Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Cellphone’ Category

Teacher Suicide – Students, Sex Abuse, Law & Order

Posted by Snapjudge மேல் ஓகஸ்ட் 24, 2007

கேமிரா செல்போனில் குளிப்பதை படம் பிடித்ததால் ஆசிரியை தற்கொலை

நகரி, ஆக. 24-

ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம் சிவானந்த புரத்தை சேர்ந்தவர் சுனிதா (27). இவருக்கு திருமணமாகி 2 மகன்கள் உள்ளனர். இவர் நிரஞ்சன் நகரில் உள்ள மேல்நிலைப்பள்ளி ஒன்றில் ஆசிரியையாக வேலை பார்த்து வந்தார்.

சம்பவத்தன்று இவர் தனது வீட்டில் உள்ள மேல்கூரை இல்லாத குளியலறையில் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது அவரிடம் படிக்கும் மாணவர்கள் ஜெகதீஷ்வர் ரெட்டி, நரேந்திரகுமார் ஆகியோர் பக்கத்து வீட்டு மாடியில் ஒளிந்திருந்து கேமிரா செல்போனில் படம் பிடித்த

னர்.பின்னர் அவர்கள் இருவரும் சுனிதாவுக்கு மிரட்டல் கடிதம் ஒன்றை அனுப்பினார்கள். அதில், “எங்களுக்கு ரூ.5 ஆயிரம் தரவேண்டும். இல்லை யென்றால் நீங்கள் குளித்த போது எடுத்த படங்களை இண்டர்நெட்டில் வெளியிடு வோம்” என்று எழுதி இருந்தனர்.

இதைப்பார்த்ததும் அதிர்ச்சி யடைந்த அவர் உடனே கணவரிடம் இதுபற்றி கூறினார். பின்னர் சின்ன சவுக்னார் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

போலீசார் 2 மாணவர்களையும் அழைத்து கண்டித்து அனுப்பி விட்டனர். ஆனால் அவர்களிடம் இருந்த செல்போனை பறிமுதல் செய்யவில்லை.

இந்த நிலையில் ஆசிரியை சுனிதா தன்னை மாணவர்கள் நிர்வாணமாகபடம் எடுத்து விட்டார்களே என்று வேதனை யில் அழுதபடியே இருந்தார். வீட்டில் யாருமில்லாத சமயத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதையடுத்து அவரை தற்கொலைக்கு தூண்டியதாக ஜெகதீஷ்வர் ரெட்டி, நரேந்திர குமார் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

——————————————————————————————–

வீடியோ-செல்போனில் ஆசிரியையை நிர்வாணப்படம் எடுத்து மிரட்டல்: பல்கலைக்கழக பேராசிரியர் கைது

டேராடூன், ஆக. 24-

உத்தரகாண்ட் மாநிலம் டேராடூன் குருகுல் கங்கிரி சமஸ்கிருத பல்கலைக்கழகம் உள்ளது. 105 ஆண்டு பாரம் பரியமிக்க இந்த பல்கலைக் கழகத்தில் சமீபத்தில் அவ மான சம்பவம் நடந்தது.

இங்கு பேராசிரியர்களாக பணியாற்றுபவர்கள் அருண் குமார், ராஜீவ் சர்மா, மனோஜ்குமார். இவர்கள் 3 பேரும் சேர்ந்து குருகுல் பெண்கள் கல்லூரியில் பணி யாற்றும் ஆசிரியை ஒருவரை நிர்வாணப்படம் எடுத்ததாக பரபரப்பு புகார் எழுந்தது.

ஆசிரியையின் நிர்வாணப் படத்தை அவர்கள் சி.டி.க் களாக தயாரித்தனர். செல் போனிலும் அதை படம் பிடித்து எம்.எம்.எஸ்.மூலம் மற்றவர்களது செல்களுக்கு அனுப்பி வைத்தனர்.

3 பேராசிரியர்களில் ஒரு வரது மனைவி தனது கணவரின் செல்போனில் பெண்ணின் ஆபாசபடம் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இந்த படத்தில் இருப்பது கணவரது பல் கலைக்கழகத்துக்கு உட்பட்ட கல்லூரியின் ஆசிரியை என் பது தெரியவந்தது.

உடனே அவர் செல்போனில் இருந்த ஆபாச படத்தை சம்பந் தப்பட்ட ஆசிரியையிடம் காட்டி `உன்னை எப்படி என் கணவர் படம் எடுத்தார்’ என்று கேட்டு சண்டை போட்டார். இதனால் பிரச்சினை ஏற்பட்டு கல்லூரி முதல்வர் வரை சென்றது.

அவர் இது பற்றி சமஸ்கிருத பல்கலைக்கழக நிர்வாகத்துக்கு தகவல் கொடுத்தார். அதன் பேரில் துணைவேந்தர் ஸ்வாந் திர குமார் விசாரணை நடத்த உத்தரவிட்டார்.

இதையடுத்து சம்பந்தப்பட்ட 3 பேராசிரியர்களும் உடன டியாக சஸ்பெண்டு செய்யப் பட்டனர். இவர்களில் ராஜீவ்குமார் என்பவர் தற்காலிக பேராசிரியராக பணியாற்றியவர் ஆவார். நிர்வாணப்படத்தில் வரும் ஆசிரியையிடம் துணைவேந்தர் விசாரணை நடத்தினார்.

நிர்வாணப் படத்தில் வரு வது நான் இல்லை என்றும் தனது முகத்தை கிராபிக்ஸ் மூலம் நிர்வாண படத்துடன் இணைத்துள்ளனர் என்றும், இந்தப் படங்களை காட்டி தன்னை 3 பேராசிரியர் களும் பல்வேறு விதத்தில் “பிளாக் மெயில்” செய்து மிரட்டி னார்கள் என்றும் கூறினார்.

பல்கலைக்கழக குழு விசாரணைக்குப் பின் போலீ சில் புகார் செய்யப்பட்டது. இதற்குள் 3 பேராசிரியர்களும் தலைமறைவாகி விட்டார்கள். அவர்களில் மனோஜ்குமார் என்பவர் போலீசில் பிடி பட்டார். மற்ற 2 பேரையும் போலீசார் தேடி வருகிறார் கள்.

இதற்கிடையே இந்தசம் பவம் பல்கலைக்கழகம் முழு வதும் பரவியது. 3 பேராசி ரியர்களையும் கைது செய் யக்கோரி மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர். அப்போது 3 பேராசிரி யர் களின் கொடும்பாவியும் எரிக் கப்பட்டது.

Posted in abuse, Bath, Bathe, Bathing, Camera, Cell, Cellphone, Crime, Education, Exposure, Female, Hidden, Law, male, MMS, Mobile, Naked, Order, phone, Pressure, Professor, Se, Sex, Sexual, Sick, Society, Students, Suicide, Teacher, Torture, University, video | Leave a Comment »

Depletion of world Mineral reserves – Consumption of Antimony, Gallium, Tantalum, Indium

Posted by Snapjudge மேல் ஓகஸ்ட் 2, 2007

கனிமங்களின் சாதம், தாதுக்களும் பிரமாதம்

நெல்லை சு.முத்து

பூமி சூடேறி வருவதால் பனிப்படலங்கள் வட துருவப் பிரதேசத்தில் இருந்து உருகி அட்லாண்டிக் கடலில் கலக்கின்றன. இது பழைய செய்தி. ஆனால் ஒவ்வொரு 40 மணி நேரமும் கிரீன்லாந்து பனிப்படலங்கள் ஒரு கன கிலோமீட்டர் அளவுக்குக் கரைந்து வருகிறதாம். பாசதேனாவில் கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தின் எரிக் ரிக்னாட் தரும் தகவல் இது.

இந்த நீர், சென்னை போன்ற பெரு நகரங்கள் ஆண்டுதோறும் பயன்படுத்தும் தண்ணீர் அளவுக்குச் சமம். தமிழ்நாடு முழுவதும் 8 மில்லிமீட்டர் தண்ணீர் நிறைந்த மாதிரி. சென்னையில் மட்டும் இந்த வடதுருவப் பனி உருகிய நீரைக் கொண்டு வந்து ஊற்றினால் இரண்டு மாடி வீடுகள் நீருக்குள் மூழ்கிவிடும்.

சுற்றுச்சூழல் என்றதுமே நம்மவர் நினைவுக்கு வருவது

  • ஓசோன்,
  • கரியமில வாயு,
  • வாகனப்புகை – உள்ளிட்ட பசுமைக் குடில் வாயுச் சமாச்சாரங்கள் மட்டும்தாம். எல்லாரும் இன்று வாகனப்புகை பற்றி மட்டுமே அக்கறை கொள்கிறோம். “”மீட்டர் போட்ட ஆட்டோ வேண்டும். புகைவிடாத லாரி வேண்டும்” என்று புதுக்கவிதை பாடுகிறோம். ஆனால் அதைக் காட்டிலும் இன்னோர் அபாயம் காத்திருக்கிறது.

தர்மம் தலைகாக்கும் என்ற நம்பிக்கை இங்கு பலருக்கு இல்லை. தலைக்கவசம் அணிந்துதான் பயணம் செய்கிறார்கள். தமிழ்நாட்டில் மட்டும் 67 லட்சத்துக்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் உள்ளன. இவற்றால் சாலைகளில் பெரும் போக்குவரத்து நெருக்கடி.

இங்கிலாந்தில் கார்டிஃப் பல்கலைக் கழகத்தின் புவிவளப் பேராசிரியை ஹேசல் ப்ரிச்சார்டு என்ற பெண்மணிக்கு ஒரே ஆச்சரியம். “”இங்கு தெருவெல்லாம் இவ்வளவு சுத்தமாக இருக்குதே” என்று அசந்து போனார். சாலையில் ஒரு வண்டி கூட இல்லையே என்ற அர்த்தத்தில் அல்ல. வியப்புக்குக் காரணம்- வீதி உண்மையிலேயே துடைத்துப் போட்ட மாதிரி இருந்ததாம். தெருவின் புழுதி எல்லாம் பாதசாரிகளின் காலணிக்குள் அல்லவா தஞ்சம் புகுந்து இருந்தது.

காலுறைகளில் வெறும் வியர்வை நாற்றம்தான்; ஆனால் காலணியின் புறப்பகுதியில் சகதி, சாணி போன்றவை ஒட்டி இருக்கும். அவர் காலணியிலோ கொஞ்சம் பிளாட்டினம் படிந்து இருந்ததாம். காலில் வெள்ளிக் கொலுசு அணியலாம். தங்கக் காப்பு கூட தரிக்கிறார்கள். ஆனால் பிளாட்டினம் அணிந்த உலகின் முதல் பெண்மணி ஹேசல் ப்ரிச்சார்டு. பிளாட்டினம் உண்மையில் மிகவும் அரிய வகை உலோகம். பூமியில் பிளாட்டினமோ, ரேடியமோ, சுமார் 79,840 டன்கள் செறிந்து உள்ளது. 89,700 டன்கள் தங்கம்; ஆனால் பிளாட்டினத்திற்குத் தங்கத்தைக் காட்டிலும் விலை அதிகம்.

அது சரி, இந்தப் பிளாட்டினம் காலில் ஒட்டியது எப்படி? வேறு என்ன, வாகனப் புகைதான். பெட்ரோல், டீசல் எரிவாயுக்களால் ஏற்படும் மாசு மட்டுமே நம்மை மூச்சு முட்டப் பண்ணுகிறது. அந்த வாயுக்களை வாகன எஞ்ஜினில் எரியச் செய்யும் மின்பொறியில் பிளாட்டினம் தகடு இருப்பது நமக்குத் தெரியாது. அதனைக் காற்றில் புகையுடன் கலக்கப்போவது யாரு? நீங்கள்தாம். ஒவ்வொரு முறையும் ஸ்கூட்டர், கார், லாரி, ஆட்டோக்களை இயக்கும்போது பிளாட்டினம் தேய்ந்து காற்றில் கலக்கிறதாம்.

