Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Chicken Kunya’ Category

TN CM effects reshuffle of portfolios: Why? MK Stalin vs MK Azhagiri (Kalki)

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 30, 2007

மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சராக இருந்த கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச் சந்திரனின் இலாகா பறிப்பு, கருணாநிதி குடும்பத்திலுள்ள அதிகார மையங்களி டையே நடக்கும் உரசலின் வெளிப் பாட்டை மீண்டும் வெளிச்சத்துக்குக் கொண்டு வந்துள்ளது. தென் மாவட்டங் களைப் பொறுத்தமட்டில், ஆட்சி மட்டத் திலும் கட்சி மட்டத்திலும் அழகிரியின் சொல்லே இறுதியானது. மாறன் சகோ தரர்களுடன் நடந்த மோதலில் தான் நினைத்ததை நடத்திக் காட்டிய அழகிரி, கே.கே.எஸ்.எஸ்.ஆரின் இலாகாவைப் பறித்ததன் மூலம் ஸ்டாலினுடன் மீண்டும் உரசத் துவங்கிவிட்டார் என்கிறார்கள்.

தென் மாவட்டங்களில் ஸ்டாலினின் உறுதியான ஆதரவாளர்களில் ஒருவராக இருப்பவர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். அவருக் கும் அழகிரிக்கும் ஆரம்பம் முதலே சுமுக உறவு இல்லை என்று சொல்லப்படுகிறது. விருதுநகர் மாவட்டச் செயலாளராக கே.கே.எஸ்.எஸ்.ஆர். வருவதில் அழகிரிக் குச் சற்றும் உடன்பாடில்லையாம். “அழ கிரி அண்ணன் அவரை ஒரு முன்னாள் அ.தி.மு.க.காரராகவே பார்த்தார்” என் கிறார்கள். தம்முடைய சிஷ்யர் தங்கம் தென்னரசுக்குச் செயலாளர் பொறுப்பை வாங்கித் தந்துவிட வேண்டும் என்று தீவிரமாக முயன்று பார்த்தாராம் அழகிரி. ஆனால், தென் மாவட்டங்களில் தமக்கு நம்பிக் கையான ஆட்கள் தேவை என்ற அடிப்படையில், கே.கே.எஸ்.எஸ்.ஆர், கருப்பசாமி பாண்டியன், (மறைந்த) தா.கிருஷ்ணன் போன்றவர்களுக்குத் தமது ஆதரவைக் கொடுத்து ஊக்குவித்தாராம் ஸ்டாலின். அந்த
வகையில் மாவட்டச் செயலாளரானவர்தான் கே.கே.எஸ். எஸ்.ஆர்.

இந்நிலையில் 2006ல் கலைஞர் மீண் டும் ஆட்சிக்கு வந்தவுடன் கே.கே.எஸ். எஸ்.ஆர். ஸ்டாலின் ஆசீர்வாதத்துடன் அமைச்சராகி விட்டார். ஆனால், செல் வாக்கு மிக்க மக்கள் நல்வாழ்வுத் துறை அவருக்குக் கொடுக்கப்பட்டதை கடுமை யாக எதிர்த்தாராம் அழகிரி. என்றாலும், ஸ்டாலின் பக்கபலமாக இருந்ததால் எதுவும் செய்ய முடியவில்லை என்கிறார்கள்.

அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். மிகச் சுறு சுறுப்பாகவே செயல்பட்டார் என்பது கோட்டை அதிகாரிகளின் கமெண்ட். “அவர் ரொம்ப
பிராக்டிக்கலானவர், கலந்தாலோசித்தே முடிவுகளை எடுப்பார்” என்கிறார்கள். இருந்தும் சென்னையை ஒட்டியுள்ள ஒரு சிறுபான்மை கல்வி நிறுவனம், மருத்துவக் கல்லூரி துவங்கும் விவகாரத்தில் அவர் சர்ச்சையில் சிக்கிவிட்டார் என்ற பேச்சும் இருக் கிறது. இதுதவிர, சமீபத்தில் கிட்னி மோசடி விவ காரத்தில் இரண்டு மருத்துவ
மனைகளின் அங்கீ காரம் ரத்து தொடர்பான பிரச்னை எழுந்தது.

இதில் ஒரு மருத்துவமனை முக்கிய தி.மு.க. பிரமுகா¢ன் நெருங்கிய உறவினர் நடத்துவது. இதுவும் அமைச்சர் பதவி பிடுங்கப்பட காரணம் என்கிறார்கள். விருதுநகர் மாவட்டத்தின் ஒரு பேரூராட்சியில் அ.தி.மு.க. வெல்வதற்கு மறை முகமாக உதவியதால்தான் அழகிரி சரியான சமயமாகப் பார்த்து வேட்டு வைத்துவிட்டார் என்று சொல்வோரும் உண்டு.

ஸ்டாலினால் இந்த முறை கே.கே.எஸ்.எஸ். ஆரைக் காப்பாற்ற முடியவில்லை. அவரைச் சுத்த மாக அமைச்சர் பதவியிலிருந்தே நீக்க வேண்டும் என்பதுதான் மதுரையிலிருந்து வந்த விருப்பமாம். ஆனால், ஜெயலலிதா போல் இல்லாமல் கலை ஞர் தமது அமைச்சர்களைக் கழற்றிவிட விரும்பாத வர். எனவேதான் பிற்பட்டோர் நலத்துறைக்கு அவரை மாற்றி விட்டாராம். இருந்தும் அழகிரியின் கோபம் தணியாததால் அவரைச் சில அமைச்சர்கள் சமாதானம் செய்தார்களாம். மக்கள் நல்வாழ்வுத் துறை இப்போது ஸ்டாலினின் மற்றோர் ஆதர வாளரும் வட மாவட்டத்தைச் சேர்ந்தவருமான எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்திடம் கொடுக்கப் பட்டுள்ளது. இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி கருப்பசாமி பாண்டியனை அமைச்சராக்க ஸ்டாலின் செய்த முயற்சியும் எடுபடவில்லை என்கிறார்கள்.

நெல்லையில் இளைஞர் அணி மாநாடு நடைபெறப்போகும் நிலையில், ஒரு நல்ல அமைப்பாளர் உற்சாகம் இழக்கும் நிலை ஏற் பட்டுவிட்டதே என்று அப் செட்டில் இருக்கிறாராம் ஸ்டாலின்.

Posted in ADMK, AIADMK, Alagiri, Alakiri, Assassin, Assassination, Assembly, Assembly Election, Assembly elections, assembly polls, Azagiri, Azakiri, Azhagiri, Azhakiri, backward, BC, Chicken, Chicken gunya, Chicken Kuniya, Chicken Kunya, Chicken pox, Chickenkunya, Chickenpox, chickun gunya, CM, Districts, DMK, dynasty, Fights, Health, hierarchy, JJ, K K S S R Ramachandran, Kalainjar, Kalainjar TV, Kalanidhi, Kalanidhy, Kalanithi, Kalanithy, Kalimuthu, Kalinjar, Kalki, Kanimoli, Kanimozhi, Kanimozi, Karunanidhi, Karunanidhy, Karunanidi, Karunanithi, Kill, Kingdom, Kings, KKSSR, M R K Pannerselvam, Minister, Ministers, minority, MK, Monarchy, MRK, Panneerselvam, Pannerselvam, Pannirselvam, Party, Politics, Ponmudi, portfolios, Power, Ramachandran, Registration, reshuffle, Stalin, Sureshrajan, TN, Tourism | Leave a Comment »

Chikun Kunya attacks Kerala – 62 ill

Posted by Snapjudge மேல் மே 30, 2007

கேரளத்தில் 62 பேருக்கு சிக்குன் குன்யா

திருவனந்தபுரம், மே 30: கேரள மாநிலத்தில் கடந்த ஒரு மாதத்தில் 62 பேர் சிக்குன் குன்யா காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத் துறையின் 5 உறுப்பினர்கள் குழுவுடன் நடத்திய ஆலோசனைக்கு பின், கேரள சுகாதாரத்துறை அமைச்சர் பி.கே. ஸ்ரீமதி இது குறித்து கூறியது:

சிக்குன் குன்யா நோய்க்கு எவரும் பலியாகவில்லை. பதனம்திட்டா மாவட்டம் சித்தூரில் அதிக அளவாக 49 பேர் சிக்குன் குன்யாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இடுக்கி, கோட்டயம், பாலக்காடு, திருச்சூர், ஆலப்புழை மற்றும் கொல்லம் ஆகிய மாவட்டங்களிலும் இந்நோய் தாக்குதல் கண்டறியப்பட்டுள்ளது என்றார் அவர்.

—————————————————————————————————————–

தமிழகத்தில் மீண்டும் சிக்குன் குனியா?

சென்னை, ஜூன். 3: தமிழகத்தில் சிக்குன் குனியா நோய் தடுப்பு நடவடிக்கைகளுக்கு ரூ. 7 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் சனிக்கிழமை தெரிவித்தார்.

இது தொடர்பாக சென்னையில் நிருபர்களிடம் அவர் கூறியது:

கேரள மாநில எல்லையை ஒட்டியுள்ள தமிழக மாவட்டங்களில் சிக்குன் குனியா நோய் பாதிப்பு ஏற்படாமல் இருக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த மாவட்டங்களில் நோய் பாதிப்பு ஏற்பட்டால் மருந்து தட்டுப்பாடு ஏற்படாத வகையில் தேவையான மருந்துகள் அனுப்பப்பட்டுள்ளன. சித்த மருந்துகளும் இப் பகுதிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளன.

தமிழகம் முழுவதும் சிக்குன் குனியா நோய் பாதிப்பு ஏற்படாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பதற்காக ரூ. 7 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என்றார் ராமச்சந்திரன்.

——————————————————————————-

கேரளாவில் சிக்குன்குனியாவால் சாவு எண்ணிக்கை 70-ஐ தாண்டியது

திருவனந்தபுரம், ஜுன்.12-

கேரள மாநிலத்தில் வேகமாக பரவி வரும் சிக்குன் குனியா வைரஸ் காய்ச்சலால் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு உள்ளனர். கோட்டயம், பத்தினம்திட்டை, இடுக்கி, ஆலப்புழை, கொல்லம் ஆகிய மாவட்டங் களில் தான் சிக்குன்குனியா தாக்கம் அதிகமாக உள்ளது.

