Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Church’ Category

Orissa tribals up in arms against government: What is behind Hindu-Christian violence?

Posted by Snapjudge மேல் ஜனவரி 31, 2008

ஒரிசாவில் பரிதவிக்கும் ஆதிவாசிகள்

டி.புருஷோத்தமன்

நமது நாடு 9 சதவீத பொருளாதார வளர்ச்சியை நோக்கி பீடுநடை போடுகிறது; அன்னியச் செலாவணி இருப்பு திருப்திகரமாக இருந்து வருகிறது.

ஆனால் அடிப்படை வசதியோ, அடுத்தவேளைக்கு உணவோ இன்றி அவதிப்படும் கோடிக்கணக்கான ஆதிவாசி மக்கள் நமது நாட்டில் இருக்கிறார்கள் என்பதை எண்ணிப்பார்த்தோமா என்று கேள்வி எழுப்பினால், இல்லை என்றுதான் பதில் அளிக்கவேண்டியுள்ளது.

நமது நாட்டில் பொருளாதார வளர்ச்சியிலும் கல்வி முன்னேற்றத்திலும் பின்தங்கியுள்ள மாநிலங்களில் ஒரிசாவும் ஒன்று. தலைநகர் புவனேசுவரத்தில் அரசு போக்குவரத்து அறவே இல்லாத அவலம். சாலைகள்தோறும் ஆட்டோக்கள்தான். அரசு பஸ் போக்குவரத்துக் கழகம் திவாலாகிவிட்டதாக கொசுறு செய்தி.

இப்படிப்பட்ட ஒரிசா மாநிலத்தில் மக்களின் வாழ்க்கைத்தரம் எவ்வாறு இருக்கும் என்பதை எண்ணிப்பார்த்தால் கண்ணீரும் கவலையும்தான் மிஞ்சும்.

ஒரிசாவில் வனப்பகுதிகளும் மலைகளும் அதிகம். இதனால் மாநிலத்தின் மக்கள் தொகையில் 32 சதவீதம் பேர் மலைவாழ் மக்கள். ஆண்டாண்டுக் காலமாக எவ்வித முன்னேற்றமும் இன்றி அவர்கள் வறுமையில் வாடுகின்றனர். கனிம வளங்கள் ஏராளமாக இருந்தும் பொருளாதார வளர்ச்சித் திட்டங்களின் பயன்கள் அவர்களைச் சென்றடைவதில்லை. போதாக்குறைக்கு மலைவாழ் மக்களிடையே பிளவு வேறு.

ஒரிசா மாநிலத்தின் தெற்குப் பகுதியில் கந்தமால் பகுதி அமைந்துள்ளது. இதன் மக்கள் தொகை 6 லட்சம். இதில் சுமார் 75 சதவீதம் பேர் “குயி’ மொழி பேசுகின்ற “கோந்த்’ என்ற பழங்குடி (எஸ்.டி.) இனத்தவர்களாவர். அடுத்து “பானா’ என்கின்ற தாழ்த்தப்பட்ட (எஸ்.சி.) மக்கள். “குயி’ மொழி பேசும் இவர்கள் 20 சதவீதம் பேர் ஆவர்.

கோந்த் சமூகத்தினர் மிகவும் வறிய நிலையில் இருந்து வருகின்றனர். எந்த அரசு பதவிக்கு வந்தாலும் இவர்களைக் கண்டுகொள்வதே இல்லை. கல்வியறிவும் இல்லாத காரணத்தால் அறியாமையில் மூழ்கிக் கிடக்கின்றனர்.

கோந்த் சமூகத்தினரின் அறியாமை, ஏழ்மை, படிப்பறிவின்மை போன்ற பலவீனங்களைப் பயன்படுத்திக் கொண்டு அவர்கள் மீது பானா சமூகத்தினர் ஆதிக்கம் செலுத்தி வருவதுதான் வேதனை அளிக்கும் விஷயமாகும்.

