Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 30, 2007
தவறான பாதை; தவறான பார்வை
பிகாரிலிருந்து தனியாகப் பிரித்து உருவாக்கப்பட்ட ஜார்க்கண்ட் மாநிலத்திலுள்ள கிரிதிக் மாவட்டத்தில் சில்காதியா கிராமத்தில் ஆண்டுதோறும் கால்பந்து போட்டி கோலாகலமாக நடைபெறும். போட்டியின் தொடர்ச்சியாக கலைநிகழ்ச்சிகளும் நடைபெறும். ஆதிவாசிகள் நிறைந்திருக்கும் மாவட்டமான கிரிதிக்கில் இந்த ஆண்டு நடைபெற்ற கலைவிழாவில்தான் ஆயுதம் தாங்கிய நக்சலைட்டுகள் திடீர்த் தாக்குதல் நடத்தியிருக்கிறார்கள். மத்திய கூடுதல் பாதுகாப்புப் படையினர்போல சீருடை அணிந்து வந்த இந்த நக்சலைட்டு தீவிரவாதிகளின் திடீர்த் தாக்குதலில் 2 பெண்கள் உள்பட 18 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்திருப்பதாகத் தெரிகிறது. இதுபோன்ற தாக்குதல்கள் ஜார்க்கண்டிலோ அதைச்சுற்றியுள்ள பகுதிகளிலோ புதியதல்ல.
மலைவாழ் மக்களும் ஆதிவாசிகளும் அதிகம் வாழும் சத்தீஸ்கர் மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்களும் ஆந்திர மாநிலத்தின் தெலுங்கானா பகுதியும் நக்சல் தீவிரவாதிகளின் ஊற்றுக்கண்களாக இருப்பதில் அதிசயமோ ஆச்சரியமோ இல்லை. மலைவாழ் மக்களின் இயற்கை வளங்களை, குறிப்பாக புதைந்து கிடக்கும் கனிமங்களை வெட்டி எடுப்பவர்கள் கோடிக்கணக்கான ரூபாய் லாபம் சம்பாதிக்கின்றபோது, அந்த மக்களின் அன்றாட வாழ்க்கை வறுமையில் தொடர்ந்தவண்ணம் இருப்பதுதான், இந்தப் பகுதிகளில் நக்சல் தீவிரவாதம் விஷஜுரம் போல பரவுவதன் ரகசியம்.
9 சதவிகித பொருளாதார வளர்ச்சி அடைந்திருக்கிறது; 200 பில்லியன் டாலர்கள் நமது செலாவணி இருப்பு; இந்தியக் கிராமங்கள் செழிப்பாக இருக்கின்றன; தொழிலாளர்களின் தினக்கூலி இப்போது நகரங்களைவிட கிராமத்தில்தான் அதிகம்; வேலைக்கு கிராமத்தில் ஆள் கிடைப்பதில்லை; யார் சொன்னது கிராமங்கள் புறக்கணிக்கப்படுகின்றன என்று? இப்படிப் பேசுபவர்கள் நாளுக்குநாள் அதிகரித்து வருகின்றனர்.
இதெல்லாம் உண்மைதான். ஆனால், விவசாயிகள் பல மாநிலங்களில் தற்கொலை செய்து கொள்கிறார்கள். கிராமங்களில் தொழில் இல்லாததால், தினக்கூலிக்காக பலரும் நகரங்களின் தெருக்களில் வேலைதேடி பரிதாபகரமாக அலைந்து கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில், படித்தும் வேலையில்லாத பட்டதாரிகள் மனவிரக்தியில் தீவிரவாத சிந்தனையால் ஆட்கொள்ளப்படுகிறார்கள். இவையும் உண்மைதானே.
இளைஞர்கள் மத்தியில் ஆட்சியாளர்கள் மீது ஏற்பட்டிருக்கும் அதிருப்தியும், அரசியல்வாதிகள் மீது ஏற்பட்டிருக்கும் கோபமும், படித்தும் வேலையில்லாததால் ஏற்பட்டிருக்கும் விரக்தியும் அவர்களைத் தீவிரவாத சிந்தனைகளுக்கு சோரம்போக வைக்கின்றன என்கிற உண்மை ஏன் மத்திய அரசில் அமர்ந்திருக்கும் பொருளாதார வல்லுநர்களுக்குப் புரியவில்லை என்பதுதான் புதிராக இருக்கிறது.
6 ஆண்டுகளுக்கு முன்னால் வெறும் 43 மாவட்டங்களில் மட்டுமே காணப்பட்ட நக்சல் தீவிரவாதம் இப்போது இந்தியாவில் 156 மாவட்டங்களில் காணப்படுகிறது என்கிற புள்ளிவிவரம் அவர்களுக்குத் தெரியாதோ என்னவோ. அதாவது, இந்தியாவிலுள்ள 460 மாவட்டங்களில் 156 மாவட்டங்கள் தீவிரவாதிகளின்பிடியில் சிக்கியிருக்கின்றன. ஏறத்தாழ 8 மாநிலங்களில் பரவியிருக்கும் தீவிரவாதம் இந்தியாவில் மூன்றில் ஒரு பகுதியை, அரசின் அதிகாரவரம்பைக் கேலிக்கூத்தாக்கிவிட்டிருக்கிறது.
