Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘doctors’ Category

Women in India: Serving in the Indian Army – Gender equality in Military, Navy, Air Force

Posted by Snapjudge மேல் மார்ச் 5, 2008

சேவை: இராணுவத்தில் பெண்கள்!

மு.வெ.

ஆணுக்கு பெண் நிகர் என்று சொல்லி பல வருடங்களாக ஆகிவிட்டன. உண்மையில் அப்படி இருக்கிறதா? பெண்களுக்கு 33 சதவிகிதம் இடஒதுக்கீட்டில் இன்னும் பிரச்சினைகள் இருந்தாலும், ஆங்காங்கே சில நம்பிக்கை தரக்கூடிய விஷயங்களும் தென்படுகின்றன. அப்படிப்பட்ட நம்பிக்கை அளிக்கும் ஒன்றுதான், நமது இந்திய இராணுவத்தில் பெண்களின் பங்களிப்பும்.

இந்திய இராணுவத்தில் 1993-ஆம் ஆண்டில்தான் பெண்கள் சேர்க்கப்பட்டனர். ஜூனியர் லெவல் கிரேடில் அப்போது வேலை நிறைய காலியாக இருந்தது. அந்த சமயத்தில் பெண்கள் சேர்க்கப்பட்டனர்.

பொதுவாக இருபத்தியொரு வயது முதல் இருபத்தி ஐந்து வரை வயதுள்ள பெண்கள் ஆறு மாதத்திற்கொருமுறை சுமார் 5000 பேர் விண்ணப்பிக்கிறார்கள். ஆனால் அவர்களிலிருந்து தேர்வு செய்யப்படுகிறவர்களோ வெறும் பத்து பேர் மட்டும்தான்! தேர்வு செய்யப்படுகிறவர்கள் ஐந்து வருடம் ஆபீஸர் கிரேடில் பணிபுரிவார்கள். அவர்கள் மேலும் சிறப்பாகப் பணிபுரிந்தால் மேலும் ஐந்து வருடம் பணி நீட்டிக்கப்படும்.

இவர்களுக்கு ஒன்பது மாதம் டிரெயினிங் கொடுக்கப்படுகிறது. இராணுவத்தில் வெவ்வேறு இடங்களில் பணியிலிருக்கும் ஆண், பெண் இருவரும் திருமணம் செய்து கொண்டால், அவர்கள் ஒரே இடத்தில் பணியில் இருக்க அனுமதி அளிக்கப்படுகிறது.

இராணுவத்தில் பணியிலிருக்கும் காவாலி, “”பொதுவாக ஸ்போர்ட்ஸ், என்.சி.சி.யில் இருந்த பெண்கள்தான் அதிகமாக இராணுவத்தில் சேர்கிறார்கள். ஆண்கள் அளவுக்கு எங்களுக்கு வேலைப் பளு அதிகம் இல்லை என்றாலும், போதிய அளவு சம்பளமும், சமூகத்தில் மரியாதையும் கிடைக்கின்றது. ஆண்களுக்கு இணையாக எங்களுக்கும் பயிற்சி கொடுக்கப்படுகின்றது. நாங்கள் சல்வார் கமீசில் இருக்கும் போதுதான் பெண்கள் என்று உணருகிறோம்” என்கிறார்.

இராணுவத்தில் பொறியியல், கல்வித் துறை, சிக்னல்ஸ், ஹாஸ்பிடல் போன்ற துறைகளில் பெண்களுக்கு நிறைய வாய்ப்பு இருக்கின்றது. 2005-ன் கணக்குப்படி இராணுவத்தில் 40000 ஆண் அதிகாரிகளுக்கு 918 பெண் அதிகாரிகளும், கடற்படையில் 6000 ஆண் அதிகாரிகளுக்கு 100 பெண் அதிகாரிகளும், விமானப்படையில் 15000 ஆண் அதிகாரிகளுக்கு 454 பெண் அதிகாரிகளும் உள்ளனர்.

அதிகம் படிக்காதவர்கள் தான் பெரும்பாலும் இராணுவத்தில் சேருவார்கள் என்ற நிலை இருபது வருடங்களுக்கு முன்னால் எல்லாம் இருந்தது. ஆனால் இந்த நிலையையும் தற்போதைய பெண்கள் மாற்றி விட்டனர். எம்.பி.ஏ., படித்திருக்கும் ரேணுதத்தா, “”இராணுவப் பணியை பாதுகாப்பானதாகவும், சவாலானதாகவும் உணர்கிறேன்” என்கிறார்.

Posted in Airforce, doctors, Education, Employment, Engg, Engineering, Equality, Females, Gender, Generals, Hospital, inequality, Infantry, Jobs, Males, medical, Men, Military, Navy, NCC, Nurses, officers, Opportunities, Pilots, Signals, Sports, Uniform, Women | Leave a Comment »

Ramanathapuram Government Hospital Ambulance: Not useful for emergency medical services

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 14, 2008

அவசரத் தேவைக்கு பயன்படாத ஆம்புலன்ஸ் வாகனங்கள்: எஸ்.வி.எஸ். ஜெகஜோதி

ராமநாதபுரம், பிப். 13: ராமநாதபுரம் தலைமை அரசு மருத்துவமனையில் போதிய ஆம்புலன்ஸ் வாகனங்கள் இருந்தும் சில சமயங்களில் அவற்றை பயன்படுத்த அவ்வாகன ஓட்டுநர்கள் மறுத்து வருகின்றனர். இதனால் அவசரத் தேவைக்கு அவற்றை பயன்படுத்த முடியாத நிலையே இருந்து வருகிறது.

தேசிய நெடுஞ்சாலைப் பகுதிகளில் அடிக்கடி விபத்துகள் நடப்பதால் தமிழ்நாடு சுகாதாரத் திட்டத்தின் கீழ் தனியார் தொண்டு நிறுவனங்கள் பராமரிப்பில் ஒவ்வொரு அரசு மருத்துவமனையிலும் ஒரு ஆம்புலன்ஸ் வாகனம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொன்றிலும் ரூ. 2 லட்சம் மதிப்பிலான உயிர் காக்கும் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. விபத்துகள் நிகழ்ந்தால் தகவல் தெரிவிப்பதற்கென்றே ஆம்புலன்ஸ் வாகன கட்டுப்பாட்டு அறை ஒன்றும் தலைமை அரசு மருத்துவமனையில் செயல்பட்டு வருகிறது. இதன் தொலைபேசி எண் 1056. இவ்வாகனத்தில் ஓட்டுநர் ஒருவரும், செவிலியர் ஒருவரும் 24 மணி நேரமும் பணியில் இருப்பர்.

விபத்துகள் எங்கு நேரிட்டாலும் தகவல் வந்தவுடன் அங்கு உடனடியாகச் சென்று அவர்களின் உயிர்களை காப்பாற்றுவதுதான் இத்திட்டத்தின் முக்கிய நோக்கம். இதற்கு கட்டணம் இல்லை. தேவைப்பட்டால் மேல்சிகிச்சைக்காக வெளியூர்களுக்குச் செல்ல ஒரு கி.மீ.க்கு ரூ. 5 வீதம் கட்டணம் செலுத்தி நோயாளிகள் இதனை பயன்படுத்திக் கொள்ளலாம்.

இம்மாதம் 9 ஆம் தேதி ராமநாதபுரம் மாவட்டம் சத்திரக்குடி அருகே டிராக்டர் மீது ராமேசுவரத்திலிருந்து மதுரைக்கு மீன் ஏற்றிச்சென்ற மினிலாரி நேருக்கு நேராக மோதியது. இச்சம்பவத்தில் டிராக்டர் டிரைவர் சக்தி (26) பலத்த காயமடைந்தார். சக்தியை காயம் அடைந்த இடத்திலிருந்து ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டுவர காவல்துறையினர் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் இருந்த ஆம்புலன்ஸ் வாகனத்தை வற்புறுத்தி அழைத்தும் ஓட்டுநர் வரமறுத்து விட்டார்.

பின்னர் டிராக்டரில் பயணம் செய்த பிறர் சக்தியை ஒரு ஆட்டோவில் ஏற்றி மருத்துவமனைக்கு கொண்டு வந்து சேர்த்த போது அவரது நிலைமை மேலும் கவலைக்கிடமானது.

பெட்ரோல் செலவு அதிகமாகிறது என்றும் விபத்து வழக்கில் காவல்துறையினர் எங்களையும் சாட்சியாக சேர்ப்பதால் வரமுடியாது எனவும் ஆம்புலன்ஸ் வாகன ஓட்டுனர்கள் தெரிவித்தனர்.

இது குறித்து சம்பந்தப்பட்ட மருத்துவ அதிகாரி கூறியதாவது:

விபத்து நடந்த இடத்திலிருந்து காயம் அடைந்தோரை தூக்கி வர கட்டணம் இல்லை. ஓட்டுநர் விபத்து நடந்த இடத்திற்கு வரவில்லை என்பது விசாரணையில் தெரிய வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும்.

பொதுமக்களும் ஆம்புலன்ஸ் கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண் 1056-க்கு தகவல் தெரிவிக்க வேண்டும். இதற்கும் கட்டணம் இல்லை என்றார்.

பொதுமக்கள் கண்களில் படாதவாறு மருத்துவமனை வளாகத்திற்குள்ளேயே வாகனங்களை மறைத்து வைப்பது, மேல் சிகிச்சைக்காக வெளியூர்களுக்கு அழைத்து செல்லும் போது கூடுதல் கட்டணம் கேட்பது, பெட்ரோல் செலவை காரணம் காட்டி விபத்து நடந்த இடங்களுக்கு வராமல் மறுப்பது, வேறு ஏதேனும் ஒரு சாதாரண பணிக்குச் செல்லும் போது கூட வாகனத்தில் சைரன் ஒலி எழுப்பிக் கொண்டே போவது போன்றவற்றை ஆம்புலன்ஸ் வாகன ஓட்டுநர்கள் முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

இத்தவறுகள் திருத்தப்பட்டால் மேலும் பல உயிர்களை காப்பாற்றவும் பேருதவியாக இருக்கும்.

Posted in 100, 9/11, Accidents, Ambulance, Citizen, Docs, doctors, Emergency, EMS, GH, Government, Health, Healthcare, Highways, Hospital, infrastructure, medical, patients, Ramanadapuram, Ramanadhapuram, Ramnad, Roads, Services | Leave a Comment »

Inter News Network consultant Dr. Jeya Sridhar Interview – State of HIV+ and AIDS patients

Posted by Snapjudge மேல் ஜனவரி 11, 2008

விழிப்புணர்வு: பயமுறுத்துவது பிரசாரமல்ல!

பிரபல தமிழ் வார இதழ் ஒன்றில் பதினைந்தாண்டுகளுக்கு முன்னால் “எய்ட்ஸ் எரிமலை’ என்னும் தலைப்பில் டாக்டர் ஜெயா ஸ்ரீதர் எழுதிய எயிட்ஸ் விழிப்புணர்வுக் கட்டுரைகளின் தொகுப்பு, தமிழ் வாசகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. எய்ட்ஸ் விழிப்புணர்வு தொடர்பாக பல ஆய்வுகளுக்குக் காரணமாக இருந்தது.

தற்போது 55 நாடுகளில் எச்.ஐ.வி. விழிப்புணர்வு அளிக்கும் “இன்டர் நியூஸ் நெட்வொர்க்’ என்னும் உலகளாவிய அமைப்பின் மருத்துவ ஆலோசகராக இருக்கிறார் டாக்டர் ஜெயா ஸ்ரீதர். எய்ட்ஸ் விழிப்புணர்வு குறித்தும், அவர் சார்ந்த அமைப்பின் செயல்பாடுகள் குறித்தும் நாம் எழுப்பிய கேள்விகளுக்கு, விரிவாக அவர் அளித்த பதில்கள்…

இந்தியாவில் எச்.ஐ.வி. பாதிப்பு கடந்த சில வருடங்களாக குறைந்திருப்பதால், இது குறித்த விழிப்புணர்வும் குறைந்திருக்கிறது. எதிர்காலத்தில் எத்தகைய விளைவை இது ஏற்படுத்தும்?

இந்தியாவில் எத்தனையோ பன்னாட்டுக் குளிர்பானங்கள் விற்பனையில் சக்கைப் போடு போட்டுக் கொண்டிருக்கின்றன. ஆனாலும் எந்த காலத்திலும் அவர்களின் விளம்பரங்களைக் குறைத்துக் கொண்டதே இல்லை. குளிர்பானத்திற்கே விளம்பரம் முக்கியம் என்னும்போது, உயிரையே குடிக்கும் எய்ட்ஸýக்கு எதிரான விழிப்புணர்வுப் பிரசாரத்தை நாம் குறைத்துக் கொள்வது எந்த விதத்திலும் நியாயமாகாது. இன்னமும் போலியோவுக்கு எதிரான விழிப்புணர்வுப் பிரசாரங்களை நாம் தொடர்ந்து கொண்டுதானே இருக்கிறோம். குறைந்திருக்கிறது என்பதற்காக எச்.ஐ.வி. விழிப்புணர்வுப் பிரசாரங்களை குறைத்துக் கொள்ளக்கூடாது. சமூகத்தில் எச்.ஐ.வி. குறித்த உண்மை நிலையைத் தொடர்ந்து பிரசாரங்களின் மூலமாகத்தான் அளிக்கமுடியும்.

பள்ளிகளில் வரப்போகும் பாலியல் விழிப்புணர்வுக் கல்வி இதற்குத் தீர்வாகுமா?

பள்ளிகளில் படிக்கும் வளர் இளம் பருவத்தினருக்கான கல்வித் திட்டமாக இதைக் கொண்டு வரவிருக்கின்றனர். முதலில் பாலியல் விழிப்புணர்வுக் கல்வி என்ற பெயரில் மேற்கத்திய நாடுகளை மனதில் கொண்டு உருவாக்கியதற்குத்தான், நம் நாட்டில் பரவலான எதிர்ப்பு கிளம்பியது. நம் நாட்டு கலாசாரத்துக்கு ஏற்றவகையில் உருவாக்கியிருக்கும் இந்த முறைக்கு பரவலான ஆதரவு பெருகியுள்ளது. வளர் இளம் பருவத்தினருக்கு இத்தகைய விழிப்புணர்வு தேவையான ஒன்றுதான். அவர்களின் வயதுக்கே உரிய சந்தேகங்களை அனுசரிப்போடு கற்றுத் தருவதற்கு ஆசிரியர்களை விடச் சிறந்தவர்களாக யார் இருப்பார்கள்?

திருமணத்திற்குப் பின், எச்.ஐ.வி. பாதிப்புடன், கணவனையும் இழந்து தவிக்கும் இளம் விதவைகளின் எண்ணிக்கை குறைவதற்கு முன் எச்சரிக்கை நடவடிக்கையாக என்ன செய்யலாம்?

தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் அரசாங்கத்தின் நம்பிக்கை மையங்கள் பரவலாகச் செயல்படுகின்றன. இங்கு முழுக்க முழுக்க இலவசமாகவே எச்.ஐ.வி. ரத்தப்பரிசோதனைகள் செய்யப்படுகின்றன. முப்பது நிமிடங்களில் ரத்தப் பரிசோதனை செய்த முடிவுகளும் கிடைத்துவிடும். திருமணத்திற்கு முன்பே, ஆண், பெண் இருபாலரும் ரத்தப்பரிசோதனையைச் செய்து கொள்வது நல்லது. மூன்று வாரங்கள் முதல் மூன்று மாதங்கள் இடைவெளியில் இரண்டு முறை ஒருவர் ரத்தப் பரிசோதனை செய்து கொள்ளவேண்டும். எச்.ஐ.வி. கிருமியை அழிப்பதற்கு நம் உடலில் எதிர்ப்பணுக்கள் உருவாவதற்கான கால அளவைத்தான் சாளரக் காலம் என்கிறார்கள். இந்த சாளரக் காலத்திற்குள் ரத்தப் பரிசோதனை செய்யும்போது, அதில் எச்.ஐ.வி. எதிர்ப்பணுக்கள் தெரியாது.

அப்படியென்றால், சாளரக் காலத்திற்குள் ரத்த வங்கியிலிருந்து ஒரு நோயாளிக்கு ரத்தத்தை பயன்படுத்துவதில் எச்.ஐ.வி. பரவும் அபாயத்தை எப்படித் தவிர்ப்பது?

அரசு மருத்துவமனைகளில் காசுக்காக ரத்தத்தை விற்பவர்களை ஆதரித்த காலம் ஒன்று இருந்தது. இப்போது எந்த மருத்துவமனையிலும் ரத்தத்தை விற்பவர்களை ஆதரிப்பதில்லை. மூன்று முறை எல்லிசா பரிசோதனை செய்வதன் மூலம், எச்.ஐ.வி. பாதிப்பில்லாத ரத்தம்தான் என்பதை தற்போது உறுதி செய்கின்றனர். அதோடு ரத்த வங்கியிலிருந்து முழுமையாக ரத்தம் ஒருவருக்கு ஏற்றப்படுவது குறைவு. தற்போது ரத்தத்திலிருக்கும் வெள்ளை அணுக்கள், சிவப்பணுக்கள், பிளாஸ்மா போன்ற கூறுகளை தனித்தனியாகப் பிரித்தே சேமித்து வைக்கின்றனர். இதுதவிர, ஹீட் ட்ரீட்மென்ட் போன்ற முறைகளால் வங்கியிலிருந்து பெறப்படும் ரத்தம் பரிசோதிக்கப்படுகிறது.

வெஸ்டன்-பிளாட் சோதனை செய்யும் வசதி தற்போது எல்லா மாவட்டத்திலிருக்கும் அரசுப் பொது மருத்துவமனைகளிலும் இருக்கிறதா?

இல்லை. மூன்று கட்டங்களாக எல்லிசா பரிசோதனையின் மூலமாகவே அரசு மருத்துவமனைகளில் எச்.ஐ.வி. பாதிப்பு இருப்பது உறுதிசெய்யப்படுகின்றது.

கூட்டு மருந்து சிகிச்சையில் முதல் கட்டம், இரண்டாவது கட்டம் என்பது என்ன?

எச்.ஐ.வி. கிருமி நம் உடலின் தற்காப்பு மண்டலத்தை செயலிழக்கவைப்பதால், பலவகையான நோய்கள் நம்மைத் தாக்கும். நமது உடலில் நோய் எதிர்ப்புத் திறனை அதிகரிப்பதுடன், பலவிதமான நோய்களை எதிர்ப்பதற்கான மருந்தையும் சேர்த்து வழங்குவதுதான் கூட்டு மருந்து சிகிச்சை. இந்த மருந்தை மருத்துவர்களின் ஆலோசனைப்படி, ஒரு நாள், ஒரு வேளை கூட மறக்காமல் சாப்பிடவேண்டும். ஒரு வேளை தவறினாலும் பாதிப்புகள் அதிகமாக இருக்கும். முதல் கட்ட சிகிச்சையைச் சரியாகத் தொடராதவர்களுக்குத்தான் இரண்டாவது கட்ட சிகிச்சை அளிக்கப்படுகின்றது. முதல் கட்ட கூட்டு மருந்து சிகிச்சை தமிழகம் முழுவதும் பரவலாக இலவசமாகவே அளிக்கப்படுகின்றன. இரண்டாவது கட்டத்தையும் இலவசமாக வழங்கவேண்டும் என்ற கோரிக்கையை இந்தாண்டு அரசு பரிசீலிக்கும் என்று நினைக்கிறேன்.

உங்கள் ஆலோசனையின் கீழ் செயல்படும் “இன்டர் நியூஸ் நெட்ஒர்க்கின்’ செயல்பாடுகள் என்ன?

எய்ட்ஸ் தொடர்பான எத்தகைய விழிப்புணர்வு அளிக்கும் செய்திகளாக இருந்தாலும் அதை முறையாக, எங்கள் அமைப்பில் பாதுகாத்து வருகிறோம். இந்த அமைப்பு முழுக்க முழுக்க பத்திரிகையாளர்களுக்காக, பத்திரிகையாளர்களின் உதவியோடே செயல்படும் அமைப்பு. எய்ட்ஸ் தொடர்பான எத்தகைய ஆராய்ச்சிக் கட்டுரைகளை எழுதுவதாக இருந்தாலும் சரி, அல்லது வானொலி நிலையத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சியை செய்வதாக இருந்தாலும் சரி, அதற்கு தேவையான ஆவணங்களையும், புள்ளிவிவரங்களையும், எப்படிச் சேர்க்கலாம், எந்த மாவட்டத்தில் யாரைச் சந்திக்கலாம் என்பது போன்ற விவரங்களையும் எங்களின் அமைப்பின் மூலம் பெறலாம். கல்லூரிகளில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் சமுதாய வானொலிகளுக்கும் எச்.ஐ.வி. விழிப்புணர்வுக் கருத்துக்களை, நாடகம், இசைப் பாடல் போன்ற எந்த வடிவத்தையும் எங்களின் “மினி’ ஸ்டுடியோவில் ஒலிப்பதிவு செய்யும் வசதி உள்ளது.

பொதுவாகவே மருத்துவம் சார்ந்த துறைகளில் ஆங்கிலத்தில்தான் செய்திக் குறிப்புகளும், தகவல்களும் அளிக்கப்படுகின்றன. ஆகவே இந்தத் துறையில் எச்.ஐ.வி. குறித்த செய்திகளை தமிழில் எழுதும் போது எத்தகைய சொற்களைப் பயன்படுத்தலாம் என்பதை தமிழ்ப் பத்திரிகையாளர்களைக் கொண்டு வரையறுத்த வார்த்தைகளை அடிப்படையாகக் கொண்ட இதழாளர்களுக்கான கையேடை நாங்கள் வெளியிட்டுள்ளோம். “ரிசப்டார்ஸ்’ என்னும் ஆங்கில வார்த்தைக்கு “ஏற்பி’ என்று தமிழில் வார்த்தை சொல்லியிருக்கிறார்கள். இதுபோன்ற பத்து வார்த்தைகளை தமிழ்ப் பத்திரிகையாளர்களே உருவாக்கியிருக்கின்றனர்.

எச்.ஐ.வி. பாதித்தவர் என்ற காரணத்தால் ஆந்திராவில் ஒருவரை பொதுமக்கள் அடித்துக் கொன்றதையும், கேரளத்தில் எச்.ஐ.வி. பாதித்த குழந்தைகளை பள்ளிகளில் சேர்க்காமல் இருக்கும் செய்திகளையும் குறித்து என்ன நினைக்கிறீர்கள்?

செய்தி, மக்கள் தொடர்புச் சாதனங்களிலும் ஊடகங்களிலும் “எய்ட்ஸ் அரக்கன்’ என்பது போன்ற வார்த்தைகளைப் பிரயோகிப்பதன் விளைவுதான் இது. தவறான பிரசார யுக்திகளால் ஏற்படும் விளைவுகள் இவை. மக்களை பயமுறுத்துவது நல்ல பிரசார முறையாகாது.

எய்ட்சுக்கான மருந்தை எப்போது மருத்துவ உலகம், மனித குலத்துக்கு வழங்கப்போகிறது?

அதற்கான ஆராய்ச்சி உலகம் முழுவதும் நடந்து கொண்டிருக்கின்றது. எச்.ஐ.வி. தடுப்பு மருந்து பரிசோதனை கூட தற்போது சென்னையில் நடந்துகொண்டிருக்கின்றது.

Posted in activism, AIDS, Awareness, Bacteria, Blood, Campaigns, Checks, Condoms, cure, Disease, diseases, doctors, Donors, Education, HIV, Hospitals, Infection, Inn, Inter News Network, Interview, Jaya Sridhar, Jeya Sridhar, medical, Medicine, NGO, patients, Pharmaceuticals, Plasma, Red Ribbon, Sex, Sridhar, Tests, Transfusion, Trials, Virus | 1 Comment »

Staff strength in government hospitals vs secondary health centres in Tamil Nadu: Healthcare

Posted by Snapjudge மேல் ஜனவரி 6, 2008

இது என்ன விபரீதம்?

மருத்துவக் கல்லூரி மாணவர்கள் கிராமப்புற சேவையில் ஈடுபடுவது தொடர்பான சர்ச்சை இன்னும் முற்றுப்பெறாத நிலையில், ஒரு புதிய சர்ச்சைக்குப் பிள்ளையார்சுழி போட்டிருக்கிறார் தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர்.

