Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Britain’ Category

Kenya’s elections: A very African coup – Twilight robbery, daylight murder; After a stolen election, ethnic cleansing

Posted by Snapjudge மேல் ஜனவரி 4, 2008

திருடிய வெற்றியும் தொலைந்துபோன அமைதியும்

எம். மணிகண்டன்

இந்தியப் பெருங்கடலையொட்டிய இயற்கை எழில் மிக்க கடற்கரைகள், வண்ண மயமான விளையாட்டு மைதானங்கள் ஆகியவைதான் கென்யாவைப் பற்றி வெளிநாட்டினருக்கு அதிகமாகத் தெரிந்தவை.

Economistரத்த ஆறுகள் ஓடும் பெரும்பாலான ஆப்பிரிக்க நாடுகளிலிருந்து சற்று மாறுபட்டது கென்யா. இந்தியாவுக்கு ஒரு நேருவைப் போல, கென்யாவுக்கு ஒரு கென்யாட்டா கிடைத்தார். சாகும் வரை அவர் அதிபராகவும் இருந்தார்.

கென்யாவின் விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டு பல ஆண்டுகள் சிறையிலேயே கழித்தவர் என்பதில் நெல்சன் மண்டேலாவுடன் ஒப்பிடத் தகுந்தவர் கென்யாட்டா. வளர்ச்சியை நோக்கிய உள்கட்டமைப்பு, கருணைமிக்க நிலச் சீர்திருத்தம், கரிசனம் கொண்ட பொருளாதாரச் சீர்திருத்தம் என ஜோமோ கென்யாட்டாவின் பணிகள் அவருக்குப் பெரும்புகழைப் பெற்றுத் தந்தன.

சூடான் மற்றும் சோமாலிய அமைதி முயற்சிகளில் ஈடுபடும் அளவுக்கு கென்யாவை உயர்த்தியது கென்யாட்டாதான் என்பது ஏற்றுக் கொள்ளத்தக்க உண்மை. இவ்வளவு பெருமைக்குரியவரான கென்யாட்டா ஒரு சாத்தானையும் விட்டுச் சென்றார். அதுதான் இனப் பாகுபாடு. உலக நாகரிகத்தின் முன்னோடிகளில் ஒன்றாகக் கருதப்படும் ஒரு நாடு, ஆப்பிரிக்க நாடுகளுக்கு வழிகாட்டியாகத் திகழ வேண்டிய ஒரு நாடு, மிக மோசமான கலவர பூமியாக மாறிக் கொண்டிருப்பது இனக் கலவரங்களால்தான்.

கென்யாவில் 40-க்கும் அதிகமான பழங்குடி இனத்தவர்கள் வசித்து வந்தாலும், கிக்கூயூ இனத்தவரின் எண்ணிக்கை மற்றவர்களைக் காட்டிலும் அதிகம். 1960-களில் சுதந்திரம் அடைந்த பிறகு இதுவரை மூன்றே அதிபர்களைத்தான் கென்யா கண்டிருக்கிறது. அவர்களில் இருவர் கிக்கூயூ இனத்தவர். கென்யாட்டாவும், தற்போதைய அதிபர் கிபாகியும்தான் அந்த இருவர். நீண்டகாலமாகவே பொருளாதாரத்தில் உயர்ந்த நிலையில் இருப்பதும், நாட்டின் முக்கிய விவசாய நிலங்களை வைத்திருப்பதும், பெரிய பதவிகளைக் கைப்பற்றுவதும் கிக்கூயூக்கள்தான்.

தூய்மையான நிர்வாகம் என்ற கோஷத்தோடு, கடந்த 2002 தேர்தலில் வென்றவர்தான் கிபாகி. இவரது அதிகார ஆக்கிரமிப்புதான் இப்போது பிரச்னையாகியிருக்கிறது. அண்மையில் நடந்த அதிபர் தேர்தலில் மிகக் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் கிபாகி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டதும் வன்முறை வெடித்திருக்கிறது. முன் எப்போதும் இல்லாத அளவுக்கு நாடு முழுவதும் பதற்றம் நிறைந்திருக்கிறது.

அதிபர் தேர்தலில் யார் வெற்றி பெற்றார் என்பது தமக்கு உண்மையிலேயே தெரியாது எனவும், ஆளுங் கட்சியினரின் நெருக்கடி காரணமாகவே கிபாகி வெற்றி பெற்றதாக அறிவித்ததாகவும் தலைமைத் தேர்தல் ஆணையர் கூறியதாக பத்திரிகைகள் செய்தி வெளியிட்டிருக்கின்றன. கிபாகியை எதிர்த்துப் போட்டியிட்ட லூ இனத்தைச் சேர்ந்த ஓடிங்கோ தேர்தல் முடிவுகளை ஏற்றுக் கொள்ளவில்லை.

கென்யாவில் கட்சியைப் பார்த்து யாரும் வாக்களிப்பதில்லை. இனம்தான் தேர்தலில் முக்கியப் பங்கு வகிக்கிறது. நான் உங்கள் இனத்தைச் சேர்ந்தவன்; நீங்கள் தாராளமாக என்னை நம்பலாம் என நேரடியாகவே வேட்பாளர்கள் பிரசாரத்தில் ஈடுபடுவதுதான் தேர்தல் வெற்றிக்கான சூத்திரம். இந்தப் பின்னணியில், ஏற்கெனவே கிக்கூயூ இனத்தவரால் தாங்கள் ஒடுக்கப்பட்டதாகக் கருதும் மற்ற இனத்தவர் இத் தேர்தல் முடிவுகளை எதிர்த்து வன்முறையில் இறங்கிவிட்டனர். எங்கெல்லாம் கிக்கூயூ இனத்தவர் இருக்கின்றனரோ அங்கெல்லாம் படுகொலைகள் நடந்தவண்ணம் உள்ளன.

கென்ய வன்முறைகளுக்கு அந்நாட்டுக்கு நிதியுதவி செய்யும் பிரிட்டனும் அமெரிக்காவும் கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றன. ஆனால் எந்த நாட்டில் சண்டை நடந்தாலும் ஆயுதங்கள் விற்பனையாகும் என்ற எண்ணத்தில் மேலை நாடுகளுக்கு உள்ளூர மகிழ்ச்சிதான்.

கிழக்கு ஆப்பிரிக்காவில் எஞ்சியிருக்கும் ஒரேயொரு நாட்டையும் தங்களது வாடிக்கையாளர் பட்டியலில் சேர்த்துக் கொள்வதற்குத்தான் மேலை நாடுகள் உண்மையிலேயே முயன்று வருகின்றன. அதனால் போர் ஏற்படும்வரை காத்திருந்து ஆயுதங்களை விற்பனை செய்வதுதான் அவர்களின் எண்ணம். எண்ணெய் வளங்களில் முதலீடு செய்திருக்கும் சீனாவும் இப்போதைக்கு உதவிக்கு வருவதுபோல் தெரியவில்லை. எனவே, எந்த நாடு உதவிக்கு வந்தாலும் அது லாப நோக்கத்துடன்தான் இருக்கும்.

ஆக, கென்யா இன்னொரு உகாண்டாவாக மாறாமல் தடுக்கும் பொறுப்பு கிபாகிக்கும் ஓடிங்கோவுக்கும்தான் உள்ளது. 300-க்கும் அதிகமானோர் பலியான பின்னரும் அமைதி முயற்சி எதையும் மேற்கொள்ளாத அதிபர் கிபாகி மீது ஆப்பிரிக்க மக்களின் மொத்தக் கோபமும் திரும்பியிருக்கிறது.

பதவியைத் துறந்துவிட்டு இடைக்கால அரசை நியமித்து புதிதாகத் தேர்தல் நடத்துவது ஒன்றுதான் இப்போதைக்கு கிபாகி முன்னால் இருக்கும் ஒரே வாய்ப்பு. பிரச்னை ஏற்படலாம் என்று தெரிந்தவுடன், அதிகாரத்தைத் தூக்கி எறிந்த நெல்சன் மண்டேலா போல் போற்றுதலுக்குரிய தலைவராக மாற கிபாகிக்கு இது நல்ல சந்தர்ப்பம்.

இல்லையெனில், இராக் ஆக்கிரமிப்புக்கு முன்பு டோனி பிளேர் கூறியது போல், நீதியை நிலைநாட்ட “அடித்துக் கொள்ள’ வேண்டியதுதான்; மேலை நாடுகளுக்குச் சாதகமாக!

 


 

கென்யாவில் வன்முறை காரணமாக 1.80.000 பேர் இடம்பெயர்ந்துள்ளனர்

கென்யாவில் கடந்த வாரம் நடந்த தேர்தலைத் தொடர்ந்து வெடித்த வன்முறையில் குறைந்தது ஒரு லட்சத்து எண்பதனாயிரம் பேர் இடம் பெயர்ந்திருப்பதாக ஐநாமன்றத்தின் அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள்.

இவர்களில் சிலர் இடைத்தங்கல் முகாம்களில் தங்கியிருக் கிறார்கள். சிலர் காவல்நிலையங்களிலும், சிலர் தேவாலயங் களிலும் தஞ்சமடைந்திருக்கிறார்கள்.

இப்படியான அகதிகள் எல்லோருமே பட்டினியாக இருப்ப தாகவும், பல குழந்தைகள் வெயிலுக்கு பலியாகி இறந்து விட்டதாகவும், இந்த வன்முறைகளில் அதிகம் பாதிக்கப்பட்ட கென்யாவின் மேற்கு பிரதேசங்களில் ஒன்றில் இருக்கும் பிபிசி செய்தியாளர் தெரிவிக்கிறார்.
கென்யா முழுவதும் சுமார் ஐந்து லட்சம் கென்யர்கள் அவசர உதவி தேவைப்படும் நிலையில் இருப்பதாக, நைரோபியில் இருக்கும் ஐநா மன்றத்தின் உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

 


புதிய தேர்தலுக்கு தயார்- ஆனால் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் என்கிறார் கென்ய அதிபர் கிபாக்கி

கென்ய அதிபர் கிபாக்கி
கென்ய அதிபர் கிபாக்கி

கென்யாவில் புதிதாக தேர்தல் நடத்தப்படுவதை கொள்கை அடிப்படையில் எதிர்க்கவில்லை, ஆனால் நீதிமன்றம் ஒன்று உத்தரவிடும் பட்சத்தில்தான் புதிய தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும் என்று அதிபர் முவாய் கிபாக்கி விரும்புகிறார் என அந்நாட்டின் அரசு சார்பாகப் பேசவல்லவர் கூறியுள்ளார்.

ரைலா ஒடிங்கா தலைமையிலான ஓ.டி.எம். எதிர்க்கட்சியானது, சர்வதேச நாடுகளின் கண்காணிப்பின் கீழ் மறுபடியும் தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும், ஆனால் இவ்விவகாரத்தை நீதிமன்றத்திடம் கொண்டுசெல்லப்போவதில்லை, ஏனெனில் நீதிமன்ற முடிவின் மீது தங்களுக்கு நம்பிக்கை இல்லையென்று கூறியிருந்தது.

இந்த நெருக்கடியை தீர்ப்பதற்கான புதிய ராஜீய முயற்சிகள் நடந்துவருகின்றன. அதிபர் கிபாகு மற்றும் ஒடிங்கா ஆகியோருடன் நொபெல் பரிசு வென்ற தென்னாப்பிரிக்க பிரமுகர் டெஸ்மண்ட் டுடு பேச்சுநடத்தியுள்ளார். அமெரிக்க அதிபர் புஷ்ஷின் தூதர் ஜெண்டயி ஃப்ரேஸார் நைரோபி சென்றுகொண்டிருக்கிறார்.

 


தற்போதைய கென்ய அரசியல் நெருக்கடியின் பின்னணி என்ன?

நைரோபியில் தொடர்ந்து பதட்டம்
நைரோபியில் தொடர்ந்து பதட்டம்

தலைநகர் நைரோபி மற்றும் பிற நகர வீதிகளில் அரங்கேறிவரும் அரசியல் நெருக்கடிக்கு, நாட்டின் சக்திவாய்ந்த இரண்டு இனப்பிரிவுகளான – அதிபர் கிபாகியின் ககிகுயு பழங்குடியினத்துக்கும் எதிர்கட்சித் தலைவர் ரைலா ஒடிங்காவின் லுஒ இனத்துக்கும் இடையில் வரலாற்று ரீதியாயக நீடித்துவரும் பகைமை ஒரு பங்கில் வேராக அமைந்துள்ளது என்று சொல்லலாம்.

அதிபர் கிபாகியின் இனப்பிரிவான கிகுயுதான் கென்யாவின் மிகப் பெரிய மற்றும் பொருளாதார ரீதியில் மிகவும் சக்திவாய்ந்த இனமாகும். இவ்வினத்தார் அதிகம் பேர் நைரோபியைச் சுற்றி வாழ்கிறார்கள். இவ்வினத்தாரின் தலைவர் ஜோமோ கென்யாட்டாதான் சுதந்திரத்திற்குப் பிறகு நாட்டின் முதல் அதிபரானவர்.

நாட்டின் மேற்குப் பகுதியில் உகாண்டாவுடனான எல்லைக்கு அருகில் பரவலாக வாழும் லுஒ இனத்தார், பலமுறை அரசுப் பிரதிநிதிகளாக இருந்துள்ளனர் என்றாலும் அவர்களில் மிகப் பிரபலமான தலைவர் காலஞ்சென்ற ஒகிங்கா ஒடிங்கா ஆவார். இவரின் மகன் தான் தற்போதைய எதிர்கட்சித் தலைவர் ரைலா ஒடிங்கா.

கிகுயுவுக்கும் லுஒவுக்கும் இடையே நெடுநாளாக அரசியல் போட்டி பகைமை இருந்துவருகிறது என்றாலும் கென்யா பல ஆண்டுகளாக ஒரு அமைதியான நாடாகவே திகழ்ந்துவருகிறது.

சர்ச்சைக்குரிய தேர்தல் முடிவுகள் தொடர்பான தற்போதைய அரசியல் நெருக்கடியின் பின்னணி குறித்து எமது உலக விவகார செய்தியாளர் மார்க் டொய்ல் விளக்கும் செய்திக்குறிப்பின் தமிழ் வடிவத்தை நேயர்கள் கேட்கலாம்.

 


 

 

Posted in africa, Ancestry, Arms, AU, Autocracy, Autocrats, Britain, Cabinet, China, Citizen, Cleansing, Congo, Constituency, Democracy, Dictators, Dictatorship, Eldoret, Election, Elections, Ethiopia, fraud, Government, Govt, Kenya, Kibaki, Kikuyu, Kingdom, Kings, Kisumu, Kivuitu, Luo, margin, Military, Mombasa, Monarchy, Monitors, Murder, Mwai, Nairobi, Nigeria, Nyanza, Odinga, Opposition, people, Polls, Protest, protesters, Race, Racial, Raila, Re-election, rigging, Robbery, Somalia, Vote, voters, War, Weapons | Leave a Comment »

British novelist Doris Lessing wins Nobel Literature Prize

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 11, 2007

பிரிட்டன் நாவலாசிரியைக்கு இலக்கிய நோபல் பரிசு

இலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு

ஸ்டாக்ஹோம், அக். 12: பிரிட்டனைச் சேர்ந்த பெண் நாவலாசிரியர் டோரிஸ் லெஸ்ஸிங் இலக்கியத்துக்கான நோபல் பரிசுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இலக்கியத்துக்கான நோபல்பரிசைப் பெறும் 11-வது பெண் இவர். “நாகரிகமயத்தைப் பகுத்தறியும் கடவுள் மறுப்பு, உத்வேகம், தொலைநோக்குத் திறன் கொண்ட பெண்ணியவாதி’ என்று நோபல் கமிட்டி இவரைப் பற்றிக் கூறியுள்ளது.

1962-ல் வெளியான “தி கோல்டன் நோட்புக்’ என்ற இவரது புத்தகம் இவரை பெண்ணுரிமைக்கு குரல் கொடுப்பவராக அடையாளம் காட்டியது. எனினும் தனக்கு இதுபோன்ற அடையாளங்கள் வழங்கப்படுவதை விரும்பாத அவர், தனது படைப்புகளுக்கு அரசியலில் எந்தப் பங்கும் இல்லை என்று கூறிவந்தார்.

தி கிராஸ் இஸ் சிங்கிங், தி குட் டெரரிஸ்ட், எ மேன் கேவ் டூ உமென் உள்ளிட்ட பல்வேறு புத்தகங்களை அவர் எழுதியுள்ளார். கம்யூனிசம், சூஃபியிசம் உள்ளிட்ட பல்வேறு சிந்தாந்தங்களின் தாக்கங்கள் அவரது படைப்புகளில் இருக்கும்.

டோரிஸ் லெஸ்ஸிங்

ஈரானில் உள்ள கெர்மான்ஷா நகரில் 1919-ம் ஆண்டு டோரிஸ் லெஸ்ஸிங் பிறந்தார். இவரது தந்தை ராணுவ வீரர்; தாய் ஒரு நர்ஸ்.

பண்ணை ஒன்றில் பணிபுரிவதற்காக அவரது குடும்பம் 1927-ஆம் ஆண்டு வடக்கு ரொடீஷியாவுக்கு (தற்போது ஜிம்பாப்வே) குடிபெயர்ந்தது.

சாலிஸ்பரி நகரில் (தற்போது ஹராரே) உள்ள ரோமன் கத்தோலிக்க பள்ளியில் தனது படிப்பைத் தொடங்கிய அவர், தனது 13-வது வயதில் பள்ளியைவிட்டு விலகி சுயமாகப் படிக்கத் தொடங்கினார். டெலிபோன் ஆபரேட்டர், நர்ஸ் என பல்வேறு பணிகளைச் செய்தார்.

1939-ம் ஆண்டு ஃபிராங்க் விஸ்டம் என்பவரைத் திருமணம் செய்தார். அவர் மூலமாக 2 குழந்தைகளுக்குத் தாயான டோரிஸ், 1943-ல் அவரிடமிருந்து விவாகரத்துப் பெற்றார். அதன் பிறகு காட்ஃபிரைட் லெஸ்ஸிங் என்ற அரசியல்வாதியைத் திருமணம் செய்த டோரிஸ், 1949-ல் அவரையும் விவாகரத்து செய்தார். அதன் பிறகுதான் “தி கிராஸ் இஸ் சிங்கிங்’ என்ற தனது முதல் நாவலை டோரிஸ் எழுதினார்.

“தி கிராஸ் இஸ் சிங்கிங்’

1950 வெளியான டோரிஸின் முதல் நாவல் இது. ஆப்பிரிக்காவில் கறுப்பு இனத்தவர் மீது வெள்ளை இனத்தவரின் அடக்குமுறை குறித்து விளக்கும் நாவல். இந்த கதை முழுவதும் ஜிம்பாப்வேயில் நடப்பதாக எழுதப்பட்டது.

“தி கோல்டன் நோட்புக்’

1962-ல் வெளியான இந்த நாவல் டோரிûஸ பெண்ணுரிமைவாதியாக அடையாளம்

காட்டியது. இந்த நாவல் ஒரு பெண்

எழுத்தாளரின் கதை. பணி, காதல்,

அரசியல் போன்ற பல்வேறு பரிமாணங்களில் பெண்கள் சந்திக்கும் பிரச்னை பற்றியது.

“தி ஃபிப்த் சைல்ட்’

1988-ல் வெளியான இந்த நாவல் பல்வேறு மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டது. ஒரு மகிழ்ச்சியான தம்பதியின் வாழ்வில் 5-வது குழந்தை பிறந்த பின்னர் நிகழும் சம்பவங்களைக் கூறும் நாவல் இது.

Posted in africa, Award, Bio, Biography, Biosketch, Books, Britain, British, Commonwealth, Doris, England, Female, Feminism, Icon, Label, Lady, laureate, Lessing, Literature, London, manuscript, names, Nobel, Novel, novelist, people, Politics, Prize, Read, Reviews, Rhodesia, She, Synopsis, UK, Woman, Women, Zimbabwe | Leave a Comment »

Se Ku Thamizharasan – Panchami Lands: Dalit empowerment & Self sufficiency

Posted by Snapjudge மேல் ஓகஸ்ட் 30, 2007

“பஞ்சமி நிலம்’-தேடலும் தீர்வும்!

