Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Big Brother’ Category

Shilpa Shetty uses underworld criminals to collect her payment arrears – Praful Saris

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 26, 2007

தொழிலதிபருக்கு மிரட்டல்: ஷில்பாவை விசாரிக்க போலீஸ் யோசனை

Pankaj Aggarwal, the owner of Prafful Sarees who signed Shilpa in 1998 for a contract worth Rs 4 lakh a year, submitted tapes to police in Surat in which he was threatened by criminals allegedly hired by her parents to recover arrears, the actress said “the tapes were doctored”.

ஆமதாபாத், பிப். 26: தொழிலதிபர் ஒருவருக்கு மிரட்டல் வந்தது தொடர்பாக பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியை விசாரிப்பது குறித்து சூரத் போலீசார் ஆலோசித்து வருகின்றனர்.

சூரத் துணிக்கடை தொழிலதிபர் பங்கஜ் அகர்வால். இவருக்கு 2003-ல் தொலைபேசி மூலம் மிரட்டல் வந்தது. இதையடுத்து போலீசார் விசாரித்த போது ஃபசல் உல் ரெஹ்மான் என்பவர் மிரட்டியது தெரியவந்தது. இதன்பின்னர் அவரைக் கைது செய்து தில்லி போலீசார் விசாரித்தனர்.

அப்போது, “”ஷில்பா ஷெட்டி என்னிடம் உதவி கோரினார். அதனால்தான் பங்கஜ் அகர்வாலை மிரட்டினேன்” என்று போலீசாரிடம் அவர் வாக்குமூலம் அளித்தார்.

இப்போது இந்த வழக்கு தொடர்பாக ரெஹ்மானை விசாரிக்க சூரத் போலீசார் திட்டமிட்டுள்ளனர். ஷில்பா ஷெட்டியும் விசாரணைக்கு அழைக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதுதொடர்பாக சூரத் போலீஸ் துணை கமிஷனர் சுபாஷ் திரிவேதி கூறியது:

தில்லி உயர்நீதிமன்றக் காவலில் உள்ள ரெஹ்மானை எங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்து விசாரிக்க அனுமதி கோரியுள்ளோம். ரெஹ்மானிடம் விசாரித்த பிறகு, ஷில்பாவிடமான விசாரணை குறித்து முடிவு செய்யப்படும் என்றார்.

இதற்கிடையில் இந்த மிரட்டல் வழக்கு தொடர்பாக ஷில்பாவின் தாயார் சுனந்தா, 2003-ல் கைது செய்யப்பட்டு, ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இப்போதும் இவர் ஜாமீனில்தான் இருந்து வருகிறார். இந்த வழக்கு தொடர்பாக ஷில்பாவின் தந்தையார் மீதும் அப்போது வழக்கு தொடரப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Posted in abuse, Ad, Advertisement, Big Brother, Controversy, Extortion, Goonda, Gunda, Law, Model, Money, Munnabhai, Order, Pankaj Aggarval, Pankaj Aggarwal, Police, Power, Prafful Sarees, Praful, Sarees, Saris, Shilpa Shetty, Surat, Vasool Raja | Leave a Comment »

Chennai’s 20 artery roads to get CCTV installed – CM Karunanidhi

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 2, 2007

சென்னையின் 20 முக்கிய சாலைகளில் கண்காணிப்பு கேமிரா: முதல்வர் அறிவிப்பு

சென்னை, பிப். 3: சென்னை மாநகரில் போக்குவரத்து விதிகளை மீறுவோரைக் கண்டுபிடிக்க 20 முக்கிய இடங்களில் கண்காணிப்புக் கேமிரா வைக்கப்படுகிறது. இதற்கான அறிவிப்பை முதல்வர் கருணாநிதி வெளியிட்டுள்ளார்.

வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிகளை முறையாகக் கடைப்பிடிக்கின்றனரா என்பதைக் கண்டுபிடிக்கவும், விதிகளை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கவும், போக்குவரத்து நெரிசல் ஏற்படும் பகுதிகளில் உடனடி நடவடிக்கை எடுக்கவும் இந்த கண்காணிப்பு கேமிரா மூலமான கண்காணிப்பு உதவும்.

ரூ. 2.1 கோடி செலவில் 20 கண்காணிப்புக் கேமிராக்கள் நிறுவத் திட்டமிடப்பட்டுள்ளது. இவை நிறுவப்படும் இடங்கள்:

  1. போர் நினைவுச் சின்னம்,
  2. தலைமைச் செயலக வெளிப்புற வாயில்,
  3. கத்திப்பாரா சந்திப்பு,
  4. வள்ளுவர் கோட்டம் சந்திப்பு,
  5. அண்ணா சிலை சந்திப்பு,
  6. வீல்ஸ் இந்தியா கம்பெனி சந்திப்பு,
  7. பெரியார் சிலை சந்திப்பு,
  8. வேளச்சேரி விஜயநகர் பேருந்து நிலைய சந்திப்பு,
  9. மத்திய கைலாஷ் சந்திப்பு,
  10. ஹால்டா சந்திப்பு,
  11. ஆளுநர் மாளிகை முதன்மை வாயில் சந்திப்பு,
  12. எஸ்.ஆர்.பி. டூல்ஸ் நிறுவன சந்திப்பு,
  13. எஸ்ஐஇடி கல்லூரி -செனடாப் சாலை சந்திப்பு,
  14. 100 அடி சாலை -வட பழனி சாலை சந்திப்பு,
  15. போரூர் சந்திப்பு,
  16. அசோக் பில்லர் சந்திப்பு,
  17. அண்ணாநகர் ரவுண்டானா சந்திப்பு,
  18. எஸ்என் செட்டி சாலை -சுங்கச் சாவடி சந்திப்பு,
  19. விமான நிலைய சாலை சந்திப்பு,
  20. கிரீன்வேஸ் சாலை சந்திப்பு ஆகிய இடங்களில் இவை நிறுவப்படும். இந்த சாலை சந்திப்புகளில் உள் சுற்று இணைப்பு தொலைக்காட்சிப் பெட்டிகள் (சிசிடிவி) நிறுவப்பட்டு போக்குவரத்து கண்காணிக்கப்படும் என்று அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Posted in Auto, Automobile, Big Brother, CCTV, Chennai, Closed circuit TV, CM, Karunanidhi, Law, Madras, Motor, Order, Police, RMV, Road, Roads, Streets, Surveillance, Tamil Nadu, Terrorism, TN, TV | 1 Comment »

Shilpa Shetty – Biosketch: Born in Tamil nadu

Posted by Snapjudge மேல் ஜனவரி 29, 2007

நடிகை ஷில்பாஷெட்டி தமிழ்நாட்டில் பிறந்தவர்

`பிக் பிரதர்’ நிகழ்ச்சியில் வென்று பல கோடி பணத்தை பரிசாக பெற்றதன் மூலம் நடிகை ஷில்பாஷெட்டி தன் புகழ் ஏணியின் உச்சத்தை உயர்த்திக் கொண்டிருக்கிறார்.

கோதுமை நிறம், சுண்டி இழுக்கும் கண்கள், 5 அடி 10 இஞ்ச் உயரம். அந்த உயரத்துக்கு ஏற்ற உடல் அமைப்பு போன்ற அம்சங்கள் ஷில்பாவை கவர்ச்சி கன்னியாக வலம் வர செய்கின்றன. தற்போது மும்பை செம்பூரில் உள்ள அந்தோணி சாலையில் வசித்து வரும் இந்த அழகு தேவதை தமிழ்நாட்டில் பிறந்து வளர்ந்தவராவார்.

1975-ம் ஆண்டு ஜுன் மாதம் இவர் தமிழ்நாட்டில் பிறந்தார். இவரது பெற்றோர்-சுரேந்திரா ஷெட்டி, சுனந்தா ஷெட்டி. இவர்கள் இருவரும் சென்னையில் மாடலிங் செய்து வந்தனர். சிறு வயதில் ஷில்பா ஷெட்டியின் அழகை கண்டு அவரது தோழிகள் நீயும் மாடலிங் செய்யலாம் என்றனர். இதனால் 15-வது வயதில் படித்துக் கொண்டே அவர் மாடலிங்கில் ஈடுபட்டார்.

ஆனால் அப்போது 5.7 அடி உயரமே இருந்ததால் முதலில் ஷில்பாவுக்கு சரியான மாடலிங் வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

மாடலிங் தொழிலில் மேலும் ஈடுபட வேண்டும் என்ற நிர்ப்பந்தம் காரணமாக ஷில்பாஷெட்டி குடும்பம் சென்னையில் இருந்து மும்பைக்கு இடம் மாறியது. அங்கு 18-வது வயதில் `பாஜிகர்’ எனும் படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக முதன் முதலில் இந்தி திரை உலகில் அறிமுகமானார். அதில் அவருக்கு வெற்றி கிடைத்தது. “மெயின் கிலாடி தூ அனாரி” என்ற படம் ஷில்பாவின் புகழை நாடெங்கும் உயர்த்தியது. இந்தியாவில் உள்ள பிறமொழி நடிகர்களும் ஷில்பாவுடன் நடிக்க போட்டி போட்டனர்.