பானா சமூகத்தினர் பலர் கிறிஸ்தவர்களாக மதம் மாற்றப்பட்டுவிட்டனர். மிஷினரிகளின் உதவியால் கல்வி, வேலைவாய்ப்புகளைப் பெற்று பொருளாதார ரீதியில் வலுவாகிவிட்டனர். மதம் மாறிய பிறகும் எஸ்.சி.க்கான சலுகைகளைப் பெறுவதற்காக போலி சாதிச் சான்றுகளைப் பெறுகின்றனர். இதன்மூலம் அரசின் சலுகைகளையும் அரசு வேலைகளையும் பெற்றுவிடுகின்றனர்.

கோந்த் பழங்குடியினர் எண்ணிக்கையில் அதிக அளவு இருந்தும் கூட பொருளாதார ரீதியில் வலுவாக இல்லாத காரணத்தால் பானா சமூகத்தினரை விட பன்மடங்கு பின்தங்கிய நிலையிலேயே இருந்து வருகின்றனர். பானா சமூகத்தினரின் சுரண்டலால் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் கோந்த் சமூகத்தினர்தான் என்பது குறிப்பிடத்தக்க விஷயமாகும்.

மாவட்ட மக்கள்தொகையில் பெரும்பான்மையினராக இருந்தும்கூட கோந்த் சமூகத்தினர் எவரும் இதுவரை சட்டமன்ற உறுப்பினராகவோ அல்லது நாடாளுமன்ற உறுப்பினராகவோ தேர்ந்தெடுக்கப்படவில்லை. இதனால் அரசியல் செல்வாக்கு அறவே இல்லாதவர்களாகிவிட்டனர்.

அதேசமயம் பானா சமூகத்தினர் அரசியல் செல்வாக்குடன் திகழ்கின்றனர். தங்களுக்குத் தேவையான சலுகைகளை அரசிடமிருந்து பெற்றுவருகின்றனர்.

கோந்த் சமூகத்தினரை அடக்கி ஆள்வதே குறிக்கோள் என்ற ரீதியில் புல்பானி சட்டமன்ற உறுப்பினரும் ஒரிசா அமைச்சரவையில் உருக்கு மற்றும் சுரங்கத்துறை அமைச்சராக இருந்தவருமான பத்மனாப பேஹ்ரா செயல்பட்டு வந்தார்.

கடந்த ஆண்டு டிசம்பர் 23 ஆம் தேதி கோந்த் பழங்குடி இனத்தவர்கள் மீது பானா சமூகத்தைச் சேர்ந்தவர்களும் நக்சலைட்டுகளும் பயங்கர ஆயுதங்களுடன் தாக்குதல் நடத்தினர். இதில் கோந்த் இனத்தைச் சேர்ந்த காகேஸ்வர் மாலிக் என்பவர் கொலை செய்யப்பட்டார். பிரம்மணிகால் என்ற கிராமத்தையே வன்முறைக் கும்பல் தீக்கிரையாக்கியது.

நிலைமை கட்டுக்கடங்காமல் போவதைக் கண்ட ஒரிசா முதல்வர் நவீன் பட்நாயக் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவருவதற்காக கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டார். அதிரடி நடவடிக்கையாக அமைச்சர் பதவியிலிருந்து பத்மனாப பேஹ்ராவை நீக்கினார்.

எனினும் கோந்த் இனத்தவருக்கும் பானா இனத்தவருக்கும் இடையிலான மோதல் நீருபூத்த நெருப்பாகவே இருந்து வருகிறது. அது எப்போது மீண்டும் வெடிக்கும் எனத் தெரியவில்லை.

வெவ்வேறு இனத்தைச் சேர்ந்த மானும் சிங்கமும் சேர்ந்து ஒரு துறையில் தண்ணீர் குடிக்கவில்லை என்றால் பரவாயில்லை என கூறிவிடலாம். ஆனால் ஒரே இனத்தைச் சேர்ந்த மானும் மானுமே சேர்ந்திருக்கவில்லை என்பதைக் கேட்கும்போது வேதனைதான் மிஞ்சுகிறது.

நகர மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதில் காட்டும் ஆர்வத்தில் சிறு துளியையாவது ஆதிவாசிகளின் முன்னேற்றத்திலும் அரசியல் தலைவர்கள் காட்ட வேண்டும். அரசு அதிகாரிகளும் ஆதிவாசிகளின் நலனில் அக்கறை காட்டி அவர்களுக்கான வளர்ச்சித் திட்டங்களை சரிவர நிறைவேற்ற உதவ வேண்டும். அப்போதுதான் நமது நாட்டின் பூர்வகுடிகளான ஆதிவாசிகளின் வாழ்வில் ஒளிபிறக்கும்.