இம்மாவட்டங்களில் மட்டும் சிக்குன்குனியாவால் பாதிக்கப்பட்ட 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஆஸ்பத்திரியில் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நேற்று கோட்டயம் அரசு ஆஸ்பத்திரியில் 10, 319 பேரும், இடுக்கி ஆஸ்பத்திரியில் 3073 பேரும், ஆலப்புழை மாவட்டத்தில் 1515 பேரும் சிகிச்சை பெற்றனர். இதுதவிர தனியார் ஆஸ்பத்திரிகளிலும் ஆயிரக்கணக்கானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சிக்குன்குனியாவுக்கு பலி யானோர் எண்ணிக்கையும் அதிகரித்து கொண்டே போகிறது. நேற்றும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு குட்டப்பன் (வயது56), அன்னம்மா (59), வேலாயுதன் (67), அய்யப்பன் (60), தோமஸ் (76), லீலா (56), பொன்னன்குட்டி (78) ஆகிய 7 பேர் பலியாகி உள்ளனர்.

இதன் மூலம் சாவு எண்ணிக்கை 70-ஐ தாண்டியது.

சிக்குன்குனியாவால் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரி யில் சிகிச்சை பெற்று வந்த திருவனந்தபுரம் வெம்பாயம் பகுதியை சேர்ந்த அனில்குமார் என்பவர் நேற்று முன்தினம் இறந்தார். இவருக்கும் உஷாகுமாரி என்ற மனைவியும், ஆதிரா, அஞ்சு, ஆரியா என்ற 3 பெண் குழந்தைகளும் உள்ளனர்.

அனில்குமாரின் உடலை பார்த்து அவரது மனைவி உஷாகுமாரி மற்றும் 3 குழந்தைகளும் கதறி அழுதது நெஞ்சை உறுக்குவதாக இருந்தது. இனிமேல் இந்த 3 குழந்தைகளும் நான் எப்படி காப்பாற்றுவேன் என உஷாகுமாரி கதறி அழுதார்.

சிக்குன்குனியா காய்ச்சலை கட்டுப்படுத்த மாநிலம் முழுவதும் ராணுவ டாக்டர்கள் முகாம் அமைத்து சிகிச்சை அளித்து வருகின்றனர். கோட்டயம், திருவனந்தபுரம் அம்பூரி உள்ளிட்ட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் ராணுவ டாக்டர்கள் அமைத்துள்ள தற்காலிக முகாமில் தினமும் ஆயிரக்கணக் காணவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Posted in Alapula, Alapuza, Alapuzha, Chicken, Chicken gunya, Chicken Kuniya, Chicken Kunya, Chicken pox, Chickenkunya, Chickenpox, chickun gunya, Chikan Kunya, Chiken Gunya, chiken kunya, Chikun Gunya, Chikun kanya, Chikun Kunya, Chikungunya, Chikunkunya, Chithoor, Chithur, Chitore, CPI, dead, Disease, DMK, Kerala, KKSSR, Kollam, Kottayam, Outbreak, Palacaud, Palaghat, Palakode, Quilon, Sathoor, Sathur, Thrichoor, Thrichur, TN, Trichoor, Trichur | 4 Comments »

Mosquito Menace – Rajapalayam Ku Ganesan : Public Sanity Projects & Environment

Posted by Snapjudge மேல் திசெம்பர் 15, 2006

கொசுக்களுடன் ஒரு பனிப்போர்

ராஜபாளையம் கு. கணேசன்

“சிங்கத்தைக் கூட அதன் குகைக்கே சென்று சந்திக்கும் ஆற்றல் உள்ள மனிதன், சிறு கொசுவுக்குப் பயந்து பதுங்கிக் கொள்கிறான் ஒரு கொசுவலைக்குள்’ என்று ஒரு புதுக்கவிதை உண்டு. இன்று இது நடைமுறை உண்மையாகி வருகிறது. இந்தியாவில் கொசுக்களை ஒழிக்கும் முறையான திட்டங்கள் தொடங்கி அரை நூற்றாண்டுக்கும் மேலாகி விட்டது. என்றாலும், இன்றளவும் கொசுக்கள் ஒழிந்தபாடில்லை. இதற்குக் காரணம், கொடிய நோய்கள் மக்களைப் பாதிக்கும்போது கொசுக்களை ஒழிக்கும் களப்பணிகள் தீவிரமடைவதும், இந்த நோய்கள் குறைந்து வரும்போது, கொசு ஒழிப்பின் மீதான அரசின் அக்கறையும் மக்களின் கவனமும் குறைந்து விடுவதும் வழக்கமாகி விட்டது.

கொசுக்களை ஒழிக்கவும் நோய்களைத் தடுக்கவும் தங்களுக்குத் தெரிந்த “ஆயுதங்’களை, மக்கள் பயன்படுத்தியிருக்கிறார்கள். கடந்த ஐம்பது ஆண்டுகளில் நடைபெற்றிருக்கும் கொசு ஒழிப்புத் திட்டங்களை உற்றுக் கவனித்தால் ஒன்று மட்டும் நன்றாகப் புரிகிறது – உலகளவில் ஏற்பட்டிருக்கும் நவீன அறிவியல் வளர்ச்சியாலும், புதுப்புது மருத்துவக் கண்டுபிடிப்புகளினாலும் இந்தக் கொசு ஒழிப்பு ஆயுதங்கள்தான் அவ்வப்போது மாறிக் கொண்டிருக்கின்றனவே ஒழிய, கொசுக்களை மட்டும் நம்மால் ஒழிக்க முடியவில்லை.

1950களில் இந்தியாவில் மலேரியா தீவிரமாகப் பரவி ஏராளமான மரணங்கள் நிகழ்ந்தபோது, “தேசிய மலேரியா கட்டுப்பாட்டுத்திட்டம்’ எனும் பெயரில் கொசுக்களுக்கு எதிராக ஒரு போர் 1953-ல் தொடங்கியது. அப்போது நம்மிடம் இருந்த ஒரே ஆயுதம் “டி.டி.டி.’ ( DDT) என்னும் மருந்து மட்டுமே. தொடர்ந்து ஐந்து ஆண்டுகள் இதைச் செயல்படுத்தியதில் இந்தியாவில் மலேரியா பரவுவது வேகமாகக் குறைந்தது; கொசுக்களும் ஓரளவிற்கு ஒழிந்தன. என்றாலும் காலப்போக்கில் இந்தியக் கொசுக்களின் மரபணுக்களில் ஏற்பட்ட “தடாலடி’ மாற்றங்களால் இந்த “டி.டி.டி.’ மருந்தையே எதிர்க்கிற ஆற்றல் அவற்றுக்கு வந்துவிட்டது. இதனால் “தேசிய மலேரியா ஒழிப்புத் திட்டம்’ எனும் பெயரில் இந்தப் போராட்டத் திட்டங்களை 1958லும் 1977லும் சற்று மாற்றி அமைத்தார்கள். இதன்படி டி.டி.டி. மருந்து பலன் தராத இடங்களில் “லின்டேன்’, “மாலத்தியான்’ போன்ற மருந்துகளைத் தெளித்தார்கள். இதுவும் சில ஆண்டுகளுக்குப் பலன் தந்துவிட்டு மீண்டும் “படுத்து’க் கொண்டது.

காரணம், கொசுக்கள் வாழும் திறந்தவெளிச் சாக்கடைகள், தண்ணீர்த் தொட்டிகள், நீர்சேமிப்புப் பாத்திரங்கள் போன்றவற்றிலிருந்து கொசுக்கள் மீண்டும் மீண்டும் பெருக்கமடைந்து வீடுகளுக்குள் வந்து விடுகின்றன. இந்த “வழிகளை’ அடைக்க வேண்டுமென்றால் “சுற்றுப்புறத்தைத் தூய்மையாகப் பேண வேண்டும்; தேங்கும் நீர்நிலைகளில் கொசுக்கள் பெருகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்’ என்ற சுகாதார விழிப்புணர்வு மக்களிடம் ஏற்பட வேண்டியது அவசியம்.

என்றாலும் இந்த வழிகளை அடைப்பதற்கு இரண்டு புதிய மருத்துவ ஆயுதங்களும் தயாராயின. ஒன்று, “பைரெத்ரின்’ என்னும் கொசு ஒழிப்புப் புகைமருந்து. மற்றொன்று, கொசுவின் லார்வாக்களை அழிக்கும் “அபேட்’ எனும் நுண்ணுயிரி மருந்து. இவற்றில் “கொசு ஒழிப்புப் புகைமருந்து’ தெருக்களில் புகையாகத் தெளிக்கப்படுவது. இது கொசுக்களின் நரம்புகளைப் பாதித்து அவற்றை உடனடியாகக் கொன்று விடுகிறது. இந்த மருந்தை உட்கொண்ட லார்வாக்களின் உணவுப்பாதை கிழிபட்டு அழியும். அதனால் கொசுப்புழுக்கள் 100% அழிக்கப்படும். என்றாலும் இதற்கு ஊராட்சிகள், நகராட்சிகள், மாநகராட்சிகள் போன்றவற்றின் ஒத்துழைப்பு முழுமையாகக் கிடைக்க வேண்டும். ஆனால் இந்த ஆட்சிமன்றங்கள் கொசு ஒழிப்பிற்கு என ஒதுக்கும் நிதி மிகக் குறைவு என்பதால் இந்த “ஆயுத’ங்களும் சரியாகச் செயல்படவில்லை.

அதேநேரத்தில், கொசுக்களை ஒழிப்பதற்காக இதுவரை நாம் பயன்படுத்திய பூச்சிக்கொல்லிகளின் வேதிப்பொருள்கள் அனைத்துமே நீர், நிலம், காற்று இம் மூன்றிலும் நச்சுக்களைக் கலந்து, சுற்றுச்சூழலைப் பாதிக்கத் தொடங்கின; இதை உறுதி செய்யும் விதத்தில், “இந்தியாவில் பெருகிவரும் ஆஸ்துமா போன்ற நெஞ்சக நோய்களுக்கு கொசுக்களை அழிக்கப் பயன்படுத்திய டி.டி.டி. மருந்துதான் காரணம்’ என்று ஓர் ஆய்வு தெரிவித்தது. எனவே, சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பு ஏற்படாத விதத்தில், உலக அளவில் கொசுக்களை ஒழிக்கப் பயன்படுத்தப்படும் வேறு “ஆயுத’ங்களைப் பயன்படுத்தலாமா என இந்தியச் சுகாதாரத்துறை யோசித்தது.

நியூசிலாந்தில் ஆண் கொசுக்களின் மரபணுக்களை மாற்றி வைத்து, அவற்றை மலடாக்கி, கொசுக்களின் இனப்பெருக்கத்தைக் கட்டுப்படுத்தி உள்ளார்கள்.

கொசுக்கடியிலிருந்து தப்பித்தாலே மலேரியா, சிக்குன்குனியா, டெங்கு போன்றவற்றிலிருந்தும் தப்பிக்கலாம் என்பது அனைவரும் அறிந்த விஷயம். இதற்குக் கொசுவலைகள் மற்றும் கொசுவிரட்டி வில்லைகளை “ஆயுத’ங்களாகப் பயன்படுத்தலாம் என யோசனை கூறப்பட்டது.

