Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Confession’ Category

Noida Child Molesters: Details & Mohinder’s Confession

Posted by Snapjudge மேல் ஜனவரி 4, 2007

சிறுமிகளை கற்பழித்து கொன்றது எப்படி? காமவெறியன் பரபரப்பு வாக்குமூலம்

புதுடெல்லி, ஜன. 1-

28 வருடங்களுக்கு முன் தமிழிலில் வெளிவந்த சிகப்பு ரோஜாக்கள் சினிமாவில் கதாநாயகன் கமலஹாசன் இளம் பெண்களை ஏமாற்றி அழைத்து வந்து அவர்களை கற்பழித்து கொலை செய்வதுடன் தனது பங்களா விலேயே புதைத்துவிடுவார்.

இது போன்ற நிஜ சம்பவம் டெல்லி புறநகர் பகுதியான நொய்டாவில் நடந்துள்ளது. இங்கு வசிக்கும் தொழில்அதிபர் மொகிந்தர்சிங். இவரது வீட்டு வேலைக்காரன் சுரேந்திரா.

இவர்கள் இருவரும் நொய்டா நிதாரி பகுதியில் உள்ள பங்களாவில் ஏராளமான சிறுமிகளை கற்பழித்து கொன்று புதைத் துள்ளான். அனைவரும் 20 வயதுக்குட்பட்டவர்கள்.

இவர்களது காமவெறிக்கு 38 சிறுவர்-சிறுமிகள்வரை பலியாகி இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். கடந்த சில வருடங்களாகவே அந்தப்பகுதியில் சிறுவர்- சிறுமிகள் அடிக்கடி மாயமானார்கள்.

தற்போது சுரேந்திரா கைதான தகவல் கிடைத்ததும் சிறுவர்-சிறுமிகளை பறி கொடுத்த பெற்றோர் ஒவ்வொரு வராக வந்து புகார் செய்த வண்ணம் உள்ளனர். இதுவரை 38 சிறுவர்-சிறுமிகளை காணவில்லை என்று புகார் வந்துள்ளது.

கடைசியாக பாயல் என்ற 20 வயது இளம்பெண் சுரேந்திராவின் காமப்பசிக்கு பலியானார். அவளது செல் போன் சுரேந்திராவிடம் இருந்தது. செல்போனை போலீசார் தேடியபோது சுரேந்திரா சிக்கினான்.

இதையடுத்து மொகிந்தர் சிங்கின் பங்களாவைச் சுற்றிலும் கொன்று புதைக்கப் பட்டுள்ள சிறுவர்-சிறுமிகளின் பிணங்களை போலீசார் புல்டோசர் எந்திரம் மூலம் தோண்டி எடுத்து வருகிறார் கள். தோண்டத்தோண்ட பிணங்கள் வந்து கொண்டே இருக்கிறது.

தொய்டா பகுதி முழுவதும் ஒரே பீதியும் பரபரப்பாகவும் காணப்படுகிறது. பிணங்கள் தோண்டப்படும் மர்ம மாளிகை முன் ஏராளமான பெற்றோர் பரிதவித்தபடி கூடினர். கடுமையான கூட்டம் கூடியதால் போலீசார் அவர்களை கட்டுப்படுத்த தடியடி நடத்தினார்கள். பலத்த பாதுகாப்புக்கு இடையே பிணம் தோண்டி எடுக்கப் படுகிறது.

கடத்திவரப்படும் சிறுமி களை முதலில் தொழில்அதிபர் மொகிந்தர்சிங் கற்பழிப்பார். அதன்பிறகு வேலைக்காரன் சுரேந்திரா அனுபவித்து கொன்று புதைத்துவிடுவான். இந்த தொடர் கொலையில் மொகிந்தர்சிங்கும் கைது செய்யப்பட்டு உள்ளார். இருவரிடமும் போலீசார் காவலில் வைத்து விசாரித்து வருகிறார் கள்.

சிறுமிகளை கற்பழித்து கொன்றது பற்றி சுரேந்திரா போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்து இருக்கிறான். அதில் கூறியிருப்பதாவது:-

நான் தொழில்அதிபர் மொகிந்தர்சிங் வீட்டில் பல வருடங்களாக வேலை பார்த்து வருகிறேன். மொகிந்தர்சிங் மனைவியைப்பிரிந்து வாழ்ந்து வந்தார். தனிமையில் இருந்த அவர் அழகிகளை அழைத்து வந்து அனுபவிப்பார். அவருக்கு சிறுமிகள் என்றால் பிடிக்கும்.

அவரது எண்ணத்தை புரிந்து கொன்ட நான் முதன்முதலாக ஜோதி என்ற 10 வயது சிறுமியை ஏமாற்றி வீட்டுக்குள் அழைத்து வந்தேன். அவரது தந்தை ஜாபுலால். சலவைத்தொழிலாளியான இவரது மகள் வீடு வீடாக சென்று துணிகளை சேகரித்து அதை சலவை செய்து கொடுப்பாள்.

