Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘content’ Category

Kamal gets subpoenaed by Supreme Court regarding the export of ‘Kurudhi punal’ Tamil movie

Posted by Snapjudge மேல் நவம்பர் 24, 2007

நடிகர் கமல்ஹாசனுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

புதுதில்லி,நவ. 23: வருமான வரிச் சலுகை தொடர்பான வழக்கில் நடிகர் கமல்ஹாசனுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

கமல்ஹாசன், அர்ஜுன், கவுதமி நடித்த குருதிப்புனல் திரைப்படம் 10 ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்தது. இப்படத்தை வெளிநாடுகளில் திரையிடும் உரிமையை கமல்ஹாசன் வழங்கினார். ஒரு சரக்கை வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்தால் வருமான வரியில் சில சலுகைகள் வழங்கப்படுகிறது. வருமான வரிச் சட்டத்தின் 80 எச்சிசி பிரிவின்படி இந்த சலுகை வழங்கப்படுகிறது. இதன் அடிப்படையில் ரூ.54.50 லட்சம் வருமான வரிச் சலுகைக் கேட்டார் கமல்ஹாசன்.

திரைப்படத்தை வெளிநாடுகளில் திரையிடும் உரிமையை மட்டும்தான் குறிப்பிட்ட கமல்ஹாசன் வழங்கியுள்ளார். இது சரக்கு ஏற்றுமதி ஆகாது. திரைப்படத்தின் உரிமை என்பது சரக்கு அல்ல. எனவே வரிச்சலுகை வழங்க முடியாது என்று வருமான வரித்துறை கூறியது. இதை எதிர்த்து கமல்ஹாசன் வழக்கு தொடர்ந்தார்.

வருமானவரித்துறை மேல்முறையீட்டு தீர்ப்பாயமும், சென்னை உயர் நீதிமன்றமும் இவ்வழக்கில் கமல்ஹாசனுக்கு சாதகமாகத் தீர்ப்பு வழங்கின. இதை எதிர்த்து வருமான வரித்துறை உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. இம்மனுவை விசாரணைக்கு ஏற்ற நீதிபதி அசோக் பான் தலைமையிலான பெஞ்ச், பதில் அளிக்குமாறு கமல்ஹாசனுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.

Posted in 420, Accounting, Accounts, Actor, America, Arjun, Ashok Baan, Ashok Ban, Ashok Bhan, Cinema, Claims, content, Courts, Dasavadharam, Dasavatharam, deductions, Evasion, Exports, Films, Finance, Forgery, Goods, Illegal, Income, Income Tax, IT, Judges, Justice, Kamal, kamalahasan, Kamalahassan, Kamalhasan, Kamalhassan, Kurudhippunal, Kurudhipunal, Kuruthippunal, Kuruthipunal, Law, legal, Loss, merchandise, Movies, Nadiadvala, Nadiadwala, Order, Pictures, Producer, Profit, rights, SC, Scam, subpoena, Tax, Taxes, telecast, US, USA | 1 Comment »

INTEL to provide internet based content for 1800 HS Schools

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 4, 2007

தமிழகத்தில் இணையதளம் மூலம் கல்வி, மருத்துவ வசதி

தமிழக முதல்வர் கருணாநிதி முன்னிலையில் அரசுப் பள்ளிகளுக்கு இலவசமாக கம்ப்யூட்டர் இணைய தள வசதி மற்றும் மருத்துவத் திட்டங்களுக்கு இன்டெல் நிறுவனத்தின் தலைவர் கிரையக் ஆர்.பேர்ரைட்டு டன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை பரிமாறிக் கொள்ளும் தலைமைச் செயலர் எல்.கே.திரிபாதி. உடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன்.

சென்னை, செப். 4:தமிழகத்தில் இணையதளம் மூலம் கல்வி மற்றும் மருத்துவ வசதிகளை அளிக்க இன்டெல் கார்ப்பரேஷன் நிறுவனம் திட்டமிட்டுள்ளது என்று அந்நிறுவனத் தலைவர் கிரெய்க் ஆர் பாரெட் தெரிவித்தார்.

சென்னை கோபாலபுரத்தில் முதல்வர் கருணாநிதியை திங்கள்கிழமை சந்தித்தபிறகு செய்தியாளர்களிடம் அவர் இத்தகவலை தெரிவித்தார். அவர் மேலும் கூறியது:

தமிழகத்தில் உள்ள 1,800 அரசு பள்ளிகளில் இணையதளம் மூலமான கல்வி வசதியை ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் மாணவர்கள் பயனடைவதோடு, ஆசிரியர்களின் கற்பிக்கும் திறனும் மேம்படும்.

முதல் கட்டமாக கோவை, திருச்சி, மதுரை, ஈரோடு நகரங்களில் உள்ள 50 பள்ளிகளுக்கு இணையதள வசதியை அளிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இது தவிர, இன்டெல் நிறுவனம் 500 கம்ப்யூட்டர்களை அரசு பள்ளிகளுக்கு இலவசமாக அளிக்கவும் முன்வந்துள்ளது என்றார் கிரெய்க்.