அரசு மருத்துவமனைகளில் தேவைக்குக் குறைவான செவிலியர்கள் இருக்கும்நிலையில், அதற்குப் பரிகாரம் தேடுவதை விட்டுவிட்டு துணை சுகாதார நிலையங்களில் எட்டாயிரம் செவிலியர்களை நியமிக்கப் போவதாக அறிவித்திருப்பது ஏன் என்பது புதிராக இருக்கிறது.

தமிழகத்தில் 1,417 ஆரம்ப சுகாதார நிலையங்களும் 8,683 துணை சுகாதார நிலையங்களும் செயல்பட்டு வருகின்றன. இந்தத் துணை சுகாதார நிலையங்களில், கிராமப்புற மக்களுக்குச் சேவையாற்றுவதற்குத் தனிப்பயிற்சி பெற்ற கிராம சுகாதார செவிலியர்கள் பணியாற்றி வருகின்றனர்.

சுமார் 5,000 பேருக்கு ஒருவர் என்கிற விகிதத்தில் நியமிக்கப்படும் இந்தக் கிராம சுகாதார செவிலியர்கள்தான், கிராமப்புறங்களில் வீடுவீடாகச் சென்று அரசின் சுகாதாரத் திட்டங்களைச் செயல்படுத்துபவர்கள். கிராம மக்கள் மத்தியில், குறிப்பாக, அதிகம் படிப்பறிவோ வசதியோ இல்லாத அடித்தட்டு மக்கள் மத்தியில் சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன் தடுப்பூசி போடுதல், பிரசவம் பார்த்தல் போன்ற பணிகளில் ஈடுபடுபவர்கள் இவர்கள்தான். இவர்கள் செயல்படும் விதமும் செயல்படும் சூழலும் மருத்துவமனைகளில் பணிபுரியும் செவிலியர்களின் செயல்பாடுகளிலிருந்து முற்றிலும் வேறுபடுகிறது என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

ஆரம்ப சுகாதார நிலையங்களின் நிலைமை பாராட்டும்படியாக இருக்கிறதா என்றால் இல்லை. துப்புரவுப் பணியாளர்களில் தொடங்கி மருத்துவமனைப் பணியாளர்கள், ஆய்வகப் பணியாளர்கள், ஓட்டுநர்கள் என்று இந்த ஆரம்ப சுகாதார நிலையங்களில் நிரப்பப்படாமல் இருக்கும் பணியிடங்கள் நிறையவே இருக்கின்றன. ஆம்புலன்ஸ் வழங்கப்பட்டு அதை ஓட்டுவதற்கு ஓட்டுநர் இல்லாத நிலைமைகூட சில ஆரம்ப சுகாதார நிலையங்களில் உள்ளது.

இது ஒருபுறமிருக்க, அரசு மருத்துவமனைகளில் கடுமையான செவிலியர் பற்றாக்குறை நிலவுகிறது. பல இடங்களில் மருத்துவர்களும், செவிலியர்களும் இல்லாமல் நோயாளிகள் வேதனைப்படுவது அரசு மருத்துவமனைக்குப் போய் பார்த்தவர்களுக்குத்தான் தெரியும். பயிற்சி மருத்துவர்களைப் போன்று செவிலியர் படிப்பு முடித்தவர்களைத் தாற்காலிக ஊழியர்களாக அரசு மருத்துவமனைகளில் நியமித்து குறைந்தது இரண்டு ஆண்டுகள் பயிற்சி அளிப்பது என்று அரசு முடிவெடுத்தால் அது வரவேற்கப்பட வேண்டிய விஷயம்.

அதையெல்லாம் செய்யாத மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர், ஆரம்ப சுகாதார நிலையங்களில் 8,000 செவிலியர்களை ஒப்பந்தப் பணியாளர்களாக நியமிக்கப் போவதாக அறிவித்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.

இந்தச் செவிலியர்கள் கிராம சுகாதார நிலைய செவிலியர்களைப்போல வீடுவீடாக, தெருத்தெருவாக, கிராமம் கிராமமாகச் சென்று பணியாற்றுவார்களா என்பது ஒருபுறம் இருக்கட்டும். அனுபவம் இல்லாத ஒப்பந்தப் பணியாளர்களாக செவிலியர்களை நியமிப்பதன் மூலம் கிராமப்புற அடித்தட்டு மக்களுக்குத் தரமற்ற மருத்துவ சேவையை வழங்குவதுதான் அரசின் நோக்கமா என்கிற கேள்வி எழுகிறது.

தாற்காலிகமாக இரண்டு ஆண்டுகள் பணியாற்றிவிட்டு அந்தச் செவிலியர்கள் மீண்டும் மருத்துவத் துறைக்கே சென்று விடுவார்கள் என்கிறார் அமைச்சர். அப்படியானால் அனுபவம் இல்லாத இந்த செவிலியர்களைக் கொண்டு கிராமப்புறங்களில் பிரசவம் பார்க்க அனுமதிப்பது என்பது ஏழை மக்களுக்கு அரசு தெரிந்தே செய்யும் துரோகம் என்று ஏன் கருதக்கூடாது?

இதுபோன்ற முன்யோசனையே இல்லாத, எடுத்தோம் கவிழ்த்தோம் முடிவுகள் மிகப்பெரிய விபரீதங்களுக்கு வழிகோலுமே தவிர, மக்களின் நல்வாழ்வுக்கு உத்தரவாதம் அளிக்காது. சேவையைப் பற்றிக் கவலைப்படாமல் செய்யப்படும் தேவையற்ற நியமனங்கள், அரசின் செயல்பாடு பற்றி தேவையில்லாத உள்நோக்கம் கற்பிக்க வழி வகுக்கும் என்பது அமைச்சருக்கு ஏன் புரியவில்லை?

——————————————————————————————————–

ஆரம்ப சுகாதார நிலையங்களில்
1000 செவிலியர்கள் புதிதாக நியமனம்

ஜன.6-இல் முதல்வர் கலைஞர் ஆணை வழங்குகிறார்

சென்னை. ஜன. 5- தமிழகத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலை யங்களில் புதிதாக 1000 செவி லியர்கள் நாளை (6-1-2008) நியமிக்கப்படுகிறார்கள். இதற்கான நியமன ஆணை களை முதல்வர் கலைஞர் அவர் கள் தலைமைச் செயலகத்தில் வழங்குகிறார்.
சுகாதாரத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் இதனைத் தெரிவித்ததோடு, மேலும் கூறியதாவது:
தி.மு.க. அரசு பொறுப்பு ஏற்றுக் கொண்ட பிறகு, தமிழ கம் முழுவதிலும் உள்ள அரசு மருத்துவ மனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் மேம் படுத்தப்பட்டு வருகின்றன. சுகாதாரத் துறைக்குக் கூடு தல் நிதி ஒதுக்கி, வருமுன் காப் போம், கர்ப்பிணிப் பெண்கள் பாதுகாப்பு ஆகிய திட்டங்கள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. ஆரம்ப சுகாதார நிலையங்கள் 24 மணி நேரமும் இயங்கப் புதிதாக மருத்துவர்கள் நியமிக் கப்பட்டுள்ளனர். பேறுகால மரணத்தைத் தடுக்கவும், கிராமப்புறச் சேவை யைச் சுகாதாரத் தறை மேம் படுத்தியுள்ளது.

அதன் அடிப் படையில் ஆரம்ப சுகாதார நிலையங்களில் மேலும் 1000 செவிலியர்கள் நியமிக்கப் பட உள்ளனர். கிராமப்புற மக்க ளுக்கு அடிப்படை மருத்துவ வசதி கிடைக்கவேண்டும் என் பதில் முதல்வர் தீவிரமாக உள் ளதால், கிராமப்புற மருத்துவ சேவையை விரிவு படுத்தி வருகி றோம்.

6 ஆம் தேதி முதல்வர் 5 மருத் துவத் திட்டங்களைத் தொடங்கி வைக்கிறார். 10 லட்சம் குழந்தை களுக்கு போலியோ சொட்டு அளிக்கும் திட்டத்தை அன்று காலை தனது இல்லத்தில் அவர் தொடங்கி வைக்கிறார்

11.5 லட்சம் குழந்தைகளுக்கு மஞ்சள் காமாலை தடுப்பு ஊசித் திட்டம், கிராமப்புற மருத்துவ சேவைக்கு 100 ஆம் புலன்ஸ், புதிதாக 1000 செவிலி யர்கள் நியமன ஆணைகளை வழங்குதல், 1036 ஆரம்ப சுகா தார நிலையங்களுக்கு ரூ 5 . 2 கோடி செலவில் கணினி மற் றும் இணையதள வசதி போன் றவற்றை தலைமைச் செயல கத்தில் காலை 10 மணிக்கு முதல்வர் வழங்குகிறார்.
ஆரம்ப சுகாதார நிலையங் களுக்கு 660 பேரும், அரசு மருத்துவமனைகளுக்கு 340 பேரும் 98 மய்யங்களில் அவசர சிகிச்சைகளுக்காகவும் இந்தப் புதிய செவிலியர்கள் நியமிக்கப்படுகின்றனர். இது தவிர 66 சுகாதார ஆய்வாளர்களுக்கு நியமன ஆணைகளையும் வழங்குகிறார். 380 வட்டாரங் களுக்கு மொபைல் ஆம்புலன்ஸ் வழங்கப்படுகிறது. ரூ 6 கோடி செலவில் செயல்படுத் தப்படும் இத்திட்டத்தில் ஒவ் வொரு குழுவிலும் ஒரு மருத் துவர், ஒரு செவிலியர், ஓட்டுநர் ஆகியோர் இடம் பெறுகின் றனர்.

பேறு சாரா மற்றும் குழந்தைகள் நலன் காப்பதற் காக இக் குழுவினர் கிராமங்களுக்குச் சென்று சிகிச்சை அளிப்பார்கள். இதன் முதல் கட்டமாக இன்று 100 வட்டா ரங்களுக்கு ஆம்புலன்ஸ் வழங் கப்படுகிறது. பின்னர் படிப் படியாக மற்ற வட்டாரங் களுக்கு வழங்கப்படும்.

——————————————————————————————————————
ஆரம்பமே சுகாதாரமாக இல்லை!

நாட்டின் பெரும்பாலான மாநிலங்களில் ஆரம்ப சுகாதார நிலையங்களில் சிகிச்சை பெறுவதைப் பெரும்பாலான ஏழைகள் கூட தவிர்க்கின்றனர் என்று சமீபத்திய ஆய்வு தெரிவிக்கிறது.

அதற்கு முக்கியமாக 4 காரணங்கள் கூறப்படுகின்றன. 1. டாக்டர், நர்ஸ், மருத்துவ உதவியாளர் உள்ளிட்ட ஊழியர்கள் கிராமப்புற மையங்களுக்குச் சரியாக வேலைக்கு வருவதில்லை. 2. அப்படியே வந்தாலும் நோயாளிகளைக் கனிவாகக் கவனிப்பதில்லை. 3. அவசரத்துக்கு இங்கே வந்துவிட்டோம், அருகில் உள்ள நகரத்துக்குச் சென்றிருந்தால் இன்னும் நன்றாகக் கவனித்திருப்பார்கள் என்றே பெரும்பாலான நோயாளிகள் நினைக்கின்றனர், 4. சுகாதார நிர்வாகத்தில் நிலவும் ஊழல் மற்றொரு முக்கியமான காரணம்.

ஏழை, பணக்காரர் என்ற வித்தியாசம் இல்லாமல், வியாதி வந்துவிட்டால் உடனே நாடுவது தனியார் மருத்துவமனைகளைத்தான். டாக்டர் இல்லை, மருந்து இல்லை, படுக்கை இல்லை என்றெல்லாம் அவர்கள் திருப்பி அனுப்புவதில்லை. “முதலில் நீ, அப்புறம் உன் பணம்’ என்று தனியார் மருத்துவமனைகளில் அக்கறை காட்டி வசூலித்துவிடுகிறார்கள். எனவே நோயாளிகளும் செலவைப்பற்றி கவலைப்படுவதில்லை.

மேலை நாடுகளில் அரசு மருத்துவமனைகளில் டாக்டர்களுக்கு மாத ஊதியம் என்ற முறையைக் கைவிட்டு, அவர்கள் எத்தனை நோயாளிகளைப் பார்க்கின்றனர் என்ற கணக்கை வைத்து ஊதியம் தருகின்றனர். எனவே டாக்டர்களும் அக்கறை காட்டுகின்றனர். அதை இங்கேயும் அமலுக்குக் கொண்டுவரலாம்.

சுகாதாரம் என்பது தடுப்பூசி போடுவது, முகாம்களில் கண், பல், காது-மூக்கு-தொண்டையைச் சோதிப்பது மட்டும் அல்ல. கிராமம் ஆனாலும், நகரம் ஆனாலும் சாக்கடைகள் தேங்காமல் பார்த்துக் கொள்வது, குப்பைகள் சேராமல் அகற்றுவது, கொசுக்கள் பெருகாமல் மருந்து தெளிப்பது, அடிப்படைச் சுகாதாரம் குறித்து மக்களுக்குக் கற்றுத்தருவது போன்றவையுமாகும். டாக்டர்கள், நர்சுகள் மட்டும் அல்ல; ஆசிரியர்கள், பொறியாளர்கள், அரசு ஊழியர்கள் சேர்ந்து இயக்கமாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை இது.

நம்முடைய ராணுவத்துக்கும், கல்விக்கும் ஒதுக்கும் தொகையைவிட அதிகத்தொகையை சுகாதாரத்துக்கு ஒதுக்க வேண்டும்.

பீடி, சிகரெட் போன்ற புகையிலைப் பொருள்கள், கைனி, ஜர்தா போன்ற போதை பாக்குகள், விஸ்கி, பிராந்தி, ரம், ஜின், பீர் போன்ற மதுபானங்கள் ஆகியவற்றை விற்பனை செய்ய அனுமதித்துவிட்டு பிறகு சிகிச்சை அளிப்பதென்பது தும்பைவிட்டு வாலைப்பிடிக்கிற கதை. மக்கள் நலனில் அக்கறை உள்ள, நலவாழ்வை நாடும் முற்போக்கு ஜனநாயக அரசுகள் இவற்றுக்குத் துணிச்சலாக தடை விதித்து மக்களின் சுகாதாரத்துக்கே முன்னுரிமை தர வேண்டும். வருமான இழப்பை ஒரு பொருட்டாகவே கருதக்கூடாது.

எல்லாவற்றுக்கும் மேலாக, வயதுவந்த எல்லோரும் மருத்துவ இன்சூரன்ஸ் செய்துகொள்வது கட்டாயம் என்று சட்டம் இயற்றி, மிகக் குறைந்த பிரீமியத்தை வசூலிக்க வேண்டும். இதனால் திரளும் கோடிக்கணக்கான ரூபாயில் ஏழை நோயாளியின் சிகிச்சைக்குக்கூட எத்தனை லட்சம் செலவானாலும் அதை இன்சூரன்ஸ் நிறுவனமே ஏற்கும் நிலை வேண்டும். அப்படிச் செய்தால்தான் அனைவருக்கும் மருத்துவ வசதி என்பது வெறுங்கனவாக நிற்காமல் நனவாக முடியும்.

நகர்ப்புறங்களில் பெரிய மருத்துவமனைகளில் வேலைபார்ப்பது டாக்டர்களுக்கு மன மகிழ்ச்சியையும், பெருமிதத்தையும் அளிக்கிறது. அத்துடன் தங்களுடைய குழந்தைகளின் எதிர்கால படிப்புக்கும், எப்போதாவது கிடைக்கும் ஓய்வு நேரத்தில் குடும்பத்துடன் பொழுது போக்கவும் நகரமே ஏற்றது என்று டாக்டர்கள் கருதுகின்றனர். இதனாலேயே கிராமங்களுக்குச் செல்லத் தயக்கம் காட்டுகின்றனர். இந்தநிலை மாற கிராமப்புற சேவைகளுக்கு பண ஊக்குவிப்பு முதல், பதவி உயர்வு வரை பலவிதமான சலுகைகளை அளிப்பதே விவேகமான வழிமுறையாக இருக்கும்.

வளமான நாட்டின் சொத்து, வலிமையான அதன் மக்கள்தான். இதைப் புரிந்துகொள்ள முடியாதவர்கள் அல்ல நம்முடைய நிதி அமைச்சர் ப. சிதம்பரமும், சுகாதார அமைச்சர் அன்புமணியும். எனவே வரும் பட்ஜெட்டில், ஏழைகளுக்கும் முதியோருக்கும் 100% பலன் கொடுக்கும் எளிமையான மருத்துவ இன்சூரன்ஸ் திட்ட அறிவிப்பை நிச்சயம் எதிர்பார்க்கலாம்.

Posted in Anbumani, Awareness, Birth, Care, Chennai, Child, Childbirth, Children, City, Contract, Contractors, DMK, Doc, Docs, doctors, Employment, Experience, Free, Full-time, GH, Govt, Health, Healthcare, Hospital, Hygiene, Immunization, Jobs, Kids, Labor, Labour, M.R.K.Paneerselvam, Madras, medical, Medicine, Metro, MRK Paneerselvam, newborns, Nurses, Pamphlets, Paneerselvam, Panneerselvam, Pannirselvam, Part-time, PMK, Policy, Polio, Poor, Pregnancy, Prenatal, Ramadoss, Rural, service, Shortage, TN, vaccinations, Vaccines, Villages, Work, workers | 1 Comment »

Recipe for ‘Uraimarundhu’: Ayurvedha Corner – Traditions & Herbs

Posted by Snapjudge மேல் திசெம்பர் 12, 2007

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: அறிவாற்றலுக்கு – உரைமருந்து!

பேராசிரியர் எஸ். சுவாமிநாதன்

என் மகனுக்கு ஏழு வயதாகிறது. படிப்பதிலும், வாசிப்பதிலும், எழுதுவதிலும் போதிய வேகம் இல்லை. டி.வி. கார்ட்டூன் பார்க்க அதிக ஆர்வம் காட்டுகிறான். பள்ளிக்குச் செல்வதற்கு, சிணுக்கம், பயம் கொள்கிறான். மற்றபடி பொதுவாக துறுதுறுப்பும் அறிவும் உள்ளவனாகவும் இருக்கிறான். அவனது மெலிந்த உடல் தேறவும், எழுத்து மற்றும் படிப்பில் திறம் பெறவும் வழி கூறவும்.

தனக்குப் பிறந்த குழந்தை நல்ல அறிவாற்றலோடு நீண்ட ஆயுளுடன் மகிழ்ச்சியுடன் வாழவேண்டும் என்று ஒரு தாய் நினைப்பது இயற்கையே. இவை அனைத்தையும் பெற அந்தக் காலங்களில் உரை மருந்து ஒன்றைத் தயாரித்து சிசுக்களுக்கும் கொடுப்பார்கள். இந்த உரை மருந்து இன்று மறந்துபோய்விட்டது. அதை நீங்கள் உங்கள் குழந்தைகளுக்குப் பிறந்த 10-15 நாட்களிலிருந்து 5-7 வயது வரை தொடர்ந்து கொடுத்து வந்திருந்தால் நீங்கள் கூறும் உபாதைகள் அனைத்தையும் தவிர்த்திருக்கலாம். காலதாமதமானாலும் பரவாயில்லை, இப்போதும் அந்த உரை மருந்து தங்கள் மகனுக்கு உதவக்கூடும்.

கடுக்காய், சித்தரத்தை, சுக்கு, ஜாதிக்காய், மாசிக்காய், வசம்பு என்ற ஆறு கடைச்சரக்குகள். நெல்லைப் புழுக்குவதற்கு வேக வைக்கும்போது நெல்லுடன் இவற்றை அப்படியே வெள்ளைத்துணியில் முடித்து வைத்துவிடவும். அரை வேக்காடு ஏற்பட்டதும் (காய்களை அழுத்தினால் அழுந்தும் பதம் வந்தவுடன்) எடுத்து நிழலில் உலர்த்தி வைத்துக் கொள்ளவும். உரை மருந்து தயார்.

கை அகலத்திலுள்ள உரைகல் ஒன்று தேவை. அதில் வெந்நீர், வெற்றிலைச் சாறு, துளசிச் சாறு, ஓமகஷாயம், இஞ்சிச் சாறு இவற்றில் ஒன்றைவிட்டு ஒவ்வொன்றையும் வயதிற்கேற்றபடி 2-15 தடவை உரைத்து வந்த விழுதைத் தேன் அல்லது சர்க்கரை சேர்த்துக் கொடுக்கவும். வாயு, சளி -வெந்நீர்; சளி, மப்பு -வெற்றிலைச்சாறு, துளசிச் சாறு, தேன்; வயிறு மந்தம், வயிற்றுப்போக்கு-ஓமகஷாயம், தேன். மப்பு, ஜ்வரம், வாந்தி -இஞ்சிச்சாறு, தேன் என்று மாற்றி அமைத்துக்கொள்ளலாம்.

கடுக்காய் :

நல்ல ஜீரண சக்தி, பசி தரும். மலத்தை இளக்கும். புளிப்பு(வயிற்றில்) அதிகமாவதைத் தடுக்கும். அஜீரண பேதியைத் தடுக்கும். குடல், இரைப்பை, கல்லீரல் சரியே இயங்கச் செய்யும்.

சுக்கு :

வயிற்றில் வாயு சேர விடாது. வயிறு உப்புசம், மலஜலம் சரியாக வெளியேறாதிருத்தல், மப்பால் வயிற்றுவலி, அஜீரணம், வாந்தி இவற்றைப் போக்கும். ஆனால் வயிற்றில் அழற்சி, கடுப்புடன் சீதத்துடன் மலம் வெளியாதல் ரத்தப்போக்கு போன்றவை இருந்தால் சுக்கை உரைத்துக் கொடுக்கக்கூடாது.

சித்தரத்தை :

தொண்டை மார்பு இவற்றில் கபக்கட்டு, உடலில் கடுப்பு வலி இவற்றில் நல்லது. எண்ணெய் தேய்த்தால் ஜ்வரம் சளி பிடிக்கும் என்ற நிலையில் இதனைத் தொடர்ந்து கொடுக்கலாம். தொண்டை-வாய்ப்புண், வறட்டிருமல், வயிற்று வேக்காளம் உள்ள நிலையில் சித்திரத்தையைக் கொடுக்கக்கூடாது. கபக்கட்டுள்ள நிலையில் இதனையும், சுக்கையும் அதிகம் உபயோகிக்கலாம்.

ஜாதிக்காய் :

இரைப்பையை நன்கு தூண்டி, ருசி சுவை கூட்டி பசி ஜீரண சக்தி தரும். சிடுசிடுப்பு, பரபரப்பு, காரணம் புரியாத அழுகை முதலியதைக் குறைத்து அமைதியாகத் தூக்கம் வரச் செய்யும். இளகிச் சூட்டுடன் அடிக்கடி மலம் போவதை இது தடுக்கும்.

மாசிக்காய் :

வேக்காளத்தைக் குறைக்கும். வாய்ப்புண், இரைப்பைப் புண், குடல் புண் இவற்றைக் குறைக்கும். பற்களைக் கெட்டியாக அழகாக வளரச் செய்யும். உடலில் விஷசக்தி பரவாமல் தடுக்கும். சிறுநீர் தாராளமாக வெளியாகும். தொண்டைச் சதை வளர்ச்சி, உள்நாக்கு வளர்ச்சி, சீத ரத்தத்துடன் மலப்போக்கு, வாயில் உமிழ்நீர் அதிகம் பெருகுதல் இவற்றைக் கட்டுப்படுத்தும்.

வசம்பு :

இதுவும் கடுக்காயும், பிள்ளை வளர்ப்பான் என்ற பெயர் பெற்றவை. பசியின்மை, சுறுசுறுப்பின்மை, ருசியின்மை இவற்றைப் போக்கும். பரபரப்பு, சிடுசிடுப்பு, அமைதியின்மை இதனைச் சீராக்கும். பால் ஜீரணமாகாமல் வெளுத்து மலம் போவது, கீரிப்பூச்சி, உப்புசம், வயிற்றுவலி, மார்பில் கபச்சேர்வை இவற்றைப் போக்கும். உடல் சீராக வளர உதவும்.

