Posted by Snapjudge மேல் ஏப்ரல் 11, 2007
“கார்வலோவுக்கு அதிகம் வாய்ப்பு கொடுக்க வேண்டும்’: தன்ராஜ் பிள்ளை
கோல்கத்தா, ஏப். 11: இந்திய ஹாக்கி சம்மேளனம் அடிக்கடி பயிற்சியாளரை மாற்றிவருவதற்கு அதிருப்தி தெரிவித்துள்ள இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தன்ராஜ் பிள்ளை, ஜோகிம் கார்வலோவை புதிய தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளதற்கு வரவேற்பு அளித்துள்ளார்.
தமிழகத்தை சேர்ந்த வி. பாஸ்கரனுக்குப் பதிலாக, மகாராஷ்டிரத்தை சேர்ந்த ஜோகிம் கார்வலோவை சமீபத்தில் தலைமைப் பயிற்சியாளராக நியமித்தது இந்திய ஹாக்கி சம்மேளனம்.
கோல்கத்தாவில் நடைபெற்றுவரும் பெய்டன் கோப்பை ஹாக்கி போட்டியில் இந்தியன் ஏர்ûஸன்ஸýக்காக விளையாட வந்திருந்த தன்ராஜ் பிள்ளை கூறியது:
பயிற்சியாளரை அடிக்கடி இந்திய சம்மேளனம் மாற்றுவது சரியல்ல. எந்த ஒரு பயிற்சியாளரும் வீரர்களை செம்மைப்படுத்த அவகாசம் தேவை. அந்தவகையில் தற்போதைய பயிற்சியாளர் கார்வலோவுக்கு 2 முதல் 3 ஆண்டு வரை வாய்ப்பு கொடுக்க வேண்டும்.
அணியை செம்மைப்படுத்துதில் கார்வலோவுக்கு வலுவான அனுபவம் உண்டு. ஹரீந்தர் சிங், பேட்டர்சன் போன்றோரை உருவாக்கியவர் அவர். ஏன், நான்கூட அவரால்தான் புகழ் பெற்றேன்.
பிஎச்எல்: இந்தியாவில் நடத்தப்பட்டுவரும் பிரீமியர் ஹாக்கி லீக் (பிஎச்எல்) போட்டி மிகச் சிறந்த போட்டி. அதை மேலும் சிறப்பாக நடத்த வேண்டும். அதையே தேசிய அணியைத் தேர்வு செய்வதற்கு அளவுகோலாகவும் இந்திய சம்மேளனம் வைத்துக்கொள்ள வேண்டும் என்றார்.
Posted in Asiad, Asian Games, Azlan, Azlan Shah, Baskaran, Bhaskaran, Captain, Carvalho, Coach, Cup, Dhanraj, foreign coach, Game, Hockey, IHF, Indian Hockey Federation, Joaquim Carvalho, K Jothilkumaran, K P S Gill, Loss, maharashtra, Olympics, PHL, Pillai, Pillay, Politics, Premier Hockey League, President, Rajinder Singh, Secretary, selection, Sports, Sultan Azlan Shah, Tamil Nadu, TamilNadu, Taminadu, Team, Term, TN, trial, Vasudevan Baskaran, Victory, Win, World Cup | Leave a Comment »
Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 20, 2006
கனவாய் பழங்கதையாய்…
நமது நாட்டில் கிரிக்கெட் போன்ற குறிப்பிட்ட சில விளையாட்டுகளுக்கு அளிக்கப்படுகின்ற முக்கியத்துவம் மற்ற விளையாட்டுகளுக்குக் கிடைப்பதில்லை. எனவே இயல்பாகவே மற்ற விளையாட்டுகளில் மக்களுக்கு அவ்வளவாக ஆர்வம் இருப்பதில்லை. மொத்தத்தில் விளையாட்டுத் துறைக்கு நாம் கொடுத்து வரும் முக்கியத்துவம் போதாது என்பதை பல சர்வதேசப் போட்டிகளின் முடிவுகளே காட்டி வருகின்றன. சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் குட்டி நாடுகள் கூட, தங்கப் பதக்கங்களைப் பெறும்போது, நமது மானத்தைக் காப்பாற்ற ஏதாவது ஒரு பதக்கமாவது கிடைக்காதா என்று சாதாரண இந்தியக் குடிமகன் தொலைக்காட்சிப் பெட்டியின் முன் அமர்ந்து ஏங்கும் நிலையைப் பார்த்திருக்கிறோம். ஆம், நூறு கோடிக்கு மேல் மக்கள் தொகை கொண்ட இந்த நாடு விளையாட்டுகளில் குறிப்பிடத்தக்க, கௌரவமான வெற்றியைப் பெற முடியவில்லை.
