைமையில் இந்த ஆக்கிரமிப்புகள் நடைபெற்றதாக இப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தனர்.

ஊராட்சி நிர்வாகத்தின் அதிகாரத்தை பயன்படுத்தி தாங்கல் ஏரியில் உள்ள நிலத்தை ஒரு சென்ட் ரூ.50 ஆயிரம் வீதம் விற்பனை செய்யப்பட்டது என்றும், இவ்வாறு விற்பனை செய்த நிலங்களுக்கு விதிகளுக்கு புறம்பாக வீட்டுவரி ரசீது உள்ளிட்ட ஆவணங்கள் வழங்கப்பட்டன என பொழிச்சலூர் பகுதி மக்கள் புகார் தெரிவித்தனர்.

இந்நிலையில், இங்குள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்குமாறு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியருக்கு இப்பகுதி குடியிருப்போர் சங்கங்களின் நிர்வாகிகள் அண்மையில் புகார் அளித்தனர்.

இந்த புகாரை விசாரித்த மாவட்ட ஆட்சியர் பிரதீப் யாதவ் தாங்கல் ஏரியில் ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற உத்தரவிட்டார்.

இதன்படி இங்கு நீர் நிலையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட சுமார் 50-க்கும் அதிகமான குடிசைகள், கட்டடங்கள் போலீஸ் பாதுகாப்புடன் புதன்கிழமை இடிக்கப்பட்டன.

இருப்பினும், இந்த ஆக்கிரமிப்புகளுக்கு காரணமான ஆளும் கட்சி பிரமுகர் மீது நில மோசடி வழக்கு பதிவு செய்ய வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

——————————————————————————-

அனைத்துக் கட்சி கூட்டத்தில் முடிவு: சென்னை விமான நிலையம் விரிவாக்கம் – ஸ்ரீபெரும்புதூரில் புதிய விமான நிலையம்

சென்னை விமான நிலைய விரிவாக்கம் பற்றி சட்டமன்ற கட்சித் தலைவர்கள் கூட்டம் முதல்வர் கருணாநிதி தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. உடன் தலைமைச் செயலர் எல்.கே.திரிபாதி, அமைச்சர்கள் கே.என்.நேரு, துரைமுருகன், அதிமுக முன்னாள் அமைச்சர் டி.ஜெயகுமார், பாமக தலைவர் ஜி.கே.மணி.

சென்னை, மே 23: சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம் 1,069 ஏக்கரில் விரிவு படுத்தப்படுகிறது. இதற்கான பணிகள் செவ்வாய்க்கிழமையே தொடங்கிவிட்டதாக முதல்வர் கருணாநிதி கூறினார்.

சென்னை விமான நிலைய விரிவாக்கப் பணிகள் குறித்து அனைத்துக் கட்சிக் கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் அனைத்து கட்சிகளையும் சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

இக்கூட்டத்தில் சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தை 1,069 ஏக்கரில் விரிவுபடுத்துவதென தீர்மானிக்கப்பட்டது.

விரிவாக்கம் செய்யும் பணிகளால், அப்பகுதி மக்கள் பெரிதும் பாதிப்படைவார்கள் என்று கூறி அதற்கு அதிமுக-வினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

அதிமுக தவிர, மற்ற கட்சியினர் விரிவாக்கப் பணிகளுக்கு முழு ஒத்துழைப்பு அளித்துள்ளனர் என்று கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் கருணாநிதி தெரிவித்தார்.

சென்னை மீனம்பாக்கத்தை விரிவுபடுத்துவதற்காக மணப்பாக்கம், கொளப்பாக்கம், கெருகம்பாக்கம், தரப்பாக்கம் ஆகிய கிராமங்களில் 1,069.99 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

அங்கு பாதிப்புக்குள்ளாகும் குடிசைகள், மாடி வீடுகள், ஓட்டு வீடுகள் மொத்தம் 947. இவர்களுக்கு மாற்று ஏற்பாடுகளைச் செய்து கொடுத்து மறுவாழ்வுக்கான முயற்சிகள் அனைத்தும் நிறைவு செய்யப்படும். விரிவாக்கப் பணியின் முதல் கட்டமாக இத்தகைய மறுவாழ்வுப் பணிகள் மேற்கொள்ளப்படும்.

