Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘booth capturing’ Category

Dadaism, Tamil Nadu, Politics, Rowdy, MLAs, Election Violence – Kalki

Posted by Snapjudge மேல் ஏப்ரல் 1, 2007

Kalki 01.04.2007

தாதாக்களின் பிடியில் தமிழ்நாடு

சென்னைக்கு அருகே உள்ளது மதுரவாயல். கடந்த வருடம் சட்டமன்றத் தேர்தல் முடிந்த பிறகு அந்த ஏரியாவில் நடந்த ரவுடித்தனத்தின் காரணமாக, இரண்டு நாட்கள் மக்கள் யாரும் சுதந்திரமாகத் தெருவில் நடமாட முடியவில்லை. கடைகள் மூடப்பட்டு, பள்ளிகளுக்கும் விடுமுறை விடப்பட்டது. அந்த அளவுக்கு மக்கள் பயமுறுத்தப்பட்டனர்.

மற்றொரு சம்பவம். சென்னையின் வடக்குப் பகுதியில்
திருவொற்றியூரையொட்டியுள்ள மீனவர் கிராம மக்கள், தேர்தல் முடிந்தவுடன் நடந்த வன்முறை வெறியாட்டத்தில், உயிருக்குப் பயந்து வெளியூர்களுக்கு ஓடினார்கள். ‘‘தி.மு.க. அமைச்சரும் அவரது சகோதரர்களும் எங்களை மிரட்டுகிறார்கள்’’ என்று அந்த ஊர் சார்பாக, வழக்கறிஞர் ஒருவர் நீதிமன்றக் கதவைத் தட்டினார். அண்மையில் ஆளும் கட்சிப் பிரமுகர்கள் தூத்துக்குடியில் நடத்திய கடை அடைப்பில் வியாபாரிகள் ஆதரவு கொடுக்காததால் கடைகள் உடைக்கப்பட்டன. ரவுடித்தனம் கட்டவிழ்த்து விடப்பட்டது.

தி.மு.க. ஆட்சிக்கு வந்த பதினைந்தே நாட்களில் அம்பத்தூர் அ.தி.மு.க. செயலாளர் ரவி என்பவர் பட்டப்பகலில் வெட்டிக் கொல்லப்பட்டார்.

அடுத்து, திருவள்ளூரில் தே.மு.தி.க.வைச் சேர்ந்த செல்வகுமார் என்பவர் வெட்டப்பட்டார். தி.மு.க.வைச் சேர்ந்த ஜோதி ராஜேந்திரன் என்பவர் நெய்வேலியில் படுகொலை செய்யப்பட்டார்.

தென்காசியில் இந்து முன்னணிப் பிரமுகர் குமார் பாண்டியன் வெட்டிக் கொல்லப்பட்டார். இதைத் தொடர்ந்து அதே இடத்தில் த.மு.மு.க.
பிரமுகர் மைதீன் சேட் வெட்டப்பட்டார். இப்போது தென்காசி பதற்றமாக ஆகிவிட்டது.

அரசியல் விரோதம் காரணமாக சில கொலைகள் நடந்திருந்தாலும், இந்தக் கொலைகளைச் செய்வதற்கு ரவுடிப் படைகளையே நாடுகிறார்கள்
அரசியல்வாதிகள். இந்த ரவுடிப் படைகளுக்கு அரசியல்வாதிகளின் தயவும் அவ்வப்போது தேவைப்படுவதால், இரு தரப்பினருக்கும் நெருக்கம் உண்டாகி நட்பு ஏற்படுகிறது. இது பல சமூக விரோதச் செயல்களுக்கு வழி வகுக்கிறது. குற்றங்கள் அதிகரிக்கின்றன.

இதுபோன்ற கொலைகள் ஒரு பக்கம் இருக்க, ‘தொழில் போட்டி’ காரணமாக ரவுடிகள் பழிக்குப் பழியில் ஈடுபடுவதால் பல மோதல்கள். அம்பத்தூர் ரவுடி செந்தில்குமார் என்பவர் தலை துண்டிக்கப்பட்டுக் கொல்லப்பட்டார். துரைப்பாக்கம் ரவுடி அசோக் வெட்டப்பட்டான். மண்ணிவாக்கம் சுகுமாரைப் போட்டுத் தள்ளிவிட்டார்கள். காவல் துறையும் தன் பங்குக்கு என்கவுண்ட்டர் நடத்தி நாகூர் மீரான், கொர கிருஷ்ணன், உருண்டை ராஜன், பங்க் குமார் போன்ற தாதாக்களைச் சுட்டுத் தள்ளியது.

‘‘தி.மு.க. ஆட்சியில், அதிக அளவில் குற்றங்கள்
கண்டுபிடிக்கப்படுகின்றன. பல ஆண்டுகளாக நடைபெறும் குற்றங்கள் கண்டுபிடிக்கப்பட்டு மீடியாவில் வருவதால், ஏதோ இப்போதுதான் நடந்தது போன்ற தோற்றம் உருவாகிறது. ஜெ. ஆட்சியில் ஸ்டேஷனில் வழக்கே பதிவு செய்யாத நிலைதான் இருந்தது. திருவொற்றியூர் குப்பம் விவகாரத்தில் தி.மு.க. அமைச்சருக்கு எந்தப் பங்கும் இல்லை என்று உயர்நீதிமன்றம் நியமித்த குழு சொல்லியிருக்கிறது. உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க.வினர் 36 பேர் வன்முறையில் தாக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்கள். ஜெ.ஆட்சியில் தி.மு.க. பேரணியின்போது ரவுடிகள் மூலம் தாக்குதல் நடத்தியதை மறக்க முடியுமா?’’ என்று கேட்கிறார் தி.மு.க. அமைப்புச் செயலாளர் டி.கே.எஸ். இளங்கோவன்.

அக்டோபர் உள்ளாட்சித் தேர்தலில் அரங்கேறிய வன்முறைக் காட்சிகள், கலைஞர் அரசுக்கு மிகுந்த அவப்பெயரைக் கொண்டு சேர்த்தது. உள்ளாட்சித் தேர்தலைத் தொடர்ந்து தமிழகமெங்கும் சங்கிலித் தொடராக வன்முறைகள்.