செ.கு.தமிழரசன்

பஞ்சமி நிலத்தை மீட்க வேண்டும்…, பஞ்சமி நிலம் பற்றிய வெள்ளை அறிக்கை தேவை…, பஞ்சமி நில மீட்பு ஆணையம் அமைக்க வேண்டும் என்ற முழக்கங்களை தலித் இயக்கங்களின் போராட்டங்களில் அதிகமாகக் கேட்கலாம். கழகங்கள், காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் என பல தரப்பிலும் பஞ்சமி நிலத்தைப் பற்றி பேசத்தான் செய்கிறார்கள். தேர்தல் அறிக்கைகளிலும் பஞ்சமி நிலம் பற்றிய குறிப்புகள் இடம்பெறுகின்றன. பஞ்சமி நிலத்தின் பின்னணியைப் பார்ப்பது அவசியம்

“இந்தியா’-என்றொரு நாடு இல்லாமலிருந்த காலகட்டம் அது. புரோகிதத் தொழில் புரியும் பிராமணர்களுக்கு கையடக்க நிலம் கொடுத்த நிலை வளர்ந்து, கிராமத்தையே தானமாகக் கொடுக்கும் நிலை வந்தது. இதற்கு “சதுர்வேதி மங்கலம்’ என்னும் நாமகர்ணம் சூட்டப்பட்டது. இது பின்னர் மதியூகி மந்திரிகளுக்கும் மண்ணுரிமை என்று விரிந்து, இறுதியில் அரசனுக்குப் பிடித்த புலவனுக்கும் போய்ச் சேர்ந்து. இதற்கு ஆதாரமான கல்வெட்டுகள் உள்ளன.

1600-ல் தான் லண்டனில் கிழக்கிந்தியக் கம்பெனி நிறுவப்பட்டது. 1611-ல் மசூலிப்பட்டணத்தில் தனது வணிகக் கிளையைத் தொடங்கிய கம்பெனி, கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து நிலங்களை- ராஜ்ஜியங்களை விலைக்கு வாங்கிச் சேர்த்த தொடர்பணியில் 1641-ல் சென்னை ஜார்ஜ் கோட்டையை கட்டியது. வியாபாரக் கம்பெனி வாங்கிப்போட்ட ராஜ்ஜியத்தின் மீதான தனது உரிமையை நிலைநாட்ட நிலவரியை வசூல் செய்து, அதற்கு நிர்வாக ரீதியான சில ஏற்பாடுகளையும் செய்து கொண்டது. அதற்கான ஆட்களையும் நியமித்தது. அந்த வகையில் “ஜாகிர்தாரி முறை’ அமலுக்கு வந்தது.

இந்நிலையில், கிழக்கிந்திய கம்பெனிக்குச் சொந்தமான இந்திய நிர்வாகத்தை பிரிட்டிஷ் பேரரசு தனது நேரடி அதிகாரித்துக்கு 2.8.1858-ல் மாற்றிக்கொண்டது. அதன் பின்னர் ஏற்பட்ட நிர்வாகச் சீர்திருத்தத்தில் நிலச்சீரமைப்பும் மாற்றம் பெற்றது.

சதுர்வர்ண சாதிய அமைப்புக்கு அப்பாற்பட்ட “அவர்ணா’ என்ற மக்கள் திரள் எவ்வித மனித உரிமையுமின்றி, ஊருக்குப் புறத்தே ஒதுக்கி வைக்கப்பட்டிருந்தனர். இவர்களுக்கு எண்ணற்றத் தடைகளைப் போட்டு, கொத்தடிமைகளை விடக் கேவலமாக தீண்டாமைக் கொடுமைக்குள் சிறைப்படுத்தப்பட்டிருந்தனர்.

இவர்கள் தமிழ்நாட்டில் பள்ளு-பறை பதினெட்டு சாதி என்று குறிப்பிடப்பட்டாலும் “பஞ்சமர்’ என்ற ஒரு பெயருக்குரியவர்களானார்கள். இவர்களுக்கான மனித உரிமை வேண்டி, பண்டிதர் அயோத்திதாசர் முதல் எண்ணற்ற தலைவர்கள் போராடிக்கொண்டிருந்தார்கள்.

இதையடுத்து பிரிட்டிஷ் அதிகாரிகள் இரக்கம் காட்டத் தொடங்கினர். அதில் முக்கியமாகக் குறிப்பிடத் தக்கவர், அன்றைய செங்கல்பட்டு ஜில்லா கலெக்டராக இருந்த “ட்ரிமென்கிரி’ என்பவர். இவர் இம் மக்களின் அன்றாடத் துயரங்களை ஆராய்ந்து, அதற்கு வடிகாலாக இவர்களுக்கு நிலமான்யம் வழங்க வேண்டிய அவசியத்தை மேலிடத்தில் வலியுறுத்தினார்.

அதன் விளைவாக 1891-ம் ஆண்டு, பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் பஞ்சமர்களுக்கு நிலம் கொடுக்கும் பிரச்னைக்கு விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது. அதற்கான அரசாணை எண்.1010, 30-9-1892-ல் வெளியானது. இதனடிப்படையில் சென்னை மாகாண பிரிட்டிஷ் அரசு, பஞ்சமர்களுக்கு டி.சி.லேண்ட் என்ற பெயரில் நிலங்களைப் பகிர்ந்தளித்தது. இதுவே “பஞ்சமி நிலம்’ என்று பெயர் பெற்றது. இந்நிலங்கள் சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு வழங்கப்பட்டன.

நிலம் பெற்ற பத்தாண்டுகளுக்குள் அதை எவருக்கும் குத்தகைக்கு விடவோ, அடமானம் வைக்கவோ, தானம் கொடுக்கவோ, விற்கவோ கூடாது. அப்படிச் செய்தால் அது செல்லுபடியாகாது. பத்தாண்டுகளுக்குப் பின்னர் அந்நிலத்தை பஞ்சமர்களுக்குள்ளே மட்டும் குத்தகைக்கு விடவோ, அடமானம் வைக்கவோ, தானம் கொடுக்கவோ, விற்கவோ செய்யலாம்.

இத்தகைய கடுமையான விதிமுறைகள் வகுக்கப்பட்டிருந்தாலும் காலப்போக்கில், என்னதான் நிலமிருந்தாலும் அதில் பயிர் விளைவிக்கும் அனைத்து வசதிகளுக்கும் அந்நியரையே சார்ந்திருக்க வேண்டிய அவசியத்தில் இம்மக்களின் வாழ்நிலை அமையப்பட்டிருந்தால் சுலபமாக வஞ்சிக்கப்பட்டனர். அதனால் இவர்களின் நிலங்களை அந்நியர்கள் கைப்பற்றினர். சிலர் வறுமையினால் ஏமாற்றப்பட்டு அதன் விளைவாய் விற்றனர்.

இந்த இழிநிலையைக் கண்ணுற்ற சமுதாயத் தலைவர்கள் ரெட்டைமலை சீனிவாசன், சிவராஜ், எம்.சி.ராஜா போன்றவர்கள் மீண்டும் உரிமை மீட்க வாதாடியதால், 1933-ல் பஞ்சமி நிலங்களுக்கான பட்டாக்களை புதுப்பித்து வழங்கியது பிரிட்டிஷ் அரசு. மேலும் விதிமுறையை வலியுறுத்தி நிலையான அரசாணை 1.10.1941-ல் வெளியிட்டது.

ஆனாலும் பஞ்சமி நிலங்கள் அப்பாவி மக்களிடமிருந்து பறிமுதலாவதை முற்றிலுமாய் நிறுத்த முடியவில்லை. செங்கை மாவட்டத்தில் காரணை, கிராமத்தில் தலித் மக்களிடமிருந்து அபகரிக்கப்பட்ட பஞ்சமி நிலத்தை மீட்பது தொடர்பாக, மாவட்ட ஆட்சியரை 10-101994-ல் சந்திக்க வந்த தலித் மக்கள் மீது, காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டால், இரு இளைஞர்கள் பலியானார்கள். இதையொட்டி கண்டனக் கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், பேரணிகள் என்று தலித் இயக்கங்களால் தமிழகமெங்கும் நடத்தப்பட்டன.

இன்றைய நிலையில் “பஞ்சமி நிலம்’ பல கை மாறியிருக்கும். ஆனாலும் மூலப் பத்திரத்தை பார்ப்பது என்பது கடினமல்ல. ஏனெனில், நிலங்களைப் பற்றிய நிலையான பதிவேடுகள் சென்னையிலுள்ள ஆவணக் காப்பகத்தில் உள்ளன. இதன் மூலம் தமிழ்நாட்டிலுள்ள ஓட்டு மொத்த பஞ்சமி நிலம் பற்றிய தகவல்களை 1832-லிருந்தே திரட்டிக் கொள்ளலாம்.

ஆனால், இதற்கு அரசு நிர்வாகம் வேகமாக முடுக்கிவிடப்படவேண்டும். தன்னலமர்ற அர்ப்பணிப்பு மனோநிலை கொண்ட ஊழியர்களை இப்பணியில் ஈடுபடுத்த வேண்டும்.

பஞ்சமி நில மூலத்தைக் கண்டுபிடித்தாலும் அது யாரிடம் உள்ளது, என்ன நிலை, மீட்பது எப்படி என்பது ஒரு கேள்விக்குறி. அடுத்தது அந்த நில உரிமையாளர்களைக் கண்டறிந்து பணத்தை யாரிடம் திருவது என்பதும் மற்றொரு கேள்வி.

பஞ்சமி நிலத்தை மீட்டுக்கொடுப்போம் என்று திமுக தேர்தல் வாக்குறுதி அளித்தது. ஆனால் எப்படிச் செயலாக்கப் போகிறது என்பதை இதுவரை எடுத்துரைக்கவில்லை. ஆனால், ஏழை விவாசயிகளுக்கு இரண்டு ஏக்கர் நிலமென்று யார் யாருக்கோ, எங்கெங்கோ பூதானம் செய்து கொண்டிருக்கிறது.

“”ஆண்டுக்கு ஏழாயிரம் தலித் குடும்பங்களுக்கு நிலம் வாங்க, தலா இரண்டு லட்சம் ரூபாய் அதிக பட்சக் கடனாக வழங்குவது, அதில் ஒரு லட்சம் ரூபாயை மானியமாக தருவது” என்ற திட்டத்தைத் தமிழக அரசு அறிவித்தது. தமிழகத்தில் ஒரு கோடிக்கும் மேல் உள்ள தலித் மக்களில் தொண்ணூறு சதவீதம் நிலமற்ற ஏழை விவசாயக் கூலிகள்தான். இவர்களைக் கணக்கெடுத்து ஆண்டுக்கு பத்தாயிரம் குடும்பங்களுக்கு நிலம் வாங்க கடன் வழங்கத் தொடங்கினாலே, பத்தாண்டுக்குள் அப்பணி முழுமை பெற்றுவிடும். தமிழக அரசு இதை நிறைவேற்ற வேண்டும்.

காஷ்மீரில் பிற மாநிலத்தவர் நிலம் வாங்க உரிமையில்லை. காஷ்மீர் நிலம் காஷ்மீரியர்களுக்கே என்பது சட்டமாக உள்ள நிலையில் தமிழ்நாட்டில், தலித் மக்களுக்கு நிலம் வழங்க திட்டமிடுவதும் சாத்தியமே.

தமிழக அரசு, பஞ்சமி நிலத்தை மீட்க கடுமையான நடைமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும். ஏழைகளுக்கு 2 ஏக்கர் நிலம் திட்டப்படி தற்போது கிட்டத்தட்ட தொண்ணூறு ஆயிரம் பேருக்கு நிலம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் பெரும்பாலான பலனைப் பெற்றவர்கள், பிற்படுத்தப்பட்டவர்கலும் மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களும் தானேயொழிய, தலித் மக்களல்ல. அதிலும் நிலம் பெற்ற குறைந்த அளவு தலித் மக்களும் தாங்கள் ஏற்கெனவே அனுபவ பாத்தியதையில் வைத்துள்ள சிறிதளவு புறம்போக்கு நிலங்களுக்கு மட்டுமே பட்டா வழங்குவதாக புலம்புகிறார்கள். இவையெல்லாம் ஏழை தலித் மக்களை ஏமாற்றும் செயலாகவே தோன்றுகிறது.

தங்களுக்குரிய பஞ்சமி நிலம் மீட்கப்படும் வரை தலித் மக்களின் போராட்டம் தொடரும். அரசு என்ன செய்யப்போகிறது. கடுமையான நடவடிக்கை எடுத்து, பஞ்சமி நிலத்தை மீட்டுத்தரப் போகிறதா ? அல்லது கனிவான நடவடிக்கை எடுத்து பஞ்சமர்களுக்கு நிலத்திற்காக ஈடுகட்டப்போகிறதா? தலித் மக்கள் தமது பஞ்சமி நிலத்தை மீட்க போராடிக்கொண்டிருக்கிறார்கள்- நாளை தலைமுறை அந்த வெற்றியில் திளைக்கும் என்ற நம்பிக்கையில்!

(கட்டுரையாளர்-தலைவர், தமிழ்நாடு இந்தியக் குடியரசுக் கட்சி.)

Posted in Agriculture, Assets, Britain, British, Communism, Communist, Communist parties, Communist Party of India, Communist Party of India-Marxist, Communists, Cong (I), Cong(I), Congress, Congress (I), Congress Party, Congress(I), Cultivation, Dalit, Famers, Farming, Freedom, GO, Govt, Harijan, Harijans, Independence, J&K, Jammu, Kashmir, Lands, Pancami, Panchami, Panjami, Property, rice, Tamilarasan, Tamizarasan, Tamizharasan | 3 Comments »

Nuclear Power & Technology – Hiroshima, Nagasaki, Destruction

Posted by Snapjudge மேல் ஓகஸ்ட் 6, 2007

ஒரு கோடி சூரிய ஒளி – கறுப்பு மழை!

என். ரமேஷ்

1945ஆகஸ்ட் 6. காலை 8.15. அதுவரை மனித குலம் அறிந்திராத, அதன் இருப்பையே கேள்விக்குறியாக்கும் அழிவுசக்தி கோரத்தாண்டவமாடியது ஜப்பான் நாட்டின் ஹிரோஷிமா நகரில். அந்நகரின் மீது “ஒரு கோடி சூரியன்கள்’ கண நேரம் ஒளியூட்டி மறைந்தது போன்ற தோற்றம். தொடர்ந்து காரிருள் சூழ்ந்தது; “கறுப்பு மழை’ பெய்தது. அமெரிக்க போர் விமானம் அந்த நகரின் மீது அணுகுண்டு வீசிய ஒரு சில நிமிடங்களில் இவை நிகழ்ந்தன.

அந்தக்கணம் குறித்து, தாக்குதலில் பாதிக்கப்பட்டு உயிர்பிழைத்த (அப்போது 12 வயதான) காஸ் சூயிஷி கூறுகிறார்,”ஒரு விநாடிக்கு முன் சொர்க்கம் போன்று ஒளிர்ந்தது; மறு விநாடி நரகமாகிவிட்டது’

நகரில் ஆங்காங்கே தீப்பற்றி எரியத் தொடங்கியது. செறிவூட்டப்பட்ட யுரேனியத்தால் தயாரிக்கப்பட்ட அந்த அணுகுண்டால் ஏற்பட்ட வெடிப்பு, வெப்பம், தீப் பிழம்புகள், கதிரியக்கத்தால் உடலில் தீப்பற்றி, நுரையீரல் வெடித்து, மூச்சுத் திணறி அப்பாவிக் குழந்தைகள், பெண்கள் உள்ளிட்ட 90,000 பேர் உடனடியாக இறந்தனர். 1945-ஆம் ஆண்டு இறுதியில் இந்த எண்ணிக்கை 1.45 லட்சமாக உயர்ந்தது.

ஹிரோஷிமாவைத் தொடர்ந்து நாகசாகியில் ஆகஸ்ட் 9-ஆம் தேதி வீசப்பட்ட புளுட்டோனிய அணுகுண்டால் 70,000 பேர் இறந்தனர்.

அணு வெடிப்புக்குப் பிந்தைய 62 ஆண்டுகளில், பின் விளைவுகளால் ஒரு லட்சம் பேர் வரை இறந்திருக்கக் கூடும் எனக் கூறப்படுகிறது.

ஹிரோஷிமா, நாகசாகி அழிவைக் கண்ணுற்ற மகாத்மா காந்தி கூறியது: “அணுகுண்டு விளைவித்த மாபெரும் சோகம் நமக்கு கூறும் நீதி – அணு குண்டை எதிர் – அணுகுண்டு மூலம் அழிக்க முடியாது; வன்முறையை, எதிர்வன்முறையைக் கொண்டு வீழ்த்த முடியாது என்பதைப்போல. அகிம்சையின் மூலமே வன்முறையிலிருந்து உலகம் மீண்டு வர வேண்டும். அன்பால் மட்டுமே வெறுப்பை வெல்ல முடியும்’ என்றார்.

எனினும், 1945 முதல் இதுவரை உலகில் 1,28,000 அணுகுண்டுகள் தயாரிக்கப்பட்டுள்ளன. பல்வேறு அணு ஆயுதப் படைக் கலைப்பு ஒப்பந்தங்களுக்குப் பிறகு தற்போது உலகில் ஏறத்தாழ 27,000 அணு ஆயுதங்கள் உள்ளன. அணு ஆயுத நாடுகள் என அறிவிக்கப்பட்டவற்றில்,

  1. அமெரிக்காவில் 9,938 அணு ஆயுதங்கள் உள்ளன.
  2. ரஷியா – 16,000,
  3. பிரிட்டன் – 200,
  4. பிரான்ஸ் – 350,
  5. சீனா – 200. அணு ஆயுத நாடுகள் என அறிவிக்கப்படாத
  6. இந்தியா, பாகிஸ்தான் நாடுகளில் மொத்தம் 110 அணு குண்டுகள் இருப்பதாகக் கணக்கிடப்பட்டுள்ளது.
  7. இஸ்ரேலிடம் 80 அணு ஆயுதங்கள் உள்ளன.

இவற்றில் 12,000 அணு ஆயுதங்கள், ஏவுகணை உள்ளிட்ட தாங்கிகளில் பொருத்தப்பட்டு தயாராக உள்ளன; இதில் 3,500 ஆயுதங்கள் ஒரு நொடிக்குக் குறைவான நேரத்தில் செலுத்திவிடக்கூடிய தயார் நிலையில் உள்ளன. பெரும்பாலான ஆயுதங்கள், நேரில் போர் நடவடிக்கைகளில் ஈடுபடாத, பொதுமக்கள் அதிக அளவில் வசிக்கும் பெரு நகரங்களைக் குறிவைத்து நிறுத்தப்பட்டுள்ளன.

தவறான தகவல்கள், தகவல் இடைவெளிகள் காரணமாக எந்த நேரத்திலும் அணு ஆயுதத் தாக்குதல் நடக்கக்கூடிய சூழலில் நாம் வாழ்கிறோம்.

1945 முதல் இதுவரை நிகழ்த்தப்பட்ட 2,051 அணு வெடிப்பு சோதனைகள் காரணமாக ஏற்பட்ட கதிரியக்கத்தால் வரும் பல நூறு ஆண்டுகளில் பல்லாயிரக்கணக்கானோர் மடிவார்கள் என கணக்கிடப்பட்டுள்ளது. ஹிரோஷிமா, நாகசாகியில் பேரழிவு ஏற்பட்ட 62-வது ஆண்டு நினைவு தினத்தின் போது வரும் செய்திகள் போரற்ற உலகை விரும்புவோருக்கு மகிழ்ச்சி அளிப்பதாக இல்லை.

அமெரிக்க தேசிய பாதுகாப்பு மற்றும் அணு ஆயுதங்களுக்கான குழு அந்நாட்டு நாடாளுமன்றத்துக்கு அண்மையில் அளித்த அறிக்கையில்,”அமெரிக்கா, தன்னுடைய நேசநாடுகளின் பாதுகாப்புக்கு அணு ஆயுதங்கள் தேவைப்படுகின்றன’ எனக் குறிப்பிட்டுள்ளது.

இந்திய – அமெரிக்க அணுசக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம் இந்திய அணு ஆயுதங்களின் பெருக்கத்துக்கே வழிவகுக்கும் என இந்திய, உலக சமாதான இயக்கங்கள் அச்சம் தெரிவிக்கின்றன.

