Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Chandramukhi’ Category

AVM, Rajni & Shankar: ‘Sivaji – The Boss’ – Profit & Loss, Distribution woes, Balance Sheet, Income

Posted by Snapjudge மேல் ஜனவரி 11, 2008

சிவாஜி’ த லாஸ்!: சர்ச்சைகளுக்கிடையே ஒரு சாதனை விழா – தினமணி

ஏவி.எம். தயாரிப்பில் ரஜினிகாந்த் நடித்த ‘சிவாஜி’ படத்தின் வெள்ளி விழா (ஜன.11) சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது. விழா கொண்டாடும் இந்த நேரத்தில் படத்தை வாங்கிய விநியோகஸ்தர்களும் திரையரங்கு உரிமையாளர்களும் இந்தப் படத்தால் தாங்கள் நஷ்டமடைந்துள்ளதாகவும் அதனால் தங்களுக்கு உரிய நஷ்ட ஈடு வழங்கவேண்டும் என்று போர்க்கொடி தூக்கியுள்ளதாக தகவல்கள் வெளிவந்துகொண்டிருக்கின்றன.

ஒரு படத்தின் வெற்றியில் எப்படி விநியோகஸ்தர்களுக்குப் பங்கு உண்டோ அதேபோல தோல்வியிலும் உண்டு என்பது திரையுலகில் அனைவரும் அறிந்ததே. அதையும் மீறி சிலர் நஷ்ட ஈடு கேட்பது ஏன் என்பதுதான் கேள்வி.

தமிழகம் முழுவதும் “சிவாஜி’ படத்தை வாங்கிய விநியோகஸ்தர்களில் ஒரு சிலரைத் தவிர மற்ற அனைவருக்கும் நஷ்டம் என்றே கூறப்படுகிறது. அதேபோல நான்கைந்து மாதங்கள் ஓ(ட்)டிய இந்தப் படத்தின் மூலம் சில திரையரங்கள் தவிர எஞ்சிய அனைவருக்கும் நஷ்டமே ஏற்பட்டுள்ளது.

செங்கல்பட்டு மற்றும் புதுவை உரிமையை டிஸ்ட்ரிபியூஷன் கேரண்டி முறையில் ரூ.4 கோடியே 65 லட்சத்துக்கு வாங்கினோம். ஆனால் படம் ரூ.3 கோடியே 30 லட்சம்தான் வசூல் செய்தது. டிஸ்ட்ரிபியூஷன் கேரண்டி முறையில் வாங்கியதால் இழப்பு ஏற்பட்டால் அதைச் சரிக்கட்டுவார்கள் என நம்பினேன். ஆனால் ஏவி.எம். நிறுவனம் மறுத்துவிட்டது என்கிறார் இந்தப் பகுதி விநியோக உரிமையை வாங்கிய நாக் ரவி.

சேலம், நாமக்கல், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட உரிமையை ரூ.5 கோடியே 50 லட்சத்துக்கு வாங்கினோம். படம் வசூலாகாவிட்டால் பார்த்துக்கொள்கிறோம் என்றனர். 4 மாவட்டங்களில் 33 திரையரங்குகளில் வெளியிட்டோம். ஆனால் படத்தின் மூலம் கிடைத்தது ரூ.4 கோடியே 30 லட்சம்தான். இதுபற்றி ஏவி.எம்.நிறுவனத்திடம் தெரிவித்தோம். ஆனால் இதுவரை பதிலே இல்லை என்கிறார் இந்தப் பகுதி உரிமையை வாங்கிய விகாஷ் பிக்சர்ஸ் சி.பிரகாஷ்.

திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் 22 சென்டர்களில் வெளியிட ரூ.6 கோடி கொடுத்தோம். ஆனால் படத்தால் ரூ.1 கோடிக்கு மேல் நஷ்டம் என்கிறார் இந்தப் பகுதிகளின் உரிமையை வாங்கிய ஆடிட்டர் ரமேஷ்குமார்.

நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி உரிமையை பொன்கனகவல்லி கம்பைன்ஸ் நிறுவனத்தினர் ரூ.3 கோடிக்கு வாங்கி 11 திரையரங்குகளில் திரையிட்டுள்ளனர். நூறு நாள்களைத் தாண்டினாலும் இரண்டு திரையரங்குகளைத் தவிர மற்ற அனைத்துத் திரையரங்குகளுக்கும் நஷ்டமே ஏற்பட்டுள்ளது.

ஒரு திரையரங்கில் ஒரு திரைப்படம் 100 நாள்கள் ஓடி ரூ.90 லட்சம் வசூலானால் அதில் எல்லா செலவுகளும் நீக்கி ரூ.10 லட்சம் வரை லாபம் கிடைக்கும். ஆனால் “சிவாஜி’ படம் 150 நாள்கள் ஓடியும் அந்த அளவுக்கு லாபம் ஈட்டவில்லை. இதனால் திரையரங்கு உரிமையாளர்களுக்கு பெருத்த நஷ்டம் என்கிறார் ஒரு திரையரங்க மேலாளர்.

