Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Citi’ Category

Padma Vibhushan for Pranab, Ratan Tata, Sachin; no Bharat Ratna for seventh year

Posted by Snapjudge மேல் ஜனவரி 25, 2008

பிரணாப், டாடா, டெண்டுல்கருக்கு பத்மவிபூஷண் விருது

சென்ற வருடம்: Padma Vibooshan, Padma Bhooshan, Padmashree awards announced « Tamil News: “பொள்ளாச்சி மகாலிங்கத்துக்கு பத்மபூஷன்; கவிஞர் வாலிக்கு பத்மஸ்ரீ விருது”

  • மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி ,
  • கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர்,
  • தொழிலதிபர்கள் ரத்தன் டாடா,
  • லட்சுமி மித்தல்,
  • இன்ஃபோசிஸ் தலைவர் என்.ஆர். நாராயணமூர்த்தி

உள்ளிட்ட 13 பேர் பத்ம விபூஷண் விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

  • பத்ம பூஷண் விருதுக்கு அமெரிக்கவாழ் இந்திய விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் உள்ளிட்ட 35 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
  • பத்மஸ்ரீ விருதுக்கு பல்வேறு துறைகளைச் சேர்ந்த 71 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
  • தொடர்ந்து ஏழாவது ஆண்டாக இந்த ஆண்டும் நாட்டின் மிக உயரிய விருதான “பாரத ரத்னா’ விருதுக்கு எவரும் தேர்வு செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

“பாரத ரத்னா’ விருதை முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு அளிக்கலாம் என எல்.கே. அத்வானி பரிந்துரைத்து கடிதம் எழுதினார். இதையடுத்து கம்யூனிஸ்ட் கட்சியினர் ஜோதிபாசுவுக்கும், உத்தரப்பிரதேச முதல்வர் மாயாவதி தங்கள் கட்சித் தலைவர் கான்சி ராமுக்கும் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

2001-ம் ஆண்டு பாரத ரத்னா விருது லதா மங்கேஷ்கர் மற்றும் பிஸ்மில்லா கானுக்கு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மத்திய அமைச்சராக உள்ள ஒருவர் பத்ம விபூஷண் விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.

பத்மவிபூஷண் விருது பெறுவோர்:

  • மத்திய அமைச்சர் பிரணாப் முகர்ஜி,
  • தொழிலதிபர்கள் ரத்தன் டாடா,
  • லட்சுமி மித்தல்,
  • இன்ஃபோசிஸ் நாராயணமூர்த்தி,
  • ஹோட்டல் அதிபர் பிஆர்எஸ் ஓபராய்,
  • சுற்றுச் சூழல் ஆர்வலர் ஆர்.கே. பச்செüரி,
  • தில்லி மெட்ரோ ரயில் தலைவர் இ. ஸ்ரீதரன்,
  • உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ஏ.எஸ். ஆனந்த்,
  • பிரபல பின்னணிப் பாடகி ஆஷா போஸ்லே,
  • கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த்,
  • டெண்டுல்கர்,
  • இந்திரா காந்தியின் முதன்மைச் செயலராக பணியாற்றிய பி.என். தர்.

எவரெஸ்ட் சிகரத்தை முதலில் தொட்ட எட்மண்ட் ஹிலாரிக்கு மரணத்துக்கு பின்பு பத்ம விபூஷண் வழங்கப்படுகிறது.

  • நாகா தீவிரவாதிகளுடன் பேச்சு நடத்தியதில் முக்கிய பங்காற்றிய முன்னாள் மத்திய உள்துறைச் செயலர் கே. பத்மனாபையா,
  • பிரபல வர்ணனையாளர் ஜஸ்தேவ் சிங்,
  • சிட்டி வங்கி தலைவர் விக்ரம் பண்டிட்,
  • ஐசிஐசிஐ தலைவர் கே.வி. காமத் ஆகியோர் பத்ம பூஷண் விருது பெறுவோரில் முக்கியமானவர்களாவர்.

பத்மஸ்ரீ விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில்

  • டி.வி. நிருபர்கள் பர்கா தத்,
  • ராஜ்தீப் சர்தேசாய்,
  • வினோத் துவா,
  • ஜம்மு காஷ்மீர் பல்கலைக் கழகத்தின் துணை வேந்தர் அமிதாப் மட்டூ,
  • பின்னணிப் பாடகர் ஜவஹர் வட்டாள் ஆகியோரும் அடங்குவர்.

திரைப்படத் துறையில்

  • நடிகை மாதுரி தீட்சித்,
  • இயக்குநர் மனோஜ் நைட் ஷியாமளன்,
  • நடிகர் டாம் ஆல்டர்,
  • கால்பந்து வீரர் பாய்சுங் புடியா,
  • நீச்சல் வீராங்கனை புலா செüத்ரி,

ஆகியோர் பத்மஸ்ரீ விருது பெறுவோரில் முக்கியமானவர்களாவர்.

  • தமிழகத்தைச் சேர்ந்த நரம்பியல் மருத்துவ நிபுணர் சி.யு. வேல்முருகேந்திரன்,
  • “தினத்தந்தி’ அதிபர் சிவந்தி ஆதித்தன்,
  • பிரபல பாடகரும் டாக்டருமான சீர்காழி சிவசிதம்பரம் ஆகியோரும் பத்மஸ்ரீ விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டோரில் அடங்குவர்.

Posted in Anand, Arts, Asha, Asha Bhosale, astronaut, Awards, Baichung Bhutia, Bharat Ratna, Bhooshan, Bhosale, Bhushan, Bollywood, Booshan, Business, Chess, Citi, Dailythanthi, Dixit, Edmund, Edmund Hillary, Football, Hillary, Hotels, ICICI, Infosys, IT, Madhuri, Mittal, Mukherjee, Narayana Murthy, Narayanamurthy, Oberoi, Padhma, Padma, Padma Bhushan, Padma Vibhushan, Pathma, Performers, Pranab, Pranab Mukherjee, Prizes, Ratan, Ratan Tata, Sachin, Shyamalan, Singer, Soccer, Sports, Sunita Williams, Susheela, Sushila, Susila, TamilNadu, TATA, Tendulkar, Thanthi, Thanthy, Thinathanthi, Vibhooshan, Vibhushan, Vibooshan, Vibushan, Vikram Pandit, Viswanathan, Viswanathan Anand | 1 Comment »

Orient-Express snubs Tata, says Indian tag tacky: Is India Bad for Jaguar?

Posted by Snapjudge மேல் திசெம்பர் 17, 2007

வெள்ளையர்களின் நீங்காத நிறவெறி

டி.ஜே.எஸ். ஜார்ஜ்

அக்ரஹாரத்தில் கழுதை : டாடா, ஜகு�

எங்கும் பொருளாதார தாராளமயமாக்கல் கொள்கை வியாபித்து நிற்கிறது என்று நாம் மார்தட்டிப் பேசிக் கொள்கிறோம்.

