Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Chikunkunya’ Category

Chikun Kunya attacks Kerala – 62 ill

Posted by Snapjudge மேல் மே 30, 2007

கேரளத்தில் 62 பேருக்கு சிக்குன் குன்யா

திருவனந்தபுரம், மே 30: கேரள மாநிலத்தில் கடந்த ஒரு மாதத்தில் 62 பேர் சிக்குன் குன்யா காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத் துறையின் 5 உறுப்பினர்கள் குழுவுடன் நடத்திய ஆலோசனைக்கு பின், கேரள சுகாதாரத்துறை அமைச்சர் பி.கே. ஸ்ரீமதி இது குறித்து கூறியது:

சிக்குன் குன்யா நோய்க்கு எவரும் பலியாகவில்லை. பதனம்திட்டா மாவட்டம் சித்தூரில் அதிக அளவாக 49 பேர் சிக்குன் குன்யாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இடுக்கி, கோட்டயம், பாலக்காடு, திருச்சூர், ஆலப்புழை மற்றும் கொல்லம் ஆகிய மாவட்டங்களிலும் இந்நோய் தாக்குதல் கண்டறியப்பட்டுள்ளது என்றார் அவர்.

—————————————————————————————————————–

தமிழகத்தில் மீண்டும் சிக்குன் குனியா?

சென்னை, ஜூன். 3: தமிழகத்தில் சிக்குன் குனியா நோய் தடுப்பு நடவடிக்கைகளுக்கு ரூ. 7 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் சனிக்கிழமை தெரிவித்தார்.

இது தொடர்பாக சென்னையில் நிருபர்களிடம் அவர் கூறியது:

கேரள மாநில எல்லையை ஒட்டியுள்ள தமிழக மாவட்டங்களில் சிக்குன் குனியா நோய் பாதிப்பு ஏற்படாமல் இருக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த மாவட்டங்களில் நோய் பாதிப்பு ஏற்பட்டால் மருந்து தட்டுப்பாடு ஏற்படாத வகையில் தேவையான மருந்துகள் அனுப்பப்பட்டுள்ளன. சித்த மருந்துகளும் இப் பகுதிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளன.

தமிழகம் முழுவதும் சிக்குன் குனியா நோய் பாதிப்பு ஏற்படாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பதற்காக ரூ. 7 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என்றார் ராமச்சந்திரன்.

——————————————————————————-

கேரளாவில் சிக்குன்குனியாவால் சாவு எண்ணிக்கை 70-ஐ தாண்டியது

திருவனந்தபுரம், ஜுன்.12-

கேரள மாநிலத்தில் வேகமாக பரவி வரும் சிக்குன் குனியா வைரஸ் காய்ச்சலால் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு உள்ளனர். கோட்டயம், பத்தினம்திட்டை, இடுக்கி, ஆலப்புழை, கொல்லம் ஆகிய மாவட்டங் களில் தான் சிக்குன்குனியா தாக்கம் அதிகமாக உள்ளது.

இம்மாவட்டங்களில் மட்டும் சிக்குன்குனியாவால் பாதிக்கப்பட்ட 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஆஸ்பத்திரியில் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நேற்று கோட்டயம் அரசு ஆஸ்பத்திரியில் 10, 319 பேரும், இடுக்கி ஆஸ்பத்திரியில் 3073 பேரும், ஆலப்புழை மாவட்டத்தில் 1515 பேரும் சிகிச்சை பெற்றனர். இதுதவிர தனியார் ஆஸ்பத்திரிகளிலும் ஆயிரக்கணக்கானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சிக்குன்குனியாவுக்கு பலி யானோர் எண்ணிக்கையும் அதிகரித்து கொண்டே போகிறது. நேற்றும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு குட்டப்பன் (வயது56), அன்னம்மா (59), வேலாயுதன் (67), அய்யப்பன் (60), தோமஸ் (76), லீலா (56), பொன்னன்குட்டி (78) ஆகிய 7 பேர் பலியாகி உள்ளனர்.

இதன் மூலம் சாவு எண்ணிக்கை 70-ஐ தாண்டியது.

சிக்குன்குனியாவால் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரி யில் சிகிச்சை பெற்று வந்த திருவனந்தபுரம் வெம்பாயம் பகுதியை சேர்ந்த அனில்குமார் என்பவர் நேற்று முன்தினம் இறந்தார். இவருக்கும் உஷாகுமாரி என்ற மனைவியும், ஆதிரா, அஞ்சு, ஆரியா என்ற 3 பெண் குழந்தைகளும் உள்ளனர்.

அனில்குமாரின் உடலை பார்த்து அவரது மனைவி உஷாகுமாரி மற்றும் 3 குழந்தைகளும் கதறி அழுதது நெஞ்சை உறுக்குவதாக இருந்தது. இனிமேல் இந்த 3 குழந்தைகளும் நான் எப்படி காப்பாற்றுவேன் என உஷாகுமாரி கதறி அழுதார்.