‘‘தி.மு.க. ஆட்சியில் அதிகாரத்தில் உள்ளவர்களின் வீட்டு வேலைக்காரர்கள் கூட போலீஸைத் தாக்குகிறார்கள். சமீபத்தில் ‘குடி’மகன் ஒருவரை ராயப்பேட்டை பெண் சப்-இன்ஸ்பெக்டர் பிடித்து ஸ்டேஷனுக்குக் கொண்டு சென்றார். ஆனால், அரசியல் தலைவர் ஒருவரின் மகன் வீட்டில் வேலை செய்யும் பெண் ஒருவர், போலீஸ் ஸ்டேஷனுக்குச் சென்று அந்தப் பெண் சப்-இன்ஸ்பெக்டரை அடித்து, குடிமகனை விடுதலை செய்ய
முயன்றிருக்கிறார்! நிலைமை இப்படி இருக்கும்போது, தி.மு.க.வினர் தமிழ்நாடு முழுவதும் ரவுடித்தனம் செய்வதிலோ அல்லது சமூக விரோதச் செயல்களில் ஈடுபடுவதிலோ என்ன ஆச்சர்யம் இருக்கிறது?’’
என்கிறார் அ.தி.மு.க. பிரமுகரான க.சுப்பு. அம்மா ஆட்சியில் கட்சிக்காரர்கள் காவல் நிலையத்துக்குச் செல்லவே பயந்தார்கள் என்கிறார் இவர்!

தமிழகமெங்கும் கடந்த பத்து மாதங்களில் நடந்த கொலைகள், வன்முறைகள் ஆகியவற்றைப் பட்டியல் போடத் துவங்கினால், அது முடிவற்று நீண்டுகொண்டே போகும்.

சமூக விரோதிகளின் மோதல்களுக்குக் கள்ளச் சாராயமும் ஒரு காரணம். காய்ச்சுதல், விற்பது ஆகியவற்றைப் பொருத்த அளவில், நாட்டிலேயே மூன்றாவது மாநிலமாகத் தமிழகம் இருக்கிறது.

ஒரு பக்கம் பாலியல் தொடர்பான குற்றங்களும் பெருகி வருகின்றன. அண்மையில் கன்னட பிரசாத் பிடிபட்டு தினந்தோறும் செய்திகளில் அடிபட்டு வருகிறார். தவிர, தேச விரோதச் செயல்களில் ஈடுபடுவோரின் எண்ணிக்கையும் அதிகரிக்கிறது. விடுதலைப்புலிகளுக்கு இரும்பு உருளைகள் அனுப்ப முயன்றது சமீபத்தில் வெளிச்சத்துக்கு வந்தது.

அம்பத்தூரில் இருந்து ஆந்திர நக்ஸலைட்டுகளுக்கு ராக்கெட் லான்ச்சர்கள் அனுப்பிக் கொண்டிருந்தது அம்பலமானது.

ஏதேனும் ஓர் இடத்தில் ரவுடிகளுக்குள் மோதலோ அல்லது கொலையோ நடக்கும் பட்சத்தில் அந்த ஏரியாவின் அமைதி
பாதிக்கப்படுகிறது. மக்கள் பாதுகாப்பற்ற நிலையை உணர்கிறார்கள். இவற்றில் தலை நுழைக்கும் ஆளும் கட்சிப் பிரமுகர்களால் மீடியாவுக்கு நல்ல தீனி கிடைக்கிறது! ‘‘ரவுடிகள் முன் கைகட்டி நிற்கிறது காவல்துறை’’ என்று அறிக்கை விடுகிறார் ஜெ.

‘‘காவல்துறை இன்னமும் தொழில் ரீதியாக மாற வேண்டும். அதில் உள்ள கறுப்பு ஆடுகள் வெளியேற்றப்பட வேண்டும். தமிழகம்
ஸ்ரீலங்காவின் அருகிலேயே இருப்பதால் தேச விரோத சக்திகளுக்குத் துணை போகும் நிலையும் இங்கே இருக்கிறது’’ என்று சொல்கிறார் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் பீட்டர் அல்போன்ஸ்.

தமிழக காவல்துறை இயக்குநரான முகர்ஜி, இதற்கெல்லாம் என்ன
பதில் சொல்கிறார்?

‘‘2005-ஆம் ஆண்டை ஒப்பிடுகையில், 2006-ல் குற்றங்களின் எண்ணிக்கை குறைந்திருப்பது மட்டுமல்லாமல் கண்டுபிடிப்பதும்
அதிகரித்திருக்கிறது. சில மீடியாக்கள்தான் சின்ன விஷயங்களைக் கூட ஊதிவிடுகின்றன.

2005-ல் 1365 கொலைகள் நடந்தன; 2006-ல் 1274 கொலைகள்தான் நடந்தன. நடந்த குற்றங்களில் கண்டுபிடிப்பு விகிதம் 88 சதவிகிதத்தைத் தொட்டிருக்கிறது. திருட்டு, கொள்ளையில் மீட்ட சொத்துக்களின் விகிதம் 78 சதவிகிதத்திலிருந்து 81 சதவிகிதமாக உயர்ந்திருக்கிறது. 2005-ல் 571 பாலியல் பலாத்காரங்கள்; 2006-ல் 457. இப்படிப் பார்த்தால் பெண்களுக்கெதிரான குற்றங்கள், சிறு திருட்டுக்கள், கொள்ளைகள் ஆகியவையும் குறைந்திருக்கின்றன. ரவுடித்தனம் முழுவதுமாக அடக்கப்பட்டிருக்கிறது. குண்டர்கள் சட்டத்தில் நூற்றுக்கணக்கானவர்கள் உள்ளே போடப்பட்டிருக்கிறார்கள். சமூக உரசலை உசுப்பிவிட்டு, அமைதிக்கு வேட்டு வைக்கும் பல பிரச்னைகளை தமிழக போலீஸ் மிக நுட்பமாகக் கையாண்டு சமாளித்திருக்கிறது. கன்னட பிரசாத் உட்பட பாலியல் ரீதியான குற்றங்களில் தொடர்புள்ள போலீஸ் அதிகாரிகள் நடவடிக்கைக்கு உள்ளாகியிருக்கிறார்கள். விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக ஆயுதக் கடத்தலில் ஈடுபட்டவர்களைக் கண்டுபிடித்திருக்கிறோம். இஸ்லாமியத் தீவிரவாதமும் கட்டுக்குள் இருக்கிறது. காவல்துறையின் இமேஜை உயர்த்தும் வகையில் அடிமட்டம் வரை உள்ள காவலர்களுக்குப் பயிற்சி கொடுக்கப்படுகிறது. அரசியல் தலையீடு என்பது கீழ் மட்டத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாக இருக்கலாமே தவிர, மேல் மட்டங்களில் சிறிதும் கிடையாது. மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது தமிழகம் அமைதிப் பூங்காவாக இருக்கிறது’’ என்று ஒரேயடியாக மறுக்கிறார் டி.ஜி.பி. முகர்ஜி.

