Posted by Snapjudge மேல் மே 15, 2007
இந்தியாவில் பொருளாதார, ஐ.டி. தொழில் வளர்ச்சியால் அமெரிக்காவில் இருந்து திரும்பிய 60 ஆயிரம் பேர்
நியூயார்க், மே 15: பொருளாதார மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை வளர்ச்சியால் அமெரிக்காவில் இருந்து சுமார் 60 ஆயிரம் பேர் அண்மையில் இந்தியா திரும்பியுள்ளதாக தெரிய வந்துள்ளது.
இருப்பினும் அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் நிறைந்த சிலிக்கான்வேலி எந்த வகையிலும் பாதிக்கப்படவில்லை, தாயகம் திரும்புவோர் இந்தியாவில் சொந்தமாக தொழில் தொடங்குவதாகவும் அமெரிக்க ஊடகம் தெரிவித்துள்ளது.
இது குறித்து தாயகம் திரும்பியோருக்கான அமைப்பின் உறுப்பினர் மிஸ்ரா கூறுகையில், 2003-ம் ஆண்டு இந்தியா திரும்பியோரின் எண்ணிக்கை 15 ஆயிரமாக இருந்தது, அதன்பின்னர் 4 ஆண்டுகளில் சுமார் 40 ஆயிரம் பேர் தாயகம் திரும்பியுள்ளனர் என்றார்.
இந்தியாவில் அன்னிய முதலீடு அதிகரித்துக் கொண்டே இருப்பதால் சிலிக்கான்வேலியில் உள்ள ஏராளமான நிறுவனங்கள் இந்தியாவின் மீது தங்களது கவனத்தை திருப்பியுள்ளன என்றார்.
சிலிக்கான்வேலியில் “கிளியர்ஸ்டோன்’ என்ற அவரது நிறுவனத்திற்கு மும்பையிலும் கிளை உள்ளது.
இதனிடையே, அன்னா லீ மற்றும் பெர்கிலி ஆகிய இரு பல்கலைக்கழக மாணவர்கள் மேற்கொண்ட ஆய்வில், சிலிக்கான்வேலியில் உள்ள 15 சதவீத நிறுவனங்களை ஆரம்பித்தவர்கள் இந்தியர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் சிலிக்கான் வேலியில் அறிவியல் மற்றும் பொறியியல் பணிகளில் ஈடுபட்டுள்ளவர்களில் 53 சதவீதம் பேர் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள்.
கடந்த 10 ஆண்டுகளில் அமெரிக்காவில் ஆரம்பிக்கப்பட்ட அறிவியல் மற்றும் பொறியியல் நிறுவனங்களில் 25 சதவீதத்தை ஆரம்பித்தவர்கள் இந்தியர்கள் என்றும் அம் மாணவர்கள் தங்களது ஆய்வறிக்கையில் கூறியுள்ளனர்.
இந்தியர்களால் ஆரம்பிக்கப்பட்ட நிறுவனங்கள் சுமார் ரூ. 34440 கோடி அளவுக்கு வர்த்தகம் செய்துள்ளன. 4 லட்சத்து 50 ஆயிரம் வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளன என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.
இதனிடையே “மெர்குரி நியூஸ்’ வெளியிட்டுள்ள செய்தியில், இந்தியாவில் கிளைகள் திறக்காமல் அமெரிக்காவில் எந்த பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனமும் செயல்பட முடியாது என்று குறிப்பிட்டுள்ளது.
மேலும், 2015-ம் ஆண்டு வரை அமெரிக்காவின் அவுட்சோர்சிங் பெறுவதில் இந்தியா முதலிடத்தில் இருக்கும் என்றும் கூறியுள்ளது.
அதற்கு பல்வேறு காரணங்களையும் தெரிவித்துள்ளது. அதாவது இந்திய மக்கள் தொகையில் 50 சதவீதத்தினர் 25 வயதிற்குள்பட்டவர்கள். குறைந்த ஊதியத்தில் திறமையாகப் பணியாற்றக் கூடியவர்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.
“இன்டல் இந்தியா’ நிறுவனத்தின் அமர்பாபு என்பவர் கூறுகையில், ஆராய்ச்சி -வளர்ச்சிப் பணி மற்றும் தகவல் தொழில்நுட்பப் பயன்பாட்டில் முதலிடத்தில் உள்ளதால் இந்தியச் சந்தையின் எதிர்காலம் சிறப்பாக உள்ளது என்றார்.
