Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Cold’ Category

Influenza, Flu – Illness, Symptoms, Transmission, Diagnosis & Treatment

Posted by Snapjudge மேல் திசெம்பர் 21, 2007

ஃப்ளூ காய்ச்சல் அறிகுறிகளும் – சிகிச்சையும்

ஃப்ளூ என்று பொதுவாக அழைக்கப்படும் இன்ஃப்ளூயன்சா என்பது ஒரு வைரஸ் காய்ச்சல். இது மூக்கு, தொண்டை மற்றும் நுரையீரல் ஆகிய உறுப்புகளைத் தாக்குகிறது.

மூச்சுக் குழல் எனப்படும் சுவாசக் குழலைப் பாதிக்கும் மற்ற வைரஸ்களைவிட இன்ஃப்ளூயன்சா வைரஸ், தீவிரமாக நோய்க் கிருமிகளையும், சிக்கல் நிறைந்த நோய்த்தன்மையையும் கொண்டது. இன்ஃப்ளூயன்சா ஏ, பி மற்றும் சி ஆகிய 3 வைரஸ்களால் இந்த காய்ச்சல் ஏற்படலாம். இதில் ஏ ரக வைரஸ் பரவலாக தொற்றக் கூடியது, இது தொடர்ந்து மாறிக் கொண்டே இருக்கும் தன்மை கொண்டது.

இந்த ஏ டைப் வைரஸ் சீரான முறையில் வளர்ந்து சில ஆண்டு களுக்கு ஒரு முறை தொற்று நோய்ப் பரவலை ஏற்படுத்தக் கூடியது. இதில் டைப் பி, டைப் சி வைரஸ்களால் சிறு சிறு உபாதைகளே தோன்றி மறையும்.

இன்ஃப்ளூயன்சாவிற்கு வயது வித்தியாசமோ, வயது வரம்போ கிடையாது. யாருக்கு வேண்டுமானாலும், எப்போதும் இந்த வைரஸ் காய்ச்சல் ஏற்படலாம். பொதுவாக குளிர்காலத்திலேயே இந்தவகை வைரஸ் காய்ச்சல் தொற்றக்கூடியது. இந்த காய்ச்சல் ஏற்பட்டோரின் இருமல், சளி ஆகியவை மூலம் இது பிறருக்கும் தொற்றுகிறது.
இன்ஃப்ளூயன்சா திடீரென, உடனடியாகத் தோன்றும். முதலில் அதிக காய்ச்சல், குளிர், வேர்வை, தசை வலி மற்றும் தலைவலி போன்ற தொடக்க அறிகுறிகள் ஏற்படும். தொடர்ந்து மூக்கு ஒழுகுதல், இருமல், தொண்டை கட்டு மற்றும் சூரிய ஒளிக்கு ஒத்துக் கொள் ளாமல் கண்ணீர் வழியும் கண்கள் என்று இதன் நோய் அறிகுறிகள் விரிவடையும். இந்த உடனடி தீவிர அறிகுறிகள் சாதாரணமாக 3 அல்லது 5 நாட்களுக்கு இருக்கும், பொதுவாக 48 மணி நேரத்தில் நோய்க்கூறுகள் அதிகரிக்கத் தொடங்கும்.
ஃப்ளூ வைரஸ்களால் கூடுதலாக, எலும்பு உட்புழை, காது மற்றும் மூச்சுக்குழல் ஆகியவற்றில் தொற்றுக் கிருமிகள் ஏற்படுகின்றன. சில சமயம் ஃப்ளூவால் நியுமோனியா ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் உள்ளன. நியுமோனியாவானது இன்ஃப்ளூயன்சா வைரசால் மட்டுமோ அல்லது இரண்டாம் கட்ட நோய்க்கிருமிக்கு காரணமாகும் பாக்டீரியாவாலோ தோன்றலாம்.