– ப்ரியன்

Posted in booth capturing, Dadaism, Election, Kalki, Law, MLA, MP, Order, Police, Politics, Rowdy, Rowdyism, Tamil Nadu, TN, Violence, voter, Votes | Leave a Comment »

Uttar Pradesh Elections – Anlaysis: BSP, BJP, Congress, SP

Posted by Snapjudge மேல் மார்ச் 14, 2007

உ.பி. மாநிலத் தேர்தல்

இந்தியாவின் மிகப்பெரிய மாநிலமான உத்தரப்பிரதேசத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் இந்த வாரம் தொடங்க இருக்கிறது. எனினும் இம் மாநிலத்தில் கட்சிகளிடையே பெரிய கூட்டணி எதுவும் ஏற்படவில்லை. முலாயம் சிங்கின் சமாஜவாதி கட்சி, மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி, பாஜக, காங்கிரஸ் ஆகிய நான்கு பிரதானக் கட்சிகளும் ஒன்றையொன்று எதிரியாகக் கருதுவதே இதற்குக் காரணம். மிஞ்சிப் போனால் இக் கட்சிகள் மாநில அளவிலான சிறு கட்சிகளுடன் தொகுதி உடன்பாடு செய்து கொள்ளலாம்.

பாஜக இந்த வகையில் ஏற்கெனவே நடவடிக்கையில் ஈடுபட்டு அப்னா தளம், ஐக்கிய ஜனதா தளம் ஆகியவற்றுடன் தொகுதி உடன்பாடுகளைச் செய்து கொள்ளப் போவதாகத் தெரிவித்துள்ளது. அப்னா தளம் என்பது அடிப்படையில் “குர்மிக்கள்’ எனப்படும் பிரிவினரின் கட்சியாகும். மாநிலத்தின் கிழக்குப் பகுதியிலும் மத்திய பகுதியிலும் இப் பிரிவினர் பெருவாரியாக உள்ளனர். வேறு ஒரு பிரிவைச் சேர்ந்த சிறு கட்சியுடனும் பாஜக தொகுதி உடன்பாடு வைத்துக்கொள்ள முடிவு செய்துள்ளது. உயர் வகுப்பினரின் கட்சி என்ற முத்திரையைத் தாங்கிய பாஜக, இந்த ஏற்பாடுகள் மூலம் பிற்பட்ட சமூகத்தினரின் வாக்குகளைப் பெற முடியும் என்று கருதுகிறது. 2002 சட்டமன்றத் தேர்தலில் பாஜக 88 இடங்களுடன் மூன்றாம் இடத்தைப் பெற்றிருந்தது.

மற்றொரு அகில இந்தியக் கட்சியான காங்கிரஸ், உ.பி. தேர்தலில் யாருடனும் கூட்டணி சேரும் திட்டமில்லை என்று அறிவித்துள்ளது. ஆனால் அக் கட்சி அதே மூச்சில் தொகுதி உடன்பாட்டுக்கான வாய்ப்புகள் இருக்கத்தான் செய்கின்றன என்று கூறியுள்ளது. காங்கிரஸ் கட்சியானது ஒருவேளை வி.பி.சிங்கின் ஆதரவு பெற்ற ஜனமோர்ச்சாவுடன் தொகுதி உடன்பாடு செய்து கொள்ளலாம். அஜீத் சிங்கின் கட்சி, லாலு கட்சி ஆகியவற்றுடனும் இவ்விதம் தொகுதி உடன்பாடு காணப்படலாம். ஒரு காலத்தில் காங்கிரஸின் கோட்டையாக இருந்த இந்த மாநிலத்தில் கடந்த தேர்தலில் காங்கிரஸ் வெறும் 25 இடங்களை அதாவது மொத்த இடங்களில் பத்தில் ஒரு பங்குக்கும் குறைவான இடங்களையே பெற்றது. இந்தத் தடவை காங்கிரஸýக்குப் பிரகாசமான வாய்ப்புகள் உள்ளதாகச் சொல்ல முடியாது.

இப்போது ஆளும் கட்சியாக உள்ள சமாஜவாதி கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி ஆகிய இரண்டும் இம் மாநிலத்தில் இரு பெரும் சக்திகளாக விளங்குகின்றன. இந்த இரு கட்சிகளுமே ஒன்றையொன்று பரமவைரிகளாகக் கருதுகின்றன. யாதவ் சமூகத்தினரிடையே செல்வாக்குப் பெற்ற முலாயம் சிங் அண்மைக்காலமாக மற்ற பல சமூகத்தினரின் ஆதரவைப் பெறுவதில் முனைப்புக் காட்டி வந்துள்ளார். மாநிலத்தில் “வாட்’ வரித் திட்டம் அமலாக்கப்படாததற்கு இதுவும் ஒரு காரணம் என்று கூறப்படுகிறது. வழக்கமாக முலாயம் சிங் கட்சியின் தோழமைக் கட்சியாக விளங்கி வந்த மார்க்சிஸ்ட் கட்சி 16 இடங்களில் தனித்துப் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளது. அதேநேரத்தில் முலாயம் சிங்குக்கு எதிரான எந்தக் கூட்டணியையும் ஆதரிப்பதில்லை என்பது மார்க்சிஸ்ட் கட்சியின் நிலைப்பாடாகும்.

