Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Cuddalore’ Category

TN faces power crisis – Unannounced Electricity cuts to end by capacity addition & private participation

Posted by Snapjudge மேல் நவம்பர் 28, 2007

இதர மாநிலங்களிலிருந்து மின்சாரம்: ஆர்க்காடு வீராசாமி

சென்னை, நவ. 26: தமிழகத்தில் ஏற்பட்டுள்ள மின்சாரப் பற்றாக்குறையைச் சமாளிக்க அசாம், ஹரியாணா மாநிலங்களிலிருந்து மின்சாரம் பெறப்படும் என்று மின்துறை அமைச்சர் ஆர்க்காடு வீராசாமி தெரிவித்தார். நிருபர்களுக்கு அவர் திங்கள்கிழமை அளித்த பேட்டி:

தமிழகத்தின் மொத்த மின் உற்பத்தித் திறன் 7,500 மெகாவாட். தி.மு.க. அரசு ஏற்பட்ட பிறகு, தொழில் வளம் பெருக, புதிய தொழில்நிறுவனங்கள் தொடங்கப்பட்டு வருகின்றன. இதனால், மின் தேவை கடந்த காலத்தை விட அதிகரித்து தற்போது 8,800 மெகாவாட்டை எட்டிவிட்டது.

தொழில் வளம் காரணமாக, மின் தேவை அதிகரிப்பதால், பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. மத்திய அரசின் மின் விநியோகமும் குறைந்துள்ளது. இந்நிலை டிசம்பர் வரையில் நீடிக்கும். பின்னர் சீராகும்.

மின்சாரத் தேவையைச் சமாளிக்க பல்வேறு மாநிலங்களுடன் தமிழகம் பேசி வருகிறது. இது குறித்து மாநில மின் வாரியத் தலைவர்கள் பேசி வருகின்றனர். இதற்கான உடன்பாடு இம்மாத இறுதிக்குள் பூர்த்தியாகிவிடும். இந்த மாநிலங்களிலிருந்து மொத்தம் 300 மெகாவாட் மின்சாரம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மின் பற்றாக்குறையின் விளைவாக கட்டணத்தை உயர்த்தும் எண்ணம் இல்லை. மின்சாரக் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்ற யோசனையை தமிழக முதல்வர் நிறுத்தி வைத்துள்ளார்.

ரூ.32 ஆயிரம் கோடியில் மின்நிலையம்: தமிழகத்தில் மொத்தம் ரூ.32 ஆயிரம் கோடியில் இரு புதிய மின் உற்பத்தி நிலையங்களை மத்திய அரசு தொடங்கத் திட்டமிட்டுள்ளது. இதற்காக மரக்காணம், கடலூர் ஆகிய இடங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இதில் மத்திய அரசே முழு அளவு முதலீட்டையும் செலுத்தும்.

இந்த இரு மின் நிலையங்கள் மூலம் மொத்தம் 8 ஆயிரம் மெகாவாட் உற்பத்தி செய்யப்படும். இதில் 50 சதவீதத்தைத் தமிழகத்துக்கு அளிக்கும்படி கோரப்படும்.

ஜெயங்கொண்டத்தில் அனல் மின் நிலையத்தை அமைக்க நிலம் கையகப்படுத்தும் பணியில் 90 சதவீதம் பூர்த்தியாகிவிட்டது. மீதியும் விரைவில் முடிந்துவிடும். தற்போது, சுற்றுச்சூழல் துறை, உள்ளாட்சி அமைப்புகளின் ஒப்புதல் எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தில் 18 லட்சம் விவசாயிகளுக்கு இலவசமாக மின்சாரம் அளிக்கப்படுகிறது. அது போல் நெசவாளர்களுக்கும் வழங்கப்படுகிறது. அத்துடன், 10 லட்சம் குடிசைகளுக்கும் இலவச மின்சாரம் அளிக்கப்படுகிறது.

கூடங்குளம் அணு மின் நிலையத்தின் உற்பத்தி அடுத்த ஆண்டுதான் தொடங்கும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. மின் உற்பத்தியை விரைவுபடுத்துமாறு பிரதமருக்குத் தமிழக முதல்வர் கடிதம் அனுப்பியுள்ளார்.