தமிழ்நாட்டிலும் இவருக்கு கணிசமான ரசிகர்கள் உள்ளனர். தமிழில் இவர் “மிஸ்டர் ரோமியோ” படத்தில் பிரபுதேவா ஜோடியாக நடித்துள்ளார். “குஷி” படத்தில் இவர் நடிகர் விஜய்யுடன், “மேக்கோபீனா, மேக்கோ பீனா” என்ற ஒரு பாடலுக்கு ஆடினார். இந்த பாடல் பெரும் வரவேற்பை பெற்றது.

கைவசம் நிறைய படங்களை வைத்திருந்த போது இவருக்கும் நடிகர் அக்ஷய்குமாருக்கும் இடையே காதல் அரும்பியதாக பரபரப்பு தகவல் வெளியானது. சிறந்த நடிகைக்கான விருதுகளை 16 தடவை பெற்ற ஷில்பா ஷெட்டிக்கு 2002ம் ஆண்டு முதல் தோல்வி துரத்தத் தொடங்கியது. அந்த ஆண்டு அவர் நடித்த 5 படங்களும் வரிசையாக தோல்வியை தழுவின. இதனால் அவரை இந்தி பட உலகம் ஒதுக்கியது.

தன்னையும் அக்ஷய்குமாரையும் இணைத்து எழுதிய மாத இதழுக்கு எதிராக கோர்ட்டில் வழக்குத் தொடர்ந்து அதில் வெற்றி பெற்றார். அந்த மாத இதழால்தன் பட உலக வாழ்க்கை சற்று சரிந்து போனதாக ஷில்பா ஷெட்டி வருத்தம் தெரிவித்திருந்தார்.

இந்தி பட உலகில் நிறைய வாய்ப்புகள் வராவிட்டாலும் மற்ற மொழிகளில் ஷில்பாவுக்கு இன்னும் ஆதரவு உள்ளது. 2005ல் கன்னடத்தில் ஆட்டோ சங்கர் படத்தில் இவர் மாயா எனும் கேரக்டரில் நடித்தார். இந்த படம் சூப்பர்-ஹிட் வெற்றியைப் பெற்றது.

ஆண்டுக்கு ஒன்று அல்லது இரண்டு படங்களில் மட்டுமே நடிக்கும் ஷில்பா ஷெட்டி சமீபகாலமாக மற்ற சமூக சேவைகளில் கவனம் செலுத்தி வருகிறார். எய்ட்ஸ் நோய் விழிப்புணர்வு பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டார். மிருகங்கள் வதைக்கப்படுவதை எதிர்த்தும் குரல் கொடுத்து வருகிறார்.

2004ம் ஆண்டு இவர் ஒரு படத்தில் எய்ட்ஸ் நோயாளியாக நடித்தார். நிறைய படங்களில் நடிக்காவிட்டாலும், மற்ற முன்னணி நடிகைகளுக்கு இருப்பது போல இவருக்கும் ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. 2 ஆண்டுகளுக்கு முன்பு இவர் தன் பெயரில் இ-மெயில் முகவரியை உருவாக்கி அறிவித்த போது லட்சக்கணக்கான ரசிகர்கள் அவருக்கு மெயில் அனுப்பி திணற வைத்தனர்.

கடந்த 15 ஆண்டுகளாக திரை உலகில் இருக்கும் ஷில்பாவுக்கு தற்போது 31 வயதாகிறது. இதுவரை 37 படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். இதில் 27 படங்கள் தோல்வியை தழுவின. இந்தி, ஆங்கிலம், மராத்தி, குஜராத்தி, தெலுங்கு, தமிழ் ஆகிய 6 மொழிகளில் பேசும் இவருக்கு அமிதாப்பச்சன், கோவிந்தா, ஜாக்கிஜான், டாம் குரூசி பிடித்த நடிகர்களாகும். தத்கன், கத்யார், ரிஸ்தே ஆகிய படங்கள் ஷில்பாவுக்கு நல்ல பெயரை பெற்றுக் கொடுத்தன. அடுத்து அவர் நடிப்பில் 3 படங்கள் வெளிவர உள்ளன.

ஷில்பாஷெட்டியின் சகோதரி சமீதா ஷெட்டி. இவரும் இந்தி படங்களில் நடித்து வருகிறார்.

ஷில்பா ஷெட்டி முகவரி:- 12, தேவ்தர்ஷன், 262, அந்தோணிரோடு, செம்பூர், மும்பை-400071. போன்: 022-5517667, 55644738.

ஷில்பா ஷெட்டியின் இளமைக்காலம் சோகம் நிறைந்தது. தமிழ்நாட்டில் பிறந்த அவர் குடும்பம் வறுமையில் வாடியது. பிழைக்க வழி தேடி மும்பை சென்றனர். ஷில்பா ஷெட்டி வயதுக்கு வந்ததும் பெற்றோர் திருமண ஏற்பாடு செய்தனர். மாப்பிள்ளை பார்த்து பேசி முடித்தார்கள். திருமண தேதியும் குறிக்கப்பட்டது.

ஆனால் கடைசி நேரம் வரதட்சணை பிரச்சினையால் திருமணம் நின்றது. பெற்றோரால் பேசியபடி வரதட்சணை கொடுக்க முடியவில்லை. இதனால் மாப்பிள்ளை வீட்டார் திருமணத்தை நிறுத்தி விட் டார்கள். ஷில்பா ஷெட்டி அழுதார். அதன் பிறகு ஷில்பாவை அவரது தாய் மாடலிங்கில் தீவிரமாக இறக்கி விட்டார். கொஞ்சம் வருமானம் வந்தது. பிறகு பட உலகுக்கு தாவினார். பணம் கொட்டியது.

Posted in Big Brother, Biography, Biosketch, Bollywood, Details, Film Star, Glamor Doll, Life, Newsmaker, people, Shilpa Shetty, Story, Tamil Actress, Tamil Nadu | 1 Comment »

Shilpa Shetty – Racism – Celebrity Big Brother victory – Buzz creation & Reality Drama

Posted by Snapjudge மேல் ஜனவரி 29, 2007

நெட்டில் சுட்டதடா…: ஷில்பா ஷெட்டிக்கு ஆதரவு கெட்டி!

ராமன் ராஜா

இந்தி நடிகை ஷில்பா ஷெட்டிக்கும் மகாத்மா காந்திக்கும் ஓர் ஒற்றுமை இருக்கிறது; இரண்டு பேருமே வெள்ளைக்காரர்களால் கடுமையாக ராகிங் செய்யப்பட்டவர்கள். ஆனால் காந்தியை அன்று அவர்கள் ரயிலிலிருந்து பிடித்துத் தள்ளி விட்டபோது அதைத் தட்டிக் கேட்பதற்கு நாதியில்லை. இன்றைக்கு ஷில்பா ஷெட்டியை ஆதரித்து ஆயிரக்கணக்கான குரல்கள் எழும்பியிருக்கின்றன. விவகாரம் பிரிட்டிஷ் பார்லிமென்ட் வரை எதிரொலித்திருக்கிறது. அதுதான் வித்தியாசம். ஆனால் ஆங்கிலேயர்களின் பார்வையில் மட்டும் எந்த மாறுதலும் இன்றி, இன்னும் நாம் பாம்பாட்டிகளாகத்தான் தெரிகிறோம் என்று தோன்றுகிறது.

பிரிட்டனில் சானல்-4 என்ற பிரபல டி.வியில் ஒரு பிரபல கேம் ஷோ. ஆணும் பெண்ணுமாக ஒரு பத்திருபது பேர் சேர்ந்து ஒரு பங்களாவில் பல வாரங்கள் வசிக்க வேண்டும். அங்கேயே சமையல், சாப்பாடு எல்லாம். வெளியே போகக் கூடாது; ஹவுஸ் அரெஸ்ட் மாதிரிதான். அவர்கள் தங்கள் தினசரி வாழ்க்கையை எப்படி வாழ்கிறார்கள் என்பதை வீடு முழுவதும் டஜன் கணக்கான காமிராக்கள் இருபத்து நாலு மணி நேரமும் கண்காணிக்கும். இதை வேலை வெட்டியில்லாத ஆயிரக்கணக்கான நேயர்கள் டி.வியில் பார்த்து ரசிப்பார்கள். (இப்போது இந்த அசட்டுப் பொழுது போக்கெல்லாம் இந்தியத் தொலைக்காட்சி வரை வந்து சேர்ந்துவிட்டது.) பெரியண்ணன் (க்ஷண்ஞ் க்ஷழ்ர்ற்ட்ங்ழ்) என்ற இந்த ஷோவில் கலந்து கொள்வதற்காக பாம்பே பார்ட்டி ஷில்பா ஷெட்டியும் லண்டன் போனார். அவரை வரவேற்றுப் பன்னீர் தெளித்தார்கள்; காமிரா வீட்டிற்குள் அனுப்பிக் கதவைப் பூட்டினார்கள். அப்போது ஆரம்பித்தது வேதனை.