Posted in Biotech, Boom, Bust, Capital, Clearstone, Commerce, Economy, Employment, Engineering, Finance, Foreign, GC, Green Card, H1-b, Immigration, Information, InfoTech, IT, Jobs, L1, migration, NRI, r2i, Research, Return, Science, Scientific, Silicon Valley, Survey, Tech, Technology, US, USA, VC, Venture, Visa | Leave a Comment »
Posted by Snapjudge மேல் மே 10, 2007
உயரும் நில மதிப்பு
தகவல் தொழில்நுட்பப் பூங்காக்கள் அதிகம் வருவதால் நன்மைகள் அதிகம் உள்ளன. நிறைய இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புக் கிடைக்கிறது. ஆயிரக்கணக்கில் ஊதியம் கிடைக்கிறது. இருப்பினும் சில இடையூறுகளும் உடன் வருகின்றன.
தகவல் தொழில்நுட்பம் சார்ந்த நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியதும் அப் பகுதியில் நிலத்தின் விலை பல மடங்கு உயர்ந்துவிடுவது (அல்லது உயர்த்தப்படுகிறது?) இயல்பான நிகழ்வாகிவிட்டது. சாதாரண தொழிற்சாலை வந்தாலும் நிலத்தின் மதிப்பு உயரும்தான். ஆனால் தகவல் தொழில்நுட்பத் துறை என்றால் நிலத்தின் மதிப்பு பல மடங்காக உயர்ந்து விடுகிறது.
சென்னை, கோவை, ஸ்ரீபெரும்புதூர் ஆகிய இடங்களில் திடீரென நிலத்தின் விலை பல கோடி ரூபாய்க்கு உயர்ந்துள்ளதற்கு இதுதான் முக்கியக் காரணம்.
இதனால், சென்னை, பெங்களூர், மும்பை போன்ற பெருநகரங்களில் காலிமனைகளை வளைத்துப்போடுவது அல்லது குறைந்த விலைக்கு மிரட்டி வாங்குவது, போலி ஆவணங்கள் தயாரித்தல் ஆகியன அதிகரித்துள்ளன. அரசுக்குச் சொந்தமான கட்டடங்கள், கூட்டுறவுத் துறைக்குச் சொந்தமான இடங்களை விற்கும் நிலையை உருவாக்கி, அதை கூட்டணி அமைத்து ஏலத்தில் எடுக்கும் நிகழ்வுகளும் நடக்கின்றன.
சென்னை நகரில் இதுபோன்ற ரியல் எஸ்டேட் முறைகேடுகள் பற்றிய புகார்கள் ஆயிரத்துக்கும் மேலாக உள்ளன. தமிழகத்தின் பிற நகரங்களிலும் இதேபோன்ற முறைகேடுகள் வேகமாக நடைபெற்று வருவது கவலை அளிப்பதாக உள்ளது.
இதற்குப் பின்புலமாகவும், பலமான ஆதரவாகவும் இருப்பவர்கள் உள்ளூர் அரசியல்வாதிகள்தான். இப்படி வாங்கப்படும் மனை, நிலம் ஆகியவற்றின் “உயர்த்தப்பட்ட’ மதிப்பு இவர்களாலேயே நிர்ணயிக்கப்படுகிறது.
சென்னை, பெங்களூர், மும்பை போன்ற பெருநகரங்களில் இத்தகைய ரியல் எஸ்டேட் முறைகேடுகளை விசாரிக்க காவல்துறையில் தனிப்பிரிவுகள் உள்ளன. என்றாலும், யாரும் தண்டனை பெறவில்லை. இந்த முறைகேடுகளும் கட்டுப்படுத்தப்படவில்லை.
இதில் அரசு பாரபட்சமற்ற நடவடிக்கை மேற்கொண்டால் முறைகேடுகளைத் தடுக்கவும், நிலத்தின் போலியான உயர் மதிப்பீட்டைக் கட்டுப்படுத்தவும் முடியும். இல்லையெனில், நகரின் மையப்பகுதிகளில் வசிக்கும் “எதிர்ப்பு சக்தி’ இல்லாத சாதாரண மக்கள் உயிருக்குப் பயந்து தங்களுக்குக் கொடுக்கப்படும் பணத்தைப் பெற்றுக்கொண்டு வெளியேறும் நிகழ்வுகள் தவிர்க்க முடியாததாக மாறும்.
தகவல் தொழில்நுட்பத் துறை சார்ந்த நிறுவனங்கள் நினைத்தால் இத்தகைய நிலமதிப்பு உயர்வைத் தடுக்க முடியும். இந்நிறுவனங்களைக் காட்டிலும், அதில் பணிபுரியும் தகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் மனது வைத்தால் அந்தந்த நகரின் அடிப்படை வாழ்க்கைச் செலவு உயர்வதைத் தடுக்க முடியும்.