மாயாவதியின் கட்சியானது தலித்துகளின் கட்சி என்று அறியப்பட்டதாகும். ஆனால் அண்மைக் காலமாக மாயாவதி தமது கட்சியானது அனைத்துத் தரப்பினருக்குமான கட்சி என்ற எண்ணத்தை ஏற்படுத்துவதில் தீவிரம் காட்டி வருகிறார். உயர் வகுப்பினர் பலரைத் தமது கட்சியில் சேர்த்துக் கொண்ட அவர், இப்போதைய தேர்தலில் நூற்றுக்கும் அதிகமான தொகுதிகளில் தமது கட்சி சார்பில் உயர் வகுப்பினரை நிறுத்தத் திட்டமிட்டுள்ளார். இத் தேர்தலில் வென்று ஆட்சியைப் பிடிப்பது அவரது நோக்கமாகும்.

உ.பி. மாநிலம் மொத்தம் 403 தொகுதிகளைக் கொண்டதாகும். கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக மாநிலத்தில் நிலையான ஆட்சி நிலவியதாகச் சொல்ல முடியாது. 2002 தேர்தல் மூன்று கட்டங்களில் நடைபெற்றது. இப்போதைய தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற இருப்பதால் தேர்தல் முடிவுகள் மே மாத இரண்டாவது வாரத்தில்தான் தெரிய வரும்.

===========================================================
உ.பி.யில் மாயாவதி போட்டியில்லை; மேல் சாதியினருக்கு அதிக தொகுதிகள்

லக்னெü, மார்ச் 14: உத்தரப்பிரதேசத்தில் உள்ள 403 பேரவைத் தொகுதிகளுக்கும் பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். மேல் சாதியினருக்கு அதிக இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. கட்சித் தலைவர் மாயாவதி போட்டியிடவில்லை.

வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட பிறகு செய்தியாளர்களிடையே மாயாவதி கூறியது:

உ.பி.யில் எல்லா கட்சிகளையும் முந்திக்கொண்டு பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் பட்டியலை முதலில் வெளியிட்டுள்ளது. இந்த தேர்தலில் வேறு எந்த கட்சியுடனும் கூட்டணி அமைக்கப்போவதில்லை.

நான் போட்டியிட்டால் சுற்றிலும் உள்ள தொகுதிகளில் இருக்கும் தொண்டர்கள் அங்கு வந்து பணியாற்ற விரும்புகிறார்கள். இதனால் அந்த தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு பாதிக்கப்படுகிறது. எனவே நான் இப்போது போட்டியிடப் போவதில்லை. கட்சி வெற்றி பெற்றால் ஏதாவது ஒரு உறுப்பினர் எனக்காக விட்டுக்கொடுப்பார். பின்னர் இடைத்தேர்தல் மூலம் நான் போட்டியிட்டு வெற்றி பெறுவேன் என்றார்.

அவர் வெளியிட்ட வேட்பாளர் பட்டியலின்படி

  • 139 தொகுதிகள் மேல் சாதியினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. அவற்றில்
  • 86 தொகுதிகள் பிராமணர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.
  • 110 தொகுதிகள் பிற்பட்ட வகுப்பினருக்கும்,
  • 93 தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கும்,
  • 61 முஸ்லிம்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன.

இது இறுதி செய்யப்பட்ட பட்டியலாகும். அதே சாதியைச் சேர்ந்த வேட்பாளர்களை பிற கட்சிகள் நிறுத்தினாலும் எங்கள் வேட்பாளர் தேர்வில் மாற்றம் இருக்காது. எங்கள் கட்சி பெரும்பான்மை பலம் பெறும் என்ற நம்பிக்கை உள்ளது என்றார் மாயாவதி.

முலாயம் சிங் போட்டியிடுவார் என கருதப்படும் குன்னார் தொகுதியில் முகம்மது ஆரிப் என்பவரை பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளராக நிறுத்தியுள்ளது.

================================================

உ.பி.யில் 403 பேரவைத் தொகுதிகளிலும் வன்செயல்கள் வரலாறு அலசப்படுகிறது: தேர்தல் கமிஷன் சிறப்பு நடவடிக்கை

புது தில்லி, ஏப். 2: உத்தரப் பிரதேசத்தின் 403 பேரவைத் தொகுதிகளிலும் வன்செயல்கள் வரலாறு தொகுக்கப்படுகிறது.

வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து கள்ள வாக்கு போடச் சொல்வது, ஆயுதங்களைக் காட்டி அச்சுறுத்தி வாக்குச் சாவடிக்கே வராமல் தடுப்பது, வாக்குச் சாவடிக்குள் புகுந்து வேட்பாளர்களின் வாக்குச் சாவடி முகவர்களையும், தேர்தல் அலுவலர்களையும் துப்பாக்கி முனையில் வெளியேற்றிவிட்டு வாக்குச் சீட்டுகளைக் கைப்பற்றி இஷ்டப்படி கள்ள வாக்குப் போடுவது என்று அனைத்துவித தேர்தல் முறைகேடுகளையும் தொகுதி வாரியாக பட்டியலிட்டுத் தருமாறு மத்திய தலைமை தேர்தல் ஆணையும் உத்தரப்பிரதேச தேர்தல் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருக்கிறது.

உத்தரப்பிரதேசத்தில் இப்போது முலாயம் சிங் தலைமையிலான சமாஜவாதி கட்சி ஆளும் கட்சியாக இருக்கிறது. இக் கட்சி பாரதீய ஜனதா, காங்கிரஸ் ஆகிய இரண்டுக்குமே தோழமைக் கட்சியாக இல்லை.

இந் நிலையில் உத்தரப் பிரதேசத்தில் தேர்தலை சுதந்திரமாகவும் நேர்மையாகவும் நடத்தியே தீருவது என்று தலைமைத் தேர்தல் ஆணையம் தீர்மானித்துவிட்டதையே இந்தப்புதிய நடவடிக்கை தெரிவிக்கிறது.

