Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Donation’ Category

Tsunami Corruption charges – Nagapattinam collector takes action against NGO

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 8, 2007

தொண்டு நிறுவனங்களுக்கு தடை :

நாகை கலெக்டர் அதிரடி

நாகப்பட்டினம் : சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிரந்தர வீடுகளை கட்டுவதில் முறைப்படி செயல்படாத இரண்டு தொண்டு நிறுவனங்களுக்கு தடை விதிக்கப்பட்டது.

சீர்காழி, கொட்டாய்மேடு கிராமத்தில் சுனாமி பாதித்த 165 குடும்பங்களுக்கு வீடு கட்ட “கேர் பிளான்’ தொண்டு நிறுவனத்துக்கு அனுமதியளிக்கப்பட்டது. நிர்ணயித்த காலத்திற்குள் வீடுகள் கட்டவில்லை. நாகை தெத்தி கிராமத்தில் 190 வீடுகள் கட்ட ” ஜாமியாத் உலமா ஹிந்த்’ என்ற தொண்டு நிறுவனம் அனுமதி பெற்றிருந்தது. இதுவும் முறைப்படி பணியை முடிக்கவில்லை. இவற்றின் ஒப்பந்தத்தை ரத்து செய்து கலெக்டர் ஜவகர் உத்தரவிட்டார். இந்த நிறுவனங்கள் மறுவாழ்வு பணி செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.

Posted in 80G, Action, Ban, Care plan, Careplan, Charges, Collector, Construction, Corruption, Donation, Homes, Houses, kickbacks, MNC, Nagai, Nagapattinam, NGO, Operations, Private, relief, Tsunami | Leave a Comment »

ANEW (Association for Non-traditional Employment for Women)

Posted by Snapjudge மேல் ஜூன் 12, 2007

சேவை: ஏழைப் பெண்களுக்கு இலவச தொழிற்பயிற்சி

ந. ஜீவா

முன்பைக் காட்டிலும் பெண்கள் படிப்பது அதிகமாகியிருக்கிறது. மாணவர்களைவிட மாணவிகள் அதிக மார்க்குகள் குவித்து எவரெஸ்ட்டில் கொடிகளை ஒவ்வோராண்டும் நட்டு வருகிறார்கள். என்றாலும் இந்தக் காலத்திலும் பெண் பிள்ளைகள் ஒரு பத்தாவது படித்தால் போதும் என்று நினைக்கக் கூடிய பெற்றோர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். பிளஸ் டூ படித்த பின்னால் படிப்பில் கரைகடந்த ஆர்வம் இருந்தும் படிக்க வசதியில்லாத பெண்களும் இருக்கிறார்கள். அவர்கள் படித்த அந்தக் குறைந்தபட்ச பத்தாவது, பிளஸ் டூ படிப்புகளும் கூட பயனில்லாமற் வீணாகப் போய்விடுகிறது.

இப்படிப்பட்ட பெண்கள் வேலைக்குப் போகும்விதமாக அவர்களுக்கு ஹோம் நர்சிங் பயிற்சி, கார், ஆட்டோ டிரைவிங், கணினிப் பயிற்சி, ஸ்போக்கன் இங்கிலீஷ் பயிற்சி எல்லாம் இலவசமாகக் கற்றுத் தருகிறார்கள்; முடிந்தால் வேலையும் வாங்கித் தருகிறார்கள் சென்னை அண்ணாநகர் ANEW (Association for Non-traditional Employment for Women) என்கிற அமைப்பினர். அந்த அமைப்பைச் சேர்ந்த அனு சந்திரனை அவருடைய அலுவலகத்தில் சந்தித்துப் பேசினோம்…

யாருக்குப் பயிற்சி கொடுக்கிறீர்கள்?

நாங்கள் வேலைவாய்ப்பிற்கான இலவசப் பயிற்சி கொடுப்பது மிகவும் கஷ்டப்படும் குடும்பங்களைச் சேர்ந்த பெண்களுக்குத்தான். பெண் குழந்தைகள் நன்றாகப் படிப்பார்கள். ஆனால் அவர்களால் பத்தாவதையோ, பிளஸ் டூ வையோ தாண்ட முடியாத அளவுக்குக் குடும்பநிலை இருக்கும். பிளஸ் டூ படித்துவிட்டு எந்த வேலைக்கும் போக முடியாமல் இருக்கும் பெண்களுக்கு நாங்கள் பயிற்சி கொடுக்கிறோம். பயிற்சியின் பின் 95 சதவீதம் பேருக்கு வேலையும் வாங்கிக் கொடுத்துவிடுகிறோம். இதனால் அந்தப் பெண்களின் வீட்டுக்கு ஒரு வருமானம் வருகிறது. நாளைக்கு திருமணம் என்று வருகிற போது அந்தப் பணம் அவர்களுக்கு உதவுகிறது.