அப்பாவி ஆதிவாசிகளும், கிராமப்புற மக்களும் பணபலமும், அரசியல்பலமும் உள்ளவர்களால் ஏமாற்றப்பட்டதன் விளைவு விரக்தியின் விளிம்புக்குத் தள்ளப்பட்ட அவர்கள் நக்சல் தீவிரவாதிகளாக மாறி திருப்பித் தாக்கத் தொடங்கியிருக்கிறார்கள். இந்தத் தாக்குதலுக்குப் பலியாவதும் அவர்களைச் சார்ந்த அப்பாவி ஆதிவாசிகள் என்பதுதான் வேதனையிலும் வேதனை.
ஒருபுறம் மதத்தின் பெயரால் அன்னிய சக்திகளால் கட்டவிழ்த்துவிடப்படும் தீவிரவாதம்; இன்னொருபுறம் நக்சல் தீவிரவாதிகளின் தாக்குதல்கள். இந்திய அன்னையின் பொன்னான மேனியெல்லாம் புண்ணாகிறது. ஒருபாவமும் அறியாத அப்பாவி மக்கள் செத்து மடிகிறார்கள். அதை எதிர்கொண்டு தடுக்கவோ, இந்தப் பிரச்னைக்குத் தீர்வு காணவோ நேரமோ மனமோ உறுதியோ இல்லாத மத்திய மாநில அரசுகள்!
இந்தியாவில் மூன்றில் ஒரு பகுதி தீப்பிடித்து எரிகிறது. அதை அணைக்க முற்படாமல் 9 சதவிகித வளர்ச்சியைப் பற்றி சந்தோஷப்பட்டால் அது வெறும் அற்ப சந்தோஷமாகத்தான் முடியும்.
Posted in Andhra, AP, Babulal, Bandh, Bihar, carbines, Chathisgar, Chathisgarh, Chattisgar, Chattisgarh, Chhattisgar, Chhattisgarh, Chikadia, Chikhadia, CRPF, Divide, Errabore, Extortion, Extremism, Extremist, Extremists, Gaya, Giridhi, Giridhih, Giridi, Giridih, Girithi, Girithih, Jamui, Jarkand, Jarkhand, Jharkand, Jharkhand, Jharkhand Mukti Morcha, Jharkhand Party, Jharkhand Vikas Morcha, JMM, JVM, Madhu Koda, MadhuKoda, Mahato, Maoists, Marandi, Metro, MP, Nation, National, National Games, Nationalisation, Nationalism, Nationalist, Nationalists, Nationality, Nationalization, Nations, Native, Native Folks, Natives, Naxal, Naxalbari, Naxalite, Naxals, Nepal, Nithish, Nitish, Nitish Kumar, Nitish Kumar Singh, NitishKumar, Nunulal, Nunulal Marandi, Poor, Rich, Rural, SC, SLR, SLRs, ST, Sunil Kumar Mahato, SunilKumar Mahato, Telengana, Telugu, Telugu (తెలుగు), Telugu Desam, Telungana, terror, terror networks, Terrorism, terrorist, Terrorists, Tribals, victims, Villages, Violence | Leave a Comment »
Posted by Snapjudge மேல் பிப்ரவரி 27, 2007
பழங்குடியினர் பகுதியில் டாடா உருக்காலை: இந்திய கம்யூ. எதிர்ப்பு
ராய்ப்பூர், பிப். 27: சத்தீஸ்கர் மாநிலத்தில் பழங்குடியினர் பகுதியில் டாடா நிறுவனம் உருக்காலை அமைக்க இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
பஸ்தார் மாவட்டம் லோஹனிகுன்டா பகுதியில் டாடா நிறுவனம் உருக்காலை அமைக்க தங்கள் நிலத்தை தரவிரும்பாத மக்களுடன் இணைந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போராடி வருகிறது.
Posted in Bastar, Chhattisgar, Chhattisgarh, Communist, Communist Party of India, CPI, CPI(M), Industry, Marxist, Protest, Singur, TATA, Tata Steel, Tribals, WB, West Bengal | Leave a Comment »
Posted by Snapjudge மேல் பிப்ரவரி 13, 2007
சத்தீஸ்கரிலிருந்து நிலக்கரி தரவேண்டும்: பிரதமரிடம் ராஜஸ்தான் முதல்வர் வலியுறுத்தல்
புது தில்லி, பிப். 13: “”ராஜஸ்தானின் அனல் மின் நிலையங்களுக்கு தொலைதூரத்தில் உள்ள ஒரிசா, ஜார்க்கண்டிலிருந்து நிலக்கரி வேண்டாம்; அருகில் உள்ள சத்தீஸ்கரிலிருந்து ஒதுக்கச் சொல்லுங்கள், இதனால் ஆண்டுக்கு ரூ.1,500 கோடி ரயில் சரக்குக் கட்டணம் எங்களுக்கு மிச்சமாகும்” என்ற முதலமைச்சர் வசுந்தரா ராஜேவின் கோரிக்கையை பிரதமர் மன்மோகன் சிங் ஏற்றார்.