ஆனால், இத்தகைய காலகட்டத்திலும் “வெள்ளையர்களே அனைத்திலும் உயர்ந்தவர்கள்; வெள்ளையர் அல்லாதோர் கீழேதான்’, என்று மற்றவர்களை மட்டந்தட்டும் நிறவெறிக் கொள்கை சர்வதேச நிதி மற்றும் வர்த்தக அமைப்புகளில் தலைதூக்கி நிற்கிறது.

நிறவெறிக் கொள்கை ஊறிவிட்ட உலகில் நாம் வாழ்ந்து வருகிறோம்.

உருக்குத் தொழில் உலகின் மன்னர் என்ற பெருமையாகப் பேசப்படும் வெளிநாடு வாழ் இந்தியரான லட்சுமி மிட்டலும் இந்த நிறவெறிக் கலாசாரத்தால் பாரபட்சமாக நடத்தப்பட்டவர்தான்.

ஐரோப்பாவில் இயங்கும் ஆர்சலர் என்ற நிறுவனத்தின் உரிமையை தனது கட்டுக்குள் கொண்டுவர அவர் முயன்றார். ஆனால் வெள்ளையர் அல்லாத ஒருவரது பணம் எங்களுக்கு வேண்டவே வேண்டாம் என்று அந்த நிறுவனத்தின் நிர்வாகி ஒருவர் நிராகரித்து விட்டார்.

ஆனால் பிற்பாடு, தான் சொன்ன வார்த்தை தவறானது என்பதை அந்த நிர்வாகியே உணர்ந்து, மாற்றிக் கொண்டார் என்பது வேறு கதை. பின்னர் அந்த நிர்வாகியின் எதிரிலேயே ஆர்சலர் நிறுவனம் ஆர்சலர்-மிட்டல் என்று மாறியதும் வேறு விஷயம்.

இன்னொரு சம்பவம் அமெரிக்காவைச் சேர்ந்த சொகுசு ஹோட்டல் நிறுவனமான ஓரியண்ட் எக்ஸ்பிரஸ் தொடர்பானது ஆகும்.

இந்த ஹோட்டலுடன் கூட்டு வைக்க டாடா நிறுவனம் ஆசைப்பட்டது. ஆனால் நிறவெறியில் ஊறிய அதன் தலைமை நிர்வாகம், டாடாவின் ஆசையை நிராகரித்து கேலியும் கிண்டலும் செய்தது.

“சொகுசின் மொத்த உருவகமாகத் திகழும் எமது பிராண்டை உங்களது பிராண்டுடன் சேர்ப்பதால் எங்களது பிராண்டின் நற்பெயர் என்னாவது’ என்று ஓரியண்ட் எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி குத்தலாகப் பேசினார்.

இப்படி அவர் பேசியதற்குக் காரணம் கூட்டுவைக்கும் யோசனை வேண்டாம் என்று ஓரியண்ட் எக்ஸ்பிரஸ் தரப்பில் முன்னதாக தெரிவிக்கப்பட்டும் மீண்டும் அதற்காக டாடா நிறுவனம் முயற்சி மேற்கொண்டதே ஆகும். இப்படி டாடா நிறுவனம் செய்தது தம்மை அவமதிப்பு செய்வதாகக் கருதிவிட்டார் ஓரியண்ட் எக்ஸ்பிரஸின் தலைமை நிர்வாகி பால் வொயிட்.

இன்னொரு சம்பவத்தை இனி பார்ப்போம்.

போர்டு லக்சுரி மாடல் கார் உற்பத்தி நிறுவனத்தை வாங்க டாடா மோட்டார்ஸ் நிறுவனம் முயற்சி செய்தது. அதை அறிந்த அமெரிக்க ஆட்டோமொபைல் நிறுவனம் ஒன்றின் தலைவர் ஒருவர் கடந்த வாரம் பொங்கி எழுந்தார். இதை அமெரிக்க மக்கள் ஏற்க மாட்டார்கள் என்றார்.

இத்தகைய சம்பவங்களை குப்பைகள் என்று ஒதுக்கி, கேலிக்கூத்துகள் என்று தான் எடுத்துக் கொள்ளவேண்டும். டாடா பிராண்ட் என்றாலே தனி மவுசுதான். இதை உலகமே நன்கு அறியும்.

எத்தனையோ இந்தியர்களை அமெரிக்க மக்கள் கனிவுடன் ஏற்றுக் கொண்டுள்ளனர். அமெரிக்காவைச் சேர்ந்த மிகப்பெரிய நிதி நிறுவனம் சிட்டி குரூப். இதன் தலைவராக விக்ரம் பண்டிட்டை அமெரிக்கர்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர்.

இதுபோல் அமெரிக்காவின் தேசிய உணர்வுக்கு அடையாளமாக திகழும் பெப்சி நிறுவனத்தின் தலைவராக இந்திரா நூயி அமர்ந்துள்ளதையும் அந்நாட்டு மக்கள் ஏற்கத்தானே செய்தனர்.

இவர்களுக்கு முன்பாக கியூலெட்-பக்கார்ட் நிறுவனத்தின் பொது மேலாளாராக ராஜீவ் குப்தா, எடி அண்ட் டி நிறுவனத்தின் தலைவராக அரூண் நேத்ரவலி, மெக்கன்சி நிறுவனத்தின் தலைவராக ரஜத் குப்தா போன்றோர் சிறப்பாக செயல்பட்டுள்ளனர்.

ஸ்டான்சார்ட் நிறுவனத்தை ராணா தல்வார் தலைமை ஏற்று நடத்துகிறார்.

மேலும் பென்டியம் சிப்பை உருவாக்கிய வினோத் டாம், ஹாட்மெயிலை நிறுவிய சபீர் பாடியா ஆகியோரும் இந்தியர்கள்தான்.

அறிவாற்றல் என்று வரும்போது வெள்ளையர் அல்லாதோரை விரும்புகிறார்கள் வெள்ளையர்கள். அப்போது, நன்மதிப்பு பற்றிப் பேசுவதில்லை. நிறவெறி என்று வரும்போது அவர்களின் மூர்க்கத்தனம் வெளிப்பட்டு விடுகிறது.

அமெரிக்கத் தூதரகங்களில் பணிபுரியும் அதிகாரிகள் கூட தான் யார் என்பதை காட்டிவிடுகிறார்கள். அண்மையில் கேசவன் என்ற விஞ்ஞானி விசாவுக்காக சென்னையில் உள்ள தூதரகத்துக்குச் சென்றிருந்தார். கொளுத்தும் வெயிலில் அவர் ஒரு மணி நேரம் வெளியில் காத்திருக்க நேர்ந்தது.