கதிரியக்கம், மரணம் என்ற வகையில் மனித குல அழிவுக்கு நேரடியாகவும், கல்வி, குடிநீர்த் திட்ட நதிகளை மடைமாற்றுவதன் மூலம் மறைமுகமாகவும் காரணமாக உள்ள அணு ஆயுதங்களை அறவே ஒழிக்க வேண்டும் என்பதே உலகம் முழுவதும் உள்ள சமாதான இயக்கங்களின் கோரிக்கையாக உள்ளது.

ஹேக் நகரில் அமைந்துள்ள சர்வதேச நீதிமன்றம் 1996 ஜூலை 8ஆம் தேதி அணு ஆயுதங்கள் குறித்து தெரிவித்த கருத்து நினைவுகூரத்தக்கதாகும். “அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவோம் என்ற அச்சுறுத்தலோ, அணு ஆயுதங்களைப் பயன்படுத்துதலோ போர்கள் குறித்த சர்வதேச சட்ட விதிகளை மீறுவதாகும்; குறிப்பாக சர்வதேச மனிதாபிமான சட்ட விதிகளை மீறுவதாகும்.

அணு ஆயுதக் கலைப்புக்கு வழிகோலும் சர்வதேச பேச்சுவார்த்தைகளை முடிவுக்குக் கொண்டு வந்து, அணு ஆயுதக் கலைப்பை சர்வதேச கண்காணிப்புடன் நடைமுறைப்படுத்துவது அனைத்து நாடுகளின் சட்டப்பூர்வ கடமை’ என்பதே அது.

ஏற்கெனவே ஐ.நா. சபையில் சுற்றுக்குவிடப்பட்டுள்ள வரைவு அணு ஆயுத உடன்படிக்கை “அணு ஆயுதங்களின் மேம்பாடு, சோதனை, உற்பத்தி, இருப்பு வைத்தல், மற்ற நாடுகளுக்கு வழங்குவது, பயன்படுத்துவது அல்லது பயன்படுத்தப்படும் என அச்சுறுத்துவது’ ஆகியவற்றைத் தடை செய்வதுடன் அணு ஆயுதங்களை “முற்றிலும் ஒழிப்பது’ ஆகிய பிரிவுகளைக் கொண்டுள்ளது. இந்த உடன்படிக்கைக்கு உலக நாடுகளின் அரசுகள் ஒப்புதல் அளிக்க வேண்டும்.

அணு ஆயுதங்களை வைத்துள்ள நாடுகளின் குடிமக்களும், மனித குல அழிவுக்கு வழிவகுக்கும் இவற்றைக் கைவிட வேண்டும் என தங்களது அரசுகளை நிர்பந்திக்க வேண்டும்.

——————————————————————————————————————-
போர் இன்னும் முடியவில்லை!

உதயை மு. வீரையன்

புகழ்பெற்ற அணு விஞ்ஞானி ஐன்ஸ்டீனிடம் ஒரு நண்பர் கேட்டார்: “”மூன்றாவது உலகப் போரில் என்ன ஆயுதம் பயன்படுத்தப்படும்?…”

அதற்கு அவருடைய பதில்: “”மூன்றாவது உலகப் போரினைப் பற்றி எனக்குத் தெரியாது. ஆனால் நான்காவது உலகப் போரில் கல்லும், வில்லும் பயன்படுத்தப்படும்…”

இதன் பொருள் என்ன? மூன்றாவது உலகப் போரில் அணு ஆயுதங்கள் பயன்படுத்தப்படும். அணு ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டால் உலகம் சுடுகாடாகிப் போகும். அதன் பின் புதிய மனிதர்கள் உருவாக வேண்டும். அந்த கற்காலத்தில் கல்லும், வில்லும்தானே கருவிகளாகும்?

அணு ஆயுதங்களால் உலக அழிவு நெருங்கிக் கொண்டிருப்பதைக் குறிப்பால் உணர்த்தவே, அந்த அணு விஞ்ஞானி இவ்வாறு உலகை எச்சரித்திருக்கிறார். ஆனால் இந்த எச்சரிக்கை யார் காதிலும் விழுந்ததாகத் தெரியவில்லை. உலக நாடுகள் மனம்போன போக்கில் போய்க் கொண்டிருக்கின்றன.

ஹிரோஷிமா, நாகசாகி என்ற பெயர்களை உச்சரித்த உடனேயே அணு ஆயுத அழிவுதான் கண் முன்னே காட்சி தரும். இரண்டாம் உலகப் போரின்போது 1945 ஆகஸ்ட் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் இந்த இரு நகரங்களும் “பொடியன்’, “தடியன்’ என்னும் இரு ஆயுதங்களால் சில நொடிகளில் ஏற்பட்ட பேரழிவு மனித சிந்தனைக்கே அப்பாற்பட்டதாக இருக்கிறது.

அணுகுண்டு வீச்சின் விளைவாக மக்கள் நெருக்கமும், கட்டடப் பெருக்கமும் கொண்ட இருபெரு நகரங்களும் இருந்த இடம் தெரியாமல் அந்த நொடியே அழிந்து நாசமாயின. ஹிரோஷிமா நகரில் 76 ஆயிரம் கட்டடங்களில் 92 சதவிகிதத்துக்கும்மேல் வெடித்தும், இடிந்தும், எரிந்தும் போயின. நாகசாகியிலிருந்த 51 ஆயிரம் கட்டடங்களில் 36 சதவிகிதம் அவ்வாறு அழிந்து நாசமாயின.

ஆகஸ்ட் 6 அன்று ஹிரோஷிமா நகரில் இருந்ததாகக் கணக்கிடப்பட்ட மூன்றரை லட்சம் பேரில் 2 லட்சம் பேருக்கு மேல் 1950 வாக்கில் மடிந்தார்கள். நாகசாகியில் ஆகஸ்ட் 9 அன்று இருந்ததாகக் கணக்கிடப்பட்ட 2,70,000 பேரில் சுமார் 1,40,000 பேர் மாண்டு போயினர்.

இலக்குப் பகுதிகளில் சாவும் அழிவும் கண்மூடித்தனமாக நடந்தேறின. குழந்தைகள், பெண்கள், இளைஞர், முதியோர், படைகள், குடியிருந்தோர், வருகை புரிந்தோர், வீடுகள், தொழிற்சாலைகள், மருத்துவமனைகள், பள்ளிகள் } எவையும் விட்டுவைக்கப்படவில்லை. பலியானவர்களில் 90 சதவிகிதத்தினர் பொதுமக்கள். இப்போதும், அந்தக் குண்டுவீச்சு தொடர்ந்து உயிர்ப்பலி வாங்கிக் கொண்டுதான் இருக்கிறது.

ஹிரோஷிமாவில் அணுகுண்டு வெடித்த அரைமணி நேரம் கழித்து காலை 8.45 மணியளவில் பெருந்தீ மூண்டது. அப்பகுதியிலிருந்த காற்று சூடேறி விரைவாக மேலே போனது. உடனே எல்லாத் திசைகளிலிருந்தும் குளிர்காற்று உள்ளே புகுந்தது. “தீப்புயல்’ விரைவில் வீசத் தொடங்கியது. மணிக்கு 65 கி.மீ. வேகம். காலை 11 முதல் மாலை 3 வரை வன்மையான சுழல்காற்று நகர மையத்திலிருந்து வடமேற்காகச் சுழன்றது. மாலைக்குள் காற்று தணிந்துவிட்டது. அதற்குள் வெடிப்பு மையத்திலிருந்து 2 கி.மீ. ஆரத்திற்கு நகரம் தீப்புயலால் முற்றிலுமாக அழிக்கப்பட்டு விட்டது.

நாகசாகியில் குண்டு வெடித்த ஏறக்குறைய 90 நிமிடங்கள் கழித்து பல இடங்களில் தீப்பிடித்தது; அது பரந்து பரவி பெருந்தீயாக வளர்ந்தது. இரவு 8.30 மணி வரை நீடித்த அந்தத் தீயால் ஒரு பரந்த நிலப்பரப்பே எரிந்து பாலைவனமாகப் பாழடைந்து போய்விட்டது.

விமானத் தாக்குதல்கள் மற்றும் பிற அவசரத் தேவைகளுக்கு இந்த இரு நகரங்களும் ஆயத்தமாக இருந்தபோதிலும் அணுகுண்டின் ஆற்றல் அத்தனையையும் பயனற்றதாக ஆக்கிவிட்டது. விமானத் தாக்குதல்களிலிருந்து பாதுகாப்பு தரும் காப்பிடங்களில் தஞ்சம் புகுந்தவர்கள் அங்கு புகுந்த வெப்பக் காற்றினால் வெந்து போனார்கள். இதனால் அதிகப்படியான சாவுகள் ஏற்பட்டது என்று கூறலாம்.

ஹிரோஷிமாவில் ஆகஸ்ட் 6 அன்று காலை 9 மணி முதல் 4 மணிவரை நகரின் சில இடங்களிலும், காற்று வீசும் திசையிலிருந்த கிராமப்புறப் பகுதிகளிலும் “கருமழை’ பெய்தது. “கருமழை’ பெய்த இடங்களில் ஆறுகளில் பெருமளவில் மீன்கள் செத்திருக்கக் கண்டனர். பிசுபிசுப்பான மழையால் மாசுபட்ட புல்லை மேய்ந்த கால்நடைகளுக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. மழை பெய்த இடங்களில் குடியிருந்த பலருக்கும் பேதி ஏற்பட்டதாகத் தெரிவித்தார்கள்.

அதுபோலவே நாகசாகியிலும் ஆகஸ்ட் 9 அன்று காலை 11 மணியளவில் வெடிகுண்டு வீசப்பட்ட பிறகு சுமார் 20 நிமிடத்தில், அழிவுக்குத் தப்பித்திருந்த மறுபாதி நகரில் “கருமழை’ பெய்தது. இவ்வாறு அணு ஆயுத மேல்படிவின் தீங்குகளினால் ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டார்கள்.

கதிர்வீச்சின் பிந்தைய விளைவுகளால் பாதிப்படைந்தோர் தொடர்ந்து துன்புற்றார்கள் அல்லது இறந்தார்கள். பிந்தைய விளைவுகளில் மிக முக்கியமானது புற்று; உயிருக்கு ஆபத்தான ரத்த வெள்ளையணுப் புற்று; கண்படலம் உருவாதல்; வயதுக்கு முந்தி கிழட்டுத்தன்மையடைதல் போன்றவை.

இவைதவிர, பிறவிக் குறைபாடுகளும் தோன்றுகின்றன. அதிகக் கதிர்வீச்சினால் கருமூல அணுக்கள் சாகின்றன. விந்தையோ முட்டையையோ உற்பத்தி செய்யும் திறனை இழக்கின்றன. அணுத்தாக்குதல் முடிந்து இத்தனை ஆண்டுகள் கழிந்த பிறகும் மனிதர்களில் அயனிமயக் கதிர்வீச்சின் மரபின / பிறவிப் பாதிப்புகள் பற்றி உறுதியான இறுதி முடிவுகளை அறிய இந்தக் கால அளவு போதாது என்றே அறிவியல் அறிஞர்கள் கருதுகின்றனர்.

அணுக்கருவிகள் மூன்று வகைகளில் தனித்தன்மை கொண்டிருக்கின்றன: பெருமளவில் உடனடியாக சாவையும் அழிவையும் உண்டாக்குகின்றன; மனித சமூகத்தில் எல்லாவற்றையும் கண்மூடித்தனமாக கண்ணிமைக்கும் நேரத்தில் அழித்து விடுகின்றன; பாலைவனமாக்கப்பட்ட ஒரு சமுதாயத்தில் சிக்கலானதும், நெடுங்காலத்ததுமான சமூக, உளவியல் விளைவுகளை உருவாக்குகின்றன.

அணுகுண்டு போடப்பட்டு இவ்வளவு காலம் கழிந்த பிறகும் அது இன்னும் தொடர்ந்து உயிர்களைக் காவு வாங்கிக் கொண்டுதான் இருக்கிறது. ஹிரோஷிமாவில் உள்ள கதிர்வீச்சு விளைவு ஆய்வு நிறுவனத்தின் தலைவர் டாக்டர் ஷிங்கேமத்சு இந்த அழிவைப் பற்றி என்ன கூறுகிறார் தெரியுமா?

“”இவர்களுக்கும், குண்டுவெடிப்பில் பிழைத்திருக்கும் பிறருக்கும் போர் இன்னும் முடியவில்லை. அணுகுண்டின் விளைவான இந்தக் கதிர்வீச்சு நோய்கள் தம்மிடமிருந்து தீருமா? எப்போது தீரும்? என்று அவர்கள் எல்லாம் ஆர்வத்துடன் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்…”

போர், நாசத்தை விளைவிக்கும் என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால் அணு ஆயுதங்கள் எதிரிகளை மட்டுமல்ல, ஏவியவர்களையே அழித்து விடும்; உலகத்தையே சுடுகாடாக மாற்றிவிடும்; யாருக்காகவும் அழ யாரும் இருக்க மாட்டார்கள்.

வெள்ளைப் புறாவைப் பறக்கவிடுவதால் மட்டும் உலக அமைதி உண்டாகிவிடாது. வெண்புறாவைப் பறக்கவிடுவதும் நாம். அதனைப் பின்தொடர்ந்து வேட்டையாடுவதும் நாம். இந்த நிலையை மாற்றியமைக்க வேண்டும். காலத்தின் கட்டளை இது. ஆம், போர் இன்னும் முடியவில்லை!

(கட்டுரையாளர்: சமூக ஆர்வலர்).

Posted in Agni, America, Arms, Atom, Baikonur, bhopal, Bombs, Britain, China, dead, Death, Deficiency, Deformity, Destruction, Effects, Electricity, England, Enriched, Enrichment, Fights, France, Hiroshima, Impact, International, Israel, Japan, Killed, leak, London, medical, Missile, Mohawk, Nagasaki, Nuclear, Pakistan, Palestine, Peace, Power, Russia, Technology, Tragedy, UK, Ukaraine, Ukraine, Uranium, US, USA, USSR, War, Weapons, World | 1 Comment »

Facts: How Hong Kong has and hasn’t changed – Progress Report under China

Posted by Snapjudge மேல் ஜூலை 3, 2007

டிராகன் புகுந்த நாடு!

எம். மணிகண்டன்

பிரிட்டிஷ் கட்டுப்பாட்டில் இருந்த ஹாங்காங் சீனாவிடம் ஒப்படைக்கப்பட்டு 10 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன. இதையொட்டி ஹாங்காங்கில் நடந்த வண்ணமயமான நிகழ்ச்சிகளில், பிரிட்டன் மற்றும் சீனாவைச் சேர்ந்த விஐபிகள் கலந்து கொண்டு பொருளாதாரம், அரசியல், கலாசாரம் உள்ளிட்ட எல்லா அம்சங்களையும் விரிவாகப் பேசினர், ஒன்றைத் தவிர. அந்த ஒன்று, ஜனநாயகம். ஹாங்காங் மக்கள் கேட்கும் முழுமையான “மக்கள் ஆட்சி’.

1997-ல் ஹாங்காங்கின் இறையாண்மையை சீனாவின் கையில் ஒப்படைத்தபோது, அடிப்படை அரசமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டது. முழுமையான மக்கள் ஆட்சி படிப்படியாக ஏற்படுத்தப்படும் என்பதே அதில் கூறப்பட்டிருக்கும் முக்கிய அம்சம்.

ஹாங்காங்கின் பாதுகாப்பு, அயல்நாட்டு விவகாரம் தவிர வேறு எந்தப் பிரச்னையிலும் சீனா தலையிடக் கூடாது என்ற அடிப்படையில்தான் பிரிட்டிஷ் அரசு ஆட்சியை ஒப்படைத்தது. ஹாங்காங்கின் கலாசாரம், நாகரிகம், பொருளாதார அமைப்பு உள்ளிட்ட அடையாளங்கள் அழிக்கப்படக் கூடாது என்பதே இந்த உடன்பாட்டுக்கு முக்கியக் காரணம்.

ஆனால் இந்த எல்லையைக் கடந்து ஹாங்காங்கின் உள்விவகாரங்களில் சீனா மூக்கை நுழைக்கிறது என்பதுதான் மக்களாட்சிக்கு ஆதரவானவர்கள் கூறும் குற்றச்சாட்டு. எடுத்துக்காட்டாக அடிப்படை அரசமைப்புச் சட்டப்படி, ஹாங்காங் அரசின் செயல் தலைவர் (பிரதமர்) மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். ஆனால் சீனா நியமிக்கும் ஹாங்காங்கைச் சேர்ந்த 800 பேர் கொண்ட தேர்தல் செயற்குழுதான் செயல் தலைவரைத் தேர்ந்தெடுத்து வருகிறது.

அவ்வாறு தேர்ந்தெடுக்கப்படுபவர் யாருக்கு ஆதரவாகச் செயல்படுவார் என்பதைக் கண்டுபிடிக்க உளவுத்துறையின் உதவியை நாட வேண்டியதில்லை. இது தவிர ஹாங்காங்கின் 60 உறுப்பினர் சட்டப்பேரவையில் 30 உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கும் உரிமை மட்டுமே மக்களிடம் உள்ளது. மீதி 30 பேருக்கு மறைமுக வாக்கெடுப்பு. இப்படிப் பல்வேறு வழிகளிலும் ஹாங்காங் மீதான பிடியை சீனா இறுக்கியிருக்கிறது.

“ஒரு நாடு, இரு அமைப்பு’ என்ற கொள்கையின் அடிப்படையில்தான் சீனா-ஹாங்காங் இடையேயான உறவுப்பாலம் உருவாக்கப்பட்டிருக்கிறது. இரு அமைப்புகளும் அடிப்படையிலேயே வெவ்வேறானவை. ஒன்று பொதுவுடைமைக் கொள்கைகளைக் கொண்டது. மற்றொன்று முதலாளித்துவ தத்துவத்தை செயல்படுத்தி வருவது. “மக்காவோ’ பகுதியைப் போல ஹாங்காங்குக்கும் சிறப்பு நிர்வாகப் பகுதி என்ற அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இவையனைத்தும் எழுத்தில் மட்டும்தான் இருக்கிறது என்பதுதான் இப்போதைய பிரச்னை.

உலகின் மிகச்சிறந்த விமான நிலையம், பொருளாதாரச் சுதந்திரத்தில் முதலிடம், முதல்தர சரக்குக் கப்பல் தளம் என்ற பல்வேறு சிறப்புகளைக் கொண்டது ஹாங்காங். சீனாவின் தற்போதைய படுவேகமான பொருளாதார வளர்ச்சிக்கு சோதனைக் களமாகப் பயன்பட்டது ஹாங்காங்தான் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.

சீனாவின் ஷென்சென் நகரம் 20 ஆண்டுகளுக்கு முன்பு சில ஆயிரம் பேர் வசித்த குக்கிராமமாக இருந்தது. தற்போது அங்கு மக்கள்தொகை 1 கோடியே 30 லட்சம். பல்வேறு வர்த்தக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் என ஹாங்காங் தொழிலதிபர்களின் முதலீடுகளால் இன்று அந் நகரத்தின் அபார வளர்ச்சி பிரமிக்கத்தக்கது. ஹாங்காங் மீதான பிடியைத் தளர்த்த சீனா யோசிப்பதற்கு இவைதான் முக்கியக் காரணங்கள்.

சீனாவின் கட்டுப்பாட்டுக்கு வந்த 10 ஆண்டுகளில் ஹாங்காங் சில சமரசங்களைச் செய்து கொள்ள வேண்டியதாகி விட்டது. ஹாங்காங் பகுதிக்குப் போட்டியாக ஷாங்காய் நகரை சீனா வளர்த்து வருகிறது.

பல்வேறு புதிய நிறுவனங்களை ஷாங்காய் நகருக்குக் கொண்டுபோய், கிட்டத்தட்ட சீனாவின் வர்த்தகத் தலைநகராகவே அதை மாற்றிவிட்டது.

ஹாங்காங்கை விட சீனாவில் தயாரிப்புச் செலவு குறைவு என்பதால் ஹாங்காங் நிறுவனங்கள்கூட தங்கள் கடைகளை சீன நகரங்களில் பரப்பியிருக்கின்றன. பாதி நிறுவனங்கள் சிங்கப்பூரை நோக்கிப் படையெடுத்து வருகின்றன.