இந்தத் தகவல் அதிர்ச்சி அளிக்கிறதா? ஆனால் சமையல் மணக்கச் செய்யும் வனஸ்பதி தயாரிப்புத் தொழில்துறையில் கிரியா ஊக்கியே இந்தப் பிளாட்டினம்தான். பூமியில் இந்த உலோகப் புதையல் வறண்டு வருகிறது. ஏறத்தாழ 50 கோடி வாகனங்களை இத்தகைய எரிமின் கலன்களில் இயக்கினால் அவ்வளவுதான். அடுத்த 15 ஆண்டுகளில் பிளாட்டினம் இல்லாத பாலைவனம் ஆகிவிடும் நம் பூமி. பூமியில் கையிருப்பே 79,840 டன்கள்தான்.

பிளாட்டினம் மட்டுமா, வேறு பல அரிய உலோகங்களையும் நாம் சுரண்டி வருகிறோம். மணல் முதல் சணல் வரை அனைத்து வணிக ஒப்பந்தங்களும் கட்சிக்காரர்களுக்கே வாய்க்கும். உலோகச் சுரங்கம் தோண்டலில் மட்டும் கட்சி பேதம் இல்லை.

உலகில் வறண்டு வரும் மற்றோர் அரிய உலோகம் இண்டியம். இது ஏறத்தாழ 6000 டன்கள் செறிந்து உள்ளது. ஆனால் இன்று இந்த உலோகத்தைத் தகவல் தொழில்நுட்பக் கருவிகளுக்கான எல்.சி.டி தயாரிக்கும் துறை விழுங்கி வருகிறது. நவீனத் தொலைக்காட்சி, கணினித் திரைகள் வடிவமைப்பில் இடம்பெறும் திரவப் படிக ஒளிர் முனையங்கள் இவை. அடுத்த பத்தாண்டுகளில் இண்டியம் வளமும் மறையும் நிலை என்கிறார் ஜெர்மனியின் ஆக்ஸ்பர்க் பல்கலைக்கழக விஞ்ஞானி.

2003 ஜனவரியில் கிலோ 60 டாலருக்கு விற்ற இண்டியம் இன்று 1000 டாலர். நான்கே ஆண்டுகளில் பதினாறு மடங்கு விலையேற்றம். இதைப் பற்றியெல்லாம் நாம் கவலைப்படும் நிலை இல்லை.

பூமி கஜனாவில் காலியாகிவரும் இன்னோர் அரிய உலோகம் காலியம். சூரிய மின்கலன்கள் தொழில்நுட்பத்தின் இதயம் போன்றது இது. இண்டியம் – காலியம் ஆர்சனைடுப் பொருளால் ஆனவையே. மின்னணுவியலில் பெரிதும் பயன்படுவது. இனி வரும் காலங்களில் சூரிய மின்கலன்களின் ஒரு சதவீதத் தேவைக்கு மட்டுமே இந்த காலியம், இண்டியம் உலோகங்கள் கைகொடுக்கும். நெதர்லாந்து நாட்டில் லெய்டன் பல்கலைக்கழக நிபுணர் ரேனே க்ளெய்ஜின் கணிப்பு இது.

கணிப்பொறித் திரைதான் பூமியை விழுங்கி ஏப்பம் விடுகிறது என்றால் நம் காதோரம் நெருங்கி உறவாடும் செல்ஃபோன் கூட பூமியின் வளத்தைப் பறித்து வருகிறதாம். என்ன செல்பேசித் தொழில்துறையினர் டான்டலம் என்கிற மற்றோர் அரிய உலோகத்தை இதற்காக அபகரித்து வருகின்றனர்.

ஆஸ்திரேலியாவின் உலோகத் தாதுக்களில் பாதி டான்டலம் தானாம். அடுத்தபடி யுரேனியம். நாலில் ஒரு பங்கு. ரஷியாவிலோ அங்குள்ள உலோகங்களில் ஆறில் ஒரு பங்கு யுரேனியம். அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளின் உலோகச் செல்வத்தில் பத்தில் ஒரு பங்கு யுரேனியம். உலகின் யுரேனிய வளம் 33 லட்சம் டன்கள். அணுமின் சக்தித் துறையினால் இந்த யுரேனியத்தின் பற்றாக்குறை வேறு தலைவிரித்து ஆடப்போகிறது.

உலகில் மிக அதிகமாகக் காணப்படும் உலோகத் தாதுக்களில்

  1. முதலிடம் பெறுவது அலுமினியம் -அதாவது 3235 கோடி டன்கள்.
  2. அடுத்தபடி தாமிரம் (94 கோடி டன்கள்),
  3. குரோமியம் (78 கோடி டன்கள்),
  4. துத்தநாகம் (46 கோடி டன்கள்),
  5. நிக்கல் (14 கோடி டன்கள்) போன்ற புழக்கத்தில் உள்ள உலோகங்களுக்கும் அடுத்த தலைமுறைக்குள் தட்டுப்பாடு வரும். ஆன்டிமனிக்கும் இதே முடிவுதானாம். அடுத்த பத்தாண்டுகளில் இதன் வளமும் வறண்டுவிடும்.

இன்று – “கனிமங்களின் சாதம், தாதுக்களும் பிரமாதம்’ என்று தலைவாழையில் உலோகங்களை உண்ணும் பகாசுரர்கள் யார்?

அமெரிக்காவில் 30 கோடி மக்கள். ஒவ்வொருவரும் ஆண்டுதோறும்

  • 107 கிலோ பாஸ்வரம்,
  • 20.3 கிலோ அலுமினியம்,
  • 8.1 கிலோ தாமிரம்,
  • 4.5 கிலோ துத்தநாகம்,
  • 5.3 கிலோ காரீயம் உண்டு வருகிறார்கள்.

நாமோ “பிளாட்டினம் இட்லி, வெள்ளித் தோசை, தங்கச் சோறு, பாஸ்வரச் சாம்பார், குரோமியக் குழம்பு, காரீயச் சட்னி, துத்தநாகத் துவையல்’ எல்லாம் சாப்பிடப் போவது மாதிரி நடந்து கொள்கிறோம். துறைதோறும் பணத்தைச் சுரண்டுவதற்கே வாதங்கள் புரிகிறோம். சுற்றுச்சூழல் என்ற உச்சரிப்பிலேயே “ஊழல்’ ஒட்டிக்கொண்டுதான் இருக்கிறது.

இந்நிலையில் எப்படி கனிமவள வறட்சியைத் தடுக்கப்போகிறோம் என்பதே இப்போதைய கேள்வி.

Posted in Air, Alloys, Aluminium, Antimony, Arctic, Auto, Automotive, Carbon, Cars, Cell, Cellphone, Chromium, Cooking, Copper, Earth, emissions, Empty, Environment, Expiry, Exploration, Gallium, Gas, Indium, Land, legs, Metals, Minerals, mines, Mobile, Natural, Nickel, oil, Ozone, Phones, Platinum, Pollution, Protection, Research, Rich, Shoes, Slippers, Socks, Surface, Tantalum, tantulum, Traffic, Warming, Water, Zinc | 1 Comment »

S Gopalakrishnan – Banking services in Rural Areas

Posted by Snapjudge மேல் ஜூலை 23, 2007

கிராமங்களில் வங்கிச் சேவை

எஸ். கோபாலகிருஷ்ணன்

பாரத ரிசர்வ் வங்கியின் துணை கவர்னர் உஷா தோராட் அண்மையில் தெரிவித்துள்ள தகவல் ஒன்று கவனிக்கத்தக்கது. இந்தியாவில் இப்போது மொபைல் தொலைபேசி உபயோகிப்பவர்களின் எண்ணிக்கை 9 கோடியே 30 லட்சம். அதேசமயம், அனைத்து வங்கிகளிலிருந்தும் கடன் வசதி பெறுபவர்களின் எண்ணிக்கை மொபைல் தொலைபேசி வைத்திருப்பவர்களைவிட குறைவு என்பதே அது.

இதை சற்று கூர்ந்து கவனிப்போம்: நூறு கோடி மக்கள் வாழும் இந்தியாவில் வெறும் 9 கோடி பேருக்குத்தான் வங்கிக் கடன் கிடைக்கிறது. இதில் பெரும் தொழில், சிறு தொழில் மற்றும் விவசாயக்கடன், வீட்டுக்கடன், வாகனக்கடன், தனிநபர் கடன், கல்விக்கடன் என எல்லா வகை வங்கிக் கடன்களும் அடங்கும்.

மேலும், 2006ஆம் ஆண்டில் வங்கிகளின் கடன் வசதி பெற்றவர்களில் 93 சதவிகிதத்தினர் தலா ரூ. 2 லட்சம் மற்றும் அதற்கும் குறைவான தொகையே கடனாகப் பெற்றுள்ளனர். இது மொத்த வங்கிக் கடன் தொகையில் 18 சதவிகிதமே.

ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு வங்கிக் கடன் வசதி ரத்தநாளம் போன்றது என்பார்கள். அந்த வகையில் பெரும் நகரங்கள், சிற்றூர்கள் மற்றும் கிராமங்களில் வசிப்பவர்களுக்கு பரவலாக இந்தக் கடனுதவி கிடைக்கிறதா என்றால் இல்லை என்பதே பதில். ஒட்டுமொத்த வங்கிக் கடன் தொகையில் 56 சதவிகிதம் தொகையை மும்பை, தில்லி, சென்னை, கோல்கத்தா, பெங்களூர் மற்றும் ஹைதராபாத் ஆகிய 6 மாநகரங்கள் பெற்று விடுகின்றன. மேலும் கவலையளிக்கும் அம்சம் என்னவெனில், கடந்த 5 ஆண்டுகளில் கிராமங்கள் மற்றும் ஊரகப் பகுதிகளில் வங்கிகள் வழங்கிய கடனுதவி 10.4 சதவிகிதத்திலிருந்து 8.3 சதவிகிதமாக வீழ்ச்சி அடைந்துவிட்டது என்பதுதான்.

இந்தச் சரிவுக்கு என்ன காரணம் என்றால், கிராமங்கள் மற்றும் ஊரகப் பகுதிகளில் 2001 டிசம்பரில் 32,496 வங்கிக் கிளைகள் செயல்பட்டன. ஆனால், 2006 டிசம்பரில் வங்கிக் கிளைகளின் எண்ணிக்கை 30,586 ஆக குறைந்துவிட்டன. அதாவது, கடந்த 5 ஆண்டுகளில் 1910 கிளைகள் மூடப்பட்டுள்ளன. பாரத ரிசர்வ் வங்கி 3 மாதங்களுக்கு ஒருமுறை வெளியிடும் தகவல் அறிக்கை (டிசம்பர் 2006)யில் இந்த விவரங்கள் உள்ளன.

ஒருபக்கம், தேசிய வங்கிகள், பழைய தனியார் வங்கிகள், புதிய தலைமுறை தனியார் வங்கிகள் ஒன்றோடொன்று போட்டிபோட்டுக் கொண்டு பெரும் நகரங்களிலும், வணிக மையங்களிலும் புதிய கிளைகளை அமைக்கின்றன. இன்னும் சொல்லப்போனால், தேசிய வங்கிகள் வெளிநாடுகளில் அன்றாடம் புதிய கிளைகளை அமைப்பதில் ஆர்வம் காட்டுகின்றன. இதுவரை தவிர்த்து வந்த பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் கூட இந்திய வங்கிகள் கிளைகளைத் தொடங்குகின்றன. ஆனால், உள்நாட்டில் கிராமக்கிளைகளை இழுத்து மூடுகின்றன. ஓரிரு பெரிய வங்கிகளில், சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தொடர்பு கொண்டு விசாரித்ததில் கிடைத்த தகவல் இதுதான்: “”லாபம் ஈட்டாத சிறிய கிளைகளை அருகில் உள்ள பெரிய கிளைகளோடு இணைத்து விட்டோம். நாங்கள் ஒன்றும் கிளைகளை மூடவிடவில்லை.” என்றனர். இதற்கெல்லாம் என்ன காரணம் என்று ஆராயத் தேவையில்லை. வங்கிகளின் லாபநோக்கம்தான் முக்கியக் காரணம்.

