Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Diwali’ Category

The History of Sarees – Art of wearing saris, Tamil Nadu Heritage & Culture, Textile Commerce

Posted by Snapjudge மேல் ஜனவரி 11, 2008

நீலக் கலரு ஜிங்கிச்சா.. பச்சைக் கலரு ஜிங்கிச்சா!

தேவி கிருஷ்ணா


புடவைக்கு ஆசைப்படாத பெண்ணும் உண்டா? வாங்குகிறார்களோ, இல்லையோ புடவைகளைக் கொஞ்ச நேரம் வேடிக்கை பார்ப்பதற்காகவாவது புடவைக் கடைகளுக்கு விசிட் அடிக்காதவர்கள் தமிழ்நாட்டில் கம்மி. புடவை மீது பெண்களுக்கு இருக்கும் ஆசைக்கு சற்றேறத்தாழ மூவாயிரம் ஆண்டு சரித்திரம் இருக்கிறது என்கிறார் “நூலோர்’. புடவையின் சரித்திரத்தைப் பார்ப்போமா?

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழ் வரலாற்றில் சேலை இடம் பெற்றிருந்தது. சங்க காலத்துக்கு முன்பு தாழையையும் பூவையையும் சேர்த்து உருவாக்கப்பட்ட தாழை ஆடைகளை பெண்கள் அணிந்து வந்தார்கள். உடைகளை கொடிகளாலும் நொச்சி இலைகளாலும் ஆக்கிக் கொண்டார்கள். விழாக் காலங்களில் நெய்தல் மலர்களால் தாழையுடை செய்தார்கள். இடுப்பிலும் மார்பிலும் மகளிர் தாழையுடை அணிந்தார்கள் என சங்ககால வாழ்வியல் கூறுகிறது. காலம் செல்ல பருத்தி உடையும் பட்டு உடையும் அணிந்தார்கள்.

பருத்தி உடை முதன்முதலில் தமிழ்நாட்டில்தான் ஆரம்பிக்கப்பட்டது என்றும் இங்கிருந்து மேல் நாடுகளுக்குப் பரவியது என்றும் வயர்சாண் மார்சல் கூறுகிறார். பால் ஆவி போன்ற மெல்லிய துணிகளும் பாம்பு தோல் போன்ற அழகான துணிகளும் காகிதம் மெல்லிய துணிகளும் சாக்கு போன்ற முரட்டுத் துணிகளும் நெய்யப்பட்டன. இங்கிருந்து மாதூரம் எனப் பெயர் பெற்ற புடவைகள் காசி, பாடலிபுரம் முதலிய இடங்களுக்கு அனுப்பப்பட்டது என்று 3-ம் நூற்றாண்டில் எழுதப்பட்ட அர்த்த சாஸ்த்திரத்தில் கூறப்பட்டுள்ளது. ரோம் முதலிய நாடுகளுக்கும் துணிகள் ஏற்றுமதி செய்யப்பட்டன.

அன்று நெசவு செய்பவர்கள் காருகர் என்று அழைக்கப்பட்டனர். வடகம், பாடகம், கோங்கலம், சித்திர கம்பி, பேடகம் எனப் பல பெயர்களில் ஆடைகளை சூடி மகிழ்ந்தனர். நீலம், சிவப்பு, மஞ்சள், கருப்பு முதலிய நிறங்களில் ஆடைகள் நெய்யப்பட்டன. அவற்றில் நுண்ணிய வேலைப் பாடுகள் இருந்தன. பருத்தியும் பட்டும் கொண்ட துணிகள் துகில் எனப்பட்டன.

நீளமாக நெய்யப்பட்ட துணிகள் பிறகு வெட்டப்பட்டு வேட்டிகளாகவும் துண்டுகளாகவும் பயன்படுத்தினர். இதனால் இவை அறுவை என்றழைக்கப்பட்டது. பருத்திப் புடவைகளுக்கு கலிங்கம் எனப் பெயர். பட்டு ஆடைகள் நூலாக் கலிங்கம் எனப்பட்டது.

நெய்வதில் தேர்ந்த தமிழன் அதற்கு சாயம் தீட்டுவதிலும் சிறந்து விளங்கினான். மலர்கள், செடி- கொடிகள், இலைகள் ஆகியவற்றின் சாறுகளில் வண்ணமேற்றினான். அவுரி செடியிலிருந்து ஏற்கப்பட்ட சாயம் ஐரோப்பியர்களின் மனதைக் கவர்ந்தது. இதில் இருந்து கிடைத்த நீல நிறச் சாயத்தை இண்டிகோ என்று அழைத்தனர்.

கடுக்காய், கொன்றைப் பூ போன்றவையும் சாயத்துக்குப் பயன்படுத்தப்பட்டன.

நாகரிகம் வளர வளர துணிகளின் ரகங்களும் வண்ணங்களும் மேலும் சிறப்படைந்தன. 18-19 ஆம் நூற்றாண்டுக்குச் செல்வோம். புடவைகள் முப்பாக சிறப்படைந்தன. அதாவது உடல், பார்டர், முந்தி என மூன்று பகுதிகள் உள்ள புடவைகள். ஆட்டுமுழி, புளியங் கொட்டை, சொக்கட்டான், வைரஊசி, பாய் பின்னல் மற்றும் மயில் கழுத்து, கிருஷ்ண மேகவர்ணம் போன்ற இரட்டைக் கலப்பு நிறங்களும் மோஸ்தராக இருந்தது.

முன் காலத்தில் காஞ்சிப்பட்டு சேலைகள் கனமாக இருக்கும். ஒரு புடவை 2 சேர், 3 சேர் (பழைய அளவுகள்) எடை இருக்கும். ஜரிகையையும் வேலைப் பாட்டையும் பொறுத்தே விலை நிர்ணயம் செய்யப்படும். ஆனால் இப்போது பெண்கள் வெயிட் இல்லாத புடவைகளையே விரும்புகிறார்கள். டெஸ்ட்டட் ஜரிகைப் புடவைகள் என்பவை தாமிரத்தில் தங்க முலாம் பூசுவார்கள். இவை எடை குறைவாக இருக்கும்.

பெரிய விலை கொடுத்து வாங்கும் பட்டுச் சேலைகளை எப்படி பராமரிப்பது?…

புடவைகளை பீரோக்களில் வைக்கும் போது ஒரு மெல்லிய மல்-மல் துண்டில் சுற்றி வைத்தால் ஜரிகை கருக்காமல் புடவை புத்தம் புதிதாக இருக்கும். கொஞ்சம் சூடம் அல்லது நெப்தலின் உருண்டைகளையும் பீரோ தட்டுகளில் போட்டு வைக்க வேண்டும்.

ஒவ்வொரு தடவையும் புடவையைக் கட்டிய பிறகு அதை காத்தாட வெளியில் போட்ட பிறகு மடித்து வைக்கவும். மழைக்காலத்தில் பட்டுப் புடவைகளை இளம் வெயிலில் கால் மணி நேரம் போட்டு எடுத்து வைக்க வேண்டும். இப்படி செய்தால் புடவை 70 ஆண்டுகள் வரை கெடாமல் இருக்கும்.

பூந்திக் கொட்டையை இடித்து அதைத் தண்ணீரில் போட்டு ஊர வைத்தால் சோப்புத் தண்ணீர் மாதிரி கிடைக்கும். அதைக் கொண்டு கையினால் புடவைகளைக் கசக்கிப் பிழிந்து காய வைத்தால் பட்டின் பளபளப்பும் மென்மையும் காக்கப்படும்.

போதுமா புடவை கதை?
—————————————————————————————————————————————————————————
ஒலையில் நெய்த சேலை!

நாகரீகத்தின் வேகமான வளர்ச்சிக்கு ஈடு கொடுக்கும்விதத்தில் புதுப்புது வகைகளிலும், விதங்களிலும் செயற்கை நூலிழைகள் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன. இவற்றைப் பயன்படுத்தி உருவாக்கப்படும் புதிய சேலை வகைகளின் எண்ணிக்கையும் நாளுக்குநாள் அதிகரித்து வருகின்றன. என்னதான் செயற்கை இழைகளின் மீதான மோகம் நம்மை ஈர்த்தாலும், இயற்கை வழியில் தாவர நாரைப் பயன்படுத்தி ஆடைகளை உருவாக்கும் முயற்சிகளும் பல இடங்களில் நடைபெற்று வருகின்றன.

இந்த வகையில் ஏழைகளின் கற்பக விருட்சம் என அழைக்கப்படும் பனை மரத்தின் ஓலைகள் தற்போது நவநாகரீக சேலைகள் நெய்யவும் பயன்படும் என்பது தற்போது நிரூபணம் ஆகியுள்ளது. நாட்டிலேயே முதல் முறையாகச் சென்னை பல்லாவரத்தை அடுத்த அனகாபுத்தூரைச் சேர்ந்த கைத்தறி நெசவாளர் சங்கத்தினர் இந்தச் சாதனையை நிகழ்த்தியுள்ளனர்.