இதனால் ஹாங்காங்கின் சிறு தொழில் அதிபர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். தாய்நாட்டுக்கு விசுவாசமாக இருக்க வேண்டும் என்பதால் ஹாங்காங் மக்கள் இதுபோன்ற செயல்களை நேரடியாகக் குறைகூற முடியாது என்றாலும், தங்கள் பகுதி புறக்கணிக்கப்படுவதை எப்போதும் சகித்துக் கொள்ள மாட்டார்கள்.

இவை ஒருபுறம் இருக்க, சீனாவுடன் இணைந்திருப்பதால் ஹாங்காங் பகுதிக்கும் சில நன்மைகள் இருக்கத்தான் செய்கின்றன. 2003-ல் ஹாங்காங்கில் பொருளாதார மந்தம் ஏற்பட்டபோது, சீனாவின் உதவி இல்லாமல் போயிருந்தால் ஹாங்காங் மீண்டு வந்திருக்க முடியாது. சீனாவின் சரக்குகளைக் கையாளுவதால் ஹாங்காங் துறைமுகம் எப்போதும் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறது.

இது தவிர, 1997-க்கு முந்தைய கணக்கை ஒப்பிட்டால் சுற்றுலாப் பயணிகளின் வருகை பல மடங்காகி இருக்கிறது. சீனாவிடம் இருந்து பிரிக்க முடியாத அங்கமாக ஹாங்காங் மாறிவிட்டது என்பதை இவை உணர்த்துகின்றன.

சீனாவின் எரிச்சல்களுள் ஒன்றாகக் கருதப்படும் தைவான், சீனாவுடன் சேர்வதற்குத் தயக்கம் காட்டுவதற்குக் கூறப்படும் காரணங்களுள் ஒன்று முழுமையான மக்களாட்சி மறுக்கப்படும் என்பதுதான். எனினும், முன்புபோல் அல்லாமல் மக்களாட்சிக்கு ஆதரவான போராட்டங்களை சீனா சகித்துக் கொண்டிருப்பதே மிகப்பெரிய மாற்றம்தான்.

பொருளாதாரத்தில் ஹாங்காங்கை சோதனைக் களமாகப் பயன்படுத்தி நாடு முழுவதும் பொருளாதார வளர்ச்சியைத் துரிதப்படுத்திய சீனா, ஹாங்காங்கில் முழுமையான மக்களாட்சியைக் கொண்டுவந்து, அதையும் நடைமுறைப்படுத்திப் பார்க்கலாமே. செய்வீர்களா தோழர்களே?

Posted in AP, Arts, Arunachal, Autocracy, Beijing, Bejing, Biz, Blair, Britain, Brown, Business, Cabinet, Casinos, Cathay Pacific, CathayPacific, Censor, China, Commerce, Communism, Communist, Communists, Country, defence, Defense, Democracy, Economy, England, Federal, Finance, Freedom, Gordon, Govt, Hongkong, HSBC, Independence, Industry, London, Macau, Manufacturing, Market, Marx, Marxism, Marxist, Marxist Communist, Marxist Leninist, Marxists, Peking, PM, Politics, Power, Regime, Republic, Ruler, Shangai, Shanghai, Shares, Stocks, Taiwan, Tianamen, Tiananmen, Tianmen, Tibet, UK, World | Leave a Comment »

Blair departs, leaving Brown to rebuild their New Labour

Posted by Snapjudge மேல் ஜூன் 28, 2007

கார்டன் பிரவுன் கடந்துவந்த பாதை

கார்டன் பிரவுன் டோனி பிளேர்ருக்கு அடுத்தபடியாக பிரதமராக வரக்கூடிய அதிகபட்ச சாத்தியக்கூறுள்ளவர் என்று பல ஆண்டுகளாக கருதப்பட்டவர்.

கடந்த 10 ஆண்டுகளாக, அவர் பிரிட்டனின் நிதித்துறையின் பொறுப்பை வகித்து வந்தார். சுமார் இருநூறு ஆண்டுகளில் இந்த அளவு அதிக காலம் நிதித்துறை அமைச்சராக இருந்தவர் இவர்தான்.

சான்சலராக ( பிரிட்டிஷ் நிதியமைச்சர் அவ்வாறுதான் அழைக்கப்படுகிறார்) அவர் இருந்த காலத்தில், வெகு நீண்ட காலம் பிரிட்டனில், பொருளாதார வளர்ச்சி நீடித்தது. கடந்த மாதம் தனது இறுதி வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பித்து பேசிய பிரவுன், வர்த்தக முதலீடு மற்றும் வேலைவாய்ப்பு ஆகிய இரண்டுமே அதிகரித்து வருவதாகவும், கடன் வாங்குவது குறைந்திருப்பதாகவும் குறிப்பிட்டார்.

ஆனால்,பிரவுனை விமர்சிப்பவர்களும் இல்லாமல் இல்லை. ஆளும் தொழிற்கட்சியின் சில உறுப்பினர்கள், சில சமயங்களில், பிரவுன் வெளிப்படுத்துகின்ற உற்சாகமற்ற – முசுட்டுத்தனமான தோற்றம், இளமையான, ஊடகங்களுக்கு நட்பான, எதிர்க்கட்சித் தலைவர், டேவிட் கேமரூனுடன் சாதகமாக கருதப்படாது போகலாம் என்று அஞ்சுகின்றனர்.

பிரவுன், ஸ்காட்லாந்தில் பிறந்து அங்கேயே கல்வி பயின்றவர். அரசியலில் அவருக்கு இருந்த ஆர்வம், எடின்பரோ பல்கலைக்கழகத்தில் அவர் படித்த காலத்திலேயே வெளிப்பட்டது. 1992ல் கன்சர்வேடிவ் கட்சி ஆட்சியில் இருந்த போது, எதிர்க்கட்சியின் நிழல் நிதி அமைச்சராகப் பொறுப்பேற்றபின்னர், அவர் எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற முன்வரிசையில், கஜானவுக்கு அதாவது திரைசேரிக்கு, நிழல் தலைமைச்செயலாரகவும், வர்த்தக மற்றும் தொழில் துறை நிழல் செயலராகவும் இரண்டு மூத்த பொறுப்புகளை வகித்தார்.

புதிய தொழிற்கட்சி என்று அறியப்பட்ட கட்சியை புதுமையாக்கும் முயற்சியின் மையமாக டோனி பிளேரும் கார்டன் பிரவுனும் இருந்தனர். வழமையான சோசலிசத்தை கைவிட்டு அவர்கள் ஒரு மைய இடது சாரி அணுகுமுறையை கைக்கொண்டனர். ஆயினும், இருவருக்கும் இடையே, கருத்து வேற்றுமைகளும் வெளிவந்தன. அவர்களது ஆதரவாளர்கள் முறையே பிளேரைட்ஸ் மற்றும் பிரவுனைட்ஸ் என்று குறிப்பிடப்பட்டனர்.

சர்வதேச அரங்கில், பிரவுன் ஆப்ரிக்காவில் வறுமையைக் குறைக்கும் பிரிட்டனின் முயற்சிகளில் ஒரு முக்கியமான பங்கை வகித்தார். அவரது பரவலான அனுபவம் அவருக்கு கை கொடுக்கும் என்கிறார் பி பி சியின் பொருளாதார செய்தி ஆசிரியர் ஆண்ட்ரூ வாக்கர்


பிரிட்டிஷ் பிரதமராக கார்டன் பிரவுன் பொறுப்பேற்பு

பிரிட்டனில், புதிய பிரதமராக கார்டன் பிரவுன் அவர்கள் முறைப்படி பதவியேற்றுள்ளார். பத்து ஆண்டுகளுக்கும் மேலாக பிரதமராகப் பதவி வகித்த டோனி பிளேயர் தனது பதவியை ராஜினாமா செய்த பிறகு கார்டன் பிரவுன் பதவியேற்றுள்ளார்.

அனைவரும் தங்களுக்குரிய நல்வாயப்புக்களை அடையக் கூடிய நிலையை உருவாக்குவது தனது முக்கியப் பணியாக இருக்கும் என்று எலிசபெத் ராணியால் புதிய அரசு அமைக்குமாறு அழைக்கப்பட்ட பிரவுன் கூறினார்.

தனது பதவியை ராஜினாமா செய்யும் முன்பாக, பிளேயர் நாடாளுமன்றத்தில் கேட்கப்பட்ட பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார். அவர் கேள்விகளுக்கு பதில் சொல்லி முடித்த பிறகு, உறுப்பினர்கள் அனைவரும் தங்கள் இருக்கைகளில் இருந்து எழுந்து நின்று கரகோஷம் எழுப்பினர். இது ஒரு அபூர்வ நிகழ்வாகும்.


மனைவியுடன் கார்டன் பிரவுன்மனைவியுடன் கார்டன் பிரவுன்

குடும்பத்தினருடன் கார்டன் பிரவுன்

குடும்பத்தினருடன் கார்டன் பிரவுன்


மத்திய கிழக்கு பகுதிக்கு சிறப்புத் தூதராக டோனி பிளையர் நியமனம்

டோனி பிளயரும் பாலத்தீன அதிபர் அப்பாஸும்
டோனி பிளயரும் பாலத்தீன அதிபர் அப்பாஸும்

பிரிட்டனின் பிரதமராக புதன்கிழமை பதவி விலகிய டோனி பிளயர் மத்திய கிழக்கு பகுதிக்கான சிறப்பு தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அமெரிக்கா, ரஷியா, ஐ நா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகிய நால்வர் அணியால், மத்திய கிழக்கு பகுதிக்கான சிறப்பு தூதர் என புதிதாக உருவாக்கப்பட்ட ஒரு பதவியில் டோனி பிளையர் நியமிக்கப்பட்டுள்ளார். இது குறித்து அதிகார்வபூர்வ அறிவிப்பை ஐநா வெளியிட்டுள்ளது.

டோனி பிளயருக்கு உதவியாக ஒரு சிறு வல்லுநர் குழு ஜெரூசலத்திலிருந்து செயல்படும். மத்திய கிழக்கு பகுதியில் இஸ்ரேலுக்கும் பாலத்தீனத்திற்கும் இடையே ஒரு அமைதியை ஏற்படுத்தி அந்தப் பிராந்தியத்தின் ஸ்திரத்தன்மையை வலுப்படுத்துவது டோனி பிளையரின் முக்கிய பணியாக இருக்கும்.

இந்தப் பொறுப்பிற்கு டோனி பிளையர் நியமிக்கப்பட்டுள்ள போதிலும், அரபு உலகத்தில் இது குறித்து கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன என பிபிசியின் செய்தியாளர்கள் கூறுகிறார்கள்.

இது குறித்த பெட்டகத்தை இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்


பிரிட்டனின் புதிய அமைச்சரவை அறிவிப்பு

புதிய அமைச்சரவையின் முதல் கூட்டம்
புதிய அமைச்சரவையின் முதல் கூட்டம்

பிரிட்டனின் புதிய பிரதமாரக பதவியேற்றுள்ள கார்டன் பிரவுன், தனது அலுவலின் முதல் முழு நாளான இன்று தனது புதிய அமைச்சரவையை அறிவித்தார்.

டோனி பிளையரிடமிருந்து நேற்று கார்டன் பிரவுன் பிரதமர் பொறுப்பை ஏற்றுக் கொண்டார்.

டோனி பிளயரின் அமைச்சரவையிலிருந்த அமைச்சர்கள் அனைவருமே கிட்டத்தட்ட மாற்றப்பட்டுள்ளனர்.

ஆலிஸ்ட்டர் டார்லிங் புதிய நிதியமைச்சாரிகிறார். புதிய உள்துறை அமைச்சாராக ஜாக்கி ஸ்மித் நியமிக்கப்பட்டிருக்கிறார். முதல் முறையாக ஒரு பெண்மணிக்கு உள்துறை அமைச்சர் பொறுப்பு அளிக்கப்பட்டிருக்கிறது.

வெளியுறவுத் துறையில் புதிய அமைச்சராகிறார் டேவிட் மிலிபேண்ட். இவர் முன்னதாக சுற்றுச் சூழல் துறையின் அமைச்சராக இருந்தவர்.

இராக் மீதான போர் மற்றும் லெபனான் மீது இஸ்ரேலின் தாக்குதல் ஆகியவை குறித்து தனிப்பட்ட முறையில் அவர் மாற்றுக் கருத்துக்களை கொண்டிருந்தார்.

பொறுமையும் பயனுள்ளதாகவும் இருக்கக் கூடிய இராஜதந்திர வழிகளை தாம் கையாளவுள்ளதாக அவர் உறுதியளித்துள்ளார்.


Posted in africa, Arab, Biosketch, Blair, Britain, Brown, Cabinet, Cameron, Chancellor, Charles, Commons, Commonwealth, Conflict, Conservative, Diana, Downing, Dubai, Egypt, Election, England, EU, Faces, Fatah, Finance, financial, Gordon, Gordon Brown, Government, Govt, Gulf, Hamas, Iraq, Ireland, Islam, Israel, Jerusalem, Kuwait, Labor, Labour, Leader, London, Mid-east, Mideast, NATO, Opposition, Palestine, Party, people, PM, Polls, Post, Prime Minister, Ruler, Russia, Saudi, Scotland, Shuffle, Thatcher, Tony, Tory, Treasury, UAE, UK, UN, War | Leave a Comment »

1857 & The statue of Neelan – Mohan (Dinamani)

Posted by Snapjudge மேல் மே 11, 2007

1857ஆம் ஆண்டும் நீலன் சிலையும்

பு.எ. மோகன்

1857ஆம் ஆண்டு நடைபெற்ற முதல் இந்திய சுதந்திரப் போர் எனப்படும் சிப்பாய்க்கலகத்திற்கு முன்னரே தென்னிந்தியா, குறிப்பாக தமிழகம் கங்கணம் கட்டிக்கொண்டு ஆங்கிலேயருக்கு எதிர்ப்பினை அறிவித்தது. இப் புரட்சியில்

  • மருதுபாண்டியர்,
  • வீரபாண்டிய கட்டபொம்மன்,
  • கோபால நாயக்கன்,
  • கேரளவர்மன் எதிர்ப்புப் போராட்டங்கள் அடங்கும்.
  • வேலூர்க் கலகம் 1806ஆம் ஆண்டு ஏற்பட்டது. இதனை 1857ஆம் ஆண்டு கிளர்ச்சிக்குச் செய்த முன்னோட்டம் என வீரசாவர்க்கர் கூறியுள்ளார். இதைத் தொடர்ந்து 1857 வரை ஏற்பட்ட கிளர்ச்சிகளை ஆங்கில கம்பெனி அரசு நசுக்கியது.

ஆங்கில கிழக்கிந்திய கம்பெனி, வணிக நிறுவனமாகத் தோன்றி 1801ஆம் ஆண்டு அரசியல் நிர்வாகத்தை வேரூன்றச் செய்தது. கர்நாடக மற்றும் மைசூர் போர்கள் அக் கம்பெனியின் ஆட்சியை தென்னிந்தியாவில் நிறுவின. 1857ஆம் ஆண்டு வடஇந்தியாவில் கிளர்ச்சி தோன்றி மே திங்கள் 11ஆம் நாள் தில்லியை ஆங்கிலேயர்கள் இழந்தனர். கம்பெனி நிர்வாகம் அலறத் தொடங்கியது. தென்னகம் இவ்வேள்விக்குப் பிறிதொரு வழியினைப் பின்பற்றத் தொடங்கியது. 1840ஆம் ஆண்டு ஆங்கில நாடாளுமன்ற உறுப்பினர் டன்பே செமியூர் குடியானவர்களின் குறைகளைக் கேட்க வந்தார். அவர் சென்னையின் அரசியல் விற்பன்னர் லட்சுமி நரசு செட்டியின் இல்லத்தில் தங்கினார், குறைகளைக் கேட்டு அறிந்தார்.

இதைத் தொடர்ந்து 1857ஆம் ஆண்டு கிளர்ச்சிக்கு 5 ஆண்டுகள் முன், சென்னையில் ஆளுநர் டிரிவிலியனது பிரிவு உபசார விழாவில் 7,500க்கும் மேற்பட்ட நபர்கள் கையெழுத்திட்ட வாழ்த்துப் பத்திரத்தில் “பொறுப்பாட்சி வேண்டும்’ என்ற கோரிக்கையைச் சென்னை மக்கள் முன் வைத்தனர். அதற்கு அவர் பொறுப்பு ஆட்சி நடைபெறுவதற்கு முதலில் எங்களது பிரதிநிதித்துவ நிறுவனங்களைப் பார்த்து எவ்வாறு இயக்க வேண்டும் என்று கற்றுக்கொள்ளுங்கள் என்றார். மேலும், பொதுமக்கள் ஒழுக்கம் இல்லையேல் தேசிய அரசாங்கம் சாத்தியமல்ல என்று கூறினார். அவருக்கு இக் கோரிக்கை அதிசயமாகத் தோன்றியது. மேலும், இந்நிகழ்வு (பொறுப்பாட்சி) காலதாமதம் ஆவதற்கு நீங்கள்தான் காரணம் என்றார். இந்நிகழ்ச்சி தென்னிந்தியாவில் குறிப்பாக சென்னையில் பொதுநல எண்ணம் உடையோர் அரசியல் ரீதியாக விடுதலை வேள்வியினைத் தொடங்கினர் என்பதுடன் தற்கால “கோரிக்கை மனு’ முறை மூலம் அதிகாரங்களைப் பெறும் முயற்சியாகவும் அமைந்தது.

இதே தென்னிந்தியாவிலிருந்துதான் 1857ஆம் ஆண்டு மே மாத இறுதியில் கர்னல் ஜேம்ஸ் நீலன் படையுடன் வங்கம் சென்று கிளர்ச்சியை அடக்கினார். அலாகாபாத், காசி ஆகிய நகரங்களைக் கைப்பற்றினார். அனைவரையும் சந்தேகக் கண்களுடன் பார்த்தார்.

ஐரோப்பியர் இறந்து ரத்தம் சிந்தியிருந்த இடங்களைத் தூய்மை செய்ய இந்தியர்களை குறிப்பாக பிராமணர்களைக் கட்டாயப்படுத்தினார். சிறுவர்களையும் விட்டு வைக்கவில்லை. அப் பணியைச் செய்தபோது மிக்க பயங்கரமான வெறுப்புடனும், மிக கோரமான நிறைவேற்றும் சக்தியுடனும் அவர்களையும் சந்தேகத்திற்குரியவர்களையும் தூக்கிலிட்டார்; “கருணை என்பது இறுதிச் செயல்’ என்றார். இத்தகைய நீலன் லக்னௌ நகரில் 1857ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 25ஆம் நாள் கிளர்ச்சியாளர்களுடன் வீதியில் மோதியபோது சுட்டுக் கொல்லப்பட்டார். ஆங்கில அரசு நீலனின் சேவையைப் போற்றியது. சென்னை மாகாண ஆங்கில அரசு ரூ. 12 ஆயிரம் செலவழித்து 1861ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நீலனின் சிலையைச் சென்னை ராஜதானியின் மவுண்ட் சாலை (அண்ணாசாலை)யில் நிறுவியது.

இந்தியக் கிளர்ச்சியாளர்களைக் கொன்று குவித்த நீலனின் சிலையை எழுபது ஆண்டுகளுக்கும் மேல் தமிழகம் பார்த்துக் கொண்டிருந்தது. 1927ஆம் ஆண்டு மதுரை நகரிலிருந்து சென்னை வந்த சீனிவாசவரதன், உத்வேகத்துடன் சிலையை அகற்ற வேண்டும் என முடிவு செய்தார். அவர் கண்முன் நீலனின் “சேவை’யும் இந்தியரின் வேதனையும் வந்தது. “தமிழக தொண்டர் படை’ என்ற அமைப்பு தமிழக காங்கிரஸின் செயல்பாடாக அமைந்தது. திருநெல்வேலி சோமையாஜுலு தலைமை ஏற்றார்.

ஆகஸ்ட் மாதம் 11ஆம் நாள் சிலை அகற்றும் அறப்போராட்டம் தொடங்கியது. குழந்தை, ராமநாதபுரம் குப்புசாமி, வடஆர்க்காடு என். அண்ணாமலை பிள்ளை, தென்னார்க்காடு தெய்வநாயக அய்யா, பண்ருட்டி முகமது சாலியா கலந்துகொண்டனர். நீலன் சிலையைத் தாக்கி, இந்திய தேசியக் கொடியினை வைத்தனர். முகமது சலியாவையும் சோமையாஜுலுவையும் காவல் துறை கைது செய்து சிறையில் அடைத்தது.