1969-ல் வங்கிகள் தேசியமயமாக்கப்பட்டதை அடுத்து, கிராமங்களில் கிளைகளைத் தொடங்குவதற்கு முழுமூச்சுடன் களம் இறங்கின. அஞ்சல் அலுவலகம், காவல் நிலையம் இல்லாத கிராமங்களில்கூட வங்கிக்கிளைகள் தொடங்கப்பட்டன. கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் அந்த நிலை நீடித்தது. அதன் பின்னரே இதில் சுணக்கம் ஏற்பட்டது மட்டுமல்ல; வணிகரீதியில் லாபம் தராத கிளைகள் மூடப்பட்டன.

கிராமங்களில் வாழும் மக்களிடையே சேமிப்புப் பழக்கத்தை உருவாக்குதல், அவர்களிடம் வைப்புத்தொகைகளைத் திரட்டுதல் மற்றும் அவர்களுக்குப் பயிர்க்கடன், கால்நடைக் கடன் போன்ற விவசாயக் கடன் உதவி வழங்குதல், அளவுக்கு அதிகமான வட்டி வசூலிக்கும் தனியார் வட்டிக் கடைகளிலிருந்து அவர்களைக் காப்பாற்றுதல் ஆகியவையே அந்த காலகட்டத்தில் அரசின் நோக்கமாக இருந்தது.

1991-ல் அறிமுகமான பொருளாதாரச் சீர்திருத்தத்திற்குப்பின்னர், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளும் வணிக ரீதியில் செயல்பட்டு லாபம் ஈட்ட வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கியது. ஒரு வங்கியின் செயல்திறனுக்கு அடையாளம் அது ஈட்டும் லாபமே என்று கருதப்பட்டது. இப்புதிய சூழலில், கிராமக்கிளைகள் ஒரு சுமையாகக் கருதப்பட்டன.

நல்லவேளையாக, காலம் தாழ்ந்தேனும், மீண்டும் அரசின் எண்ண ஓட்டம் மாறத் தொடங்கியுள்ளது. பாரதப் பிரதமருக்கு பொருளாதார ஆலோசனை வழங்கும் உயர்மட்டக் குழுவின் தலைவரும், ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னருமான சி. ரங்கராஜன் அண்மையில் வெளியிட்டுள்ள யோசனை நம்பிக்கையூட்டுவதாக உள்ளது. கிராமங்களில் மீண்டும் வங்கிக்கிளைகளை பெரிய அளவில் அமைக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார் அவர்.

வங்கிகள் தங்கள் கிளைகளைக் கிராமங்களில் தொடங்குவதை ஊக்குவிக்கும் வகையில், கிராமங்களில் புதிய கிளைகளை அமைக்கும் வங்கிகளுக்கே பெரிய நகரங்களில் கிளைகளை அமைக்க அனுமதி வழங்க வேண்டும் என்ற யோசனையைத் தெரிவித்துள்ளார் ரங்கராஜன். பார்க்கப்போனால், இப்படி ஒரு திட்டம் கடந்த காலங்களில் செயல்படுத்தப்பட்டது. ஆனால், காலப்போக்கில் ரிசர்வ் வங்கியும் அடுத்தடுத்து பொறுப்பேற்ற அரசுகளும் கிராமக்கிளைகளை அமைப்பதில் முனைப்பு காட்டத் தவறிவிட்டன என்பதே உண்மை.

தற்போது, பொருளாதார வளர்ச்சி 9 சதவிகிதத்தைத் தாண்டிவிட்டது குறித்து பெருமிதம் அடைகிறோம். ஆனால், வேளாண்துறை, தொழில்துறை மற்றும் சேவைத்துறை ஆகிய மூன்று துறைகளிலும் பரவலாக, ஒரே சீராக வளர்ச்சி ஏற்படவில்லை. மாறாக, ஒருபக்கம், தொழில் உற்பத்தித் துறையும், இன்னொருபக்கம், தகவல்தொழில்நுட்பம், தொலைத்தொடர்பு, தொலைக்காட்சி, ஹோட்டல் தொழில், சுற்றுலாத் தொழில் உள்ளிட்ட சேவைத் தொழில்கள் அண்மைக்காலமாக அபரிமித வளர்ச்சி கண்டுள்ளன. இதன் பயனாகவே 9 சதவிகித வளர்ச்சி சாத்தியமாகி உள்ளது. இதில் வேளாண் துறையின் பங்கு குறைவே. எனவேதான், கிராமப்புறங்களில் வளர்ச்சியின் பலன் தென்படவில்லை. வறுமை ஒழிப்பு கைகூடவில்லை. புதிய வேலைவாய்ப்புகள் உருவாகவில்லை.

இதை உணர்ந்துதான், மத்திய அரசு வேளாண் துறையில் ரூ. 25,000 கோடி வேளாண் துறையில் முதலீடு செய்வதற்கு முன்வந்துள்ளது. கிராமப்புற வளர்ச்சிக்கு அரசின் புதிய முதலீடுகள் அவசியம் என்பதில் ஐயமில்லை. ஆனால் அதுமட்டும் போதாது. விவசாயிகளுக்கு உரிய நேரத்தில், சரியான அளவில் விவசாயக் கடன் தங்குதடையின்றி கிடைக்கச் செய்வதும் அவசியம். அதேபோல், கிராம மக்களிடையே சிறுசேமிப்பு பழக்கத்தை உருவாக்குதல், அவர்களது வைப்புத்தொகைகளைத் திரட்டி நியாயமான வட்டி வழங்குதல் போன்ற பணிகளைச் செம்மையாக மேற்கொள்வதற்கு, கிராமங்களில் வங்கிகள் இயங்க வேண்டும்.

கிராமக் கிளைகளில் பணிபுரிய, ஊழியர்களைத் தேர்வு செய்வதிலும் கவனம் தேவை. நகர வாழ்க்கை முறைகளில் ஊறிப்போன ஊழியர்களைக் கட்டாயப்படுத்தி கிராமங்களுக்கு அனுப்பினால், உரிய பலன் கிடைக்காது என்பதைக் கடந்தகால அனுபவம் உணர்த்தியுள்ளது. கிராமச்சூழலில் பணிபுரிய, விருப்ப அடிப்படையில் ஊழியர்களைத் தேர்வு செய்தால், அர்ப்பணிப்பு உணர்வுடன் அவர்கள் பணிபுரிவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

வளர்ச்சியின் பலன் கிராமங்களில் வாழும் மக்களுக்கும் விரைவில் வந்து சேரும் என்பதற்கான அறிகுறியாக புதிய வங்கிக் கிளைகளின் செயல்பாடுகள் அமைய வேண்டும்.

(கட்டுரையாளர்: சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியாவின் முன்னாள் துணைப் பொது மேலாளர்.)

——————————————————————————————————————————
சீரழியும் சிறுதொழில்கள்

கே.எஸ். இராதாகிருஷ்ணன்

உலகமயமாக்கல், தாராளமயமாக்கல் என்ற நிலையில் சிறு தொழில்கள், குடிசைத் தொழில்கள், வறுமைக்கோட்டிற்குக் கீழ் உள்ள மக்கள் ஈடுபடுகின்ற தொழில்கள் யாவும் பெரிதும் பாதிப்படைந்துள்ளன.

கைதயாரிப்பு தீப்பெட்டித் தொழிலில்

  • சிவகாசி,
  • ராஜபாளையம்,
  • கோவில்பட்டி,
  • எட்டயபுரம்,
  • கழுகுமலை,
  • சங்கரன்கோவில்,
  • வாசுதேவநல்லூர்,
  • குடியாத்தம்,
  • செய்யாறு

போன்ற பகுதிகளில் லட்சக்கணக்கான ஏழை மக்கள் பல்லாண்டுகளாக ஈடுபட்டு வருகின்றனர். முதலில், சிவகாசி அய்ய நாடார் குடும்பத்தினர் கோல்கத்தா சென்று தொழில்நுட்பத்தை அறிந்து வந்து சிவகாசியில் முதன்முதலாக தீப்பெட்டித் தொழிலைத் தொடங்கினர். இத்தொழிலில் சி, டி என்ற இரண்டு பிரிவுகள் உண்டு.
வானம் பார்த்த பூமியில் பல குடும்பங்களுக்கு இத்தொழில் விளக்கேற்றியது. ஆனால் கடந்த பத்து ஆண்டுகளாக இந்த இரண்டு பிரிவுகளும் நலிந்து வருகின்றன. தமிழகம் வந்து தீப்பெட்டியைக் கொள்முதல் செய்த வட மாநில வியாபாரிகள் உத்தரப் பிரதேசத்திலும், பிகாரிலும் தற்பொழுது தொழிலைத் தொடங்கிவிட்டனர். இதனால் இங்கு உற்பத்தி அளவு குறைந்துவிட்டது.

இந்தியாவுக்கு ஒரு நாளைக்கு இரண்டு லட்சம் தீப்பெட்டி பண்டல்கள் தேவைப்படுகின்றன. விம்கோ தீப்பெட்டி நிறுவனம் 13 சதவிகிதம் மற்ற இயந்திரத் தீப்பெட்டி ஆலைகள் 18 சதவிகிதம், மீதமுள்ள 69 சதவிகிதம் கைதயாரிப்புப் பிரிவுகளாக இருந்தன. ஆனால், தற்பொழுது, விம்கோ, ஐ.டி.சி போன்ற நிறுவனங்கள் மட்டுமல்லாமல், சில தனியாரும் இயந்திரம் மூலமாகத் தேவையான தீப்பெட்டிகளை உற்பத்தி செய்து விடுகின்றனர்.

ஏற்றுமதி செய்யப்படும் தீப்பெட்டிகள் இயந்திரங்களிலேயே செய்யப்படுகின்றன. கடந்த காலங்களில் இரண்டு லட்சம் பண்டல்கள் உற்பத்தி செய்ய இரண்டு லட்சத்து 45 ஆயிரம் தொழிலாளர்கள் தேவை. இதனால் அதிகமான அளவில் வேலைவாய்ப்பு கிடைத்தது. தற்பொழுது இயந்திரமயம் காரணமாக தொழிலாளர்களின் வேலைவாய்ப்பு குறைந்துவிட்டது. தீப்பெட்டி ஆலை அதிபர்கள் தங்களுக்கு லாபம் என்று கருதி இயந்திரங்களின் மூலம் உற்பத்தியைத் தொடங்கிவிட்டனர்.

இதுமட்டுமல்லாமல், தீப்பெட்டிக்கான மூலப்பொருள்களின் விலைகளும் கடுமையாக உயர்ந்துவிட்டன. கைதயாரிப்பு தீப்பெட்டி உற்பத்திச் செலவு அதிகரிப்பதனால் தீப்பெட்டி விலையும் அதிகரிக்கிறது. ஐ.டி.சி. போன்ற பெரிய நிறுவனங்கள் இதனால் பாதிக்கப்படுவதில்லை. குறைந்த விலைக்கே தீப்பெட்டிகளை வழங்கக்கூடிய நிலையில் உள்ளன.

விலை அதிகரிப்பால் குடிசைத்தொழில் தீப்பெட்டி பண்டல்கள் விற்பனை ஆகாமல் கிடங்குகளில் முடங்கியுள்ளன. குளோரேட் என்ற மூலப்பொருள் பற்றாக்குறையால் சிறு உற்பத்தியாளர்கள் உற்பத்தியை நிறுத்திவிட்டதால், ஏழை மக்கள் வேலைவாய்ப்புகளை இழக்கின்றனர். பன்னெடுங்காலமாக தெற்கேயுள்ள கரிசல் பூமியில் மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்து வந்த அட்சயப் பாத்திரமாக விளங்கிய தொழில் தற்போது படிப்படியாகச் சிதைந்துள்ளது.