சிக்குன்குனியா காய்ச்சலை கட்டுப்படுத்த மாநிலம் முழுவதும் ராணுவ டாக்டர்கள் முகாம் அமைத்து சிகிச்சை அளித்து வருகின்றனர். கோட்டயம், திருவனந்தபுரம் அம்பூரி உள்ளிட்ட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் ராணுவ டாக்டர்கள் அமைத்துள்ள தற்காலிக முகாமில் தினமும் ஆயிரக்கணக் காணவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Posted in Alapula, Alapuza, Alapuzha, Chicken, Chicken gunya, Chicken Kuniya, Chicken Kunya, Chicken pox, Chickenkunya, Chickenpox, chickun gunya, Chikan Kunya, Chiken Gunya, chiken kunya, Chikun Gunya, Chikun kanya, Chikun Kunya, Chikungunya, Chikunkunya, Chithoor, Chithur, Chitore, CPI, dead, Disease, DMK, Kerala, KKSSR, Kollam, Kottayam, Outbreak, Palacaud, Palaghat, Palakode, Quilon, Sathoor, Sathur, Thrichoor, Thrichur, TN, Trichoor, Trichur | 4 Comments »

Mosquito Menace – Rajapalayam Ku Ganesan : Public Sanity Projects & Environment

Posted by Snapjudge மேல் திசெம்பர் 15, 2006

கொசுக்களுடன் ஒரு பனிப்போர்

ராஜபாளையம் கு. கணேசன்

“சிங்கத்தைக் கூட அதன் குகைக்கே சென்று சந்திக்கும் ஆற்றல் உள்ள மனிதன், சிறு கொசுவுக்குப் பயந்து பதுங்கிக் கொள்கிறான் ஒரு கொசுவலைக்குள்’ என்று ஒரு புதுக்கவிதை உண்டு. இன்று இது நடைமுறை உண்மையாகி வருகிறது. இந்தியாவில் கொசுக்களை ஒழிக்கும் முறையான திட்டங்கள் தொடங்கி அரை நூற்றாண்டுக்கும் மேலாகி விட்டது. என்றாலும், இன்றளவும் கொசுக்கள் ஒழிந்தபாடில்லை. இதற்குக் காரணம், கொடிய நோய்கள் மக்களைப் பாதிக்கும்போது கொசுக்களை ஒழிக்கும் களப்பணிகள் தீவிரமடைவதும், இந்த நோய்கள் குறைந்து வரும்போது, கொசு ஒழிப்பின் மீதான அரசின் அக்கறையும் மக்களின் கவனமும் குறைந்து விடுவதும் வழக்கமாகி விட்டது.

கொசுக்களை ஒழிக்கவும் நோய்களைத் தடுக்கவும் தங்களுக்குத் தெரிந்த “ஆயுதங்’களை, மக்கள் பயன்படுத்தியிருக்கிறார்கள். கடந்த ஐம்பது ஆண்டுகளில் நடைபெற்றிருக்கும் கொசு ஒழிப்புத் திட்டங்களை உற்றுக் கவனித்தால் ஒன்று மட்டும் நன்றாகப் புரிகிறது – உலகளவில் ஏற்பட்டிருக்கும் நவீன அறிவியல் வளர்ச்சியாலும், புதுப்புது மருத்துவக் கண்டுபிடிப்புகளினாலும் இந்தக் கொசு ஒழிப்பு ஆயுதங்கள்தான் அவ்வப்போது மாறிக் கொண்டிருக்கின்றனவே ஒழிய, கொசுக்களை மட்டும் நம்மால் ஒழிக்க முடியவில்லை.

1950களில் இந்தியாவில் மலேரியா தீவிரமாகப் பரவி ஏராளமான மரணங்கள் நிகழ்ந்தபோது, “தேசிய மலேரியா கட்டுப்பாட்டுத்திட்டம்’ எனும் பெயரில் கொசுக்களுக்கு எதிராக ஒரு போர் 1953-ல் தொடங்கியது. அப்போது நம்மிடம் இருந்த ஒரே ஆயுதம் “டி.டி.டி.’ ( DDT) என்னும் மருந்து மட்டுமே. தொடர்ந்து ஐந்து ஆண்டுகள் இதைச் செயல்படுத்தியதில் இந்தியாவில் மலேரியா பரவுவது வேகமாகக் குறைந்தது; கொசுக்களும் ஓரளவிற்கு ஒழிந்தன. என்றாலும் காலப்போக்கில் இந்தியக் கொசுக்களின் மரபணுக்களில் ஏற்பட்ட “தடாலடி’ மாற்றங்களால் இந்த “டி.டி.டி.’ மருந்தையே எதிர்க்கிற ஆற்றல் அவற்றுக்கு வந்துவிட்டது. இதனால் “தேசிய மலேரியா ஒழிப்புத் திட்டம்’ எனும் பெயரில் இந்தப் போராட்டத் திட்டங்களை 1958லும் 1977லும் சற்று மாற்றி அமைத்தார்கள். இதன்படி டி.டி.டி. மருந்து பலன் தராத இடங்களில் “லின்டேன்’, “மாலத்தியான்’ போன்ற மருந்துகளைத் தெளித்தார்கள். இதுவும் சில ஆண்டுகளுக்குப் பலன் தந்துவிட்டு மீண்டும் “படுத்து’க் கொண்டது.

