Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Corporation’ Category

Tamil Nadu State Library: Procuring new books – Fund Allocation

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 14, 2008

அண்ணா மறுமலர்ச்சி திட்ட நூலகங்கள்: விரயமாகும் அரசு நிதி

ப. இசக்கி

திருநெல்வேலி, பிப். 11: தமிழ்நாட்டில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் கட்டப்படும் நூலகங்களால் அரசின் நிதி பெருமளவு விரயமாகும் சூழ்நிலை ஏற்பட்டு வருகிறது.

பொது நூலகத் துறையின் நூலகங்கள் உள்ள ஊராட்சிகளிலும் இந்த நூலகங்கள் கட்டப்படுவதால் ஒரே ஊராட்சியில் இரண்டு நூலகங்கள் தேவையா என்ற கேள்வி எழுந்துள்ளது.

தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 12,618 கிராம ஊராட்சிகளிலும் அடிப்படை வசதிகளை நிறைவு செய்யும் வகையில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

ஐந்து ஆண்டுகளில் இந்தப் பணிகளை முடிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 2,525 கிராமங்களை தேர்வு செய்து தலா ரூ. 20 லட்சம் செலவில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதில் கான்கிரீட் சாலை, தெரு விளக்குகள், குளம், இடுகாடு, சுடுகாடு, குடிநீர், விளையாட்டு, கிராம அங்காடிகள் என பல்வேறு பணிகள் செய்யப்படுகின்றன.

அதில் நூலகம் அமைக்கும் பணியும் ஒன்று.

ஒவ்வொரு ஊராட்சியிலும் நூலகக் கட்டடம், இருக்கைகள், புத்தகங்கள் என்ற வகைக்கு கடந்த நிதியாண்டில் ரூ. 2.3 லட்சம் செலவு செய்யப்பட்டது. நிகழ் நிதியாண்டில் இந்தத் தொகை ரூ. 3.33 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி, நூலகக் கட்டடம் கட்ட ரூ. 2.68 லட்சமும், இருக்கைகள், அலமாரிகள் வாங்க ரூ. 30 ஆயிரமும், புத்தகங்கள் வாங்க ரூ. 35 ஆயிரமும் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

ஊரக நூலகங்கள்:

இந்தத் திட்டத்தின் கீழ், திருநெல்வேலி மாவட்டத்தில் மொத்தம் உள்ள 425 ஊராட்சிகளில் கடந்த நிதியாண்டில் 82 ஊராட்சிகளும், நிகழ் நிதியாண்டில் 82 ஊராட்சிகளும் தேர்வு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த 164 ஊராட்சிகளிலும் நூலகக் கட்டடங்களும் கட்டப்பட்டு வருகின்றன. இதில் சுமார் 25 ஊராட்சிகளில் ஏற்கெனவே பொது நூலகத் துறையின் கீழ் கிராமப்புற நூலகம் அல்லது பகுதிநேர நூலகம் செயல்பட்டு வருகிறது.

எனவே, அடுத்த 5 ஆண்டுகளில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் முடிவடையும் போது மொத்தமுள்ள 425 ஊராட்சிகளில் கிராமப்புற நூலகம் மற்றும் பகுதிநேர நூலகம் உள்ள 78 ஊராட்சிகளில் இரண்டு நூலகங்கள் இருக்கும்.

இதேபோல, தமிழ்நாட்டில் சுமார் 1,500-க்கும் மேற்பட்ட ஊராட்சிகளில் பொது நூலகத் துறையின் நூலகமும், அண்ணா மறுமலர்ச்சி திட்ட நூலகமும் அமையும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இவ்வாறு ஒரே ஊராட்சியில் இரண்டு நூலகங்கள் அமைவதைத் தவிர்க்கும் வகையில், அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் நூலகங்களை அமைக்கும் பணியை பொது நூலகத் துறையிடம் ஒப்படைக்க அத்துறையிடம் அரசு கருத்து கேட்டது. ஏற்கெனவே பொருளாதார ரீதியாக நலிவடைந்து வரும் நூலகத் துறையானது, ஒவ்வொரு நூலகத்தையும் பராமரிக்க ஆண்டுக்கு ரூ. 1 லட்சம் வரை செலவாகும் என்பதால் அந்த சுமையை தாங்க இயலாது எனக் கருதி மறுத்துவிட்டது.

எனினும், ஓரளவு நல்ல அடிப்படை வசதிகளுடன் இயங்கி வரும் பொது நூலகத் துறையின் நூலகங்கள் உள்ள இடங்களில் மட்டுமாவது அண்ணா மறுமலர்ச்சி திட்ட நூலகத்திற்கான நிதியை அளித்து அவற்றை வலுப்படுத்தலாம் என நூலகத் துறையினர் வலியுறுத்தினர்.

அதன்படி, கடந்த நிதியாண்டில் திருநெல்வேலி மாவட்டத்தில் சில இடங்களில் அண்ணா மறுமலர்ச்சி திட்ட நூலக நிதியானது பொது நூலகத் துறை நூலகத்திற்கு கட்டடமாகவோ அல்லது இதர மேம்பாட்டு பணிகளுக்காகவோ பயன்படுத்தப்பட்டது. நிகழ் நிதியாண்டில் அது நிறுத்தப்பட்டுவிட்டது.

பஞ்சாயத்து ராஜ் சட்டப்படி ஊராட்சித் தலைவரின் 29 கடமைகளில் ஒன்று நூலகம் பராமரிக்க வேண்டும் என்பதும் அடங்கும். ஆதலால், அனைத்து ஊராட்சிகளிலும் அண்ணா மறுமலர்ச்சி திட்ட நூலகத்தை தனியே அமைத்து விடுவது என ஊரக வளர்ச்சித் துறை முடிவு செய்துள்ளது. இதனால் ஒரே ஊராட்சியில் 2 நூலகங்கள் அமைவது தவிர்க்க முடியாததாகிவிட்டது. இதனால் பெரிய பயன் எதுவும் ஏற்படப் போவதில்லை என்பதோடு அரசு நிதி விரயமாவதுதான் மிச்சம் என்கின்றனர் பொது நூலகத் துறையினர்.

புத்தகங்கள் இல்லை:

இவ்வாறு அரசு நிதியில் ஒரு பகுதியை விரயமாக்கி கட்டப்படும் இந்த புதிய நூலகங்களுக்கு இதுவரை புத்தகங்கள் வழங்கப்படவில்லை.

கட்டடம், இருக்கைகள் மட்டும் உள்ள நிலையில் மாதம் ரூ. 750 ஊதியத்தில் பணியாளரும் நியமிக்கப்பட்டு வருகின்றனர்.

கடந்த முறை திமுக ஆட்சியில் அனைத்து ஊராட்சிகளிலும் தலா ரூ. 5 ஆயிரம் செலவில் புத்தகம் வாங்கப்பட்டு “அய்யன் திருவள்ளுவர் படிப்பகம்’ தொடங்கப்பட்டது. தற்போது பெரும்பாலான கிராமங்களில் அந்த படிப்பகத்தின் அடையாளமே இல்லை. அவற்றின் புத்தகங்கள், அண்ணா மறுமலர்ச்சி திட்ட நூலகங்களுக்கு மாற்றப்படுகிறது. எனவே, அய்யன் திருவள்ளுவர் படிப்பகங்களும் விரைவில் அடியோடு மூடப்படும்.

இவ்வாறு ஒன்றை அழித்து மற்றொன்றை உருவாக்கி பொதுமக்கள் வரிப்பணத்தை விரயமாக்குவதைவிட ஏற்கெனவே இருக்கும் பொது நூலகத்தை வலுப்படுத்தினால் நூலகத்தின் நோக்கம் முழுமையாக நிறைவேறும் என்பதே சமூக ஆர்வலர்களின் பொதுவான கருத்து.

——————————————————————————————————

சிறுவர் இலக்கியம் புறக்கணிப்பா?

சென்னை, பிப். 18: தமிழகத்தில் அரசு நூலகங்களுக்கு நூல்கள் வாங்குவதில் சிறுவர் இலக்கிய நூல்கள் புறக்கணிக்கப்படுவதாக எழுத்தாளர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

நூல்கள் வாங்குவது தொடர்பான நடைமுறையில் தெளிவு இல்லாததே இதற்குக் காரணம் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

தமிழகத்தில் மாநிலம், மாவட்டம் என பல்வேறு நிலைகளில் 3 ஆயிரத்து 700-க்கும் அதிகமான நூலகங்கள் செயல்படுகின்றன. இவை அனைத்தும் பொது நூலகத்துறையின் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் வருகின்றன.

இந்த நூலகங்களுக்கு தேவையான நூல்களை தேர்வு செய்து வாங்கும் பொறுப்பும் பொது நூலகத்துறையிடம் அளிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு நூலகங்களுக்கு நூல்கள் வாங்குவது உள்ளிட்ட பணிகளுக்கு கொல்கத்தாவில் உள்ள ராஜாராம் மோகன் ராய் நூலக அறக்கட்டளை ஆண்டுக்கு ரூ. 2 கோடி வரை நிதி உதவி அளிக்கிறது.

மேலும், உள்ளாட்சி அமைப்புகள் மூலம் நூலக வரியாக வசூலிக்கப்படும் நிதியும் மாநில அரசு மூலம் பொது நூலகத்துறைக்கு அளிக்கப்படுகிறது.

இவ்வாறு கிடைக்கும் நிதி ஆதாரங்களை பயன்படுத்தி பொது நூலகத்துறை, நூலகங்களின் கட்டமைப்பு வசதி மற்றும் புதிய நூல்களை வாங்குவது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்கிறது.

நூல்கள் வாங்குதல்: தமிழகத்தில் ஆண்டுதோறும் சிறுவர் இலக்கியம் முதல் ஆய்வுக்கட்டுரைகள் தொகுப்பு வரை பல்வேறு பிரிவுகளில் ஏராளமான நூல்கள் பதிப்பிக்கப்படுகின்றன.

இந்த நூல்களை அந்தந்த நிதி ஆண்டின் இறுதியில் பதிப்பாளர்கள் பொது நூலகத்துறைக்கு அனுப்ப வேண்டும். அத்துடன் கொல்கத்தா உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள தேசிய நூலகங்களுக்கும் நூல்களின் படிகள் அனுப்பப்பட வேண்டும். மேலும், குறைந்தபட்சம் 64 பக்கங்களில், 300 படிகள் அச்சிடப்பட்டிருக்க வேண்டும்.

இவ்வாறு நூலகத்திற்கென நூல்களை வாங்குவதால்தான் பல சிறிய பதிப்பகங்கள் தொடர்ந்து நூல்களைப் பதிப்பிக்கவும், உயிர்வாழவும் முடிகிறது.

எழுத்தாளர்கள் புகார்: அரசு சார்பில் பொது நூலகத்துறை நூல்கள் வாங்கும் நடைமுறைகள், தெளிவில்லாமல் இருப்பதாக எழுத்தாளர்கள் தரப்பில் புகார் கூறப்படுகிறது.

கடந்த 2006-ம் ஆண்டில் வெளியான நூல்கள் 2007 பிப்ரவரியில் பதிப்பாளர்களிடம் இருந்து பெறப்பட்டன. அவற்றில் குறிப்பிட்ட அளவு நூல்கள் தேர்வு செய்யப்பட்டு வாங்கப்பட்டன.

