Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Clubs’ Category

Ignoring the sports development opportunity in Southern TN: Why only Chennai & why just cricket?

Posted by Snapjudge மேல் ஓகஸ்ட் 9, 2007

தெரிந்தே செய்யும் தவறுகள்

தமிழகத்தைப் பொருத்தவரை விளையாட்டு அரங்கத்தில் நமது பங்களிப்பு எப்போதுமே இருந்து வந்திருக்கிறது. அகில இந்திய ரீதியில் கிரிக்கெட், ஹாக்கி, செஸ், டென்னிஸ் போன்ற விளையாட்டுகளில் நமது வீரர்கள் பிரமிக்கத்தக்க சாதனைகளைப் புரிந்துவந்திருக்கிறார்கள். இதற்கு முக்கியமான காரணம் அரசு தரும் ஊக்கம் என்பதைவிட, நமது இளைஞர்கள் மத்தியில் காணப்படும் ஆர்வம்தான்.

விளையாட்டுத் துறைக்கான தனி ஆணையம் செயல்படுவதுடன், கணிசமான அளவு நிதி ஒதுக்கீடும் மாநில அரசாலும் மத்திய அரசாலும் விளையாட்டுக்காக ஒதுக்கவும் செய்யப்படுகிறது. இத்தனை இருந்தும், கிராமப்புற நிலையிலிருந்து முறையாக விளையாட்டு வீரர்களை அடையாளம் கண்டு, அவர்களுக்குத் தொடர்ந்து ஊக்கம் அளித்து அகில இந்திய அளவில் எல்லா விளையாட்டுகளிலும் நமது வீரர்களை முன்னணியில் நிறுத்த இன்னும் ஏன் முடிவதில்லை என்கிற கேள்விக்கு, அரசும் விளையாட்டு சம்பந்தப்பட்ட ஆணையமும்தான் பதில் சொல்ல வேண்டும்.

எதிர்க்கட்சித் தலைவி ஜெயலலிதா குமரி மாவட்டத்தில் மத்திய அரசின் விளையாட்டுப் பயிற்சி மையம் அமைக்கும் திட்டம் நடவடிக்கை எடுக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டு விட்டதாகக் குற்றம்சாட்ட, அதற்கு பதிலளிக்கும் முகமாக, ஒரு கோடி ரூபாய் செலவில் இந்திய விளையாட்டு ஆணையத்தின் துணை மையம் திருநெல்வேலி மாவட்டத்தில் அமைய இருப்பதாகவும், அதற்கான பூர்வாங்கப் பணிகள் நடைபெறவுள்ளதாகவும் அறிவித்திருக்கிறார் முதல்வர் கருணாநிதி. வரவேற்கப்பட வேண்டிய விஷயம்.

விளையாட்டுத் துறையைப் பற்றிய மிகப்பெரிய குறைபாடு, சர்வதேசத் தரத்திலான விளையாட்டு அரங்கங்களும் பயிற்சிக்கூடங்களும் சென்னையில் மட்டுமே அமைந்திருக்கின்றன என்பதுதான். நெல்லையில் அமைய இருக்கும் இந்திய விளையாட்டு ஆணையத்தின் துணை மையம்போல, உலகத் தரம் வாய்ந்த தடகள மைதானங்கள், கிரிக்கெட் மைதானங்கள், கால்பந்து, கைப்பந்து, பூப்பந்து மற்றும் ஹாக்கி மைதானங்கள் போன்றவை தமிழகத்திலுள்ள அனைத்து மாநகராட்சிகளிலும் அமைய வேண்டியது அவசியம்.

விளையாட்டு என்பதே சென்னையை மட்டுமே மையமாகக் கொண்ட விஷயமாகி விட்டது. ஆனால், விளையாட்டு வீரர்களோ, மாவட்டங்களிலிருந்துதான் அதிகமாக உருவாகிறார்கள். பள்ளிக் கல்விக்கும் சுற்றுலாவுக்கும் தரப்படும் முக்கியத்துவம் விளையாட்டுத் துறைக்கும் அளிக்கப்பட வேண்டும் என்கிற கோரிக்கை நீண்ட காலமாகவே இருந்து வருகிறது. தனியார் கல்வி நிலையங்கள் பல, முறையான விளையாட்டுப் பயிற்சியாளர்களோ, மைதானமோ இல்லாமலே செயல்படுகின்றன என்பது அரசுக்குத் தெரிந்தும், இந்த விஷயத்தில் அரசு கண்மூடி மௌனம் சாதிப்பது ஏன் என்பது தெரியவில்லை.

இளைஞர்கள் மத்தியில், கிரிக்கெட் விளையாட்டிற்கு மிகப்பெரிய வரவேற்பு ஏற்பட்டிருப்பது மறுக்க முடியாத உண்மை. குக்கிராமம் வரை கிரிக்கெட்டின் பாதிப்பு நன்றாகவே தெரிகிறது. ஆனால், சென்னையைத் தவிர வேறு எந்த நகரிலும் சென்னையில் இருப்பதுபோல கிரிக்கெட் ஸ்டேடியம் இல்லையே, ஏன்?

சென்னையில், தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் கட்டுப்பாட்டில் சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானம் இருக்கிறது என்பது மட்டுமல்ல, இந்த மைதானம் சர்வதேசத் தரத்திலான மைதானம் என்பதும் உலகறிந்த உண்மை. அப்படி இருக்கும்போது, பழைய மகாபலிபுரம் சாலையில் கருங்குழிப்பள்ளம் கிராமத்தில் இன்னொரு கிரிக்கெட் ஸ்டேடியம் அமைக்க 50 ஏக்கர் நிலத்தை 30 ஆண்டுகளுக்கான குத்தகைக்குத் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்திற்குத் தமிழக அரசு வழங்க ஒப்புதல் அளித்திருப்பது ஏன்?

கோடிக்கணக்கில் பணமிருக்கும் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்திற்கு அரசு நிலம் அளித்து உதவியதற்குப் பதிலாக, திருச்சி, நெல்லை, மதுரை, கோவை அல்லது சேலத்தில் ஏன் ஒரு நல்ல கிரிக்கெட் மைதானத்தை அரசின் பராமரிப்பில் கட்டக் கூடாது? வேட்டி கட்டிய தமிழக முதல்வரால் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்திற்குள் நுழைய முடியாது என்பதாவது அவருக்குத் தெரியுமா? தெரிந்துமா இப்படியொரு தவறு நடந்திருக்கிறது?