ஹோம் நர்சிங் பயிற்சி பெற்றவர்களுக்கு வேலை வாய்ப்பு எப்படி?

நாங்கள் ஹோம் நர்சிங் பயிற்சியை நான்கரை மாதத்தில் கற்றுத் தருகிறோம். முதல் இரண்டு மாதங்கள் தியரி கிளாஸ், அதன்பின் இரண்டரை மாதங்கள் சுந்தரம் மெடிக்கல் பவுண்டேஷன் போன்ற நிறுவனங்களில் பிராக்டிகல் பயிற்சி கொடுக்கிறோம். பயிற்சி முடிந்தவுடன் அவர்களுக்கு வேலை கிடைத்துவிடும். நிறைய வீடுகளில் முதியவர்கள் நோய்வாய்ப்பட்டிருப்பார்கள். அவர்களைப் பார்த்துக் கொள்ள வீட்டிலுள்ளவர்களால் முடியாது. வீட்டிலுள்ள எல்லாரும் வேலைக்குப் போகிறவர்களாக இருப்பார்கள். சில நேரங்களில் அவர்களை ஆஸ்பத்திரியில் அட்மிட் பண்ணவும் முடியாது. ஆஸ்பத்திரியில் அவர்களைப் பார்த்துக் கொள்ளணுமே. அதுபோல சிறுகுழந்தைகளை வைத்திருப்பவர்கள் வேலைக்குச் செல்பவர்களாக இருப்பார்கள். வேலைக்குப் போகிற நேரங்களில் சிறுகுழந்தைகளைப் பார்த்துக் கொள்ள யாரும் இருக்கமாட்டார்கள். அப்படிப்பட்டவர்களிடம் எங்களிடம் பயிற்சி பெற்றவர்கள் வேலைக்குச் செல்கிறார்கள். மாதம் குறைந்தபட்சம் ரூ.3700 சம்பளம் கிடைக்கிறது. இப்படித் தேவையுள்ளவர்கள் அவர்களின் தேவையைக் குறிப்பிட்டு எங்களுக்கு போன் செய்தால் அதைக் குறித்துவைத்துக் கொண்டு அவர்கள் தேவைக்குப் பொருத்தமானவர்களை வேலைக்கு அனுப்புகிறோம்.

ஆட்டோ டிரைவிங், கார் டிரைவிங் பயிற்சிகளைப் பற்றிச் சொல்லுங்களேன்?

பெண்களுக்கு ஆட்டோ டிரைவிங், கார் டிரைவிங் பயிற்சி கொடுக்கிறோம். கற்றுக் கொடுப்பது மட்டுமல்லாமல் அவர்களுக்கு லைசென்ஸýம் எடுத்துக் கொடுக்கிறோம். கார் டிரைவிங் ஐதப மூலமாகக் கற்றுத் தருகிறோம். ஒன்றரை மாதம் டிரெயினிங்கிற்குப் பிறகு எங்களிடம் உள்ள மாருதி, அம்பாசிடர் கார்களில் மேலும் 3 மாதங்கள் டிரெயினிங் எடுத்துக் கொள்கிறார்கள். எங்களிடம் பயிற்சி எடுத்த பெண்கள் சென்னை விமானநிலையத்தில் அங்கு வருகிற பயணிகளை உரிய இடத்தில் கொண்டு விடும் பணிகளைச் செய்கிறார்கள். பெரிய ஹோட்டல்களில், தனிப்பட்டவர்களுடைய வீடுகளில் கார் டிரைவராக வேலை செய்கிறார்கள்.

ஆட்டோ டிரைவிங் கற்றுக் கொண்ட பெண்கள் பெரிய பெரிய பள்ளிகளில் ஆட்டோ ஓட்டுகிறார்கள். பள்ளிக்கு வரும் குழந்தைகளை ஏற்றிச் செல்வதுதான் அவர்களுடைய வேலை. கார் டிரைவிங் பயிற்சி, ஆட்டோ டிரைவிங் பயிற்சி எடுத்தவர்கள் எல்லாருக்கும் நாங்களே வேலை வாங்கிக் கொடுத்துவிடுவோம்.