இந்தக் கொசுவிரட்டிகளில் பல வகைகள் உள்ளன. “டைஎதில் டாலுவாமைடு’ அல்லது “டைஎதில் பென்சாமைடு’ எனும் மருந்து உள்ள களிம்பைப் பகல் நேரத்தில் உடலில் பூசிக்கொண்டால் தாற்காலிகமாகக் கொசு கடிப்பதிலிருந்து தப்பிக்கலாம். என்றாலும் இதனால் சிலருக்குத் தோல் ஒவ்வாமை ஏற்பட வாய்ப்புண்டு.

அடுத்ததாக, நெருப்பில் புகையும் கொசு ஒழிப்புச் சுருள்கள், மணிக்கட்டில் கட்டப்படும் மருந்துப் பட்டைகள் மற்றும் மின்சாரத்தில் ஆவியாகும் திரவ மருந்துகளும் கொசுக்களை ஒழிக்கப் பயன்படுத்தப்படுகின்றன. ஆனாலும், இவற்றில் உள்ள அல்லெத்ரின், பிராலெத்ரின், இன்டலோன், டைமெதில் தாலேட், டைமெதில் கார்பேட் போன்ற வேதிப்பொருள்கள் சிலருக்கு ஒத்துக்கொள்வதில்லை என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

குறிப்பாக இவை குழந்தைகளுக்கு ஆஸ்துமாவை ஏற்படுத்துகின்றன. மேலும் இந்த “ஆயுத’ங்களைச் சந்தையில் விற்பதற்கு ஊடகங்கள் செய்யும் விளம்பரங்களோடு ஒப்பிட்டால் இவற்றின் தகுதி மற்றும் திறன் பற்றி ஐயங்கள் எழுகின்றன.

இவை உண்மையிலேயே செயல்பட்டிருந்தால் இன்றைக்கு இந்தியாவில் கொசுக்களே இருக்கக் கூடாது. நிலைமை அப்படி இருக்கிறதா? யோசிக்க வேண்டியதிருக்கிறது.

ஆகவே, இனி மீதமிருக்கும் ஒரே “ஆயுதம்’ கொசுவலைதான். இதனால் நமக்கு அதிகச் செலவில்லை. சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பில்லை. பயன்படுத்துவது மிக எளிது. பக்கவிளைவுகள் இல்லாதது. அதேநேரத்தில் இதை நாம் சரியாகப் பயன்படுத்தினால்தான் கொசுக்கடியிலிருந்து முழுவதுமாகத் தப்பிக்க முடியும்.

குறிப்பாக, படுக்கப் போகும்போது கொசுவலையைக் கட்டிப் பலனில்லை. ஏனென்றால், வழக்கமாக இருட்டத் தொடங்கும் நேரத்தில்தான் கொசுக்கள் தெருக்களிலிருந்து வீட்டின் மூலை முடுக்குகள், படுக்கைகள் போன்றவற்றை வந்தடையும். ஆகவே அவை வீட்டிற்குள் வருவதற்கு முன்பே – மாலை 5 மணி அளவில் – படுக்கையில் கொசுவலையைக் கட்டிவிட வேண்டும். அப்போதுதான் கொசு நம்மைக் கடிக்காது. சரி, கூட்டுக்குடும்பங்களுக்கு இது சரிப்படும். வீட்டில் கணவன், மனைவி இருவரும் வேலைக்குச் செல்பவர்களாக இருந்தால் என்ன செய்வது? காலையில் அலுவலகம் கிளம்பும்போதே கொசுவலையைக் கட்டிவிட வேண்டியதுதான். வேறு வழி?

Posted in airborne, Chicken gunya, Chicken Kuniya, Chicken Kunya, Chickenkunya, chickun gunya, Chikan Kunya, Chiken Gunya, chiken kunya, Chikun Gunya, Chikun kanya, Chikun Kunya, Chikungunya, Chikunkunya, DDT, Dengue, Dichloro-diphenyl-trichloroethane, Disease, Environment, Health, Infection, Mosquito, Outbreak, Sanity, Tamil, Waterborne | 1 Comment »

Chikunkunya – Ayurvedic Treatment Options: Alternate Medicine

Posted by Snapjudge மேல் நவம்பர் 20, 2006

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: சிக்குன்குனியா மூட்டுவலிக்கு மருந்து!

பேராசிரியர் எஸ். சுவாமிநாதன்

தற்போது நாடு முழுவதும் குறிப்பாக தமிழகத்தின் பல பகுதிகளிலும் கொசு மூலம் சிக்குன்குனியா என்ற நோய் பரவி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகிறார்கள். இந்நோயில் மூட்டுகளில் ஏற்படும் வலி தாங்க முடியாத அளவில் உள்ளது. ஆயுர்வேதத்தில் இதற்கு மருந்து உண்டா?
இரா.வி.செüந்தர்யா விசாலினி, மொரட்டுப்பாளையம். வீ.நல்லுசாமி, நாமக்கல்.

சிக்குன்குனியாவில் ஏற்பட்டுள்ள காய்ச்சல், உடல் மற்றும் மூட்டு வலி, பசியின்மை, உடல்சோர்வு, ருசியின்மை, மலச்சிக்கல் போன்ற உபாதைகள் காணப்பட்டால் அச்சமயம் சாப்பிட ஏற்ற உணவு கஞ்சியேயாகும். காய்ச்சலின் வேகம் எவ்வளவுக்கெவ்வளவு கடுமையாக இருக்கிறதோ, அவ்வளவுக்கவ்வளவு கஞ்சியையும், லேசானதாகத் தயாரிக்க வேண்டும். கஞ்சிக்கேற்ற பொருள்களில் புழுங்கலரிசியும் பார்லியும் நல்லது. புழுங்கலரிசியில் சத்து அதிகம். அதனால் அது உடலுக்கு வலிமை தரக்கூடியது. பார்லி உடலிலுள்ள அடைப்புகளைப் போக்கும். அதனால் வயிற்றில் வாயு, அஜீரணம் போன்ற தொல்லைகள் ஏற்படாது. புழுங்கலரிசியைச் சிறிது சிவப்பு காணும்வரை லேசாக வறுத்து, அதனுடன் பார்லியையும் வறுத்துச் சேர்க்கக் கஞ்சி எளிதில் ஜீரணமாகிவிடும். வறுத்த முழு அரிசி, பார்லி 1 பங்கு, தண்ணீர் 20 பங்கு சேர்த்துக் கொதிக்க வைத்து, கால்பங்கு சுண்டும் வரை காய்ச்சி இறக்கிக் கொள்ளவும். வடிகட்டிய கஞ்சியை இளஞ்சூடாகச் சிறிது இந்துப்பு கலந்து காலை, மதியம், இரவு குடிக்கவும். கஞ்சியைக் குடித்த பிறகு இந்து காந்தம் எனும் கஷாயத்தை 15 மிலி எடுத்து, 60 மிலி சூடான தண்ணீர் சேர்த்துப் பருக காய்ச்சல், உடல்வலி, மூட்டுவலி, வயிற்று வலி, வயிற்றுப் பொருமல், அஜீரணம், உமட்டல் முதலியவை விரைவில் குறைந்துவிடும். உடலுக்கு நல்ல பலத்தையும் இந்தக் கஷாயம் ஏற்படுத்தித் தரும். நல்ல ருசியும் பசியும் ஏற்பட்டுவிட்டால், அடுத்த இரண்டு நாட்களுக்கு நெல்பொரி 1 பங்கு, 20 பங்கு தண்ணீர் விட்டு கால் பங்கு சுண்டக் காய்ச்சி, அந்தக் கஞ்சியில் கால் பங்கு பால் கலந்து சாப்பிட களைப்பு நீங்கிப் புத்துணர்ச்சி ஏற்படும். உடம்பில் கடுப்பு வலி, கனம், உடலை முறித்துக் கொள்ளும் வேதனை முதலிய வாயு அதிகமாயுள்ள நிலையில் இரண்டு புளியங்கொட்டையளவு சுக்கை எடுத்து அதை நசுக்கி அரை லிட்டர் தண்ணீரில் போட்டுக் காய்ச்சிச் சாப்பிடலாம். உடல்வலி, வேதனை, கனம் முதலியவை நன்கு குறையும்.

சிலருக்கு காய்ச்சல் விட்ட பிறகும் தொடர்ந்து ஏற்படும் மூட்டுவலி, வீக்கத்திற்கு பிருகத்யாதி கஷாயம் 7.5 மி.லி. + பலாகுடூச்யாதி கஷாயம் 7.5மி.லி. ,சூடான தண்ணீர் 60 மி.லி. கலந்து காலை மாலை வெறும் வயிற்றில் தொடர்ந்து 21 நாட்கள் சாப்பிட ஏற்பட்டுள்ள உபாதைகள் நன்கு குறைந்துவிடும்.

வலி வீக்கம் உள்ள மூட்டுகளில் உத்வர்த்தனம் சூரணம், குலத்தம் சூரணம், ராஸ்னாதி சூரணத்தை 4 : 2 : 1 என்ற விகிதத்தில் கலந்து புளித்த சூடான மோருடன் குழைத்து பற்று இட்டு அது காய்ந்தவுடன் நீக்கி விடும் சிகிச்சை முறையால் மூட்டுகளின் உட்பகுதியிலுள்ள நீர் வற்றி வலி குறையும். ஜடாமாதி சூரணமும் இதுபோன்ற வலி நிவாரணியே. இந்த மருந்துகள் நசரத்பேட்டை

ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி ஆயுர்வேத மருத்துவமனையில் விற்கப்படுகின்றன.

வீக்கம், வலி வற்றிய பிறகு மூலிகைத் தைலமாகிய பிண்ட தைலம், லஹசராதி தைலம், கொட்டஞ்சுக்காதி தைலம் போன்றவற்றில் ஒன்றை இரும்புக் கரண்டியில் லேசாகச் சூடாக்கித் தடவி அந்த மூட்டிற்கு ஓய்வளிக்கும் வகையில் துணியைச் சற்றி வைத்திருக்க வலியும் வீக்கமும் குறைந்துவிடும். தைலத்தைத் தடவி சுமார் அரை மணி முதல் 1 மணி நேரம் வரை ஊறிய பிறகு வேப்பிலை, நொச்சி இலை, புளி இலை, முருங்கை இலை, ஆமணக்கு இலை, எருக்கு இலை ஆகியவற்றைப் பொடியாக நறுக்கிப் போட்டுக் காய்ச்சிய தண்ணீரில் துணியைப் பிழிந்து ஒத்தடம் கொடுக்கப் பூரண நிவாரணத்தை விரைவில் பெறலாம்.