403 பேரவைத் தொகுதிகளிலும் வாக்குச் சாவடி வாரியாக பல தகவல்களைத் திரட்டுமாறு ஆணையம் உத்தரவிட்டிருக்கிறது.

பணம்-பொருள் கொடுத்து வாக்கு சேகரிக்கப்படும் வாக்குச் சாவடிகள், பிற மத, சாதிக்காரர்களை அச்சுறுத்தி வாக்குச் சாவடிக்கே வராமல் தடுக்கும் வாக்குச் சாவடிகள், தேர்தல் அதிகாரிகளையும் வாக்குச் சாவடி முகவர்களையும் மிரட்டிவிட்டு தேர்தல் முறைகேடுகள் நடைபெறும் வாக்குச் சாவடிகள் என்று முந்தைய வரலாற்றின் அடிப்படையில் அடையாளம்காணுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் சராசரி வாக்குப்பதிவைவிட 15% அதிகம் வாக்குகள் பதிவாகும் தொகுதிகள், சராசரியை விட 15% குறைவாக வாக்குகள் பதிவாகும் வாக்குச்சாவடிகள் போன்றவற்றை அடையாளம் காணவும் உத்தரவிடப்பட்டிருக்கிறது.

வழக்கமான தேர்தல் நடைமுறைகளைவிட இவையெல்லாம் புதுமையாக இருக்கிறது. உத்தரப்பிரதேசத்தின் ஒரு தொகுதியில்கூட முறைகேட்டை அனுமதிக்காமல் தடுப்பது என்ற உறுதி தேர்தல் கமிஷனுக்கு ஏற்பட்டுவிட்டதைப் போலத் தெரிகிறது. தேர்தல் நாள் நெருங்க, நெருங்கத்தான் இதையெல்லாம் தேர்தல் கமிஷனால் சாதிக்க முடிந்ததா என்று தெரிந்து கொள்ளமுடியும். இப்போதைக்கு இது ஆரம்பம்தான்.

தேர்தல் அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை கண்காணிப்பாளர்கள், மத்திய தேர்தல் ஆணையம் நியமிக்கும் பார்வையாளர்கள் ஆகியோருக்கு இது தொடர்பாக மிகப் பெரும் பொறுப்புகளை தேர்தல் கமிஷன் அளித்துள்ளது.

=================================================================
ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம்; பட்ட மேற்படிப்பு வரை இலவசக் கல்வி: முலாயம் சிங் தேர்தல் வாக்குறுதி

எட்டா, ஏப். 3: மீண்டும் ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம், மாணவர்களுக்கு பட்ட மேற்படிப்பு வரை இலவசக் கல்வி வழங்கப்படும் என்று உ.பி. முதல்வரும் சமாஜ்வாதி கட்சித் தலைவருமான முலாயம் சிங் வாக்குறுதி அளித்தார்.

உத்தரப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தலை முன்னிட்டு, மைன்புரி, பெரோஸôபாத், எட்டா ஆகிய இடங்களில் திங்கள்கிழமை நடைபெற்ற தேர்தல் பிரசாரப் பேரணிகளில் பங்கேற்று முலாயம் சிங் பேசியதாவது:

சட்டப் பேரவைத் தேர்தலில் சமாஜ்வாதிக் கட்சிக்கு எதிராக பாஜக, காங்கிரஸ், பகுஜன் சமாஜ் கட்சி ஆகியவை கூட்டு சேர்ந்து நிற்கின்றன.

சமுதாயத்தில் ஒவ்வொரு பிரிவினரின் நலனுக்காகவும் எங்கள் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

நாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால், எங்கள் தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளபடி, விவசாயிகளுக்கு இலவச மின்சாரம், பட்ட மேற்படிப்பு வரை மாணவ, மாணவியருக்கு இலவசக் கல்வி வழங்கப்படும் என்று உறுதி அளிக்கிறேன்.

அதிகாரிகளை கூண்டோடு மாற்றியதுதான் லக்னெü, கான்பூர் வன்முறைக்கு காரணம்: தேர்தல் ஆணையம், மாநிலத்தில் மூத்த அரசு அதிகாரிகளை கண்மூடித்தனமாக கூண்டோடு இடமாற்றம் செய்து வருகிறது. புதிதாக நியமிக்கப்படும் அதிகாரிகளுக்கு அந்தந்தப் பகுதிகளின் நிலவரமே இன்னும் தெரியவில்லை.

லக்னெüவிலும், கான்பூரிலும் முஸ்லிம்களில் இரு பிரிவினருக்கு இடையிலான வன்முறையை அதிகாரிகளால் தடுக்க முடியாமல் போனதற்கு இதுவே காரணம்.

முஸ்லிம் சமுதாயத் தலைவர்கள் தங்களுக்கு இடையில் உள்ள வேறுபாடுகளை மறந்து, பாதிக்கப்பட்ட பகுதிகளில் அமைதியை நிலைநாட்ட உதவி செய்ய வேண்டும் என்றார் முலாயம் சிங்.
=================================================================
அரசு வேலையில் பெண்களுக்கு 20% ஒதுக்கீடு: உ.பி.யில் பாஜக தேர்தல் வாக்குறுதி

லக்னெü, ஏப். 3: உத்தரப்பிரதேச சட்டப் பேரவைத் தேர்தலில் பாரதீய ஜனதா வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தால், அரசு வேலை வாய்ப்பில் பெண்களுக்கு 20% இடங்கள் ஒதுக்கப்படும்; பஞ்சாயத்துகள் உள்ளிட்ட உள்ளாட்சி மன்றங்களில் 50% பதவிகள் பெண்களுக்கே தரப்படும் என்று அக் கட்சி தேர்தல் அறிக்கை வெளியிட்டிருக்கிறது.

பெண்கள், முதியோர், வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள், மாணவர்கள் என்று அனைத்து தரப்பினருக்கும் பல்வேறு நல திட்டங்களை கட்சி அறிவித்துள்ளது.