தகவல் தொழில்நுட்பத் துறையில் பணியாற்றுவோர் மாதம்தோறும் குறைந்தபட்சம் ரூ.25 ஆயிரம் ஊதியம் பெறுகின்றனர். இவர்களது செலவிடும் திறன் சாதாரண மக்களைக் காட்டிலும் மிக அதிகம்.
ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள வீட்டுக்கு இரண்டாயிரம் ரூபாய் வாடகை கொடுப்பது அவருக்குச் சிரமமில்லை. ஆனால் அவரை அறியாமலேயே அப்பகுதியின் வாடகையை உயர்த்துகிறார். அவரால் குறைந்தபட்ச தூரத்துக்கு ஆட்டோவில் செல்ல ரூ.30-ஐ வீசிவிட முடியும். அப்பகுதியில் ஆட்டோ கட்டணம் உயர அவர் காரணமாகிறார். அதைவிட மோசமாக. அவரால் ரூ.10 லட்சம் பெறுமானமுள்ள ஒரு குடியிருப்பை ரூ.15 லட்சத்துக்குக் கண்ணை மூடிக்கொண்டு வாங்க முடியும். ஆனால், சம்பளத்தைத் தவிர “வேறு வருமானம்’ எதையும் பார்க்க முடியாத நடுத்தர மக்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் விலை கூடுதல் என்றாலும் அது பெரும் சுமை. சொந்த வீடு எனும் கனவை மண்ணுக்குள் அழுத்துகிற சுமை.
Posted in Apartments, Appreciation, Asset, Bangalore, Bid, Biotech, Boom, Bust, Chennai, Compensation, Construction, CRR, Deflation, Delhi, Discrepancy, Economy, Employment, Estate, Exports, Finance, Flats, Hyderabad, India, Industry, Inflation, InfoTech, Interest, Investment, IT, Jobs, Labor, Land, Madras, Manufacturing, Plots, Poor, Property, Real Estate, Recession, REIT, Rich, Salary, Sale, SEZ, Stagflation, Telecom, workers | Leave a Comment »
Posted by Snapjudge மேல் மார்ச் 28, 2007
நடப்பு ஆண்டில் இந்திய பொருளாதார வளர்ச்சி 8 சதவீதமாக குறையும்: ஆசிய வளர்ச்சி வங்கி தகவல்
டோக்கியோ, மார்ச் 28: பணவீக்கம் அதிகரிப்பு மற்றும் வேளாண்துறை வளர்ச்சியில் தேக்கம் காரணமாக, நடப்பு ஆண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 8 சதவீதமாகக் குறையும் என ஆசிய வளர்ச்சி வங்கி கூறியுள்ளது.
2008-ல் அது 8.3 சதவீதமாக இருக்கும் எனவும் ஆண்டறிக்கையில் அவ் வங்கி கூறியுள்ளது. இது தொடர்பாக அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:
2006-ல் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி வலுவாக இருந்தது. அதிக அளவு மூலதன வரத்துக்கும், பணவீக்கத்துக்கும் இட்டுச் சென்றது. உற்பத்தி மற்றும் கட்டுமானத்துறை வளர்ச்சி, (வங்கிகள், நிதி நிறுவனங்கள் வழங்கும்) கடனுக்கான தேவையையும் அதிகரித்தது. இது பணப்புழக்கத்தை கட்டுப்படுத்தும் முயற்சிகளைச் சிக்கலாக்கியது. அதிகரித்து வரும் பணவீக்கத்துக்கு உணவுப் பொருள்களின் விலை உயர்வு முக்கிய காரணமாகும். இந்நிலையில் வேளாண்துறை வளர்ச்சியில் தேக்கம் அமைப்பு ரீதியான சவாலாக உருவெடுத்துள்ளது. வேளாண்துறையில் ஏற்பட்டுள்ள தேக்கம் காரணமாக நிலங்களை தொழில்துறைக்கு விற்கும் போக்கு அதிகரிக்கிறது. இது தொழிலாளர்களின் இடப்பெயர்ச்சி மற்றும் சமூகக் கொந்தளிப்புகளுக்கு இட்டுச் செல்கிறது.
