Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Daily’ Category

Nov. 11 – Sri Lankan Military Says 34 Rebels Killed in Fighting in North

Posted by Snapjudge மேல் நவம்பர் 12, 2007

இலங்கையின் வடக்கே தொடரும் வன்முறை

இலங்கை இராணுவத்தினர்
இலங்கை இராணுவத்தினர்

இலங்கையின் வடக்கே யாழ் குடாநாட்டுப் போர்முனைகளில் இன்று அமைதி நிலவியதாகத் இராணுவத்தின் சார்பில் பேசவல்ல அதிகாரியான பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார். அதே நேரம், வவுனியா, மன்னார் இராணுவ முன்னரங்க பகுதிகளில் இராணுவத்திற்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் நேற்று இடம்பெற்ற வெவ்வேறு மோதல் சம்பவங்களில் 34 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

இதனிடையில் பெரிய தம்பனை பகுதியில் இடம்பெற்ற மோதல்களில் கொல்லப்பட்ட விடுதலைப் புலிகளின் 6 சடலஙகள் இன்று மாலை வவுனியா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்துள்ளனர்.

எனினும் இந்த மோதல்கள் மற்றும் சேத விபரங்கள் குறித்து விடுதலைப் புலிகள் தரப்பிலிருந்து உடனடியாகத் தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

Posted in Attacks, Daily, Eelam, Eezham, LTTE, Sri lanka, Srilanka | Leave a Comment »

75 Years: Indian Express Group of Publications Anniversary

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 5, 2007

எக்ஸ்பிரஸ் ’75: நன்றியுடன் வாசகர்களுக்கும் நலம் நாடுவோருக்கும்…

இன்றைக்குச் சரியாக 75 ஆண்டுகளுக்கு முன், 1932, செப்டம்பர் 5-ம் தேதி “தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’ பிறந்தது. இத்தனை ஆண்டுகால கொந்தளிப்பான வரலாற்று வழித்தடத்தில், “எக்ஸ்பிரஸ்’ சந்தித்ததைப்போல வெற்றிகளையும் வேதனைகளையும் மகிழ்ச்சிகளையும் சோதனைகளையும் இந்தியாவில் வேறு எந்த நாளிதழும் சந்திக்கவில்லை. அத்தனையையும் நாம் கடந்து வந்திருக்கிறோம்; அதற்கு, இந்தியாவில் வேறு எந்த நாளிதழுக்கும் கிடைத்திராத வகையில், வாசகர்களின் அன்பும் ஆதரவும் எக்ஸ்பிரஸýக்குக் கிடைத்ததே காரணம் என்பதைப் பணிவுடன் நான் தெரிவித்துக்கொள்கிறேன். உள்ளபடியே, இந்த நாளிதழைக் கட்டியெழுப்பிய முன்னோடிகள், இதை மக்களின் நாளிதழாகவே உருவாக்கினர். கடந்த 75 ஆண்டுகளாகவும் அதே தடத்தில்தான் எக்ஸ்பிரஸ் பயணம் செய்துகொண்டிருக்கிறது. அந்த வரலாற்றின் மைல் கல்லை, வரும் வாரங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்துவதன் வாயிலாகக் கொண்டாடவிருக்கிறோம்; பாதுகாக்கப்பட வேண்டிய சிறப்பு இணைப்பையும் வெளியிடத் திட்டமிட்டிருக்கிறோம்.

முதன்முதலாக சென்னை வாசகர்களின் கரங்களில் எக்ஸ்பிரஸ் தவழ்ந்தபோது, காலனியாதிக்கத்தின் பிடியில் இந்தியா இருந்தது. சுதந்திரப் பாதையில் இந்தியா காலடி எடுத்து வைத்தபோது எக்ஸ்பிரஸýக்கு வயது 15. முதலில் பிரிட்டிஷ் ஆதிக்க சக்திகளை எதிர்த்துப் போராடியது எக்ஸ்பிரஸ்; சுதந்திரத்தால் துளிர்த்த நம்பிக்கைகள், அரசியல் ஊழல்களால் நொறுக்கப்பட்டபோது, சுதேசி ஆதிக்க சக்திகளை எதிர்த்துப் போராடியது எக்ஸ்பிரஸ். 1975-ல் நாட்டின் மீது “நெருக்கடி நிலை’ என்ற கருமேகங்கள் கவிந்தபொழுது, வெற்றிக்கான நம்பிக்கை ஒளிக்கீற்று தெரியாத நிலையிலும் அதை எதிர்த்துப் போராடியது எக்ஸ்பிரஸ். ஆனால், மக்களின் அமோகமான ஆதரவின் காரணமாக, அந்தக் காலகட்டத்தின் கெடுபிடிகளையும் வெற்றிகண்டது எக்ஸ்பிரஸின் எழுச்சி. எக்ஸ்பிரûஸப்போல வாசகர்களுடன் இறுக்கமாகப் பிணைக்கப்பட்டிருக்கும் வேறு எந்த நாளிதழும் இந்தியாவில் இல்லை.