இந்த நஷ்டத்தை ஈடுசெய்யுமாறு ஏவி.எம்.நிறுவனத்திடம் ஏற்கெனவே இந்தப் பகுதி விநியோகஸ்தர்கள் தரப்பில் கேட்கப்பட்டதாகவும் அதற்கு அவர்களிடமிருந்து சரியான பதில் எதுவும் இல்லை என்றும் கூறப்படுகிறது.

கோவையைப் பொருத்தவரை பெரிய லாபம் இல்லை என்று கூறப்படுகிறது. “சிவாஜி’யின் தயாரிப்பு செலவு அதிகம். அதனால் படத்தை இதுவரையில்லாத அளவில் அதிக விலைக்கு விற்றுள்ளனர். அதனால் மிகப் பெரிய லாபம் என்று சொல்வதற்கில்லை.

இன்னும் சொல்லப்போனால் கொடுத்த பணத்துக்கும் எதிர்பார்த்ததற்கும் தொடர்பில்லை. “சந்திரமுகி’ திரைப்படம் ரூ.3 கோடிக்கு வாங்கப்பட்டு ரூ.4.5 கோடி லாபம் ஈட்டித் தந்தது. அது எதிர்பார்த்ததற்கும் மேல். அதனுடன் ஒப்பிடுகையில் சிவாஜியால் லாபம் இல்லை என கோவை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் சில பகுதிகளில் “சிவாஜி’ படத்தை வாங்கியவர்களிடம் பட வசூல் நிலவரம் குறித்து விசாரித்தபோது, “அப்படி இப்படி என எப்படியோ படத்தின் வெள்ளி விழா வரை வந்துவிட்டார்கள்.

அந்த விழாவிலாவது எங்களுக்கு ஏதாவது நல்ல செய்தி கிடைக்கிறதா என்று பார்ப்போம். அதுவரை எந்தக் கருத்தையும் சொல்லவிரும்பவில்லை” என ஒதுங்கிக்கொண்டனர்.

ஆக… படத்தைப் பற்றி மீடியாக்கள் ஆஹோ ஓஹோ என்று ஒரு மாயத் திரையை உருவாக்கியிருப்பதை அறிய முடிகிறது. “பாபா’ படத்தை ரஜினிகாந்தே தயாரித்ததால் அந்தப் படம் மூலம் விநியோகஸ்தர்களுக்கும் திரையரங்குகளுக்கும் ஏற்பட்ட நஷ்டத்தை அவரை ஈடுகட்டினார். ஆனால் “சிவாஜி’ படத்தை ஏவி.எம். நிறுவனம் தயாரிததுள்ளது. அந்த நிறுவனம் நஷ்டத்தை ஈடு செய்ய வாய்ப்பில்லை. வேண்டுமானால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தாங்கள் அடுத்து தயாரிக்கும் திரைப்படங்களின் விற்பனையில் சலுகை காட்டலாம் என்று கூறப்படுகிறது.

இதனால் ரஜினிகாந்தின் அடுத்த பிரமாண்டப் படமான “ரோபோ’வின் வியாபாரம் எந்த வகையிலும் பாதிக்காது; “சிவாஜி’ படத்தால் பாதிக்கப்பட்ட விநியோகஸ்தர்கள் அந்தப் படத்தை வாங்கத் தயங்கினால் பன்னாட்டு நிறுவனங்களோ அல்லது அந்தப் படத்தைத் தயாரிக்கும் நிறுவனங்களோ நேரடியாகவே “ரோபோ’ படத்தைத் திரையிடும் நிலை ஏற்படலாம்.

திரையுலகுக்கு பல சலுகைகளை வழங்கிய முதல்வர் கருணாநிதி தலைமையில் நடைபெறும் “சிவாஜி’ வெள்ளி விழாவில் படத்தால் நஷ்டமடைந்தவர்களுக்கு ஆதரவாக சம்பந்தப்பட்டவர்கள் “வாய்ஸ்’ கொடுப்பார்களா?

இப்படி சர்ச்சைகளுக்கிடையே நடைபெறுகிறது ஒரு சாதனை விழா!

முந்தைய சற்றுமுன்:
1. ஒரு படத்தால் 3 மாதம் பீதி : ‘சிவாஜி’ குறித்து நாசர்

2. சிவாஜி’ (இந்தி) படத்துக்காக ரஜினிகாந்த் நடிக்கிறார்

3. உலகமெங்கும் வசூல் மழையில் சிவாஜி: ரூ.100 கோடியை நெருங்குகிறது

நன்றி: தினமணி

Posted in 4053051, AVM, Baba, Balance, Chandramukhi, Chandramuki, Chanthiramuki, Chanthramukhi, Chanthramuki, Cinema, Distribution, Distributors, Economy, Films, Finance, Income, Kollywood, Loss, Movies, Profit, Rajini, Rajiniganth, Rajinikanth, Rajni, Rajniganth, Rajnikanth, Return, Risk, Shankar, Shivaji, Sivaji, Sivaji the Boss, The Boss | 1 Comment »