கார மருந்து என இதற்குப் பெயர். அதனால் உரைத்த மருந்தை சிறுகச்சிறுகச் புகட்ட வேண்டும். தேன் சர்க்கரை சேர்த்து இனியதாக ஆக்கிக் கொள்ள வேண்டும். சிறு சிசுவிற்கு 10-15 உரைப்பு வரை தேவைப்படும். மூளைக்கும் குடலுக்கும் நல்ல செயல் திறனைத் தரும் இம்மருந்தை நீங்கள், உங்கள் மகனுக்கு ஏழு அல்லது எட்டு வயது முடியும் வரை தொடர்ந்து கொடுத்து வரலாம். எழுத்து மற்றும் படிப்பில் திறமை வளரும்.

Posted in Alternate, Ayurveda, Ayurvedha, Ayurvedha Corner, Ayurvedic, Ayurvetha, Child, Children, doctors, Herbs, Kids, medical, Newborn, Pregnancy, Pregnant, Therapy, Traditions, Urai marundhu, Urai marunthu, Uraimarundhu, Uraimarunthu | 1 Comment »

Dec 8 – LTTE, Eezham, Batticaloa, Sri Lanka – News & Updates: BBC Tamil

Posted by Snapjudge மேல் திசெம்பர் 10, 2007

இலங்கை அரசின் வரவு செலவுத் திட்டத்துக்கு எதிராக வாக்களிக்க வேண்டிய நிலை ஏற்படும் என்கிறது ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ்

இலங்கையின் கிழக்கே முஸ்லீம்களின் நிலங்களைப் பறித்து பெரும்பான்மை மக்களுக்கு வீடுகளை கட்டவும், காடுகளை வளர்க்கவும், இலங்கை அரசு எடுத்து வரும் முடிவை கைவிடாவிட்டால், அரசுக்கான ஆதரவை விலக்கிக் கொள்ள நேரிடும் என ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

இது குறித்து தமிழோசையிடம் கருத்து வெளியிட்ட அக்கட்சியின் செயலாளர் நாயகம் ஹஸன் அலி, தமக்கு கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளையும் மீறி இவ்வாறான செயல்களில் இலங்கை அரசு ஈடுபடுவதாக தெரிவித்தார்.

கிழக்குப் பகுதியில் முஸ்லீம்களின் நிலங்கள் மட்டுமல்லாமல், இந்து கோவிலுக்கு உரிமையான இடத்தையும் அரசு இவ்வாறு பெரும்பான்மை மக்களுக்கு பிரித்துக் கொடுத்துள்ளது எனவும் ஹஸன் அலி சுட்டிக் காட்டினார்.

வரும் 14 ஆம் தேதி அன்று வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாவது வாசிப்பின் போது அதற்கு ஆதரவாக வாக்களிப்பதா அல்லது எதிர்த்து வாக்களிப்பதா என்பது குறித்து கட்சியின் உயர்மட்டக் குழு ஞாயிறு இரவு கூடி முடிவு செய்யும் எனவும் அவர் தெரிவித்தார்.

 


இலங்கை மட்டக்களப்பு மாவட்டத்தில் சிங்கள மருத்துவர்கள் கணிசமான அளவு நியமனம்

மட்டக்களப்பு மருத்துவமனை
மட்டக்களப்பு மருத்துவமனை

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள அரச வைத்தியசாலைகளில்
சேவையாற்ற இம்முறை கணிசமான அளவு சிங்கள மருத்துவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.

புதிதாக நியமனம் பெற்றுள்ள தமிழ் மருத்துவர்களில் பலரும்
இம்மாவட்டத்தில் சேவையாற்ற முன்வராமையே இதற்கு காரணம் என்று கூறப்படுகின்றது.

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 38 மருத்துவர்களில் 32 பேர் சிங்களவர்கள் எனக் கூறும் சுகாதார அமைச்சு அதிகாரிகள் போதனா வைத்தியசாலைக்கும் அண்மையில் அரசாங்கத்தினால் விடுவிக்கப்பட்ட பிரதேச வைத்தியசாலைகளுக்கும் இவர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.

அச்சத்துடனேயே சேவையாற்ற தான் இங்கு வந்ததாகக் கூறும் வாகரை வைத்தியசாலையில் சேவையாற்றும் டாக்டர் சிந்தக ஹிமால் புஞ்சிஹேவா தொடர்ந்தும் அச்சத்துடனேயே இருப்பதாக குறிப்பிடுகின்றார். வாகரை வைத்தியசாலையில் போதியளவு வசதிகள் இல்லை என்றும் அவர் சுட்டிக் காட்டுகின்றார்.

குறிப்பிட்ட வைத்தியர்கள் நியமனங்கள் இம்மாவட்டத்திலுள்ள வைத்தியர்கள் பற்றாக்குறைக்கு தீர்வாக அமையாது என சுட்டிக்காட்டும் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் எஸ்.சதுர்முகம், அண்மையில் மீள் குடியேற்றம் இடம்பெற்ற பிரதேசங்களில் இவ் வைத்தியர்கள் தங்கியிருந்து சேவையாற்ற தயங்குவதாகவும் குறிப்பிடுகின்றார்.


இலங்கையின் வடக்கில் தொடரும் மோதல்

இலங்கை இராணுவத்தினர்
இலங்கை இராணுவத்தினர்

இலங்கையின் வடக்கே இராணுவத்தினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் தொடரும் மோதல்களில் 22 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டிருப்பதாகத் தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையம் தெரிவித்திருக்கின்றது.

இந்த மோதல்களின்போது 3 இராணுவத்தினர் காயமடைந்து அனுராதபுரம் இராணுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக இராணுவம் கூறியிருக்கின்றது,

மன்னார் பெரியதம்பனை, குறிசுட்டகுளம், வவுனியா கள்ளிக்குளம், யாழ்ப்பாணம் கிளாலி ஆகிய இராணுவ முன்னரங்க பகுதிகளிலேயே இந்த மோதல்கள் இடம்பெற்றிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

மன்னார் இலந்தைமோட்டை பகுதியில் இருவர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும், கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 10 கிலோ நிறைகொண்ட கிளேமோர் கண்ணிவெடியும் கைப்பற்றப்பட்டிருப்பதாக தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையம் கூறியிருக்கின்றது.

இராணுவத்தினரால் கைது செய்யப்பட்ட இவர்கள் இருவரும் மேல் விசாரணைகளுக்காக மன்னார் பொலிசாரிடம் கையளிக்கப்பட்டு விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் அந்த ஊடகத் தகவல் மையம் தெரிவித்திருக்கின்றது.

கடந்த சில தினங்களாகவே வடக்குப் போர்முனைகளில் இராணுவத்தினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் கடுமையான மோதல்கள் இடம்பெற்று வருவதாக ஊடகங்கள் தெரிவித்திருக்கின்றன.

Posted in Batticaloa, Budget, doctors, Eelam, Eezham, Hospitals, LTTE, Medicine, News, Sri lanka, Srilanka, Updates | Leave a Comment »

The importance of Sanitary Inspections on Food joints – Health Hazards of Restaurants

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 11, 2007

தேவை விழிப்புணர்வு!

கடந்த சில ஆண்டுகளாகவே, தமிழகம் முழுவதும் ஆங்காங்கே தொற்றுநோய்கள் பரவுவது என்பது இயல்பான விஷயமாகிவிட்டது. சமீபத்தில் சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மாணவி ஒருவரே, இதுபோன்ற தொற்றுநோய்க்குப் பலியாகி இருப்பது என்பது எந்த அளவுக்கு நாம் விழிப்புணர்வு இல்லாமலும் கவனக்குறைவாகவும் இருக்கிறோம் என்பதைத்தான் காட்டுகிறது.

ஒருபுறம் முறையாக நடத்தப்படும் உணவு விடுதிகள். மறுபுறம், “கையேந்தி பவன்’ என்கிற காரணப் பெயருடன் அழைக்கப்படும் தெருவோரக் கடைகள். போதாக்குறைக்கு, கடந்த பத்து ஆண்டுகளில் காளான்கள்போல முளைத்திருக்கும் துரித உணவகங்களும், “சாட் பண்டார்’ என்று அழைக்கப்படும் வடநாட்டு உணவகங்களும். அதிக வருமானமுள்ள பிரிவினருக்காகவே நடத்தப்படும் நவநாகரிக உணவகங்கள் இந்தப் பட்டியலிலேயே வராது.

மத்தியதர வகுப்பினர் குடும்பத்துடன் செல்கின்ற உணவு விடுதிகள் பெருகி இருப்பது மட்டுமல்லாமல் அவற்றின் தரமும் செயல்படும் விதமும் நிச்சயமாக உயர்ந்திருக்கிறது. இதுபோன்ற உணவு விடுதிகளில் சராசரித் தமிழன் முப்பது ரூபாய் இல்லாமல் மதிய உணவு சாப்பிட முடியாது என்பது ஒருபுறம் இருந்தாலும், ஓரளவில் சுத்தமாகவும் தரமாகவும் இந்த விடுதிகள் நடத்தப்படுகின்றன என்பதை நாம் மறுப்பதற்கில்லை. மேலும், இதுபோன்ற விடுதிகள் நகராட்சி மற்றும் மாநகராட்சி சுகாதாரத் துறையினரின் கண்காணிப்புக்கு உட்பட்டு, இயன்றளவுக்கு அடிப்படைச் சுகாதார விதிகளைக் கடைப்பிடிக்க முனைகின்றன என்பது உண்மை.

ஆனால், திரும்பிய இடத்திலெல்லாம் காளான்களாக முளைத்திருக்கும் துரித உணவகங்கள் எந்த அளவுக்குச் சுகாதார விதிகளைக் கடைப்பிடிக்கின்றன என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது. அதுமட்டுமல்லாமல், தெருவோரக் கடைகள் மிகப்பெரிய அளவில் சுகாதாரக் கேடுகளை விளைவிக்கின்றன என்பதை அந்தப் பகுதியில் குடியிருப்போரிடம் கேட்டால் தெரியும். துரித உணவகங்களும், தெருவோரக் கடைகளும் அவை செயல்படும் பகுதியின் நகராட்சி உறுப்பினர்கள் மற்றும் காவல்துறையினரின் நல்லாசியைப் பெற்றிருக்கின்றன என்பதும் ஊரறிந்த ரகசியம்.

வாடிக்கையாளர்களுக்கு நல்ல குடிநீரைக்கூட இதுபோன்ற உணவகங்களும் கடைகளும் வழங்குவதில்லை என்பது மட்டுமல்ல, அடிப்படைத் தரமோ, சுத்தமோகூட இருக்க வேண்டும் என்று நினைப்பதுமில்லை. இவை அனேகமாக இரவு நேரக் கடைகள் என்பதாலும், “டாஸ்மாக்’ மதுபானக் கடையிலிருந்து வருபவர்களைத் தங்கள் வாடிக்கையாளர்களாகக் கொண்டிருப்பதாலும், தரமும், சுத்தமும் தேவையில்லை என்றேகூட நினைக்கிறார்கள்.

சென்னை போன்ற பெருநகரங்களில் காணப்படும் இந்தப் போக்கு இப்போது தாலுகாக்கள் வரை காணப்படுவதுதான் வருத்தப்பட வைக்கும் விஷயம். தொற்று நோய்களின் ஊற்றுக் கண்களாகச் சாக்கடைகள் இருந்த காலம் மெல்ல மெல்லக் குறைந்து வருகிறதே என்று மகிழ்ச்சி அடைய முடியாமல் செய்து விடுகின்றன இப்போது இதுபோன்ற சுகாதாரக் கேடுகளை விளைவிக்கும் உணவு விடுதிகள்.

உணவு விடுதிகளில் போய் சாப்பிடுவது என்பதே கௌரவக் குறைவான, இழிவான விஷயமாக நினைத்திருந்த காலம்போய், வெளியில் போய் சாப்பிடுவது என்பதுதான் நாகரிகம் என்று நினைக்கத் தொடங்கி இருக்கிறோம். அதேநேரத்தில்,தரமும் சுத்தமும் இல்லாத உணவு விடுதிகளில் சாப்பிடுவது நமது உடல் நலனுக்குக் கேடு என்பதை நமது அதிகரித்திருக்கும் கல்வி அறிவு ஏன் உணர்த்த மறுக்கிறது? முன்பு சிக்குன் குனியா, இப்போது “டெங்கு’ காய்ச்சல் பரவுவதாகத் தகவல். இதற்கெல்லாம் காரணம், அடிப்படைச் சுகாதாரக் குறைவும், நமது மக்கள் மத்தியில் காணப்படும் விழிப்புணர்வு இல்லாமையும்தான். இதைக் கண்காணிக்க வேண்டிய அரசு என்னதான் செய்து கொண்டிருக்கிறது?

பத்து ஆண்டுகளுக்குப் பிறகு, இப்போதுதான் ஆயிரம் சுகாதார ஆய்வாளர்களை நியமிக்கத் தீர்மானித்திருக்கிறது தமிழக அரசு. அதுமட்டுமல்ல, 39 நகராட்சிகளில் சுகாதார ஆய்வாளர்களை நியமிக்கவும் முடிவெடுத்திருக்கிறது. இவ்வளவு நாள்கள், முறையான சுகாதாரக் கண்காணிப்பு இருக்கவில்லை என்பதுதானே இதன் பொருள்? கடந்த பத்து ஆண்டுகளாக ஆட்சியில் அமர்ந்திருந்தவர்கள் பொதுமக்களைப் பாதிக்கும் முக்கியமான பிரச்னைகளை எப்படி அணுகியிருக்கிறார்கள் என்பதைத்தானே இது காட்டுகிறது?

எத்தனைபேர் அவதிப்பட்டிருப்பார்கள்? எத்தனை உயிர்கள் பலியாகி இருக்கும்? சிந்தித்துப் பார்க்கவே அதிர்ச்சியாக இருக்கிறது. இப்போதாவது விழித்துக் கொண்டதே அரசு என்று ஆறுதல் அடைவதைத் தவிர என்னதான் வழி?

Posted in Anbumani, Awareness, Bacteria, bacterial, Clean, College, Consumers, dead, Dengue, Dine, Disease, Doc, doctors, Drinking, Eat, Eatery, Education, employees, Fever, Food, Germs, Hotel, Hygiene, Infection, Inspections, Kareema, medical, Mosquito, Nurses, Purity, Ramadas, Restaurants, Sanitary, SMC, Society, Stanley, Student, Treatment, Viral, Virus, Water, Welfare | Leave a Comment »

Chennai Conflicts: Attorneys vs Police Force

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 9, 2007

தவறுகளும் வரம்புமீறல்களும்!

வழக்கறிஞர்களின் போராட்டத்தால் சென்னையிலுள்ள நீதிமன்றங்கள் ஸ்தம்பித்திருக்கின்றன. தங்களுக்கு நீதி கிடைக்கவில்லை என்றால் தமிழகம் முழுவதும் வழக்கறிஞர்கள் போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என்று எச்சரித்திருக்கிறது வழக்கறிஞர்கள் சங்கம்.

சென்னையிலுள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சென்ற ஒரு வழக்கறிஞர், காலதாமதமாவது ஏன் என்று கேள்வி கேட்க, அதுவே வாக்குவாதமாகி, அங்கிருந்த காவல்துறையினர் ஒருவரால் வழக்கறிஞர் தாக்கப்பட்டார் என்பதுதான் வழக்கறிஞர்கள் தரப்பு வாதம். “”காலதாமதத்தையோ, நிர்வாக முறையீடுகளையோ கேள்வி கேட்டதே தவறா? ஒரு வழக்கறிஞருக்கே இந்த நிலைமை என்றால் சாதாரண பொதுமக்களின் நிலைமை என்ன? காவல்துறையினரும் சரி, வழக்கறிஞர் என்றும் பாராமல் அவரைத் தாக்கியது என்ன நியாயம்?” – இவையெல்லாம் வழக்கறிஞர்கள் தரப்பு வாதம்.

இணை ஆணையர் ரவியின் தலைமையில் விசாரணை நடத்த அரசு உத்தரவிட்டது. ஆனால், அவர் சம்பந்தப்பட்ட வழக்கறிஞர்களையோ, வழக்கறிஞர் சங்கத் தலைவரையோ விசாரிக்காமலேயே காவல்துறையினர் மீது எந்தத் தவறும் இல்லை என்று அறிக்கை தாக்கல் செய்துவிட்டார் என்பது வழக்கறிஞர்களின் அடுத்த ஆதங்கம். நீதிமன்ற விசாரணை தேவை என்பது அவர்கள் கோரிக்கை.

வழக்கறிஞர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையில் எப்போதுமே பனிப்போர் நிகழ்ந்தவண்ணம் இருப்பது உலகளாவிய ஒன்று. காவல்துறையினரிடம் ஆஜர்படுத்தப்படும் குற்றவாளிகள் பலரையும் சட்டத்தின் ஓட்டைகளைக் காட்டி விடுவித்துவிடுகிறார்கள் வழக்கறிஞர்கள் என்பது காவல்துறையினரின் வருத்தம். மேலும், கிரிமினல் வழக்குகளில் தங்களைச் சாட்சிக் கூண்டுகளில் ஏற்றி தர்மசங்கடமான கேள்விகளைக் கேட்டு கேலிப்பொருள்களாக்கிவிடுகிறார்கள் என்பதும் காவல்துறையினரின் ஆதங்கம்.

வழக்கறிஞர்கள் தரப்பும் சரி, காவல்துறையினர் தங்களுக்குத் தரவேண்டிய மரியாதையைத் தருவதில்லை என்றும் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்கிறார்கள் என்றும் விமர்சனம் செய்கிறது. வழக்கறிஞர்கள் காவல்நிலையங்களில் தகுந்த மரியாதையுடன் காவல்துறையினரால் நடத்தப்படுவதில்லை என்பதும் குற்றவாளிகளை முறையாக ஜாமீனில் எடுக்க வழக்கறிஞர்களைக் காவல்துறையினர் முடிந்தவரை அனுமதிப்பதில்லை என்பதும் நீண்டகாலமாகவே இருந்துவரும் குற்றச்சாட்டுகள்தான்.

எழுபதுகளில் திருப்பரங்குன்றத்தில் வழக்கறிஞர் அய்யாத்துரை என்பவர் காவல்துறையினரால் தாக்கப்பட்ட சம்பவம் முதல் இன்று வரை, காவல்துறையினருக்கும் வழக்கறிஞர்களுக்கும் இடையில் தொடரும் பரஸ்பர அவநம்பிக்கையும், எதிரி மனப்பான்மையும் குறைந்தபாடில்லை. காலம் தரும் பாடம் இரு தரப்பினரையும் ஒருவரை ஒருவர் மதிக்கும் பண்பையும் அவர்களிடம் நல்லுறவையும் வளர்த்திருக்க வேண்டும். சொல்லப்போனால், காவல்துறையினரும் சரி, வழக்கறிஞர்களும் சரி நவீன உலகத்தின் நாகரிகக் கோட்பாடுகள் தெரிந்த தலைமுறையினராக இருந்தும், இவர்களுக்குள் நல்லிணக்கம் ஏற்படாமல் இருப்பது ஏன் என்பதுதான் கேள்வி.

இவர்களுடைய கருத்து வேறுபாடுகளால் பாதிக்கப்பட்டிருப்பது நீதிமன்றங்கள் மட்டுமல்ல, பொதுமக்களும்தான். சென்னை உயர் நீதிமன்றத்தில் மட்டும் 2006ஆம் ஆண்டு புள்ளிவிவரப்படி தேங்கிக் கிடக்கும் வழக்குகள் 4,06,958. கீழமை நீதிமன்றங்களில் மட்டும் தமிழகத்தில் சுமார் மூன்றரை லட்சம் வழக்குகள் இருப்பதாகக் கடந்த மார்ச் மாதப் புள்ளிவிவரம் கூறுகிறது. விசாரணையில் இருக்கும் வழக்குகள் சுமார் எட்டரை லட்சம்.

இப்படியொரு நிலையில், பலருடைய ஜீவாதாரப் பிரச்னைகள் நீதிமன்றங்களின் தீர்ப்புக்காகக் காத்திருக்கின்றன. காக்கிச் சட்டை போட்டவரானாலும், கருப்புக் கோட்டு அணிந்தவரானாலும், சிவப்பு விளக்கு எரியும் வாகனங்களில் பயணிப்பவர்களானாலும், பேனா பிடித்து எழுதுபவரானாலும் அனைவரும் பொதுமக்களின் நன்மைக்காகவும் தேசத்தின் வளர்ச்சிக்காகவும் சேவை செய்யக் கடமைப்பட்டவர்கள். வரம்பு மீறுவது யாராக இருந்தாலும் கண்டனத்துக்கு உரியவர்களே. சக பணியாளர் என்பதற்காக அவர்களது தவறுகளும் வரம்புமீறல்களும் அனுமதிக்கப்படலாகாது.

நீதி கேட்டு நெடும்பயணம் போக வேண்டிய நிலையில் இருக்கும் பொதுமக்களை மேலும் அவதிப்பட வைப்பது தவறு. கைகுலுக்கிச் செயல்பட வேண்டிய காக்கிச் சட்டைகளும் கருப்புக் கோட்டுகளும் கைகலப்பில் ஈடுபடலாமா?

Posted in abuse, Attorneys, Bandh, Chennai, Conflicts, Cooperation, Correctional, Corrections, Doc, doctors, Force, Hardhal, Hospital, Jobs, Justice, Law, Lawyers, medical, Medicine, Order, Police, Power, Protest, Treatment, Work | 2 Comments »

Elephantiasis gene secrets mapped – BBC Tamil

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 25, 2007

யானைக்கால் நோய்க்கான கிருமியின் மரபணு ஆய்ந்தறியப்பட்டது

யானைக்கால் நோயால் பாதிக்கப்பட்ட ஒருவரது கால்கள்
யானைக்கால் நோயால் பாதிக்கப்பட்ட ஒருவரது கால்கள்

உலக அளவில் பல நாடுகளில் லட்சக் கணக்கான மக்களை தாக்கும் யானைக்கால் நோயை ஏற்படுத்தும் உயிரினத்தின் மரபணு எவ்வாறு அமைந்துள்ளது என்பதனை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

இந்த அரிய கண்டுபிடிப்பின் மூலம், யானைக்கால் நோய்க்கான மருந்துகள் அல்லது நோய் தடுப்பு மருந்துகளை உருவாக்க வழிபிறக்கும் என்றும் விஞ்ஞானிகள் கருதுகிறார்கள்.

உலக அளவில் இந்த நோயின் காரணமாக, 13 கோடி மக்கள் பீடிக்கப்பட்டுள்ளார்கள். பார்வை இழப்புக்கு அடுத்தபடியாக உலக அளவில் வலது குறைவுக்கான, இரண்டாவது காரணமாக இந்த நோய் கண்டறியப்பட்டுள்ளது.

மேலும் உலகில் 80 நாடுகளில் இந்த நோய் பரவியுள்ளது. கொசுக்கடி காரணமாகவே இந்த நோய் பரவுகிறது.

இது தொடர்பான ஆராய்ச்சிகள் லண்டனிலுள்ள இம்பீரியல் கல்லூரியிலும், மேலும் மூன்று அமெரிக்க நிறுவனங்களிலும் நடைபெற்றபோதே இந்த நோயை ஏற்படுத்தும் உயிரினத்தின் மரபணுக்கள் எவ்வாறு அமைந்துள்ளன என்று தெரியவந்துள்ளது.

இந்த கண்டுபிடிப்பின் மூலம், அந்த மரபணுவில் எவ்வகையான புரதங்கள் உள்ளன என்று தெரியவந்திருப்பதாகவும், அவற்றை மேலும் ஆராய்ச்சி செய்வதன் மூலம், இந்த நோயினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு சிகிச்சை வழங்கவும், தடுப்பு முறைகளை முன்னெடுக்கவும் பெரும் வாய்ப்பு ஏற்படும் என இம்பீரியல் கல்லூரியைச் சேர்ந்த டாக்டர் டேவிட் குய்லியானோ கூறியுள்ளார்.