அறிகுறிகள்

  • 104 டிகிரி வரை காய்ச்சல்
  • தலைவலி
  • தசைவலி மற்றும் பிடிப்பு
  • மூக்கிலிருந்து தண்ணீர் போல் சளி வருதல்
  • இருமல்
  • மூச்சு விடுதலில் சிரமம்
  • நடுக்கம்
  • தளர்ச்சி
  • வியர்வை
  • பசியின்மை
  • மூக்கடைப்பு
  • தொண்டைக்கட்டு

இது சாதாரண ஃப்ளூ காய்ச்சலாக இருந்தால் மருத்துவர்கள் காய்ச்சல் எதிர்ப்பு மற்றும் வலி நிவாரணி மாத்திரைகளைக் கொடுத்து கட்டுப்படுத்துவர். ஆனால் எதிர்ப்புச் சக்தி குறைந்தவர்கள், வயதானவர்கள், இருதயம், நுரையீரல் மற்றும் கிட்னி ஆகியவற்றில் நீண்ட நாளைய பழுது இருப்பவர்களுக்கு இன்ஃப்ளூயன்சா வைரஸ் இருப்பது 48 மணி நேரத்திற்குள் கண்டுபிடிக்கப்பட்டால் அமான்ட டின், ரிமான் டடின் ஆகிய வைரஸ் எதிர்ப்பு மருந்துகள் அளிக்கப் படுவது இயல்பு.
குழந்தைகளை இந்த வைரஸ் நோய் தாக்கினால் சிகிச்சை பொதுவாக தேவையில்லை என்று கருதப்படுகிறது. ஆனால் இதன் மூலம் வேறு நோய்கள், வேறு உறுப்புகளில் பழுது என்ற நிலை தோன்றுவதுபோல் தென்பட்டால் சிகிச்சை அவசியம் தேவைப்படும். குழந்தைகளுக்கு ஆஸ்ப்ரின் கொடுக்கக் கூடாது, ஏனெனில் இது ஆபத்து மிகுந்தது. ஆஸ்ப்ரினுக்கும் சுநலந’ள ளலனேசடிஅந என்ற புது வகை ஃப்ளூவிற்குமான தொடர்பு நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

தண்ணீர், பழச்சாறுகள் மற்றும் திரவ உணவுகளை அதிகம் உட்கொள்ளுதல் அவசியம்.
அதிக திரவங்களை உட்கொண்டால் எலும்பு உட்புழை மற்றும் நுரையீரலில் உள்ள சளிச்சவ்வு மெலிதடைந்து உடலிலிருந்து விரைவில் வெளியேறும்.
பொதுவாக இன்ஃப்ளூயன்சா காய்ச்சலை குறைக்காமல் அதன் முழுக்காலத்தை கடக்கவிடுவதே சிறந்தது. ஆனால் குழந்தை களுக்கும், வயதானவர்களுக்கும் சிகிச்சை அவசியம் தேவை. இது பிறருக்கு தொற்றாமல் இருக்க பாக்டீரியா – தடுப்பு சோப்பை பயன்படுத்தி அடிக்கடி கை கழுவுதல் நலம்.
பிற உறுப்புகளில் பாதிப்புகள் இருப்பவர்களுக்கு இன்ஃப்ளூயன்சா தாக்கினால், மேலும் சிக்கல் நிறைந்த நோய்களை உருவாக்க வாய்ப்பிருக்கிறது என்பது தவிர இதனால் பெரும் ஆபத்து எதுவும் இல்லை.
ஆரோக்கியமாக இருந்து வரும் நபர்களுக்கு இன்ஃப்ளூயன்சா 7 முதல் 10 நாட்களில் குணமாகி விடும். வயதானவர்கள், உடல் எதிர்ப்புச் சக்தி குறைந்தவர்கள், நீண்ட நாள் இருதய, கிட்னி மற்றும் நுரையீரல் நோய் இருப்பவர்களுக்கு இன்ஃப்ளூயன்சா வைரஸ் மேலும் ஆபத்தானதாக மாறுவதற்குக் கூட வாய்ப்புகள் அதிகம்.

Posted in Advice, Antibody, bacterial, Bio, Care, Cold, Congestion, diagnosis, Doc, Doctor, Fever, Flu, Health, Illness, Immune, immunity, Infection, Influenza, medical, Medicine, Science, Shot, Sick, Symptoms, Transmission, Treatment, Viral, Virus, Wellness | Leave a Comment »

Ayurvedha Corner – Prof. S Swaminathan : Natural Medicines series – How to avoid Common Cold

Posted by Snapjudge மேல் மே 21, 2007

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: சளி பிடிக்காமல் இருக்க வழி!

பேராசிரியர் எஸ். சுவாமிநாதன்

கோடைக்காலம் முடிந்து குளிர்காலம் தொடங்கும் தருணத்தில் நீர்கோர்த்தல், தும்மல், மூக்கடைப்பு, மார்புச் சளி என்று வந்து படிப்படியாக இறுதியில் இருமலால் பாதிக்கப்படுகிறேன். எனக்கு வயது 80. இந்நோய் வருமுன் காக்க, ஆயுர் வேத மருத்துவம் கூறவும்.