வீட்டுக்குள் வசித்த வெள்ளை நிறத்தினர் எல்லாம் ஷில்பாவை விரோதமாகவே எதிர்கொண்டார்கள். விரைவிலேயே சின்னச் சின்ன வன்கொடுமைகள் ஆரம்பித்தன. ஷில்பா ஓர் இந்தியர் என்பதற்காகப் பரிகாசம் செய்திருக்கிறார்கள். “இந்தியன் இந்தியன்’ என்பதையே இளக்காரமான குரலில் சொல்லியிருக்கிறார்கள். கடைசியில் “நாயே பேயே’ என்பது வரை போய் விட்டார்களாம். அதுவும் மூன்று லங்கிணிப் பெண்கள் கேங்க் ஆகச் சேர்ந்து கொண்டு ஷில்பாவைப் படாத பாடு படுத்தி எடுத்திருக்கிறார்கள். அவருடைய ஆங்கில உச்சிரிப்பைக் கிண்டலடித்திருக்கிறார்கள். “”உங்கள் ஊரில் உருப்படியாக வீடு, கீடு ஏதாவது கட்டிக்கொண்டு வசிக்கிறாயா அல்லது எல்லா இந்தியர்களையும் போலத் தகரக் கொட்டகை, சாக்குப்படுதாவா?” என்ற ரீதியில் ஓர் ஊசி. கிச்சனில் போய் சிக்கன் செய்து எடுத்து வந்தால் அது சரியாக வேகவில்லை என்று ஒரு மாபெரும் கலாட்டா. ஒரு நடிகையைப் போய் நிஜமாகவே சமைக்கச் சொன்னால் அவர் என்ன செய்வார் பாவம்… டைரக்டர் கட் சொல்லும் வரைதானே கரண்டியால் கிளறிப் பழக்கம்?

ஷில்பாவுக்கு நடப்பதெல்லாம் அவ்வப்போது டெலிவிஷனில் ஒளிபரப்பாக, இங்கிலாந்தில் வசிக்கும் இந்தியர்கள் கொதித்து எழுந்தார்கள். தாங்கள் தினமும் தெருவில் அனுபவிக்கும் வேதனைகளைத் தங்கள் அபிமான நடிகையும் சந்திப்பதைக் கண்டவுடன் அவர்களுக்கு எங்கோ மிச்சமிருக்கும் தேசபக்தி ஊற்றெடுத்து விட்டது. சானல்-4க்கு ஆயிரக்கணக்கில் கண்டனக் கடிதங்கள் வந்து குவிந்தன. டாக் ஷோ ரேடியோ நிகழ்ச்சிகள், இன்டர்நெட் அரட்டை அறைகள் எங்கும் பிலுபிலுவென்று இதேதான் பேச்சாகிவிட்டது. ஷில்பா பிராணிவதைத் தடுப்பு சங்கத்தில் உறுப்பினர். எனவே, சங்கத்தின் அங்கத்தினர்களெல்லாம் லண்டன் குளிரில் சட்டையைத் துறந்து உடம்பெங்கும் சிறுத்தைப் புலி பெயின்ட் அடித்துக்கொண்டு “”வெள்ளையனே, ஓர் அப்பாவி இந்தியப் பிராணியை வதைக்காதே!” என்று காந்திகிரி செய்தார்கள். கடைசியாக வந்த தகவலின்படி ஷில்பா ஷெட்டி விவகாரம் ஒருவழியாக சமாதானம் பேசி முடிவாயிருக்கிறது. எது எப்படியோ, பெரியண்ணாவுக்கு இதனால் நல்ல வியாபாரம். சானல்-4 டி.வியின் டி.ஆர்.பி ரேட்டிங் எங்கோ எகிறிவிட்டது.

ஷில்பாவுக்கு நடந்த சில்மிஷங்களெல்லாம் பொதுவாக, ஆசிய, ஆப்பிரிக்கர்கள் எல்லாருக்கும் அங்கே நடப்பதுதான். உதாரணமாக ஷில்பாவை அவர்கள் “”பாக்கி பாக்கி” என்று ரேக்கி எடுத்தார்கள். (பாக்கிஸ்தான்காரி என்பதன் சுருக்கம்). இந்தியத் துணைக் கண்டத்தினரை இகழ்வதற்காகவே அவர்கள் கண்டுபிடித்துள்ள வட்டார வசவுச் சொல் இது. அவர்களைப் பொறுத்தவரை சற்று மாநிறமாக யாராவது தெருவில் போனாலே பாகிஸ்தானி என்று சொல்லிவிடுவார்கள். இந்த மாதிரி பற்பல இனவெறிச் சொற்ரொடர்கள், சாராயக் கடைகளிலும் ஹைஸ்கூல் மாணவர்களிடையிலும் தினமும் ஏராளமாகப் புழங்குகின்றன.

இங்கிலாந்தில் இனவெறி எந்த அளவுக்குப் புரையோடிப் போயிருக்கிறது என்பதை அறிய, பிபிசி நிருபர் ஒருவர் ஒரு சின்ன பரிசோதனை செய்தார். பேப்பரில் வந்திருந்த அத்தனை வாண்ட்டட் விளம்பரங்களையும் எடுத்து வைத்துக்கொண்டு சரமாரியாக வேலைக்கு விண்ணப்பம் போட்டார். ஆனால் இரண்டு செட் அப்ளிகேஷன் அனுப்பினார். ஒன்று ஜான், பீட்டர் என்பதுபோல் வெள்ளைக்காரத்தனமான பெயரில். மற்றொன்று -ஜாங்கியா சிங், சலீம் அலி என்பது போன்று வெள்ளையடிக்கப்படாத பெயரில். மற்றபடி கல்வித் தகுதி, அனுபவம் எல்லாம் இரண்டு அப்ளிகேஷன்களிலும் ஒரே மாதிரிதான். ஆங்கிலேயப் பெயரில் போட்டவற்றுக்கெல்லாம் பெரும்பாலும் இன்டர்வியூக்கு அழைப்பு வந்தது. மற்ற விண்ணப்பங்கள் போன இடம் தெரியவில்லை. நேரடியாக டாய்லெட் பேப்பர் செய்வதற்கு மூலப் பொருளாக அனுப்பிவிட்டார்கள் போலிருக்கிறது.

அங்கே பல காலமாக கறுப்பு இனத்தவர்கள் வேலையில்லாதிருப்பது -பிழைப்புக்காகக் குற்றங்களில் ஈடுபடுவது -அதனால் வேலை வாய்ப்புக் கதவுகள் மேலும் இறுக மூடிக் கொள்வது என்பது விஷ வட்டம் போலத் தொடர்ந்து சுற்றிக் கொண்டிருக்கிறது. மைனாரிட்டி வகுப்பு மக்கள் வேலை வாய்ப்பில் மிகவும் பின் தங்கியிருப்பதற்குக் காரணமே, வேலை கொடுப்போரின் இனவெறி மனநிலைதான். இனப் பாகுபாடுகளைக் கட்டுப்படுத்துவதற்காக அரசாங்கமும் கமிஷன்கள் எல்லாம் அமைத்து வரைப்படங்கள் வரைந்து அறிக்கைகள் தயாரித்துக் கொண்டுதான் இருக்கிறது. அதன்படி கல்வி, வேலை, சம்பாத்தியம், குழந்தை இறப்பு விகிதம் இப்படி எந்தப் புள்ளிவிவரத்தை எடுத்துக்கொண்டாலும் ஆசியர்கள், ஆப்பிரிக்கர்கள், முஸ்லிம்கள் எல்லாருமே, ஜாதி வெள்ளயர்களை விட இரண்டு படி கீழேதான் இருக்கிறார்கள்.

இங்கிலாந்தில் நீங்கள் கார் ஓட்டும்போது சற்றே ஆக்ஸிலேட்டரை மிதித்துவிட்டாலும் ஓவர் ஸ்பீட் போனதற்காகப் போலீஸ்காரர் பிடித்து அபராதம் தீட்டிவிடுவார். அதே வேகத்தில் பக்கத்தில் ஒரு “வெள்ளைக்காரர்’ போனால் வெறும் அதட்டலுடன் தப்பித்து விட அவருக்கு சான்ஸ் அதிகம். அதுவும் சந்தேகத்துக்கிடமான நபர் ஆப்பிரிக்கர் என்றால் ஆன் தி ஸ்பாட்டிலேயே அடி உதை கூடக் கிடைக்கலாம். வெள்ளை போலீசார் கறுப்பர்களைத் தெருவில் போட்டு மிதிக்கும் காட்சிகளை எவ்வளவோ தற்செயல் காமிராக்கள் படம் பிடித்திருக்கின்றன.