அதேசமயம் விரிவாக்கப் பணிகளை இந்திய வானூர்திக் குழுமம் (ஏஏஐ) ஏற்று நடத்திட வேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டது.

மீனம்பாக்கம் விமான நிலைய விரிவாக்கப் பணிகள் நடைபெறும்போது புதிய விமான நிலையம் அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

இந்தப் புதிய விமான நிலையம் ஸ்ரீபெரும்புதூரில் அமைக்கப்படும். இதற்கென 4,820.66 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்படும். புதிய விமான நிலையம் அமைக்கும் பணியையும் இந்திய வானூர்திக் குழுமமே ஏற்று நடத்த வேண்டும் என்று இக்கூட்டத்தில் தீர்மானம் செய்யப்பட்டது.

இந்த பணிகள் முதல் கட்டமாக ரூ. 1,000 கோடியிலும் அடுத்தகட்டமாக ரூ. 1,000 கோடியிலும் மொத்தம் ரூ. 2,000 கோடியில் இப்பணிகள் மேற்கொள்ளப்படும் என்றார் கருணாநிதி.

விரிவாக்கப் பணி மற்றும் புதிய விமானம் அமைக்கும் பணியை இந்திய வானூர்திக் குழுமமே ஏற்று நடத்த வேண்டும் என்ற முடிவை தமிழக அரசு எடுத்துள்ளது. தமிழக அரசு இதுவரை, தனியார் மூலம் விமான நிலைய விரிவாக்கப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்ற நிலையிலிருந்து மாறி, தற்போது ஏஏஐ மூலம் நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

அனைத்துக் கட்சிக் கூட்டத்தில்

  • நிதியமைச்சர் அன்பழகன் (திமுக),
  • டி.சுதர்சனம்,
  • டி. யசோதா (காங்.),
  • டி. ஜெயக்குமார் (அதிமுக),
  • ஜி.கே. மணி,
  • இரா. மலையப்பசாமி (பாமக),
  • சி. கோவிந்தசாமி,
  • டி. நந்தகோபால் (மார்க்சிஸ்ட் கம்யூ.),
  • வை. சிவபுண்ணியம் (இந்திய கம்யூனிஸ்ட்),
  • வீர. இளவரசன் (மதிமுக),
  • பண்ருட்டி எஸ். ராமச்சந்திரன்,
  • வி. பார்த்தசாரதி (தேமுதிக),
  • கலிலூர் ரஹ்மான் (டிஎன்ஐயுஎல்),
  • செல்வம்,
  • கே. பாலகிருஷ்ணன் (டிபிஐ),
  • பூவை ஜெகன்மூர்த்தி,
  • சிவஞானம் (புரட்சி பாரதம்) ஆகியோர் பங்கேற்றனர்.

———————————————————————————————————————————

பொழிச்சலூர் தாங்கல் ஏரியில் ஆக்கிரமிப்பு அகற்றம் எப்போது?

சென்னை பொழிச்சலூர் தாங்கல் ஏரியை ஆக்கிரமித்து உருவாக்கப்பட்டுள்ள ஞானமணி நகர்.

சென்னை, ஜூலை 2: சென்னை பொழிச்சலூரில் தாங்கல் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகள் இன்னும் அகற்றப்படாமல் உள்ளன.

சென்னை விமான நிலையத்தை ஒட்டியுள்ள தாங்கல் பகுதியில் புறம்போக்கு நிலத்தை இப் பகுதியை சேர்ந்த திமுக பிரமுகர் ஞானமணி உள்ளிட்ட சிலர் ஆக்கிரமிப்பு செய்து சுமார் 200-க்கும் அதிகமானோருக்கு விற்பனை செய்துள்ளனர்.

இதன் மூலம் இங்கு ரூ. 1 கோடிக்கும் அதிகமாக நில மோசடி நடைபெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

இது தொடர்பான புகார்களை ஆய்வு செய்த காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர், உரிய நடவடிக்கை எடுக்க தாம்பரம் வட்டாட்சியருக்கு உத்தரவிட்டார்.

இதையடுத்து தாம்பரம் வட்டாட்சியர் அளித்த புகாரின் அடிப்படையில் தாங்கல் பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற சென்ற அதிகாரிகளை தாக்க முயன்றது உள்ளிட்ட பல்வேறு பிரிவுகள் அடிப்படையில் திமுக பிரமுகரும் பொழிச்சலூர் ஊராட்சி துணைத் தலைவருமான ஞானமணி அண்மையில் கைது செய்யப்பட்டார். பின்னர் தனது சொந்த ஜாமீனில் ஞானமணி விடுவிக்கப்பட்டார்.