அந்த மின் நிலையம் ஜனவரியில் உற்பத்தி தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜனவரியில் சீராகும்

தொழில் வளம் காரணமாக மின் தேவை அதிகரிப்பதால், பற்றாக்குறை நேர்ந்துள்ளது. மத்திய அரசின் மின் விநியோகமும் குறைந்துள்ளது. இந்நிலை டிசம்பர் வரையில் நீடிக்கும். நிலைமை சரியானதும் ஜனவரியில் சீராகும்.

இருந்தாலும் மின்சாரப் பகிர்மானத்தின்போது இழப்பு நேர்வது இதர மாநிலங்களை விட பெரிய அளவுக்குக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
—————————————————————————————————————————-

வணிக மின் உற்பத்தித் திட்டங்களுக்கு அனுமதி: ஆர்க்காடு வீராசாமி

சென்னை, நவ. 26: தமிழகத்தில் முதல் முறையாக வணிக அடிப்படையில் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் ஆலைகளுக்கு அனுமதி அளிக்கப்படும். இதன்படி 7 ஆயிரம் மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கு அனுமதிக்கும் அரசு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது என்று தமிழக மின்துறை அமைச்சர் ஆர்க்காடு வீராசாமி தெரிவித்தார்.

தமிழகத்தில் மின்சார நிலைமை குறித்து தொழிலதிபர்களுடன் அவர் திங்கள்கிழமை காலையில் விவாதித்தார்.

அதையடுத்து, நிருபர்களிடம் அவர் கூறியதாவது:

வணிக ரீதியில் மின்சாரத்தை உற்பத்தி செய்வது குறித்து மூன்று மாதங்களுக்கு முன் அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. அதில் உருவான கருத்தை ஆராய உயர்நிலைக் குழு அமைக்கப்பட்டது.

வணிக அடிப்படையில் மின்சாரத்தை உற்பத்தி செய்ய எந்தெந்த தொழில் நிறுவனங்கள் முன் வருகின்றனவோ, அவை தமிழ்நாடு மின்வாரியத் தலைவருக்கு விண்ணப்பிக்க வேண்டும். அந்த விண்ணப்பங்களை வாரியம் பரிசீலிக்கும். அதன் அறிக்கை அரசு நியமிக்கும் குழுவிடம் அளிக்கப்படும். அக்குழு விண்ணப்பித்துள்ள நிறுவனம் எவ்வளவு மின்சாரத்தை உற்பத்தி செய்ய இயலும் என்று ஆராய்ந்து தலைமைச் செயலரின் பரிசீலனைக்கு அனுப்பி வைக்கும். பிறகு, முதல்வரின் ஒப்புதலை அடுத்து ஆணை பிறப்பிக்கப்படும்.

இதுவரை வணிக ரீதியில் 7 ஆயிரம் மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கான ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அடுத்த கட்டமாக 10 ஆயிரம் மெகாவாட் உற்பத்தி செய்வதற்கான விண்ணப்பம் குறித்து குழு ஆராய்ந்து வருகிறது. இது இம்மாத இறுதிக்குள் அரசுக்குப் பரிந்துரை செய்யப்படும்.

மின் பற்றாக்குறை:

தமிழகத்தில் இந்த ஆண்டு காற்றாலை மூலம் கிடைக்க வேண்டிய மின்சார உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. அதிக மழை காரணமாக, நெய்வேலி அனல் மின் நிலையத்திலும் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது.

மத்திய தொகுப்பிலிருந்து கிடைக்க வேண்டிய 1,500 மெகாவாட் மின்சாரம் ஆயிரம் மெகாவாட்டாகக் குறைந்துவிட்டது.

இருந்த போதும், மின்சாரம் தங்கு தடையின்றி கிடைக்க உரிய ஏற்பாடுகளை அரசு மேற்கொண்டு வருகிறது. இது குறித்து தொழிலதிபர்களுடன் விவாதிக்கப்பட்டது.

சில தொழிலதிபர்கள் தங்களது ஜெனரேட்டர்களுக்குப் பயன்படுத்தும் எரி எண்ணெய் (ஃபர்னஸ் ஆயில்) மீதான மதிப்புக் கூட்டு வரியில் (வாட்) சலுகை அளிக்கும்படி கேட்டுக் கொண்டனர்.

அது குறித்து முதல்வர், நிதியமைச்சர், நிதிச் செயலருடன் கலந்து பேசப்பட்டது. அதையடுத்து வரும் ஜனவரி 1-ம் தேதி முதல் அந்நிறுவனங்களின் மீதான வாட் வரியை விலக்கிக் கொள்ளப்படுகிறது.

