Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Dinagaran’ Category

Dinamalar ‘Andhumani’ Ramesh vs Dinakaran & Sun TV Uma – Saga, Sexual Harassment

Posted by Snapjudge மேல் ஜூலை 18, 2007

தினகரனுக்கு டிமிக்கி கொடுத்த அந்துமணி ரமேஷ்

Full Resignation letter Uma Dinakaran Dinamalar Ramesh andhumani lens mama imbroglio allegationசற்றுமுன்…: தினமலர் நிர்வாகி “அந்துமணி” ரமேஷ் மீது பாலியல் புகார்

சற்றுமுன்…: உமா நடத்தும் பித்தலாட்ட நாடகம் – “தினமலர்” சட்டபூர்வமாக சந்திக்கும்

சற்றுமுன்…: “அந்துமணி” ரமேஷ் பாலியல் புகார் – சன் செய்திகள் வீடியோ

‘Andhumani’ in Abusive SMS Scam « Views and Reviews

Dinamalar strikes back refuting alleged charges as false claims on political moves « Views and Reviews

சும்மா டைம் பாஸ் மச்சி…..: தினமலர் ரமேஷ் சார்!

ஓசை செல்லாவின் செக்ஸ் SMS புகழ் அந்துமணி … பா.கே.ப.ஓ!!

காசிப்ஸ்: தினமலர் – தினகரன் மோதல் பிண்ணனி!

எனக்கு தெரிந்தது…: தினமலர், தினகரன், சன் டிவி நிறுவனஊழியர்களிடம் ஓர் “”மறைமுக” நேர்காணல்…

PRINCENRSAMA: ிழிந்து தொங்கும் ‘அந்துமணி’ முகமூடி!

real_not_ reel: முதலாளிகள் பார்ப்பனர்களாக இருந்தால் அது பார்ப்பன பத்திரிகை என்று முத்திரை குத்துவதா?

சற்றுமுன்…: தினமலர் ரமேஷ் மீது கிரிமினல் வழக்கு பதிவு

——————————————————————————————-

பெண் நிருபருக்கு செக்ஸ் தொல்லை தினமலர் ரமேஷ் மீது நடவடிக்கை

மாதர்சம்மேளனம் இன்று ஆலோசனை

சென்னை, ஜூலை 17: தினமலர் நாளேட்டின் ஆசிரியர் இரா.கிருஷ்ணமூர்த்தியின் மகனும் அலுவலக நிர்வாகியுமான ரமேஷ் மீது கூறப்பட்டுள்ள பாலியல் குற்றச்சாட்டு பற்றி வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மகளிர் அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன.
ரமேஷின் தொல்லை தாங்க முடியவில்லை
தினமலர் நாளிதழில் நிருபராக பணியாற்றிய உமா(28), அடையாறு காவல் நிலையத்தில் 13ம் தேதி ஒரு புகார் கொடுத்தார். அதில், ‘தினமலர் நாளிதழில் ஏழு ஆண்டுகளாக நிருபராக பணியாற்றினேன். கடந்த ஒன்றரை ஆண்டுகளாக என் செல்போனுக்கு ஆபாச எஸ்.எம்.எஸ். வந்து கொண்டே இருந்தது. தினமலர் நிர்வாகி ரமேஷ்தான் இவ்வாறு செய்துள்ளார். இவர் தினமலர் ஆசிரியர் இரா.கிருஷ்ணமூர்த்தியின் மகன். இவரதுRamesh Dinakaran Dinamalar Ramesh andhumani lens mama imbroglio allegation தொல்லை தாங்காமல்தான் 3 மாதம் முன்பு ராஜினாமா செய்தேன். இப்போது தனியார் மருத்துவமனையில் வேலை செய்கிறேன். இப்போது, Ôஉன்னையும் உன் குடும்பத்தையும் கஞ்சா வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்து விடுவேன். உயிருடன் கொளுத்தி விடுவேன்Õ என்று மிரட்டுகின்றனர். எனக்கு பாதுகாப்பு வேண்டும்’ என்று கூறியுள்ளார்.
பெண் ஊழியரை பத்திரிகை முதலாளியே பாலியல் ரீதியாக துன்புறுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தினமலர் ஆசிரியரின் மகன் ரமேஷ§க்கு மகளிர் அமைப்புகள் பலத்த கண்டனம் தெரிவித்துள்ளன. அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் உ.வாசுகி கூறியதாவது:

7 மணி தாண்டிய பின்
விதிமீறிய போலீஸ்
யாரோ கொடுத்த ஏதோ ஒரு புகார் என்ற பெயரில் உமாவையும், எஸ்.டி.டி. பூத்தில் பணியாற்றும் பெண்ணையும் இரவு நேரத்தில் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றுள்ளனர். இதுவே தவறானது. இரவு 7 மணிக்கு மேல் காவல் நிலையத்துக்கு பெண்களை அழைத்துச் செல்லக் கூடாது என்ற விதியை போலீசார் காற்றில் பறக்க விட்டுள்ளனர்.

பணியிடங்களில் பாலியல் துன்புறுத்தல்களை தடுப்பது தொடர்பாக உச்சநீதிமன்றம் சில வழிகாட்டுதல்களை அளித்துள்ளது. அதன் அடிப்படையில், பல அலுவலகங்களில் பாலியல் புகார் விசாரணைக் குழுக்கள் அமைக் கப்பட்டுள்ளன. சட்டப்படியான இந்த ஏற்பாட்டில் பத்திரிகை அலுவலகங்களுக்கு விதிவிலக்கு கிடையாது.
முதலாளியை யார் மிரட்ட முடியும்?

ஒரு பத்திரிகையின் நிர்வாகிக்கும், அந்த அலுவலகத்தில் பணியாற்றுபவர்களுக்கும் உமா கொலை மிரட்டல் விடுத்தார் என்ற குற்றச்சாட்டு நம்பும்படியாக இல்லை. எந்தவித பண பலமும், செல்வாக்கும் இல்லாத ஒரு பெண்ணால், ஒரு பத்திரிகையின் முதலாளியை எப்படி மிரட்ட முடியும்? உமா மீதான இத்தகைய குற்றச்சாட்டு ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது.

7 வருடமாக எப்படி நீடித்தார்?
உமா மனநிலை சரியில்லாதவர் என்று தினமலர் நிர்வாகத்தின் பெயரில் பத்திரிகைகளில் விளம்பரம் பிரசுரிக்கப்பட்டுள்ளது. பாலியல் கொடுமைக்கு ஆளாகும் பெண் அதை வெளியே சொல்லாமல் சகித்துக் கொள்ளும் கோழைத் தனத்தை உதறிவிட்டு, நீதி கேட்டு பகிரங்கமாகப் போராடத் துணிந்தால் அவள் நடத்தை கெட்டவள், மனநிலை சரியில்லாதவள் என்று எளிதில் குற்றம் சுமத்தி விடுவார்கள் என்பதை தொடர்ந்து பல வழக்குகளில் பார்த்திருக்கிறோம். இப்போதும் அதுதான் நடக்கிறது. உமா மனநிலை சரியில்லாதவர் என்றால் தினமலர் நிருபராக 7 ஆண்டுகள் வேலை செய்ய அவரை எப்படி அனுமதித்தனர்? இப்போது பணி புரியும் புதிய இடத்தில் அவர் எப்படி சேர்ந்திருக்க முடியும்? இந்தக் கேள்விகளுக்கு சம்பந்தப்பட்டவர்கள் பதில் சொல்ல முடியுமா?

அதற்கும் இவரே
காரணமாவார்
தினமலர் நிர்வாகம் சொல்வதுபோல ஒரு வேளை உண்மையிலேயே உமாவின் மனநிலை பாதிக்கப்பட்டிருந்தால், அதற்குக் காரணம் சம்பந்தப்பட்டவர்களால் அவருக்கு கொடுக்கப்பட்ட பாலியல் தொல்லைதான் என்று கூறலாம். தொடர்ந்து பாலியல் தொந்தரவுக்கு ஆளாகும் பெண்களுக்கு கடுமையாக மனஉளைச்சல் ஏற்படும் என்பது எதார்த்தமானது. எனவே, உமா கொடுத்த புகார் மீது காவல்துறை தாமதமின்றி விசாரணை நடத்த வேண்டும்.

இவ்வாறு வாசுகி கூறினார்.

இந்திய தேசிய மாதர் சம்மேளனத்தின் மாநிலத் தலைவர் ஆர்.சுசீலா கூறியதாவது:
பணியிடங்களில் பல பெண்கள் பாலியல் தொல்லைகளுக்கு ஆளாகின்றனர். ஆனால், பெரும்பாலான பெண்கள் வெளியில் சொல்வதில்லை. சில பெண்கள் மட்டுமே துணிச்சலுடன் வெளியே சொல்ல முன்வருகின்றனர். தினமலர் நிர்வாகியே தன்னை பாலியல் தொந்தரவு செய்ததாக உமா கூறியுள்ளார். இவ்வளவு தைரியமாக அவர் வெளியே சொல்லி இருக்கிறார் என்றால், அதில் நிச்சயம் உண்மை இருக்கும். இப்புகார் மீது காவல்துறை உரிய விசாரணை நடத்தி, ரமேஷ் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒரு பத்திரிகை முதலாளி மீது குற்றச்சாட்டு கூறியிருக்கும் பெண்ணுக்கு அச்சுறுத்தல் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. எனவே, உமாவுக்கு உரிய போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும்.

இவ்வாறு சுசீலா கூறினார்.

இந்திய கம்யூனிஸ்ட் எம்எல்ஏ பத்மாவதி கூறியதாவது:
பாதுகாப்பு அளிக்க வேண்டும்
பணியிடங்களில் பெண்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாவது பற்றி புகார் கொடுத்தால் காவல் துறையினர் அக்கறை செலுத்துவதில்லை. போராட்டம் நடத்திய பிறகுதான் புகார் மீது நடவடிக்கை எடுப்பது என்பது காவல்துறையின் வாடிக்கையாகிவிட்டது. மாதர் சம்மேளனத்தின் மாநில நிர்வாகக்குழு கூட்டம், 17ம் தேதி சென்னையில் நடக்கிறது. இந்த விஷயத்தில் அடுத்த நடவடிக்கை குறித்து அதில் முடிவு எடுப்போம்.
இவ்வாறு பத்மாவதி கூறினார்.

————————————————————————————————————————-

மற்றவர்கள் மீது அவதூறு பரப்புவதே இவர்களின் தொழில்

வேண்டாதவர்கள் மீது அவது£று பரப்புவது என்பது தினமலர் நிர்வாகத்துக்கு கைவந்த கலை என்பதை தமிழக மக்கள் அனைவரும் நன்றாக அறிவார்கள். பெண் நிருபர் உமா, தமக்கு தினமலர் உரிமையாளர் ஆபாச எஸ்.எம்.எஸ்.களை அனுப்புகிறார் என்று புகார் கூறியதும், அதனை மறுப்பதோடு நிறுத்திக் கொள்ளாமல், புகார் கூறிய உமா மனநிலை சரியில்லாதவர் எUma Dinakaran Dinamalar Ramesh andhumani lens mama imbroglio allegationன்று அவது£றுகளை பரப்புவதே இதற்கு உதாரணம்.

தமிழர் தந்தை என்று அனைவராலும் போற்றப்பட்டவர் தினத்தந்தி நிறுவனர் சி.பா.ஆதித்தனார். தொழில் போட்டியில் வெற்றிபெற முடியாத ஆத்திரத்தில், தினத்தந்தி பத்திரிகையின் நிறுவனர் என்ற ஒரே காரணத்துக்காக ஆதித்தனாரைப் பற்றி அவது£றாக கேலி செய்து செய்தி வெளியிட்டு பின்னர் தினமலர் வாங்கிக் கட்டிக்கொண்டதையும் யாரும் மறந்திருக்க முடியாது.

தினமலருக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்றதற்காக மூன்று முறை தேசிய விருது பெற்ற கவிஞர் வைரமுத்துவை கிண்டலான அடைமொழியோடு தினமலர் பல ஆண்டுகள் கேலி செய்து வந்தது.

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் விளம்பரங்கள் தினமலருக்கு தரப்படவில்லை என்ற ஆத்திரத்தில் பல்கலைக்கழக துணைவேந்தர் பற்றி தவறான செய்திகளை வெளியிட்டு பிளாக்மெயில் செய்ததும், பின்னர் துணைவேந்தரே தினமலரின் உள்நோக்கம் பற்றி பத்திரிகைகளுக்கு பேட்டி கொடுத்ததும் தினமலரின் விஷமத்தனத்தை அம்பலப்படுத்தியதும் தினமலரின் மோசடித்தனத்துக்கு ஒரு உதாரணம்.

கொள்கை ரீதியாக தன்னால் ஏற்றுக்கொள்ள முடியாத அரசியல் கட்சிகளையும் குறிப்பாக தமிழக தலைவர்களையும் தரக்குறைவாக விமர்சிப்பதும், அவர்களின் பெயர்களை சுருக்கி அவர்களை கேலி கிண்டல் செய்வதும் தினமலருக்கு வாடிக்கையான ஒன்று.
திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான கருணாநிதியை பற்றி நீண்ட நெடுங்காலமாக அவது£று செய்திகளை வெளியிட்டு ஆனந்தப்பட்டது தினமலர்.
பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ், விடுதலைச் சிறுத்தைகள் பொதுச்செயலாளர்திருமாவளவன் போன்றவர்களை பற்றியும் அவது£று பரப்ப தவறியதில்லை.

தமிழகம் போற்றும் பேரறிஞர் அண்ணாவை இன்றுவரை ‘அண்ணாதுரை’ என்றே குறிப்பிட்டு எழுதும் தினமலர் நிர்வாகம், பலமுறை கண்டனங்கள் எழுந்தபோதும் தன் போக்கை மாற்றிக்கொள்ளவில்லை.

தமிழக அரசியல் தலைவர்கள் மட்டுமல்லாமல், தமிழ் திரைப்பட கலைஞர்களும் தினமலரில் கேலி, கிண்டல், அவது£றுகளுக்கு தப்பவில்லை.

தொடர்ந்து தமிழ் திரைப்படக் கலைஞர்களை கேலி கிண்டல் செய்து அவர்களின் மனம் புண்படும்படி செய்திகளை வெளியிட்ட பெருமை தினமலருக்கு உண்டு. நடிகர் திலகம் சிவாஜி கணேசன் துவங்கி சிபி வரைக்கும் அத்தனை கலைஞர்களையும் காயப்படுத்தி வருகிறது தினமலர்.

காலங்காலமாக தமிழ் தலைவர்களையும், கலைஞர்களையும், எழுத்தாளர்களையும் அவது£றாக விமர்சித்து எழுதி வந்த தினமலர் தற்போது அந்தரங்க அசிங்கங்களை அம்பலப்படுத்திய உமா மீது அவது£றுகளை அள்ளிவீசுவதொன்றும் ஆச்சரியமில்லை.
பாரம்பரியமிக்க நிறுவனம் என்று தங்களை சொல்லிக்கொண்டு பத்திரிகை பலத்தை தவறாக பயன்படுத்தி வரும் தினமலர் நிர்வாகம் தன் தவறுகளை உணர்ந்து திருந்தி பாவ விமோசனம் தேடாமல் மற்றவர்கள் மீது குற்றம் சுமத்தி விளக்கம் அளிப்பது பிரச்னையை திசை திருப்பி குற்றச்சாட்டில் இருந்து தப்பியோடும் முயற்சியாகும்.

மேலும், தினமலர் உரிமையாளரின் பாலியல் தொல்லைகள் குறித்த புகார்கள் தினகரனில் செய்தி வெளிவந்ததும் அதிர்ச்சியூட்டும் தகவல்கள் பல தினகரன் அலுவலகத்தை தேடிவந்தன.

தினமலர் இதழின் ஞாயிற்றுக்கிழமை இணைப்பான வாரமலரில் அவ்வப்போது ‘தொழில் அதிபருக்கு பெண் கம்பேனியன் தேவை’ என்ற விளம்பரத்தின் மறுபக்க மர்மம் அவற்றில் ஒன்று.

இவ்வாறு வரும் விளம்பரங்களின் பின்னணியில் இருந்தது யார் என்பதும், போலி விளம்பரங்கள் கொடுத்து பல பெண்களை வளைத்த கதைகளும் எங்களின் நேரடி கவனத்திற்கே வந்தது. இவ்வாறு விளம்பரம் கொடுத்த, சென்னை கே.கே.நகரைச் சேர்ந்த பெண் பத்திரிகையாளர் ஒருவரை, அவர் தங்கியிருந்த விடுதிக்கு, நிர்வாகியே நேரில் வந்து பெண் பார்த்த கதையையும் சம்மந்தப்பட்ட பெண்ணே நம்மிடம் நேரடியாக தெரிவித்திருக்கிறார்.

இது பற்றியும் நாம் விரிவாக விசாரித்து வருகிறோம். எனவே தினமலர் நிர்வாகம் இனிமேலாவது மற்றவர்கள் மீது பாய்வதை விட்டுவிட்டு தன் தவறுகளுக்கு பிராயச்சித்தம் தேடிக்கொள்ள வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாகும்.

——————————————————————————————————————

மாதர் சம்மேளனம் ஆதரவு

Abuse Uma Harassment Dinakaran Dinamalar Ramesh andhumani lens mama imbroglio allegation
இந்திய தேசிய மாதர் சம்மேளனத்தின் மாநிலக்குழு கூட்டம், சென்னை தி.நகர் பாலன் இல்லத்தில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு மாநிலத் தலைவர் ஆர்.சுசீலா தலைமை வகித்தார். மாநிலச் செயலாளர் பத்மாவதி எம்.எல்.ஏ., மற்றும் மாநிலக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தின் முடிவு குறித்து தலைவர் சுசீலா கூறியதாவது:

தினமலர் பத்திரிகை உரிமையாளர் ரமேஷ், தனக்கு பாலியல் ரீதியாக துன்புறுத்தியாக அப்பத்திரிகையில் நிருபராக பணியாற்றிய உமா புகார் கூறியுள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக ஏற்கனவே கண்டனம் தெரிவித்துள்ளோம். இந்த விஷயம் குறித்து மாநிலக்குழு கூட்டத்தில் விரிவாக விவாதித்தோம். இப்பிரச்னையில் உமாவுக்கு ஆதரவு கொடுத்து போராடுவோம். இதில், அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து சம்மேளனத்தின் மாநில நிர்வாகிகள் கூடி விரைவில் முடிவு செய்வோம்.
இவ்வாறு சுசீலா கூறினார்.

——————————————————————————————————————

பட்டியலிட்டு உமா கண்ணீர் தினமலர் ரமேஷ் செய்த கொடுமைகள்

சென்னை, ஜூலை 18: ஆபாச எஸ்எம்எஸ் அனுப்பி செக்ஸ் தொல்லை கொடுத்தது மட்டுமின்றி கீழ்த்தரமான முறையில் தனக்கு பல கொடுமைகளை தினமலர் நிர்வாகி ரமேஷ் செய்ததாக முன்னாள் பெண் நிருபர் உமா கண்ணீருடன் பட்டியலிட்டுள்ளார். தினமலரில் பணியாற்றிய பலர் கசப்பான அனுபவங்களால்தான் அங்கிருந்து வெளியேறி உள்ளனர். அவர்களிடம் விசாரித்தால் பல உண்மைகள் வெளிவரும் என்றும் அவர் தெரிவித்தார்.

தினமலர் ஆசிரியர் ஆர்.கிருஷ்ணமூர்த்தியின் மூத்த மகனும், அலுவலக நிர்வாகியுமான ரமேஷ் தனக்கு ஆபாச எஸ்எம்எஸ் அனுப்பி செக்ஸ் தொல்லை கொடுத்ததாக பெண் நிருபர் உமா புகார் கொடுத்திருக்கிறார். அவர், நிருபர்களிடம் நேற்று கூறியதாவது:
ரமேஷ் பற்றிய உண்மைகளை வெளியில் சொன்னதால் தினமும் என்னைப் பற்றிய அவதூறு தகவல்களை தினமலர் நிர்வாகம் பரப்பி வருகிறது.

தினமலரில் நான் பணியாற்றியபோது பல தவறுகளை செய்ததாகவும், அப்போதெல்லாம் அழுது மன்னிப்பு கேட்டதாகவும் கூறியுள்ளனர். ஆனால், நான் சிறப்பாக பணியாற்றுகிறேன் என்று ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தியே பல நேரங்களில் என்னை பாராட்டியுள்ளார். செய்திப் பிரிவிலும் எனக்கு நல்ல பெயர்தான் இருந்தது.

தினமலரில் நிருபர்களாக இருப்பவர்களுக்கு செய்தி சேகரிக்கும் பணியைவிட நிர்வாகத்தினரின் குடும்ப வேலைகளைத்தான் அதிகம் கொடுத்துள்ளனர். நானும் அப்படித்தான் அவர்களின் குடும்பத்தினர், உறவினர், நண்பர்களுக்கே அதிக நேரம் வேலை செய்தேன். அங்கு முறையான வேலை நேரம் என்பது கிடையாது. ஒவ்வொரு வேலைகளையும் விசுவாசமாகத்தான் செய்து கொடுத்தேன்.

பணியில் தவறு செய்திருந்தால் எனக்கு மெமோ கொடுக்க வேண்டியதுதானே. இதுவரை நான் அங்கு எந்த மெமோவும் வாங்கியதில்லை. மெமோ கொடுக்காமல் எப்படி நான் மன்னிப்பு கேட்டதாக கூற முடியும்?

கடந்த 4 ஆண்டுகளுக்கு முன், ஜெயா டி.வி.க்கு விண்ணப்பித்தேன் என்ற காரணத்துக்காக என்னை வடசென்னைக்கு டிரான்ஸ்பர் செய்தார்கள். 50 ஆண்டு பாரம்பரியம் என்று கூறும் தினமலரில் ஊழியர்கள் அடிமையாக நடத்தப்படுவதுதான் உண்மை.
ஆபாச எஸ்.எம்.எஸ். அனுப்பி தொல்லை கொடுத்ததோடு ரமேஷ் நிற்கவில்லை.

வெளியில் சொல்லவே நா கூசுகின்ற பல கீழ்த்தரமான நடவடிக்கைகளில் இறங்கி என்னை நோகடித்திருக்கிறார். மேலும், என் வண்டியை பஞ்சர் செய்வது, வண்டியின் சீட்டை கிழிப்பது, செருப்பை பையில் போட்டு வண்டியில் மாட்டுவது போன்ற அற்பத்தனமான காரியங்களையும் அரங்கேற்றினார். வீட்டில் நான் என்ன பேசுகிறேன் என்று கண்காணிக்க ஆள் அனுப்புவது, என்னைப் பற்றி ஆபீசில் ஆபாசமாக பேசுவது, வெவ்வேறு எண்களில் இருந்து ஆபாச எஸ்எம்எஸ் அனுப்புவது என்று ரமேஷ் செய்த கொடுமைகள் ஏராளம்.

நான் மிகவும் அவமானப்படுத்தப்பட்டேன். எல்லாவற்றையும் பொறுத்துக் கொண்டுதான் வேலை செய்தேன். ரமேஷின் தொல்லைகள் பற்றி செய்திப் பிரிவில் உள்ளவர்களிடம் பல முறை சொல்லி அழுதேன். அவர்களும், போராடுங்கள் என்று கூறி என்னை தேற்ற முயற்சி செய்வார்கள்.

தொல்லை எல்லை மீறி போனதால்தான் இனி பொறுத்துக்கொள்ள முடியாது என்று ராஜினாமா செய்தேன். அப்போது Ôதொழில் தகராறு காரணமாகÕ என்று எழுதப்பட்ட 5 ஸ்டாம்ப் பேப்பரில் என்னிடம் மிரட்டி கையெழுத்து வாங்கினர். பிரச்னை ஒழிந்தது என்று வேறு வேலைக்குச் சென்றால் அங்கு வந்தும் தொல்லை கொடுக்கின்றனர்.
செய்தி நிறுவனங்களில் பணி கிடைக்காததால்தான் மக்கள் தொடர்பு அதிகாரி வேலையில் நான் சேர்ந்ததாக கூறியுள்ளனர். இது மக்கள் தொடர்பு அதிகாரி என்ற பதவியை கேவலப்படுத்தும் செயல்.

Ôதினமலர் – உண்மையின் உரை கல்Õ என்று போஸ்டர் வைப்பது கண்துடைப்பு வேலை. அங்கு பணிபுரிபவர்களுக்கும், தினமலர் ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி, அவரது மகன் அந்துமணி ரமேஷ் ஆகியோரின் மனசாட்சிக்கு தெரியும் எது உண்மை என்று.
இவ்வாறு உமா கூறினார்.

——————————————————————————————————————

உண்மையை சொன்னால் மனநிலை பாதித்தவள் என்பதா?

தினமலர் நிர்வாகி மீது அவதூறு வழக்கு

பெண் நிருபர் உமா பேட்டி

சென்னை, ஜூலை 16: ÔÔசெக்ஸ் டார்ச்சர் கொடுத்த உண்மையை சொன்னதால¢ என்னை மனநிலை பாதித்தவர் என்று கூறுகின்றனர். இதனால் தினமலர் நிர்வாகம் மற்றும் அந்துமணி ரமேஷ் மீது அவதூறு வழக்கு தொடருவேன்ÕÕ என்று தினமலரில் பணிபுரிந்த நிருபர் உமா கூறியுள்ளார்.