பின்னர், உள்ளே சென்றதும் 2 மணி நேரம் காத்திருந்தார். “உங்களிடம் ஆலோசனை நடத்த அவசியம் இல்லை. இந்த வினாத்தாள் பட்டியலை நிரப்பித்தாருங்கள்’ என்று மட்டும் அவரிடம் கூறியுள்ளனர்.

மற்றொரு விஞ்ஞானியான கோவர்தன் மேத்தாவுக்கும் கசப்பான அனுபவம் ஏற்பட்டுள்ளது. தனது ஆராய்ச்சியைப் பற்றி மறைத்துவிட்டதாக காரணம் தெரிவிக்கப்பட்டு அவருக்கு விசா நிராகரிக்கப்பட்டது.

இத்தகைய குளறுபடிகளுக்கு நம்மையேதான் நாம் நொந்து கொள்ளவேண்டும்.

அண்மையில் அமெரிக்காவின் செயல்பாடு பற்றி மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கூட வேதனையுடன் பேசினார்.

அமெரிக்காவில் கிளைகள் திறக்க இந்தியாவைச் சேர்ந்த வங்கிகள் விரும்பினால் அவை மீது அமெரிக்கா பாரபட்சம் காட்டுகிறதாம்.

இப்படிப் புகார் கூறுவதால் அவர்கள் மசிந்து விடுவார்களா என்ன? இந்தியாவில் தொழில் நடத்த வரும் அவர்களை இங்கும் அங்கும் என அலைகழித்தால் எல்லாம் சரியாகிவிடும். இது நடக்குமா?

இது குழம்பிப்போன உலகம். மற்றவர்கள் நமக்கு என்ன செய்ய விரும்புகிறார்களோ அதை நாமும் அவர்களுக்குச் செய்ய வேண்டும். அப்போது மரியாதை தானாகவந்து சேரும்.

கொடுக்கும் வழியிலேயே நாமும் திருப்பிக் கொடுப்போம்.

தமிழில்: ஜி. கணபதி

Posted in acquisition, Analysis, Arcelor, Auto, Automobile, Banks, Brand, Capitalization, Cars, CEO, Citi, CxO, Discrimination, Economy, England, Equity, Finance, Ford, Govt, Hotels, Image, India, Jaguar, Law, Luxury, M&A, Manufacture, Manufacturing, markets, Mergers, Mittal, MNC, NRI, Offshoring, Orient Express, Outsourcing, Private, Protection, Public, racism, Reverse, Rich, rules, Shares, Steel, Stocks, Supremacy, TATA, Tax, Wealthy, White | Leave a Comment »

S Gopalakrishnan – Banking services in Rural Areas

Posted by Snapjudge மேல் ஜூலை 23, 2007

கிராமங்களில் வங்கிச் சேவை

எஸ். கோபாலகிருஷ்ணன்

பாரத ரிசர்வ் வங்கியின் துணை கவர்னர் உஷா தோராட் அண்மையில் தெரிவித்துள்ள தகவல் ஒன்று கவனிக்கத்தக்கது. இந்தியாவில் இப்போது மொபைல் தொலைபேசி உபயோகிப்பவர்களின் எண்ணிக்கை 9 கோடியே 30 லட்சம். அதேசமயம், அனைத்து வங்கிகளிலிருந்தும் கடன் வசதி பெறுபவர்களின் எண்ணிக்கை மொபைல் தொலைபேசி வைத்திருப்பவர்களைவிட குறைவு என்பதே அது.

இதை சற்று கூர்ந்து கவனிப்போம்: நூறு கோடி மக்கள் வாழும் இந்தியாவில் வெறும் 9 கோடி பேருக்குத்தான் வங்கிக் கடன் கிடைக்கிறது. இதில் பெரும் தொழில், சிறு தொழில் மற்றும் விவசாயக்கடன், வீட்டுக்கடன், வாகனக்கடன், தனிநபர் கடன், கல்விக்கடன் என எல்லா வகை வங்கிக் கடன்களும் அடங்கும்.

மேலும், 2006ஆம் ஆண்டில் வங்கிகளின் கடன் வசதி பெற்றவர்களில் 93 சதவிகிதத்தினர் தலா ரூ. 2 லட்சம் மற்றும் அதற்கும் குறைவான தொகையே கடனாகப் பெற்றுள்ளனர். இது மொத்த வங்கிக் கடன் தொகையில் 18 சதவிகிதமே.

ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு வங்கிக் கடன் வசதி ரத்தநாளம் போன்றது என்பார்கள். அந்த வகையில் பெரும் நகரங்கள், சிற்றூர்கள் மற்றும் கிராமங்களில் வசிப்பவர்களுக்கு பரவலாக இந்தக் கடனுதவி கிடைக்கிறதா என்றால் இல்லை என்பதே பதில். ஒட்டுமொத்த வங்கிக் கடன் தொகையில் 56 சதவிகிதம் தொகையை மும்பை, தில்லி, சென்னை, கோல்கத்தா, பெங்களூர் மற்றும் ஹைதராபாத் ஆகிய 6 மாநகரங்கள் பெற்று விடுகின்றன. மேலும் கவலையளிக்கும் அம்சம் என்னவெனில், கடந்த 5 ஆண்டுகளில் கிராமங்கள் மற்றும் ஊரகப் பகுதிகளில் வங்கிகள் வழங்கிய கடனுதவி 10.4 சதவிகிதத்திலிருந்து 8.3 சதவிகிதமாக வீழ்ச்சி அடைந்துவிட்டது என்பதுதான்.

இந்தச் சரிவுக்கு என்ன காரணம் என்றால், கிராமங்கள் மற்றும் ஊரகப் பகுதிகளில் 2001 டிசம்பரில் 32,496 வங்கிக் கிளைகள் செயல்பட்டன. ஆனால், 2006 டிசம்பரில் வங்கிக் கிளைகளின் எண்ணிக்கை 30,586 ஆக குறைந்துவிட்டன. அதாவது, கடந்த 5 ஆண்டுகளில் 1910 கிளைகள் மூடப்பட்டுள்ளன. பாரத ரிசர்வ் வங்கி 3 மாதங்களுக்கு ஒருமுறை வெளியிடும் தகவல் அறிக்கை (டிசம்பர் 2006)யில் இந்த விவரங்கள் உள்ளன.