Posted in Aadhivaasi, Aadhivasi, Aathivaasi, Aathivasi, Adhivasi, Adivasi, Agriculture, Assets, Athivasi, Balangir, Bamunigan, Biju, BJP, Business, Caste, Census, Christian, Christianity, Church, Community, Culture, Dalit Christians, Dalits, Economy, Education, Elections, Fake, Farmers, Farming, Farms, Gadapur, Gods, Government, Govt, Help, Heritage, Hills, Hindu, Hinduism, Hindutva, Judges, Justice, Kandhamal, Land, Law, Minerals, Missionary, Native, Naveen, Navin, Naxalites, Naxals, Needy, NGO, non-tribals, Order, Orissa, Police, Polls, Poor, Population, Poverty, Property, Religion, Reservations, Rich, RSS, SC, scheduled tribes, Schools, ST, Students, Teachers, Temples, Tradition, Tribals, Tribe, Violence, voters, Wealthy | Leave a Comment »

Passions Revive Over Spanish Civil War: Vatican Beatifying 498 & Parliament passes law condemning Franco

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 31, 2007

பிரான்சிஸ்கோ ஆட்சியைக் கண்டிக்கும் தீர்மானம்

பிரான்சிஸ்கோ பிரான்கோ
பிரான்சிஸ்கோ பிரான்கோ

ஸ்பெயினில் கடந்த 1975ஆம் ஆண்டு முடிவுக்கு வந்த ராணுவ தளபதி பிரான்சிஸ்கோ பிரான்கோவின் நாற்பது ஆண்டுகால ஆட்சியை அதிகாரபூர்வமாக கண்டிக்கும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சட்டம் ஒன்றை ஸ்பெயின் நாடாளுமன்றம் நிறைவேற்றியுள்ளது.

பிரான்கோவின் பாஸிச ஆட்சி என்று குறிப்பிட்டு கண்டிப்பதோடு 1936ஆம் ஆண்டுக்கும், 1939ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தைச் சேர்ந்த கூட்டுப் புதைகுழிகள் தோண்டப்படுவதற்கான முயற்சிகளுக்கு பிராந்திய நிர்வாகங்கள் நிதி வழங்க வேண்டும் என்று உத்தரவிடும் மசோதாவை நாடாளுமன்றம் ஆதரித்து வாக்களித்துள்ளது.

ஜெனரல் பிரான்கோவின் ஆட்சியை குறிக்கும் வகையிலான சிலைகள், பதாகைகள் மற்றும் சின்னங்கள் அனைத்தும் பொது கட்டிடங்களிலுருந்து அகற்றப்படவேண்டும் என்றும் இந்த உத்தரவு கூறுகின்றது.

ஆறிய வடுக்களை மீண்டும் கிளறிவிட்டு சமுதாயத்தை பிளவுபடுத்த பார்க்கிறது சோஷலிஸ அரசு என்று பழமைவாத எதிர்கட்சி குற்றம்சாட்டியுள்ளது.

Posted in Angel Acebes, Angels, Assassin, Assassinations, Atrocities, atrocity, Autocracy, autocrat, Autocratic, Aznar, beatification, Beatify, bishop, Catholic, Catholicsm, CCP, Ceremony, Christ, Christian, Christianity, Church, Civil, clergy, Condemn, Conservative, Conservatives, Coup, Criminal, Cruz Laplana y Laguna, Dictator, Dictators, Dictatorship, executed, executions, Fascism, fascist, Fear, Francisco, Francisco Franco, Franco, Gen. Francisco Franco, General, Germans, Germany, graves, inequality, Jose Maria Aznar, Judges, Jury, Justice, Laguna, Law, Left, legislation, massacre, Military, Militia, NCCP, Oppression, Order, parliament, Passions, PM, Popular Party, Power, President, Rebellion, Regime, Religion, repression, Republicans, Right, Ruler, Russia, sainthood, Saints, Senate, Socialism, Socialist, Soviets, Spain, Spanish, USSR, Vatican, victims, War, Wealth, Zapatero | Leave a Comment »

Jesus Christ – Christmas, Good Friday & Easter Wishes

Posted by Snapjudge மேல் ஏப்ரல் 6, 2007

சிலுவைப்பாதையும் புனிதவெள்ளியும்!

