Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Doordarshan’ Category

Cinema shooting in Trains – Railways updates the Procedure for Movie Locations

Posted by Snapjudge மேல் ஜூன் 10, 2007

ரயில் நிலையங்களில் சினிமா படப்பிடிப்புக்கு தடை

புது தில்லி, ஜூன் 11: இனி ரயிலின் மீது ஏறி, வில்லன்களுடன் பாய்ந்து, பாய்ந்து சண்டை போடுவது, காதலியை சமாதானப்படுத்த ரயில் படிக்கட்டில் தொங்கியபடியே அடுத்த ரயில்நிலையம் வரும் வரை வசனம் பேசுவது, பல வண்ண உடைகளில் ஆர்ப்பாட்டமாக நடனக்குழுவினருடன் டான்ஸ் ஆடுவது போன்ற காட்சிகளை இனி காணமுடியாது.

ரயில்வே துறையினர் வெளியிட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகளை கடைபிடித்தால் மட்டுமே இனி இதுபோன்ற காட்சிகளை படம்பிடிக்க அனுமதி கிடைக்கும்.

பயணிகளுக்கு எவ்வித இடையூறுகளும் இல்லை என உறுதிப்படுத்தவேண்டும், பகல்நேரங்களில் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள ரயில் நிலையங்களில் படப்பிடிப்பு வைக்கக்கூடாது உள்ளிட்ட பல வழிமுறைகளை ரயில்வேதுறை வலியுறுத்தி உள்ளது.

படப்பிடிப்புக்கு நாள் ஒன்றுக்கு ரூ.1 லட்சம், 50 ஆயிரம், 25 ஆயிரம் என மூன்று பிரிவுகளில் வசூலிக்கப்படும். அதேபோல, உரிமக் கட்டணமாக ரூ. 30 ஆயிரமும் வசூலிக்கப்படும். மறுசீரமைக்கப்பட்டுள்ள இந்த உரிமக் கட்டணம் ஜூன் 1 முதல் அமுல்படுத்தப்பட்டுள்ளது எனவும் ரயில்வேத்துறை தெரிவித்துள்ளது.

படப்பிடிப்பின்போது எவ்வித சேதமும் நிகழக்கூடாது. இதற்கு முன்கட்டணமாக உரிமக்கட்டணம் செலுத்தவேண்டும். அதோடு, ரயில்வே நிர்வாகத்துடன் ஓர் உத்தரவாத ஒப்பந்தம் செய்து கொள்ளவேண்டும்.

தூர்தர்ஷன், புனே மற்றும் கோல்கத்தா திரைப்படக் கல்லூரிகள் தவிர அரசு அங்கீகாரம் பெற்ற திரைப்பட பயிற்சி நிறுவனங்களுக்கு உரிமக்கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளன.

இந்த வழிமுறைகள் அனைத்தும் ரயில் உற்பத்தி யூனிட்டுகள் மட்டுமில்லாது அனைத்து பொதுத்துறை நிறுவனங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

திரைப்படத்தின் திரைக்கதையில் ரயில்வே துறையினருக்கு சொந்தமான பொருள்களுக்கு சேதாரம் ஏற்படும்வகையில் அமைக்கப்பட்டுள்ளதா என ஆய்வு செய்யப்படும். அதுமட்டுமில்லாமல், ரயில்வே துறையின் முன் அனுமதி இல்லாமல் ரயில் நிலையங்கள் மற்றும் ரயில்களின் பெயர்களை மாற்றுதல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது.

ரயில்வே துறையினரிடம் ஏற்கெனவே தாக்கல் செய்துள்ள திரைக்கதையில் ஏதேனும் மாற்றம் செய்து படம் பிடிக்கப்படுகிறதா என்பதை கண்காணிக்க படப்பிடிப்பு நடக்கும் இடங்களில் சிறப்பு அதிகாரி ஒருவர் நியமிக்கப்படுவார்.

சினிமாக் குழுவினர் தவிர மற்றவர்கள் புகைப்படம் மற்றும் வீடியோ எடுக்க அனைத்து ரயில்நிலையங்களில் உள்ள முதன்மை மக்கள் தொடர்பு அதிகாரியிடம் அனுமதி பெற்றுக்கொள்ளலாம்.