காரணம், கொசுக்கள் வாழும் திறந்தவெளிச் சாக்கடைகள், தண்ணீர்த் தொட்டிகள், நீர்சேமிப்புப் பாத்திரங்கள் போன்றவற்றிலிருந்து கொசுக்கள் மீண்டும் மீண்டும் பெருக்கமடைந்து வீடுகளுக்குள் வந்து விடுகின்றன. இந்த “வழிகளை’ அடைக்க வேண்டுமென்றால் “சுற்றுப்புறத்தைத் தூய்மையாகப் பேண வேண்டும்; தேங்கும் நீர்நிலைகளில் கொசுக்கள் பெருகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்’ என்ற சுகாதார விழிப்புணர்வு மக்களிடம் ஏற்பட வேண்டியது அவசியம்.

என்றாலும் இந்த வழிகளை அடைப்பதற்கு இரண்டு புதிய மருத்துவ ஆயுதங்களும் தயாராயின. ஒன்று, “பைரெத்ரின்’ என்னும் கொசு ஒழிப்புப் புகைமருந்து. மற்றொன்று, கொசுவின் லார்வாக்களை அழிக்கும் “அபேட்’ எனும் நுண்ணுயிரி மருந்து. இவற்றில் “கொசு ஒழிப்புப் புகைமருந்து’ தெருக்களில் புகையாகத் தெளிக்கப்படுவது. இது கொசுக்களின் நரம்புகளைப் பாதித்து அவற்றை உடனடியாகக் கொன்று விடுகிறது. இந்த மருந்தை உட்கொண்ட லார்வாக்களின் உணவுப்பாதை கிழிபட்டு அழியும். அதனால் கொசுப்புழுக்கள் 100% அழிக்கப்படும். என்றாலும் இதற்கு ஊராட்சிகள், நகராட்சிகள், மாநகராட்சிகள் போன்றவற்றின் ஒத்துழைப்பு முழுமையாகக் கிடைக்க வேண்டும். ஆனால் இந்த ஆட்சிமன்றங்கள் கொசு ஒழிப்பிற்கு என ஒதுக்கும் நிதி மிகக் குறைவு என்பதால் இந்த “ஆயுத’ங்களும் சரியாகச் செயல்படவில்லை.

அதேநேரத்தில், கொசுக்களை ஒழிப்பதற்காக இதுவரை நாம் பயன்படுத்திய பூச்சிக்கொல்லிகளின் வேதிப்பொருள்கள் அனைத்துமே நீர், நிலம், காற்று இம் மூன்றிலும் நச்சுக்களைக் கலந்து, சுற்றுச்சூழலைப் பாதிக்கத் தொடங்கின; இதை உறுதி செய்யும் விதத்தில், “இந்தியாவில் பெருகிவரும் ஆஸ்துமா போன்ற நெஞ்சக நோய்களுக்கு கொசுக்களை அழிக்கப் பயன்படுத்திய டி.டி.டி. மருந்துதான் காரணம்’ என்று ஓர் ஆய்வு தெரிவித்தது. எனவே, சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பு ஏற்படாத விதத்தில், உலக அளவில் கொசுக்களை ஒழிக்கப் பயன்படுத்தப்படும் வேறு “ஆயுத’ங்களைப் பயன்படுத்தலாமா என இந்தியச் சுகாதாரத்துறை யோசித்தது.

நியூசிலாந்தில் ஆண் கொசுக்களின் மரபணுக்களை மாற்றி வைத்து, அவற்றை மலடாக்கி, கொசுக்களின் இனப்பெருக்கத்தைக் கட்டுப்படுத்தி உள்ளார்கள்.

கொசுக்கடியிலிருந்து தப்பித்தாலே மலேரியா, சிக்குன்குனியா, டெங்கு போன்றவற்றிலிருந்தும் தப்பிக்கலாம் என்பது அனைவரும் அறிந்த விஷயம். இதற்குக் கொசுவலைகள் மற்றும் கொசுவிரட்டி வில்லைகளை “ஆயுத’ங்களாகப் பயன்படுத்தலாம் என யோசனை கூறப்பட்டது.

இந்தக் கொசுவிரட்டிகளில் பல வகைகள் உள்ளன. “டைஎதில் டாலுவாமைடு’ அல்லது “டைஎதில் பென்சாமைடு’ எனும் மருந்து உள்ள களிம்பைப் பகல் நேரத்தில் உடலில் பூசிக்கொண்டால் தாற்காலிகமாகக் கொசு கடிப்பதிலிருந்து தப்பிக்கலாம். என்றாலும் இதனால் சிலருக்குத் தோல் ஒவ்வாமை ஏற்பட வாய்ப்புண்டு.

அடுத்ததாக, நெருப்பில் புகையும் கொசு ஒழிப்புச் சுருள்கள், மணிக்கட்டில் கட்டப்படும் மருந்துப் பட்டைகள் மற்றும் மின்சாரத்தில் ஆவியாகும் திரவ மருந்துகளும் கொசுக்களை ஒழிக்கப் பயன்படுத்தப்படுகின்றன. ஆனாலும், இவற்றில் உள்ள அல்லெத்ரின், பிராலெத்ரின், இன்டலோன், டைமெதில் தாலேட், டைமெதில் கார்பேட் போன்ற வேதிப்பொருள்கள் சிலருக்கு ஒத்துக்கொள்வதில்லை என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

குறிப்பாக இவை குழந்தைகளுக்கு ஆஸ்துமாவை ஏற்படுத்துகின்றன. மேலும் இந்த “ஆயுத’ங்களைச் சந்தையில் விற்பதற்கு ஊடகங்கள் செய்யும் விளம்பரங்களோடு ஒப்பிட்டால் இவற்றின் தகுதி மற்றும் திறன் பற்றி ஐயங்கள் எழுகின்றன.