தொழிலதிபர்களுடன் நடைபெற்ற கூட்டம் மிகவும் பயனுள்ளதாக இருந்தது. இக்கூட்டத்தில் தமிழ்நாடு மின்சார வாரியத் தலைவர், உறுப்பினர் (விநியோகம்) ஆகியோர் பங்கேற்றனர். எதிர்காலத்தில் மின்சாரப் பற்றாக்குறை ஏற்படாமல் தவிர்க்க இக்கூட்டம் பெரிதும் உதவியது. இதன் மூலம் மின்வெட்டு ஏற்படாமல் தவிர்க்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க அரசு உறுதி அளித்தது. தவிர்க்க இயலாத நிலை ஏற்பட்டால், ஒரு சில பகுதிகளில் அதிகபட்சமாக அரை மணி நேரம் மின்சாரத் தடையை ஏற்படுத்தும் நிலை வரலாம். அதையும் தவிர்க்க மின்வாரியம் அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும் என்றார் ஆர்க்காடு வீராசாமி.

Posted in Aarkadu, addition, Alternate, Arcadu, Arcaud, Arcot, Arcot N Veerasamy, Assam, Atomic, Bills, Capacity, Center, Centre, Climate, Coal, Construction, Consumers, Crisis, Cuddalore, Dabhol, Demand, Disruption, Electricity, energy, Enron, Govt, Haryana, households, Industry, infrastructure, investments, mega power, megapower, Megawatts, Monsoon, MW, Natural, NLC, Nuclear, Power, Powercut, Powercuts, Prices, Private, Rains, Rathnagiri, Ratnagiri, Resources, Shortage, Solar, State, Supply, Veerasami, Veerasamy, veeraswami, veeraswamy, Windmills | Leave a Comment »

Rural job growth in Tamil Nadu – Employment opportunity development schemes

Posted by Snapjudge மேல் ஜூன் 12, 2007

தேவை, அதிக ஒதுக்கீடு…!

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிக்கு வந்த பிறகு நிறைவேற்றிய முக்கியமான திட்டங்களில் ஒன்று தேசிய கிராமப்புற வேலைவாய்ப்புத் திட்டம். இந்தத் திட்டத்தின் மூலம் கிராமப்புறங்களில் எல்லோருக்கும் ஆண்டில் குறைந்தது நூறு நாள்களாவது வேலைவாய்ப்பு உறுதி செய்யப்படுகிறது.

ஒருபுறம் பன்னாட்டு நிறுவனங்களுக்கும் பெரிய தொழிலதிபர்களுக்கும் சாதகமாக மத்திய அரசின் திட்டங்களும் செயல்பாடுகளும் இருந்தாலும், காங்கிரஸ் கட்சியின் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் தனது முதல் பட்ஜெட்டிலேயே அறிவிக்கப்பட்ட திட்டம் இது. மற்ற மாநிலங்களில் இந்தத் திட்டம் முறையாக நிறைவேறுகிறதோ இல்லையோ, தமிழகத்தைப் பொருத்தவரை திமுக அரசு ஆட்சிக்கு வந்த பிறகு இந்தத் திட்டத்திற்கு முக்கியத்துவம் தரப்படுவது வரவேற்கப்பட வேண்டிய விஷயம்.

இருபது ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் மட்டுமே காணப்பட்ட சேரிகள் இப்போது எல்லா மாவட்டத் தலைநகரங்களிலும் பெருகி வருகின்றன. இதற்கு முக்கியமான காரணம், கிராமப்புறங்களில் வேலைவாய்ப்பு இல்லாமல் இருப்பதும், விவசாயத்தை மட்டும் நம்பி உயிர் வாழ முடியாது என்கிற நிலைமைக்கு அவர்கள் தள்ளப்பட்டு விட்டதும்தான். இந்தப் பிரச்னைக்குத் தீர்வாக மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட திட்டம்தான் கிராமப்புற வேலைவாய்ப்பை உறுதி செய்யும் திட்டம்.