கம்ப்யூட்டரில் என்ன கற்றுக் கொடுக்கிறீர்கள்?

இப்போது கம்ப்யூட்டர் யுகமாகிவிட்டது. எனவே பிளஸ் டூ படித்த பெண்களுக்கு கம்ப்யூட்டரில் டிடிபி கற்றுக் கொடுக்கிறோம். டிசிஏ படிப்பும் உண்டு. கம்ப்யூட்டர் படிக்க வருகிறவர்களுக்கு ஆங்கிலம் கண்டிப்பாகத் தெரிந்திருக்க வேண்டும். அதற்காக நாங்கள் ஒரு டெஸ்ட்டும் வைக்கிறோம். இவர்களுக்கு இந்தப் பயிற்சி கொடுக்க ஒரு மாணவிக்கு சுமார் ரூ.3500 ஆகிறது.

கம்ப்யூட்டர் பயிற்சி இருந்தால் மட்டும் போதாது, ஆங்கிலத்தில் சரளமாகப் பேசுவதும் இக்காலத்தில் அவசியம். இதற்கென புகழ்பெற்ற வீட்டா நிறுவனத்தைச் சேர்ந்த ஆசிரியரைக் கொண்டு வகுப்புகள் எடுக்கிறோம்.

பயிற்சி கொடுத்த பின் வேலைக்குப் போகிறவர்களிடம் பணம் எதுவும் வாங்குவீர்களா?

நாங்கள் கார் டிரைவிங் இலவசமாக கற்றுக் கொடுத்தாலும் லைசென்ஸ் வாங்க செலவாகும் 2000 ரூபாயை வேலை கிடைத்ததும் கொஞ்சம் கொஞ்சமாகத் திருப்பிக் கொடுக்க வேண்டும். பலர் கரெக்டாகத் திருப்பிக் கொடுத்துவிடுவார்கள்.

இலவசமாகப் பயிற்சி தந்தால் பலர் பொய் சொல்லி வருவார்களே, அவர்களை எப்படிக் கண்டுபிடிப்பீர்கள்?

நாங்கள் இலவசமாக வேலைவாய்ப்புப் பயிற்சிகள் கொடுக்கிறோம் என்பதைத் தெரிந்து கொண்டு சில வசதியானவர்களும் கூட வந்துவிடுவார்கள். ஆனால் நாங்கள் நாலைந்து பேர் உட்கார்ந்து இன்டர்வியூ பண்ணுவோம். அதில் நாங்கள் கேட்கிற கேள்விகளுக்கு அவர்கள் சொல்லும் பதிலிலேயே அவர்கள் ஏழையா? பணக்காரரா? என்பது தெரிந்துவிடும்.

கார்ப்பரேஷன் ஸ்கூலில் படித்தவரா? தனியார் பள்ளியில் படித்தவரா? என்பதிலேயே அவர்களுடைய வருமானநிலை தெரிந்து விடும். குடும்பத்தில் எவ்வளவு பேர்? வருமானம் எவ்வளவு? போன்ற கேள்விகளில் உண்மை தெரிந்துவிடும். அதை வைத்துத்தான் நாங்கள் பயிற்சி கொடுப்பதற்கான மாணவிகளைத் தேர்வு செய்கிறோம்.

பயிற்சிகளை எல்லாம் இலவசமாகக் கற்றுக் கொடுக்கிறீர்களே? செலவுகளை எப்படிச் சமாளிக்கிறீர்கள்?

எங்களுக்கு பெரிய அளவில் நிதி உதவி செய்து வருகிறவர் தமிழ்நாடு ஃபெüண்டேஷனைச் சேர்ந்த சந்திரசேகர். அதுபோல நிறைய நல்ல மனம் படைத்தவர்கள் ஏராளமான நன்கொடை தருவதால்தான் எங்களால் இந்த சமுதாய சேவையைச் செய்ய முடிகிறது.

Posted in ANEW, Anu, Anu chandran, Anuchandran, Chennai, class, Colleges, Compensation, computers, Development, Diploma, Donation, Driving, Education, Employment, Empowerment, Expenses, Females, Help, Interview, Jobs, Lady, Madras, Needy, NGO, Nurse, Nursing, Personnel, Poor, Rich, Schools, service, She, Skills, Spoken English, Students, Training, Volunteer, Wealthy, Women, Work | Leave a Comment »

The cost of Engineering Admissions – Reservations, Wealthy vs Needy

Posted by Snapjudge மேல் மே 22, 2007

விலைபோகும் கம்ப்யூட்டர் படிப்புகள்

சென்னை, மே 22: பொறியியல் படிப்புகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேருவதற்கான விண்ணப்பப் படிவங்கள் விற்பனையாகிக் கொண்டிருப்பது ஒரு புறம் இருக்க, சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களில் கம்ப்யூட்டர் சார்ந்த படிப்புகள் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு விலை போகின்றன என்பது அதிர்ச்சியான உண்மை.

