Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Castro’ Category

40 years on, remembering Che Guevara: A symbol of revolution

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 8, 2007

சே-குவராவின் நாற்பதாவது நினைவு தினம்

கியூபாவின் புரட்சிகர கதாநாயகர்களில் ஒருவரும், சமீபத்திய தசாப்தங்களில் தோன்றிய அதிகபட்ச ஆளுமை நிறைந்த குறியீடுமான எர்னெஸ்டோ சே-குவரா அவர்கள் சிறைபிடிக்கப்பட்டு, மரணத்தை தழுவிய நாற்பதாம் ஆண்டு நினைவு நாள் நிகழ்வுகளை கியூபா இன்று கடைபிடித்தது.

சே என்று சுருக்கமாக அழைக்கப்பட்ட, எர்னெஸ்டோ குவேரா அவர்கள், பிடெல் கேஸ்ட்ரோ அவர்கள் தலைமையிலான போராளிகளில் ஒருவராக செயல்பட்டார்.

இந்த போராளிக் குழுவினர், கியூபாவின் தலைவராக இருந்த புல்ஜென்ஷியோ பட்டிஸ்டோ அவர்களை 1959 ஆம் ஆண்டு பதவியிலிருந்து நீக்கினார்கள்.

சே-குவராவின் குடும்பத்தினர்
சே-குவராவின் குடும்பத்தினர்

அர்ஜெண்டினாவில் பிறந்த சே-குவரா அவர்கள், போலிவியாவில் நிகழ்ந்த கிளர்ச்சிக்கு உதவுவதற்காக அங்கு சென்றபோது, பொலிவிய ராணுவத்தினர் அவரை தொடர்ந்து சென்று, 1967 ஆம் ஆண்டு கொலை செய்தனர்.

ஆயிரத்து தொள்ளாயிரத்து அறுபதுகளின் கடைசியிலிருந்து, சே-குவராவின் கொள்கைகளும், தோற்றமும், அமைதியற்ற இளம் தலைமுறையினர் பலருக்கு தூண்டுகோலாக, ஆகர்ஷ சக்தியாக இருந்து வருகிறது.

சே-குவராவின் தாடி மண்டிய முகத்தின் படத்தை தாங்கிய டி ஷர்டுகள் இன்றளவும் உலகம் முழுவதும் பிரபலமாக இருந்து வருகின்றன.


பொலிவிய ராணுவத்தை ஆட்டிப்படைத்த சே குவாராவின் 40}வது ஆண்டு நினைவு தினம்

பொலி விய ராணு வத்தை ஆட் டிப்படைத்த கொரில்லாத் தலைவர் சே குவாராவின் 40வது ஆண்டு நி û ன வு தினத்தை அனுஷ்டிப்பதற்கு அந் நாட்டில் ஆதரவும், எதிர்ப்பும் காணப்படுகிறது.

ஆர்ஜென்டீனாவில் பிறந்து தொழில்ரீதியில் மருத்துவராக இருந்து பின்னர் கொரில்லாத் தலைவராக மாறிய சே குவாரா கடந்த 1967-ம் ஆண்டு அக் டோபர் 8-ம் தேதி பொலிவிய ராணுவத்தால் சுட்டுக் கொல் லப்பட்டார்.

சமூக சிந்தனையாளரான சே குவாரா, அடித்தட்டு மக்களின் வாழ்க்கைத் தரம் உயர போராடி வந்தார். இந்நிலையில் பொலிவிய ராணுவத்தால் சுற்றி வளைக்கப் பட்ட அவர், 39வது வயதில் கொல்லப்பட்டார். அவர் இறந்து 40 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலை யிலும் அந்நாட்டு மக்களில் சிலர் அவரை புனிதத் தலைவராகவே கருதிவருகின்றனர்.

ஆனால் ராணுவத்தினர் அவர் மீது கொண்டிருந்த ஆத்திரமும் வெறுப்பும் இன்னும் தணிந்தபா டில்லை. அவரைப் பிடிப்பதற் காக போராடிய ராணுவ வீரர்க ளில் சிலர் இன்னும் உயிருடன் உள்ளனர்.

“சே குவாராவின் நினைவு தினத்தில் பொலிவிய அதிபர் ஈவோ மொராலேஸ் அவருக்கு அஞ்சலி செலுத்துவது நாட்டின் கெüவரத்துக்கும், ராணுவ வீரர் களுக்கும் இழைக்கப்படும் துரோ கமாகும்’ என்று சே குவாரை பிடித்த கமாண்டர் காரி பிராடோ (68) தெரிவித்தார்.

நாட்டை பிடிக்க வந்தவரை கெüரவிப்பதைவிட எங்கள் பாதுகாப்பு படை மற்றும் ராணுவ வீரர்களை கெüரவப்ப டுத்தலாம் என்றும் அவர் தெரி வித்தார்.

லத்தீன் அமெரிக்காவில் சமூக மற்றும் பொருளாதாரத்தில் வேறுபட்டு கிடந்த அடித்தட்டு மக்களுக்கு ஆயுத புரட்சி மூலம் அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த சே குவாரா திட்ட மிட்டார். அதன்படி பொலிவி யாவில் புரட்சிகர படையை ஏற்ப டுத்தி 11 மாதங்கள் ராணுவத்தை எதிர்த்து போராடி வந்தார்.