ஒருபக்கம், தேசிய வங்கிகள், பழைய தனியார் வங்கிகள், புதிய தலைமுறை தனியார் வங்கிகள் ஒன்றோடொன்று போட்டிபோட்டுக் கொண்டு பெரும் நகரங்களிலும், வணிக மையங்களிலும் புதிய கிளைகளை அமைக்கின்றன. இன்னும் சொல்லப்போனால், தேசிய வங்கிகள் வெளிநாடுகளில் அன்றாடம் புதிய கிளைகளை அமைப்பதில் ஆர்வம் காட்டுகின்றன. இதுவரை தவிர்த்து வந்த பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் கூட இந்திய வங்கிகள் கிளைகளைத் தொடங்குகின்றன. ஆனால், உள்நாட்டில் கிராமக்கிளைகளை இழுத்து மூடுகின்றன. ஓரிரு பெரிய வங்கிகளில், சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தொடர்பு கொண்டு விசாரித்ததில் கிடைத்த தகவல் இதுதான்: “”லாபம் ஈட்டாத சிறிய கிளைகளை அருகில் உள்ள பெரிய கிளைகளோடு இணைத்து விட்டோம். நாங்கள் ஒன்றும் கிளைகளை மூடவிடவில்லை.” என்றனர். இதற்கெல்லாம் என்ன காரணம் என்று ஆராயத் தேவையில்லை. வங்கிகளின் லாபநோக்கம்தான் முக்கியக் காரணம்.

1969-ல் வங்கிகள் தேசியமயமாக்கப்பட்டதை அடுத்து, கிராமங்களில் கிளைகளைத் தொடங்குவதற்கு முழுமூச்சுடன் களம் இறங்கின. அஞ்சல் அலுவலகம், காவல் நிலையம் இல்லாத கிராமங்களில்கூட வங்கிக்கிளைகள் தொடங்கப்பட்டன. கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் அந்த நிலை நீடித்தது. அதன் பின்னரே இதில் சுணக்கம் ஏற்பட்டது மட்டுமல்ல; வணிகரீதியில் லாபம் தராத கிளைகள் மூடப்பட்டன.

கிராமங்களில் வாழும் மக்களிடையே சேமிப்புப் பழக்கத்தை உருவாக்குதல், அவர்களிடம் வைப்புத்தொகைகளைத் திரட்டுதல் மற்றும் அவர்களுக்குப் பயிர்க்கடன், கால்நடைக் கடன் போன்ற விவசாயக் கடன் உதவி வழங்குதல், அளவுக்கு அதிகமான வட்டி வசூலிக்கும் தனியார் வட்டிக் கடைகளிலிருந்து அவர்களைக் காப்பாற்றுதல் ஆகியவையே அந்த காலகட்டத்தில் அரசின் நோக்கமாக இருந்தது.

1991-ல் அறிமுகமான பொருளாதாரச் சீர்திருத்தத்திற்குப்பின்னர், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளும் வணிக ரீதியில் செயல்பட்டு லாபம் ஈட்ட வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கியது. ஒரு வங்கியின் செயல்திறனுக்கு அடையாளம் அது ஈட்டும் லாபமே என்று கருதப்பட்டது. இப்புதிய சூழலில், கிராமக்கிளைகள் ஒரு சுமையாகக் கருதப்பட்டன.

நல்லவேளையாக, காலம் தாழ்ந்தேனும், மீண்டும் அரசின் எண்ண ஓட்டம் மாறத் தொடங்கியுள்ளது. பாரதப் பிரதமருக்கு பொருளாதார ஆலோசனை வழங்கும் உயர்மட்டக் குழுவின் தலைவரும், ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னருமான சி. ரங்கராஜன் அண்மையில் வெளியிட்டுள்ள யோசனை நம்பிக்கையூட்டுவதாக உள்ளது. கிராமங்களில் மீண்டும் வங்கிக்கிளைகளை பெரிய அளவில் அமைக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார் அவர்.

வங்கிகள் தங்கள் கிளைகளைக் கிராமங்களில் தொடங்குவதை ஊக்குவிக்கும் வகையில், கிராமங்களில் புதிய கிளைகளை அமைக்கும் வங்கிகளுக்கே பெரிய நகரங்களில் கிளைகளை அமைக்க அனுமதி வழங்க வேண்டும் என்ற யோசனையைத் தெரிவித்துள்ளார் ரங்கராஜன். பார்க்கப்போனால், இப்படி ஒரு திட்டம் கடந்த காலங்களில் செயல்படுத்தப்பட்டது. ஆனால், காலப்போக்கில் ரிசர்வ் வங்கியும் அடுத்தடுத்து பொறுப்பேற்ற அரசுகளும் கிராமக்கிளைகளை அமைப்பதில் முனைப்பு காட்டத் தவறிவிட்டன என்பதே உண்மை.

தற்போது, பொருளாதார வளர்ச்சி 9 சதவிகிதத்தைத் தாண்டிவிட்டது குறித்து பெருமிதம் அடைகிறோம். ஆனால், வேளாண்துறை, தொழில்துறை மற்றும் சேவைத்துறை ஆகிய மூன்று துறைகளிலும் பரவலாக, ஒரே சீராக வளர்ச்சி ஏற்படவில்லை. மாறாக, ஒருபக்கம், தொழில் உற்பத்தித் துறையும், இன்னொருபக்கம், தகவல்தொழில்நுட்பம், தொலைத்தொடர்பு, தொலைக்காட்சி, ஹோட்டல் தொழில், சுற்றுலாத் தொழில் உள்ளிட்ட சேவைத் தொழில்கள் அண்மைக்காலமாக அபரிமித வளர்ச்சி கண்டுள்ளன. இதன் பயனாகவே 9 சதவிகித வளர்ச்சி சாத்தியமாகி உள்ளது. இதில் வேளாண் துறையின் பங்கு குறைவே. எனவேதான், கிராமப்புறங்களில் வளர்ச்சியின் பலன் தென்படவில்லை. வறுமை ஒழிப்பு கைகூடவில்லை. புதிய வேலைவாய்ப்புகள் உருவாகவில்லை.

இதை உணர்ந்துதான், மத்திய அரசு வேளாண் துறையில் ரூ. 25,000 கோடி வேளாண் துறையில் முதலீடு செய்வதற்கு முன்வந்துள்ளது. கிராமப்புற வளர்ச்சிக்கு அரசின் புதிய முதலீடுகள் அவசியம் என்பதில் ஐயமில்லை. ஆனால் அதுமட்டும் போதாது. விவசாயிகளுக்கு உரிய நேரத்தில், சரியான அளவில் விவசாயக் கடன் தங்குதடையின்றி கிடைக்கச் செய்வதும் அவசியம். அதேபோல், கிராம மக்களிடையே சிறுசேமிப்பு பழக்கத்தை உருவாக்குதல், அவர்களது வைப்புத்தொகைகளைத் திரட்டி நியாயமான வட்டி வழங்குதல் போன்ற பணிகளைச் செம்மையாக மேற்கொள்வதற்கு, கிராமங்களில் வங்கிகள் இயங்க வேண்டும்.