ஏற்கெனவே, சணல், வாழை நார் உள்பட பல்வேறு தாவர இழைகளைப் பயன்படுத்தி சேலைகளை உருவாக்கிச் சாதனை புரிந்து வரும் இச் சங்கத்தினர் தற்போது பனை ஓலையிலும் சேலை நெய்யமுடியும் என்பதை நிரூபித்துள்ளனர்.

விசைத்தறி, செயற்கை இழை ஆடைகள் என பல்வேறு போட்டிகளுக்கிடையே பாரம்பரிய கைத்தறி நெசவுத் துறையை நம்பி அதனை முன்னிலை படுத்தும் பல்வேறு கட்டங்களில் போராடி வருகிறார் அனகாபுத்தூர் சணல் நெசவாளர்கள் சங்கத்தின் தலைவர் சேகர். இந்தச் சோதனையான காலகட்டத்திலும் புதிய சாதனைகளை நிகழ்த்தி வரும் சேகர் “”வாழை நார் உள்ளிட்ட பல்வேறு தாவர இழைகளைப் பயன்படுத்தி சேலைகளை உருவாக்கி வருவதற்கு மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. உள்நாட்டில் மட்டுமல்லாது கடல்கடந்தும் பல்வேறு வெளி நாடுகளிலும் இவ்வாறு தயாரிக்கப்படும் ஆடைகளுக்கு நல்ல வரவேற்பு உள்ளது.

குறிப்பாக ஜப்பான், பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகளில் இத்தகைய புதிய முயற்சிகளுக்கு அந்தந்த நாட்டு அரசுகளிடம் நல்ல ஆதரவு கிடைத்து வருகிறது.

சுற்றுச்சூழல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இங்கிலாந்து உள்ளிட்ட ஐரோப்பிய மற்றும் அமெரிக்க நாடுகளில் இத்தகைய சேலை ரகங்களுக்கு நல்ல சந்தை வாய்ப்பு உள்ளது.

இந் நிலையில் கோவையைச் சேர்ந்த ஒரு கல்லூரி மாணவி பனை ஓலையில் சேலை நெய்ய முடியும் என நம்பினார். பல்வேறு தாவர இழைகளைப் பயன்படுத்தி வரும் எங்களை அந்த மாணவி அணுகினார்.

வெளிப்படையாகத் தெரியும் சில அம்சங்களால் பனை ஓலையை ஆடை ரகங்களை நெய்ய பயன்படுத்த முடியாது எனப் பலரும் நினைத்தனர். நாங்கள் பனை ஓலையை மிகமிக மெல்லிய இழைகளாகப் பிரித்தோம். பின்னர் பருத்தி நூலிழைகளுடன் பனை ஓலை இழைகளைக் குறுக்காகப் பயன்படுத்தினோம். இந்த முயற்சி வெற்றிகரமாக அமைந்தது.

சேலையில் டிசைகள் வரும் இடங்களில் வழக்கமான இழைகளுடன் பனை ஓலை இழைகளைப் பயன்படுத்தியது சிறப்பாக அமைந்தது. இது சேலைக்குப் புது பொலிவை அளிப்பதாக அமைந்தது. தற்போது ஒரு சேலையில் பருத்தி இழைகளுடன் சுமார் 40 சதவீத அளவுக்குப் பனை ஓலை இழைகளைப் பயன்படுத்தி வருகிறோம். பனை ஓலை இழைகளை இயந்திரங்களைப் பயன்படுத்தி மேலும் மெல்லிய இழைகள் எடுத்தால் சேலையில் இதன் அளவை மேலும் அதிகரிக்க முடியும். இதற்கு அரசின் தொழில்நுட்ப உதவி அவசியமாகிறது. பனை ஓலையைப் பயன்படுத்தி நெய்யப்படும் சேலைகள் செயற்கை இழை சேலை மோகத்தில் இருந்து மக்களின் கவனத்தைத் தாவர நாரின் பக்கம் இழுக்கும் என்பதில் ஐயமில்லை” என்கிறார் சேகர் நம்பிக்கையுடன்.

ஆதி மனிதன் இலையைத்தான் ஆடையாகப் பயன்படுத்தினான் இப்ப… ஓலை சேலை…!

வி. கிருஷ்ணமூர்த்தி

புதுமை பூக்கும் புடவைகள் « Snap Judgment

Posted in Chennai, Commerce, Cotton, Culture, Deepavali, Designer, Diwali, Expensive, Fabrics, Females, Garments, Her, Heritage, History, Ladies, Lady, Rich, Sarees, Saris, She, Shopping, Silk, Tamil Nadu, TamilNadu, Textiles, Women | Leave a Comment »

‘The Chennai Silks’: Rs 40 lakh sari from Tamil Nadu flaunts Ravi Varma & seeks entry for Guiness record

Posted by Snapjudge மேல் நவம்பர் 27, 2007

முந்தைய பதிவு: புதுமை பூக்கும் புடவைகள்

Vivaha Chennai Silks Saris Saree Rich  Formal Wear


சென்னை சில்க்ஸ் அறிமுகம்
ரூ.40 லட்சம் மதிப்புள்ள பட்டுச்சேலை
தங்கம், வைரம், முத்து, பவளம் உள்ளிட்ட நவரத்தினங்களால் ஆனது

சென்னை, நவ.27-தங்கம், வைரம், முத்து, பவளம், மாணிக்கம், மரகதம் உள்ளிட்ட நவரத்தினங்களால் தயாரிக்கப்பட்ட ரூ.40 லட்சம் மதிப்புள்ள பட்டுச்சேலையை செனëனை சில்க்ஸ் நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது.உலகப்புகழ் பட்டுசேலை

suhasini_chennai_silks_silk_sarees_gold_diamond_pearls_gems_40_lakhs_sari.jpgதமிழ்நாட்டில் முனëனணி ஜவுளி நிறுவனங்களில் ஒன்றான தி சென்னை சில்க்ஸ் நிறுவனம் உலகம் முழுவதும் பேசப்படும் வகையில் கலைநயமிக்க, விலைமதிப்பற்ற பட்டுச்சேலையை தயாரிக்க திட்டமிட்டது. இதற்காக அந்த நிறுவனம் தனித்திறன் மிக்க நெசவாளர்களைக் கொண்டு வடிவமைத்து, நவரதëதினங்களை இணைத்து சொந்த தறியில் அழகும், கலைநயமும் மிக்க பட்டுச்சேலையை உருவாக்கி உள்ளது.

தங்கம், வைரம், பிளாட்டினம், மாணிக்கம், முத்து, பவளம், புஷ்பராகம், மரகதம் உள்ளிட்ட 12 வகையான விலை உயர்ந்த ஆபரணங்களை இணைத்து உலகப் புகழ்பெற்ற ஓவியர் ரவி வர்மாவின் 12 ஓவியங்களுடன் வடிவமைத்துள்ளனர். ஆபரணங்களை சேலையுடன் சேர்த்து நெய்திருப்பது சிறப்பு அம்சம் ஆகும்.

விலை ரூ.40 லட்சம்

51/2 மீட்டர் நீளம் கொண்ட இந்த பட்டுச்சேலையில் முந்தானை பகுதியில் இந்தியாவின் 11 மாநிலங்களைச் சேர்ந்த பெண்கள் இசைக்கருவிகளுடன் அணிவகுத்து நிற்கும் ஓவியமும் மற்ற 11 ஓவியங்களும் ஒவ்வொரு பார்டரிலும் இடம்பெற்றுள்ளன.

விலை உயர்ந்த ஆபரணங்களைக் கொண்டு நுணுக்கமாக கலைநயத்துடன் உருவாக்கப்பட்ட உலகின் முதல் பட்டுச்சேலை இது என்பது குறிப்பிடத்தக்கது. இதன் விலை ரூ.40 லட்சம் ஆகும். உலகிலேயே அதிக விலை கொண்ட பட்டுச்சேலை என்ற சிறப்பையும் இந்த சேலை பெறுகிறது. இந்த சேலையை உருவாக்க மொத்தம் 18 மாதங்கள் ஆனது.

சுகாசினி அறிமுகப்படுத்தினார்

உலகின் மிக விலை உயர்ந்த பட்டுச்சேலை, 12 விதமான உலோகங்கள் மற்றும் நவரத்தின கற்களால் தயாரிக்கப்பட்ட பட்டுச்சேலை, ஒரே பட்டு சேலையில் ரவிவர்மாவின் 11 விதமான ஓவியங்கள் இடம்பெற்ற பட்டுச்சேலை என்பதற்காக கின்னஸ் சாதனைக்கு இந்த பட்டுசேலை பரிந்துரைக்கப்பட்டு உள்ளது. சென்னையில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் நடிகை சுகாசினி இந்த பட்டுசேலையை அறிமுகப்படுத்தினார்.

அப்போது பேசிய சென்னை சில்க்ஸ் நிறுவனத்தின் இயக்குனர்களில் ஒருவரான விநாயகம், “உலகம் முழுவதும் பேசப்படும் வகையில் கலைநயமிக்க பட்டுசேலையை தயாரிக்க வேண்டும் என்பதற்காகவும், நெசவு குடும்பத்தைச் சேர்ந்த நாங்கள் நெசவாளர்களுக்காக ஏதாவது செய்ய வேண்டும் என்பதற்காகவும் இந்த முயற்சியில் இறங்கினோம்.