இருப்பினும், பொழிச்சலூரில் தாங்கல் பகுதியில் ஞானமணி நகர், விநாயகா நகர் உள்ளிட்ட பகுதிகளில் அரசுக்குச் சொந்தமான புறம்போக்கு நிலங்களை ஆக்கிரமித்து குடிசை மாற்று வாரிய அதிகாரிகள் துணையுடன் அவற்றுக்கு அங்கீகாரம் பெற்றுத் தந்ததாக ஞானமணி மீது இப் பகுதி மக்கள் புகார் தெரிவித்தனர்.

இதையடுத்து புகார்கள் தொடர்பான அவணங்களை ஊராட்சி அலுவலகத்தில் இருந்து வருவாய்த்துறையினர் எடுத்து சென்று தற்போது தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

நீதிமன்றத்தில் வழக்கு: இந் நிலையில் வருவாய்த் துறை நடவடிக்கையை எதிர்த்து ஞானமணி தரப்பில் நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டிருப்பதாகவும், இதற்கு வருவாய்த் துறை சார்பில் பதில் மனு விரைவில் தாக்கல் செய்யப்படும் என தாம்பரம் வட்டாட்சியர் சுப்பையா தெரிவித்தார்.

இந்த நடவடிக்கைகளுக்கு பின்னரே தாங்கல் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்படும் என்றார் அவர்.

————————————————————————————-
விமான நிலைய விரிவாக்கம்: நிலம் கையகப்படுத்துவதை எதிர்த்து மணப்பாக்கம் கிராமத்தினர் போர்க்கொடி – எம்.எல்.ஏ. முன்னிலையில் ஆட்சியரிடம் மனு

சென்னை, ஜூலை 12: சென்னை மீனம்பாக்கம் விமான நிலைய விரிவாக்கத்துக்கு நிலம் கையகப்படுத்துவதை எதிர்த்து, எம்.எல்.ஏ. யசோதா துணையுடன், மணப்பாக்கம் பொதுமக்கள் ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

சென்னை விமான நிலைய விரிவாக்கத்துக்காக காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் மொத்தம் 1070 ஏக்கர் நிலப்பகுதியை கையகப்படுத்த முடிவு செய்துள்ளது.

இதற்காக மணப்பாக்கம், கெருகம்பாக்கம், தரப்பாக்கம் பகுதிகளில் அதிகாரிகள் நிலம் கையகப்படுத்துவது குறித்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

நிலம் கையகப்படுத்தப்படுவதற்கு உரிய இழப்பீடும், மாற்று இடமும் தரப்படும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்திருந்த போதிலும், மணப்பாக்கம் பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் மணப்பாக்கம் மார்பிள் ரிவர்வியு விரிவு பகுதியைச் சேர்ந்த மக்கள் புதன்கிழமை காஞ்சிபுரம் ஆட்சியர் அலுவலகத்தில் ஸ்ரீபெரும்புதூர் தொகுதி எம்.எல்.ஏ. யசோதா தலைமையில் ஆட்சியர் பிரதீப் யாதவை சந்தித்தனர்.

“எங்கள் பகுதியில் 250 வீடுகள் உள்ளன. நாங்கள் இரண்டரை ஆண்டுகளாக அங்கு வசித்து வருகிறோம். எங்கள் வீடுகளை இடிக்கக் கூடாது. நாங்கள் அப்பகுதியை விட்டுச் செல்ல மாட்டோம். நிலம் கையகப்படுத்துவதை நிறுத்த வேண்டும்’ எனக் கூறி மனு அளித்தனர்.

இதற்கு ஆட்சியர் யாதவ் பதில் கூறுகையில், “நிலம் கையகப்படுத்துவது குறித்து பரிசீலித்து வருகிறோம். நிலத்தை இழப்போருக்கு உரிய இழப்பீடு தரப்படும்’ என்றார்.