கிராமக் கிளைகளில் பணிபுரிய, ஊழியர்களைத் தேர்வு செய்வதிலும் கவனம் தேவை. நகர வாழ்க்கை முறைகளில் ஊறிப்போன ஊழியர்களைக் கட்டாயப்படுத்தி கிராமங்களுக்கு அனுப்பினால், உரிய பலன் கிடைக்காது என்பதைக் கடந்தகால அனுபவம் உணர்த்தியுள்ளது. கிராமச்சூழலில் பணிபுரிய, விருப்ப அடிப்படையில் ஊழியர்களைத் தேர்வு செய்தால், அர்ப்பணிப்பு உணர்வுடன் அவர்கள் பணிபுரிவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

வளர்ச்சியின் பலன் கிராமங்களில் வாழும் மக்களுக்கும் விரைவில் வந்து சேரும் என்பதற்கான அறிகுறியாக புதிய வங்கிக் கிளைகளின் செயல்பாடுகள் அமைய வேண்டும்.

(கட்டுரையாளர்: சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியாவின் முன்னாள் துணைப் பொது மேலாளர்.)

——————————————————————————————————————————
சீரழியும் சிறுதொழில்கள்

கே.எஸ். இராதாகிருஷ்ணன்

உலகமயமாக்கல், தாராளமயமாக்கல் என்ற நிலையில் சிறு தொழில்கள், குடிசைத் தொழில்கள், வறுமைக்கோட்டிற்குக் கீழ் உள்ள மக்கள் ஈடுபடுகின்ற தொழில்கள் யாவும் பெரிதும் பாதிப்படைந்துள்ளன.

கைதயாரிப்பு தீப்பெட்டித் தொழிலில்

  • சிவகாசி,
  • ராஜபாளையம்,
  • கோவில்பட்டி,
  • எட்டயபுரம்,
  • கழுகுமலை,
  • சங்கரன்கோவில்,
  • வாசுதேவநல்லூர்,
  • குடியாத்தம்,
  • செய்யாறு

போன்ற பகுதிகளில் லட்சக்கணக்கான ஏழை மக்கள் பல்லாண்டுகளாக ஈடுபட்டு வருகின்றனர். முதலில், சிவகாசி அய்ய நாடார் குடும்பத்தினர் கோல்கத்தா சென்று தொழில்நுட்பத்தை அறிந்து வந்து சிவகாசியில் முதன்முதலாக தீப்பெட்டித் தொழிலைத் தொடங்கினர். இத்தொழிலில் சி, டி என்ற இரண்டு பிரிவுகள் உண்டு.
வானம் பார்த்த பூமியில் பல குடும்பங்களுக்கு இத்தொழில் விளக்கேற்றியது. ஆனால் கடந்த பத்து ஆண்டுகளாக இந்த இரண்டு பிரிவுகளும் நலிந்து வருகின்றன. தமிழகம் வந்து தீப்பெட்டியைக் கொள்முதல் செய்த வட மாநில வியாபாரிகள் உத்தரப் பிரதேசத்திலும், பிகாரிலும் தற்பொழுது தொழிலைத் தொடங்கிவிட்டனர். இதனால் இங்கு உற்பத்தி அளவு குறைந்துவிட்டது.

இந்தியாவுக்கு ஒரு நாளைக்கு இரண்டு லட்சம் தீப்பெட்டி பண்டல்கள் தேவைப்படுகின்றன. விம்கோ தீப்பெட்டி நிறுவனம் 13 சதவிகிதம் மற்ற இயந்திரத் தீப்பெட்டி ஆலைகள் 18 சதவிகிதம், மீதமுள்ள 69 சதவிகிதம் கைதயாரிப்புப் பிரிவுகளாக இருந்தன. ஆனால், தற்பொழுது, விம்கோ, ஐ.டி.சி போன்ற நிறுவனங்கள் மட்டுமல்லாமல், சில தனியாரும் இயந்திரம் மூலமாகத் தேவையான தீப்பெட்டிகளை உற்பத்தி செய்து விடுகின்றனர்.

ஏற்றுமதி செய்யப்படும் தீப்பெட்டிகள் இயந்திரங்களிலேயே செய்யப்படுகின்றன. கடந்த காலங்களில் இரண்டு லட்சம் பண்டல்கள் உற்பத்தி செய்ய இரண்டு லட்சத்து 45 ஆயிரம் தொழிலாளர்கள் தேவை. இதனால் அதிகமான அளவில் வேலைவாய்ப்பு கிடைத்தது. தற்பொழுது இயந்திரமயம் காரணமாக தொழிலாளர்களின் வேலைவாய்ப்பு குறைந்துவிட்டது. தீப்பெட்டி ஆலை அதிபர்கள் தங்களுக்கு லாபம் என்று கருதி இயந்திரங்களின் மூலம் உற்பத்தியைத் தொடங்கிவிட்டனர்.

இதுமட்டுமல்லாமல், தீப்பெட்டிக்கான மூலப்பொருள்களின் விலைகளும் கடுமையாக உயர்ந்துவிட்டன. கைதயாரிப்பு தீப்பெட்டி உற்பத்திச் செலவு அதிகரிப்பதனால் தீப்பெட்டி விலையும் அதிகரிக்கிறது. ஐ.டி.சி. போன்ற பெரிய நிறுவனங்கள் இதனால் பாதிக்கப்படுவதில்லை. குறைந்த விலைக்கே தீப்பெட்டிகளை வழங்கக்கூடிய நிலையில் உள்ளன.

விலை அதிகரிப்பால் குடிசைத்தொழில் தீப்பெட்டி பண்டல்கள் விற்பனை ஆகாமல் கிடங்குகளில் முடங்கியுள்ளன. குளோரேட் என்ற மூலப்பொருள் பற்றாக்குறையால் சிறு உற்பத்தியாளர்கள் உற்பத்தியை நிறுத்திவிட்டதால், ஏழை மக்கள் வேலைவாய்ப்புகளை இழக்கின்றனர். பன்னெடுங்காலமாக தெற்கேயுள்ள கரிசல் பூமியில் மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்து வந்த அட்சயப் பாத்திரமாக விளங்கிய தொழில் தற்போது படிப்படியாகச் சிதைந்துள்ளது.

இத்தொழிலை ஊக்கப்படுத்தும் வகையில் மத்திய, மாநில அரசுகள் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். தீப்பெட்டிக்குத் தேவையான மூலப்பொருள்களை மானிய விலையில் வழங்க வேண்டும். ஏற்றுமதிக்கு ஊக்கத்தொகையும் வங்கிக் கடன்களும் கிடைக்க வேண்டும். கூட்டுறவு சங்க தீப்பெட்டிகளை ஏற்றுமதி செய்ய அரசே உதவ வேண்டும். ஐ.டி.சி. போன்ற பன்னாட்டு நிறுவனங்கள் உற்பத்தி செய்கின்ற தீப்பெட்டிகளை ஏற்றுமதி செய்ய மட்டுமே அனுமதி வழங்க வேண்டும். மத்திய, மாநில அரசுகள் அனுமதி பெறாமல் இயங்கும் இயந்திரத் தீப்பெட்டி தொழிற்சாலைகளை அனுமதிக்கக்கூடாது.