இதுகுறித்து நிருபர்களிடம் அவர் இன்று கூறியதாவது:

தினமலர் நிர்வாகி அந்துமணி ரமேஷ் தொடர்ந்து எனக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுத்து வந்ததால்தான் பொறுமை இழந்து புகார் கொடுத்தேன். உண்மையை வெளிப்படுத்தியதால் என்னை மனநிலை பாதிக்கப்பட்டவர் என்று கூறுகிறார்கள். என் எதிர்காலத்தை சீரழிக்க நினைக்கும் அவர்களின் எண்ணத்தை முறியடிப்பேன். என்னை மனநிலை பாதித்தவர் என்று கூறியவர்கள் மீது அவதூறு வழக்கு தொடர்வேன்.

போன் மூலம் மிரட்டல் விடுத்தேன் என்று பொய்ப் புகார் கூறி என்னை விசாரிப்பதற்காக 2 போலீசார் மாலை 7 மணிக்கு என் அலுவலகத்துக்கு வந்தனர். Ôபுகாரை காட்டுங்கள், உங்களுடன் வருகிறேன்Õ என்றேன். அதற்கு அவர்கள் பதில் ஏதும் சொல்லவில்லை.
இரண்டு மணி நேரம் விசாரணை செய்யாமல் போலீஸ் ஸ்டேஷனில் உட்கார வைத்திருந்தனர். காரணத்தைக்கூட சொல்லவில்லை. சட்டப்படி மாலை 6 மணிக்குமேல் பெண்களை காவல் நிலையத்தில் வைத்திருக்கக் கூடாது. போலீசார் அந்த சட்டத்தை பின்பற்றவில்லை. விசாரணைக்கு தயார் என்று எழுதிக் கொடுக்கச் சொன்னார்கள். மீடியா என்ற பலத்தை வைத்துக் கொண்டு காவல்துறையை என் மீது பிரயோகம் செய்கின்றனர். நாட்டின் 4-வது தூண் பத்திரிகை. அதில் வேலை பார்த்ததால் பிரச்னையை எதிர்கொள்ள எனக்கு தைரியம் இருக்கிறது. ஆனால், சராசரி மனிதர்களால் இவர்களின் பழிவாங்கும் போக்கை எப்படி சமாளிக்க முடியும். அவர்களுக்கு எந்த அளவுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தி இருக்கும். தனிப்பட்ட பிரச்னைகளை பத்திரிகைகளில் வெளியிட்டு பழிவாங்கும் எண்ணமுடையவர்தான் அந்துமணி ரமேஷ்.

நிர்வாகம் சார்பில் இன்று தன்னிலை விளக்கத்தை அவர்கள் பத்திரிகையில் வெளியிட்டுள்ளனர். ஸ்ரீபிரியா என்ற பெண்ணுக்கு நான் போன் செய்து மிரட்டினேன் என்று கூறியுள்ளனர். எனக்கு சிரிப்புதான் வருகிறது. அங்கு வேலை பார்ப்பது பாதுகாப்பு இல்லை என்று கருதி நான் வெளியேறினேன். வேலையை விட்டுவந்து 3 மாதங்கள் ஆகிறது. மேலும் ஸ்ரீபிரியாவோடு எனக்கு அவ்வளவு பழக்கமுமில்லை. தினமலரை மிரட்டினேனா அல்லது ஸ்ரீபிரியாவை மிரட்டினேனா என்பதை முதலில் தெளிவுபடுத்தட்டும். ஸ்ரீபிரியாவை மிரட்டினேன் என்றால் அவர்தானே என் மீது புகார் கொடுக்க வேண்டும். அது எப்படி நிர்வாகம் ஆக முடியும்.

நான்தான் போன் செய்து மிரட்டினேன் என்கிறார்கள். எல்லாம் பொய். அங்கிருந்து வெளியேறிய பிறகு நான் எதற்கு அவர்களை மிரட்ட வேண்டும். தற்போது பணியாற்றும் அலுவலகத்தில் இருக்கும் வேலையை பார்க்கவே எனக்கு நேரம் சரியாக இருக்கிறது. அவர்களை மிரட்டுவது என் வேலையல்ல. அவர்களின் தன்னிலை விளக்கம் ஆதாரமில்லாமல் இருக்கிறது.

அங்கு 7 ஆண்டுகள் வேலை பார்த்துள்ளேன். என்னுடைய குரல் அவர்களுக்கு தெரியாதா? எனவே போன் மூலம் நான்தான் மிரட்டினேன் என்பதை ஆதாரத்துடன் நிரூபிக்கட்டும். தொலைபேசி எண், தொடர்பு கொண்ட நாட்கள், நேரம் எல்லாவற்றையும் வெளியிடட்டும். மருத்துவமனையில் உள்ள பூத்தில் போலீசார் வந்து சோதனை செய்தபோது, டயல் செய்த நம்பர்களில் தினமலர் நம்பர் டயல் செய்யப்படவில்லை என்பது அவர்களுக்கே தெரிந்துவிட்டது.

அதனால்தான் விசாரணை செய்யாமல் என்னை வீட்டுக்கு போகச் சொன்னார்கள். அவர்கள் கூறும் குற்றச்சாட்டு ஆதாரமற்றவை. ஜோடிக்கப்பட்டவை. ஆள் வைத்து பேசுவது, மிரட்டுவது இதெல்லாம் அவர்களுக்குத்தான் கைவந்த கலை. எனக்கில்லை. அதற்கு அவசியமும் இல்லை. பத்திரிகை துறையில் இருந்தேன் என்பதற்காக மற்றDinakaran Dinamalar Ramesh andhumani lens mama imbroglio allegation பத்திரிகைகள் எனக்கு ஆதரவு தெரிவிக்கின்றன.

என்னை மனநிலை பாதிக்கப்பட்டவர் என்கிறார்கள். அப்படியானால் ஏன் 7 வருடம் அங்கு வேலைக்கு வைத்து எனக்கு சம்பளம் கொடுக்க வேண்டும்? மனநிலை பாதிக்கப்பட்டவர் என்றால் எனக்கு எப்படி வேறு வேலை கிடைத்திருக்கும். இவர்கள் எதற்கும் துணிந்தவர்கள் என்பது எனக்கு தெரியும். என்னை மனநிலை பாதிக்கப்பட்டவர் என்றதால் தினமலர் நிர்வாகம் மீதும் அந்துமணி ரமேஷ் மீதும் அவதூறு வழக்கு தொடரப் போகிறேன்.

தினமலரில் Ôபிளாக் மெயில் ஜர்னலிசம்Õ பிரசித்தி பெற்றது. அதைத்தான் எப்போதும் செய்கிறார்கள். இது எல்லாருக்கும் தெரிந்த விஷயம். அங்கு வேலை செய்பவர்களை பலவகையிலும் மன உளைச்சலுக்கு ஆளாக்கியிருக்கிறார்கள். நான் பயந்து ஓடவில்லை. பிரச்னைகளை தைரியமாக எதிர்கொள்வேன். இவ்வாறு உமா கூறினார்.

——————————————————————————————————————

தினமலர் நாளிதழை பழிக்க இது தந்திரம் ஆதாரமற்ற புகாரைக் கூறும் உமா யார்?

சென்னை :தினமலர் நாளிதழில் பணியாற்றிய பெண் நிருபர் உமா நேற்று “குறிப்பிட்ட ஊடகத்தின்’ மூலம் அளித்த புகார் பேட்டியை உற்று நோக்கினால், இது உள்நோக்குடன் எழுந்த புகார் என்று புரியும்.

ஐம்பது ஆண்டுகளாகத் தமிழக மக்களின் உணர்வோடு ஒன்றிய நாளிதழின் பங்குதாரரின் மகனைத் தனிப்பட்ட முறையில் விமர்சிப்பது வேடிக்கையானது.

Resignation letter Uma Dinakaran Dinamalar Ramesh andhumani lens mama imbroglio allegationதினமலர் நாளிதழில் தற்போது இவர் பணியாற்றவில்லை. சிறிது காலம் முன்பு மணமுடித்துக் கொண்டார். இவர் போலீசில் ஏற்கனவே அளித்த புகார் மனு, இவருடன் பழகிய அருண் என்பவர் மேற்கு மாம்பலம் போலீசிடம் எழுதிக் கொடுத்த மனு ஆகியவை இவர் எவ்வித மனப்போக்கு கொண்டவர் என்பதைக் காட்டுபவை. ஏ.ஓ.அருண் என்பவர் தன்னிடம் உமா “ரிலாக்ஸ்’ ஆக இருப்பதற்காக பேசுவது உண்டு என்று போலீசாரிடம் மனுக்கொடுத்திருக்கிறார்.

உமாவும் தான் அளித்த புகாரில், “பணியில் மனப்பிரச்னை இருந்தது என்றும் அதனால் டைபாய்டு வந்தது’ என்றும் பதிவு செய்திருக்கிறார். பொதுவாக நிருபர் பணி என்பது மிகவும் சவாலான பணி, அதை இவர் நிறைவேற்றுவதில் அடிக்கடி குறை ஏற்படுவதும், அதனால் மறுநாள் அந்தச் செய்தியின் உண்மையைப் போட வேண்டிய கட்டாயமும் செய்திப் பிரிவிற்கு ஏற்பட்டிருக்கிறது.

அது மட்டும் அல்ல, தற்போது மருத்துவமனை ஒன்றில் பணிபுரியும் உமா, ஏன் தினமலர் பணியை விட்டு விலகிய பின் மூன்று மாதகாலம் காத்திருந்து, அடிப்படை இல்லாத “எஸ்.எம்.எஸ்’ கொண்டு ஆவேசப்படுகிறார் என்பதும் கேள்விக்குறி.கடந்த சில நாட்களுக்கு முன், இவர் தினமலர் அலுவலகத்தில் செய்திப்பிரிவில் பணிபுரியும் பெண் ஒருவருக்கு அடிக்கடி போன் தொடர்பு கொண்டபோது, அதை தினமலர் நிர்வாகம் கண்டுபிடித்து “சைபர் கிரைம்’ போலீசார் விசாரித்த பின்பே இவ்வளவு மலிவாகப் பேசத் தொடங்கியிருக்கிறார் உமா.

Abuse Uma Harassment Dinakaran Dinamalar Ramesh andhumani lens mama imbroglio allegationஅதேசமயம் சைபர் கிரைம் போலீசார் உமாவை வெள்ளிக்கிழமை காவல்நிலையத்திற்கு அழைத்து வந்த பிறகுதான் அவர் தினமலருக்கு எதிராக மனு கொடுத்துள்ளார்.ஆனால், தினமலர் நாளிதழைக் களங்கப்படுத்தும் வகையில், ஒரு தனியார் “டிவி’ மற்றும் அக்குடும்பத்தைச் சேர்ந்த சில நாளிதழ்கள் “மாஜி நிருபர்’ உமா புகாரை ஒளிபரப்பியும், பிரசுரித்தும் வருவது வேதனை தருகின்றன.

சட்டத்தின் நியாயவழிப்படி உமா புகாரை சந்தித்து பொய் என்று நிரூபிக்கவும் தினமலர் தயங்காது. இச் செய்தியை இடை விடாது பரப்பும் ஊடகங்களுக்கும் தினமலர் சார்பில் மறுப்பு அறிக்கை முறைப்படி அனுப்பப்பட்டிருக்கிறது. மறுப்பை அவர்கள் பெற்றுக் கொண்ட பிறகும், அதை ஒளிபரப்பாமல் மீண்டும், மீண்டும் ஒருதரப்புச் செய்தியை ஒளிபரப்பியது அந்த “டிவி’ சானலின் உள்நோக்கத்தைக் காட்டுகிறது.

——————————————————————————————-

பெண் நிருபருக்கு செக்ஸ் தொல்லை

உமா மீதும் வழக்குப்பதிவு தினமலர் ரமேஷ் மீது கிரிமினல் வழக்கு

சென்னை, ஜூலை 19: தினமலர் ஆசிரியர் ஆர்.கிருஷ்ணமூர்த்தியின் மூத்த மகனும், தினமலர் அலுவலக நிர்வாகியுமான ரமேஷ் மீது பெண்கள் மீதான கொடுமை தடுப்பு சட்டம் உட்பட 3 சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
உமா (28) என்பவர் சென்னை தினமலர் அலுவலகத்தில் ஏழாண்டுகள் நிருபராக பணியாற்றி, மார்ச் மாதம் அங்கிருந்து விலகி, தனியார் மருத்துவமனையில் மக்கள் தொடர்பு அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இவர், கடந்த 13ம் தேதி அடையாறு மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரில் கூறியிருப்பதாவது:

தினமலரில் பணியாற்றியபோது ஓராண்டு முன் என் செல்போனுக்கு திடீரென்று ஆபாச எஸ்.எம்.எஸ். வந்தது. பின்னர் அது தொடர்கதையானது. இதற்கு தினமலர் நிர்வாகி ரமேஷ்தான் காரணம் என்று தெரிந்தது. சக பத்திரிகையாளர்களிடம் இதை பலமுறை தெரிவித்தேன். அவர்களால் ஆறுதல் மட்டுமே கூற முடிந்தது. குடும்ப சூழல் காரணமாக தொடர்ந்து அங்கேயே பணியாற்றினேன். தொல்லை அதிகரித்ததால், ஒரு கட்டத்தில் ராஜினாமா செய்தேன்.

அதன்பின்னர், என் மீதும் குடும்பத்தினர் மீதும் கஞ்சா வழக்கு போடப்படும், கொலை செய்யப்படுவீர்கள் என்று மிரட்டல்கள் வர ஆரம்பித்தன. நான் மனநிலை சரியில்லாதவள் என்றும் ரமேஷ் தரப்பில் கேலி செய்தனர். இதுபற்றி மாம்பலம் மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தேன். எனக்கு ஏதாவது ஏற்பட்டால் தினமலர்தான் பொறுப்பு என்றும் அதில் கூறியிருந்தேன். ஆனால், போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இப்போது மருத்துவமனையில் பணியாற்றுகிறேன். எனக்கு சைபர் கிரைம் போலீசார் மூலம் தொந்தரவு கொடுக்கின்றனர்.

இவ்வாறு புகாரில் உமா கூறியிருந்தார்.

இந்தப் புகார் மீது நேற்றுவரை வழக்கு பதிவு செய்யப்படாமல் இருந்தது. நேற்று திடீரென்று தினமலர் நிர்வாகி ரமேஷ் மீது தமிழ்நாடு பெண்கள் மீதான கொடுமை தடுப்புச் சட்டத்தின் பிரிவு 4, இந்திய தண்டனைச் சட்ட பிரிவுகள் 507 (மிரட்டுதல்), 509 (ஆபாசமாக பேசுதல்) ஆகிய 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதேபோல், சைபர் கிரைம் போலீசில் தினமலர் நிர்வாகம் கொடுத்த புகாரின் பேரில், உமா மீது இந்திய தண்டனைச் சட்ட பிரிவுகள் 507, 508 ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

3 ஆண்டு சிறை:

தினமலர நிர்வாகி ரமேஷ் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில், பெண்கள் மீதான கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றம் நிரூபிக்கப்பட்டால், 3 ஆண்டு சிறைத் தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கலாம்.
இ.பி.கோ. 507 என்ற பிரிவில், 3 மாத சிறைத் தண்டனை மற்றும் ஆயிரம் ரூபாய் அபராதமும், 509 என்ற பிரிவில், 100 ரூபாய் அபராதமும் விதிக்கலாம்.

——————————————————————————————-

முன் ஜாமீன் கேட்டு ரமேஷ் மனு

செக்ஸ் தொல்லை கொடுப்பதாக உமா கொடுத்த புகாரை ஏற்று, தினமலர் ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தியின் மகன் ரமேஷ் மீது அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இதையடுத்து, முன் ஜாமீன் கேட்டு உயர் நீதிமன்றத்தில் ரமேஷ் நேற்று மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு நீதிபதி ரகுபதி முன்பு இன்று விசாரணைக்கு வருகிறது.

————————————————————————————————-

ஆபாச எஸ்.எம்.எஸ். கொடுத்து பாலியல் தொல்லை வழக்கு

காவல் நிலையத்தில் தினமலர் ரமேஷ் கையெழுத்திட வேண்டும்

முன்ஜாமீன் வழங்கி உயர் நீதிமன்றம் உத்தரவு இதே நிபந்தனையுடன் உமாவுக்கும் முன்ஜாமீன்

சென்னை, ஜூலை 21: நிருபர் உமாவுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் தினமலர் ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தியின் மகன் ரமேஷ§க்கு உயர் நீதிமன்றம் நிபந்தனை முன்ஜாமீன் வழங்கியுள்ளது. முன்ஜாமீன் பெற்ற பிறகு அவர், தொடர்ந்து 3 நாட்களுக்கு அடையாறு போலீஸ் நிலையத்தில் நேரில் ஆஜராகி கையெழுத்திட உத்தரவிட்டுள்ளது.

தினமலர் நிர்வாகம் கொடுத்த புகாரில் உமாவுக்கும் முன்ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
தினமலர் ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தியின் மகனும் அலுவலக நிர்வாகியுமான ரமேஷ் தனக்கு ஆபாச எஸ்எம்எஸ் அனுப்பி, செக்ஸ் தொல்லை தந்ததாக போலீசில் முன்னாள் பெண் நிருபர் உமா புகார் கொடுத்தார். அதன் பேரில் தினமலர் ரமேஷ் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதே போல், தினமலர் பெண் ஊழியர் ஒருவரை தொலைபேசியில் மிரட்டியதாக உமா மீது தினமலர் தரப்பில் சைபர் கிரைம் போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. அப்புகாரின் அடிப்படையில் உமா மீது சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இப்புகார்கள் தொடர்பாக ரமேஷ், உமா இருவரும் தனித்தனியாக முன்ஜாமீன் கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். ரமேஷ் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனு, நீதிபதி ரகுபதி முன்பு நேற்று முன் தினம் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, Ôஉமாவுடன், ரமேஷ் சமரசம் செய்து கொள்ள தயாரா?Õ என்று கேள்வி எழுப்பினர்.

இது தொடர்பாக ரமேஷிடம் ஆலோசித்து பதிலளிப்பதாக அவரது வக்கீல் கோபிநாத் கூறியிருந்தார்.

இதைத் தொடர்ந்து ரமேஷ் தாக்கல் செய்துள்ள முன்ஜாமீன் மனுவும், உமாவின் முன்ஜாமீன் மனுவும் நீதிபதி ரகுபதி முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நடந்த வாதம் வருமாறு:

நீதிபதி: உயர் நீதிமன்றத்தில் உள்ள சமரச மையத்திற்கு சென்று சமரசம் செய்து கொள்ள தயாரா என்று நேற்று கேட்டேன். அதுபற்றி உங்கள் பதில் என்ன?

தினமலர் ரமேஷின் வக்கீல் கோபிநாத்: இத்தகைய வழக்கை சமரச மையத்துக்கு அனுப்பத் தேவையில்லை என்று கருதுகிறோம். சமரசத்துக்கு நாங்கள் தயாராக இல்லை. மனுதாரருக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும்.

நீதிபதி (உமா வக்கீலை பார்த்து): உங்கள் வாதம் என்ன?

உமாவின் வக்கீல் சுதா ராமலிங்கம்: தினமலர் அலுவலகத்தில் நிருபராக 2001ம் ஆண்டு முதல் ஏழாண்டுகள் உமா பணியாற்றி உள்ளார். அப்போது, தினமலர் நிர்வாகி ரமேஷ் அவருக்கு ஆபாச எஸ்எம்எஸ்கள் அனுப்பி தொல்லை கொடுத்துள்ளார். அதனால் உமா வேலையை ராஜினாமா செய்தார். அதன் பிறகும் ரமேஷ் தரப்பிலிருந்து அவருக்கு மிரட்டல்கள் வந்தன.

இப்போது அவர் தனியார் மருத்துவமனையில் மக்கள் தொடர்பு அதிகாரியாக பணியாற்றி வருகிறார். கடந்த 13ம் தேதி, தினமலர் நிர்வாகம் கொடுத்த புகாரின் அடிப்படையில், உமாவை விசாரித்துக் கொண்டு அவர் பணிபுரியும் மருத்துவமனைக்கு அடையாறு போலீசார் வந்துள்ளனர். அவர்கள், மருத்துவமனை நிர்வாகத்திடம் சில தொலைபேசி எண்கள் குறித்து எழுத்துபூர்வமாக தகவல் தருமாறு கேட்டுள்ளனர்.

பின்னர் விசாரணைக்காக அடையாறு போலீஸ் நிலையத்திற்கு வருமாறு உமாவை அழைத்துள்ளனர். பணி முடிந்ததும் இரவு 8 மணிக்கு உமா மற்றும் அவர் பணிபுரியும் மருத்துவமனைக்கு அருகில் உள்ள எஸ்டிடி பூத்தில் பணியாற்றும் மல்லிகா என்ற பெண்ணும், அவரது தாயாரும் அடையாறு போலீஸ் நிலையத்திற்கு சென்றுள்ளனர்.

அங்கு உமாவிடம் போலீசார் எந்த விசாரணையும் செய்யாமல், வேண்டுமென்றே காக்க வைத்திருந்தனர். இரவு 10 மணி அளவில் துணை கமிஷனர் சேஷசாயி வந்த பிறகு தான், உமாவை வீட்டுக்கு செல்லுமாறு அனுப்பியுள்ளார். உமாவை போலீசார் அலைக்கழித்ததற்கு காரணம் தினமலர் நிர்வாகத்தின் தூண்டுதல் தான். அவர்கள் உமா மீது பொய்யான புகார் கொடுத்திருக்கிறார்கள். எனவே உமாவுக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும்.

வக்கீல் கோபிநாத்: அவர்கள் புகாரில் கூறியிருப்பது பொய். அதை ஏற்க கூடாது.
நீதிபதி: இரு தரப்பினரையும் அழைத்து போலீசார் விசாரித்தார்களா?

வக்கீல் சுதா ராமலிங்கம்: எங்களை மட்டும் தான் விசாரணைக்கு அழைத்தனர்.
வக்கீல் கோபிநாத்: நாங்கள் விசாரணைக்கு செல்லவில்லை. புகார் மட்டும் தான் கொடுத்தோம்.

நீதிபதி: நீங்கள் புகார் கொடுத்ததும் போலீசாரை வற்புறுத்தியிருப்பீர்கள். அதனால்தான் போலீசார் அவர்களை மட்டும் அழைத்து விசாரித்துள்ளார்கள். ஒருபத்திரிகை பெண் நிருபரை போலீஸ் நிலையத்திற்கு வரவழைத்து போலீசார் அலைக்கழித்துள்ளனர்.

அரசு வக்கீல் ஹசன் முகமது ஜின்னா (போலீஸ் தரப்பு): புகார் வந்தவுடன் போலீசார் உமாவை விசாரணைக்கு அழைத்துள்ளார்கள். அதைத் தொடர்ந்து இரு தரப்பினர் மீதும் தனித்தனியாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

நீதிபதி: மனுதாரர்கள் இருவருக்கும் நிபந்தனை முன்ஜாமீன் தருகிறேன். ரமேஷ், உமா இருவரும் ரூ.10 ஆயிரத்துக்கான சொந்த ஜாமீனும், இரு தனிநபர் ஜாமீனும் செலுத்தி முன்ஜாமீன் பெற்றுக் கொள்ளலாம். முன்ஜாமீன் உத்தரவு நகல் பெற்ற உடன், ரமேஷ் சைதாப்பேட்டை 9வது மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் சரண் அடைந்து முன்ஜாமீன் பெற்றுக் கொள்ளலாம். அதன் பிறகு, அடையாறு மகளிர் காவல் நிலையத்தில் தொடர்ந்து 3 நாட்களுக்கு தினமும் காலை 10.30 மணிக்கு ஆஜராகி கையெழுத்திட்டு விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும். ஜார்ஜ்டவுன் 7வது மாஜிஸ்திரேட் முன்பு சரணடைந்து உமா முன்ஜாமீன் பெற வேண்டும். அடையாறு மகளிர் காவல் நிலையத்தில் மாலை 5.30 மணிக்கு ஆஜராகி தொடர்ந்து 3 நாட்களுக்கு கையெழுத்திட்டு விசாரணைக்கு ஒத்துழைப்பு தர வேண்டும்.