——————————————————————————————————————————

விளையாட்டு ஆணையத்தின் கவனத்துக்கு…

வி. துரைப்பாண்டி

தமிழகத்தில் விளையாட்டு வீரர், வீராங்கனைகள் “உருவாக்கம்’ அரிதாகிவருவது, விளையாட்டு ஆர்வலர்களிடம் மிகவும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

“சாம்பியன்ஸ்’ மேம்பாட்டுத் திட்டம் உள்பட பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வரும் தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் (ஸ்போர்ட்ஸ் டெவலப்மென்ட் அத்தாரிட்டி ஆஃப் தமிழ்நாடு- எஸ்டிஏடி) இளம் வீரர்களை உருவாக்குவதிலும், அதற்கான பயிற்சியாளர்களை நியமனம் செய்வதிலும் கவனம் செலுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

“கேட்ச் தெம் யங்’ (இளமையில் தெரிந்தெடுத்தல்) எனும் பெயரில் முன்னர் செயல்பட்டுவந்த திட்டம் தற்போது இல்லை. அந்த குறைபாட்டால்தான் என்னவோ அண்டை மாநிலமான கேரளத்திலிருந்து வீரர், வீராங்கனைகளை கல்லூரிகள் “இறக்குமதி’ செய்யும் அவலம் ஏற்பட்டுள்ளதோ என்ற அச்சம் எழுகிறது.

வீரர், வீராங்கனைகளின் உருவாக்கம் குறைந்துபோனதற்கு நமது கல்வி முறையின் வளர்ச்சிகளைக் காரணமாகக் கூறும் அதிகாரிகளும் ஆர்வலர்களும், சர்வதேச அளவிலான போட்டிகளில் இந்தியா தோற்கும்போது “என்ன மோசமப்பா இது’ என ஆதங்கப்படுவது எந்த விதத்தில் நியாயம் எனத் தெரியவில்லை.

தமிழ்நாட்டில் வீரர், வீராங்கனைகள் திறமையை வெளிப்படுத்துவதற்கு வாய்ப்பளிக்கும் களமாக பெரும்பாலும் தலைநகரம் திகழ்கிறது. பெரும்பாலான போட்டிகள் இங்குதான் அரங்கேறுகின்றன. போட்டிகளை நடத்தும் கட்டமைப்பு வசதிகள் இருப்பது முக்கியமான காரணம் என்றாலும், அவற்றை சிறப்பாக நடத்துவதற்கு ஆதரவு (ஸ்பான்சர்கள்) அளிக்கும் முக்கிய நிறுவனங்களும் சென்னையில்தான் அதிகம் உள்ளன. ஆனால் லயோலா உள்ளிட்ட சென்னையில் உள்ள கலைக் கல்லூரிகளில் வீரர், வீராங்கனைகளுக்கான அட்மிஷன், தேக்கத்தை அல்லவா சந்தித்து வருகிறது?

கூடைப்பந்தாட்டம் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகளில் ஜாம்பவானாகத் திகழ்ந்த லயோலா, இன்று பொறியியல் கல்லூரிகளிடம் உதை வாங்கும் பின்னடைவைப் பெற்றுள்ளது. சென்னையிலேயே இப்படி என்றால் திருச்சி, மதுரை, கோவை, நெல்லை போன்ற நகர்களில் உள்ள கலைக் கல்லூரிகளின் நிலைமை நிச்சயம் பரிதாபமாகத்தான் இருக்கும். இதற்கு அப் பகுதியில் உள்ள கல்லூரிகளைக் குறை சொல்ல முடியாது. சிறுவயதிலேயே இனம்கண்டு வீரர், வீராங்கனைகளை ஊக்குவித்து விளையாட்டு ஆர்வத்தை வளர்க்க வேண்டியது அரசின் கடமை. அதற்கேற்ப திட்டங்களைச் செயல்படுத்த வேண்டும்.

திறமையான வீரர், வீராங்கனைகளுக்கு ஊட்டிவிடாத குறையாக போட்டி போட்டுக்கொண்டு என்னவெல்லாம் கொடுக்கமுடியுமோ அவ்வளவையும் இலவசமாகக் கொடுத்து தங்களைப் பிரபலப்படுத்தி வருகின்றன பொறியியல் கல்லூரிகள். சென்னையில் இது மாதிரியான தாக்கம் அதிகம். சில கல்லூரிகள் கேரளத்திலிருந்து நேரடியாக வீரர், வீராங்கனைகளை வரவழைத்து “திறமை’யை வெளி உலகுக்கு காட்டுகின்றன.

இதனாலேயே தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் செயல்பாடுகளை ஆராய்ந்து பார்க்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் 30 மாவட்டங்கள் உள்ளன. அனைத்திலும் ஓர் அதிகாரியின் கீழ் விளையாட்டு மன்றங்கள் உள்ளன. ஆனால் அங்கெல்லாம் போதுமான மைதானங்களோ, பயிற்றுநர்களோ இருக்கிறார்களா என்றால் இல்லை என்பதுதான் பெரும்பாலானோரின் பதிலாக இருக்கும். பின்னர் எப்படி இளைஞர்கள் இத் துறையை தேர்ந்தெடுக்க முடியும்?

முறையாகத் தொடங்கப்படும் திட்டங்கள், இடையில் தேக்கத்தை எட்டினால் அதைக் களைவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமே தவிர, திட்டத்தையே கைவிடுவது எவ்விதத்திலும் நல்லதல்ல. அம் மாதிரி கருதப்படும் திட்டங்களில் ஒன்றுதான் “கேட்ச் தெம் யங்’. அது செயல்பாட்டில் இல்லாததால்தான் கலைக் கல்லூரிகள், போதுமான வீரர், வீராங்கனைகள் இல்லாமல் இன்று விளையாட்டுக் கலையுணர்வு இழந்து போயுள்ளன.

வீரர், வீராங்கனைகளுக்கு மட்டுமின்றி அவர்களைத் தயார்படுத்தும் உடற்கல்வி இயக்குநர், உடற்கல்வி ஆசிரியர் ஆகியோருக்கும் விருதுகள் வழங்கி ஊக்குவிக்க 2003-04-ம் ஆண்டில் அப்போதைய அதிமுக அரசு முடிவு செய்து, அதற்கு “முதலமைச்சர் விருது’ எனப் பெயரிட்டது. ரூ. 1 லட்சம் ரொக்கம் மற்றும் பாராட்டுப் பத்திரம் அடங்கியது அந்த விருது.