இந்த சேலையை உருவாக்கியவர்கள் வெறும் கூலிக்காக வேலை செய்யவில்லை. 3 தலைமுறையாக நெசவு தொழில் செய்து வரும் அவர்கள் அர்ப்பண உணர்வுடன் அதிக அக்கறை எடுத்து இந்த முயற்சியில் ஈடுபட்டார்கள். அவர்களது மனோதைரியத்திற்கும், நம்பிக்கைக்கும் புதிய ஊக்கம் கிடைத்து இருக்கிறது” என்று கூறினார்.

சேலை அறிமுக விழா நிகழ்ச்சியில்

  • சென்னை சில்க்ஸ் இயக்குனர்கள் மாணிக்கம்,
  • ஆறுமுகம்
  • நந்தகோபால்,
  • சிவலிங்கம்,
  • சந்திரன் மற்றும் அவர்கள் குடும்பத்தினர்,
  • கவிஞர் வைரமுத்து,
  • நடிகை ஷோபனா,
  • நடிகர் ஜீவா,
  • பின்னணி பாடகி பி.சுசீலா,
  • கர்நாடக இசை பாடகி நித்யஸ்ரீ மகாதேவன்,
  • டாக்டர் கமலா செல்வராஜ், மத்திய
  • பட்டு வாரிய முன்னாள் இயக்குனர் டி.எச்.சோமசேகர்,
  • ஓவியர் மணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கர்நாடக அரசுத் துறை நிறுவனமான மைசூர் சில்க் நிறுவனம்
வடிவமைத்துள்ள பட்டுச் சேலையை உடுத்திப் பார்க்கும்
இளம்பெண். இச்சேலையின் விலை ரூ. 1.5 லட்சமாகும்.
பெங்களூர் இன்பான்டரி சாலையில் உள்ள கர்நாடக நிர்வாக
அதிகாரிகள் சங்கத்தில் வியாழக்கிழமை துவங்கிய
மைசூர் சில்க் சேலைக் கண்காட்சியில் இது இடம் பெற்றுள்ளதுHost unlimited photos at slide.com for FREE!

Posted in Aarani, aesthetics, Art, Banaras, Banares, Benaras, Benares, Bengal, blouse, Border, Budget, CAD, cat's eye, Chennai, clothing, coral, Cotton, Deepam, Deepavali, Deepavalli, Design, designers, Dharmavaram, Diamond, Diwali, Dress, embellishments, embroidery, emerald, Evening, Events, Expensive, Exports, Fabric, Fear, Feast, Festival, Formals, Formalwear, Garments, Gems, girls, Gold, Gowns, Guiness, Handicrafts, Heritage, Individual, Instruments, Jari, Jarigai, Jeeva, Jewels, Kala Niketan, KANCHEEPURAM, Kanchi, Kanchipuram, Kanchipuram Silk, Kanchivaram, Kanjeepuram, Kanjeevaram, Kanjipuram, Kanjivaram, Kasi, Kumaran, Ladies, Lady, Laundry, Limca, Marriages, music, musical, Musicians, Mylai, Mylapore, Mysore, Nalli, Nithashree, Nithashri, Nithyashree, Nithyashri, Nithyasree, Nithyasri, nylon, ornate, P Suseela, P Susheela, P Sushila, P Susila, Painter, Paintings, pallu, Party, Partywear, pearl, Platinum, Pochampalli, Polimer, polycot, polycotton, Polymer, Pothys, precious, Radha, Rasi, Ravi Varma, RaviVarma, RaviVerma, Receptions, Record, Records, Rich, RMKV, Roopkala, ruby, sapphire, Saree, Sarees, Sari, Saris, She, Shobana, Shobhana, Silks, silver, Skirt, stones, Sugasini, Suhasini, Sukasini, Synthetic, Tamil Nadu, TamilNadu, terrycot, terrycotton, Textiles, Thread, TNagar, topaz, Tussar, Varanasi, Vijayalakshmi, Wash, Weddings, Woman, Women, yellow sapphire, zari, Zarigai, Zhari | Leave a Comment »

Chennai Ranganathan Street – Infrastructure, Safety & Traffic issues due to Illegal Construction

Posted by Snapjudge மேல் நவம்பர் 10, 2007

விதிமுறை மீறல்கள்!

ஒரு திரையரங்கம் கட்டுவதாக இருந்தால் கூட, அதில் இத்தனை நபர்கள் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் அந்தக் கட்டடத்துக்குள் கூடுவார்கள் என்பதற்கான அதிகபட்ச நிர்ணயம் உண்டு. ஆனால், வணிக வளாகங்களுக்கு எந்தவிதக் கட்டுப்பாடும் இல்லாத அளவுக்கு நெரிசலை சந்திக்க வேண்டிய கட்டாயம். அதுவும், தொலைக்காட்சி வந்த பிறகு, பண்டிகைக் காலங்களில் இத்தனை சிறிய தெருவில் இத்தனை மக்களா என்று திகைப்பும், பயமும் ஏற்படுகிறது.

இந்த வர்த்தக நிறுவனங்கள் அள்ளி வீசும் இலவசங்களும், சலுகைகளும் பண்டிகைக் காலங்களில் புற்றீசல்போல வாடிக்கையாளர்களை மொய்க்க வைத்துவிடுகின்றன. அந்த அளவுக்குக் கூட்டத்தை சமாளிக்கும் அளவுக்கு அந்தக் கட்டடங்களில் இடமில்லை என்பது மட்டுமல்ல, தெருக்கள் அகலமும் இல்லை. உதாரணம், சென்னை ரங்கநாதன் தெருவும் அதிலுள்ள வணிக வளாகங்களும்.

சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் ஒரு கணக்கெடுப்பு நடத்தி வெளியிட்டிருக்கும் அறிக்கை, சென்னை தி.நகர் ரங்கநாதன் தெரு மற்றும் உஸ்மான் சாலையில் மட்டும் சுமார் 35 கட்டடங்கள் எப்.எஸ்.ஐ. (ஊ.ந.ஐ.) என்று அழைக்கப்படும் அதிகபட்சக் கட்டுமானப் பரப்பு விகிதத்தை மீறி எழுப்பப்பட்டவை என்று வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.

இது ஏதோ அரசுக்கும் அரசு அதிகாரிகளுக்கும் தெரியாமல் நடக்கும் விஷயமல்ல. 10 மீட்டர் அகலமுள்ள சென்னை ரங்கநாதன் தெருவில் பல அடுக்குக் கட்டடங்கள் எதுவும் அனுமதிக்கப்படவே கூடாது. ஆனால், விதிமுறைகளை மீறி சுமார் 14 கட்டடங்கள் எப்படி கட்டப்பட்டன? எந்தவொரு மாநகராட்சி மற்றும் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும அதிகாரிகளுக்கும் தெரியாமலா இந்தக் கட்டடங்கள் கட்டப்பட்டன?

உஸ்மான் சாலையில் இலக்கம் 128 மற்றும் 129 எண்களிலுள்ள சரவணா ஸ்டோர்ஸ் கட்டடம் கட்டுவதற்கு அனுமதிக்கப்பட்ட எப்.எஸ்.ஐ. 1.5 தான். ஆனால், கட்டப்பட்டிருப்பதோ 8.99. சட்டப்படி இந்தக் கட்டடத்துக்கு 266 கார்களை நிறுத்துவதற்கான இடம் இருக்க வேண்டும். ஆனால் ஒரு சைக்கிள் நிறுத்தக் கூட இடமில்லை. இது எப்படி நிகழ்ந்தது?

உஸ்மான் சாலையிலுள்ள ஸ்ரீ சங்கரபாண்டியன் ஸ்டோர்ஸ் வரம்பை மீறி ஐந்து மாடிகள் கட்டியது கண்ணில் படவில்லையா?

இல்லை, புதிய சரவணா ஸ்டோர்ஸ் நான்கு மாடிகள் கட்டியது யாருக்கும் தெரியாமல் கட்டப்பட்டதா?

  • கோடம்பாக்கம் சேகர் எம்போரியமும்,
  • உஸ்மான் ரோடு சரவணா கோல்டு ஹவுசும்,
  • ரங்கநாதன் தெருவுக்கு நேர் எதிரில் எழுந்து நிற்கும் சரவணா செல்வரத்தினத்தின் கட்டடமும்,
  • ரங்கநாதன் தெருவிலுள்ள வணிக வளாகங்களும்

ஊரறிய உலகறிய கட்டப்பட்டபோது, அதிகாரிகள் தூங்கிக் கொண்டா இருந்தார்கள்? சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு செயல்படும் நல்லி நிறுவனத்தின் கட்டடத்திலேயே விதிமுறை மீறல் இருப்பதாகச் சொல்கிறார்களே, அது எதனால்?
முறையான அனுமதி பெற்று கட்டடம் கட்டத் தொடங்குவார்கள் – இரண்டு அடுக்கு முடிந்ததும், மூன்றாவது அடுக்கு கட்டத் தொடங்கும்போது, சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பும். மாநகராட்சியைக் கேட்டால், எங்களிடம் அனுமதி வாங்கியது இரண்டு அடுக்குக்குத்தான். அதற்குமேல் கட்டப்படும் கட்டடங்களுக்கு பெருநகர் வளர்ச்சிக் குழுமம்தான் பொறுப்பு என்று தட்டிக் கழித்து விடுவார்கள். சம்பந்தப்பட்டவர் நீதிமன்றத்தை அணுகித் தடை பெற்று விடுவார். அதைக் காரணம் காட்டி பெருநகர் வளர்ச்சிக் குழுமம் கண்களை மூடிக் கொள்ளும்.