இவ்வாறு தீர்ப்பில் நீதிபதி கூறினார்.
————————————————————————————————-

SMS Cellphones Mobile Abuse Uma Harassment Dinakaran Dinamalar Ramesh andhumani

————————————————————————————————-
பெண் நிருபருக்கு பாலியல் தொல்லை வழக்கு

தினமலர் ரமேசுக்கு முன்ஜாமீன் தரக்கூடாது

அரசு வக்கீல் கடும் எதிர்ப்பு

சென்னை, ஜூலை 20: நிருபர் உமாவுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தினமலர் நிர்வாகி ரமேஷ§க்கு முன் ஜாமீன் வழங்கக்கூடாது என்று அரசுத் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

தினமலர் ஆசிரியர் இரா. கிருஷ்ணமூர்த்தியின் மகனும், அலுவலக நிர்வாகியுமான ரமேஷ் தனக்கு ஆபாச எஸ்எம்எஸ் அனுப்பி செக்ஸ் தொல்லை கொடுத்ததாக நிருபர் உமா புகார் கொடுத்தார். இதன் பேரில் தினமலர் ரமேஷ் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வழக்கில் தன்னை கைது செய்யாமல் இருக்க ரமேஷ் உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி ரகுபதி முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நடந்த வாதம்:

ரமேஷ் தரப்பு மூத்த வக்கீல் கோபிநாத்: சமீபத்தில் தினமலர் அலுவலகத்துக்கு மர்ம தொலைபேசி அழைப்புகள் வந்தன. பேசிய பெண், அங்கு சுருக்கெழுத்தாளராக பணியாற்றும் பெண்ணை மிரட்டியிருக்கிறார். விசாரணையில், அந்தப் பெண் தினமலரில் நிருபராக பணியாற்றி ராஜினாமா செய்த உமா என்பது தெரியவந்தது.
சைபர் கிரைம் போலீசில் புகார் கொடுத்தோம். விசாரணைக்காக உமாவை போலீசார் அழைத்தனர். இதையடுத்து, ரமேஷ் மீது உமா புகார் கொடுத்துள்ளார். அதன் அடிப்படையில் ரமேஷ் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். அதில், இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 507, 509 ஆகியவை ஜாமீனில் விடக் கூடிய குற்றம். பெண்களுக்கு எதிரான கொடுமைகள் தடுப்பு சட்டத்தின் 4 வது பிரிவின் கீழும் ரமேஷ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இது ஜாமீனில் வெளிவரமுடியாத சட்டப்பிரிவு. இருந்தாலும், உமா கொடுத்தது பொய் புகார் என்பதால் ரமேஷ§க்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும்.

நீதிபதி: சட்டப் பிரிவு 4க்கு என்ன தண்டனை என்று கூறப்பட்டுள்ளது?
வக்கீல் கோபிநாத்: குற்றம் நிரூபிக்கப்பட்டால், 3 ஆண்டு சிறைத் தண்டனை வழங்கலாம்.
நீதிபதி: பெண் நிருபரை எப்போது மிரட்டியதாக புகார் கூறியுள்ளார்?

வக்கீல் கோபிநாத்: 7 ஆண்டுகள் அவர் பணியில் இருக்கும்போது ஆபாச எஸ்.எம்.எஸ். அனுப்பியதாகவும், ராஜினாமா செய்த பிறகும் மிரட்டல் விடுத்ததாகவும் கூறியிருக்கிறார். அது உண்மை என்றால் முன்பே புகார் கொடுத்திருக்க வேண்டும்.

அவர் மீது தினமலர் புகார் கொடுத்த பிறகுதான், போட்டிக்கு ரமேஷ் மீது புகார் கொடுத்துள்ளார். எனவே, ரமேஷ§க்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும்.

அரசு வக்கீல் ஹசன் முகமது ஜின்னா: தினமலரில் பணியாற்றிய போது, ரமேஷ் 11 செல்போன் நம்பர்களை பயன்படுத்தி தொடர்ந்து ஆபாச எஸ்எம்எஸ் அனுப்பினார்; பணியை விட்டு சென்ற பிறகும் அவரையும் அவர் குடும்பத்தையும் கஞ்சா வழக்கில் கைது செய்து விடுவதாகவும், உயிருடன் கொளுத்தி விடுவதாகவும் மிரட்டினார் என்று உமா கூறியுள்ளார். ரமேஷ் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆரம்பகட்ட விசாரணை நடந்துவருகிறது. எனவே ரமேஷ§க்கு முன்ஜாமீன் வழங்கக் கூடாது.
நீதிபதி: நெருப்பு இல்லாமல் புகையாது. இருவருமே திருமணம் ஆனவர்களா?

அரசு வக்கீல் ஹசன் முகமது ஜின்னா: உமாவுக்கு திருமணமாகி விட்டது.

வக்கீல் கோபிநாத்: ரமேஷ§க்கும் திருமணமாகி விட்டது.

நீதிபதி: இருவருமே திருமணமானவர்கள். போட்டி போட்டு புகார் கொடுத்துள்ளார்கள். அவர்கள் உயர் நீதிமன்றத்தில் உள்ள சமரச மையத்துக்கு சென்று சமரசம் செய்து கொள்ளலாமே? இது பற்றி மனுதாரர் ரமேஷிடம் கருத்து கேட்டு கூறுங்கள். விசாரணையை நாளை தள்ளி வைக்கிறேன்.

இவ்வாறு வாதம் நடந்தது.
————————————————————————————————-

kungumam dinakaran_uma andhumani ramesh dinamalar lawsuit harassment

kungumam dinakaran_uma andhumani ramesh dinamalar lawsuit harassment

kungumam dinakaran_uma andhumani ramesh dinamalar lawsuit harassment

kungumam dinakaran_uma andhumani ramesh dinamalar lawsuit harassment

———————————————————————————————-
தினகரனுக்கு டிமிக்கி கொடுத்த அந்துமணி ரமேஷ்

தினமலர் நிர்வாகிகளில் ஒருவரான அந்துமணி ரமேஷ் மீது, முன்னாள் நிருபர் உமா பாலியல் தொந்தரவு புகார் கொடுத்தார். இதனைத் தொடர்ந்து அவர் சென்னை உயர் நீதி மன்றத்தில் முன் ஜாமீன் பெற்றார். சைதாப்பேட்டை கோர்ட்டில் 2 நபர் ஜாமீன் பெற்று, விசாரணை அதிகாரி முன்பு 3 நாட்கள் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.

இந்த செய்திகளை எல்லாம், பெரிது பெரிதாக வெளியிட்ட தினகரன் நாளிதழ், எப்படியாவது கோர்ட்டில் ஆஜராகும் படத்தை எடுத்து பத்திரிகையில் வெளியிட வேண்டும் என்று தனது நிருபர்கள் நான்கு பேரை நியமித்திருந்தது. அவர்களுடம் சன் டி.வி. படக்குழுவினரும் கோர்ட்டில் கூடியிருந்தனர். வேறு எந்த பத்திரிகை நிருபர்களும் வரவில்லை.

ஆனால் அந்துமணி ரமேஷ் கோர்டுக்கு வரவே இல்லை. தினகரன் நிருபர்களின் கண்ணில் மண்ணை தூவிவிட்டு, விசாரணை அதிகாரியான இன்ஸ்பெக்டர் கீதா முன்பு ஆஜராகி கையெழுத்திட்டு சென்று விட்டார்.

இது எப்படி சாத்தியமானது. உயர் நீதி மன்றம் தீர்ப்பு கூறிய மறுநாளே, நீதிபதியை அனுகி, நீதி மன்றம் செல்லாமல் விசாரணை அதிகாரி முன்பு ஆஜராக அனுமதி கேட்டுள்ளனர். அவரும் ஒப்புக் கொள்ளவே தீர்ப்பு மாற்றி எழுதப்பட்டதாக தெரிகிறது.

இதன் அடிப்படையில் விசாரணை அதிகாரியிடம் நேரடியாக ஆஜராகிவிட்டார், அந்துமணி ரமேஷ். இதுதெரியாத தினகரன், அவருக்காக கோர்ட்டில் காத்திருப்பது வேடிக்கை

————————————————————————————————–

Posted in Agenda, Allegation, Andhumani, Andumani, Anthumani, Bathmavathi, Bathmavathy, Blackmail, Broadcast, CEO, Challenged, channel, Claim, Compensation, Courts, Dailythanthi, Dayanidhi, Dayanidhi maran, Dayanidhy, Dayanithi, Dhinakaran, Dhinamalar, Dhinathanthi, Dinagaran, Dinakaran, Dinamalar, Disabled, DMK, Editor, Email, Ethics, Female, Feminism, Freedom, Harass, Harassment, HR, Images, imbroglio, Jokes, journalism, journalist, Justice, Kalanidhi, Kalanidhy, Kalanithi, Kalanithy, Krishnamurthy, Law, Lawsuit, lens mama, Letter, Liberation, Mag, magazine, Management, Manipulation, Maran, MD, Media, Mental, MLA, Mogul, MSM, network, News, Order, paparazzi, Paprazzi, Pathmavathi, Pathmavathy, pension, Photos, Physical, Pictures, Police, Porn, Press, Process, Ramesh, Reference, Reporter, responsibility, Scam, Schizo, Schizophrenia, schizophrenic, Settlement, Sex, Sexual, SMS, Strategy, Sun, SunTV, tactics, Tamil, Thinagaran, Thinakaran, Thinamalar, Thinathanthi, TN, Torture, TV, Vaaramalar, Varamalar, Varamalara, Women, Work, Workplace | 41 Comments »

The rise and fall of Dayanidhi Maran – Biosketch

Posted by Snapjudge மேல் மே 14, 2007

பதவி ஏற்ற 3 ஆண்டுகளில் பதவி இழப்பு

சென்னை, மே 14: மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் 3 ஆண்டுகளில் தனது பதவியை இழக்கிறார்.

முரசொலி மாறனின் மறைவுக்குப் பிறகு, 2004-ம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் மத்திய சென்னை மக்களவைத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர் தயாநிதி மாறன். 2004 ஆம் ஆண்டுக்கு முன்னர் வரை சன் டி.வி. நிர்வாகத்தின் அங்கமான சுமங்கலி கேபிள் விஷன் இயக்குநர்களில் ஒருவராக இருந்தார் தயாநிதி மாறன்.

அரசியலுக்கு முதன்முதலில் அடியெடுத்து வைத்த அவருக்கு, அமோக வெற்றியை மத்திய சென்னை வாக்காளர்கள் அள்ளித் தந்தனர்.

தொடர்ந்து, மத்தியில் அமைந்த கூட்டணி அமைச்சரவையில், மிக முக்கிய பொறுப்பான தகவல் தொழில்நுட்பத் துறை இவருக்கு வழங்கப்பட்டது. முதல்வர் கருணாநிதியின் ஆசியுடன் மிகக் குறுகிய காலத்தில் இவர் அரசியலில் மிகுந்த செல்வாக்கு பெற்றவராக வளர்ந்தார்.

பிரதமர் மன்மோகன் சிங்கிடம் மட்டுமின்றி ஐக்கிய முற்போக்குக் கூட்டணித் தலைவர் சோனியா காந்தியிடமும் மிகுந்த செல்வாக்குப் பெற்றவரானார்.

ஒரு கருத்துக்கணிப்பின் விளைவாகத் தினகரன் அலுவலகம் தாக்கப்பட்டு மூவர் உயிரிழந்ததைத் தொடர்ந்து ஏற்பட்ட கட்சிக் குழப்பத்தில் நாலாவது நாளில் பதவி பறிக்கப்படுகிறார் தயாநிதி மாறன்.
———————————————————————————————————-

கிட்டத்தட்ட மூன்றாண்டு காலம் மத்திய அமைச்சராக பணியாற்றியுள்ளேன்.

கடந்த 26 மாதங்களில் என் துறை மூலம் நம் நாட்டுக்கு 2 லட்சத்து 66 கோடி ரூபாய் முதலீடு வந்துள்ளது. இதில் பெரும் பகுதி நமது தமிழகத்துக்கு கிடைத்துள்ளது. இதற்கெல்லாம் காரணம் என் தலைவரும், பிரதமரும், சோனியா காந்தியும் அளித்த வாய்ப்புதான்.
———————————————————————————————————-
தயாநிதி மாறன் பதவி யாருக்கு கிடைக்கும்?:

அழகிரிக்கோ அவரது ஆதரவாளருக்கோ கிடைக்கலாம் ::

பா. ஜெகதீசன்

சென்னை, மே 14மத்திய அமைச்சர் பதவியை தயாநிதி மாறன் ராஜிநாமா செய்துவிட்டார்.

இந் நிலையில், இதுவரை அவர் வகித்து வந்த தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பதவி யாருக்குக் கிடைக்கும் என்பது தொடர்பாக பல்வேறு யூகங்கள் உலா வரத் தொடங்கி உள்ளன.

தயாநிதிக்கு பதிலாக அவர் வகித்த பதவிக்கு திமுகவின் மத்திய அமைச்சர்களான டி.ஆர். பாலு, அ. ராசா ஆகியோரில் ஒருவருக்கு கூடுதல் பொறுப்பு தரப்படலாம் என அக்கட்சியின் ஒரு தரப்பினர் கருதுகின்றனர்.

மன்னிப்பு கிடைக்குமா:

Mallikaதயாநிதி மாறனின் தாய் மல்லிகா மாறன் தற்போது வெளிநாட்டில் உள்ளார். அவர் சென்னைக்கு திரும்பியதும் அவரும், தயாநிதி மாறனும், சன் டிவி நிர்வாக இயக்குநர் கலாநிதி மாறனும் முதல்வர் கருணாநிதியைச் சந்தித்து நடைபெற்ற சம்பவங்களுக்கு மன்னிப்பு கேட்கும் வாய்ப்பும் உள்ளது.

அப்படி நடைபெறும்போது இப் பிரச்சினைக்கு சுமுகத் தீர்வு ஏற்படக் கூடும். அப்படி ஒரு சூழ்நிலை ஏற்படும்போது தயாநிதி மாறன் மீண்டும் மத்திய அமைச்சராக தொடர்ந்து நீடிக்கும் சாத்தியம் உள்ளது.

இதற்கு ஒரு முன்னுதாரணமாக, திமுகவில் சில ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவத்தை நினைவு கூருகின்றனர்.

கடந்த 2001-ல் சட்டப் பேரவைத் தேர்தலின்போது திமுகவுக்கு எதிராக அழகிரியும், அவரது ஆதரவாளர்களும் செயல்பட்டனர்.

இதனால், தேர்தலில் தென் மாவட்டங்களில் திமுக தோல்வியைத் தழுவியது.

அப்போது கட்சியில் அழகிரிக்கு எதிரான நிலை எடுக்கப்பட்டு அவர் ஒதுக்கி வைக்கப்பட்டார். கட்சிக்கும் அவருக்கும் தொடர்பு இல்லை என்றுகூட திமுக தலைமை கூறியது. ஆனால், சிலமாதங்கள் சென்றபின் நிலைமை மாறியது.

2002 பிப்ரவரியில் ஆண்டிபட்டி சட்டப் பேரவைத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா போட்டியிட்டார்.

அவரை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளர் வைகை சேகரை ஆதரித்து அழகிரியும் அவரது ஆதரவாளர்களும் தீவிர பிரசாரம் செய்தனர்.

இன்னும் சொல்லப்போனால் மு.க. ஸ்டாலினுடன் இணைந்து அழகிரி பிரசாரம் செய்தார். அத்தேர்தலில் தனது மனைவியுடன் வீடு வீடாகச் சென்று அழகிரி வாக்கு சேகரித்தார்.

இதைத் தொடர்ந்து திமுகவில் தனக்கு இருந்த செல்வாக்கை அழகிரி வலுப்படுத்திக் கொண்டார் என்பதை திமுகவினர் சுட்டிக்காட்டுகின்றனர்.

அழகிரிக்கு சாதகம்:

இதற்கிடையே அழகிரியோ அல்லது அவர் சுட்டிக்காட்டும் அவரது ஆதரவாளர் ஒருவரையோ தயாநிதி மாறன் வகித்த பதவியில் நியமிக்க வாய்ப்பு உள்ளது. அப்படி மத்திய அமைச்சராக நியமிக்கப்படுபவர் வரும் ஜூலை மாதத்தில் நடைபெற இருக்கும் மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்படவும் வாய்ப்பு உள்ளது.

நாடார் சமுதாயத்துக்குப் பிரதிநிதித்தும் கிடைக்குமா?

மத்திய அமைச்சரவையில் நாடார் சமுதாயத்தைச் சேர்ந்த எவரும் இடம்பெறவில்லை. இந்தக் குறையைப் போக்கும் வகையிலும், சமீபத்தில் காமராஜரின் பெயரை முன்னிறுத்தி நடிகர் சரத்குமார் மேற்கொண்டுள்ள பிரசாரத்துக்கு ஈடுகொடுக்கும் விதத்திலும் திமுக செயல்பட வாய்ப்பு உள்ளது.

தற்போது மாநிலங்களவை உறுப்பினர்களாக உள்ள

  • தினகரன் பத்திரிகையின் முன்னாள் உரிமையாளர் குமரன்,
  • வழக்கறிஞர் சண்முகசுந்தரம் ஆகியோரில் ஒருவருக்கு தயாநிதி மாறன் வகித்த பதவி கிடைக்கக் கூடும்.

குமரன், சண்முகசுந்தரம் ஆகிய இருவரின் பதவிக்காலமும் வரும் ஜூலையுடன் முடிகிறது. இருந்தாலும் மத்திய அமைச்சராக, இருவரில் எவர் நியமிக்கப்படுகிறாரோ அவருக்கு மீண்டும் மாநிலங்களவை உறுப்பினர் பதவி கிடைக்கும் சாத்தியமும் உள்ளது.
———————————————————————————————————-
அப்பாவைப் போல இல்லையே பிள்ளை!

சென்னை, மே 14: திமுக தலைவர் கருணாநிதிக்கு உற்ற நண்பனாகவும், அவர் இடும் கட்டளைகளை ஏற்றுச் செயல்படுத்தும் தொண்டராகவும், சிக்கலான கட்டங்களில் ஆலோசனை கூறும் மதியூகியாகவும், அரசியல்ரீதியான சந்திப்புகளுக்கு முக்கியத் தலைவர்களை அணுகக்கூடிய நம்பத்தகுந்த தூதராகவும் செயல்பட்டவர் முரசொலி மாறன்.

கருணாநிதியின் சகோதரி மகன் என்ற உறவு இருந்தாலும் பிற தலைவர்களைப் போலவே அவரிடம் பழகி, அவருடைய முழு நம்பிக்கையையும் பெற்றிருந்தார். தில்லியில் திமுகவின் செல்வாக்குள்ள பிரதிநிதியாகத் திகழ்ந்த போதிலும் அதில் தனக்கென்று தனிப்பட்ட செல்வாக்கு தேடாமல் அனைத்தையும் கட்சிக்கென்றே பயன்படுத்தினார் முரசொலி மாறன். அவருடைய மறைவு திமுக தலைவருக்கு தாங்கமுடியாத பேரிழப்புதான்.

இந் நிலையில்தான், வயதில் இளைஞராக, அரசியல் அனுபவம் ஏதும் இல்லாதவராக, பார்ப்பதற்கு விளையாட்டுப் பிள்ளையாக இருந்த தயாநிதியை நாடாளுமன்றத்துக்கு அனுப்பிவைக்க கருணாநிதி முடிவு செய்தார். அதில் வெற்றி கண்டாலும், முரசொலி மாறனைப் போல அல்ல தயாநிதி மாறன் என்பதை விரைவிலேயே உணர்ந்துகொண்டார்.

தனக்கென்று அதிகார மையத்தை ஏற்படுத்த முரசொலி மாறன் விரும்பியதில்லை, ஆனால் தயாநிதியோ அப்படியல்ல. தயாநிதியின் அண்ணன் கலாநிதி மாறனின் தினகரன் பத்திரிகையில் வெளியான கருத்துக்கணிப்புகள், அவருடைய பதவி ஆசையைக் காட்டுவதாகவே கருதப்பட்டன. கழகக் குடும்பத்தின் மூத்த தலைவர் வாழும் காலத்திலேயே இப்படி என்றால் எதிர்காலத்தில் எப்படி நடப்பார் என்ற கேள்வி பிறக்கிறது. எனவே அவரைத் தண்டிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

கடந்த 3 ஆண்டுகளாக தில்லியில் நிறைவேற்ற வேண்டிய வேலைகளுக்கு தயாநிதியை, கருணாநிதி மிகவும் நம்பியிருந்தார். இப்போது அவருக்குப் பதிலாக, அதே போல நம்பிக்கைக்குரிய ஒருவர் தேவை. முன்னர் டி.ஆர்.பாலு இந்த வேலைகளைச் செய்துவந்தார். ஆனால் கருணாநிதி “”முழு நம்பிக்கை” வைக்கும் அளவுக்கு ஒருவர் தேவைப்படுகிறார். அந்த இடத்தை நிரப்பக்கூடியவர் அவருடைய மகள் கனிமொழி. பொதுவாழ்வில் தீவிரமாக ஈடுபட அவருக்கு பச்சைக் கொடி காட்டிவிட்டார் கருணாநிதி. மாநிலங்களவை உறுப்பினராக அவர் தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்பு இருக்கிறது.

தமிழ்நாட்டிலிருந்து மாநிலங்களவைக்கு ஜூன் அல்லது ஜூலை தொடக்கத்தில் தேர்தல் நடைபெறவிருக்கிறது. திமுக வேட்பாளர்களில் ஒருவராக கனிமொழி இருந்தால் வியப்பதற்கு ஏதும் இல்லை.
———————————————————————————————–
கட்சிக்கும், ஆட்சிக்கும் பகையை வளர்த்ததால் தான் இந்த கதி: தயாநிதி நீக்கத்தின் பின்னணி நமது சிறப்பு நிருபர்

அனைத்து தரப்பையும் பகைத்துக் கொண்டது, கட்சியில் ஆதிக்கம் செலுத்த நினைத்தது, டில்லி செல்வாக்கை தவறாக பயன்படுத்தியது போன்றவையே தயாநிதி நீக்கப்பட்டதற்கு காரணமாக அமைந்துள்ளன.

கடந்த 2004 லோக்சபா தேர்தலின் போது அரசியலுக்கு கொண்டு வரப்பட்ட தயாநிதி, முதல் முறையாக எம்.பி.,யானதும் மத்தியில் தகவல் தொழில்நுட்பத் துறையை இவருக்காக தி.மு.க., தலைவர் கேட்டுப் பெற்றார். மத்திய அமைச்சராக்கியதோடு மட்டுமன்றி, பிரதமர், சோனியா மற்றும் தேசிய தலைவர்களுடன் தி.மு.க., சார்பில் பேசுவதற்கும் தகவல்களை பரிமாறுவதற்கும் தயாநிதியை பயன்படுத்தினார். இதனால் டில்லி வட்டாரத்தில் அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள், பத்திரிகையாளர்கள் போன்றவர்களுடன் நெருக்கமாக பழகும் வாய்ப்பு தயாநிதிக்கு கிடைத்தது. ஆனால், ஆரம்பம் முதல் இவரது செயல்பாடு பல்வேறு பிரிவினருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது.

குறிப்பாக,

  • சட்டசபைத் தேர்தல் சமயத்தில் தயாநிதியின் செயல்பாட்டை விமர்சித்தே தமிழகத்தில் எதிர்க்கட்சிகளின் பிரசாரம் அமைந்தது.
  • பெரும் தொழிலதிபரான ரத்தன் டாடாவை மிரட்டிய விவகாரம்,
  • தமிழகத்தில் உள்ள மீடியாக்களை பகைத்துக் கொண்டது போன்றவை அ.தி.மு.க.,
  • கூட்டணி 69 இடங்களை பெறுவதற்கு காரணமாக அமைந்தன.

தி.மு.க., ஆட்சி அமைந்த பின் கட்சிக்குள்ளேயே இவர் மீது அதிருப்தி அதிகரிக்க துவங்கியது. குறிப்பாக, முதல்வரின் வாரிசாக கருதப்படும் ஸ்டாலினுக்கும், தயாநிதிக்கும் இடையே பல சந்தர்ப்பங்களில் மறைமுக மோதல் நடந்தது. ஸ்டாலினின் தீவிர ஆதரவாளர்களுக்கு எதிராக அவர்களது பத்திரிகைகளில் செய்தி வெளியிட்டது, ஸ்டாலினின் செய்திகளை வெளியிடாமல் இருட்டடிப்பு செய்தது போன்றவை கட்சியினருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக முறையிட்ட போதெல்லாம் முதல்வர் சமரசப்படுத்தி வந்துள்ளார்.

கடைசியாக, கடந்த மார்ச் முதல் தேதியன்று ஸ்டாலின் பிறந்தநாள் கொண்டாடிய போது தி.மு.க.,வின் அனைத்து நிர்வாகிகளும் வந்து அவருக்கு வாழ்த்து தெரிவித்த போதிலும், கலாநிதியோ, தயாநிதியோ அவருக்கு வாழ்த்து தெரிவிக்கவில்லை. அதேநேரத்தில் மதுரையில் இருந்து தனக்கு வாழ்த்துச் சொல்ல வந்த அழகிரியுடன் இதுபற்றி ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.

இது தவிர கீழ்மட்ட கட்சித் தொண்டர்களுடன் தயாநிதி பழகாமல் இருந்ததுடன், மூத்த தலைவர்களை கண்டுகொள்ளாமல் அரசியல் நடத்தியதும் சர்ச்சையை ஏற்படுத்தியது. தி.மு.க., சார்பாக மத்தியில் இடம்பெற்றுள்ள அமைச்சர்களிடையே தயாநிதி ஆதிக்கம் செலுத்தி வந்ததாகவும் புகார்கள் வந்தன

. டி.ஆர்.பாலு, ராஜா, பழனிமாணிக்கம் போன்றவர்களை பல சந்தர்ப்பங்களில் ஓரங்கட்டும் விதமாக செயல்பட்டதால், இவர் மீது அவர்கள் அதிருப்தியில் இருந்ததாக கூறப்படுகிறது. அதேநேரத்தில், தயாநிதியை கட்சியில் முன்னிலைப்படுத்தி முதல்வர் கருணாநிதிக்கு பின்னர் கட்சியை கைப்பற்ற முயற்சிகள் ஒருபுறம் நடந்து கொண்டிருந்தன.