எனினும் இந்த அறப்போராட்டம் 1928ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை தொடர்ந்தது. அணி அணியாகத் தொண்டர்கள் பங்கேற்றனர். விருத்தாசலம் கே.வி. கணபதி, அவரது மனைவி அங்கச்சி கலந்துகொண்டு ரூ. 50 அபராதமும் சிறைத்தண்டனையும் பெற்றனர். இவர்களைத் தொடர்ந்து முருகையன், அவரது மனைவி அஞ்சலையம்மாள் மற்றும் அவர்களது 9 வயது மகள் அம்மாகண்ணு ஈடுபட்டனர். இவர்களும் சிறையில் அடைக்கப்பட்டனர். சிறுமியைக் காப்பகத்தில் வைத்தனர். அடுத்ததாக, கடலூர் சீனிவாசன் அதையடுத்து கன்னையா படையாச்சி, ஞானசுந்தரம், வேலுசாமி இராஜா, கோவிந்தராஜ் சிறை சென்றனர். சென்னையில் கபாலீசுவரர் கோயிலில் இதற்காகக் கூடிய கூட்டத்தில் பேசிய சிதம்பரம் நைனியப்ப பிள்ளை கைது செய்யப்பட்டார். இரண்டு ஆண்டு பாளையங்கோட்டை சிறை வாழ்வு அவருக்குக் கிடைத்தது. இவர் கைதினை எதிர்த்துத் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் பேசிய தெய்வநாயக அய்யா, “நீலன் கொடுங்கோலன் என்பதால் அகற்றக் கோருகிறோம்; அயல்நாட்டவர் என்பதால் அல்ல’ என கூறினார். இப்போராட்டத்தினைக் கண்ணுற்ற பி. பக்தவத்சலம் நாயுடு சென்னை சட்டமன்றத்தில் சிலை அகற்றும் தீர்மானத்தைக் கொண்டு வந்தார். அத் தீர்மானத்திற்கு 29 வாக்குகள் ஆதரித்தும், 67 வாக்குகள் எதிர்த்தும் 2 நடுநிலையாகவும் அமைந்தது. இதனைத் தொடர்ந்து கிருட்டிணமூர்த்தி, முகமதுசாலியா, ஆனந்த ஆச்சாரி, தெய்வநாயக அய்யா அறப் போராட்டத்தில் சிறை சென்றனர். இதில் ஆந்திரத்தின் பங்கினைத் தனியாக எழுத வேண்டும்.

1857ஆம் ஆண்டு நிகழ்வு நடந்து 80 ஆண்டுகள் கழித்து 1937ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 17ஆம் நாள், சென்னை மாகாண அரசின் பிரதமராக விளங்கிய சி. இராசகோபாலச்சாரியின் காங்கிரஸ் அமைச்சரவை மக்கள் பார்வையிலிருந்து சிலையினை அகற்ற வேண்டிய தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றிச் சிலையைச் சென்னை அருங்காட்சியகத்திடம் ஒப்படைத்தது. நீலன் புரிந்த வன்கொடுமைகள் நூறு ஆண்டுகள் நிறைவு பெறப் பத்து ஆண்டுகளுக்கு முன்னரே (1947) இந்தியா விடுதலை அடைந்தது. ஜான்சி ராணிகள், சாதாரண மனிதர்கள் என விடுதலை வேள்விக்குத் தமிழகம் ஈந்தது பெருமையுடைத்து. சாதி சமய வேறுபாடின்றி அவர்கள் தங்களை அர்ப்பணித்தனர். 1857ஆம் ஆண்டு விடுதலை வேள்வியின் வட இந்திய நிகழ்வுக்குத் தமிழகம் அளித்த பங்கு மிக சிறப்பானது; போற்றத்தக்கது.

(கட்டுரையாளர்: பேராசிரியர்,அண்ணாமலைப் பல்கலைக்கழகம், அண்ணாமலை நகர்.)

————————————————————————————–

பழங்கதை சொல்வதில் மகிமையில்லை

இரா. சோமசுந்தரம்

வேலூர் கோட்டையில் 1806, ஜூலை 10-ல் நடைபெற்ற சிப்பாய்க் கலகம்தான் இந்தியாவின் முதல் விடுதலைப் போர் என்று தமிழகத்தில் நாம் சொல்லிக் கொண்டாலும், வரலாற்று ஆசிரியர்களைப் பொருத்தவரை 1857-ல் நடந்த சிப்பாய் புரட்சிதான் இந்தியாவின் முதல் விடுதலைப் புரட்சி. தற்போது நாடு முழுவதும் 150-வது ஆண்டு விழா கொண்டாடப்படுகிறது.

ஆங்கிலேயரை போரில் எதிர்ப்பதும், ஆங்கிலேயர் இந்த மண்ணின் கலாசாரத்துக்கு எதிரானவர்கள் என்பதற்காக எதிர்ப்பதும் இருவேறு விஷயங்கள். ஆங்கிலேயர்கள் இந்தியாவுக்குள் வணிகம் செய்ய வந்த நாள் முதல் மன்னர்கள் பலர் எதிர்த்துள்ளனர். அவை அரசைக் கைப்பற்ற நினைப்பவருக்கும், அரசைக் காப்பாற்றிக்கொள்ள நினைப்பவருக்குமான போர்.

1857-ல் நடந்த ராணுவப் புரட்சி என்பது, ஆங்கிலேயர்கள் இந்த மண்ணின் கலாசாரத்துக்கும், மரபுகளுக்கும் எதிரானவர்கள் என்பதால், அவர்களின் நிழலில் நின்றுகொண்டே அவர்களை எதிர்த்த புரட்சி. ஒரு ராணுவ அமைப்புக்குள் இது நடைபெற்றபோதிலும் இந்தப் புரட்சியின் காரணிகளில் இந்திய மக்களின் எதிர்ப்புணர்வு இருந்ததால் இது முக்கியத்துவம் பெறுகிறது.

வேலூர் கோட்டையில் நடந்த சிப்பாய்க் கலகத்தில் இத்தகைய நோக்கம் இல்லை என்பது வரலாற்று ஆசிரியர்களின் எண்ணம். அது தவறு என்பது தமிழர்களின் கருத்து. வரலாற்று ஆசிரியர்களைப் பொருத்தவரை, வேலூர் கோட்டையில் நடந்தது ஒரு போர். அங்கு சிறை வைக்கப்பட்டிருந்த திப்பு சுல்தானின் குடும்பத்தினரை மீட்கவும், ஆங்கிலேயர்களைப் பழிவாங்கவும் கோட்டையைக் கைப்பற்ற நடத்தப்பட்ட போர்.

திப்பு சுல்தான் குடும்பத்தினர் வேலூர் கோட்டையில் சிறை வைக்கப்பட்டிருந்தது உண்மைதான். அவர்களோடு வந்த திப்பு சுல்தானின் படை வீரர்கள் கோட்டையைச் சுற்றிலும் இருந்த குடியிருப்புகளில் ஓராண்டுக்கும் மேலாக தங்கியிருந்து சரியான நேரம் பார்த்துக் காத்திருந்தனர் என்பதும் உண்மை.

அதே சமயம், வேலூர் கோட்டையில் ஆங்கிலேய ராணுவத்தில் இடம்பெற்ற சிப்பாய்களிடம் ஆங்கிலேயரின் கலாசார விரோத போக்குக்கு எதிர்ப்பு இருந்ததும் உண்மையே. இத்தகைய வீரர்களின் ஒத்துழைப்புடன்தான் திப்பு சுல்தானின் வீரர்கள் இக்கோட்டைக்குள் புகுந்து ஆங்கிலேயர்களைக் கொன்றனர்.

“”1857-ல் நடந்த முதல் விடுலைப் புரட்சிக்கான அனைத்து காரணிகளும் வேலூர் புரட்சியிலும் இருக்கின்றன. ஆதலால் 1806 ஆண்டு நடந்த வேலூர் கோட்டை சிப்பாய்க் கலகத்தை முதல் விடுதலைப் போர் என்பதாக எடுத்துக்கொள்ள வேண்டும்” என்று தமிழர்கள் கோருகின்றனர். ஆனால் இந்தக் கோரிக்கைக்கு எந்தவிதமான ஆதாரங்களும், ஆவணங்களும் இல்லை என்பதுதான் தமிழகத்தின் பலவீனமாக இருக்கிறது.

பின்னிரவில், சில மணி நேரங்களில் முறியடிக்கப்பட்ட இந்தக் கலகத்தைத் தொடங்கிய சிப்பாய் யார்? எந்தெந்த காரணங்களை முன்னிறுத்தி புரட்சி வெடித்தது? என்பதற்கான ஆவணங்கள் ஏதும் இல்லை.

இறந்த ஆங்கிலேய வீரர்கள் பெயர்கள் ஆவணங்களில் உள்ளன. ஆனால் இறந்துபோன ராணுவ சிப்பாய்கள், திப்பு சுல்தானின் முக்கிய படைத்தளபதிகள் தொடர்பான எந்தக் குறிப்புகளும் ஆவணம் என்று சொல்லக்கூடிய அளவில் ஏதுமில்லை. அவை ஆங்கிலேயரால் அழிக்கப்பட்டன. ஒரு சாதாரண லாக்-அப் மரணத்தை மறைக்க அல்லது “என்கவுன்ட்டரை’ நியாயப்படுத்த காவல்துறை ஆயிரம் ஜோடனைகள் செய்கிறபோது, ஆங்கிலேய அரசு ஆவணங்களை மறைத்ததில் வியப்பில்லை. ஆனாலும் உண்மைகள், மறைக்க முடியாதவையாக வாழையடி வாழையென தலைகாட்டுபவை.

நடந்த சம்பவங்களுக்கு மிகப் பெரிய சாட்சியும் ஆவணமும் வேலூர் கோட்டைதான். அகழியில் சடலங்கள் வீசப்பட்டதாகவும் கோட்டைக்குள் ஒரு பெருங்கிணற்றில் சடலங்கள் புதைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்தியத் தொல்லியல் துறையின் பொறுப்பில் உள்ள வேலூர் கோட்டையிலும் அதன் அகழியிலும் அகழாய்வு செய்தால் பல கூடுதல் சான்றுகள் கிடைக்கும். இந்த சான்றுகள் 1806 ஜூலை 10 இரவின் பேசப்படாத உண்மைகளைப் பேசும். அவை பேசினால்தான் தமிழர் பேச்சுக்கு மதிப்பு கிடைக்கும்.

சம்பவம் நடந்து 200 ஆண்டுகளே ஆன நிலையில், இங்கு அகழாய்வு செய்தால் இந்தச் சான்றுகள் இன்னும் “ரத்தமும் சதையுமாக’ உயிர்ப்புடன் கிடைக்க வாய்ப்புகள் உள்ளன.

Posted in 1857, Britain, British, defence, Defense, East India Company, English, Fight, Fighter, Flag, Freedom, Gandhi, Independence, India, London, Military, Mutiny, Nation, Neelan, Nelan, Sepia, Sepoy, Statue, Symbol, UK, Vellaloor, Vellalur, Vellore, Vellur, Velore | 2 Comments »

6000 Indians are imprisoned all over the World

Posted by Snapjudge மேல் மார்ச் 8, 2007

உலகம் முழுவதும் 6 ஆயிரம் இந்தியர்கள் பல்வேறு சிறைகளில் அடைப்பு

புது தில்லி, மார்ச் 9: உலகம் முழுவதும் 6,277 இந்தியர்கள் பல்வேறு நாடுகளில் உள்ள சிறைகளில் கைதிகளாக அடைக்கப்பட்டுள்ளனர்.

வெளியுறவுத் துறை அமைச்சகம் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் இந்த புள்ளிவிவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும் கூறியுள்ளதாவது:

பாகிஸ்தான் சிறைகளைவிட வங்கதேச சிறைகளில்தான் அதிக இந்தியர்கள் சிறைவாசம் அனுபவித்து வருகின்றனர். பாகிஸ்தான் சிறைகளில் 655 இந்தியர்கள் உள்ளனர். வங்கதேசத்தில் 893 பேர் அடைக்கப்பட்டுள்ளனர்.

குறிப்பாக சவூதி அரேபியாவில்தான் அதிகபட்சமாக 1,116 இந்தியர்கள் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். சிங்கப்பூர் (791), மலேசியா (545), பிரிட்டன் (239), அமெரிக்கா (194), குவைத் (106), பஹ்ரைன் (101), செக்கோஸ்லோவேகியா (37), ஸ்லோவேகியா (100) ஆகிய நாடுகளிலும் பல்வேறு காரணங்களுக்காக தண்டனை பெற்று இந்தியர்கள் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.

அந்தந்த நாடுகளில் உள்ள தூதரகங்கள் மற்றும் அதிகாரிகள் மூலமாக சிறைகளில் உள்ள இந்தியர்களை விரைவில் விடுவிப்பதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மேலும் விசாரணையை வேகப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முடுக்கிவிடுமாறு அந்தந்த நாடுகளை இந்தியா கேட்டுக்கொண்டுள்ளது.

மேலும் கைதிகளுக்கு சட்ட உதவிகளை வழங்குவது, கைதிகள் இந்தியாவில் உள்ள தங்கள் உறவினர்களுடன் பேசுவதற்கான ஏற்பாடுகளை செய்வது, கைதிகளை மனிதாபிமான முறையில் நடத்துவது, சட்டப்பூர்வமாக அவர்களுக்கு உள்ள உரிமைகளைப் பெற்றுத்தருவது, விடுதலையாகும் கைதிகளை இந்தியாவுக்கு கொண்டுவருவது ஆகிய நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது.

இந்தியாவிலிருந்து வேலைவாய்ப்புக்காக செல்லும் ஊழியர்களின் உரிமைக்காக வளைகுடா நாடுகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துகொள்ள அரசு யோசனை செய்துவருவதாகவும் அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Posted in Ambassador, Bahrain, Bangladesh, Britain, Conuslate, Correctional, Courts, Czech, employee, Employment, England, extradition, Free, Government, Gulf, Immigration, Imprison, India, Indians, Jail, Jobs, Law, London, Malaysia, Order, Pakistan, Police, Prison, Saudi Arabia, Singapore, Slovakia, Statistics, Treaty, UK, US, USA, World | Leave a Comment »

London Diary – Ira Murugan: Maiden Lane Visitor

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 26, 2007

லண்டன் டைரி: புரட்சியாளர் வாழ்ந்த மெய்டன் தெரு!

இரா. முருகன்

மூக்கு வழியே மூளையிலும் மனதிலும் புகுந்து கிறங்கடிக்கிற வாடையைச் சுற்றிலும் கிளப்பிக்கொண்டு பொன்னிறமாக வறுத்து, கையால் சுற்றும் இயந்திரத்தில் கரகரவென்று அரைத்து, கொதிக்கக் கொதிக்க வென்னீர் சேர்த்து “திக்’கான டீக்காஷனை ஃபில்ட்டரில் இறக்கி, பத்து நிமிஷத்துக்கு முன்னால் கறந்த பசும்பால் காய்ச்சிச் சேர்த்து, வில்லை வளைக்கிறதுபோல வீசி ஆற்றி, நுரைக்க நுரைக்க டம்ளரில் ஊற்றி நீட்டுகிற அற்புதமான காப்பிக் கடைகள் லண்டனில் திறந்தது கிட்டத்தட்ட இருநூற்றைம்பது ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்கதி. விக்டோரியா மகாராணி இங்கிலாந்தை ஆண்டபோது நாடு முச்சூடும் மும்முரமாக காப்பி குடித்துக் கொண்டிருந்தது. அல்லது மதுபானம் பருகிக் கொண்டிருந்தது. பல குடிமக்கள் பகல், இரவு என்று நேரத்தைப் பிரித்துக்கொண்டு இரண்டு கட்சியிலும் அரும்பணியாற்றிக் கொண்டிருந்தார்கள்.

கோவண்ட் தோட்டச் சுற்றுவட்டாரத்தில் அப்போது காப்பிக் கடை இல்லாத சந்து பொந்து ஒன்று கூடக் கிடையாது. பரபரப்பான போட்டிக்கு நடுவே காப்பிப் பிரியர்களைக் கடைக்கு வரவழைக்கப் புதுமையான சலுகைகள் அறிமுகப்படுத்தப்பட்டன.

“எங்க கடையில் காப்பி குடித்தால், ஒரு சுருட்டு இலவசம்’ என்று விளம்பரம் செய்கிற கடைக்கு நேர் எதிரே, “காப்பி குடித்தபடியே இலவசமாக தினசரிப் பத்திரிகை படியுங்கள்’ போர்ட் வைத்த கடை. “பெரிய சைஸ் டம்ளர் காப்பி ரெண்டு சல்லி, சின்ன சைஸ் டம்ளர் ஒரே ஒரு சல்லி’ என்று மினி மார்க்கெட்டிங்கில் காசை அள்ளிய கடை இப்படிப் பல. பால் பவுடர் என்ற சமாச்சாரத்தைக் கண்டுபிடித்ததும் அந்தச் சமயத்தில்தான். “”என்னத்துக்கு மெனக்கெடணும்? லண்டன் பால்காரங்களைக் கேட்டா சொல்லுவாங்களே, சுண்ணாம்புக் கட்டியைக் கரைச்சுத் தண்ணியை ஊத்திக் கொஞ்சம் பாலைச் சேர்த்தாப் போதுமே” என்று அந்தக்கால நகைச்சுவை பத்திரிகை “பஞ்ச்’ நையாண்டிக் கட்டுரை எழுதியதும் அப்போதுதான்.

கோவண்ட் தோட்டத்திலிருந்து தெற்கு வசமாகத் திரும்பி, ஒரு காலத்தில் காப்பிக் கடைகள் செழித்தோங்கிய மெய்டன் சந்தில் நடக்கிறேன். முட்டுச் சந்தாக முடிந்த இந்த மெய்டன் சந்து இரண்டு பக்கத்திலும் திறந்து, பக்கத்து சவுத்ஹாம்ப்டன் வீதியில் முடிய வழிவகுத்தவர் விக்டோரியா மகாராணி. நாடக ரசிகையான அவர் கோவண்ட் தோட்டப் பக்கத்து நாடகக் கொட்டகைக்கு சாரட் வண்டியில் வந்துவிட்டுத் திரும்பப் போக வசதியாக இப்படி மெய்டன் சந்துக்கு ராஜபாட்டை அந்தஸ்து ஏற்பட்டதோடு அந்தத் தெரு கூடுதல் பரபரப்புக்கு இடமானது.

நான் இப்போது நிற்கும் மெய்டன் சந்து முழுக்க சாப்பாட்டுக் கடைகள். அங்கங்கே வக்கீல் ஆபிஸ்கள். மெக்சிகோ, தாய்லாந்து, ஆஸ்திரேலியா, இந்தியா, பிரான்ஸ் என்று எல்லாத் தேசத்து உணவுக்கும் இந்தத் தெருவுக்கு வந்தால் போதும். பழைய காலக் காப்பிக் கடை ஏதும் மிச்சமிருக்கிறதா என்று ஒவ்வொரு வாசலிலும் ஆர்வத்தோடு நோக்கினால் ஏமாற்றம்தான். காப்பிக் கடைகள் எல்லாம் நம்மூருக்குக் குடிபெயர்ந்து ஏழெட்டு மாமாங்கமாவது ஆகியிருக்கும்.

எதிர்வசத்து ரூல்ஸ் ஓட்டல் போர்ட் கவனத்தை ஈர்க்கிறது -“லண்டனிலேயே பழைய ஓட்டல்’. 1798-ல் தொடங்கியதாம். அப்போது தயாரித்த மைசூர்பாகு எதுவும் ஷோகேஸில் தட்டுப்படவில்லை என்றாலும் இது உண்மையாக இருக்குமென்று நம்பலாம். சார்லஸ் டிக்கன்ஸ், கிரகாம் கிரீன் போன்ற பெரிய எழுத்தாளர்கள் வந்து இருந்து சாப்பிட்டுவிட்டுப் போன கடை என்று எழுதி வைத்திருக்கிறது. டிக்கன்ஸ் நாவல் எழுதியதோடு நிற்கவில்லை. மேடை போட்டு, தான் எழுதிய கதைகளை அதன் பாத்திரங்களாக மாறி வாசித்துக் காட்டவும் செய்தார். வாசகர்கள் காசு கொடுத்து டிக்கெட் எடுத்துக் குழுமி, அரங்கு நிறைந்து நடந்த இந்த மாதிரி நிகழ்ச்சிகளுக்கான பழைய நோட்டீசுகளை ரூல்ஸ் ஓட்டலில் காட்சியாக வைத்திருப்பதாகத் தெரிகிறது. அதைவிட சுவாரசியமான விஷயம், பிரிட்டீஷ் சாம்ராஜ்யத்தை ஆண்ட ஏழாம் எட்வர்ட் மன்னன் தன் காதலியான நாடக நடிகை லில்லி லாங்ட்ரீயை பிரதிதினமும் அந்தி சாய்ந்த பின்னர் இந்த ஓட்டலில் வைத்துத்தான் சந்திப்பானாம்.