அதற்காக சே குவாராவின் தலைமையில் செயல்பட்ட போராளிகள், காடுகளில் மறைந்து வாழ்ந்து பயிற்சி பெற்று வந்தனர். ஆனால் அவர் களுக்கு உள்ளூர் மக்கள் போதிய ஆதரவும் உதவியும் அளிக்காததால் அந்த வீரர்களில் சிலர் சண்டையிலும், சிலர் பட் டினியாலும், நோய்வாய்ப்பட் டும் இறந்தனர்.

——————————————————————————————————————–

Posted in 40, Argentina, Arms, Army, Batista, Biography, Biosketch, Castro, Che, Che Guevara, CheGuevara, Communism, Communist, Communist parties, Communists, Communities, Cuba, defence, Defense, Ernesto, Faces, Fidel, gerilla, Gorilla, Guerilla, Guevara, Hispanic, Icon, Ideals, Images, Kerilla, Latin, Legacy, Liberation, Marx, Marxism, Marxist, Marxist Communist, Marxist Leninist, Marxists, Military, names, people, Poverty, Protest, Revolution, Revolutionary, Se, Soldiers, Symbol, War, Weapons, Young, Youth | 2 Comments »

Cessation of RCTV in Venezuela – Hugo Chavez & Left Alliance vs Capitalism & USA

Posted by Snapjudge மேல் ஜூன் 28, 2007

ஆட்டம் காணும் இடதுசாரி அஸ்திவாரம்

எம். மணிகண்டன்

வெனிசுலாவில் பழம்பெருமை வாய்ந்த “ரேடியோ கராகஸ்’ தொலைக்காட்சி (ஆர்சி டிவி) நிறுவனத்தின் ஒளிபரப்பு அண்மையில் நிறுத்தப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிபர் ஹுகோ சாவேஸýக்கு எதிராக தலைநகர் கராகஸில் பல்லாயிரக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது பத்திரிகை சுதந்திரத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் என்று வெறுமனே கூறிவிட முடியாது. ஊடகங்களைத் தன்னிச்சையாக செயல்பட அனுமதிக்கும் நாடுகள் பட்டியலில் வெனிசுலாவுக்கு எப்போதுமே 100-க்கு பின்னால்தான் இடம் கிடைக்கும். சாவேஸின் ஆட்சியில் அது இன்னும் பின்னோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது.

எதிர்கட்சிகளுடன் கைகோர்த்துக் கொண்டு சாவேஸýக்கு எதிராக வெளிப்படையாகவே செயல்பட்டு வந்தது ஆர்சி டிவி. 2002-ஆம் ஆண்டு நடந்த ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியின் பின்னணியில் அமெரிக்கா இருப்பதாகக் கூறப்பட்டுவந்தாலும், ஆர்சி டிவிக்கும் பெரும்பங்கு இருப்பதாக நம்பப்படுகிறது. தற்போது இந்த தொலைக்காட்சியின் ஒளிபரப்பு நிறுத்தப்பட்டிருப்பது, சாவேஸின் பொதுவுடமை இலக்குகளை நோக்கிய வேகமான பயணத்தின் ஒரு படியே என்பதில் சந்தேகமில்லை.

ஏற்கெனவே எண்ணெய் நிறுவனங்களை அரசுடையமையாக்கியது, தனியார் சொத்துக்களை கையகப்படுத்தி ஏழைகளுக்கு வழங்குதற்காக திட்டங்களை அறிவித்தது என அனைத்துமே வெனிசுலாவில் செங்கொடி பட்டொளி வீசிப் பறக்கத் தொடங்கிவிட்டது என்பதன் அறிகுறிகளே.

இதை மறைமுகமாகக் குறிக்கும் வகையிலேயே, “இந்தப் புரட்சியை யாராலும் தடுக்க முடியாது’ என கடந்த ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு அனைத்துப் பத்திரிகைகளில் ஒரு பக்கத்துக்கு விளம்பரம் செய்தார். “இந்தியா ஒளிர்கிறது’ என்பது போல.

சாவேஸýக்கு பிறகு ஆட்சிக்கு வந்த அண்டை நாடான பொலிவியாவின் ஈவோ மாரல்ஸ், ஓராண்டுக்கு முன்பே எரிவாயு திட்டங்களை அரசுடைமையாக்கி தனது இடதுசாரி பயணத்தைத் துவக்கிவிட்டார். இதனால், சாவேஸ் தனது சீர்திருத்தங்களை முடுக்கி விடவேண்டியதாகிவிட்டது.

லத்தீன் இயக்க விடுதலைக்கு வித்திட்ட சைமன் பொலிவருக்கு நிகரான சீர்திருத்தவாதியாக அறியப்படுபவர் சாவேஸ். இடதுசாரி சிந்தனை கொண்டவர் என்ற முறையில், கியூபாவின் ஆட்சியாளர் ஃபிடல் காஸ்ட்ரோவுடன் நெருக்கமாக இருப்பவர். லத்தீன் அமெரிக்கா முழுவதையும் இடதுசாரிப் பாதைக்கு திருப்ப வேண்டும் என்பதில் ஓரளவுக்கு வெற்றியும் பெற்றிருக்கிறார். சிலி, பொலிவியா உள்ளிட்ட நாடுகளில் இடதுசாரி அரசுகளை அமைத்ததில் இவருக்குப் பெரும் பங்குண்டு.