வி. ரூஃபஸ்

இறை மகன் இயேசு கிறிஸ்துவின் உயிர்ப்புக்கு (ஈஸ்டர் நாள்) முன் உள்ள நாற்பது நாள்கள் தவக்காலமாக, நோன்புக் காலமாக உலக கிறிஸ்தவர்களால் அனுசரிக்கப்படுகிறது.

தவக்காலத்தின் கடைசி அங்கமாக உலகெங்குமுள்ள தேவாலயங்களில் புனித வெள்ளியன்று சிலுவைப்பாதை நிகழ்ச்சி மிக முக்கியமானதொன்றாக நடைபெறுகிறது. அக் காலத்தில் நடந்த வரலாற்றின் நினைவாக இன்றும் இயேசு கிறிஸ்துவைத் தியானித்து வழிபாடு செய்கிறார்கள்.

சிலுவைப்பாதை என்பது பதினான்கு தலங்களாகப் பிரிக்கப்படும். இறைமகனை சிலுவையில் அறையும்படி பிலாத்து என்கின்ற அரசன் தீர்ப்பளிக்கிற நிகழ்வு முதலாம் தலமாகவும், இறுதியில் அவர் கல்லறையில் அடக்கம் செய்யப்படுவது பதினான்காம் தலமாகவும் கொள்ளப்படுகிறது. அதன்படி…

தலம் 1 : பிலாத்து இயேசுவுக்கு மரண தண்டனை அளித்தது.

தலம் 2 : இயேசு தன் தோளில் சிலுவை சுமந்தது.

தலம் 3 : இயேசு முதன்முறையாக கீழே விழுந்தது.

தலம் 4 : அன்னை மரியாளும், இயேசுவும் சந்தித்தது.

தலம் 5 : சிமியோன் இயேசுவிற்கு உதவிக்கரம் நீட்டியது.

தலம் 6 : வெரோனிக்காள் இறை மகனின் ரத்தம் தோய்ந்த முகத்தைத் துடைத்தது.

தலம் 7 : இயேசு இரண்டாம் முறையாகக் குப்புற விழுந்தது.

தலம் 8 : கல்வாரிப் பயணத்தில் பங்கேற்கும் பெண்கள்.

தலம் 9 : மூன்றாம் முறையாக இயேசு குப்புற விழுவது.

தலம் 10 : இயேசுவின் ஆடைகள் களையப்படுதல்.

தலம் 11 : இயேசுவை சிலுவையில் அறைதல்.

தலம் 12 : இறைமகன் உயிர் பிரிந்தது.

தலம் 13 : இறந்த மகனை தாய் மரியாள் மடியில் கிடத்தியது.

தலம் 14 : கல்லறையில் இயேசு அடக்கம் செய்யப்படுதல்.

மேற்கண்ட தலங்களில் நம் வாழ்க்கைக்குப் பாடம் கற்றுக் கொடுக்கிற தலம் எண் ஐந்து. அதை நம் வாழ்க்கையில் பின்பற்றினால் நம் வாழ்வு ஒளிரும்.

அத்தலத்தைப் பற்றி புனித விவிலியத்தில் காணுகின்றபோது நம் பாவங்களுக்காக இறைமகன் இயேசு தாமே சிலுவையைச் சுமந்துகொண்டு, கரடு முரடான பாதையில் கல்லும் முள்ளும் கால்களில் தைக்க “மண்டையோடு’ (எபிரேய மொழியில் கொல்கொதா) என்னுமிடத்திற்குச் சிலுவையைச் சுமந்து செல்கிறார்.