இவை உண்மையிலேயே செயல்பட்டிருந்தால் இன்றைக்கு இந்தியாவில் கொசுக்களே இருக்கக் கூடாது. நிலைமை அப்படி இருக்கிறதா? யோசிக்க வேண்டியதிருக்கிறது.

ஆகவே, இனி மீதமிருக்கும் ஒரே “ஆயுதம்’ கொசுவலைதான். இதனால் நமக்கு அதிகச் செலவில்லை. சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பில்லை. பயன்படுத்துவது மிக எளிது. பக்கவிளைவுகள் இல்லாதது. அதேநேரத்தில் இதை நாம் சரியாகப் பயன்படுத்தினால்தான் கொசுக்கடியிலிருந்து முழுவதுமாகத் தப்பிக்க முடியும்.

குறிப்பாக, படுக்கப் போகும்போது கொசுவலையைக் கட்டிப் பலனில்லை. ஏனென்றால், வழக்கமாக இருட்டத் தொடங்கும் நேரத்தில்தான் கொசுக்கள் தெருக்களிலிருந்து வீட்டின் மூலை முடுக்குகள், படுக்கைகள் போன்றவற்றை வந்தடையும். ஆகவே அவை வீட்டிற்குள் வருவதற்கு முன்பே – மாலை 5 மணி அளவில் – படுக்கையில் கொசுவலையைக் கட்டிவிட வேண்டும். அப்போதுதான் கொசு நம்மைக் கடிக்காது. சரி, கூட்டுக்குடும்பங்களுக்கு இது சரிப்படும். வீட்டில் கணவன், மனைவி இருவரும் வேலைக்குச் செல்பவர்களாக இருந்தால் என்ன செய்வது? காலையில் அலுவலகம் கிளம்பும்போதே கொசுவலையைக் கட்டிவிட வேண்டியதுதான். வேறு வழி?

Posted in airborne, Chicken gunya, Chicken Kuniya, Chicken Kunya, Chickenkunya, chickun gunya, Chikan Kunya, Chiken Gunya, chiken kunya, Chikun Gunya, Chikun kanya, Chikun Kunya, Chikungunya, Chikunkunya, DDT, Dengue, Dichloro-diphenyl-trichloroethane, Disease, Environment, Health, Infection, Mosquito, Outbreak, Sanity, Tamil, Waterborne | 1 Comment »

‘Healthcare schemes to protect Future Generations’ – KKSSR

Posted by Snapjudge மேல் நவம்பர் 20, 2006

வருங்கால தலைமுறையை காக்கும் சுகாதார திட்டங்களுக்கு முன்னுரிமை: அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.

சென்னை, நவ. 20: வருங்காலத் தலைமுறையைக் காக்கும் வகையில் சுகாதாரத் திட்டங்களைச் செயல்படுத்துவதற்கு அரசு முன்னுரிமை அளித்து வருகிறது என்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்தார்.

சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற உலகப் பார்வை தின விழாவில் அமைச்சர் பேசியதாவது:

நோய்ப் பரவல் தடுப்பு மற்றும் வருமுன் காத்தல் என்று இரு அணுகுமுறைகளை அரசு மேற்கொண்டுள்ளது. எனினும், குழந்தைகள் உள்பட இளைய தலைமுறையினரைக் காக்கும் வகையில் சுகாதாரத் திட்டங்களைச் செயல்படுத்துவதில் அரசு அதிக ஆர்வம் கொண்டுள்ளது.

நோய் தடுப்பு குறித்து மக்களிடையே விழிப்புணர்வு அவசியம்.

தமிழகத்தில் கடந்த 2004-05-ம் ஆண்டில் கண் தானம் மூலம் 4001 கண்கள் மட்டுமே பெறப்பட்டன.

எனவே, கண் தான விழிப்புணர்வு பிரசாரத்தை தீவிரப்படுத்த வேண்டும் என்றார் அமைச்சர்.

சுகாதாரத்துறை செயலாளர் வி.கே. சுப்புராஜ் பேசியதாவது:

இந்த ஆண்டில் மட்டும் தமிழகத்தில் 1 லட்சம் பேருக்கு கண்புரை அறுவைச் சிகிச்சை அளித்து சாதனை செய்யப்பட்டுள்ளது.

ஊட்டச்சத்துக் குறைபாடுள்ளவர்களுக்கு கண் பார்வை இழப்பைத் தடுக்கும் வகையில் வைட்டமின் ஏ கரைசல் திரவம் விரைவில் விநியோகிக்கப்படும் என்றார் அவர்.

தமிழ்நாடு பார்வை இழப்பு தடுப்பு சங்க திட்ட இயக்குநர் டாக்டர் டி. செல்வகுமாரி, எழும்பூர் அரசு கண் மருத்துவமனை இயக்குநர் டாக்டர் வி. வேலாயுதம் உள்பட பலர் பங்கேற்றனர்.