பலமுறை அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு இருப்பதால் சாவேஸýக்கும் வெனிசுலா மக்களின் ஏகோபித்த ஆதரவு இருக்கிறது என்பது அனைவராலும் ஒப்புக்கொள்ளப்பட்ட விஷயம். “சாவேஸ் சர்வாதிகாரி என்று கூறப்படுவது மேற்கத்திய நாடுகள் புனைந்த கதை; புஷ்ஷைவிட சிறந்த ஜனநாயகவாதி அவர்’ என்று கடுமையாகக் கூறுவோரும் உண்டு. புஷ்ஷுக்கு எதிராக அந்நாட்டுத் தொலைக்காட்சி நிறுவனம் ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியில் ஈடுபட்டால் அவர் பார்த்துக் கொண்டு சும்மா இருப்பாரா எனக் கேட்டு, ஆர்சி டிவி தடை செய்யப்பட்ட சாவேஸின் ஆதரவாளர்கள் நியாயப்படுத்துகின்றனர்.

சீர்திருத்தங்களை முன்னிறுத்தி தேர்தலில் வெற்றி பெற்ற சாவேஸýக்கு எதிராக நிறைய விமர்சனங்களும் உண்டு. தனக்கு ஆதரவாக அரசியல் சட்டத்தை திருத்தியது, தேர்தலில் முறைகேடு, அரசுக்கு எதிரானவர்களை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்குவது, பத்திரிகைகளுக்கு கட்டுப்பாடு என சாவேஸ்மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் கூறப்பட்டு வருகின்றன.

அதேபோல், சாவேஸின் அதிரடி நடவடிக்கைகள் அனைத்துக்கும் மக்களின் ஏகோபித்த ஆதரவு இருப்பதாகவும் கூறிவிடமுடியாது. பணக்காரர்களிடம் இருந்து நிலத்தை பிடுங்கி ஏழைகளிடம் ஒப்படைக்கும் திட்டம், அவரது ஆதரவாளர்களிடமே எதிர்ப்பைச் சம்பாதித்தது. இது தவிர, அரசு அதிகாரிகள் இச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி ஒரு வீடு வைத்திருப்பவர்களிடம் வீடுகளைப் பறித்துக் கொண்டு தவிக்க விட்டிருப்பதாகவும் புகார்கள் எழுந்திருக்கின்றன.

ஆர்சி டிவி தடை செய்யப்பட்டதற்கு வெனிசுலாவின் நெருங்கிய நட்பு நாடான பிரேசில் கடும் கண்டனம் தெரிவித்து தீர்மானம் இயற்றி இருக்கிறது. இதற்குப் பதிலடி தரும் வகையில்,”தொழிலாளர்கள் பெயரைச் சொல்லி வோட்டு வாங்கிவிட்டு, அமெரிக்காவின் கைப்பாவையாக பிரேசில் அரசு செயல்பட்டு வருகிறது’ என்று வெனிசுலா நாடாளுமன்றம் கண்டித்திருக்கிறது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டிருக்கிறது. இதுவும் வெனிசுலாவுக்கு பின்னடைவே.

எதிர்க்கட்சிக்களுக்கு ஆதரவாகச் செயல்பட்டு வருவதாக அரசின் குற்றச்சாட்டுகளுக்கு ஆளான, குளோபோவிஷன் மற்றும் சிஎன்என் தொலைக்காட்சிகளின் ஒளிபரப்புக்கும் சாவேஸ் அரசு தடைவிதிக்கும் என்று கூறப்படுவதால் பிரச்னை தற்போது பூதாகரமாகியிருக்கிறது.

இதற்கிடையே, தடைசெய்யப்பட்ட ஆர்சி டிவி ஒளிபரப்பை மெக்சிகோவில் இருந்து மீண்டும் துவக்குவதற்கான ஆயத்தப் பணிகளை மேற்கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. அந்நிறுனத்தின் தலைவர் மார்சல் கார்னியர் மெக்சிகோவில் இருக்கும் தனது “நட்பு வட்டாரத்தை’ இதற்குப் பயன்படுத்துவார் எனத் தெரிகிறது.

தொலைக்காட்சி, செயற்கைக்கோள், இன்டர்நெட் என ஏதாவது ஒரு வகையில் வெனிசுலா மக்களை தொடர்பு கொள்வேன் என கார்னியர் சபதம் செய்திருப்பதால் சாவேஸýக்கு மீண்டும் நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது.

வட கொரியா, ஈரான், சூடான், ரஷ்யா, வெனிசுலா, பெலாரஸ், பிரான்ஸ் ஆகிய நாடுகளைச் “சாத்தானின் கூட்டணி’ என்றே அமெரிக்க ஆதரவுப் பத்திரிகைகள் பிரசாரம் செய்து வருகின்றன. இது வெறும் வயிற்றெரிச்சல்தான் என்றாலும், இப்பட்டியலில் வெனிசுலா சேர்க்கப்பட்டிருப்பது சரிதானோ என்ற எண்ணம் உலக உலக நாடுகளுக்கு வராமலிருக்க, சாவேஸ் கவனமாகச் செயல்படுவது நல்லது. அதுதான் லத்தீன் அமெரிக்காவின் இடதுசாரி அஸ்திவாரத்தை பலப்படுத்துவதற்குச் சரியான வழி.