அத் திட்டத்துக்கு உயிரூட்டும்விதமாக தற்போதைய அரசும் தகுதியானவர்களிடமிருந்து ஆண்டுதோறும் தனது இணையதளம் மூலம் விண்ணப்பிக்கக் கோரி வருகிறது. ஆனால் திட்டம் தொடங்கப்பட்டது முதல் இதுவரை யாருக்கும் அவ்விருது வழங்கப்படவில்லை. முதலாம் ஆண்டு விருதுக்குரியவர்கள் யார் என்பதுகூட முடிவாகி, ஆணையும் பிறப்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. அதற்கடுத்த ஆண்டுக்கும் உரியவர்களை அதற்கென அமைக்கப்பட்டுள்ள குழு இனம்கண்டுள்ளது. ஆனால் என்ன காரணத்துக்காகவோ இதுவரை விருதுகள் வழங்கப்படவில்லை.

வியர்வை சிந்தி உழைக்கும் தொழிலாளிக்கு அந்த வியர்வை காயும் முன்பு கூலியைக் கொடுக்க வேண்டும். இல்லையேல், அது விழலுக்கு இரைத்த நீராகத்தான் இருக்கும் என்பதை அதிகாரிகள் உணர வேண்டும்.

அதேபோல, பயிற்சியாளருக்கான என்.ஐ.எஸ். (நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஸ்போர்ட்ஸ்) பயிற்சி பெற்றவர்களுக்கும் வாய்ப்பு வழங்க வேண்டும். என்.ஐ.எஸ். பயிற்சி முடித்தவர்கள் சுமார் 200-க்கும் மேற்பட்டோர் தொழில்நுட்ப வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து வேலைக்காக தவம் கிடக்கின்றனர். தமிழகம் முழுவதும் விளையாட்டு மன்றங்களில் போதுமான பயிற்சியாளர்கள் இல்லாத குறையைப் போக்க அவர்களை ஏன் பயன்படுத்தக் கூடாது?

மொத்தத்தில் இது போன்ற பின்னடைவுகளால் பாதிக்கப்படுவது – எல்லோராலும் ரசிக்கப்படும் விளையாட்டுத் துறைதான். தேவை – எஸ்டிஏடி கவனம்.

Posted in 600028, Allocation, Asiad, Asset, athlete, athletics, Badminton, Basketball, Budget, Capital, Cars, Chennai, Chepauk, Chess, City, Clubs, CM, Corp, Corpn, Corporation, Cricket, Development, Districts, DMK, Economy, Football, Free, Funds, Game, Govt, Hockey, Jaya, Jayalalitha, Jayalalithaa, Jeya, Jeyalalitha, Kaniakumari, Kanniakumari, Kanniyakumari, Kanyakumari, Karunanidhi, Karunanidhy, Karunanidi, Karunanithi, Kovai, Land, League, MAC, Madras, Madurai, match, Matches, MCC, Metro, Needy, Nellai, Olympics, Op-Ed, Play, Players, Poor, Property, Rich, Salem, seat, Seating, Soccer, Sports, Stadium, Suburban, Tamil Nadu, TamilNadu, Tennis, Thiruchirapalli, Thiruchirappalli, Thirunelveli, TN, TNCC, Tour, Tourist, Track, Travel, Traveler, Trichy, Villages, Visit, Visitor, Voleyball, Watch, Wealthy | 1 Comment »

Vijay incites Kreedam movie clashes? – Ajith fan club vs Trisha admirers

Posted by Snapjudge மேல் ஜூலை 20, 2007

oLiyile: Review: Kireedam (MalayaLam)

பூனையாக இல்லாமல் போன சோகங்கள்: கிரீடம் பெண்ணீய விமர்சனம்

குரல்வலை: கிரீடம்

கிரீடம் (2007) « Manoranjitam

செல்வேந்திரன்: தல’ தப்புமா…?!

செப்புப்பட்டயம்: கிரீடம் திரைவ�

வெட்டிப்பயல்: கிரீடம் – முள் கிரீடமா?

ராசபார்வை…: கிரீடம்!

சற்றுமுன்…: சென்னையில் திரையிட அஜீத்தின் `கிரீடம்’ படம் ரூ.75 லட்சத்துக்கு விற்பனை

Blogeswari: KIREEDAM: ORU KIZHISAL

BlogsOfRaghs :: பல்லவி & Charanam

Welcome to Sify.com

MSN INDIA – கிரீடம் – விமர்சனம்

சிவபாலன்: இவர்களைத் திருத்தவே முடியாதா!?

சும்மா டைம் பாஸ் மச்சி…..: ‘தல’க்கு அட்டகாசமாக பொருந்துகிறது கிரீடம்!

தமிழ் பூக்கள்: அஜீத்க்கு கிரீடம் சூட்டுமா ‘கிரீடம்’?

Mottaippaiyan: கிரீடம் விமர்சனம்

‘கிரீடம்’ – பாக்ஸ் ஆபிஸ் ஹிட்! :Sutharsan

Muthu’s Rambling Blog: Kireedam – Not what it means

Ultimate Star – Ajith Kumar Fans Club: Kreedam climax – behind the scenes

Blog with a Difference: Kireedam – Ajith’s Crown

Kreedam – Ajith hurts his back: Shooting gets affected « Tamil News: முதுகுவலியால் படப்பிடிப்பு ரத்து: அஜீத்குமார் இன்று சென்னை திரும்புகிறார்- ஆஸ்பத்திரியில் மீண்டும் சிகிச்சை


அஜீத், திரிஷா ரசிகர்கள் மோதல்- தியேட்டர்களில் போலீஸ் குவிப்பு அஜீத், திரிஷா ஜோடியாக நடித்த கிரீடம் படம் இன்று ரிலீசானது. இதற்காக திரிஷா ரசிகர்கள் தியேட்டர்களில் கட்அவுட், பேனர் வைத்தனர். கொடி தோரணங்களும் கட்டினர்.அஜீத், ரசிகர்களும் போட்டி போட்டு பேனர் கட் அவுட் வைத்தார்கள். சில இடங்களில் திரிஷா, பேனர்கள் கிழிக்கப்பட்டன.திருவான்மிïரில் உள்ள ஒரு தியேட்டரில் அஜீத் ரசிகர்கள் 15 அடி உயர கட் அவுட் நிறுவினர். திரிஷா ரசிகர்களும் லாரியில் பேனர்களை கொண்டு வந்து இறக்கி தியேட்டரை சுற்றி வைத்தனர்.இதனால் இரு தரப்பு ரசிகர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். அஜீத் பேனர் வைக்க இடம் வேண்டும் என்று அவரது ரசிகர்கள் கோஷமிட்டனர். திரிஷா பேனர்கள் கிழிக்கப்பட்ட தகவல் அறிந்ததும் போலீசார் அங்கு விரைந்தனர். ரசிகர் களை சமரசம் செய்தார்கள்.இது போல் `கிரீடம்’ ரிலீசான அனைத்து தியேட்டர்களின் வாயில்களிலும் ரசிகர்கள் மோதிக் கொண்டார்கள்.