“பிளஸ் 2′ தேர்வு முடிவுகள் வெளியாவதற்கு முன்பாகவே பல பொறியியல் கல்லூரிகளில் கம்ப்யூட்டர் சயன்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன், தகவல் தொழில்நுட்பம், எலெக்ட்ரிகல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ் ஆகிய படிப்புகளையே பெரும்பாலான மாணவர்கள் விரும்புகிறார்கள்.

காரணம், சாஃப்ட்வேர் தொழிலில் அதிகமான வேலைவாய்ப்புகள் உருவாகி வருவதே. அத்துடன், பொறியியல் கல்லூரிகளில் படிப்போருக்கு “கேம்பஸ் இன்டர்வியூ’ மூலம் வேலை கிடைக்க சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தின் கீழ் இயங்கும் தமிழ்நாடு மாநில வேலைவாய்ப்பு மையம் ஏற்பாடு செய்து வருகிறது.

பி.இ. படித்தால், நிறைய சம்பளத்துடன் நிச்சயம் நல்ல வேலை என்ற நிலை உருவாகியுள்ளதால், இப்படிப்புகளில் சேர ஆண்டுதோறும் ஆயிரம் பேர் ஆர்வம் காட்டுகிறார்கள்.

இதன் விளைவாக நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கும் நிறைய பேர் போட்டியிடுகிறார்கள். எனவே, அதற்கு “விலை’ என்ற ரீதியில் நன்கொடைக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

சில முன்னணிக் கல்லூரிகளில் மேற்கண்ட படிப்புகளில் சேர கல்விக் கட்டணம் நீங்கலாக ரூ.3 லட்சம் முதல் ரூ.7 லட்சம் வரையில் வசூலிக்கிறார்கள். தேர்வு முடிவுகள் வெளியாகும் முன்பே இக் கல்லூரிகளில் ரூ.25 ஆயிரம் வரை கொடுத்து தங்களுடைய இடங்களை முன் பதிவு செய்து கொள்கிறார்கள்.

இவ்வாறு நிர்வாக இடங்களில் மாணவர்கள் சேர கட்டணம் வசூலிப்பது, பதிவு செய்து கொள்வது குறித்து தனியார் சுயநிதிப் பொறியியல் கல்லூரி நிர்வாகிகள் சிலரிடம் கேட்டபோது, “”அவ்வாறு கட்டணம் எதுவும் வசூலிப்பதில்லை. அவர்கள் எங்கள் கல்லூரிகளில் என்னென்ன படிப்புகள் நடத்தப்படுகின்றன என்று விசாரித்து வருகிறார்கள். அவ்வளவுதான் பதிவு செய்வில்லை” என்றனர்.

“பிளஸ் 2′ தேர்வு முடிவு வெளியாகும் முன்பு பல பொறியியல் கல்லூரிகளில் முன்பதிவு செய்வதற்காக ரூ.10 ஆயிரம், ரூ.25 ஆயிரம் எனப் பல பெற்றோர்கள் கட்டணம் செலுத்தியுள்ளனர் எனத் தெரிய வந்துள்ளது.

இவ்வாறு பதிவு செய்த மாணவர்களில் குறைந்த மதிப்பெண் பெற்றவர்களுக்கு அந்தப் பதிவுக் கட்டணம் திருப்பித் தரப்படுவதாகச் சில பெற்றோர்கள் கூறினர்.

பிளஸ் 2 தேர்வு வெளியான பின், மிக நல்ல மதிப்பெண்ணைப் பெற்றவர்களையே சேர்த்துக் கொள்ள வேண்டும் என்ற காரணத்தால் இவ்வாறு செய்கிறார்கள் என்பது விசாரித்தபோது தெரியவந்தது.

இதனிடையில், நிர்வாக ஒதுக்கீட்டுக்கும் ஒற்றைச் சாளர முறையே பின்பற்றப்பட வேண்டும் என்ற நிர்பந்தம் காரணமாகவே, குறைந்த மதிப்பெண் பெற்றவர்களிடம் வசூலித்த “முன்பதிவுக் கட்டணத்தை’ கல்லூரி நிர்வாகங்கள் திருப்பித் தருவதாகக் கூறப்படுகிறது.