இந்தியப் பொருளாதாரத்தில் கட்டுமானத்துறை முக்கிய பங்கு வகிக்கிறது. இத்துறையில் ஏற்பட்டுள்ள கொழிப்பு, 2005-ல் மொத்த உள்நாட்டு உற்பத்தியில், மொத்த உள்நாட்டு முதலீட்டை 33.8 சதவீதமாக உயர்த்தியது. இத்துறை தொடர்ந்து வளர்ச்சியடைந்து வருகிறது. இதற்கு ஈடாக வங்கிக் கடன் வழங்கும் வீதமும் வளர்ச்சியடைந்தது. இதனால் அதிகரித்த பணப்புழக்கம்தான் தற்போது சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. இறக்குமதிப் பொருள்களுக்கு சுங்கத் தீர்வைகளைக் குறைப்பது உள்ளிட்ட நடவடிக்கைகள் பெரும் பலனைத் தரவில்லை. எனவே செலாவணியைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை ரிசர்வ் வங்கி மேற்கொள்ள வேண்டும்.
இப்படிச் செய்யும்போது, உற்பத்தித் திறன்களை அதிகரிக்கத் தேவையான கடன் வசதி குறைந்துவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கு இது மிகவும் அவசியம். உற்பத்தித் திறனை விரிவுபடுத்துவது நீண்டகால அடிப்படையில் வளர்ச்சியை அதிகப்படுத்துவதற்கு இன்றியமையாதது என ஆசிய வளர்ச்சி வங்கி கூறியுள்ளது.
=================================================
ரஷியாவுக்கு 2010-ல் ரூ.46,000 கோடி ஜவுளி ஏற்றுமதி செய்ய இலக்கு
மாஸ்கோ, ஏப். 2: ரஷிய நாட்டுக்கு ரூ.46,000 கோடி ஜவுளி ஏற்றுமதி செய்ய இந்திய அரசு இலக்கு நிர்ணயித்திருக்கிறது.
இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகத்தை அதிகப்படுத்தும் முயற்சியின் ஓர் அங்கமே 2010-ம் ஆண்டில் ஜவுளி ஏற்றுமதியில் ரூ.46,000 கோடி இலக்கை எட்டுவது.
ரஷிய ஜவுளித்துறை அதிகாரிகளுடன் பேச இந்திய ஜவுளித்துறை அமைச்சர் சங்கர் சிங் வகேலா இதற்காக மாஸ்கோ வந்திருக்கிறார்.
ரஷிய ஜவுளித்துறை நிபுணர்கள், இறக்குமதியாளர்கள், ஆடைத் தொழில் முன்னோடிகள், இந்திய வர்த்தக சமூகத்தவர் ஆகிய அனைத்து தரப்பு பிரதிநிதிகளையும் அவர் சந்தித்து இது தொடர்பாக விரிவான விவாதங்களை நடத்துவார்.
சோவியத் யூனியன் என்ற நாடு இருந்தபோது இந்தியாவிலிருந்துதான் அதிக ஜவுளி கொள்முதல் நடந்தது. அந்நாடு சிதறுண்டதாலும், உலகமயம் காரணமாகவும் இந்தியாவிலிருந்து ஜவுளி கொள்முதல் செய்வது குறைந்தது. இந்தியாவின் இடத்தை இப்போது சீனா பிடித்துக் கொண்டிருக்கிறது.
இந்திய அரசின் அரவணைப்பு இல்லாவிட்டாலும் இந்திய ஜவுளி ஏற்றுமதியாளர்கள் தங்களுடைய சுய முயற்சியில் ரஷியாவுக்கு கணிசமான அளவுக்கு இப்போதும் ஏற்றுமதி செய்கின்றனர். இந்திய அரசின் கட்டுப்பாடுகளைத் தளர்த்தி, சலுகைகளை வழங்கினால் ரஷிய மக்களின் விருப்பத்துக்கேற்ற ஜவுளி வகைகளைத் தயாரித்துத் தருவது பெரிய காரியம் அல்ல என்று இந்திய வர்த்தக சமூகத்தவர் தெரிவிக்கின்றனர்.
அவர்களுடைய யோசனைகள் ஏற்கப்படுமா, இந்திய ஜவுளித்துறைக்குத் தேவைப்படும் மீட்சி, ரஷியா மூலம் கிடைக்குமா என்று பார்க்க வேண்டும்.
Posted in ADB, Agriculuture, Asian Development Bank, bank, Banking, Boom, Business, Bust, Clothes, Commerce, Commodities, Commodity, Deflation, Demand, Dress, Economy, Exports, Fabric, Finance, fiscal, Garments, GDP, Goal, Government, Growth, home buyers, Imports, Inflation, infrastructure, Interest, investors, Knits, Knitwear, Manufacturing, markets, Monetary, Offshoring, Outlook, Outsourcing, Prediction, Projection, Rates, RBI, Recession, Russia, service, Stagflation, Target, Textiles | Leave a Comment »