திரிஷா பேனர்களை கிழித்தவர்கள் பற்றி புகார் அளிக்குமாறு திரிஷா ரசிகர் மன்றத்தினரிடம் போலீசார் கேட்டனர். ஆனால் அவர் கள் புகார் எதுவும் அளிக்க வில்லை. இதனால் அஜீத் ரசிகர்களை கைது செய்யாமல் விரட்டினர்.

அஜீத் ரசிகர் மன்ற தலைவர் கதிர் இது பற்றி கூறும் போது திரிஷா ரசிகர்கள் தமிழ்நாடு முழுவதும் மொத்தமே 5 ஆயிரம் பேர்தான் உள்ளனர். ஆனால் அஜீத் மன்றத்தில் 15 லட்சம் பேர் இருக்கிறார்கள். தமிழகத்தில் நடிகைகளுக்கு கட் அவுட் வைக்கும் பழக்கம் இல்லை. ஆனால் திரிஷா ரசிகர்கள் இடங்களை ஆக்கிர மித்து கட்அவுட் வைத்தனர். அஜீத் பேனர் வைக்க இடம் இல்லாமல் செய்து விட்டனர் என்று குறை கூறினார்.

திரிஷா ரசிகர் மன்ற தலைவி ஜெசி கூறும் போது சம்திங் சம்திங் படத்துக்கே நாங்கள் திரிஷாவின் பேனர் வைத் தோம். உதிரம் கொடுப்போம், உயிர்களை காப்போம், புகையிலை தடுப்போம், புற்று நோய் ஒழிப்போம் என்ற வாசகங்கள் அடங்கிய சுவரொட்டிகளைத்தான் நாங்கள் ஒட்டியுள்ளோம். புற்று நோய் தீமைகளை பொதுமக்களுக்கு விளக்கும் ஒரு விழிப்புணர்வாகத்தான் இந்த பேனர்களை அமைத்தோம். அவற்றை கிழித்து விட்டனர். என்று வருத்தப்பட்டார்.

அஜீத், திரிஷா ரசிகர்கள் மோதலை தொடர்ந்து கிரீடம் ரிலீசாகும் தியேட்டர் களில் இன்று போலீசார் குவிக்கப்பட்டனர். அஜீத், திரஷா பேனர்கள் கிழிக்கப்ப டாமல் கண்காணித்தனர்.
—————————————————————————————————————
ரசிகர்கள் மோதலின் பின்னணி

23 ஜூலை 2007

வழக்கமாக எதிரெதிரே இருக்கும் கதாநாயகர்களின் ரசிகர்களுக்கிடையேதான் பிரச்சினை ஏற்படும். ஆனால் வழக்கத்துக்கு மாறாக நடிகை த்ரிஷாவின் ரசிகர் மன்றமும் அஜீத்தின் ரசிகர் மன்றமும் முட்டிக் கொண்டிருக்கிறது.

`கிரீடம்’ படம் ரிலீஸை தொடர்ந்து சென்னை ஜெயந்தி தியேட்டரில் த்ரிஷா ரசிகர்கள் வைத்த பேனரை அஜீத் ரசிகர்கள் அகற்றச் சொல்ல பிரச்சினை எழுந்திருக்கிறது.

த்ரிஷா ரசிகர் மன்ற தலைவி ஜெஸி, நாங்கள் நல்ல நோக்கத்திற்காக மன்றம் வைத்திருக்கிறோம். ரத்ததானம், புற்றுநோய் விழிப்புணர்ச்சி ஆகியவற்றை ஏற்படுத்தவே பேனர் வைத்தோம் என்றார்.

ஆனால் அஜீத் ரசிகர் மன்ற தலைவர் தேவா, இது நடிகர் விஜய்யின் தூண்டுதலால்தான் த்ரிஷாவின் பேனரை வைத்திருக்கிறார்கள் என்றார்.

விஜய், த்ரிஷா நடிக்கும் படம் வெளியாகும் தியேட்டரில் த்ரிஷா பேனரை வைக்கச் சொல்லுங்கள். விஜய் ரசிகர்கள் விட்டுவிடுவார்களா பார்ப்போம் என்று கொதித்து போய் பேசுகிறார்.

இருதரப்பும் இப்படி முட்டிக்கொள்ள அஜீத்தோ மஞ்சகாமாலையால் பாதிக்கப்பட்டு ரெஸ்ட் எடுத்துக் கொண்டிருக்கிறார்.

—————————————————————————————————-

குமுதம் ரிப்போர்ட்டர்

29.07.07 ஹாட் டாபிக்

அடித்துக் கொண்ட அஜீத் – த்ரிஷா ரசிகர்கள்

– கிரீடத்தால் வந்த கிறுகிறு மோதல்

இரண்டு கதாநாயகர்களின் திரைப்படங்கள் ஒரே நாளில் ரிலீஸானால், அன்றைய தினம் மேற்படி இரு ஹீரோக்களின் ரசிகர்களும், முட்டி மோதிக் கொள்வது ரொம்பவும் சகஜமான விஷயம்.

ஆனால், ஒரே படத்தினுடைய நாயகனின் ரசிகர்களும் நாயகியின் ரசிகைகளும் கட்_அவுட் வைப்பதில் முட்டல் மோதலில் ஈடுபடுவது கொஞ்சம் புதுசுதான்.

அஜித்_த்ரிஷா நடித்து வெளியாகியுள்ள ‘கிரீடம்’ பட ரிலீஸின் போதுதான் இப்படியரு களேபரம் அரங்கேறியிருக்கிறது. த்ரிஷா நற்பணி மன்றத்தின் சார்பில் ஆங்காங்கே போஸ்டர் மற்றும் கட்அவுட்கள் வைக்க முயன்றபோது, அஜித் ரசிகர்கள் அதைத் தடுத்ததோடு, கிழித்து, அடித்தும் விரட்டி இருக்கிறார்கள்.

என்ன நடந்தது என்பதை நம்மிடம் விரிவாக விவரித்தார் த்ரிஷா நற்பணி மன்றத் தலைவி ஜெஸி.