நெடுங்காலமாக இன்னொரு சிறுதொழில் – சாத்தூரில் நடந்து வந்த பேனா நிப்பு தொழிலும் பாதிக்கப்பட்டுள்ளது. ஒரு காலத்தில் இந்தியா மட்டுமல்லாமல் மேலை நாடுகளுக்கும் நிப்புகள் இங்கிருந்து அனுப்பப்பட்டன. அலுமினியக் கழிவுகளிலிருந்து செய்யப்படும் இந்த நிப்பு குடிசைத் தொழிலாக நூற்றுக்கணக்கான குடும்பங்களுக்கு வாழ்வளித்தது. பால்பாயிண்ட் பேனா வந்ததிலிருந்து இந்தத் தொழில் நசித்துவிட்டது. அதை நம்பியிருந்த குடும்பங்கள் இன்றைக்கு வறுமையில் வாடுகின்றன.

சிவகாசி வட்டாரத்தில் பட்டாசு, காலண்டர் மற்றும் அச்சகத் தொழில்களில் பணியாற்றிய பலர், இயந்திரங்கள் வந்ததால் வேலைவாய்ப்பை இழந்து தவிக்கின்றனர். முக்கூடலில் பீடித்தொழிலும் நசித்து வருகின்றது.

தூத்துக்குடி, திருச்செந்தூர், வேம்பார் போன்ற பகுதிகளில் உப்பளத் தொழிலும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இதில் சுமார் 40 ஆயிரம் தொழிலாளர்கள் செய்யும் உப்பளத் தொழில் நூறு ஆண்டுகளுக்கு மேலாக நடந்தது. தற்போது பல்வேறு காரணங்களால் ஏற்றுமதி நின்றுவிட்டது. மழைக்காலத்தில் இத் தொழிலுக்கு பாதுகாப்பின்மை, ரயிலில் அனுப்பத் தடை, மின் கட்டண உயர்வு, நிலத்தடி நீர் குறைவு ஆகிய காரணங்களால் இத் தொழில் நசிந்துள்ளது.

  • திண்டுக்கல் பூட்டு,
  • சுருட்டுத் தொழில்,
  • கும்பகோணம் பாத்திரத்தொழில்,
  • நெசவுத் தொழில் மற்றும்
  • உடன்குடி பகுதியில் பனைத்தொழில் –
  • சில்லுகருப்பட்டி,
  • பவானி ஜமுக்காளம்,
  • மதுரை சுங்கடி,
  • கூறைப்புடவை போன்றவற்றோடு
  • மீன்பிடித் தொழில்,
  • கருவாடு தொழில் என
  • நடுத்தர,
  • கீழ்த்தட்டு மக்கள் ஈடுபட்ட தொழில்கள் அனைத்தும் கேள்விக்குறியாகிவிட்டன.

மதிமுக பொதுச் செயலர் வைகோவும் தீப்பெட்டி தொழில் பிரச்னையை மத்திய அரசின் கவனத்துக்குப் பலமுறை கொண்டு சென்றுள்ளார். ஆனால் தீர்வு இல்லை. புதிய பொருளாதாரத் திட்டங்களால் இத்தொழில்கள் சீரழிந்தாலும், இந்த மண்ணின் அன்றாட அடையாளங்களாக

  • நெல்லை அல்வா,
  • கடம்பூர் போளி,
  • உடன்குடி சில்லுக்கருப்பட்டி,
  • குற்றாலம் முறுக்கு,
  • திருவில்லிபுத்தூர் பால்கோவா,
  • கல்லிடைக்குறிச்சி அப்பளம்,
  • தூத்துக்குடி மக்ரோன்,
  • கோவில்பட்டி கடலை மிட்டாய்,
  • சாத்தூர் சேவு,
  • திண்டுக்கல் மலைப்பழம்,
  • குடந்தை வெற்றிலை சீவல்

போன்ற தின்பண்டங்கள் இன்றைக்கும் மீதமுள்ள எச்சங்களாகும்.
இத் தொழில்களை நம்பிய மக்கள் வேலைவாய்ப்பை இழந்து திருப்பூர் பனியன் ஆலையில் வேலை கிடைக்கும் என்று அங்கு செல்லத் தொடங்கினர். அங்கும் வேலை இன்றி, பலர் துயருறுகின்றனர்.

ஒரு சில ஆதிக்க சக்திகள்தான் இயந்திரமயமாக்கலில் பயனடைகின்றன. 60 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் இருந்து விரட்டப்பட்ட மேற்கத்திய சக்திகளுக்கு மீண்டும் இங்கு சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்பு கொடுக்கிறோம்.

வ.உ.சி.யின் கப்பல் நிறுவனத்திற்கு ஆங்கிலேயர்கள் பல தொல்லைகள் கொடுத்து பங்குதாரர்களை எல்லாம் பங்குகளை வாபஸ் பெறச் செய்தனர். 1896-ல் பாரதியின் தந்தை சின்னச்சாமி ஐயர், எட்டையபுரம் மன்னர் கொடுத்த கிராமத்தில் பருத்தி அரைவை ஆலையை நிறுவினார். அப்பகுதி மக்களுக்கு வேலைவாய்ப்பு கிட்டியது. அதைப்பொறுக்காத பிரிட்டிஷார், அந்த ஆலையை மூடக்கூடிய வகையில் எட்டையபுரம் அரசின் பங்குகளைத் திரும்பப் பெறச் செய்தது மட்டுமல்லாமல், ஆலை நிலத்தையும் திரும்பப் பெற்று ஆலையை மூடச் செய்தனர்.

உலகமயமாக்கலால் ஏற்கெனவே லத்தீன் அமெரிக்க நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. அம்மாதிரியான கொடுமைகள் நமக்கும் ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சம், தற்போது ஏற்பட்டுள்ளது.

(கட்டுரையாளர்: வழக்கறிஞர்)

————————————————————————————————–

கிராம மக்களுக்கு கடன் வசதி

எஸ். கோபாலகிருஷ்ணன்

கந்து வட்டிக் கொடுமை பற்றி பேசாத மனிதர்கள் இல்லை; எழுதாத ஏடுகள் இல்லை. எனினும் அவசரத் தேவை என்றால், கிராமவாசிகளுக்கு வேறு என்னதான் வழி?

இந்த அவலத்தை ஒழித்துவிடுவோம் என்று 38 ஆண்டுகளுக்கு முன் புறப்பட்ட தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் இதனைச் செய்யவில்லை.