முதல்கட்டமாக,

  • விழுப்புரம்,
  • கடலூர்,
  • திருவண்ணாமலை,
  • திண்டுக்கல்,
  • நாகப்பட்டினம்,
  • சிவகங்கை

ஆகிய மாவட்டங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. அதன் பிறகு

  • தஞ்சாவூர்,
  • திருவாரூர்,
  • திருநெல்வேலி மற்றும்
  • கரூர்

ஆகிய நான்கு மாவட்டங்களுக்கும் இந்தத் திட்டம் விரிவாக்கப்பட்டது. கடந்த ஓர் ஆண்டில் இந்தத் திட்டத்திற்காக சுமார் 256 கோடி ரூபாய் செலவிடப்பட்டிருக்கிறது.
இந்தத் திட்டத்தின் மூலம் ஒவ்வொரு கிராமப்புறத் தொழிலாளியின் குறைந்தபட்ச சம்பளம் ரூ. 80 என்று நிர்ணயிக்கப்பட்டிருப்பதுடன், இந்தக் கூலித்தொகை குறைந்தது ஆண்டில் நூறு நாள்களுக்காவது ஒவ்வொரு தொழிலாளிக்கும் கிடைக்கும்விதத்தில் திட்டங்கள் நிறைவேற்றப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்க அம்சம். இந்தத் திட்டம் முறையாக அமல்படுத்தப்படுமானால், தமிழகத்திலுள்ள எல்லா கிராமங்களும் மத்திய மற்றும் மாநில அரசு நடைமுறைப்படுத்தும் திட்டங்கள் மூலம் அதிகரித்த வேலைவாய்ப்பையும் கூடுதல் வருமானத்தையும் அடைய முடியும்.

இந்தத் திட்டத்திற்காக மத்திய அரசின் நடப்பாண்டுக்கான பட்ஜெட் ஒதுக்கீடு 12,000 கோடி ரூபாய். இதில் தமிழகம், மத்திய அரசில் தனக்கிருக்கும் செல்வாக்கைப் பயன்படுத்தி எத்தனை கோடி ரூபாய்கள் பெறப்போகிறது என்பதைப் பொருத்துதான் நமது மாநிலத்தில் இந்தத் திட்டத்தின் வெற்றி அமையும்.

இந்தத் திட்டம் ஊரக வளர்ச்சித் துறையின் கீழ் வருவதால், அமைச்சர் மு.க. ஸ்டாலினின் நேரடிப் பார்வையில் நிறைவேற்றப்படுகிறது. அவருக்கு அமைந்திருக்கும் ஊரக வளர்ச்சித் துறை செயலர் அஷோக்வர்தன் ஷெட்டி அனுபவசாலி மட்டுமல்ல, திறமைசாலியும்கூட என்பது ஊரறிந்த உண்மை. இவர்கள் இருவரும் முயற்சி செய்தால் மத்திய அரசிடமிருந்து கணிசமான ஒதுக்கீடு பெற்று மிகவும் வெற்றிகரமாக இந்தத் திட்டத்தைத் தமிழகம் முழுமைக்கும் விரிவாக்கம் செய்ய முடியும்.

கிராமப்புறங்களில் வேலைவாய்ப்பைப் பெருக்குவதன் மூலம், தமிழகத்தின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சிக்கும் வழிவகுக்க முடியும் என்பதுடன், நகர்ப்புறம் நோக்கி வேலைவாய்ப்பு தேடி குடிபெயர்வோரின் எண்ணிக்கையையும் குறைக்க முடியும். அமைச்சர் மு.க. ஸ்டாலின் இந்தத் திட்டத்தில் தனிக் கவனம் செலுத்துகிறார் என்பதும், கிராமப்புற வளர்ச்சித்துறை செயலர் அஷோக்வர்தன் ஷெட்டி இந்தத் திட்டத்தின் வெற்றியை உறுதிசெய்ய கண்காணிப்புக் குழுக்களை அமைத்துச் செயல்படுகிறார் என்பதும் வரவேற்கப்பட வேண்டிய செய்திகள்.

இந்தத் திட்டம் தமிழகம் முழுவதும் முறையாக அமல்படுத்தப்பட வேண்டும். அப்படி அமல்படுத்த மத்திய அரசிடமிருந்து கூடுதல் ஒதுக்கீடு பெற வேண்டும். இந்தத் திட்டத்தை முறையாக அமல்படுத்தாத மாநிலங்களுக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது என்பதை தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்திய அரசிடம் சுட்டிக்காட்டி, மாநில அரசின் திட்டத்திற்குக் கைகொடுத்து உதவ வேண்டும்.

