85 கோடி மக்கள் உணவின்றித் தவிக்கிறார்கள்
![]() |
![]() |
போதிய உணவின்றி 85 கோடிப் பேர் |
உலகத்தில் போஷாக்கு மற்றும் போதிய உணவு இல்லாமல் தவித்துவரும் மக்களின் எண்ணிக்கையினை 2015 ஆம் ஆண்டியில் பாதியாக குறைப்பது என்று உலக தலைவர்கள் தீர்மானித்து பத்து ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில், இன்னமும் 85 கோடி மக்கள் போதிய உணவு இல்லாமல் தவித்து வருவதாக ஐ.நா தெரிவித்துள்ளது.
இது, ஆரம்பத்தில் இருந்த, அதே எண்ணிக்கையாகும்.
இதில் வருத்தம் கொடுக்க கூடிய உண்மை என்னவென்றால், 1996 ஆம் ஆண்டு நடைபெற்ற உலக உணவு மாநாட்டிற்கு பின்னர், போதிய உணவு இல்லாமல் தவிப்போரின் எண்ணிக்கையினை குறைப்பதில் கிட்டதட்ட எவ்விதமான முன்னேற்றத்தினையும் எட்டவில்லை என்பது தான் என்று குறிப்பிடுகிறார் ஐ.நா வின் உணவு மற்றும் விவசாய அமைப்பின் ஜேக்வஸ் டியோப்.
எனினும் வளர்ந்து வரும் நாடுகளான சீனா, இந்தியா, பிரேசில் மற்றும் இந்தோனேசியாவில் அதிகரித்துவரும் மக்கள் தொகையினால், ஒட்டுமொத்தமாக போதிய உணவு இன்றி தவித்து வரும் மக்களின் எண்ணிக்கையின் வீதம் குறைந்துள்ளது.