‘‘ஆரம்பத்தில் நற்பணி மன்றம் அமைத்து பல நல்ல விஷயங்களைச் செய்ய முடிவெடுத்த நானும், என் சகோதரி எமியும் எங்கள் நற்பணிக்கு த்ரிஷா பெயரைப் பயன்படுத்த ஆசைப்பட்டோம். சில காலத்துக்கு முன்பு த்ரிஷா பற்றி மீடியாக்களில் வரும் செய்திகள் எல்லாம் தப்புத் தப்பாக இருந்தன. உண்மையில் அவர் குழந்தை மனம் படைத்தவர் என்பதை நாங்கள் நேரில் பழகும்போது தெரிந்து கொண்டோம். இங்குள்ள முன்னணி நாயகர்கள் பலருக்கு இல்லாத சமூக அக்கறை த்ரிஷாவுக்கு இருந்தது.

எங்களின் ஆர்வத்தைப் பாராட்டிய த்ரிஷாவிடம் புற்றுநோயின் கொடுமையைப் பற்றித் தெளிவாக எடுத்துச் சொன்னோம். எய்ட்ஸை கட்டுப்படுத்த உலக நாடுகள் பல கோடி மானியம் தருகின்றன. ஆனால் அதைவிட மோசமான நோயான புற்றுநோயை ஒழிக்கவும் அதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவவும் உலக சுகாதார மையம் மட்டுமே ஓரளவு உதவி செய்கிறது.

இந்த விவரங்களை த்ரிஷாவிடம் சொல்லி, நாம் புகையிலை மற்றும் புகைப் பழக்கத்தை எதிர்த்து பிரசாரம் செய்யலாமா என்று கேட்டதும், சந்தோஷமாக சம்மதம் தெரிவித்தார். அத்துடன் நேரம் கிடைக்கும் போதெல்லாம் அடையாறு புற்றுநோய் மருத்துவமனைக்கு வந்து, அங்குள்ள நோயாளிகளுக்கு ஆறுதல் சொல்ல விரும்பி அப்படியே செய்தார்.

எங்கள் மன்றம் ஆரம்பித்து ஒன்றரை வருடம்தான் ஆகிறது. இதுவரை 15 அனாதைக் குழந்தைகளைத் தத்தெடுத்து வளர்க்க ஆரம்பித்துள்ளோம். சுமார் பத்து மாணவர்களின் படிப்புச் செலவை நாங்கள் ஏற்றுக் கொண்டுள்ளோம். மேலும், திருவண்ணாமலை மற்றும் தூத்துக்குடியில் ஆதரவற்றோர் இல்லம் கட்ட இடம் வாங்கிப் போட்டிருக்கிறோம்.

இந்நிலையில், த்ரிஷா நடித்து வெளியாகும் படங்களின் போஸ்டர் மற்றும் பேனர்களில் புகையிலைக்கு எதிரான வாசகங்களைச் சேர்த்து வாழ்த்துத் தெரிவிக்க விரும்பினோம். த்ரிஷா நடித்து வெளியான ‘சம்திங் சம்திங்’ படம் வெளியானபோது, எங்கள் மன்றத்தின் சார்பில் முதன் முதலாக சில தியேட்டர்களில் கட் அவுட் வைக்கப் போனோம். இதற்கு ஜெயம் ரவி ரசிர்கள் எதிர்ப்புத் தெரிவித்தார்கள். நாங்கள் ஒட்டிய போஸ்டர் மீது ஜெயம் ரவி போஸ்டரை ஒட்டினார்கள். நாங்கள் உடனடியாக ஜெயம் ரவியின் அப்பாவிடம் போய் முறையிட்டோம். அவர் பேசி ரவியின் ரசிகர்களை சமாதானப்படுத்திவிட்டார்.

அதன்பிறகு இப்போது அஜித்துடன் த்ரிஷா நடித்த ‘கிரீடம்’ படம் வெளியான போதும் பெரும் சலசலப்பை ஏற்படுத்திவிட்டார்கள். கட் அவுட்டில் இருந்த எங்கள் மன்ற செல்போன் நம்பரில் பேசிய அஜித் ரசிகர்கள், த்ரிஷா பற்றி படுமட்டமாகப் பேசினார்கள். சில இடங்களில் எங்களைத் தாக்கியும் காயப்படுத்தினார்கள்.

முழுக்க முழுக்க சமுதாய விழிப்புணர்வு நோக்கில் செயல்படும் எங்களை அவமானப்படுத்திவிட்டதால் அப்செட் ஆகிவிட்டோம்!’’ என்றார் வேதனையுடன்.

நடந்த விவகாரம் பற்றி அஜித் தரப்பைத் தொடர்பு கொண்டு விளக்கம் கேட்டபோது, ‘‘நான் சினிமாவுக்கு வந்து பதினைந்து ஆண்டுகள் முடிந்துவிட்டன. இதுவரை என்னாலோ என் ரசிகர்களாலோ யாருக்கும் எந்தத் தொந்தரவும் ஏற்பட்டதில்லை. அதிலும் என் ரசிகர்கள் முழு கட்டுப்பாட்டுடன் எதிலும் எல்லை மீறாதவர்களாகவே வளர்ந்தவர்கள். ‘நான் கடவுள்’ படத்திற்காக கமிட் ஆகி, பாலாவால் ஏற்பட்ட பிரச்னை பற்றி குமுதம் ரிப்போர்ட்டரில் வந்த செய்தியைப் படித்துக் கொந்தளித்த என் ரசிகர்கள், எங்கேயாவது பிரச்னையை ஏற்படுத்தினார்களா? இல்லையே! அப்படிப்பட்டவர்கள் த்ரிஷா மன்றத்தினரைப் புண்படுத்தினார்கள் என்பதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது. என் ரசிகர்கள் பெயரில் வேறு யாரோ செய்த சில்மிஷத்தை அவர்கள் தவறாகப் புரிந்து கொண்டிருக்கக்கூடும்.

இப்போது வெளிவந்து நன்றாக ஓடிக்கொண்டிருக்கும் ‘கிரீடம்’ பட தியேட்டர்கள் சிலவற்றில், விஷமிகள் சிலர் போய் கோரஸாக தொடர்ந்து குரல் எழுப்பி பார்வையாளர்களுக்குத் தொந்தரவு கொடுத்திருக்கிறார்கள். அவர்களை தியேட்டர் ஊழியர்கள் பிடித்து விசாரித்த தகவல் கிடைத்ததும், ‘யாரோ அவர்களைத் தூண்டிவிடுகிறார்கள். பாவம், விட்டு விடுங்கள்’ என்றேன். அதேபோல்தான் த்ரிஷா மன்றத்தினர் கூறுவதையும், பெரிதுபடுத்தாதீர்கள்’’ என்று அஜித் கூறியதாகச் சொன்னார்கள்.