தேசிய வங்கிகள், ஆர்.ஆர்.பி. எனப்படும் கிராமிய வங்கிகள் என எந்த ஓர் அமைப்பும் பிரச்னையின் விளிம்பைக்கூடத் தொடவில்லை. மத்திய அரசு அவ்வப்போது செயல்படுத்திய திட்டங்கள், அமைத்த நிபுணர் குழுக்கள் ஆகியவையும் பயனளிக்கவில்லை.

அதீத வட்டி வசூலிக்கும் வட்டிக் கடைகள் அல்லது லேவாதேவிப் பேர்வழிகளின் கோரப் பிடியிலிருந்து எளிய மக்களைக் காப்பாற்ற இயலவில்லை.

தற்போது தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் வட்டிக்குக் கடன் கொடுக்கும் தனியார் அமைப்புகள் முறையாகப் பதிவு செய்து கொள்ளப்பட வேண்டும் என்றும், வேறு சில விதிமுறைகளை உள்ளடக்கியும் சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன. இந்த சட்டங்களின் தன்மையும், கூர்மையும் மாநிலத்துக்கு மாநிலம் வேறுபடுகிறது. எனினும் அவற்றின் நோக்கம் அதீதவட்டி வசூலிப்பதை தடுப்பதும், கந்து வட்டியாளர்களைக் கட்டுப்படுத்துவதுதான். பஞ்சாப், ஹரியாணா போன்ற சில மாநிலங்களில் இதுபோன்ற சட்டங்கள் இன்னும் இயற்றப்படவில்லை.

சட்டம் இயற்றப்பட்ட மாநிலங்களிலும் சட்டத்தின் நோக்கம் எந்த அளவு ஈடேறி உள்ளது என்பது கேள்விக்குறியே. வட்டிக்குக் கடன் கொடுக்கும் தனியார் கடைகளோ, அமைப்புகளோ விதிமுறைப்படி பதிவு செய்யப்பட்டிருக்கலாம். ஆனால் வட்டிவிகிதம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதா என்றால் இல்லை. அவ்வளவு ஏன்? கந்து வட்டி தொடர்பாகக் கொடுக்கப்படும் புகார்கள் உரியமுறையில் பரிசீலிக்கப்பட்டு, பாதிக்கப்பட்ட கடனாளிகளுக்கு நிவாரணம் கிடைக்கிறதா என்பதும் சந்தேகமே.

2002-ம் ஆண்டு அகில இந்திய கடன் மற்றும் முதலீடு தொடர்பான ஆய்வு அறிக்கையில் காணப்படும் தகவல்கள் இங்கு நினைவுகூரத் தக்கவை.

கிராமப்புற மக்கள் 1991-ம் ஆண்டில், தனியாரிடம் வட்டிக்கு கடன் வாங்கிய தொகை அப்பகுதியின் மொத்த கடன் தொகையில் 17.5 சதவீதமாகத்தான் இருந்தது. 2001-ல், 29.6 சதவிகிதமாக உயர்ந்தது. மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்ட எந்த நடவடிக்கையும், கிராமவாசிகள் தனியார் வட்டிக்கடைகளைத் தேடிப் போவதைக் குறைக்கவில்லை. மாறாக, இந்தத் தேவை அதிகரித்துள்ளது.

இந் நிலையில் மீண்டும் ஒரு புதிய முயற்சியாக, பாரத ரிசர்வ் வங்கி இப்பிரச்னைக்குத் தீர்வு காணும் நோக்கில், கடந்த ஆண்டு ஒரு தொழிலியல் குழுவை அமைத்தது. ரிசர்வ் வங்கியின் பிரதான சட்ட ஆலோசகரின் தலைமையில் அமைக்கப்பட்ட இக் குழுவில் இதர அங்கத்தினர்களாக அதே வங்கியின் அனுபவமிக்க அதிகாரிகள் இருந்தனர். இக்குழு தனது பரிந்துரைகளை அண்மையில் அளித்தது. அவற்றின் சாரம் வருமாறு:

கிராமப்புறங்களில் வட்டிக்குக் கடன் கொடுப்பவர்கள், பதிவு செய்து கொண்டால் மட்டும் போதாது. மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை அதனைப் புதுப்பித்துக் கொள்ளவும் வேண்டும். தவிர, சில நிபந்தனைகளைப் பூர்த்தி செய்பவர்கள், உரிய பரிசீலனைக்குப்பின், “”அங்கீகரிக்கப்பட்ட கடன் வழங்குபவர்களாக” ( Accredited Loan Providers) வங்கிகளால் நியமிக்கப்படுவார்கள். அவர்கள் கிராமவாசிகளுக்கு கடன்வழங்குவதற்குத் தேவையான தொகையை வங்கியே நியாயமான வட்டியில் கடனாகக் கொடுக்கும். இதற்காக, ஒவ்வொரு “”அங்கீகரிக்கப்பட்ட கடன் வழங்குபவரும்” ஒரு வங்கியுடன் இணைக்கப்படுவார்.

கிராமவாசிக்கு கடன் கொடுக்கும்போது, கொடுப்பவர் தனது சொந்தப் பொறுப்பில்தான் கடன் வழங்குவார். வங்கி அதற்கு பொறுப்பல்ல. அங்கிகரிக்கப்பட்ட கடன் வழங்குபவர் வங்கியிலிருந்து வாங்கிய கடனை, வங்கிக்கு திரும்பச் செலுத்த வேண்டியது அவரது பொறுப்பு.

கிராம வாசிகளுக்கு கடன் வழங்கும்போது அதிகபட்ச வட்டிவிகிதத்தை மாநில அரசு நிர்ணயித்து அறிவிக்கும். இந்த வட்டி விகிதம் குறித்த கால இடைவெளியில், மறு ஆய்வு செய்யப்படும். நிர்ணயிக்கப்பட்ட கடன் விகிதத்துக்கு அதிகமாக வட்டி வசூல் செய்தால் தண்டனை விதிக்கப்படும்; அங்கீகரிக்கப்பட்ட கடன் வழங்குபவரின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும். வங்கியும் இதைத் தொடர்ந்து கண்காணிக்கும்.

ஏற்கெனவே வட்டிக்கடை வைத்திருப்பவர்கள் விவசாயப் பண்டங்களில் வாணிபம் செய்பவர்கள் விவசாய கமிஷன் ஏஜென்டுகள், வாகன விற்பனையாளர்கள், பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் போன்ற – கிராமவாசிகளுக்கு நன்கு பரிச்சயமானவர்கள், “”அங்கீகரிக்கப்பட்ட கடன் வழங்குபவர்களாக” நியமிக்கத் தகுதி பெற்றவர்களாகக் கருதப்படுவார்கள். இவர்களையும், இப்பொறுப்புக்கு தகுதி உடைய பிறரையும் வங்கி உரியமுறையில் பரிசீலித்து, “”அங்கீகரிக்கப்பட்ட கடன் வழங்குபவர்”களாக நியமனம் செய்யும்.