Posted in Chikan Kunya, Chiken Gunya, chiken kunya, Chikun Gunya, Chikun kanya, Chikun Kunya, Chikungunya, Chikunkunya, Eye, Healthcare, KKSSR, Minister, Outbreak, TN | Leave a Comment »

TN Govt. (atlast) declares Chikungunya as notifiable disease

Posted by Snapjudge மேல் நவம்பர் 7, 2006

சிக்குன்குனயா தொற்று நோய் என தமிழக அரசு அறிவிப்பு

சிக்கன்குனியாவைப் பரப்பும் கொசு
சிக்கன்குனியா நோயைப் பரப்பும் கொசு

இதற்கிடையே, கடந்த சிலமாதங்களாக தமிழகத்தில் பரவலாக பாதிப்பை ஏற்படுத்திய சிக்குன்குனியா நோயை, அரசுக்கு அறிவிக்கப்படவேண்டிய தொற்றுநோயாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் காலரா, மலேரியா, அம்மை, டைபாய்ட் காய்ச்சல் உள்ளிட்ட 21 நோய்கள் ஏற்கெனவே அரசுக்கு அறிவிக்கப்படவேண்டிய தொற்றுநோய்களாக தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ளன. தற்போது சிக்குன் குன்யாவும் அந்த பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.

தமிழக அரசியல் அரங்கில் சிக்குன் குன்யா நோய் பரவல் என்பது தமிழகத்தை ஆளும் திமுகவுக்கும் பிரதான எதிர்கட்சியான அதிமுகவுக்கும் இடையிலான அரசியல் விவகாரமாக உருவெடுத்ததால், தமிழகத்தில் சிக்குன் குன்யாவின் நிஜமான பாதிப்பு எவ்வளவு என்பது குறித்து முறையான தகவல்கள் இல்லை என்று சுகாதாரத்துறை வல்லுனர்கள் பலர் கவலை தெரிவித்திருந்தனர். குறிப்பாக தமிழ்நாட்டில் எத்தனைபேருக்கு சிக்கன் குன்யா காய்ச்சல் தாக்கியது என்பது குறித்து இருவேறு மதிப்பீடுகள் நிலவி வருகின்றன.

அரசு தரப்பில் சுமார் அறுபதாயிரத்துக்கும் அதிகமானவர்கள் சிக்குன் குன்யாவால் பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் எதிர்தரப்பில் லட்சக்கணக்கானவர்கள் சிக்குன் குன்யாவால் பாதிக்கப்பட்டதாக தெரிவித்தனர்.

அரசு மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக வந்த சிக்குன் குன்யா நோயாளிகளின் கணக்கை மட்டுமே அரசு தருவதாகவும், அவர்களைப்போல பலமடங்கு நோயாளிகள் தனியார் மருத்துவ மனைகளிலும் தனியார் மருத்துவர்களிடமும் சிகிச்சை பெற்ற விவரத்தை அரசு கணக்கில் கொள்ளவில்லை என்றும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.

Posted in Affected, Chicken gunya, Chicken Kuniya, Chicken Kunya, Chickenkunya, chickun gunya, Chikan Kunya, Chiken Gunya, chiken kunya, Chikun Gunya, Chikun kanya, Chikun Kunya, Chikungunya, Chikunkunya, dead, Disease, Govt, Healthcare, Infectious, Outbreak, Tamil Nadu, TN, Toll | 1 Comment »

‘West Nile carrying Mosquitoes to spread AIDS virus’ – Health Expert

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 16, 2006

கொசுவால் `எய்ட்ஸ்’ பரவும் ஆபத்து: மத்திய நிபுணர் குழு எச்சரிக்கை 

ஆலப்புழை, அக். 16-

நம்நாட்டில் சமீப காலமாக கொசுக்கள் மூலம் சிக்குன் குனியா, டெங்கு போன்ற நோய்கள் அதிக அளவில் பரவி வருகிறது. சிக்குன் குனியா காய்ச்சலுக்கு தமிழ் நாடு, ஆந்திரா, கேரளா போன்ற மாநிலங்களில் ஏராள மானோர் பலியாகி உள்ளனர். கேளாவில் 100-க்கும் மேற் பட்டோர் சிக்குன் குனியா நோய்க்கு பலியானதாக முதல்-மந்திரி அச்சுதானந்தன் அறிவித்தார். சிக்குன் குனியா நோய் பரவுவதை தடுக்க கேரள அரசு போர்க்கால நடவடிக்கை எடுத்து வருகிறது.

அங்குள்ள சுகாதாரத்துறை டாக்டர்கள், நர்சுகள் வீடு வீடாகச் சென்று சிக்குன் குனியா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருகிறார்கள். சிக்குன் குனியாவால் அதிகமாய் பாதிக்கப்பட்ட ஆலப்புழை மாவட்டத்தில் நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

உலக சுகாதார அமைப்பும், மத்திய அரசின் நிபுணர் குழு வும் ஆலப்புழை மாவட்டம் சேர்த்தலா பகுதிக்கு சென்று அங்குள்ள கொசுக்களை பிடித்து பரிசோதனை நடத்தியது. அக்கொசுக்களை பரிசோ தனை செய்த அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

பரிசோதனையில் ஆலப் புழையில் 38 வகையான கொசு இனங்களை கண்டு பிடித்தனர். அதில் 12 வகை யான கொசுக்கள் மிகவும் ஆபத்து நிறைந்தவை என்று கண்டறியப்பட்டது.