————————————————————————————————————————————–

இன்னொரு ஃபிடல் காஸ்ட்ரோ

எம். மணிகண்டன்

வெனிசுலாவைத் தாக்க அமெரிக்காவும் கொலம்பியாவும் சதி செய்கின்றன என அண்மையில் ஒரு குண்டைத் தூக்கிப் போட்டார் வெனிசுலா அதிபர் சாவேஸ். இப்போதைக்கு அமெரிக்காவால் விலை கொடுத்து வாங்கவோ, நேரடியாகப் போரிட்டு அடக்கவோ முடியாத “அச்சுறுத்தல்’களில் வெனிசுலாவும் ஒன்று என்பதால் சாவேஸின் குற்றச்சாட்டு கவனிக்கத்தக்கது. அதற்காக லத்தீன் அமெரிக்க நாடுகள் அனைத்தும் ஒன்றாகச் சேர்ந்து அமெரிக்காவுக்கு எதிராகப் போர் புரிய முடியுமா என்ன?

ஒருநாடு எவ்வளவு வேகமாக வளர்ச்சியடைகிறது என்பது மட்டுமல்ல, அதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பாதை எது என்பதும் முக்கியம் என்பார் சாவேஸ். அவரைப் பொறுத்தவரையில், பொருளாதார வளர்ச்சியின் பயன் அடித்தட்டு மக்கள்வரை சென்றடைய வேண்டுமென்றால் அதற்கு ஒரே வழி, பொதுவுடமைக் கொள்கைகளைத் தீவிரமாக அமலாக்குவதுதான். இடதுசாரிகள் என்றாலே அமெரிக்காவுக்கு எதிரானவர்கள் என்ற பொதுவான கருத்துக்கு சாவேஸýம் விதிவிலக்கல்ல.

அமெரிக்காவை எதிர்த்து 50 ஆண்டுகளாகச் சிறப்பாகச் செயல்பட்டுவரும் கியூபாவை முன்மாதிரியாகக் கொண்டிருக்கும் சாவேஸ், தம்மையும் ஃபிடல் காஸ்ட்ரோ போன்றதொரு போராளியாக முன்னிறுத்திக் கொள்பவர். அமெரிக்காவின் அடிமைப்படுத்தும் கொள்கைகளுக்கு எதிராக லத்தீன் அமெரிக்க நாடுகள் ஒன்றிணைய வேண்டும் என்பதே அவரது வாழ்நாள் லட்சியம். இதனால் அமெரிக்காவுக்குப் போட்டியாகப் பொருளாதார, ராணுவ பலத்தைப் பெருக்கும் முயற்சியில் அவர் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்.

லத்தீன் அமெரிக்க நாடுகளின் விடுதலை இயக்கத் தலைவரான சைமன் பொலிவரின் பெயரில் தொடங்கப்பட்டிருக்கும் “அமெரிக்காவுக்குப் பொலிவரிய மாற்று’ (ஆல்பா) என்ற அமைப்பின் கீழ் லத்தீன் அமெரிக்க மற்றும் கரீபிய நாடுகளின் ஆதரவை சாவேஸ் திரட்டி வருகிறார். இந்த அமைப்புக்கு வெனிசுலாவும் கியூபாவும்தான் அடித்தளம் அமைத்தன.

பொதுவாக உலகின் பல்வேறு பகுதிகளில் அமைந்துள்ள தடையிலா வர்த்தகப் பிராந்தியங்கள் போல் அல்லாமல், சமூக அக்கறையும் அடித்தட்டு மக்கள் மீது கரிசனமும் கொண்ட பொருளாதார வளர்ச்சியை எட்டும் வகையிலான வர்த்தகக் கூட்டுகளைச் செய்துகொள்ளப் போவதாக இந்த அமைப்பு கூறியிருக்கிறது.

இது நிறைவேறினால், தற்போது இடதுசாரிகள் மட்டுமே கூறிக்கொண்டிருக்கும் “அனைவரையும் அரவணைத்துச் செல்லும் பொருளாதார வளர்ச்சி’ என்பது உலக நாடுகளில் பலவற்றைக் கவரக் கூடும். இந்தியா போன்ற நாடுகள்கூட தங்களது அமெரிக்க அடிமைத்தனத்தை விட்டுவிடுவது குறித்து யோசிக்கும்.

ஆனால், ஆல்பா அமைப்பில் கியூபாவையும் வெனிசுலாவையும் விட்டால் சொல்லிக் கொள்ளும்படியாக எந்த நாடும் இல்லை என்பதுதான் பலவீனம். சாவேஸ் என்ன செய்தாலும் அதை இம்மி பிசகாமால் அப்படியே பின்பற்றும் பொலிவியாவும் இந்த அமைப்பில் இணைந்திருக்கிறது. ஈக்வடார், நிகரகுவா உள்ளிட்ட மத்திய அமெரிக்க நாடுகள் இந்த அமைப்பில் சேர்ந்துவிட்ட போதிலும் உள்நாட்டில் எழுந்திருக்கும் எதிர்ப்புகளால் முடிவைப் பரிசீலித்து வருகின்றன. இதுபோக, கரீபியன் கடலில் உள்ள ஆன்டிகுவா, டொமினிகா உள்ளிட்ட குட்டி நாடுகள் மட்டுமே ஆல்பாவில் இணைந்திருக்கின்றன.