Posted in Allopathy, Ayurveda, Ayurvedic, Chicken gunya, Chicken Kuniya, Chicken Kunya, Chickenkunya, chickun gunya, Healthcare, Homeopathy, Medicine, Outbreak, Treatment, Yunani | 3 Comments »

TN Govt. (atlast) declares Chikungunya as notifiable disease

Posted by Snapjudge மேல் நவம்பர் 7, 2006

சிக்குன்குனயா தொற்று நோய் என தமிழக அரசு அறிவிப்பு

சிக்கன்குனியாவைப் பரப்பும் கொசு
சிக்கன்குனியா நோயைப் பரப்பும் கொசு

இதற்கிடையே, கடந்த சிலமாதங்களாக தமிழகத்தில் பரவலாக பாதிப்பை ஏற்படுத்திய சிக்குன்குனியா நோயை, அரசுக்கு அறிவிக்கப்படவேண்டிய தொற்றுநோயாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் காலரா, மலேரியா, அம்மை, டைபாய்ட் காய்ச்சல் உள்ளிட்ட 21 நோய்கள் ஏற்கெனவே அரசுக்கு அறிவிக்கப்படவேண்டிய தொற்றுநோய்களாக தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ளன. தற்போது சிக்குன் குன்யாவும் அந்த பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.

தமிழக அரசியல் அரங்கில் சிக்குன் குன்யா நோய் பரவல் என்பது தமிழகத்தை ஆளும் திமுகவுக்கும் பிரதான எதிர்கட்சியான அதிமுகவுக்கும் இடையிலான அரசியல் விவகாரமாக உருவெடுத்ததால், தமிழகத்தில் சிக்குன் குன்யாவின் நிஜமான பாதிப்பு எவ்வளவு என்பது குறித்து முறையான தகவல்கள் இல்லை என்று சுகாதாரத்துறை வல்லுனர்கள் பலர் கவலை தெரிவித்திருந்தனர். குறிப்பாக தமிழ்நாட்டில் எத்தனைபேருக்கு சிக்கன் குன்யா காய்ச்சல் தாக்கியது என்பது குறித்து இருவேறு மதிப்பீடுகள் நிலவி வருகின்றன.

அரசு தரப்பில் சுமார் அறுபதாயிரத்துக்கும் அதிகமானவர்கள் சிக்குன் குன்யாவால் பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் எதிர்தரப்பில் லட்சக்கணக்கானவர்கள் சிக்குன் குன்யாவால் பாதிக்கப்பட்டதாக தெரிவித்தனர்.

அரசு மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக வந்த சிக்குன் குன்யா நோயாளிகளின் கணக்கை மட்டுமே அரசு தருவதாகவும், அவர்களைப்போல பலமடங்கு நோயாளிகள் தனியார் மருத்துவ மனைகளிலும் தனியார் மருத்துவர்களிடமும் சிகிச்சை பெற்ற விவரத்தை அரசு கணக்கில் கொள்ளவில்லை என்றும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.

Posted in Affected, Chicken gunya, Chicken Kuniya, Chicken Kunya, Chickenkunya, chickun gunya, Chikan Kunya, Chiken Gunya, chiken kunya, Chikun Gunya, Chikun kanya, Chikun Kunya, Chikungunya, Chikunkunya, dead, Disease, Govt, Healthcare, Infectious, Outbreak, Tamil Nadu, TN, Toll | 1 Comment »

Aedes aegypti mosquito – Chikun Kunya & Dengue may be subsided by Rain?

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 20, 2006

சிக்குன் குனியா-டெங்குவை பரப்பும் `ஏடிஸ்’ கொசுக்கள் மழை- குளிரால் அழியும்

புதுடெல்லி,அக்.20-

டெல்லி, தமிழ்நாடு உள்பட இந்தியாவில் பல மாநிலங் களில் டெங்கு,சிக்குன் குனியா நோய் வேகமாக பரவி வருகிறது. நாடு முழுவதும் டெங்கு காய்ச்சலுக்கு இதுவரை 116 பேர் பலியாகிவிட்டனர்.

6423 பேர்இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். சிக்குன் குனியாவால்1663 பேர் கடுமையாக பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப் பட்டுள்ளனர். டெல்லி அகில இந்திய மருத்துவ விஞ்ஞான கழகஆஸ்பத்திரியில் ஏராளமானோர் அனுமதிக் பட்டுள்ளனர்.

இந்த நோயை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. பல்வேறு மாநிலங்களிலும் மத்திய அரசு இதற்காக ரூ.22 கோடியை ஒதுக்கி இருக்கிறது. இந்த நோய் ஒழிப்பு திட்டத்தின் கீழ் டெங்கு மற்றும் சிக்குன் குனியா நோய் கிருமிகள் (வைரஸ்)பரப்பும் `ஏடிஸ்’ கொசுக்களை ஒழிக்கவும் தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டன.

இந்த ஏடிஸ் கொசுக்களை ஒழிப்பதில் இயற்கையும் ஓரளவுக்கு பங்காற்றுகிறது. இது பற்றி தேசிய நோய் தடுப்புத்துறை இயக்குனர் பி.எல்.ஜோஷி கூறிய தாவது:-

இந்த இரு நோய்களையும் பரப்பும் ஏடிஸ் கொசுக்கள் மழை மற்றும் குளிருக்கு தாக்கு பிடிக்காது. லேசான மழை பெய்தால் கூட இந்த கொசுக்கள் இறந்துவிடும். தொடர்ந்து வெப்பநிலை குறைந்து குளிர் அடித்தாலும் இந்த கொசுக்கள் இறந்துவிடும். இந்த கொசுக்கள் நோய் கிருமிகளை பரப்புவதிலும் கணிசமான அளவுக்கு குறைந்துவிடும்.

ஏடிஸ் கொசுக்களுக்கு 20டிகிரி செல்சியஸ் முதல் 30செல்சியஸ் வெப்ப நிலையில்தான் உயிர் வாழ்கின்றன. அதன் இனப்பெருக்கத்துக்கும் நோய் கிருமிகள் பரப்புவதற்கும் இந்த வெப்ப நிலைதான் தேவை. இதற்கு குறைவான வெப்ப நிலையில் அவை அழிந்து விடும்.

கொசு ஒழிப்பு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறோம். புதிதாக இந்த நோய்களால் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப் படுபவர்கள் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Posted in Aedes, Aedes aegypti, AIIMS, Chicken Kunya, chiken kunya, Chikun Kunya, Dengue, Health, Healthcare, Mosquito, Outbreak, Rain | Leave a Comment »

‘West Nile carrying Mosquitoes to spread AIDS virus’ – Health Expert

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 16, 2006

கொசுவால் `எய்ட்ஸ்’ பரவும் ஆபத்து: மத்திய நிபுணர் குழு எச்சரிக்கை 

ஆலப்புழை, அக். 16-

நம்நாட்டில் சமீப காலமாக கொசுக்கள் மூலம் சிக்குன் குனியா, டெங்கு போன்ற நோய்கள் அதிக அளவில் பரவி வருகிறது. சிக்குன் குனியா காய்ச்சலுக்கு தமிழ் நாடு, ஆந்திரா, கேரளா போன்ற மாநிலங்களில் ஏராள மானோர் பலியாகி உள்ளனர். கேளாவில் 100-க்கும் மேற் பட்டோர் சிக்குன் குனியா நோய்க்கு பலியானதாக முதல்-மந்திரி அச்சுதானந்தன் அறிவித்தார். சிக்குன் குனியா நோய் பரவுவதை தடுக்க கேரள அரசு போர்க்கால நடவடிக்கை எடுத்து வருகிறது.

அங்குள்ள சுகாதாரத்துறை டாக்டர்கள், நர்சுகள் வீடு வீடாகச் சென்று சிக்குன் குனியா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருகிறார்கள். சிக்குன் குனியாவால் அதிகமாய் பாதிக்கப்பட்ட ஆலப்புழை மாவட்டத்தில் நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

உலக சுகாதார அமைப்பும், மத்திய அரசின் நிபுணர் குழு வும் ஆலப்புழை மாவட்டம் சேர்த்தலா பகுதிக்கு சென்று அங்குள்ள கொசுக்களை பிடித்து பரிசோதனை நடத்தியது. அக்கொசுக்களை பரிசோ தனை செய்த அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

பரிசோதனையில் ஆலப் புழையில் 38 வகையான கொசு இனங்களை கண்டு பிடித்தனர். அதில் 12 வகை யான கொசுக்கள் மிகவும் ஆபத்து நிறைந்தவை என்று கண்டறியப்பட்டது.

அவற்றில் மூளைக்காய்ச்சல் வைரஸ், வெஸ்ட் நெய்ல் வைரஸ் ஆகியவை இணைந்த புதிய வகை வைரஸ் கொண்ட கொசு இனம் ஒன்றையும் கண்டு பிடித்தனர்.

இதுபற்றி கொசு இனங்களை ஆய்வு நடத்திய மருத்துவ நிபுணர் ஒருவர் கூறும்போது, “சமீபகாலமாக ஏராளமான வைரஸ் கிருமிகள் கொசுக்கள் மூலம்தான் மக்களிடம் பரவி வருகிறது. இதனால் டெங்கு, சிக்குன் குனியா அதிக அள வில் பரவி வருகிறது.

ஆபத்தான நோய்களை பரப்பும் இந்த வகை கொசுக் களை அழிக்க மத்திய-மாநில அரசுகள் உடனடியாக நட வடிக்கை மேற்கொள்ள

வேண்டும்.இல்லையென்றால் எச்.ஐ.வி. வைரஸ் கூட கொசுக்கள் மூலம் பரவும் பேராபத்து உள் ளது. கொசுக்களில் எச்.ஐ.வி. வைரஸ் தொற்றினால், அக் கொசு கடிக்கும் மக்களுக்கு எய்ட்ஸ் நோய் பரவும் வாய்ப்பு உள்ளது. அதனால் கொசுக்களை ஒழிக்க மாநில அரசுகள் போர்க்கால நட வடிக்கை எடுப்பது அவசிய மான ஒன்று.

சிக்குன் குனியா காய்ச்சல், வெஸ்ட் நெய்ல் காய்ச்சல் இரண்டுமே ஒரே மாதிரியான வைரஸ் பரவுகிறது. இத னால் இக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் உடல் நலன் கடுமையாகப் பாதிக்கப்படுகிறது.

கேரளாவில் சிக்குன் குனியா நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளிடம் பரிசோதனை மேற்கொண்டோம். அவர்கள் அத்தனை பேரும் காய்ச்சலுக்குப் பிறகு உடல் எடை குறையுது காணப்படுகிறார்கள். அதற்கான காரணம் பற்றியும் ஆய்வு நடத்தி வருகிறோம் என்றார்.