மாவட்ட செயலர்களுக்கு அந்தந்த மாவட்டத்தில் “கேபிள் டிவி’ நடத்தும் உரிமை வழங்குவதாக உறுதியளித்துள்ளனர். தயாநிதிக்கு செல்வாக்கு இருப்பதாக காட்டுவதற்காகவே கருத்து கணிப்பு ஒன்றையும் நடத்தியதாக தி.மு.க., நிர்வாகிகள் கூறுகின்றனர். தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர்களில் தயாநிதியே முதலிடத்தில் உள்ளதாக வெளியிடப்பட்டது. இந்த கருத்துக் கணிப்பு தி.மு.க., கூட்டணியிலேயே சலசலப்பை ஏற்படுத்தியது.

காங்கிரசை சேர்ந்த மத்திய அமைச்சர்களை களங்கப்படுத்தியதாக அக்கட்சியினர் கருதினர். அன்புமணியை வேண்டுமென்றே மட்டம் தட்டியிருப்பதாக ராமதாஸ் பகிரங்கமாக குற்றம்சாட்டினார்.

————————————————————————————————-

தி.மு.க.,வில் தயாநிதி ஆதரவாளர்களுக்கு கல்தா!: அனுகூலம் பெற்ற அதிகாரிகள் சிக்குகின்றனர்

தயாநிதிக்கு குறுகிய காலத்தில் கட்சியில் தரப்பட்ட முக்கியத்துவம் காரணமாக கட்சியின் அமைச்சர்கள், மாவட்ட செயலர்கள் உள்ளிட்ட பலரும் தயாநிதியின் ஆதரவாளர்களாக மாற வேண்டிய சூழல் ஏற்பட்டது. இருப்பினும், தென் மாவட்டங்களில் அழகிரியின் செல்வாக்கை மீறி, தயாநிதிக்கு, அங்கு, ஆதரவாளர்கள் கிடைக்கவில்லை. அதே போல, மூத்த அமைச்சர்கள் கட்டுப்பாட்டில் உள்ள மாவட்டங்களிலும் தயாநிதி ஆதரவாளர்கள் உருவாகவில்லை.

இதை மீறி

  • கோவை,
  • நீலகிரி,
  • திருச்சி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த அமைச்சர்கள் மூவர், தங்களை தயாநிதியின் ஆதரவாளராக முன்னிறுத்திக் கொள்வதில் ஆர்வம் காட்டி செயல்பட்டனர். சட்டசபை தேர்தலில் கோவை மாவட்டத்தில் தி.மு.க.,விற்கு ஏற்பட்ட பெரும் சரிவால் கட்சித் தலைமை பொங்கலுõர் பழனிச்சாமி மேல் கடும் கோபத்தில் இருந்தது. அமைச்சர் பதவி தராமல் அவரை புறக்கணித்தது. தலைமையின் கோபத்தை உணர்ந்த ஸ்டாலின், இவருக்கு ஆதரவாக குரல் கொடுக்க விரும்பவில்லை.

இந்நிலையில், தயாநிதியின் மூலமாக கட்சித் தலைமையை திருப்திபடுத்தி, உள்ளாட்சித் தேர்தல் வெற்றியை காரணம் காட்டி அவருக்கு அமைச்சர் பதவி தரப்பட்டது. தனக்கு அமைச்சர் பதவி கிடைக்க தயாநிதி தான் காரணம் என்பதால், முழுமையாக அவரது ஆதரவாளர் போல் பழனிச்சாமி செயல்பட்டார். மாதத்திற்கு இரு முறை தயாநிதி கோவைக்கு வந்ததால், இந்த உறவு மேலும் பலப்பட்டது. கோவையில் அமையவுள்ள டைடல் பார்க்கை சுற்றியுள்ள நிலங்களை வளைப்பதில் பொங்கலுõர் பழனிச்சாமி பெரிதும் உதவியுள்ளார்.

பழனியின் மகன் பைந்தமிழ் பாரியை கோவை மேயராக்க, ஸ்டாலினின் தீவிர ஆதரவாளரான வீரகோபாலை மாநகராட்சித் தேர்தலில் தோற்கடிக்க, “உள்ளடி வேலை’களைச் செய்தார். இதை தெரிந்து கொண்ட கட்சித் தலைமை, தயாநிதி வற்புறுத்தியும், மேயர் பதவியை பாரிக்கு வழங்க ஒப்புக் கொள்ளவில்லை.

மண்டலத் தலைவராக பொறுப்பேற்ற பாரி, தனது அறையில் தயாநிதியின் போட்டோவை மாட்டியதோடு, இதர கவுன்சிலர்களின் அறைகளிலும் தயாநிதி படம் மாட்ட வேண்டும் என்று வற்புறுத்தி, மாட்டி வைத்து, நன்றி விசுவாசம் காட்டினார்.

பொங்கலுõர் பழனிச்சாமி பல்வேறு தொழில்களை நடத்தி வரும் தொழிலதிபர் என்பதால், “தொழில் ரீதியாக’ தயாநிதியோடு நெருக்கம் காட்டினார். சமீபத்தில் கோவையில் நடந்த மேம்பால திறப்பு விழாவில், டி.ஆர்.பாலுவை புறக்கணித்து, தயாநிதியைக் கொண்டு விழா நடத்தினார் பழனிச்சாமி.

நகரின் பல இடங்களில் தயாநிதியின் கட் அவுட்டுகள், ஆயிரக்கணக்கான வரவேற்புத் தட்டிகள் என ஆடம்பரமாக இந்த விழாவை நடத்தினார். மற்ற தி.மு.க., பிரமுகர்கள் தயாநிதியை நெருங்க விடாமல், தாங்களே ஒட்டுமொத்த ஆதரவாளர் என காட்டிய பெங்கலுõர் பழனிச்சாமி, இப்போது கட்சித் தலைமையின், “ப்ளாக் லிஸ்ட்’டில் இடம் பெற்றுள்ளார்.

அடுத்ததாய், “ப்ளாக் லிஸ்ட்’டில் நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த கதர் துறை அமைச்சர் இளித்துறை ராமச்சந்திரன் இடம் பிடித்துள்ளார். இவரும் தயாநிதி ஆதரவாளராக தன்னை முன்னிறுத்துவதில் ஆர்வம் காட்டியவர். கோத்தகிரியில் இருக்கும் தயாநிதியின் மாமனாருக்கு தேவையான அனைத்து உதவிகளையும் அமைச்சர் ராமச்சந்திரனின் மருமகனின் குடும்பத்தினர் செய்து வந்தனர். இதைவிட ஒரு படி மேலாக, ஊட்டியில் தயாநிதி முகாமிடும்போதெல்லாம், கூடவே இருந்து குணசேகரன் என்பவர் உதவிகளை செய்து கொடுத்து வருகிறார்.

இந்த குணசேகரன் அமைச்சர் ராமச்சந்திரனின் மருமகனின் சகோதரர். தயாநிதி மேலான அமைச்சரின் பாசம் இப்படி நீடித்து வருகிறது.

அடுத்ததாய், தயாநிதி ஆதரவாளராக, வனத்துறை அமைச்சர் செல்வராஜ் இருந்துள்ளார். மறைந்த மாறனின் தீவிர ஆதரவாளராக இருந்த இவர், ம.தி.மு.க.,விற்கு போய்விட்டு வந்த நிலையில், தி.மு.க., அமைச்சரவையில் இடம் பிடிக்க தயாநிதி தான் காரணம். இதனால், செல்வராஜ் பெயரும் தயாநிதி ஆதரவாளர் பட்டியலில் உள்ளது.

இது தவிர, சட்டசபைத் தேர்தல் நேரத்தில் தி.மு.க., சார்பில் நிதி சப்ளை செய்தவர் என்ற முறையில் தயாநிதிக்கு பல எம்.எல்.ஏ.,க்களின் அறிமுகம் உண்டு. அது தொடர்பான கணக்க வழக்கு விவகாரங்களையும் தயாநிதியே கவனித்ததால், அவர்களின் தொடர்பும் இருப்பதாக கட்சித் தலைமை கருதுகிறது. குறிப்பிட்ட சில எம்.எல்.ஏ.,க்களின் மீதும் கட்சித் தலைமையின் பார்வை பதிந்துள்ளது.

அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகளைக் காட்டிலும் தயாநிதியின் விசுவாசிகளாக இருந்த அரசு உயரதிகாரிகள், போலீஸ் அதிகாரிகள் பட்டியலும் தி.மு.க., தலைமை தயாரித்து வருகிறது. இந்த பட்டியலை தயாரிக்கும் நோக்கோடு, உளவுத் துறையில் முதல்வருக்கு நெருக்கமான அதிகாரி ஜாபர்சேட் சமீபத்தில் பொறுப்பேற்றுள்ளார்.

மத்திய அமைச்சராக தயாநிதி பணியாற்றியபோது, டில்லி தொடர்பு மூலம் தமிழகத்தில் பணியாற்றும் பல வடமாநில அதிகாரிகள், தங்களுக்கு விருப்பமான பதவிகளைப் பெற்றுள்ளனர். இவ்வாறு பதவி பெற்றவர்களை தயாநிதியின் ஆதரவாளர்களாக அரசு கருதுவதால், எப்போது வேண்டுமானாலும் டிரான்ஸ்பர் செய்யப்படலாம் என்ற கலக்கத்தில் இவர்கள் உள்ளனர்.

கட்சியின் கீழ்நிலை பொறுப்புகளில் உள்ள தயாநிதி விசுவாசிகள், காவல்துறை, அரசுத் துறையில் உள்ள கீழ் நிலை அதிகாரிகள் வரை முழுமையான பட்டியல் எடுக்கப்பட்டுள்ளது. “டிவி’ நிர்வாகத்துடன் நெருக்கமாக இருந்த அதிகாரிகளும் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். தயாநிதி விசுவாசிகளை கட்டம் கட்டும் பணியை கட்சித் தலைமை தீவிரமாக மேற்கொள்ளுமானால், 50க்கும் மேற்பட்ட, “அதிரடி டிரான்ஸ்பர்’கள் நடக்க வாய்ப்புள்ளது.

————————————————————————————————————

பதவி பறிப்பு – BBC

 

பத்திரிகை எரிப்பில் ஈடுபட்ட மதுரை மேயர்
மதுரையில் மேயர் தலைமையில் ஆர்ப்பாட்டம்

பத்திரிகை தாக்குதலும் பதவி பறிப்பும்

தமிழகத்தில் மதுரையிலுள்ள தினகரன் அலுவலகம் மீது தமிழக முதல்வர் கருணாநிதி அவர்களின் மகன் அழகிரியின் ஆதரவாளர்கள் எனக் கருதப்படுபவர்கள் நடத்திய தாக்குதலில் மூன்று பேர் பலியாயினர்.

இந்தத் தாக்குதலுக்கு பிறகு எழுந்த சர்ச்சையை அடுத்து மத்திய அமைச்சராக இருந்த தயாநிதி மாறனின் பதவி பறிக்கப்பட்டதும் நேயர்கள் அறிந்ததே

இந்தச் சம்பவங்கள் தொடர்பாக தமிழோசை ஒலிபரப்பிய பேட்டிகள், செய்திக் குறிப்புகள் ஆகியவற்றை இந்தத் தொகுப்பில் நேயர்கள் கேட்கலாம்.

தினகரன் நாளிதழ் தமிழக முதல்வர் கருணாநிதியின் அரசியல் வாரிசு யார் என்பது குறித்து கருத்துக் கணிப்பை வெளியிட்டது. இதில் ஸ்டாலினுக்கு பெரும் ஆதரவும், அழகிரிக்கு மிகக் குறைந்த அளவே ஆதரவு இருப்பதாகவும் கூறியிருந்தது.

எரிக்கப்பட்ட தினகரன் அலுவலகத்தின் ஒரு பகுதி
எரியூட்டப்பட்ட தினகரன் அலுவலகம்

இதையடுத்து மதுரையிலுள்ள தினகரன் அலுவலகத்தின் மீது தாக்குதல் நடைபெற்றது. இதில் மூவர் பலியாயினர்.

நடைபெற்ற தாக்குதல் குறித்து தினகரன் பத்திரிகையின் மதுரைப் பதிப்பின் ஆசிரியர் முத்துப் பாண்டியனின் பேட்டி.

முத்துப்பாண்டியன் பேட்டி

ஆனால் இந்தத் தாக்குதலில் தமக்கு சம்பந்தம் இல்லை எனக் கூறுகிறார் மதுரை மேயர் தேன்மொழி. தங்களது எதிர்ப்பை காட்ட பத்திரிகையை எரித்ததாக மட்டுமே அவர் கூறுகிறார்.

தேன் மொழி பேட்டி

இது தினகரன் பத்திரிகை மீது நடத்தப்பட்ட தாக்குதல் என்பதனை விட பத்திரிகை சுதந்திரத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் எனக் கூறுகிறார் தினகரன் பத்திரிகையின் தலைமை நிர்வாகி ரமேஷ்.

 

ரமேஷ் பேட்டி

காவல் துறை தனது கடமையைச் செய்யும் எனவும், விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கிறார் தமிழக காவல்துறை தலைவர். இது தொடர்பாக கைதுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறுகிறார்.

காவல்துறை தலைவர் பேட்டி

கோபத்தின் வெளிப்பாடும் பத்திரை எரிப்பும்
கோபத்தின் வெளிப்பாடும் பத்திரிகை எரிப்பும்

இது கருத்துச் சுதந்திரம் குறித்த பிரச்சினை அல்ல, தமிழகத்தை ஆளும் திமுகவின் தலைவரான கருணாநிதியின் குடும்பத்திற்குள் நடைபெற்ற அதிகாரப் போட்டியினால் எழுந்த பிரச்சினை என்றும் கூறுகிறார் அரசியல் ஆய்வாளர் ஞானி

ஞானி பேட்டி

இந்தச் சமபங்களுக்கு பிறகு நடைபெற்ற திமுகவின் நிர்வாகக் குழு கூட்டத்தில், தயாநிதி மாறனை மத்திய அமைச்சரவையிலிருந்து விலக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனத் தீர்மானித்தது. இது குறித்து எமது செய்தியாளர் கோபாலனின் செய்திக் குறிப்பு

கோபாலன் செய்திக் குறிப்பு

உறவும் பிரிவும்
உறவும் பிரிவும்

மத்திய அமைச்சர் பதவியிலிருந்து தம்மை நீக்க கட்சி எடுத்த முடிவை அடுத்து தயாநிதி மாறன் தனது அமைச்சர் பதவியை இராஜினாமா செய்தார். தான் எப்போதுமே திமுக விசுவாசிதான் என்றும் கருணாநிதியே தனது தலைவர் எனவும் அவர் கூறியுள்ளார். ஆனாலும் கட்சி விரோத நடவடிக்கைகள் எதிலும் தாம் ஈடுபடவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தயநிதி மாறன் பேட்டி

———————————————————————————————————-

07.06.07  கவர் ஸ்டோரி
குமுதம் ரிப்போர்ட்டர்
தயாநிதியின் புதிய அவதாரம்
கலாநிதியின் அதிரடி வியூகம்

அசுரவேகத்தில் கலைஞர்
உஷார்படுத்திய ஜோதிடம்

1997_ல் ஐ.கே. குஜ்ரால் பிரதமராக இருந்தபோது, அவரது அமைச்சரவையில் தொழில்துறை அமைச்சராக இருந்தார் முரசொலிமாறன். அப்போது லண்டன் சென்று, இங்கிலாந்து பிரதமர் டோனி பிளேருடன் வர்த்தக உறவுகள் பற்றி மாறன் முக்கியப் பேச்சுவார்த்தை நடத்த வேண்டியிருந்தது.

தனது பயணத்திற்கு முன்பாக குஜ்ராலைச் சந்தித்து ஆலோசனை பெறப் போனார், மாறன். ‘நீங்களே முடிவு செய்து கொள்ளலாம். நீங்கள் சொல்வதுதான் நம் பாலிஸி’ என்று சொல்லி, அவரை வழியனுப்பி வைத்தார் குஜ்ரால். ஒரு பிரதமருக்குரிய அந்தஸ்துடன் அந்தச் சந்திப்பை நிகழ்த்தப் போனார் மாறன்.

இங்கிலாந்து பிரதமரின் அதிகாரபூர்வ இல்லமான எண்:10, டவுனிங் தெரு மாளிகைக்குள் நுழையும் முன்பாக, தன்னம்பிக்கைக்காக ‘ஆத்தா! தாத்தா!’ (கலைஞரின் பெற்றோர் அஞ்சுகம் மற்றும் முத்துவேலர்) என்று முனகிக் கொண்டேதான் உள்ளே போனார் மாறன். முக்கியத்துவம் வாய்ந்த அந்தச் சந்திப்பை வெற்றிகரமாக முடித்து விட்டு, லண்டனில் இருந்தே கலைஞருக்கு ஒரு கடிதம் எழுதினார்.

”இங்கிலாந்து பிரதமரைச் சந்திக்கும் முன்பாக, உங்கள் வாழ்த்துக்கள் கிடைக்கும் என்று நினைத்தேன். கிடைக்கவில்லை. இதற்காக நான் அழுதேன். (இருவருக்கும் கொஞ்சம் ஊடல் இருந்த நேரம் அது…!) நேற்று உங்கள் கடிதம் கிடைத்தது. அதைப் பார்த்ததும் அழுதேன். இது ஆனந்தக் கண்ணீர். என்னுடைய இந்தப் பயணம் வெற்றிகரமாக அமைந்தது. என்னாலேயே இதை நம்ப முடியவில்லை. நான் உங்கள் தயாரிப்பல்லவா!

என் சிந்தை_அணு ஒவ்வொன்றிலும் குடியிருந்து என் இதயத் துடிப்புகளாக இருந்து என்னை ஆட்டுவிக்கும் உங்கள் காலடிகளில் அனைத்தையும் சமர்ப்பிக்கிறேன்! நீங்களும் நானும்தான் இப்படி கண்ணீர்ப் பெருக்கோடு உணர்ச்சிகளைப் பரிமாறிக்கொள்ள முடியும். ஏனெனில், இது ரத்த பாசம்!” என்று அந்தக் கடிதத்தில் எழுதியிருந்தார் மாறன்.

கலைஞர் இன்றளவும் போற்றிப் பாதுகாக்கும் ஒருசில கடிதங்களில் இதுவும் ஒன்று.

இது நடந்து மிகச் சரியாக பத்தாண்டுகள் கடந்து விட்டன. அதே கலைஞர்… அதே ரத்த உறவுகள். ஆனால், காட்சியும் களமும் மாறிவிட்டன. ஊடல்களைத் தாண்டி உறுதியுடன் நீடித்த மாறனுடனான உறவுபோல அவரது வாரிசுகளுடன் அப்படி இருக்க முடியவில்லை கலைஞரால்! அப்பாவின் ரத்தம்தான் என்றாலும், அவர் போலவே ஓர் உறவை கலைஞருடன் தொடர்ச்சியாக வைத்துக்கொள்ள முடியாமல் தவிக்கிறார்கள் மாறனின் வாரிசுகளான கலாநிதியும், தயாநிதியும்! தனி சாம்ராஜ்யமாக வளர்ந்துவிட்ட மாறனின் வாரிசுகள், தங்களின் தொழில் கட்டமைப்பைக் காப்பாற்றுவது… எதிர்காலத் திட்டங்களைப் பற்றி யோசிக்க வேண்டியிருப்பது என அவர்களுக்குள்ள நிர்ப்பந்தங்களும் இதற்குக் காரணம்.

இந்தப் பின்னணிதான் கலைஞர் குடும்பத்திற்கும், மாறன் குடும்பத்திற்கும் சமீப காலமாக ஏற்பட்டுள்ள மோதலை முடிவுக்குக் கொண்டு வராமல் விரிசலை மேலும் அதிகப்படுத்தியிருக்கிறது. இளமையும் துடிப்பும் நிறைந்த மாறனின் வாரிசுகளுக்கு எதிராக, இந்த வயதிலும் கலைஞர் காய் நகர்த்தும் விதமும் வேகமும் அசாத்தியமானவை. பரபரப்புக்கும் ஆச்சர்யங்களுக்கும் பஞ்சமில்லாதவை…!

இரண்டு குடும்பங்களுக்கும் இடையேயான மனஸ்தாபங்கள் மறைய, மே_28 அன்று நடைபெற்ற மாறனின் மகள் அன்புக்கரசியின் வளைகாப்பு நிகழ்ச்சி அமையும் என்று எதிர்பார்த்தார்கள், இருதரப்புக்கும் வேண்டப்பட்ட சிலர். ஆனால், இந்நிகழ்ச்சியை கலைஞரும், ஸ்டாலினும் புறக்கணித்தார்கள். இருந்தபோதும், ஸ்டாலினின் மகன், மகள் உள்ளிட்ட அவரது குடும்ப உறுப்பினர்கள் இந்த வளைகாப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்கள். சமாதான முயற்சிகளுக்கு இவர்களின் வருகை ஒரு சிறு துளியளவுக்கு நம்பிக்கை தந்தது என்பதை நினைத்து சந்தோஷப்பட்டார்கள் சில நலம் விரும்பிகள்.

இதெல்லாம், கலைஞர் தனது டெல்லி விசிட்டை முடித்துக் கொண்டு மே_29 அன்று இரவு சென்னை திரும்பும் வரையில்தான்! அன்றிரவு கோபாலபுரத்தில் இருந்த கலைஞரைச் சந்திக்க ஸ்டாலினின் மகன், மகள் உள்ளிட்ட சிலர் போயிருக்கிறார்கள். இவர்கள் வந்திருக்கும் விஷயத்தைக் கேள்விப்பட்ட கலைஞர், ‘அவர்களை அங்கேயே போகச் சொல்லுங்க. இங்கு அவர்களுக்கு என்ன வேலை?’ என்று கோபமாகக் கேட்டிருக்கிறார்.

வளைகாப்பு நிகழ்ச்சிக்குத் தாங்கள் போனதுதான் தாத்தாவின் கோபத்திற்குக் காரணம் என்பதைப் புரிந்துகொண்ட ஸ்டாலின் வாரிசுகள், ‘நாங்கள் போனதற்கான காரணம் சமாதானத்திற்காக அல்ல… விரும்பி அழைத்ததை மறுக்க முடியவில்லை. தவிர, இது ஒரு சுபநிகழ்ச்சி…’ என்றெல்லாம் சொல்லிச் சமாதானப்படுத்திய பிறகே அமைதியாகியிருக்கிறார் கலைஞர்.

” ‘என்னை மீறி யாரும் சமாதான முயற்சிகளில் இறங்கக் கூடாது. அத்தகைய முயற்சிகளை நான் விரும்பவுமில்லை’ என்பதை தனது குடும்ப உறுப்பினர்களுக்கு இதன் மூலம் உணர்த்தினார் கலைஞர்” என்கிறார் அந்தச் சமயத்தில் அங்கிருந்த ஒரு பிரமுகர்.

கொஞ்சம் ஆறப்போட்டால் வேகம் குறைந்துவிடும் என்று எதிர்பார்த்தவர்களுக்கு, கலைஞரின் இந்த வேகம் ஆச்சர்யத்தைத் தரத் தவறவில்லை. மாறாக, எதிர்ப்பு வேகமும் அதிகரித்ததில் அவர்களுக்கு அதிர்ச்சிதான். இதற்குப் பின்னணியாக, கடந்த பத்து நாட்களுக்கு முன்பு நடந்த நிகழ்வுகளைச் சுட்டிக்காட்டுகிறார்கள் சிலர்.

2005 நவம்பரில் சன் டி.வி.யில் தனது பெயரில் இருந்த 20 சதவிகிதப் பங்குகளை மாறன் சகோதரர்களுக்கே விற்றார், கலைஞரின் மனைவி தயாளு அம்மாள். சன் டி.வி.யின் மொத்த மதிப்பு சுமார் ஆயிரம் கோடி என்று மதிப்பிடப்பட்டு, அதனடிப்படையில் தயாளு அம்மாவின் 20 சதவிகிதப் பங்குகளுக்கான பணம் (சுமார் 200 கோடி) தரப்பட்டது என்றொரு தகவல் உண்டு. பண விவரங்களை வெளியிடாவிட்டாலும், இந்தப் பரிவர்த்தனை விஷயத்தை அப்போதே பத்திரிகையாளர்களிடம் சொன்னார் கலைஞர்.

இது நடந்து இரண்டாண்டுகள் ஆகவுள்ள நிலையில்தான், இப்போது மீண்டும் அந்த விஷயம் கிளறப்பட்டிருக்கிறது. ‘நமது பங்குகளுக்கு ஒரு விலையை நிர்ணயம் செய்து, அதைத் தந்து நம்மை விலக்கி விட்ட பிறகு, சன் டி.வி.யின் மதிப்பு சுமார் ஆறாயிரம் கோடி என்று நிர்ணயித்து பங்குகளை வெளியிட்டார்கள். இந்த விஷயத்தில் நாம் ஏமாற்றப்பட்டிருக்கிறோம்’ என்று கலைஞரின் ரத்த உறவுகள் சிலர் கலைஞரிடம் குமுறியிருக்கிறார்கள்.