—————————————————————————————

சேரிகளும், சட்டம் ஒழுங்கும்!

இந்திய மருத்துவ சங்கத்தின் தமிழ்நாடு பிரிவு நடத்திய ஓர் ஆய்வின்படி, ஒருவேளைச் சோற்றுக்காக அவதிப்படும் மக்கள்தான் சேரிவாசிகளும் தெருவோரவாசிகளும் என்பது திடுக்கிட வைக்கும் செய்தி. அதே ஆய்வின்படி, 45 சதவிகித பெண்கள் ரத்தசோகையால் அவதிப்படுவதாகவும் அதில் சர்க்கரை நோயாளிகள் பலர் இருப்பதாகவும் தெரிகிறது. அதுமட்டுமல்ல, இப்படி சேரிகளிலும் தெருவோரங்களிலும் வாழும் பலரும் எழுதப்படிக்கத் தெரியாதவர்கள் என்பதும், நிரந்தரமான வேலை எதுவும் இல்லாதவர்கள் என்பதும் அதைவிட அதிர்ச்சி தரும் செய்தி.

இருபது ஆண்டுகளுக்கு முன்புவரை சென்னை, மும்பை, கோல்கத்தா மற்றும் தில்லி ஆகிய நான்கு பெருநகரங்களில் மட்டும் காணப்பட்ட சேரிகள் இப்போது மாவட்டத் தலைநகரங்கள் மற்றும் தாலுகா தலைநகரம்வரை உருவாகி வருகின்றன என்பதுதான் கவனிக்கப்பட வேண்டிய விஷயம். கிராமப்புறங்களில் வேலைவாய்ப்பு இல்லாமல் போனதும், பெருகிவரும் மக்கள்தொகையால், குடும்பத்தினர் அனைவருக்கும் போதுமானதாக விவசாய நிலங்கள் இல்லாமல் போனதும்தான் இந்த அவல நிலைக்கு அடிப்படைக் காரணம் என்று சமூக ஆர்வலர்கள் கருதுகின்றனர்.

ஒருபுறம், தனிமனித வருமானமும் தேசிய வருமானமும் அதிகரித்து வருகின்றன என்று புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. அன்னியச் செலாவணி இருப்பு 200 பில்லியன் டாலர்களைக் கடந்துவிட்டது என்றும், அன்னிய முதலீடு எப்போதும் இல்லாத அளவுக்கு அசுர வேகத்தில் அதிகரித்து வருகிறது என்றும் அரசாங்கம் சந்தோஷப்படுவது ஒருபுறம். நகர்ப்புறங்களில் தகவல் தொடர்புத்துறையின் வளர்ச்சியால், படித்த இளைஞர்களின் வேலைவாய்ப்பு கணிசமாக அதிகரித்திருப்பதும் அவர்களது வருமானம் நினைத்துப் பார்க்க முடியாத அளவு அதிகரித்திருப்பதும் மற்றொரு புறம்.

அதிக வருமானம், பெருகிவரும் வேலைவாய்ப்பு, உயர்ந்துவிட்ட வாழ்க்கைத்தரம் என்று முன்னேற்றப் பாதையில் இந்தியா வளர்ந்து கொண்டிருப்பது சந்தோஷத்தைத் தருகிறது என்றாலும், இந்த மாற்றங்கள் எல்லாம் சமுதாயத்தின் வெறும் முப்பது சதவிகித மக்களைத்தான் நேரிடையாகவோ, மறைமுகமாகவோ சென்றடைகின்றன என்பதுதான் வருத்தமான விஷயம். அசுர வேக வளர்ச்சி முப்பது சதவிகிதத்தினரை மகிழ்விக்கும் அதேநேரத்தில், எழுபது சதவிகிதத்தினர் அன்றாட வாழ்க்கையை எதிர்கொள்ள முடியாமல், அடிப்படைத் தேவைகளைக்கூட நிறைவேற்ற முடியாமல் அவதிப்படுகிறார்கள் என்பதை மறந்துவிடலாகாது.

ஒருவேளைச் சோறுகூடக் கிடைக்காமல் இருப்பது அவர்கள் தலையெழுத்து என்று விட்டுவிட முடியாது. காரணம், அந்த எழுபது சதவிகித மக்களின் அதிருப்தி அதிகரிக்கும்போது, வசதிகளை அனுபவிக்கும் முப்பது சதவிகிதத்தினர் பாதிக்கப்படுவார்கள் என்பதுதான் சரித்திரம் நமக்குத் தொடர்ந்து சொல்லிக் கொடுக்கும் பாடம்.