அமெரிக்காவுடன் நெருங்கிய உறவு கொண்டிருக்கும் கொலம்பியா, பிரேசில், அர்ஜென்டினா போன்ற வலுவான நாடுகளின் ஆதரவு சாவேஸýக்கு இன்னும் கிடைக்கவில்லை. கிடைக்கும் என்று எதிர்பார்க்கவும் முடியாது.

அமெரிக்க வங்கிகளில் இருக்கும் லத்தீன் அமெரிக்க நாடுகளின் நிதியை திரும்பப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்பது சாவேஸின் மற்றொரு திட்டம். ஆசிய வளர்ச்சி வங்கி போல் பிராந்திய வங்கி ஒன்றை ஏற்படுத்தி அதில் இந்தப் பணத்தை முதலீடு செய்வதன் மூலம் அமெரிக்காவுக்கு எதிரான பொருளாதாரக் கட்டமைப்பை உருவாக்கலாம் என்பது அவரது எண்ணம்.

ஆனால் அமெரிக்காவுக்கு எதிராகக் கூட்டு ராணுவத்தை உருவாக்க வேண்டும் என்று சாவேஸ் அழைப்பு விடுத்திருப்பது வலியச் சென்று போரை வரவழைப்பதற்குச் சமம். சமூக, பொருளாதார நெருக்கடிகளில் சிக்கித் தவித்துவரும் பொலிவியா போன்ற பின்தங்கிய நாடுகளுக்குக் கூட்டு ராணுவத்தை ஏற்படுத்தி போர்புரியும் திட்டமெல்லாம் ஒத்துவராது. கெட்டதும்கூட. லத்தீன் அமெரிக்க நாடுகளை அமெரிக்கா தாக்கினால் பார்த்துக் கொள்ளலாம்; அதற்காகக் கூட்டு ராணுவம் அமைப்பது என்பது பிராந்திய அமைதியைக் குலைக்கும் வேலை என நிகரகுவாவும், ஈக்வடாரும் கருதுகின்றன.

அண்டை நாடான கொலம்பியாவுடன் சேர்ந்து வெனிசுலாவைத் தாக்க அமெரிக்கா திட்டமிட்டு வருவதாக சாவேஸ் கூறுவதையெல்லாம் வெனிசுலா மக்களே நம்பவில்லை. அப்படியே கொலம்பியாவுடன் போர் வந்தாலும் அதை லத்தீன் அமெரிக்க நாடுகள் அனைத்தும் சேர்ந்து எதிர்கொள்ள வேண்டும் என்று கூறுவதெல்லாம் சுயநலத்தின் உச்சகட்டம். தொடர்ந்து அதிபராக நீடிக்கும் வகையில் வெனிசுலாவில் அண்மையில் நடத்தப்பட்ட மக்கள் கருத்தறியும் தேர்தலில் சாவேஸýக்கு எதிராக மக்கள் வாக்களித்தனர். இந்தத் தோல்விகளை மறைத்து தனது செல்வாக்கை நிலைநாட்டுவதற்குத்தான் சாவேஸ் இந்த அபத்தங்களைச் செய்துவருவதாகக்கூட பத்திரிகைகள் எழுதுகின்றன.

வெனிசுலாவில் பத்திரிகைகளுக்குச் சுதந்திரமில்லை, நாட்டின் பல பகுதிகளில் அடிப்படை கட்டமைப்பு வசதிகள்கூட செய்து தரப்படவில்லை என்பன போன்ற குற்றச்சாட்டுகள் சாவேஸின் புரட்சியாளர் என்ற பெயருக்குக் களங்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றன. தனது பெயரை மீட்டெடுக்க வேண்டுமானால், அமெரிக்காவுக்கு எதிராகப் போரிடும் எண்ணத்தைக் கைவிட்டுவிட்டு, நாட்டுக்கும் பிராந்தியத்துக்கும் உருப்படியாக ஏதாவது செய்யலாம், கோகோ பயிரிடுவதைத் தவிர!

Posted in America, Autocracy, Belarus, Biz, Bolivia, BP, Brazil, Bush, Business, Capital, Capitalism, Caracas, Castro, Censor, Chavez, Chile, China, Citgo, Communism, Communist, Communist parties, Communist Party of India, Communists, Congress, Conoco, CPI, CPI (M), CPI(M), CPI(ML), CPI-ML, Cuba, Darfur, Democracy, Democratic, Development, Economy, Elections, Employment, Exchange, Exploit, Exploitation, Exxon, ExxonMobil, Fidel, Finance, Foreign, France, Freedom, GDP, Govt, GWB, Hispanic, Hugo, Independence, Indira, Indira Congress, Indira Gandhi, Indra, Indra Congress, Indra Gandi, Inflation, investments, Iran, Jobs, Journal, Korea, Latin America, Left, markets, Marx, Marxism, Marxist, Marxist Communist, Marxist Leninist, Marxists, Media, Minerals, Mobil, Money, MSM, Nationalization, Newspaper, oil, Phillips, Polls, RCTV, Recession, Republic, Resources, Russia, Sudan, Union, USA, Venezuela, workers, Zine | Leave a Comment »

Cuba’s Fidel Castro Administration

Posted by Snapjudge மேல் ஓகஸ்ட் 31, 2006

எளியவர் விடுதலைக்கான தாகம்

ஜோ அருண்

ஓர் ஆட்சியாளர் பாமரரைக் கண்டு கண்ணீர் விடுகிற கனிந்த இதயமும், சமூகத்தின் பொருள்வளத்தைக் கூட்டுகிற அறிவுநுட்பம் நிறைந்த கூர்மையான மூளையும் கொண்டிருக்க வேண்டும்.