”இதில் ஓரளவு நியாயமிருப்பதாக உணர்ந்த கலைஞர், சமீபத்தில் மகாபலிபுரத்திற்கு ஓய்வுக்காகச் சென்றபோது, சன் குழுமத்தின் ஆடிட்டரை வரவழைத்து சில விவரங்களைக் கேட்டதாகத் தெரிகிறது. அதன் பிறகே கலைஞரின் கோபம் இன்னும் அதிகமானது” என்கிறார் இந்த சம்பாஷணைகளின் பின்னணிகளை அறிந்த ஒருவர்.

‘பங்குப் பரிவர்த்தனையில் எந்தத் தவறும் நடக்கவில்லை. நியாயப்படியே எல்லாம் நடந்தது’ என்று சன் குழுமத்தினர் தங்கள் தரப்பை மீண்டும் வலியுறுத்திய போதும், தங்கள் ஆடிட்டரையே அழைத்து விசாரிக்கிறார்கள் என்பதை அறிந்து, அறிவாலயத்தில் உள்ள சன் டி.வி. அலுவலகத்தில் இருந்த சில கணக்கு வழக்கு விவரங்களை உடனடியாக அங்கிருந்து அப்புறப்படுத்தி, பிரபல பத்திரிகை அலுவலகம் ஒன்றில் கொண்டு போய் வைத்தார்கள்.

இந்த விஷயத்தைப் பிறகு பார்க்கலாம் என்று நினைத்தோ என்னவோ… புதிதாக தாங்கள் தொடங்கவுள்ள கலைஞர் டி.வி.க்கான ஏற்பாடுகளை முடுக்கி விடும் வேலையில் தீவிரமாக இறங்கியிருக்கிறார் கலைஞர். சன் டி.வி. தொடங்கப்பட்ட காலத்தில் ஒரு பங்குதாரராக கலாநிதியுடன் இணைந்து பணியாற்றி, பின்பு பிரிந்துவிட்ட சரத் ரெட்டிதான், கலைஞர் டி.வி. நிர்வாகத்திற்காக கலைஞர் தேர்வு செய்திருக்கும் நபர். இவரைத் தேர்வு செய்த போதே கலைஞரின் வேகமும், கோபமும் எந்தளவுக்கு இருக்கிறது என்பதைப் புரிந்து கொண்டார்கள் தி.மு.க. முன்னோடிகள். இதே வேகத்தில் கலைஞர் டி.வி.க்கும் சரத்திற்கும் தனித்தனியே அறிவாலயத்தின் கீழ்த்தளத்தில் அறைகளும் ஒதுக்கப்பட்டன.

இவ்வளவு அரசியல் பணிகளுக்கிடையிலும் தினசரி ஓரிரு மணி நேரங்களாவது சரத்துடன் ஆலோசனை நடத்துகிறார். இதுதவிர, புதிய டி.வி.யில் பொழுதுபோக்கு அம்சங்களும் தரமானதாக இருக்க வேண்டும் என்பதற்காக பாலசந்தர், ராதிகா உள்ளிட்ட சின்னத்திரை ஜாம்பவான்களுடனும் ஆலோசனை நடத்தி வருகிறார் கலைஞர்.

இது ஒருபுறம் இருக்க, தங்களின் புதிய சேனலை ஒளிபரப்ப, மாறன் சகோதரர்களின் ஆதிக்கத்தில் உள்ள சுமங்கலி கேபிள்ஸை மட்டுமே நம்பியிருக்கக் கூடாது என்பதால், தனியாக ஒரு கேபிள் நெட்வொர்க்கைத் தொடங்கவும் யோசனை செய்திருக்கிறார்கள். ஆற்காட்டாரின் தம்பி தேவராஜ் இதற்கான ஏற்பாடுகளில் இறங்கியிருப்பதாகத் தெரிகிறது.

சமாதான முயற்சிகளைத் தடுப்பது மட்டுமல்ல… அதைச் செய்ய முனைவோர் மீதும் கலைஞர் கோபம் காட்டுகிறார் என்பதை உணர்ந்தே இருக்கிறார்கள் தயாநிதியும் கலாநிதியும். இளமையும், மூளையும் கைகொடுக்க… அவர்களும் சில காய் நகர்த்தல்களைச் செய்யத் தயாராகிறார்கள்.

இதில் முதல் ஸ்டெப் எடுத்து வைத்திருப்பவர் தயாநிதிமாறன். இதற்காக ‘தினகரன் நாளிதழின் நிர்வாகி’ என்ற அடையாளத்தோடு புதிய அவதாரம் எடுத்திருக்கிறார் தயாநிதி! மே_28 அன்று தனது தங்கையின் வளைகாப்பு முடிந்த உடனேயே, அன்று காலை தினகரன் நாளிதழ் அலுவலகத்திற்கு வந்தார். ‘இனி நான்தான் நிர்வாகத்தைக் கவனிக்கப் போகிறேன். நாம் இனி தினசரி சந்திக்கலாம்’ என்று ஆசிரியர் குழுவினரிடம் அவர் சொன்னபோது, அங்கிருந்தவர்களால் ஆச்சர்யத்தை மறைக்க முடியவில்லை.

சர்ச்சைக்குரிய தினகரன் நாளிதழ் கருத்துக்கணிப்பு வெளியான சமயத்தில், ‘எனக்கும் தினகரனுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை’ என்று சொன்ன தயாநிதிமாறன், இன்று இப்படி வெளிப்படையாக வந்து நிர்வாகப் பொறுப்பை ஏற்றுக்கொள்ளப் போவதாகச் சொன்னது சிலருக்கு அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.

”எந்த வகையிலும் தலைவருடன் (கலைஞர்) மோதல் போக்கு வேண்டாம். நாம் மூன்று மாதங்களுக்கு (ஆகஸ்ட் வரை) அமைதியாக, நமது வேலைகளைக் கவனிப்போம். கொஞ்சம் பொறுமையாக இருந்து செயலாற்றத் தவறிவிட்டோம். மதுரை வன்முறைச் சம்பவம் நடந்த நாளில் நாம் அமைதியாக இருந்திருந்தாலே அல்லது இவ்வளவு வேகமாக அழகிரி மீது விமர்சனம் செய்யாமல் இருந்திருந்தாலே மற்ற பத்திரிகைகள் தாங்களாகவே அழகிரியின் செயலை விமர்சித்திருப்பார்கள். ஆனால், நாம் முழுவேகம் காட்டவும் மற்றவர்கள் அமைதியாகி விட்டார்கள். நாம் தனிமைப்படுத்தப்பட்டு விட்டோம். இங்கேதான் தவறு நடந்து விட்டது. பரவாயில்லை. நம்பிக்கையோடு பணியாற்றுங்கள். மூன்று மாதம்தான். எல்லாம் சரியாகிவிடும்!” என்று நம்பிக்கையளிக்கும் வகையில், தனது கருத்துக்களை அப்போது சொல்லியிருக்கிறார் தயாநிதி.

அன்றிலிருந்து தினசரி தினகரன் அலுவலகத்திற்கு வருவதை வழக்கமாக்கிக் கொண்டிருக்கிறார். அவ்வப்போது சில செய்திகள் எப்படி வரவேண்டும் என்று ஆலோசனை சொல்லவும் தவறுவதில்லை. இந்தப் பணிகளுக்கிடையே தாத்தாவை எப்படியும் சமாதானப்படுத்த வேண்டும் என்ற எண்ணமும் தயாநிதிக்குத் தீவிரமாக இருக்கிறது என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள்.

இது ஒருபுறம் இருக்க… பலரது பார்வையும் இப்போது திரும்பியிருப்பது கலாநிதி மாறனை நோக்கித்தான். அதற்குக் காரணம் இருக்கிறது. தயாநிதி வெளி உலகிற்கு அறிமுகம் ஆனதே அரசியலை வைத்துத்தான். அந்த அரசியல் அங்கீகாரம், தனது தந்தை விட்டுச் சென்ற மத்திய சென்னை எம்.பி. பதவியில் ஆரம்பித்து, தி.மு.க. தலைவரான தனது தாத்தாவின் அரவணைப்பால் கிடைத்ததுதான் தயாநிதிக்கு.

கலாநிதி மாறன் இதற்கு நேர்மாறானவர். தனது சொந்த வாழ்க்கையாகட்டும், தனது தொழிலாகட்டும், அதில் அரசியலையும், அரசியல்வாதிகளையும் கொஞ்சம் தள்ளிவைத்தே பழக்கப்பட்டவர் அவர்.

”நான் கூச்ச சுபாவம் உள்ளவனும் அல்ல. நெருங்கிப் பழகுபவனும் அல்ல. நான் சாதாரண ஒரு நபர். அவ்வளவுதான். எனது தேவைகளுக்காக எனது குடும்பப் பின்னணிகளைச் சொல்லி அவற்றைப் பூர்த்தி செய்து கொள்வது எனக்கு உடன்பாடான விஷயமல்ல. நம்புங்கள்… நான் அமெரிக்காவில் எம்.பி.ஏ. படித்தபோது, எனது பணத்தேவைக்காக ஒரு ரெஸ்டாரெண்டில் வேலை பார்த்தேனே தவிர, என் குடும்பத்தை எதிர்பார்க்கவில்லை” என்று அடிக்கடி சொல்வார் கலாநிதி மாறன்.

இப்போது அரசியல் சூறாவளி தன்னையும் தன் குடும்பத்தினரையும் மையமாக வைத்துச் சுழலும்போதும் அதே மனநிலையில்தான் இருக்கிறார் கலாநிதி. ‘தனது டி.வி. சாம்ராஜ்யத்திற்கு எந்தப் பாதிப்பும் வந்துவிடக்கூடாது என்பதற்காக தனது மூளையை மட்டுமே பயன்படுத்தி சிலவற்றைச் செய்ய ஆரம்பித்திருக்கிறார் கலாநிதி’ என்கிறார்கள் சன் நெட்வொர்க் வட்டாரத்தில்.

கலைஞர் டி.வி.க்காக தனியாக கேபிள் நெட்வொர்க் ஆரம்பிக்கப் போகிறார்கள் என்பது மட்டுமல்ல… ஏற்கெனவே உள்ள சுமங்கலி கேபிள் நெட்வொர்க்கின் கேபிள்களை ஆங்காங்கே சிலர் வெட்டிவிடுவதாகவும் கலாநிதிக்குத் தகவல்கள் வருகின்றன. ‘கேபிள் டி.வி. சர்வீஸை’ அரசே எடுத்து நடத்தலாம் என்று லயோலா கல்லூரியின் கருத்துக் கணிப்பில் பெரும்பாலான மக்கள் சொல்லியிருந்ததை எடுத்துக்காட்டி கலைஞர் வெளியிட்ட கருத்துக்களும், கேபிள் டி.வி. விரைவில் அரசுடைமை ஆகவும் வாய்ப்பிருக்கிறது என்ற செய்தியும் கலாநிதியை நிறையவே யோசிக்க வைத்திருக்கிறது.

இனியும் தனது டி.வி. ஒளிபரப்புக்கு கேபிளை நம்பிப் பயனில்லை என்ற யதார்த்தத்தை உணர்ந்துள்ள கலாநிதி, இன்னும் மூன்று மாதங்களுக்குள் சன் நெட்வொர்க்கின் சார்பில் செயற்கைக் கோள் மூலம் (சிறிய ஆண்டெனா உதவியுடன்) வீடுகளுக்கே நேரடியாக டி.வி. நிகழ்ச்சிகளைக் கொண்டு சேர்க்கும் DTH  சேவையைத் தொடங்க முடிவெடுத்து, அதற்கான வேலைகளில் மும்முரமாக இறங்கியிருக்கிறாராம்! இதை நிறைவேற்றிவிட்டாலே சன் டி.வி.யின் பயணத்தை எந்தச் சக்தியாலும் தடுத்து நிறுத்த முடியாது என்றும் நம்புகிறாராம் கலாநிதி.

‘தனது இந்த நடவடிக்கைகளைத் தெரிந்து கொண்டு, சன் டி.வி.க்கு DTH  சேவைக்கான உரிமத்தை வழங்கக் கூடாது என்று டெல்லியில் இப்போது சிலர் காய் நகர்த்துவதையும் உணர்ந்துள்ள கலாநிதி, அதை எதிர்கொண்டு சமாளித்து, வரும் ஆகஸ்ட் மாதத்திற்குள் தனது நோக்கத்தை நிறைவேற்றவும் உரிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்!’ என்கிறார்கள் விஷயமறிந்தவர்கள்.

இப்படி… மூன்று மாதங்கள் அமைதியாக இருங்கள் என்று தினகரன் ஊழியர்களுக்கு தயாநிதி ஆலோசனை சொல்கிறார்… கலாநிதி, மூன்று மாதத்திற்குள் DTH  சர்வீஸைத் தொடங்கி, எதற்கும் தயாராக இருக்க வேண்டும் என்கிறார்…. கலைஞர் குடும்பத்திலும் ஆகஸ்ட் மாதத்திற்குள்ளாக கனிமொழிக்கு ஏதாவது செய்யுங்கள்… ஸ்டாலினை ஆட்சி பீடத்தில் அமர்த்துங்கள்… என்றும் கலைஞருக்கு நெருக்கடி தந்திருக்கிறார்கள். அதனால்தான் இவ்வளவு விரைவாக கனிமொழி எம்.பி.யாக்கப்பட்டிருக்கிறார். ஸ்டாலினும் மிக விரைவில் பதவி உயர்வு அடைவார் என்றும் எதிர்பார்ப்பு இருக்கிறது.

”ஏன் எல்லோரும் ஆகஸ்டையே குறிவைக்கிறார்கள்…?” என்ற கேள்வியோடு கலைஞர் குடும்பத்திற்கும் மாறன் குடும்பத்திற்கும் நெருக்கமானவர்களை வலம் வந்தால், ‘எல்லாம் ஜோதிடம்தான் காரணம்!’ என்ற பதில் வந்து நம்மை ஆச்சர்யப்பட வைக்கிறது.

கலைஞர்_மாறன் இருவர் குடும்பத்திலும் உள்ள பெண்கள் கோயில், குளம் என்று போவதை வழக்கமாகக் கொண்டுள்ளவர்கள் என்பது தவிர, ஜோதிடத்திலும் ஆழ்ந்த நம்பிக்கை உடையவர்கள் என்பதும் உள்வட்டாரத்தில் அனைவரும் அறிந்ததே.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே இந்த இரண்டு தரப்பும் தங்களுக்கு நெருக்கமான ஜோதிடர்களை ஆலோசித்ததில் ஒரே மாதிரியாக அவர்கள் சொன்ன தகவல், ‘வரும் ஆகஸ்ட் 5_ம் தேதியன்று நடைபெறவுள்ள சனிப்பெயர்ச்சி, ஆட்சியாளர்களுக்கு நல்லதல்ல. அதனால் ஆட்சி அதிகாரம் கைமாறும். எதிரும் புதிருமானவர்கள் ஒன்றுசேரும் வகையில் விநோதமான அரசியல் மாற்றங்களும் நிகழும்!’ என்பதுதான்!

”ஜோதிட ரீதியாக மட்டுமல்ல, யதார்த்தமும் அதை நோக்கித்தான் போகிறது என்பதால்தான் ஆகஸ்டுக்குள் சிலவற்றைச் செய்யச் சொல்லி கலைஞர் குடும்பத்தினர் வற்புறுத்த…. ‘ஆகஸ்ட் வரை பொறுத்திருங்கள். அதன்பிறகு நமது திட்டங்களைச் செயல்படுத்தலாம்’ என்று மாறன் சகோதரர்களும் அணை போடுகிறார்கள்” என்கிறார்கள் பிரச்னையின் இந்தப் பரிணாமத்தை உணர்ந்த முக்கியப் பிரமுகர்கள் சிலர்!

இப்படி, பகுத்தறிவைத் தாண்டி ஜோதிடம் தனது பங்களிப்பைச் செய்ய…. அரசியல் அனுபவம் கொண்ட கலைஞரும், இளமை ரத்தம் துள்ளும் மாறன் சகோதரர்களும் தங்கள் எண்ணங்களுக்குச் செயல்வடிவம் தர முனைந்திருக்கும் இந்த இரண்டாவது காண்டத்தின் முடிவை அறிந்துகொள்ள இரு குடும்பங்களின் உறுப்பினர்கள் மட்டுமல்ல; அதிர்ச்சி கலந்த, உணர்ச்சிகள் நிறைந்த மனநிலையோடு கழக உடன்பிறப்புகளும் காத்திருக்கிறார்கள்! ஸீ

சில மாதங்களுக்கு முன்பு, போயஸ் கார்டனுக்குள் காரில் தனது நண்பரோடு போய்க் கொண்டிருந்தார் தயாநிதி மாறன். அங்கே ஜெயலலிதாவின் வீட்டிற்குப் பாதுகாப்பாக இருக்கும் போலீஸார், ஷிப்ட் மாறும் நேரத்தில் கும்பலாக ஒரு வேனில் இருந்து இறங்குவதைப் பார்த்தார் தயாநிதி. அதன்பிறகு ‘முன்னாள் முதல்வருக்கு எதற்கு இவ்வளவு பாதுகாப்பு?’ என்று கேள்விகள் எழ, அடுத்த சில நாட்களிலேயே ஜெ.வின் பாதுகாப்பு குறைக்கப்பட்டது. இதையடுத்து, எழுந்த விமர்சனங்களை அரசியல்ரீதியாக கலைஞர் சமாளித்தார் என்பது வேறு விஷயம்.

இப்போது காட்சிகள் மாறிவிட்டன. மத்திய அமைச்சராக இருந்தபோது இருந்த பாதுகாப்புடனேயே இப்போதும் வலம் வருகிறார் தயாநிதி. ‘பதவி போன பின்பும் எதற்கு இவ்வளவு பாதுகாப்பு?’ என்று கோபாலபுரத்திலிருந்து குரல் கேட்கிறதாம் இப்போது! அதனால், எந்த நேரத்திலும் தயாநிதியின் பாதுகாப்பு வாபஸாகும் என்கிறார்கள் கோபாலபுரத்தின் குரலை அருகில் இருந்து கேட்டவர்கள்.

– எஸ்.பி. லட்சுமணன்

—————————————————————————————-

Posted in Alagiri, Alakiri, Analysis, Anbumani, Andipatti, Arcot, Astrology, Azhagiri, Azhakiri, Backgrounder, Balachander, Balu, Belief, Biosketch, CB-CID, CBI, Chidamabram, CID, Coimbatore, Congress, Dayaalu Ammal, Dayalu Ammaal, Dayanidhi, Dayanidhi maran, Dayanidhy, Dayanithi, Devaraj, Devraj, Dhinakaran, Dinagaran, Dinakaran, DMK, Faces, Gujral, History, IAS, IPS, Jaffer sait, Jaffer seth, Kalainjar TV, Kalanidhi, Kalanidhy, Kalanithi, Kalanithy, Kanimoli, Kanimozhi, Kanimozi, Karunanidhi, Karunanidhy, Karunanidi, Karunanithi, Kavithalaya, Kovai, Kumaran, Lok Saba, LokSaba, M Karunanidhi, M karunanidhy, M karunanithi, Mallika, Manmohan, Maran, MP, Mu Ka, Mu Ka Azhagiri, Mu Ka Stalin, Mu Karunanidhi, Mu Karunanidhy, Mu Karunanidi, MuKa, Murasoli, Nagma, Nilagiri, Nilgiris, officers, P Chidamabram, Pa Chidamabram, Palanichami, Palanisami, Palanisamy, Pazanisamy, Pazhanisami, Pazhanisamy, PC, people, PMK, Police, Pongaloor, Pongalur, Radaan, radan, Radhika, Ramadas, Ramadoss, RAW, Sarath, Sarath Reddy, Sarathkumar, SCV, Selvaraj, Shanmugasundaram, Shanmukasundaram, Shanmukasundharam, Shanumugasundaram, Shanumughasundaram, Sharath, Sharath Reddy, Sharathkumar, Simran, Sonia, Sumangali, Sumangali Cable, Sumangali Cable Vision, Sumankali, Sun, Temple, Thevaraj, Thinakaran, Thiruchi, Thiruchirappalli, Thiruchy, TR Balu, Transfer, Trichirappalli, Trichy, TV, Veeragopal, Veerasami, Veerasamy | 4 Comments »

Actors Activism – Is it for selfish purposes? (Dinakaran Survey)

Posted by Snapjudge மேல் மே 10, 2007

நடிகர்களுக்கு நாட்டு மக்கள் மீதுள்ள அக்கறை…

சினிமா மீது தமிழர்களுக்கு எப்போதும் ஈர்ப்பு உண்டு. நடிகர்களுக்காக எதையும் செய்ய பலர் காத்திருக்கிறார்கள். ஆனால் பதிலுக்கு நடிகர்கள்…?

ஆம்… அதை பற்றித்தான் தமிழக மக்களிடம் கேட்கப்பட்டது. நடிகர்களுக்கு, நாட்டு மக்கள் மீதுள்ள அக்கறை எப்படி என்பதுதான் கேள்வி.

மக்களிடம் நடிகர்கள் அக்கறை கொண்டிருப்பதற்கு காரணம் தங்கள் படம் ஓட வேண்டும் என்பதற்குத்தான் என பெரும்பாலானவர்கள் கருத்துச் சொல்லியுள்ளனர். கருத்துக் கணிப்பில் பங்கேற்றவர்களில் சரியாக பாதி பேர், அதாவது 50 சதவீதம் பேர் இப்படித்தான் சொல்கிறார்கள்.

  • நடிகர்களின் அக் கறையில், தங்கள் படம் ஓட வேண்டும் என்ற சுயநலம் கலந்து இருக்கிறது என்கின்றனர் மக¢கள்.
  •  Ôஅரசியலுக்கு வருவதற்காகத்தான்Õ மக்கள் மீது நடிகர்கள் அக்கறையை கொட்டுகின்றனர் என்பது 31 சதவீதம் பேரின் கருத்து.
  • நடிகர்களின் அக்கறை `உண்மையானது‘ என்று முழுமையாக நம்புபவர்கள் 14 சதவீதம் பேர் மட்டும்தான்.
  • இந்த விஷயத்தில் கருத்து தெரிவிக்காதவர்கள¢ 5 சதவீதம் பேர்.

நடிகர்களின் அக்கறையை விளாசித் தள்ளியவர்களில் நாகர்கோவில் மக்களுக்குத்தான் முதலிடம். அங்கு 65 சதவீதம் பேர், படம் ஓடுவதற்காகத்தான் நடிகர்கள் அக்கறையாக இருக்கிறார்கள் என அதிரடியாக கூறி உள்ளனர்.

அதற்கு அடுத்தபடியாக சென்னைவாசிகள் நடிகர்களை காய்ச¢சி எடுக்கிறார்கள். 58 சதவீத சென்னைவாசிகளுக்கு நடிகர்கள் அக்கறையின் பின்னணி புரிந்திருக்கிறதாம்.

வேலூர் (55 சதவீதம்), சேலம் (52), கோவை (48), திருச்சி (52), மதுரை (51), நெல்லை (43) பகுதிகளிலும் இந்த கருத்துதான் அதிகம் நிலவுகிறது.

புதுவை மக்களில் 30 சதவீதம் பேர் படம் ஓட வேண்டும் என்பதுதான் நடிகர்களின் அக்கறைக்கு காரணம் என கூறியுள்ளனர். 39 சதவீதம் பேர், அவர்களின் அரசியல் ஆசையை காரணம் காட்டுகின்றனர்.

நடிகர்களுக்கு மக்கள் மீது உள்ள அக்கறை Ôஅரசியலுக்கு வருவதற்காகத்தான்‘ என ஒரே போடாக போடுபவர்கள் கொங்கு மண்டலத்தினர்தான். கோவைவாசிகளில் 42 சதவீதம் பேர் இவ்வாறு கூறியுள்ளனர். சென்னையில் இப்படிச் சொன்னவர்கள் 30 சதவீதம் பேர். வேலூர் (37 சதவீதம்), சேலம் (27), திருச்சி (26), மதுரை (30), நெல்லை (30), நாகர்கோவில் (21 சதவீதம்).

நடிகர்கள் அக்கறை நிஜமானதுதான் என அதிகம் நினைப்பவர்கள் நெல்லை சீமையினர்தான். அங்கு 26 சதவீதம் பேர் நடிகர்களின் அக்கறையை பார்த்து நெகிழ்கின்றனர். அதற்கு அடுத்து திருச்சி மக்களில் 18 சதவீதம் பேர் இம்மாதிரி உருகுகின்றனர். நடிகர்கள் அக்கறை உண்மையானது என¢பதில் நம¢பிக்கையில்லாதவர்களாக வேலூர், கோவைவாசிகள் உள்ளனர். இப் பகுதிகளில், 8 சதவீதம் பேர்தான் நடிகர்களின் அக்கறையை நம்புகின்றனர்.

Posted in activism, Actors, Actress, Actresses, Cinema, Dinagaran, Dinakaran, Films, Movies, Rajini, Rajiniganth, Rajinikanth, Rajni, Rajniganth, Selfish, Society, Stars, Sun, Sun TV, Survey, Tamil, Tamil Actor, Tamil Actors, Tamil Actress, Tamil Actresses, Tamil Cinema, Tamil Film, Tamil Films, Tamil Movie, Tamil Movies, Tamil Music, Tamil Padam, Tamil Pictures, Tamil Stars, Tamil Theater, Tamil Theatres, TV, Vijaiganth, Vijaikanth, Vijayaganth, Vijayakanth, Welfare | Leave a Comment »

Attack Pandi – Sun TV & Dinakaran Madurai office ransacking: How the innocent employees got butchered?