“அப்போது அவரின் சிலுவையைச் சுமக்க ஒரு புண்ணியவான் வருகிறார். சீரேன் ஊரைச் சேர்ந்த சீமோன் என்பவர், வயல்வெளிகளில் வந்து கொண்டிருந்தார். படைவீரர்கள் அவரைப் பிடித்து, அவர் மேல் இயேசுவின் சிலுவையைச் சுமந்து கொண்டு போகச் செய்தார்கள்.’ (லூக்கா-23:26)

அவ்வாறு இயேசுவின் பாடுகளில் பங்கேற்கும் பேறு, முதன்முதலில் சீமோனுக்குத்தான் கிடைத்தது.

மேற்கண்ட நிகழ்ச்சியின் வாயிலாகக் கற்றுக் கொள்ளும் பாடம் என்னவெனில் பிறர் துன்ப, துயரங்களில் நாமும் பங்கேற்க வேண்டும் என்பதைத்தான்.

இதே கருத்தை புனித விவிலியத்தில் எசாயா எனும் பகுதியில், “கொடுமைத்தளைகளை அவிழ்ப்பதும், நுகத்தின் பிணையல்களை அறுப்பதும், ஒடுக்கப்பட்டோரை விடுதலை செய்து அனுப்புவதும், பசித்தோருக்கு உணவைப் பகிர்ந்து கொடுப்பதும், தங்க இடமில்லாத வறியோரை உங்கள் இல்லத்திற்கு அழைத்து வருவதும், உடையற்றோரைக் காணும்போது அவர் உடுக்க உடை கொடுப்பதும், உங்கள் இனத்தாருக்கு உங்களை மறைத்துக் கொள்ளாதிருப்பதும் அன்றோ நான் விரும்பும் நோன்பு! அப்போது உன் ஒளி விடியல் போல் எழும்; விரைவில் உனக்கு நலமான வாழ்வு துளிர்க்கும். உன் நேர்மை உனக்கு முன் செல்லும்; ஆண்டவரின் மாட்சி பின்சென்று காக்கும்’ (எசாயா 58: 6-8) எனக் காணலாம்.

அதாவது நம்மிடமுள்ள ஆணவம், தீண்டாமை, வீண் பெருமை, கொத்தடிமைத்தனம், ஏழை-பணக்காரன் என்ற பாகுபாடு, ஆண்-பெண் என்ற பேதம் போன்ற கட்டுகளை அறுத்து எறிந்துவிட வேண்டும்.

ஆம்! நம் பெற்றோர், சகோதர-சகோதரிகள், உறவினர்கள் மற்றும் அண்டை அயலார்களின் துன்ப-துயரங்களில், அவர்கள் படும் வேதனைகளில் நாமும் பங்கேற்று அன்பின் ஆழத்தைப் பதிய வைக்க வேண்டும்.

இயேசு கிறிஸ்து நம்மில் மாறாத அன்பு வைத்ததால்தான் நம் பாவங்களுக்காக பாவச்சிலுவையைச் சுமந்தார்; கல்வாரி மலையில் நடந்தார்; நமக்காக இறந்தார்; நமக்காக உயிர்த்தார் என்பதை நம் உள்ளத்தில் நிறுத்தி அவரின் வார்த்தைகளின்படி நாம் நம் வாழ்க்கை முறையை மாற்றி அமைத்துக் கொள்ள சித்தமானால் புனித வெள்ளியும், உயிர்ப்புப் பெருவிழாவும் உண்மையுள்ளதாகவும், அர்த்தமுள்ளதாகவும் அமையும்.

—————————————————————————————————————–
மகிழ்வைத் தேடி…!

சகோதரி ரோசரி

நான்கு நற்செய்தியாளர்களில் மத்தேயுவும் லூக்காவும் மட்டுமே இயேசுவின் பிறப்பு பற்றிய செய்தியை நமக்கு அளிக்கின்றனர்.

சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால் இயேசுவின் பிறப்பு பற்றிய மத்தேயுவின் செய்தி இனிப்பும் கசப்பும் கொண்டது. இதற்கு மாறாக லூக்காவின் செய்தி இனிப்பு மட்டுமே.

மத்தேயுவில் காணப்படும் இயேசுவின் பிறப்பு பற்றிய முன்னறிவிப்பு செய்தி பல அம்சங்களைக் கொண்டுள்ளது. வானதூதர் கனவின் மூலமாக அறிவிக்கும் எழுத்து முறையையும், பிறப்பு பற்றி வானதூதர் தோன்றி அறிவிக்கும் எழுத்து முறையையும் தன்னகத்தே கொண்டுள்ளதைக் காணலாம்.

