Archive for the ‘Coup’ Category
Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 31, 2007
பிரான்சிஸ்கோ ஆட்சியைக் கண்டிக்கும் தீர்மானம்
 |
 |
பிரான்சிஸ்கோ பிரான்கோ |
ஸ்பெயினில் கடந்த 1975ஆம் ஆண்டு முடிவுக்கு வந்த ராணுவ தளபதி பிரான்சிஸ்கோ பிரான்கோவின் நாற்பது ஆண்டுகால ஆட்சியை அதிகாரபூர்வமாக கண்டிக்கும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சட்டம் ஒன்றை ஸ்பெயின் நாடாளுமன்றம் நிறைவேற்றியுள்ளது.
பிரான்கோவின் பாஸிச ஆட்சி என்று குறிப்பிட்டு கண்டிப்பதோடு 1936ஆம் ஆண்டுக்கும், 1939ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தைச் சேர்ந்த கூட்டுப் புதைகுழிகள் தோண்டப்படுவதற்கான முயற்சிகளுக்கு பிராந்திய நிர்வாகங்கள் நிதி வழங்க வேண்டும் என்று உத்தரவிடும் மசோதாவை நாடாளுமன்றம் ஆதரித்து வாக்களித்துள்ளது.
ஜெனரல் பிரான்கோவின் ஆட்சியை குறிக்கும் வகையிலான சிலைகள், பதாகைகள் மற்றும் சின்னங்கள் அனைத்தும் பொது கட்டிடங்களிலுருந்து அகற்றப்படவேண்டும் என்றும் இந்த உத்தரவு கூறுகின்றது.
ஆறிய வடுக்களை மீண்டும் கிளறிவிட்டு சமுதாயத்தை பிளவுபடுத்த பார்க்கிறது சோஷலிஸ அரசு என்று பழமைவாத எதிர்கட்சி குற்றம்சாட்டியுள்ளது.
Posted in Angel Acebes, Angels, Assassin, Assassinations, Atrocities, atrocity, Autocracy, autocrat, Autocratic, Aznar, beatification, Beatify, bishop, Catholic, Catholicsm, CCP, Ceremony, Christ, Christian, Christianity, Church, Civil, clergy, Condemn, Conservative, Conservatives, Coup, Criminal, Cruz Laplana y Laguna, Dictator, Dictators, Dictatorship, executed, executions, Fascism, fascist, Fear, Francisco, Francisco Franco, Franco, Gen. Francisco Franco, General, Germans, Germany, graves, inequality, Jose Maria Aznar, Judges, Jury, Justice, Laguna, Law, Left, legislation, massacre, Military, Militia, NCCP, Oppression, Order, parliament, Passions, PM, Popular Party, Power, President, Rebellion, Regime, Religion, repression, Republicans, Right, Ruler, Russia, sainthood, Saints, Senate, Socialism, Socialist, Soviets, Spain, Spanish, USSR, Vatican, victims, War, Wealth, Zapatero | Leave a Comment »
Posted by Snapjudge மேல் திசெம்பர் 6, 2006
கசக்குது சர்க்கரைத் தீவு
பூவுக்குள் பூகம்பம் என்பதைப் போல குட்டித் தீவு நாடான பிஜியில் 4 வது முறையாக ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது.
1987-ல் இரண்டு முறையும் 2000ம் ஆண்டிலும் நடைபெற்ற ராணுவப்புரட்சிகளால் நேர்ந்த பொருளாதார வீழ்ச்சியிலிருந்து இன்னும் முழுமையாக மீளமுடியாத சூழ்நிலையில், இன்னொரு ராணுவக் கலகம்.
பிரிட்டிஷாரின் ஆளுகையில் இருந்த பிஜி தீவுக்கு 1870-களில் இந்தியத் தொழிலாளர்கள் கரும்பு விவசாயத்துக்காகக் கொண்டு செல்லப்பட்டனர். இவர்களில் கணிசமானவர்கள் தமிழர்கள். இந்தத் தீவில் இந்திய வம்சாவளியினர் 40 சதவீதம் பேர் உள்ளனர். ஆட்சிமொழிகளில் ஒன்று இந்துஸ்தானி (இந்தி). தீபாவளி, ராமநவமி, ஹோலி ஆகிய பண்டிகைகளுக்கு அரசு விடுமுறை உண்டு.