அண்மை ஆண்டுகளாக வேறுவிதமான யுத்தம் நடந்துகொண்டிருக்கிறது. நாட்டின் தெற்கில் நாம் “தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்’ ஆகியிருக்கிறோம். அதே நேரத்தில் பதிப்பகத் துறையைச் சந்தைச் சக்திகள் தம் ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவந்து கொண்டிருக்கின்றன. செய்திகள் பண்டமயமாக்கப்படுவது தவிர்க்க முடியாதது போலத் தோன்றும் சூழலிலும், பத்திரிகை தர்மம் அதற்கு வளைந்து கொடுத்துவிடாமல் நாம் போராடிக்கொண்டிருக்கிறோம். அதில் வெற்றி பெறுவது அவ்வளவு எளிதான காரியமல்ல. பரந்து விரிந்த எக்ஸ்பிரஸ் வாசகர் குடும்பத்தின் ஆதரவு மீண்டும் எங்களுக்கு உறுதுணையாக இருக்கும் என்ற நம்பிக்கையில் தளராது உழைத்துக்கொண்டிருக்கிறோம். எது நடந்தாலும் சரி, தயக்கமின்றி என்னால் ஒன்றைக் கூற முடியும்: நாங்கள் எப்படிப் பிறந்தோமோ அப்படியே என்றும் இருப்போம். ஆம், மக்களின் செய்தித்தாளாக.

அனைவருக்கும் நன்றி.

மனோஜ் குமார் சொந்தாலியா

தலைவர்

Posted in 75, Anniversary, Daily, Dinamani, Dinmani, Express, IE, jubilee, Magazines, Magz, Media, MSM, News, Newspaper, Newspapers, Paper, Platinum, weekly | Leave a Comment »

Slum Clearance Board housing collapses – Daily Routine of the Poor

Posted by Snapjudge மேல் மே 30, 2007

விழுந்து நொறுங்கும் வீடுகள்: அலறும் குடும்பங்கள்

சென்னை, மே 30: 5-ம் வகுப்பு படிக்கும் மீனா, நண்பர்களுடன் தனது வீட்டில் மதிய உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அப்போது, திடீரென வீட்டின் மேற்கூரை விழுந்து நொறுங்கியது. சாப்பாட்டில் மண். அலறியடித்து, வீட்டை விட்டு வெளியே ஓடி வந்தனர்.

இந்தச் சம்பவம் சென்னை சாந்தோம் அருகே உள்ள நொச்சிக்குப்பம் குடிசை மாற்று வாரியக் குடியிருப்பில் திங்கள்கிழமை நடைபெற்றது.

மேற்கூரை விழுந்து நொறுங்கும் சம்பவம் அந்தப் பகுதியில் அன்றாடம் நடைபெறும் நிகழ்வாகி விட்டது என்பதால் யாரும் அவ்வளவு கவலைப்படவில்லை. காரணம், மேற்கூரை இடிந்து விழும் சம்பவம் அடிக்கடி நடைபெற்று வருகிறது.

6 மாதங்களுக்கு முன்பு குடிசை மாற்று வாரியக் குடியிருப்பின் பால்கனி சுவர் இடிந்து விழுந்ததில் மாதவராஜ் என்பவர் உயிரிழந்தார்.

“”சென்னையில் குடிசைகளை அகற்றி அப்பகுதியில் குடியிருப்புகளை கட்டும் திட்டம் முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது நொச்சிக்குப்பத்தில் தான். 786 வீடுகள் கொண்ட குடியிருப்புகள், கடந்த 1972-ல் பயனாளிகளிடம் ஒப்படைக்கப்பட்டன. கால மாற்றங்களால் தற்போது கட்டடங்கள் சேதமடைந்து வருகின்றன” என்றார் 75 வயதான ஆர்.எஸ்.மணி.