‘Vallavan is my best movie’ – Nayan Thara

Posted by Snapjudge மேல் நவம்பர் 9, 2006

`சிவாஜி’ படத்தில் ரஜினியுடன் ஒரு பாடலுக்கு மட்டும் ஆடுவது ஏன்?- நயன்தாரா பேட்டி

தீபாவளிக்கு ரிலீசான மூன்று படங்களில் நயன்தாரா நடித்திருக்கிறார். தொடர்ந்து அவரது மார்க்கெட் ஏறுமுகத்திலேயே உள்ளது. தமிழில் மட்டுமல்லாத பிற மொழிகளிலும் கலக்கி வரும் நயன்தாரா முன்னணி கதாநாயகியாக இருந்தாலும் `சிவாஜி’யில் ஒரு பாடலுக்கு ஆட சம்மதித்திருக்கிறார். அது ஏன்? இந்த பேட்டியில் அவரே விளக்குகிறார்.

நான் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த போது என்னை கவனித்த சத்யன் அதிகாடு மலையாள படம் ஒன்றில் கதாநாயகியாக அறிமுகப்படுத்தினார். அதிலிருந்து கடந்த இரண்டரை வருடமாக மிகவும் பிஸியாக நடித்துக்கொண்டிருக்கிறேன். கல்லூரியில் படிக்கும் போது தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், சமஸ்கிருதம், ஹிந்தி என பல மொழிகளை கற்றுத் தேர்ந்தேன். அது இப்போது பல மொழிகளில் நடிப்பதற்கு பெரும் உதவியாக இருக்கிறது.

இதுவரை

  • 5 மலையாளம்,
  • 8 தமிழ்,
  • 2 தெலுங்கு

என 15 படங்களில் நடித்தாயிற்று.

நான் நடித்த எல்லாபடங்களும் சிறந்தவைதான் என்றாலும் எனக்கு ரொம்பப்பிடித்தது வல்லவன். அந்த படத்தில் என்னுடைய வேடம், படத்தை சிம்பு இயக்கியிருந்த விதமும் வல்லவன் எனக்கு மிகவும் பிடித்துப்போகக் காரணங்கள்.

இதுவரை என்னை எல்லோரும் ஹோம்லியான வேடங்களிலேயே நடிக்க வைத்தார்கள். ஆனால் வல்லவனில் முதன் முதலாக புதுவித உணர்வுகளை வெளிப்படுத்த வாய்ப்பு கிடைத்தது. வித்தியாசமான அந்த வேடம் ஆபாசம் இல்லாமல் சொல்லப்பட்டிருக்கிறது.

கிசு கிசுக்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதில்லை. அதுபற்றியெல்லாம் யோசித்துக்கொண்டிக்கும் அளவுக்கு எனக்கு நேரம் கிடையாது. அவற்றை உடனே மறந்துவிடுவேன்.

சிவாஜியில் ஒரு பாடலுக்கு தோன்றி நடனமாடுவதற்கு சம்மதித்ததற்கு மூன்று காரணங்கள் இருக்கிறது.

  1. முதலாவதாக இது சூப்பர் ஸ்டார் ரஜினி படம்.
  2. இரண்டாவது சந்திரமுகியின் பிரம்மாண்ட வெற்றிக்குப்பிறகு ரஜினியுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்திருப்பது.
  3. மூன்றாவதாக இதை சங்கர் இயக்குவது. கடந்த தீபாவளி என் வாழ்நாளில் மறக்க முடியாத நாள். காரணம் அன்று நான் நடித்த மூன்று படங்கள் ரிலீசாயின.

மலையாளத்தில் மம்முட்டியுடன் ஒரு படத்தில் நடித்து வருகிறேன். அதில் படம் முழுக்க 4 சேலைதான் காஸ்டிïம். அழுக்கான ஆடை, மேக்கப் இல்லாத தோற்றம் என படு யதார்த்தமான வேடம் அது. இந்த படத்தில் நடிப்பதில் மிகவும் சந்தோஷம். காரணம் என்னால் கமர்ஷியல் படங்களிலும் நடிக்க முடியும், மாறுபட்ட படங்களிலும் நடிக்க முடியும் என்பதை காட்டு வதற்கு இது நல்ல வாய்ப்பு.

நேரம் இல்லாததால் டப்பிங் பேச முடியவில்லை. ஆர்ட் படங்களில் நடிப்பதற்கு எனக்கு ஆர்வம் அதிகம். இந்த வேடத்திற்கு நமக்கு விருது கண்டிப்பாக கிடைக்கும் என்று உறுதியாகத் தோன்றினால் அந்த படத்திற்கு நிச்சயம் டப்பிங் பேசுவேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Posted in Chandramukhi, Interview, Malayalam, Nayan Thara, nayandhara, Rajini, Rajniganth, Shankar, Shivaji, Silambarasan, Simbu, Sivaji the Boss, Tamil Film, Tamil Movies, Telugu, Tollywood, Vallavan | Leave a Comment »