பொதுமக்களுடன் வந்த யசோதா எம்.எல்.ஏ. கூறியது:

சென்னை விமான நிலைய விரிவாக்கத்துக்காக மொத்தம் 1500 வீடுகள் தான் பாதிக்கப்படும் என முதலில் கூறினர். தற்போது 300 வீடுகள் தான் பாதிக்கப்படும் எனக் கூறியுள்ளனர்.

விமான நிலையம் விரிவாக்கம் செய்யப்பட்டால், லட்சக்கணக்கான மக்கள் பயன் பெறுவர்.

சிலர் பாதிப்படையும் போது, அவர்களுக்கு உரிய இழப்பீடு தரப்படும். எனது தொகுதி மக்களின் நலனையும் கருத்தில் கொண்டு செயல்படுகிறேன் என்றார் யசோதா.

——————————————————————————————————————————————————-
விமான நிலைய விரிவாக்கத்துக்கு கோவூரிலும் நிலம் கையகப்படுத்த திட்டம்: தாம்பரம்-மதுரவாயல் பைபாஸ் சாலையில் புதிய நுழைவாயில்

சென்னை, நவ. 7: சென்னை விமான நிலைய விரிவாக்கத் திட்டத்துக்கு போரூரை அடுத்த கோவூரிலும் நிலம் கையகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இது தொடர்பான புதிய அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

சென்னை விமான நிலையத்தை விரிவாக்கம் செய்யும் திட்டத்துக்காக முதலில் 1,457 ஏக்கர் நிலம் கையகப்படுத்த திட்டமிடப்பட்டது.

தற்போதுள்ள விமான நிலையத்தின் வடக்கில் உள்ள பகுதியில் இருந்து நிலம் கையகப்படுத்த திட்டமிடப்பட்டது. பின்னர் இதில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு பொழிச்சலூர், கவுல்பஜார், அனகாபுத்தூர் பகுதிகளில் நிலம் கையகப்படுத்த திட்டமிடப்பட்டது.

இதற்கு பொழிச்சலூர் உள்ளிட்ட பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர்.

இந் நிலையில் கடந்த மே மாதம் நடைபெற்ற அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் விமான நிலைய விரிவாக்கத் திட்டத்துக்கு பொழிச்சலூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து நிலம் கையகப்படுத்துவதை கைவிட முடிவு செய்யப்பட்டது.

ஏற்கெனவே முதலில் திட்டமிட்டபடி விமான நிலையத்துக்கு வடக்கில் உள்ள பகுதிகளில் நிலம் கையகப்படுத்தவும் அனைத்து கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

மேலும், எதிர்காலத் தேவையைக் கருத்தில் கொண்டு ஸ்ரீபெரும்புதூரில் சுமார் 4,820 ஏக்கர் நிலத்தில் புதிய சர்வதேச விமான நிலையம் அமைக்கவும் முடிவு செய்யப்பட்டது.

திட்டத்தில் மாற்றம்: இதன்படி, விமான நிலையத்துக்கு வடக்கில் உள்ள மணப்பாக்கம், கெருகம்பாக்கம், கொளப்பாக்கம், தரப்பாக்கம் ஆகிய ஊர்களில் உள்ள நிலங்களை கையகப்படுத்த முதலில் அரசாணை ஜூலை 9-ம் தேதி வெளியிடப்பட்டது.

இந் நிலையில் விரிவாக்கத் திட்டத்துக்கு தேர்வு செய்யப்பட்ட நிலத்துக்கும் தற்போதைய விமான நிலையம் அமைந்துள்ள பகுதிக்கும் நடுவில் ஆறு (அடையாறு) குறுக்கிடுவதால் திட்ட செயலாக்கத்தில் நடைமுறைப் பிரச்னைகள் ஏற்படும் என இந்திய விமான நிலையங்கள் ஆணைக்குழு தரப்பில் கருத்து தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து ஏற்கெனவே திட்டமிட்டபடி மணப்பாக்கம் முதல் கோவூர் வரையுள்ள பகுதியில் 1,069 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக புதிய அரசாணை அக்டோபர் 9-ல் வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி மணப்பாக்கத்தில் 87.85 ஏக்கரும், கெருகம்பாக்கத்தில் 144.57 ஏக்கரும், கொளப்பாக்கத்தில் 145.69 ஏக்கரும், தரப்பாக்கத்தில் 32.56 ஏக்கரும், கோவூரில் 22.51 ஏக்கரும் என மொத்தம் 1,069 ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ளது.