சட்டம், ஒழுங்கு கட்டுப்படுத்தப்படும், விலைவாசி உயராமல் கண்காணிக்கப்படும், பதுக்கல், கள்ளச் சந்தைக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும், பிரிவினைவாதிகள், தேச விரோதிகள் நடமாடமுடியாதபடி “பொடா’வுக்கு இணையான பயங்கரவாத தடைச் சட்டம் கொண்டு வரப்படும், வங்கதேசத்திலிருந்தும் பாகிஸ்தானிலிருந்தும் ஊடுருவியவர்கள் கண்டுபிடித்து அகற்றப்படுவார்கள் என்று தேர்தல் அறிக்கை தெரிவிக்கிறது.

கட்சியின் அனைத்திந்திய துணைத் தலைவர் வெங்கைய நாயுடு, மாநிலத் தலைவர் கேசரிநாத் திரிபாடி ஆகியோர் அறிக்கையை வெளியிட்டனர்.

அறிக்கையின் முக்கிய அம்சங்கள் வருமாறு:

“கிரிமினல்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் உள்ள தொடர்பு முறிக்கப்படும். மாநிலத்தில் “சிமி’, “ஐஎஸ்ஐ’ ஆகியவற்றின் நடவடிக்கைகள் கட்டுப்படுத்தப்படும்.

பிறக்கும் ஒவ்வொரு பெண் குழந்தையின் பெயரிலும் ரூ.30,000 வளர்ச்சிப் பத்திரத்தில் முதலீடு செய்யப்படும். 21 வயதுவரை அப் பெண்குழந்தையின் படிப்புச் செலவுக்கு அதிலிருந்து பணம் எடுத்துதரப்படும்.

அரசு வேலையில் பெண்களுக்கு 20% ஒதுக்கப்படும்.

விதவையருக்கு வழங்கப்படும் உதவித்தொகை இரட்டிப்பாக்கப்படும்.

மாநிலத்தின் அனைத்து நகரங்களிலும், பணிபுரியும் பெண்களுக்கு தங்கும் விடுதிகள் கட்டித்தரப்படும்.

அரசு இடங்களில் உள்ள வீட்டு மனை ஒதுக்கீட்டில் பெண்களுக்கு முன்னுரிமை தரப்படும்.

சுகன்யா விவாஹ யோஜனா, கன்யாதான் யோஜனா போன்ற திருமண திட்டங்கள் தொடரும்.

அங்கன்வாடி (பெண்) ஊழியர்களின் பணி வரன்முறைப்படுத்தப்படும்.

வேலை வாய்ப்பை அடிப்படையாகக் கொண்ட கல்வி அளிக்கப்படும்.

இளைஞர் நலனுக்காக தனி கமிஷன் ஏற்படுத்தப்படும்.

மகளிர் சுய உதவி குழுக்களில் 5 லட்சம் முதல் 10 லட்சம் வரையில் பெண்கள் சேர்க்கப்படுவர். அவர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தித் தரப்படும்.

முதியோருக்கு ஓய்வூதியம் இரு மடங்காக உயர்த்தப்படும். அரசு போக்குவரத்துக் கழகங்களில் சலுகைக் கட்டணத்தில் அவர்கள் பயணம் செய்யலாம். அரசு மருத்துவமனைகளில் சிறப்பு சிகிச்சை பெறலாம். எல்லா மாவட்டங்களிலும் முதியோர் இல்லங்கள் கட்டித்தரப்படும்.

விலைவாசியைத் தொடர்ந்து கண்காணித்து நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் தலைமையில் சிறப்புக் குழு ஏற்படுத்தப்படும். அத்தியாவசியப் பொருள்களை பதுக்குவோர், கள்ளச் சந்தையில் விற்போருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். பொது விநியோக முறை வலுப்படுத்தப்படும்.

பள்ளிக்கூடங்களில் சூரிய நமஸ்காரம், யோகாசனம், வந்தே மாதரம் ஆகியவை கட்டாயமாக்கப்படும்’ என்று தேர்தல் அறிக்கை தெரிவிக்கிறது.

பாஜக வெற்றி பெற்றால் கல்யாண் சிங் முதல்வர் பதவியை ஏற்பார் என்று இரு தலைவர்களும் நிருபர்களிடம் அறிவித்தனர்.

=================================================================

Posted in abuse, Alliances, Allocation, Amar Singh, Amitabh, Anlaysis, Apna Dal, Apna Dhal, Assembly, Ayodhya, Backgrounder, BJP, booth capturing, Boothcapturing, Brahmins, BSP, candidates, Caste, Chief Minister, CM, Communist, Congress, Corruption, CPI, EC, Elections, Electorate, Employment, FC, Females, Filmfare, History, Janata Dal, Jats, Jobs, Kalyan, Kalyan Singh, Kanshiram, Lucknow, Manifesto, Marxist, Mayavathi, Mayavathy, Mayawathi, Mayawathy, MLA, Mulayam, Mulayam Singh Yadav, Muslim, Natwar, OBC, Opinion, Party, pension, Perspectives, Polls, Religion/Politics, Reservation, Samajvadi, Samajwadi, SC, School, seats, Sonia, SP, ST, Surya Namaskar, Tiwari, UP, Uttar Pradesh, Vajpayee, Vande Mataram, Vandhe Mataram, Varanasi, VAT, voters, Votes, VP Singh, Women, Yadav, Yoga, Yogasana, Youth | Leave a Comment »

Electronic Voting Machines – Chennai civic elections lawsuit adjourned

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 6, 2007

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை பயன்படுத்தக் கோரும் வழக்கு: விசாரணை ஒத்திவைப்பு

சென்னை, பிப். 7: சென்னை மாநகராட்சி மன்றத்தில் 100 வார்டுகளுக்கு நடக்கவிருக்கும் மறுதேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பயன்படுத்துமாறு உத்தரவிடக் கோரி தொடரப்பட்ட வழக்கின் விசாரணை 2 வாரங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி ஏ.கே. வெங்கடசுப்பிரமணியன் இவ்வழக்கைத் தொடர்ந்தார்.

உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி. ஷா, நீதிபதி கே. சந்துரு ஆகியோர் இவ்வழக்கை செவ்வாய்க்கிழமை விசாரித்தனர். அப்போது மாநிலத் தேர்தல் ஆணையர் சார்பாக பதில் மனுவைத் தாக்கல் செய்தார் மூத்த வழக்கறிஞர் ஜி. மாசிலாமணி. பதில் மனுவில் கூறியிருப்பதாவது:

தேர்தல் நடைமுறை அமலுக்கு வந்தபிறகு இவ்வழக்கு தொடரப்பட்டிருப்பதால், இம்மனு விசாரணைக்கு ஏற்றதல்ல. சென்னை மாநகராட்சியில் 100 வார்டுகளில் தேர்தல் நடத்த 4,830 வாக்கு இயந்திரங்கள் தேவை. அதற்காக 11,050 தேர்தல் அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும். பெங்களூரில் உள்ள பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் ஒவ்வொரு இயந்திரத்தையும் பரிசோதித்து, சான்றிதழ் வழங்க வேண்டும். வரும் 18-ம் தேதி வாக்குப்பதிவு நடக்கவுள்ளது. இந்த நடைமுறைகளை மேற்கொள்ள போதுமான அவகாசம் இல்லை. எனவேதான் வாக்குச் சீட்டு முறையிலேயே தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டது.

இத்தேர்தலை விடியோ மூலம் பதிவு செய்ய தேர்தல் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்று பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது.

வாக்குச் சீட்டுகளில் வாக்களிக்கப்பட்ட கடந்த தேர்தலில் ஒரு லட்சத்து 17 ஆயிரம் உள்ளாட்சி மன்ற உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதை யாரும் குறை சொல்லவில்லை. அது மட்டுமின்றி மின்னணு வாக்கு இயந்திரத்திலும் நம்பிக்கை இல்லை என்று சில அரசியல் கட்சிகள் கூறுகின்றன என்றும் மூத்த வழக்கறிஞர் ஜி. மாசிலாமணி வாதாடினார்.

மனுதாரர் சார்பாக வழக்கறிஞர் எல்.என். ராஜா வாதாடினார். வாக்கு இயந்திரங்களை உடனே பயன்படுத்த நம்மிடம் திறமை உள்ளது. ஆனால் அரசுக்கு அதைப் பயன்படுத்தும் எண்ணம் இல்லை என்றார் அவர்.

இவ்வழக்கை விசாரணைக்கு ஏற்ற நீதிபதிகள் விசாரணையை 2 வாரத்துக்கு ஒத்தி வைத்தனர்.

Posted in AB Shah, abuse, AK Venkatasubramanian, Ballot Paper, BEL, Bharath Electronics, Booth, booth capturing, civic elections, Corruption, DMK, EC, election commission, Electronic Voting Machines, EVM, G Masilamani, Government, K Chandru, Law, LN Raja, Local Body, Municipality, Order, Polls, Power, voter | Leave a Comment »

Electronic Voting Machines to be used at 25% of Voting booths in Chennai

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 2, 2007

உள்ளாட்சித் தேர்தலில் முதன்முறையாக மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம்: தேர்தல் ஆணையர்

பழனி, பிப். 3: தமிழகத்தில் நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவின் போது 25 சதவீத இடங்களில் முதன்முறையாக மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளதாக மாநில தேர்தல் ஆணையர் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.

பழனி கோட்டாட்சியர் அலுவலகத்தில் வியாழக்கிழமை மாநில தேர்தல் ஆணையர் சந்திரசேகரன் தலைமையில் சிறப்புக் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் வாசுகி, எஸ்.பி. பாரி, டி.ஆர்.ஓ. பெர்னாண்டஸ், ஆர்.டி.ஓ. கோபாலகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்திற்கு பின் தேர்தல் ஆணையர் சந்திரசேகரன் கூறியது: தமிழகத்தில் காலியாகவுள்ள 533 பதவிகளுக்கு வரும் 8-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இத் தேர்தலின் போது முதன் முறையாக சோதனை அடிப்படையில் 25 சதவீத இடங்களில் மிண்ணணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. மேலும் வாக்குச் சீட்டுகளிலும் பல்வேறு மாற்றங்கள் செய்யப்படவுள்ளன.

கிராம ஊராட்சி வாரியாக வாக்காளர் கணக்கெடுப்பு விரைவில் நடைபெறும். தேர்தல் செலவு கணக்குகளை சமர்பிக்காத வேட்பாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

கள்ள வாக்குகளை காட்டிக்கொடுக்கும் ஏற்பாட்டுடன் உ.பி.யில் வாக்குப்பதிவு!: தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்

லக்னெü, மார்ச் 2: கள்ள வாக்குகளைப் போடவிடாமல் தடுக்கும் ஏற்பாட்டுடன் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் உத்தரப் பிரதேச மாநில சட்டப் பேரவை பொதுத் தேர்தலில் பயன்படுத்தப்படும் என்று அறிவித்தார் தலைமைத் தேர்தல் ஆணையர் என். கோபாலசாமி.

மாநிலத்தில் தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகளை ஆய்வுசெய்ய லக்னெüவுக்கு வியாழக்கிழமை வந்த கோபாலசாமி நிருபர்களிடம் தெரிவித்ததாவது:

“மாநிலத்தில் வாக்காளர் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை வழங்கும் பணி சராசரியாக 70% முதல் 71% வரைதான் நிறைவேறியிருக்கிறது. இது 90% முதல் 95% வரை நடைபெறாமல் தேர்தல் நடைபெறாது. எனவே வாக்காளர் அடையாள அட்டை வழங்கும் பணியைத் துரிதப்படுத்துமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டிருக்கிறது.

வாக்காளர் அடையாள அட்டை இல்லாவிட்டால் என்ன செய்வது என்பது, அப்படி வழங்க முடியாத நிலை ஏற்பட்டால் -அதன் பிறகு தெரிவிக்கப்படும்.