கியூபாவின் தலைவர் பிடல் காஸ்ட்ரோ ஒரு புரட்சியாளர். காடுகளில் ஒளிந்திருந்து ஓர் ஆயுதம் தாங்கிய பேரியக்கத்தை வழி நடத்தியவர். இருந்தும் வெறுமனே புரட்சி என்று பொருளாதாரச் சிந்தனையில்லாமல் இருந்துவிடவில்லை. துப்பாக்கி ஏந்திய புரட்சியாளர்கள் கூடாரத்தில் தொழில் முனைவோருடன் பேச்சு நடத்தி கியூபா நாட்டின் தொழில் வளத்தைக் கொஞ்சம் கொஞ்சமாகப் பெருக்கிக் கொண்டார். கியூபாவில் ஒரு தன்னிறைவை உருவாக்கியுள்ளார் என்பதை யாராலும் மறுக்க முடியாது. எது வளர்ச்சி தருமோ அதை மனத்தில் வைத்து தனது ஆயுதப்புரட்சி என்கிற இறுகுதலை ஒருவகையான இளகுதலுக்குட்படுத்தியதால் உண்டான வளர்ச்சி அது. எளியவர்களது விடுதலைக்கான தாகமும், பொருளாதார வளர்ச்சிக்கான ஈடுபாடும் சமவேகத்தில் கொண்டு இயங்கும் அரசு, ஆரோக்கியமான அரசு.

இன்று நாம் பின்பற்றுகிற மக்களாட்சித் தத்துவத்தின் அடிப்படையும் அதுதான். மக்களாட்சி என்கிற ஆட்சிமுறையின் மூலம் கிரேக்கத்திலிருந்து வருகிறது. மூன்றாம் நூற்றாண்டுகளில் கிரேக்க அரசியல் சமூகம் ஒரு பெரும் குழப்பத்தில் சிக்கி நின்றது. பணக்காரர்கள் “ஜிம்னாசியம்’ கட்டிக் கலைகள் வளர்த்தனர். ஆனால் கஞ்சிக்குத் தவித்து கடைநிலையில் ஒரு கணிசமான மக்கள் கூட்டம் வாடிக் கிடந்தது. நாளாவட்டத்தில் தொழிலாளர்கள் எதிர்ப்புக் குரல் கொடுத்தனர். இந்த அரசியல் சிக்கலைத் தீர்த்து வைக்க சொலோன் என்ற தத்துவியலாரை நடுவராக நியமித்தனர். அவர் எந்தச் சார்புமின்றித் தீர்ப்புச் சொல்லி, ஒரு முறையான அரசியலமைப்பை உருவாக்க வேண்டும் என்று முடிவு செய்தார். நிலக்கிழார்களுக்கு சொத்துகளை வைத்துக்கொண்டு நிர்வகிக்க அனுமதி தந்து, ஆனால் அவர்கள் அதிகமான வரி கட்ட வேண்டும் என்ற ஒழுங்கை முன்வைத்தார். அதேநேரத்தில் அரசைத் தேர்ந்தெடுக்கிற பொறுப்பின் பெரும்பகுதியை ஏழைகளுக்குக் கொடுத்தார்.

செல்வந்தர்கள் தங்கள் சொத்தை வளர்த்துக் கொள்கிறபோதே ஏழைகளை அவர்களது வறுமை நிலையிலிருந்து உயர்த்த ஏதாவது ஒரு சமூகப்பொறுப்பை அவர்கள் எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதில் சொலோன் குறிப்பாய் இருந்தார். பணக்காரர்களுக்கு இந்தச் சமூகப்பொறுப்பு இருக்கிறபோது ஒரு நாடு சமநிலை பெறும் என்பதை மனப்பூர்வமாக நம்பினார் அவர். வெறுமனே பாமரர்கள் கத்தியெடுத்து போராட்டத்தில் ஈடுபடுவதால் ஒரு நாட்டில் சமத்துவம் வந்துவிடாது. தங்களை நிர்வகித்து வழிநடத்துகிற தலைவர்களைத் தேர்ந்தெடுக்கிற அதிகாரம் அவர்களுக்கு இருக்கிறபோது, அந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி ஆக்கபூர்வமான வளர்ச்சிக்கு வழி வகுப்பார்கள் என்று நம்பினார். செல்வந்தர்களின் பணம் பெருகிடும் சூழலும், பாமரர்களின் அரசு அமைக்கிற அரசியல் பலம் வலுப்பெற்று இருக்கிற நிலையும் உள்ள ஒரு நடுநிலையை உருவாக்கிக் கொள்வது மக்களாட்சியின் அடிப்படை என்று அடிக்கோடிட்டுக் காண்பித்தார். பணக்காரர்களுக்கு ஏழை மக்களின் முன்னேற்றம் பற்றிய அக்கறையும், பாமரர்களுக்கு அரசு அதிகாரத்தை யாரிடம் கொடுக்க வேண்டும் என்கிற பொறுப்பும் உள்ள சூழல் ஒரு வளமான அரசியலமைப்பு என்று சொலோன் சிந்தித்தார்.