வசதி படைத்தவர்கள் தங்களின் சேதமடைந்த வீடுகளை சரி செய்து கொள்கின்றனர்.

“”கடந்த 6 ஆண்டுகளாக எங்களின் வீடுகள் மிக மோசமான நிலையில் உள்ளன. வீடுகளை முற்றிலும் இடித்து விட்டு புதிதாக கட்டித் தருவதாக அரசு அறிவித்துள்ளது. பயனாளிகள் பட்டியலை எடுத்தார்கள். அதன்பின்பு, எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை” என்றார் ஜெயசீலி.

குடிசைப் பகுதி தடையா? நொச்சிக்குப்பம் குடிசை மாற்று வாரியக் குடியிருப்பை ஒட்டி, நூற்றுக்கணக்கான குடிசை வீடுகள் உள்ளன. குடிசை மாற்று வாரியக் குடியிருப்பில் வசிப்போரின் வாரிசுகள், குடிசை வீடுகளில் வசிப்பதாகக் கூறப்படுகிறது.

“”புதிதாக கட்டித் தருவதாக அரசு உறுதி அளித்துள்ள வீடுகளில் தங்களுக்கும் பங்கு வேண்டும் என குடிசைப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆனால், அவர்களிடம் ரேஷன் அட்டை உள்ளிட்ட சான்றுகள் இல்லை. இதனால், வருவாய்த் துறை சார்பில் இரண்டு முறை பயனாளிகள் பட்டியல் வெளியிட்ட போதும், அப்பகுதியில் பெரும் குழப்பம் நிலவியது.

இதனால், என்ன செய்வதென்று தெரியாமல் அதிகாரிகள் தவித்து வருகின்றனர்” என்றார் அப்பகுதியைச் சேர்ந்த சேகர்.

மாற்று இடம் வழங்கப்படவில்லை: “”நொச்சிக்குப்பத்தில் உள்ள சேதமடைந்த வீடுகளை இடிப்பதற்கு அரசு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. ஆனால், அங்கு இருப்பவர்களை வேறு இடங்களில் தங்க வைப்பதற்கான மாற்று இடம் வழங்கப்படவில்லை என்பதால், அப்பகுதி மக்கள் அங்கேயே குடியிருந்து வருகின்றனர்” என்கிறார் தென்னிந்திய மீனவர் நலச்சங்கத்தைச் சேர்ந்த பாரதி.

இதுகுறித்து குடிசை மாற்று வாரிய அதிகாரிகளிடம் கேட்ட போது,””சேதமடைந்த கட்டடங்களை இடித்து, புதிய கட்டடங்களை கட்டுவதற்கான வரைபடம் தயாராக உள்ளது. விரைவில் குடியிருப்புகள் கட்டப்படும்” என்றனர். எப்போது என்பதை தெளிவுபடுத்தவில்லை.

——————————————————————————————————————-

குறட்டை விடும் குடிசை மாற்று வாரியம்

எம். மார்க் நெல்சன்

Kalainjar DMK Slum Clearance board abuse power Karunanidhi banner

சென்னை கோட்டூர்புரம் குடிசை மாற்று வாரிய குடியிருப்புச் சுவர்களில் வைக்கப்பட்டிருக்கும் விளம்பரங்கள்.

சென்னை, ஜூலை 15: சென்னையில் குடிசைப் பகுதி மாற்று வாரியத்தின் சுவர்கள் வருமானம் ஈட்டித் தருபவையாக மாறி வருகின்றன.

ஆனால், வருமானம் தொடர்பான வரவு -செலவு கணக்குகளைப் பராமரிப்பதில் தமிழ்நாடு குடிசைப் பகுதி மாற்று வாரிய அதிகாரிகள் மெத்தனம் காட்டி வருகின்றனர்.

சென்னையின் பல்வேறு பகுதிகளில் குடிசை மாற்று வாரிய குடியிருப்புச் சுவர்கள் இருந்தாலும், கோட்டூர்புரம் குடிசை மாற்று வாரிய குடியிருப்புச் சுவர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.