இதையடுத்து த்ரிஷா தரப்பை அறிய அவரிடம் பேசிய போது, ‘‘இந்த ஃபீல்டில் ஹீரோவுக்கு இணையாக எந்த ஹீரோயினும் இருக்க முடியாது என்பது எனக்கு நன்றாகத் தெரியும். ஃபீல்டில் இருக்கும் குறுகிய காலத்தில் ஏதாவது நல்லது செய்யவேண்டும் என்று யோசித்துச் செயல்படும் என் ரசிகர்களை யாருமே புரிந்து கொள்ளவில்லை.

சம்பந்தப்பட்ட படத்திற்கான வாழ்த்துச் செய்தியுடன் விழிப்புணர்வு வாசகங்களைச் சேர்த்து பேனர் வைக்க ஆசைப்பட்டோம். அதற்கு அஜித் ரசிகர்கள் எதிர்ப்புத் தெரிவித்ததும் எங்கள் கட்அவுட்டை எடுத்துவிட்டோம். இனி, இது போன்ற பிரச்னை வராமல் தடுக்க சம்பந்தப்பட்ட ஹீரோக்களுடன் நேரில் பேசலாம் என்று முடிவெடுத்தி ருக்கிறேன்!’’ என்றார் த்ரிஷா.

இவர்களின் விவகாரம் இப்படிப் போய்க்கொண்டிருக்கையில், நடிகைகளை இங்குள்ள நடிகர்கள் நசுக்கப் பார்க்கிறார்கள் என்ற குற்றச்சாட்டும் எழ ஆரம்பித்துவிட்டது.

பெயர் கூற விரும்பாத ஒரு ஹீரோயினியிடம் பேசும்போது, ‘‘கோலிவுட்டைப் பொறுத்தவரை எல்லா ஹீரோயின்களையும் டம்மியாகப் பார்ப்பதே இங்குள்ள ஹீரோக்களின் போக்காக இருக்கிறது. சூப்பர் ஸ்டாரின் ‘சிவாஜி’ படத்தில்கூட ஓர் அழகான ஸ்ரேயாவும் இருப்பதால்தான் ரசிக்கிறார்கள். ஆனால், ஸ்ரேயா பற்றி யாருமே பாராட்டி கருத்துச் சொல்வதில்லை. இது ஆணாதிக்கம் மட்டுமல்லாமல் அதற்கும் மேலானது என்றுதான் சொல்ல வேண்டும்!’’ என்றார்.

இதற்கு மறுப்புத் தெரிவித்து நம்மிடம் பேசிய பிரபலமான ஹீரோ ஒருவர், ‘‘கோலிவுட்டைப் பொறுத்தவரை ஹீரோக்கள்தான் எல்லாமே. அவர்களை வைத்துத்தான் ஒட்டுமொத்த வியாபாரமும் நடக்கிறது. ஒருபோதும் ஹீரோயின் தனித்து ஜெயிக்க முடியாது. அதைப் புரிந்து கொண்டு த்ரிஷா போன்ற நடிகைகள் அடக்கி வாசிப்பது அவர்களுக்கு நல்லது’’ என்றார் காட்டமாக.

இப்படி ஆளாளுக்குச் சொன்ன விஷயங்களைப் பற்றி குஷ்புவிடம் பேசி கருத்துக் கேட்டபோது, ‘‘நடந்த சம்பவங்களுக்கு அஜித் அல்லது த்ரிஷா காரணமாக இருக்க மாட்டார்கள். அவர்கள் பெயரை வைத்து யாரோ சிலர் செய்த கலாட்டாவால் ஒட்டுமொத்த கோலிவுட்டிற்கு எந்தக் கேடும் வந்து விடாது.

அஜித்திற்கு இணையாக அல்லது போட்டியாக த்ரிஷா ஒருபோதும் ஆகமுடியாது என்பதை த்ரிஷாவே புரிந்து வைத்திருப்பார். ஹீரோவின் லெவல் வேறுதான். என்றாலும் ஹீரோயின் இல்லாமல் எந்த ஹீரோவாவது ஒரு படமெடுத்து வெற்றியடைய வைக்க முடியுமா என்பதையும் யோசிக்க வேண்டும்!’’ என்றார் கூலாக. ஆக கிரீடம், கோலிவுட்டில் ஒரு புது சர்ச்சைக்கு முடி சூட்டியிருக்கிறது. ஸீ

– வி.குமார்

———————————————————————————————————
அஜீத் சப்-இன்ஸ்பெக்டர் ஆகிறார்- மாற்றப்பட்ட `கிரீடம்’ கிளைமாக்ஸ் கதை

அஜீத்குமார் நடித்த “கிரீடம்” படம் தற்போது வெளியாகி ஓடிக் கொண்டி ருக்கிறது.

இதில் அஜீத் ஜோடியாக திரிஷாவும் தந்தையாக ராஜ் கிரணும் நடித்துள்ளனர்.

போலீஸ் ஏட்டு கேரக்டரில் நடிக்கும் ராஜ்கிரண் மகன் அஜீத்தை போலீஸ் சப்- இன்ஸ்பெக்டராக்க கனவு காண்கிறார். உடற்பயிற்சி யெல்லாம் கற்றுக் கொடுத்து போலீஸ் வேலைக்கு தகுதி யாக்குகிறார்.

போலீஸ் வேலைக்கான `இண்டர்விï’வில் அஜீத்தும் தேர்வாகிறார். ஆனால் திடீர் திருப்பமாக அஜீத் ஒரு தாதாவுடன் மோதி ரவுடி யாகிறார். கிளைமாக்சில் தாதாவை கொன்று விட்டு ஜெயிலுக்கு போகிறார்.

இந்த கிளைமாக்ஸ் அஜீத் ரசிகர்கள் இடையே அதி ருப்தியை ஏற்படுத்தியது. விமர் சனங்களும் கிளம்பின.