Posted in AIDS, Chicken Kunya, Chikun Kunya, Chikunkunya, Dengue, Healthcare, Infection, Kerala, Outbreak, Virus, West Nile | 1 Comment »

Chikun Kunya – Homeopathy, Alternate Medicines : Prescriptions for Cure & Care

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 16, 2006

ஹோமியோபதி மருந்து!

“ஆளைக் கடிச்சு, அரசையும் கடிக்குது’ தலையங்கம் (5-10-06) கண்டேன்.

சிற்றூர்ப்புறம், நகர்ப்புறம் சார்ந்த எந்தப் பகுதிகளையும் விட்டு வைக்காது மக்களை வாட்டித் துன்புறுத்துகிறது சிக்குன் குனியா காய்ச்சல் என்ற ஆள் முடக்கு நோய். நபர்களின் உழைப்புத் திறனை முடக்கிப் போட்டு ஒன்றும் செய்ய இயலாமல் ஆக்கும், சிக்குன் குனியாவிற்கு முழுமையான மருந்து “ஒத்தியல்’ என்றழைக்கப்படுகின்ற ஹோமியோபதி மருத்துவத்திலேயே உள்ளது. வந்த பின் காக்கும் மருந்துகளோடு, வராமலே தடுக்கின்ற மருந்துகளும் ஒத்தியல் மருத்துவத்திலேயே உள்ளன. தேர்ந்த அனுபவமிக்க மருத்துவர்களால், நோயாளிகளின் உடல் மற்றும் மனநிலையைப் பொறுத்து ஒத்தியல் மருந்துகள் வழங்கப்படுகின்றன. மருத்துவரின் பரிந்துரையோடு இம்மியளவும் பிசகாமல் இதனை உட்கொள்ள ஆரம்பித்தால், எலும்பு இணைப்புப் பகுதிகளில் நிலவும் கடுமையான வலிகள் அறவே குறைந்து விடுகின்றன. நோய்த் தாக்குதலுக்கு ஆளான இரண்டிலிருந்து மூன்று நாட்களுக்குள் முழுமையான குணம் பெற்று இயல்பு நிலைக்குத் திரும்ப முடியும். இது ஒத்தியல் மருத்தவத்தாலேதான் சாத்தியம். மதுரையைச் சார்ந்த “நலம்’ (NALHAM – New Association for Learning Homoeopathy and Alternative Medicines, Reg. . 96/2004) என்ற தன்னார்வ ஒத்தியல் மருத்துவ அமைப்பு சிற்றூர்ப்புறங்களிலும், நகர்ப்புறங்களிலும் தீவிரமான மருத்துவ முகாம்களை இலவசமாக நடத்தி வருகிறது.

இரா. சிவக்குமார்,
மதுரை.

3 நாள் மருந்து

சிக்குன் குனியா கண்டவருக்கு மிகவும் எளிமையானதும் விரைவில் குணங்காணக் கூடியதுமான மருத்துவம் ஹோமியோபதியில் உள்ளன. இந்நோய் தாக்குதலுக்கான அனைத்து வயதினர்க்கும் 3 நாள்களுக்கு யூபட்டோரியம் பெர் (200) என்ற மருந்தும் மூட்டுவலியைக் குணப்படுத்த ரஸ்டாக்ஸ் (200) என்ற மருந்தும் போதுமானது. ஹோமியோபதி மருந்துகளை ஆந்திர மாநில அரசு அங்கீகரித்து இலவசமாக வழங்கி வருகிறது. ஆனால் தமிழகத்தில் மட்டும் ஹோமியோபதி மருத்துவம் மாற்றான் தாய் மனப்பான்மையுடனே நடத்தப்படுகிறது. “”எண்ணிலா நோயுடையார்-இவர் எழுந்து நடப்பதற்கும் வலிமையிலார். கண்ணிலா குழந்தைகள்போல்-பிறர் காட்டிய வழியிற் சென்று மாட்டிக் கொள்வார்” என்று பல ஆண்டுகளுக்கு முன் இன்றைய அவல நிலையைச் சுட்டிக்காட்டிய மகாகவி பாரதியாரின் நினைவுதான் வருகிறது.

த. நாகராஜன்,
சிவகாசி.

நோய்க்கு மூலகாரணம்

வெறும் கொசுக்கடியால் மட்டும் இந்நோய் தாக்குவதில்லை. பல்லாண்டுகளாக ரசாயன உரப்பொடிகளின் மூலமாகவும், பூச்சிக்கொல்லி மருந்துகள் மூலமாகவும் நம் உடலில், ரத்தத்தில் ஏற்றப்பட்டுள்ள நச்சுகளின் காரணமாகத்தான் உடலை முடக்கும் சிக்குன் குனியா நோய் ஏற்படுகிறது.

செயற்கையான நச்சு வேளாண்மையை விட்டுவிட்டு, இயற்கை வேளாண்மைக்குத் திரும்ப வேண்டும் என்பதற்கான எச்சரிக்கை மணியே சிக்குன் குனியா நோயாகும். இந்த எச்சரிக்கையை மதித்து நடக்க வேண்டும்..

மு. தனராசு,
தேவாரம்.

நிலவேம்பு

டெங்கு காய்ச்சலைக் குணமாக்கும் நிலவேம்பு. நசுக்கிய நிலவேம்பு ஐந்து கிராம், வெந்நீர் நூறு மில்லி, ஏலக்காய் ஒன்று இவற்றை ஆறு மணி நேரம் ஊற வைத்து வடிகட்டி தினசரி காலை, மதியம், மாலை வெறும் வயிற்றில் முப்பது மில்லி வீதம் குடிக்கவும். கஷாயத்தில் இனிப்புக்கு பனை வெல்லம் சேர்க்கவும். பூண்டு போட்டு காய்ச்சிய புழுங்கல் அரிசிக் கஞ்சி குடிக்கவும். இதுபோல ஐந்து நாள்கள் குடித்தால் டெங்கு காய்ச்சல், முறைஜூரம், செரியாமை முதலிய நோய்கள் குணமாகும்.

மரு.க.கோ. மணிவாசகம்,
தேவூர்.

Posted in Advice, Allopathy, Care, Chicken gunya, Chicken Kunya, chiken kunya, Chikun Kunya, Chikunkunya, cure, Homeopathy, medical, Medicines, Prescriptions, Suggestions, unaani | Leave a Comment »

Mosquitoes, Local Body, Healthcare – C Mahendiran

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 11, 2006

உள்ளாட்சித் தேர்தல்-கொசு ஒழிப்பு

சி. மகேந்திரன்

சிக்குன் குனியா, டெங்கு ஆகிய இரண்டு கொடிய காய்ச்சல்களுக்கு அடிப்படைக் காரணம் கொசுதான் என்பது அனைவருக்கும் தெரிந்திருக்கிறது. நாட்டின் முன்னேற்றம் அனைத்திற்கும் தடையாக இருப்பதில் முக்கியக் காரணம் வகிப்பது லஞ்சம்தான் என்பதை நாம் உணர்ந்தும் அதனை ஒழிப்பதற்கு முயற்சி எதுவும் எடுக்காமல் இருப்பதைப் போலத்தான் கொசு ஒழிப்பதிலும் நம் செயல்பாடுகள் அமைந்துள்ளன. எந்த ஒரு சமுதாயத்தின் வீழ்ச்சியும் இவ்வாறாகத்தான் தொடங்குகிறது.

எய்ட்ஸ் கொடிய நோய்தான். இதன் பரவல் கட்டுப்பாடற்ற பாலுணர்வு வாழ்க்கையிலிருந்துதான் பெருகியிருக்கிறது. மானுட நெடும்பரப்பின் அனுபவம் எது நன்மை பயக்கும்? எது தீமை பயக்கும் என்ற பாதையைத் தெளிவாக உருவாக்கித்தான் வைத்திருக்கிறது. காடு, மேடு, மலையின் உச்சி, பள்ளத்தாக்குகளின் பாதாளம் என்று ஓடித் திரிந்த வாழ்க்கையில் மனிதன் அனுபவத்தின் அடிப்படையில் கண்டறிந்ததுதான் ஒருவனுக்கு ஒருத்தி என்னும் வாழ்க்கை முறை. இந்த வாழ்க்கை முறை சிதைந்ததால்தான் எய்ட்ஸ் வந்ததா? அல்லது ஆணுறை இன்மையால் நோய் வந்ததா என்ற கேள்வி நம்மைப் பெரிதும் வெட்கமுற வைக்கிறது. இன்று வியாபாரத் தந்திரங்களிலிருந்து, எந்தவொரு நாடும் தப்பிக்க இயலவில்லை. ஒருபுறம் வியாபாரமாகிப் போன உலகில், ஆண், பெண் உறவிலுள்ள தார்மிகத்தை வெகுவாக இழந்து விட்டோம். மறுபுறம் ஆணுறை நிறுவனங்கள் உற்பத்தியைப் பெருக்கி, லாபத்தைக் குவித்துக் கொண்டிருக்கின்றன. கொசு ஒழிப்பு நடவடிக்கையும் இதே பாதையில்தான் நடைபோட்டுக் கொண்டிருக்கிறது.

கொசுக்களை ஒழிக்கப் புறப்பட்ட ஆயுதங்களில் எத்தனை வகைகள் இருக்கின்றன. நெருப்பைப் பொருத்தி எழுப்பும் புகையாகவும், மின்சாரத்தில் பொருத்தி உருவாக்கும் ஆவியாகவும், உடல்களில் பூசிக் கொள்ளும் பசைகளாகவும் எத்தனை வகைகளில் இவை! இந்த நடவடிக்கைகளின் தகுதி, திறன் பற்றி ஊடகங்கள் செய்த விளம்பரங்கள் இன்னமும் நம் காதுகளில் ஒலித்துக் கொண்டிருக்கின்றன. ஆனால் கொசுவை ஒழிக்க முடியவில்லை? இச் செயல்முறைகள் மறைமுகமாகக் கொசுவை வளர்த்தனவா என்ற சந்தேகம் கூட இப்பொழுது எழத் தொடங்கிவிட்டது. வியாபாரத் தந்திரங்களை யார் அறிவார்?

கொசுவும், கொசு மூலம் பரவும் நோய்களும் ஆதிகாலம் முதல் இருந்திருக்கத்தான் வேண்டும். இதற்கான தடுப்பு நடவடிக்கைகளையும் மக்கள் கண்டறிந்து பயன்படுத்தி வந்திருக்கின்றனர் என்பதும் மறக்க முடியாத உண்மையாகும். நமது தொன்மையான முறைகள் எதுவும் வியாபாரம் சார்ந்ததல்ல. “வியாபாரம் சாராத’ மக்கள் நலம் சார்ந்த நடவடிக்கைதான் இன்று அவசியமாகிறது.