இத்தொழிலை ஊக்கப்படுத்தும் வகையில் மத்திய, மாநில அரசுகள் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். தீப்பெட்டிக்குத் தேவையான மூலப்பொருள்களை மானிய விலையில் வழங்க வேண்டும். ஏற்றுமதிக்கு ஊக்கத்தொகையும் வங்கிக் கடன்களும் கிடைக்க வேண்டும். கூட்டுறவு சங்க தீப்பெட்டிகளை ஏற்றுமதி செய்ய அரசே உதவ வேண்டும். ஐ.டி.சி. போன்ற பன்னாட்டு நிறுவனங்கள் உற்பத்தி செய்கின்ற தீப்பெட்டிகளை ஏற்றுமதி செய்ய மட்டுமே அனுமதி வழங்க வேண்டும். மத்திய, மாநில அரசுகள் அனுமதி பெறாமல் இயங்கும் இயந்திரத் தீப்பெட்டி தொழிற்சாலைகளை அனுமதிக்கக்கூடாது.

நெடுங்காலமாக இன்னொரு சிறுதொழில் – சாத்தூரில் நடந்து வந்த பேனா நிப்பு தொழிலும் பாதிக்கப்பட்டுள்ளது. ஒரு காலத்தில் இந்தியா மட்டுமல்லாமல் மேலை நாடுகளுக்கும் நிப்புகள் இங்கிருந்து அனுப்பப்பட்டன. அலுமினியக் கழிவுகளிலிருந்து செய்யப்படும் இந்த நிப்பு குடிசைத் தொழிலாக நூற்றுக்கணக்கான குடும்பங்களுக்கு வாழ்வளித்தது. பால்பாயிண்ட் பேனா வந்ததிலிருந்து இந்தத் தொழில் நசித்துவிட்டது. அதை நம்பியிருந்த குடும்பங்கள் இன்றைக்கு வறுமையில் வாடுகின்றன.

சிவகாசி வட்டாரத்தில் பட்டாசு, காலண்டர் மற்றும் அச்சகத் தொழில்களில் பணியாற்றிய பலர், இயந்திரங்கள் வந்ததால் வேலைவாய்ப்பை இழந்து தவிக்கின்றனர். முக்கூடலில் பீடித்தொழிலும் நசித்து வருகின்றது.

தூத்துக்குடி, திருச்செந்தூர், வேம்பார் போன்ற பகுதிகளில் உப்பளத் தொழிலும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இதில் சுமார் 40 ஆயிரம் தொழிலாளர்கள் செய்யும் உப்பளத் தொழில் நூறு ஆண்டுகளுக்கு மேலாக நடந்தது. தற்போது பல்வேறு காரணங்களால் ஏற்றுமதி நின்றுவிட்டது. மழைக்காலத்தில் இத் தொழிலுக்கு பாதுகாப்பின்மை, ரயிலில் அனுப்பத் தடை, மின் கட்டண உயர்வு, நிலத்தடி நீர் குறைவு ஆகிய காரணங்களால் இத் தொழில் நசிந்துள்ளது.

  • திண்டுக்கல் பூட்டு,
  • சுருட்டுத் தொழில்,
  • கும்பகோணம் பாத்திரத்தொழில்,
  • நெசவுத் தொழில் மற்றும்
  • உடன்குடி பகுதியில் பனைத்தொழில் –
  • சில்லுகருப்பட்டி,
  • பவானி ஜமுக்காளம்,
  • மதுரை சுங்கடி,
  • கூறைப்புடவை போன்றவற்றோடு
  • மீன்பிடித் தொழில்,
  • கருவாடு தொழில் என
  • நடுத்தர,
  • கீழ்த்தட்டு மக்கள் ஈடுபட்ட தொழில்கள் அனைத்தும் கேள்விக்குறியாகிவிட்டன.

மதிமுக பொதுச் செயலர் வைகோவும் தீப்பெட்டி தொழில் பிரச்னையை மத்திய அரசின் கவனத்துக்குப் பலமுறை கொண்டு சென்றுள்ளார். ஆனால் தீர்வு இல்லை. புதிய பொருளாதாரத் திட்டங்களால் இத்தொழில்கள் சீரழிந்தாலும், இந்த மண்ணின் அன்றாட அடையாளங்களாக

  • நெல்லை அல்வா,
  • கடம்பூர் போளி,
  • உடன்குடி சில்லுக்கருப்பட்டி,
  • குற்றாலம் முறுக்கு,
  • திருவில்லிபுத்தூர் பால்கோவா,
  • கல்லிடைக்குறிச்சி அப்பளம்,
  • தூத்துக்குடி மக்ரோன்,
  • கோவில்பட்டி கடலை மிட்டாய்,
  • சாத்தூர் சேவு,
  • திண்டுக்கல் மலைப்பழம்,
  • குடந்தை வெற்றிலை சீவல்

போன்ற தின்பண்டங்கள் இன்றைக்கும் மீதமுள்ள எச்சங்களாகும்.
இத் தொழில்களை நம்பிய மக்கள் வேலைவாய்ப்பை இழந்து திருப்பூர் பனியன் ஆலையில் வேலை கிடைக்கும் என்று அங்கு செல்லத் தொடங்கினர். அங்கும் வேலை இன்றி, பலர் துயருறுகின்றனர்.

ஒரு சில ஆதிக்க சக்திகள்தான் இயந்திரமயமாக்கலில் பயனடைகின்றன. 60 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் இருந்து விரட்டப்பட்ட மேற்கத்திய சக்திகளுக்கு மீண்டும் இங்கு சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்பு கொடுக்கிறோம்.

வ.உ.சி.யின் கப்பல் நிறுவனத்திற்கு ஆங்கிலேயர்கள் பல தொல்லைகள் கொடுத்து பங்குதாரர்களை எல்லாம் பங்குகளை வாபஸ் பெறச் செய்தனர். 1896-ல் பாரதியின் தந்தை சின்னச்சாமி ஐயர், எட்டையபுரம் மன்னர் கொடுத்த கிராமத்தில் பருத்தி அரைவை ஆலையை நிறுவினார். அப்பகுதி மக்களுக்கு வேலைவாய்ப்பு கிட்டியது. அதைப்பொறுக்காத பிரிட்டிஷார், அந்த ஆலையை மூடக்கூடிய வகையில் எட்டையபுரம் அரசின் பங்குகளைத் திரும்பப் பெறச் செய்தது மட்டுமல்லாமல், ஆலை நிலத்தையும் திரும்பப் பெற்று ஆலையை மூடச் செய்தனர்.

உலகமயமாக்கலால் ஏற்கெனவே லத்தீன் அமெரிக்க நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. அம்மாதிரியான கொடுமைகள் நமக்கும் ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சம், தற்போது ஏற்பட்டுள்ளது.

(கட்டுரையாளர்: வழக்கறிஞர்)

————————————————————————————————–

கிராம மக்களுக்கு கடன் வசதி

எஸ். கோபாலகிருஷ்ணன்

கந்து வட்டிக் கொடுமை பற்றி பேசாத மனிதர்கள் இல்லை; எழுதாத ஏடுகள் இல்லை. எனினும் அவசரத் தேவை என்றால், கிராமவாசிகளுக்கு வேறு என்னதான் வழி?

இந்த அவலத்தை ஒழித்துவிடுவோம் என்று 38 ஆண்டுகளுக்கு முன் புறப்பட்ட தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் இதனைச் செய்யவில்லை.

தேசிய வங்கிகள், ஆர்.ஆர்.பி. எனப்படும் கிராமிய வங்கிகள் என எந்த ஓர் அமைப்பும் பிரச்னையின் விளிம்பைக்கூடத் தொடவில்லை. மத்திய அரசு அவ்வப்போது செயல்படுத்திய திட்டங்கள், அமைத்த நிபுணர் குழுக்கள் ஆகியவையும் பயனளிக்கவில்லை.

அதீத வட்டி வசூலிக்கும் வட்டிக் கடைகள் அல்லது லேவாதேவிப் பேர்வழிகளின் கோரப் பிடியிலிருந்து எளிய மக்களைக் காப்பாற்ற இயலவில்லை.

தற்போது தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் வட்டிக்குக் கடன் கொடுக்கும் தனியார் அமைப்புகள் முறையாகப் பதிவு செய்து கொள்ளப்பட வேண்டும் என்றும், வேறு சில விதிமுறைகளை உள்ளடக்கியும் சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன. இந்த சட்டங்களின் தன்மையும், கூர்மையும் மாநிலத்துக்கு மாநிலம் வேறுபடுகிறது. எனினும் அவற்றின் நோக்கம் அதீதவட்டி வசூலிப்பதை தடுப்பதும், கந்து வட்டியாளர்களைக் கட்டுப்படுத்துவதுதான். பஞ்சாப், ஹரியாணா போன்ற சில மாநிலங்களில் இதுபோன்ற சட்டங்கள் இன்னும் இயற்றப்படவில்லை.

சட்டம் இயற்றப்பட்ட மாநிலங்களிலும் சட்டத்தின் நோக்கம் எந்த அளவு ஈடேறி உள்ளது என்பது கேள்விக்குறியே. வட்டிக்குக் கடன் கொடுக்கும் தனியார் கடைகளோ, அமைப்புகளோ விதிமுறைப்படி பதிவு செய்யப்பட்டிருக்கலாம். ஆனால் வட்டிவிகிதம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதா என்றால் இல்லை. அவ்வளவு ஏன்? கந்து வட்டி தொடர்பாகக் கொடுக்கப்படும் புகார்கள் உரியமுறையில் பரிசீலிக்கப்பட்டு, பாதிக்கப்பட்ட கடனாளிகளுக்கு நிவாரணம் கிடைக்கிறதா என்பதும் சந்தேகமே.

2002-ம் ஆண்டு அகில இந்திய கடன் மற்றும் முதலீடு தொடர்பான ஆய்வு அறிக்கையில் காணப்படும் தகவல்கள் இங்கு நினைவுகூரத் தக்கவை.

கிராமப்புற மக்கள் 1991-ம் ஆண்டில், தனியாரிடம் வட்டிக்கு கடன் வாங்கிய தொகை அப்பகுதியின் மொத்த கடன் தொகையில் 17.5 சதவீதமாகத்தான் இருந்தது. 2001-ல், 29.6 சதவிகிதமாக உயர்ந்தது. மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்ட எந்த நடவடிக்கையும், கிராமவாசிகள் தனியார் வட்டிக்கடைகளைத் தேடிப் போவதைக் குறைக்கவில்லை. மாறாக, இந்தத் தேவை அதிகரித்துள்ளது.

இந் நிலையில் மீண்டும் ஒரு புதிய முயற்சியாக, பாரத ரிசர்வ் வங்கி இப்பிரச்னைக்குத் தீர்வு காணும் நோக்கில், கடந்த ஆண்டு ஒரு தொழிலியல் குழுவை அமைத்தது. ரிசர்வ் வங்கியின் பிரதான சட்ட ஆலோசகரின் தலைமையில் அமைக்கப்பட்ட இக் குழுவில் இதர அங்கத்தினர்களாக அதே வங்கியின் அனுபவமிக்க அதிகாரிகள் இருந்தனர். இக்குழு தனது பரிந்துரைகளை அண்மையில் அளித்தது. அவற்றின் சாரம் வருமாறு:

கிராமப்புறங்களில் வட்டிக்குக் கடன் கொடுப்பவர்கள், பதிவு செய்து கொண்டால் மட்டும் போதாது. மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை அதனைப் புதுப்பித்துக் கொள்ளவும் வேண்டும். தவிர, சில நிபந்தனைகளைப் பூர்த்தி செய்பவர்கள், உரிய பரிசீலனைக்குப்பின், “”அங்கீகரிக்கப்பட்ட கடன் வழங்குபவர்களாக” ( Accredited Loan Providers) வங்கிகளால் நியமிக்கப்படுவார்கள். அவர்கள் கிராமவாசிகளுக்கு கடன்வழங்குவதற்குத் தேவையான தொகையை வங்கியே நியாயமான வட்டியில் கடனாகக் கொடுக்கும். இதற்காக, ஒவ்வொரு “”அங்கீகரிக்கப்பட்ட கடன் வழங்குபவரும்” ஒரு வங்கியுடன் இணைக்கப்படுவார்.