வை.கார்த்திகேயன், புதுச்சேரி.

கோடைக்காலத்தில் சூரியனின் உஷ்ணத்தால் சூழ நிற்கும் காற்றுமண்டலமும் கொதிப்படையும். பூமியிலுள்ள தண்ணீர் வற்றும். நீர் வறட்சியால் காய்ந்த உணவுப் பொருள்களில் இனிமை குறைந்து கசப்பும் துவர்ப்பும் காரமும் மிகுந்து காணப்படும். இவற்றைச் சாப்பிடுவதால் மனித உடல் வறட்சியும் சூடும் மிகுந்து இளைத்துவிடும். கோடையில் ஏற்படும் நாவறட்சியைப் போக்க அளவுக்கு மீறி தண்ணீர் குடிப்பதும், குளிர்பானங்களைக் குடிப்பதாலும் அளவுக்கு மிஞ்சி வயிற்றில் தண்ணீர் சேரும். இதனால் உணவை ஜீரணம் செய்வதற்காக குடலிலும், இரைப்பையிலும் சுரந்துள்ள புளித்த திரவங்கள் நீர்த்து சக்தியற்றுவிடும். உண்ட உணவின் ஜீரணம் தடைபடுவதுடன் குடித்த குளிர்ந்த நீரும் ஜீரணமாகாமல் ஸ்தம்பித்து வயிற்றிலேயே நின்று வயிறு உப்பக் காரணமாகும். வயிற்றில் இதுபோன்ற நிலையில் தங்கும் தண்ணீர் உடலைக் கனக்கச் செய்து அசதி, தலையில் நீர்க்குத்தல், மார்புச் சளி, இருமல் முதலியவற்றை உண்டாக்கும்.

இந்த ஜல அஜீரணத்தை வளரவிட்டால் அது ஏற்படுத்தும் உபாதை அடுத்த பருவ காலங்களிலும் தொடர்ந்து நீங்கள் குறிப்பிடும் உபாதைகளால் தொல்லையைத் தரும்.

கடும் கோடையில் அதிகமாகத் தண்ணீரைக் குடிக்காமல் வாய் வறட்சி நீங்க குளிர்ந்த நீரால் வாயைக் கொப்பளிப்பது, முகம், கை, கால்களைக் குளிர்ந்த நீரால் கழுவிக் கொள்வது நல்லது. நீர்க்கோர்வை, மூக்கடைப்பு, தும்மல், மார்புச் சளி போன்றவற்றைத் தவிர்க்க,

*சுக்கு, கொத்தமல்லி விதை போட்டுக் காய்ச்சிய தண்ணீரை வெதுவெதுப்பாகக் குடிப்பது,

*சூடான பாலுடன் சிறிது வெல்லம் சேர்த்துச் சாப்பிடுவது,

*மோரில் வெல்லம் கலந்து சாப்பிடுவது நல்லது.

நீங்கள் குறிப்பிடும் உபாதை ஏற்பட மேலும் சில காரணங்களைக் குறிப்பிடலாம். அவை வருமாறு:

*தலையில் அதிகம் வியர்த்திருக்கும் நிலையில் உடனே குளிர்ந்த நீரில் குளிப்பது. அண்ழ் ஸ்ரீர்ர்ப்ங்ழ் காற்றைத் தலையில் படுமாறு வைத்து உபயோகித்தல்.

*நல்ல காற்றடக்கமுள்ள சூடான அறையில் வென்னீரில் குளித்துவிட்டு, உடனே குளிர்ந்த காற்றுள்ள அறையில் வந்து நிற்பது.

*உடலில் நல்ல வியர்வை இருக்கும் போது அது அடங்கும் முன்னரே குளிர்ந்த பானத்தைப் பருகுவது.

*குளித்த பிறகு ஈரமுள்ள தலையில் எண்ணெய் தடவிக் கொள்ளுதல்.