எங்கள் பகுதி வழியாக சிறுமி துடுக்காக நடந்து செல்வாள் ஒருநான் அவளை வீட்டுக்குள் துணிகளை எடுத்துச்செல்ல வருமாறு அழைத்துச்சென்றேன். வீட்டுக்குள் நுழைந்ததும் அவளை ஒரு அறையில் தள்ளினேன். எஜமான் மொகிந்தர்சிங் முதலில் சிறுமியை கற்பழித்தார். அவர் அனுபவித்து சென்ற பின் நானும் சிறுமியை பலாத்காரம் செய்தேன். அவளை வெளியில் விட்டால் விபரீதமாகிவிடும் என்பதால் அவள் அணிந்திருந்த சுடிதார் துப்பட்டாவால் கழுத்தை இறுக்கி கொன்றேன். பிணத்தை வீட்டுகால்வாயில் குழிதோண்டி புதைத்து விட்டேன்.

இதுதான் நான் செய்த முதல் கொலை அதன்பிறகு நிறைய சிறுமிகள் மட்டுமல்லாது சிறுவர்களையும் அழைத்து வந்து `செக்ஸ்’ இன்பம் அனுபவித்து கொன்றோம். எத்தனை பேர் என்று எனக்கு சரியாக ஞாபகம் இல்லை.

முதலாளி மொகிந்தர்சிங் அடிக்கடி விபசார அழகிகளை வீட்டுக்கு அழைத்துவந்து உல்லாசமாக இருப்பார். பாயல் என்ற இளம்பெண் அடிக்கடி வந்து மொகிந்தர்சிங்குடன் உல்லாசமாக இருப்பாள்.

அவளுக்கு நாங்கள் சிறுமிகளிடம் `செக்ஸ்’ இன்பம் அனுபவித்து கொலை செய்த விவரம் தெரிந்து விட்டது. அவள் மொகிந்தர்சிங்கை `பிளாக் மெயில்’ செய்து பணம் பறிக்க திட்டமிட்டாள். இதனால் அவளது கதையை முடித்துவிடு என்று எனக்கு உத்தரவிட்டார். அதன்படி கடந்த மே 7-ந்தேதி வழக்கம் போல் வீட்டுக்கு வந்த பாயலை கொன்று பிணத்தை புதைத்துவிட்டேன்.

ஆனால் அவளது செல்போன் எங்கள் வீட்டில் இருந்ததால் அதை வைத்து போலீசார் கண்டுபிடித்து விட்டனர்.

இவ்வாறு சுரேந்தரா கூறினார்.

காணாமல் போன சிறுமிகளின் போட்டோக்களை போலீசார் அவனிடம் காட்டியபோது அவர்களை கற்பழித்து கொன்று விட்டதாக கூறி அடையாளம் காட்டினான்.

சுரேந்திராவின் காமவெறிக்கு பலியான சிறுமி ஜோதியின் தந்தை சலவைத்தொழிலாளி ஜாபுலால் கூறுகையில், “நான் எனது மகளை காணவில்லை என்று 18 முறை போலீஸ் நிலையத்துக்கு சென்று புகார் கொடுத்தேன். ஆனால் போலீசார் எனது புகாரை கவனிக்கவேயில்லை. அப்போது இதன் மீது நடவடிக்கை எடுத்து இருந்தால் படுகொலைகள் நீடித்து இருக்காது” என்றார்.

கைது செய்யப்பட்ட தொழில் அதிபர் மொகிந்தர் சிங் ஹரித்வார், பாகப்பட், டேராடூன், நொய்டா ஆகிய இடங்களில் தொழில் நிறுவனங்கள் நடத்தி வருகிறார். அவருக்கு மாதவருமானம் மட்டும் ரூ. 23 லட்சம் முதல் 30 லட்சம் வரை கிடைக்கும். மொகிந்தர்சிங்கின் மனைவி தவிந்தர்கவுர். இவர் கணவரது நடவடிக்கைகள் பிடிக்காமல் 2 வருடங்களுக்கும் முன்பே பிரிந்து சென்று விட்டார். அவர் மொகிந்தரின் தம்பி இக்பாலுடன் வசித்து வருகிறார்.

இது போல் மொகிந்தர்சிங்குடன் அவரது சகோதரர்களுக்கு சொத்து பிரச்சினை இருந்தது இதனால் சகோதரர்களும் மொகிந்தரை விலக்கி வைத்தனர்.

அவரது தம்பி இக்பால் சிங் கூறுகையில் “மொகிந்தர்சிங் எப்போதும் பிரச்சினை செய்து கொண்டே இருப்பான். கடந்த 6 வருடமாக அவனுக்கும் எனக்கும் தொடர்பு இல்லை அவன் என்ன செய்து வந்தான் என்று தெரியாது” என்றார்.

மொகிந்தரின் பள்ளி தோழர்கள் கூறுகையில் “அவன் மோசமானவன்” என்றனர். மேலும் சிலர் கூறுகையில் “அவன் ஜாலியானவன். ஆனால் இது போன்ற குற்றங்களில் ஈடுபட்டதை கேள்விப்பட்டு அதிர்ச்சியாக இருக்கிறது” என்றனர்.

மொகிந்தரின் மைத்துனர் இக்பால்சிங், பஞ்சாப் காங்கிரசில் முக்கிய தலைவர்களில் ஒருவராக இருக்கிறார். அவரிடம் கேட்டபோது, “தனது தங்கையுடன் சரியாக வாழாததால் 2 வருடங்களுக்கு முன் பிரிந்து சென்று விட்டதாக” தெரிவித்தார்.

Posted in Child Molestation, Confession, crimes, Delhi, Molest, Moninder Singh Pandher, Noida, Police, Rape, UP, Uttar Pradesh | 1 Comment »