ஆனால் வழக்கம்போல், சிவில், மெக்கானிக்கல் போன்ற பொறியியல் படிப்புகளுக்கு இத்தகைய கட்டணம் வசூலிக்கப்படுவதில்லை என்பது குறிப்பிடத் தக்கது. காரணம், இப்படிப்புகளைத் தேர்ந்தெடுக்கும் மாணவர்கள் மிக மிகக் குறைவு.

Posted in +2, Affordability, BE, BITS, Bribe, Bribery, BSc, BTech, Campus, Colleges, Computer, Doctor, Donation, DOTE, ECE, Education, EEE, Employment, Engg, Engineering, Entrance, Gentleman, HSC, IIM, IIT, InfoTech, Interview, IT, Jobs, kickbacks, Marks, medical, Merit, Money, MSc, Plus Two, Poor, Price, professional, Ranking, REC, Reservation, Rich, Scholarship, Schools, Science, Score, seat, Self-financed, Software, Students, Technology, University, Wealthy | Leave a Comment »

LTTE air power threat to entire South Asian region

Posted by Snapjudge மேல் மார்ச் 28, 2007

வானில் எழுந்த புதிய கவலை

தமிழீழ விடுதலைப் புலிகள் கட்டுநாயக விமானப்படைத் தளத்தின் மீது நடத்தியுள்ள விமானத் தாக்குதல் இலங்கையில் புதிய போர்ச்சூழலை உருவாக்கியுள்ளது.

இதுநாள் வரையிலும் தரைவழி, கடல்வழி பாதுகாப்பு வளையங்களைப் பலப்படுத்திக் கொண்டிருந்த இலங்கையின் அனைத்து உயர் அதிகார மையங்களும், இனி வானத்தையும் உற்றுப் பார்த்தாக வேண்டும். அண்மைக்காலமாக விடுதலைப் புலிகளால் இலங்கை ராணுவத்தை நிலப்பரப்பில் எதிர்கொள்ள முடியவில்லை. கிழக்கு மாகாணத்தில் புலிகளின் வசமிருந்த பல நகரங்கள், கிராமங்களை இலங்கை ராணுவம் தனது ஆளுகைக்கு கொண்டுவந்துவிட்டது. இதனால் வான் தாக்குதலைத் தொடங்கியிருக்கின்றனர் விடுதலைப் புலிகள்.

2001-ம் ஆண்டு கொழும்பு விமான நிலையத்தில் புலிகளின் தற்கொலைப் படை தாக்குதல் நடத்தி, பாதிக்கும் மேற்பட்ட விமானங்களை அழித்ததைப் போன்ற சேதம் இப்போது நடைபெறவில்லை என்று இலங்கை அரசு கூறிக் கொண்டாலும் இது முதல் தாக்குதல்; அதுவும் இரவில் நடத்தப்பட்ட தாக்குதல்; இந்தத் தாக்குதல் தொடரும் என்பதில் சந்தேகமில்லை.

விடுதலைப் புலிகள் இயக்கத்தில் வழக்கமாக இடம்பெறும் தற்கொலைப்படையினர் வான் புலிகளிலும் இருப்பார்கள். இலங்கை எத்தனை பாதுகாப்பு வளையங்களை அமைத்தாலும் தற்கொலை விமானிகளைத் தடுப்பது அரிது. அல்-காய்தா விமானிகள் உலக வர்த்தக மையக் கட்டடத்தில் மோதியதைப் போல, வான்புலிகளும் இலங்கையின் எந்த அலுவலகத்தையும் எப்போது வேண்டுமானாலும் தாக்கி அழிக்க முடியும்.

இலங்கையின் தரைப்படை, கடற்படை, விமானப்படை மூன்றையும் தாக்கும் திறன் பெற்றுவிட்ட விடுதலைப் புலிகளை இலங்கை அரசு தீவிரமாகத் தாக்கத் தொடங்கும். இதனால் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு வாய்ப்புகள் வெகுவாகக் குறைந்துவிடும்.

விமானத்துக்குத் தேவையான அலுமினியம் மற்றும் உதிரி பாகங்களை புலிகள் தொடர்ந்து கடத்தி வந்து, போர் விமானங்களை வடிவமைத்துள்ளனர். இரண்டு ஆண்டுகளாக விமான ஓடுபாதை அமைத்துள்ளனர். இதை எப்படி இலங்கை உளவுத் துறை அறியாமல் இருந்தது என்பது ஆச்சரியமாக இருக்கிறது.