கிராமவாசிக்கு கடன் கொடுக்கும்போது, கொடுப்பவர் தனது சொந்தப் பொறுப்பில்தான் கடன் வழங்குவார். வங்கி அதற்கு பொறுப்பல்ல. அங்கிகரிக்கப்பட்ட கடன் வழங்குபவர் வங்கியிலிருந்து வாங்கிய கடனை, வங்கிக்கு திரும்பச் செலுத்த வேண்டியது அவரது பொறுப்பு.

கிராம வாசிகளுக்கு கடன் வழங்கும்போது அதிகபட்ச வட்டிவிகிதத்தை மாநில அரசு நிர்ணயித்து அறிவிக்கும். இந்த வட்டி விகிதம் குறித்த கால இடைவெளியில், மறு ஆய்வு செய்யப்படும். நிர்ணயிக்கப்பட்ட கடன் விகிதத்துக்கு அதிகமாக வட்டி வசூல் செய்தால் தண்டனை விதிக்கப்படும்; அங்கீகரிக்கப்பட்ட கடன் வழங்குபவரின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும். வங்கியும் இதைத் தொடர்ந்து கண்காணிக்கும்.

ஏற்கெனவே வட்டிக்கடை வைத்திருப்பவர்கள் விவசாயப் பண்டங்களில் வாணிபம் செய்பவர்கள் விவசாய கமிஷன் ஏஜென்டுகள், வாகன விற்பனையாளர்கள், பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் போன்ற – கிராமவாசிகளுக்கு நன்கு பரிச்சயமானவர்கள், “”அங்கீகரிக்கப்பட்ட கடன் வழங்குபவர்களாக” நியமிக்கத் தகுதி பெற்றவர்களாகக் கருதப்படுவார்கள். இவர்களையும், இப்பொறுப்புக்கு தகுதி உடைய பிறரையும் வங்கி உரியமுறையில் பரிசீலித்து, “”அங்கீகரிக்கப்பட்ட கடன் வழங்குபவர்”களாக நியமனம் செய்யும்.

வங்கியும் அங்கீகரிக்கப்பட்ட கடன் வழங்குபவரும், தத்தம் கடமைகள், உரிமைகள் மற்றும் நிபந்தனைகள் தொடர்பாக ஒப்பந்தம் செய்து கொள்வார்கள். அவசியம் நேரும்போது அங்கீகாரத்தை ரத்து செய்வதற்கு விதிமுறை அனுமதிக்கும் புகார்கள் மற்றும் குறைதீர்ப்பு நடைமுறை எளிமையாக இருக்கும்.

அங்கீகரிக்கப்பட்ட கடன் வழங்குபவருக்கு தரப்படும் வங்கிக் கடன், வங்கிகளைப் பொருத்தவரை, முன்னுரிமை ( Priority Sector) கடனாகக் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். அரசின் விதிமுறைகளின்படி, வங்கிக் கடனில் 40 சதவிகிதத் தொகையை விவசாயம், சிறுதொழில் உள்ளிட்ட முன்னுரிமைப் பிரிவினருக்குக் கடனாக வழங்க வேண்டும். அந்த வகையில், வங்கிகள் தங்கள் கடமையை எளிதாக நிறைவேற்ற ஒரு வழி கிடைத்துள்ளது எனலாம்.

இத் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கு மாநிலங்கள் புதிய சட்டம் இயற்றவேண்டும். அதற்கான வரைவு மசோதா ஒன்றை ரிசர்வ் வங்கியின் குழு ஏற்கெனவே தயாரித்து வைத்துள்ளது.

குழுவின் பரிந்துரையை ரிசர்வ் வங்கியும் மத்திய, மாநில அரசுகளும் விரைந்து ஏற்றுக் கொள்வார்கள் என எதிர்பார்க்கலாம். முதன்முறையாக, நடைமுறைக்கு உகந்ததாக, எளிதானதாக மட்டுமல்லாமல், சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினருக்கும் லாபம் தரும் வகையில் இந்த திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.

கடன் வாங்குபவர் வங்கிக்குச் சென்று அலைக்கழிக்கப்படாமல், தனக்குப் பரிச்சயமான ஒரு நபரிடமிருந்து கடன் பெறலாம். காலதாமதத்துக்கு வழியில்லை. வட்டி விகிதமும் நியாயமானதாக இருக்கும்.

கடன் வழங்குபவருக்கு சொந்த முதலீடு தேவையில்லை. கடன் வழங்குவதற்கு, வங்கியிடமிருந்து தேவையான பணத்தைக் கடனாகப் பெறலாம். கடன் வாங்குபவர், வழங்குபவருக்குப் பரிச்சயமான கிராமவாசி; நேரடித் தொடர்புடையவர். எனவே கடனை வசூல் செய்வதில் சிரமம் இருக்காது; வாராக் கடனாக மாறாது.

வங்கியைப் பொருத்தவரை, எண்ணற்ற கிராமவாசிகளைத் தொடர்பு கொள்வதற்குப் பதில், தங்களால் தேர்வு செய்யப்பட்ட ஒரு நபருக்கு கடன் வழங்கி, கடனைத் திரும்ப பெறுவதில் பிரச்னை இருக்காது. அத்துடன் அங்கீகரிக்கப்பட்ட கடன் வழங்குபவருக்கு கொடுக்கப்படும் கடன்தொகை, முன்னுரிமைக் கடன் என்று கருதப்படும். கிராமவாசிகளுக்கு நேரிடையாக கடன் வழங்குகையில், உள்ளூர் அரசியல் புள்ளிகளின் தலையீடு இருக்கக்கூடும். புதிய திட்டத்தில் இது அறவே தவிர்க்கப்படும். எல்லாவற்றுக்கும் மேலாக, ஒட்டுமொத்த சமுதாயத்துக்கு இத்திட்டம் நன்மைபயக்கவல்லது.

வங்கிகள் தேசியமயமாக்கப்பட்டதைத் தொடர்ந்து எதிர்பார்த்தப்படி, கிராமவாசிகளுக்கும் வங்கிகளுக்கும் இடையே பரஸ்பர நம்பிக்கையும், நட்புறவும் மலரவில்லை என்பதே உண்மை. புதிய திட்டத்தின் மூலம் இவ்விரு தரப்புக்கும் இடையே ஒரு பாலமாக “”அங்கீகரிக்கப்பட்ட கடன் வழங்குபவர்கள்” திகழ்வார்கள் என்று எதிர்ப்பார்கலாம்.

தொழில்நுட்ப மேம்பாட்டின் பலனாக, படித்த, வசதிபடைத்த நகர்ப்புற வாடிக்கையாளர்களுக்குச் சேவைகள் வழங்கி, லாபம் ஈட்டினால் மட்டும் போதாது; ஏழை, எளிய மக்களையும் அரவணைத்துச் செல்லும் வகையில் வங்கிகள் செயல்படவேண்டும் என்பதே இன்றைய எதிர்பார்ப்பு. இதற்கு இந்தத் திட்டம் உதவியாக இருக்கும்.

(கட்டுரையாளர்: சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியாவின் முன்னாள் துணைப் பொது மேலாளர்.)

Posted in Al, Aluminium, APR, Assets, Auto, Balance, Ballpoint, Banking, Banks, Biz, branch, Business, Calendar, Cellphone, Cheyyaar, Cheyyaaru, Cheyyar, Citi, City, Commerce, Compensation, Crackers, Diary, Dindugul, Dindukal, Dindukkal, Economics, Education, Educational, Employment, Ettayapuram, Exim, Expenses, Export, Exporters, Factory, Finance, Fireworks, Garments, GDP, Globalization, Growth, Gudiatham, Gudiyatham, Home, Housing, ICICI, Imports, Income, Industry, Installment, Instalment, Interest, ITC, Jobs, Kalugumalai, Kalukumalai, Kazhugumalai, Kazhukumalai, Kazugumalai, Koilpatti, Kovilpatti, Kudiatham, Kudiyatham, Loans, match, Matchbox, Matches, Metro, Mobile, Monetary, Motor, Nibs, Opportunity, Pen, Private, Profit, Purchase, Purchasing, Rajapalayam, Rates, RBI, Refill, Revenues, Reynolds, Rural, Sangarankoil, Sangarankovil, Sangarankoyil, Sankarankoil, Sankarankovil, Sankarankoyil, SBI, Sivakasi, Small Biz, Small scale, SSI, Tamil, Textiles, Thiruchendhur, Thiruchendoor, Thiruchendur, Thoothukudi, Thuthukudi, Tuticorin, VaiGo, VaiKo, Vasudevanalloor, Vasudevanallur, Villages, Wimco, Work, Writing | Leave a Comment »

BSNL tender scam – Allegations, Maran vs Raja: DMK internal squabbling or corruption?

Posted by Snapjudge மேல் ஜூலை 21, 2007

பிஎஸ்என்எல் சர்ச்சை: நடந்தது என்ன?

புதுதில்லி, ஜூலை 21: பிஎஸ்என்எல் டெண்டர் சர்ச்சைக்குப் பிறகு, தற்போது அது தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு விளக்கமான கடிதம் ஒன்றை எழுதியுள்ளார் மத்திய தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ஆ. ராசா.

பிஎஸ்என்எல் மற்றும் அதன் ஊழியர்களின் நலன் ஒன்றையே கருத்தில் கொண்டு, தான் முடிவெடுப்பதாக ராசா அக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். தனது நடவடிக்கையால், உடனடியாக அரசுக்கு ரூ.6,500 கோடி மிச்சப்படுத்தப்பட்டதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வெள்ளிக்கிழமையன்று, மூன்று பக்கக் கடிதத்தை பிரதமருக்கு அவர் அனுப்பியுள்ளார். விவரம்:

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ஜிஎஸ்எம் மொபைல் சேவை (2ஜி, 3ஜி) டெண்டர் தொடர்பாக அண்மையில் பத்திரிகைகளில் வெளியான செய்திகள் தொடர்பாக இக் கடிதத்தை எழுதுகிறேன்.

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் செயல்பாடு குறித்து எனது அமைச்சகம் உன்னிப்பாகக் கவனித்து வருகிறது. இந் நிறுவனம் சிறந்து விளங்குவதற்கும், தனது சேவைகளை மேலும் விரிவுபடுத்தவும் அதற்குத் தேவையான ஒத்துழைப்பு மற்றும் தன்னாட்சியை வழங்குவதில் உறுதிபூண்டுள்ளது.

தில்லி உயர்நீதிமன்றத்தில் மோட்டரோலா நிறுவனம் தொடர்ந்த வழக்குக் காரணமாக, பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கான ஜிஎஸ்எம் டெண்டரை இறுதி செய்வதில் காலதாமதம் ஏற்பட்டது.

நான் அமைச்சராகப் பதவியேற்றவுடன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்பட பல்வேறு தரப்பிலிருந்தும் ஏராளமான புகார்கள் வந்தன. மோட்டரோலா நிறுவனம் எம்டிஎன்எல் நிறுவனத்துக்கு கருவிகளை வழங்கும் விலையை விட, தற்போதைய சந்தை நிலவரத்தைவிட அதிகமான விலைக்கு, பிஎஸ்என்எல் நிறுவனம் ஆர்டர் வழங்க உள்ளதாக புகார் கூறப்பட்டது. மேலும், தொழில்நுட்ப காரணங்களைக் கூறி, சில நிறுவனங்கள் டெண்டரில் இருந்தே விலக்கப்பட்டதாகவும் புகார் வந்தது.