இனவெறிப் பிரச்சினைகளில் இந்த அரசியல்வாதிகளாவது தங்கள் திருவாயைத் திறக்காமல் இருந்து தொலைக்கலாம். இருப்பார்களா என்ன? முஸ்லிம் பெண்கள் பர்தா அணியும் வழக்கம் பற்றி அங்கே ரொம்ப நாளாகவே ஒரு விவாதம் இருக்கிறது. ஒரு நாள் பாராளுமன்றத் தலைவர் ஜாக் ஸ்ட்ரா ஒரு வாய் முத்து உதிர்த்தார். “”முஸ்லிம்கள் தேசிய நீரோட்டத்துடன் கலக்க வேண்டுமானால் பர்தா போன்ற தங்கள் தனிப்பட்ட அடையாளங்களைத் துறந்துவிட வேண்டும்” (ஜாக் ஸ்ட்ரா என்ற வார்த்தைக்குக் கொடும்பாவி என்று அர்த்தம்!) இதற்குக் கை மேல் பலன் கிடைத்தது. நாடு முழுவதும் பர்தாப் பெண்கள் தெருவில் நடக்கவே முடியாமல் ஏளனம், சீண்டல், வம்பர்கள் அவர்கள் மீது பேப்பர் ராக்கெட் வீசினார்கள்; முக்காட்டைப் பிடித்து இழுத்தார்கள்.

இந்த அக்கிரமக்காரர்களெல்லாம் பக்கா ஜென்டில்மேன்கள் என்று சொல்லும் அளவுக்கு இருக்கிறது, மற்ற சிலருடைய நடவடிக்கைகள். பாலத்தடியில் குந்தி வெட்டிப் பேச்சு பேசிக் கொண்டிருக்கும் முரட்டு இளைஞர் கூட்டங்கள், அவ்வப்போது ஆசியர்களை அடித்துத் தாக்கி ஆஸ்பத்திரிக்கு அனுப்பியிருக்கின்றன. இதற்குச் சிகரம் வைத்ததுபோன்ற நிகழ்ச்சி நடந்த வருடம் 1993. ஸ்டீபன் லாரன்ஸ் என்ற பதினெட்டே வயதான இளைஞர். கண் நிறைந்த கனவுடகளுடன் இருந்த ஆப்பிரிக்க மாணவர். நன்றாகப் படித்துக் கொண்டிருந்தார். அவர் செய்த ஒரே குற்றம், கறுப்புத் தோல் போர்த்தியிருந்தது. லண்டனில் பஸ் ஸ்டாண்ட் ஒன்றில் பேருந்துக்காகக் காத்துக்கொண்டிருந்த போது அந்த ஏரியாவில் அலப்பறை பண்ணிக்கொண்டு திரிந்த வெள்ளைக் கும்பல் ஒன்றின் கண்ணில் பட்டுவிட்டார். திடீரென்று அவர்கள் காரணமின்றி ஸ்டீபன் மீது பாய்ந்து நீண்ட கத்தியால் சரமாரியாகக் கிழிக்க ஆரம்பித்தார்கள். தப்பித்து ஓட முயன்ற ஸ்டீபன் நூறு அடி ஓடுவதற்குள்ளாகவே தன் கறுப்பு ரத்தம் அனைத்தையும் வெள்ளையர் பூமியில் காலி செய்துவிட்டு உயிரிழந்தார்.

சம்பவம் நடந்த உடனே டெலிபோனில் ஆள் அடையாளத்துடன் தகவல் கிடைத்தும் பிரிட்டிஷ் போலீஸ் குற்றவாளிகளைப் பிடிப்பதில் முனைப்புக் காட்டாமல் காலம் கடத்தியதும், அடுத்து பத்து வருடத்திற்கு ஸ்டீபனுடைய பெற்றோர்கள் நம்பிக்கையிழக்காமல் கதவு கதவாகத் தட்டியதும், பெரும் போராட்டத்துக்குப் பிறகு கடைசியில் ஒரு வழியாகப் பாதி நீதி வென்றதும் -பிரிட்டனில் வசிக்கும் கறுப்பு இனத்தவருக்குக் கட்டபொம்மன் கதை மாதிரி ஒரு வீர வரலாறு.

அதன்பிறகு தொடர்ச்சியாக வருடத்துக்கு ஐந்து இனவெறிப் படுகொலைகளாவது பிரிட்டனில் நடக்கின்றன. அதிலும் 2005 ஜூலையில் லண்டனில் குண்டு வெடித்த நிகழ்ச்சிக்குப் பிறகு முஸ்லிம்களைக் குறிவைத்துத் தாக்குவது அதிகரித்துவிட்டது. எனவே நீங்கள் தாடி கீடி வைத்திருந்தால், இருட்டின பிறகு தயவு செய்து இங்கிலாந்துத் தெருக்களில் நடக்காதீர்கள்.

லண்டன் டி.வி. நிகழ்ச்சியில் ஷில்பா வெற்றி: கோடிக்கணக்கில் பணம் குவிகிறது

லண்டன், ஜன. 30: லண்டன் டி.வி.யில் ஒளிபரப்பாகி வந்த “பிக் பிரதர்’ என்ற கேம் ஷோவில் இந்தி நடிகை ஷில்பா ஷெட்டி வெற்றி பெற்றுள்ளார். இதன் மூலம் அவருக்கு கோடிக்கணக்கில் பணமும், பரிசுப் பொருள்களும், ஹாலிவுட் பட வாயப்புகளும் குவிகின்றன.

இதுகுறித்த விவரம்:

இங்கிலாந்தின் “சேனல் 4′ தொலைக்காட்சி நிறுவனம் “செலிபிரிட்டி பிக் பிரதர்ஸ்’ என்ற நிகழ்ச்சியை சில ஆண்டுகளாக நடத்தி வருகிறது. இதில் அரசியல், சினிமா, விளையாட்டு உள்ளிட்ட பல துறைகளின் பிரபலங்களைத் தேர்ந்தெடுத்து ஒரு வீட்டில் தங்க வைப்பார்கள்.

அங்கு அவர்களுடைய அன்றாட நடவடிக்கைகளைப் படமாக்கி ஒளிபரப்பு செய்வார்கள். அதைப் பார்க்கும் நேயர்கள் அளிக்கும் வாக்குகளின் அடிப்படையில் ஒவ்வொருவராக அந்த வீட்டிலிருந்து வெளியேற்றப்படுவரார்கள். இறுதி வரை யார் அங்கு இருக்கிறார்களோ அவரே வெற்றி பெற்றவராக அறிவிக்கப்படுவார்.

சர்ச்சை: கடந்த 3-ம் தேதி தொடங்கப்பட்ட இந்நிகழ்ச்சியில் 14 பிரபலங்கள் பங்கேற்றனர். முதன்முறையாக இந்தியா சார்பில் நடிகை ஷில்பா ஷெட்டி பங்கேற்றார். முதல் வாரம் அமைதியாகச் சென்றுகொண்டிருந்த நிகழ்ச்சி, சக போட்டியாளர்கள் ஷில்பாவிடம் நடந்துகொண்ட முறையால் பலரின் கவனத்தையும், கண்டனத்தையும் பெற்றது.

ஷில்பாவை வெளியேற்றும் நோக்கத்தில் சக போட்டியாளரான ஜேட் கூடி ஷில்பாவை “நாய்’ என்றும், மற்ற இருவர் “அருவறுக்கத்தக்கவர்’, “ஆங்கிலம் பேசத் தெரியாதவர்’ என்றும் கருத்து தெரிவித்தனர். இதனால் ஷில்பா கண்ணீர் விட்டு அழுதார்.

புகார்: சக போட்டியாளர்கள் சிலரின் மரியாதைக் குறைவான செயல்களைத் தொலைக்காட்சியில் பார்த்த நேயர்கள் அதிர்ச்சியடைந்தனர். இன பாகுபாடு காரணமாகவே ஜேட் கூடி அவமரியாதையாக நடந்துகொண்டார்; அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இ மெயில் மூலமாகப் புகார் தெரிவித்தனர்.

ஆதரவு: இதன் காரணமாக ஜேட் கூடி நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். அதன் பிறகு ஷில்பாவுக்கு ஆதரவு அதிகரித்தது. 14 போட்டியாளர்களில் இறுதிச் சுற்றுக்கு ஷில்பா, மைக்கேல் ஜாக்சனின் சகோதரர் ஜெர்மைன் ஜாக்சன், டிர்க் பெனடிக் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

வெற்றி: இறுதிச் சுற்றில் ஒவ்வொருவரும் பெற்ற வாக்குகள் விவரம் திங்கள்கிழமை அதிகாலை 3 மணிக்கு அறிவிக்கப்பட்டது. ஷில்பா ஷெட்டி 63 சதவிகித வாக்குகளைப் பெற்று முதல் இடத்தைப் பெற்றார். மற்றவர்கள் மிகக் குறைந்த சதவிகித வாக்குகளையே பெற்றனர்.

ஆனந்தக் கண்ணீர்: வெற்றிச் செய்தி அறிவிக்கப்பட்டதும் ஷில்பா ஷெட்டி ஆனந்தக் கண்ணீரோடு அறையை விட்டு வெளியே வந்தார். அங்கு திரண்டு நின்ற ஆயிரக்கணக்கானோர் அவரை கரகோஷத்துடன் வரவேற்றனர்.