இந்த முடிவுகள் மேலும் பல நாடுகளில் தொடர்ந்து ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வரும் பலருக்கு தங்களது ஆய்வுகளை வேகமாக முன்னெடுத்துச் செல்ல உதவும் என்றும் அவர் கூறியுள்ளார்.

Posted in aanaikkaal, aanaikkal, Bacteria, Biotech, Blockbuster, Burkina Faso, Cases, Challenged, Chemists, China, cure, disability, Disabled, Disease, DNA, doctors, Drugs, Elephantiasis, eradicate, Eradication, genes, Genetic, Genetics, genitals, genome, immunisation, India, infected, Infection, legs, Medicine, Mosquito, parasite, R&D, Research, RnD, Science, Scientists, Sri lanka, Srilanka, Treatment, Vaccines, Viral, Virus, worms, yaanaikkaal, Yaanaikkal | Leave a Comment »

State of MBBS – Analysis on Medical education

Posted by Snapjudge மேல் ஜூலை 5, 2007

எம்.பி.பி.எஸ். -தேவை அவசர சிகிச்சை

ஜே. ரங்கராஜன்

கம்பவுண்டர்களை டாக்டர்களாக மக்கள் மதித்த காலம் உண்டு. ஆனால் இன்று குறைந்தபட்சம் எம்.டி. பட்டம் பெற்றிருந்தால்தான் ஒருவர் டாக்டராகவே பொதுமக்களால் மதிக்கப்படுகிறார். எம்.பி.பி.எஸ்., எம்.டி. அல்லது எம்.எஸ்., உயர் சிறப்பு மருத்துவப் படிப்புகளான டி.எம். அல்லது எம்.சிஎச். என மொத்தம் 11 ஆண்டுகள் படித்தால்தான் மருத்துவத் துறையின் சிகரத்தை ஒருவர் எட்டும் நிலை உருவாகி விட்டது.

இந் நிலையில் டாக்டர் என சொல்லிக் கொள்வதற்கான குறைந்தபட்ச எம்.பி.பி.எஸ். கல்விக்கான வசதிகளை ஏற்படுத்துவதற்கே கடந்த 50 ஆண்டுகளாக தமிழகம் உள்பட எல்லா மாநில அரசுகளும் திணறிக் கொண்டிருக்கின்றன. மருத்துவக் கல்வியின் தரத்தை ஆய்வு செய்து மருத்துவக் கல்லூரி தொடங்க அங்கீகாரம் அளிக்கும் பணியை தில்லியில் உள்ள தன்னாட்சி அமைப்பான இந்திய மருத்துவக் கவுன்சில் (எம்.சி.ஐ.) செய்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் எல்லா மருத்துவக் கல்லூரிகளையும் ஆய்வு செய்து தொடர்ந்து நடத்தும் அனுமதியையும் இந்த அமைப்பு வழங்குகிறது.

ஒரு புதிய மருத்துவக் கல்லூரியைத் தொடங்க வேண்டுமானால், ஒரே வளாகத்தில் 25 ஏக்கர் பரப்பளவு இடம், ஒவ்வொரு துறைக்கும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் பேராசிரியர்கள் -கூடுதல் பேராசிரியர்கள் -உதவிப் பேராசிரியர்கள், அவர்களுக்கு குறிப்பிட்ட பரப்பளவில் அறை, 300 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை, சி.டி. ஸ்கேன் உள்பட மருத்துவ சோதனைக் கருவி வசதிகள், சோதனைக்கூட வசதி, உரிமம் பெற்ற வசதிகளுடன் கூடிய ரத்த வங்கி, துறை வாரியான நூலகம், மத்திய நூலகம் உள்ளிட்ட வசதிகள் இருக்க வேண்டும் என மருத்துவக் கல்விக்குத் தேவையான கடுமையான விதிமுறைகளை இந்திய மருத்துவக் கவுன்சில் நிர்ணயித்துள்ளது.

தமிழகத்தைப் பொருத்தவரை

  • 1835-ல் தொடங்கப்பட்ட சென்னை மருத்துவக் கல்லூரி,
  • அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி (1838),
  • வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி (1942),
  • மதுரை அரசு மருத்துவக் கல்லூரி (1954),
  • தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி (1959),
  • கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி (1960),
  • திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி (1965),
  • செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி (1965),
  • கோவை அரசு மருத்துவக் கல்லூரி (1966)

ஆகியவை மிகவும் பழமையானவை. இந்தக் கல்லூரிகளைக் காலம் காலமாக இந்திய மருத்துவக் கவுன்சில் குழுவினர் ஆய்வு செய்து அவ்வப்போது எம்.பி.பி.எஸ். இடங்களை அதிகரிக்க அனுமதி அளித்து வருகின்றனர்.
போதிய ஆசிரியர்கள், அடிப்படை வசதிகள் இல்லாமல், 1992-ல் திருச்சியில் கி.ஆ.பெ. விசுவநாதம் மருத்துவக் கல்லூரியைத் தொடங்குவதற்கான அறிவிப்பை அரசு வெளியிட்டபோதுதான் பிரச்னை தொடங்கியது. அரசியல் லாபத்துக்காக இந்திய மருத்துவக் கவுன்சில் அதிகாரிகளை ஏமாற்றும் வேலையை அரசே செய்தது. அதாவது, இந்திய மருத்துவக் கவுன்சில் அதிகாரிகள் ஆய்வுக்கு வரும் நிலையில் சென்னை உள்பட வேறு இடங்களிலிருந்து டாக்டர்களைத் திருச்சிக்குக் கடத்தி கணக்குக் காண்பிப்பது, அவர்கள் திருச்சியில் வசிப்பது போன்று தாற்காலிக ரேஷன் அட்டையை அவசர அவசரமாகப் போலியாகத் தயாரிப்பது, ஓய்வு பெற்றோரின் பெயரில் தாற்காலிகமாகப் பணியிடங்களை உருவாக்கி நியமன உத்தரவுகளை அச்சடித்துத் தருவது என மருத்துவக் கல்லூரிக்கு அங்கீகாரம் பெறுவதற்காக அனைத்து மோசடி வேலைகளையும் அரசு கடைப்பிடிக்கத் தொடங்கியது.

இந்த மோசடி வேலைகளை ஒருங்கிணைத்துச் செய்து ஆய்வுக்கு வரும் இந்திய மருத்துவக் கவுன்சில் அதிகாரிகளைத் திருப்திப்படுத்த சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மருத்துவக் கல்வி இயக்குநர் அலுவலகத்தில் துணை இயக்குநர் அந்தஸ்தில் ஒரு மருத்துவ அதிகாரி நியமிக்கப்பட்டார். இந்த மோசடி வேலைக்கு உடன்படாத நியாயமான டாக்டர்களைப் பணி இடமாற்றம் செய்து அரசு பழிவாங்கியது.

1996-ல் மீண்டும் தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் வேலூரில் அரசு மருத்துவக் கல்லூரி தொடங்கப்படும் என்ற அறிவிப்பு வெளியானது. ஆனால், மருத்துவக் கல்லூரிக்கு உரிய இடத்தைத் தேர்வு செய்வதில் காலதாமதம் ஏற்பட்டு செயல்வடிவம் பெறவில்லை. ஆனால், 2000-ம் ஆண்டில் போதிய வசதிகள் இல்லாமல் தூத்துக்குடியில் அரசு மருத்துவக் கல்லூரி தொடங்கப்பட்டது. இந்தக் கல்லூரிக்கு இந்திய மருத்துவக் கவுன்சில் அங்கீகாரம் அளிப்பதில் ஒவ்வொரு ஆண்டும் பிரச்னை தொடர்ந்தது.

2001-ல் மீண்டும் அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தது. அரசியல் அறிவிப்பு செய்யப்பட்டு 2003-ல் கன்னியாகுமரியில் அரசு மருத்துவக் கல்லூரி தொடங்கப்பட்டது. இந்தக் கல்லூரிக்கு இந்திய மருத்துவக் கவுன்சிலின் அங்கீகாரத்தைப் பெற சென்னையிலிருந்து பஸ்ஸில் டாக்டர்கள் கடத்தப்பட்டனர். இதே போன்று அதிமுக ஆட்சியில் தேனியில் அரசு மருத்துவக் கல்லூரி தொடங்கப்பட்டது. 2005-ல் வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி தொடங்கப்பட்டு மாணவர்கள் சேர்க்கப்பட்டனர்.

வேலூர், தேனி, கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். முதலாம் ஆண்டு படிப்பில் இந்த ஆண்டு மாணவர்களைச் சேர்ப்பதற்கு அனுமதி அளிக்க இந்திய மருத்துவக் கவுன்சில் மறுத்து விட்டது. முந்தைய காலங்களைப் போல் டாக்டர்களை இப்போது கடத்தி பொய்க் கணக்கு காண்பிக்க முடியாது. ஏனெனில் அரசின் நிர்பந்தம் காரணமாக ஒன்றுக்கு மேற்பட்ட மருத்துவக் கல்லூரிகளில் வேலை பார்ப்பதாக பொய் சொன்ன 25 டாக்டர்களின் பெயர்ப் பட்டியலை இணையதளத்தில் இந்திய மருத்துவக் கவுன்சில் வெளியிட்டு நடவடிக்கை எடுத்துள்ளது. இந்திய மருத்துவக் கவுன்சில் குழுவினர் ஆய்வுக்கு வரும் நிலையில் இத்தகையோர் இனி ஆசிரியர்களாகப் பணியாற்ற அது தடை விதித்துள்ளது.

இந்த ஆண்டு எம்.பி.பி.எஸ் படிக்க 12,000 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். அவர்களில் 7,000 பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஆண்டு கல்விக் கட்டணம் ரூ.4,000 மட்டுமே உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள எம்.பி.பி.எஸ். இடங்கள் 1,398தான். இந் நிலையில் வேலூர்-தேனி-கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரிகளில் மொத்தம் உள்ள 300 எம்.பி.பி.எஸ். இடங்கள் கேள்விக்குறியாகியுள்ளன. ஆக, இந்த 300 இடங்கள் கிடைக்காமல் போனால் மிஞ்சும் எம்.பி.பி.எஸ். இடங்கள் 1,098தான்.

இவ்வாறு இந்திய மருத்துவக் கவுன்சில் அங்கீகாரம் தர மறுப்பதற்கான முழுமையான காரணம் சுகாதாரத் துறை செயலர் பதவி வகித்த அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். 100 எம்.பி.பி.எஸ். இடங்களுடன் தொடங்கப்படும் மருத்துவக் கல்லூரியில் “அனாடமி’, “பிசியாலஜி’, “பயோகெமிஸ்ட்ரி’, “ஃபாரன்சிக் மெடிசின்’ உள்ளிட்ட ஒவ்வொரு துறையிலும் ஒரு பேராசிரியர், இரண்டு கூடுதல் பேராசிரியர்கள், மூன்று உதவிப் பேராசிரியர்கள் இருந்தாக வேண்டும். ஆனால், தமிழகம் முழுவதுமே இந்தத் துறைகளில் மிகவும் சொற்ப எண்ணிக்கையில்தான் பேராசிரியர்கள் உள்ளனர். உதாரணமாக “அனாடமி’ துறையில் தமிழகம் முழுவதும் மொத்தம் 10 பேராசிரியர்கள்-கூடுதல் பேராசிரியர்களே உள்ளனர்.

அரசுப் பணியில் 20 ஆண்டுகள் டாக்டர்கள் இருந்தாலும் அதிகபட்சம் ரூ.25 ஆயிரம் அளவுக்கே சம்பளம் கிடைக்கும். ஆனால், முதுநிலை மருத்துவப் பட்டம் பெற்ற அடுத்த நாளே தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உதவிப் பேராசியராகச் சேரும் நிலையில் மாதச் சம்பளம் ரூ.45 ஆயிரம் வரை கிடைக்கிறது. இதனால் அரசு மருத்துவக் கல்லூரிகளில் இந்திய மருத்துவக் கவுன்சில் குழுவினர் ஆய்வுக்கு வரும் நிலையில் போதிய பேராசிரியர்கள், உதவிப் பேராசிரியர்கள் இல்லாத நிலை தொடர்கிறது.

இந்தப் பிரச்னைக்குத் தீர்வு காண, முதுநிலைப் பட்டப் படிப்புக்கு டாக்டர்களைச் சேர்க்கும் நிலையில் அரசுப் பணியில் கட்டாயம் மூன்று ஆண்டுகள் பணியாற்ற வேண்டும் என்ற உத்தரவை கடுமையாக அமல்படுத்த வேண்டும். அத்துடன் உதவிப் பேராசிரியராக நியமிக்கும்போதே பணியாற்ற விரும்பும் இடம், அதிக சம்பளம் ஆகியவற்றையும் அரசு அளிப்பது அவசியம்.

இந்த அடிப்படை விஷயங்களில் கவனம் செலுத்தினால்தான் இந்திய மருத்துவக் கவுன்சிலின் அங்கீகாரத்தை அரசு மருத்துவக் கல்லூரிகள் ஒவ்வொரு ஆண்டும் பெறுவதில் பிரச்னை ஏற்படாது. விழுப்புரத்தில் அரசு மருத்துவக் கல்லூரிக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. தர்மபுரி, திருவாரூரில் அரசு மருத்துவக் கல்லூரி தொடங்கப்படும் என்ற அரசியல் மத்தாப்பூ அறிவிப்புகளும் வெளியிடப்பட்டுள்ளன.

இந்திய மருத்துவக் கவுன்சிலின் விதிமுறைகளின்படி ஏற்கெனவே செயல்பட்டு வரும் அரசு மருத்துவக் கல்லூரிகளின் தேவையை முழுமையாக பூர்த்தி செய்து முடிக்காமல் வெற்று அறிவிப்புகளால் எந்தப் பலனும் ஏற்படாது. மாறாக மாணவர்களின் எதிர்காலம்தான் பாதிக்கப்படும் என்பதை அரசு உணர வேண்டும்.

————————————————————————————————

அட்மிஷனுக்கு முன்பே விலைபோகும் பி.இ. சீட்டுகள்

சென்னை, ஜூலை 6: தமிழகத்தில் பொறியியல் கல்லூரிகளில் அட்மிஷன் நடைமுறை தொடங்கும் முன்பாகவே குறிப்பிட்ட சில தனியார் பொறியியல் கல்லூரிகளில் பி.இ., பி.டெக். சீட்டுகள் “கொழுத்த தொகைக்கு’ விலைபோகின்றன.

பிரம்மாண்டத் தோற்றத்தால் ஈர்க்கப்பட்டு மாணவரும், பெற்றோரும் இதுபோன்ற கல்லூரிகளை நாடிச் செல்கின்றனர். இதன் காரணமாகவே குறிப்பிட்ட சில கல்லூரிகள் ஒவ்வொரு ஆண்டும் கட்டாய நன்கொடைக் கட்டணத்தை உயர்த்திக்கொண்டே செல்கின்றன.

இந்நிலையில் பொறியியல் கல்லூரிகளில் அரசு, நிர்வாக ஒதுக்கீட்டு இடங்கள், நிர்வாக ஒதுக்கீட்டுக்கான கவுன்சலிங் ஆகியவை குறித்த வழக்கில் அரசுக்குச் சாதகமான தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் திங்கள்கிழமை காலையில் பிறப்பித்தது.

இதன்படி, சுயநிதி பொறியியல் கல்லூரிகள் பி.இ., பி.டெக். படிப்புகளில் 65 சதவீத இடங்களை அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும் ஒற்றைச் சாளர முறையில் நிரப்ப வேண்டும். 35 சதவீத இடங்களை கல்லூரி நிர்வாகங்கள் தாங்களே நிரப்பிக் கொள்ளலாம். சிறுபான்மையினர் நடத்தும் கல்லூரிகள் 50 சதவீதத்தை அரசிடம் ஒப்படைக்க வேண்டும்.

இதுவரை 22 பொறியியல் கல்லூரிகள் தங்களிடம் உள்ள அனைத்து இடங்களையும், அண்ணா பல்கலை. மூலம் நிரப்பிக் கொள்ள அரசிடம் ஒப்படைத்துள்ளன. இதுபோல், அரசிடம் அனைத்து இடங்களையும் ஒப்படைப்பது குறித்த விருப்பத்தைத் தெரிவிக்கும்படி கடிதங்கள் அனுப்பப்பட உள்ளன என தொழில்நுட்பக் கல்வி இயக்குநர் அலுவலக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இதனிடையே சில தனியார் சுயநிதிப் பொறியியல் கல்லூரிகள் பி.இ. படிப்புகளில் மாணவர்களைச் சேர்த்துக் கொண்டதாகத் தெரிய வந்துள்ளது.

“நிர்வாக ஒதுக்கீட்டுக்கான இடங்கள் குறித்து நீதிமன்றத்தில் வழக்கு உள்ளதே.. மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படாதா?’ என்று கேட்டதற்கு, அதன் தீர்ப்பு தங்களுக்குச் சாதகமாக வரும் என்றும், “சேர்க்கப்பட்ட’ மாணவர்களுக்குப் பாதிப்பு வராது என்றும் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

கல்வியை வியாபாரம் ஆக்கும் பொருட்டு சில சுயநிதி கல்லூரிகள் இது போல் செய்து வருவதை மாணவர்களும் பெற்றோர்களும் ஒருபுறம் ஆதரிக்கத்தான் செய்கின்றனர் என்பது வேதனையான உண்மை. அதனால்தான், ஒற்றைச் சாளர முறைக்குக் காத்திருக்காமல், அட்மிஷன் நடைமுறை தொடங்கு முன்பே பல கல்லூரிகளில் பணத்தைக் கொடுத்துவிடுகிறார்கள்.

பிரம்மாண்டமான கட்டத் தோற்றம், மயக்கும் பேச்சு மற்றும் மாணவர்கள் படிக்கும்போதே அக்கல்லூரிகளில் முன்னணி சாஃப்ட்வேர் நிறுவனங்கள் நடத்தும் வேலைவாய்ப்பு முகாம்கள் போன்ற “கவர்ச்சி’க்கு மாணவர்களும், பெற்றோரும் மயங்குகின்றனர்.

சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் அதிக பணம் கொடுத்து சோர்ந்த பின்னர், அம்மாணவருக்கு ஒற்றைச் சாளர முறையில் அட்மிஷன் கிடைக்கும் போது அவர்களுக்கு அந்தப் பணத்தைக் கல்லூரி நிர்வாகம் முழுமையாகத் திருப்பித் தருவதில்லை.

தகுதியுடைய மாணவர்கள் பயன்பெறும் வகையில், சுயநிதிக் கல்லூரிகளின் கூட்டமைப்பு மூலம் ஒற்றைச் சாளர முறையில் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களை நிரப்புவதே முறையானது. இதில் அரசின் நிலையே சரியானது என்றும் பல பெற்றோர்கள் கருத்து தெரிவித்தனர்.

——————————————————————————————————

“ஏழை’ எம்.பி.பி.எஸ். ரூ. 2.55 லட்சம்

சென்னை, ஜூலை 9: சென்னை செட்டிநாடு மருத்துவக் கல்லூரியில் அரசு எம்.பி.பி.எஸ். சீட்டுக்கு தலா ரூ. 3 லட்சத்தை கட்டணமாக நிர்ணயித்து தமிழக அரசு அறிவித்துள்ளது.

ஏழை மாணவராக இருந்தால் இந்தக் கட்டணத்தில் 15 சதவீத சலுகையை அளிக்க வேண்டும் என்று செட்டிநாடு கல்லூரி நிர்வாகத்துக்கு ராமன் கமிட்டி பரிந்துரை செய்துள்ளது. ஆனால், மாணவரை ஏழை என நிர்ணயிக்கப்போவது எது என்பதற்கு அரசு அறிவிப்பில் விளக்கம் இல்லை. அப்படியே “ஏழை’ என ஒரு மாணவருக்கு கல்லூரி நிர்வாகம் சலுகை அளித்தாலும்கூட, அந்த மாணவர் ரூ. 45 ஆயிரம் தள்ளுபடியைப் பெற்று ரூ. 2.55 லட்சத்தை கட்டணமாகச் செலுத்தியாக வேண்டும்.
——————————————————————————————————————————–

எகிறியது தனியார் எம்.பி.பி.எஸ். – அரசு சீட் விலை

சென்னை, ஜூலை 9: தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசு எம்.பி.பி.எஸ். சீட்டுக்கான கட்டணம் ரூ. 1.30 லட்சத்திலிருந்து ரூ. 3 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

அதாவது ஒரே ஆண்டில் எம்.பி.பி.எஸ். கட்டணம் தனியார் கல்லூரி மொத்த இடத்துக்கு ஏற்ப ரூ. 1.10 லட்சம் முதல் ரூ. 1.70 லட்சம் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, திருச்சி, மதுரை, தஞ்சாவூர், திருநெல்வேலி, சேலம், கோவை உள்பட 14 அரசு மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இவற்றில் மொத்தம் உள்ள 1,398 எம்.பி.பி.எஸ். இடங்களுக்கு ஆண்டு கல்விக் கட்டணம் ரூ.4,000 மட்டுமே.

  • சென்னை பழைய மகாபலிபுரம் சாலையில் படூரில் உள்ள செட்டிநாடு மருத்துவக் கல்லூரி,
  • கோவை பி.எஸ்.ஜி. மருத்துவக் கல்லூரி,
  • கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் ஸ்ரீ மூகாம்பிகை மருத்துவக் கல்லூரி,
  • ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் சாலைப் போக்குவரத்து நிறுவன மருத்துவக் கல்லூரி

என நான்கு தனியார் மருத்துவக் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன.

  1. செட்டிநாடு மருத்துவக் கல்லூரியில் 150 எம்.பி.பி.எஸ். இடங்களும்,
  2. பி.எஸ்.ஜி. மருத்துவக் கல்லூரியில் 100 எம்.பி.பி.எஸ். இடங்களும்
  3. ஸ்ரீ மூகாம்பிகை மருத்துவக் கல்லூரியில் 100 எம்.பி.பி.எஸ். இடங்களும்
  4. பெருந்துறை சாலைப் போக்குவரத்து நிறுவன மருத்துவக் கல்லூரியில் 60 எம்.பி.பி.எஸ். இடங்களும் உள்ளன.

கடந்த ஆண்டு தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் மேலே கூறப்பட்டுள்ள தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மொத்தம் உள்ள 410 இடங்களில் 65 சதவீதத்தை அரசு ஒதுக்கீட்டுக்கு அளிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்தது; மீதமுள்ள 35 சதவீத இடங்களை நிர்வாக ஒதுக்கீட்டு மூலம் நிரப்பிக் கொள்ளலாம் எனக் கூறியது.

கட்டணம் உயர்ந்தது ஏன்? தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கும் சேர்த்து திங்கள்கிழமை (ஜூலை 9) முதல் எம்.பி.பி.எஸ். கவுன்சலிங் சென்னையில் நடைபெறுகிறது. தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். சீட்டுக்கு ஆண்டு கல்விக் கட்டணமாக ரூ.1.30 லட்சத்தை கடந்த ஆண்டு தமிழக அரசு நிர்ணயித்தது. ஆனால், தனியார் மருத்துவக் கல்லூரிகள் ரூ.4 லட்சத்தை கட்டணமாக வசூலித்தன.

இதையடுத்து இந்திய மாணவர் சங்கம் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. ஒரு கட்டத்தில் மாணவர்களிடம் வாங்கிய கூடுதல் கட்டணத்தைத் திருப்பித் தருமாறு உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து, தனியார் மருத்துவக் கல்லூரி எம்.பி.பி.எஸ். கட்டணம் குறித்து ஆய்வு செய்யுமாறு நீதிபதி ராமன் கமிட்டியை கேட்டுக் கொண்டது.

புதிய கட்டணம் என்ன?

இந் நிலையில் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசு எம்.பி.பி.எஸ். ஒதுக்கீட்டுக்கான இடத்துக்கான கட்டணத்தை நீதிபதி ராமன் கமிட்டி மூலம் நிர்ணயித்து தமிழக அரசு அறிவித்துள்ளது. கடந்த ஆண்டு அனைத்துத் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் ஒரே கட்டணமாக ரூ. 1.30 லட்சம் அறிவிக்கப்பட்டது. ஆனால், இந்த ஆண்டு தனியார் மருத்துவக் கல்லூரியின் இடங்களுக்கு ஏற்ப தனித் தனியே கீழ்க்கண்ட கட்டணங்களைத் தமிழக அரசு அறிவித்துள்ளது.

