பாகிஸ்தான் வீரர்கள் அக்தர்-முகமது ஆசிப் கிரிக்கெட் ஆட தடை: ஊக்க மருந்து சாப்பிட்டது கண்டுபிடிப்பு
கராச்சி, அக். 16-
ஊக்க சக்தி அளிக்க கூடிய சில வகை மருந்துகளை கிரிக்கெட் வீரர்கள் சாப்பிட தடை விதிக்கப்பட்டுள்ளது. சாம் பியன் கோப்பை போட்டி தொடங்குவதற்கு முன்பு வீரர்களுக்கு அந்தந்த நாடுகளே இதற்கான பரிசோதனை செய்தன.
பாகிஸ்தான் வீரர்களுக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் சங்கம் இந்த சோதனையை செய்தது. இதற்காக அவர்களது சிறு நீர் சேகரிக்கப்பட்டு மலேசியாவுக்கு சோதனைக்கு அனுப்பப்பட்டது.
இதில் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர்கள் சோயிப் அக்தர், முகமது ஆசிப் ஊக்க மருந்து சாப்பிட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இது பற்றி ஆய்வு நடத்த பாகிஸ்தான் கிரிக்கெட் சங்க அவசர கூட்டம் இன்று கராச்சியில் நடந்தது. இருவரும் ஊக்க மருந்து பயன்படுத்தியது பற்றி சர்வதேச கிரிக்கெட் சங்கத்துக்கு உடனடியாக தெரிவிப்பது என்று முடிவு எடுத்தனர்.
இருவரும் சாம்பியன் கோப்பையில் விளையாட இந்தியா வந்துள்ளனர். ஜெய்ப்பூரில் நாளை நடக்கும் போட்டியில் பாகிஸ்தான், இலங்கை அணியுடன் மோத உள்ளது. இதில் அவர்கள் ஆட இருந்தனர். ஊக்க மருந்து சாப்பிட்டது கண்டு பிடிக்கப்பட்டுள்ளதால் இருவரையும் திரும்ப அழைக்க பாகிஸ்தான் கிரிக்கெட் சங்கம் முடிவு செய்துள்ளது.
சர்வதேச கிரிக்கெட் சங்கத்துக்கு தகவல் சென்றதும் இருவருக்கும் கிரிக்கெட் ஆட முறைப்படி தடை விதிக் கப்படும். ஆஸ்திரேலிய வீரர் வார்னே போதை மருந்து சாப்பிட்டது கண்டு பிடிக்கப்பட்டு விளையாட தடை விதிக் கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தான் அணி மீது சமீபத்தில் பந்தை சேதப்படுத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்டது. இப்போது புதிய குற்றச்சாட்டுக்கு ஆளாகி இருக்கிறது.