இதையெல்லாம் மீறி, பொது நல வழக்குத் தொடர்ந்து விடாப்பிடியாக உச்ச நீதிமன்றம் வரை போய் இந்தக் கட்டடங்களில் காணப்படும் விதிமுறை மீறல்களை இடித்துத் தள்ள உத்தரவு வாங்கி வந்தால், சட்டம் இயற்றி இவர்களைக் காப்பாற்ற அரசு முன்வருகிறது. அதாவது, இந்த விதிமுறை மீறல்களுக்கு உடந்தையாக சென்னை மாநகராட்சியும், சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமமும், அரசும் செயல்படுகின்றன என்றால், ஆட்சியும் அதிகாரமும் யாருக்காகப் பயன்படுத்தப்படுகிறது என்பது தெளிவாகிறது.

முதலில் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் இந்தக் கட்டடங்களைக் கட்ட உதவும் என்ஜினீயர்களும், காண்ட்ராக்டர்களும். விதிமுறை மீறல்களுக்குத் துணைபோகும் இவர்களது பட்டம் பறிக்கப்படும், உரிமம் ரத்து செய்யப்படும் என்று அறிவித்தால், இந்த விதிமுறை மீறல்கள் பெரிய அளவில் தடுக்கப்படும். படித்த பொறியியல் பட்டதாரிகள் இந்த விதிமுறை மீறல்களுக்குத் துணைபோகத் தயாராவதுதான் அடிப்படைக் குற்றம். அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்!

தவறான சிகிச்சைக்கு மருத்துவர்கள் தண்டிக்கப்பட்டு அவர்களது உரிமம் பறிக்கப்படுவதுபோல, விதிமுறை மீறல்களுக்குத் துணை போகும் என்ஜினீயர்களின் உரிமம் ரத்து செய்யப்படுமானால், இதுபோன்ற விதிமுறை மீறல்கள் நிச்சயம் குறையும்.

Posted in authority, Biz, Bribery, Bribes, Buildings, Business, Cars, Chennai, Citizen, City, Commerce, Congestion, Construction, Consumer, Corruption, Crackers, Customer, Deepavali, Deepavalli, Departments, Dept, Discount, Diwali, DMK, Dress, Economy, Finance, Fire, Fireworks, Floors, Gold, Hassle, Hazards, Illegal, Incentives, Industry, infrastructure, Jewelery, Jewels, Jewlery, kickbacks, Lanes, Law, License, Madras, Malls, Metro, MMDA, multi storey, Multi story, officers, Order, Parking, Permits, Ranganathan st, Ranganathan street, Rebates, Renganathan st, Renganathan street, retail, Safety, Saravana, Saravana Gold House, Saravana GoldHouse, Saravana Selvarathanam, Saravana Selvarathanam Stores, Saravana Stores, Sarees, Saris, Season, Sector, Sekar Emporium, Shopping, Shops, Sri sankarapandian, Sri sankarapandian Stores, Srisankarapandian, Srisankarapandian Stores, Suspend, Trade, Traffic, Usman Road | Leave a Comment »

Tamil TV Programmes – Diwali Specials in Sun, Kalainjar, Makkal, SS Music, Jeya and Vijay Televisions

Posted by Snapjudge மேல் நவம்பர் 8, 2007

சின்னத்திரையில் தீபாவளி சிறப்பு நிகழ்ச்சிகள்

தீபாவளியை முன்னிட்டு நேயர்களை எப்படியாவது கவர்ந்துவிட வேண்டும் என எல்லா டி.வி. சேனல்களும் போட்டி போட்டுக்கொண்டு பல புதுமையான நிகழ்ச்சிகளை வழங்குகின்றன. அவற்றில் பெரும்பாலான நிகழ்ச்சிகள், வழக்கம்போல சினிமா நடிகர், நடிகைகளை மையமாக வைத்தே உருவாக்கப்பட்டுள்ளன. கண்ணுக்கும் கருத்துக்கும் விருந்தளிக்கக் கூடிய விதத்தில் ஒளிபரப்பாகவுள்ள முக்கிய நிகழ்ச்சிகளில் சில…

எஸ்.எஸ்.மியூசிக்

  • காலை 10.30 மணிக்கு பாவனா,
  • பிற்பகல் 1 மணிக்கு ப்ரியாமணி,
  • மாலை 5 மணிக்கு சந்தியா,
  • மாலை 6.45 மணிக்கு நதியா

ஆகியோரின் பேட்டிகள் ஒளிபரப்பாகின்றன. எஸ்.எஸ்.மியூசிக் தொகுப்பாளர்கள் சிவகாசியில் நேரடியாகப் பங்கேற்ற கலகலப்பான தீபாவளிக் கொண்டாட்ட நிகழ்ச்சிகள் மாலை 4 மணிக்கு ஒளிபரப்பாகிறது.
விஜய் டி.வி.

பட்டிமன்றம்:

“குடும்ப வாழ்வில் மனநிறைவு பெற்றவர்கள் அன்றைய பெண்களா? இன்றைய பெண்களா?’ என்ற தலைப்பில் லியோனி தலைமையில் பட்டிமன்றம். காலை 8 மணி.

சூர்யா-ஏ.ஆர்.முருகதாஸ்:

வித்தியாசமான கதைகளைத் தேர்ந்தெடுத்துத் தமிழ்த் திரையுலகில் தனக்கென ஒரு தனி அடையாளத்தை ஏற்படுத்திக்கொண்ட சூர்யாவும் “தீனா’, “ரமணா’, “கஜினி’ போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸýம் சிறப்பு காஃபி வித் அனு நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறார்கள். சூர்யா, முதல்முறையாக தன்னுடைய காதல் வாழ்க்கை பற்றி மனம்திறக்கிறார்.

ஏ.ஆர்.முருகதாஸ், ஹிந்தி “கஜினி’ பற்றியும் அமீர்கான் பற்றியும் பேசுகிறார். காலை 9 மணி.

விஜய்:

கம்மாவான் பேட்டை என்ற பகுதியில் வசிக்கும் ராணுவ வீரர்கள் குடும்பத்துடன் விஜய் தீபாவளி கொண்டாடும் நிகழ்ச்சி “நாயகன்’ என்ற தலைப்பில் காலை 10 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

கலக்கல் காமெடி:

மிமிக்ரி ஆர்ட்டிஸ்ட்டாக இருந்து திரையுலகுக்கு அறிமுகமாகி மலையாளத்தின் முன்னணி நடிகர்களுள் ஒருவரான ஜெயராம் பங்குபெறும் சிறப்பு கலக்கப்போவது சாம்பியன்ஸ் நிகழ்ச்சி. காலை 11 மணிக்கு ஒளிபரப்பாகும் இந்நிகழ்ச்சியில் ஜெயராமும் மிமிக்ரி செய்து கலக்குகிறார்.

இவை தவிர்த்து

  • பகல் 12 மணிக்கு சிம்புவின் “இப்படை தோற்கின் எப்படை வெல்லும்’,
  • மதியம் 1 மணிக்கு தனுஷின் “நான் பொல்லாதவன்’,
  • மதியம் 2 மணிக்கு அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய் ஆகியோர் பங்கேற்ற பாலிவுட் சினிமா விழா,
  • மாலை 5 மணிக்கு புதிய படங்களின் சிறப்புக் கண்ணோட்டம் போன்ற பல நிகழ்ச்சிகள் விஜய் டி.வி.யில் ஒளிபரப்பாகின்றன.

சன் டி.வி.

நதியாவின் வணக்கம் தமிழகம்:

க்ளாமரை நம்பாமல் நடிப்புத் திறமையை மட்டுமே வைத்து தமிழ் சினிமாவின் நம்பர் ஒன் கதாநாயகியாகத் திகழ்ந்த நதியா பங்கேற்கும் “வணக்கம் தமிழகம்’ நிகழ்ச்சி காலை 7.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

கில்லி:

தரணி இயக்கத்தில் விஜய், த்ரிஷா, பிரகாஷ்ராஜ் நடித்த சூப்பர் ஹிட் படம் “கில்லி’ மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

பாவனா:

இலங்கை அகதிக்கும் தமிழ்நாட்டுப் பெண்ணுக்கும் இடையே ஏற்படும் காதலை மையமாக வைத்து உருவான “ராமேஸ்வரம்’ படத்தைப் பற்றி ஜீவா, பாவனா ஆகியோரின் பேட்டி இரவு 10.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

இவை தவிர்த்து காலை 10 மணிக்கு சாலமன் பாப்பையாவின் பட்டிமன்றம், காலை 11 மணிக்கு மற்ற டி.வி.க்களில் ஒளிபரப்பாகும் படங்களைப் பொருத்து ஒரு “திடீர்’ புதுப்படம் உள்பட பல நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகின்றன.