சென்னை பழைய மகாபலிபுரம் சாலையில் படூரில் உள்ள செட்டிநாடு மருத்துவக் கல்லூரி (98 அரசு எம்.பி.பி.எஸ். இடங்கள்) – ஆண்டு கல்விக் கட்டணம் தலா ரூ. 3 லட்சம் (ஏழை மாணவர்களுக்கு 15 சதவீத சலுகை அளிக்க வேண்டும்).

கோவை பி.எஸ்.ஜி. மருத்துவக் கல்லூரி (65 அரசு எம்.பி.பி.எஸ். இடங்கள்) – தலா ரூ. 2.25 லட்சம்.

கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் ஸ்ரீ மூகாம்பிகை மருத்துவக் கல்லூரி (50 அரசு எம்.பி.பி.எஸ். இடங்கள்-இதுவரை இந்திய மருத்துவக் கவுன்சில் அனுமதி அளிக்கவில்லை.) – தலா ரூ. 2.40 லட்சம்.

பெருந்துறை சாலைப் போக்குவரத்து நிறுவன மருத்துவக் கல்லூரியில் அரசு எம்.பி.பி.எஸ். இடத்துக்கு ஆண்டு கல்விக் கட்டணம் ரூ. 66,000.

————————————————————————————-

தனியார் கல்லூரியில் எம்.பி.பி.எஸ். : வங்கிக் கடன் எவ்வளவு கிடைக்கும்?

தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடங்களுக்கான கல்விக் கட்டணத்தைச் செலுத்த மாணவர்களுக்கு இந்தியன் வங்கி கடனுதவி அளிக்கிறது.

எம்.பி.பி.எஸ். கவுன்சலிங் நடைபெறும் கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்வி இயக்குநர் அலுவலகத்தில் இந்தியன் வங்கியின் சேத்துப்பட்டு கிளை அதிகாரிகள் கடனுதவி ஆலோசனை மையத்தை அமைத்துள்ளனர். அரசு மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். ஆண்டு கல்விக் கட்டணம் ரூ.4,000-மாக உள்ளது. சென்னை செட்டிநாடு மருத்துவக் கல்லூரியில் அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடத்துக்கு இந்த ஆண்டு ரூ.3 லட்சம் கட்டணமாகவும், கோவை பி.எஸ்.ஜி. மருத்துவக் கல்லூரியில் அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடத்துக்கு ரூ.2.25 லட்சம் கட்டணமாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந் நிலையில் 5 ஆண்டுப் படிப்புக்கும் சேர்த்து எவ்வித உத்தரவாதமும் இன்றி ரூ.4 லட்சம் வரை 12.5 சதவீத வட்டிக்கு இந்தியன் வங்கி கடனுதவி அளிக்கும். ரூ.4 லட்சத்துக்கு மேல் ரூ.7.5 லட்சம் வரை உத்தரவாதம் இன்றி 13 சதவீத வட்டிக்கு கடன் கிடைக்கும். கடன் தொகை ரூ.7.5 லட்சத்துக்கு மேல் இருந்தால், அசையாச் சொத்துகள், டெபாசிட் பத்திரங்கள் உள்பட கடன் தொகைக்குச் சமமாக 100 சதவீதம் உத்தரவாதம் அளிக்க வேண்டும்; வட்டி விகிதம் 13 சதவீதம். படித்து முடித்து வேலையில் சேர்ந்த பிறகு கடன் தொகையை மாணவர் திருப்பிச் செலுத்தினால் போதும்.

———————————————————————————————————-

செட்டிநாடு மருத்துவக் கல்லூரியில் அட்மிஷன் மறுப்பு

சென்னை, ஜூலை 20: உச்ச நீதிமன்ற தடை உத்தரவின் எதிரொலியாக தமிழக அரசு அனுமதிக் கடிதம் அளித்த 25 மாணவர்களை எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர்த்துக் கொள்ள சென்னை செட்டிநாடு மருத்துவக் கல்லூரி மறுத்து விட்டது.

இதனால் அரசு ஒதுக்கீட்டின் கீழ் அனுமதிக் கடிதம் பெற்ற 25 மாணவர்கள், வியாழக்கிழமை நடந்த கவுன்சலிங்கில் இக் கல்லூரியின் அரசு ஒதுக்கீட்டுக்குத் தேர்வு செய்யப்பட்ட 62 மாணவர்கள் என மொத்தம் 97 மாணவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

செட்டிநாடு மருத்துவக் கல்லூரியில் மொத்தம் உள்ள 150 எம்.பி.பி.எஸ். இடங்களில் (150), 65 சதவீதத்தை (97 இடங்கள்) அரசின் ஒதுக்கீட்டுக்கு அளிக்க வேண்டும்; செட்டிநாடு மருத்துவக் கல்லூரி தொடர்ந்த வழக்கில், அக் கல்லூரியில் 65 சதவீத அரசு ஒதுக்கீட்டுக்கு உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை தடை விதித்துள்ளது.

செட்டிநாடு மருத்துவக் கல்லூரியைப் பொருத்தவரை ராமன் குழு நிர்ணயித்த ஆண்டு கல்விக் கட்டணப் பிரச்சினையுடன் (ஆண்டு கல்விக் கட்டணம் ரூ.3 லட்சம்) தற்போது 97 அரசு ஒதுக்கீட்டு இடங்கள் தடை உத்தரவும் சேர்ந்து மாணவர்களை பெரும் சோதனைக்கு உட்படுத்தியுள்ளது.

சென்னை பழைய மகாபலிபுரம் சாலையில் உள்ள படூரில் கடந்த ஆண்டு செட்டிநாடு மருத்துவக் கல்லூரி தொடங்கப்பட்டது. இக் கல்லூரியின் மொத்த எம்.பி.பி.எஸ். இடங்கள் 150; இதில் 65 சதவீத அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடங்கள் 97.

கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்வி இயக்குநர் அலுவலகத்தில் கடந்த ஜூலை 15, 16-ம் தேதி கவுன்சலிங் நடைபெற்றபோது, இந்த 97 இடங்களில் 25 இடங்களுக்கு மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்; அவர்களுக்கு இக் கல்லூரியில் சேர அனுமதிக் கடிதமும் வழங்கப்பட்டது. அவர்களைச் சேர்த்துக் கொள்ள கல்லூரி நிர்வாகம் வியாழக்கிழமை மறுத்து விட்டது.

செட்டிநாடு மருத்துவக் கல்லூரியில் மீதம் இருந்த 62 அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடங்களுக்கு மருத்துவக் கல்வி இயக்குநர் அலுவலகத்தில் மீண்டும் வியாழக்கிழமை (ஜூலை 19) கவுன்சலிங் நடந்தது. இந்த இடங்களுக்கு 62 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்; ஆனால் உச்ச நீதிமன்ற தடை உத்தரவு காரணமாக இந்த 62 மாணவர்களுக்கு கல்லூரியில் சேர அனுமதிக் கடிதம் வழங்கப்படவில்லை.

பிஎஸ்ஜி பிரச்சினை இல்லை: “”செட்டிநாடு மருத்துவக் கல்லூரி மட்டுமே உச்ச நீதிமன்றம் சென்று தடையாணை பெற்றுள்ளது. கோவை பி.எஸ்.ஜி. மருத்துவக் கல்லூரியில் உள்ள 65 அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடங்களுக்கு கவுன்சலிங்கில் மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு அனுமதிக் கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது; அதில் பிரச்னை இல்லை. இதேபோன்று ஈரோடு மாவட்டம் பெருந்துறை சாலைப் போக்குவரத்து நிறுவன (ஐ.ஆர்.டி.) மருத்துவக் கல்லூரியின் 39 அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடங்களிலும் மாணவர்கள் சேருவதில் பிரச்சினை இருக்காது” என்று மருத்துவக் கல்வி உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

கட்டணப் பிரச்சினை:

ராமன் குழு நிர்ணயித்த ஆண்டு கல்விக் கட்டணத்தை (சென்னை செட்டிநாடு மருத்துவக் கல்லூரி – ரூ.3 லட்சம்; கோவை பிஎஸ்ஜி மருத்துவக் கல்லூரி – ரூ.2.25 லட்சம்) எதிர்த்து இக் கல்லூரி நிர்வாகங்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து தடையாணை பெற்றுள்ளன.

இந் நிலையில் அரசு ஒதுக்கீட்டில் எம்.பி.பி.எஸ். அட்மிஷன் கிடைத்த மாணவர்களிடம், ஆண்டுக் கல்வி கட்டணமாக ரூ.4,05,000 செலுத்துமாறு கோவை பி.எஸ்.ஜி. மருத்துவக் கல்லூரி கூறியுள்ளது. இதனால், கவுன்சலிங்கின்போது ஆண்டு கல்விக் கட்டணம் ரூ.2.25 லட்சமாக இருக்கும் என எதிர்பார்த்து கோவை பிஎஸ்ஜி கல்லூரியைத் தேர்வு செய்த 65 மாணவர்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

————————————————————————————————–

கொள்ளை போகும் உயர் கல்வி
குமுதம்
சாவித்திரி கண்ணன்
18.07.07 கவர் ஸ்டோரி

‘‘நீ பெரியவனாயிட்டா டாக்டராவியா? இன்ஜினீயராவியா?’’ என்று, நம் குழந்தைகளிடம் அடிக்கடி கேட்கப்படுகிறது. ஏதோ இந்த இரண்டைத்தவிர அடையவேண்டிய உச்சம் வேறொன்றுமேயில்லை என்பது எவ்வளவு பெரிய அபத்தம். இந்த அபத்தத்தினால் உண்டான ஆபத்தாகத்தான் தமிழ்நாட்டில் தேனீர் கடைகளுக்கு இணையாக பொறியியல் கல்லூரிகள் பிறப்பெடுத்துக் கொண்டுள்ளன.

இந்தியாவிலே மட்டுமல்ல, உலகத்திலேயே, தமிழ்நாட்டைப் போல் இவ்வளவு சிறிய நிலப்பரப்பிற்குள் 251 இன்ஜினீயரிங் கல்லூரிகள் கிடையாது. ‘ஆஹா எவ்வளவு வளர்ச்சி!’ என்று சந்தோஷமடைய வழியின்றி பல சங்கடங்கள்! ஏனெனில், இதில் அரசு சார்ந்த 13 கல்லூரிகள்தான் உருப்படியாகச் செயல்படுகின்றன.

அடுத்ததாக சொல்ல வேண்டுமெனில், 238 சுயநிதிக்கல்லூரிகளில் ஐந்து சதவிகிதத்திற்கும் குறைவான கல்லூரிகளையே வேலைவாய்ப்பு தரும் கல்வி நிலையங்கள் முதல் தர வரிசையில் அங்கீகரித்துள்ளன. அதாவது வருடாவருடம் வெளியேறும் 70,000 மாணவர்களில் சுமார் 10 சதவிகிதத்தினருக்குத்தான் சரியான வேலைக்கு உத்தரவாதமுள்ளது. ஆக இப்படியான கழிசடைக் கல்வியைத்தான் பெரும்பாலான சுயநிதிக்கல்லூரிகள் தந்து கொண்டுள்ளன. இதற்கு ஒரு சிறந்த உதாரணம் வேண்டுமெனில், நம்ம ரயில்வேயில் ‘கலாசி’ எனப்படும் கடைநிலை ஊழியர் பணிக்கு 2000 பேரைத் தேர்ந் தெடுக்க 2004_ல் ஒரு விளம்பரம் வெளியானது. இந்த வேலைக்கு 20,000 இன்ஜினீயரிங் படித்தவர்கள் விண்ணப்பித்திருந்தனர்.

இந்த லட்சணத்திலான கல்வியைப் பெறுவதற்காகத்தான் நமது பெரும்பாலான பெற்றோர்கள் தங்கள் வீட்டையோ, நிலத்தையோ, நகைகளையோ விற்று பிள்ளைகளைப் படிக்க வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

கல்வித்துறை வியாபாரமாகிவிட்டதே என்று சிலர் கோபப்படுகிறார்கள். இப்படிப் பேசுபவர்கள் வியாபாரம் பற்றித் தவறான புரிதல்களைக் கொண்டுள்ளனர். ஒரு பொருளுக்குரிய விலை வைத்து விற்பனை செய்து, அதன் தரம், பயன்பாடு, நியாயமான விலை இவற்றில் வாங்குபவரை திருப்தியடைய வைப்பதே வியாபாரம். இந்த வகையில் பார்த்தால், சுயநிதிக் கல்லூரிகள் நடத்துவது வியாபாரமல்ல, சுரண்டல்.

அடிப்படை வசதிகளற்ற கட்டமைப்பு, தகுதியற்ற ஆசிரியர்கள், மோசமான கல்வித்தரம்… போன்றவற்றோடு மருத்துவம், இன்ஜினீயரிங் படிப்புகள் குறித்த மக்களிடமுள்ள மாயையையே முதலீடாகக் கொள்கின்றன, சுயநிதிக் கல்லூரிகள்.

மாயைகளை உருவாக்குவதிலும், மாயைகளில் பலனடைவதிலும் வேறெவர்களையும் விட, அரசியல்வாதிகளே அதிக அனுகூலமடைகின்—றனர். இந்த வகையில் தமிழகத்தில் 1984_ல் தொடங்கி அ.தி.மு.க., தி.மு.க., காங்கிரஸ் போன்ற கட்சிகள் கல்விச் சுரண்டலை கைகோர்த்து நடத்திக் கொண்டிருக்கின்றன. இதில் பா.ம.க. இதுவரை பார்ட்டனராகவில்லை. ஆகவேதான், ‘‘அநியாய கல்விக் கட்டணங்கள் வசூலிக்கப்படுகின்றன. ஏன் அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை’’ என்கிறார் மருத்துவர் ராமதாஸ்.

கல்வி அமைச்சரும், முதல்வரும், ‘‘அடடா அப்படியா! எங்களுக்கொன்றும் புகார்கள் வரவில்லை. ஆதாரம் தாருங்கள். நடவடிக்கை எடுக்கிறோம்’’ என்கிறார்கள். எல்லோருக்கும் புரிந்த உண்மை, கல்வித்துறையை ‘பொன்’ முட்டையிடும் வாத்தாகப் புரிந்து வைத்திருக்கும் அமைச்சருக்கும், முதல்வருக்கும் புரியவில்லை… பாவம்!

‘ஆதாரம் திரட்டும் அருகதை ஆட்சி நடத்து பவர்களுக்கு இல்லையா?’ என மக்கள் ஆச்சரியப்படுகிறார்கள். அன்றைய மன்னர்கள் மாறுவேஷமிட்டுச் சென்று மக்கள் குறைகளைக் கேட்டார்களாம். இன்றைய ஆட்சியாளர்களோ நிஜத்திலேயே வேஷம் போடுகிறார்கள்.

இன்றைய நிலவரப்படி, பிரபல பொறியியல் கல்லூரிகளின் நிர்வாக கோட்டாவிற்கான அனைத்து இடங்களும் ஜனவரி, பிப்ரவரியிலேயே 8 லட்சத்திலிருந்து 15 லட்சம் வரை விலைபேசி விற்கப்பட்டுவிட்டன.

மற்றொரு புறம் விலை போகாத கல்லூரிகளோ எஜிகேஷன் எக்ஸிபிஷன் நடத்தி, 80,000_தான். ஒரு லட்சம்தான். ஹாஸ்டல் வசதி இருக்கு. வாங்க வாங்க என்று கையைப் பிடித்திழுக்காத குறையாகக் கெஞ்சுகிறார்கள்.

நீதிபதி ராமன் கமிட்டி நிர்ணயித்த கல்விக் கட்டணம் 32,500 முதல் 40,000 ரூபாய் வரைதான். எனில் தனியார் கல்லூரிகளில் ஒரு சிலவற்றைத் தவிர மற்றவை எப்படி தங்கள் இஷ்டம் போல் வசூலிக்க முடிகிறது? பொறியியல் கல்லூரிகளில்தான் பொறுக்க முடியாத கொடுமை என்று மருத்துவக் கல்லூரி சென்றால், அங்கோ மகாமோசம். அரசாங்கம் நிர்ணயித்த கட்டணம் 1,30,000 என்றால், இவர்கள் வசூலிக்கும் கட்டணமோ நாலரை லட்சத்திலிருந்து 40 லட்சம் வரை! இப்படி படித்துவிட்டு வருகிறவர்கள் நாளைக்கு மனிதாபிமானத்தையே விலை பேச மாட்டாங்களா?

1992_ல் கட்டாய நன்கொடை தடுப்புச்சட்டம் வந்தது. இதுவரை இதில் ஒரு கல்லூரி அதிபர்கூட கைதாகவில்லை.

இந்தச் சட்டம் ஆட்சியாளர்களின் கைகளிலுள்ள ஆயுதம் என்பது, அந்த அதிபர்களுக்கும் தெரியும். அதேசமயம் உரிய வர்களுக்கு பங்கு தரா விட்டால்தான் இது தங்கள் மீது பாயும் என்பதும் புரியும்.

‘‘அரசாங்கத்திற்கு புகார்கள் தந்ததால் கல்லூரியை விட்டே நீக்கப்பட்டவர்களையும், அர சிடமா புகார் செய்தாய் அபராதம் கட்டு என இன்னும் பாதிக்கப்பட்டவர்களின் பட்டி யலையும் தரட்டுமா என்கிறது இந்திய மாணவர்கள் சங்கம். இவ்வளவு ஏன்? தமிழகத்திலுள்ள அனைத்து கல்வியாளர்களும் கொதித்துக் குமுறுகிற வகையில் இதுவரை கறை படியாதிருந்த அண்ணா பல்கலைக்கழகத்தையே இந்த ஆட்சி களங்கப்படுத்திவிட்டது. ‘ஸ்பெஷல் ஸ்கீம்’ என்று பகி ரங்கமாகவே 15 லட்சத்திற்கு இன்ஜினீயரிங் சீட்டை விற்கிறார்கள். சென்ற ஆண்டு இதுபோல் 60 சீட்டுகள் அதிகார பூர்வமாக சில நிறுவனங்களுக்கு விற்றார்கள். இந்தாண்டு இந்த எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கவுள்ளது. ஏழை எளிய திறமையான மாணவர்களுக்கு கருணை காட்டவென ஒதுக்கப்பட்ட முதல்வர் கோட்டா, கவர்னர் கோட்டா வெல்லாம்கூட கல்விச் சந்தையில் காசாக மாற்றப்பட்டுக் கொண்டுள்ளன.

1948_ல் தாராசந்த் கமிட்டி தொடங்கி, சமீபத்திய ராமன் கமிட்டி சுப்பிரமணியன் கமிட்டி வரை எத்தனையோ கமிட்டிகள், என்னென்னவோ ஆய்வுகள், கட்டண வரைமுறைகள், அட்மிஷன் வரைமுறைகள், எந்த நியாயத்தை நாம் எடுத்துச் சொன்னாலும் நடைமுறையில் கேட்கப்படுகிற கட்டணத்தைக் கொட்டிக் கொடுக்க மக்கள் திரளின் ஒரு பகுதி தயாராக இருக்கிறது என்பதே நிதர்சனம். அப்படி கொட்டுபவர்கள் எங்கேயோ போய்கொட்டாமல் அரசாங்க கஜானாவிலேயே கொட்டிவிட்டுப் போகட்டுமே! மதுக்கடைகளை அரசாங்கமும், கல்வி நிலையங்களை தனியாரும் நடத்துவது அவலம், அநீதி.

மழைக்கும் பள்ளிக்கூடம் பக்கம் ஒதுங்காதவர்கள்கூட ஒரு கல்லூரி துவங்கி காசுபார்க்க முடியுமெனில் அரசாங்கம் மேலும் சில கல்லூரிகளை நடத்தினால் என்ன? வசதியானவர்களிடம் வசூலிக்கும் கட்டணத்தை ஏழை எளிய நடுத்தர வர்க்க மாணவர்கள் ஏற்றம் பெற பயன்படுத்தலாமே!

—————————————————————————————————————————-
சுயநிதி கல்லூரி இடங்கள் அரசு ஒதுக்கீட்டுக்கு கிடைக்காமல் போகும் அபாயம்: ஜெயலலிதா எச்சரிக்கை

சென்னை, ஜூலை 25: உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ளத் தீர்ப்பால் தமிழகத்தில் உள்ள சுயநிதிக் கல்லூரி இடங்கள் இனி அரசு ஒதுக்கீட்டு கிடைக்காமல் போகும் அபாயம் ஏற்பட்டுள்ளது என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா எச்சரித்துள்ளார்.

இது குறித்து செவ்வாய்க்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:

திமுக அரசின் தவறான உயர் கல்விக் கொள்கையால் இந்த ஆண்டு பொறியியல் மற்றும் மருத்துவப் படிப்பில் சேருவதற்காக காத்திருக்கும் மாணவர்கள் பெரிதும் அலைக்கழிக்கப்பட்டு வருகிறார்கள்.

இந்த அரசு பொறுப்பேற்றவுடன், சுயநிதி பொறியியல் மற்றும் மருத்துவக் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு ஒற்றைச் சாளர முறையில் மாணவர் சேர்க்கை தேவையில்லை என்று சட்டம் இயற்றப்பட்டது.

ஒற்றைச் சாளர முறையில்தான் மாணவர்களைச் சேர்க்க வேண்டும் என்ற வகையில் சட்டத் திருத்தம் கொண்டு வர வேண்டும் என்று அதிமுக சார்பில் சட்டப்பேரவையில் கோரிக்கை வைத்தபோது, நீதிமன்றத்துக்குச் சென்று தடையாணை பெறாத வகையில் உரிய முறையில் இச் சட்டம் நிறைவேற்றி இருக்கிறோம் என்று உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி சட்டப்பேரவையில் தெரிவித்தார்.

2006-ம் ஆண்டு நிறைவேற்றிய சட்டத்தில் சில திருத்தங்களை திமுக அரசு தற்போது கொண்டுவந்தது. அதன்படி சுயநிதி பொறியியல் மற்றும் மருத்துவக் கல்லூரிகளிலும் மாணவர் சேர்க்கை ஒற்றை சாளர முறையில்தான் இருக்க வேண்டும்.

தமிழக அரசின் இச் சட்டத் திருத்தத்தை எதிர்த்து சுயநிதிக் கல்லூரி நிர்வாகம் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனர். இச் சட்டத்தில் உள்ள சில பிரிவுகள் செல்லாது என்று அறிவித்து இந்த கல்வி ஆண்டு மட்டும் இச் சட்டத்தின்படி மாணவர் சேர்க்க அனுமதி அளித்தது.

இந்தத் தீர்ப்பை எதிர்த்து செட்டிநாடு மருத்துவக் கல்லூரி நிர்வாகம் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. இதை விசாரித்த உச்ச நீதிமன்றம் தனது இடைக்கால தீர்ப்பில் இக்கல்லூரி அரசு ஒதுக்கீட்டுக்கு இடம் ஒதுக்கத் தேவையில்லை என்றும் அனைத்து இடங்களையும் அக் கல்லூரியே நிரப்பிக்கொள்ளலாம் என்றும் தீர்ப்புக் கூறியது.

மொத்தம் உள்ள 240 சுயநிதி கல்லூரிகளில் 160 கல்லூரிகள் அரசு ஒதுக்கீட்டுக்கு இடங்களைத் தர முன் வந்துள்ளதாக முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார். அரசு ஒதுக்கீட்டுக்கு இடங்களைத் தர முன்வந்துள்ள இக் ல்லூரிகளில் பெரும்பாலானவற்றில் இடங்கள் நிரப்பப்படாமல் இருக்கும். அதைத் தான் அக் கல்லூரிகள் அரசு ஒதுக்கீட்டு தர முன்வந்துள்ளன. அரசு ஒதுக்கீட்டு இடங்களைத் தர முன்வராத 80 கல்லூரிகள் மாணவர்கள் விரும்பிப் படிக்கக் கூடிய முன்னிலை கல்லூரிகளாகும்.