இவை அனைத்தும் மிகவும் கடுமையான புகார்கள். அதனால், அது தொடர்பாக விளக்கம் கேட்பதைத் தவிர எனக்கு வேறு வழியில்லை. சந்தேகங்களைப் போக்குமாறு கேட்டேன். எல்லாம் முறையாகவும், வெளிப்படையாகவும் நடக்க வேண்டும் என்ற காரணத்தாலும், கட்டணம் நியாயமாகவும் இருக்க வேண்டும் என்ற காரணத்தாலும், பிஎஸ்என்எல் நிறுவனத்திடமிருந்து விவரங்களைப் பெற்றேன். அவற்றை ஆய்வு செய்த பிறகு, தொலைத்தொடர்புத் துறை செயலர் மூலமாக பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு தகவல் அனுப்பினேன்.

எனது கருத்துக்கள் பற்றி விவாதித்து, பிறகு கூடுதல் சொலிசிடர் ஜெனரல் கோபால் சுப்ரமணியத்தின் கருத்தையும் கேட்டு பிஎஸ்என்எல் இயக்குநர் குழு மேற்கொண்டு நடவடிக்கை எடுத்தது.

அதாவது, தற்போதைக்கு டெண்டர் அளவை 50 சதமாகக் குறைத்து, (2.275 கோடி இணைப்புகள்), டெண்டரில் முதல் இடம் பெற்ற எரிக்ஸன் நிறுவனத்துக்கு 13.125 மில்லியன் லைன்களுக்கு (மதிப்பு ரூ.5,154 கோடி) இணைப்பு வழங்க அனுமதி அளிக்கப்பட்டது. மொத்தம் 4.55 கோடி இணைப்புகளுக்கு முதலில் ரூ.22,595 கோடியாக நிர்ணயிக்கப்பட்டது. அது, ரூ.16,096 கோடியாகக் குறைக்கப்பட்டது. அதாவது, ரூ.6,500 கோடி மிச்சப்படுத்தப்பட்டது.

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் அடுத்த 15 மாதங்களுக்கான தேவைகளை சமாளிக்க, 22.75 மில்லியன் இணைப்புகளும், தற்போது வழங்க முடிவு செய்யப்பட்டுள்ள ஆர்டர்களும் போதுமானவை. மேலும், வளர்ச்சியை ஆய்வு செய்து, அதற்கு ஏற்றபடி அடுத்த மூன்று ஆண்டுகளுக்கான தேவைகளைச் சமாளிக்க பிஎஸ்என்எல் உரிய நடவடிக்கைகளை எடுக்கும் என்றும் எனக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அவ்வப்போது நடைபெற்றுவரும் முன்னேற்றங்கள் தொடர்பாக தொழிற்சங்கத் தலைவர்களுக்கும் தெரிவிக்குமாறு தொலைத்தொடர்புத் துறைச் செயலரை நான் அறிவுறுத்தியிருக்கிறேன்.

பிஎஸ்என்எல் நிறுவனம் தொடர்பான சர்ச்சையின்போது, தாங்கள் எனக்கு அளித்த ஆதரவுக்கும் ஊக்குவிப்புக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் ராசா குறிப்பிட்டுள்ளார்.
——————————————————————————————————————-

டெண்டர் பிரச்னையால் “பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு ரூ.30 ஆயிரம் கோடி நஷ்டம்”
(Idly-Vadai)

பிஎஸ்என்எல் டெண்டர் பிரச்னையால் தனியார் தொலைபேசி நிறுவனங்களுக்கு பல்லாயிரம் கோடி லாபமும், பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு ரூ.30 ஆயிரம் கோடி நஷ்டமும் ஏற்பட்டு இருக்கிறது என்று பிஎஸ்என்எல் அதிகாரிகள் சங்க மாநிலச் செயலர் என்.பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

இது குறித்து அவர் ஞாயிற்றுக்கிழமை கடலூரில் கூறியது:

பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு ஜிஎஸ்எம் 2ஜி மற்றும் 3ஜி கருவிகள் வாங்க டெண்டர் இறுதி செய்யப்பட்டு பல மாதங்கள் ஆகியும், கருவிகள் வாங்க ஆர்டர் வழங்காததால் பிஎஸ்என்எல் நிறுவனம் பெரும் பாதிப்பை சந்தித்து வருகிறது.

டெண்டர் பிரச்னையால் மாதம் ஒன்றுக்கு தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் 65 லட்சம் இணைப்புகளை அளித்து இருக்கும்போது, பிஎஸ்என்எல் நிறுவனம் 29 ஆயிரம் செல் இணைப்புகளை மட்டுமே வழங்கி இருக்கிறது. இந்த நிலையில்தான் வேலை நிறுத்தம் என்ற நிலைக்கு பிஎஸ்என்எல் ஊழியர்களும் அலுவலர்களும் தள்ளப்பட்டனர்.

அவசர அறிவிப்பின் மூலம் பொய்யான தோற்றத்தை பதிய அமைச்சர் ராசா மேற்கொள்ள, முன்னாள் அமைச்சர் தயாநிதி மாறன் பிஎஸ்என்எல் நலனுக்காக அறிக்கை விடுகிறார். இவர்கள் இருவரும் டெண்டர் பிரச்னையை அரசியல் ஆக்கியதன் மூலம், பிஎஸ்என்எல் நிறுவனம் ரூ. 30 ஆயிரம் கோடி இழப்பை சந்தித்து வருவதுதான் வேதனை.

முன்னாள் அமைச்சர் மற்றும் இந்நாள் அமைச்சரின் அரசியல் சர்ச்சைகளில் சிக்கி, பிஎஸ்என்எல் நிறுவனம் மக்கள் நலன்களை, தனியார் முதலாளிகளிடம் அடகு வைத்துவிடக் கூடாது. எனவே அரசியல் சர்ச்சைகளை உதறித் தள்ளிவிட்டு, பிஎஸ்என்எல் நிறுவனத் தலைவர் அக்கறையுடன் செயல்பட்டு, 15 தினங்களுக்குள் தீர்வு காண வேண்டும். இல்லையெனில் மீண்டும் போராட்டம் தலைதூக்கும்.

——————————————————————————————————————-

Posted in 2G, 3G, Allegation, Bharti, BJP, Bribery, Bribes, broadband, BSNL, Cabinet, CBI, Cellphone, Connection, Corruption, Dayanidhi, Dayanidhi maran, Dayanidhy, Dayanithi, Dhayanidhi, Dhinakaran, DMK, GSM, InfoTech, Internet, Kalanidhi, Kalanidhy, Kalanithi, Kalanithy, Kanimoli, Kanimozhi, Kanimozi, Karunanidhi, Karunanidhy, Karunanidi, Karunanithi, kickbacks, M Karunanidhi, M karunanidhy, M karunanithi, Maaran, Maran, Mobile, Motorola, MTNL, Mu Ka, Mu Ka Alagiri, Mu Ka Azhagiri, Mu Ka Stalin, Mu Karunanidhi, Mu Karunanidhy, Mu Karunanidi, MuKa, MuKa Alagiri, MuKa Stalin, Raja, Rasa, Reliance, RPG, satellite, Scam, Sun, SunTV, Telecom, Telephones, Telephony, tender, TV | Leave a Comment »

Reading e-books in Cell phone – Mobile Technology for Tamil

Posted by Snapjudge மேல் ஜூலை 9, 2007

இது புதுசு: செல்போனில் கலந்த “செம்புலப் பெயல்நீர்’!

அருவி

“யாயும் ஞாயும் யாரா கியரோ
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்
நீயும் யானும் எவ்வழி அறிதும்
செம்புலப் பெயல்நீர் போல
அன்புடை நெஞ்சந் தாங் கலந்தனவே’

-“குறுந்தொகை’ பாடலான இதில் வரும் “செம்புலப் பெயல்நீர்’ என்கிற உவமைநீர் தரும் ஈரம் மட்டும் இன்னும் காய்ந்தபாடில்லை. வற்றாத ஜீவநதியாய் ஊற்றெடுத்து பலவற்றோடு கலந்து ஓடிக்கொண்டே இருக்கிறது.

இலக்கியவாதிகளின் இதயங்களோடு கலந்து, கட்டுரை, கவிதை எனப் பலவற்றிலும் ஓடி, இப்போது கலந்திருப்பது செல்போனில்!

சங்கப் பாடல்களைப் படித்துப் புரிந்தவர்கள் பலாச்சுளையைச் சுவைத்ததுபோல மகிழ, புரியாதவர்கள் ஊமத்தங்காயைச் சாப்பிட்டதுபோல வருந்தி நிற்பதுதானே இன்றைய நிலை?

இது சற்று பெரிய அரிய விஷயம்தான். ஆனால் ஒன்றும் புரியாத விஷயமில்லை. செல்போனிலும் புத்தகங்கள் படிக்கிற வசதியை ஏற்படுத்தி தந்திருக்கிறது “மொபைல்வேதா’ நிறுவனம். கோயமுத்தூர் உடுமலைபேட்டையைச் சேர்ந்த கே.ஆர்.கணேஷ்ராம்தான் இதன் நிறுவனர். முதலில் சங்கப் பாடல்களை எல்லாம் தொகுத்து புத்தகமாகக் கொடுத்து இருக்கிறார்கள். போகப் போக வாரஇதழ், மாத இதழ், நாளிதழ், நாவல்கள், சிறுகதைத் தொகுப்புகள், கவிதைத் தொகுப்புகள் என எல்லாப் புத்தகங்களையும் வெளிக்கொண்டு வரவும் இருக்கிறார்கள்.

இதைப்பற்றி முழுவிவரத்தையும் சொல்கிறார் கணேஷ்ராம்:

“பி.காம் படித்திருக்கிறேன். முதலில் கோவை பகுதிகளில் உள்ள வேலைவாய்ப்புகளை மட்டும் தெரிவிக்கும் வெப்சைட் ஒன்றை நடத்திக் கொண்டிருந்தேன். ஒருகட்டத்தில் வேலைவாய்ப்பு வெப்சைட்டைத் தொடர்ந்து நடத்த முடியாமல் நிறுத்திவிட்டேன். இந்தத் தருணத்தில்தான் வேலூர் வி.ஐ.டி பல்கலைக்கழகம் புதுமை தொழில்நுட்ப ஆய்வுகளைக் கண்டறியும் முகாம் ஒன்றை நடத்தியது. இருநூறுக்கும் மேற்பட்டோர் இந்த முகாமில் கலந்துகொண்டோம். இதில் பதினைந்து பேரின் ஆய்வுகள் தேர்ந்தெடுக்கப்பட்டன. வெப்2.0 மற்றும் செல்போன் தொடர்பாக நான் செய்த ஆய்வும் தேர்ந்தெடுக்கப்பட்டது. வெப்சைட்டில் வெப்1.0-தான் இப்போது இருக்கிறது. இதற்கு மாற்றாக வெப்2.0-வெர்ஷனை அமைப்பது குறித்து ஆய்வு செய்திருந்தேன்.

இதனையடுத்து வி.ஐ.டி பல்கலைக்கழகத்தின் தொழில்முனைவோர் அடைகாப்பு மையம் சார்பில் நாலு லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் எங்களுக்கு லோனாகக் கொடுக்கப்பட்டது. இதைக் கொண்டு “மொபைல்வேதா’ நிறுவனத்தைத் தொடங்கினேன். பல்கலைக்கழக வளாகத்திலேயே இது இயங்கி வருகிறது. மொபைல் மதிப்பு கூட்டு சேவைத் துறையில் (value added services) புதிய தொழில்நுட்ப ஆய்வுகளை மேற்கொள்வதுதான் இந்நிறுவனத்தின் பணி. முதல் பணியாகத்தான் செல்போன் புத்தகத்தைக் கொண்டு வந்திருக்கிறோம். இந்தச் சிந்தனை முழுக்க முழுக்க எங்களுடையது என்று சொல்ல முடியாது. செல்போன் புத்தகங்கள் ஜப்பான், சீனாவில் அமோக வரவேற்புப் பெற்று, புத்தகங்கள் நன்றாக விற்பனையாகிக் கொண்டிருக்கின்றன. இதுதொடர்பாக நாளிதழ் ஒன்றில் வந்த செய்தியைப் படித்துப் பார்த்துவிட்டு நான் முயற்சித்தேன். முடிந்தது.