பல்வேறு துறை நூல்களை வாங்கிய நூலகத்துறை சிறுவர் நூல்களை வாங்கவில்லை என அனைத்திந்திய தமிழ் எழுத்தாளர்கள் சங்கம் புகார் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக இந்த சங்கத்தின் பொதுச் செயலாளர் சுடர் முருகையா கூறியது:

“”அப்துல் கலாம் உள்ளிட்ட அனைத்து தலைவர்களும் நாட்டின் எதிர்காலம் குறித்த தங்களது எண்ணங்களில் சிறுவர்களையே மையப்படுத்தியுள்ளனர். அப்படிப்பட்ட வருங்கால தலைமுறையினரின் எண்ணங்களை வலுவாக்க உருவாக்கப்படும் சிறுவர் நூல்களுக்கு உரிய முக்கியத்துவம் அளிக்க வேண்டியது அவசியமானது.

ஆனால், பொது நூலகத்துறை கடந்த ஆண்டு சிறுவர் நூல்களை வாங்குவதை தவிர்த்துவிட்டது. சிறுவர் நூல்கள் பொது நூலகங்களுக்கு வேண்டாம் என முடிவெடுக்கப்பட்டுள்ளதா என்பது குறித்தும் எந்த தகவலும் அறிவிக்கப்படவில்லை.

இது எழுத்தாளர்கள் மற்றும் பதிப்பகத்தாரிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நூல்களை கோரும் போது இன்ன இன்ன விதிகளின்படி நூல்களை அனுப்ப வேண்டும் என பொது நூலகத்துறை அதற்கான விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ளது.

குறிப்பிட்ட ஓர் ஆண்டில் எந்தெந்த துறைகள் தொடர்பான நூல்களை வாங்கப்போகிறோம் என்பதைத் தெளிவாக அறிவித்தால் அந்தந்த துறைகள் தொடர்பான நூல்களை மட்டும் பதிப்பகத்தினர் அனுப்புவார்கள். இவ்வாறு இல்லாமல், அனைத்து துறை சார்ந்த நூல்களையும் பெற்றுக் கொண்டு துறைகள் தொடர்பான எந்தவித வரையறையும் இல்லாமல் நூல்களை தேர்வு செய்வது இது போன்ற பிரச்னைகளுக்கு வழிவகுப்பதாக உள்ளது.

பொது நூலகத்துறைக்கு அனுப்பும் நூல்களில் சில நூல்கள் தேர்வு செய்யப்படாததுக்கான காரணங்களைத் தெரிவிக்க முடியாது என்றும் அதுபற்றி கேட்கவும் கூடாது என்றும் பொது நூலகத்துறை தெரிவிப்பது பிரச்னையை மேலும் வளர்ப்பதாக உள்ளது.

பொது நூலகத்துறையின் இத்தகைய நடவடிக்கை சிறுவர் இலக்கியம் புறக்கணிக்கப்படுகிறதோ என்ற சந்தேகத்தை எழுத்தாளர்களிடம் ஏற்படுத்தியுள்ளது” என்றார் சுடர் முருகையா.

அதிகாரிகள் பதில்: மக்கள் படிப்பதற்கு ஏற்ற தரமான நூல்கள் என்ற அடிப்படையில் மட்டுமே நூலகங்களுக்கு வாங்குவதற்கான நூல்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றன என பொது நூலகத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

துறைவாரியாக பிரித்து நூல்கள் தேர்வு செய்யப்படுவதில்லை என்றாலும், அனைத்து தரப்பு மக்களின் தேவைக்கு ஏற்ற நூல்களே தேர்வு செய்யப்படுகின்றன. இதில் குறிப்பிட்ட எந்த துறையையும் பிரித்துப் பார்ப்பது இல்லை. என்றாலும் நாங்கள் நூலகங்களுக்காக வாங்குவதற்குத் தேர்ந்தெடுத்த நூல்களில் சிறுவர் நூல்களும் இருக்கக்கூடும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Posted in Allocation, Anna, Books, Citizen, Civil body, Corporation, Economy, Education, Fund, Funds, Library, Maintenance, Municipality, Panchayat, Panchayath, Read, State, Students, Tamil Nadu, TamilNadu, Teachers, TN, Upgrades | Leave a Comment »

Ignoring the sports development opportunity in Southern TN: Why only Chennai & why just cricket?

Posted by Snapjudge மேல் ஓகஸ்ட் 9, 2007

தெரிந்தே செய்யும் தவறுகள்

தமிழகத்தைப் பொருத்தவரை விளையாட்டு அரங்கத்தில் நமது பங்களிப்பு எப்போதுமே இருந்து வந்திருக்கிறது. அகில இந்திய ரீதியில் கிரிக்கெட், ஹாக்கி, செஸ், டென்னிஸ் போன்ற விளையாட்டுகளில் நமது வீரர்கள் பிரமிக்கத்தக்க சாதனைகளைப் புரிந்துவந்திருக்கிறார்கள். இதற்கு முக்கியமான காரணம் அரசு தரும் ஊக்கம் என்பதைவிட, நமது இளைஞர்கள் மத்தியில் காணப்படும் ஆர்வம்தான்.

விளையாட்டுத் துறைக்கான தனி ஆணையம் செயல்படுவதுடன், கணிசமான அளவு நிதி ஒதுக்கீடும் மாநில அரசாலும் மத்திய அரசாலும் விளையாட்டுக்காக ஒதுக்கவும் செய்யப்படுகிறது. இத்தனை இருந்தும், கிராமப்புற நிலையிலிருந்து முறையாக விளையாட்டு வீரர்களை அடையாளம் கண்டு, அவர்களுக்குத் தொடர்ந்து ஊக்கம் அளித்து அகில இந்திய அளவில் எல்லா விளையாட்டுகளிலும் நமது வீரர்களை முன்னணியில் நிறுத்த இன்னும் ஏன் முடிவதில்லை என்கிற கேள்விக்கு, அரசும் விளையாட்டு சம்பந்தப்பட்ட ஆணையமும்தான் பதில் சொல்ல வேண்டும்.

எதிர்க்கட்சித் தலைவி ஜெயலலிதா குமரி மாவட்டத்தில் மத்திய அரசின் விளையாட்டுப் பயிற்சி மையம் அமைக்கும் திட்டம் நடவடிக்கை எடுக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டு விட்டதாகக் குற்றம்சாட்ட, அதற்கு பதிலளிக்கும் முகமாக, ஒரு கோடி ரூபாய் செலவில் இந்திய விளையாட்டு ஆணையத்தின் துணை மையம் திருநெல்வேலி மாவட்டத்தில் அமைய இருப்பதாகவும், அதற்கான பூர்வாங்கப் பணிகள் நடைபெறவுள்ளதாகவும் அறிவித்திருக்கிறார் முதல்வர் கருணாநிதி. வரவேற்கப்பட வேண்டிய விஷயம்.

விளையாட்டுத் துறையைப் பற்றிய மிகப்பெரிய குறைபாடு, சர்வதேசத் தரத்திலான விளையாட்டு அரங்கங்களும் பயிற்சிக்கூடங்களும் சென்னையில் மட்டுமே அமைந்திருக்கின்றன என்பதுதான். நெல்லையில் அமைய இருக்கும் இந்திய விளையாட்டு ஆணையத்தின் துணை மையம்போல, உலகத் தரம் வாய்ந்த தடகள மைதானங்கள், கிரிக்கெட் மைதானங்கள், கால்பந்து, கைப்பந்து, பூப்பந்து மற்றும் ஹாக்கி மைதானங்கள் போன்றவை தமிழகத்திலுள்ள அனைத்து மாநகராட்சிகளிலும் அமைய வேண்டியது அவசியம்.

விளையாட்டு என்பதே சென்னையை மட்டுமே மையமாகக் கொண்ட விஷயமாகி விட்டது. ஆனால், விளையாட்டு வீரர்களோ, மாவட்டங்களிலிருந்துதான் அதிகமாக உருவாகிறார்கள். பள்ளிக் கல்விக்கும் சுற்றுலாவுக்கும் தரப்படும் முக்கியத்துவம் விளையாட்டுத் துறைக்கும் அளிக்கப்பட வேண்டும் என்கிற கோரிக்கை நீண்ட காலமாகவே இருந்து வருகிறது. தனியார் கல்வி நிலையங்கள் பல, முறையான விளையாட்டுப் பயிற்சியாளர்களோ, மைதானமோ இல்லாமலே செயல்படுகின்றன என்பது அரசுக்குத் தெரிந்தும், இந்த விஷயத்தில் அரசு கண்மூடி மௌனம் சாதிப்பது ஏன் என்பது தெரியவில்லை.

இளைஞர்கள் மத்தியில், கிரிக்கெட் விளையாட்டிற்கு மிகப்பெரிய வரவேற்பு ஏற்பட்டிருப்பது மறுக்க முடியாத உண்மை. குக்கிராமம் வரை கிரிக்கெட்டின் பாதிப்பு நன்றாகவே தெரிகிறது. ஆனால், சென்னையைத் தவிர வேறு எந்த நகரிலும் சென்னையில் இருப்பதுபோல கிரிக்கெட் ஸ்டேடியம் இல்லையே, ஏன்?

சென்னையில், தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் கட்டுப்பாட்டில் சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானம் இருக்கிறது என்பது மட்டுமல்ல, இந்த மைதானம் சர்வதேசத் தரத்திலான மைதானம் என்பதும் உலகறிந்த உண்மை. அப்படி இருக்கும்போது, பழைய மகாபலிபுரம் சாலையில் கருங்குழிப்பள்ளம் கிராமத்தில் இன்னொரு கிரிக்கெட் ஸ்டேடியம் அமைக்க 50 ஏக்கர் நிலத்தை 30 ஆண்டுகளுக்கான குத்தகைக்குத் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்திற்குத் தமிழக அரசு வழங்க ஒப்புதல் அளித்திருப்பது ஏன்?

கோடிக்கணக்கில் பணமிருக்கும் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்திற்கு அரசு நிலம் அளித்து உதவியதற்குப் பதிலாக, திருச்சி, நெல்லை, மதுரை, கோவை அல்லது சேலத்தில் ஏன் ஒரு நல்ல கிரிக்கெட் மைதானத்தை அரசின் பராமரிப்பில் கட்டக் கூடாது? வேட்டி கட்டிய தமிழக முதல்வரால் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்திற்குள் நுழைய முடியாது என்பதாவது அவருக்குத் தெரியுமா? தெரிந்துமா இப்படியொரு தவறு நடந்திருக்கிறது?

——————————————————————————————————————————

விளையாட்டு ஆணையத்தின் கவனத்துக்கு…

வி. துரைப்பாண்டி

தமிழகத்தில் விளையாட்டு வீரர், வீராங்கனைகள் “உருவாக்கம்’ அரிதாகிவருவது, விளையாட்டு ஆர்வலர்களிடம் மிகவும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

“சாம்பியன்ஸ்’ மேம்பாட்டுத் திட்டம் உள்பட பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வரும் தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் (ஸ்போர்ட்ஸ் டெவலப்மென்ட் அத்தாரிட்டி ஆஃப் தமிழ்நாடு- எஸ்டிஏடி) இளம் வீரர்களை உருவாக்குவதிலும், அதற்கான பயிற்சியாளர்களை நியமனம் செய்வதிலும் கவனம் செலுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

“கேட்ச் தெம் யங்’ (இளமையில் தெரிந்தெடுத்தல்) எனும் பெயரில் முன்னர் செயல்பட்டுவந்த திட்டம் தற்போது இல்லை. அந்த குறைபாட்டால்தான் என்னவோ அண்டை மாநிலமான கேரளத்திலிருந்து வீரர், வீராங்கனைகளை கல்லூரிகள் “இறக்குமதி’ செய்யும் அவலம் ஏற்பட்டுள்ளதோ என்ற அச்சம் எழுகிறது.