எந்தெந்த சுயநிதிக் கல்லூரிகள் அரசு ஒதுக்கீட்டுக்கு இடங்களைத் தர முன்வந்துள்ளன எந்தெந்த சுயநிதிக் கல்லூரிகள் அரசு ஒதுக்கீட்டுக்கான இடங்களைத் தர முன்வரவில்லை என்பதை திமுக அரசு தெளிவுபடுத்தாத காரணத்தால் மாணவர்கள் பெரும் குழப்பத்துக்கு ஆளாகி உள்ளனர்.

அரசின் அலட்சிய போக்காலும் முன்னுக்கு பின் முரணாக செயல்பட்டதாலும் சுய நிதி கல்லூரிகளிடமிருந்து அரசு ஒதுக்கீட்டுக்கு கிடைத்து வந்த இடங்கள் அனைத்தும் இனிமேல் கிடைக்காது போகக் கூடிய அபாய நிலை ஏற்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார் ஜெயலலிதா.
—————————————————————————————————————————-
ஏழை மாணவர்களின் நலனை கெடுக்க ஜெயலலிதா சூழ்ச்சி: பொன்முடி

சென்னை, ஜூலை 25: சில சுய நிதிக் கல்லூரிகளோடு சேர்ந்துகொண்டு முன்னாள் முதல்வர் ஜெயலிலதா ஏழை மாணவர்களின் நலனைக் கெடுக்கச் சூழ்ச்சி செய்கிறார் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி குற்றம் சாட்டியுள்ளார்.

அரசின் தவறான கொள்கையால் மருத்துவம், பொறியியல் கல்லூரி மாணவர்கள் பாதிக்கப்படுவதாக ஜெயலலிதா அறிக்கை வெளியிட்டிருந்தார். அதற்கு பதிலளிக்கும் வகையில் செவ்வாய்க்கிழமை அமைச்சர் பொன்முடி வெளியிட்ட அறிக்கை:

ஜெயலலிதா ஆட்சி காலத்தில் சிறுபான்மை சுயநிதி கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீடு 70 சதவீதமாகவும் அரசாங்க ஒதுக்கீடு 30 சதவீதமாக இருந்தது. சிறுபான்மை அல்லாத கல்லூரிகளில் 50 சதவீத நிர்வாக ஒதுக்கீடும், அரசு ஒதுக்கீடு 50 சதவீதமாகவும் இருந்தது.

திமுக அரசு பொறுப்பேற்றதும் சிறுபான்மை சுயநிதிக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீடு 50 சதவீதமாக உயர்த்தப்பட்டது. இதைப் போல சிறுபான்மை அல்லாத சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் அரசின் ஒதுக்கீடு 65 சதவீதமாக உயர்த்தப்பட்டது.

முந்தைய அதிமுக ஆட்சியில் ஒற்றைச் சாளர முறையில் இடங்கள் நிரப்பப்பட வேண்டும் என்பதற்கு சட்டம் கூட இயற்றப்படவில்லை.

திமுக அரசு பொறுப்பேற்றதும் அரசு ஒதுக்கீட்டை அதிகம் பெற்றதுடன் நிர்வாக ஒதுக்கீட்டையும் ஒற்றைச் சாளர முறையில் நிரப்ப வேண்டும் என்று சட்டம் இயற்றியது.

மேலும் 2006-ம் ஆண்டு இயற்றப்பட்ட சட்டம் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டு இன்னமும் ஒப்புதல் பெறப்படவில்லை. அந்தச் சட்டத்தில் எந்தத் திருத்தமும் இதுவரை செய்யப்படவில்லை.

2006-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட சட்டத்தில் ஒற்றைச் சாளர முறை தேவையில்லை என்று கூறியிருப்பதாகச் சொல்லும் ஜெயலலிதா அதை நிரூபிக்கத் தயாரா?

நுழைவுத் தேர்வை ரத்து செய்து 2007-ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட சட்டத்தை ஜெயலலிதா புரிந்து கொள்ளவே இல்லை.

2006-ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட சட்டத்திலும் 2007-ம் ஆண்டைய சட்டத்திலும் சொல்லியிருப்பது ஒற்றைச் சாளர முறையே தவிர வேறு அல்ல.

உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின்படி இயற்றப்பட்ட சட்டத்தை சென்னை உயர்நீதிமன்றம் செல்லாது என தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளது.

மாணவர்களின் மீது ஜெயலலிதாவுக்கு உண்மையிலேயே அக்கறை இருக்குமானால் அவரது கட்சியின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு கூட செய்யலாம்.

மேலும் இதுவரை உச்சநீதிமன்றம் பொறியியல் கல்லூரிகளுக்கு எவ்வித தடையாணையோ, தீர்ப்போ சொல்லாத நிலையில், சில சுய நிதிக் கல்லூரிகளோடு சேர்ந்துகொண்டு ஜெயலலிதா ஏழை மாணவர்களின் நலனைக் கெடுக்கச் சூழ்ச்சி செய்கிறாரோ என்று எண்ணத் தோன்றுகிறது என்று குறிப்பிட்டுள்ளார் பொன்முடி.
—————————————————————————————————————————-

மருத்துவக் கல்லூரி சேர்க்கையில் மிகப் பெரிய குளறுபடி: ஜெயலலிதா குற்றச்சாட்டு

சென்னை, ஜூலை 25: மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கையில் மிகப் பெரிய குளறுபடி நடந்துள்ளது, மாணவர்கள் நலன் பாதிக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

இது குறித்து செவ்வாய்க்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:

அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் பொறியியல் கல்லூரிகளில் மாணவ, மாணவியர் சேர்க்கைக்கான விண்ணப்பப் படிவங்களுடன் கூடிய பிரகடனத்தில் தொழிற்கல்வி மற்றும் மருத்துவக் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் விண்ணப்பிக்கக் கூடாது என்று குறிப்பிடப்பட்டிருக்கும்.

ஆனால் இந்த ஆண்டு மருத்துவப் படிப்புக்கான விண்ணப்பப் படிவத்துடன் கூடிய பிரகடனத்தில் மற்ற தொழிற்கல்லூரிகளில் படித்துக் கொண்டிருக்கும் மாணவர்கள் விண்ணப்பிக்கக் கூடாது என்ற வாசகம் நீக்கப்பட்டுவிட்டது. இதனால் பொறியியல் கல்லூரிகளில் தற்போது 2-ம் ஆண்டு மற்றும் 3-ம் ஆண்டு படிக்கும் மாணவர்கள் மருத்துவக் கல்வி பயில விண்ணப்பித்து இடமும் பெற்றிருக்கிறார்கள்.

இதை எதிர்த்து இந்த ஆண்டு பிளஸ் 2 முடித்த மாணவர்கள் நீதிமன்றத்துக்குச் சென்றனர். இதை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் மருத்துவப் படிப்புக்கான விண்ணப்பப் படிவத்துடன் கூடிய பிரகடனத்தில் சில வார்த்தைகள் உள் நோக்கத்துடன் நீக்கப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளது.

மேலும் தற்போது பொறியியல் உள்ளிட்ட வேறு தொழில் கல்வி படித்து வரும் மாணவர்கள் மருத்துவப் படிப்புக்கு விண்ணப்பித்தது தவறு. பழைய நடைமுறைப்படியே மாணவர்கள் சேர்க்கை நடைபெற வேண்டும் என்று உத்தரவிட்டது. அதன்படி முதல் கட்ட கலந்தாய்வு நடத்தப்பட்டது.

இதற்கிடையில் உயர் நீதிமன்ற உத்தரவால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் உச்ச நீதிமன்றத்துக்குச் சென்று தங்களுக்குச் சாதகமான உத்தரவை பெற்றிருக்கிறார்கள். கலந்தாய்வு முடிந்துவிட்ட நிலையில் இவர்களை மருத்துவப் படிப்பில் சேர்க்க வேண்டும். இதனால் மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கையில் மிகப் பெரிய குளறுபடி ஏற்பட்டுள்ளது.

எனவே மாணவர்களின் எதிர்கால நலன் பாதிக்கப்படாத வகையில் இந்தப் பிரச்னைக்கு உடனடியாகத் தீர்வு காண அரசு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார் ஜெயலலிதா.

———————————————————————————————————————————
Monday November 26 2007

மக்களுக்காக மருத்துவம்சார் கல்வி

எஸ். மணிவாசகம்

மருத்துவத்தில் வியத்தகு சாதனை புரிந்து வரும் நம் நாட்டில் மருத்துவம் சார்ந்த சான்றிதழ், டிப்ளமோ, பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு கல்விகள் கூடுதலாக தேவைப்படுகின்றன.

மருத்துவப் பட்டப்படிப்பு (எம்.பி.பி.எஸ்.), பல் மருத்துவம் (பி.டி.எஸ்.) போன்ற படிப்புகள் ஏழை மாணவர்களுக்கு எட்டாக்கனியாகவே இன்றளவும் உள்ளன.

தனியார் மற்றும் அரசு மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளில் சேர அனைவராலும் முடிவதில்லை. குறிப்பாக, தமிழகத்தில் 13 அரசு மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர 1545 இடங்களும், தனியார் கல்லூரிகள் 5-ல் மொத்தம் 420 இடங்களும் மட்டுமே உள்ளன.

நமது அண்டை மாநிலங்களான கர்நாடகம், ஆந்திரத்தோடு ஒப்பிடும்போது மிகக் குறைந்த அளவே தமிழகத்தில் மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. மருத்துவம், பல் மருத்துவப் பட்டப் படிப்புகளில் சேர இயலாத மாணவர்கள் பயனடைவதற்கு ஏற்றவகையில் மருத்துவம் சார்ந்த சான்றிதழ், டிப்ளமோ மற்றும் பட்டப்படிப்புகளை அதிக இடங்களில் ஏற்படுத்த வேண்டும்.

ஓராண்டு சான்றிதழ் படிப்புகள், 2 ஆண்டுகள் டிப்ளமோ படிப்புகள், 3 ஆண்டுகள் கொண்ட பட்டப்படிப்புகள் போன்றவற்றை உருவாக்கி ஏழை மாணவர்களும் மருத்தும் சார்ந்த கல்வி பயில வழிவகுக்க வேண்டும். இதற்கு ஏதுவாக பாடத்திட்டம், கல்விக் கட்டணம் அமைய வேண்டும். குறைந்தபட்சக் கல்வித்தகுதியையும் நிர்ணயம் செய்ய வேண்டும்.

தமிழகத்தில் தற்போதும் சில மருத்துவக் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் நேரடியாகச் சேர்ந்து மருத்துவம்சார் படிப்புகள் பயில்வதற்கு 27 சான்றிதழ், டிப்ளமோவும், தொலைதூரக் கல்வி முறையில் பயில்வதற்கு 12 சான்றிதழ் மற்றும் டிப்ளமோ படிப்புகளும் நடத்தப்பட்டு வருகின்றன. இவை போதாது. இன்னும் பல படிப்புகள் தொடங்கப்பட வேண்டும்.

மருத்துவத் துறையில், செவிலியர், மருந்தாளுநர்கள், மருத்துவ ஆய்வுக்கூடம், கண் மருத்துவம், மருந்து தயாரிப்பு, அறுவைச் சிகிச்சை அரங்க தொழில்நுட்பம், பிசியோதெரபி தாய்மை மற்றும் மகப்பேறு, குழந்தை வளர்ப்பு மற்றும் பராமரித்தல், நரம்பியல் புற்றுநோய், இதய நோய், எலும்பு முறிவு, ரத்த அழுத்தம், ரத்த சோகை, நீரிழிவு நோய், சருமநோய் போன்ற பற்பல துறைகளில் சான்றிதழ், டிப்ளமோ பட்டப்படிப்புகள் தொடங்க தீவிரம் காட்ட வேண்டும்.

பல் மருத்துவத்தில் கூட, முகச்சீரமைப்பு, பல் உருவாக்குதல் மற்றும் பொருத்துதல், பல் நோய்களிலிருந்து விடுபடுதல், அறுவைச் சிகிச்சை தொழில் நுட்பங்கள், பல் நோயாளிகளைப் பராமரித்தல் போன்ற துறைகளில்கூட சான்றிதழ், டிப்ளமோ, பட்டப்படிப்பு வகுப்புகள் நடத்தத் திட்டமிடலாம். மருத்துவம்சார் சான்றிதழ், டிப்ளமோ, பட்டப்படிப்பு பயின்றவர்களுக்கு உள்நாட்டில் மட்டுமன்றி, வெளிநாடுகளிலும் வேலைவாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன. சிறப்பான பணியும், ஊதியமும், வாழ்க்கை வசதியும், குடியுரிமையும் வழங்கப்படுகின்றன. ஏதேனும் ஒரு அன்னிய மொழியை அறிந்திருத்தல் கூடுதல் தகுதியாக அமையும்.

கிராமப்புறங்களில் சுகாதாரம் பேணவும், அடிப்படை மருத்துவ ஆலோசனைகளை வழங்கவும் கிராமப்புற மருத்துவப் பணியாளர்களையும் உதவியாளர்களையும் உருவாக்க வேண்டும்.

கிராமப்புறக் குழந்தைகள், பள்ளி மாணவர்கள், தாய்மையடைந்தோர், குழந்தை பெற்றவர்கள், கண் நோயாளிகள், சரும நோய் உள்ளவர்கள், சர்க்கரை மற்றும் காச நோயாளிகள், வயதானோர், வறுமைக் கோட்டிற்கு கீழ்நிலையில் உள்ளவர்கள் அனைவருக்கும் தகுந்த ஆலோசனைகளை வழங்க உதவியாளர்கள் தேவை. இத்தகைய பணியாளர்களைத் தயார் செய்ய சான்றிதழ், டிப்ளமோ, பட்டப் படிப்புகள் தொடங்க வேண்டும்.

இந்தியர்களின் சராசரி ஆயுள் அதிகரித்துள்ளது. விரைவில் உலகிலேயே முதியவர்கள் அதிகம் வசிக்கும் நாடுகளில் இந்தியா இரண்டாம் நிலையை எட்டிவிடும். இந்த முதியவர்களைப் பராமரிக்கவும் பாதுகாக்கவும் நாம் உதவி செய்தல் வேண்டும்.

பிழைப்புக்காக தங்களின் குழந்தைகளை வெளிநாடுகளுக்கு அனுப்பிவிட்டு, முதியவர்கள் அனைவரும் முதியோர் இல்லங்களை நாடுகிறார்கள். இந்த முதியவர்களுக்காக, அவர்களின் கடைசி கால வாழ்க்கை சுகமாக இருக்க, முதியோர் காப்பகம் சம்பந்தமாக மருத்துவ ரீதியில் தகுதிவாய்ந்த பயிற்சியாளர்களை உருவாக்க சான்றிதழ், டிப்ளமோ படிப்புகள் தொடங்கலாம். வெளிநாடுகளிலிருந்தும் பிற மாநிலங்களில் இருந்தும் சிகிச்சை பெற பல நோயாளிகள் தமிழகத்துக்கு வருகின்றனர். இதன்மூலம் தமிழகத்துக்கு பல்வேறு வகைகளில் வருவாய் கிடைத்து வருகிறது.

செவிலியர்களின் அன்னை, கைவிளக்கேந்திய காரிகை பிளாரன்ஸ் நைட்டிங்கேல் அம்மையாரின் பெயரில் செவிலியர் மற்றும் மருத்துவம் சார் பல்கலைக்கழகத்தை தமிழகத்தில் தொடங்கி ஒரு சிறந்த முன்னுதாரணத்தை ஏற்படுத்தலாம். செவிலியர் படிப்பில் முதியோர் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு சம்பந்தமாக சான்றிதழ், டிப்ளமோ படிப்புகள் தொடங்கலாம்.

அனைவருக்கும் “ஆரோக்கியமான வாழ்வு’ அமைய வேண்டுமெனில் மருத்துவம்சார் அறிவியல் படிப்புகள் அவசியம்.

சுதந்திரம் அடைந்து 60 ஆண்டுகளாக எட்டமுடியாத மருத்துவ வசதிகளை இனியாவது ஏற்படுத்த வழிவகுக்க வேண்டும். இந்த நூற்றாண்டிலாவது அனைவருக்கும் “ஆரோக்கியமான வாழ்வு’ என்ற இலக்கை எட்ட மருத்துவ அறிஞர்களும், கல்வி நிலையங்களும், மத்திய, மாநில அரசுகளும், மருத்துவர்களும் முனைப்புடன் செயலாற்ற வேண்டும். இதற்கு மருத்துவம்சார் சான்றிதழ், டிப்ளமோ, பட்டப்படிப்புகள் உறுதுணையாக அமையும் என்பதில் ஐயமில்லை.

—————————————————————————————————————————-

“கிராமப்புற சேவை’யின் மறுபக்கம்

சி. கதிரவன்

இந்தியாவின் உயிர்நாடி கிராமங்கள்தான். ஆனால், கிராமங்களில் வசிக்கும் 72 சதவீத மக்களுக்கு நாடி பிடித்துப் பார்க்க ஆளில்லை என்கிறது ஓர் ஆய்வு.

கிராமப்புறங்களில் மருத்துவ சேவையை மேம்படுத்த வேண்டும் என்பதில் இருவேறு கருத்துகள் இருக்க முடியாது. அண்மைக்காலமாக பெரிய அளவில் இந்த விஷயம் பேசப்படுவது ஆரோக்கியமானதே. ஆனால், பேச்சு ஆக்கபூர்வமானதாக இல்லை என்பதுதான் கவனிக்கப்பட வேண்டிய விஷயம்.

உண்மையில், கட்டாய கிராமப்புற மருத்துவ சேவையின் மறுபக்கம்தான் என்ன?

மருத்துவம் ஓர் இன்றியமையாத தேவை. மருத்துவக் கொள்கையைப் பொருத்த அளவில் ஒவ்வொரு நாடும் ஒவ்வொரு விதமான கொள்கையைப் பின்பற்றி வருகிறது. பிரிட்டன் மருத்துவத் துறையைத் தன் முழுப் பொறுப்பில் வைத்திருக்கிறது. அந்நாட்டின் தேசிய சுகாதாரச் சேவை மிகச் சிறப்பானது. பொது மருத்துவத்துக்கான மொத்தச் செலவில் அந்நாட்டு அரசு 94 சதவீதத்தை தானே செலவிடுகிறது.

அமெரிக்கக் கதையோ வேறு. காப்பீட்டுத் திட்டங்கள் சார்ந்த மருத்துவ சேவை அங்கு பின்பற்றப்படுவதால் அரசுக்கும், பொது மருத்துவத்துக்கும் கிட்டத்தட்ட தொடர்பே இல்லை.

நம் நிலைதான் பரிதாபத்துக்குரியது. மொத்த ஆண்டு வருவாயில் மத்திய அரசு 1.3 சதவீதமும், மாநில அரசு 5.5 சதவீதமுமே மருத்துவத்துக்காக ஒதுக்கீடு செய்கின்றன. இவை இரண்டும் மருத்துவத்துக்காக நாம் செலவு செய்யும் மொத்தத் தொகையில் கால் பகுதியே ஆகும்.

இந்நிலையில், இந்திய மருத்துவத்துறை வேகமாக தனியார்மயமாகி வருகிறது. மக்கள்தொகைப்படி நமது நாட்டில் 40 லட்சம் மருத்துவர்கள் இருக்க வேண்டிய நிலையில் 14 லட்சம் மருத்துவர்களே இருக்கின்றனர். அரசு மருத்துவமனைகளில் பாதிக்கும் மேற்பட்ட இடங்கள் காலிப் பணியிடங்கள். பெரும்பாலான அரசு மருத்துவக் கல்லூரிகள் பேராசிரியர்கள் இன்றி தள்ளாடிக் கொண்டிருக்கின்றன.

இது ஒருபுறமிருக்க, தமிழகத்தில் மட்டும் வேலைவாய்ப்பகத்தில் 15 ஆயிரம் மருத்துவர்கள் பதிவு செய்து, வாய்ப்பின்மையால் தனியார் மருத்துவமனைகளில் குறைந்த ஊதியத்துக்குப் பணியாற்றி வருகின்றனர்.

பல ஆயிரம் கிராமங்களில் மக்களின் நாடி பிடித்துப் பார்க்க மருத்துவர் இல்லாத நமது நாட்டில், நகரங்களை நோக்கிய தொலை மருத்துவ மையங்களின் வருகையின் நோக்கத்தை இதிலிருந்து புரிந்து கொள்ளலாம்.

மருத்துவத்தை அமெரிக்கப் பாணியில் முழுவதும் தனியார்மயமாக்குவதன் தொடக்கமே “கார்ப்பரேட் கிளினிக்குகள்’ நகரங்களை நோக்கி வருவதும் நகரங்களிலிருந்து மருத்துவ மாணவர்கள் கிராமங்களுக்கு அனுப்பப்படுவதும்.

கட்டாய கிராமப்புற சேவைத் திட்டம் என்றால் என்ன? எம்.பி.பி.எஸ். படிப்பு மேலும் ஓர் ஆண்டு நீட்டிக்கப்பட்டு, அந்த ஓர் ஆண்டில் 4 மாதம் ஆரம்பச் சுகாதார நிலையம், 4 மாதம் தாலுகா மருத்துவமனை, 4 மாதம் மாவட்ட மருத்துவமனைகளில் என சுழற்சி முறையில் மாணவர்கள் பணியாற்றுவதுதான்.

இதில் முதல் முரண்பாடு என்னவென்றால், ஆண்டில் 8 மாதங்கள் கிராமப்புறம் அல்லாத இடங்களில் பணியாற்ற வைக்கப்படுவதுதான். இத்திட்டம் எப்படி கிராமப்புற சேவையாகும்?

உண்மை என்னவென்றால் நாடு முழுவதும் உள்ள ஆயிரக்கணக்கான காலிப் பணியிடங்களைப் பெயரளவில் நிரப்பும் அரசின் குறுக்கு வழியே இது. உள்ளபடியே இந்திய மருத்துவக் கல்வியும் மருத்துவத் துறையும் பெரும் சவாலை எதிர்கொண்டிருக்கின்றன. தமிழகத்தில் நிகழாண்டில் எம்.பி.பி.எஸ். கலந்தாய்வு நான்கு முறை நடைபெற்றது. இது இதுவரை மருத்துவத்துறை வரலாற்றிலேயே இல்லாத நிகழ்வாகும். இதில் முதலாமாண்டு மாணவர்களில் 131 பேர் எம்.பி.பி.எஸ். படிப்பை விட்டுவிட்டு மற்ற தொழிற்படிப்புகளுக்குச் சென்றுவிட்டனர்.

வேலூர், கன்னியாகுமரி, தேனி மருத்துவக் கல்லூரிகளில் போதிய ஆசிரியர்கள், உள் கட்டமைப்பு இல்லாத காரணத்தால் இந்திய மருத்துவக் கழகத்தின் அனுமதியையே பெற முடியவில்லை. தமிழகத்தில் உள்ள 21 மருத்துவக் கல்லூரிகளில் ஒரு சில கல்லூரிகள் தவிர மற்ற கல்லூரிகளில் இதே நிலைதான். நாட்டிலேயே மருத்துவத் துறையில் சிறப்பாக இருப்பதாகக் கூறப்படும் தமிழகத்தின் நிலையே இது என்றால் மற்ற மாநிலங்களின் நிலைமையை சொல்ல வேண்டியதில்லை.

இந்நிலையில், மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் அன்புமணி ராமதாஸ் கொண்டு வர முனையும் திட்டத்தை நாம் ஆய்வுசெய்ய வேண்டியுள்ளது. 2006-ல் தமிழ்நாடு தேர்வாணையம் மூலம் கிராமங்களில் உள்ள ஆரம்பச் சுகாதார நிலையங்களில் 800 மருத்துவர்களைப் பணி நியமனம் செய்வதற்கான தேர்வு நடைபெற்றது. அதற்கு 12,000 மருத்துவர்கள் விண்ணப்பம் செய்தனர். இதிலிருந்தே மருத்துவர்கள் கிராமங்களுக்குச் செல்லத் தயங்குகிறார்களா என்பதைப் புரிந்துகொள்ள முடியும்.

உள்ளபடியே கிராமப்புற மருத்துவ சேவைதான் அரசின் பிரதான நோக்கம் என்றால் அதற்குச் செய்ய வேண்டிய செயல்திட்டங்கள் நிறையவே இருக்கின்றன.