வங்கியும் அங்கீகரிக்கப்பட்ட கடன் வழங்குபவரும், தத்தம் கடமைகள், உரிமைகள் மற்றும் நிபந்தனைகள் தொடர்பாக ஒப்பந்தம் செய்து கொள்வார்கள். அவசியம் நேரும்போது அங்கீகாரத்தை ரத்து செய்வதற்கு விதிமுறை அனுமதிக்கும் புகார்கள் மற்றும் குறைதீர்ப்பு நடைமுறை எளிமையாக இருக்கும்.

அங்கீகரிக்கப்பட்ட கடன் வழங்குபவருக்கு தரப்படும் வங்கிக் கடன், வங்கிகளைப் பொருத்தவரை, முன்னுரிமை ( Priority Sector) கடனாகக் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். அரசின் விதிமுறைகளின்படி, வங்கிக் கடனில் 40 சதவிகிதத் தொகையை விவசாயம், சிறுதொழில் உள்ளிட்ட முன்னுரிமைப் பிரிவினருக்குக் கடனாக வழங்க வேண்டும். அந்த வகையில், வங்கிகள் தங்கள் கடமையை எளிதாக நிறைவேற்ற ஒரு வழி கிடைத்துள்ளது எனலாம்.

இத் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கு மாநிலங்கள் புதிய சட்டம் இயற்றவேண்டும். அதற்கான வரைவு மசோதா ஒன்றை ரிசர்வ் வங்கியின் குழு ஏற்கெனவே தயாரித்து வைத்துள்ளது.

குழுவின் பரிந்துரையை ரிசர்வ் வங்கியும் மத்திய, மாநில அரசுகளும் விரைந்து ஏற்றுக் கொள்வார்கள் என எதிர்பார்க்கலாம். முதன்முறையாக, நடைமுறைக்கு உகந்ததாக, எளிதானதாக மட்டுமல்லாமல், சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினருக்கும் லாபம் தரும் வகையில் இந்த திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.

கடன் வாங்குபவர் வங்கிக்குச் சென்று அலைக்கழிக்கப்படாமல், தனக்குப் பரிச்சயமான ஒரு நபரிடமிருந்து கடன் பெறலாம். காலதாமதத்துக்கு வழியில்லை. வட்டி விகிதமும் நியாயமானதாக இருக்கும்.

கடன் வழங்குபவருக்கு சொந்த முதலீடு தேவையில்லை. கடன் வழங்குவதற்கு, வங்கியிடமிருந்து தேவையான பணத்தைக் கடனாகப் பெறலாம். கடன் வாங்குபவர், வழங்குபவருக்குப் பரிச்சயமான கிராமவாசி; நேரடித் தொடர்புடையவர். எனவே கடனை வசூல் செய்வதில் சிரமம் இருக்காது; வாராக் கடனாக மாறாது.

வங்கியைப் பொருத்தவரை, எண்ணற்ற கிராமவாசிகளைத் தொடர்பு கொள்வதற்குப் பதில், தங்களால் தேர்வு செய்யப்பட்ட ஒரு நபருக்கு கடன் வழங்கி, கடனைத் திரும்ப பெறுவதில் பிரச்னை இருக்காது. அத்துடன் அங்கீகரிக்கப்பட்ட கடன் வழங்குபவருக்கு கொடுக்கப்படும் கடன்தொகை, முன்னுரிமைக் கடன் என்று கருதப்படும். கிராமவாசிகளுக்கு நேரிடையாக கடன் வழங்குகையில், உள்ளூர் அரசியல் புள்ளிகளின் தலையீடு இருக்கக்கூடும். புதிய திட்டத்தில் இது அறவே தவிர்க்கப்படும். எல்லாவற்றுக்கும் மேலாக, ஒட்டுமொத்த சமுதாயத்துக்கு இத்திட்டம் நன்மைபயக்கவல்லது.

வங்கிகள் தேசியமயமாக்கப்பட்டதைத் தொடர்ந்து எதிர்பார்த்தப்படி, கிராமவாசிகளுக்கும் வங்கிகளுக்கும் இடையே பரஸ்பர நம்பிக்கையும், நட்புறவும் மலரவில்லை என்பதே உண்மை. புதிய திட்டத்தின் மூலம் இவ்விரு தரப்புக்கும் இடையே ஒரு பாலமாக “”அங்கீகரிக்கப்பட்ட கடன் வழங்குபவர்கள்” திகழ்வார்கள் என்று எதிர்ப்பார்கலாம்.

தொழில்நுட்ப மேம்பாட்டின் பலனாக, படித்த, வசதிபடைத்த நகர்ப்புற வாடிக்கையாளர்களுக்குச் சேவைகள் வழங்கி, லாபம் ஈட்டினால் மட்டும் போதாது; ஏழை, எளிய மக்களையும் அரவணைத்துச் செல்லும் வகையில் வங்கிகள் செயல்படவேண்டும் என்பதே இன்றைய எதிர்பார்ப்பு. இதற்கு இந்தத் திட்டம் உதவியாக இருக்கும்.

(கட்டுரையாளர்: சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியாவின் முன்னாள் துணைப் பொது மேலாளர்.)

Posted in Al, Aluminium, APR, Assets, Auto, Balance, Ballpoint, Banking, Banks, Biz, branch, Business, Calendar, Cellphone, Cheyyaar, Cheyyaaru, Cheyyar, Citi, City, Commerce, Compensation, Crackers, Diary, Dindugul, Dindukal, Dindukkal, Economics, Education, Educational, Employment, Ettayapuram, Exim, Expenses, Export, Exporters, Factory, Finance, Fireworks, Garments, GDP, Globalization, Growth, Gudiatham, Gudiyatham, Home, Housing, ICICI, Imports, Income, Industry, Installment, Instalment, Interest, ITC, Jobs, Kalugumalai, Kalukumalai, Kazhugumalai, Kazhukumalai, Kazugumalai, Koilpatti, Kovilpatti, Kudiatham, Kudiyatham, Loans, match, Matchbox, Matches, Metro, Mobile, Monetary, Motor, Nibs, Opportunity, Pen, Private, Profit, Purchase, Purchasing, Rajapalayam, Rates, RBI, Refill, Revenues, Reynolds, Rural, Sangarankoil, Sangarankovil, Sangarankoyil, Sankarankoil, Sankarankovil, Sankarankoyil, SBI, Sivakasi, Small Biz, Small scale, SSI, Tamil, Textiles, Thiruchendhur, Thiruchendoor, Thiruchendur, Thoothukudi, Thuthukudi, Tuticorin, VaiGo, VaiKo, Vasudevanalloor, Vasudevanallur, Villages, Wimco, Work, Writing | Leave a Comment »