இதையடுத்து கிளைமாக்ஸ் மாற்றப்பட்டுள்ளது. பத்திரிகை விமர்சனங்கள், பொது மக்களின் கோரிக்கையை ஏற்று கிளைமாக்ஸ் மாற்றப்பட்டதாக பட அதிபரும், நடிகருமான கே.பாலாஜி தெரிவித்தார். மாற்றப்பட்ட கிளைமாக்ஸ் கதை வருமாறு:-

தாதாவை அஜீத் கொன்ற தும் போலீஸ் சப்- இன்ஸ் பெக்டராகும் கனவு தவிடு பொடியாகி விட்டதை உணர்ந்து அஜீத் அழும் காட்சி கள், பிறகு அஜீத்தை ராஜ் கிரண் கைது செய்யும் காட்சி கள் நீக்கப்பட்டுள்ளன.

தாதாவை கொன்றதும் பின்னணியில் கோர்ட் சீன் குரல் சேர்க்கப்பட்டுள்ளது. அஜீத் சட்டத்துக்கு முன் குற்றவாளியாக இருந்தாலும் கொல்லப்பட்டவர் கிரிமினல் என்பதை கருத்தில் கொண் டும் பொதுமக்கள் ணீகோரிக் கைகளை ஏற்றும் அவருக்கு பொதுமன்னிப்பு வழங்கப் படுகிறது. அவரை போலீஸ் வேலையில் சேர்த்துக் கொள்ளவும் கோர்ட் பரிந் துரைக்கிறது என்று நீதிபதி குரல் எதிரொலிக்கிறது.

பிறகு அஜீத் சப்- இன்ஸ்பெக்டர் உடையுடன் வருகிறார். அவரை பார்த்து ராஜ்கிரண் `சல்ïட்’ அடிக் கிறார். கனவெல்லாம் நன வாதே என்ற பாடல் ஒலிக்க படம் முடிகிறது.

ஒரு படம் திரைக்கு வந்து ஓடிக் கொண்டிருக்கும் போது `கிளைமாக்ஸ்’ காட்சிகள் மாற்றப்படுவது அபூர்வ மான விஷயம் என்பது குறிப்பிடத் தக்கது. இதை ரசிகர்கள் வர வேற்றுள்ளனர்.

Posted in Actor, Actress, Admirer, Ajeeth, Ajith, Ajithkumar, Appreciation, Ardent, Asin, Banner, Burn, Chandrasekar, Chandrasekhar, Cinema, clash, Clubs, Craze, Cut-out, Cutout, Defame, Devotee, Effigy, Enthusiast, Fanatic, Fans, Films, Flag, Freak, Hoarding, Incite, Jassy, Jessie, Kireedam, Kiridam, Kreedam, Kridam, Love, Maniac, Movies, Nut, Passion, Protest, SA Chandrasekar, SA Chandrasekhar, Shoba, Shobha, Soorya, Star, support, Supporter, Surya, Tamil, Tamil Actor, Tamil Actors, Tamil Actress, Tamil Actresses, Tamil Cinema, Tamil Film, Tamil Films, Tamil Movie, Tamil movie producer, Tamil Movies, Tamil Music, Tamil Nadu, Tamil News, Tamil Padam, Tamil Pictures, Tamil Stars, Tamil Theater, Tamil Theatres, Thala, Thrisha, Torn, Trisha, Vijai, Vijay, Zealot | 1 Comment »

Rajni’s ‘Sultan’ trailer screened with ‘Sivaji – The Boss’

Posted by Snapjudge மேல் ஜூன் 14, 2007

“சிவாஜி’ திரையிடும் தியேட்டர்களில் ரஜினியின் “சுல்தான்’ பட ட்ரெய்லர்
sultan sivaji trailer rajni images

நடிகர் ரஜினிகாந்தின் இளைய மகள் செüந்தர்யா இயக்கியுள்ள அனிமேஷன் படம் “சுல்தான் த வாரியர்’. ரஜினி படங்களில் இடம்பெறுவது போன்ற காமெடி, ஆக்ஷன் காட்சிகளை உள்ளடக்கி உருவாக்கப்பட்டுள்ள இந்த கார்ட்டூன் சினிமாவுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

விரைவில் வெளியாகவுள்ள இந்தப் படம் தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் ட்ரெய்லர் “சிவாஜி’ படம் வெளியாகும் தியேட்டர்களில் திரையிடப்படுகிறது.

இதுபற்றி செüந்தர்யா ரஜினிகாந்த் பேசுகையில் “”இந்த “சுல்தான்’ படம் ஒரு துவக்கம்தான். ரஜினிகாந்த் படம் என்றால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ரசிக்கிறார்கள். அனிமேஷன் படம் என்றாலும் ஒரு திரைப்படத்துக்குரிய அனைத்து விஷயங்களும் இதில் உள்ளன. அனைத்துத் தரப்பினரின் எதிர்பார்ப்புகளையும் இந்தப் படம் நிறைவேற்றும்” என்றார்.

இந்த கார்ட்டூன் படத்தை ஆட்லேப்ஸ் நிறுவனமும், ஆச்சர் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளன.

———————————————————————————-

30 வருடத்தில் பார்க்காத கூட்டம் `சிவாஜி’ படத்துக்கு ரூ.2 1/2 கோடி வசூல்: அபிராமி ராமநாதன் பேட்டி

சென்னை, ஜுன். 19-

ரஜினியின் சிவாஜிபடம் கடந்த 15-ந்தேதி ரிலீசானது. தியேட்டர்களில் படத்தை காணதினமும் கூட்டம் அலைமோதுகிறது. முன்பதிவு முன் கூட்டியே முடிந்து விட்டதால் பலர் டிக்கெட் கிடைக்காமல் திரும்புகின்றனர். `சாப்ட்வேர்’ கம்பெனிகள் 1000, 2000 என்று டிக்கெட்களை முன்பதிவு செய்துள்ளன.

இதனால் சாதாரண மக்களால் இன்னும் படம் பார்க்க முடியவில்லை. 10 ரூபாய் டிக்கெட்டுகளுக்கு முன் பதிவு கிடையாது என்பதால் அந்த டிக்கெட்டுக்காக இரவு 12 மணிக்கு தியேட்டர்களில் கிïவில் நிற்கின்றனர். மறுநாள் காலை தான் டிக்கெட் வழங் கப்படுகின்றன. விடிய விடிய கிïவில் சளைக்காமல் நிற் கின்றனர்.

திரையுலக வரலாற்றில் சமீப காலங்களில் இது போன்ற கூட்டங்களை பார்த்ததில்லை என்கின்றனர் சினிமா பிரமுகர்கள். வசூலிலும் சிவாஜி சக்கை போடு போடுகிறது.