“”நாலாவது டேபிள் தாடிக்காரப் பெரிசுக்கு மட்டன் சாப்ஸ், ரெண்டாவது டேபிள் இங்கிலாந்து ராஜாவுக்கும் அவருடைய ஜோடிக்கும் சிக்கன் ரோஸ்ட், எட்டாவது டேபிளுக்கு தக்காளி சூப்.” என்று அந்தக்கால ஓட்டல் வெயிட்டர்கள் மேற்படி ராஜரகசியத்தை சகஜமாக எடுத்துக்கொண்டு நடமாடியிருப்பார்கள் என்ற நினைவோடு நடையை எட்டிப் போடுகிறேன்.

மெய்டன் சந்து பத்தாம் எண் வீட்டு வாசலில் ஒரு வினாடி நிற்கிறேன். வால்ட்டேர் இருந்த வீடு என்று வெளியே பலகை அறிவிக்கிறது. பிரஞ்சுப் புரட்சிக்கு வித்திட்ட வால்ட்டேர் அது வெடிப்பதற்கு முன்னால் அகதியாகத் தஞ்சம் புகுந்தது லண்டனில்தான். அதுவும் இந்த கோவண்ட் கார்ட்டன் பகுதியும், மெய்டன் சந்து சூழ்நிலையும் ரொம்பப் பிடித்துப் போகவே இந்த வீட்டில் ஒரு வருடம் குடக்கூலி கொடுத்து வசித்து லண்டன் வாழ்க்கையை அனுபவித்தபடி சொந்த நாட்டில் புரட்சிக்குத் திட்டம் தீட்டியிருக்கிறார். ஒரு தேசத்தின் தலைவிதியையே மாற்றப்போகிற மனுஷர் நம்மிடையே இருக்கிறார் என்று தெரியாத அந்தக்கால மெய்டன் சந்துவாசிகள் அவரை அடிக்க ஒருதடவை படை பட்டாளமாகக் கிளம்பியிருக்கிறார்கள். பிரஞ்சுக்காரர்கள் தொடங்கி அன்னிய தேசத்துக்காரர்கள் யாரையும் கூடியிருக்கச் சம்மதிக்காத மனநிலையே இதற்குக் காரணம். இந்தச் சகிப்பின்மை இப்போதும் அவ்வப்போது ஷில்பா ஷெட்டி விவகாரம் போல் தலைகாட்டிக் கொண்டிருப்பது வேதனைக்குரிய விஷயம்.

மெய்டன் சந்தில் மணக்க மணக்க செண்ட் விற்கிற பென்னலிஹன் கடை கண்ணில் படுகிறது. இதுவும் நூற்றுச் சில்லறை வருடம் முற்பட்டதுதான். உள்ளே வாக்கிங் ஸ்டிக்கை அப்படியும் இப்படியும் வீசியபடி அலமாரிகளில் அடைத்து வைத்திருந்த செண்ட் போத்தல்களைப் பார்வையிட்டுக் கொண்டிருந்த கனவான் கூடக் கடை திறந்த நாள் முதல் வாடிக்கையாளராக இருப்பவர் என்று தோன்றுகிறது. கடைக்குள்ளே நுழைந்து ஒரு சுற்று சுற்றி வருகிறேன். இரண்டாம் உலக மகாயுத்த காலத்துச் சூழல் கனமாகச் சூழ்ந்து நிற்கிற பிரமை. தஞ்சாவூர் அத்தர்க் கடை, கோபுலு வரைந்த தில்லானா மோகனாம்பாள் ஓவியம், வாசனைப் புகையிலை, சர்ச்சிலின் சுருட்டு வாடை, ராத்திரி முழுக்க நடக்கிற நாதஸ்வரக் கச்சேரி என்று நான் பிறப்பதற்கு முந்திய 1940-கள் மாயமாகக் கிளர்ந்தெழுந்து புலன்களை ஆக்கிரமித்துக் கொள்கின்றன. மெய்டன் சந்தில் காலம் உறைந்து கிடக்கிறது.

மெல்ல நடந்து சவுத்ஹாம்ப்டன் தெருவில் திரும்புகிறேன். எதிரே நிற்கிற பழைய கட்டடம் ஒரு பத்திரிகை அலுவலமாக இருந்தது. ஆமாம், நூறு வருடம் முன்னால்தான். ஆர்தர் கானன்டாயில் உருவாக்கிய பிரபலமான துப்பறியும் நிபுணரான ஷெர்லாக் ஹோம்ஸ் கதாநாயகனாக இடம்பெற்ற கதைகள் வெளியான “தி ஸ்ட்ராண்ட்’ பத்திரிகை இந்தக் கட்டடத்திலிருந்துதான் பிரசுரமானது. ஷெர்லாக் ஹோம்ஸ் கதை வாசிக்க ஆர்வமான ரசிகர்கள் இங்கிலாந்திலும், கடல் கடந்து அமெரிக்காவிலும் அதிகம் என்பதால், கிட்டத்தட்ட லட்சக்கணக்கில் விற்ற பத்திரிகை அது. ஸ்ட்ராண்ட் பத்திரிகை அடித்து ஓய்ந்த நேரத்தில் அச்சு யந்திரத்தை சும்மா வைத்திருக்க வேண்டாமே, இன்னும் நாலு காசு பார்க்கலாமே என்ற நல்லெண்ணத்தோடு அங்கேயிருந்து ஒரு கிசுகிசு பத்திரிகையும் வெளியாகிக் கொண்டிருந்ததாம். அதை ஆரம்பித்தபோது முதல் நாள் கிசுகிசுவாக, “ஏழாம் எட்வர்ட் மன்னருக்குப் பிரபல நடிகையோடு தொடர்பு’தான் இருந்திருக்கும் என்று ஊகிக்கலாம்.

லண்டன் டைரி: பிசாசு பாடும் ராயல் ஓபரா ஹவுஸ்!

இரா.முருகன்

எட்டாம் ஹென்றி மன்னன் கொஞ்சம் அசடு. ஒன்றல்ல, நாலு முறை இந்தப் பேர்வழி கல்யாணம் செய்துகொண்டான் என்பதே போதும் இதை நிரூபிக்க. நாலு மாமியார்! இதிலும் உச்சகட்டக் கொடுமை அந்த நாலாவது மாமியார் அவ்வப்போது கனகுஷியாக ராகம் இழுத்துப் பாட வேறு செய்வார். பாட்டுப் பாடுவதில் ஆசை தீராமல், இறந்துபோன பின்பும் கூட, அதாவது இன்னமும் அவ்வப்போது நடுராத்திரி நேரத்தில் பிசாசாக அலைந்து மேடையேறிப் பாடிக்கொண்டிருக்கிறார். லண்டன் கோவண்ட் கார்டன் அருகே, ராயல் ஓபரா ஹவுஸ் என்ற பரந்து விரிந்த இசை நாடக அரங்கத்தில்தான் அந்தம்மா அவ்வப்போது நடுராத்திரிக் கச்சேரி நிகழ்த்திக் கொண்டிருப்பதாக லண்டன் வாழ் பிசாசு ரசிகர்கள் திடமாக நம்புகிறார்கள்.

கோவண்ட் தோட்டத்திலிருந்து தெற்கு நோக்கிப் போகும்போது கண்ணிற்படுகின்ற கட்டடம் ராயல் ஓபரா ஹவுஸ். நாட்டு மக்களுக்கு இசை நாடகம்(ஓபரா) என்ற நுண்கலையில் தேர்ந்த ரசனை ஏற்படுத்தும் நல்லெண்ணத்தில் அரசு உதவிப் பணம் கொடுக்க, இங்கே இருநூறு வருடத்துக்கு மேலாக அரங்கு நிறைந்த காட்சிகள் வெற்றிகரமாக நடந்து வருகின்றன. அப்படியான நிகழ்ச்சிகள் முடிந்து ராத்திரியில் ரசிகர்கள் ரயிலை, பஸ்ûஸப் பிடித்து வீட்டுக்குப் போய்ச் சேர்ந்ததற்கு அப்புறம் ஆளில்லாத அரங்கத்தில் எட்டாம் ஹென்றியின் மாமியார் ஆவி ரூபமாக உலவியபடி பாடுகிறாராம். ஆனால் அதைக் கேட்க அதிர்ஷ்டம் இல்லாத ரசிகர்கள் கச்சேரி முடிவதற்கு முன்பே கிளம்பிவிடுகிறார்கள். “அந்தத் தாட்டியான அம்மா பாடினாத்தான் முடிஞ்சதுன்னு அர்த்தம்’ (  It’s not over until the fat lady sings) என்பது அவர்களுக்குத் தெரியாதோ என்னமோ.

ராயல் ஓபரா ஹவுஸ் வாசலில் நிற்கும்போது நினைவுக்கு வரும் ஆங்கிலச் சொலவடை இது. இரண்டு அணிகள் பொறி பறக்க மோதும் விளையாட்டுகளின் போது, வர்ணனையாளர்கள் தோற்கிற மாதிரித் தோன்றும் தரப்பை உற்சாகப்படுத்த உதிர்க்கும் வாக்கியம். “இன்னும் நம்பிக்கை இருக்கு’ என்று இதற்குப் பொருள். ஓபரா ஹவுஸ் வாசலில் டிக்கட் வாங்க நிற்கும் டூரிஸ்டுகளின் நீண்ட க்யூவை ஆயாசத்தோடு பார்க்கிறேன். இன்றைய நிகழ்ச்சிக்கு டிக்கட் கிடைத்து, அது முடிந்து இங்கேயே தங்கியிருக்க சந்தர்ப்பமும் கிடைத்து, மாமியார்ப் பிசாசு பாடுவதைக் கேட்க வாய்ப்பும் எனக்குக் கிட்டும் என்ற நம்பிக்கை இல்லாததால் தெருவைக் கடக்கிறேன்.

ஓபரா ஹவுஸýக்கு எதிரே ஒரு பழைய அரசாங்கக் கட்டடம் அடைத்துப் பூட்டி வைத்திருக்கிறது. தூசியடைந்து கிடக்கும் இது ஒரு காவல் நிலையம். லண்டனில் ஏற்பட்ட முதல் அல்லது இரண்டாவது போலீஸ் ஸ்டேஷன் இந்த இடத்தில்தான் இயங்கிக் கொண்டிருந்ததாகத் தகவல்.

வில்லியம் அட்கின்ஸன் என்ற லண்டன் போலீஸ்காரர் காவல் துறையின் சரித்திரத்தில் மட்டுமில்லை, உலகச் சாதனையாளர்கள் பட்டியலிலும் இடம்பெற வேண்டியவர். 1829-ல் இவரை அரசு காவலராக நியமித்தபோது வழங்கப்பட்ட எண் கான்ஸ்டபிள் நம்பர் ஒன். “”எய்ட் நாட் டூ, இந்த ஆளை லாக்-அப்பிலே தள்ளு, த்ரீ நாட் செவன் ஜீப்புலே ஏறு” என்று சினிமா கிளைமாக்சில் காக்கியுடை இன்ஸ்பெக்டர்கள் அவசர வசனம் பேசுகிறபோது, இப்படி ஒற்றைப்படையில் “கான்ஸ்டபிள் நம்பர் ஒன்’ என்று கூப்பிட்டால் சகிக்காதுதான். அது தெரிந்தோ என்னமோ, இந்த முதல் கான்ஸ்டபிள் நியமனமான கொஞ்ச காலத்தில் பதவி விலகிவிட்டார். வேலைக்குச் சேர்ந்த முதல் நாள் அது. மிடுக்காகப் புத்தம்புது யூனிபாரம் அணிந்து, கோவண்ட் கார்டனைச் சுற்றி “பாரா உஷார்’ என்று ஜேப்படிக்காரர்களையும் இதரக் குற்றவாளிகளையும் தேடி மனுஷர் ரெண்டு மணி நேரம்தான் நடந்தார். கொஞ்சம் களைப்பு ஏற்படவே, எதிரே தெரிந்த கடையில் படியேறி குடிக்கத் தண்ணீர் கேட்டிருக்கிறார், பாவம். அவர் நுழைந்த இடம் மதுக்கடையானதால் பியர், விஸ்கி, பிராந்தி என்று பாட்டிலில் அடைத்துவரும் தண்ணீர்தான் கிடைத்தது. நிறுத்தி நிதானமாகத் தாகசாந்தி செய்துகொண்டு தள்ளாடியபடி நடந்து கடமையைத் தொடர்கிற நேரத்தில், அதிகாரிகள் கண்ணில் அவர் பட நேர்ந்தது துரதிர்ஷ்டம்தான். “நீ வேலைக்குச் சரிப்பட மாட்டே, வீட்டுக்குப் போய்யா..’ என்று முதல்நாள் வேலை முடிவதற்குள் சீட்டுக் கிழித்து அனுப்பப்பட்ட வில்லியம் அட்கின்ஸன் நினைவில் கண்கள் குளமாக, அடைத்துக் கிடக்கும் பழைய காவல் நிலையத்தைப் பார்க்கிறேன்.

“”இப்படி ஒரு புராதனமான கட்டடத்தைச் சும்மா அடைத்துப் பூட்டி வைத்திருக்காமல், மராமத்து செய்து இங்கே போலீஸ் மியூசியம் அமைக்கலாம். இல்லை இதை இடித்துவிட்டு, காவலர்களுக்கான குடியிருப்புகளைக் கட்டலாம். அரசு அலட்சியமாக இருப்பது ஏன்?” தொப்பியும் கம்பளிக் கோட்டும் தரித்த ஒரு நோஞ்சான் மனிதர் பூட்டிய காவல் நிலையப் படியில் நின்றபடி உரக்கச் சொல்லிக் கொண்டிருக்கிறார். அவரவர் தன்பாட்டுக்குத் தெருவில் நடந்து கொண்டிருக்கிறார்கள். இங்கே நின்று இப்படி தொண்டைத் தண்ணீரை வற்ற அடித்துக் கொள்ளாமல், பக்கிங்ஹாம் அரண்மனைப் பக்கம் ஹைட் பார்க் போய், அங்கே ஈசான மூலையில் பேச்சாளர்களுக்காக ஒதுக்கப்பட்ட பூங்கா பெஞ்சில் ஏறிநின்று இவர் சொற்பொழிவாற்றினால் ஒரு பத்து பேராவது கூடிநின்று கேட்பார்களே என்ற யோசனையோடு மருந்துச் சந்தில் (ட்ரூயரி லேன்) நுழைகிறேன்.

பிரிட்டனில் ஒரு பேட்டை பாக்கியில்லாமல் சூப்பர் மார்க்கெட் நடத்தும் செயின்ஸ்பரி நிறுவனம் முதன்முதலாகக் கடை போட்டது இங்கேதான். அந்தக் காலத்தில் இந்த மருந்துச் சந்தில் அங்கங்கே மாடு வளர்த்துப் பால் வியாபாரம் செய்துவந்திருக்கிறார்கள். மாட்டுச் சாணமும், வைக்கோலும் நிறைந்த இங்கே 1829-ல் சுத்தமும் சுகாதாரமுமாகப் பால் விற்கக் கடைதிறந்த பால்காரர்தான் செயின்ஸ்பரி. நகர எல்லைக்கு வெளியே மாடு வளர்த்துக் கறந்து, இங்கே கொண்டுவந்து நேர்த்தியாகப் போத்தலில் அடைத்து விற்பதோடு, புதிதாகச் சுட்ட ரொட்டி, நயம் வெண்ணெய் என்று சாப்பாட்டுச் சமாச்சாரங்களையும் அவர் விற்க ஆரம்பிக்க, அது நூற்றுக்கணக்கான செயின்ஸ்பரி கடைகளும், கோடிக்கணக்கில் பிசினசுமாகப் பெருகி வளர அதிக நாள் பிடிக்கவில்லை.

மருந்துச் சந்தின் அருகே பெட்ஃபோர்ட் தெருவில் இன்னொரு போட்டி சூப்பர் மார்க்கெட் நிறுவனமான டெஸ்கோவின் பரபரப்பான கடைவாசலில் நிற்கிறேன். என் கையில் இருக்கும் லண்டன் சரித்திரப் புத்தகத்தில் இந்த இடத்தைப் பற்றிக் குறித்திருக்கக் காரணம் டெஸ்கோ இல்லை. சூப்பர் மார்க்கெட் வருவதற்கு முன்னால் இங்கே வெற்றிகரமாக மோசஸ் சகோதரர்கள் நடத்தி வந்த தையல்கடையில் துணி தைத்துக் கிடைத்த வருமானத்தைவிட, சூட்டும் கோட்டும் வாடகைக்கு விட்டு அள்ளிய காசு கணிசமானதாம். கோவண்ட் தோட்டத்தைச் சுற்றியுள்ள நாடக, இசை அரங்குகளில் நடக்கும் நிகழ்ச்சிகளுக்கும், நிகழ்ச்சி முடிந்தபிறகு அந்தப் பகுதி ஓட்டல்களில் ராத்திரிச் சாப்பாட்டுக்குப் போகும் மேட்டுக்குடி மக்கள் உயர்தரமான சாயந்திர உடை தரித்துத்தான் வருவது வழக்கம். கணிசமான பணம் செலவழித்து இப்படி உடுப்பு வாங்க வசதியில்லாத சாமானியர்கள் வருடத்தில் ஒருமுறை, இரண்டு முறை இப்படி ஓபரா போகிறபோது, ஓட்டலில் படியேறி ரசித்துச் சாப்பிடும்போது மேட்டுக்குடியாகத் தங்களைக் காட்டிக் கொள்வதில் மும்முரமாக இருந்தார்கள். வாடகைக்கு உடுப்பு கொடுத்து அவர்களுக்கு உதவிக்கரம் நீட்டிய இந்த நிறுவனம் மூடப்பட்டதோடு ஒருநாள் கூத்து பார்க்க கனவான் வேடம் போடச் சந்தர்ப்பம் கிடைக்காமல் சாமானிய ரசனை ஓபராவையும், பாலேயையும் விட்டுவிலகி, கால்பந்தாட்டத்தில் புகுந்தது. ஒருவேளை டெஸ்கோ சூப்பர் மார்க்கெட் நினைத்தால் இங்கே திரும்ப வாடகை உடுப்பு வசதி வந்து, ராயல் ஓபரா ஹவுஸில் உள்ளூர்க் கூட்டம் திரும்பவர வாய்ப்பு கிடைக்கலாம். டோனி பிளேரைப் பார்க்கும்போது அவசியம் சொல்லவேண்டும் என்று மனதில் குறித்துக்கொண்டு வெலிங்க்டன் தெருவில் திரும்புகிறேன்.

Posted in Britain, Dickens, England, Era Murugan, Era Murukan, Hotel, Ira Murugan, Ira Murukan, Literature, London, London Diary, Opera, Queen, Rayarkaapiklub, Rayarkapiklub, RKK, Royal, Tourist, Travel, Travelog, Travelogue, UK | Leave a Comment »

London Diary – Era Murugan: Jacket Potato

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 23, 2007

லண்டன் டைரி: ஜாக்கெட் பொட்டேடோ!

இரா. முருகன்

“”இது யேது கண்றாவியை வில்க்கறதுக்குக் கடய் பரத்தியிருக்கானாம்?” அழுத்தமான பாலக்காட்டு உச்சரிப்பில் தமிழ்க்குரலைக் கேட்டபடி கோவண்ட் கார்டன் ஆப்பிள் மார்க்கெட் பகுதியில் நுழைகிறேன். காஞ்சிபுரம் பட்டுப் புடவை. காலில் கான்வாஷ் ஷூ, ஸ்வெட்டர், தலையில் பனிக்குல்லாய் தரித்த பாலக்காட்டு மாமி மெல்ல நடந்துகொண்டிருக்கிறார். இரண்டு பக்கத்திலும் கையைப் பிடித்து அழைத்துக்கொண்டு போவது ஜீன்ஸ், பிளேசர் அணிந்த மருமகளும் மகனும்.