எம்.பி.பி.எஸ். படிப்பை முடித்தவுடன் ஆரம்பச் சுகாதார நிலையங்களில் பணிபுரிந்தவர்கள் மட்டுமே பட்ட மேல்படிப்புக்கு விண்ணப்பிக்க முடியும் என்பதைக் கட்டாயமாக்க வேண்டும். எந்தெந்த ஆரம்பச் சுகாதார நிலையங்ளுக்கு மருத்துவர்கள் இல்லையோ அப் பணியிடங்களுக்கு நிரந்தர மருத்துவர்களை நியமிக்க வேண்டும்.

கிராமப்புறங்களில் பணியாற்றும் மருத்துவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க வேண்டும்.

புதிய அரசு மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்பட வேண்டும். குறிப்பாக கிராமப் பகுதிகளில் இந்த புதிய மருத்துவக் கல்லூரிகள் அமைய வேண்டும்.

மருத்துவப் படிப்பில் கிராமப்புற மாணவர்களுக்கு 25 சதவீத இடஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும். ஆரம்பச் சுகாதார மையங்களும் மக்கள்தொகைக்கேற்ப அதிகரிக்கப்பட வேண்டும். தொடக்க நிலை சுகாதார மேம்பாட்டுக்கென கூடுதல் நிதியை அரசு ஒதுக்கீடு செய்ய வேண்டும். அரசியல் சட்டத்தில் வாழ்வுரிமையைப்போல அடிப்படை உரிமைகளில் ஒன்றாக மருத்துவச் சிகிச்சை பெறுவதையும் உறுதி செய்து சட்டமியற்ற வேண்டும்.

மருத்துவ மாணவர்கள் மீது கட்டாய கிராமப்புற சேவையைத் திணிப்பது ஒன்றே இப்பிரச்னைக்குத் தீர்வு என திசை மாற்றுவதைவிடுத்து அரசு உண்மையாக, ஆக்கபூர்வமான செயலில் இறங்க வேண்டும்.

Posted in abuse, Admissions, ADMK, AIIMS, Anbumani, Anbumani Ramadas, Anbumani Ramados, Anbumani Ramadoss, Anna, Anniyan, Assets, BE, Bribes, BTech, Caste, Chemical, Chennai, Chettinaadu, Chettinadu, Civil, Coimbatore, Colleges, Combatore, Community, computers, Corruption, DMK, Doc, doctors, Donations, DOTE, ECE, Education, EEE, Electrical, Electronics, Engg, Engineering, Expense, Exploit, Gentleman, Healthcare, IIT, Instru, Instrumentation, Interest, kickbacks, Kovai, Kulasegaram, Kulasekaram, Kumudam, Kumudham, Loans, MBBS, MD, medical, MMC, Moogamibigai, Moogamibikai, Mookamibigai, Mookamibikai, Operation, Perundhurai, Perundurai, Perunthurai, PMK, Poor, professional, PSG, Quota, Ramadas, Ramadoss, Rates, RBI, REC, Rich, SBI, Schools, service, Shankar, Sivaji, Software, Students, Study, surgery, Technology, University, Wealthy | 2 Comments »

Doctors reluctant to accept service in Rural Areas – Solutions, Analysis

Posted by Snapjudge மேல் ஏப்ரல் 25, 2007

எங்கே போகிறார்கள்?

கிராமப்புறங்களில் உள்ள ஆரம்ப சுகாதார மையங்கள்தான் கிராம மக்களுக்கு, குறிப்பாக கிராமப் பெண்களுக்கு, இன்றியமையாத் தேவையாக இருக்கின்றன. மகப்பேறு, குழந்தைகளுக்கான தடுப்பூசி, காய்ச்சல் போன்ற சாதாரண நோய்க்கு மருத்துவம் ஆகிய எல்லாவற்றுக்கும் ஆரம்ப சுகாதார நிலையத்தையே நம்பியிருக்கின்றனர்.

ஆனால், “”டாக்டர்கள் நகரங்களிலேயே பணியாற்ற விரும்புகின்றனர்; கிராமங்களுக்குச் சென்று பணியாற்ற விரும்புவதில்லை” என்று தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் சட்டப்பேரவையில் பேசும்போது குறிப்பிட்டார்.

கிராமங்களில் இந்த நிலைமை என்றால், நகரங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளிலும் மருத்துவர்களுக்குப் பற்றாக்குறை உள்ளது என்கிறார் சுகாதாரத் துறை செயலர். “”விருப்ப ஓய்வு கேட்கும் மருத்துவர்களையும் இதனால் விடுவிக்க முடியாத நிலை உள்ளது. மேலும், விழுப்புரம், தருமபுரி, திருவாரூர் ஆகிய இடங்களில் அரசு தொடங்கவுள்ள 3 மருத்துவக் கல்லூரிகளுக்கு 1000 டாக்டர்கள் தேவை” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவில் ஆண்டுதோறும் 29 ஆயிரம் மாணவர்கள் மருத்துவர் பட்டம் பெற்று வெளியே வருகின்றனர். தமிழ்நாட்டில் 14 அரசு மருத்துவக் கல்லூரிகள், 7 தனியார் மருத்துவக் கல்லூரிகளிலிருந்து ஆண்டுக்கு சுமார் 2 ஆயிரம் மாணவர்கள் மருத்துவர் பட்டம் பெறுகின்றனர். இருப்பினும்கூட, மருத்துவர்கள் கிராமங்களுக்குச் செல்ல மறுக்கிறார்கள். நகரங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளிலும் டாக்டர்கள் பற்றாக்குறை உள்ளது. அப்படியானால் பட்டம் பெறும் இளம் டாக்டர்கள் எங்கே போகிறார்கள்?

மேற்படிப்பு, வெளிநாட்டில் வேலை, தனியார் மருத்துவமனையில் வேலை, சொந்தமாக மருத்துவமனை நடத்துவது என இவர்கள் சிதறுண்டு போகிறார்கள். இந்தியாவில் மருத்துவச் சுற்றுலா மூலம் உருவாகியுள்ள மருத்துவ வணிகத்தை முழுஅளவில் பயன்படுத்திக் கொள்ள பல தனியார் மருத்துவமனைகள் ஆர்வம் காட்டுகின்றன. தனியார் மருத்துவமனைகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகின்றன.

இவர்கள் மருத்துவப் பட்டம் பெறுவதற்கு மத்திய, மாநில அரசுகள் பல வழிகளிலும் பெரும் பணத்தைச் செலவழிக்கின்றன. அரசு மருத்துவமனைகளுக்கு வரும் ஏழைகளிடத்தில்தான் இந்த மாணவர்கள் மருத்துவம் கற்கிறார்கள். ஆனால் அந்த மருத்துவத் திறன் ஏழைகளுக்கு கிடைக்காத சேவையாக மாறிவிடுகிறது.

எம்.பி.பி.எஸ். பட்டம் பெறும் இளம் டாக்டர்கள், தொழில் உரிமம் பெற வேண்டுமானால் அவர்கள் கிராமப்புறங்களில் ஓராண்டு பணியாற்ற வேண்டும் என்று 2008-09 ஆம் கல்வியாண்டு முதல் நிபந்தனை விதிக்க மத்திய சுகாதாரத் துறை திட்டமிட்டுள்ளது. இந்த நிபந்தனை அமலுக்கு வரும்போது தமிழகத்தின் 1417 ஆரம்ப சுகாதார மையங்களுக்கும் ஒரு டாக்டர் கிடைப்பது உறுதியாகிவிடும்.

இதனால் மட்டுமே மருத்துவ சேவை சிறப்பாக மாறும் என்று சொல்லிவிட முடியாது. அரசு மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்கள் தனியாக “கிளினிக்’ நடத்தக்கூடாது என்பதிலும் அரசு உறுதியாக இருக்க வேண்டும்.

அரசு மருத்துவமனையில் பணியாற்றிக்கொண்டே தனியாக மருத்துவ ஆலோசனை அளிக்கும் சில மருத்துவர்கள், தனியார் மருத்துவமனைகளின் அறுவைச் சிகிச்சைக் கூடத்தை வாடகைக்குப் பயன்படுத்தி, அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளிடம் கட்டணம் பெற்று சிகிச்சை அளிப்பதாகப் புகார்கள் சொல்லப்படுகின்றன.

அரசு மருத்துவர்களிடம் ஆலோசனை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை, அறுவைச் சிகிச்சை செய்துகொள்ளும் நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஊக்கத்தொகை அளிக்கும் முறையை அமலுக்குக் கொண்டு வந்தால், அரசு மருத்துவர்கள் தனியாகச் செயல்படும் நிலைமையில் மாற்றம் ஏற்படும்.

Compulsory rural service required for Doctor graduation – Medical Education

State of MBBS – Analysis on Medical education

MBBS, BDS merit list released – Details, Statistics, Admission results

It is either MBBS or BE – Decide whether to be a Doctor or Engineer – Ponmudi

Engineering, Medical Professional courses Entrance Exams – Analysis, Options

Posted in Analysis, Anbumani, City, doctors, Health, Healthcare, Hospital, Hospitals, MBBS, MD, medical, Medicine, Nurse, Nurses, Op-Ed, professional, Rural, service, solutions, Suburban, Villages | 2 Comments »

Free education & other Tamil Nadu Budget policy analysis

Posted by Snapjudge மேல் மார்ச் 23, 2007

கல்லூரிவரை கல்வி இலவசம்

தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில் நிதியமைச்சர் அன்பழகன் வெளியிட்டுள்ள பல அறிவிப்புகள், ஏற்கெனவே முதல்வர் கருணாநிதியால் பல்வேறு நிகழ்வுகளில் வாக்குறுதி அளிக்கப்பட்டவை.

உதாரணமாக, மனவளர்ச்சி குன்றியோருக்கும் ஊனமுற்றோருக்கும் உதவித்தொகை, புதிதாக இரு மருத்துவக் கல்லூரிகள், மேலும் 5 லட்சம் குடும்பங்களுக்கு இலவச காஸ் இணைப்பு வழங்க ரூ.100 கோடி, சிறுபான்மையினர் நலன்காக்க தனி இயக்ககம் போன்றவை.

அரசு ஊழியர்களுக்கான சலுகைகள் திமுக அரசில் எப்போதுமே உள்ளவை. மற்ற திட்டங்கள் நிர்வாக வளர்ச்சி சார்ந்தவை. இருப்பினும் நடப்பாண்டு நிதிநிலை அறிக்கையில் கல்விக்கு மேலதிகமான கவனம் தரப்பட்டுள்ளது.

அரசுக் கலைக் கல்லூரிகளில் படிக்கும் ஏழை மாணவர்களுக்கு கல்விக் கட்டணத்தை தமிழக அரசு ரத்து செய்துள்ளது. ஏழைகளுக்கு இலவச உயர்கல்வி இன்றைய இன்றியமையாத் தேவை. இந்தச் சலுகையை அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கும் விரிவுபடுத்தினால் இத்திட்டம் நிறைவானதாக இருக்கும்.

பிளஸ்2 படிப்பு வரை தமிழ் வழியில் படிப்போருக்கு தேர்வுக் கட்டணம் மிகக் குறைவானது என்றபோதிலும் அதையும்கூட செலுத்த முடியாத ஏழைகள் பலர் கிராமங்களில் உள்ளனர். தற்போதைய கல்விச் சூழலில் அரசுப் பள்ளியும் தமிழ் வழிக் கல்வியும் ஏழைகளுக்காகத்தானோ என்ற நிலைமை உள்ளதால் இந்தத் தேர்வுக் கட்டண ரத்து பயன் தரும்.

கல்வியில் பின்தங்கிய மாணவர்களின் சிறப்புப் பயிற்சிக்காக ரூ.1.23 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இது வரவேற்கத்தக்க விஷயம். ஆனால், இப் பயிற்சியில் மீண்டும் அரசுப் பள்ளி ஆசிரியர்களை ஈடுபடுத்துவதைத் தவிர்க்கலாம். பதிலாக, சிறப்பாகச் செயல்படும் தனியார் பள்ளி ஆசிரியர்களை இத் திட்டத்தில் பயன்படுத்திக் கொண்டால் அரசுப் பள்ளி மாணவர்களுக்குப் புதிய ஆசிரியர்களின் புதிய பயிற்றுமுறையினால் படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும்.

பள்ளி, கல்லூரிப் பேருந்துகளுக்கு வரி குறைப்பு செய்ய வேண்டும் என்ற கோரிக்கை நிறைவேறியிருக்கிறது. இருப்பினும், பள்ளி, கல்லூரி வாகனங்களில் செல்லும் மாணவர்களுக்கு இந்த நிர்வாகங்கள் வசூலிக்கும் கட்டணங்கள் அதிகமாக உள்ளன. வரியைக் குறைப்பதுடன் பள்ளி, கல்லூரி வாகனத்தில் செல்லும் மாணவர்களுக்கான கட்டணங்களையும் கணிசமாகக் குறைக்க யோசனை கூறினால் பெற்றோருக்குப் பயன் கிடைக்கும்.

அத்தியாவசியப் பண்டங்களின் மீது வரிக் குறைப்புகள் ஏதும் நேரடியாக அறிவிக்கப்படவில்லை. ஆனால், பருப்பு, சமையல் எண்ணெய் ஆகியவற்றை அரசே கொள்முதல் செய்து நியாயவிலைக் கடைகள் மூலம் விற்பனை செய்யும் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் குறைந்த விலையில் மக்களுக்கு பருப்பு, எண்ணெய் வழங்க முடியும் என்று அரசு நம்புகிறது. இது எந்த அளவுக்குப் பயன்தரும் என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

சத்துணவில் அளிக்கப்படும் முட்டைகளின் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது. பல நாட்களில் முட்டைகள் சிறியனவாகவும் அழுகியும் இருப்பதாகப் புகார்கள் எழுகின்றன. முட்டைக்குப் பதிலாக சத்துமாவு உருண்டை கொடுக்கலாம். இந்த சத்துமாவு உருண்டைகளை அந்தந்த சத்துணவுக் கூடங்களைச் சேர்ந்த குழந்தைகளின் தாய்மார்களைக் கொண்ட சுயஉதவிக் குழு மூலம் தயாரித்துப் பெறலாம். இந்தத் தாய்மார்களையே கோழி வளர்ப்பின் மூலம் முட்டையையும் வழங்கச் செய்யலாம்.

மருந்துகளின் விலை உயர்வும், தனியார் மருத்துவமனைகளில் வசூலிக்கப்படும் கட்டணமும் நடுத்தர மக்களை மிகவும் பாதிப்பதாக உள்ளன. இதனை ஒழுங்குபடுத்துவதற்கான எந்த முயற்சியும் அறிவிப்பும் இந்த நிதிநிலை அறிக்கையில் இல்லை.

Posted in Analysis, Budget, College, Commerce, Dean, DMK, doctors, Education, Educators, Engineering, Expenses, Finance, Free, Funds, Government, Govt, Guides, Health, Healthcare, Income, Instruction, Instructors, Karunanidhi, Loss, medical, Medicine, Medium, Op-Ed, Policy, Politics, Private, Professors, Profit, Public, Schools, Students, Tax, Teachers, Technology, TN, University, Votes | 3 Comments »

Fund allocations for River water inter-linking project – Pe Chidhambaranathan

Posted by Snapjudge மேல் மார்ச் 19, 2007

நதிகள் இணைப்புக்கு நிதி இல்லையா?

பெ. சிதம்பரநாதன்

நமது நாடு 6 லட்சம் கிராமங்களைக் கொண்டது.

110 கோடி இந்திய மக்களில் விவசாயத்தைச் சார்ந்து இருப்பவர்கள் ஏறக்குறைய 70 கோடி பேர். இவர்களில் பெரும்பாலானோர் வறுமைக்கோட்டுக்குக் கீழ் இருந்து வருகின்றனர். வேளாண்மைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தால் 70 கோடிப் பேரை முன்னேற்றிவிட முடியும்.

உத்தமர் காந்திஜி, “”இந்தியாவின் உயிர், கிராமங்களில்தான் உள்ளது” என்று அறிவித்தார். தான் காண விரும்பிய ராஜ்யம் சின்னஞ்சிறு கிராம ராஜ்யம்தான் என்றே அறிவித்தார். அதை மேலும் அழகுபடுத்தி, அதுதான் தனது “ராமராஜ்யம்’ என்றும் கூறினார்.

அவரது சிந்தனைக்கு முன்னாள் பிரதமர் ஜவாஹர்லால் நேரு செயல்வடிவம் கொடுக்க முற்பட்டார்.

முதல் ஐந்தாண்டுத் திட்டத்தில் வேளாண்மைக்கு முக்கியத்தும் அளிக்கும் வகையில் ரூ. 2 ஆயிரத்து 69 கோடி நிதி ஒதுக்கீடு செய்தார்.

அத்தொகையில் 1956-க்குள் கட்டப்பட்டதுதான் ஆசியாவிலேயே மிகப்பெரிய பஞ்சாப் மாநில பக்ராநங்கல் அணைக்கட்டு.

ஆனால் 1957-க்குப் பிறகு வேளாண்மை முன்னேற்றத்துக்கு அரசின் முக்கியத்துவம் வெகுவாகக் குறைந்துவிட்டது. தொழில் வளர்ச்சிதான் முதன்மையானது.

சென்ற 5 ஆண்டுக்காலத்தில் வேளாண்மை வளர்ச்சி நமது நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.4 சதவீதம்தான். தொழில்துறை வளர்ச்சியோ 8.5 சதவீதம். விவசாயம் வீழ்ச்சியடைந்தது, தாழ்ச்சியடைந்தது.

இன்றைய உண்மை நிலை என்ன?

மகாராஷ்டிர மாநிலத்தின் விதர்ப்பா பிராந்தியம், கர்நாடகத்தின் சில பகுதிகள், ஆந்திரத்தின் தெலங்கானா பகுதி, தமிழகத்தின் தஞ்சைப் பகுதி ஆகிய இடங்களில் 1 லட்சத்து 20 ஆயிரம் விவசாயிகள், வங்கிக் கடனைத் திருப்பிச் செலுத்த முடியாமல் தற்கொலை செய்து கொண்டனர். கடந்த 2001-2006 க்கு இடைப்பட்ட ஐந்தாண்டுக் காலத்தில் நிகழ்ந்த துயரச் சம்பவங்கள் இவை.

கடன் சுமையால் சென்ற ஆண்டு மட்டும் 15 ஆயிரம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர். இதில் பெரும்பாலானோர் ஆந்திர மாநிலப் பருத்தி விவசாயிகள்.

இந்தப் பின்னணியில் மத்திய நிதியமைச்சர் சமர்ப்பித்த மத்திய நிதிநிலை அறிக்கை, விவசாயத்திற்கு முதலிடம் தருகிற அறிக்கை என கூறப்பட்டது.

ரூ. 2 லட்சத்து 25 ஆயிரம் கோடி கடனாக விவசாயிகளுக்கு வழங்க ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாக நிதியமைச்சர் அறிவித்திருந்தார். கேட்பதற்கு இது ஆனந்தமாகத்தான் இருக்கிறது. நடைமுறையில் இந்த ஒதுக்கீட்டில் விவசாயிகளுக்கு உரிய பலன் கிடைக்குமா என்பது கேள்விக்குறிதான்.

சென்ற ஆண்டு நிதிநிலை அறிக்கையிலும் இதேபோல ரூ. 1 லட்சத்து 75 ஆயிரம் கோடி விவசாயக் கடனுக்கு ஒதுக்கப்பட்ட பிறகு, அந்த ஓராண்டில் மட்டும் 15 ஆயிரம் பருத்தி விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டது ஏன்?

ஐந்து காரணங்களால் நமது நாட்டின் விவசாயம் இத்தகைய இழிநிலைக்கு வந்துவிட்டதாக மத்திய நிதியமைச்சர் கூறுகிறார்.

முதல் காரணம், அதிக வட்டிக்கு விவசாயி கடன் வாங்கியதால்தான் தற்கொலை செய்து கொள்கிறான். ஆகவே 7 சதவீதம் வட்டிக்கு விவசாயக் கடன் கிடைக்க வங்கிகளின் வாசல்கள் திறந்துவிடப்பட்டிருக்கின்றன என்று அறிவிக்கிறார்.

இரண்டாவதாக, அவர்களுக்குத் தரமான விதைகள் கிடைக்காத காரணத்தால்தான், அதிக உற்பத்தியைச் செய்ய முடியவில்லையென்றார். இதற்காக தரமுள்ள விதைகள் கிடைக்க வழி வகுத்துத் தந்துள்ளதாகக் கூறுகிறார்.

மூன்றாவதாக, விவசாயப் பயிர்களுக்கு உரம் தேவை. உர விலையோ உயர்ந்து கொண்டே போகிறது. விவசாயிக்கோ வாங்கும் சக்தி இல்லை. ஆகவே, உரத்திற்கான ஒரு பாதி விலையை அரசே மானியமாகக் கொடுத்து, குறைந்த விலையில் உரம் கிடைக்கச் செய்ய ரூ. 22 ஆயிரத்து 450 கோடியை உர மானியமாக அரசு வழங்குவதாக அறிவித்துள்ளார்.

நான்காவதாக, விவசாயிகளுக்கு முறையான மின்சாரம் இலவசமாகத் தருவதாகவும் அறிவித்துள்ளார்.

ஐந்தாவதாக, பாசன நீர் வசதி. இந்தியாவின் 6 லட்சம் கிராமங்களில் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையில் கிணறுகள் மற்றும் ஏரி, குளங்களைத் தூர்வாரி, ஆழப்படுத்தி, அதிக மழை நீரைத் தேக்கி விவசாயம் செய்வதற்காக சுமார் ரூ. 12 ஆயிரம் கோடியை ஒதுக்கீடு செய்திருப்பதாகத் தெரிவிக்கிறார்.

உண்மையில், விவசாயத்திற்குத் தேவையான பாசனநீர் மழையால் மட்டும் கிடைப்பதாகக் கருதி, மழை வரும்பொழுதே கிணறுகள், ஏரிகள், குளங்களில் மழை நீரை நிரப்பி வைத்துக்கொள்ள வேண்டும் என்கிறார். இவையெல்லாம் நடைமுறையில் சாத்தியமா? அவ்வாறு செய்தாலும் ஆண்டு முழுவதும் பாசனத்துக்குத் தேவையான நீர் போதிய அளவில் கிடைக்குமா என்பது கேள்விக்குறிதான்.

எனவே, தண்ணீர்ப் பற்றாக்குறையைப் போக்க ஒரு சிறப்பான மாற்றுத் திட்டம் உள்ளது. அதுதான் நதிகள் இணைப்பு.

“”இந்திய நதிகளை எல்லாம் இணைத்து விடுங்கள். வெள்ளச் சேதத்தையும் தடுக்கும் – வறட்சியையும் அது போக்கும்” என கடந்த ஐந்து ஆண்டுகளாக குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் கூறி வருகிறார்.

அவர் மட்டுமல்ல, வடமாநிலத்தைச் சேர்ந்த ரஞ்சித்குமார் என்பவர் உச்சநீதிமன்றத்தில் ஒரு பொதுநல வழக்கையே தாக்கல் செய்தார்.

இந்த வழக்கில் மத்திய அரசு சமர்ப்பித்த பதில் மனுவில் 2045-ஆம் ஆண்டுக்குள் நதிகள் இணைப்புக்கு ஆவன செய்யப்படும் என குறிப்பிடப்பட்டது.

நதிகளை இணைக்க 40 ஆண்டுகளா என்று ஆச்சரியப்பட்ட தலைமை நீதிபதி, 10 ஆண்டுக் காலத்திற்குள் இணைத்தாக வேண்டும் என்றும் அதற்கான ஒரு வரைவுத் திட்டத்தையும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.

முந்தைய பாஜக ஆட்சியில் அப்படி வந்ததுதான் தேசிய நதிகளை இணைப்பதற்கான குழு. ஆனால் 2004-ல் ஆட்சி மாறியது. அதன்பிறகு சமர்ப்பிக்கப்பட்ட மூன்று மத்திய பட்ஜெட்களிலும் நதிகள் இணைப்பிற்கு எந்த நிதியும் ஒதுக்கீடு செய்யப்படவில்லை என்பதே உண்மை.