விடுதலைப் புலிகளிடம் தற்போது எத்தனை விமானங்கள் உள்ளன என்பது தெரியவில்லை. ஆனால் இந்த விமானங்களை நவீன கருவிகள் மூலம் தொலைவிலேயே கண்காணித்து சுட்டு வீழ்த்தும் நவீன, செலவுமிக்க போர்முறைகளுக்கு மாற வேண்டிய அவசியம் இலங்கைக்கு ஏற்பட்டுள்ளது.

புலிகளுக்கு போர் விமானம் தயாரிக்கவும், விமானத்தை இயக்கவும் யார் உதவினார்கள் என்பது இலங்கையின் தலைவலி என்றாலும், அதைவிட பெரிய தலைவலியும் இக்கட்டான நிலைமையும் இந்தியாவுக்குத்தான் இருக்கிறது.

விடுதலைப் புலிகள் மீது பதில் தாக்குதல் நடத்த நவீன ரக விமானங்களை இந்தியாவிடம் இலங்கை அரசு கேட்கும். இலங்கை விமானப் படையில் போர்ப்பயிற்சி பெற்றவர்கள் குறைவாகவே இருப்பார்கள். அதனால் அனைவருக்கும் இந்தியாவில் பயிற்சி அளிக்க இலங்கை அரசு கேட்கும். இதைச் செய்தால் இந்தியாவுக்குள் பல்வேறு அரசியல் பிரச்சினைகள் எழும்.

புலிகள் தங்கள் தாக்குதலை நடத்தும்போது இந்திய வான் எல்லைக்குள்ளும் பறக்க வேண்டிய அவசியம் ஏற்படலாம். இந்திய எல்லைக்குள் நுழையும் ஒரு போர் விமானத்தை தாக்குவதா, வேண்டாமா என்பதிலும் இந்திய அரசு ஒரு நிலைப்பாட்டை எடுத்தாக வேண்டும்.

விமானம் தயாரிக்கும் அளவுக்கு வளர்ச்சி அடைந்துள்ள விடுதலைப் புலிகளிடம் ஹெலிகாப்டர்களும் இனி இடம் பெறக்கூடும். தமிழகக் கடலோரத்திற்கு ஹெலிகாப்டரில் வந்து தங்களுக்கான பொருள்களை எடுத்துச் செல்லும் சம்பவங்களும் இனி நடைபெறலாம். தமிழகக் கடலோரம் கடற்படை ரோந்துகளை அதிகரித்ததைப் போலவே விமானப் படையையும் தமிழகக் கடலோரத்தில் ரோந்துப் பணியில் ஈடுபடுத்த வேண்டிய நிலை உருவாகும்.

=====================================================

மிரட்டிப் பணம் பறித்ததாக பிரான்ஸில் 17 புலிகள் கைது?

பாரீஸ், ஏப். 2: தனித்தமிழ் ஈழத்துக்காகப் போராடி வரும் விடுதலைப் புலிகள் அமைப்புக்காக பிரான்ஸில் வசிக்கும் தமிழர்களிடம் மிரட்டிப் பணம் பறித்ததாக 17 விடுதலைப் புலிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

17 பேரும் பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனர்.

பயங்கரவாதத் தடுப்பு நீதிபதி ஜீன்-லூயிஸ் புரூஜியரின் உத்தரவின் பேரில் போலீஸôர் இந்த அதிரடி நடவடிக்கையில் இறங்கினர். பிரான்ஸில் வசிக்கும் தமிழர் குடும்பங்கள் இந்த அமைப்புக்கு தலா ரூ. 1.21 லட்சம் ஆண்டுதோறும் கொடுக்க வேண்டும். அதேபோல் அங்கு வர்த்தகம் செய்யும் தமிழர்கள் ஆண்டுக்கு ரூ. 3.50 லட்சம் வழங்க வேண்டும்.

இவ்வாறு கட்டாயமாக நிதி வசூலித்துத் தருவோர் தங்களது கமிஷனாக 20 சதவீதத்தை எடுத்துக் கொள்ளலாம் என்று கூறப்படுகிறது. நிதி வழங்க மறுக்கும் குடும்பத்தினர் கடத்தப்படுவர் அல்லது அவர்கள் மீது தாக்குதல் நடத்துவோம் என்று விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் மிரட்டி வருவதாகவும் கூறப்படுகிறது. பிரான்ஸில் 70 ஆயிரம் தமிழர்கள் வசித்து வருகின்றனர்.