சமீபகாலமாக, நகர்ப்புறங்களில் சமூக விரோதிகளின் நடமாட்டம் அதிகரித்திருப்பதும் திருட்டு மற்றும் கொள்ளைகள் அதிகரித்திருப்பதும் இந்தப் பிரச்னையின் விளைவுகள் எப்படி இருக்கப் போகின்றன என்பதற்கு ஒரு முன்னோடி என்றுதான் நாம் கொள்ள வேண்டும். சேரிகளில் வாழும் மக்கள், தங்கள் கண் முன்னால் பல்வேறு நுகர்பொருள்களை ஒரு சிலர் மட்டும் அனுபவிப்பதைப் பார்க்கும்போதும், தொலைக்காட்சிகளில் பணக்காரத்தனம் பட்டவர்த்தனமாகப் பறைசாற்றப்படுவதைக் காணும்போதும் உள்ளுணர்வு அவர்களைத் தவறு செய்யத் தூண்டுவது சகஜம்தான்.

நகர்ப்புற மக்களின் ஏழ்மை என்பது சட்ட ஒழுங்குப் பிரச்னையுடன் இரண்டறக் கலந்த ஒன்று. சேரிகளிலிருந்துதான் ரௌடிகளும் தாதாக்களும் சமூக விரோதிகளும் உருவாகிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ள டாக்டர் பட்டம் தேவையில்லை. காவல்துறையினர் சட்டம் ஒழுங்கைப் பராமரிக்க முடியாமல் போனால் அதற்குக் காரணம் அவர்கள் மட்டுமல்ல. அதற்கு நமது ஆட்சியாளர்களின் தவறான பொருளாதாரக் கொள்கைகளும் காரணம் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது!
—————————————————————————————

Posted in Budget, Compensation, Cong (I), Cong(I), Congress, Congress (I), Congress Party, Congress(I), Cuddalore, Didigul, Dindugul, DMK, Economy, Employment, Finance, GDP, Globalization, Growth, Huts, Industry, Jobs, Kadaloor, Kadalur, Karur, MK Stalin, MNC, MuKa Stalin, Nagapattinam, Nellai, Poor, Revenues, Salary, SEZ, Shivaganga, Sivagangai, Stalin, Tanjore, Thanjavur, Thiruvannamalai, Thiruvaroor, Thiruvarur, Tirunelveli, Villupuram, Vilupuram, Vizupuram, Wages | Leave a Comment »

Six tsunami warning centres in TN

Posted by Snapjudge மேல் ஏப்ரல் 3, 2007

தமிழகத்தில் 6 இடங்களில் சுனாமி எச்சரிக்கை மையங்கள்

சென்னை, ஏப். 3: தமிழகத்தில் 6 இடங்களில் சுனாமி எச்சரிக்கை மையங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக வருவாய் மற்றும் சிறைத் துறை அமைச்சர் ஐ. பெரியசாமி கூறினார்.

பேரவையில் திங்கள்கிழமை உறுப்பினர்கள் வை. சிவபுண்ணியம் (இந்திய கம்யூ.), கோவை தங்கம் (காங்.), டி.ஜெயக்குமார் (அதிமுக) ஆகியோரது கேள்விக்கு அமைச்சர் அளித்த பதில்:

தமிழகத்தில் சென்னை, கடலூர், நாகப்பட்டினம், தூத்துக்குடி, ராமேசுவரம் மற்றும் கன்னியாகுமரி ஆகிய இடங்களில் சுனாமி எச்சரிக்கை மையங்கள் அமைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

அத்துடன் கடலோரப் பகுதிகளில் உள்ள வீடுகளில் பாதிப்பு ஏற்படாத வகையில் காடுகள் வளர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அத்துடன் முகத்துவார பகுதிகளிளை ஆழப்படுத்தும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அத்துடன் பூகம்பம் அளவிடும் மையங்கள் வேலூர் மாவட்டம் காவலூர் மற்றும் திருப்பத்தூரிலும், நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்திலும், கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக் கோட்டையிலும் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இப்பகுதிகள் அனைத்தும் பூகம்பம் ஏற்படும் இடங்களில் 2 மற்றும் 3-ல் இடம்பெற்றுள்ளன.