Posted by Snapjudge மேல் மே 9, 2007

நாளிதழ் அலுவலகத் தாக்குதலில் 3 பேர் இறந்தது எப்படி?

மதுரை, மே 10: மதுரை தினகரன் நாளிதழ் அலுவலகம் மீது நடந்த தாக்குதலில் தீயில் சிக்கி 2 பொறியாளர்களும், காவலாளியும் புதன்கிழமை உயிரிழந்தனர்.

கம்ப்யூட்டர் பொறியாளர்கள்

  • வினோத்குமார் (26),
  • கோபிநாத் (25),
  • காவலாளி முத்துராமலிங்கம் ஆகியோர் அலுவலக அறைகளுக்குள் சிக்கி உயிரிழந்தனர்.

அவர்களது சடலம் பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

வினோத்குமார்: பொறியாளர் வினோத்குமாரின் தந்தை முருகேசன். தாய் பூங்கொடி. மதுரை வானமாமலை நகர் நேரு தெருவில் வசித்து வருகின்றனர்.

முருகேசன் கட்டடங்களுக்கு மார்பிள் போடும் காண்டிராக்ட் தொழில் செய்துவருகிறார்.

கம்ப்யூட்டர் பிரிவில் பி.இ. பட்டம் பெற்ற வினோத்குமாருக்கு திருமணம் ஆகவில்லை. இவரது தம்பி கார்த்திக்பாண்டியன் கேட்டரிங் கல்லூரியில் படித்து வருகிறார்.

கோபிநாத்: ராமநாதபும் மாவட்டம், சக்கரைக் கோட்டையைச் சேர்ந்த கோபிநாத், கம்ப்யூட்டரில் பி.இ. பட்டம் பெற்றவர். இவரது சகோதரர் மதுரையில் உள்ள கல்லூரியில் படித்து வருகிறார்.

இவரது தந்தை கோகுலதாஸ் மின்வாரிய உதவிப் பொறியாளராக உள்ளார். தாயார் கோகுலவள்ளி.

இறந்தது எப்படி?: ஊழியர்கள் இறந்ததை நேரில் பார்த்த ஊழியரிடம் கேட்டபோது அவர்கள் கூறியதாவது:

கருத்துக்கணிப்பு வெளியானதை அடுத்து கும்பல் கும்பலாக வந்த பலர் எங்கள் அலுவலகத்தின் முன் பத்திரிகை எரிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காலை 10 மணிக்கு வந்த கும்பல் கல்வீசித் தாக்குதலில் ஈடுபட்டதால் பெண் ஊழியர்கள் பலரையும் பத்திரமாக வீடுகளுக்கு அனுப்பி வைத்தோம்.

பின்னர் 11 மணியளவில் அட்டாக் பாண்டி தலைமையில் வந்த கும்பல் பெட்ரோல் குண்டுகளை அலுவலகத்தின் வரவேற்பறை, கணினி அறை, வாகனம் நிறுத்துமிடம் உள்ளிட்ட 6 இடங்களில் வீசினர். இதனால், தீ மளமளவென பரவியது. தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்தும் உடனடியாக வரவில்லை. போலீஸ் நடவடிக்கையும் தாமதமாக இருந்தது. இதனையடுத்து அலுவலகம் புகையால் சூழப்பட்டது. பலரும் தப்பி வெளியேறினோம். இந் நிலையில் கம்ப்யூட்டர் பொறியாளர்கள் கோபிநாத், வினோத்குமார் ஆகியோர் தங்கள் அறையில் சிக்கி மூச்சுத்திணறி இறந்தனர்.

தீயணைப்புத் துறையினர் வந்து நீண்ட நேரத்துக்கு பிறகே 2 பேரையும் மீட்க முடிந்தது. காவலாளி முத்துராமலிங்கம் சடலத்தை மாலையில் தான் மீட்கமுடிந்தது என்றனர்.


பலியான மூவரின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 15 லட்சம் நிதியுஉதவி: கலாநிதி மாறன்மதுரை, மே 10 மதுரை தினகரன் நாளிதழ் அலுவலகத்தில் தீயில் சிக்கி உயிரிழந்த 3 பேர் குடும்பத்தினருக்கும், தலா ரூ. 15 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என சன் குழுமத் தலைவர் கலாநிதி மாறன் தெரிவித்தார்.மதுரையில் புதன்கிழமை பெட்ரோல் குண்டு வீச்சு தாக்குதலுக்குள்ளான தினகரன் அலுவலகத்தை நேரில் பார்வையிட்டு, தாக்குதலில் இறந்த ஊழியர்களுக்கு அஞ்சலி செலுத்திய பின் செய்தியாளர்களிடம் அவர் கூறியது:குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். நடவடிக்கை எடுக்கும்வரை போராடுவோம். திமுக தலைவர் கருணாநிதி தலைமையிலான ஆட்சியில், இச் சம்பவம் நடந்திருப்பது வருத்தமளிக்கிறது.இது தனிநபர் மீது நடந்த தாக்குதல் அல்ல. பத்திரிகை சுதந்திரத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் என்றார்.கருத்துக் கணிப்பு தேவையில்லை என்ற நோக்கில் முதல்வர் கருணாநிதியே கூறியுள்ளாரே? எனச் செய்தியாளர் கேட்டதற்கு, அதற்கு 3 பேர் சாவுதான் தீர்வாகுமா? என வினவினார்.தாக்குதலின் போது பாதுகாப்புக்கு நின்ற போலீஸôர் வேடிக்கை பார்த்ததாகக் கூறப்படுகிறதே, இதற்கு யார் காரணம்? எனக் கேட்டதற்கு, நீங்கள் (செய்தியாளர்கள்) நினைப்பதைத்தான் நாங்களும் நினைக்கிறோம் எனப் பதிலளித்தார் கலாநிதி மாறன்.

இச் சம்பவத்துக்கு மு.க அழகிரியின் தூண்டுதலே காரணம் என, சன் குழுமத்தின் தலைமை நிர்வாக அலுவலர் ஆர்.எம். ரமேஷ் தெரிவித்தார்.


மதுரையில் மறியல்} 7 பஸ்கள் உடைப்பு: மேயர், துணை மேயர் உள்பட 200 பேர் மீது வழக்குமதுரை, மே 10: தமிழக முதல்வரின் அரசியல் வாரிசு யார் என்பது தொடர்பாக தினகரன் நாளிதழ் வெளியிட்ட கருத்துக் கணிப்புக்கு கண்டனம் தெரிவித்து மதுரையில் அரசு பஸ்கள் உள்ளிட்ட 7 பஸ்கள் புதன்கிழமை சேதப்படுத்தப்பட்டன.இது தொடர்பாக 7 பேரை போலீஸôர் கைது செய்தனர். மதுரை மாநகராட்சி மேயர் கோ.தேன்மொழி, துணை மேயர் பி.எம்.மன்னன், மாநகராட்சிக் கவுன்சிலர்கள் உள்ளிட்ட 200 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.தினகரன் நாளிதழில் வெளியான கருத்துக் கணிப்புக்கு கண்டனம் தெரிவித்து மு.க.அழகிரியின் ஆதரவாளர்கள் புதன்கிழமை காலையிலிருந்தே மதுரை நகர் மற்றும் புறநகர் பகுதியில் தினகரன் நாளிதழ்களை எரித்துப் போராட்டம் நடத்தினர்.திமுகவின் 4-ம் பகுதிச் செயலர் எம்.ஜெயராமன் தலைமையில் சுமார் 40 பேர் ஆரப்பாளையம் பஸ் நிலையத்தில் கூடி அந்த நாளிதழ்களை எரித்தனர். மேலும், அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 4 அரசு பஸ்களை கல் வீசியும், கட்டையால் தாக்கியும் சேதப்படுத்தினர்.மேயர் கோ.தேன்மொழி தலைமையில் மதுரை பெரியார் பஸ் நிலையம் கட்டபொம்மன் சிலை அருகே பஸ் மறியலில் ஈடுபட்டனர். அப்போது, சிலர் அங்கிருந்த பஸ்ûஸ கல் வீசித் தாக்கி சேதப்படுத்தினர். உத்தங்குடி பகுதியில் நடைபெற்ற மறியல் சம்பவத்தில் தனியார் பஸ்ûஸயும், அரசு பஸ்ûஸயும் சிலர் சேதப்படுத்தினர்.இதேபோல், மணிநகரத்தில் திமுக பிரமுகர் சரவணன் தலைமையிலும், கோரிப்பாளையம் தேவர் சிலை அருகே 1-ம் பகுதிச் செயலர் ரவிச்சந்திரன், மகால் பகுதியில் தொண்டர் அணி அமைப்பாளர் வி.பி.பாண்டி தலைமையிலும், நேதாஜி சிலை அருகே 38-வது பகுதிச் செயலர் கே.பி.செல்வம் தலைமையிலும் மறியலில் ஈடுபட்டனர்.

மதுரையில் முனிச்சாலை, விரகனூர் சுற்றுச்சாலை உள்ளிட்ட 35-க்கும் மேற்பட்ட இடங்களில் மறியல் நடைபெற்றது.

இதனால் ஆங்காங்கே கடும் போக்குவரத்துப் பாதிப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து மதுரை போலீஸ் கமிஷனர் ஏ.சுப்பிரமணியன் கூறியது: பல்வேறு இடங்களில் நாளிதழ்கள் எரிப்பு மற்றும் பஸ் மறியலில் ஈடுபட்ட மதுரை மேயர், துணை மேயர், சில கவுன்சிலர்கள் உள்ளிட்ட 200 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக முதல்கட்ட நடவடிக்கையாக மதுரை நகரில் 7 பேரையும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 23 பேரையும் கைது செய்துள்ளோம். மேலும், நகரில் அசம்பாவிதங்கள் நடைபெறாமல் தக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம் என்றார்.


It all started here with Dinakaran – Sun TV Network’s Survey Results from AC Nielsen
கலைஞரின் அரசியல் வாரிசு யார்? கலைஞர் கருணாநிதியின் அரசியல் வாரிசாக யார் வர வேண்டும் என விரும்புகிறீர்கள்? என்ற கேள்விக்கு தமிழக அளவில் 70 சதவீதம் மக்கள் மு.க.ஸ்டாலின் என்று பதிலளித்துள்ளனர். மு.க.அழகிரி என்று 2 சதவீதம் பேரும், கனிமொழி என்று 2 சதவீதம் பேரும் பதில் அளித்தனர். 20 சதவீத மக்கள் வேறு பெயர்களை பதிலாக தெரிவித்தனர். 6 சதவீதம் பேர் எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை.“ஸ்டாலின்தான் கலைஞரின் அரசியல் வாரிசு’’ என அதிகம் பேர் சொல்லியிருப்பது

  • கோவை பகுதியில்தான். அங்கு 78 சதவீத மக்களிடம் இந்தக் கருத்து காணப்படுகிறது. அதனையடுத்து
  • வேலூர் பகுதியில் 77 சதவீதம் பேரும்,
  • திருச்சி பகுதியில் 71 சதவீதம் பேரும் இக்கருத்தை தெரிவித்துள்ளனர். மாநில சராசரியை விட சற்று குறைவாக
  • சென்னையில் 68 சதவீதம் பேர் ஸ்டாலின் பெயரை குறிப்பிட்டனர்.
  • மதுரையில் இந்த சதவீதம் 67 ஆக,
  • புதுச்சேரியில் 65 ஆக உள்ளது.
  • சேலத்தில் 61%.

“அரசியல் வாரிசு அழகிரி’’ என்று கூறியிருப்பவர்கள் எண்ணிக்கை

  • மதுரையை விட நெல்லையில் அதிகமாக இருக்கிறது.
  • மதுரையில் 6 சதவீதம் பேரும்
  • நெல்லையில் 11 சதவீதம் பேரும் அழகிரி பெயரை சொல்லியிருக்கிறார்கள்.
  • புதுச்சேரியில் 2 சதவீதம் பேரும்,
  • வேலூர்,
  • கோவை,
  • திருச்சி,
  • நாகர்கோவில் ஆகிய பகுதிகளில் தலா 1 சதவீதம் பேரும் அழகிரிதான் கலைஞரின் அரசியல் வாரிசு என்ற கருத்தை தெரிவித்திருக்கிறார்கள்.
  • சென்னை மற்றும்
  • சேலத்தில் அதற்கும் குறைவானவர்கள் இக்கருத்தை வெளியிட்டுள்ளனர்.

“கனிமொழியே கலைஞரின் அரசியல் வாரிசு’’ என்று

  • மதுரையில் 5 சதவீத மக்களும்
  • சேலத்தில் 4 சதவீதம் பேரும் கூறியிருக்கின்றனர். இந்த எண்ணிக்கை
  • நெல்லையில் 3 சதவீதமாகவும்
  • நாகர்கோவில் பகுதியில் 2 சதவீதமாகவும் இருக்கிறது.
  • சென்னை,
  • வேலூர்,
  • புதுச்சேரி,
  • கோவை பகுதிகளில் தலா 1 சதவீதம் பேர் கனிமொழி பெயரை குறிப்பிட்டனர்.

இந்த மூன்று பேரை தவிர வேறு பெயர்களை சொன்னவர்கள் சென்னையில் அதிகம். 31 சதவீத சென்னைவாசிகள் அத்தகைய கருத்து தெரிவித்தனர். சேலத்தில் 23, வேலூர், கோவையில் தலா 19, நாகர்கோவில் பகுதியில் 18, திருச்சியில் 16, புதுச்சேரி பகுதியில் 15 சதவீதம் மக்கள் இவ்வாறு வேறு பெயர்களை குறிப்பிட்டுள்ளனர்.

ஸ்டாலின் பெயரை முன்மொழிந்தவர்களில் 33 சதவீதம் பேர் “அரசியலில் அவர் அனுபவசாலி’’ என்ற காரணத்தால் அவரை குறிப்பிட்டதாக சொல்கின்றனர். வேலூர் (40), புதுச்சேரி (38), கோவை (37) சேலம் (35) பகுதிகளில் மாநில சராசரியை விடவும் அதிகமானவர்கள் ஸ்டாலினின் அரசியல் அனுபவத்தை காரணமாக சுட்டிக் காட்டியுள்ளனர். சென்னை, மதுரை, நெல்லை ஆகிய இடங்களில் தலா 32 சதவீதம் பேரிடம் இதே கருத்து வெளிப்பட்டது. “கட்சியிலும் ஆட்சியிலும் பல பொறுப்புகளை வகித்திருப்பது ஸ்டாலினுக்குரிய பிளஸ் பாயின்ட்’’ என்று பெரும்பாலானவர்கள் சுட்டிக்காட்டினர்..


சிறப்பாக செயல்படும் மத்திய அமைச்சர்கள் யார்? தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர்களில் மிகவும் சிறப்பாக செயல்படுபவர் தொலைத் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர்

  • தயாநிதி மாறன் என்று தமிழக அளவில் 64 சதவீத மக்கள் கூறியுள்ளனர்.
  • 27 சதவீத மக்கள் நிதி அமைச்சர் ப. சிதம்பரம் பெயரை குறிப்பிட்டுள்ளனர்.
  • கப்பல் மற்றும் தரைவழி போக்குவரத்து அமைச்சர் டி.ஆர். பாலு பெயரை 7 சதவீதம் பேர் தேர்வு செய்தனர்.
  • ஒரு சதவீதம் பேர் சுகாதாரத் துறை அமைச்சர் அன்புமணி பெயரை குறிப்பிட்டுள்ளனர்.
  • வேலூரில் அதிகபட்சமாக 79% பேர் எங்கள் சாய்ஸ் தயாநிதி மாறன் என கூறியுள்ளனர்.
  • சேலம்,
  • கோவையில் தலா 73 சதவீதம் பேரும்,
  • சென்னையில் 61 சதவீதம் பேரும் சிறந்த அமைச்சராக தயாநிதி மாறனை தேர்வு செய்துள்ளனர்.
  • புதுச்சேரியில் 67%,
  • திருச்சி,
  • மதுரையில் தலா 58%,
  • நாகர்கோவிலில் 57%,
  • நெல்லையில் 53% பேர் தயாநிதி மாறன் மிகச் சிறப்பாக செயல்படுவதாக கூறியுள்ளனர்.

அமைச்சர் சிதம்பரம் நன்றாக செயல்படுகிறார் என்று

  • மதுரையில் 36 சதவீதம் பேரும்
  • சென்னையில் 24 சதவீதம் பேரும் தெரிவித்துள்ளனர்.

டி.ஆர்.பாலுவின் செயல்பாடு நன்றாக இருப்பதாக தெரிவித்தவர்கள்

  • திருச்சி,
  • நாகர்கோவிலில் தலா 12%.
  • சென்னை மக்களில் 11 சதவீதம் பேர் பாலு சிறப்பாக செயலாற்றுவதாக கூறினர்.
  • நெல்லை 9%,
  • சேலம்,
  • மதுரை தலா 4%,
  • புதுச்சேரி 3%.

சுகாதாரத் துறை அமைச்சர் அன்புமணியின் செயல்பாடு பிடித்திருப்பதாக

  • புதுச்சேரி பகுதியில் 4 சதவீதம் பேர் கூறியிருக்கின்றனர்.
  • சென்னையில் இந்த கருத்து கொண்டிருப்பவர்களின் சதவீதம் 2.
  • வேலூர்,
  • திருச்சி,
  • நெல்லையில் தலா 1 சதவீதம்.
  • சேலம்,
  • கோவை,
  • மதுரை,
  • நாகர்கோவிலில் யாரிடமும் இக்கருத்து வெளிப்படவில்லை.
  1. ஒரு ரூபாயில் இந்தியா முழுவதும் போனில் பேசும் வசதி,
  2. செல்போன் கட்டணங்கள் குறைப்பு,
  3. பன்னாட்டு தொலைத் தொடர்பு நிறுவனங்களின் தமிழக வருகை ஆகிய காரணங்களால் தயாநிதி மாறனின் செயல்பாட்டை சிறந்ததென குறிப்பிட்டதாக 73 சதவீதம் பேர் கூறியுள்ளனர்.
  4. இளமைத் துடிப்புடன் அவர் செயலாற்றுவது தங்களைக் கவர்ந்ததாக 24 சதவீதம் பேர் குறிப்பிட்டனர்.

இந்திய பொருளாதாரம் வளர்ச்சிப் பாதையில் செல்வதற்கு சரியான வழி காட்டுகிறார் என்று சிதம்பரம் பெயரை வழி மொழிந்தவர்களில் 52 சதவீதம் பேர் கூறினர். நிதித் துறையை அரசியல்வாதி போல் அல்லாமல் நிபுணர்போல அவர் கையாள்வதாக 11 சதவீதம் மக்கள் கருத்து கூறினர்.

அமைச்சர் பாலு பெயரை குறிப்பிட்டவர்களில் பெரும்பாலானோர் சேது சமுத்திர திட்டத்தில் அவர் காட்டும் ஈடுபாட்டை காரணமாக கூறினர். சென்னை பகுதியில் உள்ளவர்களில் அதிகமானவர்கள் தேசிய நெடுஞ்சாலை மேம்பாடு மற்றும் புதிய மேம்பாலங்கள் கட்டுவதில் அவரது ஆர்வத்தை சுட்டிக்காட்டினர்.

அமைச்சர் அன்புமணி சிறப்பாக செயல்படுவதாக குறிப்பிட்டவர்களில் பெரும்பாலானவர்கள் நாட்டில் புகை பிடிக்கும் பழக்கத்தை ஒழிக்க அவர் எடுக்கும் முயற்சிகள் தங்களை கவர்ந்ததாக தெரிவித்தனர்.


கருணாநிதி பதவி விலக வேண்டும் } விஜயகாந்த்சென்னை, மே 10: மதுரையில் “தினகரன்’ பத்திரிகை அலுவலகம் மீது நடைபெற்ற தாக்குதலில் மூவர் உயிரிழந்ததற்கு தார்மீக பொறுப்பேற்று முதல்வர் கருணாநிதி பதவி விலக வேண்டும் என்று தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.இதுகுறித்து அவர் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை:மதுரையில் புதன்கிழமை காலை “தினகரன்’ அலுவலகமும் சன் டி.வி. அலுவலகமும் தி.மு.க. ரவுடிகளால் தாக்கப்பட்டுள்ளன. பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டதில் வெளியே வர முடியாமல் மூன்று பணியாளர்கள் உயிரிழந்துள்ளனர்.அவர்கள் தங்களைக் காப்பாற்ற சொல்லி கூக்குரலிட்டும் யாரும் முன்வரவில்லை. காவல்துறையினர் கைகட்டிக் கொண்டு இருந்தனர். அரசு பஸ்கள் அடித்து நொறுக்கப்பட்டுள்ளன. இந்த வன்முறை சம்பவங்களால் மதுரை மாநகரமே வெறிச்சோடி கிடக்கிறது.மதுரை மாநகரில் இவ்வளவு அத்துமீறிய செயல்கள் நடைபெற்றும் மாவட்ட நிர்வாகம், காவல்துறை மற்றும் தீயணைப்புத்துறை அங்கேயே இருந்தும் யாரால் கைகள் கட்டப்பட்டு இருந்தன என்று மக்கள் அறிய விரும்புகிறார்கள்.மக்களின் உயிருக்கும் உடமைக்கும் பாதுகாப்புத் தர வேண்டியது ஒரு அரசின் கடமை ஆகும். தீ பரவாமல் தடுத்திருக்க வேண்டியது தீயணைப்புத்துறையின் கடமையாகும். ஆனால் எல்லாத் தரப்பினரையும் செயலிழக்க வைத்தது எது?

ஏற்கெனவே, மதுரையில் முன்னாள் அமைச்சர் கிருஷ்ணன் படுகொலைக்குப் பிறகு மக்கள் நடக்கவே பயப்படுகிறார்கள். இன்றைய வன்முறை வெறியாட்டத்திற்குப் பிறகு மதுரையில் மக்கள் நிம்மதியாக இருக்க முடியுமா என்பதே கேள்விக்குறி ஆகிவிட்டது.

தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கில் குற்றவாளிகளுக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டதோ, அதேபோன்று இந்த படுகொலையிலும் பாரபட்சமற்ற முறையில் விசாரித்து உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடித்து தூக்குத் தண்டனை வழங்க வேண்டும்.

தனது குடும்பப் பிரச்சினை காரணமாக மக்களுக்கு ஏற்பட்டுள்ள அவ நம்பிக்கையைப் போக்க, முதல்வர் கருணாநிதி தார்மீக பொறுப்பேற்று பதவி விலக வேண்டும் என்று விஜயகாந்த் கூறியுள்ளார்.

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா. பாண்டியன்: காட்டுமிராண்டித் தனமான இத்தாக்குதலில் ஈடுபட்டவர்கள் யாராக இருப்பினும் அவர்கள் மீது பாரபட்சமற்ற முறையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். பத்திரிகைத்துறையினருக்கு தக்க பாதுகாப்பு வழங்கிட வேண்டும்.

மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் என். வரதராஜன்: மதுரையில் மு.க. அழகிரியின் ஆதரவாளர்களின் ஜனநாயக விரோதமான வன்முறை நடவடிக்கைகளை மார்க்சிஸ்ட் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. வன்முறையாளர்கள் மீது தமிழக அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மு.க. அழகிரி உள்ளிட்டோர் மீது புகார்மதுரை, மே 10: மதுரை தினகரன் அலுவலகத்தில் பெட்ரோல் குண்டுகள் வீசி தீவைத்ததில் 3 ஊழியர்கள் உயிரிழந்தனர். இது தொடர்பாக முதல்வரின் மகன் மு.க.அழகிரி மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது புகார் செய்யப்பட்டுள்ளது.அழகிரிக்கு ஏற்கெனவே ஒரு வழக்கில் வழங்கப்பட்டுள்ள ஜாமீனை ரத்துசெய்யவேண்டும் என்றும் தினகரன் நாளிதழ் நிர்வாகம் கோரியுள்ளது.முதல்வர் கருணாநிதியின் மகன் மு.க.அழகிரி 1980 -ஆம் ஆண்டு தனது குடும்பத்துடன் மதுரையில் குடியேறினார். முரசொலியின் மதுரைப் பதிப்பை கவனிக்கும் பணியில் ஈடுபட்டார்.இதையடுத்து கட்சியின் தென்மாவட்ட நிர்வாகத்தின் அதிகார மையமாகவும் அவர் விளங்கினார். இந் நிலையில் மூத்த நிர்வாகிகள் சிலருடன் அவருக்கு ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளை அடுத்து மீண்டும் 1984-ல் குடும்பத்துடன் சென்னைக்குச் சென்றார்.பின்னர் 2 ஆண்டுகள் கழித்து மீண்டும் மதுரையில் குடியேறிய அவர், பல்வேறு தொழில் நிறுவனங்களைத் தொடங்கினார்.இந் நிலையில் தினகரன் நாளிதழில் முதல்வரின் அரசியல் வாரிசு யார்? என வெளியான கருத்துக்கணிப்பில் அழகிரிக்கு 2 சதவிகிதம் மட்டுமே ஆதரவு இருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

இச் செய்தி அவரது ஆதரவாளர்களிடம் ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இதனால் அந்த நாளிதழைத் தீ வைத்தும், அலுவலகத்தில் பெட்ரோல் குண்டுகளை வீசியதாக அந் நிறுவனத்தினரே பேட்டியில் குறிப்பிட்டுள்ளனர்.