நமது தேசிய விளையாட்டான ஹாக்கியில் ஒரு காலத்தில் உலக அளவில் கொடி கட்டிப் பறந்தோம். தயான்சந்த் போன்ற இந்திய வீரர்கள் தங்களின் அபாரத் திறமைகளால் வெற்றிகளை ஈட்டி இந்தியாவின் பெருமையை சர்வதேச அளவில் உயர்த்தினார்கள். ஆனால் தற்போது நிலைமை தலைகீழ்! 1980-ம் ஆண்டில் மாஸ்கோ போட்டிக்குப் பிறகு, ஒலிம்பிக் ஹாக்கி போட்டிகளில் கடந்த 25 ஆண்டுகளாக நம்மால் தங்கப் பதக்கத்தைப் பெற முடியவில்லை.
ஜெர்மனியில் சமீபத்தில் நடந்து முடிந்த ஹாக்கிப் போட்டிகளில், இந்தியா பங்கேற்ற 7 ஆட்டங்களில் 5-ல் தோல்வி அடைந்துள்ளது. ஒரு போட்டி டிராவில் முடிந்தது. ஒரே ஒரு போட்டியில் மட்டுமே இந்தியாவால் வெற்றி பெற முடிந்துள்ளது. இதனால் 12 நாடுகள் பங்கேற்ற இப்போட்டியில் இந்தியா 11-வது இடத்தையே பிடிக்க முடிந்தது. போட்டியின் “கடைசி நிமிடங்களில் இந்திய வீரர்களின் திறமையற்ற ஆட்டமே இந்தியாவின் படுதோல்விக்குக் காரணம்’ என்று குறை கூறியுள்ள இந்திய அணியின் பயிற்சியாளர் பாஸ்கரன், “தவறுகளைத் திருத்திக் கொள்ளாவிட்டால் எதிர்காலத்தில் வெற்றி என்பதே கனவாகி விடும்’ என எச்சரித்துள்ளார். “ஜெர்மனியில் நடைபெற்ற உலகக் கோப்பை ஹாக்கிப் போட்டியில் அடைந்த தோல்விகளை மறந்து விட்டு, தோஹாவில் நடைபெற உள்ள ஆசிய விளையாட்டுப் போட்டியில் கவனம் செலுத்துவோம்’ என்று இந்திய ஹாக்கி கூட்டமைப்பின் செயலாளர் கூறியுள்ளார். இதுபோன்ற வெற்று சமாதானங்கள் நமது எதிர்கால வெற்றிக்கு உதவுமா என்பது ஐயமே.
சமீபகாலமாக விளையாட்டில் புகுந்து வரும் அரசியல் நமது விளையாட்டின் நோக்கத்தையே சிதறடித்து விடுகிறது என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும். விளையாட்டு வீரர்களைத் தேர்வு செய்வதில் வெளிப்படைத் தன்மையைக் கடைப்பிடிக்க வேண்டியது அவசியம். அதன் மூலம்தான் நல்ல வீரர்களுக்குத் தொடர்ந்து அணியில் இடம் கிடைக்கும் வாய்ப்பு ஏற்படும். காலத்துக்கேற்ற வகையில் தகுதியும் திறமையும் பெறுவதற்கு இந்தியப் பயிற்சியாளர்கள் மட்டும் போதுமா, வெளிநாட்டுக் “கோச்’சுகளையும் பயன்படுத்திக் கொள்ளலாமா என்பது குறித்து விளையாட்டுத் துறை நிபுணர்கள் கலந்து பேசி முடிவெடுக்க வேண்டும். விளையாட்டுத் துறையில் வெற்றி என்பது ஒரு நாள் முயற்சியில் கைகூடி வந்து விடுவதில்லை. இப்போதே இளம் விளையாட்டு வீரர்களை அடையாளம் கண்டு ஊக்குவித்து, தகுதி படைத்தவர்களுக்கு நல்ல பயிற்சி அளிக்கும்போதுதான் தரமான இந்திய அணியை உருவாக்க முடியும். வெற்றிகளுக்குக் குறுக்கு வழிகள் இல்லை. தொலைநோக்குப் பார்வையுடன் திட்டங்களைத் தீட்டி அதைத் தொடர்ந்து செயல்படுத்துவதன் மூலமே வெற்றியைப் பெற முடியும். இல்லாவிட்டால் ஹாக்கி விளையாட்டில் தயான்சந்த் காலத்து வெற்றிகள் கனவாய் பழங்கதையாய் மட்டுமே இருக்கும்.
Posted in Bhaskaran, Coach, Cricket, Dinamani, Editorial, Germany, Gill, Hockey, India, Olympics, Sports, Tamil, World Cup | Leave a Comment »