வாக்குப் பதிவு இயந்திரத்தில் புதிய அம்சங்கள்: மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களைத்தான் இம் மாநிலத்தின் அனைத்துத் தொகுதிகளிலும் முதல்முறையாக பயன்படுத்தப் போகிறோம். அவற்றில் 2 புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. 1. கண்பார்வை அற்றவர்களும் தொட்டு உணரும் வகையிலான எண்கள் அதில் பொறிக்கப்பட்டிருக்கும். 2. ஒவ்வொரு வாக்கு பதிவானதும் அந்த வாக்கு அளிக்கப்பட்ட நேரமும் சேர்ந்தே பதிவாகும். இதனால் வாக்குப்பதிவு எப்போது தொடங்கியது, எப்போது முடிந்தது என்பது தெரிந்துவிடும். வாக்குப் பதிவு முடிந்து சீல் வைத்த பிறகு அந்த வாக்குப்பதிவு இயந்திரத்தை யாரும் முறைகேடாகப் பயன்படுத்த முடியாது. இப்படி சில ரகசிய ஏற்பாடுகள் அதில் உள்ளன. எனவே முறைகேடுகள் தவிர்க்கப்படும். அப்படி நடந்தால் இயந்திரமே சொல்லிவிடும் (மெஷின் போலேகா!).

வாக்குச் சாவடியில் மத்திய போலீஸ்: ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் மத்திய போலீஸ் படைதான் காவல் பணியில் ஈடுபடுத்தப்படும். எனவே தேர்தல் சுதந்திரமாகவும் நேர்மையாகவும் நடைபெறும்’ என்றார் கோபாலசாமி.

Posted in ADMK, Amar Singh, Amitabh, Anomaly, Assembly, BJP, booth capturing, Boothcapturing, BSP, candidate, Chennai, Chief Election Commissioner, civic elections, Commissioner, Congress, DMK, EC, Elections, Electorate, Electronic Voting, EVMs, Gopalasami, Gopalasamy, Gopalsami, Gopalsamy, Jayaprada, Local Body, Madras, MDMK, Mulayam, Municipal, Party, Politics, Polling Booth, Polls, SJP, UP, Voting Machines | Leave a Comment »

Centre considering Mulayam Govt.’s dismissal: Jaiswal

Posted by Snapjudge மேல் நவம்பர் 13, 2006

உள்ளாட்சி தேர்தலில் வன்முறை; முலாயம்சிங் அரசை டிஸ்மிஸ் செய்வோம்: மத்திய மந்திரி மிரட்டல்

புதுடெல்லி, நவ. 13-

இந்தியாவின் மிகப்பெரிய மாநிலமான உத்தரப் பிரதேசத்தில் முலாயம்சிங் யாதவ் தலைமையிலான சமாஜ்வாடி கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது.

அங்கு சமீபத்தில் உள்ளாட்சி தேர்தல் நடந்தது. மொத்தம் உள்ள 12 மாநக ராட்சியில் பாரதீய ஜனதா 8 மாநகராட்சியை கைப்பற்றியது. காங்கிரஸ் 3 மாநகராட்சி யையும், சமாஜ்வாடி ஒரு மாநகராட்சியையும் கைப் பற்றியது.

உள்ளாட்சி தேர்தலில் நடந்த வன்முறை தொடர்பாக முலாயம்சிங் அரசை டிஸ்மிஸ் செய்வோம் என்று மத்திய உள் துறை இணை மந்திரி ஸ்ரீபிரகாஷ் ஜெய்ஸ்வால் மிரட்டல் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

உத்தரப்பிரதேசத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் வரலாறு காணாத வகையில் வன்முறை சம்பவம் நடந்தது. இதனால் முலாயம்சிங் அரசை டிஸ்மிஸ் செய்வது தொடர்பாக மத்திய அரசு தீவிரமாக பரிசீலித்து வருகிறது.

மத்திய அரசு இந்த விஷயத்தில் பார்வையாளர்போல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது. அரசியல் சாசனப்படி நடந்து கொள்ளும்.

உள்ளாட்சி தேர்தலில் நடந்த வன்முறை தொடர்பாக உத்தரப்பிரதேச அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று அனைத்து எதிர்க் கட்சிகளும் கோரிக்கை வைத்துள்ளன. இது தொடர் பாக மத்திய அரசு தீவிரமாக பரிசீலித்து வருகிறது. தேர்தல் கமிஷன் மீது எங்களுக்கு முழு நம்பிக்கை உள்ளது. அப்படி இருக்கும்போது வாக்குச் சாவடிகளை கைப்பற்றும் சம்பவம் எப்படி நடந்தது என்று தெரியவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

உத்தரப்பிரதேச மாநில காங்கிரஸ் தலைவர் சல்மான் குர்ஷித் கூறும்போது, `தேர்தல் வன்முறை தொடர்பாக முலாயம்சிங் அரசை கண்டித்து வருகிற 20-ந்தேதி ஜெயில் நிரப்பும் போராட்டம் நடத்துகிறோம்’ என்றார்.

முலாயம்சிங் அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று கடந்த சில தினங்களுக்கு முன்புதான் பாரதீய ஜனதா தெரிவித்தது. அதற்குள் தற்போது மத்திய மந்திரி மிரட்டி உள்ளார். உத்தரப்பிரதேசத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல் படுத்த வேண்டும் என்றால் பாராளுமன்றத்தின் இரு சபையிலும் ஆதரவு தேவை. இதற்காக பாரதீய ஜனதாவின் உதவி தேவை. ஆனால் இது விஷயத்தில் பா.ஜனதா, ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசை ஆதரிக்குமா என்பது சந்தேகம்தான்.

உத்தரப்பிரதேசத்தில் பிப்ரவரி மாதம் சட்டசபை தேர்தல் நடக்கிறது. தற்போது ஆட்சியை கவிழ்க்க ஆதரித்ததால் தங்களது செல்வாக்கு பாதிக்கப்படுமோ என்று பாரதீய ஜனதா பயப்படுகிறது.

Posted in booth capturing, Congress(I), Elections, Local Body Polls, Mulayam Singh Yadav, rigging, Salman Khurshid, Sriprakash Jaiswal, UP, Uttar Pradesh | Leave a Comment »