அவற்றில் மூளைக்காய்ச்சல் வைரஸ், வெஸ்ட் நெய்ல் வைரஸ் ஆகியவை இணைந்த புதிய வகை வைரஸ் கொண்ட கொசு இனம் ஒன்றையும் கண்டு பிடித்தனர்.

இதுபற்றி கொசு இனங்களை ஆய்வு நடத்திய மருத்துவ நிபுணர் ஒருவர் கூறும்போது, “சமீபகாலமாக ஏராளமான வைரஸ் கிருமிகள் கொசுக்கள் மூலம்தான் மக்களிடம் பரவி வருகிறது. இதனால் டெங்கு, சிக்குன் குனியா அதிக அள வில் பரவி வருகிறது.

ஆபத்தான நோய்களை பரப்பும் இந்த வகை கொசுக் களை அழிக்க மத்திய-மாநில அரசுகள் உடனடியாக நட வடிக்கை மேற்கொள்ள

வேண்டும்.இல்லையென்றால் எச்.ஐ.வி. வைரஸ் கூட கொசுக்கள் மூலம் பரவும் பேராபத்து உள் ளது. கொசுக்களில் எச்.ஐ.வி. வைரஸ் தொற்றினால், அக் கொசு கடிக்கும் மக்களுக்கு எய்ட்ஸ் நோய் பரவும் வாய்ப்பு உள்ளது. அதனால் கொசுக்களை ஒழிக்க மாநில அரசுகள் போர்க்கால நட வடிக்கை எடுப்பது அவசிய மான ஒன்று.

சிக்குன் குனியா காய்ச்சல், வெஸ்ட் நெய்ல் காய்ச்சல் இரண்டுமே ஒரே மாதிரியான வைரஸ் பரவுகிறது. இத னால் இக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் உடல் நலன் கடுமையாகப் பாதிக்கப்படுகிறது.

கேரளாவில் சிக்குன் குனியா நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளிடம் பரிசோதனை மேற்கொண்டோம். அவர்கள் அத்தனை பேரும் காய்ச்சலுக்குப் பிறகு உடல் எடை குறையுது காணப்படுகிறார்கள். அதற்கான காரணம் பற்றியும் ஆய்வு நடத்தி வருகிறோம் என்றார்.

Posted in AIDS, Chicken Kunya, Chikun Kunya, Chikunkunya, Dengue, Healthcare, Infection, Kerala, Outbreak, Virus, West Nile | 1 Comment »

Chikun Kunya – Homeopathy, Alternate Medicines : Prescriptions for Cure & Care

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 16, 2006

ஹோமியோபதி மருந்து!

“ஆளைக் கடிச்சு, அரசையும் கடிக்குது’ தலையங்கம் (5-10-06) கண்டேன்.

சிற்றூர்ப்புறம், நகர்ப்புறம் சார்ந்த எந்தப் பகுதிகளையும் விட்டு வைக்காது மக்களை வாட்டித் துன்புறுத்துகிறது சிக்குன் குனியா காய்ச்சல் என்ற ஆள் முடக்கு நோய். நபர்களின் உழைப்புத் திறனை முடக்கிப் போட்டு ஒன்றும் செய்ய இயலாமல் ஆக்கும், சிக்குன் குனியாவிற்கு முழுமையான மருந்து “ஒத்தியல்’ என்றழைக்கப்படுகின்ற ஹோமியோபதி மருத்துவத்திலேயே உள்ளது. வந்த பின் காக்கும் மருந்துகளோடு, வராமலே தடுக்கின்ற மருந்துகளும் ஒத்தியல் மருத்துவத்திலேயே உள்ளன. தேர்ந்த அனுபவமிக்க மருத்துவர்களால், நோயாளிகளின் உடல் மற்றும் மனநிலையைப் பொறுத்து ஒத்தியல் மருந்துகள் வழங்கப்படுகின்றன. மருத்துவரின் பரிந்துரையோடு இம்மியளவும் பிசகாமல் இதனை உட்கொள்ள ஆரம்பித்தால், எலும்பு இணைப்புப் பகுதிகளில் நிலவும் கடுமையான வலிகள் அறவே குறைந்து விடுகின்றன. நோய்த் தாக்குதலுக்கு ஆளான இரண்டிலிருந்து மூன்று நாட்களுக்குள் முழுமையான குணம் பெற்று இயல்பு நிலைக்குத் திரும்ப முடியும். இது ஒத்தியல் மருத்தவத்தாலேதான் சாத்தியம். மதுரையைச் சார்ந்த “நலம்’ (NALHAM – New Association for Learning Homoeopathy and Alternative Medicines, Reg. . 96/2004) என்ற தன்னார்வ ஒத்தியல் மருத்துவ அமைப்பு சிற்றூர்ப்புறங்களிலும், நகர்ப்புறங்களிலும் தீவிரமான மருத்துவ முகாம்களை இலவசமாக நடத்தி வருகிறது.

இரா. சிவக்குமார்,
மதுரை.