வீரர், வீராங்கனைகளின் உருவாக்கம் குறைந்துபோனதற்கு நமது கல்வி முறையின் வளர்ச்சிகளைக் காரணமாகக் கூறும் அதிகாரிகளும் ஆர்வலர்களும், சர்வதேச அளவிலான போட்டிகளில் இந்தியா தோற்கும்போது “என்ன மோசமப்பா இது’ என ஆதங்கப்படுவது எந்த விதத்தில் நியாயம் எனத் தெரியவில்லை.

தமிழ்நாட்டில் வீரர், வீராங்கனைகள் திறமையை வெளிப்படுத்துவதற்கு வாய்ப்பளிக்கும் களமாக பெரும்பாலும் தலைநகரம் திகழ்கிறது. பெரும்பாலான போட்டிகள் இங்குதான் அரங்கேறுகின்றன. போட்டிகளை நடத்தும் கட்டமைப்பு வசதிகள் இருப்பது முக்கியமான காரணம் என்றாலும், அவற்றை சிறப்பாக நடத்துவதற்கு ஆதரவு (ஸ்பான்சர்கள்) அளிக்கும் முக்கிய நிறுவனங்களும் சென்னையில்தான் அதிகம் உள்ளன. ஆனால் லயோலா உள்ளிட்ட சென்னையில் உள்ள கலைக் கல்லூரிகளில் வீரர், வீராங்கனைகளுக்கான அட்மிஷன், தேக்கத்தை அல்லவா சந்தித்து வருகிறது?

கூடைப்பந்தாட்டம் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகளில் ஜாம்பவானாகத் திகழ்ந்த லயோலா, இன்று பொறியியல் கல்லூரிகளிடம் உதை வாங்கும் பின்னடைவைப் பெற்றுள்ளது. சென்னையிலேயே இப்படி என்றால் திருச்சி, மதுரை, கோவை, நெல்லை போன்ற நகர்களில் உள்ள கலைக் கல்லூரிகளின் நிலைமை நிச்சயம் பரிதாபமாகத்தான் இருக்கும். இதற்கு அப் பகுதியில் உள்ள கல்லூரிகளைக் குறை சொல்ல முடியாது. சிறுவயதிலேயே இனம்கண்டு வீரர், வீராங்கனைகளை ஊக்குவித்து விளையாட்டு ஆர்வத்தை வளர்க்க வேண்டியது அரசின் கடமை. அதற்கேற்ப திட்டங்களைச் செயல்படுத்த வேண்டும்.

திறமையான வீரர், வீராங்கனைகளுக்கு ஊட்டிவிடாத குறையாக போட்டி போட்டுக்கொண்டு என்னவெல்லாம் கொடுக்கமுடியுமோ அவ்வளவையும் இலவசமாகக் கொடுத்து தங்களைப் பிரபலப்படுத்தி வருகின்றன பொறியியல் கல்லூரிகள். சென்னையில் இது மாதிரியான தாக்கம் அதிகம். சில கல்லூரிகள் கேரளத்திலிருந்து நேரடியாக வீரர், வீராங்கனைகளை வரவழைத்து “திறமை’யை வெளி உலகுக்கு காட்டுகின்றன.

இதனாலேயே தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் செயல்பாடுகளை ஆராய்ந்து பார்க்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் 30 மாவட்டங்கள் உள்ளன. அனைத்திலும் ஓர் அதிகாரியின் கீழ் விளையாட்டு மன்றங்கள் உள்ளன. ஆனால் அங்கெல்லாம் போதுமான மைதானங்களோ, பயிற்றுநர்களோ இருக்கிறார்களா என்றால் இல்லை என்பதுதான் பெரும்பாலானோரின் பதிலாக இருக்கும். பின்னர் எப்படி இளைஞர்கள் இத் துறையை தேர்ந்தெடுக்க முடியும்?

முறையாகத் தொடங்கப்படும் திட்டங்கள், இடையில் தேக்கத்தை எட்டினால் அதைக் களைவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமே தவிர, திட்டத்தையே கைவிடுவது எவ்விதத்திலும் நல்லதல்ல. அம் மாதிரி கருதப்படும் திட்டங்களில் ஒன்றுதான் “கேட்ச் தெம் யங்’. அது செயல்பாட்டில் இல்லாததால்தான் கலைக் கல்லூரிகள், போதுமான வீரர், வீராங்கனைகள் இல்லாமல் இன்று விளையாட்டுக் கலையுணர்வு இழந்து போயுள்ளன.

வீரர், வீராங்கனைகளுக்கு மட்டுமின்றி அவர்களைத் தயார்படுத்தும் உடற்கல்வி இயக்குநர், உடற்கல்வி ஆசிரியர் ஆகியோருக்கும் விருதுகள் வழங்கி ஊக்குவிக்க 2003-04-ம் ஆண்டில் அப்போதைய அதிமுக அரசு முடிவு செய்து, அதற்கு “முதலமைச்சர் விருது’ எனப் பெயரிட்டது. ரூ. 1 லட்சம் ரொக்கம் மற்றும் பாராட்டுப் பத்திரம் அடங்கியது அந்த விருது.

அத் திட்டத்துக்கு உயிரூட்டும்விதமாக தற்போதைய அரசும் தகுதியானவர்களிடமிருந்து ஆண்டுதோறும் தனது இணையதளம் மூலம் விண்ணப்பிக்கக் கோரி வருகிறது. ஆனால் திட்டம் தொடங்கப்பட்டது முதல் இதுவரை யாருக்கும் அவ்விருது வழங்கப்படவில்லை. முதலாம் ஆண்டு விருதுக்குரியவர்கள் யார் என்பதுகூட முடிவாகி, ஆணையும் பிறப்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. அதற்கடுத்த ஆண்டுக்கும் உரியவர்களை அதற்கென அமைக்கப்பட்டுள்ள குழு இனம்கண்டுள்ளது. ஆனால் என்ன காரணத்துக்காகவோ இதுவரை விருதுகள் வழங்கப்படவில்லை.

வியர்வை சிந்தி உழைக்கும் தொழிலாளிக்கு அந்த வியர்வை காயும் முன்பு கூலியைக் கொடுக்க வேண்டும். இல்லையேல், அது விழலுக்கு இரைத்த நீராகத்தான் இருக்கும் என்பதை அதிகாரிகள் உணர வேண்டும்.

அதேபோல, பயிற்சியாளருக்கான என்.ஐ.எஸ். (நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஸ்போர்ட்ஸ்) பயிற்சி பெற்றவர்களுக்கும் வாய்ப்பு வழங்க வேண்டும். என்.ஐ.எஸ். பயிற்சி முடித்தவர்கள் சுமார் 200-க்கும் மேற்பட்டோர் தொழில்நுட்ப வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து வேலைக்காக தவம் கிடக்கின்றனர். தமிழகம் முழுவதும் விளையாட்டு மன்றங்களில் போதுமான பயிற்சியாளர்கள் இல்லாத குறையைப் போக்க அவர்களை ஏன் பயன்படுத்தக் கூடாது?

மொத்தத்தில் இது போன்ற பின்னடைவுகளால் பாதிக்கப்படுவது – எல்லோராலும் ரசிக்கப்படும் விளையாட்டுத் துறைதான். தேவை – எஸ்டிஏடி கவனம்.

Posted in 600028, Allocation, Asiad, Asset, athlete, athletics, Badminton, Basketball, Budget, Capital, Cars, Chennai, Chepauk, Chess, City, Clubs, CM, Corp, Corpn, Corporation, Cricket, Development, Districts, DMK, Economy, Football, Free, Funds, Game, Govt, Hockey, Jaya, Jayalalitha, Jayalalithaa, Jeya, Jeyalalitha, Kaniakumari, Kanniakumari, Kanniyakumari, Kanyakumari, Karunanidhi, Karunanidhy, Karunanidi, Karunanithi, Kovai, Land, League, MAC, Madras, Madurai, match, Matches, MCC, Metro, Needy, Nellai, Olympics, Op-Ed, Play, Players, Poor, Property, Rich, Salem, seat, Seating, Soccer, Sports, Stadium, Suburban, Tamil Nadu, TamilNadu, Tennis, Thiruchirapalli, Thiruchirappalli, Thirunelveli, TN, TNCC, Tour, Tourist, Track, Travel, Traveler, Trichy, Villages, Visit, Visitor, Voleyball, Watch, Wealthy | 1 Comment »

Dinamani op-ed: TJS George – East India Company still rocks on as World Bank

Posted by Snapjudge மேல் ஜூலை 22, 2007

கிழக்கிந்திய கம்பெனி சாகவில்லை, உயிரோடு இருக்கிறது!

டி.ஜே.எஸ். ஜார்ஜ்

எவ்வளவு சுலபமாக நாடுகள் தங்களுடைய வரலாற்றை சலவைக்குப் போட்டுவிடுகின்றன! இரண்டாவது உலகப் போரில் ஜப்பானிய ராணுவம் செய்த அக்கிரமங்கள் என்ன என்று அந்நாட்டின் புதிய தலைமுறைக்குத் தெரியவே தெரியாது. வியத்நாமில் அமெரிக்கா செய்த அக்கிரமங்கள் அந்நாட்டு பள்ளிக்கூட குழந்தைகளுக்குத் தெரியாது.

ஆரியர்கள் திருநைனார்குறிச்சியிலிருந்தும், திராவிடர்கள் குலு பள்ளத்தாக்கிலிருந்தும் வந்தார்கள் என்று நம் நாட்டின் சில பள்ளிக்கூடங்களில் மாணவர்களுக்குப் பாடம் சொல்லித் தருகின்றனர்!

உண்மை எது என்பது, (வரலாற்று) குப்பையைப் பெருக்க வந்தவர்களின் கண்களில்தான் இருக்கிறது.

பிரிட்டிஷ்காரர்கள்தான் தங்களுடைய ரயில்வே மூலமும் தடையற்ற வர்த்தக நடைமுறைகள் மூலமும் இந்தியாவுக்கு வாழ்வையும் வளத்தையும் கொண்டுவந்து சேர்த்தார்கள் என்று இந்தியாவில் படித்த பெரும்பாலானவர்கள் இன்னமும் நம்பிக் கொண்டிருக்கிறார்கள்.

உண்மை என்னவோ தலைகீழாக இருக்கிறது. இந்தியாவின் செல்வமும் இயற்கை வளங்களும்தான் பிரிட்டனுக்குப் புது வாழ்வைத் தந்தன.

இந்தியாவின் வளமான பகுதிகள் பல, பிரிட்டிஷாரின் நன்மைக்காக இங்கே அடியோடு அழிக்கப்பட்டன. பிரிட்டனின் “மான்செஸ்டர் டி-73′ ரக பருத்தியை வாழ்விப்பதற்காக டாக்கா மஸ்லின் பூண்டோடு அழிக்கப்பட்டது. அந்தத் துணியை நெய்த திறமைவாய்ந்த நெசவாளர்களின் கட்டைவிரலை வெட்டி வீசினர் பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனித் துரைமார்கள்!