இந்திய வம்சாவளியினரே (இந்தோ-பிஜியன்) அதிகார மட்டங்களில் பரவலாக இருந்ததை மண்ணின் மைந்தர்களால் சகிக்க முடியவில்லை. 1987-ல் ராணுவப் புரட்சி நடந்தது. இந்திய வம்சாவளியினரில் ஒரு பகுதியினர் அச்சத்தில் வெளியேறினர்.
2000ம் ஆண்டில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரதமர் மகேந்திர செüத்ரியை நீக்கிய ஜார்ஜ் ஸ்பைட்-டை நீக்கிவிட்டு, லைசீனியா கராúஸ-வை பிரதமராக அமர்த்தியவர் தளபதி பிராங்க் பைனிமாரமா. இப்போது அவரே லைசீனியாவைத் தூக்கி எறிந்துவிட்டார். புரட்சிக்கான காரணங்கள் மிக அற்பமானவை.
அமெரிக்கா தனது உதவிகளை நிறுத்தப் போவதாக அறிவித்துள்ளது. காமன்வெல்த் நாடுகள் சபையிலிருந்து பிஜி நீக்கப்பட்டுவிடும். இதெல்லாம் ஒருபுறம் இருக்க, அந்தத் தீவில் மிகவும் பாதிக்கப்படுவோர் அங்கு வாழும் மக்கள்தான்.
பிஜியின் மக்கள் தொகை 10 லட்சம். இதில் 2.5 லட்சம் பேர் வறுமைக் கோட்டிற்குக் கீழே வாழ்பவர்கள். இங்குள்ள உழைப்பாளர்களில் 10 சதவீதம்பேர் கரும்பு விவசாயத்திலும் (ஆண்டு உற்பத்தி 30 லட்சம் டன்) 10 சதவீதம் பேர் சுற்றுலா சார்ந்த தொழில்களிலும் பிழைப்பு நடத்துகின்றனர்.
உலகச் சந்தையில் சர்க்கரையின் விலைவீழ்ச்சி காரணமாக தற்போது பிஜியின் கரும்பு உற்பத்திக்குப் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. சுற்றுலா மூலமான வருவாயை முழுமையாக எதிர்நோக்க வேண்டிய நேரத்தில்தான் இந்த ராணுவப் புரட்சி நடந்துள்ளது. ராணுவப் புரட்சி நடந்த சில மணி நேரத்தில் சுற்றுலாப் பயணிகள் பலரும் தங்கள் முன்பதிவுகளை ரத்து செய்துவிட்டனர். ஆண்டுக்கு 5.5 லட்சம் வெளிநாட்டுப் பயணிகளை இழுக்கிறது பிஜியின் இயற்கை அழகு. ஒரு பயணி சராசரியாக 8 நாள்கள் தங்குகிறார். நாளொன்றுக்கு 180 டாலர் செலவிடுகிறார். நாட்டின் நான்கில் ஒருபகுதி வருவாய் சுற்றுலா மூலம்தான்.
2000ம் ஆண்டு ராணுவப் புரட்சி காரணமாக, சுற்றுலா சார்ந்த தொழில் முதலீடுகள் வருவது நின்றுபோயின. கடந்த 7 ஆண்டுகளாக அமைதியான அரசியல் சூழல் நிலவியதால் மீண்டும் பல நிறுவனங்கள் சுற்றுலா சார்ந்த தொழில்களில் முதலீடுகளைக் கொண்டுவந்து கொட்டுவதற்கான திட்டங்களை கையில் எடுக்கும் வேளையில், மீண்டும் ராணுவப் புரட்சி!
“தற்போதைய புரட்சியில் யாரும் ரத்தம் சிந்தவில்லை. இனியும் அதே நிலை நீடித்தால் சுற்றுலாப் பயணிகள், முதலீட்டாளர்கள் அச்சம் குறையும்’ என்று பிஜியின் சுற்றுலாத் தொழிலில் இருப்பவர்கள் நம்புகின்றனர்.
கரும்பு உற்பத்திக்கு ஐரோப்பிய நாடுகள் மானியம் தருகின்றன. புரட்சி நீடித்தால் அதை இழக்க நேரிடலாம். சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை குறைந்தால் அதன் பாதிப்பு இந்த சாதாரண மக்களைத்தான் பாதிக்கும்.