இவை இரண்டும் பழைய ஏற்பாட்டு நூல்களில் காணப்படும் எழுத்து முறைகள். எடுத்துக்காட்டாக அபிமெலக் (ஆதி.20.1), லாபான் (ஆதி.31.24), யாக்கோபு (ஆதி.31.24) போன்றோர் கனவுகள் மூலம் இறைவனின் செய்தியை அறிகின்றனர். சாம்சன் (நீதி. 13) போன்றோரின் பிறப்பும் வானதூதர்களால் அறிவிக்கப்படுகின்றனர்.

சூசைக்கும் மரியாளுக்கும் மண ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது. அவர்கள் இன்னும் கூடி வாழவில்லை. ஆனால் மரியாளர் கருவுற்றிருப்பது சூசைக்குத் தெரிய வருகிறது. அவருக்கு ஒரே குழப்பம். யூத மரபுப்படி மண ஒப்பந்த முறிவு சீட்டு தந்துவிடலாம். அல்லது தவறு நடந்து விட்டது என ஊர் அறியச் செய்து தண்டனையை வாங்கித் தரலாம். இதில் சூசை, மரியாளை இகழ்ச்சிக்கு உட்படுத்தாமல் ரகசியமாக முறிவுசீட்டு அளிக்கத் திட்டமிட்டார்.

இச்சமயத்தில்தான் வானதூதர் அவருடைய கனவில் தோன்றி “”மரியாளை ஏற்றுக்கொள்ள அஞ்ச வேண்டாம்” என கடவுளின் திட்டத்தை வெளிப்படுத்துகிறார். “”மரியாள் ஒரு மகனைப் பெற்றெடுப்பார். அவருக்கு நீர் இயேசு என பெயரிடுவீர்” என்றும் கூறுகிறார்.

இயேசு என்ற பெயர் விண்ணகத்தில் இருந்து வந்தாலும் அதைச் சூட்டுவது என்னவோ சூசையே! தந்தை என்ற பிணைப்பை இது ஏற்படுத்துகிறது. இயேசுவின் தந்தையாக இருந்து அவர் ஆற்ற வேண்டிய கடமைகளையும் உணர்த்துகின்றது எனலாம்.

மேலும் பழைய ஆகமம் கூறும் முன்னறிவிப்பு இயேசுவின் பிறப்பில் நிறைவேறுகிறது என சுட்டிக்காட்டப்படுவதையும் பார்க்கிறோம். மொத்தத்தில் சூசையின் கனவு ஓர் இறையியல் பொக்கிஷம். இயேசு யார்? எங்கிருந்து வந்தவர்? என்ன செய்யப் போகிறார்? போன்ற கேள்விகளுக்கு விடையாக இருப்பதுதான் சூசை கண்ட கனவு. மேலும் இயேசு ஏதோ ஒரு வரலாற்று நபர் மட்டும் அல்ல; என்றும் நம்மோடு வாழும் கடவுள் (இம்மானுவேல்). இந்த அறிவிப்பு நூலின் இறுதியிலும் (28.16-20) தொடர்வது மிகவும் குறிப்பிடத்தக்கது. இதை உணர்கின்றவர்களுக்கு சூசையின் கனவு ஆயிரம் அர்த்தங்களைச் சொல்லும்.

கிறிஸ்துவின் பிறப்பு அகில உலகிற்கும் பெருமகிழ்ச்சியூட்டும் நற்செய்தியாகவே அறிவிக்கப்படுகிறது. (லூக்கா 2.10)

கிறிஸ்மஸ் பெருவிழா, உலக மீட்பராக இயேசு பிறந்ததை மையப்படுத்தும் விழா.

அன்பின் உன்னத அடையாளமாய் உருவெடுத்த இறைமகன் இயேசு உலகில் பிறந்த நிகழ்வை மகிழ்வுடன் நினைவுகூறும் விழா.