இதைப் போன்ற கருவிகள் உள்ள மையங்கள் ஏற்கெனவே சென்னை, சேலம், கொடைக்கானலில் இயங்கி வருகிறது. இது தவிர, கடலோரப் பகுதிகளில் சுனாமி உள்ளிட்ட இயற்கைச் சீற்றங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த கையேடுகள் அச்சிடப்பட்டு அப்பகுதி மக்களிடம் விநியோகிக்கப்பட்டுள்ளன என்றார் பெரியசாமி.


சுனாமி எச்சரிக்கை கருவிகள் உலகெங்கும் தேவை என நிபுணர் கருத்து

சுனாமியால் பாதிக்கப்பட்ட சாலமன் தீவுகள்
சுனாமியால் பாதிக்கப்பட்ட சாலமன் தீவுகள்

சுனாமி அலைகளை கண்டறிந்து எச்சரிக்கை தரக்கூடிய வசதிகள் பலவற்றை பசிபிக் பெருங்கடலில் பொறுத்த வேண்டிய தேவை இருப்பதாக சுனாமி நிபுணர் ஒருவர் கூறியுள்ளார்.

2004 ஆம் ஆண்டில் இந்தியப் பெருங்கடல் பகுதியில் ஏற்பட்ட சுனாமியை அடுத்து, பசிபிக் பிராந்தியத்துக்காக ஒதுக்கப்பட்ட பணம் உள் நோக்கம் ஏதுமின்றி தவறுதலாக இந்தியப் பெருங்கடல் பகுதிக்கு அனுப்பப்பட்டிருக்காலம் என்று லாரா கிங் என்ற சுனாமி நிபுணர் தெரிவித்துள்ளார்.

அடுத்த முறை பசிபிக் பெருங்கடல் பகுதியில் தான் சுனாமி அலைகளின் பெரிய தாக்கம் ஏற்படும் என்று தான் கருதுவதாகவும் லாரா கிங் கூறியுள்ளார்.

 

——————————————————————————————————

ஆழிப்பேரலை தடுப்புத் திட்டம்

காஞ்சிபுரம், மே 28: சுனாமி போன்ற அவசர கால பாதிப்புகளைத் தவிர்க்கும் வகையில் வனத்துறை, காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடலோரப் பகுதியில் அவசர கால ஆழிப்பேரலை தடுப்புத் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.

2004-ம் ஆண்டு டிச.26-ம் தேதி ஏற்பட்ட சுனாமி பேரலையால் பெருத்த பாதிப்பு ஏற்பட்டது. காஞ்சிபுரம் மாவட்டம் உள்பட தமிழகம் முழுவதும் ஏராளமானோர் இறந்தனர். அதிக பொருள் சேதமும் ஏற்பட்டது.

இது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஆய்வில் கடற்கரையில் சதுப்பு நிலக்காடுகளோ, சவுக்குத் தோப்புகளோ இருந்தால் சுனாமி பாதிப்பு மிகக் குறைவாக இருந்திருக்கும் எனத் தெரிய வந்தது. இதையடுத்து வனத்துறை சுனாமி தடுப்புத் திட்டத்தை செயல்படுத்த தீர்மானித்தது.

தமிழகம் முழுவதும் 2000 ஹெக்டேர் பரப்பில் தாவர அரண் தடுப்புத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

குறிப்பாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் 550 ஹெக்டேர் பரப்பில் இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

இத்திட்டம் தொடர்பாக செங்கல்பட்டு கோட்ட வன அலுவலர் சுகிர்தராஜ் கோயில் பிள்ளை, நிருபரிடம் கூறியது:

சுனாமி தடுப்பு சீரமைப்புத் திட்டம் மிகவும் பயனுள்ள திட்டமாகும். சாதாரணமாக சிமென்ட்டாலான தடுப்புச் சுவர் கட்ட 1 கி.மீ. தூரத்துக்கு ரூ.6.5 கோடியும், மண்ணாலான தடுப்புச்சுவர் கட்ட ரூ.1.25 கோடியும் ஆகிறது. ஆனால் இயற்கையாக சவுக்குத் தோப்பு அமைக்க ரூ.5.4 லட்சமே செலவாகும்.