பத்திரிகை நிறுவனத்தினர் அளித்த புகாரின் பேரில், மு.க. அழகிரி மற்றும் அவரது ஆதரவாளர் அட்டாக் பாண்டி உள்ளிட்ட பலர் மீது ஒத்தக்கடை போலீஸôர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


தமிழகத்தில் பத்திரிகை அலுவலகத்தின் மீது நடத்தப்பட்டத் தாக்குதலில் மூன்று பேர் பலி

தமிழகத்திலிருந்து வெளிவரும் தினகரன் நாளிதழின் மதுரை அலுவலகம் மீது இன்று நடத்தப்பட்டத் தாக்குதலில் மூவர் கொல்லப்பட்டுள்ளனர்.

தமிழகத்திலிருந்து வெளியாகும் தினகரன் நாளிதழின் இன்றைய(புதன்கிழமை) பதிப்பில், தமிழக முதல்வர் கருணாநிதியின் அரசியல் வாரிசு யார் என்பது குறித்த கருத்துக்கணிப்புபின் முடிவுகள் வெளியாகியிருந்தன. இதில் மதுரையில் 67 சதவீதம் பேர் மு.க.ஸ்டாலினையும், 6 சதவீதம் பேர் மு.க.அழகிரியையும் குறிப்பிட்டிருந்தனர். இந்தக் கருத்துக்கணிப்பின் முடிவு மதுரையில் தனது செல்வாக்கை குறைத்துவிட்டதாக அழகிரி அவர்கள் கருதியதாகவும், காலையில் பத்திரிகை வெளியானது முதலே தமது அலுவலகத்திற்கு மிரட்டல்கள் வந்ததாகவும் தினகரன் பத்திரிகையின் மதுரை பதிப்பின் ஆசிரியர் முத்துப்பாண்டியன் தெரிவித்தார்.

ஆர்பாட்டத்தில் ஈடுபடும் மதுரை மேயர்
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் மதுரை மேயர்

இதையடுத்து மதுரை மேயர் தேன்மொழி உட்பட அழகிரி அவர்களின் ஆதரவாளர்கள் தமது அலுவலகத்தின் மீது பெட்ரோல் குண்டுகளை வீசி நடத்தியத் தாக்குதலில் மூன்று ஊழியர்கள் பலியானதாகவும் அவர் தெரிவித்தார். கொல்லப்பட்ட மூவரில் இருவர் கம்ப்யூட்டர் பொறியாளர்கள், ஒருவர் பாதுகாப்பு ஊழியர் எனவும் அவர் கூறினார்.

ஆனால், தாங்கள் எவ்விதமான தாக்குதல் நடவடிக்கைகளிலும் ஈடுபடவில்லை எனவும், தங்களது எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் பத்திரிகைகளை மட்டுமே எரித்ததாக தேன்மொழி கூறுகிறார். வன்முறைகள் எவ்வாறு நடந்தன என்பது குறித்து தமக்கு ஏதும் தெரியாது எனவும் அவர் கூறுகிறார். இன்றைய சம்பவங்களில் அழகிரி அவர்களுக்கு எந்தத் தொடர்பும் இல்லை எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

 


பத்திரிகைத துறை மீதான தாக்குதல் என்கிறார் தினகரனின் தலைமை நிர்வாகி

எரிக்கப்படும் தினகரன் பத்திரிகையின் பிரதிகள்
எரிக்கப்படும் தினகரன் பத்திரிகையின் பிரதிகள்

சர்ச்சைக்குரிய இந்தக் கருத்துக் கணிப்பை தினகரன் பத்திரிகைக்காக ஒரு தனியார் நிறுவனம் மேற்கொண்டதாக கூறப்படும் நிலையில், இது பற்றி கருத்து வெளியிட்ட தினகரன் பத்திரிகையின் தலைமை நிர்வாகி ரமேஷ் அவர்கள், ஏ சீ நீல்சன் நிறுவனம் நடத்திய கருத்துக் கணிப்பைத்தான் தினகரன் வெளியிட்டது எனக் கூறினார்.

இந்தத் தாக்குதல் தினகரன் பத்திரிகையின் மீது நடத்தப்பட்டத் தாக்குதல் என்பதனை விட பத்திரிகைத் துறை மீது நடத்தப்பட்டத் தாக்குதலாகத்தான் கருதுவதாகவும் அவர் மேலும் கூறினார். மு.க. அழகிரியின் ஆதரவாளர்கள்தான் இந்தத் தாக்குதலை நடத்தினர் எனவும் ரமேஷ் தெரிவித்தார்.

இது தொடர்பாக தங்களிடம் வீடியோ மற்றும் புகைப்பட ஆதாரங்கள் உள்ளன எனவும் அவர் கூறினார். இந்தியாவில் பல பத்திரிகைகள் கருத்துக் கணிப்பை நடத்தி கருத்துக்களை வெளியிடுவது வழக்கம்தான் என்பதால் இவ்வாறான ஒரு வன்முறை நிகழும் எனத் தாங்கள் எதிர்பார்க்கவில்லை எனவும் அவர் கருத்து வெளியிட்டார்.

 


தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக காவல்துறை தலைவர் கூறுகிறார்

இன்று நடைபெற்ற வன்முறையில் சேதமடைந்த பேருந்து ஒன்று
இன்றைய வன்முறையில் சேதமடைந்த பேருந்து ஒன்று

இன்றைய வன்செயல்கள் கருத்து வெளியிட்ட தமிழக காவல்துறை தலைவர் முகர்ஜி, இன்று காலையில் பத்திரிகை அலுவலகத்தை தாக்க நடைபெற்ற மூன்று முயற்சிகளின் போது போலீசார் அவர்களை விரட்டியடித்தனர் எனவும் ஆனால் நான்காவது முறையாக தாக்குதலை நடத்தவந்த கூட்டம் அந்த அலுவலகத்தின் கதவுகளை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பெட்ரோல் குண்டுகளை வீசியதாகவும் தெரிவித்தார்.

போலீசார் மீது தவறு இருப்பது தெரியவந்தால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கூறினார். வழக்கு விசாரணையில் இருப்பதால் இந்த வன்செயல்களில் யார் ஈடுபட்டிருந்தார்கள் என இப்போது கூறமுடியாது எனவும் முகர்ஜி கூறினார். நான்காவதாக நடைபெற்ற தாக்குதலில் மதுரை மேயர் ஈடுபடவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

இது தொடர்பான முக்கிய வழக்கில் மூன்று பேர் பிடிபட்டுள்ளதாகவும், வன்முறை தொடர்பாக ஏழு பேர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும், 25 பேர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைதாகியுள்ளதாகவும் தமிழக காவல்துறை தலைவர் முகர்ஜி தெரிவித்தார்.

தற்போது மதுரையில் நிலைமை கட்டுக்குள் இருப்பதாகவும், வழக்கு விசாரணை சுதந்திரமாக நடைபெறும் எனவும் அவர் தெரிவித்தார்.

 


 

தனக்கு யார் வாரிசு என்கிற பேச்சுகே இடமில்லை என்கிறார் கருணாநிதி

தமிழக முதல்வர் கருணாநிதி
தமிழக முதல்வர் கருணாநிதி

மதுரையில் தினகரன் நாளிதழ் அலுவலகம் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு தமிழக முதல்வர் மு கருணாநிதி கண்டனம் வெளியிட்டுள்ளார். இத்தகைய தாக்குதலை தன்னால் ஏற்றுக் கொள்ள முடியாது என்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் கூறியுள்ளார். பலியான ஊழியர்களின் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.

திமுக ஜனநாயக முறைப்படி இயங்கும் ஒரு கட்சி என்றும், எனவே தனக்கு யார் வாரிசு என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும் கருணாநிதி கூறியுள்ளார். ஆனால் தனது அறிக்கையில் ஒரு இடத்தில் கூட அழகிரியின் பெயரை அவர் குறிப்பிடவில்லை. வன்முறையாளர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று மட்டும் அவர் கூறியுள்ளார்.

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை காப்பாற்றத் தவறிவிட்ட திமுக அரசை, மத்திய அரசு டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலர் ஜெ ஜெயலலிதா கோரியுள்ளார். மதுரை போலீசார், முதல்வர் கருணாநிதிக்கு கட்டுப்படாமல் அவரது மகன் மு க அழகிரிக்கே கட்டுப்பட்டு நடப்பதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

 

 


 

தினகரன் மீதான தாக்குதலை சி பி ஐ விசாரிக்கும்; கருணாநிதி

தினகரன் நாளிதழ் தாக்குதல் குறித்து சி பி ஐ என்ற மத்திய புலனாய்வுத் துறையின் விசாரணையை தமிழக அரசு கோரும் என்று தமிழக முதல்வர் மு கருணாநிதி தெரிவித்தார்.

கருணாநிதியின் அரசியல் வாரிசு .யார் என்பது பற்றிய கருத்துக் கணிப்பு முடிவுகள் தினகரன் நாளிதழில் பிரசுரிக்கப்பட்டதை அடுத்து மதுரையில் புதன்கிழமை பிரச்சினை உருவானது. வெறும் 2 சதவீத மக்களே கருணாநிதியின் மகனான அழகிரிக்கு ஆதரவு அளித்ததாக இந்தக் கருத்துக் கணிப்பில் கூறப்பட்டது.

இதனால் கொதிப்படைந்த சிலர், மதுரையில் உள்ள தினகரன் அலுவலகத்தை தாக்கினர். இதில் அங்கு பணிபுரிந்து வந்த 3 ஊழியர்கள் கொல்லப்பட்டனர்.

இந்த சம்பவம் குறித்து தமிழக சட்டசபையில் கொண்டுவரப்பட்ட கவன ஈர்ப்புத் தீர்மானத்தில் பேசிய தமிழக முதல்வர் கருணாநிதி, இந்தப் பிரச்சனையில் தனது குடும்பம் சம்மந்தப்பட்டுள்ளதால், இதை தமிழக அரசு விசாரணை நடத்துவதற்கு பதிலாக மத்திய அரசின் சி பி ஐ விசாரணை நடத்தும் என்று குறிப்பிட்டார்.

அதே நேரம், தனது யோசனையையும் மீறி தேவையில்லாத கருத்துக்கணிப்புக்களை வெளியிட்டு தினகரன் நாளிதழ்தான் குழப்பத்துக்கு வழிவகுத்ததாக முதல்வர் தெரிவித்தார்.

தமிழக அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று ஏற்கனவே அதிமுக கோரியுள்ள நிலையில், அக் கட்சியைச் சேர்ந்த ஜெயகுமார், இது குறித்து பேசுகையில் குடும்பமும், உள் துறையும் கருணாநிதியின் கட்டுப்பாட்டில் இல்லை என்பதையே இந்த சம்பவம் காட்டுவதாகக் குறிப்பிட்டார்.


பத்திரிகை சுதந்திரத்தின் மீதான தாக்குதலல்ல – ஞானி

ஸ்டாலினும், அழகிரியும் சில சமயங்களில் இணைந்தும் பல சமயங்கலில் எதிர்எதிராகவும் செயல்பட்டு வந்துள்ளனர்
தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடும் ஸ்டாலினும், அழகிரியும்

தினகரன் பத்திரிக்கையின் மீதான தாக்குதல் கருத்து சுதந்திரத்துக்கு எதிரான தாக்குதல் அல்ல குடும்பத்துக்குள் நடக்கும் ஆட்சி அதிகாரப் போட்டியின் விளைவு என்று அரசியல் விமர்சகர் ஞானி தெரிவித்தார்.

இதை கருத்து சுதந்திரத்துக்கு எதிரான செயல் என்று காட்டுவது, திமுகவின் அதிகார மையங்கள், தங்களின் அதிகாரப் போட்டிக்காக எத்தகைய கருவியையும் கைகொள்ளவார்கள் என்பதற்கு உதாரணம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

திமுகவில் வாரிசு அரசியல் கிடையாது என்று முதல்வர் மு கருணாநிதி கூறியிருப்பது இந்த ஆண்டின் மிகச் சிறந்த நகைச்சுவை என்று குறிப்பிட்ட ஞானி, மாவட்ட அளவில் கூட திமுகவினர் தங்களின் வாரிசுகளை பதவிகளுக்கு கொண்டு வருவதாகக் கூறினார்.

மு க ஸ்டாலின் படிப்படியாக கொண்டுவரப்பட்டார் என்றால் தயாநிதி மாறன் எவ்வித அரசியல் கள அனுபவமும் இல்லாமல் நேரடியாக அரசியலுக்கு கொண்டுவரப்பட்டு மத்திய அமைச்சராக்கப்பட்டார் என்றும் ஞானி குறிப்பிட்டார்.

திமுகவில் வாரிசு அரசியல் கிடையாது என்பது இந்த ஆண்டின் மிகச் சிறந்த நகைச்சுவை

 

பத்திரிக்கையாளர் ஞானி

இந்தப் பிரச்சனையில் சி பி ஐ விசாரணை என்பது அபத்தமானது என்று கருத்து வெளியிட்ட ஞானி, ஒரு குற்றத்தை யார் செய்தார்கள் என்பது குறித்து புலனாய்வு செய்ய முடியாத நிலையில் இருக்கும் பட்சத்திலோ அல்லது மாநில காவல் துறை நம்பகத் தன்மையை குறைந்து போய்விட்ட நிலையிலோதான் சி பி ஐ விசாரணை கோரப்படும் என்று அவர் கூறினார்.


தினகரன் அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசியது ஏன்?: கைதானவர் வாக்குமூலம் மேலூர், மே 11: மதுரை தினகரன் அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசியதற்கான காரணத்தை அச்சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.மதுரை தினகரன் நாளிதழ் அலுவலகம் புதன்கிழமை தாக்கப்பட்ட சம்பவத்தில் கைதான மதுரை கீரைத்துறையைச் சேர்ந்த பாட்ஷா (41) போலீஸôரிடம் அளித்துள்ள வாக்குமூலம் விவரம்:”நான் கீரைத்துறையில் வசித்து வருகிறேன். அட்டாக் பாண்டியிடம் மாதம் ரூ.2 ஆயிரம் ஊதியத்தில் டிரைவராகப் பணிபுரிகிறேன்.அண்ணன் அழகிரியிடம் அட்டாக் பாண்டி மிக நெருக்கமான நண்பராக இருந்து வருகிறார். 9.5.2007-ல் தினகரன் நாளிதழில் மக்கள் மனசு கருத்துக் கணிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அதில் மு.க.ஸ்டாலினுக்கு அதிக ஆதரவும், எங்கள் தலைவருக்கு ஆதரவே இல்லை என்றும் குறிப்பிட்டிருந்தது மிகுந்த வேதனை அளித்தது.

அதனால் அட்டாக் பாண்டியும் நீண்ட மனவேதனை அடைந்தார். தினகரன் பத்திரிகை அலுவலகத்தை ஏதாவது செய்ய வேண்டும் என்ற வேகத்தில் அங்கு சுமோ காரில் சென்றோம். எங்கள் பின்னால் 25-க்கும் மேற்பட்டோர் திரண்டு வந்தனர்.

அங்கு பெட்ரோல் குண்டுகளை வீசி, அலுவலகக் கண்ணாடிகளை உடைத்தோம். வாகனங்களைத் தீயிட்டோம். பின்னர் கூட்டம் திரண்டதால் தப்பி ஓடிவந்து ரிங் ரோடு அருகே மறைந்து இருந்தோம்.

அதற்குப் பிறகுதான் 3 ஊழியர்கள் இறந்தது தெரியவந்தது. பின்னர் அங்கு என்ன நடக்கிறது என அறிய ரிங் ரோடு வழியாக காரில் வந்தபோது போலீஸôர் எங்களைக் கைது செய்து காரையும் கைப்பற்றினர்’ என்று போலீஸôரிடம் கூறியதாக அவரது வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.

 


மு.க.அழகிரி பேட்டி:கருத்து கணிப்பில் என் பெயரை சேர்த்திருக்கவே கூடாது. கருத்து கணிப்பில் அமைச்சர்களைப் பட்டியலிட்டனர்; அவர்களின் செல்வாக்கை சொன்னார் கள். அது ஒருவகை ஒப் பீடு. ஆனால், இப்போது தம்பி ஸ்டாலின் அமைச்சராக இருக்கிறார்; நான் அமைச்சராகவா இருக் கிறேன்? இல்லையே!

நான் அவர் இடத்துக்கு வரவேண்டும் என என்றைக் காவது நினைத்திருக் கிறேனா? அதுவும் இல்லை. பதவிக்கு வர ஆசைப்படுபவனல்ல நான். அப்படி ஒதுங்கியிருக்கும் என்னை, ஏன் வீணாக இழுத்திருக்கின்றனர் என்பது தான் என் கேள்வி, ஆதங்கம் எல்லாம்…

 


தினகரன் அலுவலகம் மீது தாக்குதல் செய்தி விவகாரம்
‘தமிழ் முரசு’ மீது உரிமை மீறல்

சென்னை, மே 15: தமிழ் முரசு நாளிதழ் மீது உரிமை மீறல் பிரச்னையை, காங்கிரஸ் உறுப்பினர்கள் நேற்று கொண்டு வந்தனர். இதை உரிமைக் குழுவுக்கு பேரவைத் தலைவர் அனுப்பி வைத்தார்.சட்டப் பேரவையில் தமிழ் முரசு நாளிதழ் மீது, உரிமை மீறல் பிரச்னையை காங்கிரஸ் உறுப்பினர்கள் ஞானசேகரன், ஜெயக்குமார், இஎஸ்எஸ்.ராமன், கோவை தங்கம் ஆகியோர் எழுப்பினர்.

இதில், ஞானசேகரன் பேசியதாவது:

பத்திரிகைகளுக்கு நாங்கள் மதிப்பும், மரியாதையும் கொடுக்கிறோம். பேரவையில் சொல்லப்பட்ட கருத்தை அடிபிறழாமல் அப்படியே பத்திரிகையில் போட வேண்டும். சொல்லப்பட்ட கருத்தை திரித்து வெளியிடக் கூடாது.

கடந்த 9ம் தேதி மதுரை தினகரன் நாளிதழ் அலுவலகத்தில் நடந்த வன்முறையின் போது, தீ வைக்கப்பட்டதில் புகையில் சிக்கி 3 பேர் இறந்தார்கள்.

இது பற்றி அனைத்துக் கட்சியினரும், பேரவையில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து 10ம் தேதி பேசினர்.
அப்போது முதல்வர் பதிலளிக்கையில்

“இந்த சம்பவத்தில், என் குடும்பத்தையும் சம்பந்தப்படுத்தி இருப்பதால், மதுரை தினகரன் அலுவலகத்தில் 3 பேர் இறந்த சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தப்படும்”

என்று அறிவித்தார்.

ஆனால், அன்றைய தமிழ் முரசு பத்திரிகையில்

“அழகிரி நடத்திய படுகொலைகள், சிபிஐ விசாரிக்கும், சட்டசபையில் முதல்வர் அறிவிப்பு”

என்று செய்தி வந்துள்ளது.

அதே செய்தியின் லீடில்

“மதுரை தினகரன் அலுவலகத்தில் அழகிரி ஏவி விட்ட ரவுடி கும்பல் நடத்திய காட்டுமிராண்டித்தனமான தாக்குதலில் 3 ஊழியர்கள் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்படுவதாக சட்டசபையில் முதல்வர் கருணாநிதி இன்று தெரிவித்தார்”

என்று செய்தி வந்துள்ளது.

இது குறித்து முதல்வர் சொன்ன பதில் மட்டுமே வந்திருக்க வேண்டும். அது திரித்து சொல்லப்பட்டுள்ளது. இதற்கு நீதி வேண்டும். எங்கள் உரிமையையும் பேரவை உரிமையையும் பேரவைத் தலைவர் காப்பாற்ற வேண்டும். தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு ஞானசேகரன் பேசினார்.

இதற்கு பதிலளித்த பேரவைத் தலைவர் ஆவுடையப்பன், Ôமேலெழுந்த வாரியாக பார்க்கையில் இந்த பிரச்னையில் உரிமை மீறல் இருப்பது தெரிகிறது. எனவே, இதனை உரிமைக் குழுவிற்கு அனுப்பி வைக்கிறேன்Õ என்றார்.

 


அமைச்சர் பொன்முடி பேசியதாவது:என் வீட்டிற்கு இன்று (நேற்று) மதியம் செல்வம் வந்தார். அவர் என்னிடம் “தயாநிதி மீது எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம். அவர் மீது நடவடிக்கை எடுத்தால் விபரீதம் உண்டாகும். உங்கள் நண்பர் ஸ்டாலினுக்காக கட்சியை விட்டு விடாதீர்கள். தயாநிதி சாதாரணமான ஆள் இல்லை. எல்லா மட்டத்திலும் அவருக்கு செல்வாக்கு உள்ளது. தி.மு.க., ஆட்சி அமைக்க அவர் காரணமாக இருந்தார். அதை யாரும் மறந்து விடக் கூடாது. அவர் மீது தவறான முடிவு எடுத்தால் தவறான விளைவுகளை சந்திக்க நேரிடும். தயாநிதி என்ன தவறு செய்தார். கட்சிக் கட்டுப்பாட்டை அவர் எங்கே மீறினார்.

  • கருத்துக் கணிப்பு பிடிக்கவில்லை என்றால் அமைதியாக இருக்கலாம். ஏன் கலவரத்தை நடத்த வேண்டும்.
  • தி.மு.க.,வில் அழகிரி என்ன பொறுப்பில் இருக்கிறார். கட்சியில் அவர் வட்ட செயலரா? அல்லது மாவட்டச் செயலரா?
  • அவருக்கு எந்த பொறுப்பும் இல்லாத போது அவருக்கு ஏன் கோபம் வருகிறது. ஆத்திரம் வருகிறது’

என்று கேட்டார்.இதுமாதிரியான எந்த மிரட்டலுக்கும் நாங்கள் அஞ்சமாட்டோம். இதற்கெல்லாம் தி.மு.க., பயப்படாது. தயாநிதியை கட்சியிலிருந்து நீக்குவோம்,” இவ்வாறு பொன்முடி பேசினார்.

 


மதுரை வன்முறை: டி.எஸ்.பி. உள்பட 17 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்

மதுரை, ஆக. 7: தினகரன் நாளிதழ் அலுவலகம் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக ஊமச்சிகுளம் டி.எஸ்.பி. உள்பட 17 பேர் மீது சிபிஐ சார்பில், மதுரை தலைமை நீதித்துறை நடுவர் மன்றத்தில் திங்கள்கிழமை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

மே 9-ம் தேதி மதுரையில் நிகழ்ந்த வன்முறைச் சம்பவத்தில் 3 ஊழியர்கள் இறந்தனர். இதுதொடர்பாக ஒத்தக்கடை போலீஸôர் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனர்.

பின்னர், இந்த வழக்கு சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டது. இவ் வழக்கு தொடர்பாக “அட்டாக்’ பாண்டி உள்பட 19 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

இவ்வழக்கில், 20-வது குற்றவாளியாக தலைமறைவாக உள்ள திருமுருகன் என்ற காட்டுவாசி முருகனும், 21-வது குற்றவாளியாக ஊமச்சிகுளம் டி.எஸ்.பி. ராஜாராமும் சேர்க்கப்பட்டனர்.

இவ் வழக்கில் சம்பந்தப்பட்ட ஊருஇருளாண்டி, டைகர் பாண்டி, மாரி, இருளாண்டி ஆகிய 4 பேர் மீதும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை.

இந்த 4 பேரைத் தவிர அட்டாக் பாண்டி உள்ளிட்ட 16 பேர் மீதும், மே 9-ம் தேதி சம்பவத்தின்போது பணியில் மெத்தனப் போக்குக் காட்டியது, கலவரத்தைத் தடுக்கத் தவறியது உள்ளிட்ட காரணத்தால் ஊமச்சிகுளம் டி.எஸ்.பி. ராஜாராம் மீதும் சிபிஐ அதிகாரிகள், மதுரை தலைமை நீதித்துறை நடுவர் மன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.

இந்த குற்றப்பத்திரிகை 86 சாட்சியங்கள், 45 ஆவணங்கள், 32 பக்கங்கள் உள்ளடங்கியதாகும்.

 


முதல்வர் விருந்து: அதிமுக, மதிமுக பங்கேற்கவில்லைசென்னை, மே 10: சட்டப் பேரவை உறுப்பினர்களுக்கு முதல்வர் கருணாநிதி புதன்கிழமை இரவு அளித்த விருந்தில், அதிமுக, மதிமுக உறுப்பினர்கள் பங்கேற்கவில்லை.ஆண்டுதோறும் பட்ஜெட் விவாதம் முடிவடையும் போது சட்டப் பேரவை உறுப்பினர்களுக்கு முதல்வர் விருந்து அளிப்பது வழக்கம்.இதன் அடிப்படையில், புதன்கிழமை மாலை உறுப்பினர்களுக்கு இரவு விருந்து அளிக்கப்படும் என்று பேரவையில் அறிவிக்கப்பட்டது.இதில் அதிமுக மற்றும் மதிமுக உறுப்பினர்கள் பங்கேற்கவில்லை.