தேசிய நதிகளுக்குப் பதிலாக தென்னக நதிகளான மகாநதி முதல் காவிரி வரையாவது நதிகள் இணைப்புத் திட்டத்தை நிறைவேற்றுமாறு கோரிக்கைகள் பல வந்தன. ஆனால் நதிகள் இணைப்புத் திட்டம் கிடப்பில் போடப்பட்டுவிட்டது.

தென்னக நதிகளை இணைத்தால்தான் தென்மாநில விவசாயத்திற்கான பாசன நீர் பன்மடங்கு அதிகரிக்கும் என்ற உண்மையும் உணரப்படுகிறது.

அவ்வாறு தென்னக நதிகளை இணைத்தால், தென்மாநிலங்களில் ஏறக்குறைய 150 லட்சம் ஏக்கரில் இரு போக சாகுபடி செய்யலாம். விவசாயம் செழிப்படையும்போது கிராமப்புற மக்கள் அனைவருக்கும் போதிய அளவில் வேலை கிடைக்கும். நூல் ஆலைகளுக்குத் தேவையான மூலப் பொருளான பஞ்சுப் பற்றாக்குறையும் தீரும். எண்ணெய் வித்து உற்பத்தியிலும் தன்னிறைவு பெற முடியும்.

விவசாயத்திற்கு முதலிடம் கொடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் மத்திய நிதிநிலை அறிக்கையில், நதிகள் தரும் பாசன நீரை மறந்துவிட்டால், ஆகாயத்தில்தான் விவசாயத்தை வளர்ச்சி அடையச் செய்ய முடியும்!

=========================================

நதிகள் இணைக்கப்படுவது எதற்காக?

சி.எஸ். குப்புராஜ்

இந்திய நதிகள் இணைக்கப்பட வேண்டும் என்ற கருத்து கடந்த 150 ஆண்டுகளாக பேசப்பட்டு வருகிறது.

சர் ஆர்தர் காட்டன் என்ற பிரபல பொறியாளர் இக் கருத்தை 19-ம் நூற்றாண்டிலேயே தெரிவித்தார். ஆனால் அப்போதிருந்த கிழக்கு இந்திய கம்பெனியாரின் அரசு அதை ஏற்கவில்லை. அதற்குப் பின் பிரிட்டிஷ் அரசும், சுதந்திர இந்திய அரசும்கூட இந்தத் திட்டத்தை பரிசீலித்தன. ஆனால் செயல்படுத்த முற்படவில்லை.

இறுதியாக 1982 ஆம் ஆண்டு இதற்காகவே தேசிய நீர்வள மேம்பாடு நிறுவனம் உருவாக்கப்பட்டது. கடந்த 25 ஆண்டுகளாக விரிவாக ஆய்வு செய்யப்பட்டு வரைபடங்களும் மதிப்பீடும் தயாரிக்கப்பட்டன. இத் திட்டத்தை உடனடியாக எடுத்துக் கொண்டு விரைவாகச் செயல்படுத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் மத்திய அரசுக்கு ஆணையிட்டுள்ளது.

இத்திட்டத்தின் அடிப்படைத் தத்துவம் என்னவென்றால், தண்ணீர் அதிகமாக ஓடிக் கடலில் கலந்து வீணாகும் நதிப்படுகைகளிலிருந்து, பற்றாக்குறையாக உள்ள நதிப்படுகைகளுக்குத் திருப்பி விட்டு வீணாகும் தண்ணீரைப் பயன்படுத்த வேண்டும் என்பதே. இந்த அடிப்படையில் தான் திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. வடநாட்டு நதிகளை இணைப்பதற்கு, அயல்நாட்டு அரசுகளின் சம்மதம் பெற வேண்டி இருப்பதால் தாமதம் ஆகிறது. எனவே தென்னாட்டு நதிகளையாவது முதல் கட்டமாக இணைத்து விடலாம் என்று ஆலோசனை கூறப்பட்டது.

இதுவும் தாமதம் ஆவதால் தமிழ்நாடு நதிகளையாவது இணைத்து விடலாம் என்று நமது குடியரசுத் தலைவர் யோசனை தெரிவித்தார். இந்த அடிப்படையில் பார்த்தால் மூன்று இணைப்புகள் செயல்படுத்தலாம் என்றும் இவற்றைத் தமிழ்நாடு அரசே செயல்படுத்தும் என்றும் தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் தமிழ்நாடு சட்டப் பேரவையில் கூறினார். இந்த மூன்று இணைப்புகள் எவை என்றால்;

  • 1. தென் பெண்ணை ஆற்றையும் செய்யாற்றையும் இணைத்தல்.
  • 2. கோரை ஆற்றையும் அக்கினியாற்றையும் இணைத்தல்.
  • 3. தாமிரபரணி ஆற்றையும் நம்பியாற்றையும் இணைத்தல்

தமிழ்நாட்டில் உள்ள நதிகள் எல்லாம் பற்றாக்குறை நதிகளே; உபரி நீர் உள்ள நதிகள் எவையும் இல்லை. எனவே இரண்டு பற்றாக்குறை நதிகளை இணைப்பதால் பயன் ஒன்றுமில்லை.

ஆனால் ஒரு சில நதிகளில் 25 சதவீத நம்பகத்தன்மையின் அடிப்படையில் பார்த்தால் ஓரளவு உபரி நீர் இருப்பதாக 2001 ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட உயர்நிலைக்குழு 2002 ஆம் ஆண்டில் ஓர் அறிக்கையை அரசுக்கு அளித்தது. அக் குழுவின் அறிக்கையில் கீழ்க்கண்ட நதிகளில் இருக்கும் உபரி நீர் பற்றியும் அந்த உபரி நீரை எவ்வாறு பயன்படுத்துவது என்பது பற்றியும் ஆலோசனைகள் கூறப்பட்டுள்ளன.

25 சதவீத நம்பகத்தன்மையின் அடிப்படையில் உபரி நீர் உள்ள நதிப்படுகைகள் பின்வருமாறு:

  • 1. பாலாறு – 24.34 டி.எம்.சி.
  • 2. வெள்ளாறு – 41.21 டி.எம்.சி.
  • 3. தென் பெண்ணையாறு – 26.40 டி.எம்.சி.
  • 4. காவிரி நதி – 103.56 டி.எம்.சி.
  • 5. தாமிரபரணி நதி – 24.0 டி.எம்.சி.

இந்த உபரி நீர் எல்லாம் ஆற்றின் கடைசிப் பகுதியில் தான் உள்ளன. இந்த நதிகளை இணைப்பதற்கு அந்தக் குழு எந்த ஆலோசனையும் கூறவில்லை. எனவே இந்த இணைப்புகள் பற்றித் தெரிந்து கொள்வதற்காக, பொதுப்பணித்துறையில் விசாரித்து கீழ்க்கண்ட விவரங்கள் பெறப்பட்டன.

இணைப்பு – 1: சாத்தனூர் உயர்நிலைக் கால்வாய் திட்டம்

சாத்தனூர் அணையிலிருந்து உயர்நிலைக் கால்வாய் அமைத்து பல ஏரிகளுக்குத் தண்ணீர் அளித்துவிட்டு இறுதியாக விழுப்புரம் வட்டத்தில் உள்ள நந்தன் கால்வாயுடன் இணைத்தல். தென்பெண்ணை ஆற்றில் சாத்தானூரில் உபரி நீர் இல்லை. திருக்கோவிலூர் அணைக்கட்டிற்கு கீழேதான் உபரிநீர் உள்ளது.

இணைப்பு – 2: கோரையாறு தனிப்படுகையல்ல, காவிரியின் உபநதி. வெள்ளக் காலங்களில் திருச்சி நகரத்திற்கு வெள்ள அபாயம் உண்டாக்குகிறது. எனவே கோரையாற்றையும் ஆரியாற்றையும் கால்வாய் மூலம் இணைத்து அதிலிருந்து 15 ஆயிரம் கனஅடி வெள்ள நீரை அக்னியாறு படுகைக்குத் திருப்புதல்.

இணைப்பு – 3: தாமிரபரணி ஆற்றின் வெள்ள நீரைச் சாத்தான்குளம் மற்றும் திசையன்வினை பகுதிகளுக்குத் திருப்புதல்.

சில பொறியாளர்கள் நதிகள் இணைப்பின் தத்துவத்தை உணராமல் இந்தியாவின் நதிகள் அனைத்தையும் சமமட்டக் கால்வாய்கள் மூலம் இணைக்க முடியும் என்றும், அவற்றில் இரண்டு பக்கமும் தண்ணீர் பாயும் என்றும், இத்திட்டம் மத்திய அரசு தயாரித்துள்ள திட்டத்தைவிட மேலானது என்றும் பிரசாரம் செய்து வருகிறார்கள்.

இது செயல்முறைப்படுத்த முடியாத திட்டம். ஓர் ஆற்றிலோ அல்லது கால்வாயிலோ, தண்ணீர் ஓட வேண்டும் என்றால் அடிமட்டச் சாய்வு இருக்க வேண்டும். சாய்வு இல்லாத கால்வாய் எப்படி செயல்படும்? வெறும் பிரசாரத்தால் மட்டும் தண்ணீர் ஓடாது என்பதை உணர்ந்துகொள்ள வேண்டும்.

———————————————————————————————————————————————————–

100 கோடிக்கு 36 லட்சம் கோடி!

பதினோராவது ஐந்தாண்டுத் திட்ட ஆவணத்துக்கு தேசிய வளர்ச்சிமன்றக் கூட்டத்தில் பங்கேற்ற அனைத்து மாநில முதலமைச்சர்களும் ஒப்புதல் அளித்துவிட்டனர். 5 ஆண்டுகளில் மொத்தம் 36 லட்சம் கோடி ரூபாய் செலவிடத் திட்டமிடப்பட்டிருக்கிறது.

100 கோடிக்கும் அதிகமான மக்கள் தொகையைக் கொண்ட நம் நாட்டின் ஒட்டுமொத்தப் பொருளாதார வளர்ச்சியை பதினோராவது ஐந்தாண்டுத் திட்டத்தின் முதல் 4 ஆண்டுகளில் 9% என்றும், கடைசி ஆண்டில் (2011-12) 10% என்றும் பராமரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நடந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை திட்டக்குழுவின் துணைத் தலைவர் மான்டேக் சிங் அலுவாலியா பின்னர் நிருபர்களிடம் விவரித்தார்.

கல்வி, சுகாதாரம், வறுமையை ஒழிப்பதற்கான வேலை வாய்ப்பு உறுதித் திட்டம் ஆகியவற்றின் மூலம் சமூக அடித்தளக் கட்டமைப்பை வலுப்படுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருப்பதாக அலுவாலியா கூறியுள்ளார்.

நம்முடைய ஐந்தாண்டுத் திட்ட இலக்குகளை எட்ட முடியாதவாறு 3 விஷயங்கள் தடுக்கின்றன.

1. ஐந்தாண்டுத் திட்டங்களை வகுப்பதிலும், அமல் செய்வதிலும், அதன் பலன்களைத் தணிக்கை செய்வதிலும் மக்களை ஈடுபடுத்தத் தொடர்ந்து தவறி வருகிறோம்.

2. அதிகாரிகளும் அரசியல் தலைவர்களும் கூடி தயாரித்து, நிதி ஒதுக்கி, நிறைவேற்றும் திட்டங்களாகவே இவை நீடிக்கின்றன.

3. திட்டங்களை வகுப்பதில் காட்டும் ஆர்வத்தை அமல்படுத்துவதில் தொடர்ச்சியாகக் காட்டத் தவறுவதால் எல்லா திட்டங்களும் தொய்வடைந்து, பிறகு தோல்வியைத் தழுவுகின்றன.

நதிநீர் இணைப்பு சாத்தியமா என்பது ஒருபுறம் இருக்கட்டும், இருக்கும் நீர்நிலைகளைக் குறைந்த செலவில் பராமரிக்க நம்மிடம் உள்ள தேசியத் திட்டம்தான் என்ன?

ஐந்தாண்டுத் திட்டத் தயாரிப்பு என்பது இன்றளவும் வெறும் சடங்காக மட்டுமே இருக்கிறது. குறைந்த செலவில் அதிக பலன்களைப் பெறும் வகையில் திட்டங்கள் இருக்க வேண்டும். கோடிக்கணக்கில் பணத்தைச் செலவழித்து, ஆயிரக்கணக்கில் பணத்தைத் திருப்பி எடுப்பதாகவே திட்டங்கள் முடிகின்றன. திட்ட அமல்களில் ஏற்படும் காலதாமதத்தால்தான் கோடிக்கணக்கான ரூபாய்கள் விரயம் ஆகின்றன என்று நிதியமைச்சர் ப.சிதம்பரம் சமீபத்தில் பேசியிருக்கிறார். அதைத் தவிர்க்க என்ன திட்டத்தை இந்தக் கூட்டம் பரிசீலித்தது?

“”கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு அதிக நிதியை மத்திய அரசு ஒதுக்கிவிட்டது, இது மாநில முதலமைச்சரின் -நிதி அமைச்சரின் வாதத்திறமைக்குச் சான்று” என்று போலியாக பெருமைப்படுவதே வழக்கமாகி வருகிறது.

நபர்வாரி வருமானம் எவ்வளவு உயர்ந்தது, அணைகள் எத்தனை உயர்ந்தன, எத்தனை லட்சம் ஏக்கர்கள் கூடுதலாக பாசன வசதி பெற்றன, எத்தனை ஆயிரம் மெகாவாட் மின்சாரம் கூடுதலாக உற்பத்தி ஆனது, எத்தனை லட்சம் பேருக்குக் கூடுதலாக, நிரந்தர வேலைவாய்ப்புக் கிடைத்தது, தொழில், வர்த்தகத்துறையில் ஒட்டுமொத்த விற்றுமுதல் எத்தனை லட்சம் கோடி ரூபாய்கள் அதிகரித்தன என்ற ஆக்கபூர்வமான முடிவுகளே இந்த திட்டங்களின் வெற்றிக்கு உரைகல். அப்படியொரு அறிக்கையையும் இந்த தேசிய வளர்ச்சி மன்றக் கவுன்சிலில் முன்வைத்தால், ஐந்தாண்டுத் திட்ட வெற்றியை நம்மால் மதிப்பிட முடியும்.

நீர்நிலைகளையும், நிலத்தடி நீரையும் பாழ்படுத்தும் தோல் தொழிற்சாலைகள், சாயப்பட்டறைகள், பின்னலாடைத் தொழிற்சாலைகள், சுற்றுச் சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் ரசாயன ஆலைகள் போன்றவைதான் தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சியில் முக்கியத்துவம் பெறுகின்றன. இப்படிப்பட்ட வளர்ச்சி மாநிலத்துக்கு மட்டும் அல்ல, நாட்டுக்கே தேவை இல்லை என்பதை தேசிய அளவில் விவாதிக்க வேண்டும்.

குறிப்பிட்ட சில இனங்களில் மட்டும் வரிவிதிப்பு அதிகாரத்தை வைத்திருந்த மத்திய அரசு மதிப்புக் கூட்டப்பட்ட விற்பனை வரி (வாட்), சேவை வரி மூலம் தன்னுடைய கரத்தை மேலும் வலுப்படுத்திக் கொண்டுவிட்டது. இனி போகப்போக ஐந்தாண்டுத் திட்டமிடல் என்பது மத்திய அரசின் தனியுரிமை ஆனாலும் வியப்பதற்கு ஏதும் இல்லை.

Posted in 11, 5, Agriculture, Budget, Cauvery, Cheyaar, Cheyyaar, Cheyyaaru, Civil, Connection, CS Kuppuraj, Damirabarani, Dhamirabharani, doctors, Drinking Water, Economy, Education, Farming, Farmlands, Finance, Five Year Plans, Floods, Food, Fund, Government, Govt, harvest, Health, Healthcare, Hospital, Hygiene, IAS, inter-link, IPS, Kaviri, Korai, Lakes, medical, Nambiyar, officers, Paalar, Paddy, Palaar, Palar, peasants, Pennai, Planning, Plans, Politics, Poor, Project, Rain, rice, River, Sathanoor, Sathanur, service, Seyaar, Seyyaar, Seyyaaru, South Pennai, Tamirabarani, Tamirabharani, Thamirabarani, Thamirabharani, Vellaar, Village, Water, Watersources, Wheat, Year | 1 Comment »

Bihar Government to keep tabs on doctors through a specially-designed website

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 17, 2007

பிகாரில் டாக்டர்களை கண்காணிக்க இணைய தளம்: முதல்வர் நிதீஷ் அறிவிப்பு

பாட்னா, பிப். 17: பிகாரில் அரசு டாக்டர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்களின் அன்றாட பணிகள் என்ன, மருந்து சரியாக கொடுக்கப்படுகிறதா, குறித்த நேரத்தில் அனைவரும் பணிக்கு வருகிறார்களா என்பன உள்ளிட்டவற்றைக் கண்காணிக்க புதிய இணைய தளத்தை அமைக்க உள்ளதாக முதல்வர் நிதீஷ் குமார் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

இந்த இணைய தளம் மூலம் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களும், அரசு மருத்துவமனைகளும் இணைக்கப்படும். இதன்மூலம் நோயாளிகளின் எண்ணிக்கை, அவர்களுக்கு கொடுக்கப்படும் சிகிச்சை, மருந்துப் பொருள்களின் கையிருப்பு ஆகியவற்றை உடனுக்குடன் அறிந்து தக்க நடவடிக்கைகளை எடுக்கமுடியும்.

அனைத்து மருத்துவமனைகளிலும் நவீன ஆய்வகங்கள், கதிரியக்கக் கருவிகள் ஆகியவற்றை வாங்க முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. மருத்துவமனைகளை புதுபிக்கவும், விரிவாக்கம் செய்யவும் விரைவில் நிதி ஒதுக்கப்படும் என்றார்.

4 அரசுக் கல்லூரிகள் உள்பட 13 மருத்துவக் கல்லூரிகளை விரைவில் திறக்க திட்டமிடப்பட்டுள்ளது. மாதேபுரா, நாலந்தா, பெட்டியா ஆகிய பகுதிகளிலும், பாட்னாவில் உள்ள இந்திராகாந்தி மருத்துவ அறிவியல் கழகத்திலும் தலா ஒரு மருத்துவக் கல்லூரி அமைக்கப்படும் என்று சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Posted in activism, Attendance, Bihar, Chief Minister, Complaints, Corruption, doctors, Government, Healthcare, Hospitals, Indian, Instruments, Law, Machines, Madhepura, Malpractice, medical colleges, Medicine, Nalanda, Nalandha, Nitish Kumar, Patna, PHCs, PIL, public health centres, punctuality, sadar hospitals, solutions, state-run hospitals, Tracking, Web, Website | Leave a Comment »

Two-tier service tax structure in Budget ’07

Posted by Snapjudge மேல் ஜனவரி 17, 2007

சேவை வரி சுமை

அடுத்த மாதம் தாக்கல் செய்யப்பட இருக்கும் மத்திய அரசு பட்ஜெட்டில் மத்திய நிதி அமைச்சர் சேவை வரியை மேலும் பல சேவைகளுக்கு விரிவுபடுத்த உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. அத்துடன் இப்போது 12 சதவீதமாக உள்ள சேவை வரியை 14 சதவீதமாக உயர்த்தவும் அவர் உத்தேசித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

பொருள்களை உற்பத்தி செய்தால் அவற்றின் மீது மத்திய கலால் தீர்வை விதிப்பது நமது நாட்டில் மிக நீண்ட காலமாக இருந்து வரும் நடைமுறையாகும். சேவைகள் மீது வரி விதிக்கப்படாமல் இருந்தது. 1994-ம் ஆண்டில் இப்போதைய பிரதமர் மன் மோகன் சிங், நிதி அமைச்சராக இருந்தபோது சேவை வரி முதல் முறையாக தொலைபேசி உள்பட மூன்று சேவைகள் மீது விதிக்கப்பட்டது. பின்னர் இந்த வரியானது படிப்படியாக பல்வேறு சேவைகளுக்கு விரிவுபடுத்தப்பட்டது.

அதே சமயத்தில் ஆரம்பத்தில் 5 சதவீதமாக இருந்த இந்த வரி, படிப்படியாக உயர்த்தப்பட்டு, இப்போது 12 சதவீத அளவில் உள்ளது. கல்வி வரியையும் சேர்த்தால் இது 12.24 சதவீத அளவில் இருக்கிறது.

தொலைபேசிக் கட்டணம் மீது விதிக்கப்படுகிற சேவை வரி மூலம் மட்டும் மத்திய அரசுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் கிடைத்து வருகிறது. நாட்டில் செல்போன் வைத்திருப்போரின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. ஆகவே இதன் மூலம் இயல்பாக மத்திய அரசுக்கு கூடுதல் வருமானம் கிடைத்து வருகிறது. மேலும் பல சேவைகள் மூலமும் மத்திய அரசுக்கு வரி விகிதத்தை உயர்த்தாமலேயே கூடுதல் வருமானம் கிடைத்து வருகிறது. உதாரணமாக சேவை வரி மூலம் 1994-95-ம் ஆண்டில் கிடைத்த வருமானம் ரூ.410 கோடி. இந்த வருமானம் 2004-05-ம் நிதியாண்டில் ரூ.14 ஆயிரம் கோடியாக உயர்ந்தது. 2006-07-ம் ஆண்டில் ரூ.34 ஆயிரம் கோடி கிடைக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

எந்த வரியானாலும் இறுதியில் அதைச் செலுத்துபவர்கள் சாதாரண மக்களே. சேவை வரி வருமானத்தை ரூ.50 ஆயிரம் கோடியாக உயர்த்த மத்திய நிதி அமைச்சர் விரும்புவதாகத் தகவல்கள் கூறுகின்றன.

இன்று கிராமப்புறங்களிலும் எளிய மக்கள் செல்போன் வைத்துள்ளனர். அவர்கள் ஒவ்வொருவரும் சேவை வரியாக மத்திய அரசுக்கு செலுத்தும் தொகை ஏராளம். அவர்கள் மீது மேலும் வரிச்சுமையை ஏற்றுவது சரியல்ல. எனவே, சேவை வரி விகிதத்தை 12 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாகக் குறைப்பதே பொருத்தமாக இருக்கும்.

அடுத்த மாத பட்ஜெட்டில் வழக்கறிஞர்கள், டாக்டர்கள் ஆகியோர் மீதும் சேவை வரி விதிக்கப்படலாம் என்று குறிப்புகள் காட்டுகின்றன. இதற்கு கடும் எதிர்ப்பு ஏற்பட்டு, அந்த யோசனை கைவிடப்பட்டாலும் வியப்பில்லை. கடந்த காலத்தில் இப்படிப்பட்ட எதிர்ப்பு காரணமாக சேவை வரி திட்டத்தை மத்திய அரசு கைவிட்டது உண்டு. ஒன்றுபட்டு நின்று எதிர்ப்புத் தெரிவிக்க, அமைப்புகளை பெற்றிராதவர்கள் எளிய மக்கள்தான். ஆகையால்தான் அவர்கள் மீது மேலும் மேலும் வரிச்சுமை ஏற்றப்படுகிறது.

மத்திய அரசுக்கு சேவை வரி ஒரு காமதேனுபோல விளங்குவதைக் கண்ட மாநில அரசுகள், அந்த வரியை விதிக்க தங்களுக்கும் அதிகாரம் வழங்க வேண்டும் என்று கோரி வருகின்றன. இக்கோரிக்கை பரிசீலிக்கப்பட்டு வருகிறது.

ஒருபுறம் சேவை வரி உயர்த்தப்படும் அதே நேரத்தில் மறுபுறம் தொழில்துறையினருக்கு மேலும் வரிச்சலுகைகள் வழங்கப்படுகிற நிலையைத்தான் நாம் கண்டு வருகிறோம்.

Posted in 2007, Asim Das Gupta, Attorneys, Budget, Business, Cabinet Minister, doctors, Economy, Empowered Group of Finance Ministers, exemption, Expenses, Finance, Financial services, Goods and Services Tax, GST, Increase, India, Lawyers, Ministry, P Chidambaram, P Chidhambaram, P Chithambaram, Palaniappan Chidambaram, Revenues, service tax, Taxes, Telecom | Leave a Comment »