கலைஞர் டி.வி.

ஷோபனா:

காலை 6 மணிக்கு ஷோபானாவின் கர்நாடக இசை நிகழ்ச்சியுடன் தீபாவளி நிகழ்ச்சிகளை ஒளிபரப்பத் தொடங்குகிறது கலைஞர் டி.வி.

சத்யராஜ்:

சத்யராஜின் கலகலப்பான பேட்டி. இதில் சத்யராஜ் இதுவரை சொல்லாத பல விஷயங்களைப் பற்றி மனம்திறக்கிறார். காலை 7 மணி.

  • காலை 9.30 மணிக்கு நடிகர் விஜய்,
  • 10 மணிக்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான்,
  • மதியம் 2 மணிக்கு விக்ரம்,
  • 2.30 மணிக்கு தனுஷ்,
  • 3 மணிக்கு வடிவேலு ஆகியோரின் பேட்டி ஒளிபரப்பாகிறது.
  • இதற்கிடையில் பகல் 10.30 மணிக்கு ஜனநாதன் இயக்கத்தில் ஜீவா, நயன்தாரா நடித்த “ஈ’ படம் ஒளிபரப்பாகிறது.
  • மாலை 4 மணிக்கு முதல்வர் கருணாநிதி, கமல், ரஜினி உள்ளிட்ட பலர் பங்கேற்கும் தமிழக அரசின் விருது வழங்கும் விழாவும் நிகழ்ச்சி, கலைநிகழ்ச்சிகளோடு ஒளிபரப்பாகிறது.
  • இரவு 10.30 மணிக்கு பிரகாஷ்ராஜ்-த்ரிஷா ஆகியோரின் கலந்துரையாடல் நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது.

ஜெயா டி.வி.

நந்தாவின் சமையல்: பிரபல சமையல் கலை நிபுணர் சாந்தா ஜெயராஜ் நடிகர் நந்தாவுடன் இணைந்து விதவிதமான இனிப்புகளைச் செய்யும் நிகழ்ச்சி மாலை 5.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

  • மாலை 6 மணிக்கு ஜீவன்,
  • 6.30 மணிக்கு பிரசன்னா,
  • இரவு 7 மணிக்கு ப்ரியாமணி,
  • 8.30 மணிக்கு “உன்னாலே உன்னாலே’ விநய் ஆகியோரின் பேட்டியும்
  • இரவு 11 மணிக்கு மாதவன், ஷாம், த்ரிஷா நடித்த “லேசா லேசா’ திரைப்படமும் ஒளிபரப்பாகின்றன.

மக்கள் டி.வி.

கவிதை:

கவிஞர்கள்

  • ஈரோடு தமிழன்பன்,
  • இன்குலாப்,
  • அறிவுமதி,
  • ஜெயபாஸ்கரன்,
  • மு.மேத்தா,
  • பச்சையப்பன்,
  • நா.முத்துக்குமார்,
  • யுகபாரதி,
  • கபிலன்,
  • இளம்பிறை,
  • வெண்ணிலா

ஆகியோரின் புதுமையான கருத்துகளைத் தாங்கிய கவிதை நிகழ்ச்சி காலை 7 மணிக்கு ஒளிபரப்பாகிறது.
ஆழிக்கொண்டாட்டம்:

நாள்தோறும் கடலில் வாழ்க்கையைக் கண்டெடுக்கும் மீனவர்கள் கடலுக்குள் குதித்து வீர தீர விளையாட்டுகளும் கடலுக்குள்ளேயே வெடி கொளுத்திக் கொண்டாடும் சாகச விளையாட்டு நிகழ்ச்சிகளும் நண்பகல் 12 மணிக்கு ஒளிபரப்பாகின்றன.

ஆத்தாடி உறியடி:

மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சித் தொகுப்பாளர்கள் பங்கேற்கும் வித்தியாசமான நிகழ்ச்சி. வடம் இழுத்தல், உறியடித்தல் என்று மண்ணின் விளையாட்டுகளை மகிழ்ச்சியோடு கொண்டாடும் மக்கள் நிகழ்ச்சி பிற்பகல் 2.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

தீபா”வலி’:

தீபாவளித் திருநாளைக் கொண்டாடாத கிராமங்களைப் பற்றிய நெகிழ வைக்கும் நிகழ்ச்சி. அந்த கிராமங்களுக்கே சென்று அதற்கான காரணங்களை அறியும் வரலாற்றுப் பதிவு. இந்த நிகழ்ச்சி மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது. இவை தவிர்த்து

  • பகல் 1.30 மணிக்கு சத்குரு ஜகி வாசுதேவின் பேட்டி,
  • மாலை 4.30 மணிக்கு மரபு விளையாட்டுகளைப் பற்றிய “காசிக்கு போறேன் நானும் வாறேன்’,
  • மாலை 5.30 மணிக்கு மலேசியத் தமிழர்களின் “மலேசிய மத்தாப்பூக்கள்’,
  • இரவு 8 மணிக்கு ஈரானிய திரைப்படம் உள்பட பல நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகின்றன.

Posted in Actors, Actress, Cinema, Deepavali, Diwali, Films, Jaya, Jeya, Kalainjar, Makkal, Movies, music, Programmes, Specials, SS Music, Sun, Tamil, Televisions, TV, Vijay | 1 Comment »

When Sparklers Light Up Diwali Sky – Sivakasi Fireworks & Manual Labor: Need for the automation in Industrialization

Posted by Snapjudge மேல் நவம்பர் 6, 2007

பட்டாசுத் தயாரிப்பில் இயந்திரமயம் காலத்தின் கட்டாயம்

சிவகாசி, நவ. 5: பட்டாசுத் தயாரிப்புத் தொழிலில் தொழிலாளர் பற்றாக்குறையால் ஏற்படும் இழப்பைத் தடுக்க அந்தத் தொழிலில் இயந்திரமயமாக்குவது காலத்தின் கட்டாயமாகிவிட்டது.

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் முழுவதும் தனிநபர்களின் முதலீடுதான் உண்டு. சிறுசிறு நிறுவனங்கள் இணைந்து நடத்தும் வர்த்தகத்தின் அளவு ஆண்டுக்கு இரண்டாயிரம் கோடி ரூபாய்க்கு மேல்.

சிவகாசியில் தொடக்க காலத்தில் கலர் மத்தாப்பு தயாரிக்கப்பட்டது. பின்னர் இந்தத் தொழில் வளர்ச்சி அடைந்து இப்போது ஆண்டுக்கு ரூ.1000 கோடிக்கு வர்த்தகம் நடைபெறுகிறது.

சுமார் 600-க்கும் மேல் பட்டாசு ஆலைகள் இங்கு உள்ளன. இந்தத் தொழிலில் நேரடியாக சுமார் 1.30 லட்சம் தொழிலாளர்களும், மறைமுகமாக சுமார் 1 லட்சம் தொழிலாளர்களும் ஈடுபட்டுள்ளனர்.

இந்த ஆண்டு இந்தத் தொழிலில் ஈடுபட்டிருந்த 25 சதவீத தொழிலாளர்கள் வேறு பணிக்குச் சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது.

இந்தத் தொழிலில் சுமார் 70 சதவீதம் பெண்கள் பணிபுரிகின்றனர். திருப்பூர் உள்ளிட்ட ஊர்களில் உள்ள ஆலைகளில் 18 வயது முதல் 22 வயது வரை உள்ள பெண்களை பணியில் அமர்த்தி 3 ஆண்டு கழித்து ரூ. 1.50 லட்சம் வரை பணம் கொடுப்பதால் இங்கிருந்து பலர் அங்கு பணிக்குச் சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது.

தொழிலாளர் பற்றாக்குறையால் பட்டாசு ஆலைகளில் தயாரிப்பு இலக்கை எட்ட முடியவில்லை. இதனால் இந்த ஆண்டு பட்டாசு தட்டுப்பாடு ஏற்பட்டதுடன் விலையும் அதிகரித்துவிட்டது.

பட்டாசு முழுக்க கையினால் தயாரிக்கப்படுகிறது. தீப்பெட்டித் தொழிலில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இது போன்ற தொழிலாளர் பற்றாக்குறை ஏற்பட்டது. இதையடுத்து பல ஆலைகள் பகுதி இயந்திரமயமாக்கப்பட்டுள்ளதால் உற்பத்தி பெருகியதுடன் ஏற்றுமதியும் அதிகரித்துள்ளது. எனவே இப்போது தொழில் நலிவடைவதைத் தடுக்க பட்டாசு ஆலையில் இயந்திரமயமாக்கல் காலத்தின் கட்டாயம் என்றாகிவிட்டது.

சரவெடி பின்னுவதற்கு தொழிலாளர் கிடைக்காததால் இப்போது சரவெடி பட்டாசுக்கு கடும் தட்டுப்பாடு உள்ளது. சீனாவில் பட்டாசு தயாரிப்பில் இயந்திரம் புகுத்தப்பட்டு தொழில் வளர்ச்சி அடைந்து வருகிறது.