வாழ்வின் சுமைகளை மறந்து, அச்சுறுத்தும் கவலைகளைக் களைந்து, சலித்துப்போன வாழ்க்கைச் சூழலைத் தவிர்த்து, ஆண்டவனின் பிறந்த நாளை அர்த்தமுள்ளதாக வாழ அழைக்கும் அன்பின் பெருவிழா.

எந்த திருவிழாவானாலும் அதற்கொரு கொண்டாட்டம் இருக்கும். அக்கொண்டாட்டத்தில் ஆயிரமாயிரம் அர்த்தங்கள் பொதிந்திருக்கும்.

கிறிஸ்து பிறப்புவிழா மகிழ்வின் திருவிழா. இந்த மீட்பரின் வருகையால் “மகிழ்ச்சி’ எல்லோருக்கும் பொதுவாக்கப்படுகிறது. இயற்கை மகிழ்கிறது. பாலை நிலமும், பாழ்வெளியும் அகமகிழ்கிறது. மக்கள் மகிழ்கின்றனர். தள்ளாடும் கால்களும் தளர்ந்த கரங்களும் திடப்படுத்தப்படுகின்றன.

கிறிஸ்துவின் வருகை “”மீட்பை” நம் அனைவருக்கும் உரிமைச் சொத்தாக நிலைநிறுத்தியது. மக்களின் வாழ்வில் மறுமலர்ச்சியைக் கொணர்ந்தது. மகிழ்ச்சி, கிறிஸ்தவர்களின் அடையாளம். ஏனெனில் அவர்கள் கிறிஸ்துவில் மீட்பைக் கண்டு உணர்ந்தவர்கள்.

கிறிஸ்து பிறப்பின் திருப்பிரசன்னம் மகிழ்ச்சியை விதைத்தது. கிறிஸ்துவின் மாட்சிமைக்குரிய செயல்கள் மகிழ்ச்சியை ஏற்படுத்தின.

இத்தகைய மகிழ்ச்சியை, மாபெரும் நற்செய்தியை, அதாவது இம்மானுவேல் – “”கடவுள் நம்மோடு”, நம் மத்தியில், நம்மில் ஒருவராக மனிதனாக வந்து பிறந்துள்ளதைக் கொண்டாடுவதில்தான் எத்தனை எத்தனை அர்த்தங்கள்!

புத்தாடை அணிந்து, ஆலயம் சென்று திருவழிபாட்டில் பங்கேற்று, இறைவனின் ஆசி பெற்று, இனிப்புகள் வழங்கி, நட்புறவை வளர்த்து, உறவுகளைப் பலப்படுத்தி, இறை – மனித உறவுக்குச் சான்று பகர்வதில்தான் எத்தனை மகிழ்ச்சி! இது மனிதநேயத்தை வளப்படுத்தும் அன்பின் விழா.

பாலன் இயேசுவுக்கு வண்ணக்குடில் அமைப்பது, வீடுகளில் விதவிதமான நட்சத்திர விளக்குகள், வீதிகளில் அழகான தோரணங்கள்… இவையாவும் வெளி அடையாளங்கள் மட்டுமே.

அநேக நேரங்களில் மகிழ்ச்சியின் அர்த்தங்களைத் தொலைத்துவிட்டு மகிழ்ச்சியைத் தேடுவதாக எண்ணிக் கொண்டு, இன்பத்தை, மாயையைத் தேடி ஓடிக்கொண்டிருக்கிறது இன்றைய சமுதாயம்.

“”நான் மகிழ்ச்சியை அடைய வேண்டுமென நெடுங்காலம் பாடுபட்டேன்.

இந்த மகிழ்ச்சியை எங்கோ தொலைவில் தேடினேன்.

மகிழ்ச்சி என்பது ஒரு நதியின் நடுவில் இருக்கும் தீவு என்றிருந்தேன்.

அதுவே நதியாக இருந்திருக்கலாம்.

மகிழ்ச்சி என்பது பாதையின் முடிவில் இருக்கும் ஒரு சத்திரத்தின் பெயர் என்றிருந்தேன்.

ஆனால் அதுவே பாதையாக இருந்திருக்கலாம்.

மகிழ்ச்சி என்பது நாளை என்று நினைத்திருந்தேன்.

அதுவோ, இப்போதே, இங்கேயே இருக்கிறது.