உள்ளாட்சிகளின் செயல்பாடுகள் மக்கள் சார்ந்தவை. மக்கள் அனைவரையும் பங்கேற்க வைக்கும் பங்கேற்பு ஜனநாயகமாக உள்ளாட்சித் தேர்தல் அமைந்துள்ளது. ஆனால் இது அதிகாரத்தின் மூலம் மக்களின் பணத்தை மறைமுகமாகக் கொள்ளையிடுவதற்கான வழிமுறையாக இன்று மாறி வருகிறது. இதை வெளிப்படைத் தன்மையுடன் மக்கள் சேவை மையமாக மாற்ற வேண்டும்.

மக்கள் நடவடிக்கை குறித்த அனுபவங்களுக்கு வியட்நாம், கியூபா செயல்திட்டங்களைக் கூர்ந்து கவனிப்பது அவசியமானது என்று தோன்றுகிறது. வியட்நாமின் சில தகவல்கள் நம்மை வியப்புற வைக்கின்றன. பள்ளி செல்லும் குழந்தைகள் எங்காவது நீர் தேங்கி அதில் கொசு அமர்ந்திருப்பதைப் பார்த்துவிட்டால், உடன் வாழ்விடத்தின் சுகாதார நடவடிக்கைக் குழுக்கள் அல்லது பெற்றோர் கவனத்திற்குக் கொண்டு வருகிறார்கள். குழந்தைகளின் இந்தப் பொறுப்புணர்வு அவர்களுக்கு எங்கிருந்து கிடைத்தது? சமூகம் அந்தக் குழந்தைகளுக்குக் கற்றுத் தந்த ஆரம்பக்கல்வி. ஒரு முழு சமூகத்தின் ஆரோக்கியத்தைக் குழந்தைகளிடம்தான் பார்க்க முடிகிறது. இதைப் போன்றுதான் புயல்போல் வேகமெடுத்துப் பரவிய டெங்கு காய்ச்சலை கியூபாவில் மக்கள் நடவடிக்கையால் கட்டுப்படுத்த முடிந்தது. 1981-ஆம் ஆண்டு 3 லட்சத்து 44 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தார்கள். நான்கு மாதங்களில் அங்கு இந்த நோய் முற்றாக ஒழிக்கப்பட்டது.

மக்கள் நடவடிக்கையின் மூலம் கொசுக்களை ஒழிப்பதில் முதலில் கவனம் கொள்ள வேண்டியது, சுற்றுச்சூழல் பாதிப்பற்ற திட்டங்களில்தான்! கொசுவை ஒழிக்கும் முயற்சியில் நீர், நிலம், காற்று ஆகியவற்றிலும் விஷத்தைக் கலந்து விடுகிறோம். இதனால் இயற்கைக்கும், இயற்கையைச் சார்ந்து வாழும் மனிதனுக்கும் ஏற்படும் துயரங்களை வார்த்தைகளால் விவரித்துவிட இயலாது. இன்று பெருகி வரும் நெஞ்சக நோய்கள் உள்ளிட்ட பலவற்றிற்கு கொசுக்களை அழிக்கப் பயன்படுத்திய டி.டி.டி. போன்ற மருந்துகள்தான் காரணம் என்று ஆய்வுகள் தெரிவித்துள்ளன.

சூழலுக்குப் பாதிப்பற்ற கொசு ஒழிப்பு நடவடிக்கைகள் உலகில் பல நாடுகளில் வகுக்கப்பட்டுள்ளன. இதில் நியூஜிலாந்தின் நடவடிக்கை மிகவும் யோசித்துப் பார்க்கத் தகுந்தது. இங்கு ஆண் கொசுக்களை மலடாக்குவதன் மூலம் கொசுக்களின் இனப்பெருக்கத்தை முற்றாக நிறுத்தி விட்டார்கள். இதில் கதிர் வீச்சுகளைப் பயன்படுத்தும் முறைகளும், மரபு அடிப்படையிலான முறைகளும் இருக்கின்றன.

கம்பூச்சியா நாட்டில் ஒருவகை மீன், கொசுவை மிக வேகமாக ஒழித்து விடுகிறது. இதைப்போலவே மிசோ – சைக்கோளப் என்னும் மற்றோர் உயிரினம் டெங்கு, சிக்குன் குனியா முதலிய நோய்களைப் பரப்பும் கொசுக்களை ஒழித்து விடுகிறது. கொசுக்கள் பெரும்பாலும் நீரில் தங்கித்தான் இனப்பெருக்கம் செய்கின்றன. தேங்கியுள்ள நீர் நிலைகளில் இந்த மீன்களையும் சில உயிரினங்களையும் வளர்ப்பதன் மூலம் கொசுக்களை அழிக்கும் நுட்பத்தை அங்கு வளர்த்தெடுக்கிறார்கள். சுற்றுச்சூழலுக்கு இதனால் எந்தவிதமான பாதிப்பும் இல்லை.

இத்தகைய சூழல் பாதிப்பற்ற நடவடிக்கைகள் உலகில் பல நாடுகளில் செயல்வடிவம் பெற்றுள்ளன. ஆனாலும் இந்த நடவடிக்கைகள் ஏமாற்று வேலைகள் என்ற பொய்த் தோற்றத்தை உருவாக்க மூலதன நிறுவனங்கள் பல்வேறு சதித்திட்டங்களை உருவாக்கி வருகின்றன. இதனால்தான் கியூபா போன்ற நாடுகளின் புகழ்மிக்க விவசாயத் தீர்வுகளை, உலகத்திற்கே தெரியவிடாமல் சூழ்ச்சி செய்து மறைத்து விட்டார்கள்.

உள்ளாட்சிகளில் சூழல் பாதுகாப்புடன் கூடிய கொசு ஒழிப்பிற்கான திட்டங்கள் வகுக்கப்பட வேண்டும். ஊராட்சி மன்றங்கள் முதல் எல்லா நிலைகளிலும் இதற்காகத் தனித்தனியான திட்டங்கள் வகுத்து மக்களை ஈடுபடுத்த வேண்டும்.

கொசு ஒழிப்புத் திட்டம் வலிமையுடன் நிறைவேற்றப்பட வேண்டுமெனின், சுகாதாரத்திற்கான அரசாங்கத்தின் நிதியைக் கூடுதலாக்குவது அவசியம். பல நாடுகள் தங்கள் தேசிய வருமானத்தில் குறிப்பிடத்தக்க சதவீதத்தை சுகாதாரத்திற்கு ஒதுக்குகின்றன. இந்தியா தனது தேசிய வருமானத்தில் 0.9 சதவீதத்தை மட்டும் ஒதுக்கியுள்ளது. இலங்கை அரசாங்கம் கூட 2 சதவீதத்தை ஒதுக்கியுள்ளது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். தமிழக வரவு – செலவுத் திட்டத்தில் 30 சதவீதத்தை உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒதுக்க வேண்டும் என்ற கருத்து உள்ளாட்சி அமைப்புகள் மூலம் முன்வைக்கப்பட்டுள்ளது. இதனைப் பரிசீலனை செய்து பொருத்தமுடைய ஒதுக்கீட்டிற்குத் தமிழக அரசு ஆவன செய்ய வேண்டும். இந்தத் தொகையில் குறிப்பிடத்தக்க அளவை, கொசு ஒழிப்புக்கென்று செலவிடுவது அவசியம்.

உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களும், அரசியல் கட்சிகளும் வாக்களிக்கும் மக்களும் கொசு ஒழிப்பதற்கான திட்டங்கள் குறித்து இந்த நேரத்தில் யோசிப்பது முக்கியமாகும். இதைத் தவிர்த்து, சிக்குன் குனியா, டெங்கு காய்ச்சல்கள் பரவுவதற்கு, ஆளும் கட்சி காரணமா? எதிர்க்கட்சி காரணமா என்ற சொற்போர் நிகழ்த்திக் கொண்டிருப்பதால் யாருக்கும் பலன் கிடைக்கப் போவதில்லை.

Posted in Chicken Kunya, Chiken Gunya, Chikun Kunya, Dengue, Healthcare, Local Body, Mosquito, Op-Ed, Outbreak, Suggestions | Leave a Comment »

‘Kerala still did not get the promised help on Chikun Kunya from Anbumani’ – Achuthananthan

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 11, 2006

கேரளத்தில் சிக்குன்குனியாவை கட்டுப்படுத்த அன்புமணி அறிவித்த உதவிகள் இதுவரை வரவில்லை: முதல்வர்

திருவனந்தபுரம், அக். 11: கேரள மாநிலத்தில் பரவி வரும் சிக்குன் குனியா நோயை கட்டுப்படுத்துவதற்காக மத்திய அமைச்சர் அன்புமணி அறிவித்த நிவாரண உதவிகள் இதுவரை வரவில்லை என அந்த மாநில முதல்வர் அச்சுதானந்தன் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

கேரள சட்டப் பேரவையில் கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த அச்சுதானந்தன் இத்தகவலை தெரிவித்தார்.

ஆலப்புழை மாவட்டத்தில் சிக்குன்குனியா பாதிப்பு குறித்து அறிய கடந்த 6-ம் தேதி வந்த மத்திய அமைச்சர் அன்புமணி அறிவித்த உதவிகள் குறித்து பத்திரிகைகளில் பார்த்தேன். ஆனால், அத்தகைய உதவிகள் ஏதும் இதுவரை வரவில்லை.

இதுகுறித்து, தில்லியில் புதன்கிழமை நடைபெறும் மாநில சுகாதார அமைச்சர்களின் கூட்டத்துக்கு செல்லும் கேரள சுகாதார அமைச்சர், மத்திய அரசின் கவனத்துக்கு இவ்விவகாரத்தை கொண்டு செல்வார் என்றார். முன்னதாக ஆலப்புழை வந்த அன்புமணி, சிக்குன்குனியாவை பரப்பும் கொசுக்களைக் கட்டுப்படுத்த புகை அடிக்கும் இயந்திரம், கொசு வலைகள் ஆகியவற்றை சிறப்பு நிவாரணமாக கேரளத்துக்கு மத்திய அரசு அளிக்கும் என தெரிவித்திருந்தார்.

Posted in Achuthananthan, Anbumani, Chicken Kunya, Chiken Gunya, Chikun Kunya, Healthcare, Kerala, Outbreak, promises | Leave a Comment »

Meningo encephalitis & Chikun Kunya – Dinamani Editorial

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 6, 2006

சிக்குன் குனியாவும் சுற்றுப்புறத் தூய்மையும்

“”என் மகள் சிக்கன் சாப்பிடுவதே இல்லைங்க. அவளுக்குப் போய் “சிக்கன் குனியா’ வந்துவிட்டது” என்று புலம்பினார் கிராமத்து நண்பர். “”ஐயா, அது சிக்கன் குனியாவும் அல்ல; மட்டன் குனியாவும் அல்ல; சிக்குன் குனியா” என்று திருத்தினேன்.