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் ரயில்வேத் துறையிடம் இதற்கான அனுமதியைப் பெற்றுக் கொள்ளலாம். வியாபார மற்றும் வணிக ரீதியாக புகைப்படம் எடுத்துக் கொள்ள எவ்வித உரிமக் கட்டணமும் செலுத்தத் தேவையில்லை. இச்சலுகை பத்திரிகைகளுக்கும் பொருந்தும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Posted in Bollywood, Camera, Cinema, Doordarshan, Duets, Fights, Film Institute, Films, Freight, Hindi, Kollywood, License, Locations, Love, Movie, Movies, Permission, Permissions, Picturization, Platform, Procedure, Process, Production, Props, Railways, Rly, Scenes, Screenplay, Sets, Spot, Telugu, Tollywood, Trains, Travel, Traveler | Leave a Comment »

Adoor to churn out two films from Thakazhi’s stories

Posted by Snapjudge மேல் மார்ச் 14, 2007

ஞானபீட விருது எழுத்தாளர் தகழி சிவசங்கரரின் கதைகளை படமாக்குகிறார் அடூர் கோபாலகிருஷ்ணன்

திருவனந்தபுரம், மார்ச் 12: ஞானபிட விருது பெற்ற மலையாள எழுத்தாளரான தகழி சிவசங்கர பிள்ளையின் 6 சிறுகதைகள் இரண்டு படமாக தயாரிக்கப்பட உள்ளன.

இதை பிரபல மலையாள திரைப்பட இயக்குநரும், தாதா சாகேப் பால்கே விருது வென்றவருமான அடூர் கோபாலகிருஷ்ணன் இயக்க உள்ளார். படங்களுக்கான திரைக்கதை வசனம் எழுதப்பட்டு விட்டன. ஒரு படத்திற்கு “மூனு பெண்ணுகள்’ (மூன்று பெண்கள்) என்றும், மற்றொரு படத்திற்கு “கள்ளன்டே மகன்’ (திருடன் மகன்) என்றும் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக அடூர் கோபாலகிருஷ்ணன் கூறியது: நான் படமாக தயாரிக்க உள்ள 6 கதைகளுமே தகழி சிவசங்கரரால் 50 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்டவை. இருந்தபோதிலும் அவை நிகழ்காலத்திற்கு பொருந்தக் கூடியவை. மூன்று கதைகள் பல்வேறு குணாதிசயங்களை உடைய பெண்களைப் பற்றியவை. மற்ற மூன்றும் இந்த சமுதாயத்தில் நடுத்தரக் குடிமகனுக்கு எவ்வாறு நீதி கிடைக்கிறது என்பதைப் பற்றியவை.

இந்த கதைகள் அனைத்தும் என்னை வெகுவாக கவர்ந்தவை. இதனால் கதைகளின் தன்மை மாறும் வகையில் எந்த இடத்திலும் மாற்றம் செய்யவில்லை. இரண்டு படத்தின் படப்பிடிப்பையும் 45-50 நாள்களுக்குள் நடத்தி முடிக்க திட்டமிட்டுள்ளேன். இருந்தபோதிலும் “மூனு பெண்ணுகள்’ படத்தை விரைவில் வெளியிட்டுவிட்டு, பின்னர் “கள்ளன்டே மகனை’ வெளியிட முடிவு செய்துள்ளேன். படங்களை கதை படைப்பாளர் தகழி சிவசங்கரருக்கே அர்ப்பணிக்க உள்ளேன்.

“மூனு பெண்ணுகள்’ படத்தில் நந்திதா தாஸ், பத்மப்பிரியா, காவ்யமாதவன், முரளி மற்றும் சிலர் முக்கியப் பாத்திரம் ஏற்று நடிக்க உள்ளனர். “கள்ளன்டே மகன்’ படத்தில் விஜயராகவன் “திருடன்’ வேடம் தாங்கி நடிக்கிறார் என்றார்.

Posted in Adoor, Adoor Gopalakrishnan, Author, Basheer, Chemeen, Dada Saheb, Doordarshan, Films, Kaavya, Kaavya Madhavan, Kallante Makan, Kerala, Literature, Malyalam, Mohammed Basheer, Mollywood, Moonnu Pennungal, Murali, Nandhitha, Padmapriya, Paul Zachariah, screenplays, Sivasankara Pillai, stories, Thagali, Thagazhi, Thakali, Thakazhi, Thakazhi Sivasankara Pillai, Trivandrum, Vaikom, Women, Writer | Leave a Comment »