இந்தத் தத்துவம் இன்று செயலாக்கம் பெற வேண்டும். ஓர் அரசு தனது இதயத்தை பாமரர்களுக்காகத் துடிக்க விட வேண்டும். அதேநேரத்தில் அறிவையும், அரசு அதிகாரத்தையும் பயன்படுத்தி தொழில்வளத்தைப் பெருக்கி பொருளாதாரத்தில் பலம் பெற வேண்டும். அந்தப் பொருளாதாரப் பலத்தைக் கொண்டு வறுமை என்கிற பலவீனத்தைக் களைய வேண்டும். மாடி வீடுகளை மட்டும் வளர விட்டுவிட்டு குடிசைகளைக் கண்டுகொள்ளாத அரசியல் நீதியற்ற அரசியல். தொழில்வளப்படுத்துதல் என்பது ஏழைகளின் முன்னேற்றத்திற்கு எந்தவிதத்திலும் தடையாக அமைந்துவிடக் கூடாது. அதேநேரத்தில் “அன்னிய முதலீடே இருக்கக் கூடாது, தொழிலதிபர்களுக்கு எதிராகப் போர் நடத்திக் கொண்டே இருப்பதுதான் மக்கள் மைய அரசு’ என்றால் அது ஒரு முதிர்ச்சியற்ற சிந்தனை. இதனால் நாம் வளர முடியாது. ஏழ்மையை மகிமைப்படுத்தி (ஞ்ப்ர்ழ்ண்ச்ண்ஸ்ரீஹற்ண்ர்ய் ர்ச் ல்ர்ஸ்ங்ழ்ற்ஹ்) ஏழைகளை ஏழைகளாகவே வைத்து, மேடைப்பேச்சிலும் தத்துவப் புலம்பலிலும் நாட்டைச் சிறைப்படுத்த வேண்டி வரும். தொழிலைப் பெருக்குவது, ஏழ்மையை ஒழிப்பது என்ற இரண்டு அடிப்படைச் செயல்பாட்டுத் தளங்களை ஒவ்வோர் அரசும் கொண்டிருக்க வேண்டும்.

மக்களின் துயர் கண்டு கசிந்துருகி நிறைய இலவசமாகப் பொருளையும் பதவியில் ஒதுக்கீட்டையும் கொடுத்து மக்களிடம் புகழ் பெறுவது என்பது ஒரு குறுகிய சிந்தனை. இன்றைக்கு வேண்டுமானால் அது உதவலாம். ஆனால் தொலைநோக்குப் பார்வையில் சிந்தித்து, தாற்காலிகச் செயல்பாடுகளை விடுத்து நிறைவான நீண்டகாலச் செயல்பாடுகளில் இறங்க வேண்டும். மக்களாட்சியில் ஒரு சாபக்கேடு என்னவென்றால் தேர்தலின்போது குடிமக்களைக் கண்டு கொள்கிற அரசியல், ஆட்சியில் அமர்ந்துவிட்ட பிறகு விலகிப் போய் விடுகிறது. வாக்குகள் என்கிற முட்டை மட்டும் போடும் கோழிகளாகக் குடிமக்களை ஆக்கி விடுகிற அரசியல் எஞ்சி நிற்கிறது. முறையான அரசு என்பது ஏழை எளிய மக்களை இதயத்துக்கு நெருக்கமாக வைத்துக்கொண்டு, தொழிலதிபர்களையும், பணக்காரர்களையும் முடுக்கிவிட்டு ஏழ்மை நிலை அகற்றப் பாடுபட வைக்க வேண்டும்.

இது அரசு மட்டும் செய்கிற செயலாக இருந்துவிடக் கூடாது. அரசாங்கத்தைத் தேர்தல் நேரத்தில் பாமரர்கள் உருவாக்குகிறார்கள் என்றால் அந்தத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிற அரசாங்கத்தை முடுக்கிவிடுவது தொழில் நிறுவனங்களும் (இர்ழ்ல்ர்ழ்ஹற்ங்ள்) தொழில் அதிபர்களும்! அரசுக்கு எப்படி ஏழைகள் மீது அக்கறையும் கரிசனையும் இருக்க வேண்டுமோ, அதே அளவுக்கு தொழில் நிறுவனங்களுக்கும் அவற்றின் அதிபர்களுக்கும் இருக்க வேண்டும்.