ஏகாதிபத்திய காலத்தில் நிலவிவந்த உண்மை நிலவரங்களை வெளிக்கொண்டுவரும் வேலையை, ஆய்வு நூல்கள் மூலம் அவ்வப்போது மேற்கொள்கின்றனர் மேற்கத்திய நாடுகளின் அறிஞர்கள்.

இப்போதுள்ள பன்னாட்டு நிறுவனங்களின் (எம்.என்.சி.) முன்னோடியாகத் திகழ்ந்த கிழக்கிந்திய கம்பெனி எப்படி ரத்த வெறி பிடித்து அலைந்தது என்பதை நிக் ராபின்ஸ் என்பவர் தன்னுடைய ‘The Corporation that Changed the World: How the East India Company Shaped the Modern Multinational’ என்ற நூலில் அற்புதமாக விளக்கியிருக்கிறார்.

அச்சத்தில் உறைந்தே போகும் அளவுக்குச் சில உண்மைகளை அவர் அந் நூலில் தெரிவித்துள்ளார். ராபர்ட் கிளைவ், கிழக்கிந்திய கம்பெனியின் வியாபாரத்துக்குள் “ஒரு உள் வியாபாரம்’ செய்து பெரும் தொகையை அள்ளியிருக்கிறார். கம்பெனியின் தலைவரும் அவரே என்பதால் மோசடி செய்வது அவருக்குக் கடினமான வேலையாக இருக்கவில்லை.

பிரிட்டனிலோ, கிழக்கிந்திய கம்பெனியின் இயக்குநர்கள் பிரிட்டிஷ் நாடாளுமன்றத்திடமிருந்தும் அரசிடமிருந்தும் அவ்வப்போது சலுகைகளைத் தொடர்ந்து பெற, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அதிகாரிகளுக்கும் தொடர்ந்து லஞ்சம் கொடுத்துக் கொண்டே இருந்துள்ளனர்.

“மேலை நாடுகளின் நாகரிகத்தின் பின்னால் இருப்பது, ஈரானிய எண்ணெய் வயல்களில் அடித்த கொள்ளையில் கிடைத்த லாபம்தான்’ என்று ஈரானிய அதிபர் அகமதி நிஜாத் சொல்வதில் உண்மை இல்லாமல் இல்லை.

இதையெல்லாம் எடுத்துச் சொன்னால் அவனை, “மரை கழன்றவன்’ என்றும் “மேலைநாடுகளுக்கு எதிரானவன்’ என்றும் முத்திரை குத்தும் அளவுக்கு எல்லோருடைய மூளையும் அற்புதமாகச் சலவை செய்யப்பட்டிருக்கிறது.

அகமதி நிஜாத் என்ன சொன்னாரோ அது உண்மைதான்! 1950-களின் ஆரம்பத்தில் ஈரானில் மக்களிடையே மிகுந்த செல்வாக்கு பெற்றிருந்த மூசாதேக் என்பவர் ஈரானின் மன்னரான ஷாவை நாட்டைவிட்டே ஓடவைத்தார். பிறகு ஈரானின் எண்ணெய் வயல்களை தேச உடைமையாக்கினார். எண்ணெய் வயல்களைச் சொந்தமாக வைத்திருந்த பெரும் பணக்காரர்களும், மேற்கத்திய நாடுகளின் அரசுகளும் சில மாதங்களுக்கெல்லாம் இணைந்து செயல்பட்டு மன்னர் ஷாவை மீண்டும் ஈரானுக்கு அழைத்துவந்து முடிசூட்டின. மூசாதேக் மீது தேசத் துரோகக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு தண்டிக்கப்பட்டார்.

இது தனிப்பட்ட ஒரு சம்பவம் அல்ல. சூயஸ் கால்வாயை கமால் அப்துல் நாசர் தேச உடைமையாக்கியபோது, எகிப்துடன் யுத்தத்துக்குச் சென்று மூக்குடைபட்டு திரும்பியது பிரிட்டன்.

பனாமா கால்வாய் யாருக்குச் சொந்தம் என்ற நீண்ட கால பிரச்னை முற்றி, 1980-களின் பிற்பகுதியில் அமெரிக்காவுக்கு எதிரான கலவரமாக உருவெடுத்தது. அப்போது அமெரிக்கா பனாமா மீது படையெடுத்து, அதன் அதிபர் மேனுவல் நோரிகாவை போதைப் பொருள் கடத்தல் சட்டப்படி கைது செய்தது.

ஏகாதிபத்தியத்திடம் காலனிகளாக இருந்த நாடுகள் விடுதலை பெற்ற பிறகும் காலனியாதிக்கம் முடியவில்லை; 19-வது நூற்றாண்டில் பிரிட்டன் செய்த வேலையை இப்போது அமெரிக்கா எடுத்துக் கொண்டுவிட்டது. வியாபாரத்தில் உள்ளடி வேலை செய்யும் “உள்-வர்த்தகம்’ என்ற அயோக்கியத்தனத்தை அது கையாள்கிறது. என்ரான், வேர்ல்ட் காம். போன்ற பன்னாட்டுத் தொழில் நிறுவனங்கள் அடையாளம் இல்லாமல் மறைந்த கதையைப் பார்த்தாலே இந்த பித்தலாட்டம் புரியும்.

அரசியல்ரீதியான ஊழல் என்பதை, வாஷிங்டனில் “ஒவ்வொரு தொழிலுக்கும் ஒரு தரகுக் கூட்டம்’ என்று நிலைநிறுத்திவிட்டது அமெரிக்கா. அத்தோடுகூட, அது தனது ராணுவ பலத்தையும் மிதமிஞ்சிப் பயன்படுத்துகிறது.

இராக்கில், அமெரிக்கா தலைமையிலான பன்னாட்டுப் படைகள் காலடி எடுத்து வைத்தது அங்குள்ள எண்ணெய் வளத்துக்காகத்தான் என்பதில் யாருக்காவது சந்தேகம் இருக்கிறதா?

இப்போது “கிழக்கிந்திய கம்பெனி’ உலகம் முழுக்க பரவியிருக்கிறது. ராபர்ட் கிளைவும் வாரன் ஹேஸ்டிங்ஸýம் இன்னமும் உலா வருகின்றனர். அவர்களின் பெயர்தான் “உலக வங்கி’, “உலகமயமாக்கல்’ என்று மாற்றி வழங்கப்படுகிறது!

————————————————————————————————————–
யாருக்காக மானியங்கள்?

விவசாயத்துக்கான மானியங்கள் தொடரும் என்று பிரதமர் மன்மோகன் சிங் உறுதி அளித்திருக்கிறார். அதே சமயம், உரங்களுக்குத் தரப்படும் மானியத்தை புதிய முறையில் எப்படி வழங்குவது என்பதை முடிவு செய்து அடுத்த ஆண்டு முதல் அமலுக்குக் கொண்டுவரலாம், இந்த ஆண்டு பழைய முறையிலேயே மானிய உதவியை அளிக்கலாம் என்றும் உயர்நிலைக் குழு கூட்டத்தில் பிரதமர் முடிவெடுத்திருக்கிறார்.

விவசாயத்துக்கு மானியம் என்பது அவசியம். அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி போன்ற வளர்ந்த நாடுகளுக்கே இதில் இருவித கருத்துகள் இல்லை. அதே சமயம், உர மானியம் என்பது யாருக்குப் போகிறது, அது நீடிப்பது அவசியமா என்பதைக் கட்டாயம் தீர்மானித்தாக வேண்டும்.

கடந்த ஆண்டு உர மானிய நிலுவை ரூ.8,000 கோடி என்றும் இந்த ஆண்டு ரூ.40,000 கோடி என்றும் அரசே வெளியிட்ட புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.

மத்திய புள்ளியியல் துறை கணக்கெடுப்பின்படி, 2000-01-ம் ஆண்டில் உர மானியமாக ரூ.13,800 கோடி, மின்சார மானியமாக ரூ.6,449 கோடி, பாசன மானியமாக ரூ.13,681 கோடி, இதர மானியங்களாக ரூ.854 கோடி என்று மொத்தம் ரூ.34,784 கோடி விவசாயத்துக்காக தரப்பட்டுள்ளது.

உணவு தானிய கையிருப்பைப் பொருத்தவரை, 3 மாத கையிருப்பு, 6 மாத கையிருப்பு என்பதெல்லாம், பொது விநியோக முறைக்கு மாதந்தோறும் எடுத்துக்கொள்ளப்படும் அரிசி, கோதுமை போன்றவற்றின் அளவைப் பொருத்ததே தவிர உண்மையில் நம் நாட்டு மக்களின் தேவையைப் பொருத்தவை அல்ல.

லட்சக்கணக்கான டன்கள் கோதுமை, அரிசி கையிருப்பில் இருக்கும் அதேவேளையில் 20 கோடி மக்கள் வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழ்கிறார்கள் என்பது கசப்பான உண்மை. ஒரு வேளை சாப்பாட்டுக்கும் வழியில்லாமல் இரவில் பட்டினியோடு படுப்பவர்கள் பற்றிய புள்ளிவிவரம் ஏதும் திரட்டப்படுவதில்லை.

“வேலைக்கு உணவு திட்டம்’ என்ற முன்னோடி திட்டம்கூட, தேர்வு செய்யப்பட்ட மிகவும் பின்தங்கிய மாவட்டங்களில்தான் முனைப்பாக அமல்படுத்தப்படுகிறது. அதுவும் உள்ளாட்சி நிர்வாக அமைப்புகளின் உதவியோடு மேற்கொள்ளப்படும் சில திட்டங்களில் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.

உர மானியம் தொடர்பாக அடிக்கடி பேசப்படும், அதே வேகத்தில் மறக்கப்படும் இரு விஷயங்கள் நினைவுபடுத்தப்பட வேண்டியவை. உர உற்பத்தியில் பொதுத்துறை (அரசு) நிறுவனங்களும், தனியார் நிறுவனங்களும் ஈடுபடுகின்றன. உர உற்பத்திக்கு அரசு நிறுவனங்கள் எவ்வளவு (விரயமாக) செலவு செய்தாலும், எந்த அளவு உற்பத்தி செய்தாலும் அவற்றை அரசு வாங்கிக் கொண்டு மானியத்தையும் கையோடு வழங்கிவிடுவதால், அரசின் மானியம் விரயமாகிறது என்பது முதல் குற்றச்சாட்டு. நவீனத் தொழில்நுட்பத்தில், செலவைக் குறைத்து தயாரிப்பது அவசியம் என்ற நிர்பந்தம் இல்லாமல் பழைய முறையிலேயே தயாரிப்பில் தொடர்ந்து ஈடுபடுகிறார்கள் என்பது இக்குற்றச்சாட்டின் சாரம்.