================================================
கேட்டுப் பெற முடியும்

இலங்கையில் மூன்றாவது முறையாக தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய வான் தாக்குதலில் சேதமுற்ற இரண்டு எரிபொருள் சேமிப்புக் கிடங்குகளில் ஒன்று இந்திய-இலங்கை கூட்டு நிறுவனத்துக்குச் சொந்தமானது.

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனமும் இலங்கை அரசும் பெட்ரோல் விநியோக நிறுவனத்தை கூட்டாக நிர்வகித்து வருகின்றன. இதில் லங்கா ஐஓசிக்கு (இலங்கையில் செயல்படும் ஐஓசி நிறுவனத்தின் பெயர்) 33 சதவீத பங்கு உள்ளது. இந்திய அதிகாரிகளும் இதில் பணியாற்றுகின்றனர். பெட்ரோல் விநியோகத்தை இலங்கை அரசின் நிறுவனம் கவனித்துக் கொள்கிறது.

கொலநோவா எண்ணெய்க் கிடங்கானது இலங்கை-இந்திய கூட்டு நிறுவனத்துக்குரியது என்பது விடுதலைப் புலிகளுக்கு தெரியாத விஷயமல்ல. ஆனால் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது.

மேலும், புலிகளின் செய்தித் தொடர்பாளர் ராசய்யா இளந்திரையன் குறிப்பிடும்போது, “”ராணுவத் தீர்வையே இலங்கை அரசு நாடுகிறது. அதனால் வேறு வழியின்றி இலங்கை விமானப் படைக்கு எரிபொருள் விநியோகம் செய்யும் இரு எரிபொருள் கிடங்கின் மீது தாக்குதல் நடத்தினோம். தொடர்ந்து தாக்குவோம்” என்று கூறியுள்ளார்.

எரிபொருள் விநியோகம் செய்வதால் இந்திய கூட்டு நிறுவனமாக இருந்தாலும் தாக்குவார்கள் என்றால், இலங்கைக்கு இந்திய அரசு ஆயுத உதவியோ அல்லது வேறு ராணுவப் பயிற்சியோ அளித்தால் இந்தியாவையும் தாக்குவார்களா?

விடுதலைப் புலிகளுக்குத் தேவையான மருந்துகள், ஆயுதம் தயாரிக்கத் தேவையான பொருள்கள் தமிழகத்திலிருந்துதான் வருகின்றன என்பதுதான் இலங்கையின் புகார். அதற்காக, இந்திய மீனவர்களை இலங்கை ராணுவம் சுட்டுக் கொல்வதை நியாயப்படுத்த முடியுமா?

தமிழகத்தில் விடுதலைப் புலிகள் இல்லை என்று தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் கூறிய அடுத்த நாளே, கன்னியாகுமரி மீனவர்கள் 5 பேரைக் கொன்றவர்கள் கடல்புலிகள் என்று காவல்துறைத் தலைவர் முகர்ஜி கூறினார். “விடுதலைப் புலிகள் தங்களது ஆயுதங்களைக் கொண்டு சென்றநேரத்தில் கன்னியாகுமரி மீனவர்கள் அங்கு வந்ததால் அவர்கள் உளவு பார்க்க வந்ததாகக் கருதி தாக்குதல் நடத்தியுள்ளனர்’ என்றும் தெரிவித்தார். இந்த விளக்கமானது, ஆயுதக் கடத்தல் தமிழகத்தின் கிழக்குக் கடற்கரையான ராமேஸ்வரத்திலிருந்து தெற்கு கடற்கரைக்கு மாறியுள்ளது என்பதையும், தமிழகத்தில் விடுதலைப் புலிகளின் செயல்பாட்டையும் அவரே மறைமுகமாக ஒப்புக் கொள்வதைப்போல உள்ளது.

கடல்புலிகளின் பாதுகாப்பில் உள்ள மீனவர்களை மீட்க மத்திய அரசு மூலமாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக முதல்வர் சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார். இலங்கை ராணுவம் பிடித்திருந்தால் இந்திய அரசு தலையிட முடியும். இந்தியாவில் தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பிடம் இந்திய அரசு எப்படி பேசும்? அப்படிப் பேசினால் மீனவர்களுக்கு ஈடாக புலிகள் எதைக் கேட்பார்கள்?