இதில் மணப்பாக்கம் முதல் தரப்பாக்கம் வரையுள்ள நிலங்களில் 3-வது ஓடுபாதையும், தரப்பாக்கம், கோவூரின் சில பகுதிகள் உள்ளடக்கிய நிலத்தில் புதிய முனைய கட்டடங்களும் அமைய உள்ளன.

மேலும், புதிய முனையங்களை பயன்படுத்த தாம்பரம்-மதுரவாயல் பைபாஸ் சாலையில் இருந்து விமான நிலையத்துக்கு புதிய நுழைவாயில் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது என விமானப் போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்தனர்.

பாதுகாப்பு? விமான நிலைய விரிவாக்கம் தொடர்பாக தற்போது உருவாக்கப்பட்டுள்ள புதிய திட்டத்தின்படி விமான நிலையத்தின் 2 பெரிய ஓடுபாதைக்கு நடுவே அடையாறு செல்லும்.

இதனால், தீவிரவாதிகள் தாக்குதல் தொடர்பான அச்சம் அதிகரித்துள்ள சூழலில் பாதுகாப்பு தொடர்பாக ஏற்படும் பிரச்னைகளை தவிர்க்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதே பல்வேறு தரப்பினரின் எதிர்பார்ப்பு.

வாடகை வீடுகளில் வசிப்பவர்கள் நிலை என்ன?

விமான நிலைய விரிவாக்கத்துக்கு நிலம் கையகப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டு அரசாணை (ஜி.ஓ. எம்எஸ். 108) வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி கையகப்படுத்த தேர்வு செய்யப்பட்டுள்ள நிலங்களில் இருப்பவர்களுக்கு மாற்று இடங்கள் வழங்குவதற்கான நடவடிக்கைகளை எடுக்க மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தப்பட்டுள்ளார்.

இதில் நிலத்தின் உரிமையாளர்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளதால் இப் பகுதிகளில் வாடகை வீடுகளில் குடியிருப்பவர்களின் நிலை என்ன என்ற கேள்வி எழுந்துள்ளது.

மேலும், போரூர், நந்தம்பாக்கம், கிண்டி உள்ளிட்ட பகுதிகளில் தனியார் நிறுவனங்களில் வேலை செய்யும் ஏராளமானோர் மணப்பாக்கம், கெருகம்பாக்கம், கோவூர் உள்ளிட்ட பகுதிகளில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியுள்ளனர்.

நிலத்தின் உரிமையாளர்களுக்கு மட்டும் மாற்று இடம் வழங்கப்பட்டால் இவர்கள் வீடுகளை இழந்து தவிக்கும் நிலை ஏற்படும் என இப் பகுதி மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

எனவே, அரசு இந்த பகுதிகளில் வாடகை வீடுகளில் இருப்பவர்களுக்கு விமான நிலைய விரிவாக்கத்தால் ஏற்படும் இழப்பை சரி செய்வதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே இப் பகுதி மக்களின் கோரிக்கை.
——————————————————————————————————————————————————-

விமான நிலைய விரிவாக்கத்தால் 381 வீடுகள் இடிக்கப்படும்

சென்னை,நவ. 7: சென்னைக்கு விமானப் போக்குவரத்து அதிகரித்து விட்டதால் விமான நிலையத்தை விரிவுபடுத்த வேண்டியது மிகவும் அவசியம் ஆகும் என்று தமிழக அரசு உயர் நீதிமன்றத்தில் கூறியுள்ளது.

விமான நிலையம் அருகேயுள்ள மணப்பாக்கம், கொளப்பாக்கம், கெருகம்பாக்கம், தரப்பாக்கம் ஆகிய இடங்களில் 1069.99 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த அரசு முடிவு செய்துள்ளது. நிலம் கையகப்படுத்தும் பணி தொடங்கியுள்ளது. புதிய திட்டத்தால் 381 வீடுகள் பாதிக்கப்படும் என்றும் அரசு கூறியுள்ளது.