அடுத்தது, ரசாயன உரங்களால் நிலம் தன்னுடைய இயற்கையான சத்தை இழப்பதுடன், சாகுபடியாகும் உணவு தானியங்களும் உண்பவர்களுக்குத் தீங்கை விளைவிப்பனவாக இருக்கின்றன என்பதாகும். எனவே இயற்கை உரங்களைப் பயன்படுத்த வேண்டும். மக்கிய எருவையும், மண்புழுக்களையும் நிலங்களில் இட்டு மண்ணை வளப்படுத்த வேண்டும் என்ற கூக்குரல் எங்கும் கேட்க ஆரம்பித்துவிட்டது. இயற்கை வேளாண்மை என்ற கருத்தை வலியுறுத்துகிறவர்கள் இதையும் வலியுறுத்துகின்றனர்.

விவசாய விலை நிர்ணயக் குழு என்ற உயர் அமைப்பில், சாகுபடியாளர்களின் நேரடிப் பிரதிநிதிகளை அதிக அளவில் சேர்த்து, அவர்களைக் கொண்டே பிராந்தியங்களுக்கு ஏற்ற வகையில் கொள்முதல் விலைகளையும் சிறப்பு மானியங்களையும் நிர்ணயிக்க வேண்டும். வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதன் குழு பரிந்துரைத்துள்ளபடி, சந்தையில் நிலவும் விலைக்குக் குறையாமல் கொள்முதலுக்கு விலைதரப்பட வேண்டும். குறைந்தபட்ச கொள்முதல் விலை என்பது, விவசாயிகளின் அடிவயிற்றில் அடிப்பதாக இருப்பதைக் கைவிட வேண்டும். வேளாண் பொருள்களின் விலை உயர்ந்தால் பணவீக்க விகிதம் கட்டுக்கடங்காமல் போய்விடும் என்று “”நிபுணர்கள்” மிரட்டுவதை கேட்டுக் கொண்டு விவசாயத்தைப் படுகுழியில் தள்ளக்கூடாது.

Posted in abuse, Affairs, Agriculture, America, bank, Barrier, Biz, Business, Canal, Center, CIA, Consumer, Corn, Corporation, Current, Customer, Divide, Duty, Economy, Electric, Electricity, England, ethanol, Exploit, Exploitation, External, Farming, Farms, Fertilizer, Fertilizers, Finance, Foreign, GDP, Govt, Growth, IMF, Incentive, Incentives, Income, Industry, International, Iran, Irrigation, IT, MNC, multinational, Needy, NRI, Panama, Poor, Power, Queen, Relations, Rich, State, Subsidy, Suez, Tamil, Tariffs, Taxes, Trade, UK, Unipolar, USA, War, warlord, WB, Wealthy, World, world bank | Leave a Comment »

Waiver of dues a fillip to civic works: Mayor

Posted by Snapjudge மேல் மே 8, 2007

நகராட்சிகளின் கடன் தள்ளுபடியால் உள்ளாட்சித் துறைக்கு இனி நிதிப் பிரச்சினை இருக்காது: அமைச்சர் மு.க. ஸ்டாலின்

சென்னை, மே 8: நகராட்சி மன்றங்களின் கடன் தொகை முழுவதும் தள்ளுபடி செய்யப்பட்டு விட்டதால் உள்ளாட்சித் துறைக்கு இனி நிதிப் பிரச்சினையே இருக்காது என ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

நகராட்சி மன்றங்களின் கடன் தொகைகளைத் தள்ளுபடி செய்ததற்காக தமிழ்நாடு நகர் மன்றத் தலைவர்கள் பேரவை சார்பில் தமிழக முதல்வர் மற்றும் உள்ளாட்சித் துறை அமைச்சருக்கு நன்றி தெரிவிக்கும் மாநாடு திங்கள்கிழமை சென்னையில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற மு.க. ஸ்டாலின் பேசியது:

நகராட்சி மற்றும் மாநகராட்சி மன்றங்களின் கடனுக்கான வட்டி வீதத்தை 13.5 சதவீதத்திலிருந்து 8 சதவீதமாகக் குறைக்க வேண்டும் என தமிழக முதல்வரிடம் கோரிக்கை விடுத்தபோது, வட்டியை மட்டுமல்லாமல் கடன் முழுவதையும் தள்ளுபடி செய்ய உத்தரவிட்டார். இதன்படி அனைத்து நகராட்சி மற்றும் 5 மாநகராட்சிகளின் கடன் தொகையான ரூ.793 கோடி தள்ளுபடி செய்யப்பட்டது.

உள்ளாட்சி அமைப்பில் இருப்பவர்கள் சிறப்பாக செயல்பட வேண்டும் என்ற நோக்கத்தோடே கடன் தொகை தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இதனால் நகராட்சிகளின் சுமை குறைந்திருக்கிறது. இதைப் பயன்படுத்திக் கொண்டு மக்களுக்கு சிறப்பாக செயலாற்றி அரசுக்கு நற்பெயரை நகராட்சிகள் ஏற்படுத்தித் தரவேண்டும். நகராட்சி மன்றங்களின் கடன் தொகை முழுவதும் தள்ளுபடி செய்யப்பட்டு விட்டதால் உள்ளாட்சித் துறைக்கு இனி நிதிப் பிரச்சினையே இருக்காது.

மத்திய, மாநில அரசுகளால் ஒதுக்கப்படக்கூடிய நிதியை முறையாகப் பயன்படுத்தினாலே நகராட்சிகளின் தேவைகள் இனி நிறைவேற்றப்பட்டுவிடும் என்றார் அவர். விழாவில் தமிழ்நாடு நகர்மன்றத் தலைவர்கள் பேரவைத் தலைவர் ஆர்.எஸ். பாரதி, மாநகராட்சி மேயர் மா. சுப்பிரமணியன் மற்றும் நகர் மன்றத் தலைவர்கள் பங்கேற்றனர்.

Posted in Bonds, Budget, Civic, CMDA, Corporation, Councillor, CRR, Development, DMK, Economy, Finance, Funds, Government, Govt, Home, Interest, Internal Affairs, Loans, Local Body, Mayor, Metropolitan, MLC, Municipality, Public, Rajesh Lakhoni, Rates, Services, Stalin, Subramaniam, Subramanian, Tiruchi, Trichy, Waiver | Leave a Comment »

BJP seals triumph in MCD polls, shuts out Congress : Op-Ed

Posted by Snapjudge மேல் ஏப்ரல் 9, 2007

தில்லி மாநகராட்சித் தேர்தல்

தில்லி மாநகராட்சிக்கு நடந்த தேர்தலில் அந்த மாநகராட்சியை காங்கிரஸ் வசமிருந்து பாஜக கைப்பற்றியுள்ளது.

புதுதில்லியை நிர்வகிக்க தனி அமைப்பு உள்ளபோதிலும் தலைநகரையே கைப்பற்றி விட்டோம் என்பதுபோல பாஜக இந்த வெற்றியைப் பறைசாற்றிக் கொள்ள முற்படலாம். இத் தேர்தலின் முடிவுகள் மத்திய அரசு மீதும் தில்லி துணை மாநில அரசு மீதும் தில்லி மாநகராட்சி மீதும் மக்களுக்கு நிலவி வந்த அதிருப்தியைக் காட்டுவதாக பாஜக வர்ணிக்க முற்பட்டுள்ளது.

தில்லி துணை மாநிலத்தை ஆளும் காங்கிரஸ் முதல்வர் ஷீலா தீட்சித் ராஜிநாமா செய்ய வேண்டும் என்றும் பாஜக வற்புறுத்தியுள்ளது. இது அர்த்தமற்ற கோரிக்கையாகும். ஒரு மாநகராட்சிக்கு நடைபெறும் தேர்தல் முடிவை வைத்து மாநில அரசு பதவி விலக வேண்டும் என்றால் அதற்கு முடிவே இல்லாது போய்விடும். தில்லி மாநகராட்சியில் முதல்தடவையாக மாயாவதி கட்சி இடம் பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

காங்கிரஸின் தோல்விக்கு அக் கட்சிக்குள் நிலவிய உள்கட்சிப்பூசலே காரணமாகக் கூறப்படுகிறது. காங்கிரஸ் தலைவர்களே இதை ஒப்புக்கொண்டுள்ளனர்.

நாட்டில் எந்தவொரு பெருநகரை எடுத்துக்கொண்டாலும் அதன் பிரச்சினைகள் அதிகம். போதுமான அதிகாரமும் போதுமான வருமானமும் கிடையாது என்பது நாட்டில் உள்ள எல்லா மாநகராட்சிகளுக்கும் உள்ள பொதுவான பிரச்சினையாகும். ஆகவே மக்களின் அதிருப்தி மாநகரை ஆளுகின்ற கட்சி மீது திரும்புகிறது.

தில்லி தேர்தலில் குறிப்பாக வேறு சில பிரச்சினைகளும் சேர்ந்து கொண்டன. அது மிக நீண்டகாலமாக இருந்து வருகிற நில ஆக்கிரமிப்புப் பிரச்சினையாகும். கடந்த காலத்தில் ஆட்சியிலிருந்த எந்தக் கட்சியும் இதைக் கண்டுகொள்ளாமல் விட்டன. கடைசியில் நீதிமன்ற உத்தரவு காரணமாக நில ஆக்கிரமிப்புச் செய்யப்பட்ட பகுதிகளில் கட்டடங்களை இடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டியதாயிற்று. ஆக்கிரமிப்பு நிலங்களிலிருந்து மக்களை வெளியேற்ற வேண்டியதாயிற்று. குடியிருப்புப் பகுதிகளில் விதிமுறைகளை மீறி அமைக்கப்பட்ட வர்த்தக அமைப்புகளின் பிரச்சினையும் சேர்ந்து கொண்டது. இவ்விதம் விதிமுறைகளை மீறி தொடங்கப்பட்ட கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது. இவையெல்லாம் பெரும் பிரச்சினையாக உருவெடுக்கவே பல தரப்பினரையும் திருப்திப்படுத்த அரசுத்தரப்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. முடிவில் எந்தத் தரப்பையும் திருப்திப்படுத்த முடியாமல் போய்விட்டது.

புதிதாக ஆட்சிக்கு வரும் பாஜகவுக்கும் இது தலைவலியாக அமையலாம். இப் பிரச்சினையைத் தீர்ப்பதில் அதற்கு மாநில அரசு, மத்திய அரசு ஆகியவற்றின் ஒத்துழைப்பு தேவைப்படும்.

இதெல்லாம் ஒருபுறம் இருக்க, தில்லி தேர்தலில் காங்கிரஸýக்கு ஏற்பட்ட தோல்வியைத் தனித்துப் பிரித்துப் பார்க்க இயலாது. சில மாதங்களுக்கு முன்னர் மகாராஷ்டிர மாநிலத்தில் மாநகராட்சிகளுக்கு நடந்த தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி மும்பை மாநகரில் மட்டுமன்றி வேறு சில நகரங்களிலும் தோல்வியைக் கண்டது. அதன் பின்னர் பஞ்சாப், உத்தரகண்ட் மாநில சட்டமன்றத் தேர்தல்களிலும் தோல்வி கண்டது. உ .பி.யில் இப்போது ஏழு கட்டங்களாக நடைபெறும் மாநில சட்டமன்றத் தேர்தலிலும் காங்கிரஸýக்குப் பெருத்த வெற்றி வாய்ப்பு உள்ளதாகச் சொல்ல முடியாது.