முன்னால் “ஜாக்கெட் பொட்டேடோ -ஹாட் ஹாட்’ என்று சாக்குக் கட்டியில் பலகை வைத்த கடையில் கூட்டம் அலைமோதிக்கொண்டிருக்கிறது. நானும் அதில் கலக்கிறேன்.

“”போன வாரம் ஸ்காட்லாந்துலே இப்படித்தான் எய்ட் யார்ட்ஸ்னு போர்ட் போட்ட கடைக்குப் போனது ஓர்மை இருக்கோ. இதென்னவாக்கும் ஆறு கெஜமும் இல்லாதே, ஒன்பது கெஜமும் இல்லாதே நடுவாந்திரமா எட்டு கெஜத்திலே புடவையான்னு பார்த்தால், ஆம்பிளைகள் கட்டிக்கற பாவாடை விக்கற இடமாம்”.

ஸ்காட்லாந்து தேசிய உடையான எட்டு முழநீள கில்ட் விற்கிற கடையில் பாலக்காட்டம்மாள் நிற்கிறதைக் கற்பனை செய்தபடி இரண்டு பவுண்ட் கொடுத்து ஜாக்கெட் பொட்டேடோ வாங்குகிறேன். கையில் சுடச்சுட பிளாஸ்டிக் வட்டிலில், வேகவைத்த உருளைக்கிழங்கும் தயிரும். தோலை உரிக்காமல் வேகவைத்த உருளைக்கிழங்குதான் ஜாக்கெட் பொட்டேடோ என்ற பெயர் ரகசியம் புலனாகிறது…

நடைபாதையில் பரத்திய கடைகளும், கட்டடத்தில் அடுக்கிய கடைகளுமாக கோவண்ட் கார்டன் சனிக்கிழமை பிற்பகல் பரபரப்பில் மூழ்கிக் கிடக்கிறது. ஜூப்ளி மார்க்கெட், ஆப்பிள் மார்க்கெட் என்று பிரிந்த பகுதிகளில் சட்டென்று கண்ணில் படுவது சாப்பாடு விற்கும் கடைகள்தான். மார்க்கெட்டிலும், சுற்றுவட்டாரத் தெருக்களிலுமாகக் கிட்டத்தட்ட ஆயிரம் இடங்களில் வயிற்றுக்குத் தீனி கிடைக்கும் என்று நம்பகமான வட்டாரங்கள் திருப்தியாக ஏப்பம் விட்டபடி தகவல் தெரிவிக்கின்றன.

பியாஸô என்ற விஸ்தாரமான மார்க்கெட் முன் சதுக்கத்தில் ஆற அமர நடக்கிறேன். எல்லா ஐரோப்பிய நாட்டுத் தலைநகரங்களிலும், மாநகரங்களிலும் ரொட்டீன் விஷயமான இந்தமாதிரி நடைபாதை லண்டனுக்கு ரொம்பவே தாமதமாக, 1630-ல் தான் வந்தது. இனிகோ ஜோன்ஸ் என்ற கட்டடக்கலை நிபுணர் கோவண்ட் கார்டனை வடிவமைத்தபோது அதில் முக்கிய அங்கமானது பியாஸô. சாயந்திரம் ஒயிலாக நடைபயில இந்த விதானம், கடைகள், கோவண்ட் மார்க்கெட் பிரதேசம் முழுவதும் அமைந்த நாடகக் கொட்டகைகள், ஏற்கனவே சொல்லப்பட்ட சாப்பாட்டுக் கடைகள்…இப்படியான சமாச்சாரங்களுக்காகவே இந்தப் பகுதி அப்புறம் பிரசித்தமானது. அந்தப் பிரபலம் முன்னூறு வருடம் கழித்தும் இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

மார்க்கெட் வளாகத்தில் ஒரு கடை வாசலில் “விர்ஜின் ஆலிவ் ஆயில்’ விளம்பரம். அறுபது வருடமாக அங்கே கன்னித்தன்மை மாறாத ஆலிவ் எண்ணெய் விற்கிறார்களாம். மேல்விவரம் அறிய உள்ளே நுழைகிறேன். விர்ஜினிட்டி என்ற சொல் கன்னிமை ஆலிவ் எண்ணெயின் பரிசுத்தத்தைக் குறிக்கும் பரிபாஷையாம். “நயம் ஆலிவ் எண்ணெய் விலை சகாயமாகக் கிடைக்குது. வாங்கிட்டுப் போங்க’ என்கிறாள் கடையில் விற்பனைப் பெண். வாங்கி? “”சமைக்கலாம். மாலிஷ் செய்து குளிக்கலாம்.” சரிதான், சீயக்காய்த் தூள் இருக்கா என்று விசாரிக்கிறேன். இல்லையாம்.

“”மந்திரமில்லே, மாயமில்லே..” ஆங்கிலத்தில் உரக்கக் குரல் விட்டுக் கொண்டு கோட்டு சூட்டு அணிந்த ஒரு வித்தைக்காரர் கோவண்ட் கார்டன் நடைபாதையில் கூட்டம் சேர்த்துக் கொண்டிருக்கிறார். அவருக்கு முன்னால் சின்னதாக ஒரு பழைய பெட்டி. “” சிகரெட் குடிக்கிறவங்க ஆளுக்கு ஒரு சிகரெட்டை விட்டெறியுங்க.” வித்தைக்காரர் கேட்டுக்கொண்டபடி ஏழெட்டு சிகரெட் முன்னால் விழுகிறது. எடுத்து பாக்கெட்டில் வைத்துக்கொண்டு அதில் ஒன்றைப் புகைத்து உள்ளங்கையில் வைத்து அழுத்துகிறார். கையை விரிக்கும்போது சிகரெட் மாயமாக மறைந்துவிட்டிருப்பதைப் பார்த்துக் கூட்டம் கை தட்டுகிறது. பெட்டியில் பத்து பென்ஸ், ஐந்து பென்ஸ் என்று சில்லறை விழுகிற சத்தம். “” பாதி வித்தைக்கு நடுவிலே போகாதே…” நழுவுகிற பார்வையாளர்களைப் பார்த்துச் சத்தம் போடுகிறார் வித்தைக்காரர். “”போனா, ரத்தம் கக்கிச் செத்துடுவீங்க, ஆமா!” நான் சேர்த்துக் கொள்கிறேன். அடுத்த தாயத்து விற்பனை தொடங்குவாரோ என்று யோசித்தபடி நடையை எட்டிப் போடுகிறேன்.

டீத்தூள் மட்டும் விற்க என்று ஒரு கடை. சீனாவிலிருந்து வந்த மல்லிகைப்பூ வாசம் அடிக்கும் டீ, தாய்லாந்து கிராம்பு டீ, கொழும்பு டீ என்று அடுக்கிய கடையில் இரண்டு பெரிய அலமாரி முழுக்க அசாம், டார்ஜிலிங், நீலகிரி என்று சகலவிதமான இந்திய டீத்தூளும் கொஞ்சம் அதிக விலைக்குக் கிடைக்கிறதாகத் தெரிகிறது. பக்கத்துக் கடையில் சக்கரம் வைத்த வண்டியில் வித்தியாசமாக ஏதோ கண்ணில்பட ஒரு வினாடி நிற்கிறேன். நாற்காலியில் உட்கார்ந்து ஸ்வெட்டர் பின்னிக்கொண்டிருக்கும் வயதான பெண்மணிகள். நாயைக் கையில் பிடித்துக் கூட்டிக்கொண்டு வாக்கிங் ஸ்டிக்கோடு நடக்கிற வயோதிகர்கள், நீளத் தொப்பி தரித்த கனவான்கள், தரையில் புரளும் பாவாடை தரித்த அழகிய கன்னியர். எல்லோரும் நூறு வருடத்துக்கு முற்பட்டவர்கள். முக்கால் அடி உயரத்துக்கு மேல் யாரும் இல்லை. தத்ரூபமான இந்த மரச் சிற்பங்களை வண்டியில் வைத்து விற்றுக் கொண்டிருக்கும் கடைக்காரரை விலை விசாரிக்கிறேன். ஒவ்வொன்றும் முப்பது பவுண்டாம். மூவாயிரம் ரூபாய்க்குப் பொம்மை வாங்கி விளையாடுகிற வயசா என்ன? மேலே நடக்கிறேன்.

கோவண்ட் கார்டனுக்கு மேலதிக அழகு சேர்க்கும் லண்டன் போக்குவரத்து மியூசியம் அடைத்துப் பூட்டியிருக்கிறது. பதினெட்டு, பத்தொன்பதாம் நூற்றாண்டு லண்டன் தெருக்களை அவற்றின் கூட்டம், குதிரை பூட்டிய கோச், டிராம் வண்டிகளோடு தத்ரூபமாகச் சித்திரிக்கும் மியூசியத்தைப் புதுப்பித்துக் கொண்டிருக்கிறார்களாம். ஆனாலும் மியூசியம் கடை திறந்திருக்கிறது. பழைய சிவப்பு லண்டன் மாநகர பஸ் படம் போட்ட டீ ஷர்ட் விலை விசாரிக்கும்போது -அதுவும் மூவாயிரம் ரூபாய் சொச்சம்தான். கடைக்குள் ஒரு சென்டிமீட்டர் விடாமல் ஆக்கிரமித்துக்கொண்டு சகலமானதும் வாங்குகிறவர்கள் எந்த நாட்டு டூரிஸ்டுகள்?

போக்குவரத்து மியூசிய வாசலில் சீன இசைக் கலைஞர் ஒருத்தர் முன்னால் பெட்டியைத் திறந்துவைத்துவிட்டு, புல்லாங்குழலில் இசை பொழிந்து கொண்டிருக்கிறார். காதல் தோல்வியில் முடிந்த சோகத்தையோ, அல்லது கல்யாணத்தில் தொடர்ந்த மகா சோகத்தையோ உருக்கமாக இசைக்கும் அவருக்கு விழுந்த காசுகள் மொத்தமே ஐம்பது பென்ஸ்தான் என்பது இன்னொரு சோகம்.

ஆனாலும் கோவண்ட் தோட்டத்துக்கு வெளியே, பாதாள ரயில் நிலையத்துக்குப் போகிற வழியில் நிற்கிற சிலைக்கு முன்னால் ஏகப்பட்ட கூட்டம். அலுமினியம் பெயின்ட்டைப் பூசிக்கொண்டு ஆடாமல் அசங்காமல் மணிக்கணக்காகச் சிலையாக நிற்கும் கலைஞருக்கு முன் காசுகள் விழுந்தபடி இருக்கின்றன.

“”உங்க அப்பா திண்ணையிலே பரப்பிரம்மா, அனங்காதே உக்கார்ந்து பேப்பர் வாசிக்கிற மாதிரி இருக்கு, கேட்டியோ..”-பின்னால் குரல். பாலக்காடுதான்.

Posted in Britain, Engaland, Era Murugan, Era Murukan, Ira Murugan, Ira Murukan, Iraa Murugan, London Diary, Marketplace, markets, Potato, Sellers, Shops, Tour, Travleog, Travleogue, UK | 1 Comment »

Britain to reduce troop strength in Iraq; Denmark pulling out

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 21, 2007

இராக்கில் இருந்து பிரிட்டன் படைகள் திரும்ப அழைப்பு

இராக்கில் இருந்து பெருந்தொகையான துருப்புக்களை திரும்ப அழைத்துக் கொள்வது குறித்து பிரிட்டானியப் பிரதமர் டோனி பிளேயர் முதல் முறையாக அறிவித்துள்ளார்.

இராக்கின் தென் பகுதி நகரான பாஸ்ராவில் உள்ள 7 ஆயிரத்துக்கும் அதிகமான பிரிட்டிஷ் துருப்புக்கள் அடுத்த சில மாதங்களில் 5 ஆயிரத்து ஐநூறாக குறைக்கப்படுவார்கள் என்று டோனி பிளேயர் பிரித்தானிய நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

ஆனாலும் இராக்கில் பிரிட்டிஷ் துருப்புக்கள் ஆற்ற வேண்டிய கடமைகள் இருக்கும் வரை அடுத்த ஆண்டிலும் அவர்கள் அஙக்கு தங்கியிருப்பார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

பாஸ்ராவில் உள்ள பாதுகாப்பு நிலை பாக்தாத்தை விட மிகவும் வேறுபட்டது என்றும், கட்டுக்கடங்காத பயங்கரவாத வெறியாட்டத்தில் பாக்தாத் சிக்கியுள்ளது என்றும் பிரதமர் விவரித்தார்.

பாஸ்ராவின் இன்றைய நிலைமை தனது விருப்பப்படி இல்லாவிட்டாலும், பாஸ்ராவின் வரலாற்றின் அடுத்த அத்தியாயத்தை எழுதவேண்டிய பொறுப்பு, இராக்கியர்களையே சாரும் என்றும் பிரதமர் டோனி பிளேயர் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.


இராக்கில் இருந்து டென்மார்க்கும் படைகளை திரும்ப பெறுகிறது

இராக்கில் டென்மார்க் துருப்புகள்
இராக்கில் டென்மார்க் துருப்புகள்

இராக்கிலிருந்து தனது தரைப்படை துருப்புக்களை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் முடிவதற்குள் திருப்பி அழைத்துக் கொள்ளப் போவதாக டென்மார்க் அறிவித்துள்ளது. செய்தி மாநாடு ஒன்றில் இந்த அறிவிப்பை டென்மார்க் பிரதமர் வெளியிட்டார்.

அடுத்த மே மாதத்திற்குள் டென்மார்க்கின் 460 இராணுவத்தினரும் திருப்பி அழைக்கப்படுவார்கள் என்று அவர் குறிப்பிட்டார்.

ஆனாலும் ஹெலிகாப்டர் படைப் பிரிவு அங்கு தொடர்ந்து தங்கியிருக்கும் என்றும் அவர் தெரிவித்தார். பிரிட்டிஷ் தலைமையில் டென்மார்க் படையினர் பணியாற்றிவரும் தெற்கு இராக்கில் உள்ள பாஸ்ராவின் நிலைமை சீரடைந்து இருப்பதாகவும் டென்மார்க் பிரதமர் குறிப்பிட்டார்.


Posted in Al-Queda, Anbar, Anders Fogh Rasmussen, Army, Australia, Baghdad, Basra, Britain, dead, Denmark, Fight, Georgia, Iran, Iraq, Islam, London, Moslem, Muqtada al-Sadr, Muslim, Navy, Nouri al-Maliki, Peace, PM, Poland, Romania, Saddam, Shia, Soldiers, South Korea, Sunni, Terrorism, Tony Blair, troops, UK, UN, US, USA, Violence, War | Leave a Comment »

Shilpa Shetty Wins Celebrity Big Brother With 67 Percent of Votes

Posted by Snapjudge மேல் ஜனவரி 29, 2007

பிக்பிரதர் நிகழ்ச்சி: ஷில்பா ஷெட்டி அபார வெற்றி

லண்டன், ஜன. 29-

இங்கிலாந்தில் “சானல் 4” தொலைக்காட்சி “பிக்பிரதர்” என்ற வித்தியாசமான டி.வி. நிகழ்ச்சி ஒன்றை நடத்தியது. தனி அறையில் 26 நாட்களுக்கு 14 பிரபலங்களை தங்க வைத்து, அவர்களது தினசரி நடவடிக்கைகளை ஒளிபரப்பு செய்தனர். இதில் பிரபல இந்தி நடிகை ஷில்பா ஷெட்டியும் பங்கேற்றார்.

கடந்த 3-ந் தேதி தொடங்கிய இந்த நிகழ்ச்சிக்கு இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய நாடு களின் நேயர்களிடம் அதிக வரவேற்பு கிடைத்தது. திடீரென இந்த நிகழ்ச்சி டி.வி. நடிகை ஜேக்கூடியால் சர்ச் சைக்குள்ளானது.

நடிகை ஷில்பா ஷெட்டியை ஜேக்கூடி “நாய்” என இன வெறியுடன் திட்டினார். பப்படம், ஆங்கிலம் பேச தெரியாது என்றும் ஷில்பாவை அவர் கிண்டல் செய்தார். இந்த இனவெறி பேச்சுக்கு உலகம் முழுவதும் எதிர்ப்பு கிளம்பியது.

ஜேக்கூடியை கண்டித்து சுமார் 45 ஆயிரம் பேர் புகார் செய்தனர். இந்த நிலை யில் போட்டி விதிகளின் படி நேயர்களிடம் ஓட்டெடுப்பு நடத்தப்பட்டது.

குறைந்த ஓட்டு பெறுபவர்கள் போட்டியில் இருந்து விலக்கப்பட்டனர்.

ஷில்பா ஷெட்டியை திட்டிய காரணத்தால் நேயர்களிடம் வெறுப்பை சம்பாதித்திருந்த ஜேக்கூடிக்கு எதிராக மக்கள் வாக்களித்தனர். இதனால் நடிகை ஜேக்கூடி “பிக்பிரதர்” நிகழ்ச்சியில் இருந்து வெளி யேற்றப்பட்டார்.

ஜேக் கூடியுடன் சேர்ந்து ஷில்பா ஷெட்டியை கிண்டல் செய்த ஜோ ஓமிரா, டேனிலி லாயிட் ஆகியோரும் அடுத்தடுத்து நேயர்களிடம் ஆதரவு பெற இயலாமல் வெளியேற்றினர். இதனால் நடிகை ஷில்பா ஷெட்டி மிக, மிக எளிதாக இறுதிச் சுற்றுக்கு முன்னேறினார்.

14 போட்டியாளர்களில் இறுதிச் சுற்றுக்கு 6 பேர் தகுதி பெற்றனர். நடிகை ஷில்பா ஷெட்டி, ஜெர்மையன் ஜாக்சன், டிர்க்பெனடிக், இயன் எச்.வாட்கின்ஸ், டேனிலி லாயிட், ஜேக்டுவிட் ஆகியோர் அந்த 6 பேராகும். இவர்களில் இயன் எச்.வாட்கின்ஸ், டேனிலி லாயட், ஜேக்டுவிட் ஆகிய மூவரும் சனிக்கிழமை நீக்கப்பட்டனர்.

இதைத் தொடர்ந்து நடிகை ஷில்பா ஷெட்டி, ஜெர்மைன் ஜாக்சன், டிர்க் பெனடிக் ஆகிய மூவரிடமும் பலத்த போட்டி நிலவியது. இவர்களில் இங்கிலாந்து நேயர்களிடம் அதிக ஓட்டு பெறப்போவது யார் என்பதில் சஸ்பென்ஸ் நிலவியது.

பெரும்பாலானவர்கள் டிர்க் பெனடிக் இறுதிச் சுற்றில் வெல்ல வாய்ப்பு இருப்பதாக கருதினார்கள். ஆனால் இங்கிலாந்தில் வசிக்கும் ஆசிய நாட்டுக்காரர்களும், இங்கிலாந்து நாட்டுக்காரர்களும் ஷில்பா ஷெட்டிக்கு ஆதரவாக ஓட்டுப் போட்டு அவரை வெற்றி பெறச் செய்தனர்.

`பிக்பிரதர்’ நிகழ்ச்சியின் இறுதிச் சுற்றில் ஒவ்வொரு வருக்கும் கிடைத்த ஓட்டுகள் விவரம் இந்திய நேரப்படி இன்று அதிகாலை 3 மணிக்கு அறிவிக்கப்பட்டது. ஷில்பா ஷெட்டி 63சதவீத ஓட்டுக் கள் பெற்று பிக்பிரதர் நிகழ்ச் சியில் முதல் இடத்தைப் பிடித்து அபார வெற்றி பெற்றார்.

இந்தியர் ஒருவர் வெளிநாட்டில் இந்த கவுரவத்தை பெறுவது இதுவே முதல் தடவையாகும். 2-வது இடத்தை ஜெர்மைன் ஜாக்சன் பிடித்தார். இவர் பிரபல பாப் இசை பாடகர் மைக்கேல் ஜாக்சனின் சகோதரர் ஆவார்.