விமான நிலைய விரிவாக்கம் செய்யப்படும் இடத்தில் பட்டா நிலத்தில் வீடுகள் கட்ட தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து இ.வி.பி. வீட்டு வசதி நிறுவனம் தொடர்ந்த வழக்கில் அரசு சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. பதில் மனுவில் அரசு கூறியிருப்பதாவது:

சென்னை அருகே மீனம்பாக்கத்தில் தற்போதுள்ள விமான நிலையம் 1151 ஏக்கரில் அமைந்துள்ளது. இங்கு விமான ஓடுபாதைகள் இரண்டு உள்ளன. சென்னை விமான நிலையத்துக்கு பயணிகள் விமானங்களும், சரக்கு விமானங்களும் அதிக எண்ணிக்கையில் வந்து செல்கின்றன. எனவே, விமான நிலையத்தை உடனே விரிவாக்கம் செய்ய வேண்டியுள்ளது.

சென்னை விமான நிலையத்தில் இறங்கும் முன்பாக விமானங்கள், வானிலேயே வட்டமடித்துக் காத்திருக்க வேண்டியுள்ளது. இதனால் எரிபொருள் வீணாகிறது. எனவே விமான நிலையம் அருகே 583 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்த 2005-ல் முடிவு செய்யப்பட்டது. எனினும் அனகாபுத்தூர், பொழிச்சலூர், கவுல் பஜார், பல்லாவரம் கன்டோன்மெண்ட், பம்மல் போன்ற இடங்களில் பொதுமக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இத்திட்டத்தால் 5050 வீடுகளை இடிக்க வேண்டியிருந்தது.

எனவே, அந்த இடத்துக்கு பதிலாக மணப்பாக்கம், கொளப்பாக்கம், தரப்பாக்கம், கெருகம்பாக்கம் ஆகிய கிராமங்களில் நிலத்தைக் கையகப்படுத்த 2-5-2007 ல் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இப்புதிய திட்டத்தால் 381 வீடுகள் மட்டுமே பாதிக்கப்படும்.

இதற்கு அனைத்துக் கட்சித் தலைவர்களும் ஒப்புதல் அளித்துள்ளனர்.

கையகப்படுத்தப்படும் நிலத்தின் உரிமையாளர்களுக்கு சட்டப்படி இழப்பீடு வழங்கப்படும். 2005-ம் ஆண்டில் அப்போதிருந்த நிலைமைக்கு ஏற்ப இப்பகுதிகளில் வீடுகள் கட்ட அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் பொது நோக்கத்துக்காக இப்போது இந்த இடத்தில் நிலம் தேவைப்படுகிறது. விமான நிலைய விரிவாக்கத்துக்கு 1069 ஏக்கர் நிலம் கையகப்படுத்த இந்திய விமான நிலையம் ஆணையம் 1-8-2007 ல் அனுமதி அளித்துள்ளது. இது தவிர திருவள்ளூர் தாலுகா ஸ்ரீபெரும்புதூரில் நவீன விமான நிலையம் அமைக்க 4,820 ஏக்கர் நிலம் கையகப்படுத்தவும் அரசு முடிவு செய்துள்ளது. எனவே இ.வி.பி. வீட்டு வசதி நிறுவனத்தின் மனுவைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று அரசு பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது.

நீதிபதி ஏ.குலசேகரன் இவ்வழக்கு விசாரணையை நவம்பர் 13-ம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளார்.

——————————————————————————————————————————————————-

Posted in AAI, abuse, ADMK, Agitation, AIADMK, Airport, Anagaputhoor, Anagaputhur, Anakaputhoor, Anakaputhur, Bribes, Chennai, Collector, Compensation, Corruption, Destruction, Dhaangal, Dharapakkam, Dharappakkam, DMK, DPI, encroachment, Expansion, Extension Project, Gaul Bazaar, High Court, Homeless, KANCHEEPURAM, Kanchi, Kanchipuram, Kanjeepuram, Kanjeevaram, Karunanidhi, Kerugampakkam, Kerukampakkam, kickbacks, Kolapakkam, Kolappakkam, Lake, Law, Madras, Manapakkam, Manappaakkam, Manappakkam, Manmohan Singh, MK, Njaanamani, Njaanamani Nagar, Njamani Nagar, Njanamani, Njanamani Nagar, Order, Pallavaram, PMK, Polichaloor, Polichalur, Power, Pozhichaloor, Pradeep Yadav, Sriperumpudhoor, Sriperumpudhur, Sriperumpudoor, Sriperumpudur, Sriperumputhoor, Sriperumputhur, Tamil Nadu, Thaangal, Thaankal, Tharapakkam, Tharappakkam, TN | 1 Comment »