சிவகாசியில் கடந்த 3 ஆண்டுகளாக சீனத் தொழில்நுட்பத்தில் பட்டாசு தயாரிக்கப்பட்டு வருகிறது. அதே போல பட்டாசு ஆலைகளிலும் ஒரு சில பணிகளுக்கு இயந்திரத்தைப் பயன்படுத்தினால் தொழில் வளர்ச்சி அடைய வாய்ப்பு உள்ளது.

இது குறித்து விருதுநகர் மாவட்ட பட்டாசு மற்றும் திப்பெட்டி தொழிலாளர் சிஐடியு சங்கத் தலைவர் ஜே.லாசர் கூறியது:

பல தொழிலாளர்கள் வேறுபணிக்கு சென்றுவிட்டனர் என்பது உண்மைதான். பட்டாசு தொழிலாளர்களுக்கு கூலி குறைவாகக் கிடைக்கிறது. ஆண்களுக்கு தினசரி சம்பளமாக ரூ. 40, பெண்களுக்கு ரூ.30 தான் கிடைக்கிறது.

பட்டாசு தயாரிப்பில் ஒப்பந்தமுறை உள்ளது. பணிப் பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது. எனவே தொழிலாளர் தங்கள் தேவையை நிறைவேற்றும் பணிக்கு செல்லத் தொடங்கிவிட்டனர் என்றார்.

பட்டாசு ஆலை அதிபர் சீனிவாசன் கூறியது:

தீப்பெட்டி ஆலைகளில் இயந்திரம் வைக்க சட்டதிட்டங்கள் கடுமையாக இல்லை. பட்டாசு ஆலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களின் உயிருக்கும் உடைமைக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டியுள்ளது.

எனவே நினைத்தவுடன் இயந்திரத்தைப் பயன்படுத்த முடியாது. இயந்திரம் பயன்படுத்த வேண்டும் என்றால் மத்திய அரசின் வெடிபொருள் கட்டுப்பாட்டுத் துறையின் ஒப்புதல் பெற வேண்டும். அந்த இயந்திரத்தை அமைக்க ஆலையின் உள்கட்டமைப்பை மாற்ற வேண்டும். இது பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டுள்ளோருக்கு முடியாத காரியம். எனினும் படிப்படியாக இயந்திரமயமாக்க வேண்டும் என்றால் மத்திய அரசின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம் என்றார்.

Posted in Activists, Automation, Ban, Biz, Business, Child, Compensation, Crackers, Deepavali, Deepavalli, Diwali, Economy, employees, Factory, Fire works, Fireworks, Govt, Hours, Industrialization, Industry, Inhumane, Jobs, Labor, rules, Sector, Sivagasi, Sivakasi, Sparklers, Work, workers | Leave a Comment »

Diwali Releases – Tamil Cinema (Vel, Evano Oruvan, Machakkaran, Kannamoochi Yenada, Azhagiya Thamizhmagan, Polladhavan)

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 30, 2007

தீபாவளி படங்கள் ஒரு கண்ணோட்டம்

இந்த ஆண்டு தீபாவளிக்கு இறுதியாக 6 படங்கள் போட்டிக்குத் தயாராகியுள்ளன. இன்னும் சில படங்கள் வருமா வராதா என்ற நிலையில் உள்ளன. அழகிய தமிழ்மகன், வேல், எவனோ ஒருவன், கண்ணாமூச்சி ஏனடா, பொல்லாதவன், மச்சக்காரன் ஆகிய 6 படங்களில் தீபாவளி சரவெடியாய் வெடிக்கப்போகும் படம் எது என்பதை ரசிகர்கள்தான் சொல்ல வேண்டும்.

வேல்

“ஆறு’ படத்திற்குப் பிறகு ஹரியுடன் சூர்யா இணையும் படம். கஜினிக்குப் பிறகு இரு வேடங்களில் சூர்யா நடித்துள்ளார். “மிராண்டா மீனாட்சி’ என்ற கதாபாத்திரத்தில் தொகுப்பாளினியாக அசினும், வில்லனாக கலாபவன் மணி நடித்துள்ளனர். நாசர், லட்சுமி, சரண்யா ஆகியோரும் நடித்துள்ளனர். இசை யுவன் சங்கர் ராஜா. கிராமத்தில் அட்டகாசம் செய்யும் கலாபவன் மணியை சூர்யா எதிர்க்கிறார். இதனால் ஏற்படும் பிரச்னைகளை எப்படி சமாளிக்கிறார் என்பதே கதை.

மச்சக்காரன்

நான் அவனில்லை படத்திற்குப் பிறகு ஜீவன் நடிக்கும் படம். இதயத்திருடனுக்குப் பிறகு தமிழில் காம்னா நடித்திருக்கிறார். தோல்விகளையே சந்தித்த ஜீவன், காம்னாவைச் சந்தித்த பிறகு மச்சக்காரனாகிறார். அதன்பிறகு ஏற்படும் பிரச்னைகள்தான் கதை.

“கள்வனின் காதலியை’ இயக்கிய தமிழ்வாணன் இயக்கியுள்ளார். இசை யுவன்சங்கர் ராஜா.

கண்ணா மூச்சி ஏனடா

கண்ட நாள் முதல் படத்திற்குப் பிறகு பிரியா.வி இயக்கும் 2-வது படம். ராதிகாவின் ராடன் நிறுவனமும், யு.டி.வியும் இணைந்து தயாரித்துள்ள படம்.

சத்யராஜ்-ராதிகா தம்பதியின் மகளான சந்தியா, பிருத்திவிராஜை காதலிக்கிறார். சத்யராஜ் சம்மதம் தெரிவிக்க ராதிகா எதிர்கிறார். பிரச்னையில் இருவரும் பிரிய, தம்பதிகளை காதலர்கள் எப்படி சேர்த்து வைக்கிறார்கள் என்பதே கதை. நீண்ட நாள்களுக்குப் பிறகு ராதிகா பெரிய திரையில் வருகிறார். “அன்று வந்ததும் அதே நிலா’ பாடல் இதில் ரீமிக்ஸ் செய்யப்பட்டிருக்கிறது.

அழகிய தமிழ்மகன்

முதன்முறையாக விஜய் இருவேடங்களில் நடிக்கும் படம். சிவாஜிக்குப் பிறகு ஸ்ரேயா நடிக்கும் நேரடித் தமிழ்ப்படம். மசாலாவுக்காக நமீதாவும் விஜய்யுடன் இதில் ஜோடி சேருகிறார். எதிர்காலத்தில் நடக்கப்போகும் நிகழ்ச்சி முன்பாகவே தெரியும் குணாதிசயத்தோடு இருக்கிறார் விஜய். அதனால் ஏற்படும் பரபரப்புத் திருப்பங்களை சொல்வதுதான் படம். தரணியிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய பரதன் இயக்கியுள்ளார். “உதயா’வுக்குப் பிறகு விஜய்யின் படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார்.

பொல்லாதவன்

தனுஷ்-திவ்யா (குத்து ரம்யா) நடிக்க பாலுமகேந்திராவின் உதவியாளர் வெற்றிமாறன் படத்தை இயக்கியுள்ளார். நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த தனுஷ்க்கும் மேல் தட்டு மக்களைப்போல் வாழ வேண்டும் என ஆசை. அதை நிறைவேற்ற அவர் எடுக்கும் தந்திரங்கள்தான் பொல்லாதவனாக உருவாகியிருக்கிறது. தனுஷின் “திருவிளையாடல்’ இதிலும் தொடர்கிறது. ஜி.வி. பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். “வேட்டையாடு விளையாடு’வுக்குப் பிறகு டேனியல் பாலாஜி முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். நினைத்தாலே இனிக்கும் படத்தின் “எங்கேயும் எப்போதும்’ என்ற பாடல் இதில் ரீமிக்ஸ் செய்யப்பட்டிருக்கிறது.

எவனோ ஒருவன்

தேசிய விருது பெற்ற மராட்டிய படமான “டோம் பிவாலி பாஸ்ட்’ படம்தான் தமிழில் எவனோ ஒருவனாக உருவாகியிருக்கிறது; நிஷிகாந்த் காமத் இயக்கியுள்ளார். நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த ஒருவன் சமூக பிரச்னையில் சிக்குவதுதான் படம். படத்திற்கு வசனமும், தயாரிப்பும் மாதவனே. சங்கீதா ஜோடியாக நடித்திருக்கிறார். பள்ளிக்கூடத்திற்குப் பிறகு இயக்குநர் சீமான் இதிலும் தலைகாட்டியுள்ளார்.

பழனியப்பா கல்லூரி

கல்லூரி மாணவர்-மாணவிகளின் மூன்று வருட வாழ்க்கையைச் சித்திரிக்கும் படம் இது. பிரதீப், மது சாலினி, அர்ஜுமன் மொகல், அட்சயா ஆகிய புதுமுகங்கள் நடித்துள்ளார்கள். ஆர்.பவன் இயக்கியுள்ளார்.