`பிக்பிரதர்’ வெற்றியால் ஷில்பா ஷெட்டிக்கு ரூ.45 கோடி குவிந்தது 

மும்பை, ஜன.30- இங்கிலாந்தில் சானல்4 டிவி நடத்திய பிக்பிரதர் நிகழ்ச்சியில் நடிகை ஷில்பா ஷெட்டி அபார வெற்றி பெற்றார். இன வெறியால் அவமானப்படுத்தப்பட்ட அவருக்கு 67 சதவீத ஆதரவு கிடைத்தது. இந்த வெற்றியால் நடிகை ஷில்பா ஷெட்டியின் புகழ்-அந்தஸ்து ஒரே நாளில் உலக அளவில் உயர்ந்து விட்டது.

31வயதாகும் ஷில்பா ஷெட்டி இது வரை 37 படங்களில் நடித்துள்ளார். இதில் பெரும்பாலான படங்கள் தோல்வியை தழுவியதால் இந்தி பட உலகம் அவ்வளவாக அவரை கண்டு கொள்ளாமல் இருந்தது. எனவே எய்ட்ஸ் விழிப்புணர்வு பிரசாரத்தில் ஆர்வம் காட்டி வந்தார்.

மும்பை செம்பூரில் வசித்து வரும் ஷில்பா ஷெட்டி பெரும் பணக்காரர் என்று சொல்லும் அளவுக்கு மிக, மிக உயர்ந்த பொருளாதார நிலையில் இல்லாமல் இருந்தார். ஆனால் இன்று பிக்பிரதர் வெற்றிக்கு பிறகு அவர் கோடீஸ்வரர் விஐபிக்களின் வரிசையில் இடம் பிடித்துள்ளார். அதோடு இது வரை இந்திய நடிகைகள் யாருக்கும் கிடைக் காத பப்ளிசிட்டியும், புகழும் அவருக்கு கிடைத் துள்ளது.

`பிக்பிரதர்’ நிகழ்ச்சியில் வெற்றி பெற்றதும் அவருக்கு ரூ.5கோடி கிடைத்தது. இது தவிர பரிசுப் பொருட் களும் குவிந்தன. உலகின் பல நிறுவனங்கள் ஷில்பாவை தங்கள் விளம் பரகாரர்ஆக்கு வதற்காக பரிசுகளை அள்ளி, அள்ளிக் கொடுத்தப்படி உள்ளன.

பிரபல நிறுவனங்கள் மூலம் மட்டும் ஷில்பாவுக்கு ரூ.10 கோடி வரை கிடைத்துள்ளது. பிக்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தன் புதிய ஆலிவுட் படத்தில் ஷில்பாவை ஒப்பந்தம் செய்ய முன் வந்துள்ளது. பிபிசியில் காமெடி தொடர் ஒன்றில் முக்கிய வேடம் ஒன்றுக்கு ஷில்பாவை கேட்டுள்ளனர்.

வசனசர்த்தா சஞ்சீவ் பாஸ்கர் இது தொடர்பாக ஷில்பாவின் தாய் சுனந் தாவுடன் பேசி வருகிறார். இந்த காமெடி தொடர் மூலமாகவும் ஷில்பாவுக்கு கோடிக் கணக்கில் பணம் கிடைக்கும். இவை தவிர புத்தகங்கள் எழுதுவது, கிரிக்கெட் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவது, விருது நிகழ்ச்சியில் பங்கேற்பது, டி.வி டாகுமெண்டரியில் நடிப்பது போன்றவற்றுக்கு ஷில்பா ஒப்பந்தம் ஆகி உள்ளார்.

லண்டனில் புகழ் பெற்ற ஆடை, அலங்கார, நகை டிசைன் நிறுவனங்கள் ஷில்பா விடம் ஒப்பந்தம் செய்ய போட்டி போட்டு வருகின்றன. இத்தகைய முதல் ரவுண்டி லேயே ஷில்பா ஷெட்டிக்கு ரூ.45 கோடி குவிந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

ஷில்பாவை இன்று வரை வெளிநாட்டு நிறுவனங் கள்தான் முற்றுகை யிட்டு மொய்த்தப்படி உள்ளன. அவர் இந்தியா திரும்பியதும், அவருக்கு கிடைக்கப் போகும் பப்ளி சிட்டியைப் பொறுத்து ஷில்பாவுக்கு புதிய ஒப்பந் தங்கள் கிடைக்கலாம்.

எனவே இந்தியாவிலும் கோடிக்கணக்கில் பணம் சம்பாதிக்கும் வாய்ப்பு ஷில்பா ஷெட்டிக்கு கிடைத்துள்ளது. சினிமாவில் தான் ஒரே பாடல் காட்சியில் கதாநாயகனின் அந்தஸ்து உயர்ந்து, அவன் பணக்காரனாகி விடுவதைப் பார்த்து இருக்கிறோம். ஆனால் உண்மையிலேயே `பிக்பிரதர்’ வெற்றி மூலம் நடிகை ஷில்பா ஷெட்டி ஒரே நாளில் ரூ.45 கோடி குவித்து சாதனை படைத்து விட்டார்.

Posted in Actress, Big Brother, Docu Drama, London, Movies, racism, Reality Drama, Shilpa Shetty, Tamil Actress, UK | Leave a Comment »

Shilpa Shetty Wins Celebrity Big Brother With 67 Percent of Votes

Posted by Snapjudge மேல் ஜனவரி 29, 2007

பிக்பிரதர் நிகழ்ச்சி: ஷில்பா ஷெட்டி அபார வெற்றி

லண்டன், ஜன. 29-

இங்கிலாந்தில் “சானல் 4” தொலைக்காட்சி “பிக்பிரதர்” என்ற வித்தியாசமான டி.வி. நிகழ்ச்சி ஒன்றை நடத்தியது. தனி அறையில் 26 நாட்களுக்கு 14 பிரபலங்களை தங்க வைத்து, அவர்களது தினசரி நடவடிக்கைகளை ஒளிபரப்பு செய்தனர். இதில் பிரபல இந்தி நடிகை ஷில்பா ஷெட்டியும் பங்கேற்றார்.

கடந்த 3-ந் தேதி தொடங்கிய இந்த நிகழ்ச்சிக்கு இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய நாடு களின் நேயர்களிடம் அதிக வரவேற்பு கிடைத்தது. திடீரென இந்த நிகழ்ச்சி டி.வி. நடிகை ஜேக்கூடியால் சர்ச் சைக்குள்ளானது.

நடிகை ஷில்பா ஷெட்டியை ஜேக்கூடி “நாய்” என இன வெறியுடன் திட்டினார். பப்படம், ஆங்கிலம் பேச தெரியாது என்றும் ஷில்பாவை அவர் கிண்டல் செய்தார். இந்த இனவெறி பேச்சுக்கு உலகம் முழுவதும் எதிர்ப்பு கிளம்பியது.

ஜேக்கூடியை கண்டித்து சுமார் 45 ஆயிரம் பேர் புகார் செய்தனர். இந்த நிலை யில் போட்டி விதிகளின் படி நேயர்களிடம் ஓட்டெடுப்பு நடத்தப்பட்டது.

குறைந்த ஓட்டு பெறுபவர்கள் போட்டியில் இருந்து விலக்கப்பட்டனர்.

ஷில்பா ஷெட்டியை திட்டிய காரணத்தால் நேயர்களிடம் வெறுப்பை சம்பாதித்திருந்த ஜேக்கூடிக்கு எதிராக மக்கள் வாக்களித்தனர். இதனால் நடிகை ஜேக்கூடி “பிக்பிரதர்” நிகழ்ச்சியில் இருந்து வெளி யேற்றப்பட்டார்.

ஜேக் கூடியுடன் சேர்ந்து ஷில்பா ஷெட்டியை கிண்டல் செய்த ஜோ ஓமிரா, டேனிலி லாயிட் ஆகியோரும் அடுத்தடுத்து நேயர்களிடம் ஆதரவு பெற இயலாமல் வெளியேற்றினர். இதனால் நடிகை ஷில்பா ஷெட்டி மிக, மிக எளிதாக இறுதிச் சுற்றுக்கு முன்னேறினார்.

14 போட்டியாளர்களில் இறுதிச் சுற்றுக்கு 6 பேர் தகுதி பெற்றனர். நடிகை ஷில்பா ஷெட்டி, ஜெர்மையன் ஜாக்சன், டிர்க்பெனடிக், இயன் எச்.வாட்கின்ஸ், டேனிலி லாயிட், ஜேக்டுவிட் ஆகியோர் அந்த 6 பேராகும். இவர்களில் இயன் எச்.வாட்கின்ஸ், டேனிலி லாயட், ஜேக்டுவிட் ஆகிய மூவரும் சனிக்கிழமை நீக்கப்பட்டனர்.

இதைத் தொடர்ந்து நடிகை ஷில்பா ஷெட்டி, ஜெர்மைன் ஜாக்சன், டிர்க் பெனடிக் ஆகிய மூவரிடமும் பலத்த போட்டி நிலவியது. இவர்களில் இங்கிலாந்து நேயர்களிடம் அதிக ஓட்டு பெறப்போவது யார் என்பதில் சஸ்பென்ஸ் நிலவியது.