  • காங்கிரஸ்,
  • பாமக,
  • விடுதலைச் சிறுத்தைகள்,
  • இந்திய கம்யூனிஸ்ட்,
  • மார்க்சிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

அனைத்துத்துறை செயலர்களும் இந்த விருந்தில் பங்கேற்றனர்.

விருந்தில்

  • சிக்கன் பிரியாணி,
  • மீன் வறுவல் மற்றும்
  • தக்காளி ரசம்,
  • மோர் குழும்பு,
  • பாயசம்,
  • குல்பி உள்ளிட்டவை பரிமாறப்பட்டன.

Posted in Aavudaiappan, Aavudaiyappan, Aavudayappan, AC Nielsen, ADMK, AIADMK, Alagiri, Alakiri, Anbumani, Approver, Arrest, Attack, Attack Pandi, Azagiri, Azhagiri, Azhakiri, Baalu, Basha, Batcha, Biotech, Bombs, Cabinet, Celebrations, Chargesheet, Chidambaram, Chidhambaram, Cigar, Cigarette, Dayanidhi, Dayanidhy, dead, destroy, Dharmapuri, Dharmapury, Dhinakaran, Dinagaran, Dinakaran, Dinakaran.com, DMDK, DMK, dynasty, employee, employees, Feast, Finance, FIR, Health, Healthcare, InfoTech, IT, Kalanidhi, Kalanidhy, Kalanithi, Kalanithy, Kanimoli, Kanimozhi, Kanimozi, Karunanidhi, Karunanidhy, Karunanidi, Karunanithi, Kiruttinan, Law, M Karunanidhi, M karunanidhy, M karunanithi, Maaran, Madurai, Maran, Mayor, Minister, MK Azhagiri, MP, Mu Ka, Mu Ka Azhagiri, Mu Ka Stalin, Mu Karunanidhi, Mu Karunanidhy, Mu Karunanidi, MuKa, Murder, Nelson, network, Nielsen, Nielson, Opinion, Order, P Chidambaram, Pa Chidambaram, Paandi, Pandi, Police, Poll, Ramadas, Ramadoss, Ransack, Sethu, Smoke, smoking, Statistics, Sun, Sun TV, Survey, Telecom, Television, Tha Krishnan, Thaa Krishnan, Thayanidhi, Thayanidhy, Thenmoli, Thenmozhi, Thenmozi, Thinagaran, Thinakaran, Thinakaran.com, TR Balu, Transport, TV, Velu, Vijaiganth, Vijaikanth, Vijayaganth, Vijayakanth, Vijayganth, vijaykanth, Worker | 12 Comments »

Rich vs Poor – Forbes Wealthiest Indians list: Analysis

Posted by Snapjudge மேல் மார்ச் 21, 2007

உலகச் செல்வமும், ஏழ்மையும்

ந. ராமசுப்ரமணியன்

உலகமயமாதல், திறந்துவிடப்பட்ட உலகச் சந்தை என்று வந்தபிறகு, உலகப் பணக்காரர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. உலகின் செல்வ வளமும் அதிகரித்து வருகிறது.

இதன் காரணமாக, உலகமயமாதல் உலகப் பொருளாதார வளர்ச்சிக்கு மிகவும் அவசியம் என்று எங்கும் பேசப்படுகிறது. அதேநேரத்தில், உலகமயமாதலால் பெருஞ்செல்வந்தர்கள் உருவாகிறார்கள். ஏழ்மை குறையவில்லை என்றும் பல அறிஞர்களால் கவலையுடன் பேசப்படுகின்றது.

“”உலகமயமாதலால், ஏழை பணக்காரர்கள் வித்தியாசம் அதிகரித்து வருகிறது; ஆகவே உலகமயமாதலே முடிவுக்கு வரக்கூடும்” என்று சமீபத்தில் சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற உலகப் பொருளாதாரக் கூட்டத்தில் உலக வங்கித் தலைவரே கூறியது குறிப்பிடத்தக்கது.

வருடாவருடம் உலகின் மிகப்பெரிய செல்வந்தர்கள் (பில்லியனர்கள்) பட்டியலை “போர்ப்ஸ்’ எனும் பிரபல பத்திரிகை வெளியிட்டு வருகிறது. (ஒரு பில்லியன் என்பது 100 கோடி.) தற்போதைய உலக பில்லியனர்கள் பட்டியல் 2007 பிப்ரவரி மாதம் 9-ம் தேதி வரை தயாரானது. இதன்படி உலகில் 946 பில்லியனர்கள் உள்ளனர். கடந்த ஆண்டை ஒப்பிடும்போது 178 புதியவர்கள் இந்தப் பட்டியலில் சேர்ந்துள்ளனர்.

அமெரிக்க “மைக்ரோசாப்ட்’ நிறுவனத்தின் தலைவர் பில்கேட்ஸ் உலகின் முதல் பணக்காரர் அந்தஸ்தை தொடர்ந்து தக்க வைத்துக் கொண்டுள்ளார். இவருடைய சொத்து மதிப்பு 56 பில்லியன் டாலர் (ரூ. 2.52 லட்சம் கோடிகள்) அமெரிக்காவின் வாரன் பஃபெட் 52 பில்லியன் டாலர் சொத்துடன் இரண்டாவது இடத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ளார். இந்தியாவின் லட்சுமி மிட்டல் 32 பில்லியன் (சுமார் ரூ. 1.44 லட்சம் கோடி) சொத்துகளுடன் உலகின் 5-வது பெரிய பணக்காரராக விளங்குகிறார்.

ஆசியக் கண்டத்திலேயே, இந்தியாவில்தான் அதிக பில்லியனர்கள் இருக்கிறார்கள். கடந்த ஆண்டு 22 என்ற எண்ணிக்கையிலிருந்து தற்போது 36 பில்லியனர்கள் என்று இந்தியா சிறப்புப் பெற்று, முதல் நிலையிலிருந்த ஜப்பானைப் பின்னுக்குத் தள்ளிவிட்டது. ஜப்பானில் 24 பில்லியனர்கள் இருக்கின்றனர்.

இந்திய பில்லியனர்கள் யார் யார், உலக அளவில் அவர்கள் நிலை என்ன என்று பார்ப்போம்.

  • லட்சுமி மிட்டல் 5-வது இடம் 32 பில்ல்லியன்.
  • முகேஷ் அம்பானி 14-வது இடம் 20.1 பில்லியன்.
  • அனில் அம்பானி 18-வது இடம் 18.2 பில்லியன்.
  • அஸிம் பிரேம்ஜி 21-வது இடம் 17.1 பில்லியன்.
  • குஷல்பால் சிங் 62-வது இடம் 10 பில்லியன்.
  • சுனில் மிட்டல் மற்றும் அவரது குடும்பம் 69-வது இடம் 9.5 பில்லியன்.
  • குமார் பிர்லா 86-வது இடம் 8 பில்லியன்.
  • சசி ரூயா & ரவி ரூயா 86-வது இடம் 8 பில்லியன்.
  • ரமேஷ் சந்திரா 114-வது இடம் 6.4 பில்லியன்.
  • பலோன்ஜி மிஸ்த்ரி 137-வது இடம் 5.6 பில்லியன்.
  • ஆதி கோத்ரஜ் குடும்பம் 210-வது இடம் 4.1 பில்லியன்.
  • சிவநாடார் 214-வது இடம் 4 பில்லியன்.
  • திலிப்சாங்வீ 279-வது இடம் 3.1 பில்லியன்.
  • சைரஸ்பூனாவாலா 287-வது இடம் 3 பில்லியன்.
  • இந்து ஜெயின் 287-வது இடம் 3 பில்லியன்.
  • கலாநிதிமாறன் 349-வது இடம் 2.6 பில்லியன்.
  • கிராந்தி ராவ் 349-வது இடம் 2.6 பில்லியன்.
  • சாவித்திரி ஜிண்டால் மற்றும் அவர் குடும்பம் 390-வது இடம் 2.4 பில்லியன்.
  • துளசி தந்தி 390-வது இடம் 2.4 பில்லியன்.
  • சுபாஷ் சந்திரா 407-வது இடம் 2.3 பில்லியன்.
  • உதய் கோடக் 432-வது இடம் 2.2. பில்லியன்.
  • பாபா கல்யாணி 458-வது இடம் 2.1 பில்லியன்.
  • மல்வீந்தர் சிங் & ஷிவிந்தர்சிங் 488-வது இடம் 2 பில்லியன்.
  • நாராணமூர்த்தி 557-வது இடம் 1.8 பில்லியன்.
  • அனுராக் தீக்ஷித் 618-வது இடம் 1.6 பில்லியன்.
  • வேணுகோபால் தூத் 618-வது இடம் 1.6 பில்லியன்.
  • விஜய் மல்லையா 664-வது இடம் 1.5 பில்லியன்.
  • ஜெயப்பிரகாஷ் கவுர் 664-வது இடம் 1.5 பில்லியன்.
  • விகாஸ் ஓபராய் 717-வது இடம் 1.4 பில்லியன்.
  • நந்தன் நிலகனி 754-வது இடம் 1.3 பில்லியன்.
  • எஸ். கோபாலகிருஷ்ணன் 799-வது இடம் 1.2 பில்லியன்.
  • பிரதீப் ஜெயின் 840-வது இடம் 1.1 பில்லியன்.
  • கேசுப் மகிந்தரா 840-வது இடம் 1.1 பில்லியன்.
  • ராகுல் பஜாஜ் 840-வது இடம் 1.1 பில்லியன்.

இதில் முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டிய சில விஷயங்கள்

இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு முன்பே பெரிய செல்வந்தர் வணிகக் குடும்பங்களில் குமார் பிர்லா மட்டுமே இந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ளார். ரத்தன் டாடா கூட இப் பட்டியலில் இடம் பெறவில்லை.

பரம ஏழையாக இருந்த லட்சுமி மிட்டல் மிகப்பெரிய செல்வந்தராக வந்துள்ளது இவருடைய கடுமையான உழைப்புக்குக் கிடைத்த பரிசு.

உலகத்தின் சொத்துகள் மதிப்பு சுமார் 125 டிரில்லியன் டாலர் (சுமார் ரூ. 5625 லட்சம் கோடிகள்) (1 டிரில்லியன் என்பது சுமார் ரூ. 45 லட்சம் கோடிகள் ஆகும்) அமெரிக்காவின் சொத்து மதிப்பு மட்டும் சுமார் 31 டிரில்லியன் டாலர் (சுமார் ரூ. 1400 லட்சம் கோடிகள்).

இந்தியாவின் தற்போதைய 857 பில்லியன் டாலர் மொத்த உற்பத்தி 2050-ம் ஆண்டு சுமார் 30 டிரில்லியன் டாலர் என உயர்ந்து உலகின் இரண்டாவது பொருளாதார வல்லரசாக மாறும் என உலகின் பிரபல நிதி நிறுவனம் “கோல்ட்மேன் சாச்’ கணித்துள்ளது.

இப்படி பல நல்ல விஷயங்கள் இருப்பினும் உலகின் ஏழ்மை நிலை மிகவும் கவலைக்குரியதாகவே உள்ளது.

உலகில் ஆறில் ஒருவர் பரம ஏழையாக உள்ளார். சுமார் 110 கோடி மக்கள். உலகின் மிகப்பெரும் பணக்கார நாடான

  • அமெரிக்காவில்கூட 13 சதவீத மக்கள் ஏழைகள்,
  • ஜப்பானில் 15.3 சதவீதம்,
  • இங்கிலாந்து 15 சதவீதம்,
  • பிரான்ஸ் 6 சதவீதம் என்று ஏழை மக்கள் உள்ளனர்.
  • பிரேசிலில் 23 சதவீதம்,
  • ரஷியாவில் 20 சதவீதம்,
  • இந்தியாவில் 22 சதவீதம்,
  • சீனாவில் 8 சதவீதம் என்று ஏழ்மை நிலை உள்ளது. மாத வருமானம் ரூ. 1,350 கூட இல்லாதவர்கள் ஏழைகள் எனக் கருதப்படுகின்றனர். அதாவது ஒரு நாளைக்கு ஒரு டாலர் (சுமார் ரூ. 45) கூட வருமானம் இல்லாதவர்கள்.

உலகின் 1 சதவீதம் மிகப்பெரிய பணக்காரர்கள் உலகின் 40 சதவீத சொத்துகளுக்கு அதிபதிகள். உலகின் 10 சதவீத மக்கள் உலகின் 85 சதவீத சொத்துகளுக்கு உடமையாளர்கள்.

உலகில் ஆண்டிற்கு 80 லட்சம் மக்கள் உண்ண உணவின்றி இறந்து போகின்றார்கள் என்று பிரபல டைம் பத்திரிகை தெரிவிக்கின்றது. உலகில் ஒவ்வொரு நாளும் 30 ஆயிரம் குழந்தைகள் பசிக் கொடுமையால் இறக்கின்றனர் என ஐ.நா. சபை அறிக்கை ஒன்று கூறுகின்றது. உலகில் 50 சதவீதம் மக்கள் மாதத்திற்கு ரூ. 2,700 வருமானம் கூட இல்லாதவர்கள். உலகின் முதல் மூன்று பணக்காரர்களின் சொத்து, ஏழ்மையான 48 நாடுகளின் உள்நாட்டு உற்பத்தியைக் காட்டிலும் மேலாக உள்ளது.

21-ம் நூற்றாண்டு தொடக்கத்தில் 100 கோடி பேருக்கு மேல் எழுதப் படிக்கத் தெரியாதவர்கள். உலகில் 50 சதவீதம் இளைஞர்களுக்கு வேலை இல்லை அல்லது பெயருக்குத்தான் வேலை என்று சொல்லும் நிலை.

25 கோடி மக்கள் மாதத்திற்கு ரூ. 1,350 கூட வருமானமில்லாத ஏழைகளைக் கணக்கிட்டு உலகில் அதிக ஏழைகள் உள்ள நாடு இந்தியா என்ற அவப்பெயரைப் பெற்றுள்ளது. 81 சதவீத இந்தியர்களின் மாத வருமானம் ரூ. 2,700க்கும் குறைவே. 36 இந்திய பில்லியனர்கள் இந்தியாவின் 25 சதவீத பொருளாதாரத்தைக் கைக்குள் வைத்துள்ளனர்.

பணக்கார நாடுகள் வருடாவருடம் கூடி, தங்கள் பொருளாதாரத்தில் 0.7 சதவீதம், ஏழை நாடுகளுக்கு வழங்க வேண்டும் என்று தீர்மானம் போடுவதோடு சரி. செயலாக்கம்தான் இல்லை.

அதேசமயம் நல்ல காரியங்களுக்காக பெருந்தொகையை நன்கொடையாக வழங்கும் பல செல்வந்தர்களும் இருக்கின்றனர். உலகின் இரண்டாவது பெரும் பணக்கார அமெரிக்கர் வாரன் பட்ஜெட் சமீபத்தில் 43 பில்லியன் டாலரை (சுமார் ரூ. 1.94 லட்சம் கோடியை) தனது குடும்பத்திற்குத் தராமல் பொது நற்காரியங்களுக்காக நன்கொடையாகத் தந்தது உலகத்தையே அதிசயப்பட வைத்தது. உலகமயமாதலால் ஏழை-பணக்காரர் இடைவெளி அதிகரித்து வருகிறதோ என்ற ஐயப்பாடு வலுத்து வருகிறது.

“”ஏழ்மையே மிகக் கொடுமையான வன்முறையின் வடிவம்” என்ற மகாத்மா காந்தியின் கூற்று மிகவும் பொருத்தமானதே! தற்போதைய உலகில் இதைச் சரிசெய்ய உலகம் என்ன செய்யப் போகிறது?

(கட்டுரையாளர்: கௌரவத் தலைவர் மற்றும் தாளாளர், ஸ்ரீநடேசன் வித்யாசாலா மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளி, சென்னை).


மும்பையில் பல மாடிகளை கொண்ட வீட்டினை கட்டுகிறார் முகேஷ் அம்பானி

முகேஷ் அம்பானி
முகேஷ் அம்பானி

இந்தியாவின் பெரும் பணக்காரரான முகேஷ் அம்பானி, மும்பை நகரத்தில் தனது குடும்பத்தினரும், தனது அறுநூறு வேலையாட்களும் தங்குவதற்காக பல மாடிகளை கொண்ட வீட்டினை கட்டுவதற்கான திட்டத்தை வெளியிட்டுள்ளார்.

சுமார் ஒரு பில்லியன் டாலர் செலவில் கட்டப்படும் இந்த கட்டிடத்தில் பல வாகனங்கள் நிறுத்துவதற்கான வசதி, உடற்பயிற்சி கூடம், நீச்சல் குளங்கள், ஹெலிகாப்டர் இறங்குவதற்கான வசதி போன்றவை உருவாக்கப்படவுள்ளது. அத்தோடு இந்த கட்டிடத்தில் இருந்து அரபிக் கடலின் பரந்து விரிந்த காட்சி தெரியும்.

ஐம்பது வயதான முகேஷ் அம்பானி, இந்தியாவின் ரிலையன்ஸ் இண்டஸ்டீரிஸின் தலைவராக இருக்கின்றார்.

இந்த வீடு கட்டும் திட்டம், தங்களிடம் இருக்கும் செல்வத்தை அப்பட்டமாக காட்டும் ஒரு செயல் என இந்த திட்டத்தை எதிர்ப்பவர்கள் கூறுகின்றனர்.

மும்பாய் நகரத்தில் பாதிக்கும் மேற்ப்பட்டவர்கள் நடைபாதையில் வசித்து வருகின்றனர்.

———————————————————————————————

வக்ப் போர்டிடம் நிலம் வாங்கியதால் சிக்கல்: அம்பானியின் 27 மாடி சொகுசு வீட்டுக்கு ஆபத்து- சட்ட விரோதம் என அரசு அறிவிப்பு

மும்பை, ஜ×லை.5-

இந்தியாவில் உள்ள முன்னணி பணக்காரர்களில் ஒருவர் முகேஷ் அம்பானி. இவரது ரிலையன்ஸ் குழுமம் தகவல் தொடர்பு, பெட்ரோ லியம் மற்றும் சில்லறை வணிகம் என பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு தினமும் கோடிக்கணக்கில் பணம் குவித்து வருகிறது. உலக பணக்காரர்கள் வரிசையில் முகேஷ் அம்பானி 14- வது இடத்தில் இருக்கிறார்.

மும்பையில் இவருக்கு திரும்பிய பக்கம் எல்லாம் சொத்துக்கள் உள்ளது என்றாலும் அவர் மனதுக்கு பிடித்த இடம் மும்பையில் உள்ள மலபார் மலைப் பகுதிதான். அங்கு முகேஷ் அம்பானிக்கு சொந்தமாக 4532 சதுர மீட்டர் பரப்பளவு இடம் உள்ளது.

கடந்த 2002 ம் ஆண்டு இந்த இடத்தை வக்ப் போர்டிடம் இருந்து ரூ. 21 கோடி கொடுத்து முகேஷ் அம்பானி வாங்கினார். பிறகு சில மாதம் கழித்து அந்த இடத்துக்கு வக்ப் போர்டு மறு விலை நிர்ணயித்தது. அதை ஏற்று கூடுதலாக ரூ. 14 கோடியை முகேஷ் அம்பானி கொடுத்தார்.

மொத்தம் ரூ. 35 கோடி கொடுத்து வாங்கிய அந்த இடத்தில் எல்லா வசதிகளும் கொண்ட கனவு அடுக்கு மாடி சொகுசு மாளிகை உருவாக்க முகேஷ் அம்பானி திட்டமிட்டார். அவரது ஆசைப்படி அங்கு 27 மாடியில் கட்டிடம் கட்ட அரசிடம் அனுமதி பெறப்பட்டது. இதையடுத்து 27 மாடி கட்டுமான பணிகள் தொடங்கி மும்முரமாக நடந்து வருகிறது.

மொத்தம் உள்ள 27மாடியில் தனி வீடு மற்றும் அலுவலகங்கள் அனைத்தை யும் ஒருங்கே அமைக்க அவர் திட்டமிட்டிருந்தார். கீழ்தளத்தில் இருந்து 7 மாடிகள் வரை கார் நிறுத்தும் இடத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த 7 மாடியிலும் 168 கார்களை நிறுத்த முடியும்.

8- வது மாடியில் சினிமா படம் பார்க்க மினி தியேட்டர் அமைக்கப்படுகிறது. 9,10- வது மாடிகளில் உடற்பயிற்சி கூடங்களும் நீச்சல் குளமும் வர உள்ளது. 11 வது மாடி முதல் 18- வது மாடி வரை 8 மாடிகள் அலுவலகங்களுக்கு ஒதுக்கப்படுகிறது.

19,20,21,22 ஆகிய 4 மாடிகளும் விருந்தினர்கள் வந்தால் தங்க வைக்கவும் ஹெல்த் சிறப்புக்கு எனவும் திட்டமிடப்பட்டுள்ளது. 23,24, 25,26,27 ஆகிய 5 மாடிகளில் முகேஷ் அம்பானி வசிக்க ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த 5 மாடிகளில் ஒரு மாடி முகேஷ் அம்பானிக்கும் அவரது மனைவிக்கும் ஆகும்.

மற்றொரு மாடி முகேஷ் அம்பானியின் தாய் கோகிலா பென்னுக்கு என கூறப்பட்டுள்ளது. மற்ற 3 மாடிகளிலும் முகேஷ் அம்பானியின் 3 குழந்தைகளுக்கு என தெரிவிக்கப்பட்டுள்ளது.

27 வது மாடி உச்சியில் 3 ஹெலிகாப்டர் உருவாக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முகேஷ் அம்பானி ஹெலி காப்டரில் வந்து வீட்டில் இறங்க இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 170 மீட்டர் உயர இந்த நவீன மாளிகையின் கட்டுமான பணிகளை மும்பை மக்கள் அதிசயத்துடன் பார்த்து வருகிறார்கள்.

இந்த நிலையில் மராட்டிய மாநில வருவாய் மற்றும் வரி இலாகா முகேஷ் அம்பானி நிறுவனத்துக்கும் வக்ப் போர்டுக்கும் ஒரு நோட்டீசு அனுப்பி உள்ளது. அதில் வக்ப் போர்டு நிலம் அம்பானிக்கு விற்கப்பட்டது சட்ட விரோதம். அதை வக்ப் போர்டு திரும்ப பெற வேண்டும் என்று உத்தர விடப்பட்டுள்ளது. மலபார் நிலத்தை விற்க வக்ப் போர் டுக்கு எந்த உரிமையும் இல்லை. எனவே சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் மராட்டிய அரசு அறிவித்துள்ளது.

மராட்டிய மாநில அரசின் இந்த திடீர் நடவடிக்கை முகேஷ் அம்பானிக்கும், வக்ப் போர்டு நிர்வாகிகளுக்கும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து வக்ப் போர்டு நிர்வாகிகள் கூறுகையில், மராட்டிய அரசு எங்களை பழிவாங்கும் நோக்கில் இப்படி நடந்து கொள்கிறது. இதுகுறித்து முன்பே ஏன் சொல்லவில்லை என்றனர்.

அரசின் உத்தரவை எதிர்த்து வக்ப் போர்டு கோர்ட்டில் வழக்கு தொடர முடிவு செய்துள்ளது.

——————————————————————————————————————

இந்தியாவின் 2-வது பணக்காரர்: அனில் அம்பானி

பல்வேறு நிறுவனங்களின் செய்துள்ள முதலீடை அடுத்து இந்தியாவின் இரண்டாவது பணக்காரர் என்ற சிறப்பை அனில் அம்பானி பெற்றுள்ளார். முதல் இடத்தில் அவரின் சகோதரர் முகேஷ் அம்பானி உள்ளார்.

வெள்ளிக்கிழமையுடன் முடிவடைந்த மும்பையின் பங்கு வணிகத்தின் அடிப்படையில் அனில் அம்பானியின் பங்கு மதிப்பு 1 லட்சம் கோடியே 334 ரூபாய் ஆகும்.

முகேஷ் அம்பானியின் பங்கு 1 லட்சத்து 15 ஆயிரம் கோடி ரூபாயாகும். ரிலையன்ஸ் தொலைதொடர்பு வர்த்தகத்தில், அனில் அம்பானியின் பங்கு 53 சதவீதமாகும்.

Posted in Ambani, Anil, Arrogance, Asia, Asset, Azim Premji, Bajaj, Bill Gates, Billion, Billionaire, Birla, Biz, Bombay, Brazil, Business, Capitalism, Children, China, Commerce, Dayanidhi, Dhinakaran, Dinagaran, Dinakaran, Display, Distribution, Economics, England, Finance, Forbes, France, Gates, Globalization, Godrej, HCL, Homeless, Homes, Housing, Industry, Infosys, Japan, Kalanidhi, Kid, Kungumam, Lakshmi Mittal, maharashtra, Manufacturing, Maran, Microsoft, Millionaire, Mittal, Money, Mugesh, Mukesh, Mumbai, Nadar, Narayana Murthy, Needy, Oberoi, Oceanview, Op-Ed, Poor, Pune, Rich, Right, Russia, Seaview, Services, Shiv Nader, Sooriyan FM, Soviet, Street, Sun TV, TATA, USA, USSR, Vakf, Wakf, Warren Buffet, Wealth, Wipro | 1 Comment »