இவை தவிர,

  • விக்ரம் நடித்த ‘பீமா,’
  • அஜீத் நடித்த ‘பில்லா’

ஆகிய இரண்டு படங்களும் தீபாவளிக்கு வெளிவரும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. இப்போது இவை இரண்டும் தீபாவளியைத் தாண்டி வெளியாகின்றன.

Posted in Ajith, Asin, Azhagiya Thamizhmagan, Cinema, Deepavali, Dhanush, Diwali, Evano Oruvan, Films, Kalainjar TV, Kannamoochi enada, Kannamoochi enadaa, Kannamoochi Yenada, Kannamoochi Yenadaa, Kodambakkam, Kollywood, Kuthu, Machakaran, Machakkaran, Madavan, Madhavan, Mathavan, Movies, Pollaadhavan, Polladahavan, Polladavan, Polladhavan, Pollathavan, Prithiviraj, Prithviraj, Priya, Radaan, radan, Radhika, Ramya, Releases, Rumya, Sandhya, Sangeetha, Sangitha, Sankeetha, Sathiaraj, Sathyaraj, Shreya, Shriya, Simbu, Sivaji, Soorya, Sriya, Sun, Surya, Thanush, TV, V Priya, Vel, Vijay | Leave a Comment »

New Tamil Movie releases – 2006 end of year Tamil Cinema Updates

Posted by Snapjudge மேல் நவம்பர் 13, 2006

தீபாவளி போட்டியில் இருந்து விலகிய 8 புதுப்படங்கள் இம்மாதம் ரிலீஸ்

தீபாவளிக்கு விஜயகாந்த் சரத்குமார், அஜீத், ஆர்யா படங்கள் ரிலீசாயின. இந்த படங்களுடன் மோதாமல் சில படங்கள் ரிலீஸ் தேதியை தள்ளிப்போட்டன. அதன்படி இம்மாதம் 8 படங்கள் ரிலீசாகின்றன. வாத்தியார், கிழக்கு கடற்கரை சாலை ஆகிய படங்கள் இன்று ரிலீசாயின.

`வாத்தியார்‘ தீபாவளிக்கு வர இருந்தது. சில பிரச்சினைகளால் கடைசி நேரத்தில் வெளிவராமல் நின்றது. பேச்சுவார்த்தைக்கு பின் சமரசம் ஏற்பட்டு ரிலீசாகியுள்ளது.

இந்த படத்தில் அர்ஜ×ன் கதாநாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக மல்லிகா கபூர் நடித்துள்ளார். அநியாயங்களை எதிர்க்கும் பள்ளிக்கூட ஆசிரியர் கதைதான் வாத்தியார். ஏ.வெங்கடேஷ் இயக்கியுள்ளார்.

கிழக்கு கடற்கரை சாலை படத்தில் ஸ்ரீகாந்த், பாவனா ஜோடியாக நடித்துள்ளார். இதில் ஸ்ரீகாந்த் பெட்ரோல் பங்க் ஊழியராக நடிக்கிறார். சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் பெரும் பகுதி படப்பிடிப்பு நடந்துள்ளது. ஒரு பாடலை வெளிநாட்டில் எடுக்க விரும்பினர். பாவனா கால்ஷீட் இல்லாததால் எடுக்க முடியவில்லை. ஸ்டான்லி இயக்கியுள்ளார்.

விஷால் நடித்த சிவப்பதிகாரம் படமும் இம்மாதம் ரிலீசாகிறது. ஏற்கனவே விஷால் நடித்த செல்லமே, சண்டைக்கோழி, திமிரு படங்கள் தொடர்ச்சியாக வென்றதால் இப்படமும் பரபரப்பாக எதிர்பார்க்கப்படுகிறது. ஜோடியாக மம்தா நடித்துள்ளார்.

குஷ்பு தயாரிப்பில் சுந்தர் சி இயக்கியுள்ள ரெண்டு படம் 17-ந் தேதி ரிலீசாகிறது. மாதவன் கதாநாயகனாக நடித்துள்ள இப்படத்தில் ரீமாசென், அனுஷ்கா என இரு நாயகிகள். சென்னையில் தீவுத்திடலில் `செட்’ போட்டு படப்பிடிப்பை நடத்தினர். இதில் ரீமாசென் கடல் கன்னியாக நடிக்கிறார்.

பரத் கதாநாயகனாக நடித்த வெயில் படமும் அதே 17-ந் தேதி ரிலீசாகிறது. ஜோடியாக பாவனா நடித்துள்ளார்.

இம்சை அரசன் 23-ம் புலிகேசி படத்துக்கு பிறகு இயக்குனர் ஷங்கர் இப்படத்தை தயாரித்துள்ளார். வசந்தபாலன் இயக்கியுள்ளார். விருதுநகர் பகுதியில் படப்பிடிப்பு நடந்தது. ஸ்ரேயா ரெட்டி, பசுபதி போன்றோரும் நடித்துள்ளனர்.

குழந்தை நட்சத்திரமான கல்யாணி கதாநாயகியாக நடித்த பிரதி ஞாயிறு 9 முதல் 10.30 வரை படமும், புதுமுகங்கள் நடித்துள்ள ஆவணி திங்கள் படமும் இம்மாதம் ரிலீசாகிறது.

பாலச்சந்தர் இயக்கியுள்ள `பொய்‘ படமும் இம்மாத ரிலீஸ் படங்கள் பட்டியலில் உள்ளது. இதில் உதய்கிரண், விமலாராமன் ஆகியோர் நடித்துள்ளனர். பிரகாஷ்ராஜ் இப்படத்தை தயாரித்துள்ளார்.

Posted in Aavani Thingal, Arjun, Balachander, Bhawana, Deepavali, Diwali, East Coast Road, ECR, Imsai Arasan, izhakku Kadarkarai Salai, K Balachandar, KB, Movie Previews, New Films, Pasupathy, Poi, Prakashraj, Reema Sen, Rendu, Shreya Reddy, Sivappathigaram, Sivappathikaram, Srikanth, Sundar C, Sunday 9 to 10:30, Tamil, Tamil Cinema, Tamil Film, Tamil Movies, Thamizh padam, Vaathiyaar, Vasanthabalan, Veyyil, Vishal | Leave a Comment »

Dharmupuri & Vaathiyaar : Deepavali Tamil Cinema

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 16, 2006

சினிமா
தீபாவளி திரைப்படங்கள் ஒரு முன்னோட்டம்

இந்த வருட தீபாவளிப் பண்டிகைக்கு

  1. விஜயகாந்த்,
  2. சரத்குமார்,
  3. அர்ஜுன்,
  4. அஜித்,
  5. சிம்பு,
  6. ஜீவா,
  7. ஆர்யா

ஆகியோர் நடித்த ஏழு படங்கள் திரைக்கு வருகின்றன. கமல், ரஜினி, விக்ரம், விஜய், சூர்யா, த்ரிஷா ஆகியோ ரின் படங்கள் இந்த தீபாவளிக்கு வெளிவரவில்லை. தீபாவளிக்கு வெளிவரும் ஏழு படங்களில் மூன்றில் நயன்தாரா கதாநாயகியாக நடித்துள்ளார்.

மற்ற படங்களில்

  1. அஸின்,
  2. ரீமாசென்,
  3. சந்தியா,
  4. லஷ்மிராய்,
  5. கனிகா,
  6. மல்லிகா கபூர்,
  7. கீரத், அதிசயா ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். தீபாவளிப் படங்களைப் பற்றிய ஒரு சிறு முன்னோட்டம்…

தர்மபுரி

விஜயகாந்த், லஷ்மிராய், விஜயகுமார், மணிவண்ணன், ராஜ்கபூர், எம்.எஸ்.பாஸ்கர், பாபி, மனோபாலா, சுமித்ரா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தர்மபுரியில் சமையல் பாத்திரங்களை வாடகைக்கு விடு பவராக நடித்துள்ளார் விஜயகாந்த். தான் உண்டு; தன் வேலையுண்டு என வாழ்ந்து வரும் அவருக்கு ஊரிலுள்ள பெரிய மனிதர்களால் சில பிரச்சினைகள் ஏற்படுகின்றன. அவற்றை தன்னுடைய வசனங்களாலும், வலுவான கால்களாலும் எதிர்கொண்டு எப்படி ஜெயிக்கிறார் என்பதே கதை.

காதல், சென்டிமெண்ட், காமெடி இவற்றினூடே சிறிது அரசியல் என அனைத்து ஜனரஞ்சக அம்சங்களோ டும் படம் உருவாக்கப்பட்டிருக்கிறது.

இசை -ஸ்ரீகாந்த் தேவா.

கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், இயக்கம் – பேரரசு.

தயாரிப்பு -ஸ்ரீசூர்யா மூவிஸ் சார்பாக ஏ.எம்.ரத் னம்.

மக்கள் தொடர்பு -நெல்லை சுந்தர்ராஜன்.