Posted in Australia, British, Coup, Democracy, Elections, Fiji, Immigration, India, Indo-Fijian, Mahendra Chowdhry, Military, parliament, Sugarcane, Tourism | Leave a Comment »
Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 22, 2006
ஆட்சி அதிகாரத்தினை கைப்பற்றியவர்களுக்கு தாய்லாந்து மன்னர் ஆதரவு
 |
 |
மன்னரின் படத்திற்கு தாய்லாந்தின் புதிய தலைவர் மரியாதை |
தாய்லாந்தின் விவகாரங்களில் அதீத செல்வாக்கு உடைய மன்னர் பூமிபோல் அடுல்யடெஜ் இந்த வாரத் தொடக்கத்தில் தாய்லாந்தில் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ள இராணுவத் தலைவர்களுக்கு முறைப்படியான தனது ஆதரவினை வழங்கியிருக்கிறார்.
தாய்லாந்து மன்னரின் முறைப்படியான அங்கீகாரம் வாசிக்கப்பட்ட வேளை மன்னரின் உருவப் படத்திற்கு முன் தாய்லாந்தின் புதிய தலைவர் ஜெனரல் சோந்தி பூன்யாரட்கிளின் மரியாதை செலுத்தும் விதமாக குனிந்து வணங்கினார்.
பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ள பிரதமர் தக் ஷின் ஷினாவத்ராவின் ஆட்சி காலத்தில் நடைபெற்றதாகக் கூறப்படும் ஊழல் குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரிக்க இராணுவக் கவுன்சில் ஒரு ஆணையத்தினை அமைத்துள்ளது.
தலைநகர் பேங்காக்கில் ஆர்ப்பாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அதிரடி ஆட்சி மாற்றத்தை எதிர்த்து பல சிறிய அளவிலான ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.
Posted in Asean, Asia, Bangkok, Bhumibol Adulyadej, Commission, Corruption, Coup, Inquiry, King, Military, Sondhi Boonyaratkalin, South East, Tamil, Thailand, Thaksin Shinawatra | Leave a Comment »
Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 21, 2006
 |
 |
லண்டனில் தக்ஷின் |
லண்டனில் தக்ஷின் சின்வத்ரா
தாய்லாந்தில் கடந்து செவ்வாய்க்கிழமையன்று நடைபெற்ற இராணுவப் புரட்சியால் பதவியிறக்கம் செய்யப்பட்ட, தாய்லாந்து நாட்டின் பிரதமர் தக்ஷின் சின்வத்ரா அவர்கள் தனக்கு உடனடியாக தாய்லாந்துக்கு செல்லும் திட்டம் எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.
தற்போது லண்டனில் இருக்கும் அவர், தான் தனக்கு மிகவும் தேவையான ஓய்வை எடுத்துக் கொள்ளப்போவதாக ஒரு அறிக்கையில் கூறியுள்ளார்.
தாய்லாந்தில் உள்ள அனைத்துக் கட்சிகளும், நாடு மற்றும் மன்னரின் பொருட்டு ஒரு இணக்கப்பாடு எட்ட முயல வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

தாய்லாந்து தலைநகர் பாங்காக்கை ஆளும் இராணுவக் கவுன்சில், கூட்டங்களுக்கும், அரசியல் கட்சிகளின் பிற செயல்பாடுகளுக்கும் தடை விதித்துள்ளது.
ஊடகங்களின் செயல்பாடுகளுக்கும் கட்டுபாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்த இராணுவப் புரட்சியை முன் நின்று நடத்திய ஜெனரல் சொனாதி புண்யாரட்லிங், சில வாரங்களில் இராணுவம் அதிகாரத்தை திரும்ப அளிக்கும் என்றும், ஒரு ஆண்டில் தேர்தல் நடத்தப்படும் என்றும் அறிவித்துள்ளார்.
Posted in Asean, Bangkok, Coup, Democracy, General, London, Military, parliament, Pasuk Phongpaichit, Prime Minister, Sondhi Boonyaratkalin, Tamil, Thailand, Thaksin Shinawatra, World | Leave a Comment »