பெரும்பாலானவர்கள் டிர்க் பெனடிக் இறுதிச் சுற்றில் வெல்ல வாய்ப்பு இருப்பதாக கருதினார்கள். ஆனால் இங்கிலாந்தில் வசிக்கும் ஆசிய நாட்டுக்காரர்களும், இங்கிலாந்து நாட்டுக்காரர்களும் ஷில்பா ஷெட்டிக்கு ஆதரவாக ஓட்டுப் போட்டு அவரை வெற்றி பெறச் செய்தனர்.

`பிக்பிரதர்’ நிகழ்ச்சியின் இறுதிச் சுற்றில் ஒவ்வொரு வருக்கும் கிடைத்த ஓட்டுகள் விவரம் இந்திய நேரப்படி இன்று அதிகாலை 3 மணிக்கு அறிவிக்கப்பட்டது. ஷில்பா ஷெட்டி 63சதவீத ஓட்டுக் கள் பெற்று பிக்பிரதர் நிகழ்ச் சியில் முதல் இடத்தைப் பிடித்து அபார வெற்றி பெற்றார்.

இந்தியர் ஒருவர் வெளிநாட்டில் இந்த கவுரவத்தை பெறுவது இதுவே முதல் தடவையாகும். 2-வது இடத்தை ஜெர்மைன் ஜாக்சன் பிடித்தார். இவர் பிரபல பாப் இசை பாடகர் மைக்கேல் ஜாக்சனின் சகோதரர் ஆவார்.

3-வது இடத்தை டிர்க் பெனடிக் பெற்றார். போட்டி யில் வெல்வார் என்று எதிர் பார்க்கப்பட்ட இவரை மக் கள் 3-வது இடத்துக்கு தள்ளி விட்டனர். ஷில்பா ஷெட் டியுடன் ஒப்பிடுகையில் 2-வது, 3-வது இடத்தை பிடித்தவர்களுக்கு மிக, மிக குறைவான வாக்குகளே கிடைத்திருந்தன.

தோல்வி அடைந்த இயன் வாட்கின்ஸ் 5.3 சதவீதம், டேனிலி லாயிட் 3.3 சதவீதம், ஜேக் டூவிட் 3.2 சதவீதம் ஓட் டுக்களையே பெற முடிந்தது.

63 சதவீத ஓட்டுக்களுடன் ஷில்பா முதல் இடத்தைப் பிடித்து இருப்பதாக அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப்பட்டதும் ஷில்பா `ஓ’ என்று ஆச்சரியத்தில் குரல் எழுப்பியபடி கைக்கூப்பி வணங்கினார்.

“சிக்கன் கறி வென்று விட்டது. உங்கள் அனைவருக்கும் நன்றி” என்று உணர்ச்சிப் பொங்க கூறினார்.

அவர் கண் களில் இருந்து ஆனந்த கண்ணீர் வழிந்தது. ஜெர்மைன் ஜாக்சனும், டிர்க் பெனடிக்கும் ஷில்பாவை கட்டித் தழுவி வாழ்த்துத் தெரிவித்தனர்.

இதையடுத்து ஷில்பா ஷெட்டி 26 நாட்களுக்குப் பிறகு தன் வீட்டு அறைக்குள் இருந்து வெளியில் வந்தார். ஆயிரக்கணக்கானோர் அங்கு திரண்டு நின்று ஷில்பாவை வரவேற்றனர். இவை அனைத்தும் சானல்-4ல் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டன.

`பிக்பிரதர்’ டி.வி. நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற ஷில்பா ஷெட்டிக்கு பரிசுத் தொகையாக ரூ.3 கோடி (300,000 pounds (600,000 dollars)) வழங்கப்படுகிறது. இது தவிர அவருக்கு ஏராளமான நிறுவனங்கள் பரிசுகளை வாரி வழங்குகின்றன. புதிய ஒப்பந்தங்களும் ஷில்பாவுக்கு கிடைக்கும். குறைந்த பட்சம் ரூ.40 கோடி அளவுக்கு அவருக்கு பரிசுகள் குவியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பரிசு மழையில் நனைந்து கொண்டிருக்கும் ஷில்பாவுக்கு உலகம் முழுவதிலும் இருந்து வாழ்த்துக்களும் குவிந்தபடி உள்ளன. இது அவரை திக்குமுக்காட வைத்துள்ளது.

பிக்பிரதர் நிகழ்ச்சியில் வெற்றி பெற்றது குறித்து ஷில்பா ஷெட்டி டயரி ரூமில் அமர்ந்து பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

இங்கிலாந்து நாட்டு மக்களுக்கு நான் முதலில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். என் நாடு (இந்தியா) பெரு மைப்படும் வகையில் வெற்றிக்கு உதவிய ஒவ்வொருவருக்கும் நன்றி.

இந்த போட்டி உண்மையில் ராட்டினத்தில் பயணம் செய்வது போல இருந்தது. உயர்வும், தாழ்வும் எனக்கு பல விஷயங்களை உணர்த்தின. நான் ஏதோ பிரச்சினையை ஏற்படுத்தி விட்டதாக இங்குள்ளவர்கள் கருதக்கூடாது.

என்னை ஜேக்கூடி இன வெறியுடன் திட்டியதாக கூறியது தவறு. அவர் இன வெறி பிடித்தவர் அல்ல. இதை என்னால் உறுதியாக சொல்ல முடியும்.

ஜேக்கூடி சற்று ஆவேசமாக பேசக்கூடியவர். எளிதில் கோபப்படுபவர். அதுதான் அவருக்கு எதிராக பிரச்சினையை ஏற்படுத்தி விட்டது. இதை இனி அனைவரும் மறந்து விட விரும்புகிறேன்.

எவ்வளவு தான் பிரபல மானவராக இருந்தாலும் தவறு செய்வது சகஜம்தான். எல்லோரும் மனிதர்கள் தானே. நாம் அனைவரும் தவறு செய்பவர்கள்தான். எனவே ஜேக்கூடியை குறை சொல்லக்கூடாது.

இங்கிலாந்தில் உள்ள எந்த ஒரு நபருக்கும் பிரச்சினையை ஏற்படுத்தி கொடுத்து விட்டு நான் என் நாட்டுக்கு திரும்ப விரும்பவில்லை.

இவ்வாறு நடிகை ஷில்பா ஷெட்டி கூறினார்.

Posted in Actress, Big Brother, Britain, Celebrity, Drama, London, racism, Reality Show, Shilpa Shetty, UK | Leave a Comment »

British Asians campaign for Shilpa – Racism row: UK police to probe emails

Posted by Snapjudge மேல் ஜனவரி 17, 2007

‘ஷில்பா ஷெட்டி மீது இனவாத ஏளனம்’- இந்தியா கண்டனம்

திரைப்பட நடிகை ஷில்பா ஷெட்டி
திரைப்பட நடிகை ஷில்பா ஷெட்டி

பிரிட்டனில் செலிபிரிட்டி பிக் பிரதர் எனப்படும் யதார்த்தத் தொலைக்காட்சி நிகழ்ச்சியில், பங்குபெறும் மும்பையைச் சேர்ந்த திரைப்பட நடிகை ஷில்பா ஷெட்டி இனப்பாகுபாட்டுடன் நடத்தப்பட்டதாகக் கூறப்படுவது பற்றி இந்திய அரசு தனது கண்டனத்தை தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக, இந்திய அரசு விசாரித்து வருவதாகக் கூறிய இந்திய அமைச்சர் ஆனந்த் சர்மா, இது குறித்து தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளார்.

அந்த நிகழ்ச்சியில் பங்குபெற்ற ஒருவர்- ஷில்பா ஷெட்டியின் பெயரை உச்சரிக்க சிரமப்பட்டதால், அவரை இந்தியர் என அழைத்தார்.

இந்த நிகழ்ச்சி குறித்து பிரிட்டனிலுள்ள ஆயிரக் கணக்காணவர்கள் புகார் கூறியுள்ளார்கள்.

அதேவேளை இந்த நிகழ்ச்சியை பார்ப்பவர்களின் எண்ணிக்கையும் அதிக அளவில் உயர்ந்துள்ளது.

இது குறித்து பிரிட்டனின் பிரதமர் டோனி பிளேரின் கருத்துக்களை நாடாளுமன்றத்தில் கேட்ட போது, தாம் இந்த நிகழ்ச்சியை பார்க்கவில்லை என்றும், ஆனால் நிறவெறிக் கொள்கை என்பது எந்த வகையில் இருந்தாலும் அது எதிர்க்கப்பட வேண்டும் எனவும் கூறினார்.

லண்டன் டி.வி. நிகழ்ச்சியில் அவமதிக்கப்பட்ட ஷில்பா ஷெட்டிக்கு ஆதரவு குவிகிறது- உரிய நடவடிக்கை: வெளியுறவு அமைச்சகம்

புதுதில்லி, ஜன.18: “பிக் பிரதர்’ நிகழ்ச்சியில் அவமதிக்கப்பட்ட இந்தி நடிகை ஷில்பா ஷெட்டிக்கு பெருமளவில் ஆதரவு குவிகிறது. இவ்விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என வெளியுறவு அமைச்சகம் புதன்கிழமை அறிவித்துள்ளது.

