இந்தியாவில் வைர விற்பனையில் கேரளாவுக்கு 2-வது இடம்
திருவனந்தபுரம், பிப். 2-
கேரளாவில் தங்கம் மட்டுமல்ல வைர விற்பனையும் அதிகரித்து வருகிறது. இந்தி யாவில் வைர விற்பனையில் கேரளாவிற்கு 2-வது இடம் கிடைத்துள்ளது. கடந்த 2 வருடங்களில் கேரளாவில் வைர விற்பனை 10 முதல் 15 சதவீதம் வரை அதிகரித்துள்ளதாக ஒரு வைர வியாபாரி கூறுகிறார்.
அதே சமயம் தங்கவிற்பனை 6 முதல் 8 சதவீதம் தான் உள்ளது. அதாவது வைர விற்பனை தங்கத்தைவிட இருமடங்காக உள்ளது. இப்போதெல்லாம் கேரளாவில் புதுப்பெண்ணி டம் வைரக்கம்மல், வைர மூக்குத்தி, வைர மோதிரம், போதாதற்கு வைர நெக்லசும் அணிந்து காட்சி தருவது சர்வசாதாரணமாக உள்ளது.
அந்த காலத்தில் எல்லாம் ஒரு மூக்கில் வைர மூக்குத்தி அணிவதே பெரிய ஸ்டேட்டஸ் ஆக கருதுவார்கள். இப்போதோ புதுப்பெண்களை வைரத் தாலேயே அலங்கரிக்கிறார்கள். இதற்கு ஏற்ப நகைக்கடைகளில் இப்போது வைரமும் விற் கிறார்கள். வைரங்களுக்கு என கவுண்டர்களும் வைத் துள்ளார்கள்.
பழைய வைரக்கம்மல் கொண்டு வந்தால் புதிய டிசைனில் ரீசெட் செய்து கொடுக்கிறார்கள். ஒன்றரை கேரட் நெக்லசுக்கு அதிகபட்சமாக ஒன்றரை லட்சம் ரூபாய் கொடுத்தால் கிடைக்கும் அநேகமாக எல்லா வைர நகைகளுக்கும் நகை கடைகளில் `பை-போக்’ கேரண்டி கொடுக்கிறார்கள். எனவே வைர நகை வாங்கு வதை ஒரு முதலீடாக கருதி வாங்குகிறவர்களும் இருக்கிறார்கள்.
பொதுவாக ஏப்ரல், மே மாதங்கள் திருமண சீசனாகவும் ஜுன், ஜுலை மற்றும் டிசம்பர் ஜனவரி மாதங்கள் என்.ஆர்.ஐ. சீசனாகவும் உள்ளது. இந்த மாதங்களில் தான் என்.ஆர்.ஐ. எனப்படும் வெளிநாட்டில் வசிக்கும் கேரள மக்கள் விடுமுறைக்காக கேரளா வந்து செல்லும் காலமாகும். வெளிநாடுகளில் வைரத்தின் விலை அதிகமாக இருப்பதால் வெளிநாடுகளில் இங்கு வந்து திரும்பி செல்லும் மலையாள பெண்களும் வைர நகைகள் வாங்குவதில் ஆர்வம் காட்டுகிறார்கள்.
இந்தியாதான் நிறைய வைரம் கட் செய்து ஏற்றுமதி செய்யும் நாடாக உள்ளது. திருமண நிச்சயதார்த்தத்தின்போது வைர மோதிரம் அணிவது இப்போது ஒரு பேஷனாகவே ஆகிவிட்டது. அந்த வைரத்தை கூட பிளாட்டினத்தில் செய்து அணிவிப்பது வழக்கமாகி வருகிறது. ஒரு கிராம் பிளாட்டினமே ரூ.2000 ஆகிறது.