நானோ அதை எங்கெங்கோ தேடினேன்” என்கிறார் மைக்கில் ஆடம்.

இறைவன் தன்னையே மனித குலத்தோடு பகிர்ந்து கொண்டதுபோல், நம்மையும், நம்மிடமுள்ளவைகளையும், இல்லாதவர்களோடு, ஏழை, எளியவரோடு பகிர்ந்து கொள்வதில்தான் நம் கொண்டாட்டங்களின் உண்மை அர்த்தத்தை, பலனை அனுபவிக்க முடியும்.

கிறிஸ்து பிறந்த அன்று வானகத் தூதர்கள் பாடிய “”விண்ணகத்தில் இறைவனுக்கு மகிமை, மண்ணகத்தில் மாந்தருக்கு அமைதி” என்ற பாடலின் வாழ்த்தொலி நம் இல்லங்களிலும், உள்ளங்களிலும் எதிரொலிக்கட்டும்.

இறைவன் தரும் மகிழ்ச்சியைப் பிறரோடு பகிர்ந்து வாழ்வதில் நிறைவைக் காண்போம். நிலை வாழ்வை நோக்கிப் பயணிப்போம்.

—————————————————————————————————————–

Posted in Bible, Birthday, Christ, Christian, Christianity, Christmas, Church, Cross, Easter, Fasting, God, Good Friday, History, Jeez, Jesus, Jesus Christ, Pope, Pray, Prayer, Preach, Religion, Testament, Xmas | Leave a Comment »

Hindu & Buddhist style worship practices for Jesus Christ in Kerala

Posted by Snapjudge மேல் ஜனவரி 26, 2007

கேரளாவில் பரபரப்பு: புத்தரைப் போன்ற ஏசு கிறிஸ்து சிலை

கொல்லம், ஜன.26-

கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் பரிமனம் கிரா மத்தில் கத்தோலிக்க கிறிஸ் தவர்களின் தேவாலயம் ஒன்று உள்ளது. இங்குள்ள ஜெபக்கூடத்தில் போதி மரத்தடியில் புத்தர் தியானம் செய்வது போல ஏசு கிறிஸ் துவின் சிலை வைக்கப்பட்டுள்ளது.

மேலும் வலது கையால் யோகா முத்திரையைக் காட்டுவது போலவும், இடது கையை தொடையில் வைத்த படியும் சிலை வடிவமைக் கப்பட்டுள்ளது.

அந்த ஜெபக்கூடத்தில் ஏசு தனது 12 சீடர்களுக்கு அளிக்கும் கடைசி விருந்தானது நமது இந்திய கலாசராப்படி நடப்பது போல ஓவியம் வரையப்பட்டுள்ளது. அதில் 12 சீடர்களும் ஏசுவின் முன்பு தரையில் அமர்ந்து வாழை இலையில் சாப்பிடுவது போல வரைந்துள்ளனர்.

“ஜெகத் ஜோதி மந்திர்” என்று பெயரிடப்பட்டுள்ள அந்த ஜெபக்கூட்டத்தில் “ஆம் ஏசு கிறிஸ்துவே நமஹா” என்று கொட்டை எழுத்துக்களில் எழுதப்பட்டுள்ளது. ஏசு சிலை முன்பு 2 பெரிய குத்து விளக்கு வைக்கப்பட்டுள்ளது. முழுக்க இந்திய கலாசாரப்படி இந்த ஜெபக்கூடம் அமைக் கப்பட்டுள்ளதாக கொல் லத்தை சேர்ந்த பாதிரியார் ரோமன்ஸ் ஆன்டனி தெரி வித்தார்.

புத்தர் போல ஏசு சிலை வடிவமைக்கப்பட்டிருப்பதற்கு கேரளாவில் உள்ள சில கிறிஸ்துவ அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்தநிலையில் அந்த ஜெபக்கூட்டத்தை இன்று பிஷப் ஸ்டான்லி ரோமன் திறந்து வைத்தார்.

Posted in Buddha, Buddhism, Christ, Christian, Christianism, Christianity, Church, Hindu, India, Jegath Jothi Mandhir, Jegath Jothy Mandhir, Jesus, Kerala, Kollam, Quilon, Reigion, Tamil, Worship | Leave a Comment »