புதுச்சேரியைப் போலவே துணை மாநில அந்தஸ்தைக் கொண்ட தில்லி யூனியன் பிராந்தியத்துக்கு அடுத்த ஆண்டு கடைசியில் தேர்தல் நடக்க இருக்கிறது. இப் பின்னணியில் அடுத்தடுத்த தோல்விகளுக்கு என்ன காரணம் என காங்கிரஸ் மத்திய தலைமை ஆராய வேண்டியது அவசியம்.

==============================================================
மீட்சிப் பாதையில் பாரதீய ஜனதா!

நீரஜா செüத்ரி

மீட்சிப் பாதையில் செல்கிறது பாரதீய ஜனதா. சமீபகாலமாக, எல்லா இடங்களிலும் அதன் தலைவர்கள் நினைப்பதற்கும் அதிகமாகவே அது வெற்றிகளைக் குவித்து வருகிறது.

தில்லி மாநகராட்சித் தேர்தலில் மொத்தமுள்ள 272 வார்டுகளில் 164-ஐ அது பிடித்திருக்கிறது. உத்தராஞ்சல், பஞ்சாப் சட்டப்பேரவை பொதுத் தேர்தல்களிலும், உத்தரப்பிரதேசத்திலேயே சில மாதங்களுக்கு முன்னால் நடந்த நகரசபைத் தேர்தலிலும் அது வெற்றி பெற்றது.

சொல்லப்போனால் உ.பி. நகரசபைத் தேர்தல் வெற்றிதான் அதற்கு திருப்புமுனையாக அமைந்தது. இரண்டாண்டுகளாக சோர்ந்து கிடந்த அதன் தொண்டர்கள் உற்சாகம் பெற்று கட்சிப் பணியில் தீவிரம் காட்டத் தொடங்கினர்.

இதனால்தான், சமீபத்திய முஸ்லிம் எதிர்ப்புப் “”பிரசார கேசட்” விவகாரம் பெரிய பாதிப்பை யாரிடத்திலும் ஏற்படுத்தவில்லை; அதேசமயம், பாஜகவின் சில தலைவர்களுக்கு அது அதிர்ச்சியைத் தந்தது. எனவேதான், சிறுபான்மைச் சமூகத்தினரை அச்சுறுத்தும் அந்த கேசட்டுக்காக தன்னைக் கைது செய்ய வந்தால், கைதாகிவிடுவது என்ற முடிவை கட்சியின் அனைத்திந்தியத் தலைவர் ராஜ்நாத் சிங் எடுத்தார்.

கேசட்டை வெளியிட்ட சில மணி நேரங்களுக்கெல்லாம் கட்சித் தலைமையே அதைத் திரும்பப்பெற உத்தரவிட்டது. அதில் ஆட்சேபகரமாகவும், வகுப்புகளிடையே பதற்றத்தை ஏற்படுத்தும் விதத்திலும் காட்சிகள், வசனங்கள் இருந்ததை அது உணர்த்துகிறது. கேசட்டில் வாஜபேயி, அத்வானி ஆகியோரின் படங்கள் உள்ளன. உத்தரப்பிரதேச பாஜக தலைவர் லால்ஜி தாண்டன் கேசட்டை லக்னெüவில் கட்சித் தலைமை அலுவலகத்தில் வெளியிட்டிருக்கிறார். பிறகு அதற்காக வருந்தி மன்னிப்பும் கோரியிருக்கிறார். நாட்டின் தலைமைத் தேர்தல் ஆணையம் கையில் சவுக்கை எடுத்ததன் பிறகே, “”அது தங்களுக்குத் தெரியாமல் வந்துவிட்டது, ஏற்கெனவே திரையிடப்பட்டது, தேர்தலுக்காகத் தயாரிக்கப்படவில்லை” என்றெல்லாம் மழுப்பலான விளக்கங்கள் தரப்பட்டன.

தேர்தலுக்காகத் தயாரிக்கப்படவில்லை என்றால் பிரசாரம் உச்சத்தில் இருக்கும்போது கட்சித்தலைமை அலுவலகத்தில் அதை வெளியிடுவானேன்?

இந்த விவகாரம் எப்படிப் போனாலும், பாரதீய ஜனதா, தான் நினைத்ததை சாதித்துவிட்டது. “”முஸ்லிம்கள் மக்கள் தொகை அதிகரித்துக் கொண்டே வருகிறது, ஹிந்துக்கள் சிறுபான்மைச் சமூகமாகும் ஆபத்து இருக்கிறது” என்ற அச்சத்தை அது விதைத்துவிட்டது. உத்தரப்பிரதேச மக்கள் தொகையில் முஸ்லிம்களின் பங்கு 18.5% என்று 2001 மக்கள் தொகைக் கணக்கெடுப்பு தெரிவிக்கிறது. இந்த விவகாரம் வெளியான மறுநாளே, முஸ்லிம்கள் உத்தரப்பிரதேசத்தில் சிறுபான்மைச் சமூகத்தவர் அல்ல என்று அலாகாபாத் உயர் நீதிமன்றத்தின் ஒற்றை நீதிபதி ஒரு வழக்கில் தீர்ப்பளித்திருக்கிறார். ஒரே விஷயத்தை பாஜக கேசட் குரூரமாகவும், நீதிமன்றத் தீர்ப்பு வேறுவிதமாகவும் பதிய வைத்திருக்கின்றன.

இப்போது பாரதீய ஜனதாவில் ஆர்எஸ்எஸ் ஆதிக்கம்தான் அதிகம்; அவர்கள் செய்ததுதான் அந்த கேசட் தயாரிப்பு என்று ஒரு வட்டாரம் கூறுகிறது. கட்சித் தலைவர் ராஜ்நாத் சிங், கட்சியை விரைவாக வெற்றிப்பாதைக்கு இட்டுச் சென்று அடுத்த நாடாளுமன்ற பொதுத் தேர்தல் மூலம் பிரதமராகிவிடத் துடிக்கிறார் என்று மற்றொரு வட்டாரம் கருதுகிறது.

தேர்தல் வந்துவிட்டால் சங்கப் பரிவாரங்களின் உதவி பாரதீய ஜனதாவுக்குத் தேவைப்படுகிறது. இப்போது கட்சி முன் உள்ள சவால் எல்லாம், ஹிந்துக்களிலேயே மிதவாதிகளைத் தன்பக்கம் ஈர்ப்பதுதான். இவர்கள்தான் “”உண்மையில் பெரும்பான்மையானவர்கள்”. கேசட்டில் வெளியான காட்சிகளையும் வசனங்களையும் இவர்கள் ஏற்கமாட்டார்கள், முகம் சுளிப்பார்கள். ஜின்னாவைப் பற்றி அத்வானி பேசியது போன்ற பேச்சுகளே இவர்களை ஈர்க்கும். கட்சியின் ஆதரவாளர்கள் எண்ணிக்கையைப் பெருக்க நினைத்து அத்வானி அப்படி பாகிஸ்தானில் பேசியிருந்தாலும், அவர் பேசிய இடமும், சூழ்நிலையும்தான் அவரைக் குற்றவாளியாக்கிவிட்டது. அதற்காக அவரை சங்கப் பரிவாரத் தலைமை கடுமையாகக் கண்டித்தது.

தில்லியில் பாஜகவுக்கு ஆதரவாக மக்கள் வாக்களித்திருப்பது விலைவாசி உயர்வு, குடியிருப்புப் பகுதிகளில் கடைகளுக்கு சீல் வைத்தது, அங்கீகாரமற்ற கட்டடங்களை இடித்தது போன்ற விவகாரங்களால் கொதித்துப் போனதால்தான்; “”ஒரு முஸ்லிம் குடும்பம் 35 குழந்தைகளைப் பெறுவது” குறித்து கவலைப்பட்டு அவர்கள் பாஜகவுக்கு வாக்களிக்கவில்லை. இந் நிலையில் ராஜ்நாத் சிங், மிதவாத ஹிந்துக்களையும் ஈர்க்கும்வகையில் செயல்பட வேண்டும்; மாறாக தீவிரவாத ஹிந்துத்துவாவைக் கையாளக்கூடாது.

முஸ்லிம்கள் உத்தரப்பிரதேசத்தில் சிறுபான்மையினர் அல்ல என்று அலாகாபாத் உயர் நீதிமன்ற ஒற்றை நீதிபதி அளித்த தீர்ப்பால் முஸ்லிம் வாக்குகள் ஒரு சேர சமாஜவாதி கட்சிக்குப் போகலாம்; ஆனால் இந்த சர்ச்சை நீடிக்காததால் முலாயமின் வாக்கு வங்கி மேலும் வலுவடையும் வாய்ப்பு குறைந்துவிட்டது.

இந் நிலையில் கேசட் விவகாரம் பாஜகவின் வெற்றி வாய்ப்பைக் குறைத்துவிட்டது; அதன் தலைவர்கள் தாங்கள் பேசியதையே மறுக்கும் நிலைமை ஏற்பட்டுவிட்டது.

தேர்தல் வந்துவிட்டாலே எல்லா வழிகளையும் பிரசாரத்தில் கையாள்வது வழக்கம் என்றாலும் பாஜகவின் இந்த கேசட் தரம் தாழ்ந்த ஒரு செயலாகும்.

வெற்றிமீது வெற்றிகளைக் குவித்துவரும் ஒரு கட்சியின் நடவடிக்கையாக இது தெரியவில்லை, எதையாவது செய்து வெற்றி பெற்றுவிடத் துடிக்கும் “”நிதானமற்ற நடவடிக்கையாகவே” தெரிகிறது; எல்லாவற்றையும்விட முக்கியம், இது போன்ற நடவடிக்கைகளுக்கு அரசியல் அரங்கில் அவசியமே இல்லை.

தமிழில்: சாரி.
==============================================================

Posted in Advani, Anti-incumbent, Bajpai, Bajrang Dal, BJP, BSP, Campaign, Cassette, Civic, Cong (I), Cong(I), Congress, Congress (I), Congress Party, Congress(I), Corporation, Delhi, Elections, Hindu, Hinduism, Incumbency, Islam, Local Body, MCD, Mid-term, minority, Municipal, Municipality, Muslim, New Delhi, Polls, Punjab, Rajnath, Rajnath Singh, RSS, Slander, Terrorism, UP, Utharanchal, Uttar Pradesh, Uttaranchal, Vajpayee, VHS, video | Leave a Comment »

DMDK grabs 5 seats – Re-polling details for the Chennai Corporation polls

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 20, 2007

5 இடங்களில் வெற்றிக் கனியை ருசித்த தேமுதிக

சென்னை, பிப். 21: சென்னை மாநகராட்சி மறுதேர்தலில் தேமுதிக வேட்பாளர்கள் 5 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளனர்.

இவர்களில், 3 பேர் திமுகவையும், ஒருவர் பாமகவையும், மற்றொருவர் காங்கிரஸ் கட்சியையும் வீழ்த்தி வெற்றிக் கனியை ருசித்துள்ளனர்.

27-வது வார்டில், திமுக வேட்பாளர் ஜெய்னுல் ஆபிதீனை எதிர்த்து, தேமுதிக வேட்பாளர் பி. சர்தார் போட்டியிட்டார். 1,176 வாக்கு வித்தியாசத்தில் திமுக வேட்பாளரை தோற்கடித்தார்.