கிழக்கு ஆப்பிரிக்க பாண்டு இன மக்களின் மொழியாகிய ஸ்வாஹிலி (Swahili) யில் “சிக்குன் குனியா’ என்பதற்கு “வளைத்துப் போட்டுவிடுவது’ (that which bends up) என்று பொருள். இந் நோயால் தாக்கப்படுபவர்களின் மூட்டுகள் பாதிக்கப்பட்டு முடக்கப்படுவதால் சிக்குன் குனியா என்ற பெயர் படைத்தது.

ஏடெஸ் எஜிப்டி (Aedes aegypti) என்ற வகைக் கொசுக்கள் கடிப்பதனால் இந்தக் கொடிய நோய் ஏற்படுகிறது. குளிர்காய்ச்சல், தலைவலி, வாந்தி, மயக்கம், மூட்டுக்கு மூட்டு வலி, வாய்க்கசப்பு எனப் பல்வேறு சிரமங்களை இந்த நோய் உண்டாக்குகிறது.

சிக்குன் குனியாவின் பூர்வீகம் கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள தான்சானியா நாடுதான். இங்குதான் 1952 – 53 ஆண்டுகளில் இந்நோய் கண்டறியப்பட்டது. 1999ஆம் ஆண்டு மலேசியாவில் உள்ள க்ளாங் (Klang) துறைமுகத்திலும் சிக்குன் குனியாவால் 27 பேர் பாதிக்கப்பட்டனர்.

இந்துமாக் கடலில் மடகாஸ்கர் தீவுக்குக் கிழக்கே பிரான்சுக்குச் சொந்தமான “ரியூனியன்’ (Reunion) என்று ஒரு தீவு உள்ளது. இங்கு கடந்த 2005 ஆம் ஆண்டு கொள்ளை நோயாக சிக்குன் குனியா கோரத் தாண்டவம் ஆடியது. தீவில் வாழும் 7 லட்சத்து 50 ஆயிரம் மக்களில், ஒரு லட்சத்துப் பத்தாயிரம் பேர் சிக்குன் குனியாவால் கடுமையாக முடக்கப்பட்டனர். அருகே இருந்த மொரிஷியஸ் தீவையும் இந்நோய் விட்டு வைக்கவில்லை. இங்கு சிக்குன் குனியாவால் பாதிக்கப்பட்டவர் எண்ணிக்கை மூவாயிரத்து ஐநூறு.

இந்த ஆண்டிலும் (2006) ரியூனியன் தீவில் எழுபதாயிரம் பேர் இந்நோயினால் அவதிக்கு உள்ளாயினர். பிரான்சு நாடு போர்க்கால அடிப்படையில் விரைந்து செயல்பட்டு, கொசுக்களை அழித்திட 3,600 பேரைப் பணியில் ஈடுபடுத்தியது. மேலும் ராணுவ வீரர்களும் இப்பணியில் பங்கேற்க அழைக்கப்பட்டனர்.

இந்தச் சிக்குன் குனியா ஓர் ஆட்கொல்லி நோயன்று என்று முதலில் கருதப்பட்டது. ஆனால் ரியூனியன் தீவில் டைலான் (Dylan), ட்ரிசியா (Tricia) என்ற பத்து வயது சிறார்கள் இருவர் இறந்து போயினர். டைலான், சிக்குன் குனியா பாதித்த இரண்டு நாள்களிலும், ட்ரிசியா ஒரு வாரம் கழித்தும் மரணத்தைத் தழுவினர். மொரிஷியஸ் தீவிலும் சங்கீத் எம்ரித் (Sangeet Emrith) என்ற முப்பத்து மூன்று வயது நபரும் இந் நோய் தாக்கி மரணமடைந்தார். மூளையின் நரம்புகளை சிக்குன் குனியா வைரஸ் பாதித்ததால் மெனிங்கோ என்செஃபாலிட்டிஸ் (Meningo encephalitis) நோயினால் இவர்கள் மரணமடைந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த மரணங்கள்தான் சிக்குன் குனியா ஓர் ஆட்கொல்லி நோயாக இருக்கக் கூடும் என்ற ஐயப்பாட்டை முதன்முதலாக மருத்துவ உலகில் விதைத்தன எனலாம். 2004-ல் 3884 ஆக இருந்த இத்தகைய மரணங்கள் 2005ஆம் ஆண்டில் 4272 ஆக உயர்ந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் மேரிலாந்து (Maryland) பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் ராபர்ட் இடெல்மேன் (Robert Edelman) அமெரிக்க ராணுவத்தின் பயன்பாட்டுக்காக தடுப்பூசி (Vaccine) மருந்து ஒன்றைக் கண்டுபிடித்தார். இந்தத் தடுப்பூசி சிக்குன் குனியாவைத் தடுக்கும் ஆற்றல் கொண்டதாகக் கருதப்படுகிறது. இதுவரை இருபது பேருக்கு மட்டுமே சோதனை முயற்சியாகப் போடப்பட்டிருக்கிறது. பேராசிரியர் ராபர்ட் இடெல்மேனின் இந்த முயற்சி முழுமையாக வெற்றி பெற்றால் உலக அளவில் இந்நோயின் பாதிப்பைத் தடுத்து நிறுத்த முடியும். சிக்குன் குனியா வைரஸ் வேறு வேறு மனிதர்கள் மீது வேறு வேறு வகையான உயிரியல் அறிகுறிகளை (different biological symptoms on different persons) உருவாக்கக் கூடும் என்கிறார் இடெல்மேன்.

சிக்குன் குனியா மட்டுமல்ல டெங்கு, மலேரியா போன்ற பல்வேறு ஆட்கொல்லி நோய்களுக்கும் கொசுக்களே மூலகாரணம். அதுவும் ஏடெஸ் எஜிப்டி கொசுவுக்கு “மாவீரன் ஏடெஸ்’ என்று விருதே வழங்கலாம். தமிழக எதிர்க்கட்சிகளைக் கைகோர்த்து வீதிக்கு வந்து போராட வைத்துவிட்டதே!

கொசுக்களை மனிதர் ஒழித்துக் கட்ட வேண்டும். இல்லையேல் கொசுக்கள் கொஞ்சம் கொஞ்சமாக மனிதரை ஒழிக்க முற்படும்.

சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்துக் கொள்வதும், தேங்கியுள்ள நீர் நிலைகளில் கொசுக்கள் உற்பத்தியாகாமல் பார்த்துக் கொள்வதும் இன்றைய அவசரத் தேவைகள்.

கொசு ஆசான், நம்மை “முட்டிக்கு முட்டி தட்டி’ச் சொல்லிக் கொடுத்திருக்கும் பாடம் இது; கற்போமா?

Posted in Background, Chicken Kunya, Chikan Kunya, Chikun Kunya, Clenaliness, Dinamani, Editorial, Healthcare, History, Meningo encephalitis, Op-Ed, World | Leave a Comment »

Four Villages – 2000 Affected by Chikun Kunya

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 6, 2006

மே. வங்க கிராமங்களில் 2 ஆயிரம் பேருக்கு சிக்குன் குனியா?

கோல்கத்தா, அக். 7: மேற்கு வங்கத்தில் வடக்கு 24 பர்கானா மாவட்டத்தில் பதூரியா-ராம்சந்திராபூர் கிராம பஞ்சாயத்துக்கு உட்பட்ட 4 கிராமங்களில் 2 ஆயிரம் பேர் சிக்குன்குனியாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படுவதாக மாநில சுகாதாரத்துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனர்.

Posted in Chicken Kunya, Chikun Gunya, Chikun Kunya, Healthcare, Outbreak, Villages, West Bengal | Leave a Comment »

Chikun Kunya in Kerala – Anbumani Ramadoss gets condemned by Achuthananthan

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 6, 2006

சிக்குன்-குனியாவால் யாரும் சாகவில்லையா? அன்புமணிக்கு கேரள முதல்வர் கண்டனம்

திருவனந்தபுரம், அக். 6: சிக்குன்-குனியா காய்ச்சல் வந்து இதுவரை யாரும் உயிரிழக்கவில்லை என்று அறிக்கை விடுத்ததற்காக மத்திய சுகாதார அமைச்சர் அன்புமணிக்குக் கடும் கண்டனம் தெரிவித்தார் கேரள முதலமைச்சர் வி.எஸ். அச்சுதானந்தன்.

மாநிலத்தின் முன்னாள் வருவாய்த்துறை அமைச்சரும், கேரள காங்கிரஸ் (எம்) தலைவருமான கே.எம். மணி எழுப்பிய ஒழுங்குப் பிரச்சினைக்குப் பதில் அளித்து கேரள சட்டப் பேரவையில் வியாழக்கிழமை பதில் அளித்தபோது இக் கண்டனத்தை அவர் வெளியிட்டார்.

“கேரள அரசிடமிருந்து எந்தத் தகவலையும் கேட்டுப் பெறாமலே அமைச்சர் தில்லியில் இந்த அறிக்கையை வெளியிட்டிருக்கிறார்; எதிர்காலத்தில் இப்படிச் செய்யக்கூடாது என்று பிரதமர்தான் அவருக்கு அறிவுறுத்த வேண்டும். கேரளத்தில் உள்ள நிலைமையை நேரில் அறிய மத்திய அரசு அனுப்பிய நிபுணர்கள் குழு புதன்கிழமைதான் திருவனந்தபுரத்துக்கு வந்துள்ளது. இப்படி இருக்கும்போது, சிக்குன் குனியாவால் யாருமே, எங்குமே சாகவில்லை என்று அமைச்சர் அன்புமணி எப்படி அறிக்கை வெளியிட்டார் என்று தெரியவில்லை’ என்றார் முதல்வர் அச்சுதானந்தன்.

முன்னதாகப் பேசிய கே.எம். மணி, “”அன்புமணியின் அறிக்கை குழப்பத்தையே தருகிறது; கேரளத்தில் என்ன நிலைமை என்று கேட்டுத் தெரிந்துகொண்டு அவர் அறிக்கை வெளியிட்டாரா என்று தெரியவில்லை” என்றார்.

அமைச்சரவை முடிவு: கேரள அமைச்சரவை புதன்கிழமை கூடி, சிக்குன்-குனியா, டெங்கு, எலிக் காய்ச்சல் ஆகியவை கேரளத்தின் 10 மாவட்டங்களில் பரவியிருப்பது குறித்து கவலையுடன் பரிசீலித்தது. (மொத்தமே 14 மாவட்டங்கள்தான்).