இதுகுறித்த விவரம்:

இங்கிலாந்தில் ஒளிபரப்பாகி வரும் “சேனல் 4′ டி.வி.யின் பிரபல நிகழ்ச்சி “பிக் பிரதர்’. இந்நிகழ்ச்சியில் பங்கேற்கும் பிரபலங்கள் ஓர் தனியறையில் சில நாள்கள் தங்கவைக்கப்படுவர்.

அங்கு அவர்களுடைய தினசரி வாழ்க்கையை எவ்வாறு மேற்கொள்கிறார்கள் என்பதையும், சக போட்டியாளர்களுடன் எவ்வாறு பழகுகிறார்கள் என்பதையும் சுவாரஸ்யமாக ஒளிபரப்புகிறார்கள்.

ஒவ்வொருவரின் நடவடிக்கைகளுக்கும் நேயர்கள் ஓட்டளிப்பார்கள்; அதன் அடிப்படையில் ஒவ்வொருவராக வெளியேற்றப்பட்டு இறுதி வரை தாக்குப்பிடிப்பவர்களுக்குப் பரிசு வழங்கப்படும்.

இந்நிகழ்ச்சியில் இந்தியா சார்பாக பிரபல இந்தி நடிகை ஷில்பா ஷெட்டி பங்கேற்றார். இதற்காக அவர் சுமார் சுமார் ரூ.3 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார்.

இந்நிகழ்ச்சியின் ஒரு பகுதி கடந்த வெள்ளிக்கிழமை ஒளிபரப்பப்பட்டது.

அதில் ஷில்பா ஷெட்டியை அவருடைய சக போட்டியாளர்களில் ஒருவர் “நாய்’ என்றும், மற்றொருவர் “அருவருப்பானவர்’ என்றும் கூறியிருக்கிறார். இதைக் கேட்ட ஷில்பா கண்ணீருடன் வெளியேறினார்.

அதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த ஆயிரக்கணக்கான டி.வி. நேயர்கள் டி.வி. நிர்வாகத்துக்கும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைக் கண்காணிக்கும் அமைப்புக்கும் புகார் தெரிவித்தனர்.

சுமார் 10 ஆயிரத்துக்கும் அதிகமான புகார்கள் குவிந்தன. இன பாகுபாடு காரணமாகவே ஷில்பா ஷெட்டி அவமதிக்கப்பட்டுள்ளதாக பலரும் தங்கள் புகாரில் குறிப்பிட்டிருந்தனர்.

இங்கிலாந்து அரசு நடவடிக்கை: தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த இந்திய வம்சாவளி எம்.பி.கீத் வாஸ் இப்பிரச்சினையை லண்டன் நாடாளுமன்றத்தில் எழுப்பியுள்ளார்.

இக்குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்தப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. “சேனல் 4′ தொலைக்காட்சி நிறுவனமும் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளது.

இந்திய அரசு நடவடிக்கை: இந்தியா இனம், மொழி என்ற பாகுபாடின்றி செயல்பட்டு வருவது உலகம் முழுவதும் அறிந்த ஒன்று. ஷில்பா ஷெட்டி அவமதிக்கப்பட்ட விவகாரம் குறித்து தகவல்கள் திரட்டப்பட்டு வருகின்றன. இந்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என்று வெளியுறவுத்துறை இணை அமைச்சர் ஆனந்த் சர்மா புதன்கிழமை செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

2-ம் இடத்தில் ஷில்பா: இந்நிலையில் ஷில்பா ஷெட்டிக்கு பார்வையாளர்களிடம் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

அவர்களுடைய ஓட்டின் அடிப்படையில், இந்தப் போட்டி நிகழ்ச்சியில் தற்போது ஷில்பா ஷெட்டி இரண்டாம் இடத்தில் இருக்கிறார். காமெடி நடிகை கிளேயோ ரோக்காஸ் முதலிடத்தில் இருக்கிறார். ஷில்பா ஷெட்டி முதலிடத்தைப் பெறுவார் என்று பல இங்கிலாந்து பிரபலங்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

நடிகை ஷில்பா ஷெட்டி விவகாரம் குறித்த எதிர்ப்பு வலுக்கிறது

பிரிட்டனில் தொலைக்காட்சித் தொடர் ஒன்றில் கலந்துகொள்ளும், இந்திய நடிகை ஷில்பா ஷெட்டி, அவருடன் கூட கலந்துகொள்பவர்களால், இனரீதியாக ஏளனம் செய்யப்பட்டதைக் கண்டிக்கும் முறைப்பாடுகள் குவியும் அதே வேளையில், அந்தத் தொடருக்கான விளம்பர அனுசரணை வழங்கிய நிறுவனம் அதிலிருந்து விலகிக் கொண்டுள்ளது.

ஒரு மாளிகையில் வைக்கப்பட்டு, ஒளித்து வைத்த கமெராக்கள் மூலம் ஒளிபரப்பப்படும், ‘பிக் பிரதர்’ என்னும் இந்த யதார்த்தத் தொலைக்காட்சித் தொடரில் நடிக்கும் சக நடிக, நடிகைகளின் நடாத்தை, மீண்டும், மீண்டும் தமக்கு கவலையைத் தந்துள்ளதாக, இந்த நிகழ்ச்சிக்கு அனுசரணை வழங்கிய கார் போன் வேர்ஹவுஸ் என்னும் நிறுவனம் கூறியுள்ளது.

பிக் பிரதர் நிகழ்ச்சியில் சக நடிகர் ஒருவருடன்
பிக் பிரதர் நிகழ்ச்சியில் சக நடிகர் ஒருவருடன்

இந்த நடிக, நடிகர்களின் நடாத்தை விரும்பத்தக்கதாக இல்லை என்று கூறும், இந்த நிகழ்ச்சியை ஒளிபரப்பும், சனல்-4 தொலைக்காட்சி நிறுவனத்தின் தலைமை நிறைவேற்று அதிகாரி, ஆனால் நடிகை ஷில்பா கூட இந்த நடிகைகளின் நடத்தை இனவாதம் என்பதைவிட, கலாச்சார மற்றும் குடும்பப் படிநிலை வேறுபாடே அதற்குக் காரணம் என்று நம்புவதாகவும் கூறியுள்ளார்.

இதேவேளை இந்த விவகாரம் குறித்து, இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள பிரிட்டனின் நிதி அமைச்சர் கோர்டன் பிரவுண் கூட அங்கு இந்தியத் தரப்பினருடன் கலந்துரையாடியுள்ளார்.

டி.வி.நிகழ்ச்சியில் யாரும் என்னை அவமதிக்கவில்லை: ஷில்பா ஷெட்டி திடீர் பல்டி

லண்டன், ஜன. 19-

லண்டனில் உள்ள `சேனல் -4′ என்று நிறுவனம் `பிக்பிரதர்’ என்ற டெலிவிஷன் நிகழ்ச் சியை ஒளிபரப்பி வருகிறது.

இந்த நிகழ்ச்சியில் பல்வேறு நாட்டு பிரபல கலைஞர்களுடன் இந்தி நடிகை ஷில்பா ஷெட்டியும் கலந்து கொண்டார். அப்போது ஷில்பா ஷெட்டியை மற்ற கலைஞர்கள் அவமதித்ததும், இனவெறியை தூண்டும் வகையில் அவரை திட்டியதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அவமதிக்கப்பட்ட ஷில்பா கண்ணீர் விட்டு அழுதார்.

இங்கிலாந்து பாராளுமன்றத்திலும் இது சர்ச்சையை எழுப்பியது. ரசிகர்களிடம் இருந்து இணைய தளம் மூலம் 21 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புகார்கள் அனுப்பப்பட்டன.

இந்த நிலையில் ஷில்பா ஷெட்டி திடீர் பல்டி அடித்துள்ளார்.

`என்னை ஜேட்கூடி அல்லது வேறு கலைஞர்கள் யாரும் அவமதிக்கவில்லை. இனவெறியை தூண்டும் வகையில் யாரும் நடந்து கொள்ளவில்லை என்னை அவமதித்ததாக கூறப்படுவது உண்மை அல்ல என்றே நான் கருதுகிறேன். எங்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாதம் நடந்தது உண்மைதான். இதில் இனவெறி எதுவும் இல்லை.

இதற்காக யாரும் என்னிடம் மன்னிப்பு கேட்க வேண்டியதில்லை. அவர்கள் மன்னிப்பு கேட்கும் நிலை வந்தால் அவர்களிடம் நானும் மன்னிப்பு கேட்கிறேன் என்று ஷில்பா ஷெட்டி `சேனல்-4′ டி.வி. நிறுவனத்திடம் கூறியிருக்கிறார்.

ஷில்பா ஷெட்டியை அவமதித்த பென் ஜேட்கூடி மீண்டும் ஷில்பாவிடம் “நான் உனக்கு மரியாதை கொடுக்க தேவையில்லை. நீ இளவரசியாக இருக்கலாம். இது பற்றி எனக்கு கவலை இல்லை” என்று கூறி வாக்கு வாதம் செய்தார்.