நீங்கள் சீதோஷ்ண சகிப்புத் தன்மையை வளர்த்துக் கொள்வதன் மூலம் நீர்க்கோர்வை வராமல் பார்த்துக் கொள்ளலாம். கோடையின் இறுதியில் ஆயுர் வேத மூலிகைத் தைலங்களாகிய அஸனபில்வாதி தைலம், அஸன மஞ்சிஷ்டாதி தைலம், அஸன ஏலாதி தைலம் போன்றவற்றில் ஒன்றை வாரமிருமுறையோ அல்லது தினமுமோ தலையில் தேய்த்து அரை மணி நேரம் ஊறிய பிறகு கொதித்து ஆறிய தண்ணீரில் குளிக்கவும். அதன்பிறகு ராஸ்னாதி சூரணத்தை உச்சந் தலையிலும், பிடரியிலும் தேய்த்துவிட்டுக் கொள்ளவும். ஜலதோஷம் ஏற்படாமலிருக்க இந்தச் சூரணம் உதவி செய்யும்.

உங்களுக்கு வயது 80-ஐ நெருங்கிவிட்டதால் உடலின் சகிப்புத் தன்மைக் குறைவால் ஏற்படும் இந்த உபாதையைத் தடுக்கவும் உடலுக்குப் பலம் தரக் கூடிய மருந்துகளையும் சாப்பிட வேண்டும். தாளீசபத்ராதி சூரணம் 5 கிராம், மஹாலக்ஷ்மி விலாஸரஸம் மாத்திரை, கற்பூராதிசூரணம் போன்றவற்றை மருத்துவரின் ஆலோசனைப்படி சாப்பிடவும்.

Posted in Alternate, Ayurveda, Ayurvedha, Blocked Nose, Cold, Disease, Doctor, Fever, Health, Healthcare, Homeopathy, Medicines, Natural, Prevention, Sneeze, Water | Leave a Comment »

Ayurvedha Corner – Prof. S Swaminathan : Natural Medicines series

Posted by Snapjudge மேல் மே 1, 2007

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: கத்தி, நெருப்பு, விஷம் போல் மருந்து!

பேராசிரியர் எஸ். சுவாமிநாதன்

என் மனைவிக்கு 56 வயதாகிறது. கடந்த டிசம்பர் மாதம் மூன்று நாட்கள் காய்ச்சல் இருந்தது. காய்ச்சல் குணமான பிறகு, அவள் கால் பாதங்கள் வீங்கி வலிக்கிறது என்கிறாள். மூன்று மாதங்களாக டாக்டரிடம் காட்டி மருந்து, ஊசி போட்டும் குணமாகவில்லை. நடக்க முடியாமல் வேதனைப்படுகிறாள். அவள் நல்ல உடல் நலம் பெற்று சுகத்தோடு இருக்க ஆலோசனை கூறவும்?

ஆர். வாசன், சிவகாசி.

காய்ச்சலை உடனடியாகக் குறைக்க உங்கள் மனைவி சாப்பிட்ட மருந்துகளின் செயலால் இந்நிலை ஏற்பட்டிருக்கலாம். நோயைத் தீர்ப்பதற்காக உள்ளே செலுத்தப்பட்ட மருந்து நோயாளியின் நோய்க்கு ஒத்ததாயிருந்தாலும், தேக வாகுக்கு ஒவ்வாததாயிருக்கலாம். அதுபோன்ற மருந்தின் சேர்க்கையை எதிர்க்கும் உடலின் சக்தி போதுமானதாக இல்லாதிருந்தால் அம்மருந்தே வேறு ஒரு நோய்க்குக் காரணமாகலாம். தன் வேலை முடிந்ததும் வெளியேறவேண்டிய அம்மருந்து உடலின் உள்ளே தங்கினால் அதன் விளைவாக உள்ளே நிகழும் ரஸôயன பௌதிக மாறுதல்கள் பயங்கர விளைவுகளை ஏற்படுத்துகின்றன.

மருந்து கத்திபோல், நெருப்பு போல், விஷம் போல் அறிந்து உபயோகிக்கப்பெற அமிருதமாக உதவும். அறியாமையால் முறை தவறி உபயோகிக்கப் பெற தீங்குகள் விளையும்.

காய்ச்சல் உள்ள நாட்களில் வயிற்றில் ஏற்படும் மப்பு நிலை, அஜீரண நிலையை உதாசீனப்படுத்தி இன்று பலரும் ப்ரட் டோஸ்ட், இட்லி, சட்னி என்றெல்லாம் சாப்பிடுகின்றனர். மருந்து காய்ச்சலை குறைத்துவிடும். பத்திய நிலை தேவையில்லை என்பது அவர்கள் எண்ணம். இதனால் சீற்றம் பெறும் வாயு கப தோஷங்கள் காலில் வலியையும் வீக்கத்தையும் ஏற்படுத்துகின்றன.