12 மீனவர்களை மீட்கும் ஒரே வழி தமிழக கட்சிகள் அனைத்தும் ஒருமித்த குரலில் “தமிழக மீனவர்களைக் கொன்றதற்கு பொறுப்பேற்பதுடன், கடத்தி வைத்துள்ள தமிழக மீனவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும்’ என்று சொல்வதுதான்.

ஏனென்றால், புலிகளின் வான் தாக்குதல்களால் பொருளாதார பாதிப்பை சந்தித்ததுடன், போதுமான ஆயுதங்களோ, படைப் பயிற்சியோ இல்லாமல் திண்டாடும் இலங்கை அரசு நிச்சயமாக இந்தியாவின் உதவியை நாடும். இந்தியா ஆயுத உதவியை அளித்தால் அதை எதிர்த்துக் குரல் கொடுக்கக்கூடியவர்கள் தமிழக அரசியல் கட்சியினர் மட்டுமே. தமிழக மீனவர்களை விடுவிக்காவிட்டால், இந்திய அரசின் நடவடிக்கையை எதிர்க்க மாட்டோம் என்று அறிவிப்பு செய்ய தமிழக அரசியல் கட்சிகளுக்கு உரிமையும் பொறுப்பும் உள்ளது.

Posted in air crafts, Air Force, Arrests, Attack, Commission, Contribution, defence, Defense, Donation, Extortion, Foreign, France, French, Funds, Interpol, Katunayake, kickbacks, Law, Liberation Tamil Tigers of Eelam, LTTE, Mahinda Rajapaksa, Military, Navy, Non-profit, Order, Paris, Rajiv, Rajiv Gandhi, Rajiv Gandi, separatist, South Asia, Sri lanka, Srilanka, Suicide, terror, Terrorism, terrorist, Vanni, Viduthalai Puli, Viduthalai Puligal, Viduthalai Pulikal, Vituthalai Puli, Vituthalai Pulikal, Wanni | 5 Comments »

Special Rajini post cover to help Gujarat Orphanage

Posted by Snapjudge மேல் ஜனவரி 5, 2007

ஆதரவற்றோர் இல்லத்துக்கு உதவ ரஜினி பெயரில் சிறப்பு தபால் உறை

பா. ஜெகதீசன்


சென்னை, ஜன. 4: ரஜினிகாந்த் பெயரைச் சொன்னால் திரை உலகில் மட்டும் அல்ல, அறப் பணிகளுக்கும் பணம் வந்து கொட்டும்.

இதை நிரூபிக்கும் சம்பவம் குஜராத் மாநிலம் ஆமதாபாத் அருகே உள்ள அம்பவாடி பகுதியில் நடைபெற்றுள்ளது. அப்பகுதியில் ஆதரவற்றோருக்கான இல்லத்தை அம்பவாடி அறக்கட்டளை நடத்தி வருகிறது.

ஆண்டுதோறும் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி இந்த இல்லத்துக்குத் தேவைப்படும் நிதியை அம்பவாடி அறக்கட்டளை திரட்டி வருகிறது. இவ்வாண்டு நிதியைத் திரட்ட புதுமையான முறையை அந்த அறக்கட்டளை கடைப்பிடித்துள்ளது. ரஜினியின் பிறந்த நாளை ஒட்டி, 200 சிறப்புத் தபால் உறைகளை அஞ்சல் துறையின் அனுமதியுடன் அந்த அறக்கட்டளை வெளியிட்டுள்ளது. அதன் விலை தலா ரூ.250.

உறையின் பின் பக்கத்தில் அகில இந்திய அளவில் நம்பர்-1 நடிகராகவும், எல்லா நடிகரைக் காட்டிலும் அதிக சம்பளம் பெறுபவராகவும் ரஜினி திகழ்வதாக அச்சிடப்பட்டுள்ளது.

இந்த உறைகளில் 50-ஐ சென்னை அரும்பாக்கத்தைச் சேர்ந்த நீல்கமல் மகேஸ்வரி என்கிற ஆயத்த ஆடைத் தொழில் அதிபருக்கு அம்பவாடி அறக்கட்டளை அனுப்பி உள்ளது. ஏராளமான பிரமுகர்களின் ஆட்டோகிராபுகளைச் சேகரித்து தொகுத்து வைத்துள்ளார் நீல்கமல்.

Posted in Ahmedhabad, Donation, Gujarat, Mail, Orphanage, post cover, Post stamps, Postage, Premium, Rajini, Rajiniganth, Rajinikanth, Rajni, Rajniganth, Special, Stamp | 1 Comment »