ஷில்பா ஷெட்டி அல்லது ஜேட் கூடி இருவரில் யாராவது ஒருவரை நிகழ்ச்சியில் இருந்து பார்வையாளர்களோ வாக்கெடுப்பு மூலம் நீக்க வேண்டும் என்று முடிவு செய்துள்ளனர்.

இதற்கிடையே இந்த டெலிவிஷன் நிகழ்ச்சிக்கான ஒப்பந்தத்தை அதன் விளம்பரதாரர்கள் ரத்து செய்து உள்ளனர்.

ஷில்பா ஷெட்டியை திட்டிய டி.வி.நடிகை நீக்கம்: கண்ணீர் விட்டு கதறி மன்னிப்பு கேட்டார்

லண்டன், ஜன. 20-

இங்கிலாந்தில் சானல் 4 எனும் தொலைக்காட்சி `பிக் பிரதர்’ என்ற டி.வி. நிகழ்ச்சி ஒன்றை நடத்தி வருகிறது. இதில் உலகின் 5 பிரபலங்கள் ஒரே அறையில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அந்த அறைக்குள் அவர்கள் எப்படி நடந்து கொள்கிறார்கள்? சக போட்டியாளர்களுடன் எப்படி பழகுகிறார்கள் என்பது நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

போட்டியாளர்கள் நடந்து கொள்ளும் விதத்தைப் பொறுத்து அவர்களுக்கு மதிப்பெண் வழங்கப்படும். நேயர்களும் ஓட்டுப்போடுவார்கள். அதன் அடிப்படையில் ஒவ்வொருவராக நீக்கப்பட்டு கடைசி வரை தாக்குப் பிடிப்பவருக்கு கோடிக்கணக்கில் பரிசு வழங்கப்படும்.

இந்த நிகழ்ச்சியில் இந்தியா சார்பில் பிரபல இந்தி நடிகை ஷில்பாஷெட்டி பங்கேற்றுள்ளார். அவர் இந்த நிகழ்ச்சியில் முதலிடத்தைப் பிடிப்பார் என்ற எதிர்பார்ப்பு உலகம் முழுவதும் நிலவுகிறது. இந்த நிலையில் கடந்த வாரம் ஷில்பா ஷெட்டியை சக போட்டியாளரான டி.வி. நடிகை ஜேக் கூடி தரக் குறைவாக பேசி திட்டினார். அதோடு ஷில்பாவை `நாய்’ என்றும் கூறினார். இதைக் கேட்டு ஷில்பா ஷெட்டி கதறி அழுதார்.

ஷில்பாஷெட்டியை நடிகை கூடி திட்டியபோது இங்கிலாந்து முன்னாள் அழகி டேனியல் லாயிட் சிரித்தார். அதோடு ஷில்பாவை பார்த்து `அருவருப்பானவர்’ என்றார். இது நேயர்களிடம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. ஷில்பா ஷெட்டியிடம், ஜேக் கூடியும், டேனியல் லாயிட்டும் இனவெறியுடன் நடந்து கொண்டதாக தெரிய வந்தது.

இதற்கு உலகம் முழுவதிலும் இருந்து சுமார் 50 ஆயிரம் பேர் கண்டனம் தெரிவித்து இ-மெயில் அனுப்பினார்கள். ஷில்பா ஷெட்டிக்கு ஆதரவாக உலகின் பல பகுதிகளில் இருந்து குரல் எழுந்ததால் பிக்பிரதர் நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள் அரண்டு போனார்கள்.

இந்தியாவும் கடும் கண்டனம் தெரிவித்ததால் இது அரசியல் ரீதியான பிரச்சினையாக மாறியது. இன வெறியர்களை தண்டிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது.

`இனவெறி’ முத்திரை குத்தப்பட்டதால் ஜேக்கூடி, டேனியல் லாயிட்டுக்கு விளம்பரத்துக்கு உதவிய நிறுவனங்கள் விலகிக் கொண்டன. அவர்கள் `மாடலிங்’ செய்திருந்த பொருட்களின் விற்பனைகளிலும் பாதிப்பு ஏற்பட்டது. இதனால் அவர்கள் இருவருக்கும் கோடிக்கணக்கில் வருவாய் இழப்பு ஏற்பட்டது.

நிலமை மோசமாவாதை உணர்ந்த ஜேக்கூடி, டேனியல் லாயிட் இருவரும் நேற்று பணிந்தனர். ஷில்பா ஷெட்டியிடம் சென்று மன்னிப்பு கேட்டனர். அதோடு இருவரும் ஷில்பாவை கட்டித் தழுவி கண்ணீர் மல்க அன்பை வெளிப்படுத்தினார்கள்.

இதற்கிடையே போட்டி விதிகளின்படி ஷில்பா, ஜேக் கூடி இருவரில் ஒருவரை நீக்க தொலைக்காட்சி நேயர்களிடம் ஓட்டெடுப்பு நடத்தப்பட்டது. இதில் சுமார் 82 சதவீத நேயர்கள் டி.வி. நடிகை ஜேக்கூடிக்கு எதிராக வாக்களித்தனர். இதனால் அவர் `பிக்பிரதர்’ நிகழ்ச்சியில் இருந்து இன்று நீக்கப்பட்டார்.

ஷில்பாஷெட்டி நேயர்கள் ஓட்டெடுப்பில் அதிக ஆதரவுடன் அடுத்த சுற்றுக்கு முன்னேறி உள்ளார். நேற்றிரவு இந்த முடிவு விபரம் அறிவிக்கப்பட்டது.

தனக்கு `கல்தா’ கொடுக்கப்பட்டதை அறிந்ததும் டி.வி. நடிகை ஜேக்கூடி கண்ணீர் விட்டு கதறி அழுதார். `பிக் பிரதர்’ அறையில் இருந்து வெளியில் வந்த அவரிடம் பழைய காட்சிகள் காண்பிக்கப்பட்டன. இதில் அவர் ஷில்பாவை முறைத்தப்படி திட்டும் காட்சிகளும் இருந்தன.

அதை கண்டதும் ஜேக்கூடி அதிர்ச்சி அடைந்தார். இந்த சம்பவத்தால் உலகமே தன்னை இனவெறி பிடித்தவர் என்று முத்திரை குத்தி இருப்பதை தெரிந்து மனம் உடைந்து போனார்.

கண்ணீர் மல்க நின்ற அவரை பிக்பிரதர் அமைப்பாளர்கள் டைரி அறைக்கு அழைத்து சென்றனர்.

அங்கு அவர் பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

நான் ஷில்பாவை பட்டப்பெயர் சொல்லித்தான் பேசினேன். இதை எல்லாரும் தவறாக புரிந்து கொண்டு விட்டனர். பத்திரிகைகள் செய்தி வெளியிட்டதால் என்னை உலகமே இனவெறி பிடித்தவள் என்று சொல்லி விட்டது.

எல்லாரும் நினைப்பது போல நான் இனவெறி கொண்டவள் அல்ல. நான் அப்படி வளர்க்கப்படவும் இல்லை. இனவெறியுடன் நான் பேசவே இல்லை. இது ஷில்பாவுக்கு நன்றாக தெரியும்.

நான் இனவெறி பிடித்தவள் அல்ல என்று ஷில்பாவே கூறி உள்ளார். இது எனக்கு ஆறுதலாக உள்ளது. ஆனால் பத்திரிகைகள் என்னை ஒரு இன வெறியாளன் போல காட்டி விட்டனர்.

நேயர்கள் என்னை பிடிக்காமல் வாக்களித்திருந்தால் அதை ஏற்று இருப்பேன். ஆனால் தவறாக காரணம் காட்டி என்னை `பிக் பிரதர்’ நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றி விட்டனர். இப்படி வெளியேற்றப்படுவது எனக்கு கவலை தருகிறது.

ஷில்பாவை நாங்கள் `அப்பளம்‘ என்றும் `ஆங்கிலம் பேச தெரியவில்லை’ என்றும் சாதாரணமாகத்தான் சொன்னோம். ஆனால் அதுவே எனக்கு வினை ஆகி விட்டது.

நான் பேசிய காட்சிகளை பார்த்தபோது என் வார்த்தைகளால் கவுரவம் இல்லாமல் நடந்து கொண்டதாக நினைக்கிறேன். ஆனால் தவறு செய்யவில்லை என்று ஒரு கட்டத்தில் நியாயப்படுத்தினேன். ஆனால் இதை இனவெறி என நினைத்து விட்டனர். எனக்கு எதிர்ப்பு தெரிவித்த ஒவ்வொருவரிடமும் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்.

பிக்பிரதர் மூலம்தான் என் வாழ்க்கை 4 ஆண்டுகளுக்கு முன்பு பிரகாசமானது. இப்போது அதே பிக்பிரதர் மூலம் என் வாழ்க்கை முடிந்து விட்டது.

இவ்வாறு டி.வி.நடிகை ஜேக்கூடி கூறினார்.

Pap

Posted in abuse, Acting, Anand Sharma, Appalam, Big Brother, British Police, Channel 4, England, Gameshow, Indian, London, Minister of State for External Affairs, Paki, Pakistani, Papad, racism, Racist, Rating, Reality Show, Shilpa Shetty, South Asia, Stage, TV, UK | Leave a Comment »