3 நாள் மருந்து

சிக்குன் குனியா கண்டவருக்கு மிகவும் எளிமையானதும் விரைவில் குணங்காணக் கூடியதுமான மருத்துவம் ஹோமியோபதியில் உள்ளன. இந்நோய் தாக்குதலுக்கான அனைத்து வயதினர்க்கும் 3 நாள்களுக்கு யூபட்டோரியம் பெர் (200) என்ற மருந்தும் மூட்டுவலியைக் குணப்படுத்த ரஸ்டாக்ஸ் (200) என்ற மருந்தும் போதுமானது. ஹோமியோபதி மருந்துகளை ஆந்திர மாநில அரசு அங்கீகரித்து இலவசமாக வழங்கி வருகிறது. ஆனால் தமிழகத்தில் மட்டும் ஹோமியோபதி மருத்துவம் மாற்றான் தாய் மனப்பான்மையுடனே நடத்தப்படுகிறது. “”எண்ணிலா நோயுடையார்-இவர் எழுந்து நடப்பதற்கும் வலிமையிலார். கண்ணிலா குழந்தைகள்போல்-பிறர் காட்டிய வழியிற் சென்று மாட்டிக் கொள்வார்” என்று பல ஆண்டுகளுக்கு முன் இன்றைய அவல நிலையைச் சுட்டிக்காட்டிய மகாகவி பாரதியாரின் நினைவுதான் வருகிறது.

த. நாகராஜன்,
சிவகாசி.

நோய்க்கு மூலகாரணம்

வெறும் கொசுக்கடியால் மட்டும் இந்நோய் தாக்குவதில்லை. பல்லாண்டுகளாக ரசாயன உரப்பொடிகளின் மூலமாகவும், பூச்சிக்கொல்லி மருந்துகள் மூலமாகவும் நம் உடலில், ரத்தத்தில் ஏற்றப்பட்டுள்ள நச்சுகளின் காரணமாகத்தான் உடலை முடக்கும் சிக்குன் குனியா நோய் ஏற்படுகிறது.

செயற்கையான நச்சு வேளாண்மையை விட்டுவிட்டு, இயற்கை வேளாண்மைக்குத் திரும்ப வேண்டும் என்பதற்கான எச்சரிக்கை மணியே சிக்குன் குனியா நோயாகும். இந்த எச்சரிக்கையை மதித்து நடக்க வேண்டும்..

மு. தனராசு,
தேவாரம்.

நிலவேம்பு

டெங்கு காய்ச்சலைக் குணமாக்கும் நிலவேம்பு. நசுக்கிய நிலவேம்பு ஐந்து கிராம், வெந்நீர் நூறு மில்லி, ஏலக்காய் ஒன்று இவற்றை ஆறு மணி நேரம் ஊற வைத்து வடிகட்டி தினசரி காலை, மதியம், மாலை வெறும் வயிற்றில் முப்பது மில்லி வீதம் குடிக்கவும். கஷாயத்தில் இனிப்புக்கு பனை வெல்லம் சேர்க்கவும். பூண்டு போட்டு காய்ச்சிய புழுங்கல் அரிசிக் கஞ்சி குடிக்கவும். இதுபோல ஐந்து நாள்கள் குடித்தால் டெங்கு காய்ச்சல், முறைஜூரம், செரியாமை முதலிய நோய்கள் குணமாகும்.

மரு.க.கோ. மணிவாசகம்,
தேவூர்.

Posted in Advice, Allopathy, Care, Chicken gunya, Chicken Kunya, chiken kunya, Chikun Kunya, Chikunkunya, cure, Homeopathy, medical, Medicines, Prescriptions, Suggestions, unaani | Leave a Comment »

Chikun Kunya in Kerala – Anbumani Ramadoss gets condemned by Achuthananthan

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 6, 2006

சிக்குன்-குனியாவால் யாரும் சாகவில்லையா? அன்புமணிக்கு கேரள முதல்வர் கண்டனம்

திருவனந்தபுரம், அக். 6: சிக்குன்-குனியா காய்ச்சல் வந்து இதுவரை யாரும் உயிரிழக்கவில்லை என்று அறிக்கை விடுத்ததற்காக மத்திய சுகாதார அமைச்சர் அன்புமணிக்குக் கடும் கண்டனம் தெரிவித்தார் கேரள முதலமைச்சர் வி.எஸ். அச்சுதானந்தன்.

மாநிலத்தின் முன்னாள் வருவாய்த்துறை அமைச்சரும், கேரள காங்கிரஸ் (எம்) தலைவருமான கே.எம். மணி எழுப்பிய ஒழுங்குப் பிரச்சினைக்குப் பதில் அளித்து கேரள சட்டப் பேரவையில் வியாழக்கிழமை பதில் அளித்தபோது இக் கண்டனத்தை அவர் வெளியிட்டார்.

“கேரள அரசிடமிருந்து எந்தத் தகவலையும் கேட்டுப் பெறாமலே அமைச்சர் தில்லியில் இந்த அறிக்கையை வெளியிட்டிருக்கிறார்; எதிர்காலத்தில் இப்படிச் செய்யக்கூடாது என்று பிரதமர்தான் அவருக்கு அறிவுறுத்த வேண்டும். கேரளத்தில் உள்ள நிலைமையை நேரில் அறிய மத்திய அரசு அனுப்பிய நிபுணர்கள் குழு புதன்கிழமைதான் திருவனந்தபுரத்துக்கு வந்துள்ளது. இப்படி இருக்கும்போது, சிக்குன் குனியாவால் யாருமே, எங்குமே சாகவில்லை என்று அமைச்சர் அன்புமணி எப்படி அறிக்கை வெளியிட்டார் என்று தெரியவில்லை’ என்றார் முதல்வர் அச்சுதானந்தன்.