வாத்தியார்
அர்ஜுன், மல் லிகா கபூர், பிரகாஷ்ராஜ், வடி வேலு, மணிவண்ணன், தலைவாசல் விஜய், முத்துக்காளை, சிங்கமுத்து, அல்வா வாசு, பிரதீப் ராவத் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அர்ஜுன் நேர்மையான பள்ளி ஆசிரியர். ஆசிரியர் பணியை சேவையாக நினைத்து வாழ்ந்துவருகிறார். இந்த நேரத்தில் அவருக்கு சில அரசியல் குறுக் கீடுகள் ஏற்படுகின்றன. குறுக்கு வழியில் முதலமைச்சர் ஆக வேண்டும் என்ற எண்ணத்தில் அரசியல்வாதி ஒருவர் சமூகத்துக் குப் புறம்பான காரியங்களில் ஈடுபடுகிறார்.

அவருடைய முயற் சியை அர்ஜுன் புத்திசாலித்தனமாக முறியடிக்கிறார். அர்ஜுன் படங்களுக்கேயுரிய ஆக்ஷன் காட்சிகளும், வடிவேலுவின் காமெ டியும் படத்துக்கு பலம்.

கதை -அர்ஜுன்.

வசனம் -ஜி.கே.கோபி நாத்.

இசை -இமான்.

ஒளிப்பதிவு -கே.எஸ்.செல்வராஜ்.

கலை -சங் கர்பாபு.

படத்தொகுப்பு -வி.டி.விஜயன்.

திரைக்கதை, இயக்கம் – ஏ.வெங்கடேஷ்.

தயாரிப்பு -ஏ.பி.ஃபிலிம் கார்டன் சார்பில் வி.பழ னிவேல், ஏ.சி.ஆனந்தன்.

மக்கள் தொடர்பு -மெüனம் ரவி.

Posted in Arjun, Captain, Cinema, Deepavali, Dharmupuri, Diwali, Movies, Tamil Padam, Thamizh, Vaathiyaar, Vijayganth | 1 Comment »

Diwali Tamil Release Movies – Maalaimalar.com

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 8, 2006

Added Later:
திரை விமர்சனம்: வல்லவன்மீனாக்ஸ் | Meenaks

Vallavan – Film Review « விழியன் பக்கம்

The Phoenix Arises: Vallavan: First day, first show

Desicritics.org: Movie Review: Vallavan: Melodrama of the Twisted Kind

ஒரு படம் » Blog Archive » வரலாறு [Godfather]

அண்ணாகண்ணன் வெளி: தலைமகன் – திரை விமர்சனம்

ஏதோ சொல்கிறேன்!!! ( Etho Solkiren!!! )

சும்மா டைம் பாஸ் மச்சி…..: – திரை விமர்சனம்

தீபாவளி விருந்தாக 7 புதிய படங்கள்

தீபாவளி விருந்தாக 7 புதிய படங்கள் திரைக்கு வருகின்றன. அந்த படங்கள் வருமாறு:-

1. தர்மபுரி:- விஜயகாந்த் கதாநாயகனாக நடித்து, பேரரசு டைரக்டு செய்த படம். கதாநாயகி, லட்சுமிராய். இந்த படத்தில் விஜயகாந்த் திருமண மண்டபங்களுக்கு நாற்காலி-மேஜைகளை வாடகைக்கு விடுபவராக வருகிறார். மணிவண்ணன், பிரகாஷ்ரெட்டி (தெலுங்கு), ராஜ்கபூர், பாபி ஆகிய 4 பேரும் வில்லன்களாக வருகிறார்கள்.

கெட்டது பண்ணப்போனால் 40 பேர் கூட வருவார்கள். நல்லது பண்ணப்போகும்போது 4 பேர் எதிரியாக வருவார்கள். அவர்களை மீறி, கதாநாயகன் எப்படி ஜனங்களுக்கு நன்மை செய்கிறார் என்பதே கதை.

2. தலைமகன்:- சரத்குமார் கதாநாயகனாக நடித்து, டைரக்டு செய்த படம். அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து இருக்கிறார். தண்ணீர் பிரச்சினைதான் இந்த படத்தின் மைய கரு.

படத்தில், சரத்குமார் பத்திரிகை ஆசிரியராக வருகிறார். நேர்மையாகவும், துணிச்சலாகவும் பத்திரிகை நடத்தும் அவரையும், பத்திரிகையையும் அழிப்பதற்கு ஒரு கும்பல் முயற்சிக்கிறது. அந்த கும்பலின் சதித்திட்டங்களை, சரத்குமார் எப்படி முறியடிக்கிறார்? என்பது கதை.

3. வரலாறு:- அஜீத்குமார் நடித்த `காட்பாதர்’ படம்தான், `வரலாறு’ என பெயர் மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த படத்தில் அஜீத் 3 வேடங்களில் நடித்து இருக்கிறார். கே.எஸ்.ரவிகுமார் டைரக்டு செய்து இருக்கிறார்.

அஜீத், ஒரு பரதநாட்டிய கலைஞர். நடனம் ஆடி ஆடி, அவருடைய தோற்றத்தில் பெண்மைத்தனமும், நளினமும் வந்து விடுகிறது. அவருக்கு, கனிகாவை பெண் கேட்கிறார்கள். “பார்ப்பதற்கு பொம்பளை மாதிரி இருக்கும் இவருக்கு நான் எப்படி மனைவியாகி, குழந்தை பெறுவது?” என்று கனிகா அவமரியாதை செய்து விடுகிறார். அவரை, அஜீத் கடத்திப்போய் கற்பழித்து விடுகிறார். கனிகாவுக்கு பிரசவத்தில் இரண்டு ஆண் குழந்தைகள் பிறக்கின்றன. அதில் ஒருவன் தாதாவாகவும், இன்னொருவன் அந்த தாதாவை எதிர்த்து நிற்கும் நல்லவனாகவும் வளர்கிறார்கள். இப்படி போகிறது, `வரலாறு’ படத்தின் கதை.

4. வல்லவன்:- சிலம்பரசன் கதாநாயகனாக நடித்து, டைரக்டு செய்த படம். அவருக்கு ஜோடியாக நயன்தாரா, ரீமாசென், சந்தியா ஆகிய 3 கதாநாயகிகள் நடித்து இருக்கிறார்கள்.

ஒரு கல்லூரி பின்னணியில் அமைந்த கதை. சிலம்பரசன் கல்லூரி மாணவராக வருகிறார். கதைப்படி, ரீமாசென் ஏறக்குறைய வில்லி. `படையப்பா’ படத்தில் ரஜினிகாந்தும், ரம்யாகிருஷ்ணனும் அடிக்கடி மோதிக்கொள்வது போல், இந்த படத்தில் சிலம்பரசனும், ரீமாசென்னும் மோதிக்கொள்கிறார்கள். இந்த மோதலில், யார் ஜெயிக்கிறார்கள்? என்பதே கதை.

5. வாத்தியார்:- அர்ஜ×ன் நடித்த படம். அவருக்கு ஜோடி, புதுமுகம் சுஜா. இந்த படத்தை ஏ.வெங்கடேஷ் டைரக்டு செய்து இருக்கிறார்.

ஒரு மோசமான அரசியல்வாதி தனது சுயநலத்துக்காக, ஒரு பள்ளிக்கூடத்துக்கு தீ வைக்கிறான். அந்த விபத்தில் அப்பாவி மாணவ-மாணவிகள் கருகி பலியாகிறார்கள். இதை நேரில் பார்க்கும் பள்ளிக்கூட ஆசிரியர் அர்ஜ×ன், அந்த அரசியல்வாதியை பழிவாங்குவதற்காக தாதாவாக மாறுகிறார். அந்த அரசியல்வாதி, முதல்-அமைச்சர் ஆவதற்காக கனவு காண்கிறான். அவனுடைய ஒவ்வொரு முயற்சிகளையும் முறியடித்துக் காட்டுகிறார், அர்ஜ×ன்.

6. வட்டாரம்:- ஆர்யா நடித்து, சரண் டைரக்டு செய்த படம். இந்த படத்தில் அர்ஜ×ன் ஜோடியாக புதுமுகங்கள் கீரத் பட்டேல், அதிசயா ஆகிய இருவரும் நடித்து இருக்கிறார்கள்.

அவன் பெயர், `பர்மா.’ வெளிநாட்டில் இருந்து துப்பாக்கிகளை வரவழைத்து விற்பனை செய்வது இவன் தொழில். இவனுடைய வாழ்க்கையில் மூன்று எதிரிகள் குறுக்கிடுகிறார்கள். அவர்களை, பர்மா எப்படி எதிர்கொண்டு வெற்றி பெறுகிறான்? என்பது கதை.

7. :- ஜீவா கதாநாயகனாக நடித்த படம். கதாநாயகி, நயன்தாரா. `இயற்கை’ படத்தை இயக்கிய ஜனநாதன் டைரக்டு செய்து இருக்கிறார்.

மாநகராட்சியில், கொசுக்களை ஒழிக்க மருந்து அடிக்கும் அடிமட்ட தொழிலாளி அவன். அப்பாவியான அவன், அரிவாள் தூக்கவேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. அது ஏன்? என்பதை `சஸ்பென்சாக’ வைத்து இருக்கிறார்கள்.

Posted in Ajith, Arjun, Arya, Deepavali, Dharmapuri, Diwali, E, Godfather, Jeeva, New Films, Sarathkumar, Tamil Movies, Vaathiyaar, Vallavan, Varalaaru, Vattaram, Vijayganth | 27 Comments »