மேலும் 5 ஆண்டுகள் கழித்து இதன் மூலம் நல்ல வருவாய் கிடைக்கும். சவுக்கு மரங்களை வெட்டி விட்டு மீண்டும் அதே இடத்தில் கன்றுகளை நடலாம். தற்போது அரசுக்குச் சொந்தமான புறம்போக்கு நிலங்களில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. விரைவில் தனியாருக்குச் சொந்தமான இடங்களில் செயல்படுத்தப்படும். சவுக்கு கன்றுகளை வனத்துறை இலவசமாக தருகிறது என்றார் சுகிர்தராஜ் கோயில் பிள்ளை.

Posted in Boat, Capsize, Chennai, Coast, coastal, Cuddalore, Earthquake, Fisherman, fishermen, Forests, Government, I Periasamy, KANCHEEPURAM, Kanchi, Kanchipuram, Kanchivaram, Kanjeepuram, Kanjeevaram, Kanjipuram, Kanjivaram, Kanyakumari, Kavalore, mangrove, Measure, Measurements, Nagapattinam, Periasamy, Rameswaram, Rasipuram, Revenue Minister, Richter, Scale, Sea, seacoast, Seashore, Tamil Nadu, Thenkanikottai, Tirupattur, TN, Trees, Tsunami, Tuticorin, warning | Leave a Comment »

Collector starts probe into attack on DPI MLA D Ravikumar

Posted by Snapjudge மேல் ஜனவரி 10, 2007

ரவிக்குமார் எம்.எல்.ஏ.வை போலீஸ் தாக்கியதாக புகார்: நீதி விசாரணைக்கு அரசு உத்தரவு

கடலூர், ஜன. 11: காட்டுமன்னார்கோயில் சட்டப் பேரவை உறுப்பினர் ரவிக்குமாரை, போலீஸ் தாக்கியதாக கூறப்படும் புகார் குறித்து நீதி விசாரணைக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ராஜேந்திர ரத்னு புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கடந்த 2-ம் தேதி கடலூர் வட்டம் தொண்டமாநத்தம் கிராமத்தைச் சேர்ந்த சிவாவின் சவ ஊர்வலம் சேடப்பாளையத்தில் நடந்தது. இதில், பங்கேற்ற ரவிக்குமார் எம்.எல்.ஏ.வை, காவல்துறையினர் தாக்கியதாக கூறப்படுகிறது.

இதுகுறித்த உண்மை நிலையை அறிய, மாவட்ட நிர்வாக நடுவர் மற்றும் மாவட்ட ஆட்சியத் தலைவரை விசாரணை அலுவலராக நியமித்து, அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

எனவே, மாவட்ட ஆட்சியர் 25-1-2007 அன்று, காலை 11 மணிக்கு, ஆட்சியர் அலுவலக நீதிமன்றக் கூடத்தில் இதுகுறித்து விசாரணை நடத்த உள்ளார்.

சேடப்பாளையம் கிராமத்தில் 2-1-2007 அன்று, நடைபெற்ற சவ ஊர்வலத்தில் பங்கேற்ற ரவிக்குமாரை, காவல் துறையினர் தாக்கியதாக கூறப்படுவது குறித்த விவரங்களை நேரடியாகவோ, வேறு எந்த விதத்திலோ தெரிந்தவர்கள், இந்த விசாரணையில் ஆஜராகி அவர்களுக்கு தெரிந்த விவரங்களை ஆட்சியரிடம் தெரிவிக்கலாம். வாய்மொழியாகவோ, எழுத்து மூலமாகவோ இதைத் தெரிவிக்கலாம் என்றும் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.

Posted in abuse, Attack, civil rights, Collectorate, Cuddalore, D Ravikumar, Dalit Panthers, District Collector, District Magistrate, DPI, Gaikward Babu, Human Rights, Kattumanaar Koil, Kattumanaar Kovil, Kattumanar Koil, Kattumanar Kovil, Law, Makkal Civil Rights Kazhagam, Manitha Urimai Iyakkam, MLA, municipal chairman, Municipality, Nellikuppam, Order, Peoples Watch, Police, Puratchi Thamizhagam, Rajendra Ratnoo, Ravi kumar, Ravikkumar, S N Nagar, Thamarai Selvan, vice-chairman, Viduthalai Chiruthaigal, Viduthalai Chiruthaikal, Viduthalai Siruthaigal, Vituthalai Siruthaikal | Leave a Comment »