தங்களுடைய மனைவியின் விஷயத்தில் சாப்பிட்ட மருந்தின் கழிவுகளையும் குடல் தூய்மையை மாசுபடுத்திய தவறான உணவின் சேர்க்கையையும் வெளியேற்ற வேண்டிய நிலை தற்சமயம் ஏற்பட்டுள்ளது. இவ்விரு வேளைகளைச் செய்வதில் ஆயுர்வேத மருந்தாகிய சிலாஜது எனும் கண்மத பஸ்மமும், திரிபலா சூரணமும் உதவிடக் கூடும். திரிபலா சூரணம் 10 கிராம், 800 மிலி கஷாயத்துடன் 1 கேப்ஸ்யூல் கண்மதம் பஸ்மமும், மாலையில் இதுபோலவே கஷாயமும் கேப்ஸ்யூலும் வெறும் வயிற்றில் தொடர்ந்து 1 வாரம் சாப்பிட வீக்கம் வற்றி விட வாய்ப்பிருக்கிறது. இந்நாட்களில் பத்திய உணவாக புழுங்கலரிசியை சிறிது சிவப்பு காணும் வரை லேசாக வறுத்து 1 பங்கு, 20 பங்கு தண்ணீர் சேர்த்து, கால் பங்கு சுண்டும் வரை கொதிக்க விட்டு இறக்கிக் கொள்ளவும். பருக்கை நீக்கி, தெளிவாக சிறிது உப்பு கலந்து காலை, மாலை வெதுவெதுப்பாகக் குடிக்கவேண்டும். 5 கிராம் சுக்கு 1/2 லிட்டர் தண்ணீரில் போட்டு கொதிக்க விட்டு, வடிகட்டி குடிக்கப் பயன்படுத்தவேண்டும். அதிகநேரம் நின்று கொண்டு வேலை செய்யாமல், நிறைய ஓய்வு எடுக்கவேண்டும்.

இதுபோன்ற பத்திய உணவினால் நாக்கில் ருசியும், வயிற்றில் பசியும் மேம்படும். மருந்துகள் உடலின் உட்புறக் கழிவுகளை வெளியேற்றும். குடல் பகுதி தூய்மையான பிறகு ஆயுர்வேத மருந்தாகிய தசமூலஹரீதகீ எனும் லேஹ்யத்தை காலை, மாலை வயிற்றில் 10 கிராம் அளவு நக்கிச் சாப்பிட வீக்கம், வலி குறையும். சாப்பிடும் உணவு சூடாகவும், சரியான நேரத்திலும் சாப்பிடவேண்டும். தயிர், புளிப்புச் சுவை கொண்ட உணவுகளைத் தவிர்க்க வேண்டும். புனர்நவாஸவம் எனும் மருந்தை 30 மிலி காலை இரவு உணவிற்குப் பிறகு சாப்பிடலாம். இந்நாட்களில் நெருஞ்சி முள்ளைத் தூளாக்கி, சமம் கொள்ளு வறுத்துப் பொடித்துக் கலந்து துணியில் முடிந்து சட்டியில் சூடாக்கி, கால் வீக்கம் , வலி உள்ள பகுதிகளில் காலை, இரவு உணவிற்கு முன்பாக 1/2 மணி நேரம் ஒத்தடம் கொடுக்கலாம்.

காய்ச்சலின் சீற்றத்தை அடக்க, சாப்பிடப்பட்ட

மருந்துகளால் ஜீவாணுக்கள்,கிருமிகள் போன்ற ஜீவனுள்ள பொருள்களை அழிக்கும் மருந்து உடலில் ஜீவ இயக்கத்திற்காகத் திசுக்களில் தோன்றும் பாதுகாப்பான ஜீவாணுக்களையும் அழித்திருக்கக் கூடும். அதை ஈடுகட்ட புனர்நவாதி மண்டூரம் எனும் மாத்திரையை தங்கள் மனைவி மோர்சாதத்துடன் கலந்து சுமார் 14 முதல் 21 நாட்கள் வரை சாப்பிட வேண்டும்.

Posted in Alternate, Ayurveda, Ayurvedha, Ayurvedha Corner, Ayurvedic, Ayurvetha, Cleansing, Cold, Doctor, Fever, Food, Health, Healthcare, Medicine, Nutrition | 2 Comments »