அங்குள்ள பிளாக் ஹெச்-8 முதல் ஹெச்-15 வரையுள்ள குடியிருப்புச் சுவர்களில் தனியார் விளம்பரங்களும், ஹெச்-5, 6, 7, 16 மற்றும் பிளாக் ஆர் -18, 19 ஆகிய குடியிருப்புச் சுவர்களில் முதல்வர் கருணாநிதியின் சட்டமன்ற பொன்விழா விளம்பர பேனர்களும் இடம்பெற்றுள்ளன.

சுவர் விளம்பரங்களுக்கு ஆண்டுக்கு, சதுர அடிக்கு அதிகபட்சமாக ரூ. 10 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. விளம்பரப் பலகைகளை வைக்க ஆண்டுக்கு, சதுர அடிக்கு ரூ. 26 வசூலிக்கப்படுகிறது.

இந்தக் கட்டணங்கள் ஒவ்வொரு ஆண்டும் 10 சதவீதம் உயர்த்தப்படுகின்றன. பெரும்பாலும், இந்த விளம்பரங்கள் அனைத்தும் 1,200 சதுர அடி அளவில் அமைக்கப்படுகின்றன.

இதன்படி, கோட்டூர்புரம் குடியிருப்புப் பகுதிகளில் உள்ள ஆறு விளம்பரப் பலகைகள் மூலம் ஆண்டுக்கு ரூ. 2 லட்சமும், எட்டு சுவர் விளம்பரங்கள் மூலம் ரூ. 1 லட்சமும் அரசுக்கு வருமானம் வருகிறது.

இதே பகுதியில் தனியார் இடத்தில் வைக்கப்பட்டுள்ள விளம்பரங்களுக்கு சதுர அடிக்கு ரூ. 60 முதல் 70 வரை வசூலிக்கப்படுகிறது. இதன்மூலம் 1200 சதுர அடி கொண்ட ஒரு விளம்பரத்தின் மூலம் ஆண்டுக்கு ரூ. 84 ஆயிரம் வருமானம் தனியாருக்குக் கிடைக்கிறது.

ஆனால், குடிசைப் பகுதி மாற்று வாரிய குடியிருப்புகளில் வைக்கப்பட்டுள்ள விளம்பரத்துக்கு ஆண்டுக்கு ரூ. 32 ஆயிரம் மட்டுமே வசூலிக்கப்படுகிறது.

பராமரிக்கப்படாத கணக்குகள்: இந்நிலையில் குடிசைப் பகுதி மாற்று வாரிய அலுவலகக் கணக்குப் பதிவேட்டில் இந்த விளம்பரங்கள் குறித்த சில கணக்குகள் 1-4-2003 வரை மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளன.

விளம்பரக் கட்டணங்கள் வசூலிப்பது, விளம்பரக் காலம் முடிந்ததும், அந்த விளம்பரங்களை அழிப்பது உள்ளிட்ட பணிகளை கே.கே. நகரில் அமைந்துள்ள செயற் பொறியாளர் அலுவலகத்தினரும், எஸ்டேட் அலுவலரும் (ஈ.ஓ.7) செய்து வருவதாக குடிசை மாற்று வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் இது குறித்த கணக்குகளையும், விவரங்களையும் அவர்கள் குடிசை மாற்று வாரிய அலுவலகத்துக்கு சரிவர தெரிவிக்காததால் கணக்குப் பதிவேட்டில் சரிவர இடம்பெறவில்லை எனவும் தெரிவித்தனர்.

இதனால் விளம்பரங்களுக்கு பணம் வசூலிக்கப்படுகிறதா அல்லது வசூலிக்கப்படும் பணம் வேறு வகையில் செலவழிக்கப்படுகிறதா என்பது மர்மமாக உள்ளது.

ஆளுங்கட்சி என்பதால்… அங்கு வைக்கப்பட்டுள்ள கருணாநிதி சட்டமன்ற பொன்விழா விளம்பர பேனர்களுக்கு கட்டணம் எதுவும் வசூலிக்கப்படுவதில்லை எனத் தெரிகிறது.

பொன்விழா முடிந்து ஒரு மாதம் ஆன நிலையில், அந்த இடங்களில் தனியார் விளம்பர பலகைகளுக்கு அனுமதி அளித்தால் கூடுதல் வருமானம் கிடைக்கும் என்பது அதிகாரிகளின் கருத்து.

ஆனால், ஆளுங்கட்சி என்பதால் அந்த விளம்பரங்களை அகற்றுவதற்கு பயந்து அப்படியே விட்டுவைத்துள்ளனர் அதிகாரிகள்.