இத் தகவலை வசுந்தராவே தில்லியில் நிருபர்களிடம் திங்கள்கிழமை தெரிவித்தார். கடந்த 2 ஆண்டுகளாக ராஜஸ்தான் வற்புறுத்தி வந்த நிலையிலும் தொடர்ந்து தொலைதூர மாநில நிலக்கரி சுரங்கங்களிலிருந்தே நிலக்கரி வாங்கி வருகிறோம் என்றார் அவர்.
“2011-ம் ஆண்டுக்குள் ராஜஸ்தான் மாநிலத்தில் மின்சார உற்பத்தியில் உபரி என்ற நிலையை எட்ட இலக்கு நிர்ணயித்திருக்கிறோம்; அதற்குத் தேவைப்படும் நிலக்கரி போதிய அளவில் கிடைத்தால் மட்டும் போதாது, உற்பத்திச் செலவும் கட்டுப்படியாகும் வகையில் அருகிலிருந்து கிடைக்க வேண்டும் என்று வலியுறுத்தினோம். இம் முறை நிலக்கரித்துறை பிரதமர் வசமே இருப்பதால் அவர் இக் கோரிக்கையை உடனே நிறைவேற்றுவார் என்று நம்புகிறோம்’ என்றார் வசுந்தரா.
13 மெகா மின்னுற்பத்தி திட்டங்கள்: ராஜஸ்தானில் விவசாயம், தொழில்துறை ஆகியவற்றுக்கு போதிய அளவில் மின்சாரம் கிடைக்க 13 பெரிய திட்டங்களைத் தீட்டி நிறைவேற்ற ஆரம்பித்திருக்கிறோம். பழுப்பு நிலக்கரி, இயற்கை நிலவாயு, நிலக்கரி ஆகியவற்றை எரிபொருளாகப் பயன்படுத்தவிருக்கிறோம்.
100 கோடி போதாது: பார்மர், ஜெய்சால்மர் உள்பட 16 மாவட்டங்களில், வரலாறு காணாத வகையில் பெய்த மழையால் பெருவெள்ளம் ஏற்பட்டு பெரிய பாதிப்பு நேரிட்டது. இதற்கு மத்திய அரசு பேரிடர் நிவாரண நிதியிலிருந்து வெறும் 100 கோடி ரூபாயை ஒதுக்கியிருக்கிறது. இத்தொகை போதவே போதாது. வெள்ளப் பகுதிகளை சோனியா காந்தியே நேரில் பார்த்திருக்கிறார். சேதமுற்ற பகுதிகளில் நிவாரணப்பணிகளை மாநில அரசு மேற்கொண்டுள்ளது. மொத்தம் ரூ.3,200 கோடி வேண்டும் என்று பிரதமரிடம் கேட்டிருக்கிறேன்.
கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதி திட்டம்: தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தை அமல்படுத்த நாடு முழுவதும் 200 மாவட்டங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. ஆனால் ராஜஸ்தானில் 6 மாவட்டங்களை மட்டுமே தேர்வு செய்துள்ளனர். மகாராஷ்டிரம், ஆந்திரத்தில் 32 மாவட்டங்களைத் தேர்வு செய்துள்ளனர். நிலப்பரப்பு அளவில் ராஜஸ்தான் மிகப்பெரியது. தாழ்த்தப்பட்டவர்கள், பழங்குடிகள் அதிகம் உள்ள மாநிலமும் ராஜஸ்தான்தான். எனவே இந்த திட்டத்தின் கீழ் வரும் மாவட்டங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்றும் வற்புறுத்தியிருக்கிறேன்.
நிதிச் சீர்திருத்தம்: நிதிச் சீர்திருத்த அமலில் ராஜஸ்தான் முன்னிலை வகிக்கிறது. இதற்காகவே சிறப்பு ஒதுக்கீடாக ரூ.400 கோடியை தருமாறு கோரியிருக்கிறேன் என்றார் வசுந்தரா.
Posted in BJP, Charges, Chattisgar, Chattisgarh, Chhattisgar, Chhattisgarh, CM, Coal, Commissions, Cost, Development plans, Electricity, Factory, Fees, Freight, Industry, Jaisalmer, Jharkand, Jharkhand, Lignite, Megawatt, Orissa, Power, Price, Rajasthan, State, Thermal, Vasundhara Raje | Leave a Comment »