3-வது இடத்தை டிர்க் பெனடிக் பெற்றார். போட்டி யில் வெல்வார் என்று எதிர் பார்க்கப்பட்ட இவரை மக் கள் 3-வது இடத்துக்கு தள்ளி விட்டனர். ஷில்பா ஷெட் டியுடன் ஒப்பிடுகையில் 2-வது, 3-வது இடத்தை பிடித்தவர்களுக்கு மிக, மிக குறைவான வாக்குகளே கிடைத்திருந்தன.

தோல்வி அடைந்த இயன் வாட்கின்ஸ் 5.3 சதவீதம், டேனிலி லாயிட் 3.3 சதவீதம், ஜேக் டூவிட் 3.2 சதவீதம் ஓட் டுக்களையே பெற முடிந்தது.

63 சதவீத ஓட்டுக்களுடன் ஷில்பா முதல் இடத்தைப் பிடித்து இருப்பதாக அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப்பட்டதும் ஷில்பா `ஓ’ என்று ஆச்சரியத்தில் குரல் எழுப்பியபடி கைக்கூப்பி வணங்கினார்.

“சிக்கன் கறி வென்று விட்டது. உங்கள் அனைவருக்கும் நன்றி” என்று உணர்ச்சிப் பொங்க கூறினார்.

அவர் கண் களில் இருந்து ஆனந்த கண்ணீர் வழிந்தது. ஜெர்மைன் ஜாக்சனும், டிர்க் பெனடிக்கும் ஷில்பாவை கட்டித் தழுவி வாழ்த்துத் தெரிவித்தனர்.

இதையடுத்து ஷில்பா ஷெட்டி 26 நாட்களுக்குப் பிறகு தன் வீட்டு அறைக்குள் இருந்து வெளியில் வந்தார். ஆயிரக்கணக்கானோர் அங்கு திரண்டு நின்று ஷில்பாவை வரவேற்றனர். இவை அனைத்தும் சானல்-4ல் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டன.

`பிக்பிரதர்’ டி.வி. நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற ஷில்பா ஷெட்டிக்கு பரிசுத் தொகையாக ரூ.3 கோடி (300,000 pounds (600,000 dollars)) வழங்கப்படுகிறது. இது தவிர அவருக்கு ஏராளமான நிறுவனங்கள் பரிசுகளை வாரி வழங்குகின்றன. புதிய ஒப்பந்தங்களும் ஷில்பாவுக்கு கிடைக்கும். குறைந்த பட்சம் ரூ.40 கோடி அளவுக்கு அவருக்கு பரிசுகள் குவியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பரிசு மழையில் நனைந்து கொண்டிருக்கும் ஷில்பாவுக்கு உலகம் முழுவதிலும் இருந்து வாழ்த்துக்களும் குவிந்தபடி உள்ளன. இது அவரை திக்குமுக்காட வைத்துள்ளது.

பிக்பிரதர் நிகழ்ச்சியில் வெற்றி பெற்றது குறித்து ஷில்பா ஷெட்டி டயரி ரூமில் அமர்ந்து பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

இங்கிலாந்து நாட்டு மக்களுக்கு நான் முதலில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். என் நாடு (இந்தியா) பெரு மைப்படும் வகையில் வெற்றிக்கு உதவிய ஒவ்வொருவருக்கும் நன்றி.

இந்த போட்டி உண்மையில் ராட்டினத்தில் பயணம் செய்வது போல இருந்தது. உயர்வும், தாழ்வும் எனக்கு பல விஷயங்களை உணர்த்தின. நான் ஏதோ பிரச்சினையை ஏற்படுத்தி விட்டதாக இங்குள்ளவர்கள் கருதக்கூடாது.

என்னை ஜேக்கூடி இன வெறியுடன் திட்டியதாக கூறியது தவறு. அவர் இன வெறி பிடித்தவர் அல்ல. இதை என்னால் உறுதியாக சொல்ல முடியும்.

ஜேக்கூடி சற்று ஆவேசமாக பேசக்கூடியவர். எளிதில் கோபப்படுபவர். அதுதான் அவருக்கு எதிராக பிரச்சினையை ஏற்படுத்தி விட்டது. இதை இனி அனைவரும் மறந்து விட விரும்புகிறேன்.

எவ்வளவு தான் பிரபல மானவராக இருந்தாலும் தவறு செய்வது சகஜம்தான். எல்லோரும் மனிதர்கள் தானே. நாம் அனைவரும் தவறு செய்பவர்கள்தான். எனவே ஜேக்கூடியை குறை சொல்லக்கூடாது.

இங்கிலாந்தில் உள்ள எந்த ஒரு நபருக்கும் பிரச்சினையை ஏற்படுத்தி கொடுத்து விட்டு நான் என் நாட்டுக்கு திரும்ப விரும்பவில்லை.

இவ்வாறு நடிகை ஷில்பா ஷெட்டி கூறினார்.

Posted in Actress, Big Brother, Britain, Celebrity, Drama, London, racism, Reality Show, Shilpa Shetty, UK | Leave a Comment »

Haniya cuts short Arab tour amid Hamas-Fatah tension

Posted by Snapjudge மேல் திசெம்பர் 14, 2006

பாலத்தீனப் பிரதமர் காசா செல்வதை தடுத்தது இஸ்ரேல்

பாலத்தீனப் பிரதமர் இஸ்மாயில் ஹனியா
பாலத்தீனப் பிரதமர் இஸ்மாயில் ஹனியா

மத்திய கிழக்கில் காசாவிற்கும் எகிப்திற்கும் இடையிலுள்ள ரஃபாஹ் பாதையை ஹமாஸ் தீவிரவாதிகள் தகர்த்துள்ளார்கள்.

பாலத்தீனப் பிரதமர் இஸ்மாயில் ஹனியா காசாவிற்கு திரும்புவதை தடுப்பதற்காக இஸ்ரேல் அந்த எல்லைப்புறப் பாதையை மூடியது.

அந்த எல்லையின் பாலத்தீனப் பகுதியில் உள்ள நிலையை தகர்த்து சென்ற ஹமாஸ் தீவிரவாதிகள் அவர்கள் தற்போது அதனை முழுமையாக தமது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளார்கள்.

காசா பகுதிக்குள் 30 மில்லியன் டாலர் பணத்தை இஸ்மாயில் ஹனியா எடுத்துச் செல்வதை தவிர்க்கும் முகமாகத்தான் இந்த எல்லை மூடப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் மற்றும் மேற்கத்திய நாடுகள் விதித்துள்ள பொருளாதாரத் தடை காரணமாக ஹமாஸ் தலைமையிலான பாலத்தீன நிர்வாகம் தனது பல ஆயிரக்கணக்கான ஊழியர்களுக்கு ஊதியம் கொடுக்க இயலாத நிலையில் உள்ளது.

————————————————————————————–

புதுப்பிக்கப்பட்ட நாள்: 13 ஜூன், 2007 – பிரசுர நேரம் 16:40 ஜிஎம்டி

காசா மோதல்கள் மேற்குக்கரைக்கும் பரவியுள்ளன

காசாவில் நடக்கும் கடுமையான மோதல்கள் இப்போது மேற்குக்கரை நகரான நப்லஸுக்கும் பரவியுள்ளன.

அங்கு ஹமாஸ் அமைப்பினருக்கும், பத்தா அமைப்புக்கு ஆதரவான அல் அக்ஸா பிரிகேட் உறுப்பினர்களுக்கும் இடையில் மோசமான துப்பாக்கி மோதல்கள் இடம்பெற்றதை பிபிசி செய்தியாளர் பார்த்திருக்கிறார்.

காசாவில், பிராந்தியம் முழுவதும் ஏற்படுத்தப்பட்டுள்ள வீதித்தடைகள், தான் அந்த ஸ்தம்பித நிலையில் இருந்து தப்பிவருவதற்கு தடையாக இருந்ததாக உள்ளூர்வாசி ஒருவர் பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.

தெற்கு காசாவில் பத்தா அமைப்பின் கட்டுப்பாட்டில் உள்ள பாதுகாப்புச் சேவையின் கட்டிடம் ஒன்றை ஹமாஸ் அமைப்பினர் வெடிவைத்துத் தகர்த்ததில் குறைந்தது 5 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

காசாவைக் கைப்பற்றுவதற்கான நடவடிக்கை ஒன்றில் ஈடுபட்டுள்ளதாக ஹமாஸ் அமைப்பின் மீது, ஐக்கிய நாடுகள் சபையின் மத்திய கிழக்குக்கான மூத்த இணைப்பாளர் மைக்கல் வில்லியம்ஸ் குற்றம் சாட்டியுள்ளார்.


சண்டைகளை நிறுத்துமாறு பல தரப்பினரும் கோரிக்கை

 

காசாவில் தற்போது இடம்பெறுகின்ற, குறைந்தது 60 பேர் பலியாகக் காரணமான சண்டைகளை, மூடத்தனமான சண்டை என்று வர்ணித்துள்ள பாலத்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸ் அவர்கள், சண்டையில் ஈடுபடும் தரப்பினரை மோதலை நிறுத்துமாறு கோரியுள்ளார்.

பத்தா அமைப்புக்குத் தலைமை தாங்கும் அப்பாஸ் அவர்கள், இந்த வன்செயல்கள் காசாவை ஒரு வீழ்ச்சி நிலைக்கு இட்டுச் செல்லலாம் என்று கூறியுள்ளார்.

இந்தச் சண்டைகள் பாலத்தீனர்களின் லட்சியத்துக்கு ஒரு அழிவாக அமையும் என்று அரபு லீக்கின் தலைவரான அம்ர் மௌஸா கூறியுள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியம், ஐக்கிய நாடுகள் சபை மற்றும் ரஷ்யா ஆகியவையும் மோதல் நிறுத்தம் தேவை என்று கோரியுள்ளன.

காசாவில் தமது பாலத்தீன நிவாரணப் பணியாளர்கள் இருவர் சுட்டுக்கொல்லப்பட்டதை அடுத்து, அங்கு தமது நிவாரணப் பணிகளை இடைநிறுத்துவதாக ஐக்கிய நாடுகள் சபை கூறியுள்ளது.


இஸ்ரேலிய அதிபரானார் ஷிமொன் பெரஸ்

பெரஸ்
பெரஸ்

இஸ்ரேலின் மூத்த அரசியல்வாதியான ஷிமோன் பெரஸ் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற இரண்டாவது சுற்று வாக்கெடுப்புக்குப் பிறகு அந்த நாட்டின் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

முதல் சுற்றில் பெரஸ் அவர்களுக்கு அதிக அளவு வாக்குகள் கிடைத்ததன் காரணமாக, அவரை எதிர்த்து நின்ற இரண்டு வேட்பாள்களும் போட்டியில் இருந்து விலகிக் கொண்டனர்.

பாலியல் வல்லுறவு மற்றும் பாலியல் வன்முறை தொடர்பான பல குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகியதன் பிறகு, தற்போதைய இஸ்ரேலிய ஐனாதிபதி மோஷே கட்சவ், பணிக்கு செல்லாமல் விடுப்பில் உள்ளார்.

7 ஆண்டுக்கு முன்பு நடந்த தேர்தலில் ஆளும் கதீமா கட்சியைச் சேர்ந்த பியர்ஸ், காட்சவ்விடம் தோல்வியைத் தழுவினார் என்பது குறிப்பிடத்தக்கது.


புதுப்பிக்கப்பட்ட நாள்: 16 ஜூன், 2007 – பிரசுர நேரம் 15:02 ஜிஎம்டி

பாலஸ்தீன நாடாளுமன்றத்திற்குள் அதிரடியாக நுழைந்தனர் ஃபத்தா அமைப்பினர்

மேற்குக்கரை நகரான ரமல்லாவில் உள்ள பாலத்தீன நாடாளுமன்ற கட்டிடத்தில் ஃபத்தா பிரிவைச் சேர்ந்த ஆயுதபாணிகள் அதிரடியாக நுழைந்தனர்.

அந்தக் கட்டிடத்தில் தமது கொடியை ஏற்ற முனைந்த பத்தா ஆதரவாளர்களைத் தான் தடுக்க முனைந்த போது, தன்னை அவர்கள் அடித்துத் தாக்கியதாக ஒரு சுயேச்சையான துணை சபாநாயகர் பிபிசி க்கு கூறியுள்ளார்.

அந்தக் கட்டிடத்தில் இருந்த கல்வி அமைச்சு உட்பட ஹமாஸுடன் தொடர்புடைய அதிகாரபூர்வ கட்டிடங்களையும் மற்றும் நப்லஸில் உள்ள நகரக் கவுன்ஸில் கட்டிடத்தையும் ஃபத்தா போராளிகள் துவம்சம் செய்தனர்.

ஹமாஸ் அமைப்பின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்ட காசாவில், தற்போது அமைதி நிலவுகிறது, ஆனால் பெரும்பாலான கடைகள் மூடப்பட்டுள்ளன.


Posted in Arab, Arms, Avital, Award, Blast, Bombs, Britain, Colette, Colette Avital, Crisis, dead, Erez, Escalation, Fata, Fatah, Fatha, Fathah, Freedom, Galilee, Gaza, Hamas, Haniya, Independence, Ismail Haniyeh, Israel, Jerusalem, Jimmy Carter, Kadima, Katsav, Knesset, Labor, Labour, Leader, Likud, Mid-east, Middle East, Moshe, Moshe Katsav, Negev, Nobel, Nuclear, Palestine, Palestine: Peace Not Apartheid, Party, Peace, Peres, Perez, PM, Poland, President, Prez, Prime Minister, Prize, Rafah, Reuven, Reuven Rivlin, Rivlin, Shimon, Simon, Simone, UK, Violence, War, Weapons, WWII | 1 Comment »

British minister says veil teacher should be sacked: ‘Demonising’ UK Muslims

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 15, 2006

முகத்திரை சர்ச்சை; ஆசிரியை பணி நீக்கம் செய்யபட வேண்டும் என்கிறார் பிரிட்டனின் இன ஒற்றுமைக்கான அமைச்சர்

முகத்திரை அணிந்துள்ள முஸ்லிம் பெண்மணி ஒருவர்
இச்சர்ச்சை பிரித்தானிய முன்னாள் வெளியுறவுத்துறை செயலர் ஜாக் ஸ்டிராவினால் ஆரம்பிக்கப்பட்டது

பிரிட்டனில் முஸ்லிம் பெண்கள் முகத்திரை அணிவது தொடர்பான சர்ச்சையில் பிரித்தானிய அரசாங்கத்தின் மற்றுமொரு பிரதிநிதி இணைந்துள்ளார்.

பள்ளியில் முகத்திரையினை அகற்ற மறுத்த முஸ்லிம் உதவி ஆசிரியை பணி நீக்கம் செய்யபட வேண்டும் என்று இன ஒற்றுமைக்கான அமைச்சர் ஃபில் வூலாஸ் கூறியுள்ளார்.

தன்னுடைய முகத்தினை மறைப்பதன் மூலம், மாணவர்களுக்கு முழுமையான கல்வி கிடைப்பதற்கு இருக்கும் உரிமையினை அவர் மறுக்கின்றார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

முகத்தினை மூடுவதால், சரியான முறையில் மாணவர்களுடன் தொடர்பு கொள்ள முடியவில்லை என கூறப்படுவதினை ஆயிஷா அச்மி என்ற அந்த ஆசிரியை மறுத்துள்ளார். மேலும் அமைச்சர் தனது கருத்தினை திரும்ப பெற வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இதற்கிடையில், பிரித்தானிய அரசாங்கம் முஸ்லிம்களை கொடூரமானவர்களாக சித்தரிக்க முயற்சிப்பதாக பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் லார்டு அஹமது கூறியுள்ளார்.

இந்த முஸ்லிம்கள் முகத்திரை அணியும் சர்ச்சை, பிரித்தானிய முன்னாள் வெளியுறவுத்துறை செயலர் ஜாக் ஸ்டிரா அவர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. முகத்திரை அணிவது, சமுதாய நல்லிணக்கத்திற்கு தடையாக இருப்பதாக அவர் கூறியதினை அடுத்து இந்த சர்ச்சை ஆரம்பித்திருந்தது.

Posted in Ban, Britain, British, Islam, Jack Straw, London, Minister, Muslims, sack, Teacher, UK | Leave a Comment »

Tony Blair – British PM’s Tenure : Analysis

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 7, 2006

டோனி பிளேர் மீதான அழுத்தங்கள்- ஒரு பார்வை

அழுத்தங்களின் மத்தியில் பிளேர்
அழுத்தங்களின் மத்தியில் பிளேர்

பிரிட்டிஷ் பிரதமர் டோனி பிளேர் அவர்களை பதவி வுலகக் கோரி அவரது கட்சிக்குள் அழுத்தங்கள் அதிகரித்துள்ளன.

பூகம்பம் ஏற்படுவதற்கு முன்னர் பூமிக்கடியில் புவிப்பாறைகள் நகர்வது போன்ற ஒரு மாற்றம், பிரிட்டிஷ் அரசியலில் வெவ்வேறு கால கட்டங்களில் நிகழும். அத்தகைய ஒரு மாற்றத்தின் போதுதான் டோனி பிளேர் ஆட்சிக்கு வந்தார்.

புதிய சிந்தனைகள் கொண்ட அதே சமயத்தில் தனது கருத்துக்களை திறமையாக வெளிப்படுத்தவல்ல பிளேர், ஒரு இளமையான, நவீனப்படுத்துபவராக நாட்டிற்குத் தன்னைக் காட்டிக்கொண்டார்.

பிளேருக்கு எதிர்ப்பு அதிகரிக்கிறது
பிளேருக்கு எதிர்ப்பு அதிகரிக்கிறது

ஆனால், கட்சியில் உள்ள கடும்போக்காளர்கள் மீது மோதியதன் மூலம் அவர் நாட்டு மக்களிடையே செல்வாக்கை தேடிக்கொண்டார். அவர் தனது கட்சியினர் பிடிவாதமாக கொண்டிருக்கும் கொள்கைகளை, கருத்துக்களுக்கு எதிர்வாதங்களை வைப்பதில், அந்த கருத்துக்களை எதிர்கொள்வதை மகிழ்ச்சியுடன் செய்தார்.

இந்த லட்சியத்தின் பின்னால் 1997ல் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் நின்றார்கள்.

ஆனால், இராக் போர் தொழிற்கட்சியை மட்டுமலாமல் நாட்டையும் கருத்து வேறுபாடுகளால் பிளவுபடுத்தியது. அதனுடன், அரசின் மீதிருந்த நம்பிக்கையையையும் விவாதத்துக்குள்ளாக்கியது.

அதிபர் புஷ்ஷுடனான நட்புறவு குறித்து அதிருப்தி நிலவுகிறது
அதிபர் புஷ்ஷுடனான நட்புறவு குறித்து அதிருப்தி நிலவுகிறது

பலருக்கு, அவர் கட்சியின் அடிப்படையான விழுமியங்களிலிருந்து அதிக தூரம் விலகிச்சென்று விட்டார் என்று தோன்றியது. அவர் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்ஷுடன் வைத்திருந்த நட்பு குறித்து பலர் சங்கடத்துடன் இருந்தார்கள்.

சதாம் ஹுசேன் பேரழிவை ஏற்படுத்தும் ஆயுதங்களை வைத்திருந்தார் என்று அரசு தெரிவித்த கருத்துக்கள் தவறானவை என்று நிரூபிக்கப்பட்ட போது, அவரது முடிவெடுக்கும் திறன் பற்றி கேள்விகள் எழுந்தன.

சமீபத்தில், லெபனான் மீதான இஸ்ரேல் படையெடுப்பை அவர் கையாண்ட விதம் பிரச்சினையை மேலும் சிக்கலாக்கியது.

இப்போது, நவீனமயமாக்குவதில் நம்பிக்கை கொண்டிருந்த இவரே, அவரது சக சீர்திருத்தவாதிகளால், தலைமையை புதுப்பிப்பதைத் தடுப்பதாகக் குற்றம் சாட்டப்படுகிறார்.

வாக்குகளை அள்ளிக்குவிப்பவரான இவர் இப்போது பல நாடாளுமன்ற உறுப்பினர்களால் தாங்கள் மீண்டும் வெற்றி பெறுவதைக் கெடுக்கக்கூடியவராகப் பார்க்கப்படுகிறார்.

Posted in BBC, Britain, Conservative, England, Labor Party, Liberals, London, Op-Ed, PM, Prime Minister, Tamil, Tony Blair, Tories, UK | Leave a Comment »