ஏற்கெனவே குறைந்த விலைக்கு விளம்பரங்களை வைக்க அனுமதிக்கும் நிலையில், வைக்கப்பட்டிருக்கும் விளம்பரங்களுக்கு முறையாக பணத்தை வசூலிக்காமலும், வசூலித்த பணத்தை சேர்க்கவேண்டிய இடத்தில் சரிவர சேர்க்காமலும் அரசுக்கும், குடிசை மாற்று வாரியத்துக்கும் இழப்பை ஏற்படுத்துவது ஏன் என்பதுதான் கேள்வி.

Posted in 50, Ad, Advt, Affordability, Area, Banner, Board, Celebrations, City, Civil, Clearance, collapses, Construction, Cost, Daily, Disabled, DMK, Dwelling, Education, eligibility, encroachments, Engineering, Eviction, facilities, facility, Flats, Floods, Free, Functions, Government, Govt, Handicapped, Hoardings, Home, Houses, Housing, Huts, Hygiene, improvement, Income, infrastructure, Issues, Jobs, Karunanidhi, Karunanidhy, Karunanidi, Karunanithi, Kottoor, Kottur, Kotturpuram, kutcha, Labor, Labour, Lands, Loss, M Karunanidhi, M karunanidhy, M karunanithi, Maintenance, migration, Mu Ka, Mu Ka Stalin, Mu Karunanidhi, Mu Karunanidhy, Mu Karunanidi, MuKa, MuKa Alagiri, MuKa Stalin, multistorey, Necessity, NGO, Party, Plots, Politics, Poor, Poster, Power, Problems, Rain, Rehabilitation, Rent, revenue, Routine, Rural, sanitation, Santhome, settlements, shelter, Sleep, Slum, Society, Structure, Tenements, TN, TNSCB, TV, unhygienic, Worker, Youth | 1 Comment »

Indian Journalists Association – Officebearers

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 19, 2006

இந்திய பத்திரிகைகள் சங்கத் தலைவராக ஹொர்முஸ்ஜி தேர்வு

பெங்களூர், செப். 19: இந்திய பத்திரிகைகள் உரிமையாளர்கள் சங்கத் தலைவராக ஹொர்முஸ்ஜி என். கமா தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்திய பத்திரிகை உரிமையாளர்கள் சங்கத்தின் 67-வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டம் பெங்களூரில் திங்கள்கிழமை நடைபெற்றது.

இதுவரை இச்சங்கத் தலைவராக இருந்த ஜேகப் மாத்யூ (மலையாள மனோரமா) பதவிக் காலம் முடிவடைந்ததையடுத்து புதிய தலைவர் தேர்தல் நடைபெற்றது.

இதில் 2006-07-ம் ஆண்டுக்கான பத்திரிகை அதிபர்கள் சங்க புதிய தலைவராக ஹொர்முஸ்ஜி என். கமா (பாம்பே சமாச்சார் வாரப் பத்திரிகை-மும்பை) தேர்ந்தெடுக்கப்பட்டார்.

துணைத் தலைவர்களாக

  • பஹுபாலி எஸ். ஷா (குஜராத் சமாச்சார்)
  • பரேஷ் நாத் (உமன்ஸ் எரா),

கெüரவ பொருளாளராக சுனில் டங்க், செகரட்டரி ஜெனரலாக தீபக் எஸ். ராஜா ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.செயற்குழு உறுப்பினர்கள் விவரம்:

  • மனோஜ் குமார் சொந்தாலியா (தினமணி),
  • டாக்டர் பி.எஸ்.ஆதித்தன் (வாராந்திர ராணி),
  • விவேக் கோயங்கா (இந்தியன் எக்ஸ்பிரஸ், மும்பை),
  • விஜய் தர்டா (லோக்மாத்),
  • மேமன் மாத்யூ (மலையாள மனோரமா),
  • விஜய்குமார் சோப்ரா (பஞ்சாப் கேசரி, ஜலந்தர்),
  • பிரதீப் ஜி.பவார் (சாகல்),
  • சேகர் குப்தா (இந்தியன் எக்ஸ்பிரஸ், புதுதில்லி), உள்பட பலர் செயற்குழு உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

Posted in Association, Daily, Elections, India, Journalists, Journals, Magazines, Media, Monthly, Newspaper, Officebearers, Tamil, Vaaranthari Rani, weekly | Leave a Comment »