பெரியார் இயக்கத்தைப் பற்றிய ஆங்கிலப் புத்தகத்தைத்தான் முதலில் செல்போனில் வெளியிட்டோம். இதற்கு நல்ல வரவேற்புக் கிடைத்தது. இதனையடுத்து “பெரியாரின் வாழ்க்கை வரலாறு’ என்ற தமிழ்ப் புத்தகத்தை வெளியிட்டோம். இதற்கும் கிடைத்த வரவேற்பையடுத்துதான் சங்க இலக்கியங்களை செல்போன் புத்தகங்களாக மாற்றித் தருகிறோம்.

குறுந்தகவல் சேவை போன்றுதான் இதுவும் என இதனைக் குறைத்து மதிப்பிடக்கூடாது. 165 வார்த்தைகள்தான் குறுந்தகவல் சேவையில் இருக்கும். ஆயிரம் பக்கங்கள் கொண்ட புத்தகங்களையும் இதில் கொண்டு வரமுடியும்.

செல்போனில் புத்தகங்களை வடிப்பதற்காக புதிய சாஃப்ட்வேர் எதையும் நாங்கள் கொண்டு வரவில்லை. ஏற்கனவே இருக்கக்கூடிய ஜாவா தொழில்நுட்பத்தைக் கொண்டுதான் புத்தகமாக்குகிறோம். செல்போனில் கேம்ஸ் அமைப்பதற்கு இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறார்கள்.

சாதாரணமாக நாம் படிக்கிற புத்தகங்களுக்கும் இதற்கும் ஒரு வித்தியாசமும் இல்லை. அட்டை, அழகான படங்கள் என அனைத்து அம்சங்களும் இருக்கும்.

சங்க இலக்கியத்தை முதலில் நாங்கள் கொண்டு வருவதற்கு முக்கியக் காரணம் பழந்தமிழரின் வாழ்க்கையையும் கலாச்சாரத்தையும் இன்றைய தலைமுறையினர் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகத்தான். இரண்டாவது, ராயல்டி இல்லாமல் வெளியிடக்கூடிய ஒன்றாக இருப்பதும் ஒரு காரணம். தற்போது சங்க இலக்கியப் பாடல்களுக்குப் பொழிப்புரை தருவதற்கும் முயற்சித்துக் கொண்டிருக்கிறோம்.

இந்தப் புத்தகங்களைப் பெறுவது சிரமமான காரியம் ஒன்றுமில்லை. இதற்காகவே www.thinnai.info ் என்ற வலைத்தளத்தை உருவாக்கி இருக்கிறோம். இன்டர்நெட் வசதியுடன் கூடிய செல்போன் வைத்திருப்பவர்கள் அப்படியே செல்லிலேயே இன்டர்நெட் ஓப்பன் செய்து எங்கள் வலைத்தளத்திலிருந்து நேரடியாகவே டவுன்லோடு செய்துகொள்ளலாம். இன்டர்நெட் வசதி இல்லாமல் ப்ளூ டூத், இன்ஃபராரெட், டேட்டாகேபிள் வசதி உள்ளவர்கள் கணிப்பொறியில் எங்கள் வலைத்தளத்திற்குள் நுழைந்து டவுன்லோடு செய்து கொள்ளலாம்.

இதற்கு நாங்கள் கட்டணம் எதுவும் வசூலிக்கவில்லை. இலவசமாகவே இதை வழங்கி வருகிறோம். இந்தச் செல்போன் தமிழ்ப் புத்தக வெளியீட்டை கடந்த 22-ந்தேதிதான் தொடங்கினோம். அதற்குள் 250-க்கும் மேற்பட்டோர் சங்க இலக்கியப் புத்தகத்தை டவுன்லோடு செய்திருக்கிறார்கள்.

இதன் அடுத்தகட்டமாக நாவல், சிறுகதை தொகுப்புகள், கட்டுரை புத்தகங்கள் என எல்லாவகையான புத்தகங்களை வெளியிடத் திட்டமிட்டிருக்கிறோம். இதைப்போல பரபரப்பாக விற்கும் வார இதழ், மாத இதழ், நாளிதழ்களையும் கொண்டு வர இருக்கிறோம். இது தொடர்பாக எல்லாப் பத்திரிகை நிறுவனங்களோடும் எழுத்தாளர்களோடும் பேச இருக்கிறோம். இதை இலவசமாக வழங்க முடியாது.

ஓர் உதாரணத்துக்கு “ஹிந்து’ ஆங்கில நாளிதழை அவர்கள் அனுமதியுடன் வெளியிடுகிறோம் என்றால், அதற்கான கட்டணத்தை செல்போன் ரீடர்களிடம் இருந்து பெற்றுக்கொள்ள திட்டம் வைத்திருக்கிறோம். ஒரு சினிமாப் பாடலை ரிங்டோனாக வைத்துக்கொண்டால் செல்போன் ஆபரேட்டார் அதற்காகும் கட்டணத்தைப் பிடித்துக் கொள்வதுபோல நாளிதழுக்காகும் கட்டணத்தையும் ஆபரேட்டார்களையே பிடித்துக்கொள்ள சொல்லலாம். வார இதழ்கள், மாத இதழ்கள், பெரிய எழுத்தாளர்களின் நாவல் என எல்லாப் புத்தகங்களையும் இந்த முறையில் வெளியிடுவது பற்றி யோசித்து வருகிறோம். எழுத்தாளர்களுக்கு முழுப் பணமும் கிடைக்கும். செல்போன் வழியாக சிற்றிதழ்கள் நடத்த விரும்புகிறவர்களும் நடத்தலாம்.

கம்ப்யூட்டரிலேயே படித்தால் கண் கெட்டுப் போய்விடும் என்ற கவலையும் இல்லாதளவு செல்போனிலேயே “கூல் டெக்ஸ்ட்’ தொழில்நுட்பமெல்லாம் வந்திருக்கிறது. இதனால் கண் கெட்டுப் போகாததுடன், செல்போன் புத்தகமும் தெளிவாகத் தெரியும்” என்கிறார் கணேஷ்ராம்.

செல்போன் புத்தகம் பற்றி பேசியபோது ஒரு கல்லூரி மாணவி சொன்னாள்:

“”ஐ… பரீட்சைக்குப் புத்தகத்தையே செல்போனில் கொண்டு போயிடலாமே”

“”என்ன கொடுமை சார் இது”

Posted in Author, Books, Cellphone, Display, Fonts, iPhone, Magazines, Magz, Mobile, Newpapers, News, Reader, service, SMS, SOA, Software, Tamil, Technology, Tools, Unicode, Utility, Zines | 1 Comment »

Alleged ‘Yana Guptha’ sex video is making rounds – Maalai Malar

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 16, 2007

செல்போனில் பரவும் நடிகை யானாகுப்தா ஆபாச படம்

சென்னை, பிப். 16-

செல்போனிலும் இண்டர்நெட்டிலும் நடிகைகளின் ஆபாசபடங்கள் வெளியாகி அவ்வப்போது பரபரப்பூட்டுகின்றன. நடிகைகளுக்குத் தெரியாமல் படுக்கையறைகளிலும் குளியலறைகளிலும் இந்த படங்களை எடுத்து பரவவிடுகின்றனர்.

நடிகை திரிஷா குளியல் அறையில் குளிப்பது போன்ற காட்சி சிலமாதங்களுக்கு முன்பு வெளியானது. ஆடைகளை ஒவ்வொன்றாக கழற்று வதும் நிர்வாணமாக நின்று குளிப்பதும் அப்பட்டமாக படம் பிடிக்கப்பட்டது. படத்தில் இருப்பது நான் இல்லை என்று திரிஷாமறுத்தார். போலீசிலும் புகார் செய்யப்பட்டது. அதன் பிறகு ஓட்டல்களில் தங்க நடிகைகள் பயந்தனர்.

சிம்ரன், சொர்ணமால்யா சாயலில் இருந்த ஆபாச படங்களும் வெளியாயின. படுக்கை அறையில் இப்படங்கள் எடுக்கப்பட்டிருந்தன.

சமீபத்தில் பாபிலோனா நடித்ததாக ஆபாச பட கேசட்டுகள் வெளிவந்தன. ஆபாச படத்தில் தான் நடிக்க வில்லை என்று பாபிலோனா மறுத்தார்.

தற்போது கவர்ச்சி நடிகை யானாகுப்தாவின் ஆபாச படங்கள் செல்போனில் பரவியுள்ளன. இவர் அந்நியன், படத்தில் காதல் யானை பாடலில் ஆடியவர். மன்மதன் படத்திலும் ஒரு பாட்டுக்கு ஆடியுள்ளார்.

படுக்கையறையில் ஒரு ஆணுடன் இருந்து விட்டு நிர்வாணமாக எழுகிறார். பின்னர் ஆடையின்றி அப்படியே பாத் ரூம் செல்கின்றார். அங்கு சில நிமிடங்கள் குளிக்கிறார். இந்த காட்சிகள் அப்படியே எடுக்கப்பட்டிருந்தன. கதவு துவாரம் வழியாக செல்போனில் இதை படம் எடுத்துள்ளனர். பின்னர் அவற்றை பரவ விட்டிருக்கிறார்கள். தமிழ்நாடு முழுவதும் செல்போனில் இப்போது இந்த படம் வலம் வந்து கொண்டிருக்கிறது.

Posted in Actress, Anniyan, Babilona, Bath, Cellphone, Glamour, Manmadan, Manmadhan, Manmathan, MMS, Nude, Rumour, Sadha, Sex, Shankar, Simbu, Simran, Sornamalya, Trisha, video, Vikram, XXX, Yaana Gupta, Yana Gupta, Yana Guptha | 5 Comments »

‘Why did we split’ – Nayan Thara chats about Simbu

Posted by Snapjudge மேல் நவம்பர் 21, 2006

`கதறி அழுதேன், கத்தியால் கிழித்தேன் என்று களங்கப்படுத்துவதா?’ நடிகர் சிம்புவுக்கு நயன்தாரா கண்டனம்

நயன்தாராவும், சிம்புவும் வல்லவன் படத்தில் ஜோடியாக நடித்தனர். அப்போது இருவருக்கும் காதல் ஏற்பட்டது. ஒன்றாக சுற்றினார்கள். விரைவில் திருமணம் செய் வார்கள் என்றும் பேசப்பட்டது.

ஆனால் திடீரென்று காதல் முறிந்தது. இருவரும் பிரிந்து விட்டதாக நயன்தாரா கூறினார். சிம்புவுக்கு நயன் தாரா முடிவு அதிர்ச்சி அளித்தது.

அமெரிக்காவில் ஓய்வு எடுத்து வரும் அவர் இதுபற்றி கூறுகையில், “நயன்தாராவிடம் இரண்டு முறை பேச முயற்சித் தேன். முடியவில்லை. அவர் எங்கிருந்தாலும் வாழ்க என்று தெரிவித்தார். நீ இல்லை என்றால் உயிரை விட்டு விடுவேன் என்று கையை கிழித்துக் கொண்டதையும் கட்டிப்பிடித்து கதறியதையும் நயன்தாரா வேண்டுமானால் மறந்து இருக்கலாம். நான் மறக்கவில்லை என்றும் சிம்பு கூறினார்.

ஐதராபாத்தில் படப்பிடிப் பில் இருக்கும் நயன்தாராவிடம் மாலைமலர் நிருபர் இன்று செல்போனில் தொடர்பு கொண்டு சிம்பு பேட்டி குறித்து கருத்து கேட்ட போது அவர் கூறியதாவது:-

சிம்பு பேட்டி பற்றி செல் போனில் என்னிடம் தெரி வித்தனர். அவரைப் போல் நானும் நிறைய விஷயம் சொல்லலாம். ஆனால் சொல்ல விரும்பவில்லை.