ஒரு தொழில் நிறுவனம் தொடங்க அரசு அனுமதி கொடுக்கிறபோது அந்த நிறுவனம் இயங்குகிற பகுதியில் உள்ள ஏழை மக்களுக்கு அந்த நிறுவனம் என்ன செய்யப் போகிறது என்பதைத் தெரிந்து கொள்ளாமல் அரசு அனுமதியும் அங்கீகாரமும் தரக்கூடாது. அனுமதி வாங்கித் தொடங்கிய பிறகு உறுதியளித்ததுபோல் வறுமை ஒழிப்புச் செயல்பாடுகளில் ஈடுபடவில்லையென்றால் அந்த நிறுவனத்தின் அங்கீகாரத்தைத் திரும்பப் பெற்றிட வேண்டும். கணினி நிறுவனங்கள் அதிகமாக உருவாகிக் கொண்டிருக்கிற இதே நேரத்தில் இந்த நிறுவனங்களின் லாபத்தில் பத்து சதவீதத்தையாவது அருகில் உள்ள வறியவர்களின் குடும்பச்சூழல் முன்னேறுவதற்குப் பயன்படுத்த வேண்டும். அந்தக் குடும்பங்களில் உள்ள குழந்தைகளின் படிப்புக்கும் அவர்களது வேலைவாய்ப்புக்கும் உதவ வேண்டும். ஒவ்வொரு நிறுவனமும் ஒரு குடிசைப்பகுதியையோ, ஒரு கிராமத்தையோ தத்து எடுத்துக் கொள்ள வேண்டும். நிகர லாபத்தின் கணிசமான பகுதியை ஏழைகளை, அவர்களது வறுமை நிலையிலிருந்து மேலே உயர்த்தப் பயன்படுத்த வேண்டும். கோடிக்கோடியாக லாபம் ஈட்டும் கணினி மென்பொருள் தயாரிக்கும் நிறுவனங்கள் உள்ள சென்னையில் சாக்கடை நாற்றத்தில் குடிசைகள் இருப்பது அசிங்கமாகத் தெரியவில்லையா? இதேபோன்று இடஒதுக்கீட்டில் படித்த ஒரு பொறியாளர், ஒரு மருத்துவர் வேலையில் அமர்ந்த பிறகு குறைந்தபட்சம் மூன்று மாணவர்களை அவர் உயர்ந்திருக்கிற நிலைக்குக் கொண்டு வருகிற பொறுப்பு இருக்கிறது.

பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் உள்ள இடைவெளி இதனால் குறையும். ஒருவர் வளர்கிறபோதே தன்னோடு பத்துப்பேரையும் சேர்த்துக் கொண்டு வளர்வது மனிதத்தின் அடிப்படைத் தர்மம். ஒரு நாடு வளர்கிறதென்றால் எத்தனை ஏழைக்குடும்பங்கள் வசதி பெற்று இருக்கிறார்கள் என்று பார்ப்பதுதான் முறையான வளர்ச்சியாகும். ஏழைகளுக்கும் பணக்காரருக்கும் இருக்கும் பொருளாதார இடைவெளியை அழித்திடும் அரசே உண்மையான அரசு.

———————————————————————————————

அமெரிக்கா கொடுங்கோல் நாடு: காஸ்ட்ரோ

ஹவானா, ஜூலை 10: அமெரிக்காவை ஒரு எதேச்சதிகார, கொடுங்கோல் நாடு என வர்ணித்துள்ளார் கியூபா அதிபர் ஃபிடல் காஸ்ட்ரோ.

அவர் எழுதி ஞாயிற்றுக்கிழமை வெளியான கட்டுரை ஒன்றில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

1959-ல் இருந்து தனக்கு எதிராக நடந்த கொலை முயற்சிகளை இக் கட்டுரையில் அவர் விளக்கியுள்ளார். 1776-ல் அறிவிக்கப்பட்ட அமெரிக்காவின் சுதந்திரத்துக்கு தலை வணங்குவதாகக் கூறியிருக்கும் அவர், அதுவே அமெரிக்கா உலகின் எதேச்சதிகார நாடாக மாறுவதற்கு காரணமாக அமைந்துவிட்டது எனக் குறை கூறியிருக்கிறார்.

சிஐஏ ஆவணங்களை மேற்கோள்காட்டியுள்ள அவர், கியூபாவின் அரசு அதிகாரி ஒருவரைக் கொண்டு தனக்கு விஷம் கொடுத்துக் கொல்ல முயன்ற அமெரிக்காவின் செயலை வஞ்சகம், ஒழுக்கக் கேடான செயல் என்று கண்டித்துள்ளார்.

1959-ல் கியூபாவின் சர்வாதிகாரி பாடிஸ்டாவுக்கு எதிராகப் புரட்சி செய்தபோது, காடுகளிலும், மலைகளிலும் மறைந்திருந்தை அவர் நினைவு கூர்ந்துள்ளார். அதிர்ஷ்டமும், அனைத்து விஷயங்களிலும் கவனமாகச் செயல்படும் குணமுமே தன்னை கொலை முயற்சிகளில் இருந்தும், ராணுவத்திடம் பிடிபடுவதில் இருந்தும் தப்பிக்க உதவின என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறு எண்ணிலடங்கா கொலை முயற்சிகளில் இருந்து தப்பித்ததாக அவர் எழுதியுள்ளார்.

எனினும் இந்த விவரங்களை, கடந்த மாதம் வெளியான சிஐஏ ஆவணங்களில் அடிப்படையில் கூறுகிறாரா அல்லது பல ஆண்டுகளுக்கு முன்பே கிடைத்த தகவலின் அடிப்படையில் தெரிவிக்கிறாரா என்பது தெளிவாகத் தெரியவில்லை.

Posted in Administration, America, Arun, Castro, civics, Communism, Cuba, Fidel Castro, Havana, Marxism, Politics, Poverty, pub ad, public admin, Society, Tamil, Upliftment, US, USA | Leave a Comment »