முதல்வருடனான சந்திப்பு குறித்து இன்டெல் நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழக அரசும், இன்டெல் நிறுவனமும் இணைந்து பள்ளிகளில் இணையதள இணைப்பை ஏற்படுத்த முடிவு செய்துள்ளது. பின்னர் படிப்படியாக அரசு அலுவலகங்கள் மற்றும் மாவட்டங்களில் உள்ள மருத்துவமனைகளுக்கு விரிவுபடுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகள், மருத்துவமனைகள் மற்றும் அரசு அலுவலகங்கள் அனைத்திலும் இன்டர்நெட் மூலமான இணைப்பை விரிவுபடுத்தி, இந்தியாவிலேயே முன்மாதிரி மாநிலமாக உயர்த்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்காக ஆண்டுதோறும் 18 ஆயிரம் ஆசிரியர்களுக்கு இன்டெல் நிறுவனம் பயிற்சியளிக்கும். அத்துடன் டிடிஇஎஸ் திட்டத்தின் கீழ் கூடுதலாக 4 ஆயிரம் ஆசிரியர்களுக்கும் பயிற்சி அளிக்கப்படும்.

டெலிமெடிசின் திட்டத்தின் ஒரு கட்டமாக இன்டெல் நிறுவனம் திண்டிவனத்தில் உள்ள ஆரம்ப சுகாதார மருத்துவமனையில் சோதனை அடிப்படையில் உருவாக்கி குறைந்த கட்டணத்தில் செயல்படுத்த உள்ளது. இருதய சிகிச்சை மற்றும் பார்வை சார்ந்த நோய்களுக்கு இம்மையத்தில் சிகிச்சை அளிக்கப்படும். இதனால் இப்பகுதியைச் சுற்றியுள்ள கிராமப்பகுதிகளில் வசிக்கும் 2.85 லட்சம் மக்கள் மருத்துவ வசதி பெறுவர்.

முதல்வருடனான சந்திப்பின்போது அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு மற்றும் உயரதிகாரிகள் உடனிருந்தனர்.

Posted in content, HS Schools, Intel, Internet, Net, School, sites, Students, Technology, Web, Website, Websites, www | Leave a Comment »

BSNL to issue IP TV tenders in six months

Posted by Snapjudge மேல் மே 5, 2007

சென்னை, பெங்களூர் உள்ளிட்ட 4 நகரங்களில் இணையதளம் மூலம் டிவி பார்க்கும் வசதி விரைவில் அறிமுகம்

திருச்சி, மே 5: சென்னை, பெங்களூர் உள்பட 4 நகரங்களில் இணையதளம் மூலம் டிவி பார்க்கும் வசதி விரைவில் ஏற்படுத்தப்படும் என்றார் பிஎஸ்என்எல் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் ஏ.கே. சின்கா.

திருச்சியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பிஎஸ்என்எல் அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் கூட்டத்தில் பங்கேற்று மேலும் அவர் பேசியது:

கடும் போட்டிகளிடையே இயங்கும் தொலைத்தொடர்பு நிறுவனம் முன்பிருந்த அரசுத்துறை என்பதை மாற்றி ஒரு கம்பெனி நிர்வாகம் என்ற போக்கில் ஊழியர்களும், அலுவலர்களும் தங்களது மனப்பாங்கை மாற்ற வேண்டும்.

2010-ம் ஆண்டுக்குள் பிஎஸ்என்எல் நிறுவனம் 90 ஆயிரம் கோடி நிகர வருமானத்தை ஈட்டுமாறு மத்திய தொலைத்தொடர்பு அமைச்சகம் பணித்துள்ளது.

2000-1 ஆம் ஆண்டில் பிஎஸ்என்எல் நிறுவனம் பொதுத்துறை நிறுவனமாக நிறுவப்பட்டபோது நிகர வருமானம் ரூ. 22 ஆயிரம் கோடியாக இருந்தது. இதுவே தற்போது ரூ. 40 ஆயிரம் கோடியாக உயர்ந்துள்ளது.

இந்த பெருக்கம் இன்னும் ஊக்கவிக்கப்பட்டால் மத்திய அரசு நிர்ணயித்துள்ள இலக்கை எளிதில் அடைந்துவிடலாம்.

சமீபத்தில் புணே நகரில் இணையதளம் மூலம் டிவி பார்க்கும் வசதியை பிஎஸ்என்எல் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த சேவை விரைவில் சென்னை, பெங்களூர், ஹைதராபாத், கோல்கத்தா ஆகிய நகரங்களில் அறிமுகப்படுத்தப்படும்.

இந்த சேவைக்கு கிடைக்கும் பங்குதாரர்களை வைத்து மற்ற நகரங்களுக்கும் விரிவுப்படுத்தப்படும் என்றார் ஏ.கே. சின்கா.

Posted in Airtel, Bangalore, Bengaluru, broadband, BSNL, Business, Chennai, Commerce, content, Economy, Finance, Hyderabad, Internet Protocol TV, IPTV, Kolkata, Reliance, Telecom, Telephony, Television, tenders, TV, Voip | 1 Comment »