சிம்புவும் நானும் பிரிந்து விட்டோம் என்று ஒரு வார்த்தைதான் சொன்னேன். இது தவிர அவருக்கு எதிராக அவமரியாதையான வார்த்தை எதையும் கூறவில்லை.

அவருடன் பழகியதால் பட வாய்ப்புகள் குறைந்தது என்று நான் சொன்னதாக கூறியுள்ளார். அப்படி நான் சொல்லவே இல்லை. அவராக அப்படி நினைத்துக் கொண்டால் நான் பொறுப்பாக முடியாது.

தேவை என்றால் நானும் அழுது இருக்கலாம். அவர் அப்படி செஞ்சிருக்கார் இப்படி பேசியிருக்கார் என்று பத்திரிகைகளில் சொல்லி இருக்கலாம். அது மாதிரி சொல்லவே இல்லை. சிம்பு வும் நீங்களும் பிரிந்து விட்டீர்களா என்று நிருபர்கள் கேட்டனர். ஆமாம் பிரிந்து விட்டோம் என்று ஒரு வார்த்தைதான் சொன்னேன்.

பிரிவதற்கு நிறைய விஷ யங்கள் இருக்கிறது. அதை யெல்லாம் சொல்வது மரியாதை அல்ல என்று கருதி னேன். இன்று அவர் என்ன வெல்லாமோ சொல்லி இருக் கிறார். நானும் அது போல் மரியாதையை விட்டு பேச மாட்டேன்.

நானும் அவரும் என் னென்ன பேசினோம் எங்கள் இருவருக்குள்ளும் என்னென்ன நடந்தது என்பதை பொது ஜனங்களுக்கு தெரிவிக்க அவசியம் இல்லை.

இருவரும் சேர்ந்து நடித் தோம். பழகினோம். பிரிந் தோம். பிரிவதற்கு 1001 கார ணம் இருக்கலாம். ஒவ்வொன் றையும் சொல்ல முடியாது.

நான் கதறி அழுதேன். கத்தியால் கையை கீறிக் கொண்டேன் என்று சிம்பு கூறியுள்ளார். அவரைப் பற்றி சொல்லவும் என்னிடம் நிறைய விஷயங்கள் இருக்கிறது.

இருவர் காதலிக்கும் போது நல்ல விஷயங்களும் நடக்கும். சண்டையும் நடக்கும். அது எனக்கும் சிம்புவுக்கும் உள்ள விஷயம். கத்தியால் கிழித்து இருக்கலாம் என்ன வேண்டுமானாலும் நடந்து இருக்கலாம். அவற்றை வெளிப் படுத்துவது நாகரீகமாகாது.

சிம்புவை பிரிந்ததற்கு 1000 பேர் காரணம் கேட்டனர். நான் ஒரு பொண்ணு. ஒரு பொண்ணு சொன்னால் நம்புவார்கள். எல்லாவற்றையும் சொல்லி இருக்கலாம். ஆனால் சொல் லாமல் தவிர்த்தேன். அதுதான் எனக்குள்ள மரியாதை.

இவ்வாறு நயன்தாரா கூறினார்.

சிம்பு மீது நயன்தாரா பாய்ச்சல்

சென்னை, பிப். 9: நடிகை நயன்தாராவும் நடிகர் சிம்புவும் நெருக்கமாக இருப்பது போன்ற படங்கள் இன்டர்நெட்டில் வெளியானதால் தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.  “சிம்புதான் இதை வெளியிட்டிருப்பார்; அவரது தவறான புத்தியை இது வெளிப்படுத்துகிறது“ என நயன்தாரா கூறியிருக்கிறார்.

Ôவல்லவன்Õ படத்தில் நடிக்கும்போது சிம்புவும் நயன்தாராவும் நெருக்கமாக பழகினர். அதில் ஒரு முத்தக்காட்சியிலும் நடித்தனர். வெளிநாடுகளுக்கு ஜோடியாக சென்று வந்தனர். இருவரும் காதலிப்பதாகவும் திருமணம் செய்துகொள்ள இருப்பதாகவும் செய்திகள் வந்தன. ஆனால் வல்லவன் படம் வெளியான சில நாட்களில் அவர்களுக்குள் மன வேறுபாடு ஏற்பட்டது.

Ôசிம்புவுடன் உறவு முறிந்தது. இனி அவருடன் சேர்ந்து நடிக்க மாட்டேன்Õ என்று நவம்பர் மாதம் நயன்தாரா ஒரு பேட்டியில் அறிவித்தார். அப்போது அமெரிக்கா சென்றிருந்த சிம்பு, சென்னை திரும்பியதும், Ôஇனி நயன்தாரா வாழ¢க்கையில் குறுக்கிடமாட்டேன். அவர் எங்கிருந்தாலும் வாழ்கÕ என்றார்.

இந்த முறிவுப் பிரகடனம் முடிந்து ஒரு மாதமான நிலையில் இப்போது இன்டர்நெட்டில் இந்த நட்சத்திர ஜோடியின் அன்னியோன்யமான படங்கள் வெளியாகியுள்ளன. இருவரும் கன்னத்துடன் கன்னம் வைத்து சிரிப்பது போலவும், இதழோடு இதழ் சேர்த்து முத்தமிடுவது போலவும் படங்கள் உள்ளன.

இது குறித்து கேட்க சிம்புவை தொடர்பு கொண்டபோது அவர் மொபைலை  எடுக்கவில்லை. அவரது தந்தை டி.ராஜேந்தர், Ôபோலிப் படங்களை நிஜம்போல காட்டும் தொழில்நுட்பம் வளர்ந்துவிட்டது. இதற்கு மேல் எதுவும் சொல்ல விரும்பவில்லைÕ என்றார்.

நயன்தாரா கூறியதாவது:

சிம்பு எப்படிப்பட்டவர் என்பதை புரிந்துகொண்ட பிறகுதான் அவரை விட்டு விலகினேன். இருவரும் பழகியபோது அடிக்கடி என்னை போட்டோ எடுப்பார். பேப்பர் படிப்பது போல, பல் துலக்குவது போல, சோபாவில் அமர்ந்திருப்பது போல என்று பல கோணங்களில் படங்கள் எடுத்திருக்கிறார். அதையெல்லாம் அவ்வப்போது அழித்துவிட்டதாக கூறுவார்.

அது பொய் என்று இப்போது தெரிகிறது. அவர்தான் இந்த படங்களை வெளியிட்டிருக்க முடியும். முத்தம் போட்டோ எங்கே எப்போது எடுத்தார் என்று தெரியவில்லை. ஒரு பெண் என்றும் பாராமல் என் படத்தை இப்படி உலவ விட்டிருப்பது அவரது தவறான புத்தியை வெளிப்படுத்துகிறது.

இவ்வாறு நயன்தாரா கூறினார்.

Posted in Allegation, Camera, Cellphone, Gossip, Hotel, Kiss, Manmadhan, Nayan Dhara, Nayan Thara, nayandhara, Nayanthara, Photos, Pictures, Room, Rumor, Rumour, Sex, Silambarasan, Simbhu, Simbu, T Rajendar, T Rajendhar, Tamil Cinema, Tamil Movies, Usha Rajenthar, Vallavan, Vijaya T Rajendar | 12 Comments »

More duplicate actress’ videos make cell phones ring

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 3, 2006

செல்போனில் பரவும் சொர்ணமால்யா ஆபாச படம்: போலீஸ் விசாரணை

சென்னை, அக். 3-

நடிகைகளின் ஆபாச காட்சிகள் அவ்வப்போது இன்டர்நெட்டில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்துகின்றன. திரிஷாவின் குளியல் காட்சி யென நிர்வாணப்படம் சமீபத்தில் வலம் வந்தது. செல்போன் கேமிராவில் இப்படத்தை எடுத்து இன்டர் நெட்டில் மர்ம நபர் வெளியிட்டு இருந்தான்.

நிர்வாணமாக இருப்பவர் தன்னை மாதிரியுள்ள வேறு பெண் என்று திரிஷா மறுத்தார். போலீசிலும் புகார் செய்தார்.

அதே போல் நடிகை சொர்ணமால்யாவின் ஆபாச படம் தற்போது செல்போன்களில் பரவி கலக்கி வருகிறது. 30 விநாடிகள் இந்த வீடியோ காட்சி ஓடுகிறது.

சொர்ணமால்யா தோற் றத்தில் இருப்பவர் படுக்கை அறை காட்சியில் மேலாடையின்றி அரை நிர்வாணமாக அமர்ந்து இருக்கிறார். திடீரென்று எதிரே ஒருவர் செல்போனில் படம் எடுப்பதை பார்த்து வேண்டாம் என்று தலையசைக்கிறார்.

ஆனாலும் கேமராவில் தொடர்ந்து பதிவாகிறது. தலையணையால் மார்பை மறைக்கிறார். பிறகு குனிந்து மேலாடையை எடுத்து அணிகிறார்.

அதற்குள் அரை நிர்வாணத்தை முழுமையாக படம் பிடித்து விடுகிறது கேமரா.

இந்த ஆபாச காட்சிகள் இ.மெயில் மூலம் உலகம் முழுவதும் பரவி வருகின்றன. தமிழ்நாட்டில் செல் போன்களில் இந்த காட்சி பரவுகிறது.

சென்னை, மதுரை, திண்டுக்கல் ஆகிய பகுதிகளில் இளைஞர்கள் மற்றும் மாணவர்களின் செல்போன்களில் இந்த காட்சிகள் மின்னல் வேகத்தில் பரப்பப்படுகிறது.

ஆபாச படத்தில் இருப்பது தன்னைப் போன்ற வேறு பெண் என்று சொர்ணமால்யா மறுத்துள்ளார். அவர் கூறியதாவது:-

என்னை கேவலப்படுத்த இது போன்ற வக்கிர செயலில் சிலர் ஈடுபட்டுள்ளனர்.

நான் அந்த வீடியோ காட்சியை இதுவரை பார்க்கவில்லை. இது மாதிரி கேவலமான காட்சியில் நான் இருக்க மாட்டேன். எனக்கு தெரியாமல் யாரும் வீடியோ எடுக்கவும் முடியாது. என் உருவம் கொண்ட யாரோ ஒருவரை வைத்துத்தான் இந்த படத்தை எடுத்திருக்க வேண்டும்.

இது பற்றி போலீசில் புகார் செய்ய முடிவு செய்துள்ளேன். இது போன்ற ஆபாச படங்கள் என்னை பாதிக்காது என்னைப் பற்றி சுற்றி இருப்பவர்களுக்கு நன்றாக தெரியும்.

இவ்வாறு சொர்ணமால்யா கூறினார்.

இந்த ஆபாச படங்கள் போலீஸ் கவனத்துக்கும் சென்றுள்ளது.

இதை பார்த்த கூடுதல் போலீஸ் கமிஷனர் ஜாங்கிட் `சைபர் கிரைம் போலீஸ் மூலம் விவாதிக்கப்படும் என்றார். செல்போன் மூலமோ அல்லது இ.மெயில் மூலமோ ஆபாச படங்கள் மற்றும் ஆபாச எஸ்.எம்.எஸ்.கள் அனுப்புவது சட்டப்படி குற்றம் என்றும் அது போன்ற காரியங்களில் ஈடுபடுவோர் மீது வழக்கு பதிவு செய்யப்படும் என்றும் அவர் கூறினார்.

ஆபாச படத்தில் இருப்பது சொர்ணமால்யாதான் என்று உறுதியானால் அவர் மீது வழக்கு தொடரப்படும் என்று போலீஸ் வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.

Posted in Bathroom, Cellphone, Downloads, Duplicate, MMS, Mobile Phone, Porn, Sex, Sornamalya, Tamil, Topless, Trisha, video | 2 Comments »