சென்னையில் சத்யம், சாந்தம், ஆல்பர்ட், தேவி, மெலோடி, அபிராமி, அன்னை அபிராமி, பால அபிராமி, உதயம், சூரியன், ஐநாக்ஸ், ஏ.வி.எம். ராஜேஸ்வரி, கமலா, பாரத், மகாராணி ஆகிய 15 தியேட்டர்களில் `சிவாஜி’ ஓடு கிறது. அனைத்திலும் தினமும் 4 காட்சிகள் திரையிடப்படுகின் றன. வருகிற 25-ந்தேதி வரை இந்த தியேட்டர்களில் டிக்கெட் இல்லை. அனைத்து காட்சிகளும் முன்பதிவு செய்யப்பட்டிருப்பதாக சென்னை நகர சிவாஜி பட விநியோகஸ்தர் அபிராமி ராமநாதன் மாலைமலர் நிருபரிடம் கூறினார்.

மேலும் அவர் கூறியதா வது:-

சிவாஜி படம் 14-ந்தேதி இரவு சிறப்பு காட்சியாக திரையிடப்பட்டது. 15-ந்தேதி முதல் தினமும் 4 காட்சிகள் திரையிட்டு வருகிறோம். சென்னையில் 15 தியேட்டர் களிலும் ஒரு காட்சிக்கு 15 ஆயிரம் பேர் பார்க்கின்றனர். ஒருநாளைக்கு 75 ஆயிரம் பேர் பார்க்கிறார்கள். இது வரை சுமார் 2 லட்சத்து 70 ஆயிரம் பேர் படம் பார்த்துள்ளனர். அடுத்த வாரம் திங்கட்கிழமை வரை முன்பதிவு செய்யப் பட்டுள்ளது. எந்த தியேட்டரி லும் டிக்கெட் இல்லை.

என் 30 வருட அனுபவத் தில் அபிராமி தியேட்டரில் 207 படங்கள் 100 நாட்கள் ஓடியுள்ளன. 45 படங்கள் வெள்ளி விழா கண்டுள்ளன. அவற்றில் ஒரு படத்துக்கு கூட இவ்வளவு கூட்டத்தை பார்த்த தில்லை. முன் பதிவுக்காக இப்படிப்பட்ட நீண்ட கிïவையும் கண்ட தில்லை.

குடும்பம் குடும்பமாக வருகிறார்கள். இளைஞர்கள், பெரியர்கள், குழந்தைகள், பெண்களான அனைவரையும் ஒரு சேர பார்க்க முடிகிறது. சிவாஜி படத்துக்குத்தான். தியேட்டர்களுக்கு இதுவரை வராதவரெல்லாம் வரு கிறார்கள்.

சிவாஜி மூலம் தமிழ் சினிமாமறுபிறவி எடுத்துள்ளது.

சென்னை தியேட்டர்களில் சிவாஜி ரிலீசாகி 4 நாட்களில் ரூ.1 கோடிக்கு மேல் வசூலாகியுள்ளது. முன் பதிவான 10 நாட்களுக்கும் 2 கோடியே 40லட்சம் வசூலாகி உள்ளது.

படம் பார்த்தவர்கள் திரும்ப திரும்ப வருகிறார்கள். அதிக நாட்கள் இந்த படம் ஓடும்.

இவ்வாறு அபிராமி ராமநாதன் கூறினார்.

Posted in Abiraami, Abirami, Action, Adlabs, Animation, Archer, Area, ARR, Availability, Background, Biz, Black, Cinema, Clubs, Collections, Comedy, Counter, Deals, Fans, Films, Loss, Money, Movies, Mystery, Preview, Production, Profits, Rahman, Rajini, Rajiniganth, Rajinikanth, Rajni, Rajniganth, Rajnikanth, Re-recording, Records, Rehman, Rental, revenue, sales, Soundarya, Soundharya, Sountharya, Sowndharya, Sultan, Tickets, trailer, Transactions, Updates, Voice, Warrior | 8 Comments »

Dance Bars Reopened – Puthuchery Hotel Clubs to benefit

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 13, 2006

புதுச்சேரி ஹோட்டல்களில் நடன நிகழ்ச்சி நடத்த உயர் நீதிமன்றம் அனுமதி

சென்னை, அக்.13: புதுச்சேரி ஹோட்டல்களில் நடன நிகழ்ச்சியை நடத்த லைசன்ஸ் வழங்கலாம் என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது.

சில ஹோட்டல்களுக்கு வழங்கப்பட்டிருந்த லைசன்ûஸ புதுச்சேரி அரசு புதுப்பிக்க மறுத்துவிட்டது. புதிய லைசன்ஸ் கேட்போரின் விண்ணப்பத்தையும் நிராகரித்துவிட்டது.

இதை எதிர்த்து ஹோட்டல் உரிமையாளர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்தனர்.

புதுச்சேரி அரசின் உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது.

இதை எதிர்த்து புதுச்சேரி அரசு அப்பீல் மனு தாக்கல் செய்தது. நீதிபதிகள் பி.சதாசிவம், எஸ்.மணிகுமார் ஆகியோர் இந்த அப்பீல் மனுவைத் தள்ளுபடி செய்தனர்.

தீர்ப்பு விவரம்:

பாரம்பரிய நடனம் உள்பட இந்திய நடன நிகழ்ச்சிகளை முழுவதுமாக தடை செய்வது சட்ட விரோதம். அரசமைப்புச் சட்டத்தின் 19 (1) பிரிவுக்கு இது எதிரானது. அதே நேரத்தில் நடன நிகழ்ச்சிகள் ஆபாசமானதாக இருந்தால் அதை போலீஸôர் அனுமதிக்கக் கூடாது.

ஒரு சில இடங்களில் ஆபாச நடனம் நடத்தப்பட்டதால், அனைத்து நடன நிகழ்ச்சிகளுக்கும் தடை விதிக்கக் கூடாது. இது போன்று தடை விதிக்க சட்டம் இயற்றப்படாத நிலையில், அதிகாரிகளே இத்தகைய உத்தரவை பிறப்பிக்க முடியாது. நடன நிகழ்ச்சி நடத்தும் லைசன்ûஸ யாராவது தவறாக பயன்படுத்தினால் அந்த லைசன்ûஸ போலீஸôர் ரத்து செய்யலாம் என்று தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

Posted in Bars, Clubs, Court, cultural conditioning, girls, Hotel, License, moral policing, Nude, Order, Police, Pondicherry, pondichery, Pondycherry, prostitution, Puthuchery | Leave a Comment »