தொகுதி நிலவரத்தை அறிய ஆந்திர எம்.எல்.ஏ.க்களுக்கு புதிய சாப்ட்வேர்
ஹைதராபாத், மார்ச் 7: ஒரு இடத்தில் இருந்து கொண்டே தொகுதி நிலவரத்தை பற்றி தெரிந்து கொள்ள உதவும் வகையில் புதிய சாப்ட்வேர் தயாரிக்கப்பட்டு ஆந்திர எம்.எல்.ஏ.க்களின் லேப்டாப்பில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த புதிய சாப்ட்வேரின் மூலம் எம்.எல்.ஏ.க்கள் தங்கள் தொகுதியில் நடக்கும் வளர்ச்சித் திட்டங்களை கண்காணிக்கலாம். கிராமப்புறத்தை பற்றி தெரிந்து கொள்ளலாம். மக்களின் குறைகள் குறித்தும் கண்காணிக்கவும் இந்த புதிய சாப்ட்வேர் உதவும்.
முதல்கட்டமாக இந்த சாப்ட்வேர் 30 எம்.எல்.ஏ.களுக்கு வழங்கப்பட்டுள்ளது.