இதுகுறித்து சர்தார் கூறுகையில்,””கடந்த அக்டோபரில் நடைபெற்ற மாநகராட்சித் தேர்தலிலும் போட்டியிட்டேன். அப்போது, 2,110 வாக்குகள் பெற்றேன். தற்போது, 3,098 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளேன். இது மகிழ்ச்சியைத் தருகிறது,” என்றார் அவர். மாநகராட்சி மறுதேர்தலில் தேமுதிகவுக்கு முதல் வெற்றியை பெற்றுத் தந்தவர் 35-வது வார்டில் போட்டியிட்ட சேகர். இவர், தன்னை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் நெடுமாறனை விட 129 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.

“”கடந்த முறை நடைபெற்ற தேர்தலில் தேமுதிக சார்பில் டேவிட் என்பவர் போட்டியிட்டார். மறுதேர்தலில் போட்டியிட எனக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. தேர்தல் முடிவு சாதகமாக வந்துள்ளது. பணம் பார்க்க சொந்தமாக தொழில் உள்ளது. மக்களுக்கு உரிய முறையில் சேவை ஆற்றுவேன்” என்றார் சேகர். இதேபோன்று, 45-வது வார்டில் பாமக வேட்பாளரை எதிர்த்து களமிறங்கிய உஷா, 2631 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

48-வது வார்டில் நீண்ட நேர இழுபறிக்குப் பின், தேமுதிக வேட்பாளர் சரவணன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட, காங்கிரஸ் வேட்பாளர் சங்கரை விட, 210 வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றார்.

63-வது வார்டில் திமுக வேட்பாளர் மோகன், 514 வாக்குகள் வித்தியாசத்தில் தேமுதிக வேட்பாளர் பிரபாகரனிடம் தோல்வி அடைந்தார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் தேவகி, 59-வது வார்டில் வெற்றி பெற்றுள்ளார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளர் சேகரை 1064 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

மறு தேர்தல்: யாருக்கு லாபம் ? யாருக்கு நஷ்டம்?

சென்னை, பிப். 21: சென்னை மாநகராட்சியில் காலியாக இருந்த 100 இடங்களில் 67 இடங்களுக்கு நடைபெற்ற தேர்தல் முடிவுகள் அனைத்தும் வெளியாகிவிட்டன.

கடந்த அக்டோபர் மாதம் நடைபெற்ற தேர்தலில் கைப்பற்றிய அதே அளவிலேயே 92 இடங்களுடன் தனி பெரும்பான்மையான கட்சியாக திமுக விளங்குகிறது.

மறு தேர்தலுக்கு பின்னர் காங்கிரஸின் பலம் 38-லிருந்து 35 ஆகக் குறைந்துள்ளது. 17 இடங்களாக இருந்த பாட்டாளி மக்கள் கட்சியின் பலம் தற்போது 16-ஆக குறைந்துள்ளது.

சென்னை மாநகராட்சிக்கு கடந்த ஆண்டு அக்டோபரில் நடைபெற்ற தேர்தலில் நடைபெற்ற வரலாறு காணாத வன்முறைச் சம்பவங்களை அடுத்து 61, 71-வது வார்டுகளில் அதிமுக சார்பில் வெற்றி பெற்ற கவுன்சிலர்கள் கட்சி தலைமையின் உத்தரவுப்படி தங்கள் பதவிகளை ராஜிநாமா செய்தனர்.

இதையடுத்து 155 வார்டுகளிலும் நடைபெற்ற தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி தொடரப்பட்ட வழக்கில் உயர் நீதிமன்றத் தீர்ப்பின் எதிரொலியாக திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் 98 கவுன்சிலர்களும் தங்கள் பதவிகளை ராஜிநாமா செய்தனர்.

இதையடுத்து ஏற்கெனவே காலியாக உள்ள இடங்கள் மற்றும் இந்த 98 இடங்களுக்கும் சேர்த்து மொத்தம் 100 இடங்களுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது.

இருப்பினும் மறு தேர்தலுக்கு மக்களிடம் அதிக ஆர்வம் காணப்படவில்லை. இதனால் 10 மண்டலங்களிலும் சேர்த்து 30 சதவீத அளவுக்கே வாக்குபதிவு நடைபெற்றது.

உயர்நீதிமன்ற தீர்ப்பின் எதிரொலியாக 58 இடங்களை ராஜிநாமா செய்த திமுக இந்த தேர்தலில் 56 இடங்களில் வெற்றி பெற்றது. இருப்பினும் ஏற்கெனவே காலியாக இருந்த 2 இடங்களை வென்றதன் மூலம் இந்த இழப்பை அக் கட்சி ஈடு செய்துள்ளது.

25 இடங்களை ராஜிநாமா செய்த காங்கிரஸ் இந்த தேர்தலில் 22 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது.

13 இடங்களில் ராஜிநாமா செய்த பாட்டாளி மக்கள் கட்சி இத் தேர்தலில் 12 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது.

கணக்கை தொடங்கிய தேமுதிக: ஓராண்டு முன்னர் தொடங்கப்பட்ட விஜயகாந்தின் தேமுதிக, இத் தேர்தலில் 5 இடங்களில் வெற்றி பெற்று வரலாற்றுச் சிறப்பு மிக்க சென்னை மாநகராட்சி மன்றத்தில் தனது கணக்கைத் தொடங்கியுள்ளது.

கடந்த தேர்தலில் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாத பாஜக இத் தேர்தலில் 2 இடங்களிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒரு இடத்திலும் வெற்றி பெற்றுள்ளன.

திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் மட்டுமே இருந்த மாநகராட்சி மன்றத்தில் இனி தேமுதிக, பாஜக, மார்க்சிஸ்ட் கட்சிகளின் குரல் முக்கிய விவாதங்களில் ஒலிக்கும் என்பதில் ஐயமில்லை.

பொதுவாக பார்த்தால் இந்த மறு தேர்தல் சிலருக்கு லாபம் என்றால் சிலருக்கு இது சிறிய அளவிலான நஷ்டங்களை அளித்துள்ளது என்பதை மறுக்க முடியாது.

Kalki weekly Editorial (04.03.2007)

தேர்தல் கமிஷனின் தனி அதிகாரம்!

தே.மு.தி.க. ஐந்து வார்டுகளில் வென்றது மட்டுமே எதிர்பாராதது. சென்னை மாநகராட்சி கவுன்சில் தேர்தலின் இதர முடிவுகள் எவ்வித ஆச்சர்யமும் அளிக்கவில்லை.

கடந்த முறை தேர்தல் நடந்தபோது நிகழ்ந்த வன்முறை பலரை அச்சுறுத்தியிருக்கிறது. அ.தி.மு.க. போட்டியிடாததால்,
எப்படியிருந்தாலும் தி.மு.க. கூட்டணியே அதிக இடங்களைக் கைப்பற்றும் என்பது முன்கூட்டியே தெரிந்த முடிவாகிவிட்டது. இவ்விரு காரணங்களினால் மட்டுமின்றி, சமீப காலத்து அரசியல் போக்கினால் விளைந்த சலிப்பு காரணமாகவும் வாக்குப்பதிவு மிகக் குறைவாகவே
நிகழ்ந்திருக்கிறது.

மறு தேர்தல் உணர்த்தும் முக்கியமான பாடம் இதுதான் :

இப்போதுள்ள உள்ளாட்சித் தேர்தல் நடைமுறை என்பது சட்டமன்றத் தேர்தலின் மறுவடிவம் போன்றதாகவே இருக்கிறது. கட்சித் தலைமைதான் எங்கே, யார் போட்டியிடலாம் என்று நிர்ணயிக்கிறது. பணபலம், ‘ஆள்’ பலம், ஜாதி போன்றவையும் வேட்பாளரை
நிர்ணயிக்கின்றன. தாங்கள் வோட்டளிக்கப் போகும் நபர் தங்களுள் ஒருவராக – தங்கள் பிரதிநிதியாக – விளங்கி நல்லது செய்வார் என்கிற நம்பிக்கையே வாக்காளர்களுக்கு ஏற்பட வாய்ப்பின்றிப் போய்விட்டது.

கட்சி அடிப்படையில் வோட்டுப் போட வேண்டியிருக்கிறபோது, சட்டமன்றத்தில் அதிகார பலம் கொண்ட கட்சியையே உள்ளாட்சி அமைப்பிலும் தேர்ந்தெடுத்தால்தான் உள்ளாட்சி மன்றத்துக்கு அரசாங்கத்தின் ஒத்துழைப்பும் நிதி ஒதுக்கீடும் சிரமமின்றிக் கிடைக்கும் என்கிற அவல நிலை வேறு! ஆட்சி அதிகாரத்தில் உள்ள கட்சியின் ஆதிக்கத்தில், உள்ளாட்சித் தேர்தல்களின்போது வன்முறையும் கள்ளவாக்குப் பதிவும்கூட நடைபெறுகின்றன. மறுதேர்தல்
அறிவித்தால், அந்த மறுதேர்தலிலும் சிறிய அளவிலேனும் சில வார்டுகளில் கள்ள வோட்டு, வன்முறை, கலாட்டா!

கட்சி அரசியலில் ஆதிக்கம் மட்டும் இல்லாவிட்டால் உள்ளாட்சித் தேர்தல்களில் இத்தனை வன்முறையும் அராஜகமும் நுழையவே
வாய்ப்பிராது என்பதுடன் சமுதாய நோக்கும் பரந்த சிந்தனையும் உள்ளவர்கள் தேர்தலில் வேட்பாளராக நிற்க முன்வருவார்கள்.
சுயநலமின்றியும் கட்சி சார்பின்றியும் பொதுப்பணிகள் நடக்கும். ஆனால் இன்றோ, உள்ளாட்சி தேர்தல் அரசியல் மயமானதுடன் மாநில தேர்தல் கமிஷனும் நடுநிலையும் சுதந்திரமும் இழந்து ஆளுங்கட்சியின் அரசியல் ஆதிக்கத்துக்கு உட்பட்டுப் போயிருக்கிறது.

‘‘மாநிலத் தேர்தல் அதிகாரி தமது பொறுப்பை ஒழுங்காக
நிறைவேற்றவில்லை. சென்னை மாநகராட்சித் தேர்தலின்போது புகார்களின் அடிப்படையில் நடவடிக்கை எடுப்பதற்குப் பதிலாக, எதுவுமே நடவாதது போல் பாசாங்கு செய்திருக்கிறார்’’ என்று பொது நல வழக்கில் தீர்ப்பு கூறிய மூன்றாவது நீதிபதி பி.கே. மிச்ரா விளாசித் தள்ளியிருக்கிறார். இவ்வழக்கின் முதல் தீர்ப்பில் இரு நீதிபதிகள் கருத்து வேறுபட்டபோதிலும் நீதிபதி கலீ·புல்லாவும் தேர்தல்
கமிஷனின் அசிரத்தையைச் சுட்டிக் காட்டியுள்ளார். தேர்தல் கமிஷனர் சந்திரசேகர் பதவி விலக வேண்டும் என்று கம்யூனிஸ்ட் மார்க்ஸிஸ்ட் கட்சி குரலெழுப்பியிருக்கிறது.

இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் அளிக்க முடியாத நிலையில், ராஜினாமா செய்ய மட்டும் மறுத்துவிட்டார் தேர்தல் கமிஷனர்! தனது தனி அதிகாரத்தில் தலையிட நீதிமன்றத்துக்கு உரிமை இல்லை என்று மாநில தேர்தல் கமிஷன் உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்ய உத்தேசித்துள்ளது. இது பிரச்னையை திசை திருப்பும் முயற்சியே!