மாநிலம் முழுவதும் தீவிர சுகாதார நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், இதற்கு முதல் கட்டமாக ஒரு கோடி ரூபாயை ஒதுக்குவது என்றும் அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

அத்துடன் அரசு மருத்துவமனைகளில் காலியாகவுள்ள டாக்டர்கள், சுகாதாரப் பணியாளர்கள் என்று 400 பதவி இடங்களுக்கு உடனே ஆள்களை நியமிக்கவும் முடிவு செய்யப்பட்டது.

கேரளத்திலேயே, கிருமிகளைக் கண்டுபிடிக்கும் தனி ஆய்வகத்தை ஏற்படுத்தவும் முடிவு செய்யப்பட்டது.

75 பேர் சாவு: இதுவரை கேரளத்தில் மட்டும் 75 பேர் சிக்குன்-குனியா காய்ச்சல் வந்த பிறகு இறந்திருக்கிறார்கள். அவர்களில் 68 பேர் ஆலப்புழை மாவட்டத்தில் இறந்திருக்கிறார்கள். இதுவரை ஒரு லட்சம் பேருக்கு இக் காய்ச்சல் வந்திருக்கிறது.

சுற்றுலாத் தொழிலும் பாதிப்படைந்திருக்கிறது. கேரளத்துக்கு வர சுற்றுலாப் பயணிகள் அஞ்சுகின்றனர். ஆலப்புழை, குட்டநாடு, குமரகம், கோவளம், கொல்லம் ஆகிய முக்கிய சுற்றுலா மையங்களில் சிக்குன்-குனியா பரவியிருக்கிறது.

அனைத்துக் கட்சிக் கூட்டம்: சிக்குன்-குனியா நோயைக் கட்டுப்படுத்தும் வழிகளைக் கண்டறிய முதல்வர் அச்சுதானந்தன், திருவனந்தபுரத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை புதன்கிழமை இரவு கூட்டியிருந்தார். எதிர்க்கட்சித் தலைவர் உம்மன் சாண்டி உள்ளிட்ட பிற கட்சித் தலைவர்கள் அதில் கலந்து கொண்டனர்.

முதலில் மாவட்ட அளவிலும் பிறகு வட்ட அளவிலும் மக்களிடையே விழிப்புணர்ச்சியை ஊட்ட முடிவெடுத்தனர்.

Posted in Achuthananthan, Anbumani, Chicken Kunya, Chikun Gunya, Chikun Kunya, Chikunkunya, dead, Healthcare, Kerala, Misinformed, Outbreak, Ramadoss, Toll | Leave a Comment »

Chikun Kunya – Death Toll in Kerala & Tamil Nadu

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 5, 2006

சேர்த்தலையில் சிக்குன் குனியாவுக்கு மேலும் 8 பேர் பலி: ஊரை காலி செய்து மக்கள் ஓட்டம்

கொழிஞ்சாம்பாறை, அக். 5-

தமிழ்நாட்டை உலுக்கி வரும் சிக்குன் குனியா நோய் தற்போது கேரளாவுக்குள் ஊடுருவி விட்டது. இங்கு இந்த நோயின் தாக்கம் உச்ச கட்டத்தை அடைந்துள்ளது.

குறிப்பாக சேர்த்தலை பகுதியில் சிக்குன் குனியா நோய்க்கு ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று மட்டும் இந்த நோயினால் பாதிக்கப்பட்ட 8 பேர் பலியா னார்கள்.

ஊரை காலி செய்யும் மக்கள்

இதன் மூலம் சிக்குன் குனியா நோய் தாக்கி இறந்த வர்களின் எண்ணிக்கை 80 ஆக உயர்ந்துள்ளது.

சிக்குன் குனியா நோய் தாக்குதலால் அச்சம் அடைந்த சேர்த்தலை தாலுகா மக்கள் தங்கள் ஊரை காலி செய்து விட்டு உறவினர்கள் வீடுகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். இதனால் ஊர்களில் மக்கள் தொகை குறைந்து காணப் படுகிறது.

கோர்ட்டுகளுக்கு விடுமுÛ
சேர்த்தலை தாலுகாவில் 2 கோர்ட்டுகள் உள்ளன. இங்கு பணிபுரியும் நீதிபதிகள் மற்றும் ஊழியர்கள் சிலருக்கு சிக்குன் குனியா நோய் தாக்கியுள்ளதாக கூறப்படுகிறது. எனவே, கோர்ட்டுகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

இந்த நோய் தாக்குதல் காரணமாக கேரளாவில் மக்கள் பீதி அடைந்துள்ள னர்.

Posted in Chicken gunya, Chicken Kunya, Chikun Kunya, Death, Kerala, Tamil, Tamil Nadu, Toll | Leave a Comment »

Chikun Kunya – Dinamani Editorial

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 5, 2006

ஆளைக் கடிச்சு, அரசையும் கடிக்குது

டிசம்பர் 2005-ல் மகாராஷ்டிர மாநிலத்தில் பெயர் தெரியாத காய்ச்சல் குறித்து ஆய்வு செய்ததில் அது சிக்குன் குனியா எனத் தெரிய வந்தது. அது பரவும் வேகமும் அதன் தன்மையும் சுகாதாரத் துறை அலுவலர்களுக்குத் தெரிந்ததுதான். ஆனால் அப்போதே எச்சரிக்கை மணி ஒலிக்கவில்லை. விளைவு? மகாராஷ்டிரம், குஜராத், மத்திய பிரதேசம், கர்நாடகம், ஆந்திரம், தமிழ்நாடு, கேரளம் என 6 மாநிலங்களுக்குப் பரவிய சிக்குன் குனியா இப்போது அரசையும் கடிக்கிறது.

இது ஆட்கொல்லி நோய் அல்ல. ஆள்முடக்கி நோய். இதற்கான மருந்து (காய்ச்சலுக்கான பாரசிடமால் போன்ற) குறைந்த செலவு மாத்திரைகளும் முழு ஓய்வும்தான். இந்த எளிய தகவல் அடித்தட்டு மக்களிடம் கொண்டு செல்லப்படவில்லை. ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு மிகப் பெரிய பொறுப்பு இருந்தும்கூட, அவர்களது சேவைக்கரம் கிராமங்களுக்கு நீளவில்லை. இதனால் மக்கள் அதிகம் செலவிட நேரிட்டது.

கர்நாடகத்தில் சில மாவட்டங்களில் காய்ச்சல் மருந்துடன், செலவுமிக்க வைட்டமின் மாத்திரைகள், வலிநிவாரணிகளை சில மருத்துவர்கள் எழுதிக் கொடுத்துள்ளனர். இதில் சில வலிநிவாரணிகள் இரைப்பையைப் பொத்தலாக்கியிருப்பதை அங்கே தற்போதுதான் உணர்கிறார்கள். சிக்குன் குனியா நோயினால் பாதிக்கப்பட்ட சிலர் இறப்பதற்கு இதுபோன்ற பக்கவிளைவுகளும் முதுமையுமே முக்கிய காரணம். இந்த நோய் ஏழை-நடுத்தரக் குடும்பத்தினரைப் பொருளாதார ரீதியில் மிகவும் பாதிக்கச் செய்துள்ளது. குறைந்த சம்பளத்துக்கு வேலை செய்வோரும், அன்றாட உடல்உழைப்பில் வாழ்வோரும் பலநாள் ஊதியத்தை இழந்ததோடு, மருத்துவச் செலவையும் ஏற்க வேண்டியதாயிற்று. பல இடங்களில் குடும்ப அங்கத்தினர் அனைவருமே நோயால் பாதிக்கப்பட்டு யாருமே வேலைக்குச் செல்ல முடியாத சூழல்களும் பல குடும்பங்களில் ஏற்பட்டன.

காய்ச்சல் நின்றபின் மூட்டுகள் வலிக்கும். அதனால் எந்த வேலையும் செய்ய முடியாது. செய்தால் நோயின் மீள்தாக்குதலுக்கு ஆளாக நேரும். ஆனால் அன்றாடம் உழைத்துச் சாப்பிட வேண்டிய கட்டாயத்தில் இருப்போர், வலியைப் பொருட்படுத்தாமல் வேலைக்குப் போய் மீண்டும் அவதிப்பட்டுள்ளனர். இந்த ஏழைகளுக்கு அரசு மருத்துவமனையில் காய்ச்சல் நின்ற பிறகு 15 நாட்களுக்கு, மருந்துக்குப் பதில் ஒரு கிலோ ரேஷன் அரிசி (ரூ.2 தான்) கொடுத்திருந்தால்கூட இவர்கள் போதுமான ஓய்வு எடுத்து, நோயின் மீள்தாக்குதலைத் தவிர்த்திருப்பார்கள். சிக்குன் குனியா நோய் தொடர்பான விழிப்புணர்வுச் செய்திகளை, அனைத்து தனியார் தொலைக்காட்சி நிறுவனங்களையும் தினமும் “சீரியல்‘ நேரத்தில் இரண்டு முறை இலவசமாக ஒளிபரப்பச் செய்திருந்தால், ஆரம்ப சுகாதார நிலையம் செல்ல முடியாத பகுதியில் வசிக்கும் கிராம மக்களும்கூட விழிப்புணர்வு பெற்றிருப்பார்கள். காய்ச்சலுக்கு உண்டான மருந்தை- குறைந்த விலை என்பதால் வாங்கிச் சாப்பிடவும் செய்திருப்பார்கள். மருத்துவச் செலவும் குறைந்திருக்கும். அரசு இதை யோசிக்கத் தொடங்கியபோது சிக்குன் குனியாவுக்கு அரசியல் காய்ச்சல் வந்துவிட்டது.

தற்போது 6 மாநில சுகாதார அமைச்சர்களின் கூட்டத்தை மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் அன்புமணி கூட்டியுள்ளது வரவேற்கத்தக்கது. இதற்கிடையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள தில்லி, ஹரியாணா, உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களின் சுகாதார அமைச்சர்களுடன் அவர் இன்று ஆலோசனை நடத்துகிறார். விழிப்புணர்வை ஏற்படுத்துதல், தாற்காலிகச் சுகாதார மையங்களை அமைத்தல், இலவசமாக அல்லது குறைந்த செலவில் மாத்திரைகள் கிடைக்கச் செய்தல், பாதிக்கப்படும் ஏழைகளின் ஊதிய இழப்புகளை உணவுப் பொருளால் ஈடுசெய்ய வழிகாணுதல் ஆகியவற்றை அமைச்சர்கள் கூட்டம் விவாதிக்கும் என நம்பலாம்.

Posted in Chicken Kunya, chickun gunya, Chikun Kunya, Dengue, Dinamani, Editorial, Healthcare, Outbreak, solutions, Tamil | Leave a Comment »