முன்னதாகப் பேசிய கே.எம். மணி, “”அன்புமணியின் அறிக்கை குழப்பத்தையே தருகிறது; கேரளத்தில் என்ன நிலைமை என்று கேட்டுத் தெரிந்துகொண்டு அவர் அறிக்கை வெளியிட்டாரா என்று தெரியவில்லை” என்றார்.

அமைச்சரவை முடிவு: கேரள அமைச்சரவை புதன்கிழமை கூடி, சிக்குன்-குனியா, டெங்கு, எலிக் காய்ச்சல் ஆகியவை கேரளத்தின் 10 மாவட்டங்களில் பரவியிருப்பது குறித்து கவலையுடன் பரிசீலித்தது. (மொத்தமே 14 மாவட்டங்கள்தான்).

மாநிலம் முழுவதும் தீவிர சுகாதார நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், இதற்கு முதல் கட்டமாக ஒரு கோடி ரூபாயை ஒதுக்குவது என்றும் அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

அத்துடன் அரசு மருத்துவமனைகளில் காலியாகவுள்ள டாக்டர்கள், சுகாதாரப் பணியாளர்கள் என்று 400 பதவி இடங்களுக்கு உடனே ஆள்களை நியமிக்கவும் முடிவு செய்யப்பட்டது.

கேரளத்திலேயே, கிருமிகளைக் கண்டுபிடிக்கும் தனி ஆய்வகத்தை ஏற்படுத்தவும் முடிவு செய்யப்பட்டது.

75 பேர் சாவு: இதுவரை கேரளத்தில் மட்டும் 75 பேர் சிக்குன்-குனியா காய்ச்சல் வந்த பிறகு இறந்திருக்கிறார்கள். அவர்களில் 68 பேர் ஆலப்புழை மாவட்டத்தில் இறந்திருக்கிறார்கள். இதுவரை ஒரு லட்சம் பேருக்கு இக் காய்ச்சல் வந்திருக்கிறது.

சுற்றுலாத் தொழிலும் பாதிப்படைந்திருக்கிறது. கேரளத்துக்கு வர சுற்றுலாப் பயணிகள் அஞ்சுகின்றனர். ஆலப்புழை, குட்டநாடு, குமரகம், கோவளம், கொல்லம் ஆகிய முக்கிய சுற்றுலா மையங்களில் சிக்குன்-குனியா பரவியிருக்கிறது.

அனைத்துக் கட்சிக் கூட்டம்: சிக்குன்-குனியா நோயைக் கட்டுப்படுத்தும் வழிகளைக் கண்டறிய முதல்வர் அச்சுதானந்தன், திருவனந்தபுரத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை புதன்கிழமை இரவு கூட்டியிருந்தார். எதிர்க்கட்சித் தலைவர் உம்மன் சாண்டி உள்ளிட்ட பிற கட்சித் தலைவர்கள் அதில் கலந்து கொண்டனர்.

முதலில் மாவட்ட அளவிலும் பிறகு வட்ட அளவிலும் மக்களிடையே விழிப்புணர்ச்சியை ஊட்ட முடிவெடுத்தனர்.

Posted in Achuthananthan, Anbumani, Chicken Kunya, Chikun Gunya, Chikun Kunya, Chikunkunya, dead, Healthcare, Kerala, Misinformed, Outbreak, Ramadoss, Toll | Leave a Comment »

Chikunkunya Toll in Kerala increases to 59

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 2, 2006

கேரளாவில் சிக்குன் குனியாவுக்கு 59 பேர் சாவு 

திருவனந்தபுரம், அக். 2-

கேரள மாநிலத்தில் சிக்குன் குனியா நோயால் பல மாவட்டங்கள் பாதிக்கப்பட்டு உள்ளன. முக்கியமாக சேர்த்தலை, அம்பலபுழை ஆகிய தாலுகா பகுதிகள் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் வரை சிக்குன் குனியாவுக்கு மாநிலம் முழுவதும் 56 பேர் பலியானார்கள்.

நேற்று மேலும் 3 பேர் இறந்துள்ளனர். இதையும் சேர்ந்து இதுவரை 59 பேர் சிக்குன் குனியாவால் இறந்து விட்டதாக கேரள சுகாதாரத்துறை மந்திரி ஸ்ரீமதி கூறியுள்ளார்.

சிக்குன் குனியா நோயை தடுக்க கேரளாவில் தடுப்பு நடவடிக்கை தீவிரமாக எடுக்கப்பட்டு வருகிறது. தினமும் ஏராளமானோர் சிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு வந்து குவிந்த வண்ணம் உள்ளனர்.

எனவே அவர்களுக்கு துரிதமாக சிகிச்சை அளிக்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இதற்காக விடுமுறையில் சென்ற டாக்டர்கள், ஆஸ்பத் திரி ஊழியர்களை உடனடியாக வேலைக்கு திரும்புமாறு அரசு உத்தரவிட்டு உள்ளது.

Posted in Affected, Chicken Kunya, Chikun Gunya, Chikunkunya, dead, Healthcare, Kerala, Outbreak, Tamil, Toll | Leave a Comment »