தேர்தல்கள் நியாயமாகவும் முறைப்படியும் நடக்கவேண்டும் என்பதற்காக தேர்தல் கமிஷனுக்குத் தனி அதிகாரம் தரப்பட்டதுள்ளது உண்மைதான். அந்த உரிமை பதவிக்குத்தானே தவிர, அந்தப் பதவியை நாணயமற்ற ஒருவரோ திறமையற்ற ஒருவரோ வகிக்கிறபோது, அந்த நபருக்கும் தனி அதிகாரம் வழங்கப்பட்டதாகக் கருதவே முடியாது!

Posted in ADMK, BJP, Chennai, Congress, Corporation, DMDK, DMK, Elections, Electorate, Kalki, Madras, MDMK, Municpality, PMK, Polls, Ramadoss, Re-poll, Vijaiganth, Vijaikanth, Vijayaganth, Vijayakanth, Vijayganth, vijaykanth, Violence, Vote, voter | 2 Comments »

Congress Krishnasamy – ‘How many seats did AIADMK win in Tamil Nadu Civic Polls?’

Posted by Snapjudge மேல் நவம்பர் 16, 2006

ஜனநாயக படுகொலை என்று விமர்சித்து உள்ளாட்சி தேர்தலை குறை சொல்வதா? காங்.தலைவர் கிருஷ்ணசாமி கண்டனம்

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது

நடைபெற்று முடிந்த உள்ளாட்சி தேர்தலில் ஜனநயாக படுகொலை நிகழ்த்தப்பட்டதாக சென்னையில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் இரா.செழியன் உள்ளிட்ட சிலர் கருத்து தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் உள்ள

  • 4 கோடிக்கும் மேற்பட்ட வாக்காளர்கள்,
  • 80 ஆயிரம் வாக்குசாவடிகள் மூலமாக
  • 4லட்சம் பேர் வேட்பாளர்களாக போட்டி யிட்டு
  • 1 லட்சத்து 31 ஆயிரம் பதவிகளுக்கு தேர்தல் அமைதியாக நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்பட்டு பதவியில் அமர்ந்துள்ளனர்.

தமிழகத்தில் உள்ள

  • 472 மாநகராட்சி வார்டுகளில் 62பேரும்,
  • 4 ஆயிரத்து 374 நகராட்சி வார்டுகளில் 1016பேரும்,
  • 8 ஆயிரத்து 780 வார்டுகளில் 1643 வார்டுகளிலும்,
  • 6589 ஊராட்சி ஒன்றிய வார்டுகளில் 1417 வார்டுகளிலும்
  • மாவட்ட ஊராட்சி வார்டுகளில் 157 வார்டுகளிலும் அ.தி.மு.க. கட்சியின் சார்பாக போட் டியிட்டவர்கள் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட் டுள்ளார்கள்.

நடந்து முடிந்த தேர்தலிலே ஜனநாயகம் படுகொலை செய்யப்பட்டதாக குரல் எழுப்புகிற இவர்களின் வாதத்தில் உண்மை இருக்குமேயானால் அ.தி. மு.க.வை சேர்ந்தவர்கள் இந்த அளவு எண்ணிக்கையில் வெற்றி பெற்றிருக்க முடியுமா என்பதை விளக்க வேண்டிய பொறுப்பு இவர்களுக்கு இருக் கிறது.

சென்னை மாநகராட் சிக்குட்பட்ட சில வார்டுகளில் கலவரங்கள் நடந்ததாக சென்னை உயர்நீதிமன்றத் திற்கு கொண்டு செல்லப்பட்டு 17 வாக்குசாவடிகளில் மறு தேர்தல் நடத்தப்பட்டன. அதற்குப் பிறகு நீதிமன்ற ஆணைக்கேற்ப சென்னை மாநகராட்சியில் உள்ள 155 வார்டுகளுக்கான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

இந்த தேர்தல் முடிவு என் பது நீதிமன்ற ஆணையின் அடிப்படையில்தான் வாக்குகள் எண்ணப்பட்டு அறிவிக்கப்பட்டது என் பதை உணராமல் தேர்தல் முடிவுகளை கொச்சைப் படுத்துகிற வகையில் பேசு வது உயர்நீதிமன்றத்தை அவமதிக்கிற செயலாகும்.

மக்களை திசை திருப்ப உள்ளாட்சி தேர்தலில் பங்கேற்ற 3கோடி வாக்காளர் களை அவமதிக்கும் செயலாக வும் கருதப்படும்.

இவ்வாறு கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.

Posted in ADMK, AIADMK, Chennai, Civic Polls, Condemn, Congress, Congress (I), Corporation, Era Sezhiyan, Indira Congress, Iraa Sezhiyan, Jayalalitha, Krishnasaamy, Krishnasamy, Krishnaswamy, local body elections, Madras, Meeting, Municipality, seats, Tamil Nadu | Leave a Comment »

Alternate Suggestions to Satellite City – Madras City Decongestion

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 7, 2006

நெரிசலை சமாளிக்க துணை நகரத்துக்கு மாற்றாக புதிய மாநகராட்சிகளை உருவாக்கலாம்- அரசுக்கு யோசனை

வி. கிருஷ்ணமூர்த்தி

சென்னை, செப். 8: சென்னையில் அதிகரித்துவரும் மக்கள் நெருக்கத்தைக் குறைக்க, புறநகர்ப் பகுதிகளை ஒருங்கிணைத்து புதிய மாநகராட்சிகளை உருவாக்கலாம் என நகர்ப்புற வளர்ச்சிக்கான பல்வேறு அமைப்புகள் யோசனை கூறியுள்ளன.

துணை நகரம் அமைக்கும் திட்டத்தை தமிழக அரசு கைவிட்டதை அடுத்து, இப் பிரச்சினைக்கு புதிய மாநகராட்சிகளை அமைப்பது மட்டுமே தீர்வாக அமையும் என இவ்வமைப்புகள் தெரிவித்துள்ளன.

சென்னை மாநகரைவிட, “சென்னை பெருநகர்’ (சி.எம்.ஏ.) என சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் வரையறுத்துள்ள பகுதிகள் மிக வேகமாக வளர்ந்து வருகின்றன.

சென்னையில் தற்போது உள்ள மக்கள்தொகையைவிட சென்னை பெருநகர்ப் பகுதியின் மக்கள்தொகை 3 மடங்காக உள்ளது. இது அடுத்த 10 ஆண்டுகளில் 4 மடங்காக அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

சென்னை பெருநகர்ப் பகுதியில் (சி.எம்.ஏ.) தற்போது 16 நகராட்சிகள், 20 சிறப்பு நிலை ஊராட்சிகள், 10 ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன.

இவை அனைத்தும் ஒரே மாதிரியான நகர்ப்புறத் தன்மையுடன் இருந்தாலும் மக்கள்தொகை அடிப்படையில் வெவ்வேறு நிலை உள்ளாட்சிகளாக வரையறுக்கப்பட்டுள்ளன.

இதனால் இப் பகுதிகளில் கழிவுநீர் அகற்றுதல், குடிநீர் விநியோகம் உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகளை ஒருங்கிணைத்து மேற்கொள்வதில் பிரச்சினைகள் ஏற்படுகின்றன. சென்னையில் ஏற்பட்டுவரும் நெரிசலுக்கும், புறநகர்ப் பகுதிப் பிரச்சினைகளுக்கும் ஒரே சமயத்தில் தீர்வு காண வேண்டும்.

அதற்காக விவசாய நிலங்களையும், கிராமப்புறப் பகுதிகளையும் ஒட்டுமொத்தமாகக் கையகப்படுத்தி துணை நகரம் அமைப்பதை விட புறநகர்ப் பகுதிகளை ஒருங்கிணைத்து தனி நகரமாக அறிவிக்கலாம் என்கின்றனர் நகர்ப்புற வளர்ச்சி ஆய்வாளர்கள்.

புதிய மாநகராட்சிகள் சாத்தியமா?

தமிழகத்தில் தற்போது 6 மாநகராட்சிகள் உள்ளன. இவை தவிர திருப்பூர் 7-வது மாநகராட்சியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

  1. மேலும், ஈரோடு,
  2. தஞ்சாவூர்,
  3. வேலூர்,
  4. தூத்துக்குடி நகராட்சிகளை மாநகராட்சிகளாக அறிவிப்பது குறித்து அரசு பரிசீலித்து வருகிறது.

உள்ளாட்சித் துறையில் இதற்காக ஓர் உயர்நிலைக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தற்போது ஏற்பட்டுள்ள தேவையைக் கருதி சென்னைக்கு அருகே புதிய மாநகராட்சிகளை உருவாக்குவது குறித்தும் அரசு பரிசீலிக்கலாம் என பல்வேறு ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

அடிப்படை வசதிகளை மேம்படுத்தினாலே போதும்: சென்னை மாநகரில் உள்ள அளவுக்கு, புறநகர்ப் பகுதிகளிலும் குடிநீர் விநியோகம், கழிவுநீர்-குப்பைகள் அகற்றுதல், சாலைகள், துரிதமான போக்குவரத்து ஆகிய வசதிகளை திட்டமிட்டு மேம்படுத்தினால் துணை நகரங்கள் தானாகவே உருவாகிவிடும்.

சென்னை புறநகரில் ஒரே மாதிரியான பகுதிகள் வெவ்வேறு நிலை உள்ளாட்சிகளாக இருப்பதால், சில பகுதிகளுக்கு மட்டுமே புதிய திட்டங்களின் பயன்கள் கிடைக்கின்றன.

இவ்வாறு பயன் பெறாமல் பின்தங்கியுள்ள பகுதிகள், மற்ற பகுதிகளுக்கு பிற்காலத்தில் இடையூறாக மாறிவிடும் என சிட்லபாக்கம் குடியிருப்போர் நலச் சங்கங்களின் ஒருங்கிணைப்பாளர் பி. விஸ்வநாதன் கூறுகிறார்.

தீர்வு என்ன?

சென்னை பெருநகர்ப் பகுதியில் தாம்பரம் மற்றும் அதைச் சார்ந்த பகுதிகள், அம்பத்தூர் மற்றும் அதைச் சார்ந்த பகுதிகள் அபரிமிதமான வளர்ச்சியை அடைந்துள்ளன.

இவற்றின் வளர்ச்சி வேகம் அடுத்த சில ஆண்டுகளில் பல மடங்கு அதிகரிக்கும் என நகர்ப்புற வளர்ச்சித் துறை மதிப்பிட்டுள்ளது.

இதைக் கருத்தில் கொண்டு, கிண்டி முதல் மறைமலை நகர் வரையுள்ள பகுதிகளை ஒருங்கிணைத்து தாம்பரத்தை தலைமையிடமாகக் கொண்டு ஒரு மாநகராட்சியையும், மதுரவாயல் முதல் மணலி வரையுள்ள பகுதிகளை ஒருங்கிணைத்து அம்பத்தூரை தலைமையிடமாகக் கொண்டு ஒரு மாநகராட்சியையும் உருவாக்கலாம் என அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

Posted in Ambattur, Chennai, Corporation, Government, Guindy, Ideas, Madras, Maduravayal, Manali, Maraimalai Nagar, Satellite City, Suggestions, Tambaram, Tamil, Thoughts | Leave a Comment »